Thursday 6 December 2007

ஒரு பெண்ணின் கல்வி கனவையாவது தீயிட்டு கொளுத்தி இருக்கும்?

சமீபத்தில் ஒரு வார பத்திரிக்கையில்  ஒரு தலையங்கம் பெண்கள் ஹாஸ்டலில் தண்ணி அடிக்கிறார்கள் , தம்  அடிக்கிறார்கள்,ஆணுறை கிடக்கிறது என்றெல்லாம் நான் அந்த கட்டுரையை படிக்கவில்லை என்றாலும் அதில் என்ன எழுதி இருந்திருப்பார்கள் என்பதை ஒரு மாதிரியாக கணிக்க முடிந்தது...என்ன எழுதி இருப்பார்கள் அதில் கலாச்சாரம் கெட்டு விட்டது..,  மேற்கத்திய கலாச்சார பித்து பிடித்து அலைகின்றனர், கல்லூரி பெண்கள் கற்பை பெரிதாக மதிப்பதில்லை , மது , சிகரெட் எல்லாம் சாதாரணம் என்று சொல்லி அதை செய்யும் பெண்களிடம் பேட்டி கண்டிருப்பார்கள் அதை அட்டை படத்தில் போட்டு ஒரு சின்ன பரபரப்பை உண்டாக்கி சுழற்சியை கூட்டி காசு பார்த்து இருப்பார்கள்.தலைவர் பிரபாகரன் இறந்ததாக அறிவிக்க பட்ட போது அவர் பற்றிய உண்மையான விவரங்கள் தெரியாமல் கிராபிக்சில் அவர் படத்தை போட்டு காசு பார்த்த கயவர்கள்  தானே இவர்கள் .இந்த பதிவை  படிக்கும் ஒருவர் கூட அந்த பத்திரிக்கையை வாங்கி விட கூடாது என்ற காரணத்தினாலே அந்த பதிப்பு வந்து ஒரு மாதத்துக்கு பிறகு அதை பற்றி எழுதுகிறேன்..,
        அந்த கட்டுரையின் மூலம் என்ன பாதிப்பு வந்துவிடும் என்று நீங்கள் கருதலாம் . முதல் பாதிப்பு அதை படிக்கும் பட்டம் பெறாத கிராமத்து பெற்றோர்கள் எப்படி தங்கள் பெண்களை நகரத்தில் தங்கி படிக்க அனுமதிப்பார்கள்.என்னால் உறுதியாக சொல்ல முடியும் அந்த கட்டுரை நிச்சயம் ஒரு பெண்ணின் கல்வி கனவையாவது தீயிட்டு கொளுத்தி இருக்கும்..,இன்னொன்று அதில் நிரம்பி வழியும் ஆணாதிக்க பார்வை இதுவே ஒரு ஆண்கள் ஹாஸ்டலில் தண்ணி அடிக்கிறார்கள் தம் அடிக்கிறார்கள் என்று ஒரு தலையங்கம்  போடுங்கள் படிப்பவர்கள் சிரிப்பார்கள். அப்படி ஏதும் நடக்காத ஆண்கள் ஹாஸ்டல் பற்றி  வேண்டுமானால் தலையங்கத்தில் வரலாம்..,

               கற்பு? ஒரு பெண் திருமணதிற்கு முன்போ பின்போ கணவனை தவிர வேறு ஆண்களுடன் உறவு கொண்டால் அவளுக்கு தான் எத்தனை பெயர்கள் .., தேவுடியாள்,குச்சிக்காரி,விபச்சாரி,வேசி இன்னும் அவர் அவர் ஊருக்கு ஏற்றார் போல் நிறைய பெயர்கள்..,இத்தனை பெயர்களுக்கும் அதன்  எதிர்பாலினத்தில் பெயர்களே இல்லை என்பது தானே இங்கு நிலைமை ..,

No comments:

Post a Comment