Sunday 11 March 2012

மலேசியா வரலாறு - ஒரு பார்வை ...


வணக்கம்.முதலில் மலேசியா வரலாறை சற்று அலசிப் பார்ப்போம்.முதலில் மலேசியா என்பது தீபகற்ப மலேசியாவை மட்டும்தான்.அந்த காலத்தில் மலேசியாவின் பெயர் தானா மெலாயு(tanah melayu) அப்படி என்றால் மலாய்காரர்களின் மண்/இடம் என்று அர்த்தம்.இந்த Tanah melayu வின் வரலாறுதான் இன்று நான் எழுத போகின்றேன்.
முதலில் மலேசியா வரலாறு ஐந்து பாகங்களாக பிரிக்கலாம்.
  • பண்டைய காலத்து மலேசியா(35,000 BC - 100 BC )
எலும்பு கூடு,குகை,இது எல்லாம் நமக்கு தேவையா?ஆகவே இதை விட்டு விடலாம்

  • இந்து அரசாட்சி(100 BC - 1400 AD)
ஒரு காலத்தில் தானா மெலாயுவில் இந்து மதம் மற்றும் புத்த மதம் ஆதிக்கதில் இருந்தது.அதைப் பற்றிதான் இன்று எழுதப் போகின்றேன்.
  • இஸ்லாமிய ஆட்சி(1400 - 1511 )
இது தானா மெலாயுவின் பொற்காலம் என்கின்றார்கள்.ஏன் என்று நாம் சற்று அலசிப் பார்க்கலாம்.

  • அந்நிய ஆட்சி(1511-1957)
ஆங்கிலேயர்,டச்சுகாரர்கள் என்று பல அந்நிய ஆட்சி நடைப்பெற்ற காலம்
  • சுதந்திர மலேசியா(1957-தற்பொழுது வரை)
இந்த காலகாட்டத்தில்தான் மலேசியா என்பது உருவாகியது.



இப்பொழுது மேலே குறிப்பிட்டு உள்ளது போல இந்து அரசாங்கத்தில் இருந்து மலேசியா வரலாறு ஆரம்பம்.


இந்து அரசாட்சி 2ஆம் நூற்றண்டிலேயே ஆரம்பித்து விட்டது.இந்து மற்றும் புத்த மத ஆதிக்கம் நிறைந்த அரசாங்கம் இந்த காலகட்டதில் அதிகம்.சில இந்து ,புத்த அரசாங்கங்களைப் பற்றி எழுதுகின்றேன்.பெயர்கள் சற்றே நகைச்சுவையாக இருப்பது போல இருக்கும்.சிரிக்க எல்லாம் கூடாது

கங்கா நெகரா(ganga negara)இது 2ஆம் நூற்றாண்டு முதல் 11ஆம் நூற்றாண்டு வரை உள்ள இந்து அரசாங்கம்.நெகரா என்றால் மலாய் மொழியில் நாடு எனப்படும்.இதன் தமிழ் பெயர் எனக்குத் தெரியாது.ஆகவே மொழியக்கம் செய்யவில்லை.இந்த அரசாங்கம் ராஜ ராஜ சோழனால் 11ஆம் நூற்றாண்டில் வீழ்த்தப்பட்டது என்று சொல்கின்றார்கள்.
லங்கசுக்கா(langkasuka) 
இது 2ஆம் நூற்றாண்டிலிருந்து 14ஆம் நூற்றாண்டு வரை நீடித்த அரசாங்கம்.இதுவும் ஒரு இந்து மத ஆதிக்கத்தில் இருந்தது.மலேசியாவில் மிக பழமையான அரசாங்கம் என்று சொல்கின்றார்கள் 

பான் பான்(Pan Pan)
3 ஆம் நூற்றாண்டிலிருந்து 5 ஆம் நூறாண்டு வரையில் இருந்தது.இது கிளந்தான் அல்லது திரங்கானு மாநில பகுதியில் இருந்து இருக்கலாம்.இந்த அரசாங்கத்தைப் பற்றி அதிக தகவல்கள் கிடைக்கவில்லை.

ஸ்ரீ விஜயா(sri vijaya)
4ஆம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரையில் நீடித்தது.இந்த அரசாங்கத்தின் தலை நகரம் இந்தோனேசியாவில் palembang என்ற இடத்தில் இருந்தது.இவர்களின் ஆட்சி தானா மெலாயுவில் வரையில் பரவி இருந்தது.முதலில் இந்து ஆதிக்கத்தில் இருந்த இந்த அரசாங்கம் பிறகு புத்த மதத்தைப் பின்பற்ற தொடங்கினார்கள்.இந்த அரசாங்கமும் ராஜ ராஜ சோழனால் விழ்த்தப்பட்டது.

பண்டைய கெடா(kedah tua)
இது 5ஆம் நூற்றாண்டிலிருந்து இருந்த ஒரு அரசாங்கம்.இதுவும் இந்து மற்றும் புத்த மதத்தில் இருந்தது.



இந்த அரசாங்கத்தை வைத்து பார்க்கும் பொழுது வணிகத்தால் இந்தியாவின் பல கலாச்சாரங்கள் இங்கே வந்துள்ளன.இந்து மதமும் புத்த மதமும் மலேசியாவில் வருவதற்கு வணிகம் ஒரு முக்கிய பங்கற்றியது.இந்த இந்து புத்த அரசாங்கத்தின் அமைப்பு,ஆட்சி முறை,இலக்கியம்,கலை என்று அனைத்தும் இந்தியாவில் இருந்து வந்ததுள்ளது.பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தியா மண்ணிற்கும் மலேசியா மண்ணிற்கும் தொடர்பு ஆரம்பித்து விட்டது.இன்று வரையிலும் அது தொடர்கின்றது. மற்றொரு விஷயம் ராஜ ராஜ சோழனின் ஆதிக்கம் மலேசியாவில் இருந்ததுதான்.இதோடு மிகவும் முடித்துக் கொள்கின்றேன்.
ராஜ ராஜ சோழனின் ஆதிக்கத்தில் இருந்த நாடுகள்


" It was not China but India that so influenced the spiritual as well as the material life of the Malays that till the nineteenth century they owed nearly everything to her: alphabets, religion, a political system, law, astrology and mediaeval medicine, literature, sculpture in stone, metalwork and the weaving of silk. 
The Indians, who built the oldest temples and chiselled Buddhist inscriptions in Sanskrit as early as the fourth century A.D. in Kedah, must have been preceded by traders, who sailed to and fro long before Brahmins and monks and literate adventurers brought the Hindu religion and Buddhism and Sivaite ideas of royalty, and carved Sanskrit inscriptions to which India itself had not long been accustomed. Immigration in larger numbers and permanent settlement began in the first centuries of the Christian era, with commerce as the driving force. "
இந்த இடுகையில் உள்ள சில மலாய் சொற்றகளின் அர்த்தம்:
tua(துவா)-பழமை,முதுமை
negara(நெகரா)-நாடு
tanah(தானா)-மண்/இடம் 




மலாக்கா மாநிலம்







மலாக்கா மாநிலம் மலேசியாவில் வரலாற்றுக்குப் புகழ் பெற்ற மாநிலம்.இன்று இந்த மாநிலத்தில் இருந்துதான் மலேசியாவின் வரலாறு இரண்டவது பாகம் ஆரம்பம்.போன வரலாறு இடுகையில் நான் மலேசியாவின் பொற்காலம் என்று குறிப்பிட்ட காலம் 1400 முதல் 1511 வரை இந்த மாநிலத்தில் இஸ்லாமிய ஆட்சிதான்.மலாக்கா மாநிலத்தின் பெயர் எப்படி வந்தது?இந்த மாநிலத்தை தோற்றுவித்தவர் யார்?தானா மெலாயுவில் எப்படி இஸ்லாமிய மதம் வந்தது?ஏன் இந்த ஆட்சி 1511 முடிவுக்கு வந்தது என்ற பல கேள்விகளுக்கு இந்த இடுகையில் பதில் கிடைக்கும்.வாருங்கள் மலாக்கா மாநிலத்தின் வரலாறை ஒரு அலசு அலசலாம்.(யாரும் படித்து விட்டு தூங்க கூடாது சொல்லிட்டேன்)


மலாக்கா மாநிலத்தை தோற்றுவிற்றவர் பரமேஸ்வரா என்று அழைக்கப்பட்ட ஒரு இளவரசர்.பெயர் இந்து பெயர் மாதிரி இருக்கின்றது இல்லையா?இவர் இந்து நாட்டைச் சேர்ந்தவர்.பாலேம்பாங்(Palembang)எனப்படும் நாட்டை பற்றி கடந்த இடுகையில் சொல்லி இருந்தேன்.இந்த இந்து அரசாட்சியைச் சேர்ந்தவர்தான் பரமேஸ்வரா.இவர் பாலேம்பாங் நாட்டின் நடந்த அரசியல் கலவரத்தால் அந்த நாட்டை விட்டே ஓடினார்.அவர் முதலில் தஞ்சம் புகுந்த இடம் தெமாசிக்(temasik).தெமாசிக்தான் தற்பொழுதைய சிங்கப்பூர்.அங்கேயும் பிரச்சனை வந்து தெமாசிக்கை விட்டு வெளியேறினார்.பிறகு சில அரசாங்கத்தை உருவாக்க முயற்சித்தார்.ஆனால் எல்லாம் தோல்வியில் முடிந்தது.கடைசியாக அவர் வந்து சேர்ந்த இடம்தான் மலாக்கா.இந்த “மலாக்கா” பெயர் வந்ததிற்கு பல சுவராசியமான சம்பவங்களைச் சொல்கின்றார்கள்.அதில் ஒன்று பின் வரும் இந்த கதை;



மேலே உள்ள மிருகம்தான் இந்த கதையின் கதாநாயகன்/நாயகி(எனக்கு அது ஆணா இல்லை பெண்ணா என்று தெரியாது)இது ஒரு வகையான மான்.மலாயில் சாங் கஞ்சில்(sang kancil) என்று அழைப்பார்கள்.கதைக்கு போவோமா?
"பரமேஸ்வரா ஒரு நாள் காட்டில் இளைப்பாறி கொண்டிருந்தார்.அவரின் வேட்டை நாய்களில் ஒன்று இந்த மானை தாக்கியது.இந்த மான் மிகவும் சிறியது.ஆனால் தன் பின்காலால் அந்த நாயை உதைத்து தப்பித்துவிட்டது.பரமேஸ்வரா இந்த மானின் புத்திகூர்மையைக் கண்டு வியந்து போய் இதுதான் அவர் ஆட்சி செய்ய சரியான இடம் என்று முடிவெடுத்தார்.அவர் இந்த காட்சியை “மலாக்கா” எனப்படும் மரத்தின் கீழ் இருந்து பார்த்ததினால் இந்த பெயர் வந்தது என்று கூறுகின்றார்கள்."




பரமேஸ்வராவின் நல்ல நேரம் இந்த இடம் வணிகம் செய்ய மிகவும் ஏற்ற இடமாக இருந்தது.அந்த கால கட்டத்தில் மலாக்கா என்பது மிக முக்கியமான வணிக மையம்.உலகளவில் புகழ்பெற்ற வணிக மையமும் இதுதான்.வணிகத்தால் மலாக்கா மாநிலம் பல துறைகளில் மேன்மை அடைந்தது.ஐரோப்பா,இந்தியா,சீனா என்று பல நாடுகளில் இருந்து வணிகர்கள் வந்து குவிந்தனர்.இதே வணிக்கதால்தான் இந்து ஆதிக்கத்தில் இருந்த மலேசியா இஸ்லாம் மதத்திற்கு மாறியது.குஜராத் மற்றும் ஆரேபியா வணிகர்களால் இஸ்லாம் மதம் பரப்பட்டது என்று நம்படுகின்றது.பரமேஸ்வரா பாசை(Pasai) என்பப்டும் இஸ்லாம் நாட்டின் இளவரசியை மணந்து இஸ்லாம் மதத்தைத் தழுவினார் என்றும் சொல்கின்றார்கள்.சில காலத்துக்கு பிறகு மலாக்கவே இஸ்லாம் மத்தத்தைப் தென் கிழக்கு ஆசியாவில் பரப்பும் ஒரு மையமாக ஆனது.மலாக்கா சுல்தான்கள்(இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின்பு ராஜாவை சுல்தான் என்றுதான் அழைப்பார்கள்)இஸ்லாம் மதத்தைப் பரப்ப பல முயற்சிகள் எடுத்தார்கள் என்றும் கூறப்படுகின்றது.

ஆனால் இந்த மலாய் சுல்தான்கள் ஆட்சி,மலக்கா மாநிலத்தில் ஒரு நூற்றாண்டு வரையில்தான் நீடித்தது.பிறகு போர்த்துகீயர்கள் மலாக்காவின் மேல் படை எடுத்தனர்.மலக்காவின் ஒரு பிரபலமான வணிக மையம்.இதை கைப்பற்றினால் அவர்களுக்கு பெரும் லாபம் கிட்டும் என்பதற்காகதான் மலாக்காவைக் கைப்பற்ற நினைத்தனர்.கடைசியில் வெற்றி அவர்களுக்கே கிட்டியது.இதன் மூலம் முதல் அந்நிய அரசாட்சி இந்த மண்ணில் நுழைந்தது.

இந்த பதிவை நான் மிகவும் சுருக்கமாகதான் எழுதி உள்ளேன்.உங்களுக்கு இன்னும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம்.கிழே நான் சில சுட்டிகளைக் கொடுத்து உள்ளேன்.உங்களுக்கு மலாக்கா மாநிலத்தைப் பற்றி மேலும் தெரிய வேண்டும் என்றால் இந்த வலைப்பக்கங்களை உபயோக்கிக்கலாம்.


மேலும் தகவல்கள் அறிய:
http://www.questia.com/PM.qst?a=o&d=3947044http://www.regit.com/malaysia/history/history.htm
http://ms.wikipedia.org/wiki/Melaka

http://planet.time.net.my/CentralMarket/melaka101/chrono.htm

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.


No comments:

Post a Comment