Tuesday 12 May 2020

சிந்துவெளி நாகரிகப் புகார் நகரம் (காவிரிப்பூம்பட்டினக் கடலடி) ஆய்வு.


Image may contain: cloud and water

பூம்புகார் கடலில் மூழ்கியது வரலாறு. கடந்த 1985-95 இல் திரு. S. R. இராவ் தலைமையில் கடலடித் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட. புகார் நகரம் கடலில் 5கி.மீ தொலைவில், 25 மீட்டர் ஆழம் வரை இருப்பது தெரிய வந்தது. 5-7 மீ ஆழத்தில் செதுக்கப்பட்ட கருங்கல் கட்டுமானங்களும், 14 மீ ஆழத்தில் கடலடிக் காடுகளும், திறந்த வெளிகளும் உள்ளன. அதற்கப்பால் 20--25மீ ஆழத்தில் பெரிய அளவில் கட்டட இடிபாடுகளும் உள்ளன.
இவற்றுள் 23 மீ ஆழத்தில், 5 கி. மீ தொலைவில் செம்புராங்கற்களால் ( laterite ) கட்டப்பட்ட பெரிய கட்டடங்கள் உள்ளன. மிகப்பெரிய கட்டடம் ஒன்று U வடிவில், வடக்கும் தெற்காக அமைந்துள்ளது. மொத்த நீளம் 140 மீ அளவும், ஒருபக்கம் மட்டும் 85மீ நீளம் உள்ளது. உயரம் 3 மீ அளவே கடல் தரைக்கு வெளியே தெரிவது போக மீதி அடிப்பகுதி இடிந்து வண்டலும், மணலிலும் ஆழ்ந்து மூடப்பட்டுள்ளது . இப்பகுதியில் படிந்துள்ள சேற்றுவண்டல் காவிரி முதலான ஆறுகள் கொண்டு சென்ற வண்டலால் ஏற்பட்டது மட்டுமல்ல. அந்நகரின் அழிவுக்குக் காரணமான மலிதிரையால் - சுனாமியால் ஏற்பட்டதாகக் கருதுகிறேன். சுனாமியின் போது (2004) கண்ட எனஅனுபவத்தின்படி யும், கடல் தரையை அறிந்தவன் என்பதாலும் திரு. இராவ் குறிப்பிடும் சேறு மற்றும் மீனவர்கள் எனக்களித்தத் தரவுச் சான்றுகள் அடிப்படையிலும் அப்பகுதியில் இயல்புக்கு மாறான சேற்றுவண்டல் கி.மு. 2000-1800 அளவில் ஏற்பட்ட சுனாமியின் காரணமாகவே ஏற்பட்டதாகக் கருதவேண்டியுள்ளது. இதன் வடக்கு திறந்த வெளியும், இரு புறமும் சிறு இடிபாடுகளும் உள்ளன. இது அக்கட்டடத்தின் வாயிற்புறமும், நுழைவாயில் சுவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதனைக் கோயில், அல்லது விகாரை என்று கூறியுள்ளார் இராவ் . ஏதோ ஒரு பொதுவிடம் என்பது என் கருத்து .
No photo description available.
இக்கட்டடத்துக்கு 30 மீ தொலைவில் மிகப்பெரிய முட்டை வடிவ (ovel) விதானத்துடன் கூடிய கட்டடம் ஒன்று சேறும், மணலும் மூடி 2. 5 மீ உயரமே வெளியில் தெரிகிறது. இதன் அகலம் 18 முதல் 30 மீ வரை உள்ளது. ஆய்வாளர்களும், அப்பகுதி மீனவர்களும் ஒரு கோயில் என்று கூறியுள்ளனர். இது ஏற்புடையதே .
நான் சிறுவனாக என் பாட்டி வீட்டுக்குக் காவிரிப்பூம்பட்டினம் - வானகிரி சென்றபோது ஒரு மீனவர் கூறியது நினைவில் வருகிறது. தூண்டில் மீன் எங்கோ சிக்கிக் கொண்டதால் அதை மீட்க ஆழத்துக்குச் செல்ல ஒரு பெரிய கட்டடத்தின் வாயில் வழியே உள்ளே இருட்டுப் பகுதிக்குச் சென்று தடவிப்பார்த்த போது சில சிலைகளை உணர்ந்ததாகவும், கோயில் என்று அச்சமடைந்தவர் ஒரு சிலையுடன் நீந்தி வெளியே ஓடி வந்துவிட்டதாகவும், அச்சிலை எங்கோ இருப்பதாகவும் கூறினார்.. என் பாட்டி தன் தந்தை புகார் கடலோரம் தங்கக் காசுடன் ஒரு செம்பை எடுத்ததாகவும் அதனால் தாங்கள் பணக்காரரானதாகவும், தன் திருமணம்வரை அச்சொம்பு பூசை அறையில் இருந்து என்றும் , தானே ஒரு யானை பதித்த தங்கக் காசு ஒன்றைத் தந்தையிடம் இருப்பதைப் பார்த்ததாகவும் என்னிடம் கூறியிருக்கிறார். புதையல் நிகழ்வு 1850 ஆண்டளவில் எனலாம். அவர்கள் வசதியானது இருக்கட்டும், வரலாறு நட்டப்பட்டுவிட்டதே .
கரையிலிருந்து 5--7 மீ அளவிலானபொருட்கள் கி. மு. 3--4 நூற்றாண்டு என்று கூறியுள்ளார் திரு. இராவ் . அந்நிலையில் , 5 கி. மீ தொலைவில், 23 மீ ஆழத்திலுள்ளதும் சங்க காலத்திற்கு உரியதாகுமா? என்று நியாயமான வினா எழுப்புகிறார். மேலும் 2000 ஆண்டுகளில் கடல்மட்டம் 25 மீ உயரமுடியுமா என்று கேட்கிறார். இதனை நாம் ஒரு சிறு கணக்கீட்டின் மூலம தீர்வு செய்யலாம். இந்தியாவில் கடல்மட்ட உயர்வை குஜராத்தின் கட்சு கடல்மட்டத்துடன் ஒப்பிட்டு இந்தியக் கடல் மட்டம் 10000 ஆண்டுகளில் 60 மீ உயர்ந்திருப்பதாகக் கோவா கடலாய்வு நிறுவன ( N I O ) அறிவியலாளர்கள் ஹசிமி, நாயர் ஆகியோர் கூறியுள்ளனர். இதன்படி ஆய்ந்து கடலடியில் மூழ்கி ஆய்வு செய்து 20 மீ ஆழத்தில் ஆழ்ந்துள்ள துவாரகை ( குஜராத் ) கி. மு. 1500 அளவில் மூழ்கியதாக கண்டுபிடித்துள்ளனர். இதன்படி நாம் சராசரியாகக் கணக்கிட்டுக் காவிரிப்பூம்பட்டினம் 5 கி. மீ அளவில், 23மீ ஆழத்தில் உள்ள சிதைந்த நகரம் கி. மு. 1841 அளவில் கடலில் மூழ்கியது என்று அறியலாம். இதனால் அங்கு காணப்படும் புகார் நகரம் கி மு 2000 ஆண்டுகளுக்கு முன்பு அங்கே சிறப்புறறிருந்ததை அறிகிறோம் .
60 மீட்டர் 10,000 ஆண்டுகள்
1 மீட்டர் 167 ஆண்டுகள்
23 மீட்டர் 3841 ஆண்டுகள்
# 3841 - 2000 = கிமு 1841
No photo description available.இக்காலம் கிமு 1841 என்பது சிந்து சமவெளி நாகரிகம் நிலவிய காலமாகும். எனவே, அந்நாகரிகக் காலத்திலேயே தமிழகத்திலும் நனிநாகரிகம் ஒன்று புகார் நகரத் தலைமையில் சிறப்புற்றிருந்ததை இவ்வாய்வுகள் வெளிப்படுத்துகின்றன. எனது காலக்கணிப்பாய்வை பூம்புகார் அருகில் செம்பியன் கண்டுயூரில் கிடைத்துள்ள சிந்து சமவெளி நாகரிக எழுத்துகளுடன் கிடைத்துள்ள - சிந்துவெளி நகரங்களிலும் கிடைத்துள்ள புதியகற்காலக் கல்லாயுதக் கற்கருவி மேலும் தெளிவாக உறுதி செய்கிறது.


இக்கற்கருவி 4 எழுத்து வடிவங்களைக் கொண்டது . ஐ . மகாதேவன் வலப்பக்கமுள்ள எழுத்தை எதனாலோ விட்டுவிட்டுப் படித்துள்ளார் . அவ்வடிவம் எனது படிப்பின்படி தெளிவான ட என்னும் மெய்யாகும் . எழுத்துகள் வருமாறு :
ளார் ஆ வ்வயவ ட = டவ்வயவ ஆளார்
தவ்வயவய் ஆளார்
இது ஒரு மங்கல எழுத்து . தவ்வய் + அவை = இறைவியாகிய தாயினவை . தவ்வை = தாய் . ஆளார் = இறைவர் . ஆள் - ஆண் - ஆண்டவன் . ஆள் = இறைவன் . சிந்துவெளி முத்திரைகளில் பல நூறு இடங்களில் இறைவன் - ஆளார் என்று அழைக்கப்படுவதைக் காண்கிறோம் . இக்கல்லாயுதத்தைப் பயன்படுத்திய மனிதன் தனது பணிகள் அக்கல்லாயுதத்தால் இறைவர்களாகிய அம்மை - அப்பன் அருளால் இனிது நிறைவேற வேண்டும் என்று வேண்டி இவ்வெழுத்துகளைப் பொழிந்துள்ளான் . சிந்துவில் பெரிய வெட்டுக் கத்தி , செம்புக் கடப்பாரைகளில் இறைவன் பெயரை எழுதியுள்ளனர் . சில நாட்கள் முன்பு திரு . இளங்குமரன் ஐயாவிடம் இத்தகைய கத்தியின் படமொன்றைக் காட்டியுள்ளேன் . 1988 இல் எனது வீடுகட்டும் பணிக்கு வந்த தொழிலாளர் ஒருவர் தனது கடப்பாரையில் இவ்வாறு முருகனருள் என்ற எழுத்தை வெட்டி இருந்தார் . இது தமிழர் மன இயல்பு ஆகும் . கண்டியூர் கல்லாயுதமும் புகார் நகரருகே இருந்து இதே நிலையை உணர்த்துகிறது .
மேலும் , சங்க காலத்தில் கடல் கரையில் உள்ள கண்ணகி சிலையிலிருந்து கடலில் 3 கி. மீ. தொலைவில் இருந்தென்ன உறுதிபடக் கூறலாம்.. இணைக்கப்பட்டுள்ள கணக்கீட்டுபட்டியையும், ஆழ்கடலாய்வில் திரு. S. R. இராவ் குழுவினர் எடுத்த படங்களையும் காண்க. 14மீ ஆழம் என்ற கணக்கீடு , புகார் கடலில் மீட்கப்பட்ட அலையோரப் பகுதிகளின் தொல்பொருட்களின் கரிமப் பகுப்பாய்வு கி. மு. 4-3 நூற்றாண்டு என்ற காலத்தைக் காட்டுவதாக இராவ் கூறியுள்ளதை அடிப்படையாகக் கொண்டு இக்கருத்து அமைக்கப்பட்டது.
ஆதிப் புகார் நகரம் கி. மு. 1841 இல் கட லில் மூழ்கியது , சங்க காலப் புகார் நகரம் கி. மு. 338 அளவில் கடல கொண்டது என்பது எனது கணக்கீட்டின்படியான முடிவு.
( கருத்துகள் இப்பதிவிற்காகச் செழுமைப் படுத்தப்பட்டுள்ளன )

Friday 8 May 2020

இஸ்லாத்தில் வைரஸ் தொற்று நோய் உண்டா ??

கொரோனா வைரஸ் மட்டுமல்லாது பல்வேறு நோய்களுக்குக் வைரஸ்கள் காற்றிலோ, தண்ணீர் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ பரவுவது அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
Coronavirus cases in Saudi Arabia top 95,000 as death toll rises ...حدثنا عبد العزيز بن عبد الله حدثنا إبراهيم بن سعد عن صالح عن ابن شهاب قال أخبرني أبو سلمة بن عبد الرحمن وغيره أن أبا هريرة رضي الله عنه قال إن رسول الله صلى الله عليه وسلم قال لا عدوى ولا صفر ولا هامة فقال أعرابي يا رسول الله فما بال إبلي تكون في الرمل كأنها الظباء فيأتي البعير الأجرب فيدخل بينها فيجربها فقال فمن أعدى الأول رواه الزهري عن أبي سلمة وسنان بن أبي سنان
*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தொற்று நோய் கிடையாது. ஸஃபர் பீடை கிடையாது. ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது என்று கூறினார்கள்.*
*அப்போது கிராமவாசி ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித்) திரியும் என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றுக்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கி விடுகின்றனவே! அவற்றின் நிலை என்ன? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அப்படியென்றால் முதல் ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்? என்று திருப்பிக் கேட்டார்கள்.*
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5717
இந்த ஹதீஸில் தொற்று நோய் கிடையாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
ஆனால் ஒரு ஒட்டகத்திலிருந்து மற்றொரு ஒட்டகத்திற்கு சிரங்கு தொற்றிக் கொள்வதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த ஒரு கிராமவாசி அது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேள்வி எழுப்புகின்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளிக்கும் பதில் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
முதல் ஒட்டகத்திற்கு அந்த நோயைத் தந்தவன் யார்? என்ற வாதத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன் வைக்கின்றார்கள்.
இதன் மூலம் தொற்று நோய் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரேயடியாக மறுக்காமல், தொற்று நோயைக் காரணம் காட்டி, இறைவனுடைய விதியை மறுத்து விடக் கூடாது என்பதை உணர்த்துகின்றார்கள்.
ஒருவருக்கு நோய் ஏற்படுகின்றது என்றால் அது இறைவனின் நாட்டப்படியே ஏற்படுகின்றது என்ற நம்ப வேண்டும்.
ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நோய் தொற்றும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுக்கவில்லை. தொற்றுவதால் மட்டுமே நோய் ஏற்படுகிறது என்பதைத் தான் மறுக்கின்றார்கள். முதல் ஒட்டகத்துக்கு நோயைக் கொடுத்தவன் யார் என்று கேள்வி எழுப்பியதன் மூலம் முதன் முதலில் ஒருவருக்கோ சிலருக்கோ இறைவன் நோயை ஏற்படுத்துகிறான். அதன் மூலம் மற்றும் சிலருக்கு பரவச் செய்கிறான் என்று தெளிவுபடுத்துகிறார்கள்.
நடைமுறையிலும் இதை நாம் அனுபவப் பூர்வமாக உணர்கிறோம்.
குறிப்பிட்ட ஒரு நோய் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. பின்னர் அந்த நோய் உலகில் யாருக்கும் ஏற்படுவதில்லை. சில வருடங்கள் கழித்து மீண்டும் ஏற்படுகிறது. நோய்கள் இயற்கையாக ஏற்படுவதில்லை. மாறாக இறைவன் நாடும் போது அதை ஏற்படுத்துகிறான் என்பதை இது உறுதி செய்கிறது.
மேலும் ஒரு வீட்டில் ஒருவருக்கு தொற்று நோய் ஏற்படுகிறது. அந்த நோய் அந்த வீட்டில் வேறு யாருக்கும் தொற்றாமல் வேறு தெருவில் உள்ளவருக்கு தொற்றுவதைக் காண்கிறோம். தொற்றுதல் என்பது இறைவனின் நாட்டத்தைப் பொருத்தது என்பது இதிலிருந்தும் தெரிகின்றது.
இதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் உணர்த்துகின்றதே தவிர தொற்று நோய் அறவே கிடையாது என்று கூறவில்லை. தொற்று நோய் உண்டு என்ற கருத்தில் அமைந்த பல்வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் இதை வலியுறுத்துகின்றன.
*ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால் அதிலிருந்து வெருண்டோடு வதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சொல்ல நான் கேட்டேன் என்று கூறினார்கள். (சுருக்கம்)*
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 5729
கொள்ளை நோய் ஏற்பட்டுள்ள ஊருக்குச் செல்ல வேண்டாம் என்றும், அந்த ஊரில் இருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என்றும் இந்த ஹதீஸ் கூறுகின்றது. தொற்று நோய் இல்லை என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கட்டளையிடத் தேவையில்லை. எனவே தொற்று நோய் உண்டு என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.
கிருமிகள் மூலமாக நோய் தொற்றிக் கொள்வதை இஸ்லாம் மறுக்கவில்லை. அதே சமயம், இறைவனின் நாட்டப்படியே அந்த நோய் பரவியது என்பதையும் மறுக்கக் கூடாது.

விசாகப்பட்டினம் வாயுக் கசிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு !!


விசாகப்பட்டினம் வாயுக் கசிவு ...
அப்போது, "இது ஒரு ரசாயன பேரழிவாகும். இதை எதிர்கொள்வதற்கு ரசாயனம், ரசாயன மேலாண்மை, மருத்துவம், மீட்புப்பணி உள்ளிட்ட பல்துறைகளை சேர்ந்தவர்களின் நிபுணத்துவம் தேவைப்படுகிறது. இந்த விவகாரத்தில் பல்வேறு துறைகளின் செயல்பாடு குறித்து இன்று காலை டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு கேட்டறிந்த பிரதமர், தக்க ஆலோசனைகளை வழங்கியுள்ளார்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் வாயுக் கசிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைமை இயக்குநர், எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மேலும், இந்த வாயுக் கசிவினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்த அதிகாரிகள், இந்த சவாலான சூழ்நிலையில், விபத்து நடந்தேறிய பகுதியை சேர்ந்த மக்களும், மருத்துவ பணியாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய வழிமுறைகளை எடுத்துரைத்தனர்.
"இதுபோன்ற வாயுக் கசிவை சந்தித்திராத மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. விபத்து நடந்தேறிய பகுதியில், சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவரப்பட்டுள்ளது. ஆந்திரப்பிரதேச அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று மத்திய அரசின் பல்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

ஹெலிகாப்டர் மூலம் விசாகப்பட்டினத்தை வந்தடைந்த ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்தார் என்று ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், விசாகப்பட்டினம் வாயுக் கசிவு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆந்திரப்பிரதேச மாநில அரசாங்கத்துக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்திய ஆந்திரப்பிரதேச உயர்நீதிமன்றம், குடியிருப்பு பகுதிகள் சூழ்ந்த இடத்தில், இதுபோன்ற ஆலையை அமைப்பதற்கு அனுமதி எப்படி வழங்கப்பட்டது என்று கேட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.விபத்து நடந்த எல்.ஜி. பாலிமர்ஸ் ஆலையின் நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆந்திரப்பிரதேசத்தின் தொழில்துறை அமைச்சர் கெளதம் ரெட்டி தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டினம் வாயுக் கசிவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

; செயற்கை சுவாச கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை கிடைத்ததும், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த வாயுக் கசிவினால் உயிரிழந்த செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட ரசாயன வாயுக் கசிவால் அதைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த ரசாயன வாயுவை சுவாசித்த ஒரு சிறுமி உள்பட 11 பேர் பலியாகியுள்ளது இதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த ரசாயன வாயுவை சுவாசித்த மக்களுக்கு சுவாசக் கோளாறுகள் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

;"ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் அந்த ஆலை இன்று திறக்கப்பட்டது. காலை 3.30 மணியளவில் விபத்து நடந்துள்ளது. நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காததே விபத்துக்குக் காரணம் என்று தெரிகிறது. வேறு ஒரு ரசாயனத்தை பயன்படுத்தி இதன் பாதிப்பை குறைக்க முயன்ற வருகிறோம். இதுவரை 90-95% கசிவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது," என்று இன்று காலை 10 மணியளவில் ஆந்திர மாநில தொழில்துறை அமைச்சர் கௌதம் ரெட்டி தெரிவித்துள்ளார் என்று பிபிசி செய்தியாளர் தீப்தி பத்தினி தெரிவிக்கிறார்.


"1 - 1.5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு அதிக பாதிப்பு நிகழ்ந்துள்ளது. ஆனாலும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை வாயுவின் துர்நாற்றம் வீசியுள்ளது. எல்.ஜி. பாலிமர்ஸ் ஆலைக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று விசாகப்பட்டினம் மாநகர காவல் ஆணையர் ஆர்.கே. மீனா பிபிசி தெலுங்கு சேவையிடம் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணிகளைப் பார்வையிடவும், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று விசாகபட்டினம் செல்கிறார்.
ரசாயன வாயுவை சுவாசித்தவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரசாயன வாயு கசிவு உண்டான எல்.ஜி பாலிமர்ஸ் இந்தியா நிறுவனத்தின் தாய் நிறுவனமான, தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எல்.ஜி கெமிக்கல்ஸ் நிறுவனம், குடியிருப்புவாசிகள் மற்றும் தங்கள் ஆலை ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்புடைய அமைப்புகளுடன் சேர்ந்து மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை.
ரசாயன வாயுக் கசிவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மோசமாக பாதிக்கப்பட்ட 15 முதியவர்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியில் சுமார் ஐம்பது அவசர ஊர்திகள் ஈடுபட்டுள்ளன. பலரும் மயக்க நிலையில் உள்ளனர்.

ஸ்டைரீன் எனும் ரசாயன வாயு

இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி ஆலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஸ்டைரீன் (styrene) எனும் ரசாயன வாயு வெளியேறியதாக, விசாகப்பட்டினத்தில் பணியாற்றும் ஆந்திரப் பிரதேச மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ராஜேந்திர ரெட்டி என்பவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

>மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, வருவாய்த் துறை உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.
ஆர்.ஆர் வெங்கடபுரம் எனும் பகுதியில் அமைந்துள்ள எல்.ஜி பாலிமர்ஸ் இந்தியா எனும் தெர்மாகோல் உற்பத்தி ஆலையில் இந்த ரசாயன வாயுக் கசிவு நிகழ்ந்துள்ளது.
அதை சுற்றியுள்ள நாயுடு கார்டன், பத்மநாபபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்துகொண்டு வாகனங்களில் வெளியேறி வருகின்றனர்.

தென்கொரிய நிறுவனம்

1961ம் ஆண்டு ஹிந்துஸ்தான் பாலிமர்ஸ் எனும் பெயரில் இந்த ஆலை நிறுவப்பட்டது. 1978இல் யூபி தொழில் குழுமத்தால் இந்த நிறுவனம் வாங்கப்பட்டது.

>அந்த தொழில் குழுமத்திடமிருந்து 1997இல் தென் கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி நிறுவனம் ஹிந்துஸ்தான் பாலிமர்ஸ் ஆலையை வாங்கி அதற்கு எல்.ஜி பாலிமர்ஸ் என்று பெயரை மாற்றியது.
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அரசு அனுமதி அளித்ததால் இந்த நிறுவனம் மீண்டும் இயங்கத் தொடங்கியது.
அதிகாலை 3 மணிக்கு இந்த வாயு கசிவு நடந்தது என்பதால் உறக்கத்திலிருந்த பல மக்களுக்கும் அப்படி ஒரு சம்பவம் நடந்ததே உடனடியாக தெரியாமல் போனது.
வாயுவை நிறுத்துவதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதா என்பது குறித்த தகவல்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை..


என் கருத்து  : மூடப்பட்டுள்ள அனைத்து ஆலைகளையும் உடனடியாக சோதனைகள் செய்து எந்த பாதிப்பும் இல்லை என்ற சான்றிதழை வழங்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்! இதைப்போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்! இந்த சம்பவம் விழிப்புணர்வை தூண்டுவிக்கும் நிகழ்வு!  

நன்றி :விஜய் கஜம்,பிபிசி.

தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Saturday 2 May 2020

உங்கள் மாவட்டம் சிகப்பு, பச்சை, ஆரஞ்சு எதுவாக இருந்தாலும் சரி - இனிமேல் இதனை கடைபிடியுங்கள்



இன்று முதல், உங்கள் மாவட்டம் சிகப்பில் இருந்தாலும் சரி...!!

ஆரஞ்சில் இருந்தாலும் சரி...

கடைகள் திறந்தாலும் சரி...

திறக்கப்படவிட்டாலும் சரி.....

ஊரடங்கு சட்டம் தளர்ந்தாலும் சரி...

தளராவிட்டாலும் சரி.....

ரோட்டில் போலீஸ் உங்களை தடுத்தாலும் சரி..

தடுக்காவிட்டாலும் சரி...

அரசாங்கம் உத்தரவு போட்டாலும் சரி....

போடாவிட்டாலும் சரி...

மீடியாக்கள் கொரோனவை பற்றி பேசினாலும் சரி...

பேசாவிட்டாலும் சரி..

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், உங்களை காப்பாற்றி கொள்வதும் உங்கள் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது...

இது ஒரு Pandemic - உலகளாவிய கிருமி பரவல்.

நீண்ட காலம் இருக்கும், பின்னர் இங்கொன்று அங்கொன்று என அடுத்த ஐந்து வருடங்களாவது இருக்கும்.

அதற்குள் தடுப்பூசி, மருந்துகள் வந்து, இது ஒரு மேட்டரே இல்லை என்ற நிலைக்கு வந்து பின்னர் பொத்தென இல்லாமல் போய் விடும்.

கடைகளில் முண்டி அடிக்க வேண்டாம்.

லிஃப்டில் கூட்டம் இருந்தால், படிக்கட்டு வழியாக ஏறவும்/இறங்கவும்...

லிஃப்ட் பட்டனை வண்டி சாவி கொண்டு அழுத்துங்கள்...

பொதுவெளியில் மற்றும் ஆபீஸில் முழு நேரமும் மாஸ்க் அணியுங்கள்..

அவசியம் ஏற்பட்டால் ஒழிய மாஸ்கை கழற்ற வேண்டாம்....


வீட்டில், ஆபிசில் சானிடைசர் எப்போதும் உடன் இருக்கட்டும்......

கண்ணை கசக்குவது, மூக்கு நோண்டுவது, வாயில் சொரிவது,முகத்தில் கை வைப்பது போன்றவற்றை அறவே விட்டு விடுங்கள்....

எச்சில் துப்பாதீர்கள்.....

கர்சீப் வைத்து தும்முங்கள்/இருமுங்கள்...

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி கையை சுத்தப் படுத்தவும்....

கும்பல் கூடுவதை தவிருங்கள்.......
முடிந்தவரை 3-6அடி வரை தள்ளி நில்லுங்கள்..

அலுவலகம்,வீடு,கடை என்று அருகே இருந்தால் நடந்தே செல்ல பழகுங்கள்...

ஆட்டோ, ஷேர் ஆட்டோ, டாக்சி, பஸ்,ட்ரெயின் என்று பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் போது கவனமாக இருங்கள்...

தியேட்டர், மால்,ஹோட்டல், கேளிக்கை போன்றவை சிலகாலம் வேண்டவே வேண்டாம்.

திருமணம், பர்த்டே பார்ட்டி, ஆகியவை தவிர்க்க முடியவில்லை என்றால் சமூக இடைவெளி அவசியம்...

வாய்பிருந்தால் தொலைவில் இருந்து மொய்/வாழ்த்து/அன்பளிப்பு அனுப்பலாம்.

பேச்சுலர்ஸ் போன்ற ஹோட்டல் அவசியமாக பயன்படுத்த வேண்டியவர்கள் ஓரமாக தனி டேபிளில் சாப்பிடவும்.

அப்போது தயார் செய்யப்பட்ட உணவை மட்டுமே சாப்பிடவும்.

முடிந்தவரை கடைகளுக்கு செல்வதை தவிர்க்க....

மளிகை,பால்,காய்கறி என்று எதெல்லாம் ஹோம் டெலிவரி கிடைக்க வாய்ப்புள்ளதோ அதை பயன்படுத்தி கொள்ளவும்..

வழிபாட்டு தளங்களில் 3-6 மீட்டர் இடைவெளி விட்டு ஜாக்கிரதையாக செல்லவும்...

கிளினிக்/மருத்துவமனைகளுக்கு மாஸ்க் சானிடைசர் இல்லமால் செல்ல வேண்டாம்....

ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்....

வேறு ஒருவரால் நமக்கு நோய் தொற்று வந்தாலும் சரி, நம்மால் வேறு ஒருவருக்கு நோய்த்தொற்று வந்தாலும் சரி..

அவர்கள் வாழ்நாள் முழுதும் நம்மை மன்னிக்க மாட்டார்கள்...!!!

தொகுப்பு  : அ. தையுபா  அஜ்மல்.