Monday 16 June 2014

நாம் கைத்தொலைபேசி அடிமைகளா !!!

கைத்தொலைபேசி எப்போதும் எம்மோடு இருக்கின்ற, எமது வாழ்வோடு இரண்டறக் கலந்திருக்கின்ற ஒரு பொருளாக இன்று மாறிவிட்டது. மனிதன் மெதுவாக கைத்தொலைபேசி தொழில்நுட்பத்துக்கு அடிமையாகி வருகின்றான் அல்லது அது சார்ந்து வாழப் பழகிக் கொள்கிறான் எனலாம். உணர்வு ரீதியான, தனிப்பட்ட மற்றும் தொழில்சார் தகவல்களை செல்பேசியை நம்பியே பரிமாறிக் கொள்கிறார்கள். பாதுகாப்பு தொடர்பான தகவல்கள்கூட கைத்;தொலைபேசியை நம்பியே காணப்படுகின்றன.வங்கி ஏ.டி.எம். அட்டையின் கடவுச்சொல்லை(Pயளள றழசன) கைத்;தொலைபேசியில் பதிவு செய்து வைத்தே நினைவூட்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு பல்வேறு விடங்களுக்கும் கைத்;தொலைபேசியை நம்பியே வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை இனங்காண முடியும்.

வீட்டில் இருந்து வெளியேறும் போது கைத்தொலைபேசி இல்லாமல் புறப்பட முடியாது என்ற நிலைமை உருவாகிவிட்டது. வீட்டுச் சாவி மற்றும் பணப்பை என்பவற்றோடு கைத்;தொலைபேசியும் மறக்காமல் எடுத்துச் செல்லப்பட வேண்டிய மிக முக்கிய பொருளாக மாறிவிட்டது. 
மனிதன் இன்று கைத்;தொலைபேசியை நம்பியே வாழப்பழகிவிட்டான் எனலாம். கைத்;தொலைபேசி மூலமாகவே தமது ஞாபகங்களைச் சரிபார்த்துக் கொள்கிறார்கள். முக்கியமான தினங்களையும் நேரத்தையும் நினைவூட்டிக் கொள்கிறான்.முக்கிய தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்கிறார்கள், ஒருவருடனான சந்திப்பையும் செல்பேசியே நினைவூட்டுகிறது. தொடர்பு விவரங்களுக்கும் செல் பேசியை நம்பியே இப்போது மனிதன் வாழ்கிறான். 

‘நடந்துகொண்டே இன்னொருவருடன் பேசுகின்ற வாய்ப்பை கைத்;தொலைபேசி வழங்குகின்றது, நடந்து கொண்டே பேசுவதென்பது மனிதர்களுக்கு எப்போதும் விருப்பமான ஒன்று.

உலகில் 31மூ மேற்பட்ட மக்கள் தொகையினர் தகவல் பரிமாற்றத்திற்காக இன்று கைத்;தொலைபேசிகளைப் பயன்படுத்துகிறார்கள். கிட்டத்தட்ட 1.3 பில்லியன் மக்கள் தொகையினர் உலகளாவிய ரீதியில் கைத்;தொலைபேசிகளைப உபயோகிக்கிறார்கள்.

கைத்தொலைபேசிகள் வெறுமனே அழைப்புக்களுக்கும் உரையாடல்களுக்கும் மட்டுமல்லாமல் குறுந்தகவல்களை(ளுஆளு) தட்டச்சு செய்து பிறிதொரு செல்பேசிக்கு அனுப்புவதற்கும் பயன்படுகின்றன. இதைவிட வானொலி,இணைய இணைப்பு வசதிகளுடன் வீடியோ ரெக்கோடிங் , போட்டோ பதிவுகள்,குரல் ஃஒலி ரெக்கோடிங் வசதிகள் புளுருத்(டீடரநவழழவா)வசதி ஊடாக தரவுகளை கேபிள் இன்றி பரிமாறிக்கொள்ளுதல் போன்ற பல வசதிகளுடன் இன்று மூன்றாவது தலைமுறை(3பு) கைத்;தொலைபேசிகள்; வந்துவிட்டன. 

தகவல் தொழில்நுட்பத்துறையில் மிக விரைவாக வளர்ந்து வருகின்ற இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. இந்தியாவில் மக்கள் தொகை மிக விரைவாக வளர்கின்றமை,இளையோரின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பன தொலைத்தொடர்பு வலையமைப்பு வளர்ச்சிக்கு உதவி புரிகின்றன. 
கைத்;தொலைபேசி என்ற பெயர் பிராந்திய ரீதியாக வெவ்வேறுபெயர்களுடன் அழைக்கப்படுகின்றது. 

உயர் தொழில்நுட்ப வசதியுடைய செல்பேசிகள் குரல் ஒலியை மட்டும் பரிமாறிக் கொள்பவை அல்ல. அவை குறுந்தகவல்கள், வீடியோ, இசை, போட்டோ போன்றவற்றையும் பரிமாறிக்கொள்ளும் ஆற்றலுள்ளவையாக உள்ளன. மைக், கேமெரா, 4G இன்டர்நெட்,புலூடூத், wifi  வசதிகள் இதற்குத் துணைபுரிகின்றன. 

சில நாடுகளில் குறிப்பாகத் தாய்வான், கொரியா போன்ற நாடுகளில் கைத்;தொலைபேசி 100மூ மேல் மக்கள் மத்தியில் பிரபல்யமாகி இருக்கின்றன. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கைத்;தொலைபேசி வைத்திருப்பது அங்கு ஒன்றும் புதிதல்ல.இந்த நிலைமை இலங்கையிலும் ஏற்பட்டு வருவதை காணமுடிகிறது.ஒருவர்ஒன்றுக்கு மேற்பட்ட கைத்;தொலைபேசிகளை வைத்திருப்பதோடு ஒன்றுக்கு மேற்பட்ட தொலைபேசி நிறுவனங்களின் இணைப்புக்களையும் அதாவது சிம் கார்ட்டுகளையும் கொண்டிருப்பது சர்வ சாதாரணமாக காணப்படுகின்றது. 

இன்று தொழில்புரிவோரை விட தொழில் இன்றி பெற்றோரில் தங்கி வாழ்வோரே அதாவது இளைஞர்களே அதிகளவில் கைத் தொலைபேசிகளைப் பாவிக்கிறார்கள்.

கைத்தொலைபேசியை உபயோகப்படுத்துவது ஒரு சமூகப் பழக்கவழக்கமாகக் கருதப்படுகின்ற நிலைமை இன்று இளையோர் மத்தியில் அதிகரித்து வருகின்றது. பொது இடங்களில், சனக்கூட்டமான இடங்களில், நண்பர்கள் மத்தியில் கைத்;தொலைபேசியைக் காண்பிப்பது ஒரு உயர் சமூக அந்தஸ்து நிலையாக இளையோரால் கருதப்படுகின்றது.விலையுயர்ந்த கைத்தொலைபேசிகளை கைகளில் வைத்திருப்பது தமது சமூக அந்தஸ்தை அதிகரிப்பதாக இளையோர்கள் கருதுகிறார்கள்.

செல்பேசி உபயோகம் இன்று புதிய பழக்கவழக்கங்களையும் விழுமியங்களையும் உருவாக்கி வளர்த்து வருகின்றது.
சமூக வலையமைப்பில்; தம்மை இணைத்துக் கொள்வதற்கான ஒரு கருவியாக கைத்;தொலைபேசியை உபயோகிக்கிறார்கள். கைத்;தொலைபேசி இளம் பெண்களுக்குப் பாதுகாப்பான ஒரு சூழலை வழங்குவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், செல்பேசி பெற்றோருக்கும் பிள்ளைகளுக் கும் இடையிலான தொடர்பாடலை அதிகரிப்பதாக மனோரதியப(சுழஅயவெiஉ) பண்புமிக்க தொடர்பாடல்களை ஊக்குவிப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். 

காதல் மலர்வதற்கும்.காதலர்கள் தங்கள் காதல் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், வளர்ப்பதற்கும் கைத்தொலைபேசியை ஒரு முக்கிய ஊடகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். உரையாடல்களுக்கு இணையாக குறுந்தகவல்கள(ளுஆளு) இதில் அதிகம் முக்கியத்துவம் பெறுகின்றன. 

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment