Sunday 15 June 2014

தந்தையர் தினம் தேவைதான ? ஒரு சிறப்பு பார்வை..



இன்று  தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.  இது, ஒரு குடும்பத்தில் தந்தையின் தியாகத்தை நன்றியுடன் நினைவு கூறும் நாள்.   தந்தையர் தினத்தை கொண்டாடப்படும்  நாள், நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது என்றாலும், இந்தியா, அமெரிக்கா,  இங்கிலாந்து, ஜப்பான் போன்ற  பெரும்பாலான நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமை,  அதாவது இன்ற தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

சமீபத்தில் எனது  நண்பனின் தந்தையை  பார்த்த போது என் மனதில் தோன்றிய எண்ணங்களின் சாரம்.மனிதன் வாழ்க்கையில் பல பருவங்களைத் தாண்டி வளர்கிறான். அதில் முதுமைப் பருவமும் ஒன்று.

மற்ற எல்லா பருவங்களுக்கும் தன்னைத் தயார் படுத்திக்கொள்ளும் மனிதன் இந்த முதுமைப் பருவத்தை எதிர் கொள்ள எந்த முன் நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. நான் முதுமையடைய மாட்டேன் என்கிற மாயையால் பீடிக்கப்பட்டு, முதுமை அவனைப் பீடிக்கும்போது அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

இது வாழ்க்கையின் ஒரு மிகப்பெரிய அவலம். இம்மண்ணுலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் அந்திம காலம் என்று ஒன்று உண்டு. அதன் முடிவில் இறப்பு என்பதும் தவிர்க்க முடியாத ஒன்று. வாழ்க்கையில் சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொருவருக்கும் தெரிந்த, தெரிந்திருக்க வேண்டிய உண்மை இது.

ஆனால் மனிதன் முதுமையையும் மரணத்தையும் கண்டு அஞ்சுகிறான். ஆகவே அதைப்பற்றி சிந்திக்க மறுக்கிறான். அதைப்பற்றி சிந்திக்காமல் இருந்தால் அவை அவன் வாழ்வில் வராமல் போய்விடுமா என்ன?

இதனால் பல முதியவர்கள் தங்கள் இறுதிக்காலத்தில், மிகவும் வேதனைப்படுகிறார்கள். அவர்கள் பெண் குழதைகளுக்கு அதிக முக்கியத்துவம்  கொடுக்கிறார்கள் . அதனால் ஆண் குலதைகளை கண்டுகொள்வதும் இல்லை . இதனால் தாங்கள் வேதனைப்படுவது மட்டுமல்லாமல் தன்னைச் சேர்ந்தவர்களையும் வேதனைப்படுத்துகிறார்கள். அவர்கள் பென்சனும் கொஞ்சம் வருமான் வருமாயின் ஆண் குழதைகளின் பணத்தை ஏற்பதும் இல்லை.

ஏதாவது வைத்தியம் செய்து தன்னைப் பழைய மாதிரி (அதாவது இளமை நிலைக்கு) கொண்டு வரமாட்டார்களா என்று எதிர்பார்க்கிறார்கள். அது சாத்தியமல்ல என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இதனால் அவர்களுக்கும் அவர்களை பாதுகாக்கும் குடும்பத்தினருக்கும் ஏற்படும் கஷ்டங்கள் சொல்ல முடியாது.

பழங்காலத்தில் செவ்விந்தியர் நாடோடிகளாக வாழ்ந்தார்கள். அவர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறும்போது நடக்க முடியாதவர்களை பழைய இடத்துலேயே விட்டு விட்டுப் போவது வழக்கம். அந்த ஆளுக்கு முன்னால் குச்சிகளினால் நெருப்பு மூட்டி விட்டு, பக்கமத்திலும் கொஞ்சம் குச்சிகளை வைத்து விட்டுப் போய்விடுவார்களாம். அந்த நெருப்பு முழுவதும் அணைந்த பிறகு ஏதாவது காட்டு மிருகங்க்ள வந்து அந்த ஆளை அடித்து சாப்பிட்டு விடுமாம்.இந்த நடைமுறையைக் கேட்க காட்டுமிராண்டித்தனமாகத் தோன்றினாலும் அவர்களின் வாழ்வில் வேறு வழியில்லாததினால்தான் அப்படி ஒரு வழக்கம் வந்திருக்கும்.  இன்றும் கூட நம் தாய்த்திரு நாட்டில் மன நோயாளிகளைக் கொண்டு போய் கண் காணாத இடத்தில் விட்டு விட்டு வருவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அவர்களுடைய இருக்க குணங்களை  மாற்றி கொண்டு அன்போடு பலகை வேண்டும். ஆண்  மற்றும் பெண்குழந்தைகளுக்கு சமமமாக பார்க்க வேண்டும். 
இதைப்பற்றிய சிந்தனை பல நாட்களாக என் மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது. மரணம் என்பது சிலருக்கு அநாயாசமாக வந்து விடுகிறது. நேற்று பார்த்தேன், நல்லாத்தானே இருந்தார் என்று சொல்லும்படியான மரணங்கள் பெரும் புண்ணியம் செய்தவர்களுக்கே வாய்க்கும்.

மற்றவர்கள் தங்கள் இறுதிக்காலத்தில் பல துன்பங்களை சந்திக்க நேரலாம். அத்துன்பங்களை ஏதாவது மாத்திரைகள் சாப்பிடுவது மூலம்  தற்காலிகமாக குறைத்துக்கொள்ளலாமே தவிர முற்றிலும் குணப்படுத்துவது இயலாத காரியம். தவிர அதற்குத் தகுந்த ஆள் பலம், பொருள் பலம் வேண்டும்.

ஆகவே சிறிதாவது சிந்திக்கத் தெரிந்தவர்கள் தங்கள் நிலையைப் புரிந்து கொண்டு முதுமையில் வரும் துன்பங்களை, மற்றவர்களுக்கு இடைஞ்சல் தாராமல் பொறுத்துக்கொள்ள பழக வேண்டும். இன்றுள்ள சமுதாயத்தில் எது எதற்கோ பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார்கள். இந்த முதுமையை எதிர்கொள்வது பற்றியும், பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்  பற்றியும்,  பயிற்சி வகுப்புகள் ஆங்காங்கே நடத்தவேண்டும்.

அதே நேரத்தில் தந்தையின் சேவையை மறுப்பதற்கு இல்லை என்பதுதான், தந்தையர் தினத்தின் உள்ளார்ந்த கருத்து.இவ்வாறாக  ஒரு குடும்பத்துக்கு தந்தையின் சேவையை நினைவு படுத்தும் தினம் தான் இன்று தந்தையர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

ஆனால்,  தந்தை என்பவர் ,முதிய பருவம் அடையும் போது அவரை, அவரது மகன்களும், மகள்களும் அன்பான வார்த்தைகளால் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.முதிய வயதை அடையும் அடையும் தந்தையையும், தாயையையும்  முதியோர் இல்லத்துக்கு அனுப்பி விடாமல், தங்களோடேயே வைத்துக்கொண்டு, அன்பையும் , பாசத்தையும், நேசத்தையும்  இன்றைய இளைய தலைமுறையினர் பொழிய வேண்டும் என்பதுதான் முக்கியமானது.இந்த சிறந்த கருத்தை, இன்றைய தந்தையர் தினம் வெளிப்படுத்துகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை.

இயற்கையைப் புரிந்து அதற்குத் தக்க வாழ எல்லோருக்கும் எல்லா வல்ல இறைவன் அருள் புரிவானாக!!

தந்தை உறவுக்கு  என்னுடைய  நன்றி !

எனக்கு உயிர் தந்த ஓர் உறவு!

எனக்காகவே வாழ்ந்த ஓர் உறவு!
என்  இன்ப துன்பங்களை பகிர்ந்த உறவு!
சமூகத்தில் அவர் பெயர் "தந்தை"!

தன் மார்மேலும் தோள்மேலும் போட்டு
வளர்த்த உறவு!
தந்தையாய், நல்லாசானாய், தோழனாய் 
சகலமும் ஆகி நின்ற உறவு!

என் மௌனங்களுக்குள்  எப்போதும் உலா வருபவர் 

என் தயக்கங்களுக்கு  காரணியானவர் 
என் இயலாமைகளின் மூலதாரி

ஊரில் உள்ள அப்பாவுடன் நான்  ஏன் இல்லை யென
கரைந்தழுத பல இரவுகள்! அயல்நாட்டு  நித்திரையில்  கரையாமல் கனவிலும், நினைவிலும் !
என்னை உருவாக்கியதற்கு நன்றி!
எமக்காக உழைத்ததற்கு நன்றி!
எம்மைக் காத்ததற்கு நன்றி!
எம் அனைவர் (சகோதரர்கள்) சார்பிலும் தந்தையர் தின வாழ்த்துக்கள்!

ஆக்கம் -மு.அஜ்மல் கான் .

No comments:

Post a Comment