Wednesday 5 January 2011

தமிழன் ஆதிகால அணிகலன்கள் Vs தற்கால அணிகலன்கள் !! ஒரு வரலாற்று பார்வை..

நகை மோகம் நங்கையரை மட்டுமின்றி இன்று ஆடவரையும் ஆட்டிப்படைகிறது.அந்த காலத்தில் புழக்கத்தில் இருந்த இதுப் போன்ற நகைகளை இக்காலத்தில் அதிகம் பயன்படுத்தா விடினும் நமது முன்னோர்கள் ஆண்களும் பெண்களுமாக இவைகளை அணிந்து வந்தார்கள் என்று அறிகின்ற போது அவர்களை நினைத்து ரொம்ப பெருமையாகத் தான் உள்ளது.









தமிழர்கள் அணிந்துவந்த ஆதிகால அணிகளின் (நகைகளின்) பெயர்கள் கீழ்கண்டவாறு.


1. தலையணி, தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப் பூ, அடுக்குமல்லிப் பூ, இலை, அரசிலை, பதுமம், சரம், பூரப்பாளை, கோதை, வலம்புரி.  

2. காதணி தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை, கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல.;

3. கழுத்தணிகள் கொத்து, கொடி, தாலிக்கொடி, கொத்தமல்லிமாலை, மிளகு மாலை, பிச்சியரும்பு மாலை, நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை, சுண்டைக்காய் மாலை, கடுமணி மாலை, தாழம்பூ அட்டிகை, மாங்காய் மாலை, மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, அரும்புச்சரம், மலர்ச்சரம், கண்ட சரம், கண்டமாலை, கோதை மாலை, கோவை.

4. புய அணிகலன்கள் கொந்திக்காய்

5. கை அணிகலன்கள் காப்பூ, கொந்திக்காய்ப்பூ, கொலுசு

6. கைவிரல் அணிகலன்கள் சிவந்திப் பூ, மோதிரம், அரும்பு, வட்டப் பூ

7. கால் அணிகலன்கள் மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய்க் கொலுசு, ஆலங்காய் கொலுசு

8. கால் விரல் அணிகள் கான் மோதிரம், காலாழி, தாழ் செறி, நல்லணி, பாம்பாழி, பில்லணை, பீலி, முஞ்சி, மெட்டி

9. ஆண்களின் அணிகலன்கள் வீரக் கழல், வீரக் கண்டை, சதங்கை, அரையணி, அரைஞாண், பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை, கடகம், மோதிரம், கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம், முத்துவடம்,. கடுக்கண், குண்டலம். ஆகியனவாகும்.

அந்த காலத்தில் புழக்கத்தில் இருந்த இதுப் போன்ற நகைகளை இக்காலத்திலும்  அதிகம்  நமது ஆண்களும் பெண்களுமாக இவைகளை அணிந்து  வருகின்றனர் .
ஆனால் இந்த காலத்தில் அணிகளின் (நகைகளின்) பெயர்கள் கீழ்கண்டவாறு..

1.கம்மல் 
2. கடுக்கன் 
3. தோடு 
4. ஜிமிக்கி
 5. குண்டலம் 
6. வளையம்
 7. மாட்டல் 
8. நெத்திச்சுட்டி, 
9. நெத்திபட்டம்,
 10. ராக்கடி, 
11. ஓலை, 
12. பாம்படம்,
 13. சூரியன், 
14. சந்திரன், 
15.ஜடநாகம்,
16. சுங்கு, 
17. லோலாக்கு, 
18. புல்லாக்கு, 
19. மூக்குத்தி, 
20. பேசரி, 
21. அட்டிகை,
 22. ஹாரம் ,
23. சங்கிலி, 
24. முறுக்குச்சங்கிலி, 
25. மைனர்சங்கிலி , 
26. மாலை, 
27. முத்துமாலை, 
28. மணிமாலை, 
29. காசுமாலை,
30. கல்லுமாலை, 
31. கங்கணம், 
32. பதக்கம், 
33. புலி நகம், 
34. வளையல், \
35. கல்வளையல் 
36. காப்பு, 
37. மோதிரம், 
38. நெலி மோதிரம், 
39. வங்கி மோதிரம், 
40. வைர மோதிரம்,
 41. ஒட்டியானம், 
42. அர்னாகயிறு, 
43. அரஞ்சாங்கயிறு, 
44. கொலுசு, 
45. கால்காப்பு, 
46. சலங்கை, 
47. சிலம்பு, 
48. தண்டை, 
49. மிஞ்ஜி, 
50. மெட்டி.

இதெல்லாம் டூப்பு.... தாலி தான் டாப்பு... என்னங்க இப்படி எங்கோ கேட்ட மாதிரி இருக்கா....ஆங்....அதே அதே, கந்தசாமியின் இன்ஸ்பிரேஷன் தான் நல்லாயிருக்கா!.


அந்த காலத்தில் புழக்கத்தில் இருந்த இதுப் போன்ற நகைகளை இக்காலத்தில் அதிகம் பயன்படுத்தா விடினும் நமது முன்னோர்கள் ஆண்களும் பெண்களுமாக இவைகளை அணிந்து வந்தார்கள் என்று அறிகின்ற போது அவர்களை நினைத்து ரொம்ப பெருமையாகத் தான் உள்ளது.ஆனால் இந்த காலத்தில் அதுவும் இதையெல்லாம் போட்டுக்கொண்டு தைரியமா வெளியில் போய் வர முடியுமா? ஒரு குண்டு மணி நகையை வாங்க போனாலே அதை நூறு வாட்டி தொட்டு தொட்டு சரி பார்த்துக் கொண்டு ரொம்ப உசாராய் இருந்தாத் தான் அத்தோடு வீடு போய் சேர முடியும், என்ன நான் சொல்றது சரி தானுங்க .

தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment