Monday 25 June 2018

ஆற்று நீர் கடலில் கலப்பதுவீண் என சொல்லும் அறியாமைதான் அடுத்த தலைமுறையை அழிக்கப்போகும் விஷ விதை !!

'காவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு'
- இப்படி பேசும் ஆட்கள் வெறும் முட்டாள்கள் மட்டும் அல்ல அதையும் தாண்டி ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமே எதிரான ஆட்கள்தான்.
kaveri river mix into sea க்கான பட முடிவு

கடலில் 10டிஎம்சி தண்ணிர் கலக்கவேண்டும் என்பது கடல் வாழ்ஊயிரனங்களுக்கும், மறுசூழற்சிகும் தேவை உண்மைதான்.ஆற்று நீர் கடலில் கலப்பது 'வேஸ்ட்' என சிலர் எந்த அடிப்படையில் பேசுறாங்க? மனித சக்தியால் உருவாக்கப்படும் ஒரு பொருளையோ திரவத்தையோ வீணாக்கினால்தான் அது வேஸ்ட். ஆனால் மனித சக்திக்கு தொடர்பில்லாத, இயற்கையால் உருவாக்கப்பட்ட ஆற்று நீரை, அது காலம் காலமாக பயணித்து, கடலில் கலந்ததை தடுத்து மனித தேவைக்கு பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த நீர் முழுவதுமே மனித தேவைக்கானது என சொல்லி அது கடலில் கலப்பது வீண் என சொல்லும் அறியாமைதான் அடுத்த தலைமுறையை அழிக்கப்போகும் விஷ விதை.


இந்தியா என்ற ஒரு நாடு, தமிழ்நாடு என்றவொரு மாநிலம், காவிரியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டுகள் என எல்லாமே இந்த ஒரு நூறாண்டுகளுக்குள்தான் இருக்கும்.


ஆனால் காவிரி என்ற ஆறு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதை உடையது. குடகு மலையில் பிறந்து கர்நாடக மேட்டுநிலப்பகுதியை தாண்டி, மேட்டூருக்கு கீழே சமவெளிப்பகுதியில் பரந்து விரிந்து வண்டல் மண் டெல்டாவில் ஓடி பூம்புகார் வழியே காலங்காலமாக கடலில் கலந்துவந்தது.


மனித தேவைகளுக்காக காவிரியில் பல அணைகள் கட்டி காவிரி நீர் கடலுக்கு போகும் அளவு தடுக்கப்பட்டது. அதாவது கடல் குடித்துவந்த நீரை மனிதன் தட்டிப்பறித்துக்கொண்டான்.


இயற்கை சுழற்சியை மனிதன் தடுத்தான். ஆறானது கடலில் கலக்கும். நன்னீர் கடலில் கலக்கும்போது கடல் நீரில் உள்ள உப்பின் அளவு மாறுபடாமல் இருக்கும். அது நடக்காதபோது கடல்நீரின் உப்பு அளவு அதிகரிக்கும், கடல்வாழ் தாவரங்கள், மீன்வளங்கள் பாதிக்கப்படும். இயற்கையான சுழற்சி தடைபடுவதால் பருவமழை பெய்யும் காலமும் அளவும் மாறிமாறி வரும். சமயத்தில் மழைப்பொழிவே இருக்காது.


ஒவ்வொரு கடலுக்கும் சில பிரத்யேகமான கடல்வாழ் உயிரினங்கள் உண்டு. தமிழக கடற்பகுதியில் காணப்படும் சில மீன் இனங்கள் அரேபிய வளைகுடாவில் காணப்படாது. அதற்கு காரணம் அந்தந்த கடலில் இருக்கும் உப்பின் அடர்த்தி. கடல் நீர் உப்பின் அடர்த்தியை சீராக வைத்திருக்க உதவுவது அதில் கலக்கும் ஆற்று நீர்.


அதைவிட முக்கியமாக கடற்கரையோட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் உப்புநீர் ஊடுருவும்.


சந்தேகம் இருப்பவர்கள் சீனா மஞ்சாளாற்றின் குறுக்கே கட்டிய பிரமாண்டமான அணையையும் அந்த அணையினால் பெருமளவு தண்ணீர் கடலுக்கு போகாததால் மஞ்சாளாற்று கழிமுக பகுதிகளில் கடல்நீர் ஊடுருவி தற்போது புல்பூண்டுக்கூட முளைக்காத பாலைவனமாக மாறிப்போன நிகழ்வையும் தேடிப்படியுங்கள்.


நல்ல நிலங்கள் பாலைவனமாக மாறியதால் அதை சரிசெய்ய சீனா தற்போது கடுமையாக போராடி வருகிறது. தற்போது அணையில் பாதியளவு மட்டுமே தண்ணீரை வைத்துக்கொண்டு மீதியை கடலுக்கே விட்டுவிடுகிறது.


இதே போல நம் முந்தைய தலைமுறையில் நடந்த நிகழ்விலிருந்தும் நாம் பாடம் கற்கவில்லை. ரஷ்யாவின் ஏரல் கடல் என சொல்லப்பட்ட பிரம்மாண்டமான ஏரி மறைந்துபோன கதை தெரியுமா?


'ஏரல் கடல்' நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட இந்த பிரம்மாண்டமான ஏரி ஒரு காலத்தில் (1950க்கு முன்பு) உலகில் உள்ள 4 மிகப்பெரிய ஏரிகள் ஒன்று. இன்று?


முந்தைய வல்லரசான சோவியத் ரஷ்யா இந்த ஏரிக்கு சென்றடையும் ஆறுகளான அமு தர்யா மற்றும் சிர் தர்யா எனும் ஆறுகளை நீர்ப்பாசனத்திற்காக திசை திருப்பியது. இப்போது இந்த ஏரிப்பகுதி மனித வாழ்விடத்திற்கே மிக சிரமான பகுதியாக மாறியிருக்கிறது.


ஏரல் கடலுக்கு ஏற்பட்ட நிலைமை காவிரி பாயும் கடற்கரையோர மாவட்டங்களுக்கு ஏற்பட இதேபோன்று யோசித்தாலே போதும் 'காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது'என.


காவிரி நீர் என்பது கர்நாடக தமிழக மக்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அது ஒட்டுமொத்த இயற்கைக்குமானது. நாமும் இயற்கையின் ஒரு அங்கம். நாம் மட்டுமே அதை சொந்தமாக்கிக்கொள்ளும்போது இயற்கையின் தொடர் சங்கிலியை நாம் உடைக்கிறோம். இயற்கை சங்கிலியில் ஒரு கன்னி விடுபடும்போது ஒட்டுமொத்த சங்கிலி அமைப்புமே சிதைந்துவிடும் என நமக்கு புரிவதில்லை.


மனித தேவை, மனிதனின் சுயநலம் இது இரண்டு மட்டும் காலம் காலமாக இயற்கையின் கட்டமைப்புகளை சிதைத்து வந்திருக்கிறது. இதனால் கடைசியாக பாதிக்கப்படபோவது நாம்தான்.


நேரம் இருப்பவர்கள் 'ஈஸ்டர் தீவு' பற்றியும் அங்கிருக்கும் 'ராப்பா நூயி' சிலைகளை பற்றியும் படியுங்கள். மனிதனின் வெட்டி கௌரவத்தால் அங்கிருந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட கடைசியில் ஒரு மரம்கூட இல்லாத அந்த தீவில் படகு செய்து மீன்பிடித்து உயிர்வாழவோ, படகு செய்து தீவை விட்டு தப்பியோடவோ ஒரு மரம் இல்லாததால் ஒட்டுமொத்த மனித இனமே அந்த தீவில் அழிந்துபோனது. ஈஸ்டர் தீவிற்கு மரம் என்றால் நமக்கு ஆறுகள்.


காவிரி டெல்டாவின் நில அமைப்பு பற்றி தெரியாதவர்கள்தான் நிறைய உளறுகிறார்கள். கர்நாடகாவில் 3 அணைகள் இருக்கிறதே நம்மிடம் மேட்டூர் அணை மட்டும்தான் இருக்கிறதே என்ற புரிதல் இல்லாத உளறல்தான் அது.


முதலில் ஒரு அணையை கட்ட எந்த மாதிரியான நில அமைப்பு இருக்க வேண்டும் என யோசித்தாலே இதற்கான பதில் கிடைத்திருக்கும்.


பொதுவாக அணைகள் மேட்டுப்பாங்கான நிலத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையில்தான் கட்டப்படும். கர்நாடகாவிலிருக்கும் 3 அணைகளும் நம் மேட்டூர் (மேட்டூர் - பெயரிலேயே அர்த்தம் இருக்கே?) அணையும் அப்படி கட்டப்பட்டதுதான்.


மேட்டூருக்கு கீழே அதுபோன்ற அணைகள் கட்டக்கூடிய நில அமைப்பு கிடையாது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகப்பட்டிணம் போன்றவை சமவெளிப்பகுதிகள். சமவெளியில் அணைகளை கட்டமுடியாது. ஏரி, குளங்களைதான் அமைக்க முடியும். அதனால்தான் நம் முன்னோர்கள் நிறைய ஏரி, குளங்களை காவிரி டெல்டா பகுதியில் வெட்டினார்கள்.


சிலர் வந்து காவிரி டெல்டாவில் கல்லணை கட்டப்படவில்லையா என கேட்கலாம். கேட்பவர்கள் நிச்சயம் கல்லணையை முன்பின் பார்த்திருக்காதவர்களாகத்தான் இருப்பார்கள். கல்லணை என்பது டி.எம்.சி கணக்கில் தண்ணீரை தேக்கி வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தும் அணை கிடையாது. காவிரியில் வரும் நீரை தடுத்து உள்ளாறு(கொள்ளிடம்), காவிரி , வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரித்து அனுப்பும் பிரம்மாண்டமான மதகுதான் கல்லணை.


அக்காலத்தில் காவிரியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திலிருந்து பயிர்களை பாதுகாக்க கட்டப்பட்டதுதான் கல்லணை. காவிரியில் வெள்ளம் வரும்போது அது கொள்ளிடத்தில் திருப்பிவிடப்படும். கொள்ளிடம் வெள்ள நீர் எவ்வளவு போனாலும் தாங்கும். அந்த வெள்ளநீரை பயன்படுத்திக்கொள்ள வெட்டப்பட்டதுதான் கடலூர் மாவட்டத்திலிருக்கும் வீராணம் ஏரி.


காவிரியில் கர்நாடகா கட்டியிருக்கும் 3 அணைகளின் மொத்த கொள்ளளவு 112 டி.எம்.சி. தமிழ்நாட்டிலிருக்கும் மேட்டூர் அணையின் கொள்ளளவு மட்டுமே 93 டி.எம்.சி.


நமக்கு மேட்டூர் அணை மட்டுமே போதும். ஏனென்றால் மேட்டூர் அணை முழுமையாக நிரம்புவதற்கான தண்ணீரே நமக்கு கிடைப்பதில்லை. மேட்டூர் அணை கட்டப்பட்ட காலத்திலிருந்து (1934) தற்போதுவரை வெறும் 33 முறை மட்டுமே அணையின் முழு கொள்ளளவான 120 அடிவரை நீர் நிரம்பியிருக்கிறது.


நாம் செய்யவேண்டியது இருக்கக்கூடிய நீர்நிலைகளை பாதுகாத்து ஏரி, குளங்களில் தண்ணீரை தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டியது மட்டும்தான். மழைநீர்தான் நமக்கான நீர், ஆற்றுநீர் நமக்கும் கடலுக்குமான நீர்.


இனி யாராவது ஆற்றுநீர் வீணாகப்போய் கடலில் கலக்கிறதே என சொன்னால் அவர்களின் அறியாமையை நினைத்து பரிதாபப்படுங்கள்.



“தலைநாள் மாமலர் தண்துறைத் தயங்கக் கடற்கரை

மெலிக்கும் காவிரிப் பேரியாற்று"

என்கிறது அகநானூறு (126 : 4-5)

https://youtu.be/0GwxeLfBLiA

Thursday 21 June 2018

வடநாட்டார்களிடம் கையேந்தி நிற்கின்ற நிலைக்கு நாம் ஆளாக்கப்படுவதுஆக்கிரமித்து ஏன் ??ஒரு எச்சரிக்கை !!


தொடர்புடைய படம்ஒன்றும் அறியாத அப்பாவிகள் போல மெல்ல மெல்ல தமிழகத்திற்குள் நுழைந்த வடமாநிலத்தவர்கள் தற்போது அதிவிரைவாக தமிழகத்தை   வருகிறார்கள். தற்போது தமிழகத்தில் எங்குபார்த்தாலும் வடமாநி லத்தவர்கள் தாம் பணிபுரிகின்றனர்.
முன்னர் கம்பளி விற்பதற்காக மட்டும் வந்த ஹிந்திக் காரர்கள் தற்போது தமிழகத்தின் எல்லா இடங்களிலும் பரவி நம்முடைய தமிழ்ப் பிள்ளைகளை பின்னுக்குத் தள்ளத் துவங்கி இருக்கின்றனர்.
வடமாநிலத்தவர்களின் பெருக்கம் நமது பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு பெரும் பிரச்சினைகளை, வேலைவாய்ப்புக்கு போராடும் கடும் நிலைமையை உண்டாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
வந்தேறிகளை வாழ வைக்கும் தமிழகம் வந்தேறிகளால் மட்டுமே ஆளப்படுகிறது. அவர்களிடம் கையேந்தி நிற்கின்ற நிலைக்கு நாம் ஆளாக்கப்படுவது இதுவரை நடந்த வரலாறு. 


இன்று வடநாட்டார்கள் இங்கே எப்படிப் பெருகினார்கள்....??
தமிழனின் பிச்சைக்கார குணம் தான் காரணம். ஆம் நண்பர்களே. நமது தொழிலாளர்களை விட குறைந்த பணம், சம்பளம் தந்தால் போதும் என்ற இந்த மிச்சம் பிடித்துக் கோட்டையைக் கட்டும் தமிழனின் பிச்சைக்காரக் குணம் தான் இவர்களின் வருகைக்கும் பெருக்கத்திற்கும் காரணம். இவர்களால் நமது வாழ்வும் வாய்ப்புக்களும் பறிபோவது உறுதி. ஏற்கனவே போதையின் பாதையில் தள்ளாடும் நமது குழந்தைகள் வடமாநிலத்தவர்களால் எளிதில் குட்கா, புகையிலை, பான் , பாக்கு என உடல் ஆரோக்கியத்திற்கு எதிரான பழக்கங்களை அதிகளவில் கற்கத் துவங்கி உள்ளனர்.

இப்படித்தான் தமிழகத்தை ஒவ்வோர் வந்தேறி இனமும் ஆக்ரமித்து, கெடுத்து சுரண்டிக் கொண்டு போனது. அதுதான் தற்போதும் நிகழத்துவங்கி உள்ளது. வடமாநிலத்தவர்கள் அதிகளவில் காலூன்றிவிட்டால் நாம் விரட்டி அடித்துவிட இயலாது. பெரும் ஆபத்தை நோக்கிப் போகிறோம் நாம்.

எப்படி தப்புவது...? வடமாநிலத்தவர்கள் விற்கும், தெருவில் கொண்டுவரும் எந்தப் பொருட்களையும் வாங்காதீர்கள். சம்பளக்குறைவென்று வேலையில் அமர்த்தாதீர்கள். வீடு கொடுக்காதீர்கள். ஐயோ பாவம் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் குழந்தைகளை காப்பாற்றுபவர்களாக இருக்க மாட்டீர்கள். அவர்களுக்கு உதவிசெய்து புண்ணியம் சேர்ப்பதாக நினைத்தால் நீங்கள் தான் பாவம்.

வடமாநிலத்தவர்களால் குற்றங்கள் பெருகி வருகிறது. கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. நமது காவல்துறை இவர்களின் வருகையால் கையைப் பிசைந்து கொண்டுள்ளது. 


விழித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே!!
பதிவைப் பகிர்ந்து விழிப்பை உண்டு பண்ணுங்கள்.


தொகுப்பு  மு.அஜ்மல் கான்.

நாடாளுமன்றத்தில் ராகுல் விளாசல் அஞ்சி நடுங்குகிறார் மோடி !!

Related imageபிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர் அமித்ஷாவும் மக்களைப் பார்த்து அஞ்சி நடுங்குகிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையான முறையில் சாடினார்.நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. ஆந்திர மாநி லத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாகக் கூறி மத்திய அரசு ஏமாற்றிவிட்டது என்ற குற்றச்சாட்டுடன், பாஜக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சி விலகியது.
நம்பிக்கையில்லாத் தீர்மானம்
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத் தைக் கொண்டு வந்தபோது, அதை சபாநாயகர் ஏற்கவில்லை. ஆனால், இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. சீனிவாஸ் அளித்த நம்பிக்கையில்லாத் தீர்மான மனுவைச் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் வெள்ளியன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.முன்னதாக நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் வெள்ளி காலை முதல் அவையில் நடைபெற்றது.இதில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு 38 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. பாஜக எம்.பி. காலா பேசிய பின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதித்தார்.ராகுல் காந்தி பேச துவங்கியவுடன், பாஜக உறுப்பினர்கள் அமளியிலும், ரகளையிலும் ஈடுபட்டனர். அவையில் பிரதமர் இருந்தார். தமதுகட்சியினரின் ரகளையை அவர் ரசித்தார்.தொடர் ரகளையால் அவை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் கூடியது. அப்போது ராகுல் கடுமையான முறையில் மோடி அரசை சாடி பேசினார்.
‘ஜூம்லா ஸ்டிரைக்’
ராகுல் காந்தி பேசியதாவது:தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. ஜெயதேவ் கல்லாவின் உரையை கவனித்தேன். அவரது பேச்சில் இருந்து உங்களைப் பீடித்துள்ள (மோடியைப் பார்த்து) ஒருவிதமான அச்சத்தையும், வேதனையையும் நான் உணர் கிறேன். 21-ம் நூற்றாண்டின் அரசியல் ஆயுதத்துக்குப் பலியானவர் நீங்கள்தான் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அந்தஅரசியல் ஆயுதத்துக்குப் பெயர் ‘வெற்றுப் பேச்சு தாக்குதல்’ (ஜும்லா ஸ்டிரைக்).உங்களின் (மோடி) வெற்றுப் பேச்சுக்கு இலக்கானவர்கள் விவசாயிகள், இளைஞர்கள், தலித்துகள், பழங்குடியின மக்கள் மற்றும் இந்தத் தேசத்து பெண்கள்தான். இதற்கு சில உதாரணங்களைக் கூறுகிறேன்.
வாக்குறுதிகள் என்னாயிற்று?
வெளிநாட்டில் இந்தியர்கள் சட்டவிரோத மாகப் பதுக்கி இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டு அனைவருக்கும் ரூ.15 லட்சம் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் எனத் தேர்தல்பிரச்சாரத்தில் நீங்கள் கூறினீர்கள். ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறினீர்கள். ஆனால், வெறும் 4 லட்சம் இளைஞர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டு இருக்கிறது.சீனாவில் 24 மணிநேரத்தில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. ஆனால், இங்குள்ள அரசோ 24 மணி நேரத்தில் 400 இளைஞர்களுக்கு மட்டுமே வேலை வழங்குகிறது. படித்த பட்டதாரி இளைஞர் களைப் பக்கோடோ விற்கலாம் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு கறுப்புப் பணத்தை ஒழிப்பது குறித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையை நீங்கள் கொண்டு வந்தீர்கள். நீங்கள் ஏழைகளைப் புரிந்து கொள்ளவில்லை, அவர்கள் பணத்தைமட்டுமே வைத்து செலவு செய்கிறார்கள், டெபிட்கார்டோ, கிரெடிட் கார்டோ அவர்களிடம் இல்லை என்பதை உணரவில்லை.இன்று நாட்டில் வேலையின்மை அளவு அதிகரித்து இருக்கிறது. பிரதமர் மோடி பேசியவார்த்தைகள் என்ன ஆனது?நீங்கள் குஜராத் முதல்வராக இருந்தபோது ஜிஎஸ்டி வரியைக் கடுமையாக எதிர்த்தீர்கள். ஆனால், இப்போது நீங்கள் 5 வகையான ஜிஎஸ்டி வரியைக் கொண்டுவந்துள்ளீர்கள். சிறுவியாபாரிகளை நசுக்கும் வகையில் வருமான வரித் துறையை ஏவிவிடுகிறீர்கள்.
கார்ப்பரேட்டுகளின் கூட்டாளி
பிரதமர் மோடி எப்போதும், வசதி படைத் தவர்களுக்கும் கோடீஸ்வரர்களுக்கும், கார்ப்பரேட்களுக்கும் ஆதரவாகத்தான் பேசுகிறார், சிறு வணிகர்களுக்கு ஆதரவாகப் பேசுவதில்லை. ஏழை மக்களிடம் இருந்தும், சிறு வர்த்தகர்களிடம் இருந்தும் பணத்தை எடுத்துக் கொள்கிறது மத்திய அரசு.பிரதமரின் முகம் ஜியோ விளம்பரத்தில் வந்தபோதே, அவர் பணக்காரர்கள் குறித்துத்தான் அக்கறை கொள்வார் எனப் புரிந்து கொண்டேன். இந்த நாட்டின் காவல்காரர் என்று பிரதமர் கூறி வருகிறார். உண்மையில் பிரத மர் மோடி மக்களின் காவல்காரர் அல்ல, பெருநிறுவனங்களின், பணக்காரர்களின் பங்குதாரர்.ரபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பிரதமர் மோடி இருவரும் உண்மையை இந்தத் தேசத்திடம் இருந்து மறைக்கிறார் கள். ஆனால், பிரான்ஸ் ஜனாதிபதியை நான் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசுகையில், ரபேல் போர் விமானம் குறித்த எந்தவிதமான ரகசிய ஒப்பந்தமும் இல்லை என்று என்னிடம் அவர் தெரிவித்தார்.பிரதமர் மோடிக்கு குறிப்பிட்ட சில கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்களுடன் தொடர்பு இருக்கிறது. அந்த தொடர்பால்தான் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை அந்த நிறு வனத்துக்கு வழங்கி இருக்கிறார்.இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறு வனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது.பாதுகாப்புத் துறைக்கான அமைச்சரவை இந்த ஒப்பந்தத்துக்கு அனுமதி வழங்கியதா என்பது குறித்து பிரதமர் மோடி இந்த அவையில் விளக்கம் அளிக்க வேண்டும். இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திடமும், கர்நாடகஇளைஞர்களிடமும் தர வேண்டிய ஒப்பந்தத்தைஎடுத்து ரூ.30 ஆயிரம் கோடி கடன் உள்ள தொழிலதிபருக்கு கொடுத்துவிட்டார் பிரதமர்.
அச்சமே கோபமாக மாறுகிறது
என் கண்களைப் பார்த்து மோடியால் பேச முடியாது. என்னைப் பார்த்தால் ஒருவிதமான அச்சம்இருப்பதால், என் கண்களைப் பார்த்து பேசாமல் செல்கிறார். இதில் இருந்து பிரதமர் மோடி உண்மையானவர் இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் யாரைப் பார்த்தும் பயப்படக் கூடாது; நீங்கள் பயப்படுகிறீர்கள்.பிரதமர் மோடி விவசாயிகளின் பயிர்க் கடன்தள்ளுபடி செய்யப்படும் என்கிறார். ஆனால், நிதி அமைச்சரோ பயிர்க் கடன் தள்ளுபடி இல்லை என்கிறார்.உலக நாடுகளில் பெட்ரோல் விலை சரிந்து வருகிறது. ஆனால், நம்நாட்டில் நிலையே வேறு. இந்தியாவில் மட்டும்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. மோடி தனது நண்பர்களின் பைகளில் பணத்தைச் சேமிக்க விலையை உயர்த்தி உதவி வருகிறார்.நாட்டின் பெண்களின் பாதுகாப்பு மிகவும் மோசமாக இருக்கிறது. பெண்களின் பாது காப்பு நிலை சரிந்துள்ளது. இது நாட்டின் தோற்றத்தை உலக அளவில் மாற்றி இருக்கிறது.அப்பாவி மக்களைத் தாக்கி கொலை செய்தவர்களுக்கு பாஜக அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். ஆனால் அதுகுறித்து பிரதமர் மோடி வாய் திறந்து கருத்து கூறவில்லை. தலித், சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் இந்தத் தாக்குதல் தனிநபர் மீதான தாக்குதல் அல்ல, டாக்டர் அம்பேத்கர் மீதான தாக்குதலாகும்.பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் வித்தியாசமான அரசியல்வாதிகள். எங்களைப் பொறுத்தவரை தேர்தல் வெற்றியையும், தோல்வியையும் சமமாகவே பார்ப்போம்.ஆனால், இவர்களோ தங்களிடம் இருந்துஅதிகாரம் இழப்பதை எளிதாக விட்டுவிட மாட்டார்கள். அவர்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள். அந்த அச்சம்தான் நாட்டின் மீது கோபமாக மாறுகிறது.எனக்கு காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் குறித்தும், கடவுள் சிவனின் முக்கியத்துவம் குறித்தும் உணர்த்திய உங்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். என்னைப் பார்த்து நீங்கள் சிறுபிள்ளை(பப்பு) என்று அழைக்கலாம். ஆனால், உங்கள் மீது எனக்கு எந்தவிதமான வெறுப்பும் இல்லை.இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
தனது வார்த்தைகளை நிறைவு செய்த வுடன், ராகுல் காந்தி பிரதமர் மோடி அமர்ந் திருக்கும் இடத்துக்குச் சென்று அவரைக் கட்டித் தழுவினார். 

Tuesday 19 June 2018

எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்டும்?


Related image

ஜனவரி: (மார்கழி, தை) கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள்.


பிப்ரவரி : (தை,மாசி) கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன்,


கீரைகள், கோவைக்காய்.


மார்ச்: (மாசி, பங்குனி) வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன்.


ஏப்ரல்: (பங்குனி, சித்திரை) செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை.


மே: (சித்திரை, வைகாசி) செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை.


ஜூன்: (வைகாசி ஆனி) கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை.


ஜூலை: (ஆனி, ஆடி) மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை,


தக்காளி.


ஆகஸ்ட்: (ஆடி, ஆவணி) முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை.


செப்டம்பர்: (ஆவணி, புரட்டாசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி.


அக்டோபர்: (புரட்டாசி, ஐப்பசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி.


நவம்பர்: (ஐப்பசி, கார்த்திகை) செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி.


டிசம்பர்: (கார்த்திகை, மார்கழி) கத்தரி, சுரை, தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.




சரியான ஆரோக்கியம் தரும் உணவு, ஊட்டத்தை அளிப்பதுடன் தேவையில்லாத கழிவுகளையும் வெளியேற்ற வேண்டும். இதுவே நாம் நம் கையால் உணவை உற்பத்தி செய்ய முக்கிய காரணம். எனவே, சரியான உணவு ஊட்டத்தை தருவதோடு உடல் நலத்தையும் பாதுகாக்கிறது.

பச்சை இலை கொண்ட காய்கறிகளில் இருக்கும் குளோரோபில் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை படைத்தவை. அதனால் கீரை வகைகள் உள்ளிட்ட பச்சை இலை காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில், கல்லீரல் நோய் பாதிப்பால் இந்தியாவில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது தெரியவந்துள்ளது. கொடிய மரணத்தை ஏற்படுத்தும் முக்கிய நோய்களுள் ஒன்றாக கல்லீரல் நோய்கள் அமைந்திருக்கின்றன. சரி இந்த சம்மர் சீசனில் நீங்கள் உண்ணும் உணவில் இந்த 5 காய்கறிகள் இருக்கிறதா? என்பதை நீங்களே பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.


1. பூசணிக்காய்:

நார்ச்சத்து உணவுகளின் ஆதாரமாக இருக்கிறது, இதில் இருக்கும் வைட்டமின் ஏ நல்ல பார்வைக்கு ஊக்கமளிக்கிறது.பூசணிக்காயில் இருக்கும் டிரிப்டோபான் உடல் செரடோனின்களை உருவாக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது.

2. பாகற்காய்:
சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும், கெட்ட கொலஸ்டிரால் குறைவதற்கும் உதவுகிறது. சிறந்த கோடை காய்கறியான பாகற்காய் , ஆக்ஸிஜனேற்றங்களுடன் சேர்த்து வைட்டமின் ஏ மற்றும் சி யை தருகிறது. வயதான அறிகுறிகளைக் குறைக்கின்றன.

3. புடலங்காய்:
எடையை குறைக்க உதவும். குறைவான கலோரி, கொழுப்பு இல்லாமல் தேவையான ஆற்றலைப் பெற அனுமதிக்கிறது. குடல் இயக்கங்களை கட்டுப்படுத்த உதவுகிறது. 92 சதவீத நீர் கலவை கொண்ட காய்கறி என்பதால் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

4. பீர்க்கங்காய்:
இரத்தம் சுத்தப்படுத்தி கல்லீரலை சுத்திகரிக்க உதவுகிறது. தோலிற்கு பிரகாசம் கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள காய்கறிகளில் பீர்க்கங்காயும் ஒன்று.

5. சுரைக்காய்:
ஊட்டச்சத்து அதிகம் தரகொடிய காய்கறி.உடலில் இருந்து நச்சுகள் நீக்குவதை வேகப்படுத்துகிறது. முடி வளர்ச்சி ஊக்குவிக்கிறது.


மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு
நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது
'எம் கடமை" 

தொகுப்பு  : அ. தையுபா அஜ்மல்.

Sunday 17 June 2018

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது அம்மாவா ? அப்பாவா ?


உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை அப்பா தான் !


உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான் என்கிறார்கள் பல அறிஞர்கள் !

தந்தையின் சரியான வழிகாட்டுதல் , அன்பு , அரவணைப்பு இல்லாதது தான் எல்லாவித பிரச்சினைக்கும் மூல காரணம் !


Related imageஒரு டீன் ஏஜ் மகளுக்கு , 
அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல ஒரு நண்பன் ! 
பாதுகாவலன் !
ஊக்கமூட்டுபவர் ! 
உற்சாகப்படுத்துபவர் ! 
தன்னம்பிக்கை வளர்ப்பவர் !
நம்பிக்கை ஊட்டுபவர் !
பண்புகளை ஊட்டுபவர் !
வழிகாட்டி !
என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும்

ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே ?
அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள்.


ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக் கொள்கிறாள்.


ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள்.


எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டியது அப்பாவின் கடமையாகிறது.


சின்ன வயதில் மழலையாய் சிரித்துச் சிணுங்குகையில் , அழகழகாய் ஆடைகள் வாங்கிக் கொடுப்பதானாலும் சரி , பென்சில் , இரப்பர் வாங்குவதானாலும் சரி ரொம்பவே ஈடுபாடு காட்டுவீர்கள்.

என எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள்.


மகளும் ரொம்பவே சமர்த்தாய் உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் தருவாள்.

திடீரென ஒரு நாள் பார்த்தால் , சட்டென்று வளர்ந்து நிற்பாள். "என் டாடி சூப்பர் " என்று சொல்லிக் கொண்டிருந்தவள் ,"டாடிக்கு ஒண்ணும் தெரியாது "என்று பல்டி அடிப்பாள்.


எல்லாவற்றுக்கும் காரணம் அவளுடைய உடல் , மன மாற்றங்கள் தான்!


என் பொண்ணுக்கு என்னைக் கண்டாலே புடிக்கல.

அவளுக்கு நான் இனிமே தேவையில்லை என்றெல்லாம் புலம்பாதீர்கள்.


ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்* *உங்கள் மகள் உங்கள் மகள் தான்
உங்கள் மீதான பாசமும் , அன்பும் , கரிசனையும் எப்போதுமே அவளிடம் நிரம்பி இருக்கும்.


ஆனால் அவளுடைய வெளிப்படுத்தும் வித்த்தில் தான் மாற்றங்கள்


"டாடி பிளீஸ்....டாடி... வாங்கிக் கொடுங்க டாடி " என்று சின்ன வயதில் கெஞ்சிய மகள் "டாட்...எனக்கு இது வேணும்.

முடியுமா ?!முடியாதா ? " என பிடிவாதம் பிடிப்பாள்.


உடனே நீங்கள் பதட்டப்படுவீர்கள்.


ஆனால் உண்மையில் அவள் உங்களுடைய அனுமதியை எதிர்பார்த்து நிற்கிறாள்.அப்பாவின் அனுமதி இருந்தால்தான் அவளுக்கு அதில் ஒரு ஆத்ம திருப்தி.


நீங்க பாட்டுக்கு எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு நிராகரித்துத் தள்ளாதீர்கள்.


"நல்லது ன்னா அப்பா ஒத்துப்பார் "என்னும் நிலமைதான் இருக்க வேண்டுமே தவிர " அவர் கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது " என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவே கூடாது.


பேசுவதை விட மிக மிக அதிகமாய் மகள் பேசுவதைக் கேட்க வேண்டும்*. *அது தான் முக்கியம்.


ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், "என் அப்பா டெக்னாலஜியில் என்னைப் போல ஹைடெக்.."என கருதுவதில் உங்கள் மகளுக்கு இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது.


நீங்கள் அந்த டெக்னாலஜி உலகுக்குள் நுழைந்தால் தான் அதிலுள்ள நன்மை தீமைகளை நாசூக்காக உங்கள் மகளுக்குச் சொல்லவும் முடியும்.


*🌷இன்னொரு விஷயம் , *உங்கள் மகள் பருவத்துக்குரிய வனப்புடன் வளர்கிறாள் என்றதும் தள்ளியே நிற்காதீர்கள்.*

*அது மன அளவில் உங்கள் டீன் ஏஜ் மகளைப் பாதிக்கும் என்கின்றனர் உளவியலார்கள்.*


*உங்கள் மகளின் தோளைத் தட்டிப் பாராட்டுவதோ ,* *தலையைக் கோதிப்* *பாராட்டுவதோ ,*

*செல்லமாய் அரவணைத்துக் கொள்தலோ அவளுக்கு ரொம்பவே தேவை.

அடிக்கடி வெளியே கூட்டிப் போங்கள்.*


ஐஸ்கிரீம் பார்லர் போன்ற இடங்களுக்கு ஜாலியாகப் போய் வாருங்கள்.


மகளுடன் நிறைய நேரம் செலவிடுங்கள். நிறைய நேரத்தை நீங்கள் அவளுடன் செலவிடும்போது அவளுக்கு இயல்பான உரையாடல் சாத்தியப்படுகிறது.


நினைத்ததை எப்படியேனும் வெளிப்படுத்தி விடுவாள்.


அவள் பள்ளியிலோ , கல்லூரியிலோ ஏதேனும் விழா நடக்கிறது ,
அழைக்கிறாள் என்றால் தவற விடாதீர்கள்.*


வெறுமனே நீங்கள் அவளுடன் இருந்தால் போதும் அவள் உங்களை ரொம்பவே கொண்டாடுவாள்


நீங்கள் அவளை அன்பு செய்கிறீர்கள்.


சரி ! மதிக்கிறீர்கள்.
சரி ! ஆனால் அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறீர்களா ?

இல்லையேல் அதைச் சொல்லுங்கள் முதலில்.


டீன் ஏஜ் மனது எதிலும் வெளிப்படையாய் இருக்க விரும்பும் மனது.


சுற்றி வளைத்து எதையும் பேசாமல் , உங்கள் மகளை நீங்கள் மதிக்கிறீர்கள் , அன்பு செய்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள்.


டீன் ஏஜ் மகளின் தினசரிகள் பல்வேறு அனுபவங்களால் நிரம்பி வழியும்.

ஆனந்தம் , கவலை , எரிச்சல் , சோகம் என எக்கச்சக்க உணர்வுகள் நிரம்பி வழியும்.


சக தோழிகளின் கிண்டல் , படிப்பு , அழகு என கண்டதுக்கும் கவலைப்படும் வயது அது.

அதை முதலில் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

"எதுவானாலும் கவலையில்லை .... அப்பா இருக்கிறார்"

என்னும் நம்பிக்கையை நீங்கள் உங்கள் மகளிடம் ஊற்ற முடிந்தால் அதை விடப் பெரிய விஷயம் ஏதும் இல்லை. அதற்கு மகளிடம் உண்மையாய் இருக்க வேண்டியது உலக மகா தேவை !

*💃எந்தக் காரணம் கொண்டும் அவளைத் திட்டாதீர்கள்*.


*அவள் என்ன தான் மிகப் பெரிய தவறு செய்திருந்தாலும் சரி , உணர்ச்சி வசப்படாதீர்கள். பிரச்சினைகள் –விளைவுகள் – தீர்வுகள் என சிந்தியுங்கள்*.*


*நீங்கள் பதட்டப்பட்டு உங்கள் கோபத்தையும் , ஆத்திரத்தையும் மகளிடம் காட்டி விட்டால் போச்சு*.


அது வீட்டைப் பூட்டி சாவியை தூர எறிவதற்குச் சமம்.
உங்கள் மகள் அதன் பின் உங்களிடம் எதையும் பேசுவாள் என்று சொல்வதற்கில்லை.
எப்போதும் அவளிடம் தோழமை உணர்வுடன் பழகுங்கள்.

அடிக்கடி உங்கள் மூடு மாறாமல் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம.


"அப்பா எப்போ அமைதியா இருப்பாரு,எப்போ எரிஞ்சு விழுவாரு ன்னு தெரியாது " என்னும் நிலமை வந்தால் சிக்கல் தான்.


அவளுடைய படிப்பு , நட்பு , எல்லாவற்றிலும் உங்கள் அளவான ஈடுபாடு இருக்கட்டும்.


"அவளுக்கு இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை" என்று மட்டும் எப்போதும் நினைக்காதீர்கள்.

குறிப்பாக ஆண்களைப் பற்றியும் ,ஆண்களின் குணாதிசயங்கள், சிந்தனைகள் , எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றியும் அவளுக்குப் புரியும் வகையில் அவ்வப்போது சொல்வது அவசியம்.

வெளுத்ததெல்லாம் பாலல்ல என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும்.

சமூகம் சார்ந்த பல அறிதல்களையும் அப்பாதான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும்.


ஒரு ஆச்சரிய உண்மை என்னவென்றால் , பதின் வயதுத் தொடக்கத்தில் இருக்கும் மனோபாவம் நாள் செல்லச் செல்லப் பக்குவப்படும்.

பெண்ணின் திருமண வயது வரும்போது " அப்பா தான் உலகம் "எனும் நிலைக்குப் பெண்கள் வந்து விடுவார்கள். அதுவரை சலிக்காத வழிகாட்டலும்,பொறுமையான அணுகு முறையும்,நிபந்தனையற்றை அன்பும் நீங்கள் காட்ட வேண்டியது அவசியம்.


சின்ன வயதிலிருந்தே தந்தையின் வழிகாட்டுதலிலும், அன்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல மன வளர்ச்சி அடையும் என்கிறார் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர்.

"ஸ்ட்ராங் ஃபாதர்ஸ்,ஸ்ட்ராங் டாட்டர்ஸ்"

என்னும் நூலில் அப்பாவின் வழிகாட்டுதலே டீன் ஏஜ் பெண்களுக்கு மிக மிகத் தேவை என்கிறார்.


"என் பொண்ணோட வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான் "என்னும் எண்ணம் அப்பாக்களுக்கு வர வேண்டியது தான் முதல் தேவை என்கிறார் இவர்.


"என் அப்பாவைப் போல நல்ல ஓர் ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும்" என உங்கள் மகள் நினைக்க வேண்டும்.

அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள்


இது மகளை பெற்ற அப்பாக்களுக்கு எனது சமர்ப்பணம்!!!

Friday 15 June 2018

தமிழகத்தில் ஏன் அணைகள் கட்டப்படவில்ல ??

Image may contain: ocean, sky, outdoor, water and nature”காவிரி கடலில் கலந்தால் தவறா? தமிழகத்தில் ஏன் அணைகள் கட்டப்படவில்ல ...
காவிரி டெல்டாவில் கல்லணை கட்டப்படவில்லையா?' எனக் கேட்கலாம். கேட்பவர்கள் நிச்சயம் கல்லணையை முன்பின் பார்த்திருக்க மாட்டார்கள். கல்லணை என்பது டி.எம்.சி கணக்கில் தண்ணீரைத் தேக்கி வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்தும் அணை கிடையாது.

காவிரியில் தண்ணீர் வராதபோது, 'கர்நாடகக்காரன் அரசியல் பண்றான்' என்றும், மழை மொழிந்து அதிகமாக தண்ணீர் வரும்போது, 'வீணாக காவிரி நீர் போய் கடலில் கலக்கிறது' என்றும் தமிழகத்தில் பரவலாக பேசப்படும்.

மூன்று வருடம் கழித்து, இப்போது தென்மேற்கு பருவமழை சக்கைப்போடு போட்டதின் காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை அடைந்து, காவிரியில்
இருகரைகளை தொட்டுக் கொண்டு தண்ணீர் போகிறது. இப்போதும்,'காவிரியின் உபரி நீர் வீணாக போய் கடலில் கலக்க போவுது' என்று பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், "கடல்தான் மழைக்கான ஆதாரம். இப்போது தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்ததால்தான், மேட்டூர் அணை நிரம்பி காவிரியில் இவ்வளவு தண்ணீர் செல்கிறது. அப்புறம், கடலில் உபரி நீர் 'வீணாக' கலக்குதுன்னு சொல்றது கொடுமை.

கடலுக்கு போகும் தண்ணீரை 'வீண்' என்று சொல்பவர்கள் தண்ணீரை வியாபாரமாக்குபவர்கள்; வீண் என்ற சொல் அத்தகையவர்களின் பொருளாதார சொல்லாடல்" என்று விவசாயச் சங்க பிரதிநிதிகள் வெடிக்கிறார்கள்.

இதுபற்றி, பேசிய நிலத்தடி நீர் மற்றும் கழிவுநீர் பாதிப்பு விவசாயிகள் சங்க கரூர் மாவட்டச் செயலாளர் ராமலிங்கம், "இப்படி 'காவிரி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது 'ன்னு பேசும் ஆள்கள் விபரம் தெரியாத, இயற்கையின் சுழற்சியை அறியாதவர்கள். ஆற்று நீர் கடலில் கலப்பது 'வீண் ' என அவர்கள் எந்த அடிப்படையில் பேசுகிறார்கள் .? மனித சக்தியால் உருவாக்கப்படும் ஒரு பொருளையோ, திரவத்தையோ வீணாக்கினால்தான் அது வீண். ஆனால் மனித சக்திக்கு தொடர்பில்லாத, இயற்கையால் உருவாக்கப்பட்ட ஆற்று நீர் காலம் காலமாகப் பயணித்து கடலில் கலந்ததைத் தடுத்து மனித தேவைக்கு பயன்படுத்தியதோடு மட்டும் அல்லாமல், அந்த நீர் முழுவதுமே மனித தேவைக்கானது எனச் சொல்ல தொடங்கியது நாம்தானே? அது கடலில் கலப்பது வீண் எனச் சொல்வது அறியாமைதான் அது அடுத்த தலைமுறையை அழிக்கப்போகும் விஷ விதையாக மாறிபோகும்.

காவிரியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டுகள் என எல்லாமே இந்த ஒரு நூறாண்டுகளுக்குள்தான் இருக்கும். ஆனால், காவிரி என்ற ஆறு பல ஆயிரக்கணக்கான ஆண்டு வயதை உடையது. குடகு மலையில் பிறந்து கர்நாடக மேட்டுநிலப்பகுதியை தாண்டி, மேட்டூருக்கு கீழே சமவெளிப்பகுதியில் பரந்து விரிந்து, வண்டல் மண் டெல்டாவில் ஓடி, பூம்புகார் வழியே காலங்காலமாக கடலில் கலந்து வந்தது.

ஒவ்வொரு கடலிலும் சில பிரத்யேகமான கடல்வாழ் உயிரினங்கள் உண்டு. தமிழக கடற்பகுதியில் காணப்படும் சில மீன் இனங்கள் அரேபிய வளைகுடாவில் காணப்படாது. அதற்கு காரணம் அந்தந்த கடலில் இருக்கும் உப்பின் அடர்த்தி. கடல் நீர் உப்பின் அடர்த்தியைச் சீராக வைத்திருக்க உதவுவது அதில் கலக்கும் ஆறுகளின் நீர்தான்.

அதைவிட முக்கியமாகக் கடற்கரையோரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் உப்புநீர் ஊடுருவும். இதற்கு எடுத்துக்காட்டு சீனா. சீனா நாட்டில் உள்ள மஞ்சாளாற்றின் குறுக்கே கட்டிய பிரமாண்டமான அணை. அந்த அணையினால் பெருமளவு தண்ணீர் கடலுக்கு போகாததால் மஞ்சளற்று கழிமுகப் பகுதிகளில் கடல்நீர் ஊடுருவி தற்போது புல்பூண்டுக்கூட முளைக்காத பாலைவனமாக மாறிப்போன கொடும் நிகழ்வு நடந்திருக்கு. நல்ல நிலங்கள் பாலைவனமாக மாறியதால் அதைச் சரிசெய்ய சீனா தற்போது கடுமையாகப் போராடி வருகிறது. தற்போது அணையில் பாதியளவு மட்டுமே தண்ணீரை வைத்துக்கொண்டு மீதியைக் கடலுக்கே விட்டுவிடுகிறது" என்றார்.

அடுத்து பேசிய, தற்சார்பு விவசாயிகள் சங்க செயலாளர் கி.வே.பொன்னையன்,

"காவிரி நீர் என்பது கர்நாடக, தமிழக மக்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அது ஒட்டுமொத்த இயற்கைக்கும் சொந்தமானது. நாமும் இயற்கையின் ஓர் அங்கம். நாம் மட்டுமே அதைச் சொந்தமாக்கிக்கொள்ளும்போது இயற்கையின் தொடர்ச் சங்கிலியை நாம் உடைக்கிறோம். இயற்கைச் சங்கிலியில் ஒரு கன்னி விடுபடும்போது ஒட்டுமொத்த சங்கிலி அமைப்புமே சிதைந்துவிடும் என நமக்கு புரிவதில்லை.

காவிரி தீர்ப்பில்கூட,'10 டி.எம்.சி தண்ணீர் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக வெறுமனே ஆற்றில் போகனும்'ன்னு என்ற உத்தரவு சொல்லப்பட்டிருக்கு. அதில், அதிகமாகத் தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்குவது என்பது நமக்கு நாமே வெட்டிக் கொள்கிற சவக்குழி. அப்படி தடுப்பணைகள் கட்டி அவ்வளவு நீரை நாம் என்ன செய்ய முடியும்? கீழப்பவானி வாய்க்காலில்கூட 2300 கன அடி தண்ணீரைத்தான் கொண்டு போக முடியுது.

எல்லா காவிரி கிளை வாய்க்கால்களிலும் அதிகபட்சம் இருபதாயிரம் கன அடி நீரைத் கொண்டு போக முடியும். 50 ஆயிரம் கன அடி நீரை, எங்கு நாம் தேக்குவது? கடலுக்குச் செல்லும் தண்ணீரை வீண் என்பது நுகர்வு கண்ணோட்டம்.

கர்நாடகாவில் 3 அணைகள் இருக்கு, ஆனால், நம்மிடம் மேட்டூர் அணை மட்டும்தான் இருக்கிறது என்கிறார்கள். முதலில் ஒரு அணையைக் கட்ட எந்த மாதிரியான நில அமைப்பு இருக்க வேண்டும் என யோசித்தாலே இதற்கான பதில் கிடைத்திருக்கும். அணைகள் மேட்டுப்பாங்கான நிலத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையில்தான் கட்டப்படும்.

கர்நாடகாவிலிருக்கும் 3 அணைகளும், நம் மேட்டூர் அணையும் அப்படி கட்டப்பட்டதுதான். மேட்டூருக்கு கீழே அதுபோன்ற அணைகள் கட்டக்கூடிய நில அமைப்பு கிடையாது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் போன்றவை சமவெளிப்பகுதிகள். சமவெளியில் அணைகளைக் கட்டமுடியாது. ஏரி, குளங்களைத்தான் அமைக்க முடியும். அதனால்தான் ,நம் முன்னோர்கள் நிறைய ஏரி, குளங்களைக் காவிரி டெல்டா பகுதியில் வெட்டினார்கள்.

ஆனால்,'காவிரி டெல்டாவில் கல்லணை கட்டப்படவில்லையா?' எனக் கேட்கலாம். கேட்பவர்கள் நிச்சயம் கல்லணையை முன்பின் பார்த்திருக்க மாட்டார்கள். கல்லணை என்பது டி.எம்.சி கணக்கில் தண்ணீரைத் தேக்கி வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்தும் அணை கிடையாது. காவிரியில் வரும் நீரைத் தடுத்து உள்ளாறு (கொள்ளிடம்), காவிரி, வெண்ணாறு, புது ஆறு என நான்காகப் பிரித்து அனுப்பும் பிரம்மாண்டமான மதகுதான் கல்லணை.

அக்காலத்தில் காவிரியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திலிருந்து பயிர்களைப் பாதுகாக்கக் கட்டப்பட்டதுதான் கல்லணை. காவிரியில் வெள்ளம் வரும்போது அது கொள்ளிடத்தில் திருப்பிவிடப்படும். கொள்ளிடம் ஆறு வெள்ள நீர் எவ்வளவு திறக்கப்பட்டாலும் தாங்கும். அந்த வெள்ளநீரைப் பயன்படுத்திக்கொள்ள வெட்டப்பட்டதுதான் கடலூர் மாவட்டத்திலிருக்கும் வீராணம் ஏரி.

காவிரியில் கர்நாடகா கட்டியிருக்கும் 3 அணைகளின் மொத்த கொள்ளளவு 112 டி.எம்.சி. தமிழ்நாட்டிலிருக்கும் மேட்டூர் அணையின் கொள்ளளவு மட்டுமே 93 டி.எம்.சி. நமக்கு மேட்டூர் அணை மட்டுமே போதும். ஏனென்றால், மேட்டூர் அணை முழுமையாக நிரம்புவதற்கான தண்ணீரே நமக்கு கிடைப்பதில்லை. மேட்டூர் அணை கட்டப்பட்ட காலத்திலிருந்து (1934) தற்போதுவரை வெறும் 33 முறை மட்டுமே அணையின் முழு கொள்ளளவான 120 அடிவரை நீர் நிரம்பியிருக்கிறது.

அதனால்,நாம் செய்யவேண்டியது இருக்கக்கூடிய நீர்நிலைகளைப் பாதுகாப்பது மட்டும்தான். இங்கிருக்கும் ஏரி, குளங்களில் தண்ணீரை தேக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டியது மட்டும்தான். மழைநீர்தான் நமக்கான நீர். ஆற்றுநீர் நமக்கும் கடலுக்குமான நீர். அதனால், 'கடலில் வீணாகக் காவிரி நீர் கலக்கிறது' என்று சொல்லும் தண்ணீரை வியாபாரமாக்கும் பன்னாட்டுக் நிறுவனங்களின் உளறலை நாமும் செய்யக்கூடாது" என்று முடித்தார்.

Wednesday 13 June 2018

ARAMCO SCAFFOLD CERTIFICATION TEST MODEL QUESTIONS/ ANSWERS

1 After installing one pair of post which component of scaffold should be install
 A/    Runer         B/   Brace    C/  Ties   D/    Guys A
2 Prior to install scaffold a scaffold supervisor must look 
 A/  Height of scaffold  B/ Width of scaffold  C/ Length of scaffold D/ Load rating Scf
3 Who will install red tag 
  A/ Scaffold supervisor  B/ Scaffold inspector C/ Permit receiver D/ Permit issuer A
4 What type of rope used to lift scaffold material ( drawing )
A/  Rolling hitch B/ Reaf knot   C/ Timber hitch   D/ Drum hitch 
5 Scaffold plan required if scaffold height increase more then
             mtr
 A/ 4.0 mtr    B/ 38.0 mtr    C/  3.0 mtr    D/ 12.2 mtr  D
6 If yellow tag installed on the scaffold what is to be worn
 A/ Safety belt   B/ Life lice   C/  Full body harness anchored  D/ Full body harness C
7 Ladder 1st rung height from the ground 
 A/ 600mm/ 2ft    B/ 300mm/1ft    C/ 1200mm/ 4ft     D/ 1800mm / 6ft  A
8 Scaffold plat form slope
 A/ 1;3    B / 1;1    C / 1;4    D / 1;2  C
9 Tread depth of stairway at least
A / 220mm     B / 150mm     C / 300mm       D / 400mm  A
10 Mediume duty scaffold underhung maximum longitudinal post spacing 
 A / 1.2     B / 1.8      C / 1.5       D / 3.2   C
11 OSHA 1926.450 Tank builders bracket scaffold space atleast  
 A / 1.5    B / 3.2     C / 1.2    D / 2.4  B
12  Check coupler shall be install 
 A/ Bellow the runer  B/ Bellow the transom C/On the beam D/Top&Bottom H/ tube  D
13 If yellow tag is install Fullbody harness shall be anchored to 
 A /Conduit     B / Steel stucture        C / Runner          D / Transom  B
14 Above the platform headroom height atleast 
 A / 2.0 M       B / 1.5M         C / 2.5M         D / 1.8M  D
15 An installed power line 60kv scaffold clearance atleast 
 A / 4.0mtr      B / 1.0mtr       C / 3.0mtr      D / 1.2mtr  A
16 Bracket scaffold plank shall be overlaped 
  Plank shall be overlape in one direction only and minimum overlape 230mm ( 9'' )
17 Medimum duty mobile scaffold caster wheel dia 
 A / 5''     B / 7''      C /4''       D /  3''   B
18  Mobile tower scaffold caster wheel must have 
 A / Pin       B / Base plat       C / Wheel lock       D / Screw jack  C
19  Landing platform wide atleast 
 A /27''      B / 20''       C / 15''      D / 21''  A
20 1!/2 thick plank span length increase 1.5 mtr how many board bearer atleast 
 A / Two     B / Foure     C / One      D / Three  C
21 A light duty scaffold has 8 planked level howmany working platform shall be consider
 A / One      B / Zero    C / Two       D / Three 
22  Base plat shall be used all place except 
 A /Mobile scaffold  B/ Light duty scaffold   C/ Tower scaffold  D/ Heavy duty scaffold
23 Soft ground required
 A / Sill board    B / Screw jack    C / Base plat      D / Level the ground  A
24 All scaffold tubing must have marked 
 A / Bs-1139     B / 10219       C / ASTM-500        D / ASTM-123  D
25 Load rating of fabricated tubeler scaffold platform 
 A / Light duty     B / Special duty     C / Medium duty    D /All purpus  A
26 SGB type material birdcage scaffold transverse side 1.8mtr longitudinal direction must
 A/ 1.5     B / 1.8      C / 2.5      D / 2.4    C
27 When pair of post in position which componet install first 
 A / Outrigger      B / Raker      C / Tie       D / Ledger  D
28 Duration of Reinspection of tag 
 A / 3 Weeks     B / 2 Weeks     C / 1 Weeks      D / 4 Weeks  B
29 What kind of rope use lowering material during dismantle scaffold 
 A / Steel rope     B / Knock roll      C / Timber Hitch     D / Nilon rope  D
30 As per SSH Sole plat (Sill board) not required 
 A / Loose sand ground   B/ Concrete ground  C/ Asphalt ground    D/ Sand Surface  B
31 Where Use Base plate 
 A/ Concrete ground   B/ All over except mobile   C/ Asphalt ground   D/Sand surface B
32 What type of scaffold is consider as Special scaffold 
A / 120kg/m2    B / 290kg/m2       C / 240kg/m2          D / 175kg/m2    B
33 Which type of Scaffold required for piping Equipment work 
A / Light duty     B / Special duty        C / Medium duty          D / General  B
34 From which height guardrail system required when person protect from fall 
 A / 2.0mtr     B / 1.6mtr       C / 1.2mtr        D / 1.8mtr  D
35 Toprail of guardrail system is inbetween 
A/ 0.95mtr(38'')-1.15mtr(45'')           B/ 0.8mtr(32'')-0.9mtr(35'')
 C/ 1.0mtr(40'')- 1.20mtr(48'')           D/ 0.7mtr(28'')- 0.95mtr(38'') A
36 Distance from face of wall or steel stucture must not exceed 
A/ 360mm (14'')    B/ 250mm(10'')     C/ 300mm(12'')      d/ 230mm(9'')  A
37 Minimum clear Headroom for scaffolding platform 
 A/ 1.8mtr(6')    B/ 3.0mtr(10')      C/ 2.0mtr(6.6')       D/ 2.5mtr (8') A
38 Temprary stairways tread depths atleast 
 A/ 220mm(9'')    B/ 280mm (11'')    C/ 215mm (8'')      D/ 150mm(6'')  A
39 The distance between bottom rung of ladder to base at least 
A/ 600mm(2ft)    b/ 1200mm(4ft)    C/ 300mm(1ft)    d/ 1500mm(5ft) 
40 What type of stamps to be applied on the scaffold tubes 
 A/ BS - 1139     B/ ASTM - 123     C/ BS- 2482       D/ ASTM - 125  A
41 What is required end of planks more then 25(1'') splited
 A/ Baded                 B/ no banding                 C/ Nailed              C/ Tie with wire  A
42 All type connection shall be made by
A/ Double coupler        B/ Putlog coupler      C/ Siwval coupler      D/ putlog&siwval A
43 Tie must connected with always 
A/ Close node point  B/ With outrigger   C/ Bracing    D/ With min 2 ledgers or posts D
44 Bracing connection made 
degree
A/ 35 dg to 55dg B/ 45dg to 55dg        C/ 30dg to40 dg D/ 40dg to 45 dg  A
45 The slope of scaffolding platform not exceed
A/ 1 vertical to 4 horizontal         B/ 4 horizontal to 1 vertical A
C/ 2 vertical to 1 horizontal  D/ 3 horizontal to 2 vertical 
46 Wate is the procedure dismantle scaffold 
A/ Top runner     B/ Lift by lift         C/ Tie & Transom         D/ Any where  B
47 What is the minimum distance from scaffold to 60 kv power line 
A/ 3 mtr        B/ 3.5 mtr       C/ 4 mtr          D/ 4.5 mtr  C
48 What is the minimum distance of runner joint to the post 
A/ 300 mm        B/ 200 mm         C/ 280 mm           D/ 350 mm
49 Unless Otherwise specified in manufactured  instructions of system scaffold braced 
full height of each 
A/ 10 mtr(33')      B/ 15 mtr(45')          C/ 8 mtr(8')          D/ 6 mtr (21') A
50 Distance from base to foot tie must be 
160 mm(6'') min     B/ 200 mm(8'') min     C/ 160 mm(6'') max   D/ 250 mm(10'') max  A
51 When bearer& runner joints must be far from the post maximum 
A/ 12'' (300mm)    B/ 16''(400mm)        C/ 6''(150mm)        D/ 18''(450mm) A
52 Scaffolding with one working platform&Eight additional PLF which type of scaffold it is
A/ Heavy duty        B/ medium duty      C/ Light duty       D/ Special duty  C
53 SGB Cuplock type Birdcage scaffold transom side 1.8mtr what is the longitudinal side
A/ 2.5 mtr         B/ 1.8 mtr        C/ 1.2 mtr        D/ 1.0 mtr  A
54 Heigher then which height of scaffold reviewed by Loss Prevention
A/ 6.0 mtr (21ft) B/ 38 mtr(133ft)        C/ 12.2 mtr(40ft)           D/ 10 mtr(30ft) B
55 Tube&coupler Medium duty scaffold transverse post spacing 1.2 m what is longitudinal
A/ 1.8 mtr      B/ 2.4 mtr       C/ 1.2 mtr        D/ 2.0 mtr  A
56 Medium duty Mobile scaffold Caster wheel dia at least
A/ 120 mm (5'')        B/ 170 mm (7'')         B
57 What device to install on mobile scaffold caster wheel 
A/ Wheel lock       B/ Screw jack         C/ jack plate          D/ Base plate  A
58 50 mm thick OSHA certified planks used on tank bracket scaffold what is the 
circumferential distance of bracket strap centre 
A/ 1.5 mtr       B/ 3.2 mtr        C/ 2.4 mtr          D/ 1.8 mtr  C
59 What is the maximum load rating of fabricated tubler frame scaffold 
A/ 120 kg/m2      B/ 170kg/m2           C/ 240kg/m2          D/ 290kg/m2  A
60 Bracket scaffold planks overlap minimum
A/ In one direction with minimun overlap 230 mm (9'' )
B/ In both direction with minimun overlap 230 mm (9'' ) 
C/ in both direction with minimun overlap 300 mm (12'') 
D/ in one direction with minimum overlap 300mm (12'' ) A
61 Check coupler shall be installed 
A/ Top of hunger tube&Bottom of Trapaze tube 
 B/ Under of hunger tube & Top of Trapaze tube 
C/ Under&top of the Beam A
62 What is the height of first platform in system scaffold 
 A/ 1.5 mtr       B/ 2.0 mtr         C/ 1.8 mtr         D/ 2.5 mtr  B
63 Scaffolding landing &Walkway shall be at least 
A/ 675 mm(27'')3 planks     B/ 600 mm(24'')     C/ 760 mm(30'')      D/ 1200 mm(47'') A
64 Under hung scaffold longitudinal side hanger tube spacing more then 1.5 mtr atleast..
A/ one board bearer   B/ 3 board bearer      C/ 2 board bearer      D / not required  C
65 Yellow tag is applied what type of PPE will worn
A/Full body harness&anchored B/ Life line   C/ Safety belt&anchored    D/Safety belt  A 
66 Load required for safw anchore point at least
A/ 2400 kg(5291lbs)    B/ 2000kg(4409lbs)   C/ 2260kg(5000lbs)   D/ 2600kg(5732lbs A
67 What is the purpose of use bracing on scaffold  
A/For rigidity of scaffold B/For inspection C/For looking good  D/For contractor Scaffold / A
68 Where are use plan bracing
A/ Tower &mobile scaffold     B/ Long scaffold     C/ Run scaffold     D/ Any where  A
69 Which type of scaffold used caster ?
A/ Tower scaffold      B/ Mobile scaffold     C/ System scaffold      D/ Any scaffold  B
70 Which type of lanyards suitable to use for scaffold 
A/ Locking type snaphooks     B/ D ring type    C/ Only one lock type    D/ Any type  A
71 What is the load rating for light duty scaffold 
A/ 240kg/m2(2.4kn/m2)  B/ 120kg/m2(1.2kn/m2)   C/250kg/m2(2.5kn/m2)  D/270kg/m2  B
72 What type of scaffold for abrasive blasting and cleaning 
A/ Light duty       B/ Special duty       C/ medium duty        D/ Any type scaffold  C
73 What is the purpose of special duty scaffold 
A/ To load greater then 240kg/m2   B/Any load     C/ To load less then 240kg/m2  A
74 Where install ledger on the scaffold 
A/ Lenth side    B/ Width side      C/ For bracing          D/ Any where  A
75 What is the purpose of using screw jack on scaffold 
A/ Compesate variation of ground   B/ For load rating      C/ For scaffold stability A
76 Cantlivered more then 3.0 mtr out side the stucture what type of scaffold 
A/ Medium duty     B/ Light duty      C/ Special duty      D/ None of above  C
77 Where use spigot 
A/ System scaffold    B/ Tower scaffold     C/ Mobile scaffold     D/ Any type scaffold  A
78 What is the length of trapaze tube 
A/ 450mm-600mm    B/ 500mm-700mm      C/ 200mm-400mm     D/ 150mm-300mm A
79 Guard rail system shall be able to with stand with out failure a force at least 
A/ 80kg (200pounds)    B/ 100kg(220pounds)     C/ 110kg(242pounds)     D/ 90kg D
80 What is the length of lanyards 
A/ 6 Feet(1.8mtr)        B/ 6.5Feet(2.0mtr)     C/ 8Feet(2.4mtr)       D/ 10Feet(3.0mtr) A
81 Why use snaphooks and D ring in personnel fall arrest systm 
A/ To prevent rool out       B/ To prevent body     C/ To hang       D/ Any purpose A
82 Horizontal &Vertical life lines made by 
A/ 10mm(3/8'') minimum diameter steel rope    B/ 11mm minimun diameter mild wire rope
C/12mm minimum diameter nylon rope  D/8mm minimun diameter polypropelene rope /A
83 Horizontal an unload sag at the center not greater then ?
A/ 300mm(12'')       B/ 250mm(10'')      C/ 200mm(8'')      D/ 400mm(16'') A
84 Toeboard minimum vertical height &thickness at least 
A/ 200mm(8'')-40mm(1.5'')    B/ 150mm(6'')-50mm(2'')     C/100mm(4'')-25mm(1'')
D/ 120mm(5'')-50mm(2'') C
85 Toeboard shall be capable load at least ?
A/ 23kg(50pounds)       B/ 25kg(55pounds)        C/ 30kg(66pounds)     D/ 20kg(44po)    A
86 Where tools material equipment are piled to a point heigher then the top eadge of toe
board what kind of protective screen to be used to prevent falling &protect striking worker  
A/ 18 guage wire with a maximum 13mm mesh 
B/ 20 guage wire with a maximum 20mm mesh 
C/ 24 guage wire with a maximum 16 mm mesh 
D/ 16 guage wire with a maximum 18 mm mesh  A
87 Asafe means of entry and exit shall be provided 
A/Above or bellow 2ft B/ Above or bellow 4ft  C Above or bellow 6ft D/Above or bellow3ft  A
88 What is width and lenth of temporary stairway landing 
A/ 560mm(22'') wide--760mm(30'')long        B/ 760mm(30'')wide--560mm(22'') long 
C/ 580mm(23'')wide--600mm(24'') long        C/ 630mm(25'')wide--760mm(30'') long  A
89 What is the vertical height of temporary stairway 
A/ 3.7mtr(12ft)   B/ 4 mtr(13ft)       C/ 4.5 mtr(14ft)        D/ 3.5 mtr (11.5ft) A
90 Temporary stairway shall be installed which degree ?
A/ 30- 50 degree     B/ 35- 40 degree      C/ 40- 50 degree       D/ 30- 40 degree  A
91 Temporary stairway riser height at least and maximum how much 
A/ 6''(150mm)-8''(215mm)               B/ 9''(220mm) 11''(280mm) 
C/ 4''( 100mm)-8'' (215mm)             D/ 8''(215mm)- 6'' (150mm)  A
92 Temporary stairway tread depth how much at least and maximum ?
A/ 9''-220mm 11''-280mm                       B/ 6''-150mm 8''-220mm
C/ 11''-280mm 8''-220mm                       D/ 8''-220mm 6''-150mm A
93 Temporary stairway handrail height shall be ?
A/ 940mm 37''-860mm 34''                      B/ 950mm 38'' -1150mm 45''
C/ 940mm 37'' -950mm 38''                     D/ 860mm 34'' -1150mm 45'' A
94 Temporary stairway minimum clearance in between hand rail& wall shall be ?
A/ 80mm      B/ 50mm       C/ 100mm      D/ 150mm A
95 Temporary ram and walk way slope not more then 
A/ 1 V 3 H     B/ 1 V 4 H      C/ 1 V 1 H       D/ 1 V 2 H  A
96 Post spacing is Depend on what 
A Length of Scaffolding 
B Width of Scaffolding
C Height of Scaffolding
D Load rating of Scaffolding D
97
 IF THE LADDER RUNG OR SIDE IS DAMAGE WHAT YOU HAVE TO DO

A       Repair&Used B REMOVED FROM S/ARAMCO
C CAN USE IF SAMALL DAMAGE D NONE OF ABOVE
98 WHAT IS THE DISTANCE BETWEEN THE LEDGER AND TRAPEZE TUBES
A 3 FT B 2 FT
C 1 FT D 4 FT
99 WHAT IS THE DISTANCE BETWEEN THE TOEBOARD AND WORKING SURFACE 
A 8 MM B 5 MM
C 6 MM D 4 MM
100 WHAT IS THE MIN HEIGHT OF TOP RAIL 
102 A 1.15 M (45 INCH) B 0.95 M(38 INCH)
C 0.80 M(32 INCH) D 0.90 M (36 INCH)
103 SUPERVISOR CAN SIGN LESS THEN WHAT HEIGHT 
A 8 M B 12.2 M
C 6 M D 10 M
104          WHO WILL INSTAL THE RED TAGE
A SCAFFOLD INSPECTOR B SCAFFOLD SUPERVISOR
C LPD D PERMIT RECIVER
105 MED/DUTY TUBE&COUPLER SCAFFOLD IF PLANKS LEVEL 2 HOW MANY WILL BE WORKING PLF
A 3 B 5
C 1 D 2
106  PLAN BRACING IN MOBILE&TOWER SCAFFOLD SHALL BE INSTALL
A AT THE BASE B AT THE TOP
C EVERY LIFT D BASE &TOPE AND EVERY THIRD LIFT
107 IN HANGER TUBE HOW MANY CLAMP FIX AT LEAST 
A 3 B 4
C 2 TO BE CHECK D 5
108 IF THE PLANKS THICKNESS IS 50 MM THE MAXIMUM CIRCUMFERENTIAL DISTANCE BETWEEN
A 3.2 M B 1.5 M
C 2.7 M D 2.4 M
109 RAMP OR WALKWAY SHALL HAVE CLEATTS IF THAT IS
A 1 V- 3 H B 1 V- 4 H
C 1 V-2 H D 1 V-1 H
110 RAMP OR WALKWAY ABOVE THE HORIZONTAL DEGREES 
A 35 D B 15 D
C 25 D D 20 D
111 TIES OR GUYS SHALL BE INSTALLED CLOSED TO THE HEIGHT OF
A 3 TIMES THE MINI BASE DIMENSION  B 2 TIMES
C 4 TIMES D NON ABOVE
112 IF THE GAPE BETWEEN PLANKS 25 MM WHAT TO DO( USE SSH)
A        COVER WITH PLANKS  B USE PLY WOOD
C NO NEED TO COVER D NON ABOVE
113 IF SCAFFOLDING IS NOT PASSED OR ALETRING WICH TYPE OF TAG WILL BE USED
A RED TAG B       GREEN TAG
C YELLOW TAG D              ANY TAG
114  FOR BIRDCAGE SCAFFOLDING INTERIOR LONGITUDINAL ZIG ZAG BRACING IN WICH DEGREES 
A 30-35 DG B 35-45 DG
C 35-55 D 30-50 DG
115 TEMPORARY RAMP AND WALK WAY SLOPE NOT MORE THEN
A ONE VERTICAL UNIT THREE HORIZANTAL UNITS A
B ONE VERTICAL UNIT FOUR HORIZANTAL UNITS
C ONE VERTICAL UNIT ONE HORIZANTAL UNIT
D ONE VERTICAL UNIT TWO HORIZANTAL UNITS
116 WHAT IS THE NECESSARY WHEN ROOF WORK BEAR THE LOAD
A
A REINFORCED B PROVIDE SCREWJACK
C PROVIDE SOLE BOARD
D PROVIDE BASE PLATE
117 DURING NIGHT TIME AN ELEVATED WORK AREA WHAT TYPE OF LIGHT TO BE USED
A ADEQUATE LIGHT ACCORDING TO SAES-P-123
B ADEQUATE LIGHT ACCORDING TO BS-1139
C ADEQUATE LIGHT ACCORDING TO BS-5973
ADEQUATE LIGHT ACCORDING TO EN-10219-2
118 WHAT IS THE SUSTAIED WINDS SPEED ALLOWED TO WORK AN ELEVATED WORK AREA A
A 65 KPH(40MPH) B 70 KPH(50MPH)
C 50 KPH(30MPH) D 80KPH(70MPH)
119 FLOATATION RING SHALL BE PROVIDED AT INTERVELS NOT MORE THEN  A
A 15 MTR(50 FT) B 20MTR(65 FT)
C 10 MTR (33 FT) D 5 MTR (15 FT)
120
WHAT PRECAUTION SHALL BE TAKEN TO PREVENT WORKERS TO HOT SURFACE
A
A BEARIER ,STAND BY MAN WARNING SIGN
B LADDER SIGN BOARD
C COVER THE PIPE
D ANY OF ABOVE