Thursday 24 December 2020

IBAN vs SWIFT, IFSC Codes Differences & Uses !!





There are two internationally recognized, standardized methods of identifying bank accounts when a transfer is being made from one country to another: the International Bank Account Number (IBAN) and the Society for Worldwide Interbank Financial Telecommunication (SWIFT) code. The difference between the two methods lies in what they identify.

A SWIFT code is used to identify a specific bank during an international transaction, whereas IBAN is used to identify an individual account involved in the international transaction. Both play an essential role in the smooth running of the international financial market.

The SWIFT system pre-dates attempts to standardize international banking transactions through IBAN. It remains the method by which the majority of international fund transfers are made. One of the main reasons for this is that the SWIFT messaging system allows banks to share a significant amount of financial data.

This data includes the status of the account, debit and credit amounts, and details related to the money transfer. Banks often use the bank identifier code (BIC) instead of the SWIFT code. However, the two are easily interchangeable; both contain a mix of letters and numbers and are generally between eight and 11 characters in length.





Key Differences Between SWIFT code and IFSC code.

The important differences between SWIFT code and IFSC code are mentioned below:

1.            SWIFT Code is an acronym for Society for Worldwide Interbank Financial Telecommunication Code. IFSC code is short for Indian Financial System Code

2.            SWIFT code is a globally recognized code, used at the time of international credit transfer between banks and also when there is an exchange of messages between banks. IFSC Code is a unique identification code of a bank-branch used for the purpose of digital money transfer.

3.            The SWIFT code is approved by the International Organization for Standardization (ISO) Conversely; IFSC code is developed by Reserve Bank of India (RBI).

4.            Only those banks can take part in an international wire transfer, which is SWIFT code enabled. As opposed to, IFSC code is provided to all the Indian bank branches.

4.The SWIFT code consists of 8 or 11 characters. Unlike IFSC code, that consists of 11 characters.

 6.           In international money transfers (SWIFT code) the fees charged is higher as compared to national transfers (IFSC code).

7.            You can find SWIFT code on the bank’s website or the account statement while IFSC code can be found in Bank-branch cheque book and RBI website.

Prepared by M.Ajmal Khan.

Wednesday 23 December 2020

SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunication) Code & IFSC(Indian Financial System Code) Details with Uses !!



SWIFT is a short form for Society for Worldwide Interbank Financial Telecommunication Code. A unique identification code is assigned to a specific bank to proceed with money transfer between banks internationally. Moreover, the code is also used when there is an interchange of messages between banks.


SWIFT code is allotted to the financial as well as the non-financial institution. The code is a combination of 8 or 11 alphanumeric characters. The details of the code are provided below.

•First four characters represent bank code. (Letters only, i.e. AAAA)

•Next two characters represent the country code. (Letters only, i.e. BB)

•Next, two characters represent location code (letters and digits, i.e. 1C)

•Last three characters are optional that represents branch code (letters and digits (DDD)



SWIFT Code Standard

A Swift Code is the standard format for Business Identifier Codes (BIC) and it's a unique identification code for banks and financial institutions globally. These codes are used when transferring money between banks, for international wire transfers or SEPA payments.


SWIFT code, BIC code, SWIFT ID, or SWIFT - BIC (ISO 9362) is a standard format of Business Identifier Codes approved by the International Organization for Standardization (ISO). It is a unique identification code for both financial and non-financial institutions. The acronym SWIFT stands for the Society for Worldwide Interbank Financial Telecommunication. When assigned to a non-financial institution, the code may also be known as a Business Entity Identifier or BEI. These codes are used when transferring money between banks, particularly for international wire transfers, and also for the exchange of other messages between banks. The codes can sometimes be found on account statements.


The overlapping issue between ISO 9362 and ISO 13616 is discussed in the article International Bank Account Number (also called IBAN). The SWIFT network does not require a specific format for the transaction so the identification of accounts and transaction types is left to the agreements of the transaction partners. In the process of the Single Euro Payments Area, the European central banks have agreed on a common format based on IBAN and BIC including an XML-based transmission format for standardized transactions; the TARGET2 is a joint gross clearing system in the European Union that does not require the SWIFT network for transmission (see EBICS). The TARGET directory lists all the BICs of the banks that are attached to the TARGET2-network being a subset of the SWIFT directory of BICs.




EXAMPLE



HDFC BANK LIMITED SWIFT Code Details

SWIFT code : HDFCINBBXXX

Swift code (8 characters) : HDFCINBB

Branch Name : HDFC BANK LIMITED

Branch address: K.K NAGAR BRANCH

Branch code: XXX

Bank Name : HDFC BANK LIMITED

City: MADURAI

Country: India



A SWIFT/BIC is an 8-11 character code that identifies your country, city, bank, and branch.



Bank code A-Z

4 letters represent the bank. It usually looks like a shortened version of that bank's name.

Country code A-Z

2 letters represent the country the bank is in.

Location code 0-9 A-Z

2 characters are made up of letters or numbers. It says where that bank's head office is.

Branch Code 0-9 A-Z

3 digits specifying a particular branch. 'XXX' represents the bank’s head office.


Definition of IFSC code


Indian Financial System Code is shortly known as IFSC code, which is a unique identification code used to accurately identify the bank branch engaged in the digital money transfer system such as National Electronic Fund Transfer (NEFT) and Real-Time Gross Settlement (RTGS) within India.



The code is a combination of 11 alphanumeric characters whose details are provided below:

•First four characters represent bank code.

•The 5th character is 0.

•Last six characters are branch codes.



All the bank branches within the country are assigned an IFSC code by the Central Bank of India. The code is used by the interbank fund transfer systems to proceed the message to the respective bank branch.


Prepared by M.Ajmal Khan.

Friday 18 December 2020

துபாய் விசா என்ற பெயரில் போலி மோசடி கும்பல் இளைஞர்களே உஷார்!!!!


இந்த ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த நண்பர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு துபாய் விசா கிடைத்துள்ளதாக சொன்னார். மேற்கொண்டு வேலையே உறுதி செய்ய உடனடியாக 10000 ரூ பணம் கட்ட சொல்வதாகவும் சொன்னார்.

முழுவிபரம் கேட்டறிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது! பிரபலமான ATM கார்டு மேல கீர 16 நம்பர் சொல்லுங்கோ... பிராடு கும்பல் போலவே அதே திருட்டு பாணியில் விசா வழங்குவதாக ஒரு போலிக் கும்பல் கிளம்பி இருப்பது பேரதிர்ச்சியாக உள்ளது.
ஒரு facebook பக்கத்தில் துபாய்க்கு வேலைக்கு ஆள் தேவை என்ற வழக்கமான ஒரு விளம்பரத்தை பார்த்து அதன் வாட்சப் நம்பருக்கு தன்னுடைய பாஸ்போர்ட் மற்றும் விபரங்களை அனுப்பியிருக்கிறார் இவர். அவருக்கு அடுத்த நாளே உங்களுக்கு விசா ரெடி, கீழ்கண்ட website இல் சென்று உங்கள் பாஸ்போர்ட் நம்பர் மற்றும் நாங்கள் தந்துள்ள விசா நம்பரை கொடுத்து உங்கள் விசா பேப்பரை டவுன்லோடு செய்துவிட்டு சொல்லுங்கள் என்று சொல்கிறார் வாட்சப் ஆடியோ மூலம் பதிலளித்த பெண். டவுன்லோட் செய்தால் அச்சசல் ஒரு விசா போன்ற பேப்பர் வருகிறது, பாஸ்போர்ட்டில் இருக்கும் தகவல்கள் போட்டோ உடன். சட்டென பார்த்தால் சந்தேகம் வராதபடி இருக்கும். இது என்ன, ஒரு டிராவல்ஸில் தம்பி சென்று விசாரித்த போது இது உண்மையான விசா தான் என்று சொல்லுமளவு இருந்திருக்கிறது. அடுத்தடுத்து வந்த ஆடியோவில், உடனே 2 மணிநேரத்திற்குள் MSC பீஸ் 10000 காட்டுங்கள் மேற்கொண்டு டிக்கட் உள்ளிட்ட வேலைகளை தொடங்க வேண்டும் என்று நகர்ந்துள்ளது உரையாடல்.. பிறகு என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்ததே!
அந்த website ஐ பார்த்தால் பக்கா UAE logo க்கள் பயன்படுத்தப்பட்டு சட்டென சந்தேகம் வராதபடி இது உண்மைதானோ என்று படித்தவர்கள் கூட நம்பும்படி இருக்கிறது. (லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
ஒரு படி மேலே போய் https எனப்படும் certified secured வலைத்தளமாகவும் அது இருக்கிறது. அதுமட்டுமல்ல எமிரேட்ஸ் நிறுவனம் லோகோவுடன் போலியான offer letter உம் அனுப்பி இருக்கிறார்கள்.
உடனடியாக UAE இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ facebook பக்கத்தில் சென்று பார்த்தல் அவர்கள் கொடுத்துள்ள வலைத்தள முகவரி வேறு ஒன்றாக இருக்கிறது. இதனால் சந்தேகமடைந்து அந்த பிராடு வலைத்தளத்திற்கு சென்று சோதித்தால் அது ஒரு பகடை என்பதை உணர முடிந்ததுக்கு. உடனடியாக இந்த தகவலை UAE தூதரக முகவரிக்கு செய்தியாக அனுப்பிவிட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த பதிவை பகிர்கிறேன், உஷாராக இருக்கவும்.
அவர்கள் பயன்படுத்திய போலி வலைத்தளம்: https://uaeembassy.in/consularservices_eVisa-Verfication.php
போலி விளம்பரம் செய்த facebook பக்கம்:
https://www.facebook.com/RightWay-Dubai-Immigration-Services-105249281327132
பிராடுகள் பயன்படுத்திய வாட்சப் தொடர்பு எண்கள்: +91 85318 02951, +966 59 730 8631
அவர்கள் வெவ்வேறு பெயர்களில், விளம்பரங்களில் வரக்கூடும். மிகவும் கவனம் தேவை, குறிப்பாக, புதிய பட்டதாரிகளும் இளைஞர்களும் கவனமாக இருக்கவும்.
பகிர்ந்ததை பகிருங்கள் அனைவருக்கும்.

Thursday 10 December 2020

உங்களுடைய முக்கிய தகவல் இதை நன்கு படித்து பாருங்கள்!!

தகவல் அறியும் உரிமை சட்டம் - தெரிந்தவைகளும், தெரியாதவைகளும் : 'RIGHT TO INFORMATION ACT' - KNOWN AND UNKNOWN!

அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நிலையில் கொண்டு வரப்பட்டதுதான் இந்தியத் தகவல் உரிமைச் சட்டம்-2005.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நோக்கத்துடன் 2005 ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த உரிமையை பேச்சுரிமையின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்திருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி மத்திய, மாநில அரசுகள் மற்று அரசு சார்பு நிறுவனங்களிடமிருந்து எந்த மாதிரியான தகவல்களையும் பெற முடியும். அரசுத் துறைகளிடம் தனியார் நிறுவனங்களின் விவரங்கள் இருந்தால் அதையும் இச்சட்டத்தின் கீழ் பெற முடியும். இந்தியக் குடியுரிமை பெற்ற எவரும் இந்தச் சட்டத்தின் வழியாக தகவல்களைக் கோர முடியும். இதன் வழியே
1. அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற நிலையைக் கொண்டு வருதல்
2. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடமையை மேம்படுத்துதல்.
3. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப் பெற விரும்பும் குடிமக்களுக்கு, அதை அளிக்க வகை செய்தல். இதன் மூலம் லஞ்சம், ஊழல் போன்றவற்றை ஒழித்தல்.
4. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதோடு உள்ளார்ந்த தகவல்களின் ரகசியத்தைக் கட்டிக் காத்தல்.
போன்றவை முக்கிய நோக்கங்களாக இருக்கின்றன.
தகவல் என்றால் என்ன?
தகவல் என்பது எதைக் குறிப்பிடுகிறது? என்கிற எண்ணம் நமக்கு வரலாம். தகவல் என்பது பதிவேடுகள், ஆவணங்கள், கடிதங்கள், இ-மெயில்கள், கருத்துகள், அறிவுரைகள், பத்திரிகை வெளியீடுகள், சுற்றறிக்கைகள், உத்தரவுகள், ஒப்பந்தங்கள், மாதிரிகள் உள்ளிட்ட அனைத்துமே “தகவல்” என்ற பிரிவின் கீழ் வைக்கப்படுகின்றன. இதன்படி கீழ்காணும் அனைத்தும் தகவல்கள்தான்.
1. அரசிடமுள்ள ஆவணங்களில் இருந்து குறிப்புகள் எடுத்தல்
2. அரசின் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை நகல் எடுத்தல்
3. அரசின் பணிகளைப் பார்வையிடுதல்
4. அரசின் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பார்வையிடுதல்
5. சான்றளிக்கப்பட்ட மாதிரிகளைப் பெறுதல்
6. தேவையான தகவலைத் தேவைப்படும் வடிவத்தில் பெறுதல்
தகவல்களைப் பெறுவதன் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கப் போகிறது? என்கிற கேள்வி நமக்குத் தோன்றலாம். ஒரு அரசு நிறுவனத்தில் இருந்து எந்தத் தகவலையும் பெற முடிகிறது. இதன் மூலம் அரசு நிர்வாகத்தின் பொறுப்பும், வெளிப்படையான செயல்களும் அதிகரிக்கிறது. இதன் மூலம் ஓரளவு லஞ்சம் மற்றும் ஊழல் போன்றவை குறைய வாய்ப்பிருக்கிறது. அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதையும் திட்டங்கள் அனைத்தும் மக்களை முறையாகப் போய்ச் சேருகின்றனவா என்பதையும் நாம் இந்தத் தகவல் உரிமைச் சட்டத்தின் வழியாகத் தெரிந்து கொள்ள முடியும். மேலும் குறைகள் இருப்பின் அதைச் சரி செய்ய வேண்டும் என்கிற பொறுப்பும் அரசுக்கு ஏற்படும். இதன் மூலம் இந்திய அரசியல் அமைப்பில் மக்கள் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்துக் கொள்ள ஒரு வழி ஏற்படுகிறது.
தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 15-ன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத் தகவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் இச்சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது இந்த ஆணையம், ஒரு மாநில தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் இரண்டு மாநில தகவல் ஆணையர்களின் கீழ் கடந்த 07.10.2005 ஆம் தேதி முதல் இயங்கி வருகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 5, உட்பிரிவு 1-ன்படி, தகவலுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு, தகவல் அளிப்பதற்காக ஒவ்வொரு அலுவலகத்திலும், பொதுத்தகவல் அலுவலர் என்கிற பொறுப்பில் ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். மேலும் உட்பிரிவு 2-ன்படி, தகவல் கோரும் விண்ணப்பங்களை அல்லது மேல்முறையீடுகளைப் பெற்று, அவற்றைப் பிரிவு 19, உட்பிரிவு 1-ன்படி, பொது தகவல் அலுவலருக்கோ அல்லது மாநில தகவல் ஆணையத்திற்கோ அனுப்பி வைப்பதற்காக அலுவலர் ஒருவர் ஒவ்வொரு உட்கோட்ட அல்லது உள்மாவட்ட நிலையில் உதவி பொதுத்தகவல் அலுவலராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். தலைமைச் செயலகம், துறைத்தலைவர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்கள் போன்றவற்றில் தகவல் பெறுவதற்காக பொதுத்தகவல் அலுவலர், மேல்முறையீட்டு அலுவலர் போன்றவர்களின் அஞ்சல் முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்றவைகள் தரப்பட்டுள்ளன. இவை குறித்த சில விபரங்கள் அரசின் இணைய தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 6-ன்படி, தகவல் பெற விரும்புபவர், ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில், ஒரு வெள்ளைத் தாளில் எழுத்து வடிவிலோ அல்லது மின்னணு வழியிலோ, உரிய அலுவலகத்திலுள்ள பொது தகவல் அலுவலர் அல்லது உதவிப் பொதுத் தகவல் அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன், இதற்கான கட்டணமாக ரூ.10/- (ரூபாய் பத்து மட்டும்) வரைவோலை (Demand Draft) அல்லது அரசு கருவூல சீட்டு (Treasury Challan) மூலம் செலுத்தி அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் ரூ.10/-க்கான நீதிமனற வில்லை (Court Fee Stamp) அந்தப் படிவத்தில் ஒட்டிவிட வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் ரூ.10/- செலுத்திய விபரம் தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் தேவைப்படும் தகவலின் விபரங்களை எந்த வடிவத்தில் வழங்க வேண்டும் என்பது குறித்த தகவலுடன் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து வடிவில் விண்ணப்பம் செய்ய முடியாத நிலையில், அதனை எழுத்து வடிவில் செய்திட அனைத்து உதவிகளையும் பொதுத் தகவல் அலுவலர் அல்லது உதவிப் பொதுத் தகவல் அலுவலர் செய்திட வேண்டும்.
தகவலுக்காக விண்ணப்பம் செய்கிற விண்ணப்பதாரர்களிடம் அந்த தகவலைக் கோருவதற்கான காரணத்தைக் கேட்டல் மற்றும் அவரைத் தொடர்பு கொள்வதற்குத் தேவையான விபரங்களைத் தவிர, தனிப்பட்ட சொந்த விவரங்கள் எவற்றையும் கோருதல் கூடாது.
ஒரு தகவலுக்காக அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகம் ஒன்றிடம் விண்ணப்பம் செய்யப்படுகிற நிலையில், அந்தத் தகவல் பிற அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களில் வைத்திருக்கப் பட்டதாக அல்லது அதன் உரிய பொருள் பிற அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயற்பணிகளுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாக இருக்கும் போது, அந்த விண்ணப்பத்தினை அல்லது அதன் உரிய பகுதியை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு மாற்றல் செய்து அனுப்பி விட வேண்டும். மாற்றல் செய்து அனுப்பப்பட்ட விபரத்தை விண்ணப்பதாரருக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு தகவல் கேட்கும் விண்ணப்பதாரகளுக்கு 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்பட்டாக வேண்டும். தகவல் 30 நாட்களில் கிடைக்காவிட்டால் அதே அலுவலகத்தில் உள்ள மேல் முறையீட்டு அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவரும் 30 நாட்களுக்குள் சரியான தகவல்கள் அளிக்காவிட்டால் தமிழக தகவல் ஆணையத்திற்கு மேல் முறையீடு செய்து தகவல் பெறலாம். தகவல் அளிக்கத் தவறும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் ரூ 25,000 வரை அபராதம் விதிக்கத் தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.
மேல்முறையீட்டிற்கான அலுவலக முகவரிகள்:
தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முகவரி:
தலைமை ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
எண் 375, முதல் தளம்,
காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடி கட்டிடம் ,
தேனாம்பேட்டை,
அண்ணாசாலை ,
சென்னை- 18.
தொலைபேசி எண்: 044 -24357580.
மத்திய தகவல் ஆணையத்தின் முகவரி:
மத்திய தகவல் ஆணையர்.
மத்திய தகவல் ஆணையம்,
ஆகஸ்ட் கிராந்திபவன் 2 வது தளம்,
பி-பிரிவு. நியு பிகாஜி காமா பேலஸ்
டெல்லி-110056....

நன்றி... இந்திய அடிப்படை சட்டங்கள் தெரிந்து கொள்வோம்

Friday 4 December 2020

தனி நபர்களின் எண்ண ஓட்டத்தைச் சீர்குலைப்பதில் மனிதர்களும் கோய் மீனைப் போன்றவர்கள் !!

 ஜப்பானில் 'கோய்’ என்றொரு மீன் வகை உள்ளது. இந்த மீன் விசித்திரமான இயல்புடையது. நீங்கள் இந்த மீனை ஒரு சிறிய தொட்டியில் வைத்து வளர்த்தால், அது அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று அங்குலம் மட்டுமே வளரும்.

சற்று பெரிய தொட்டியில் வளர்த்தால், கோய் மீன் 8 அல்லது 10 அங்குலம் வரை வளரும். சிறு குட்டையில் கோய் மீன்களை வளர்த்தால், அது ஒன்று முதல் ஒன்றரை அடி வரை வளரும். கோய் மீனைக் குளத்தில் வளர்த்தால் இரண்டரை அடி முதல் மூன்றடி வரை வளரும். மிகப் பெரிய ஏரியில் கோய் மீனை வளர்த்தால், அது ஐந்து அடி வரை வளரும்.
மனிதர்களும் கோய் மீனைப் போன்றவர்கள் தாம். சிறியவற்றைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் வளர முடியாமல் போய்விடும். பெரியவைகளைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கவேண்டும். அப்போது தான் வளர முடியும். உங்களது சிந்தனை உயர உயர, உங்களது செயல்பாடும் மேம்பாடு அடையும். உங்களது மதிப்பும் உயர்ந்து கொண்டே செல்லும்.
மனிதர்கள் தங்களை பற்றிக் குறைவாகவே மதிப்பிடுகிறார்கள். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. சிறிய தொட்டியில் வளர்க்கப்படும் கோய் மீன்கள் போல மனிதர்கள் தங்களைக் குறுக்கிக் கொண்டு விடுகினறனர். இதனால் அவர்களால் அவர்களது முழு ஆற்றலை வெளிப்படுத்த முடியாமல் போய் விடுகிறது. இதற்கு முக்கிய காரணங்கள் யாவை? இந்தக் காரணங்களைக் கண்டறிந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய முடியும்.
பொதுவாக எதிர்மறைச் சிந்தனை தான் அதிகமாகக் காணப்படுகின்றது. ஒரு குண்டான மனிதர் சாப்பிட உட்காரும் போதே “நான் சாப்பிடுவதெல்லாம் கொழுப்பாக மாறிவிடுகிறது.’ என்று அலுத்துக் கொள்ளுகிறார். ஒரு குடும்பத் தலைவி காலையில் எழும் போதே “இந்த வீட்டில் எங்கு பார்த்தாலும் குப்பையாகத் தான் கிடக்கிறது. ஒருநாளும் குப்பைகள் குறைவதாகத் தெரியவில்லை’ என்று அலுத்துக் கொள்கிறார். பள்ளிக் கூடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பும் மாணவி தனத தந்தையைப் பார்த்து, “அப்பா, கணக்கில் நான் குறைந்த மதிப்பெண்கள் தான் எடுப்பேன் போல் தெரிகிறது. தேர்வில் நான் தோல்வி அடைந்து விடுவேன் என்று அஞ்சுகிறேன்’ என்று சொல்கிறார்.
இவை யாவும் எதிர்மறையான எண்ண அலைகளாகும். ஆற்றல் மிக்க பலர் தங்களது ஆற்றலை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் குடத்தில் இட்ட தீபங்களாக உள்ளனர். குன்றிலிட்ட தீபங்களாக அவர்களால் பிரகாசிக்க முடியவில்லை. பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், மேல் அதிகாரிகள் எனப் பல்வேறு தரப்பினரும் கேலி, கிண்டல் செய்வதால் ஆற்றல்களைப் பலரால் வெளிப்படுத்த முடியவில்லை. இதமற்ற சொற்கள் ரணத்தை ஏற்படுத்துகின்றன. தெரிந்தோ, தெரியாமலோ உதிர்க்கப்படுகின்ற வார்த்தைகள் வேதனையை ஏற்படுத்துகின்றன.
உளவியலாளர்கள், எண்ண அலையின் ஆற்றல் எப்படிப்பட்டது என்பதைத் துல்லியமாக நிரூபிக்க ஒரு சோதனையை மேற்கொண்டனர்.
இரண்டு பசுமைக் குடில்கள் ஒரே மாதிரியாக உருவாக்கப்பட்டன. மண், உரம் போன்றவை ஒரே மாதிரியாக இடப்பட்டன. பசுமைக் குடிலில் சீதோஷ்ணம் சமமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது. இரண்டு குடில்களிலும் தலா 23 விதைகள் ஊன்றப்பட்டன. ஒரு பசுமைக் குடிலின் முன் ஒருவர் தினந்தோறும் நின்று கொண்டு “இந்த விதைகள் முளைக்காது, முளைத்தாலும் நிலைக்காது. சீக்கிரமே வீணாகிப்போய்விடும்’ என்றெல்லாம் அவர் வசைமாரி பொழிந்து வந்தார்.
மற்றொரு பசுமைக்குடிலின் முன் மற்றொருவர் நின்று கொண்டு, “இந்த விதைகள் யாவும் அபாரமாக முளைக்கும், அற்புதமாக வளரும், அமோக பலனைத் தரும்’ என்று வாழ்த்து மாரி பொழிந்துவந்தார். இந்த வாழ்த்தும் வசையும் மூன்று வாரங்கள் தொடர்ந்தன. வாழ்த்துமாரிக்கு உள்ளான குடிலில் ஊனப்பட்டிருந்த விதைகள் யாவும் முளைத்தன. கம்பீரமாகக் காட்சியளித்தன.
வசைமாரிக்குள்ளான குடிலில் ஊன்றப்பட்டிருந்த 23 விதைகளில் இரண்டு மட்டுமே முளைத்தன. அவை மிகவும் நலிந்த நிலையில் இருந்தன. வாழ்த்து மாரியும் வசை மாரியும் தொடர்ந்தன. வாழ்த்துக்குள்ளான பசுமைக் குடிலில் பயிர்கள் செழித்தோங்கின. வசை மாரிக்குள்ளான பசுமைக் குடிலில் முளைத்திருந்த இரண்டு பயிர்களும் வாடி வதங்கிவிட்டன. விதைகளின் நிலையே இப்படிப்பட்டது என்றால் மனிதர்களின் நிலையைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அதனால் தான் வைபவங்களின்போது வாழ்த்துகளைக் கேட்க வேண்டும் என்று சமூக ரீதியாக ஏற்பாடு செய்து வைத்துள்ளனர்.

இந்த உலகத்தில் யார் தான் கஷ்டங்களையும் துயரங்களையும் துன்பங்களையும் கடந்து போகாம வாழ்கிறார்கள்!!

இதில் வருத்தம் என்னவென்றால் சிலர் இங்கேயே ஆமை மாதிரி ஊரிப்போய்றாக...
நாட்டுக்கு போங்க சொன்னா போவதில்லை... ஒரு கட்டத்திற்கு மேல் இங்குள்ள வாழ்க்கை அவர்களுக்கு பிடித்துவிடுகிறது ஆனால் பலருக்கு பொண்டாட்டி பிள்ளையை விட்டுவிட்டு இங்கே அநாதையா வாழ கொஞ்சம் கூட ஆசை இல்லை... இங்கே படிக்காதவனுக்கும் அரசு வேலை உண்டு நாட்டில் படிச்சவனுக்கே வேலை இல்லையே...

அலுவலகத்தில் உட்கார்ந்து பணிகள் செய்யும் மாமனிதர்களின் கண்ணீர் அதிகம் என்றால் நாடு விட்டு நாடு வந்து வளைகுடா நாடுகளில் கூலி வேலைகள் செய்யும் மாமனிதர்களின் கண்ணீர் எவ்வளவு என்று சொல்ல இயலாத நிலையில் இருக்கிற மனிதர்களும் உண்டு..

வெளிநாட்டு வாழ்க்கை பணமா பாசமா என்ற போராட்டம் எல்லோருக்கும் நல்ல சம்பளம் நிரந்தர வேலை கிடையாது பெரும்பாலும் நமது மக்கள் பெரும் கஷ்டபட்டு அவர்கள் சாப்பிடு கிரார்களோ இல்லை யோ நமது வீட்டுக்கு பணம் அனுப்பவேண்டும் என்ற எண்ணத்துடன் கஷ்டப்பட்டு வெயில் மழை குளிர் உணவு உறவு என்று கஷ்டப்பட்டு தன்னையே குடம்பத்திக்காக அளித்து கொள்கிறார்கள் ஆனால் வயதாகி ஊருக்கு வந்ததும் அவர்களின் குடும்பம் அவரை மதிப்பது இல்லை எவ்வளவு தான் சம்பாதித்தாலும் கொஞ்சமாவது தனக்கு என்று சேமிப்பு வேண்டும் பணத்தை மதிக்கும் குடும்பம், சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றியவரை பெரும்பாலனவர்கள் கண்டுகொள்ளுவதில்லை,நாம்பிறக்கும்போதே சில கிடைக்கும் கிடைக்காது என எழுதப்பட்டுள்ளது ஆகவே அப்பா மனதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

தனி நபர்களின் எண்ண ஓட்டத்தைச் சீர்குலைப்பதில் தெரிந்தோ, தெரியாமலோ ஆசிரியர்கள், பெற்றோர், உறவினர்கள், மேல் அதிகாரிகள் ஆகியோரும் ஈடுபடுகிறார். திடமான, தெளிவான ஆக்கப்பூர்வ சிந்தனை இருந்தால் மட்டுமே தோல்வியை அண்ட விடாமல் செய்ய முடியும்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : உங்கள் மு.அஜ்மல் கான்.


Thursday 19 November 2020

காற்றழுத்தம் புயல் என்றால் என்ன?

காற்றழுத்தம் புயல் என்றால் என்ன? இப்பதிவை விளக்கமாக விளக்கியுள்ளேன் பாருங்கள். இது எல்லாம் தெரிந்து கொள்வது கட்டாயம். இது எல்லாம் பள்ளி பாடங்களிலே உள்ளது. உங்கள் வீட்டில் மாணவர்கள் இருந்தால் கட்டாயம் படிக்க சொல்லுங்கள். 

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரண்மாக தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவிக்கும் . மழை சீசனின் போது இவ்வித அறிவிப்பைக் கேட்கலாம்.
அதென்ன காற்றழுத்தத் தாழ்வு நிலை
கடற்பரப்பில் 26 °C அதிகமான வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும்போது காற்று வேகமாக வெப்பமடைகிறது. வெப்பமடைந்த காற்றானது மேல் நோக்கிச் செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து வெற்றிடம் உண்டாகிறது.
அந்நிலையில் காற்றின் அழுத்தம் அதிகம் உள்ள பகுதியிலிருந்து வெற்றிடத்தை நோக்கி காற்று வீச ஆரம்பிக்கிறது இதையே காற்றழுத்த தாழ்வு நிலை என்கிறோம்.
காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க காற்றழுத்த தாழ்வுநிலையானது படிப்படியாக வலுவடைகிறது.
காற்றானது மணிக்கு 31கி.மீ வேகத்தில் வீசினால் அது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.
காற்றானது மணிக்கு 32 - 51 கி.மீ வேகத்தில் வீசினால் அது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.
காற்றானது மணிக்கு 52 - 62 கி.மீ வேகத்தில் வீசினால் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகும்.
காற்றானது மணிக்கு 63 - 87 கி.மீ வேகத்தில் வீசினால் அது புயல்.
காற்றானது மணிக்கு 88 - 117 கி.மீ வேகத்தில் வீசினால் தீவிர புயல்.
காற்றானது மணிக்கு 118 - 165 கி.மீ வேகத்தில் வீசினால் மிகத் தீவிர புயல்.
காற்றானது மணிக்கு 165 - 221 கி.மீ வேகத்தில் வீசினால் கடும் தீவிர புயல்
காற்றானது மணிக்கு 222 கி.மீ-க்கு மேல் வீசினால் அதி தீவிர புயல்.
புயல் குறித்த எச்சரிக்கை தெரிவிக்கும் விதமாகத் துறைமுகங்களில் 11 விதமான புயல் கூண்டுகள் ஏற்றப்படும் அதன் விளக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1ம் எண் கூண்டு: புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது.
2ம் எண் கூண்டு: புயல் உருவாகியுள்ளது என்பதை அறிவிப்பதிற்காக ஏற்றப்படுவது தான் இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு. இதனைத் தொடர்ந்து துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் வெளியேற்ற வேண்டும் என்பதை தெரிவிக்க ஏற்றப்படுகிறது.
3ம் எண் கூண்டு: திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.
4ம் எண் கூண்டு: துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் இது கடற்கரையை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை
5ம் எண் கூண்டு: துறைமுகத்தின் இடதுபக்கமாகப் புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை.
6ம் எண் கூண்டு: துறைமுகத்தில் புயல் வலது பக்கமாகக் கரையைக் கடந்துசெல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.
7ம் எண் கூண்டு: துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கும் என்பதற்கான எச்சரிக்கை
8ம் எண் கூண்டு: ஏற்றப்பட்டால், புயலானது தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். துறைமுகத்தின் இடதுபக்கமாகப் புயல் கரையைக் கடந்து செல்லும்
9ம் எண் கூண்டு: புயலானது தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். துறைமுகத்தைப் புயல் வலது பக்கமாகக் கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.
10ம் எண் கூண்டு: புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்துசெல்லும் புயலால் பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.
11ம் எண் கூண்டு :11-ம் எண் புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது என்று பொருள். எப்போதுமே அரபிக்கடலில் உருவாகுகிற புயலை விட வங்க கடலில் உருவாகுகிற புயலுக்கு பலம் அதிகம்.

தொகுப்பு : T.Raja (Admin Tamilnadu weather Blog)

International Bank Account Number (IBAN) & Uses ..

 


What Is an International Bank Account Number (IBAN)? 

An IBAN, or international bank account number, is a standard international numbering system developed to identify an overseas bank account. The number starts with a two-digit country code, then two numbers, followed by several more alphanumeric characters. Note that an IBAN does not replace a bank's own account numbering, as it’s only meant to provide additional information that helps in identifying overseas payments. 

Key Takeaways

•An international bank account number (IBAN) is a standard international numbering system for individual bank accounts around the world.

•Banks in Europe originally developed the system to simplify transactions involving bank accounts from other countries.

•An IBAN is used to identify an individual account involved in an international transaction.

•The IBAN also acts as a method of verifying that transaction details are correct.

 

 How International Bank Account Numbers Work 

 The IBAN number consists of a two-letter country code, followed by two check digits, and up to thirty-five alphanumeric characters. These alphanumeric characters are known as the basic bank account number (BBAN). It is up to the banking association of each country to determine which BBAN they will select as the standard for that country's bank accounts. However, only European banks use IBAN, although the practice is becoming popular in other countries.

 An IBAN number will be used when sending interbank transfers or wiring money from one bank to another, especially across international borders. In the register of countries currently using the IBAN system, several examples are as follows:

•Albania: AL47 2121 1009 0000 0002 3569 8741

•Cyprus: CY 17 002 00128 0000001200527600

•Kuwait: KW81CBKU0000000000001234560101

•Luxembourg: LU 28 001 9400644750000

•Norway: NO 93 8601 1117947

 Important:The U.S. and Canada are two major countries that do not use the IBAN system; however, they recognize the system and process payments according to the system.


Requirements for International Bank Account Numbers 

 The IBAN developed out of diverging national standards for bank account identification. Varying uses of alphanumeric forms to represent specific banks, branches, routing codes, and account numbers often led to misinterpretations and/or omissions of critical information from payments.

To smooth this process the International Organization for Standardization (ISO) published ISO 13616:1997 in 1997. Shortly after the European Committee for Banking Standards (ECBS) published a smaller version, believing the original flexibility allowed in the ISO version was unworkable. In the ECBS’s version, they allowed only upper-case letters and a fixed-length IBAN for each country.

 Since 1997, a new version, the ISO 13616:2003, replaced the initial ECBS version. A subsequent version in 2007 stipulated that IBAN elements must facilitate the processing of data internationally, in both financial environments and among other industries; however, it does not specify any internal procedures, including but not limited to file organization techniques, storage media, or languages.

  

 Who uses IBAN?

IBAN was first created to facilitate electronic payments between banks across the Eurozone. Since then, it has expanded worldwide, although not all banks and not all regions have joined the standard and you may still need to rely on an alternative system such as SWIFT instead. North American, Australian, and Asian countries do not use the IBAN for domestic money transfers, and will only do so when sending a payment to a country that has adopted the IBAN.

 

Why was IBAN created?

IBAN was developed to reduce errors and improve verification of cross-border payments  by reducing rejected payments, transfer delays, and associated bank charges and fees.

What does an IBAN number look like?

An IBAN number contains up to 34 alphanumeric characters. It is prefaced by a two-character country code, two check digits, and a Basic Bank Account Number (BBAN) that contains specific bank and account details. The format of the BBAN portion various from country to country, which will typically include a bank code and branch code.

 

How can I get an IBAN?

You can request an IBAN if you are a customer of a bank in an IBAN region. Note that an IBAN can only be used to receive payments, and is not used when making withdrawals.

Collection by M.Ajmal Khan

Wednesday 18 November 2020

அதிக நேரம் கணினியில் பணி செய்பவர்கள் முதுகு வலியில் இருந்து தப்பிக்க சில வழிகள்!!

 



இன்றைய இளைய தலைமுறையினர் முதல் வயதான முதியவர்கள் வரை இன்றைய காலகட்டத்தில் இடுப்பு வலியால் அவதிப் படுபவர்கள் ஏராளம். இந்த இடுப்பு வலிக்கு அவர்கள் செய்யும் வேலை கூட ஒரு காரணமாக இருக்கலாம். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு வலி உண்டாகிறது. அதிலும் கணினி முன் அமர்ந்து நீண்ட நேரம் பணிபுரிபவர்களுக்கு முதுகுத் தண்டுவடம் பாதிக்கப் படுவதால் அவர்கள் தொடர்ச்சியான இடுப்பு வலியால் அவதிப் படுகிறார்கள். முறையான உடற்பயிற்சி இல்லாத காரணத்தாலும் இடுப்பு வலி ஏற்படுகிறது.


👉🏻இதற்கு தீர்வு என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.


நீங்கள் கணினி முன் அமர்ந்து நீண்ட நேரம் பணிபுரிபவர்கள் என்றால்,

ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்காமல் அடிக்கடி இருக்கையை விட்டு எழுந்து செல்வதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட கணினி மேஜைகளை பயன்படுத்த வேண்டும்.கணினி மேஜையின் உயரத்தை ஏற்றி இறக்கி பயன்படுத்துவது போல் வடிவமைத்துக் கொண்டால் நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியின் உயரத்திற்கு ஏற்ப மேஜையின் உயரத்தை மாற்றிக் கொள்ள எளிதாக இருக்கும்.  தினமும் வேலை முடிந்ததும் உடற் பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். 


கணினி முன் அமர்ந்து பணியாற்றும் போது நாற்காலியில் நன்றாக நிமிர்ந்த நிலையில் அமர்ந்து பணியாற்ற வேண்டும். 

தொடர்ந்து ஒரே மாதிரி அமர்ந்து பணியாற்றுவதால் இடுப்பு பகுதியில் சதைகள் அழுத்தப்பட்டு முதுகுத் தண்டின் ஜவ்வில் தேய்மானம் ஏற்படுவதாலும் இடுப்பு வலி ஏற்படுகிறது.


நீங்கள் ஹை ஹீல்ஸ் அணியும் பழக்கம் உள்ளவர்கள் எனில் அதனால் கூட உங்களுக்கு இடுப்பு வலி முதுகு வலி ஏற்படலாம். உயரமான குதிகால் கொண்ட  செருப்புகளை அணிந்து நீண்ட நேரம் நடக்கும் பொழுது உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்துவதால் முதுகு வலி, இடுப்பு வலி ஏற்படுகிறது. அதனால் உயரமான குதிகால் கொண்ட செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.


  • 👉இதற்கான எளிய தீர்வுகள் என்ன?
  • ✍️கொள்ளை ரசம் வைத்துக் குடித்தால் இடுப்பு வலி குணமாகும். கொள்ளு உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது.
  • ✍️மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி மற்றும் வயிற்று வலி நீங்க வெந்தயத்தை பொடி செய்து அதனுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.
  • ✍️வெள்ளைப் பூண்டு மற்றும் கருப்பட்டி இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் இடுப்பு வலி குறையும்.
  • ✍️மிளகை வறுத்து அதில் எள் எண்ணெய் கலந்து சாப்பிட இடுப்பு வலி குறையும்.
  • ✍️உணவில் உளுந்தை அதிகமாக சேர்த்துக் கொண்டால் இடுப்பு வலி சரியாகும். உளுந்தை களி செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி குறையும்.
  • ✍️தளுதாளி இலையுடன் பூண்டு நல்லெண்ணெய் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும்.

Friday 13 November 2020

டீ பேக்குகளில் ஃப்ளூரைடு பயமுறுத்தும் புற்றுநோய் !!

 

தேயிலையை சிறிய பைகளில் வைத்து டீ பேக் தயார் செய்கின்றனர். இந்த தேயிலை பைகளை அப்படியே பால் அல்லது சூடான நீரில் மூழ்கும்படி வைத்தால் தேயிலையின் சாரம் இறங்கி தேநீர் தயாராகிறது.


இன்று இந்த டீ பேக்குகளை பல நிறுவனங்கள் தயார் செய்து போட்டிபோட்டு விற்கின்றனர். இதற்கான விளம்பரங்களைப் பார்த்து ஆர்வத்தில் தற்போது அதிகமானோர் டீ பேக் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். 

இந்த டீ பேக்குகள் எப்படி தயாரிக்கப்படுகிறது? அதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுமா? என்று எதை பற்றியும் கவலைப்படாமல் நாம் அதனை உண்டு நம் உடலுக்கு நாமே சூனியம் வைத்து கொள்கிறோம்...

டீ பேக்குகள் (Tea bags) தயாரிக்கையில், அது எளிதில் கிழியாமல் இருப்பதற்காக Epichlorohydrin என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இந்த வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக உள்ளது என்று தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் (NIOSH) தெரிவித்துள்ளது.

இந்த வேதிப்பொருள் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த டீ பேக்கை சுடுதண்ணீரில் போடும்போது எப்பிகுளோரோஹைட்ரின் நீரில் கரைந்து வேதியியல் மாற்றமடைந்து MCPD என்கிற வேதிப்பொருளாக மாறுகிறது. 

இது புற்றுநோய் காரணியாக இருப்பதோடு குழந்தையின்மை மற்றும் நோய் எதிர்ப்புசக்தி குறைவு போன்ற பிரச்னைகளுக்கு காரணமாகிறது.

தற்போது இதுபோன்ற டீ பேக்குகள் PVC, Food grade Nylon போன்ற பொருட்களால் தயார் செய்யப்படுகிறது. இந்த பைகளில் உள்ள Bisphenol-A (BPA) என்கிற ஒருவகை பிளாஸ்டிக் பொருள் ஈஸ்ட்ரோஜென் போன்ற ஹார்மோன்களின் சீரான செயல்பாடுகளுக்குத் தடையாக உள்ளது. 

மேலும், மார்பகப் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், நீரிழிவுநோய், உடல்பருமன், இதயநோய்கள், கல்லீரல், தைராய்டு பிரச்னைகள், குழந்தையின்மை, பெண் குழந்தைகள் சீக்கிரமாக பருவமடைதல் மற்றும் குழந்தைகளின் நடத்தை மாற்றங்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.

சில டீ பேக்குகளில் ஃப்ளூரைடு பயமுறுத்தும் அளவுக்கு உள்ளது. இதனால் எலும்பு மற்றும் பற்களில் பாதிப்பு உண்டாகிறது. ஃப்ளூரைடு அளவு உடலில் அதிகமாகும்போது Fluorosis என்ற நிலை உருவாகிறது. 

இந்த நிலையால் பற்களின் நிறம் மாறுவதோடு எலும்புகளில் வலி, தசைப்பிடிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. டீபேக்குகளில் உள்ள Synthetic fluoride என்கிற வேதிப்பொருளால் புற்றுநோய், எலும்பு, பல் மற்றும் சிறுநீரகபிரச்னைகள் உண்டாகிறது.

இத்தனை உடல்நலப் பிரச்னைகளை உருவாக்குகிற அளவுக்கு, தரமற்றதாகவே பெரும்பாலும் டீ பேக்குகள் தயார் செய்யப்படுவதால் அவற்றை இனம் கண்டறிந்து தவிர்ப்பதே நல்லது

Wednesday 28 October 2020

கிராம நிர்வாக அதிகாரியின் (V.A.O )பணி என்ன..? நாம் எத்தனை பேருக்கு தெரியும்..?

கிராம நிர்வாக அதிகாரியின் (V.A.O )பணிகள் !!


1. கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல்.
2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.
3. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்று ஆகியவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்.
4. பொது மக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடன்கள் பெறுவதற்கு சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்களை வழங்குதல்.
5. பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பராமரித்தல்.
6. தீ விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் பொழுது உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புதல், இயற்கை பேரிடர்களின் பொழுது ஏற்பட்ட இழப்புகளை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடு செய்யும் பொழுது உதவி செய்தல்.
7. கொலை, தற்கொலை மற்றும் அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணைக்கு உதவி புரிதல்.
8. காலரா, டெங்கு, பிளேக் உள்ளிட்ட நோய்களும் மற்றும் கால்நடை தொற்று நோய்கள் பற்றிய அறிக்கை அனுப்புதல்.
9. இருப்புப் பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.
10. கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்தல்.
11. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.
12. கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களைப் பாதுகாத்தல்.
13. புதையல்கள் பற்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தல்.
14. முதியோர் ஓய்வு ஊதியம் வழங்குவது குறித்த பணிகளை கவனித்தல்.
15. பொதுச் சொத்துக்கள் பற்றிய பதிவேட்டை பராமரித்தல்.
16. முதியோர் ஓய்வு ஊதிய பதிவேட்டை பராமரித்தல்.
17. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற, சேவை நிறுவனங்களுக்கு தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைப்பு செய்தல்.
18. உழவர்கள் நிலப் பட்டாக்காளை மாறுதல் செய்து பெறவும், புலங்களை உட்பிரிவு செய்து கொள்ளவும், தனிப் பட்டாக்காளை பெறவும் நிலப்பதிவேடு, நில அளவை ஆவணங்கள் தொடர்பாக கணக்குகளை முறையாகவும் சரியாகவும் வைத்து வருதல்.
19. பாசன வாயில்களை முறையாக பராமரித்தல், ஏரிகளிலும், நீர் வழங்கு பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் நீர்பாசனத்திற்கு வகை செய்தல்.
20. சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்ற நிகழ்ச்சிகள் நடந்தவுடனே அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புதல்.
21. நிலச்சீர்திருத்த சட்டங்கள் தொடர்பான முறையான நடவடிக்கை எடுத்தல்.
22. முறையாக துப்புரவு பணிகளை பேணி வருதல்.
23. அரசாங்கம் அவ்வப்பொழுது தொடங்கும் ஏனைய நலத்திட்டங்கள் முதலியவற்றை நடைமுறைபடுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.
24. கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தல்.