Friday 21 September 2018

கனடாவில் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மாணவி தூத்துக்குடி சோபியாவின் தமிழகத்தின் கூட்டு மனசாட்சியின் கோபக் குரல். !!

குருவியை சுடுவதுபோல் 15 உயிர்களை சுட்டுத்தள்ளி அதன் சுவடு கூட இன்னும் மறையவில்லை. அதற்குள் நீங்கள் அந்த நச்சு ஆலையை திறப்பதற்கு எல்லா வேலையும் செய்கிறீர்கள். நாங்கள் அதை ஏன் என்று கூட கேட்க கூடாது என்று நினைக்கும் உங்கள் பாசிசத்திற்கு பதிலடிதான் சோபியாவின் தனிமனித கோபக்குரல்.
தூத்துக்குடி சோபியாவின் க்கான பட முடிவுதூத்துக்குடி சோபியா, நடுவானில், பா.ஜ.க மாநிலத் தலைவரின் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டு பாசிச பா.ஜ.க ஒழிக என்று கோஷமிட்டது சற்று பொருத்தமற்றதாகவும் சக பயணிகளுக்கு தொந்திரவு தருவதாகவும் அமைந்திருக்கலாம்..
அவர் கனடாவில் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மாணவி...
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அவருக்கு ஒரு ஆதங்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
பகுத்தறிவாளர்கள் கொல்லப்படுவது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்....
கறுப்பு பண ஒழிப்பு என்ற பெயரில் சாமானிய மக்கள் வங்கிகள் வாசலில் சுருண்டு விழுந்து மடிந்தது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
சிறு குறு தொழில்கள் அடியோடு அழிந்தது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்....
ரபேல் கொள்முதலில் மர்மம் நீடிப்பது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
உலகமெல்லாம் மலிவாக விற்கப்படும் போது இந்தியாவில் மட்டும் பெட்ரோல் விலை எகிறுவது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
கிராமப்புற மாணவர்களின் வயிற்றில் அடித்த நீட் தேர்வு, வலிந்து திணிக்கப்பட்டது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
அத்தேர்வை விலக்கக் கோரி அனுப்பப்பட்ட சட்ட மன்ற தீர்மானம் எங்கே உள்ளது என இன்னும் விசாரித்துக் கொண்டே இருப்பது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
ஒற்றை வரி விகிதம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட GST வரிவிகிதம் ஏற்படுத்திய விலையேற்றம் கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்....
உலகம் முழுதும் சுற்றி பெரு முதலாளிகளுக்கு ஒப்பந்தங்கள் கொண்டு வருவது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்....
வங்கிகளில் மக்கள் பணம் குறிப்பிட்ட சிலரிடம் வராக் கடனாய் கை மாறிப்போனது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
அர்பன் நக்ஸல்கள் உள்ளிட்ட புதிய புதிய கண்டுபிடிப்புகள் கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
மண்ணையும், மலையையும், இயற்கை வளங்களையும், மீத்தேன், நியுட்ரினோ என ஆழக்குழி தோண்டி புதைப்பது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
புதைந்து போன தொல்நாகரீக கீழடி அடையாளங்களை மீட்டெடுக்க மறுப்பது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
ஒரு பேரிடர் நிகழும் போது உதவிக்கரம் நீட்டாமல், ஒவ்வாத கருத்துக்களை உதிர்ப்பது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
அவர் ஒரு குடிமகள்...
இவ்வளவிற்கு பிறகும் பாசிசம் வாழ்க என்றா கோஷம் இடுவார்???
பாசிசபாஜக ஆட்சி ஒழிக என்று தான் கோஷம் போடுவார்.
சோபியாவை 15 நாள் சிறையில் வைத்து உங்கள் மனதை தேற்றிக் கொள்ளலாம் என்று நீங்கள் நினைத்தால் உங்களை விட பைத்தியகாரர்கள் மூளை இல்லாதவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் சோபியா தனிமனித பெண்ணல்ல தமிழகத்தின் கூட்டு மனசாட்சியின் கோபக்குரல்.
ஆயிரம் ஆயிரம் சோபியாக்கள் தமிழக மண்ணில் உங்களை நோக்கி விரல்களை நீட்ட தயாராகி விட்டார்கள் என்பதன் ஆரம்ப கட்டம் தான் உங்கள் முகத்துக்கு நேராக அந்த பெண் சொன்ன பாசிச பாஜக ஒழிக எனும் குரல்.

தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment