Tuesday 19 May 2009

மந்திரவாதிகளை சமுதாயத்திலிருந்து ஒதுக்க வேண்டும்?

ஒருவர் நமக்கு எதிரியாக கருதப்படுகிற இன்னொரு நபருக்கு கைகால்களை முடக்குவது, முறிப்பது, நோயை உண்டாக்குவது, பைத்தியமாக்குவது, கணவன் மனைவியைப் பிரிப்பது, பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கொடுப்பது / தடுப்பது, வியாபாரம் செழிப்பாக வளர / முடக்க என பல்வேறு பிரச்சனைகளுக்கும் நமது சமுதாயத்தை சார்ந்த ஏராளமானோர் மார்க்கத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகிற மந்திரவாதியை நாடிச்செல்கிறார்கள்.

அதாவது ஒருவருக்கு பிள்ளை பிறந்து நடக்க வேண்டிய வயதில் நடக்காமல் இருந்தானாம் இதனால் பயந்து போன அந்த பிள்ளையின் பெற்றோர்கள் பக்கத்துக்கு ஊரில் இருக்கும் ஹஜரத்திடம் போய் விவரங்களை சொல்லியுள்ளார் அவர் ஒரு தாயத்தை கொடுத்து இதை இடுப்பில் கட்டுங்கள் எல்லாம் சரியாகிவிடும் என கூற அதன் படியே செய்துள்ளனர் அந்த பெற்றோர்கள் .

பின்னர் நாட்கள் உருண்டோடின . வெளிநாட்டில் இருந்து வந்த பிள்ளையின் சிறிய தகப்பன் இடுப்பில் இருந்த தாயத்தை மவுனமாக கழட்டி இதில் என்ன உள்ளது என பார்க்க உள்ளே இருந்தது ஒரு பேருந்து டிக்கட் மட்டுமே...

அந்த ஹஜரத்து நடக்காத பிள்ளைக்கு ஓடும் பஸ்ஸின் டிக்கட்டை கொடுத்தது ஒரு வேலை அந்த பிள்ளை பஸ்ஸை போல ஓட வேண்டும் என்பதாலா?
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் அல்லாஹ் தான் நல வழிகாட்ட வேண்டும் . சகோதரர் நிஜாமின் அறிவுரைபோல் வாழ்ந்தால் சங்கடங்கள் இனியேது?
ஒருவருக்கு உடல்நிலை பாதிக்க பட்டிருந்தாலோ !
ஒரு பெண்ணுக்கு இருபது வயது ஆகியும் கல்யாணம் ஆகமளிருந்தாலோ !
கல்யாணம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாவிட்டாலோ !
மனநிலை பாதித்து இருந்தாலோ !
இதுப்போன்று பல் வேறு காரணங்களால் சைத்தான் ஈசியாக வலிகேடான விசயங்களில் கொண்டு செல்கிறான்.

ஒருவாக்கு உடல் நிலை சரியில்லை,வயது ஆகியும் கல்யாணம் நடக்கவில்லைஎன்றாலும்,குழந்தை பாக்கியம் இல்லாவிட்டாலும்,மனநிலை பாதித்து இருந்தாலும் முதலில் அல்லாஹ்வின் பக்கம் நீண்டநேரம் தொழுகைக்குப்பிறகு இருக்கைகளையும் ஏந்தி மனத்துமையிடன் துஆ கேக்கவேண்டும்.

சிர்க்கான காரியங்களில் இறங்கினால் நிரந்திரா நரக வாசியே !!!


இன்னும் எத்தனை காலத்திற்கு நமது சமுதாயம் இணைவைப்பிலும் மூட நம்பிக்கையிலும் தங்களுடைய மூளையை அடகு வைத்துக் கொண்டிருக்கும். இந்த நம்பிக்கையின் மூலமாக எதை சாதித்து கொண்டார்கள். மேலும் இந்த தவறான நம்பிக்கையின் மூலமாக இந்த அறியாத மக்கள் பயனடைந்தார்களா அல்லது தங்களுடைய பொருளாதாரத்தை இழந்தார்களா ? இந்த அறியாமையை பயன்படுத்தி காசு பறிக்கும் கொள்ளை கும்பலை நாம் அடையாளம் காண வேண்டும்.
மந்திர வாதிகளுக்கு முன் மதி மயங்கிய மக்கள்.

காசை பார்க்கும் ஹஜரத்துமார்கள் சிர்க்கைப் பற்றி மறைப்பதுதான்.அறியாத மக்கள் பெரும் பாவிகளாக போகிறார்கள்.

அடியாத மாடு படியாது என்பார்கள்.அதுபோல் நல்ல அறிவுரைக்கு படியாத மக்கள் அடிப்பட்டால் தான் திருந்துவார்கள் போலும்.


செய்வினை, சூனியம், தாயத்து என்று ஏமாற்றும் போலி மந்திரவாதிகளை சமுதாயத்திலிருந்து ஒதுக்க வேண்டும். இவர்களால் பயனடைந்தவர்களை விட தங்கள் பொருளாதாரத்தையும் நேரத்தையும் அறிவையும் இழந்தவர்கள் தான் அதிகம். எனவே நம் சமுதாய மக்கள் இவைகளின்பால் தங்கள் கவனத்தை செலுத்தாமல் அல்குர்-ஆனை ஓதுவதிலும் அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை ஆழ்ந்து சிந்திப்பதிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிகாட்டுதல்களில் இருந்து பெறப்படும் செய்திகளை அறிந்து அதன்படி நடப்பதிலும் நமது சமுதாயம் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். அல்லாஹ் அனைத்து முஸ்லிம்களையும் உண்மையான முஸ்லிம்களாக வாழ்ந்து மரணிக்க செய்வானாக ! ஆமின் !

No comments:

Post a Comment