Tuesday 12 July 2016

தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சி பற்றி படிக்க படிக்க ஆச்சர்யத்தின் எல்லைக்கே போன செய்தி!! ஒரு சிறப்பு பார்வை..

Image result for பொருளாதார சீர்திருத்தம்25 வருஷத்துக்கு முன்னாடி மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தம் தான் நமக்கு இன்னிக்கு வரை சோறு போடுது...ஆனா நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறதுங்கிறது நம்முடைய அறியாமைன்னு நினைச்சுக்கனும், அதனால நாம நம்மள மாத்திக்க வேண்டிய சூழலுக்கு நெருங்கிகிட்டு இருக்கோம்.
கீழே சொல்லப்பட்டுள்ள கருத்தில் மாற்றுக் கருத்துக்கள் நமக்கு நிச்சயமா இருக்கத்தான் செய்யும். ஆனா சொல்லப்பட்டுள்ள செய்தியை ஆராய்ஞ்சு பாக்கும்போது பல விஷயங்களில் அதில் புதைந்து கிடக்கும் உண்மைகளும், தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியும் வருங்காலத்தில் மிகப்பெரிய மாற்றத்த‍ை உருவாக்கும் என்று நம்பத்தான் வேண்டியுள்ளது..
1998 ல தொடங்கின kotak நிறுவனம், ஒரு லட்சத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது...! இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல...! வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்கமுடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல. Film industry photo industry ல் இப்போ ஃபிலிம்களே கிடையாது..
ஃபிலிம் மற்றும் பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்ங்கறது தான் இந்தப்பதிவு மூலம் சொல்லப்படுது.
தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, STD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு?? இப்படி பலதரப்பட்ட தொழில்கள் தயாரிப்பு நிறுவனங்கள் உலகளவிலே காணாமலேயே போய்டுச்சு. எதை எல்லாம் நாம இதுக்கு மேல புதுசா எதுவம் வராதுன்னு நினைச்சோமோ அது எல்லாமே மாறி மாறி பழசு எல்லாம் காணாமலேயே போய்க்கிட்டு இருக்கு..
எதனால ? ஏன் இப்படின்னு கேட்டா?
டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence. சிம்ப்பிளா சொல்லனும்னா 'Software' என்கிற மென்பொருள். மனுஷ மூளையை விட திறமையா செயல்படும் இவைங்க தான் மேலதிகமான காரணமா இருக்கும்.!
உதாரணத்துக்கு சொல்லனும்னா...சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வெச்சிக்காம, 'Bharat Matrimony' வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக்கொடுக்குது... கமிஷனோட...! இல்லீங்களா..?
'Ubar' ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வெச்சிக்காம, இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது...!
இந்த மாதிரி software tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களை பாதிக்கும் ?
அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்: நமக்கு ஒரு சட்டச்சிக்கல் வருது...என்ன பண்றதுனு தெரியலை...! என்ன செய்வோம்? ஒரு நல்ல வக்கீலா பார்த்து..யோசனை கேப்போம்...! சிக்கலோட தீவிரத்தை பொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ நம்ம கிட்ட அவரு fees வாங்குவாரு..! இல்லையா...!
இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் ஈசியா செஞ்சு கொடுத்தா ? நம்முடைய சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே, IPC Section னோட சரியான விவரங்கள அந்த கம்ப்யூட்டர் கொடுத்தா ? நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலைல துண்ட போட்டுக்கிட்டு தானே போகணும்...!
IBM Watson, அப்படீங்கற நிறுவனம் இப்ப அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு. ஒரு லாயரால அதிகபட்சம் 70% தான் ஒரு சட்டச்சிக்கலுக்கு தீர்வு சொல்லமுடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது...!
அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்குப்படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..! அட யாருமே வராத கடையில இவங்க இனி யாருக்கு டீ போட்டுக் கொடுப்பாங்க ?
ஆடிட்டர்கள், டாக்டர்கள்ல இருந்து ப்ரோக்கர்கள் வரை நிலைமை அதே தான்...! 80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி ஆளுங்க தேவை இல்லை..கம்ப்யூட்டரே பாத்துக்கும். 'Subject Matter Experts' ன்னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பிழைக்க முடியும்...!
2018ல Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்.(நம்ம ஊர்ல இல்லீங்க..பணக்கார நாடுகளோட சில நகரங்களில் மட்டும்) அதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா ஒட்டுமொத்த ஆட்டோ மோட்டிவ் சம்பந்தப்பட்ட எல்லா நேரடியான, மறை முகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்.

அடுத்த 10 வருஷத்துல நிலைமை இதுதான்: யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது,. 'Driving License' என்ற ஒன்று காணாமல் போயிருக்கும். பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு எடத்துக்கு போகணும்னா..நம்ம செல்லில் இருந்து..ஒரு மிஸ் கால்..இல்ல..SMS...! அடுத்த ரெண்டு நிமிஷத்துல நம்ம முன்னாடி தானா ஒரு கார் வந்து நிக்கும். நாம போகவேண்டிய எடத்துக்கு அழகா கொண்டு போய் விட்டுடும். கிலோமீட்டருக்கு இவ்வளோனு நாம காசு கொடுத்தா போதும். பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்.
இதனால என்னவாகும்ன்னா...அடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான். சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம். 'Accident' ரொம்ப கொறஞ்சு போய்டும். சிட்டில 'கார் பார்க்கிங்'காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் வாகனங்களின் விற்பனை 90% கும் கீழ போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலை போகும்.
Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி கார்கள் இருக்கும். எல்லாமே மின்சாரத்துல தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10-15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.
இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு நாம நெனைச்சா..? நம்‍மோட நினைப்பை மத்திக்கனும்... இன்னைக்கு பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்.. குறிப்பா சீனா & இந்தியா. ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்க படற நிலைமையை செல்ஃபோன்கள் மாத்திடுச்சு. 15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா ??
சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?
முக்கியமா 'Banking' எனப்படும் வங்கி சேவைகள். 'BitCoin' னு ஒண்ணை பத்தி கேள்விப்பட்டு இருந்தா ஓக்கே. இல்லன்னா கூகுள்ல தேடும்போது அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு.
அப்புறம், 'Insurance' எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்ம அடி வாங்கும்.
ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும். சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும். வீட்டு பக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்.
விவசாயம்: இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள். நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நெலமை வந்துடும்.
காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ. 
'Moodies'ங்கற ஒரு App, இப்பவே நம்ம முகத்தை scan செஞ்சு நம்ம மூடு என்னன்னு சொல்லுது...2020ல நாம பொய் சொல்றோமா இல்ல உண்மைய சொல்றோமானு அச்சு பிசகாம சொல்லிடும். யாராலயும் ஏமாத்த முடியாது.
இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க.
Tricoder X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்டுக்கு வருது. நம்ம செல் ஃபோன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, நம்மளோட கண்ணை ஸ்கேன் பண்ணும். நம்மளோட ரத்த மாதிரியை ஆராயும். நம்ம மூச்சு காத்தை அலசும். நம்ம உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிப்புடும். அப்புறம் என்ன 2036ல 100 வருஷம் வாழறதெலாம் சாதாரணமா விஷயமா மாறிடும்.
அதனால்..மக்களே...! இன்னைக்கு பரபரப்பா இருக்குற 80-90% தொழில்கள் காணாம போய்டும்..புதுசா தொழில்கள் வரும்..ஆனா வேலையில்லா திண்டாட்டம் கூடிகிட்டே போகும். மொத்தத்துல, சூதானமா இருந்தாதான் பொழப்பு ஓடும்! புரிஞ்சு நடத்துக்கனும்..
இந்த உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது...

ஆக்கம்  மற்றும்  தொகுப்பு  : மு. அஜ்மல்  கான்.

No comments:

Post a Comment