Thursday 26 June 2014

சாதனைத் தமிழர் டான்ஸ்ரீ.டத்தோ உபைதுல்லாஹ்!! ஒரு சிறப்பு பார்வை..


டான்ஸ்ரீ. டத்தோ.சின்ன ராவுத்தர் உஸ்மான் காதர் பாஷா உபைதுல்லா தஞ்சை மாவட்டத்தில் உள்ள ராஜகிரியில் காதர் பாட்சா - கதிஜா பீவி தம்பதியரின் மகனாகப் 1918 ம்  ஆண்டு ஜூன் 18ம் தேதி  பிறந்தார். 

சென்னை அரசினர் முகம்மதியா கல்லூரியிலும் பின்னர் ஜமாலியா அரபிக் கல்லூரியிலும் உயர் கல்வி பயின்றார்.
மலேசியா சிரம்பானில் பணித் தொடக்கம், கோலாலம்பூரில் வணிகம், விமான கப்பல் பயண ஏற்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறார். மலேசியா வர்த்தகக் கழகம், பூமிபுத்ரா வங்கி முதலிய பல்வேறு நிறுவனங்களின் தலைவர், இயக்குனர் முதலிய பொறுப்புகள் ஏற்று அரும்பணிகள் ஆற்றிச் சாதனைகள் படைத்தார்.  


சென்னையில் கல்லூரி மாணவராக இருந்தபோதே அரசியலில் ஈடுபாடு உள்ளவர்.கும்பகோணத்தில் அகில இந்திய முஸ்லீம் லீக் மாநாடு நடத்தி சிறந்தார். மலாயா சென்ற போதும் நாட்டுப்பற்று நீங்கவில்லை. மலேசியா, தாயகம் ஆகிய இருநாடுகளின் விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டார். நேதாஜியின் ஆசாத் ஹிந்து இயக்கத்தின் மிகவும் ஆர்வம் கொண்டார். இதழ்களின் ஆசிரியராகவும், வானொலி விமர்சகராகவும் ஆர்வத்தோடு பணியாற்றியதால் சிறைச் சென்றார். மலேசியா இந்தியன் காங்கிரஸ் துணைத் தலைவரானார். பாராளுமன்றத்தின் செனட்டராகவும், துணைத் தலைவராகவும் பல்வேறு குழுக்களிலும், அமைப்புகளிலும், தலைவராகவும் இருந்து செயற்கரிய செயல்களை செய்துள்ளார்.
பல்வேறு உதவி நிறுவனங்களின் நிறுவனர், தலைவர், இயக்குனர்: சாதி சமய வேறுபாடின்றி ஏழை எளியவர்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உதவி நிறுவனங்களுக்கும் நிதி உதவி வழங்குவதற்கு மலேசியாவில் பலகோடி மூலதனத்தில் உபைதி பௌண்டேஷன் நிறுவினார். கோலலம்பூரில் தென்னிந்திய பள்ளிவாசலை நிர்மாணித்து அதன் நிர்வாக குழு தலைவராகவும் பணியாற்றி வந்தார். பெர்மிம் போன்ற பேரவைகளின் நிறுவன தலைவராகவும் பணி புரிந்தார்.


தாயகத்தின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைச் சென்றதுடன் மக்களின் நலத்திற்கும், வளத்திர்க்காகவும் பாடுப்பட்டு வந்தார்.மலேசியாவில் அறப்பணி நிறுவனம் நடத்தியும், பிறந்த ஊரில் உபைதுல்லாஹ் அறக்கட்டளை நிறுவி தரமான மேல்நிலைப்பள்ளி சிறப்பாக நடக்க உதவினார். மலேசியாவின் மேம்பாட்டிற்காக பல நிலைகளில் அரும்பணி ஆற்றினார். பாராளுமன்றத்தில் உறுப்பினராகவும், துணைத்தலைவராகவும் இருந்து பாராட்டதக்க பணியாற்றினார். இவரது "நமது நாடு நம் மக்கள்" என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகள் இவரின் மலேசியா நாட்டு பற்றுக்கு நல்ல சான்றாகும்.


பன்மொழிப் புலவர், தாயகத்தை நீங்கி வந்தாலும் தாய் தமிழை மறக்கவில்லை. நாவன்மை மிக்க நாவலர், ஆற்றல் மிக்க எழுத்தாளர், தமிழ்ப்பண்ணை என்ற அமைப்பின் நிறுவனத் தலைவர். முதல் உலகத்தமிழ் மாநாடும், ஆறாம் உலகத் தமிழ்மாநாடும் சிறப்பாக நடப்பதற்கு உறுதுணையாக இருந்தார்.


பாகிஸ்தான், இலங்கை, சிங்கப்பூர், கொரியா, இந்தோனேசியா, ஜெனிவா, தைவான், ரஸ்யா, இத்தாலி, எகிப்து, ஸ்பெயின், துர்க்கி, அமெரிக்கா, வெனிசுலா,சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, சவூதிஅரேபியா முதலிய உலக நாடுகள் பலவற்றுக்கும் பயணம் செய்தார்.

  • மலேசியா சம்மேளன சட்டமன்றம் 1948 முதல் 1959 இறுதி வரை.
  • செனட் தொடக்கம் 1959 முதல் 1980 வரை.
  • சட்டமன்றம் பாராளுமன்றம் ஆகியவற்றில் தொடக்கம் முதல் நீண்ட கால (32 ஆண்டுகள்) உறுப்பினர்.
  • ஷ்வெட்டன் ஹாம் துறைமுக அதிகாரக் குழு.
  • கூட்டு தொழில் வளர்ச்சி அதிகாரக் குழு.
  • RIDA அதிகாரக் குழு 1951 முதல் இறுதி வரை.
  • RIDA மத்திய நிர்வாக மன்றம் 1951 முதல் இறுதி வரை.
  • செலாங்கூர் மாநிலம் 1953-1955
  • முஸ்லிம் காலேஜ் மன்றம், கில்லாங்
  • தேவான் பாஷா டான் புஸ்டக
  • கோர்ட் யுனிவெர்சிட்டி, மலாயா
  • செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் மத்திய மன்றம்
  • மலேசியா கன்ஸா லிடேடரி கல்குலேடிவ் மன்றம்
  • ஜெஸ்ஸென்மன் - 1961
  • கோலாலம்பூர் - 1962
போன்ற பதவிகளை வகித்தார்.
  • நாடாளுமன்ற துணை சபாநாயகராகவும் பணியாற்றினார்.

  • அஸ்ஸோஸியட்டேட் இந்தியன் சேம்பேர் ஆப் காமெர்ஸ் (அகில இந்திய வர்த்தக அவை) இன் நிறுவனத் தலைவர் 1950-1982
  • - மலேசியா எம்பலாயர்ஸ் கன்சல்ட்டடிவ் அசொசியாசன் (அகில மலாயா தொழில் மற்றும் வணிப அவை. தொழில் தகராறு தீர்வு பற்றியது? பின்னர் மலைய்சியன்
  • எம்பலாயர் பெடராசன் M.E.F 1963 – 1982.
  • மலாயன் கவுன்சில் ஆப் எம்ப்ளாயர்ஸ் ஆர்கனைசேசன். (ரப்பர், டின் மற்றும் வர்த்தக தொழில் அதிபர்கள்) 1966 முதல் 1978 வரை
  • யுனைடட் சாம்பர் ஆப் காமர்ஸ், பின்னர் தேசிய வர்த்தக கழகம் N.C.C எனப் பெயர் பெற்றது.
  • - பெர்கிம் நிறுவன தலைவர்.
  • - தமிழ்ப்பண்ணை நிறுவனத் தலைவர் 1951-1958
  • - தென்னிந்திய பள்ளிவாசல் நிர்மான நிர்வாகக் குழு.1949-1970 மற்றும் 1980 முதல் இன்று வரை.
  • போன்ற அமைப்புகளின் தலைவராக திறம்பட பணியாற்றினார்.
  • - பேங்க் பூமிப்புத்ரா மலேசியா பெர்ஹார் (பி.பி., எம்.பி)
  • - தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம் தொடக்கம் முதல்(1961-1965) போன்ற நிறுவனங்களின் இயக்குனராகவும் சிறப்புடன் பணியாற்றினார்.
  • - யூனிட் டிரஸ்ட் (MICT PG) 1976 தொடக்கம் முதல் 1993 வரை.
  • - NASA கூட்டுறவு சங்கம் 1976-1980
போன்றவற்றில் அவைதலைவராகவும் இருந்தார்.

மேலும் மலேசியா இந்தியர் காங்கிரஸ் இன் நிரந்தர சபாநாயகராகவும் பதவி வகித்தார்.
இதனால் 1967ல் டத்தோ விருது வழங்கப்பட்டது. 1973 ல் மலேசியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான1973ல்  டான் ஸ்ரீ விருதும் இவருக்கு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
மா அல் ஹிஜ்ரா (1989) போன்ற மலேசியாவின் உயரிய விருதுகளையும் பெற்றார்.இந்த விருதைப் பெறும் முதல் மலேசிய இந்திய முஸ்லிம் இவர்தான். அவர் சாதித்தவை அதிகம் என்பதால், சகாப்த மனிதராகப் போற்றப்படுகிறார்.

இத்தனை சிறப்புகளுக்கும் சொந்தக்காரரான உபைதுல்லாஹ் அவர்கள் 22.01.2009 அன்று இயற்கை எய்தினார்.

சாதனைத் தமிழர் டான்ஸ்ரீ.டத்தோ எஸ்.ஓ.கே.உபைதுல்லா நினைவாக, மலேசியாவில் தபால் தலை வெளியிடப்பட்தது.இந்த தபால்தலை நாயகனுடைய துணைவியாரும், இரு புதல்வர்களும், கோலாலம்பூரில் நடைபெற்ற தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  அவற்றை  பெற்றுக்கொண்டனர்.

தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment