Tuesday, 19 June 2007

ஜின்னா - இந்தியா, பிரிவினை, சுதந்திரம் - முக்கிய தகவல்கள்....


 "ஜின்னா - இந்தியா, பிரிவினை, சுதந்திரம்" என்ற பெயரில் வெளியுறவுத்துறை
 முன்னாள் அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில்
ஒருவருமான ஜஸ்வந்த் சிங் எழுதியதை அடுத்து பாஜகவில் பல அதிரடி
 மாற்றங்கள் நிகழ்ந்தன. பாஜகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் நாட்டுக்கு
 நல்லதல்ல என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் மன்மோகன் சிங்
கருத்து தெரிவிக்கும் அளவு பாஜக நிலைகுலைந்தது. ஜஸ்வந்த் சிங் அந்த
 புத்தகத்தில் அப்படி என்னதான் கூறியுள்ளார் என்பதை இந்நேரம்.காம்
 வாசகர்களுக்கு அறியத் தருகிறோம்.ஜின்னா, இந்தியராக இருந்தார். இந்திய
 மண் தான் அவரை பெரும் தலைவராக உருவாக்கியது. ஒருங்கிணைந்த
 இந்தியாவின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டுள்ளார்.
<!· சிறுபான்மையினர் என்ற கோஷம், பிரிவினைக்காகவே எழுப்பப்பட்டது. ஜின்னா பெடரல் அமைப்புடன் கூடி இந்தியா அமைய விரும்பினார். முஸ்லிம்கள் தனி அதிகாரத்துடன் வாழ விரும்பினார். இந்த கோஷம், படிப்படியாக எல்லா மட்டங்களிலும் பரவி, ஐக்கிய இந்தியா என்ற பெரிய மாளிகையை தகர்க்கும் அபாயத்துக்கு போனது. இதற்கு தீர்வு என்ன? "பிரிவினை ஒன்று தான் வழி' என்கிறார் ஜின்னா. நேரு, வல்லபாய் படேல் மற்றும் காங்கிரசில் உள்ள தலைவர்கள் இதற்கு ஒப்புக்கொள்கின்றனர். இப்படித்தான் பாகிஸ்தான் உதயமானது.

<!· ஜின்னா இந்துக்களையோ, இந்து மதத்தையோ எதிர்க்கவில்லை; காங்கிரஸ் கட்சியைத் தான் எதிர்த்தார். அதுதான் முஸ்லிம் லீகின் உண்மையான எதிரியாக திகழ்ந்தது. பீகார் உட்பட சில மாநிலங்களில் இந்து - முஸ்லிம் கலவரங்கள் உருவானபோது, முஸ்லிம்களை காக்க காங்கிரஸ் அரசு தவறிவிட்டது என்பதை நிரூபித்தார் ஜின்னா. அப்போது தான், இந்து ராஜ்யம் உருவாக்கப்படுமோ என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டது.

<!· அவருடன் நான் பலமுறை உரையாடியதில் அவர் இந்துக்களுக்கு எதிராகவே இந்து மதத்திற்கு எதிராகவோ பேசியதில்லை.

<!· அவரது எதிர்ப்பு, போகப்போக தான் வெறுப்புணர்ச்சியை தூண்டிவிட்டது. அதிலும், காங்கிரஸ் தலைமை மீது அவருக்கு அதிருப்தி வேரூன்ற காரணமாகவும் இருந்தது என்று அவரது தனிச் செயலர் எம்.ஆர்.. பெய்க் கூறியுள்ளார்.

<!· இப்படிப்பட்ட பலகட்டங்களில் மதம் என்பது ஒரு பொருளாகவே இருந்ததில்லை. அவர் தன்னை மதவாதி என்று காட்டிக் கொண்டதே இல்லை. பிரிவினைக்கு பின், அவருக்கு அப்படிப்பட்ட தோற்றத்தை பாகிஸ்தான் தந்தது. பாகிஸ்தான், தனி நாடாக ஜின்னா தேவைப்பட்டார். அதுபோல, ஜின்னாவின் தேவைகளை பூர்த்தி செய்ய பாகிஸ்தான் தேவைப்பட்டது என்பதே உண்மை.

<!· சில கசப்பான உண் மைகளை சொல்லித் தான் ஆக வேண்டும். 1939 முதல் 1947ல் நாடு பிரிவினைக்குள்ளானது வரை பொறுப்பில் இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு, நாட்டின் எதிர்காலம் பற்றிய உண்மைத் தன்மையை புரிந்து கொள்ளுதல், பரந்த கண்ணோட்டம், திடமான குறிக்கோள் போன்றவை இல்லாததை சொல்ல வேண்டும்.

<!· மவுலானா ஆசாத் தன் புத்தகத்தில் எழுதியது போல, பிரிவினையை தவிர்க்க இந்தியா மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இராணுவம், வெளியுறவு, தொலைத்தொடர்பு ஆகிய விஷயங்களில் பெரும் தன்னாட்சி அளித்து தனி மாநிலங்களை அமைத்திருக்கலாம். இந்த யோசனையை மகாத்மா காந்தி ஏற்றார். ஆனால், சர்தார் படேல் ஏற்கவில்லை.

<!· இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்றும் இன்று தனிநாடுகள். அடிப்படையில் சில விஷயங்களை மறக்க முடியாது. கடந்து போனது, கடந்ததாகவே எண்ணினாலும், மறைந்து விடாது. புதிதுபுதிதாக விஷயங்கள் உருவாகி, புதிதாக தகவல் வெளிவரத்தான் செய்யும்.

Monday, 4 June 2007

மாமியார் மருமகள் சண்டைகள்!பிரச்சினைகளை தீர்ப்பது எவ்வாறு? ஒரு இஸ்லாமிய பார்வை ....


குடும்பத்தில் நிம்மதியை தேடி அலையும் என் சகோதர, சகோதரிகளே!  

சகோதரர்களே! குடும்பம் அல்லாஹ்வுடைய மிகப்பெரும் அருட் கொடையாக உள்ளது ஆனால் நாம்தான் அதை மறந்து விடுகிறோம்.  நினைத்துப்பாருங்கள் குடும்பம் இல்லையெனில் நாம் அநாதைகள்தானே! நீங்கள் சொந்த நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ இருக்கலாம் எங்கிருந்தாலும் தொலைபேசி, கடிதம் வாயிலாக உங்களிடம் மிக நெருக்கமாக, ஆசை ஆசையாக பேசக்கூடிய நபர்கள் யார்? உங்கள் குடும்ப உறுப்பினர்கள்தானே! அப்படிப்பட்ட குடும்பத்தை நாம் எவ்வாறு பேணுவது? பெற்ற தாய் மற்றும் உடன் வாழும் மனைவி மக்கள் ஆகியோருக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுதான் என்ன? அலசிப்பார்ப்போம்!



எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள். அல்குர்ஆன் 24:52

முதலில் மேற்கண்ட இந்த இறை வசனத்தை உள்ளத்தில் ஆழமாக பதித்துக்கொண்டால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளுக்கு இடமே இல்லை காரணம் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கம் கீழ்படியாமைதான்! எந்த இடத்திலாவது அல்லாஹ் பெற்ற தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், உறவுமுறைகள் ஆகியவற்றை முறித்துக்கொண்டு வாழ அறிவுறுத்தி யிருக்கிறானா? நம் ஆதிபிதா ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா (அலை) இருவரும் தவறு செய்தார்கள் அல்லாஹ் இருவருக்கும்தான் தண்டனை அளித்தான் இதில் ஆண் பெண் என்ற பாரபட்சம் பார்த்து தண்டனை அளிக்கவில்லையே!

 பெற்றோரை பேணுதல்..

பெற்றோரை பேணுமாறு அல்லாஹ் கூறும் அறிவுரை
நாம் மனிதனுக்கு, தன் பெற்றோர் இருவருக்கும் உபகாரம் செய்யவேண்டியது பற்றி உபதேசம் செய்தோம்”
(லுக்மான்: 14).

  இன்னும், நினைவுகூருங்கள். நாம் இஸ்ராஈல் மக்களிடத்தில், ‘அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நீங்கள் வணங்கக் கூடாது. உங்கள் பெற்றோருக்கும் நன்மை செய்யுங்கள்’ என்று உறுதிமொழி வாங்கினோம்” (அல்-பகறா: 83).

தாய்க்கு முன்னுரிமை வழங்கிய மாநபி நாயகம் (ஸல்)
‘ஒரு தோழர், நபி (ஸல்) அவர்களின் அவைக்கு வந்து, ‘நான் சேவை செய்வதில் முதல் தகுதி யாருக்கு?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்’ என்றார்கள். ‘அதற்குகடுத்த தகுதி யாருக்கு?’ என்றார் அந்தத் தோழர். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்’ என்றார்கள். ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு?’ என மீண்டும் கேட்டார் வந்த தோழர். மூன்றாம் முறையாகவும் அதே பதிலையே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுபடியும் அத்தோழர், ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு?’ எனக் கேட்க அண்ணல் நபி (ஸல்) அவர்கள்,   ‘உமது தந்தை’ என்று பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)
  
தந்தைக்கு கண்ணியம் அளிக்க அறிவுறுத்திய அருமை நபி (ஸல்)
நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

எந்த மகனும் தன் தந்தைக்கு கைமாறு செய்ய முடியாது. அடிமையாக எந்தத் தந்தையாவது இருந்தால், அவரை விலைக்கு வாங்கி உரிமை வழங்கப்படும்.  நூல்: திர்மிதீ

  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தந்தையின் திருப்தியில் அல்லாஹ்வின் திருப்தியும், தந்தையின் அதிருப்தியில் அல்லாஹ்வின் அதிருப்தியும் உள்ளது’ அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரழி) நூல்: ஸஹீஹுல் ஜாமிஉ 3500, ஸில்ஸிலா ஸஹீஹா 516

  பெற்ற தாய், தந்தையர் சுவனத்திற்கு உவமை!
முஆவியா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து
” நான் போரில் கலந்து கொள்ள விரும்புகிறேன். அதுபற்றி உங்கள் ஆலோசனையைப் பெற வந்துள்ளேன்” என்று கூறினேன். “உனக்குத் தாய் இருக்கிறார்களா?” என்று நபி(ஸல்) கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். “நீ உன் தாய்க்கு சேவை செய். ஏனெனில், அவர்களின் பாதத்திற்குக் கீழே தான் சுவர்க்கம் உண்டு” என்று நபி(ஸல்) கூறினார்கள். (நூல்கள் : நஸயீ, தப்ரானி)
 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தந்தை சுவன வாயில்களில் மத்திய வாயில் ஆவார்.  அறிவிப்பவர்: அபுத் தர்தா (ரழி) நூல்: ஸஹீஹுத் தர்கீப் வத்தர்ஹீப்

மனைவியை பேணுதல்...

“உலகம் அனைத்தும் இன்பமானது. அதில் தலைசிறந்த இன்பம் நற்குணமுள்ள மனைவி.”  (ஸஹீஹ் முஸ்லிம்)
 (நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள்) மனைவிகளை, நீங்கள் அவர்களிடம் மனநிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே அவன் படைத்து உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணியிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய ஜனங்களுக்கு, இதிலும் (ஒன்றல்ல) நிச்சயமாக (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்அன் 30:21)

 மூமினான மனைவியை வெறுக்காதீர்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“எந்தவொரு முஃமினும் முஃமினான பெண்ணை வெறுக்கவேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால் மற்றொரு குணத்தை பொருந்திக்கொள்வார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

நல்ல மனைவிக்கு அடையாளம்
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். “பெண்களில் மிகச் சிறந்தவர் யார்?” நபி (ஸல்) அவர்கள், “கணவன் அவளைப் பார்த்தால் மகிழ்விப்பாள். ஏவினால் அவனுக்கு கட்டுப்படுவாள். அவனது பொருளிலும் அவள் விஷயத்திலும் வெறுப்பூட்டும்படியான காரியங்களில் (ஈடுபட்டு) அவனுக்கு மாறுசெய்யமாட்டாள்” என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

 மனைவியிடம் எவ்வாறு நடந்துக்கொள்வது! நபிமொழி!
பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்! எனெனில் பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ பலவந்தமாக நிமிர்த்திக்கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மனைவியின் நியாயமான உரிமையை பரிக்காதீர்கள்!
அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு உங்கள் மனைவியர்மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள்மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமையாகிறது உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது படுக்கையை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமையாகிறது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.” (ஸுனனுத் திர்மிதி)

நீங்கள் சிறந்தவரா? சுய பரிசோதனை செய்து பாருங்கள்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முஃமின்களில் ஈமானால் பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே. உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே.” (ஸுனனுத் திர்மிதி)

பெற்றோர் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பது எவ்வாறு?

·                    பெற்ற தாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள்,

உங்களுக்கு இல்லற சுகம் தருவதற்காக சொந்த ரத்த பந்தங்களை விட்டுப் பிரிந்து வந்த மனைவியின் சொல்லைக் கேட்டு பெற்றோரை விரட்டாதீர்கள்!

முதலில் நீங்கள் யார் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள் இதோ உங்களுக்கு ஒரு உவமையை தருகிறேன்!

நீங்கள் ஒரு நாட்டின் அரசனாக இருக்கிறீர்கள், உங்கள் நாட்டின் நிதி நிர்வாகத்தை சீர்படுத்த ஒரு மந்திரியும், எதிரிகளிடமிருந்து தற்காக்க ஒரு படைத்தளபதியும் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், இப்போது படைத்தளபதியும் மந்திரியும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு உங்களிடம் நீதி கேட்டு வந்தால் நீங்கள் சமாதானம் செய்வீர்களா அல்லது மந்திரிக்காக படைத்தளபதியையும், படைத்தளபதிக்காக மந்திரியையும் இழப் பீர்களா?

இரண்டில் எந்த ஒன்றை இழந்தாலும் உங்கள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடாக அமையுமே தவிர உங்களுக்கு நல்ல தீர்வாக அமையாது!

இப்போது உங்கள் குடும்பத்தை ஒரு சுநத்திர நாடாகவும் உங்களை ஒரு அரசனாகவும், உங்கள் பெற்றோரை படைத் தளபதியாகவும்! உங்கள் மனைவியை நிதி மந்திரியாகவும் பாவித்துப்பாருங்கள் இரண்டில் ஒன்றை இழந்து குடும்பத்தில் பிரச்சினை வந்தால் பரிதவிப்பது உங்கள் பிஞ்சுக் குழந்தைகளும், உடன்பிறந்தவர்களுமே! அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்!

இல்லற சுகத்திற்காக மனைவியிடம் அடிமையாகவோ, அன்பிற்காக பெற்றோரிடம் அடிமையாகவோ இருக்காதீர்கள் இதற்கு மாறாக அல்லாஹ்வுக்கு அடிமையாக இருந்து குடும்பத்தில் நீதியை நிலைநாட்டக்கூடிய குடும்ப தலைவான ஒரு மாபெரும் அரசனாக வாழுங்கள் அல்லாஹ் நாடினால் நிம்மதி உங்களைத் தேடிவரும்!

மனைவியோ, பெற்றோரோ உடன் பிறந்தவர்களோ, பிள்ளைகளோ உங்களின் உரிமையை பரிக்க முற்பட்டால் நீங்கள்தான் முட்டாளாக ஆக்கப்படுகிறீர்கள் என்றுதான் அர்த்தம்!

தாயை பார்க்க வேண்டாம் என்று மனைவி கூறினாலும்! மனைவியை பார்க்க வேண்டாம் விட்டுவிடு என்று பெற்றோர் கூறினாலும் கீழ்கண்ட வார்த்தையை பயன்படுத்துங்கள்! விழிப்புடன் இருங்கள்!

”நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்!
அவனுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுகிறேன்!
மறுமையில் என் தவறுக்கு நானே பதில் கூற வேண்டும் நீங்கள் அல்ல!

எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள். அல்குர்ஆன் 24:52



குறிப்பு :

மார்க்க அறிவு குறைந்த, இணைவைப்பு பெற்றொர் அல்லது மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரரிகள், உறவுமுறைகளை உடையவராக நீங்கள் இருந்தால் அவர்கள் வெறுக்காதீர்கள் மாறாக அவர்கள் திருந்தும் வரை அவர்களிடம் அழகிய முறையில் தாஃவா செய்யுங்கள் உங்கள் மூலமாக அல்லாஹ் அவருக்கு நேர்வழிகாட்டினால் உங்கள் சுவனப்பாதை வலுவாக அமையலாம். ஒவ்வொருவரும் தத்தம் குடும்பத்தை சிறந்த தாஃவா தளமாக அமைத்துக்கொண்டால் நிம்மதி கிடைக்குமே ஆனால் நாம் நம் குடும்பத்தை சினிமா திரையரங்கு போலத்தானே மாற்றியுள்ளோம்! எப்படி வரும் நிம்மதி! 


 நம் அனைவருக்கும் நல் குடும்பத்தை வழங்கி இறைவன் நல்லருள் புரிவானாக!

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Monday, 21 May 2007

இறைவனைக் காண முடியுமா?...

மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே கேட்கப்பட்டு இன்றுவரை சற்றும் அசராமல் நிலைத்திருக்கும் கேள்வி இது. இறைவனை பற்றி சிந்திக்காத மனிதர்கள் இருப்பது சந்தேகமே.
ஒவ்வொரு மனிதனும் "தன்னையும்" "தன்னைச்சுற்றியுள்ள உலகத்தையும்" "உணர்கிறான்". இது" என்ன?", "ஏன்?" , "எப்படி வந்தது?" என்ற கேள்வியால் தோன்றியது தான். " இறைவன் " என்ற சொல். இந்த சொல்லுக்கு உரிய பரம் பொருள், கண்ணால் காணவோ, அறிவால் உணர்த்தவோ முடியாத தன்மயுடையது. ஆனால் உணரமுடியும். உணர முடிந்த ஒரு சிலராலும் பிறருக்கு விளக்கமுடியாத தன்மை உடையது. அறிவை விளக்கலாம். உணர்வை அப்படி முடியாது. ஏன் இந்த சிக்கல். அறிவின் அடிப்படத்தகராறு இது. ஒன்றை புதிதாக அறிந்து கொள்ள வேண்டுமானால் அதன் வெவ்வேறு தன்மைகளை கொண்ட குறைந்தபட்சம் வேறு இரு பொருட்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஒன்றை பற்றிய அறிவை எப்பொதும் இன்னொன்றை தொடர்பு படுத்தியே பெற முடியும். அது மட்டுமல்ல அறிவை வெளிப்படுத்துபவர் மட்டுமின்றி பெறுபவரையும் பொறுத்து தான் பெறப்படும் அறிவு அமைகிறது.

 அறிவு என்பது சார்பானது . சார்பான ஒன்றால் ஒருபோதும் முழுமயான பரம் பொருளை விளக்க முடியாது "ரோஜா மாம்பழம்" என்றதும் என்ன அறிந்து கொள்வீர்கள். இதற்கு முன் "ரோஜாப்பூ நிறம்"" மற்றும்"மாம்பழம்" உங்களுக்கு தெரிந்திருந்தால் ரோஜா நிறமுள்ள மாம்பழம் என்று அறிந்து விடுவீர்கள். மாம்பழ ரோஜா என்றால் அது வேறு அர்த்தம். நீங்கள் ரோஜா அல்லது மாம்பழத்தை இதற்கு முன் அறிந்திருக்காவிட்டால் "ரோஜா மாம்பழத்தை உங்களுக்கு விளக்கவே முடியாது. ஒன்று இன்னொரு ரோஜா என்றோ அல்லது இன்னொரு மாம்பழம் என்று தான் அறிந்திருப்பீர்கள். மட்டுமல்ல நீங்கள் மஞ்சள் நிற ரோஜாப்பூ மட்டுமே இதற்கு முன் பார்த்திருக்கிறீர்கள் என்றால் நான் ரோஜா மாம்பழம் என்று சொன்னதை மஞ்சள் மாம்பழமாகவே அறிவீர்கள். பிறவியிலேயே  பார்வையற்றவ்ரிடம் "நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா" என்று பாடினால் எப்படி பொருள் கொள்ளுவார்.

அன்பு, காதல் இதெல்லாம் உணர்வது. அறிவது அல்ல. எல்லோரும் இதை தனிதனியாக உணர்ந்திருந்தாலும், ஒருவருடையா அன்பை , காதலை பிறருக்கு சொல்வதில் எவ்வளவு கஸ்டம்.. ஒரு ப்ளேட் மட்டன் பிரியானியானியின் சுவை சமையல்காரரை பொறுத்துத்து மட்டுமல்ல .சாப்பிடுபவரின் பசியையும் பொறுத்தது

இறைவனை பற்றி, பரம்பொருளை பற்றி எவரிடமும், எந்த வேதங்களிலும், எந்த மஹான்களிடமும் கேட்காதீர்கள், அப்படி அறிய முடியாது அறிவித்து கொடுக்கவும் அவர்களால் முடியாது. இந்த கேள்வி எங்கிருந்து தோன்றியதோ அங்கேயே கேளுங்கள். கேட்டு உங்களால் அறிய முடியாது என்றாலும் உணர முடியும்.

மெய்ஞான அறிவு என்பது விண்ணிலிருந்து பூமியை பார்ப்பது போல் என்றால் மனிதனின் சாதாரண பவுதீக அறிவு என்பது ஒரு இடுங்கிய 14 " டீ வி யில் உலகக் காட்சிகள் பார்ப்பது போன்றது. இங்கே காட்டப்படுவதை தான் பார்க்கிறோம். உள்ளதை உள்ள படி அறிவதில்லை.  காட்சிகளுக்கு எல்லை உண்டு..நாம் உண்மை என்று உணரும் எல்லாமே மற்றொரு உண்மை நம் கருத்தில் உண்டாக்கும் விளைவுகளேயே..  இந்தகைய காட்சிப் பிழைக்கு காரணம் நம் புலன்களின் குறைபாடே, முனனே  இருக்கும் கண்ணாடி போன்றது உணமை அதை உணராமல் அதன் பிதிபலிப்பு  எனும் விளைவால் தெரியும் காட்சி தான் நாம் உண்மையென்று உணருவது.மனம் இந்த மயக்கத்திலிருந்து  மீளும் போது அதுவரை தெரிந்த காட்சிகள் மறைந்து கண்ணாடி மட்டுமே தெரி்யும்.

ஒரு நாத்திகன் தன் வீட்டு வாசலில் GOD is No where என்று எழுதி வைத்தானாம். அதைப் பார்த்து ஒரு துறவி அந்த வீட்டுக்குள் வந்து எங்கே கடவுள் என்று தேடினான். நாத்திகனோ துறவியிடம் ஏன் "நீ வாசலில் போர்டை சரியாகப் படிக் வில்லையா? என்றானாம். அதற்கு அந்த துறவி சொன்னார் "படித்தேன் God is now here என்றிருந்தது அதனால் தான் வந்தேன் . பார்வைகள் பல விதம்.

ஒன்றைத் தேடும் முன் எதை தேடுகிறோம் என்பதில் தெளிவு வேண்டும்.
உதாரணமாக கூகிளில் ஒன்றைத் தேடும் போது எதைப் பற்றி தேடுகிறோம் என்பதை டைப் செய்தால் தான் தேட முடியும். இதுவரை எந்த டிக்ஸ்னரியிலும் காணப்படாத ஒன்றை dfdoaiuetjhzdckldsditekl என்று தேடினால் என்ன கிடைக்கும்.

இறைவன் என்று நம்மால் கற்பனை செய்யக்கூடிய எல்லாமே இறைவன் படைத்ததாக நம்பப்படும் இந்த பூமியில் நம் மூளை உணரக்கூடிய உருவங்களை மட்டும் தான் . படைத்தவனும் படைப்பும் ஒன்றாகாது..இந்த உலகத்தின் காட்சிகளை ,பண்புகளை மனம் தான் உருவாக்கி அறிந்து கொள்கிறது,எனவே இறைவனை இந்த உலகத்தில் தேடுவது அபத்தம்

எத்தனை மனங்கள் இருக்கிறதோ அத்தனை விதமாக.மனிதர்கள் இறைவனை கற்பனை செய்கிறார்கள். இறைவன் உருவமற்றவன் என்று சொன்னாலும் கூட இறைவனை ஏதாவது மனித அடையாளங்களில் தான் உள்ளத்தில் உருவகப்படுத்துகிறார்கள். அதுவே அந்த இறைவனுக்கு இணை வைக்கும் ஒன்றாகி விடுகிறது..ஒரு தலைவரை  நாம் பார்த்ததிலை. ஆனால் நம்மை அவர் எப்போதும் அருகிலிருந்து கவனிக்கிறார். என்று வைத்துகொள்வோம்..அவரை கவுரவிக்க விரும்புகிறோம் .தலைர் எப்படியிருப்பார் என்று தெரியாது என்பதற்காக   தெரிந்த இன்னொருவரை  அல்லது  ஒரு அடையாளத்தை அவர் முன்னிலையிலே கவுரவித்து மாலையிட்டால் அது தலைவரை அவமதிப்பதாகாதா?

மனித அறிவால் உணர்ந்து கொள்ள முடியாததை எப்படி உருவகப்படுத்தி வணங்குவது. எல்லோரும் அவரவருக்கு தோன்றிய உருவகத்தில் இறைவனை நம்புகிறார்கள். அனால் அந்த இறைவனுக்கும் உண்மைக்கும் தூரம் மிக அதிகம். இதில் உன் கடவுள் என் கடவுள் என்று அடித்துக்கொண்டு உயிரை விடுகிறார்கள். ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் ஒரே இறைவனையா நம்புகிறார்கள். இல்லை அவர்களது கடவுளின் பெயர் தான் ஒன்றாக இருக்கும். கடவுளைப் பற்றிய அகக் காட்சிகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தான்.

கடவுள் உண்டு என்று ஆத்திகனும் கடவுள் இல்லை என்று நாத்திகனும் அடித்துக்கொள்கிறார்கள். ஆனால் உண்டு என்றும் இல்லையென்றும் கூறும் முன் அந்தக் கடவுள் எது என்பதில் ஒத்த கருத்து கொள்கிறார்களா? இல்லை. ராமசாமி ஆணா? பெண்ணா? என்று விவாதிக்கலாம். ஆடு கத்துவதை எந்த மொழி என்று வகைப்படுத்துவது. இறைவன் உண்டு என்பதும் உண்மை தான் இல்லை என்பதும் உண்மை தான் . இறைவன் என்பதற்கு நாம் கொள்ளும் பொருளைப் பொறுத்தது அது.

இறைவன் எப்படி இருக்க முடியும் என்று சிந்திப்பது நம் அறிவால் அமைத்துப் பார்க்க முடியாத விஷயம் . ஆனால் இறைவன் எப்படியெல்லாம் இருக்க முடியாது என்று கூடவா அறிவுக்கு எட்டாது.  அறிவுக்கும்  முரண் பாடாக தெரிந்தும் பிடிவாதமாக மனித குணாதிசயங்களுடன் மனிதச் சாயலாகவே கடவுளை உருவகப்படுத்துவது  பகுத்தறிவல்ல

Sunday, 20 May 2007

ஆரோக்கியமான வாழ்வை பெற மூன்று நாட்களில் நுரையீரலை எளிதாக சுத்தம் செய்வது எவ்வாறு ? ஒரு சிறப்பு தவகல்..

புகை பிடிப்பவர்கள் அல்லாமல் மற்றவர்களுக்கு அலர்ஜி, சுற்றுப்புற சூழ்நிலை, தூசுகளினால் நுரையீரல் அழற்சி ஏற்படுவதுண்டு. அதே சமயம் 45 வருடமாக புகை பிடித்தாலும் எந்த பாதிப்பு இல்லாமல் நுரையீரல் நன்றாக இயங்குபவர்களும் உண்டு. இது ஆளாளுக்கு வித்தியாசப்படலாம்.
எவ்வாறு இருப்பினும், இப்பொழுது மூன்று நாட்களில் நுரையீரல் சுத்தம் செய்வது என்று பார்ப்போம்.
✔ இதை செய்வதற்க்கு இரண்டு நாட்கள் முன்பே எல்லா பால் பொருட்கள் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். உதாரணத்திறக்கு பால், தேநீர், தயிர், மோர், வெண்னெய், சீஸ் போன்றவை. உடலிருந்து நச்சுகளை நீக்க வேண்டியது அவசியம். எனவே தவறாது இதை கடைபிடிக்க வேண்டும்.
✔ சுத்தம் செய்வதற்க்கு முந்தைய நாள் இரவு ஒரு கப் மூலிகை தேநீரை குடிக்கவும். இது குடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும். சுத்தம் செய்ய நுரையீரலுக்கும், உடலுக்கும் ஒய்வு தேவை. எனவே கடுமையான பயிற்சிகள், வேலைகளை செய்ய வேண்டாம்.
முதல் நாள்:
✔ இரண்டு எலுமிச்சை பழங்களின் சாற்றை 300 மில்லி தண்ணீரில் கலந்து காலை உணவுக்கு முன்பு குடிக்கவும்.
✔ ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு 300 மில்லி சுத்தமான கிரேப்புரூட் சாற்றை குடிக்கவும். இதன் சுவை பிடிக்காவிட்டால் கிரேப்புரூட் சாற்றுக்கு பதிலாக பைனாப்பிள் சாற்றை குடிக்கலாம். எல்லாம் சுத்தமான தண்ணீர், சர்க்கரை கலக்காத சாறாக இருக்கட்டும். இந்த சாறுகளில் இயற்கையான சுவாசத்தை சீராக்கும் ஆன்டிஆக்ஸிடன்டஸ் நிறைந்துள்ளதால் நமது நுரையீரலுக்கு நன்மை பயக்கும்.
✔ மதிய உணவிறக்கு முன்பாக 300 மில்லி சுத்தமான கேரட் சாற்றை பருகவும். இதில் தண்ணீரோ சர்க்கரையோ சேர்க்கக்கூடாது. கேரட் சாறு சுத்தம் செய்யும் மூன்று நாட்களும் இரத்தத்தை அமில நிலையிலிருந்து காரத்தன்மைக்கு மாற்றுகிறது.
✔ இரவு படுக்கபோகும் முன்பு 400 மில்லி பொட்டாசியம் நிறைந்த கிரேன்பெரி போன்ற சாற்றை குடிக்க வேண்டும். பொட்டாசியம் சுத்தம் செய்ய ஒரு டானிக்காக உதவுகிறது. இது உடலின் உள்ளுறுப்புகளில் முக்கியமாக சிறுநீர்பாதை, நுரையீரல் தொற்றுகளை உண்டாக்கும் பாக்டீரியாக்களை நீக்குகின்றது. கிரேன்பெரி கிடைக்காதவர்கள் சுத்தமான சிகப்பு திராட்சை அல்லது பைனாப்பிள், ஆரஞ்சு சாற்றை கலப்பிடமில்லாமல் குடிக்கலாம்.
✔ இதை மூன்று நாட்கள் கடைபிடிக்கும் போது எளிதில் ஜீரணிக்ககூடிய உணவுகளை சாப்பிடவேண்டும். குறைந்தது 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து வேர்வையை வெளியேற்றவும்.
அல்லது 20 நிமிடங்களில் சுடுதண்ணீரில் குளிக்கலாம். வியர்வை வெளியேறும்போது நச்சுகளும் வெளியேறும்.
✔ இரவில் கொதிநீர் ஆவி பிடிக்கவேண்டும். 5 முதல் 10 சொட்டுவரை யூகாலிப்ட்டஸ் ஆயில் கொதிநீரில் சேர்த்து தலையினை சுத்தமான போர்வையைக்கொண்டு மூடி ஆவியை நன்றாக உள்ளுக்குள் இழுத்து சுவாசிக்கவும். இவ்வாறு கொதிநீர் ஆறும்வரை ஆவி பிடிக்கவும்.
✔ மூன்று நாட்கள் இவ்வாறு கடைபிடிக்கவும். ஆஸ்த்துமா, நுரையீரல் அழற்ச்சி, சைனஸ் தொல்லை உள்ளவர்களுக்கும் நல்ல பலனை அளிக்கும்.

Sunday, 15 April 2007

ஒன்றே குலம் ஒருவனே தேவன்!


இந்த உலகையெல்லாம் படைத்து பரிபாலிக்கும் இறைவன் ஒருவன்தான். இந்த உலக மக்கள் யாவரும் ஒரே தாய் தந்தையிலிருந்தே பிறந்து பல்கிப் பெருகியவர்கள் என்று உலகில் உள்ள அனைத்து மதங்களுமே ஒத்துக் கொள்கின்றன. இதை நான் முன்பே பல பதிவுகளில் விளக்கியுமிருக்கிறேன். சமீபத்தில் இந்த ஓரிறைக் கொள்கையை மேலும் வலுவாக்கும் விதமாக இந்து மத வேதங்கள் கூறக் கூடிய கருத்துக்கள் சிலவற்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. இவ்வளவு தெளிவாக வேதங்கள் கூறியிருக்க நம் நாட்டில் ஊருக்கு ஒரு இறைவனை ஏன் நம் முன்னோர்கள் உண்டாக்கினார்கள். இது எப்பொழுது ஆரம்பமானது என்று எனக்குள் எழும் கேள்விகளுக்கு விடைதான் இல்லை. இனி வேதங்கள் கூறக் கூடிய ஓரிறைக் கொள்கையை பார்ப்போமா?

'ஒரே இறைவனையே வணங்குங்கள். தீய சக்திகளை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்.' என்று அறிவுறுத்த ஒவ்வொரு சமுதாயத்திற்கும ஒரு தூதரை அனுப்பினோம்.' -குர்ஆன் 16 : 36

நம் எல்லோரையும் படைத்த இறைவன் பாரத நாட்டுக்கும் ஏன் நம் தமிழ் மொழிக்கும் தூதரை அனுப்பியதாக கூறுகிறான்.

இனி பகவத் கீதை கூறுவதைக் கேட்போமா!

ஈசுவரா சர்வ புதானாம்
ஹிறுத்தே செர்ஜ்ஜீன் திஷ்டதி
ப்ராமயன் சர்வ புதானி
யந்திரு ரூடானி மாய யா
தமேவ சரணம் : கச்ச
ஸர்வ பாவேன பாரதா
தத் பிலஸாதால் பராம்
சாந்திம் ஸ்தானம்
பிறாய்யஸீ சாசுவதம்
(18 : 61 : 62)

எல்லாப் படைப்பினங்களையும் தனது சுய சக்தியால் இயங்க வைக்கும் இறைவன் சகல மக்களின் இதயங்களிலும் குடி கொண்டிருக்கிறான். நீ உனது உடலால், மனதால், அறிவால் அந்த ஏக இறைவனிடம் மட்டுமே சரணடைய வேண்டும். அவனுடைய அன்பு இருந்தாலே நிரந்தரமான சாந்தியும் சமாதானமும் கிடைக்கும்.

யாந்தி தேவன் விருதா தேவன்
பித்ர யாந்தி பித்ர விருதா
புதானி யாந்தி புதேஜியா
யாந்தி மதியாஜி நெயிமாம்
(9 : 25)

தேவர்களை வணங்குபவர்கள் தேவர்களிடத்திலும் முன்னோர்களை வணங்குபவர்கள் முன்னோர்களிடத்திலும் சாத்தான்களை வணங்குபவர்கள் சாத்தான்களிடத்திலும் போவார்கள். ஏக இறைவனை வணங்குபவர்களோ இறைவனாகிய என்னிடம் வருவார்கள்

நபியே! இறைவனாகிய என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் 'நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும். என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்' என்று கூறுவீராக.
-குர்ஆன் 2 : 186

தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.
-யோவான் 1 : 18

மேலே வானிலும் கீழே புமியிலும் மற்றும் நீரிலும் உண்டாகி இருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு வடிவத்தையேனும் எந்த ஒரு சிலைகளையாகிலும் நீ எனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.
-பைபிள் (யாத்திராகமம் 20 : 1-5)

ஒரே ஒரு மெய்யான கடவுள்தான் இருக்கிறார். அவரே சர்வ வல்லமை உடையவர்: உன்னதமானவர்: வானத்தையும் புமியையும் சமுத்திரத்தையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உண்டாக்கினவருமான சிருஷ்டகர்.
-பைபிள் (அப்போஸ்தலர் 4 : 18-24)

மேற்கண்ட இந்து இஸ்லாமிய கிறித்தவ வேதங்கள் ஒரே இறைவனையே வணங்கச் சொல்ல உலகம் முழுவதும் இன்று நாட்டுக்கு நாடு இறைவனின் உருவங்கள் வேறுபடுவதைப் பார்க்கிறோம். வழிபாட்டு முறைகளிலும் பெருத்த வித்தியாசங்கள். இவை எல்லாம் எதனால் ஏற்ப்பட்டது என்று என்றாவது சிந்தித்திருக்கிறோமா? மதங்களின் பெயரால் வயிறு வளர்த்த மத குருமார்கள் செய்த புரட்டுகளாலேயே இத்தகைய மாற்றங்களைப் பார்க்கிறோம்.

இன்று இந்தியாவில் உள்ள தர்காக்களை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கும் இஸ்லாத்தின் சட்டங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்றால் இல்லை என்றே சொல்வேன். சமீபத்தில் என் தாத்தா ஹஜ்ஜீக்கு சென்றபோது மதீனாவும் சென்றுள்ளார். அங்கு முகமது நபியின் அடக்கத்தலத்திற்கு முன்பு கைகளை ஏந்தி பிரார்த்தித்திருக்கிறார். உடனே அங்கு நின்ற காவலர்கள் அவருடைய கைகளை பின்புறம் இருக்கும் பள்ளிவாசலின் பக்கம் திருப்பி 'இறைவனிடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறியுள்ளனர். இறைவன் நிலைக்கு முகமது நபியை உயர்த்திவிடக் கூடாது என்பதில் அந்நாட்டு அரசு எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்று என்னிடம் சொல்லி ஆச்சரியப்பட்டார். முகமது நபியை விடவா இங்குள்ள நாகூர் தர்காவும், ஏர்வாடியும், அஜ்மீரும் பெருமை பெற்று விட்டன?

இது மனிதனின் இயல்பு. நாம் மதிப்பு வைத்திருக்கும் ஒருவரை அவர்களின் தகுதிக்கு மீறி புகழ்ந்து கடவுள் நிலைக்கு உயர்த்துவதே நமது வழக்கமாகி விட்டது. அரசாங்க காண்ட்ராக்டுகள் தமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசியல்வாதிகளை 'வாழும் தெய்வமே' என்று நாடு முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டுகிறோம். இவை எல்லாம் நம்மை எங்கு கொண்டு சென்று விடும் என்று அறியாமல் செய்து வருகிறோம். பார்க்கப் போனால் போஸடரில் இருப்பவரை விட போஸ்டர் அடிப்பவர் நியாயவானாக வாழ்வதைப் பார்க்கிறோம்.

இறைவன் பெயரால் செய்யப்படும் மோசடிகளை கண்டித்து நாடு முழுக்க மிகப் பெரும் புரட்சியை உண்டாக்கிய பெரியாருக்கே இன்று சிலைகள் மாலைகள் என்று அமர்க்களப்படுத்துகிறோம். பெரியாரின் சிலையின் முன்னால் சென்று கும்பிடுவதாலோ, அச்சிலைக்கு மாலை இடுவதாலோ அந்த சிலை எதை உணர்ந்ததாக இவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்? அந்த பெரியார் சொன்ன கொள்கைகளை வாழ்வில் கடைபிடிப்பது தானே அந்த மனிதருக்கு செய்யும் மரியாதை? இனியாவது இதைப்படிக்கும் பகுத்தறிவாதிகள் சற்று சிந்திக்க வேண்டும்.

இந்து கிறித்தவ இஸ்லாமிய மார்க்கங்கள் ஒரே இறைவனையே வணங்கச் சொல்லியிருக்க அதை விடுத்து நம் கற்பனைகளையெல்லாம இறைவனாக்காமல் வாழ்வோமாக!

வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவன்தான்.
-ரிக் வேதம் 6:45:16

இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுவதில்லை
-அதர்வண வேதம் 32 : 3

தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.
-யொவான் (1 : 18)

புகழ் அனைத்தும் வல்லமை கொண்ட கடவுள் ஒருவனுக்கே
-ரிக் வேதம் 8 : 1

கண்ணால் காண முடியாதது யாரோ அவனே படைத்த இறைவன் அவனே கண்களுக்கு பார்வை சக்தியைத் தருகிறான். அவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் கண் கொண்டு பார்க்கும் பொருட்கள் யாவும் கடவுள் இல்லை.
-கேனோ உபநிஷத் (1 : 6)

தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?
-எசையா (40:18-25)

யாதொரு மனிதக் கடவுளையும் வணங்குவதற்கு கட்டளை இட்டதில்லை.
-ரிக் வேதம் (10:82,3)

மனிதன் இறைவனுக்கு உதாரணம் கூறுகிறான். அந்த மனிதனை நாம்(இறைவன்) படைத்திருப்பதை ஏனோ மறந்து விட்டான்.
-குர்ஆன் 36:78

அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன். நன்கறிந்தவன்.
-குர்அன் 6:103

வானங்களையும் புமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், இறைவன் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், புமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும்,புமிக்கும் இடையே வசப்படுத்தப் பட்டுள்ளமேகத்திலும் விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.
-குர்ஆன் 2 : 164