Monday 30 March 2020

கொரோனா வைரஸ் தாக்குதலில் இந்தியாவில் முதல் பலி !!

என்னடா இந்த நேரத்தில் மோடியை விமர்சிக்கானே.. என்று நாக்குப்பூச்சி கை நரம்புகளில் ஓட கொதிக்கும் சங்கியாக இல்லாமல் இந்த பதிவை பொறுமையாக படிக்கவும்*..
PM Modi to address the nation today on measures to combat ...கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் பலி மார்ச் 12-ம் தேதி. கர்நாடகா மாநிலம் கல்புர்கி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது உசேன் சித்திக் என்ற 76 வயதானவர் கொரோனா தாக்கி இறந்தார்.
அவர் சவுதி அரேபியா சென்று, பிப்.29ம் தேதி இந்தியா திரும்பினார்.
இந்த அபாய சங்குக்கு முன்னதாகவே இந்தியா குறட்டைத்தூக்கத்திலிருந்து முழித்திருக்க வேண்டும்.
அதாவது சீனாவில் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதலில் டிசம்பர் மாத தொடக்கத்திலே உயிரிழப்புகள் ஆரம்பித்தன. அதை டிசம்பர் மாதம் இறுதியில் தான் சீனா உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில், வுகான் நகரில் படித்த கேரளாவின் திருச்சூர் மாணவி ஜனவரி மாதம் இந்தியா திரும்பினார். அந்த நாள் ஜனவரி 30.
அவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர், அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இருந்து வந்த கேரள மக்கள் 3 பேருக்கு கொரோனா தாக்கியது.
ஜனவரி 30ம் தேதி தொடங்கி, மார்ச் 3ம் தேதி வரை 33 நாட்களில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை வெறும் 9 தான். அதாவது ஒற்றை இலக்க எண்ணிக்கையில் இருந்ததை மோடி அரசின் அதிகாரிகள் எப்படி கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்.
நமது பக்கத்து நாடு சீனா….
அந்த நாட்டிலிருந்து வெவ்வேறு கண்டங்களில் இருக்கும் இத்தாலி, பிரான்ஸ், தென் கொரியா, ஈரான் என தாவி , அமெரிக்கா வரை கொரோனா தாக்கி இருக்கிறது.
இந்த நிலையில், மோடி அரசின் அதிகாரிகள் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தார்களா என்ற கேள்வி எப்படி எழாமல் இருக்கும்?
பக்கத்து நாட்டில் இருக்கும் நமக்கு எத்தகைய அச்சுறுத்தல் வரும் என்பதை இந்திய அரசின் ஐ.பி. மற்றும் ரா அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு சொல்லவில்லையா…?
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர். இவர் வெளியுறவுத்துறை செயலராக சீனாவில் மட்டும் 7 அல்லது 8 வருடங்கள் பணியாற்றி இருக்கிறார். இவருக்கு எத்தனை தகவல்கள் வந்து கொட்டியிருக்கும். அவருக்கு, இதைவிட முக்கியமான பணி காத்திருந்தது.
ஜனவரி முதல் பிப்ரவரி வரை கேரளா, மகாராஷ்டிரா, ஆக்ரா, ஜெய்ப்பூர் என கொரோனா தாக்கப்பட்டவர்கள் எல்லாருமே வெளிநாட்டிலிருந்து வந்த இந்தியர்கள். அல்லது சுற்றுலா வந்த வெளிநாட்டினர்.
இது போதாதா…? வெளிநாட்டிலிருந்து வரும் இந்தியர்களோ அல்லது சுற்றுலா பயணிகளோ தான் கொரோனாவை பரப்புகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள.
என்ன செய்திருக்க வேண்டும்…. இந்திய அரசு?
பிப்ரவரி 15-ம் தேதியிலிருந்தே மத்திய அரசு , கொரோனாவை எதிர்க்க தயாராகி இருக்க வேண்டும்.
இந்தியாவுக்கு வரும் சர்வதேச விமானங்களை இறக்குவதில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்க வேண்டும்.
 முதலில் சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என்று தடை விதித்திருக்க வேண்டும்.
#அடுத்து,
சர்வதேச விமானங்கள் மூலம் இந்தியர்களே இந்தியாவுக்குள் வரவேண்டும் என்று அறிவித்திருக்க வேண்டும்.
 மூன்றாவது :சர்வதேச விமானங்கள் டெல்லி, மும்பை, கொல்கட்டா, ஐதராபாத், சென்னை ஆகிய ஐந்து விமான நிலையங்களில் மட்டுமே தரையிறங்க முடியும் என்று அறிவித்திருக்க வேண்டும்.
இந்த ஐந்து விமான நிலையங்களில் வந்து இறங்கும் அத்தனை பேரையும் ராணுவ முகாம் போல இயங்கும் மையத்துக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அங்கேயே 21 நாட்கள் தங்க வைத்து சிகிச்சை முடிவில், கொரோனா இல்லை என்ற உறுதியின் பேரில் அவர்களது வீட்டுக்கு அனுப்பி இருக்க வேண்டும்.
இப்படி அறிவித்திருந்தால், இந்நேரம் கொரோனாவின் தாக்குதலை பாதி முறியடித்திருக்கலாம்.
சரி என்னதான் செய்து கொண்டிருந்தார்கள் மோடியின் அதிகாரிகள்…
யாருக்குமே கொரோனா குறித்த விவரமும் அச்சமும் தெரியாதா…
தெரியும்…. இருந்தாலும் அதை விட முக்கியமானதுக்கு
அவர்கள் துடித்துக்கொண்டிருந்தார்கள்.
குறிப்பாக, இந்திய வெளியுறவுத்துறையின் புலி அமைச்சர் ஜெயசங்கர் துடித்துக்கொண்டிருந்தார்…
அவர் மட்டுமல்ல…
ஜனவரி முதல் பிப்ரவரி வரை மோடியும் அவரது ஒட்டுமொத்த அதிகாரிகளும் துடித்துக்கொண்டிருந்தது யாருக்காக…
அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்காக….
அவர் பிப்ரவரி 24-25ம் தேதிகளில் இந்தியா வருகைக்காக ஒரு மாதமாக இந்திய அரசும், இந்திய அதிகாரிகளும் இரவு பகலாக வேலை பார்த்தார்கள்.
ஒன்றுக்கும் உதவாத கிரிக்கெட் மைதானத்தை சீரமைத்தார்கள்.
ஏழைகள் வசிக்கும் சேரிக்கும் சீமான்கள் வசிக்கும் பகுதிக்கு இடையே சுவர் எழுப்பினார்கள். அதாவது, அகமதாபாத் குடிசைப்பகுதிகளை டிரம்ப் கண்ணிலிருந்து மறைக்க, 80 கோடி ரூபாய் செலவில் தடுப்புச் சுவர் கட்டினார்கள்.
அமெரிக்க அதிபர் வந்து சென்றதுமே மார்ச் 1ம் தேதியாவது இது போன்ற பணிகளை முடுக்கிவிட்டார்களா?
இல்லையே!
இந்தியாவின் முதல் கொரோனா பலி மார்ச் 12.
அதன் பிறகாவது மோடியின் அதிகாரிகள் துடித்தார்களா…. இல்லையே.
என்ன மாதிரியான விளைவுகள் வரலாம் என்று மோடிக்கு அவர்கள் ரிப்போர்ட் கொடுத்தார்களா என்றால்… யாருக்கும் தெரியாது.
திடிரென…. நம் மன்னர் மோடி வியாழக்கிழமை அதாவது 19.3.20 அன்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சிகளில் தோன்றினார் .
’’வரும் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு…. வீட்டிலேயே இருக்க வேண்டும். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை எங்கேயும் செல்ல வேண்டாம். மாலை 5 மணிக்கு டாக்டர்களை பாராட்ட, கைத்தட்டுங்கள்’’ என்றார்.
ஆனால், 19-ம் தேதியே மோடி ஒரு விஷயத்தை தெளிப்படுத்தி இருக்க வேண்டும்.
இனி வரும் நாட்களில் தொடர் ஊரடங்கு உத்தரவு வரலாம்…
அனைவரும் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும்.
இதற்கு தேதி குறித்துவிட்டாகிவிட்டது.
அந்த நாள்………24.3.20 – செவ்வாய்க்கிழமை.
அதற்குள் உங்கள் சொந்த ஊருக்கு செல்பவர்கள் செல்லலாம்.
இந்தியாவில் இருக்கும் அனைத்து ரயில்களும் இலவசமாக இயக்கப்படும்.
மாநிலங்கள் பஸ்கள் இலவசம்.
அதுமட்டுமில்லை…. வருடம் 1 லட்சம் வருவாய்க்கு கீழே இருப்பவர்களுக்கு…..
இன்று முதல் (19ம் தேதி) 24ம்தேதிக்குள் 3 ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் சேர்ந்துவிடும். அதை வைத்து தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டு, வீட்டுக்குள்ளே அடைந்துகிடக்க வேண்டும் என்று சொல்லி இருக்கலாம்.
ஆனால், எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல், 24ம்தேதி இரவு 8 மணிக்கு தோன்றினார்.
’’இன்று இரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு’’ என்றார்.
எத்தனை மக்கள் அடித்துப்பிடித்து பஸ்களில் ஊர்ப் போய் சேர்ந்தார்கள். அக்கொடுமைத்தான் பார்த்தோம்.
24-ம்தேதி இரவு அவர் அறிவித்த 21 நாள் முடக்கத்தில், இந்தியா முழுவதும் சரக்கு லாரி ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர்கள் –கிளினர்களின் உயிர் என்ன கிள்ளுக்கீரையா….’
ஒரு உயிர் கூட போகக்கூடாது என்று மனமுருக பேசினீர்களே..
அவர்கள் எப்படி ஊர் போய் சேருவார்கள். அல்லது அந்தந்த மாநிலங்களில் சரக்குகளை இறக்கிவிட்டு, அவர்கள் தங்க அந்தந்த மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்துப் பார்த்தீர்களா…?
மக்கள் நன்மை செய்ய வேண்டிய பணியில்
ஏதோ பாகிஸ்தான் மீது தொடுத்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் போலவே தாக்குதல் நடத்தப்படுகிறது.
ஒரு நாள் இரவில் பழைய ரூபாய் நோட்டுக்கள் ரத்து என்று சொல்வது போலவே செயல்படுகிறது….
130 கோடி மக்களின் நலன் காக்க வேண்டிய செயல்திட்டங்களில் என்ன செய்திருக்க வேண்டுமோ அத்தனையும் மோடியின் அதிகாரிகள் செய்யவில்லை….
இது யார் தவறு….?
மோடியின் அதிகாரிகள் தவறா….
ஒரு வேளை அதிகாரிகள் எடுத்துரைத்தும் மோடி அவர்கள்
கண்டும் காணாமல் இருந்தாரா….?
இனி ஒரு வைரஸ் இது போன்று தாக்குதலை எந்த நாட்டில் தொடங்கினாலும்…
இந்திய குடிமக்களை கூட காப்பாற்ற வேண்டாம்…
மோடியையும் மோடி சுற்றி, இந்தியாவின் நலனையே சிந்தித்துக் கொண்டிருக்கும் அதிகாரிகளை காப்பாற்றிக்கொள்ளவாவது அந்த அதிகாரிகளிடமே
நல்ல நடிவடிக்கைகளை எடுக்க வேண்டுமாய்
கோரிக்கை வைக்கிறோம்.
வாழ்க மோடி அவர்கள்….
வாழ்க மோடியின் அதிகாரிகள்….
நன்றி : க.குபேந்திரன்(பத்திரிகையாளர்)

டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன் Ph.D. கொரோனா வைரஸ் ஆய்வாளரின் தெளிவான விளக்கம் !!


Dr. Pavithra Venkatagopalan Explains About Corona Virus (COVID-19 ...கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்யும் டாக்டர் பவித்ரா என்பவரின் நேர்காணலைப் பார்க்க நேர்ந்தது. கேள்விகளுக்கு மிகத் தெளிவாகப் பதில் அளித்திருந்தார். அந்த வீடியோவைப் பகிரலாம் என்று நினைத்திருந்தேன். நண்பர் ஸ்ரீகாந்த் சத்யநாராயணன், அந்த நேர்காணலின் சாரத்தை கேள்வி பதில்களாகத் தொகுத்துப் பதிவு எழுதியிருந்தார். எனவே, அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, அப்படியே பகிர்கிறேன். அனைவருக்கும் சென்று சேர வேண்டிய விஷயம் இது. (நேர்காணலின் வீடியோ இணைப்பு முதல் கமென்ட்டில்.

*டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D. கொரோனா வைரஸ் ஆய்வாளர்.எல்லா வதந்திகளையும் மூட்டை கட்டி தூக்கிப் போட்டு விட்டு 2006-2012 வரை கொரோனா வைரஸில் Ph.D செய்த சயின்டிஸ்ட் ஆன அவரிடமிருந்தே அறிந்து கொள்ளுங்கள். நேர்காணலின் தமிழின் எழுத்துத் தொகுப்பு மட்டுமே என்னுடையது.

முதலில் நல்ல செய்திகள் —
• COVID-19 பாதிக்கப் பட்டால் நூற்றில் 97 சதவிகிதம் குணமாகி உயிர் பிழைக்கும் வாய்ப்பு.
• 1950லேயே கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் குடும்பத்தின் புதிய வைரஸ்தான் இது. அவ்வளவே.
• இதற்கு முன்னும் மனிதர்களைத் தாக்கி இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் மனிதர்களில் வரும் மூன்றில் ஒரு பங்கு சளிக் காய்ச்சலுக்கு கொரோனா வைரஸே காரணம்.
• எல்லா விலங்கிலும் கூட கொரோனா வைரஸ் இருக்கிறது.
• சபீனா சோப்பில் கை கழுவினால் கூட போதுமானது.
• பொதுமக்களுக்கு முகமூடிகள் தேவையில்லை. (மருத்துவ, சுகாதாரப் பணியில் ஈடுபடுகிறவர்களுக்குத்தான் வேண்டும்). பாதிக்கப்பட்டவர்கள் சரியான முறையில் பயன்படுத்தத் தெரிந்தால் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
• குழந்தைகளிலும், கர்ப்பிணிப் பெண்களிலும் பாதிப்பின் வீரியம் குறைவே.
• ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் உயிர் பிழைக்கும் சதவிகிதம் மிக அதிகம் (99.1%).
• உலகில் மருந்து கண்டுபிடிக்க முடியாத பல வியாதிகள் இருக்கின்றன. குறிப்பாக டெங்கு. எனவே கொரோனாவிற்கு கூடுதல் அச்சம் தேவையில்லை.
• சிகிச்சை என்பது பாதிப்பைப் பொறுத்தது; நோயைப் பொறுத்தது அல்ல. எனவே நடைமுறையில் உள்ள சிகிச்சைகளே போதுமானது.
• நாய், பூனை, பறவைகள் வைத்திருப்பவர்கள் பொதுவான சுகாதாரத்தைப் பின்பற்றினாலே போதும். செல்லப் பிராணிகளுக்கு என்று குறிப்பாக பாதுகாப்பு எதுவும் தேவை இல்லை.
• பாதிக்கப் பட்டவர்களிலும் 15% பேருக்கு மட்டுமே ICU, Ventilator தேவைப் படும்.
• பதற்றம் தேவையே இல்லை.
இப்போது புரளிகளைப் பற்றிப் பார்ப்போம்.
• புரளி நம்பர் 1 - வெய்யிலில் வராது.
— வெய்யிலில் கண்டிப்பாக வரும். வெயிலில் காற்றில் ஈரத்தன்மை சற்று அதிகம் இருக்கும். எனவே, பரவும் வேகம் குறைவாக இருக்கலாம். குளிர் காலத்தில் காற்று சற்று காய்ந்து இருக்கும். பரவுதல் சற்று எளிது. அதுவே வித்தியாசம்.
• புரளி நம்பர் 2 - மாமிசம் தின்றால் வரும்.
— ரசத்திலிருந்து மட்டன் பிரியாணி வரை எதை வேண்டுமானாலும் உண்ணலாம். எதைத் தின்றாலும் சுத்தமான தண்ணீரில் சமைத்துச் சாப்பிடுங்கள். சமைத்த உணவில் வைரஸ் பிழைக்காது.
• புரளி நம்பர் 3 - நிறைய தண்ணீர் குடித்தால் வராது.
— தேவையான தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது. எந்த நோயையும் எதிர்த்துப் போராடுவதற்கு உடலுக்கு கூடுதல் பலம் கிடைக்கிறது. மற்றபடி, கொரோனா தாக்குதலுக்கும், தண்ணீர் குடிப்பதற்கும் தொடர்பு இல்லை.
• புரளி நம்பர் 4 - இளவயதினருக்கு வராது.
— வயது வித்தியாசமின்றி எல்லாரையும் தாக்கும், ஆனால் வயதானவர்கள், மற்ற உடல் உபாதைகளுக்கு ஆளானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் ஆகியோருக்கு பாதிப்பு அதிகம். (குறிப்பாக, Diabetes, HBP, Transplant candidates, Cancer patients etc.,)
• புரளி நம்பர் 5 - கிராமங்களில் வராது.
— காற்று இருக்கும் எல்லா இடங்களிலும் பரவும். கொரோனாவிற்கு நகரம் கிராமம் என்ற வித்தியாசம் எல்லாம் தெரியாது.
• புரளி நம்பர் 6 - மாற்று மருந்துகளில் குணமாகும்.
— எந்தவொரு நோய்க்கும், எந்தவொரு மருந்தும் சந்தைக்கு வருவதற்கு முன், நோயைக் கட்டுப்படுத்தும் அதன் தன்மைக்காகவும், அது பாதுகாப்பானதா என்பதற்காகவும் சோதனை செய்யப்பட்ட பிறகே பரிந்துரைக்கப்படும். கொரோனாவைப் பொறுத்தவரையில், இன்று வரை எந்த மருத்துவத்திலும், பரிசோதிக்கப்பட்ட எந்த மருந்தும் கிடையாது. கொரோனாவிற்கு அப்படி ஒரு மருந்து வர இன்னும் பல மாதங்கள் ஆகலாம். எனவே அறிகுறிகள் இருந்தால், எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரைப் பாருங்கள். உயிரிழப்பைத் தவிருங்கள்.
• புரளி நம்பர் 7 - அறுபது வயதிற்கு மேற்பட்ட சீனர்களை முடித்துக் கட்ட சீனா உருவாக்கிய வைரஸ்.
— இது அறிவியல் கூடத்தில் உருவாக்கப் பட்ட வைரஸ் அல்ல. GENOME SEQUENCE கொண்டு விலங்கிடமிருந்து எந்த நாளில் மனிதனுக்கு கடத்தப் பட்டது என்பது வரை மிகத் தெளிவாக ஆராய்ந்து கண்டு பிடித்து விட்டார்கள்.
• புரளி நம்பர் 8 - கொரோனா வைரஸ் இருப்பவர்களைக் கடந்து சென்றாலே நமக்கும் வந்து விடும்.
— வராது. நம் மேல் இருமினாலோ, தும்மினாலோ, அவர்களின் எச்சில் விரவி இருக்கும் காற்றை நாம் சுவாசித்தாலோதான் நம்மைத் தாக்கும். அவர்களின் எச்சில் பட்டு ஒரு இடம் காய்ந்து விட்டால், அந்த இடத்தை நாம் தொட்டாலும் வராது.
விழிப்புணர்வுத் தகவல்கள்
• அறியாமை நம்பர் 1 - முகமூடி அணிந்து விட்டால் கை கூட கழுவ வேண்டாம்.
— முதலாவதாக, முகமூடி அணியத் தேவையில்லை. அணிந்தால் சரியாக அணிய வேண்டும். அணிந்தாலும் 4-6 மணி நேரங்களுக்கு ஒரு முறை புதிய முகமூடி அணிய வேண்டும். ஒரு வேளை அதற்கு முன் மாஸ்க்கை வெளிப்புறமாக வடிகட்டியில் தொட்டு விட்டால் தூக்கி எறிந்து விட்டு புதிய மாஸ்க் அணிய வேண்டும். மாஸ்க் அணிந்தாலும் கை கழுவ வேண்டும்.
• அறியாமை நம்பர் 2. பூண்டு, இஞ்சி, மிளகு சாப்பிட்டால் வராது.
— இவற்றையெல்லாம் சாப்பிட்டாலும் கொரோனா வைரஸ் வரும். மேலும், பூண்டு அதிகமாக பச்சையாயகச் சாப்பிட்டால் தொண்டையில் inflammation வரும். எச்சரிக்கை. Magic ஆன எந்த காய்கறிகளும், பழங்களும் இல்லை.
• கொரோனா வைரஸ்க்கு பயப்பட வேண்டுமா?
- புது வைரஸ். பின்னால் வருத்தப்படுவதை விட இப்போதே பாதுகாப்பாக இருப்பது நல்லது.
- காற்றில் பரவும் வைரஸ். நேரடித் தொடர்பைக் குறைப்பதன்மூலம் கட்டுப்படுத்த வாய்ப்புகள் அதிகம்.
- பாதிக்கப்பட்ட ஒருவர் 2 மீட்டர் தூரத்திற்கு ஒன்றிலிருந்து மூன்று பேர் வரை ஒரே சமயத்தில் பரப்ப முடியும்.
- பாதிக்கப்பட்டவர்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் பரவலின் வீரியத்தைக் குறைக்க முடியும்.
- தனக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை தனிநபரால் தெரிந்து கொள்ள முடியாது.
- பரிசோதிப்பதற்கு Proper Test Kit வேண்டும். Inaccurate test kit = Inaccurate results.
• ஏன் இவ்வளவு பதற்றம்?
புது வைரஸ். பரவும் வேகம் அதிகம். மேலும் கடந்த காலங்களை விட நாம் பயணிப்பதும், பொதுவில் ஒன்று கூடுவதும் அதிகமாகி விட்டது. சமூக வலை தளங்கள். 99.5% புரளிப் பரிமாற்றங்கள்.
• என்ன செய்ய வேண்டும்?
1. தனிப்பட்ட சுகாதாரம்.
முடிந்த வரை அடிக்கடி கை கழுவுங்கள். குறைந்த பட்சமாக சாப்பாட்டிற்கு முன், பின். கழிவறைக்குச் செல்லும் முன், பின். வெளியில் இருந்து வந்தால், அழுக்கான இடங்களைத் தொட்டால். இது அனைத்தும் பொதுவாகவே நமக்கு கற்றுக் கொடுக்கப் பட்ட விஷயங்கள் தான். கொரோனா special இல்லை.
2. கூட்டம் தவிருங்கள்.
• முக்கியமாக எதை செய்யக் கூடாது.
வதந்திகளைப் பரப்பாதீர்கள்.
வதந்திகளைப் பரப்பாதீர்கள்.
வதந்திகளைப் பரப்பாதீர்கள்.

நன்றி :
டாக்டர் பவித்ராவேங்கடகோபாலன்Ph.D. 
கொரோனா வைரஸ் ஆய்வாளர்.

தொகுப்பு  : அ. தையுபா அஜ்மல்.

Friday 27 March 2020

கொரோனா நுண்ணுயிரிக்கெதிரான போர் ஒன்றுதான் விழிப்புணர்வு !!

நாம் போலீசாரின் லத்தி அடிகளும், வாட்சப் வாயர்களின் அதிபுத்திசாலித்தனமான அறிவுரைகளும் அலட்சியமாக இருந்த பல ஆயிரம் பேர்களை ஏதோ வகையில் விழிப்புணர்வு கொள்ள வைத்திருக்கிறது !
கிராமங்களில் எல்லோர் வீடுகளிலும் மஞ்சள் தண்ணீரும் வேப்பிலையும் இடம் பிடித்திருக்கிறது. இவை எந்த அளவிற்கு வைரஸை கட்டுப்படுத்தும் என்பது நிரூபிக்க முடியாமல் போனாலும் கொரோனாவிற்கு எதிரான இந்த விழிப்புணர்வு நம் மக்களை நிச்சயம் காக்கும் !
பைக்குகளில் செல்வோரும் மாஸ்க் அணிந்து செல்கிறார்கள் ! அது அவசியமில்லை என்ற அறிவு ஜீவித்தனமான அறிவுரைகள் தேவையில்லை !
மாநில நோய் பாதுகாப்பு என்ற நிலையில் இருந்து 'ஊர்' 'தெரு' என்று இப்போது மாறியிருக்கிறது. உள்ளூர் தையல்காரர்கள் தெரு முழுவதும் உள்ளவர்களுக்கு 'துணி மாஸ்க் ' தைத்து கொடுக்கிறார் எல்லோரும் அதை அணிந்து கொண்டுதான் வெளியில் வருகின்றனர் என்பது மகிழ்வான செய்தியாக பார்க்கலாம்.
உலக நாடுகள் முழுமைக்கும் நுண்ணுயிரிக்கெதிரான போர் ஒன்றுதான்! ஆனால் வல்லரசுகள் எதிர்கொள்வதற்கும் பொருளாதாரம்,கல்வியறிவு என்று பின் தங்கிய நாடுகள் எதிர்கொள்வதற்கும் வேறுபாடுகள் இருக்கின்றது !
எந்த வகையிலும் போரில் வென்றாக வேண்டிய கட்டாயம் எந்த சூழலில் உள்ள நாடுகளுக்கும்!
இந்தியாவில் இத்தனை கோடிகள் மக்கள் தொகை பெருகியிருக்கிறது எனில் இயற்கை துணை புரியாமல் சாத்தியப்பட்டிருக்காது !
நம் பாரம்பரிய உணவுமுறையும், 'தினம் குளியல்,கந்தையானாலும் கசக்கி கட்டு என்ற பழக்கவழக்கங்களும்', இயற்கை மருத்துவ முறைகள் குறித்த விழிப்புணர்வும் கொரோனாவோடு சேர்ந்தே வளர்ந்திருக்கிறது எனலாம். நம் உணவுப்பழக்கத்தில் உள்ள 'மருந்தே உணவு என்பது' இனி மெய்யாகும்!
நம்மாபெரும் ஜனத்தொகையின் அடிப்படையில் கணக்கிடும்போது வளர்ந்த அதீத சுகாதாரம் பேணும் நாடுகளை விட இந்தியாவில் கொரோனா தொற்று சற்று குறைவாக இருப்பதன் காரணம் பொதுவாகவே இந்தியர்களின் நோய்தாங்கும் திறன் அதிகமாக இருப்பதுதான். தெருப்புழுதிகளிலும், காடுகறைகள், நீர்நிலைகள் என அக்காலத் தலைமுறை விளையாடிய லக்கோரி, ஐஸ்பாய், காக்கா ஆட்டை, என தெருவில் உருண்டு புரண்ட தலைமுறையின் ஆரோக்கியமே அதற்கு சிறந்த உதாரணம். சுகாதாரத்தையும், ஆரோக்கியத்தையும் குழப்பிக் கொள்ளாத தலைமுறை அது. பின் அடுத்த தலைமுறையில் தொலைக்காட்சித் திரைகளிலும், மருத்துவக் கட்டுரைகள் வாயிலாகவும் சுகாதாரம் ஆரோக்கியத்திற்கான நிபந்தனையான போது இளம் தலைமுறையினரின் மருத்துவமனை வருகையும் அதிகரிக்கத் துவங்கியது. உபவிளைவாக சாதாரண சளி, இருமல், தலைவலிக்கு கூட மிகவும் பிரயாசைப்படும் உளவியலும் தோற்றுவிக்கப்பட்டது. சிறுவர், சிறுமியருக்கு இயல்பான விளையாட்டுகளின் மூலம் கிடைக்க வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தி, உடல் வலிமை, யாவும் பத்துக்கு பத்தடி அறையில் அவர்களுக்கு மாத்திரை வடிவிலும், திரவங்களின் வாயிலாகவும் நிபந்தனையாக்கப்பட்டன. நோயைக் கண்டு அஞ்சத்தொடங்கிய அடுத்த தலைமுறையின் இளம் தம்பதியினர் குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு சாதாரண சளி, இருமலுக்கே பதற்றப்படத்துவங்கி, ஆலோசனைக்கோ, உதவிக்கோ பெரும்பாலும் யாருமற்ற நகர்மய வாழ்வியல் அவ்விளம் தம்பதியினரை கை வைத்தியம் ஏதுமற்று மருத்துவமனைக்கே செலுத்தியது. இதற்கு பலியாக்கப்பட்டிருப்பது
இக்கால நவதலைமுறையினரின் நோய் தாங்கும் திறன்தான். நிச்சயம் நமக்கென பாரம்பரிய மருத்துவமுறை இருக்கிறது. மருந்துகளூம் இருக்கின்றது. இன்றைய வாழ்வியலுக்கு சற்று தொடர்பற்று இருக்கின்ற காரணத்தாலும், ஒரு அவசர காலத்திற்கு அது ஏற்புடையதல்ல என்ப தாலும், சில சுயநல போலிகள் இஷ்டத்திற்கு உளருவதை வைத்தும் ஒரு பெரும் மரபு சார் மருத்துவமுறையை நாம் இழிவு படுத்தலாகாது. அது நமது பண்பாட்டு வாழ்வியலை நாமே அவதூறு சொல்வதாகவே முடியும்.

'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி ' எந்த சூழலிலும் தம்மை தகவமைத்துக் கொண்டு உயிர் வாழும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உண்டு..

ஆக்கம்  : மு.அஜ்மல் கான்.

மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கு ஒரு கடிதம் !!

தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பரப்பப்படும் வெறுப்பினைக் குறித்து நேற்று காலை என்  நண்பன் ஒரு கடிதம் வரைந்தான். அதை தமிழக முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்காக சிஎம் செல்லில் பதிய நினைத்தான். உமாநாத், ஒடியன் ஆகியோருக்கும் அந்த அஞ்சலைக் காட்டினான். ஆனால் பல முறை முயற்சி செய்தும் தமிழில் எழுதியதை பதிவேற்றவே முடியவில்லை. எனவே நேற்று மதியம் முதல்வருக்கு மின்னஞ்சலில் அனுப்பினான்.
tamil nadu, CM Palanichami, Edappadi K Palanichami, birthday, PM ...தீண்டாமையைவிட மோசமான சமூக விலக்கம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. வருகிற தகவல்களும் வீடியோக்களும் அச்சம் தருகின்றன. எனக்கு வந்த வீடியோவை நான் இங்கே பகிர விரும்பவில்லை.
அனைத்து எதிர்க்கட்சிகளும் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காமல் பிரச்சினையின் தீவிரத்தைத் தணிக்க முடியாது.
என்  நண்பன் அனுப்பிய கடிதம் கீழே !!

மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கு வணக்கம்,
கொரோனா வைரஸ் நாடெங்கும் பரவத் துவங்கியிருக்கிறது. இதர நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் குறைவுதான். 21 நாள் ஊரடங்கு காரணமாக தொற்றின் வேகம் குறைவாகவே இருக்கிறது.
இப்போது ஏற்பட்டிருக்கிற தொற்றுகளுக்கு தில்லியில் நடத்தப்பட்ட தப்லிக் ஜமாத் கூட்டத்தில் வெளிநாட்டவர்கள் பங்கேற்றதும், அவர்களிடமிருந்து தொற்று பரவியதும் முதன்மைக் காரணமாக உள்ளது. இந்தத் தொற்றுகளால் பெரிய அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றாலும் தொற்று பரவியது உண்மைதான். தமிழ்நாட்டிலிருந்து சென்ற 1500 பேரில் 1480 பேரும் பரிசோதனக்கு வந்து விட்டார்கள் என்று தமிழக அரசின் சுகாதாரச் செயலர் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் இது இஸ்லாமியருக்கு எதிரான மதவெறுப்புப் பிரச்சாரமாக மாற்றப்பட்டு வருகிறது. கொரோனா வைரசுக்கு மதச்சாயம் பூசப்படுகிறது. இதன் விளைவுகள் கடுமையாக வெளிப்பட்டு வருகின்றன.
சில இடங்களில், இஸ்லாமியர் கடைகளில் வாங்காதீர்கள் என்ற வெறுப்புப் பிரச்சாரம் நடைபெறுகிறது. சில இடங்களில் இஸ்லாமியரைக் கண்டாலே ஒதுங்கிப் போவது, வரிசையில் நிற்பவர்களை கடைசியாக நிற்குமாறு சொல்வது போன்ற தீண்டாமை வழக்ககங்கள் புதிதாகப் பிறந்திருக்கின்றன. எந்தச் செய்திகளையும் உண்மைத்தன்மை சரிபார்க்காமல் வாட்ஸ்அப் போன்றவற்றில் அப்படியே பரப்பிவிடும் பொறுப்பற்ற செயல்களால், இதுபோன்ற மதவெறுப்புப் பிரச்சாரங்கள் தீயாகப் பரவிக்கொண்டிருக்கின்றன.
இத்தாலிக்குச் சென்று திரும்பிய சீக்கிய மதகுரு ஒருவரால் பஞ்சாபில் கொரோனா பரவியது. ஆனால் சீக்கியர்களின் காரணமாகப் பரவியது என்று யாரும் சொல்லவில்லை. இத்தாலியில் கிறித்துவ தேவாலயங்களின் வாயிலாகப் பரவியதால் தேவாலயங்கள் மூடப்பட்டன. ஆயினும் கிறித்துவர்களால் பரவியது என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் இந்தியாவில் மட்டும் நோயிலும்கூட மத அரசியல் தலைவிரித்தாடுகிறது. ஏதோ இஸ்லாமியர்களால்தான் பரவியது, அதுவும் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது என்பது போன்ற மோசமான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது.
கொரோனா விஷயத்தில் ஒரு மதத்தினரைக் குற்றம் சாட்டிப் பேசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் மாண்புமிகு எடியூரப்பா கடுமையாக எச்சரித்திருக்கிறார். தெலங்கானா முதல்வர், இதனை மதரீதியாகப் பார்கக்கூடாது என்று எச்சரித்திருக்கிறார். கேரள முதல்வரும் தொடர்ந்து எச்சரித்து வந்திருக்கிறார்.
தமிழ்நாடு எப்போதும் மதநல்லிணக்கத்தின் உதாரணமாகத் திகழ்ந்து வருகிறது. எல்லா மதத்தினரும் சகோதர உணர்வுடன் பழகும் பாங்கினை வேறெந்த மாநிலத்தைவிட தமிழ்நாட்டில்தான் காண முடியும். அப்படியிருக்கையில், அரசியல் காரணங்களுக்காக வதந்திகளையும் பொய்களையும் பரப்பும் மிகச்சிலரால் தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்கத்துக்கு ஆபத்து வந்து விடாமல் காப்பது நம் அனைவரின் கடமையாகிறது.
ஆயினும், ஊரடங்கு நேரத்தில், மக்கள் வெளியே செல்ல முடியாத நேரத்தில் தனிநபர்களால் இந்தக் கடமையை நிறைவேற்ற முடியாது. இதனை அரசாங்கம்தான் செய்ய முடியும்.
எனவே, நோய்த் தொற்றுக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை. நாம் போராட வேண்டியது நோய்க்கு எதிராகத்தானே தவிர நோய்க்கு ஆளானவர்களுக்கு எதிராக அல்ல, ஏதேனும் ஒரு மதத்தினருக்கு எதிராக அல்ல. நாம் எல்லாரும் ஒன்றுபட்டுச் செயல்பட்டால்தான் இந்தக் கொடிய நோயிலிருந்து தப்பிக்க முடியும். என்பதைத் தெளிவுபடுத்தும் வகையிலும், பொய்ச் செய்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கவும் முதல்வராகிய தாங்கள் ஓர் அறிக்கை வெளியிட வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
லாக் டவுன் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் மக்களால் மிகவும் பாராட்டப்படுகின்றன. முதல்வரின் சொல்லுக்கு மக்கள் மிகுந்த முக்கியத்துவம் தருகிறார்கள். சோதனையான இச்சூழலில் முதல்வர் தலையிட்டு வதந்திகளை நிறுத்தச் செய்வது மட்டுமே தமிழ்நாட்டில் எப்போதும் சமூக நல்லிணக்கம் நிலைபெறச் செய்யும்
ஆகவே, முதல்வர் அவர்கள் இதுகுறித்து தீவிரமாக சிந்தித்து மதவெறுப்புப் பிரச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
*
பதிவைப் பகிர விரும்புவோர் டேக் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பெயர் குறிப்பிட்டும், குறிப்பிடாமலும் காபி பேஸ்ட் செய்யலாம். தமிழக அரசின் கவனத்துக்கு இது செல்ல வேண்டும் என்பதே முக்கியம்.

Thursday 26 March 2020

கொரோனா வைரஸ் குறித்த முழுமையான ஆன்மீக தீர்வை முன்னிறுத்த முயற்சிப்போம்

 " இஸ்லாத்தின் பார்வை" என்ற தலைப்பில் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் கட்டுக்கடங்காமல் வந்து கொண்டு இருக்கின்றன. பெருவாரியான இந்த எழுத்துக்களும் பேச்சுக்களும் இஸ்லாமிய தீர்வின் ஒரு பகுதியை மட்டும் முன்னிறுத்துவதை பார்க்க முடிகிறது.



உலகளாவிய இன்றைய உம்மத்தின் கல்விமுறையில் ஏற்பட்ட கோளாறு உம்மத்தை அறிவு ரீதியாக ஊனமுற்றவர்களாக மாற்றியிருக்கிறது என்பதை வரலாற்று தொடர்போடு சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
  • " கொள்ளை நோய் பரவிய இடத்தை விட்டு வெளியேறாதீர்.அந்த இடத்திற்குள் புதிதாக யாரையும் அனுமதிக்காதீர் "


இது கொள்ளை நோயிலிருந்து ஒரு சமூகம் அல்லது ஒரு நாடு தன்னை எப்படி தற்காத்து கொள்வது (Precautionary) என்பதற்கான நபி (ஸல்) அவர்களின் சமூகவியல் (Sociological) வழிகாட்டல்.
  • " நோயினால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அல்லாஹ்விடம் அதிகம் அதிகம் பாவமன்னிப்பு தேடுங்கள்"


 இது மனித உள்ளத்தை தூய்மைபடுத்தி அதை மரணத்தோடு தொடர்புடையதாக உயர்த்தி விதியின் மீது ஆழ்ந்த பிடிப்பை ஏற்படுத்திடும் நபி (ஸல்) அவர்களின் ஆன்மீக (Spiritual) வழிகாட்டல்.
  • " எந்த நோயாக இருந்தாலும் அதற்கு மருந்து எடுத்துக்கொள்ளுங்கள்"


இது மனித உடலின் படைப்பு இயல்புக்கேற்ப நபி (ஸல்) அவர்களின் பகுத்தறிவு ரீதியான உயிரியல் (Biological) வழிகாட்டல்.
  • " அல்லாஹ்வின் அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள்! எந்த நோயையும் அதற்குரிய மருந்தில்லாமல் அல்லாஹ் இறக்கவில்லை "
இது நபி (ஸல்) அவர்கள் மருத்துவக் கல்வி கற்பதையும் அதில் ஆய்வுகள் மேற்கொள்வதையும் அல்லாஹ்வின் மருந்துகளை கொண்டு அறமாக மருத்துவம் செய்வதையும் தூண்டிவிடும் மருத்துவ அறிவியல் (Medical Science) சார்ந்த மகத்தான அறிவுறுத்தல்.
மானுடத்தின் உடல்நலம் சார்ந்த துறையில்......ஒரு தனிப்பட்ட மனிதனுக்கான வழிகாட்டல் ஒரு அரசிற்கான வழிகாட்டல் மருத்துவக் கல்வியும் அதன் இலக்கும் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மக்களுக்கான வழிகாட்டல் இப்படி பல பரிமாணங்களை அல்குர்ஆனும் நபிகளாரின் வழிகாட்டுதலும் குறிப்பிட்ட இந்த துறையில் நமக்கு வெளிப்படுத்துகின்றன.
மட்டுமல்ல.... 
  • " மருந்தில்லாமல் நோயை அல்லாஹ் இறக்கவில்லை" 

என்ற நபி (ஸல்) அவர்களின் கருத்தை நாம் ஆய்வுக்குட்படுத்தினால்......  கடல் மலை காடுகள் பாலைவனம்  என நிலப்பரப்பால் பரந்து விரிந்து கிடக்கும் பூமியில் ஆங்காங்கே வாழும் மக்களை பீடிக்கும் நோய்களுக்கான மருந்தை அந்தந்த நிலத்திலேயே அல்லாஹ் படைத்துள்ளான் என்பதை நமது சிறிய அறிவால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
அப்படியென்றால் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் வாழும் நமக்கு உண்டாகும் நோய்களுக்கு அந்தந்த மண்ணிலேயே மருந்து இருக்கிறது என்பதை நாம் உறுதியாக நம்ப வேண்டும்.அவற்றை ஆழமான ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்து நம்மோடு வாழும் சக மக்களுக்கு வழங்க வேண்டிய ஈமானிய பொறுப்பை நாம் சுமக்கிறோம் என்பதை நாம் உணரவேண்டும்.
மத்திய காலத்தில் வாழ்ந்த இமாம் ஸஹராவி (936–1013), இமாம் இப்னு ஸீனா (980—1037), இமாம் அல் ராசி (1150 - 1210) , இமாம் இப்னு கய்யூம் (1292–1350) போன்ற ஆயிரக்கணக்கான மார்க்க அறிஞர்கள் உலகின் மாபெரும் மருத்துவ மேதைகளாகவும் திகழ்ந்துள்ளனர் என்பதை வரலாறு நமக்கு வகுப்பெடுக்கிறது.
வெறும் ஆன்மீக ரீதியான வழிகாட்டலிலேயே முடங்கி கிடப்பதும் அனைத்து சிக்கல்களுக்கும் அந்நியர்களின் அறிவை ஆய்வுகளை எதிர்பார்த்து நிற்பதும் இன்றைய உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.
அறிவு ரீதியான இந்த அடிமைத்தனத்திலிருந்தும் மருத்துவத்தில் நமது பொருளாதாரங்கள் கொள்ளை போவதிலிருந்தும் எதிர்கால தலைமுறையை காப்பாற்ற இன்றைய நமது கல்வி முறையில் தலைகீழ் மாற்றத்தை கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

Tuesday 24 March 2020

கொரோனா கொடுத்திருக்கும் எச்சரிக்கைகள் !! ஒரு பார்வை..


Coronavirus (COVID-19) - Alberta News and Information ...
கொரோனா கொடுத்திருக்கும் எச்சரிக்கைகள் என ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆச்சரியமானது.

ஆம் பெரும் எச்சரிக்கையினை உலகுக்குச் சொல்கின்றது

1950க்கு பின் வேகமாக மாறிய உலகிது அதுவும் 1990க்கு பின் பணமே பிரதானம் என்றாயிற்று, எப்படியும் சம்பாதி, சம்பாதித்து கொண்டாடு என்ற அளவு நிலமை மாறியது

குறிப்பாக இத்தலைமுறைக்கு பந்தபாசம், பக்தி , ஞானசிந்தனை என எதுவுமில்லை. அவர்களின் சிந்தனையும் மனமும் குணமும் பார்வையும் தேடலும் பணம், பணம், கொண்டாட்டம் என்ற நோக்கிலே இருந்தது

உலகின் உணவு முதல் எல்லா இன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற வெறியோடு இயங்கியது உலகம்,
அது பாசத்தை மறந்தது, கடமையினை மறந்தது, கடவுளை மறந்தது, பணம் எல்லாவற்றையும் காக்கும் என நம்பியது

இதோ மாநகரங்களின் இன்னொரு பக்கம்

ஆம் பப்கள் என இரவெல்லாம் குடியும் ஆட்டமும் பாட்டமுமான மையங்கள் காலியாய் கிடக்கின்றன,
மசாஜ் சென்டர் என்ற பெயரில் என்னவெல்லாமோ செய்த மையம் மூடி கிடக்கின்றது

மது குடி மையங்கள் மூடிக்கிடக்கின்றன,
மது ஆலைகள் சானிட்டைசர் தயாரிக்கின்றன‌

இளம் தலைமுறையிடம் பெரும் கலாச்சார சீர்கேட்டை விளைவித்த தமிழக திரையுலகம் மூடிக் கிடக்கின்றது, தாங்கள் கடவுளுக்கு நிகர் என கருதிய நட்சத்திரங்கள் மல்லாக்க கிடக்கின்றன‌

அவர்களை ஆட்டிவைத்த சக்திகள் அஞ்சி ஒடுங்கி இருக்கின்றன‌

ஐரோப்பிய நிலை இன்ன்னும் மோசம்

ஆயுத கம்பெனிகள் அடைபட்டு கிடக்கின்றன, போதை மருந்து பித்தர்கள் தனித்திருந்து தங்களைத் தாங்களே குணமாக்குகின்றனர்

அட குடிக்கவில்லை என்றால் சாகமாட்டோமா என சிந்திக்கின்றது குடிகார தலைமுறை

பியூட்டி பார்லர் செல்லாமல் மேக் அப் செய்யாமல் வாழமுடியுமா? அது சாத்தியமா அட ஆமாம் ஆமாம் என ஒப்புக்கொள்கின்றது மங்கையர் இனம்

அரை டவுசர் போடும் வெள்ளைக்காரி முதல் புடவைக்காய் சுற்றும் தமிழச்சி வரை எல்லா நாட்டு மங்கையருக்கும் அவரவருக்கான உண்மை தேவை புரிகின்றது

ஆடம்பரம்
ஆட்டம்பாட்டம்
வெட்டி பந்தா


நிலையா அழகு வற்றிவிடும் செல்வம் என பின்னால் ஓடிய கூட்டம் ஞானத்தை மெல்ல உணர்கின்றது

பணம் , பணம் என ஓடிய தாயும் தந்தையும் அருகிருக்க கண்டு மகிழ்கின்றது
மழலைக் கூட்டம்,

நெடுநாளைக்கு பின் தன் மக்கள் நலம் விசாரித்து ஊட்டிவிடுவதில் கண்ணீர் விடுகின்றது முதியோர் கூட்டம்

பாவகாரியங்கள் விலக்கப்படுகின்றன., பாவத்தின் கொண்டாட்ட மையங்கள் மூடப்படுகின்றன‌

தொழிற்சாலை இயக்கமில்லை, விமானமும் ரயிலும் இயக்கமில்லை என்பதால் காற்றின் தரம் உயர்ந்தாயிற்று

அண்டார்டிக்கா பனிப்பாறைகளுக்கு புது இறுக்கம் கிடைத்தாயிற்று

ஆட்டமும் பாட்டமுமாய் நான் காண்பதே உலகம், தெய்வம் எனக்கு கைகட்டி வழிவிடும் என சவால்விட்டவனை எல்லாம் அஞ்சி ஒடுங்கி துப்பாக்கி முனையில் அமர வைத்துவிட்டது காலம்

தனித்திருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஞானம் பிறக்கின்றது

உணவு முதல் தொழில்வரை தன் பாரம்பரியத்தை நினைத்து பார்க்கின்றான்,
எவ்வளவு தூரம் விலகிவிட்டோம் என்பதை உணர்கின்றான், உண்மையில் எது தேவை என்பது அவனுக்கு தெரிகின்றது

கொரோனாவினை அனுப்பிய சக்தி அதில் சிரிக்கின்றது

தன் திட்டம்/ கனவு/ வேகம்/ ஆசை/ எதிர்பார்ப்பு எல்லாம் கண்முன் உடைந்து அதெல்லாம் வெறும் மாயை என உணர்ந்து அடங்கி இருக்கின்றான் மனிதன்

பிரமாண்ட இயற்கை முன்னால் தான் தூசு என்பதும், நீர்குமிழி வாழ்வு எப்பொழுதும் உடையும் என்பதும் மானிடனுக்கு புரிகின்றது

அடங்கா யானையினை தனி செல்லில் பட்டினி போட்டு அடித்து வழிக்கு கொண்டுவரும் பாகனைப் போல மனிதனைக் கட்டிவைத்து பாடம் சொல்லிக் கொடுக்கின்றது காலம்

ஜல்லிகட்டு காளையாக வலம் வந்த அவனுக்கு சரியான மூக்கணாங்கயிறு போட்டு கட்டுகின்றது காலம்

தமிழகம் முருகப் பெருமானையும் அம்மனையும் ஒவ்வொரு வீட்டிலும் வணங்குகின்றது

ஐரோப்பாவோ எல்லாம் கோவில்களை காலியாக்கிய பாவம் என கண்களை துடைத்து ஆலயம் திறக்கும் நாளை எதிர்பார்கின்றது

சிரிய துருக்கி போர்,
சவுதி ஏமன் போர் கூட நின்றிருக்கின்றது, எல்லோருக்கும் பொதுவான காலம் அடிக்கும் அடியில் அடங்கி நிற்கின்றது
போர்வெறிக் கூட்டம் காலமோஇயற்கையோ
கடவுளோ அனுப்பிய கொரோனா மானிட சமூகத்துக்கு ஞானத்தின் எச்சரிக்கை. 
காலம் நினைத்திருந்தால் இதை விட கொடிய நோய் அனுப்பி மானிட சமூகத்தைச் சரித்து போட சில நாழிகை ஆகியிருக்காது

ஆனால் எச்சரிக்கின்றது, ஆம் இது எச்சரிக்கை, மானிட இனத்தை மெல்ல எச்சரிக்கின்றது காலம்

அதில் மெல்ல ஞானம் பெற்றுக் கொண்டிருக்கின்றான் மனிதன், அந்த ஞானம் நிலைக்காவிட்டால் மறுபடி இதைவிட வலுவாக.


கொரோனா வைரஸ் குறித்த முழு எச்சரிக்கையுடன் நாம் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்
21 நாட்கள் லாக் டவுன் என்பது சேதத்தை குறைக்க அல்லது தள்ளிப்போட அல்லது அதற்குள் நாம் தயாராக
ஆகியவற்றுக்காக நாம் எடுத்துக்கொள்ளும் நேரமாகும்
தயவு செய்து சமூக இடைவெளி எனும் வலுவான ஆயுதத்தை மட்டும் வீட்டில் வைத்து விட்டு வெளியே சென்றுவிட வேண்டாம்.
ஒருவருக்கு இன்னொருவருக்கும் இடையே ஆறடி இடைவெளி எப்போதும் அவசியம்
அநாவசியமாக கூட்டம் கூடுவது தவறு
கைகளை சோப் போட்டு அடிக்கடி கழுவிக்கொண்டே இருக்க வேண்டும்
அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் இப்போது அனைவரும் மாஸ்க் அணிவது குறித்த அறிவுரையை வழங்கியிருக்கிறது இது தொற்று நோய் பரவுவதை பெருமளவு குறைக்கிறது என்று சான்று பகர்கிறது. எனவே துணியால் செய்த மாஸ்க் அணிந்து அடுத்த மூன்று மாதங்கள் வெளியே செல்வது சிறப்பு
கட்டாயம் 60+ வயதுடைய தாத்தா பாட்டிமார்களுக்கு அடுத்த மூன்று மாத்ஙகளும் லாக்டவுன் என்றே மனதில் கொள்ள வேண்டும்.
அத்தியாவசிய தேவையற்ற மருத்துவமனை விஜயங்கள் கூடாது.
உக்கிரமான காலம் ஏப்ரல், மே, ஜூன்
சில கொள்ளை நோய் முன்னோக்கும் ஆய்வுகள்- ஜூன் மாதம் மூன்றாவது வாரம் இந்தியாவில் பீக் என்று அழைக்கப்படும் கொள்ளை நோய் உச்சி நிகழ்வு நிகழும் என்று கணிக்கின்றன
இந்த மூன்று மாதங்களை நாம் கடப்பதைக் கொண்டு நம்மால் இந்த போரில் எத்தகைய நிலையையும் வெற்றியையும் அடைய முடியும் என்று கூற முடியும்.
  • சமூக இடைவெளி
  • கைக்குட்டை / துணி மாஸ்க் அணிவது
  • முதியோர்களை காப்பது
  • கைகளை கழுவுவது
  • நம் வீடு/ அலுவலகங்களை தொற்று நீக்கம் செய்வது
இனி நமது பதிவுகளில் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்த ஆராய்ச்சிகளையும் பதிவுகளையும் காணலாம்..
தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.

Monday 23 March 2020

சீனாவின் கொரானா Bio War சூழ்ச்சி ஜெயிக்குமா ?? ஒரு சிறப்பு பார்வை..



சீனாவில்தொடங்கி இத்தாலி,ஸ்பெயின்,அமெரிக்கா வரை சென்ற கரோனாவைரஸ் ஏன் சீனாவின் அண்டை நாடான ரஷ்யா மற்றும் வடகொரியாவுக்கு பரவவில்லை ?

காரணம் வடகொரியாவும் ரஷ்யாவும் சீனாவின் நட்பு நாடுகள். அதனால் வைரஸ் அங்கு போகாது. ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்பு சீனா செய்து வந்த பல பொருளாதார குற்றங்களை ஐநாவில் வெளிப்படுத்தி சீன நிறுவனங்கள் மீது பல தடைகளை விதித்தார். இதற்கு பல நாடுகள் ஆதரவு தந்தன.


சீனாவின் முதலீடு இல்லாத நாடுகளே கிடையாது. ஆனால் சீனாவில் அந்நிய முதலீடுகள் கிடையாது. எனவே சீனாவை அந்நிய சந்தைகளுக்கு திறந்துவிட ட்ரம்ப் நிர்பந்தம் செய்ததால் வேறு வழியில்லாமல் சீனா அயல் நாடுஙளுடன் ஒப்பந்தம் செய்தது. அதன்படி சீனாவின் வூகான் மாகாணத்தை அந்நிய முதலீடுகளுக்கு திறப்பதாக சீனா கூறியது.


ஆனால் அதே வூகானில் தான் கரோனா பரவியது. ஏன் ?



கரோனா பீதியால் அந்நிய நிறுவனங்கள் இனி சீனாவுக்கு முதலீடு செய்ய வரமாட்டார்கள். அதுதான் சீனாவின் திட்டம். அதாவது வேறு எந்த நாடும் எங்கள் நாட்டில் தொழில் தொடங்கி லாபத்தை எடுத்துச் செல்லக்கூடாது. நாங்கள் தான் உலகின் உற்பத்தி மண்டலமாக என்றும் இருப்போம் என்ற சீனாவின் பேராசையால் வூகான் மாகாணத்தில் தான் உருவாக்கிய கரோனா வைரஸை திட்டமிட்டே பரப்பியது சீனா.


காட்டுத்தீ போல் வூகானில் பரவிய கரோனா ஏன் சீனாவின் தலைநகர் பெய்ஜிங் நகருக்கு பரவாமலே ஐரோப்பிய_அமெரிக்க நாடுகளுக்கு பரவியது ?வூகானில் பரவிய கரோனா திடீரென அடங்கியது எப்படி ?


கரோனாவுக்கு மருந்தே கண்டுபிடிக்காத அன்றைய சூழலில் வூகான் நகரில் சீன அதிபர் எந்த உடல் கவசமும் இன்றி எப்படி அங்கு சென்று மருத்துவமனைகளை பார்வையிட்டார் ?


அப்படியென்றால்ஏற்கனவேகரோனாவுக்கான மருந்தை சீனா தயாரித்து தன் வசம் வைத்துள்ளது. வைரஸை உருவாக்கியவன் அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்காமலா அதை பரப்புவான் ?


அமெரிக்காவை ஒருநாளும் ராணுவத்தால் நாம் எதிர்கொள்ள முடியாதுஎனகருதியசீனா அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை பொருளாதார ரீதியாக சீர்குலைத்து பங்குச்சந்தையை சரியவைத்து அதன் மூலம் அந்நாட்டு நிறுவனங்களை கைப்பற்ற சீனா கையில் எடுத்த ஆயுதம் தான் கரோனா !


அதாவது ஒரு நாடு பொருளாதார வீழ்ச்சியில் உள்ளபோது அந்நாட்டின் பங்குச்சந்தை மிகவும் குறைவாக இருக்கும். இதைப் பயன்படுத்தி சீனா அந்நாட்டின் பங்குகளை வாங்கிக்குவிக்கும்.


முதலில் தன்னை நட்பு நாடாக அறிமுகப்படுத்திக்கொள்ளும் சீனா அந்நாட்டிற்கு அதிக அளவில் கடன் கொடுக்கும். பிறகு அந்நாடு கடனை கட்டமுடியாமல் தள்ளாடும் போது அந்நாட்டுடைய வளங்களை தன்வசப்படுத்திக் கொள்ளும்.

இதற்கு சிறந்த உதாரணம் இலங்கை. முதலில் இலங்கைக்கு பல மில்லியன் டாலர்கள் கடன் கொடுத்து இலங்கையை கடனில் தள்ளியது. இலங்கை கடனை திருப்பி தரமுடியாமல் தள்ளாடிய போது இலங்கையில் உள்ள ஹம்மந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு எடுத்தது. இதைத்தான் ஆங்கிலத்தில் டெப்ட்_ட்ராப் (debt trap)என்பார்கள்


கரோனாவால் பல நாடுகளில் உள்ள பங்குச்சந்தை சரியும்போது சீனாவின் பங்குச்சந்தை உயருகிறதே ? எப்படி ?


இப்போதாவதுசீனாவின்சூட்சமம்புரிகிறதா ?



இந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க பொருளாதாரம் சரியும். அதன் விளைவாக பல நாடுகளில் உள்ளவங்கிகள்திவாலாகும்(இந்தியா உட்பட)..


இது மட்டுமல்ல உலக நாடுகள்அனைத்திலும் இடதுசாரி அரசியல் கட்சிகளை உருவாக்கி நிதி அளித்து அங்கு அக்கட்சிகளை ஆட்சியில் வர உதவிசெய்து NEW WORLD ORDER (NWO)என்ற ஒற்றை கம்யூனிச ஆட்சி முறையை கொண்டு வர முயற்சிப்பதும் சீனா தான்.


.இதுதான் சீனாவின் மாஸ்டர் ப்ளான்.நடப்பதை கவனித்தால் சந்தேகம் கொள்ளத்தோன்றுகிறது.இனி சீனா தான் உலகின் வல்லரசா ?பிறகு சீனா பொருளாதார வல்லரசாக உருவெடுக்கும்


கரோனாவை பரப்ப இந்திய இறையான்மைக்கு எதிரானவர்களை பகடையாக பயன்படுத்தும் சீனா !


இதுவரை இந்தியாவில் பரப்பப்பட்ட கரோனா வெளிநாடுகளில் இருந்து

வந்தவர்களால் பரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


சப்பமூக்கன் ஒரே கல்லில் எத்தனை மாங்காய் அடிக்கிறான் பார்த்தீர்களா ?


ஆனால் இந்தியா எந்த சூழ்ச்சியானாலும்,சூதானாலும் வெல்லும்.


இந்தியர்கள் வேற்றுமையில்ஒற்றுமை காண்பவர்கள்.

Friday 20 March 2020

Revit Basic Architecture & MEP understanding Technology !!

Revit Architecture is a building design and documentation system that works the way architects and designers think. With Autodesk Revit Architecture, architects and designers get back to what they love, designing buildings, without their software getting in the way. You can work in any view that makes sense, quickly and easily making changes to major design elements. You can see your ideas visualized on the fly with 3D views and instant shadows. You can even make late-stage changes without worrying about coordinating your plans, schedules, and construction documents. This course is a collection of step-by-step lessons designed to quickly teach you how to get the most out of this powerful software.

Revit MEP has really matured and found critical mass within the engineering and building design field. This course will give you a foundation for every feature you will need to successfully model the systems of a building and release a set of construction documents. Author Damon Ranieri will first focus on the picks, clicks, and tools most often sought after as a user begins to settle into a Revit workflow. From there, he will explore some of the "back of house" tasks like creating templates, choosing appropriate settings, and dealing with a content library. He will show you how to set up the job before moving on to modeling the building systems. You will explore all the features and techniques needed to produce readable drawings efficiently and profitably. In short, this course will take you through the entire life of a project, allowing you to envision how you'll realistically apply Revit to your work. To begin learning today


Should you use Revit? (Do you have some time?)

I decided many years ago (2001) to join Bilt Middle East in Dubai that I was going to focus on Revit because I believed it held promise and it represented how I preferred to do the work required in this industry. I've  since to convince the people I worked with and the companies I worked for to share my convictions, first as a co-worker/employee since 1999 ). Just to clarify, Revit Structure first appeared in 2005 and Revit Systems (now MEP) first appeared in 2006 so it's not possible to claim a decade of support and training, or experience with them for that matter, for those just yet.

Can you do it? (assuming you agree with my convictions)

Absolutely! You can do it. Your firm can. It takes determination and a company must devote time and resources to the task to be successful. This shouldn't be too surprising. It's the same story for everything else your firm does. It IS harder for some companies and for some people as well. It changes after all and it's the same as for other things; the attitude we bring to the task greatly affects the outcome.

Reality Check

I'm sure your firm has talented, creative, and motivated people. They can pick up Revit along the way, no problem. After all, I'm really just chasing another source of income, you can manage on your own. Everyone can stay mostly billable while they figure it all out? Is that realistic? Is every person in your firm a software hotshot? Do they all love figuring out how and why computer software works the way it does? Can they all wring the best out of any software they touch? Your company definitely has someone like that, maybe several, but all of them? Do you expect every person to relate to Revit the same way? Is your work so common and straightforward that however the software works out of the box is good enough for your company?

There ARE firms that have crossed the chasm between knowing nothing and being experts on their own. Some might even tell you it was easy. People have a funny way of forgetting pain afterward. Witness a mother after giving birth to a child and being willing to have another. My wife said exactly that after our first child on the day of his birth. It's my observation that most firms are a bit less tolerant of "pain".

Your firm CAN negotiate the transition between knowing nothing and being experts faster and more directly with informed guidance. People have been using guides, sages, mensches or gurus forever to help them transition between the unknown and known. This is no different.

 I welcome a chance to help contribute to your future success too.

Finally, the productivity and efficiency upgrades with Revit 2020 are worth a mention, as include some very highly voted requests on Revit Ideas that serve architects and engineers of all stripes.

The first is related to one of the most voted MEP specific Revit Ideas.  For this release, we’ve added Maintain Annotation Orientation support to several additional categories:

  • Electrical Equipment
  • Generic Model
  • Lighting Fixtures
  • Mechanical Equipment
  • Plumbing Fixtures
  • Specialty Equipment

Additionally, we improved the behavior of shared nested families.  In prior releases, such shared nested families would not show their annotation symbol, but that has now been resolved.

You probably find yourself here because you searched for information about Revit. If that search was prompted by a need to consider using Revit at your company."There is no easy button for Revit!"

நமது உடம்பில் உள்ள கழிவுகளை சிறுநீரகங்கள் மூலம் வெளியேற்றுவது பற்றிய சிறப்பு பார்வை !!

 நமது உடம்பில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கியமானது…

2 சிறுநீரகங்கள் (kidney),
2 சிறுநீரகக் குழாய்கள் (ureter),
1 சிறுநீர்ப்பை
(urinary bladder),
1சிறுநீரக குழாய் (urethra)
அடங்கிய சிறுநீரக மண்டல (excretorysystem) மாகும்.
முதுகுதண்டிற்கு அருகில் கடைசி விலா எலும்பிற்கு கீழ் பீன்ஸ் வடிவத்தில், கருஞ்சிவப்புநிறத்தில் உள்ள சிறுநீரகத்தின் அளவு
4.5 x 2.25 அங்குலம் (10.5 x 6.3 cms)
ஒவ்வொரு சிறுநீரகத்திலும் 10லட்சத்திற்கும் மேற்பட்ட நெப்ரான்கள்(nephrons) உள்ளன.
சிறுநீரகத்திற்க்கு வரும் அசுத்த இரத்தக் குழாய்கள் மிக நுண்ணிய குழல்களாகப் பிரிந்து, நெப்ரான்களுடன் இணைந்து வலைப்பை (கிளாமருலைகள் / glomerulus) போன்ற அமைப்பை உருவாக்கி வடிகட்டியாக செயல்படுகின்றன.
உடலுக்குத் தேவையான சக்தியை செல்கலின் உள்ளிருக்கும் மைட்டோகாண்டிரியா (mitochondria) க்கள் எரித்து இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இதில் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயு கழிவுகள் நுரையீரல் மூலமாகவும், அமோனியா,யூரியா போன்ற உப்புகள் சிறிதளவு வியர்வை சுரப்பிகள் மூலமாகவும், பெருமளவு சிறுநீரகம் மூலமாக வடிகட்டி சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றன.
நம் உடலில் உள்ள 3 -3.5 லி இரத்தம் தினம்(24 மணி நேரம்) 200 முறை சிறுநீரகங்களை கடந்து செல்கிறது.
அதாவது தினம் 700லி இரத்தம் சுத்தம் செய்யப் படுகிறது.
இதிலிருந்து சொட்டுசொட்டாக சுமார்
160 -170 லி நீர் பிரித்து எடுக்கப்பட்டு அந்த நீர்மூலமே மீண்டும் மீண்டும் இரத்தம் சுத்தம் செய்யப்பட்டு இறுதியில்
1.5 - 2.5 லி நீர் சிறுநீராக வெளியேற்றப்படுகிறது.
இதனை ஈடுகட்ட நாம் குறைந்தது 3 -5 லி நீர் பருக வேண்டும்.

100 மிலி சிறுநீரில் இருக்கும் தாதுக்கள்……
புரதம் 10 -25 மி.கிராம்
யூரிக் ஆசிட் 17 -50 மி.கிராம்.
கிரியாட்டினின் 66 -130 மி.கிராம்.
யூரியாநைட்ரஜன் 800 -1300 மி.கிராம்
குளுகோஸ் 30 மி.கி க்கு குறைவாக.
சோடியம் 25 -50 மிலி சமனாக
பொட்டாஷியம் 16 -80 மிலி சமனாக
யூரோபிலினோஜன் 1 மி.கி க்கு குறைவாக.
போன்றவைகள் உள்ளன.

ஏன் கசாயம் கொடுக்க கூடாது…?
சிறுநீரகங்கள் நம்முடைய துப்புரவுத் தொழிற்சாலை. கிட்டத்தட்ட 10 லட்சம் நெஃப்ரான்களை (ஃபில்டர்கள் உள்ள அமைப்பு) உள்ளடக்கியது சிறுநீரகம்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நபர்களின் சிறுநீரத்தில் உள்ள நெஃப்ரான்கள் ஃபில்டர் செய்ய முடியாமல் பாதிப்பு அடைந்துயிறுக்கும் மற்றும் இரதத்தை சுத்தம் செய்ய முடியால் நெஃப்ரான்கள் அடைப்பட்டு இருக்கும். ஏற்கனவே சர்க்கரைவியாதி,இரத்த அழுத்தம் அதற்க்காக எடுக்ப்பட்ட ஆங்கில மருந்துகளாலும் சிறுநீரக நெஃப்ரான்கள் பாதிப்பு அடைந்து இருக்கும். அதனுடைய மருந்து கழிவுகள் தேங்கி இருக்கும் அதை சுத்தம் செய்யவே சிறுநீரக நெஃப்ரான்கள் பில்டர் செய்ய தினறிகொண்டு இருக்கும் போது அந்த சமயத்தில் போய் கசாயம் மற்றும் கசாய பொடி போன்ற மருந்தை தண்ணீர் அல்லது வெண்ணீரீல் கலந்தோ கொடுத்தால் அது நெஃப்ரான்களால் ஃபில்டர்
செய்ய முடியாமல் மேலும்அடைத்துவிடும் அதனால் தான் கசாயம் கொடுக்க கூடாது. எல்லா மருந்துகளிலும் கழிவுகள் உண்டு அது நெஃப்ரான்களை கடந்து செல்லாது.
கசாயம் கொடுத்து முதலில் உப்பு சத்து குறைவது போலே தெரிந்தாலும் சில நாட்களில் மறுபடிவும் உப்புகள் கூடா ஆரம்பித்துவிடும்.அதனால் நிலைமை மேலும் மோசமாகும்.

ஏன் என்றால் கசாயம் இரத்தத்தில் உள்ள உப்புகளை குறைக்கிறது தவிர சிறுநீரத்தையோ அதில் உள்ள நெஃப்ரான்களையோ பலப்படுத்துவது இல்லை என்பது உண்மை.
நாம சாப்பிடுகின்ற உணவுகள் மற்றும் மருந்துகள் எல்லாவற்றைவும் சிறுநீரகம் தான் (டயாலிஸிஸ்) சுத்தம் செய்ய வேண்டும்.
டயாலிஸிஸ் செய்கிறவர்களுக்கு நாம கொடுக்கிற மருந்து எதுவானாலும் அது
நெஃப்ரான்களை கடந்து செல்ல வேண்டும் அவ்வளவு தான்.
என்னிடம் வரும் சிறுநீரக நோயாளிகள் வைத்தியர் மற்றும் படித்த சித்தா மற்றும் ஆயூர்வேத டாக்டர்கிட்ட போனே அவர்கள் கசாயம்,மாத்திரை,பொடி போன்றவைகள் கொடுத்தார்கள் நாங்கள் சாப்பிட்டோம் முதலில் உப்பு சத்து குறைவது போலே தெரிகிறது. ஆனால் மறுபடியும் உப்பு சத்து கூடிவிடுகிறது என்று சொல்லுகிறார்கள்.
மக்கள் மத்தியில் கசாய மருந்து வேலை செய்யவில்லை என்று நோயாளியின் நிலைமை மேலும் மோசமாகி மறுபடியும் ஆங்கில மருந்துக்கு செல்ல காரணம் இந்த கசாயம் மருந்து கொடுக்கும் முறைகளே…
அதனாலேயே கசாய மருந்துகள் தோல்வியை சந்திக்கின்றன…
சித்தா மற்றும் ஆயூர்வேத மருந்துகள் நவீன மருந்துகளுக்கு இணையாக செயல்பட முயற்ச்சி எடுக்க வேண்டும். ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று தாழ்மைவுடன் வேண்கிறேன்.
ஆங்கில மருந்து சாப்பிட்டாச்சு.❗
சித்தா மருந்து சாப்பிட்டாச்சு.❗
ஆயூர்வேத மருந்து சாப்பிட்டாச்சு.❗
யூனானி மருந்து சாப்பிட்டாச்சு.❗
ஓமியோபதி மருந்து சாப்பிட்டாச்சு.❗
ஆனால் இரத்ததில் உள்ள உப்பு சத்தை குறைக்க முடியவில்லையே வேற என்ன செய்ய.❓
இறைவன் உதவியால் அவனுடைய கருணையால்……
முழுமையாக குணப்படுத்தலாம். !
சிறுநீரக நோய்யால் பாதித்தவர்களுக்கு………
Creatinine --- கிரியாட்டினின்
Urea. --- யூரியா
Uric Acid. --- யுரிக் ஆசீட்
உப்பு சத்து கூடிவிட்டது கை, கால், முகம் வீக்கம் சில பேர்களுக்கு ஏற்படும்…
சில பேர்களுக்கு……கை, கால், முகம் வீக்கம் ஏற்படாது.
அவர்களுக்கு நவீன மருத்துவத்தில் உப்பு சத்தை குறைக்க வேண்டும் என்று டயாலிஸிஸ் செய்ய சொல்லுவார்கள்.
வலிவுடனும்……
வேதனையுடனும்……
மன உளச்சல்லுடனும்……
டயாலிஸிஸ் வாழும் காலம் முழுவதும் செய்ய வேண்டும்.
டயாலிஸிஸ் செய்தாலு மரணத்தை தள்ளி போடலாம் தவிர நிறந்தர தீர்வு இல்லை மரணம் உறுதி…!!!! ????
அதுவும் ஆயுள் முழுவதும்..
அப்படியே ஆயுள் முடிந்துவிடும்.
சிறுநீரகம் செயலிலப்பு Kidney Failure இனி டயாலிசிஸ் தேவையில்லை
அரிஸ்டம் என்ற கசாயம் கிடையாது
இலேகியம் கிடையாது.
கசாயம் பொடி கிடையாது.
சூரணம் என்ற பொடி கிடையாது.
மாத்திரைகள் கிடையாது.
பச்சைஇலை வைத்தியம் கிடையாது.
பஸ்பம் மற்றும் செந்தூரம், பாசண மருந்துகளான மெட்டல் கலவைகள் கலந்த மருந்துகள் கிடையாது.
முற்றிலும் மாறுபட்ட என்னுடைய அனுபத்தில் பல சிறுநீரக நோயாளிகளுக்கு
கொடுத்து பயன் அடைந்த மருந்து.
சிறுநீரகத்தில் உள்ள ஃபில்டர்களான நெஃப்ரான்களை இசியாக கடந்து செல்லும் நெஃரான்களில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிட்டு புதிய செல்களை உற்பத்தி செய்யும்.
நெஃப்ரான்களை புதுபிக்கும் பலப்படுத்து சிறுநீரகம் பலப்படும் நன்றாக வேலை செய்வும்.
சிறுநீரக நோயாளிகளை டயாலிஸ்ஸி செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்ரமாக சரி செய்யலாம்.
டயாலிஸ் செய்து கொண்டடு இருப்பர்களுக்கு அவர்களுடைய கிட்னி சுருங்கி விடும் அதாவது சிறுநீரகம் சின்னதாக சிறுத்து விடும்.
டயாலிஸ் செய்து கொண்டடு இருப்பவர்களும் மருந்து சாப்பிட்டால் டயாலிஸ் செய்யும் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து கொள்ளளாம்.
வாழ் நாளை நீட்டித்து கொள்ளளாம்.

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.