Friday, 18 July 2008

ஒரு நாள் வரும்...அன்று ? விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம்...


ஒரு நாள் வரும்...அன்று!!!!!!!!!!!!!!!!!!

நீ குளிக்க மாட்டாய் , உன்னை குளிப்பாட்டுவார்கள்.
நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அனுவிக்கப்படும்.
நீ பள்ளிவாசல் போ மாட்டாய் ! உன்னை பள்ளிக்கு கொண்டு செல்வார்கள்.
நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும்.
நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள்.
அன்று உன்னை தனியாக விட்டு விட்டு , உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள்.அது எந்நேரமும், எங்கிருந்தாலும், வந்து விடும், அது தான் மௌவுத் (மரணம்)
----------------------------------------------------
விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம்

ஒவ்வொரு நாள் முடிவிலும் அன்றைய தினத்தின் நம்முடைய நடவடிக்கைகள் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் செய்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? சீர்திருத்தப்பட வேண்டியது என்ன? அதிகப்படுத்த வேண்டியது, தவிர்ந்து கொள்ள வேண்டியது என்ன? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நல்லது.
ஒவ்வொரு நாளும் இஸ்லாத்துடன் இருப்பதற்கு - உங்களது நினைவுக்குச் சில துளிகள் :-

1. அதிகாலைத் தொழுகையை, அதன் குறித்த நேரத்தில், கூட்டாக இணைந்து, பள்ளியில் தொழுதீர்களா?2. ஐங்காலத் தொழுகைகளை பள்ளிவாசலில் வைத்து, முதல் ஜமாஅத்துடன் நிறைவேற்றினீர்களா?3. இன்றைய தினம் திருமறையில் இருந்து சில வசனங்களை ஓதினீர்களா?4. ஒவ்வொரு தொழுகையின் முடிவிலும் அல்லாஹ்வின் சில திருநாமங்களை (திக்ருகளை)த் துதித்தீர்களா?5. தொழுகைக்கு முன்பும் அல்லது பின்பும் உள்ள சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றினீர்களா?6. தொழுகையின் பொழுது நீங்கள் ஓதக் கூடிய வசனங்களின் பொருள்களை விளங்கி ஓதினீர்களா?7. மரணத்தையும், மரணத்திற்குப்பின் உள்ள விசாரணை நாள் பற்றியும் நினைவு கூர்ந்தீர்களா?8. மறுமைத் தீர்ப்பு நாள் பற்றியும், அந்த நாளின் கடுமை பற்றியும் நினைத்துப் பார்த்தீர்களா?9. யா அல்லாஹ்..! என்னை அந்த சுவனத்தினுள் பிரவேசிக்க அனுமதிப்பாயாக..! என்று மூன்று முறை கூறினீர்களா?ஏனென்றால், ''யா அல்லாஹ், என்னை சுவனத்தினுள் அனுமதிப்பாயாக - என்று மூன்று முறை கூறினால், அந்த சுவனம் (இவ்வாறு) பதிலளிக்கின்றது : யா அல்லாஹ், அவன் அல்லது அவளை என்னுள் நுழைந்து விட அனுமதிப்பாயாக..! (என்று சுவனம் அல்லாஹ்விடம் மன்றாடுகின்றது). (திர்மிதீ)
10. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழி ஒன்றையேனும் இன்று வாசித்தீர்களா?11. தீமைகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும், அத்தகைய தீங்கினைச் செய்து கொண்டிருப்பவர்களிடமிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தீர்களா?12. தேவையில்லாத அதிகமான சிரிப்பு, அதிகமான ஜோக்குகள் இவற்றினைத் தவிர்ந்து வாழ முயற்சித்தீர்களா?13. செவிப்புலனையும், பார்வையையும், சிந்திக்கும் திறனையும் இன்னும் இது போன்ற எண்ணற்ற அருட்கொடைகளை உங்களுக்கு வழங்கியிருக்கும் அல்லாஹ்விற்கு, தினமும் நன்றி கூறிக் கொண்டிருக்கின்றீர்களா?14. இன்றைய தினம் ஏழைகளுக்கும், தேவையுடையவர்களுக்கும் உணவளித்தீர்களா அல்லது அவர்களுக்கு உதவினீர்களா?15. உங்களின் (தவறுகளின்) மீதும், அல்லாஹ்வின் பொருட்டும் உங்களை நீங்களே கடிந்து கொண்டீர்களா?16. பிறர் மீது கடுமையாக நடந்து கொள்வது அல்லது சுய விளம்பரத்துடன் நடந்து கொள்வதனின்றும் தவிர்ந்து கொண்டீர்களா?17. அல்லாஹ்வின் அச்சத்தால் அழுதீர்களா?18. ஃபஜ்ருத் தொழுகை அல்லது இஷாத் தொழுகைக்குப் பின் அல்லாஹ்வினை நினைவு கூர்ந்தீர்களா?19. நீங்கள் செய்து விட்ட பாவங்களுக்காகவும், இன்னும் வரம்பு மீறி நடந்து கொண்டதற்காகவும்,இஸ்திஃக்ஃபார் என்ற பாவ மன்னிப்புக் கோரினீர்களா?20. இறைவா..! உன்னுடைய உவப்பிற்குரிய வழியில், ''ஷஹீத்"" என்ற அந்தஸ்தில் நான் மரணமடைய வேண்டும் என்று அல்லாஹ்விடம் மனமுருகி வேண்டிக் கொண்டீர்களா? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''எவரொருவர் அல்லாஹ்விடம் நேர்மையான முறையில் தான் ஷஹீத் என்ற அந்தஸ்தில் மரணமடைய வேண்டும் என்று விரும்பிக் கேட்கின்றாரோ, அவ்வாறு பிரார்த்திக்கும் அவன் அல்லது அவளின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான், அவன் அல்லது அவள் - அவர்களுடைய படுக்கையில் மரணமடைந்தாலும் சரியே..! (முஸ்லிம்)
21. மார்க்கத்தில் என்னுடைய இதயத்தை நிலைத்திருக்கச் செய்வாயாக என்று பிரார்த்திப்பதுண்டா?22. உங்களது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படக் கூடிய நேரங்கள் என்று சில நேரங்கள் உண்டு. அந்த நேரங்களில் நீங்கள் அல்லாஹ்வினிடத்தில் பிரார்த்தித்ததுண்டா?23. இஸ்லாமிய மார்க்க அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கோடு, புதிய இஸ்லாமிய நூல்களை வாங்கினீர்களா?24. இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும், உயிருடன் உள்ளவர்களுக்கும் அல்லது மரணித்தவர்களுக்கும் பாவ மன்னிப்புக் கோரினீர்களா? ஏனென்றால் அவ்வாறு நீங்கள் செய்கின்ற பிரார்த்தனை ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குகின்றான்.
25. இஸ்லாம் என்ற அருட்கொடையை என்மீது அருளியதன் காரணமாக என்னை முஸ்லிமாக உருவாக்கியவனே.. உனக்கே நன்றிகள் பல என்று அவனது அருட்கொடைகள் பற்றி நினைவு கூர்ந்து நன்றி செலுத்தினீர்களா?26. உங்களது சகோதர மற்றும் சகோதரிகளை அல்லாஹ்விற்காக மட்டுமே அவனது திருப்பொருத்ததினை நாடி சந்தித்ததுண்டா?27. மக்களையும், உங்களது குடும்பத்தாரையும், உங்களது சகோதர, சகோதரிகளையும் அல்லது அண்டை அயலார்களையும் இன்னும் உங்களுடன் தொடர்புள்ள அனைவரையும் அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் அழைத்து அழைப்புப் பணி புரிந்தீர்களா?28. உங்களைப் பெற்றவர்கள் மீது கருணையுடன் நடந்து கொண்டீர்களா?29. இன்றைய தினத்தில் ஒரு பிரச்னையைச் சந்தித்து, அதன் பின்னர் : ''இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"" (அவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே நம்முடைய மீளுதல் இருக்கின்றது) என்று கூறினீர்களா?30. யா அல்லாஹ், ''நான் செய்து விட்ட தவறுகளுக்காகவும் இன்னும் அறிந்தும் செய்தவற்றுக்கும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். என்னுடைய அறியாமையின் காரணமாகச் செய்து விட்ட தவறுகளுக்காகவும் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகின்றேன்.""
31. இவ்வாறு நீங்கள் பாவ மன்னிப்புக் கோருவீர்களென்றால் அல்லாஹ் உங்களது சிறிய மற்றும் பெரிய பாவங்களை மன்னித்தருள்கின்றான். பிரார்த்தித்தீர்களா?32. மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து எழுப்பப்படவிருக்கின்ற அந்த மறுமைநாளில் இவ்வுலகில் நாம் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி, ''விசாரிக்கப்படுவதற்கு முன்னர் நம்மை நாமே விசாரித்துக் கொள்வோம்.""
33. யா அல்லாஹ்! இந்த செய்திகளை மற்ற வர்களுக்கு எத்தி வைப்பத்தோடு நின்று விடாமல் எங்கள் வாழ்விலும் பின்பற்றி, உன் பொருத்தத்தை அடைத்து, அந்த கடுமயான விசாரணை நாளில் எங்கள் அனைவதராயும் சுவன வாதிகளாத எழுப்புவாயாக

Friday, 11 July 2008

இறைதூதர்களின் கவ்முகள் (Prophet Followers Names)

இறைதூதர்களின் கவ்முகள் (சமுதாயத்தினர்)
குர்ஆனில் ஒவ்வொரு இறைதூதர்களை எதிர்த்த பல சமுகத்தினரைப்பற்றிக் கூறப்படுகின்றன? அவர்கள் யாவர் ?
1. கவ்மு நூஹ் (நூஹ் நபியின் சமூகத்தார்)
2. கவ்மு ஆது (ஹீது நபியின் ஆது மக்கள்)
3. கவ்மு தமூது (ஸாலிஹ் நபியின் தமூது மக்கள்)
4. கவ்மு இப்றாஹீம் (இப்றாஹீம் நபியின் சமூகத்தார்)
5. அஸ்ஹாபு மத்யன் (ஷீஐப் நபியின் மத்யன்வாசிகள்)
6. அஸ்ஹாபுல்முஃதபிகாத் (லூத் நபியின் மக்கள்) ஆதாரம்: அல்குர்ஆன் 9:70
(தலைகீழாக புரட்டப்பட்ட ஐந்து நகரங்கள். அவை: ஸதூம்,ஸாமூரா,ஸாபூரா, தூமா, ஆமூரா)
7. அஸ்ஹாபுர்ரஸ் (கிணற்று வாசிகள்) 25:38, 50:12,
8. அஸ்ஹாபுல் கர்யத் (கிராம வாசிகள்) 36:13
9.அஸ்ஹாபுல் அய்கத் (தோட்டவாசிகள்) 50:14, 15:78, 26:176, 38:13
10.கவ்மு துப்பவு (துப்பவு மன்னரின் மக்கள்) 50:14
11. கவ்மு ஃபிர்அவன் (பிர்அவனின் மக்கள்) 38:12
13. அஸ்ஹாபுல் உக்தூத் (குண்டத்தையுடையோர்) 85:4

Wednesday, 2 July 2008

போலீஸ் முத்திரை குறியீடுகள்!! ஒரு சிறப்பு பார்வை..

சமூகத்தில் குற்றவியல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் காவல்துறையின் வசம் உள்ளதையடுத்து, ஒரு சாதாரணக் குடிமகன் நியாயமான ஒரு காரணத்திற்காக தங்களின் புகார்களை முதலில் எடுத்துச் செல்வது நமது காவல்நிலையத்திற்கே !

காவல்துறையில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகளும், அலுவலர்களும் நேரம் – காலம் பார்க்காமல் பணியாற்றுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.

காவல்துறையினர் அணிந்துருக்கின்ற ஆடை ஒரே தோற்றத்துடன் இருப்பாதால் சில நேரங்களில் நம் மனதில் ஒருவித குழப்பம் ஏற்படுவதுண்டு.

சரி எவ்வாறு அவர்களை இனங்காணுவது ?
தமிழ்நாட்டில் காவல்துறைப் பணி செய்பவர்களுக்கென்று தனியாக அவர்கள் அணிந்திருக்கும் சட்டையில் அவர்கள் பணிக்கேற்ற குறியீடுகள் [ Insignia ] இடம்பெற்றிருக்கும். இவற்றைக்கொண்டு காவல்துறை அலுவலர்களை நாம் சரியாக இனங்கண்டு கொள்ளமுடியும்.

இதோ அவற்றின் விவரங்கள் கீழே...

Director of Intelligence Burea  [ DIB ]  

Commissioner of Police [ State ] or Director General of Police [ CP or DGP ]

Joint Commissioner of Police or Inspector General of Police [ JCP or IGP ] -
Additional Commissioner of Police or Deputy Inspector General of Police [ ADL.CP or DIG ] -
Deputy Commissioner of Police or Senior Superintendent of Police [ DCP or SSP ] 
Deputy Commissioner of Police or Superintendent of Police [ DCP or SP ]
Additional Deputy Commissioner of Police or Additional Superintendent of Police [ ADL.DCP or ASP ]
Assistant Commissioner of Police or Deputy Superintendent of Police [ ACP or DSP ]
Assistant Superintendent of Police [ Probationary Rank: 2 years of service ] [ ASST.SP ] - 
Assistant Superintendent of Police [ Probationary Rank: 1 year of service ] [ ASST.SP ]
Deputy Commissioner of Police or Senior Superintendent of Police [ DCP or SSP ] 
Deputy Commissioner of Police or Superintendent of Police [ DCP or SP ] 
Additional Deputy Commissioner of Police or Additional Superintendent of Police [ ADL.DCP or ASP ] -
Assistant Commissioner of Police or Deputy Superintendent of Police [ ACP or DSP ] -
Inspector of Police [ INS ] -
Sub-Inspector of Police [ SI ] -
Assistant Sub-Inspector of Police [ ASI ] 
Police Head Constable [ HPC ]
Senior Police Constable [ SPC ]

Police Constable [ PC ] - No Insignia 

தொகுப்பு  : மு.அஜ்மல் கான் .

Tuesday, 1 July 2008

ஆர்குட் மென்பொருள்!! ஒரு சிறப்பு பார்வை..

இணைய உலகில் இன்று தூரம் என்பது வெறும் வார்த்தையாகிவிட்டது. ‘போனதும் லெட்டர் போடுப்பா’ என்பதெல்லாம் கி.மு காலத்துக் கலைச் சொற்கள் போல அருங்காட்சியகத்துக்குச் சொந்தமாகி விட்டன. இப்போதெல்லாம் மெயிலனுப்புப்பா என்றோ, சாட் பண்றேன் என்றோ, ஆர்குட்ல சந்திப்போம் என்றோ தான் பெரும்பாலும் உரையாடல்கள் நிகழ்கின்றன.
செல்போன்ல பேசறேன் என்பது குறைந்த பட்ச வசதி என்றாகிவிட்டது. இணையத்தில் வரும் வளர்ச்சி தினம்தோறும் புதிது புதிதாய் எதையேனும் பிறப்பித்துக் கொண்டே இருக்கிறது. இன்றைக்கு இணைய உலகில், அதுவும் நட்பு வட்டாரத்துடன் இயங்க விரும்பும் அனைவருக்கும், அதிலும் குறிப்பாக இளையவர்களின் உயிர்மூச்சாக இருக்கிறது இந்த ஆர்குட்.
ஆர்குட் வேறொன்றுமில்லை. ஒரு மென்பொருள். தகவல் தொடர்புக்காகவும், நண்பர்களுடன் தொடர்பில் இருக்கவும் பயன்படக் கூடிய ஒரு மென்பொருள். மின்னஞ்சலையும், இணைய அரட்டையையும், இணைய குழுக்களையும், தனி நபர் தளங்களையும் ஒரே இடத்தில் இணைத்தால் எப்படி இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து பார்த்தால் அங்கே ஆர்குட் தெரியும்.
கூகிளில் பணிபுரியும் ‘ஆர்குட் பியூகோட்டன்’ என்பவர் உருவாக்கிய இந்த இணையத்தில் இயங்கும் இணைக்கும் வலை அவருடைய பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ஏற்கனவே ஃப்ரண்ட்ஸ்டர், மை ஸ்பேஸ், கசாக், ஹை-5 என்றெல்லாம் ஏராளம் ‘நெட்வர்க்கிங்’ தளங்கள் இயங்கினாலும் ஆர்குட் தன்னுடைய எளிமைக்காகவும், வசீகரத்துக்காகவும் வென்றிருக்கிறது.
ஆர்குட்டில் ஒருவர் தன்னுடைய தகவல்களை எழுதி இணையும் போது,  ஆர்குட்டில் இருக்கும் மற்ற நபர்களுடன் இணைவதற்கான வாய்ப்பு உருவாகிறது. இணைந்த நண்பர் இன்னொருவருக்கு அழைப்பு விடுக்க, அவரும் இணைய, அவர் இன்னொருவருக்கு அழைப்பு விடுக்க என இந்த சங்கிலி விரிவடைந்து கொண்டே செல்லும் போது பலர் ஆர்குட் டில் இணைகிறார்கள்.
இணைந்தவர்கள் தங்கள் ‘நண்பர் குழு’ வில் சேருமாறு பரிச்சயமான நபர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். அழைப்பு உண்மையாய் இருக்கும் பட்சத்தில் அழைக்கப்பட்டவர் அழைத்தவரிடம் இணைகிறார்.
இப்படி சிறு சிறு நண்பர் வட்டாரங்கள் உருவாகும் போது ஒரு நண்பர் தன்னுடைய குழுவில் இருக்கும் இன்னொரு நண்பருடைய குழுவில் இருப்பவர்களுடனோ, அவருடைய நண்பருடைய நண்பரின் குழுவில் இருப்பவருடனோ பரிச்சயமாவதற்கு மிக எளிய வாய்ப்பு உருவாகி விடுகிறது. இந்த வசதி தான் இன்றைய இளையவர்களைக் கவர்ந்து இழுக்கிறது.
கல்லூரி காலத்தில் உயிருக்கு உயிராய் பழகி பல்வேறு இடங்களுக்குச் சென்றிருக்கும் நண்பர்கள் பலர் எதேர்ச்சையாக இங்கே சந்தித்துக் கொள்ளும் போது கிடைக்கும் சுகம் அலாதியானது. இன்றைய தேதியில் கல்லூரியிலிருந்து வெளிவரும் போது மாணவர்கள் பட்டத்துடன் வருகிறார்களோ இல்லையோ ஆர்குட்டில் உறுப்பினராகி, நண்பர் குழு அமைத்துவிட்டுத் தான் வெளியே வருகிறார்கள்.
தேடல் வசதியையும் இந்த தளம் எளிதாக்கித் தருவதால் பழைய நண்பர்களின் பெயரோ, ஊரோ, பிறந்த நாளோ அல்லது தெரிந்த ஏதேனும் பிற தகவல்களையோ போட்டு அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது ஆர்குட்டில் சுலபம். அந்த நண்பர் ஆர்குட்டில் சேராமல் இருந்தாலோ, அல்லது பொய்யான தகவல்களைக் கொடுத்து இணைந்திருந்தாலோ மட்டுமே கண்டு பிடித்தல் சாத்தியமில்லை.
2004ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தியதி ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்குட் முதலில் ஆமை வேகத்தில் நகர்ந்தது. காரணம் இந்த ஆர்குட்டில் இணைய வேண்டுமானால் முன்பே இணைந்த ஏதேனும் நபர்களுடைய அழைப்பு வேண்டும் என்னும் நிபந்தனை. கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்த இந்த குழு ஜூலையில் ஒரு இலட்சம் உறுப்பினர்கள் என்னும் எல்லையை எட்டியது, செப்டம்பரில் அது இரண்டு மடங்கானது.
கடந்த 2006 நவம்பர் ஏழாம் தியதி நிலவரப்படி ஆர்குட்டில் 31,795,208 பேர் உறுப்பினர்கள் இருக்கிறார்கள், நீங்கள் இதை வாசிக்கும் போது இன்னும் பல இலட்சம் உறுப்பினர்கள் அதிகமாய் இருப்பார்கள். இன்சர்கிள் என்னும் நிறுவனம் தங்கள் சிந்தனையை ஆர்குட் காப்பியடித்திருப்பதாக வழக்கு பதிவு செய்திருக்கிறது. அதற்கு அந்நிறுவனம் தரும் ஆதாரம் இன்சர்க்கிளில் இருக்கும் ஒன்பது பிழைகள் ஆர்குட்டிலும் இருப்பது தான் !
பல இணைய குழுக்கள் ஆர்குட் உறுப்பினர்களால் நடத்தப்படுகிறது. இலக்கியம் சார்ந்த குழுக்கள், சினிமா சார்ந்த குழுக்கள், கல்வி சார்ந்த குழுக்கள், சமயம் சார்ந்த குழுக்கள் ஏன் சாதி சார்ந்த குழுக்கள் கூட ஏராளமாய் இங்கே இயங்குகின்றன. நான்கைந்து ஒத்த ரசனையுடைய நண்பர்கள் இணையும் போது அவர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஒரு குழுவை ஆரம்பிக்க இதில் ஓரிரு நிமிடங்கள் போதுமானது.
 
ஸ்க்ராப் எனப்படும் ஒரு பக்கம் ஒவ்வொரு உறுப்பினருடைய தளத்திலும் இருக்கிறது. இங்கே நண்பர்கள் அரட்டை அடிக்கிறார்கள். இந்த அரட்டைகளை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பது ஆர்குட்டில் சிறப்புச் செய்தி.
அதற்காகவே மிகவும் கவனத்துடன் உரையாடல்கள் இங்கே நிகழும், அப்படியும் மீறி ஜொள்ளு வடிக்கும் இளையவர்களை உண்டு இல்லை என்று கலாட்டா பண்ணவே கண்கொத்திப் பாம்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது ‘கெத்து தான் ஆம்பளைக்குச் சொத்து’ என்னும் குழு ஒன்று. யாராவது எங்காவது எதிர் பாலினரிடம் வழியும் போது அந்த அரட்டைப் பகுதியை அப்படியே எடுத்துப் போட்டு ‘கலாய்ப்பது’ இந்த குழுவினரின் தலையாய கடமை ! இப்படி இளைஞர்களை சுண்டி இழுக்கும் பல வசீகரங்கள் ஆர்குட்டில் விரவிக் கிடக்கின்றன.
எல்லா இணைய குழுக்களுக்கும் உள்ள குழாயடிச் சண்டைகள் இங்கேயும் உண்டு. வைரமுத்துவா வாலியா, ரஜினியா கமலா, ஐயரா ஐயங்காரா, தமிழனா மலையாளியா, இந்தியனா இந்தியாவை வெறுப்பவனா ? என்று ஆயிரக்கணக்கான குடுமிச் சண்டைக் குழுக்கள் ஆர்குட்டில் இயங்குகின்றன. ஆக்கப்பூர்வமான உரையாடல்களுக்காக இல்லாமல் பொழுதைப் போக்குவதற்காகவே பெரும்பாலான குழுக்கள் இயங்குகின்றன.
எல்லா வினைக்கும் அதற்குச் சமமான எதிர் வினை உண்டு என்னும் நீயூட்டனின் விதியை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் விதமாக வசீகரத்துடனும், நண்பர்களை இணைக்கும் பாலமாகவும் விளங்கும் ஆர்குட்டில் பல தில்லு முல்லு வேலைகளும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஆர்குட்டில் பாலர் பாலியல் தகவல்களும், வெறுப்பை உருவாக்கும் உரையாடல்களும் அதிகம் உலவுவதாகவும் எனவே ஆர்குட் பயன்பாட்டாளர்களின் தகவல்களை அனைத்தையும் கூகிள் நிறுவனம் தங்களுக்கு வழங்கவேண்டும் என்று பிரேசில் அரசு கடந்த ஆகஸ்ட் 22ம் தியதி உத்தரவிட்டது. ஆர்குட் அதை மறுத்து, தங்களிடம் உள்ள தகவல்களைத் தரமுடியாது எனவும், ஆர்குட் தகவல்கள் அமெரிக்காவை மையமாகக் கொண்டிருப்பதால் பிரேசில் அரசு தங்களுக்கு உத்தரவிட முடியாது எனவும் கூறி எதிர் வழக்கு ஒன்றைப் பதிவு செய்தது.
கடந்த அக்டோ பர் பத்தாம் தியதி ஆர்குட்டில் உள்ள ‘நாங்கள் இந்தியாவை வெறுக்கிறோம்’ என்னும் குழுவிற்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றம் கூகிள் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த தேசியக் கொடி எரியும் புகைப்படங்கள் பெரிய சர்ச்சையை உருவாக்கின. இந்த குழுவுக்கு எதிராக ‘இந்தியாவை வெறுப்பவர்களை நாங்கள் வெறுக்கிறோம்’ என்னும் புதிய குழு ஒன்று துவங்கப்பட்டது !
இந்தியாவில் தானே என்னுமிடத்தில் பத்தொன்பது வயதான கல்லூரி மாணவன் ஒருவன் தன்னுடைய கல்லூரி மாணவி ஒருவரின் புகைப்படத்துடனும், செல்பேசி எண்ணுடனும் ஆர்குட்டில் ஒரு கணக்கைப் பதிவு செய்து ஆபாச வார்த்தைகளும் அரங்கேற்றிய நிகழ்ச்சி இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த செயலுக்காக அவனுக்கு ஐந்து வருட சிறைத்தண்டனையும் வழங்கப்படலாம் என்பது தற்போதைய நிலை.
இதே போல பல குற்றங்கள் ஆர்குட்டில் நிகழ்கின்றன, ஆனால் அவை எதுவும் வழக்காகப் பதிவு செய்யப்படாததால் வெளிவரவில்லை என்று ஆர்குட் பயன்படுத்தும் பலரும் ஒப்புக்கொள்கிறார்கள். இவற்றைத் தடுக்க எந்த வழியும் ஆர்குட்டில் இல்லை என்பதால் பல முன்னெச்சரிக்கை வாதிகள் தங்கள் புகைப்படங்களுக்குப் பதிலாக ஐஸ்வர்ய ராயையோ, அமிதாப்பச்சனையோ துணைக்கு அழைக்கிறார்கள்.
ஆர்குட்டில் புகைப்படங்களையோ, தொலைபேசி எண்களையோ பயன்படுத்த வேண்டாம் என்கிறது காவல்துறை. ஆனால் இணையத்தில் நண்பர்களை நிஜமான அக்கறையுடன் தேடுபவர்களுக்கு இந்த தகவல்கள் மிகவும் இன்றியமையானவையாக இருக்கின்றன. வேலை வாங்கித் தருகிறேன் என்று இயங்கும் நூற்றுக்கணக்கான வலைத்தளங்களில் தொலை பேசி எண்களைத் தருகையில் ஆர்குட்டில் தருவதில் தவறில்லை எனும் வாதங்களும் எழுகின்றன.
புகைப்பட நிலையங்களோ, செல்போன் கேமராக்களோ யாருடைய புகைப்படத்தை வெண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் எனும் அபாயம் தற்போதைய சூழலில் நிலவுகிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. தினசரி நாம் எதிர்கொள்ளும் கிரெடிட் கார்ட் தேவையா, வீட்டு கடன் தேவையா, வேலை தேவையா எனும் தொலைபேசி அழைப்புகளே, நம் தொலை பேசி எண்கள் நம் அறிவுக்கு எட்டாமலேயே பல இடங்களில் பதிவாகி இருக்கின்றன என்பதற்குச் சான்று.
ஆர்குட்டில் பாலியல் தவறுகளை ஊக்குவிக்கும் செயல்கள் பல நடக்கின்றன. அதற்காகவே இயக்கும் குழுக்களில் ஏராளமான பெண்களின் புகைப்படங்களும், தகவல்களும் காணக்கிடைக்கின்றன என்பது அதிர்ச்சியான செய்திகளில் ஒன்று. டேட்டிங் என்னும் பெயரில் இயங்கும் நூற்றுக்கணக்கான குழுக்கள் மாநில வாரியாக பெயர்களை வைத்துக் கொண்டு பாலியல் தவறுகளை நடத்தி வருவது எதிர்கால இளைஞர்களின் கவனத்தைச் சிதறடிக்கும் முக்கிய காரணியாய் விளங்குகிறது.
பாலியல் சார்ந்த இணைய தளங்களை துழாவுவது பெரும்பாலான நிறுவனங்களிலும், கல்லூரி வளாகங்களிலும் தடை செய்யப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் ஆர்குட் அதற்குரிய வசதியைச் செய்து தரும் விதமாக பல பாலியல் கதைகள், படங்கள், வீடியோக்கள் என குழுக்களை அனுமதித்திருப்பது நிறுவனங்களிலும், கல்வி நிலையங்களிலும் செயல்படும் ஆர்குட் பயன்பாளர்களின் நேரத்தை விழுங்கி ஏப்பம் விடுகிறது.
ஆர்குட் யாருக்குப் பயன்படுகிறதோ இல்லையோ அதை உருவாக்கியவருக்கு கோடிக்கணக்கில் பணத்தை வாரிக்குவிக்கிறதாம். தற்போது கணினி துறையில் டாக்டர் பட்டத்துக்காய் முயன்றுவரும் இவருக்கு ஆர்குட் சம்பாதித்துக் கொடுக்கும் பணத்தை நினைத்துப் பார்த்தால் தலை மட்டுமல்ல, முழு உடலுமே சுற்றுகிறது.  2009ல் உலகின் பணக்காரர்களில் ஒருவராக மாறிவிடுவார் என்று கணிக்கப்பட்டுள்ள இவருக்கு தினசரி 20,000 புதிய நண்பர்கள் சேர்கிறார்களாம். 85ஆயிரம் தகவல்கள் இவருக்காய் தினசரி காத்துக் கிடக்கிறதாம் சுமார் 25 பேரை இதற்காகவே நியமித்திருக்கிறாராம் ஆர்குட்.
ஒருவர் ஆர்குட்டில் இணையும்போது இவருக்கு பன்னிரண்டு டாலர்களும், யாரோ யாரையோ நண்பராய் இணைக்கையில் பத்து டாலர்களும், அதற்கு அடுத்த நிலை நண்பர் இணைகையில் எட்டு டாலர்களும் என யாரோ எங்கோ ஆர்குட்டில் செய்யும் பயன்பாட்டிற்கு ஏற்ப இவருக்கு பணம் கொட்டுகிறது. ஒரு புகைப்படத்தை ஆர்குட்டில் இணைக்கையில் இருநூறுடாலர்கள், யாராவது ஒரு செய்தி அனுப்புகையில் ஐந்து டாலர்கள் , தளத்தை விட்டு வெளியே வருகையில் ஒரு டாலர், என்று எல்லா சிறு சிறு செயல்களுக்கும் இவருக்குக் கிடைக்கும் பணத்தை நினைத்துப் பார்த்தால் இவருடைய ஒரு நாள் வருமானமே ஒரு நாட்டின் வறுமையைப் போக்க இயலும் என்று தோன்றுகிறது. ஆனால் ஆதாரபூர்வமாக கூகிள் நிறுவனமோ, ஆர்குட்டோ  இதை வெளியிடவில்லை. இந்த தகவல்கள் இணையத்தில் உலவிக் கொண்டிருக்கின்றன.
மேடுகளும் பள்ளங்களும் நிறைந்த வாழ்க்கையில் பயன்களும், பிரச்சனைகளுமாகவே அனைத்து நிகழ்வுகளும் இருக்கின்றன. எதையும் சரியானவற்றுக்காய் சரியான விதத்தில் பயன்படுத்துகையில் மனித குலம் பயன்களைப் பெற்றுக் கொள்கிறது. தவறுகளை நோக்கி நகர்கையில் அனைத்து கண்டுபிடிப்புகளும், புதிய விஷயங்களும் அதன் அர்த்தத்தை இழந்து விடுகின்றன. கனியிருக்கக் காய்கவர்ந்தற்று என்று தான் ஆர்குட் பயன்பாட்டாளர்களையும் பார்த்துச் சொல்லத் தோன்றுகிறது.
தொகுப்பு : மு.அஜ்மல் கான் .