Saturday 30 November 2019

இஸ்லாமிய சட்டங்கள் தான் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்!!!


Image may contain: 2 people, people smiling, possible text that says '26 YEAR OLD DR. PRIYANKA REDDY WAS KIDNAPPED, RAPED AND BURNT ALIVE SUCH A SHAMEFUL ACT OF HUMANITY DEEP CONDOLENCES, MORE POWER TO HER FAMILY'பெண்கள் விஷயத்தில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் இந்திய நாட்டிலே நடந்து வருகின்றது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடிக்க கூடிய ஒரு அவல நிலையை சந்தித்திருக்கின்றது. இந்த நிலை மாற அரபு நாட்டு சட்டம் மட்டுமே தீர்வு என்று சொல்லி அனைத்து சிந்தனை வாதிகளும் ஒருமித்த குரல் எழுப்பி வருகின்றனர்.


இளம் வயது பெண் மருத்துவர் பிரியங்கா எரித்துக் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் .தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான பிரியங்கா அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். 27 ம் தேதி புதன்கிழமை வழக்கம்போல் பணிக்கு சென்ற பிரியங்கா இரவு வீடு திரும்ப வில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இறுதியாக அவரது சகோதரிக்கு போன் மூலம் தொடர்பு கொண்ட அவர் தன்னை யாரோ முறைத்து பார்ப்பதாகவும், பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். அதன் பின் அவரது போனை தொடர்புகொள்ள முடியவில்லை.
இந்நிலையில், ரங்காரெட்டி மாவட்டம் சட்டப்பள்ளி பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண் எரிந்த நிலையில் சடலமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விசாரணை மேற்கொண்ட போலீசார் எரிந்த நிலையில் சடலமாக கிடந்த பெண் பிரியங்காதான் என்பதை உறுதி செய்தனர்.
இளம் வயது பெண் மருத்துவர் எரித்துக்கொல்லப்பட்ட இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து சிவா, நவீன், முகமது பாஷா, சென்னகேசவுலு ஆகியோரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள்தான் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
நீண்ட நாட்களாக பிரியங்காவை நோட்டமிட்டு வந்திருந்த வன்முறை கும்பல் அவருடைய இரண்டு சக்கர வாகனத்தை பஞ்சர் செய்துள்ளனர். அதை அவர் தள்ளி சென்று கொண்டிருக்கக்கூடிய வழியில் உதவுவது போன்று இந்த பயங்கர சம்பவத்தில் நால்வரும் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை உறுதிசெய்து அவர்களை கைது செய்துள்ளது.
பிரியங்கா வின் தாயார் 4 பேரையும் நடுரோட்டில் நிற்க வைத்து அப்படியே உயிரோடு எரிக்க வேண்டும் என்று கண்ணீர் சிந்த பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட பலரும் இந்த கருத்தைதான் கூறி வருகின்றனர். பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ளவர்களை வைத்துதான் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். இந்த சூழ்நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்று சொன்னால் இஸ்லாமிய சட்டத்தை ஆளும் ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
காவலன் என்ற அப்ளிகேஷன் மூலமாக செய்தி அனுப்பினால் உடனே பாதுகாப்பு அளிக்கப்படும் என்று சொல்லக்கூடிய இந்த சூழ்நிலையில் புகார் அளித்து அந்த புகாரை எந்த காவல் நிலையம் எடுக்க வேண்டும் என்று காலதாமதம் படுத்தியதாக சம்மந்தப்பட்ட குடும்பத்தினர் சொல்லக்கூடிய ஒரு சூழ்நிலையை பார்க்கின்றோம். மக்களை பாதுகாப்பதற்கு தேவையான வகையில் சட்டங்கள் இயற்றப்பட கூடிய ஒரு சூழ்நிலை இருக்க வேண்டும் என்பதையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுதான் உண்மையான சுதந்திரம் என்பதை உணர்ந்து ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும். இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கின்றது. தவறு செய்யக் கூடியவர்கள் பயப்படும் நிலை இல்லாததை இது உணர்ந்துகிறது. கடுமையான சட்டங்கள் தான் தவறு செய்யக்கூடியவர்கள் அஞ்சும் நிலை ஏற்படும். கடுமையான சட்டங்கள் தான் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்..

Thursday 21 November 2019

List of Engineering Lateral Entry Entrance Exams !!

The admission to the B.Tech program through a lateral entry plan is done through certain admission tests. The concerned University or Institution that offers the course carries out these tests. Those who have passed the 3-year diploma in the related subject are eligible to apply for the same. The candidate has to score well in admission test to get admission into any of the reputed Engineering Colleges.
List of Engineering Lateral Entry Entrance Exams
  • AIEEE All India Engineering Entrance Exams
  • Calicut University Lateral Entry Entrance Exams
  • Delhi Technical University Lateral Entry Entrance Examination
  • Kerala University Lateral Entry Exam
  • KIIT University Lateral Entry Entrance Examination
  • Lateral Entry Entrance Test LEET
  • LPU NEAT (National Engineering Aptitude Test)
  • MIT-Manipal BE Lateral Entry Entrance Exam
  • Mumbai University Lateral Entry Entrance Examination
  • Punjab Technical University Lateral Entry Entrance Test (PTU LEET)
  • UKSEE B.Tech (Lateral Entry) Entrance Exam
  • Uttarakhand Technical University Lateral Entry Entrance Test
  • West Bengal University Joint Entrance Exam for Lateral Entry (JELET)
List of major institutions/Universities that take part in these Entrance Exams
  • Amity School of Engineering
  • Amrita Institute of Technology & Science
  • Cochin University, Cochin
  • CUSAT Kochi
  • Dharmsinh Desai Institute of Technology
  • Dhirubhai Ambani IICT Gandhinagar
  • Faculty of Engineering and Technology, Jadavpur University, Kolkata
  • G.H. Patel College of Engg & Technology
  • Guru Nanak Dev Engg College Ludhiana
  • Harcourt Butler Technological Institute Kanpur
  • Hindustan Institute of Technology, Chennai
  • IIIT- Allahabad
  • Indraprastha University, New Delhi
  • Institute of Technology, Nirma Univ, Ahmedabad
  • International Institute of Information Technology, Hyderabad
  • Jabalpur Engineering College
  • Jamia Millia Islamia, New Delhi New Delhi
  • JNTI Hyderabad
  • Kalinga Institute of Industrial Technology Bhubaneshwar
  • KIITS Orissa
  • M.S. Ramaiah Institute of Technology
  • M.S. Ramaiah Institute of Technology Bangalore
  • Maharashtra Institute of Technology (MIT)
  • MNIT Jaipur
  • St. Longowal Institute of engineering and tech., Punjab
  • VIT Vellore
Exam Pattern of Engineering Lateral Entry Entrance Exams
The entrance test for UKSEE B.Tech (Lateral Entry) Entrance Exam consists of 75 multiple-choice questions. The total time allotted for the test is 90 minutes. The questions will be on the basis of the syllabus of the diploma. The test mainly covers questions on Engineering Mechanics, Graphics, Physics/Chemistry/Maths of Diploma standard, Basic Electrical Engineering, etc. It also includes Basic Electronics Engineering, Basics of Computer Science, Basics of Biology, Basic Workshop Practice, etc.
How to procure Application Forms for Engineering Lateral Entry Entrance Exams?
The different methods by which one can collect application forms are
  • University Counters
  • University Websites
  • Banks
  • Post
The applicant can choose any of the methods according to their convenience. The application fee should be paid through banks or directly while collecting the application form.


Source: http://entrance-exam.net/list-of-engineering-lateral-entry-entrance-exams/#ixzz6BsE35TNH

Friday 15 November 2019

ஐஐடி மெட்ராஸில் இஸ்லாமிய வெறுப்பினால் பாத்திமா லத்தீஃப் நிறுவன படுகொலை !!!!


பார்ப்பனிய ஆதிக்கத்தால் நிறுவனப் படுகொலை செய்யப்பட்ட பாத்திமா லத்தீஃப்பின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்...


1.எனது மகள் கடிதம் எழுதும் பழக்கம் உடையவள். வீட்டில் என்ன நடந்தாலும் கடிதம் எழுதுவாள். அப்படியிருக்க தற்கொலை செய்ததாக சொல்லப்படும் நேரத்தில் என் மகள் கண்டிப்பாக கடிதம் எழுதியிருப்பாள் .. அது எங்கே..?
2.ஹாஸ்டல், உணவகம், நூலகம்போன்ற இடங்களின் CCTV பதிவுகளை ஐஐடி நிர்வாகம் தருவதற்கு தாமதிப்பது ஏன்..?
3. என் மகள் கயிற்றில் தூக்கு மாட்டிக் கொண்டாள் என்று சொல்கிறார்கள். அவளது அறையிலும் கயிறு இல்லை, வெளியிலிருந்தும் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை..அந்த கயிறு எப்படி கிடைத்தது.
4.மரணிப்பதற்கு முன்பான இரவில் உணவகத்தில் வைத்து 1மணிநேரம் எனது மகள் அழுதிருக்கிறாள். அவளை சக மாணவி தேற்றியிருக்கிறார். யார் அந்த மாணிவி.? 1மணி அழுகிறாள் எனில் அப்படி என்ன தொல்லைகளை எனது மகள் சந்தித்தாள்.
Image may contain: 1 person, smiling, text5. மரணமடைந்த நாளில் கூட எனது மகளின் அறையில் வேறு நபர்கள் சென்றிருக்கிறார்கள். எனது மகளின் அறை அலங்கோலமாக களைந்து கிடந்த்து.
6.எனது மகளின் அறையை புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. ஏன்..? எனது மகளின் அறையிலிருந்த மற்றொரு மாணவி அறையை காலி செய்துவிட்டு வேறொரு அறைக்கு சென்று விட்டார்
7.தினமும் இரவு 8மணிக்கெல்லாம் விடுதிக்கு சென்றுவிடும் எனது மகள் சம்பவம் நடந்த அன்று 9மணிக்கு உணவகத்தில் வைத்து அழுதிருக்கிறாள் எனில் அப்படி என்ன துன்பியல் சம்பவம் நிகழ்ந்தது.?
8.எப்பொழுதும் தேர்வின் விடைத்தாள்களை தானே சென்று வாங்கி வரும் என் மகள் பாத்திமா சம்பவம் நடப்பதற்கு முன்பாக தனது தோழியை அனுப்பி சுதர்சன் பத்மநாபனிடம் விடைத்தாளை வாங்கி வரச் சொல்லியிருக்கிறார் எனில் என்ன நடந்தது..?
9.சம்பவம் நடந்த அன்று 9 மணிக்கு உணவகத்தில் அமர்ந்து எனது மகள் பாத்திமா அழுது கொண்டிருக்கிறோம் போது 9:30வரை சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தில் தான் இருந்திக்கிறார்.
10. எனது மகள் மரணத்து இதுவரை ஐஐடி யின் அதிகாரப்பூர்வமாக என்னிடமோ, எனது மனைவியிடமோ பேசாசது ஏன்..? அதுமட்டுமல்லாது ஐஐடி யின் மாணவர்களோ, ஆசிரியர்களோ, பேராசிரியர்களோ யாருமே எங்களிடம் ஆறுதலைக் கூட சொல்லாதது ஏன்..??
ஃபாத்திமா லத்தீஃப் தாயார் ஊடகங்களிடம் பேசிய மலையாள பேட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு...
"எங்களுக்கு பெண் பிள்ளையை கல்விக்கூடத்திற்கு வெளியூருக்கு அனுப்புவதற்கு பயமாக இருந்தது. நாட்டில் நிலவிவரும் மதவெறுப்பின் காரணமாக எனது மகளை முக்காடு(சால்)அணிவதற்கு கூட வேண்டாமென மறுத்துவிட்டோம். எங்கே முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டதே. எல்லா பிள்ளைகளைப் போல சாதாரணமாக உடை அணிந்துகொள் என்று வலியுறுத்தினோம். ஏனெனில் நாட்டில் நிலவும் சூழல் அப்படிப்பட்டது.
முதலில் அவளுக்கு பனாரஸில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது. ஆனால் வட மாநிலங்களில் நிலவும் கும்பல் படுகொலையை நினைத்து நாங்கள் அஞ்சினோம். வேண்டாம் மகளே என நான் மறுத்தேன். அம்மா நான் விமானத்தில் அல்லவா போகப் போகிறேன் ஏன் கவலை என்றாள். வேண்டாம் மகளே.., விமானத்தில் போனாலும் சாலையிலும் நாம் நடக்க வேண்டியிருக்கும். சாலைகளில் சர்வசாதரணமாக கும்பல் படுகொலை(Mob Lynching) நடக்கும் தேசமிது வேண்டாம் மகளே என நான் பலவந்தமாக மறுத்தேன். அதன்பின் தான் மெட்ராஸ் ஐஐடி யில் படிக்க அனுப்பினோம்.
ஐஐடி யில் என் மகளுக்கு தொல்லைகள் தரப்பட்டிருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இன்டெர்னல் மதிப்பெண்ணை குறித்து பேராசிரியரிடத்தில் எனது மகள் விவாவதம் செய்தது அவருக்கு பிடிக்கவில்லை. நவீன கால பிள்ளைகளைப் போன்று நண்பர்களோடு ஊர் சுற்றுவது போன்ற எந்த செயலிலும் எனது மகள் பங்கெடுத்தது இல்லை. படிப்பில் நல்ல ஆர்வத்தோடு இருந்தவள். வேண்டுமெனில் ஐஐடி வளாகத்தில் விசாரித்து கொள்ளலாம். எனது மகளுக்கு தெரிந்த விடயமெல்லாம் வகுப்பறை, விடுதி, நூலகம், மற்றும் உணவகம் மட்டும்தான். இதைத்தவிர வேறெங்கும் அவள் சென்றதில்லை.
பேராசியர் சுதர்சன் பத்மநாபனின் தொல்லைகள் தாங்காமல் தான் அவள் இறந்துபோயிருக்கிறாள். அவளுக்கு முஸ்லிம் நண்பர்களும் ஐஐடி யில் குறைவானவர்களே. இந்தியாவின் சூழல் மாறிவருகிற காரணத்தினால் தமிழ்நாடெனில் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பித்தான் நாங்கள் ஐஐடி மெட்ராஸில் படிக்க அனுப்பினோம்.
சுதர்சன் பத்மனாபன்தான் எனது மகளை இல்லாமல் ஆக்கியது. முதலமைச்சரை சந்தித்தோம். இனியொரு ஃபாத்திமா சாகமாட்டாள் அதற்கான எல்லா நடவடிக்கைகளும் தாங்கள் எடுப்பதாக அவர் உத்தரவாதம் அளித்தார்.
அடுத்த செமஸ்டருக்கு படிப்பதற்கான புத்தகங்களை இப்பொழுது ஆன்லைனில் ஆர்டர் செய்து எனக்கு தகவல் தந்தாள். மூன்றாவது செமஸ்டரில் இருக்கும் இருக்கும் பொருளாதார கணிதம் கொஞ்சம் கடினமானது எனவே நான் இப்பொழுதிருந்தே டியூசன் செல்ல வேண்டுமென திட்டமிடும் ஒரு பெண் பிள்ளை இப்படி சாவதற்கு விருப்பபடுமா..?
சுடிதார் பேண்டின் கயிறினை கட்டத்தெரியாத பெண் எனது மகள். காரணம் அது அவளை இறுக்கி வலியை உண்டாக்கும் எனச்சொல்வாள். 18வயதான பின்னும் அவளுக்கு அதனை இறுக்கமாக கட்டத்தெரியாத காரணத்தால் அவளுக்கு லெங்கின்சும், ஜீன்சும் வாங்கி கொடுத்தோம். அவள் தூக்குக் கயிறை நெரிப்பதை எப்படி எதிர்கொண்டாள் என்று தெரியவில்லையே..? அவளா இப்படி செய்து கொண்டாள்..?
என் கருத்து : ஐஐடியில் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு தொல்லைகள் தரப்படுகின்றன. கடந்து வருடம் 5நபர்கள் தொல்லை தாங்காமல் விலகி சென்றுவிட்டனர். நாங்கள் உயர் நீதிமன்றமானாலும், உச்சநீதிமன்றமானாலும் சென்று என் மகளுக்கு நீதியை பெற்றே தீருவோம். இல்லையேல் நாங்கள் வாழ்வதற்கு அர்த்தமே இல்லை.
இனியொரு ஃபாத்திமாவை நாங்கள் இழக்க தயாரில்லை..
IIT மாணவி பாத்திமா லத்தீஃப் மரணத்திற்கு காரணமான பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நெருக்கமானவனாக இருக்கிறான்.
ஆர்.எஸ்.எஸ் நடத்துகிற NGO-வான Infinity Foundation சார்பாக "Modern Hinduphobia and Dravidian Movement" என்ற பெயரில் இந்துத்துவ மதவெறியை நியாயப்படுத்தியும், திராவிட இயக்கத்தினை குற்றம் சாட்டியும் IITக்குள் கருத்தரங்கத்தை முன்னின்று நடத்தியிருக்கிறான்.
இவனை வழக்கிலிருந்து தப்பிக்கவைக்க ஆர்.எஸ்.எஸ் கும்பல் மொத்தமும் வேலை செய்து வருகிறது.
ஆர்.எஸ்.எஸ்-பார்ப்பனிய தீவிரவாத கும்பலின் மதவெறிக் கூடமாக ஐஐடி கல்வி நிலையங்கள் நீடித்து வருகின்றன. இதனால்தான் IIT-க்குள் பயில செல்கிற SC/ST, OBC, இசுலாமிய மற்றும் சிறுபான்மை மாணவர்கள் பலர் ஆண்டுதோறும் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இந்தியாவின் நவீன கல்வி நிலையம் என்று பெருமை பேசக் கூடிய ஐஐடி இந்த பிற்போக்குவாத மதவெறி பார்ப்பனிய கும்பலின் கையில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது. நம் மக்களின் வரிப்பணத்தில் நடக்கும் ஐஐடி மதவெறி-சாதிவெறிக் கூடாரமாக காவி கும்பலால் மாற்றப்படுவதை நாம் எப்படி அனுமதிக்க முடியும்?
பாத்திமாவை மதரீதியான பாகுபாட்டுக்கு உள்படுத்தி தற்கொலைக்கு தள்ளிய இந்த சுதர்சன் பத்மநாபன் உடனடியாக கொலை வழக்கில் கைது செய்யப்பட வேண்டும்.
Infinity Foundation உட்பட ஆர்.எஸ்.எஸ்-ன் எந்த கிளை அமைப்புகளும் IIT வளாகத்தில் செயல்பட முடியாதபடி தடை செய்யப்பட வேண்டும்.
நவீன அக்ரகாரத்தைப் போல மாறிக் கொண்டிருக்கும் ஐஐடி-யை கேள்விக்குள்ளாக்க இதுவே சமயம்..

Sunday 10 November 2019

நாட்டின் ஒற்றுமைக்காக முஸ்லீம்கள் செய்த மேலும் ஓர் தியாகமே பாபர் மசூதி !!


Image result for பாபர் மசூதி"
சுதந்திரத்திற்காக அன்று எத்தனையோ தியாகங்கள் செய்த முஸ்லீம்கள்,இன்று நாட்டின் ஒற்றுமைக்காக செய்த மேலும் ஓர் தியாகமே பாபர்மசூதி.

இப்ப வந்து இருக்கக்கூடிய தீர்ப்பு வரலாற்று பிழை பின் விளைவுகள் ஏராளம் தனிமனிதருக்கு முதல் எல்லா மத வழிபாட்டிற்கும் பாதகமாக அமையும் காலம் தெளிவாக சொல்லும் பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்றைய நடைமுறை வாழ்க்கையில் எது தேவை சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் உயிர் சேதங்கள் பொருட்சேதங்கள் ஏற்பட கூடாது என்றுதான் இந்த தீர்ப்பு கூறப்பட்டுள்ளது ,இதில் வெற்றியோ தோல்வியோ யாருக்கும் இல்லை ,இந்த தீர்ப்பு மூலம் பெரும் துன்ப நிகழ்வு தவிர்க்கப்பட்டுள்ளது.அமைதிகாத்த மக்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும் ,வரலாற்றை பார்க்காமல் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாருங்கள் ,கற்பழிச்சவனுக்கே பெண்னை கல்யாணம் செய்து வைக்கிற ஆலமரத்தடி பஞ்சாயத்தாரை போன்று!!!

இடித்தவர்களுக்கே நிலம் சொந்தம் என்ற ஒரு இதிகாச சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது நீதிமன்றம்!!!இந்த தீர்ப்பு எப்படி இருக்குனா திருடுவது தப்புதான் ஆனால் திருடிய பொருள் திருடனுக்கு தான் சொந்தம் என்று சொல்லுவது போல் உள்ளது.

இந்த தீர்ப்பை கொடுத்த பிறகு மீண்டும் எந்த வம்பும் இழுக்க மாட்டோம் என்று ஹிந்து அமைப்புகளிடம் நீதிமன்றம் உத்தரவாதம் கேட்டுப் பெற வேண்டும்.
ஹிந்து வாக்கு வங்கிகள் குறையும் போது மீண்டும் இதேபோன்ற வம்புகளை கண்டிப்பாக இழுப்பார்கள்.
அந்தச் சூழ்நிலைகளை நீதிமன்றம் தடுக்க வேண்டும்.
இந்திய மக்களிடத்தில் சகோதரத்துவம் மேலோங்க வேண்டும்.
இனி நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும்.
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை.
ஆனாலும் கடந்த மூன்று மாதங்களில் ஒரு கோடி வேலைகள் பறி கொடுத்து விட்டார்கள் மக்கள்.
ஆகவே கோவில்களைப் பற்றியும் பள்ளிவாசல்களையும் பற்றி பேசிக்கொண்டிருப்பதை தவிர்ப்போம்.
கடவுள் இருக்கான் குமாரு

எந்த நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதோ அதே நம்பிக்கையின் அடிப்படையில் வரலாறு எழுதப்படும்!

ராமர் கோவில் இடித்து பாபர் மசூதி கட்டபடவில்லை ஆனால் பாபர் மசூதி இடித்துதான் ராமருக்கு கோவில் கட்டினார்கள் என்பது இன்று முதல் வரலாறு !


நீண்ட நேரம் ஆலோசித்த பிறகு நீதிமன்றத்திற்க்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற முடிவிற்க்கு வந்துள்ளேன்..


காரணம், ஒவ்வொன்றாக பார்ப்போம்..தீர்ப்பின் படி,

* ராமர் கோவிலை இடித்து தான் மசூதி கட்டினார்கள் என்பதற்க்கு ஆதாரம் இல்லை.
* மசூதியின் கீழே இருந்ததாக சொல்லப்படும் கட்டிடம் கோவில் இல்லை.
* ராமர் அயோதியில் தான் பிறந்தார் என்பது பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை ஆனால் மசூதி இருந்த இடத்தில்தான் பிறந்தார் என்பதற்க்கு ஆதாரம் இல்லை.
* மசூக்குள் சிலையை வைத்தது சட்ட விரோதம்.
* மசூதியை இடித்தது சட்ட விரோதம்.
சர்சைக்குரிய நிலம் முஸ்லீம்களுக்குத்தான் சொந்தம் என்று உணர்ந்த போதிலும் கடங்கார பாவிகளாகிய நம் சங்கி மங்கி தீவிரவாதிகள் பிரியானி அண்டாவை திருட புறப்பட்டு விடுவார்களோ, cell phone கடைகளை சூரையாட புறப்பட்டுவிடுவார்களோ, லட்சக்கணக்கான அப்பாவி முஸ்லீம்களின் உயிருக்கும் உடமைக்கும் உத்திரவாதம் இல்லா நிலை உருவாகிவிடுமோ என்ற அச்சத்தால் மசூதியை இடித்தவர்களுக்கே நிலம் சொந்தம் என்று தீர்பெழுத நிபந்த்திக்கப்பட்டுள்ளோம் மன்னித்து விடுங்கள்.

குறிப்பு: தீர்ப்பு முஸ்லீம்களுக்கு சாதகமாக அமைந்திருந்தால் இன்நேரம் இந்தியா பத்தி எரிந்திருக்கும், முஸ்லீம்களின் உயிர்களும் அவர்களின் சொத்துக்களும் அநியாயமாக பறிபோயிருக்கும், பொது சொத்துக்கள் சேத்ப்படுத்தப்பட்டிருக்கும், மனங்கள் உடைந்ததால் பஸ்களின் கண்ணாடிகள் உடைகிறதென்றும் வயிறு பத்தி எரிவதால் கடைகள் பத்தி எரிகிறது என்ற வீர முழக்கங்கள் ஒலித்திருக்கும்.
இப்படி பட்ட அசம்பாவிதங்களை தவிற்க்கும் விதமாக தீர்பளித்த நீதிமன்றத்திற்க்கு கோடான கோடி நன்றிகள்

ராமர் கோவிலை இடித்துதான் மசூதி கட்டப்பட்டது என்று சஙபரிவார தீவிரவாதிகளால் செய்யப்பட்ட பொய் பிரச்சாரம் பொய் என்று நிருபணமான நாள் இன்று.

பாபர் மசூதி தீர்ப்பு எப்படி வரும் என்பது அனைவரும் அறிந்த விசயம்தான் !!!

Image result for பாபர் மசூதி"
நான் பாபர் மசூதி இடித்த விசயத்தை நினைவூட்ட விரும்பவில்லை.

ஆனால் இடித்த சமயத்தில் தமிழகம் எப்படி இருந்தது என்பதை நினைவூட்ட விரும்புறேன்.!

கிட்டத்தட்ட இந்தியாவின் அத்தனை மாநிலங்களிலும் மசூதி இடிப்பு தொடர்பாக ஏதேனும் ஒரு இஸ்லாமியனின் உயிரோ, இந்துவின் உயிரோ செத்துக் கொண்டு இருந்த சமயத்தில் "பெரியாரின்" தமிழகத்தில் மட்டும் எந்தக் கலவரமும் இல்லை..
உயிர் சேதமும் இல்லை..!!

மசூதி இடிப்பைக் கண்டித்து தமிழகத்தில் கூட்டம் கூட்டமாக கண்டன ஊர்வலம் போனார்கள், போனவர்கள் முஸ்லீம்கள் அல்ல, இந்து சகோதரர்கள்..!!

இடித்த போது எவர் கண்டன ஊர்வலம் போனார்களோ அந்த பங்காளிகளின், அந்த மாமன் மச்சான் கைகளில் இந்த  தீர்ப்பை ஒப்படைத்து விட்டு நாம் நம் வேலையைப் பார்ப்போம்...



என் தாய்திரு நாட்டில், திருடியவனுக்கே பொருள் சொந்தம் எனும்
உன்னத தீர்ப்பை வழங்கி பெருமை பட்டு கொண்டிருக்கும் தருணத்தில்..

இறந்த சடலத்திற்க்கு மீண்டும்,மீண்டும்,பிணகூறு ஆய்வு செய்திட எனக்கு விரும்பமில்லை, ஆயினும் இராமனுக்காக கோவில் கட்டி அவன் பிறப்பிட பெருமை காக்க துடிக்கும் சொந்தங்களே!


நீங்கள் உண்மையிலேயே இராமனை படித்திருந்தால், பக்தி கொண்டிருந்தால்,

எழுதி முடிக்கபட்ட தீர்ப்பும் உங்கள் நெஞ்சை உருத்தியிருக்கும்..

களவெடுத்தவனுக்கே களவெடுத்த பொருள் சொந்தமென இராமன் எண்ணியிருந்தால்..


சேனைகளை கட்டமைத்து சீதையை மீட்டிருக்க மாட்டான்..
வனவாசம் சென்றயிடத்திலேயே தன் வாசம் அமைத்திருப்பான்.



கள்ளமிட்ட தனக்கே சீதை சொந்தமென இராவணவன் நினைத்திருந்தால்...


சீதையை,சீதையாகவே வைத்து பார்த்திருக்க மாட்டான்...



எழுதபட்ட மஹாபாரதத்தில் நீதியோடு தான் நடந்து கொண்டார்கள்...

ஹீரோவாக போற்றபடும் இராமனும,
வில்லனாக சித்தரிக்கபடும் இராவணனும் பாவம்..

நாங்கள் இராமனின் பக்தாள்கள் என்று சொல்லகூடிய நவீன சேனைகள் தான்.. இராமன் போதித்த நீதிக்கு..

பாபரின் பள்ளியில்...

ஒன்றையிழந்தால்,ஒன்றை பெறவேண்டுமென்பது இயற்கையின் நியதி,

அவ்வகையில் பள்ளியை இழந்தோம்.

அனைத்து தளத்திலும் சமுதாய வழி காட்டிகள் ன்ற, பாசாங்கு தலைமைகளை இனம் கண்டு கொண்டோம்.

போகட்டும்,சாவின் விழிம்பில் துடித்த போதும் தன் கவசகுண்டலத்தை தாரைவார்த்து தர்மத்தை கடைபிடித்த கர்ணனை போல்.என் தேசத்திற்க்காக,எம் முன்னோர்கள் எண்ணற்ற தியாகங்களை விதைத்து சென்றுள்ளார்கள்..

இறுதியாக எங்களிடம் முன்னோர்களின் பெருமையை தவிர இழப்பதற்க்கு வேறொன்றுமில்லை..

எடுத்து செல்லுங்கள் இராமனுக்கான விலாசமாய் பாபரை...

என் சமுதாயமுன்னோடிகள் சமூகநல்லிணக்கம் ஜனநாயகமென்று வெறும் அறிக்கைகளாக தருபவர்களல்ல..

நாளை..
இராமனின் கோவிலுக்கு மூலவர் சிலையை கூட எம் மூத்தவர்கள் பெற்று தருவார்கள்..

மகிழ்வோடு பெற்று செல்லுங்கள்.வேண்டுகோள் வேறொன்றுமில்லை ஒன்றை தவிர...

எழுப்பபடும் இராமனின் கோவிலிருந்தாவது தொடங்கட்டும் சாதிய ஒழிப்பும்  சாதிய பாகுபாடும்...

இராமனின் முன்பாவாவது,சாதிகள்,பேதங்களற்ற இந்துவாய் இணைந்து நில்லுங்கள்.

இதோ.தொழுகை நேரம் வந்து விட்டது,வெறும் கட்டிடத்தை தேடவில்லை கண்கள்,தூய்மையான கட்டாந்தரையை தான் தேடுகிறது.இது தான் இஸ்லாம் கற்று தரும் இறை வழிபாடு...

எங்களின் துயருக்காக உங்களின் மகிழ்ச்சிகள் தடைபட வேண்டாம்.
உங்களின் மகிழ்ச்சிக்காக இனியும் எங்களை துன்புறுத்த வேண்டாம்...

அதே சகோதரதுவத்தோடும்,இறைவன்ஒருவனே எனும் நம்பிக்கையோடு..

உங்கள்  சகோதரன்  மு,அஜ்மல் கான்.

Thursday 7 November 2019

இலந்தைப் பழத்தில் அடங்கியுள்ள மருத்துவ குணங்களைப் பற்றி பார்ப்போம்!!

Image result for jujube fruit

இன்று சில பழங்களை மக்கள் மறந்தே போயிருப்பார்கள். அவை கிராமங்களில்தான் கிடைக்கின்றன. அந்த பட்டியலில் இலந்தைப் பழம், காரம்பழம், கோவாப்பழம் என பல வகைகள் உள்ளன. இந்த பழங்களில் மருத்துவப் பயன்கள் அதிகம் உண்டு. இலந்தையின் பிறப்பிடம் சைனா. 4000 ஆண்டுகளுக்கு முந்தையது. இது சுமார் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. வளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ மூன்று மூன்று பளபளப்பான பச்சை இலைகளும் உடைய சிறு மரம். தமிழகத்தின் வறட்சி பகுதிகளில் தானாகவே வளர்கிறது. உரம் தேவையில்லை. சிறிது மழை போதும். குளிர் காலத்தில் பூத்து காய்விட்டுப் பழமாகும். இதற்கு சிறிய பேரிச்சை, காய்ந்த பழம் வத்தல் என்று சொல்வர். புளிப்புச் சுவையுடைய திண்ணக் கூடிய பழங்களை உடையது. அமரிக்கா, நியுயார்க்கில் அதிகம் காணப்படும். விதை மிகவும் கெட்டியாக இருக்கும். அமரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய நாட்டில் வியாபாரமாக வளர்க்கப்படவில்லை. சாதாரணமாக இதன் இனவிருத்தி கட்டிங், மற்றும் ஒட்டு முறையில் செய்யப்படுகிறது.தெரு ஓரங்களில் இலந்தைப் பழம் விற்பதைக் காணலாம். இலந்தைப்பழம் பழத்தில் ஏராளமான வகைகள் இருந்தாலும் தமிழ்நாட்டில் சிம்லி. உமரா என்ற இரண்டு வகை மட்டுமே விற்பனைக்கு வருகிறது. சிம்லிப் பழம் பார்ப்பதற்கு சிறியதாகவும்.உமராப் பழம் பெரியதாகவும் இருக்கும்.புள்ளிப்பும் இனிப்பும் சேர்ந்தே இருப்பது இதன் சிறப்பம்சம்.


இலந்தைப் பழத்தில் மருத்துவ குணமும் அதிகமுண்டு.இந்த இலந்தைப் பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களைப் பற்றியும், மருத்துவக் குணங்களைப் பற்றியும் பார்ப்போம்.
இந்தியா எங்கும் அதிகம் பரவிக் காணப்படும். இதில் இருவகையுண்டு. ஒன்று காட்டு இலந்தை. மற்றொன்று நாட்டு இலந்தை.

சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு பிரிவாகும். இதன் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஒன்றே.

இலந்தைக்கு குல்லதி, குல்வலி, கோல், கோற்கொடி, வதரி என்று பல பெயர்கள் உண்டு.
உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. 
இதில் கி, ஙி2, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, மிதசர்கரை சக்தி உள்ளது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம். 100 கிராம் இலந்தையில் கிடைக்கும் கலோரி 74% மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது.இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம். இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன. இந்த இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.

இலந்தை இலை தசை,நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர், பட்டை பசித் தூண்டியாகவும், பழம் சளி நீக்க, மலமிளக்கு, பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது. இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்த்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலி, மன உழைச்சலைப் போக்க, எந்த வலியையும் போக்கவும் வல்லது. இதை டீ யாக சைனா, கொரியா, வியட்னாம், ஐப்பான் ஆகிய நாடுகளில் பயன் படுத்துகிறார்கள். இதை ஊறுகாயாக மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஸ்சில் பயன் படுத்துகிறார்கள். தமிழ் நாட்டில் இதன் பழத்துடன் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு இடித்து வெய்யிலில் காயவைத்து இலந்தை வடையாகப் பயன் படுத்துகிறார்கள்.


எலும்புகள் வலுப்பெற


உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இதனால் இவர்கள் இலேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும்.

பித்தத்தைக் குறைக்க

உடலில் முக்குற்றங்களில் ஒன்றான பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் பித்த நீர் அதிகரிப்பால் இரத்தம் சீர்கேடு அடையும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.

வாந்தி குறைய

பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் பயணம் என்றாலே அரண்டு போவார்கள். இவர்கள் படும் அவஸ்தையை விட அவர்களுக்கு அருகில் இருப்பவர்களின் நிலை சங்கடத்திற்குள்ளதாக இருக்கும். இவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.

உடல் வலியைப் போக்க
சிலருக்கு அடிக்கடி உடல்வலி ஏற்படும். சிறிது வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும். முன்பெல்லாம் இரவு பகல் பாராமல் வேலை செய்வேன் இப்போது அப்படி செய்ய முடியவில்லையே என்று ஆதங்கப்படுவார்கள். பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே இந்த நிலை ஏற்படும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.

செரிமான சக்தியைத் தூண்ட

பசியில்லாமல் அவதிப்படுபவர்களும் சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்


  • இதை சாப்பிட்டால் இதய நோய் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும்.
  • மதிய உணவிற்கு பிறகு இலந்தைப் பழத்தை சாப்பிட்டால் செரிமானம் உண்டாகும்.
  • தினசரி இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தகரித்து சக்தியை அதிகரிக்கும்.
  • மூளை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
  • நெஞ்சுவலி, கிட்னி கோளாறு மற்றும் வரட்டு இருமலுக்கு நல்ல மருந்து.
  • அம்மை நோய் உள்ளவர்கள் இலந்தைப் பழம் சாப்பிட்டால் நோயின் வேகம் தணிந்து விரைவில் குணமடையும்.

தினமும் 5முதல் 10 பழம் வரை காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் பித்தம், மயக்கம், வாந்தி, குமட்டல், வாத நோய் உடல்வலி ஆகியவற்றை
போக்கும்.
இது கிடைக்கும் காலங்களில் தவறாமல் உட் கொள்ளவும்
.


மேலும் இலந்தை இலையிலும் மருத்துவ குணம் இருக்கிறது.

  • உள்ளங்கை, கால்களில் சிலருக்கு புது பிடி வென்று வியர்வை வெளிவரும்.அதற்கு இலந்தை மர இலைகளை எடுத்து நன்கு கசக்கி சாறு பிழந்து வியர்வை உள்ள இடத்தில் தடவி வந்தால்.வியர்ப்பது நின்று விடும்.
  • ஏதாவது வெட்டுக் காயம் இருந்தாலும் இலந்தை இலையை மைப் போல் அரைத்து 5 நாட்கள் வெட்டுக் காயத்தின் மீது வைத்து கட்டினால் காயம் ஆறும்...
தொகுப்பு  : அ. தையுபா அஜ்மல்.

மதுரையில் நேற்று நடந்த ஒரு உண்மை சம்பவம் !!

Related image 
அணைத்து பெண்களும் கட்டாயம் படிங்க

 பெங்களூரில்  IT  நிறுவனத்தில்  வேலை செய்யும் ஒருவன் தன் கர்ப்பமான மனைவியை மருத்துவ பரிசோதனைக்கு தன் மாமியார் ஊரான மதுரையில்  உள்ள ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்கிறான்,

"நேரம் நெருங்கிவிட்டது,பிரசவ வலி நாளை அல்லது நாளை மறுநாள் கூட வரலாம்..ஜாக்கிரதை என்கிறார் மருத்துவர்..
இதை கேட்ட அவள் கணவனுக்கு நெஞ்சில் ஆனந்தம் பொங்கி
இரு கண்களை மறைக்கிறது,அன்று இரவே கணவன் தன் மனைவியின்வயிற்றில் காதை வைத்துப் பார்க்கிறான்,

"என்ன செய்கிறீர்கள்!" என்று மனைவி கேட்க நாளை இன்நேரம் என் மகனோ, மகளோ என் கையில்... என்கிறான்,
அதை கேட்க மனைவி எனக்கு ஆண் பிள்ளைதான் வேண்டும் என்று சொல்ல,
இல்லை இல்லை எனக்கு பெண் பிள்ளைதான் வேண்டும் என்று கணவன் சொல்ல ஒருவழியாக இருவரும் உறங்க சென்றனர்,

படுக்கையில் தன் கணவன் அருகில் நெருங்கி வந்து அவன் கை விரலை
இறுக்கமாக பிடித்துக்கொள்கிறாள்,

தூக்கத்தில் இருந்த கணவன் விழித்து தன் மனைவியை பார்க்கிறான்.
 "என்னவென்று தெரியவில்லை இதயம் படபடவென துடிக்கிறது,
எனக்கு தூக்கமே வரவில்லைபயமாக இருக்கிறது", என்று சொல்லி
கண்கசிகிறாள் அவன் மனைவி.

உடனே இழுத்து தன் மார்போடு மனைவியை அனைத்தவன் அவள் கண்ணீரை துடைத்துஅவளுக்கு ஆறுதல் கூறுகிறான்.

அவள் நினைத்தால் போல் திடீரென பிரசவ வலி வந்தது. பயத்திலும் கடுமையான இடுப்பு வலியிலும் கட்டிலேயே துடித்து அழ ஆரம்பித்தாள்,

என்ன செய்வது என தெரியாது முழித்த கணவன் அவள் துடிப்பதை காண இயலாமல் அப்படியே அவளை தூக்கிக்கொண்டு காரில் சிட்டுக் குருவியை போல் பறந்து ஆஸ்பத்திரியில் சேர்தான்,
இரவு நேரம் என்பதால் உடனே தன் மனைவியின் பெற்றோர்களுக்கு
தகவல் தெரிவித்தான்,

ஆஸ்பத்திரியே அமைதியாக இருக்கஅவன் மனைவியின் அலரல் சப்தம் மட்டும் பயங்கரமாக கேட்டது,

இரு கைகளையும் பிசைந்து கொண்டு பிரசவ வார்டின் வெளியில்
இங்கே அங்கே என சுற்றுகிறான்.
"அம்மா! அம்மா ..!" என்றுமனைவி வலியில் துடிக்கஅழத் தெரியாத அவள்
கணவனுக்கும் அழுகை வந்தது.
"ஆண்டவா என் மனைவியின் முதல் பிரசவம் இது,
தாய்கும் பிள்ளைக்கும் எந்த ஒரு பாதிப்பும் வந்துவிடக்கூடாது"
என்று  கடவுளிடம் வேண்டினான்.
நேரம் ஆக ஆக அவனுக்கு முகமெல்லாம் வேர்த்து கொட்டியது,
பிரசவ வலியில் தன் மனைவி துடிப்பது அவனால் தாங்கிக்கொள்ள
இயலவில்லை.
சற்று நேரத்தில் திடீரென மனைவியின் குரல் அமைதியானது.
கணவன் என்னாசோ! ஏதாச்சோ! என மிகவும் பயந்துபோனான்,

மீண்டும் ஒரு அலரல்...
அதை கேட்ட கணவன் ஆண்டவா என் மனைவிக்கு இவ்வளவு சித்திரவதையா?
என தலையில் கை வைத்தவாறு இருக்கையில் அமர்ந்து மனைவியை
அவள் தியாகத்தை நினைத்துகூணி கூறுகிப்போனான்,
அப்போது ஒரு நர்ஸ் மட்டும் வெளியே வந்து உங்கள் மனைவிக்கு சுகப்பிரசவம் பயப்படும்படி ஒன்றுமில்லை,
தாராளமாக உள்ளே சென்று பாருங்கள் என்றார்.

காற்றை விட வேகமாக உள்ளே சென்றவன் முதலில் தன் மனைவியை பார்க்கிறான், அவள் இன்னும் கண் திறக்காமல் மயக்கத்தில் சோர்ந்து படுத்திருக்க அடுத்து எங்கே என் குழந்தை எனஅவன் கண்கள் ஒரு வழியாக தேடி தாயின் அருகில் குழந்தை இருப்பதை கண்டு மெதுவாக நகர்ந்து பூமியின் பாதம் படாத  அந்த  ஆண் சிசுவின் பாதத்தை ஆசையோடு தொட்டு
முத்தமிட்டு அதன் தலையை மெதுவாக கோதிவிடுகிறான்.
இந்த தந்தையின் கை விரல் பட்டவுடன் அந்த  ஆண் சிசு தனது கால் கையை அசைக்க ஆரம்பித்தது.
யார் சொன்னது பெண்கள் மட்டும்தான் உயிரை சுமக்கின்றனர் என்று.

ஒரு பெண்ணை உண்மையாக காதலிக்கும் ஒவ்வொரு ஆணின் "இதயத்தை"
தொட்டுப் பாருங்கள், அவன் வாழ்நாள் முழுவதும் அந்த பெண்ணின் நினைவுகளையும் குடும்ப பாரங்களையும் சுமந்தே மடியும் உன்னதமான படைப்பு தான் ஆண்கள்....


உங்கள் தோழி  அ.தையுபா அஜ்மல்.