Friday, 19 November 2010

Special Report of Halal Vinegar...


Narrated by Umm Sa'ad Radi Allaho Anha that Prophet Muhammad Sallallaho Alaihe Wasallam said : "Vinegar is the best curry / condiment, O Allah, Descend your blessings in Vinegar, because it was the food for Prophets before me & a house having vinegar (where it is consumed) will never face FAQR (poverty)". (Ibn-e-Majah)

وفى "سنن ابن ماجه" عن أُمِّ سعد رضى الله عنها عن النبىِّ صلى الله عليه وسلم: "نِعْمَ الإدَامُ الخَلُّ، اللَّهُمَّ بَارِكْ فى الخَلِّ، فإنه كان إدامَ الأنبياء قبلى، ولَمْ يَفْتَقِر بيتٌ فيه الخَلُّ ".

Poverty indicated above can be the poverty in actual, PLUS the poverty caused by diseases.
حدثني يعقوب بن إبراهيم الدورقي حدثنا إسمعيل يعني ابن علية عن المثنى بن سعيد حدثني طلحة بن نافع أنه سمع جابر بن عبد الله يقول أخذ رسول الله صلى الله عليه وسلم بيدي ذات يوم إلى منزله فأخرج إليه فلقا من خبز فقال ما من أدم فقالوا لا إلا شيء من خل قال فإن الخل نعم الأدم قال جابر فما زلت أحب الخل منذ سمعتها من نبي الله صلى الله عليه وسلم وقال طلحة ما زلت أحب الخل منذ سمعتها من جابر ~ رواه مسلم
Reported by Talha Bin Naf'e Abu Sufyan who narrates it from Jaber Bin Abdullah Radiallaho Anh that "Prophet Muhammad Sallallaho Alaihe Wasallam took me to his house one day & Rasoolullah was offered a piece of bread, he asked if a curry / condiment was also available, he was answered that there was nothing except some vinegar". Prophet Muhammad Sallallaho Alaihe Wasallam said, "Khall (vinegar) is the best curry / condiment", Jaber Bin Abdullah Radi Allaho Anh said that as I heard this from Prophet Muhammad Sallallaho Alaihe Wasallam, I LOVE Khall from that time, & Talha Radi Allaho Anh said that I LOVE Khall from the time I heard it from Jaber.
So I request you that today; as you are hearing this; & from now on, you will also LOVE Khall Insha'Allah.
Vinegar (Khall) is a substance that is praised by Prophet Muhammad Sallallaho Alaihe Wasallam, but to brew the vinegar with Halal Technology is not known today to many Muslims around the world.
With our exclusive experience of 5 years that started with many mistakes & spoilage, Allah Made it easy to understand the best brewing technique for Halal Vinegar & we begin with some Hadith & the Halal status of vinegar as explained by some scholars.

Wine is not a cure

From Sunan Abu Dawood..
Tariq Bin Suwaid inquired Prophet Mohammad Sallallaho Alaihe Wasallam about drinking of wine & Prophet Mohammad Sallallaho Alaihe Wasallam forbade it, then he asked again & Prophet Mohammad Sallallaho Alaihe Wasallam forbade it, then he said, O Prophet of Allah, it is a MEDICINE, Prophet Mohammad Sallallaho Alaihe Wasallam said, " NO! IT IS AN AILMENT (Disease)". Same subject is quoted in other Ahadith of Sahih Muslim, Tirmidhi, Ibn-e-Majah, etc.

Wine turning to Vinegar

Sunan Al Tirmidhi
Yahya Bin Abbaad narrates that Anas Bin Malik Radi Allaho Anh asked Prophet Muhammad Sallallah-o-Alaih-e-Wasallam if wine could be turned into Khall (vinegar); Prophet Muhammad Sallallah-o-Alaih-e-Wasallam said "NO". As per another Hadith, Prophet Muhammad Sallallah-o-Alaih-e-Wasallam ordered that all stocks of wine should be wasted.


Some opinions about Halal status of vinegars .....
If the vinegar was made by adopting certain processes such as by mixing salt with it or aerating wine and exposing it to Acetobacter bacteria, (which alters the wine completely and changes it to vinegar) such vinegar is also permissible (Halal) according to the Hanafi doctors of law. However, according to some other jurists, this conversion into vinegar, is unlawful (Haraam) (Bahar 8:219).

When wine turns to vinegar by itself, without any deliberate treatment needed for it to be changed, it is permissible to eat, drink and handle it, according to the consensus of the scholars. But if the wine has become vinegar because of deliberate treatment, by adding vinegar, onions, salt, etc., or by any other process, in this case the scholars (may Allaah have mercy on them) differ as to whether it is permissible.

The Shafi'is, Hanbalis and some of the Maalikis say that it is not permissible to deliberately change wine to vinegar because then it is not pure. The evidence (daleel) for this is the Hadith of Anas Ibn Maalik (may Allaah be pleased with him) who said: “The Messenger of Allah  (peace and blessings of Allaah be upon him) was asked whether wine could be changed to be used as vinegar. He said, ‘No.'” (Reported by Muslim).

Abu Talhah (may Allaah be pleased with him) reported that Prophet Muhammad (peace and blessings of Allaah be upon him) was asked about some orphans who had inherited some wine. He said, “Pour it away.” He was asked, “Could they not make it into vinegar?” He said, “No.” (Reported by Muslim).

Halal Status of vinegar by Muslimconsumergroup:
There is a difference of opinion among Hanafi and Shafi'ee fiqh schools regarding vinegar. There is also a difference of opinion among Islamic Scholars is regarding wine vinegar, since there is a possibility of wine being not 100% converted to acetic acid and water. There is left over wine in the wine vinegar, we consider wine vinegar not a Halal vinegar. We recommend distilled white vinegar because it is made from dilute alcohol. Please consult your sheik or Imam on this topic.

How the brewing of Halal Vinegar begins ?
Regarding HALAL ruling for different types of vinegars, there is a conflict among various schools of thoughts. It is because they never knew that vinegar can be produced by not following the primary anaerobic fermentation. Aerobic fermentation from the first day will never validate the FERMENT to be consumed as WINE, as it will be dangerous having Acetaldehydes.

Both wine & vinegar are brothers from the same mother, which is sugar, wine hates to breathe & loves anaerobic environment, while vinegar can't exist without breathing, it needs oxidation. Biological vinegar industry makes fruit wine primarily & then oxidize it by passing air bubbles for obtaining vinegar.

When you will see CO2 bubbles during primary fermentation, ethyl alcohol is produced immediately, but to mature it anaerobically is the fundamental of winemaking, we differ in the Halal brewing technology of vinegar at this stage, that we keep the alcohol being oxidized from the first day, in this manner, pre-oxidized alcohol changes immediately to other compounds, which can be Acetaldehydes OR Ethyl Acetate that further oxidizes to Acetic Acid.

Pre-oxidized Ethyl Alcohol is dangerous & harmful for drinking, so we have differentiated Halal Vinegar Technology with the traditional vinegar-making.

Another issue for Halal vinegar is to avoid BREWER'S YEAST, because it is obtained while making wine, many Ulama'a have given Fatwa that it is Haram, so to use wild yeasts is the only option for you, some people may use baker's yeast, but I have seen that it imparts a bad taste to vinegar.

When vinegar will be made by the following principals, all doubts will come to an end & every one will agree that Halal Vinegar production is nothing but :

1. Using wild yeasts & avoiding brewer's yeast
2. Fermenting aerobically from the first day, so that the wine is not aged & alcohol is immediately oxidized

By oxidizing the brew aerobically for at least 90 days, it is confirmed that all by-products (either alcohol, acetaldehyde or acetates) of fermentation will be converted to Acetic Acid.


Step by Step procedure of brewing Halal Vinegar :

We begin with the example of apples.

Take out the juice of apples, add to a glass jar whose mouth should be smaller than the base with a ratio of 1 : 2. Such a design is the best for fermentation, as it slows down the evaporation loss.

Juicing the apples

Because apples are low in sugar (mostly 10 ~ 12%) & you need at least 15 % sugar for a strong vinegar, add 200 grams of white sugar to a 4 liter jar. Sugar should be added immediately after juicing the apples; before the primary fermentation starts.

Cover the jar with a cloth so that light can't enter inside, & cover the mouth of the jar with a cotton cloth using a rubber band. (As shown in the picture below). Covering the jar with a cloth is your Halal vinegar technology, because you are exposing the brew to breathe in the air from the first day.

Aerobic fermentation from the first day


The jar should be filled till the top mark, it is because you are fermenting aerobically, we have seen that if the jar is not totally filled, your brew may get spoiled, first 30 days are delicate, after which you will filtrate & the liquid level will reduce, but then it will not be a problem Insha'Allah.

Don't put the jar under sunlight, or under a fan, we usually put them at the corner of the kitchen, far away from the stove. A good temperature for fermentation is 28-32 Celsius.


Wild yeast from the air will break down the sugar & primary fermentation will start after 3-5 days when you will see CO2 bubbles rising up in the jar, bubbles will ooze for the following 10-15 days. You have to wait for 30 days from the date of starting the brew, & then you have to filter the fermented juice to take out dead yeasts & pulp. Wash the empty jar with ordinary water & pour filtered juice again, cover the jar & its mouth with a cloth, depending upon your temperature & sugar percentage, you will need at least 60 days more for a complete double biological fermentation.

The total time is 90 days from the first day. And if the climate is hot, vinegar will be ready after 70 ~ 75 days. You will be able to notice the typical smell of vinegar. Filter finally before bottling & keep refrigerated. Unpasteurized vinegar stays crispier inside the refrigerator, if kept outside, it develops the mushroom type jelly which of cellulose made by bacteria; called "mother of vinegar".

With aerobic fermentation, there is some evaporation loss & after filtering out the dead pulp, your recovery for pure / filtered Khall will be 45-50 %, i.e. if you started with 4 liters of juice, you will obtain 1.8 - 2 liters of Khall.

If you need to be more perfect to know if your Khall is ready, please check the acidity by TITRATION (should be 5-7 %) or check its pH with a pH-meter, it should be in between 2.65~2.80.

Brewing Dates Vinegar :

Dates vinegar is a miracle of my Allah's creations, found the least in our markets, it is far better than Apple Cider vinegar.

But because dates are dry, you will have to take out their sugar by soaking them in water & below is the best procedure we have adopted.

Purchase 2 glass jars of 4 liters capacity, with a design that mouth of the jar is almost half in diameter to that of the base. We also use 8 liter jars, but 4L are preferable.

Add 1.25 kg of dates & 2.25 liters of water to every jar. Dates should be completely dry (never use the fresh / moist dates for making vinegar).

Dates are pushed upwards by CO2

Because date stones are a cure for heart, you never need to take them out, during the primary fermentation; their oil & nutrients will come out.

Start with the same Aerobic fermentation of the first day as explained for Apple Vinegar. Fermentation loves darkness, so cover your jar with a cloth & tie the knots or use safety pins. Place a small cloth on the jar's mouth & tighten with a rubber band, so as to prevent any dust or insects from falling inside.

Every 3rd day, open the jars & stir the brew properly, you need to avoid any yeast accumulation to be cultured at the top. (You need stirring for the first 3 weeks only.) With CO2 bubbles, the dates pulp will be pushed upwards.


When 30 days have completed, primary fermentation would stop & dates pulp will settle down (as seen in the picture), filtrate and separate the pulp. You will have around 4 liters of fermented dates juice (after evaporation / filtration loss), pour  in a single jar till top & ferment for 60 days more.

Dates pulp settled at bottom
Separate the pulp

Brewing the "RUBY RED" Pomegranate Vinegar :
Pomegranate vinegar is a medicine for poor digestion, clogged arteries, diabetes, cholesterol, Hypertension, & even for cancer & HIV patients. It is the best vinegar ever brewed on earth.

Brewing of pomegranate vinegar is the most difficult, as it is so sensitive & spoils suddenly even with all precautionary measures. That is why we say that "it is born after thousands of years".

When pomegranates are juiced, some part of crushed seeds also enter the juice, these seeds interfere with fermentation & spoil the brew.

Seed pulp in the juice

Peel the Poms, juice them, & put the juice jars in refrigerator for 2 days so that all the crushed seeds settle at the bottom, filtrate the pure juice carefully without any movement to the jar. Those seeds can be eaten & they will prove to be a plumber for your digestive tract.

Pulp settling at bottom
You need the pure juice without pulp

For other vinegars like apple, pineapple, pears, sugarcane, coconut, etc. You will skip the seed separation process & start the fermentation immediately after juicing.

Now cover the jar with a cloth, as vinegar loves the darkness, and the next step is the most important when we distinguish Halal Vinegar technology, put a thin cloth over the mouth of jar & tie with a rubber band, so that the air goes inside from the first day & any alcohol available is immediately oxidized. We never use the fermentation locks.


Put the jars in a dark place, away from sunlight & you should have enough air in that room / kitchen. Keep the windows open.

Pure juice is allowed to ferment aerobically (by wild yeasts) for 30 days, after which it is filtered & allowed to ferment again (aerobically) for 60 days. When 90 days have completed, filtrate the vinegar finally & you will observe some mushrooms, they have called the mother of vinegar, the cellulose made by Acetobacter. Those mushrooms are the residential colonies of bacteria. After filtration, keep the vinegar bottled & always put them in the refrigerator, the raw vinegar will have the bacteria & inside the refrigerator, the vinegar will become sharper & crispier during the next days.

Filtrate after 30 days

Mother of Vinegar

Peeling & taking out the seeds is tiresome when you need POMEGRANATE vinegar for the entire family (during the whole year), i.e. Around 30 liters, for which you need at least 120 kg of pomegranates. They will yield 50 liters of pure juice, which will give 30-35 liters of ruby red vinegar after evaporation & filtration losses.

Dates Cider Vinegar..

Methodology is same above, but benefits more..

The Father of Medicine, Ibnu Sina(Avicenna) (370/980 - 428/1037), in his treasured and famous book “The Canon of Medicine” have mentioned the benefits of dates vinegar. 

1. It helps remove body toxins 

2. Helps promote a youthful body 
3. Helps support a healthy immune system 
4. Helps maintain healthy skin and soothes irritated skin 
5. Helps control weight 
6. Improves digestion and assimilation 
7. Soothes tight and aching joints and sore muscles 
8. It regulates women menstruation 
9. It helps to keep blood in the right consistency 
10.It improves vision and hearing and treats ear discharge 
11.It relieves headache, sinus, asthma and flu 
12.It is a powerful cleansing and healing elixir, a naturally occurring antibiotic and antiseptic that fight germs and bad bacteria for a healthier, stronger and longer life. 







Which Vinegars are the best ?

We have tried vinegars from almost all the fruits, but we found that those from Dates, Figs, Grapes & Pomegranate are the best in this world, "Pomegranate Vinegar" being the KING of all.

And always avoid the synthetic vinegars, they are nothing but a 5 % solution of industrial Acetic Acid in distilled water.

The Vinegar Lab

Pears, Orange & Apple Vinegars

Trial on Guava & Kiwi Vinegar

Trial on dried Apricots & Figs Vinegar


My favorite colors, Figs, Pomegranate & Pineapple vinegars


Collection by M.Ajmal Khan.

Thursday, 11 November 2010

பெரியார் பார்வையில் இஸ்லாம்.....

(’இஸ்லாம்’ பற்றி பகுத்தறிவு கொள்கை கொண்ட பதிவர்கள் சிலரின் மதிப்பீடுகளை-பின்னூட்டங்களை தமிழ்மணத்தில் படித்துவிட்டு - பகுத்தறிவு தந்தையின் மதிப்பீடு என்னவென்று தேடியபோது கிடைத்ததை மீள்பதிவு செய்திருக்கிறேன்).
சகோதரர்களே! 69 ஆதிதிராவிடர்கள் முகமதியர்களாகி விட்டதால், அவர்களுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டதென்றோ, அவர்களுக்கு "மோட்ச லோகம்' கூப்பிடும் தூரத்திற்கு வந்துவிட்டதென்றோ, "கடவுளோடு கலந்து விட்டார்கள்' என்றோ கருதி நான் மகிழ்ச்சி அடையவில்லை. இவைகளை நான் ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை. மற்றவர்களை நம்பும்படிச் சொல்வதும் இல்லை. அன்றியும், ஒரு மனிதன் மதம் மாறுவதால் அவனுடைய செய்கைக்கும், எண்ணத்திற்கும் தகுந்த பலன் அடைவதில் வித்தியாசமுண்டு என்பதை நான் ஒப்புக் கொள்வதில்லை.
இந்துவாயிருந்து பசுவைக் கொன்றால் பாவம் என்றும், முமகமதியனாயிருந்து பசுவைக் கொன்று தின்றால் பாவமில்லை என்றும், மதத்தின் காரணமாக கருதுவது மூடநம்பிக்கையே ஒழிய, இரண்டுவித அபிப்பிராயத்திலும் அர்த்தமே இல்லை. உலகத்தில் உள்ள சகல மதங்களும் மூட நம்பிக்கையின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன. ஆகையால், பாவபுண்ணியத்தையும், மோட்ச நரகத்தையும் ஆதாரமாய் வைத்தும் நான் மகிழ்ச்சியடையவில்லை.

மற்றென்னவென்று கேட்பீர்களேயானால், இந்து மதம் என்பதிலிருந்து மதம் மாறினதாகச் சொல்லப்படும் 69 ஆதிதிராவிடர்களும், பிறவியின் காரணமாக அவர்களுக்குள்ள இழிவிலிருந்து விடுதலை அடைந்ததோடு, பாமரத் தன்மையும் காட்டுமிராண்டித்தனமுமான மிருகப்பிராயத்திலிருந்தும், அறியாமையிலிருந்தும் சிறிது விடுதலை அடைந்தவர்களானார்கள் என்பதற்காகவே மகிழ்ச்சியடைகின்றேன்.

அதாவது, மேற்கண்ட 69 பேர்களுக்கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி ஒருவன் அவர்களைப் பறையன், சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூற முடியாது. அவர்களும் மற்றவர்களை "சாமி, சாமி, புத்தி' என்று கூப்பிட்டுக் கொண்டு தூர எட்டி நிற்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு வெளியில் குடி இருக்க வேண்டியதில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல், குடிக்கத் தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை.

வண்ணான், நாவிதன் இல்லாமல் அழுக்குத் துணியுடனும், கரடிபோல் மயிர் வளர்த்துக் கொண்டும், பார்ப்பவர்களுக்கு அசிங்கமாகத் தோன்றும்படி வாழவேண்டியதில்லை. இனி எந்த பொதுத் தெருவிலும் நடக்கலாம்; எந்த வேலைக்கும் போகலாம்; யாருடனும் போட்டி போடலாம்; அரசியலில் சமபங்கு பெறலாம்; மத சம்பந்தமாகவும் இனி அவர்கள் தங்கள் கோயிலுக்குள் போக தாராள உரிமை உண்டு; வேதம் படிக்க உரிமையுண்டு.

எனவே, இவர்கள் பொருளாதாரக் கஷ்டத்திலும், அறிவு வளர்ச்சித் தடையிலும், சமூக இழிவிலும், சுயமரியாதைக் குறைவிலும், அரசியல் பங்குக் குறைவிலுமிருந்து ஒருவாறு விடுதலை அடைந்து விட்டார்கள் என்பது போன்றவைகளை நினைக்கும்போது மகிழ்ச்சியடையாமலிருக்க முடியவில்லை. ஏனெனில், தீண்டாமை, நெருங்காமை, பார்க்காமை, பேசாமை முதலாகிய சகிக்க முடியாத கொடுமைகள் முதலாவதாக மதத்தின் பேரால், வேத சாஸ்திரங்களின் பேரால், கடவுள்களின் பேரால் உள்ளவைகள் எல்லாம் அடியோடு நீங்க வேண்டும் என்கின்ற தீவிர ஆசையே இம்மாதிரி நினைக்கச் செய்கின்றது.

ஆகையால், தீண்டாமை முதலிய கொடுமை ஒழிய வேண்டும் என்கின்ற கருத்துள்ளவர்களுக்கும், ஒற்றுமையை எதிர்பார்க்கும் கருத்துள்ளவர்களுக்கும், மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்னும் கருத்துள்ளவர்களுக்கும் நமது நாட்டில் இப்போது உள்ள முக்கியவேலை, முதலில் தீண்டப்படாதவர்கள் முகமதியராவதை ஆட்சேபியாதிருப்பதேயாகும் என்பது, எனது தாழ்மையானதும், கண்ணியமானதுமான அபிப்பிராயம்.

நிற்க. சிலர் முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குகின்றது என்று எனக்கு எழுதி இருக்கிறார்கள். அது வாஸ்தவமானால், தீண்டப்படாதவர்களுக்கு அவர்களது தீண்டாமை ஒழிய முகமதிய மதத்தைச் சிபாரிசு செய்வதற்கு அதுவே ஒரு நல்ல காரணம் என்றே கருதுகிறேன். முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குவது உண்மையானால், அதில் சேர்ந்த இவர்கள் இனிமேலாவது இவ்வளவு தாழ்மையாக நடந்து கொள்ள மாட்டார்கள் அல்லவா? மற்றவர்களும் அவர்களது முரட்டு சுபாவத்தைக் கண்டு பயந்து மரியாதையாய் நடந்து கொள்ள இடமேற்படும் அல்லவா?

ஆகையால், இந்து சமூகத்தில் உண்மையான சமத்துவமும் ஒற்றுமையும் ஏற்படும்வரை தீண்டப்படாதவர்கள் கும்பல் கும்பலாய் முகமதியர் ஆவதைத் தவிர வேறு மார்க்கமில்லையாதலால், நாம் அதை ஆட்சேபிக்க முடியாதவர்களாய் இருக்கின்றோம். தவிரவும், மதத்தினிடத்திலோ இந்து சமூகத்தினிடத்திலோ கவலையுள்ளவர்களுக்கு இதனால் ஏதாவது சங்கடம் இருப்பதாயிருந்தால், அவர்கள் தாராளமாய் வெளிக்கிளம்பி வந்து தீண்டப்படாத மக்களுக்கு இருக்கும் கொடுமையையும் இழிவையும் நீக்க முன்வரட்டும். அவர்களோடும் எப்போதும் ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறேன்.

நன்றி: http://www.keetru.com/rebel/periyar/12.php


ஐந்து மணிக்குத் தீண்டத்தகாதவன் 5.30 மணிக்குத் தீண்டத்தகுந்தவன்!

நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. ஆனால், நான் பேசுவது என்பது, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை மக்களிடையே இருந்து வரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமான காரியங்களையும், அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்துவரும் பலன்களையும் பற்றித்தான் பேசுகிறேன்.

அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறது? என்பன போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமானால், அனேக விஷயங்களில் இந்து மதத்தைவிட இஸ்லாம் மதமே மேன்மையுடையது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால் லட்சியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் கடவுள் முன்னிலை என்பதிலும், மனிதன் மிருகத்தைவிடக் கேவலமாய் நடத்தப்படுகின்றான். இதை நேரில் காண்கின்றோம். இதைத்தான் அன்பு மதம், சமத்துவ மதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.

மதத் தத்துவ நூலை, வேதம் என்பதை இஸ்லாம் மதத்தில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியும், மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும்; பார்த்தாக வேண்டும்; கேட்டாக வேண்டும். இந்துமத வேதம் என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிர பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் அவன் பிரபுவானாலும், ஏழையானாலும், யோக்கியனானாலும், அயோக்கியனானாலும் சரி, ஒருவனுமே படிக்கவும் பார்க்கவும் கேட்கவும் கூடாது.

இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய்ச் சேர்ந்திருக்கிறார்கள். இன்று யாவரையும், எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ளக் கையை நீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவனையும் உள்ளே விட மறுத்து, வாசற்படியில் காவல் காக்கின்றது; தன்னவனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.

ஆதித் திராவிடர்களை நான், ‘இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம். ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது "ஆத்மார்த்தத்திற்கோ' "கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம். சத்தியாக்கிரகம் செய்வதும் கஷ்டம்; செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம். இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், ஆதித் திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது, அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆத்திகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது, இஸ்லாம் மதமும் ஒழியும்.

ஏன் கிறிஸ்து மதத்தைக் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா? கிறிஸ்தவ சகோதரர்கள் கோபிக்கக் கூடாது; வேண்டுமானால், வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான்.

Wednesday, 10 November 2010

உங்கள் குழந்தை ஏன் ப்ளே ஸ்கூல் போக வேண்டும் ? ஒரு சிறப்பு பார்வை...


பள்ளி தான் அடிப்படைகளைக் கற்றுக்கொடுக்கும் கூடம். அது அருமையாக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லா பெற்றோருடைய கனவு. ஆனால் நினைத்தபடி எல்லாம் நடக்குமா என்பது நடைமுறை சிக்கல். குழந்தைகளை எல்.கே.ஜியில் சேர்ப்பதற்கு முன்னால் சும்மா ஒரு நட்பு சூழலில், பெற்றோரை பிரிந்து தனியா மத்த குழந்தைகளுடன் சேர்ந்து இருக்க முடிகிறதானு டெஸ்ட் செய்யற இடம் தான் ப்ளே ஸ்கூல் என அறிந்து கொண்டேன்.  தினமும் நெருங்க எனக்கு டென்ஷன் அதிகமாச்சு. கண்டிப்பா ஸ்கூல் அனுப்பனுமானு? நாமே ஏன் நேரு மாதிரி வீட்டுக்கே சில டீச்சர்களை வரவழைச்சு பாடம் சொல்லி குடுக்க கூடா?னு நான் வெகுளியா மேலிடத்தை கேட்க, அது என்ன டீச்சர்கள்..? என பப்ளிக் பிராஸிகியூட்டர் மாதிரி பாயிண்ட புடிக்க எதுக்கு வம்புனு பேசாம இருந்துட்டேன்.

முந்தின நாளே வாட்டர் பாட்டில், அத வைக்க ஒரு ஸ்கூல் பேக், மத்த குழந்தைகளுக்கு குடுக்க சாக்லேட்ஸ்னு ஒரே அமர்க்களம். முத முதலா ஸ்கூல் போறான், . அதன்பின் "மை நேம் இஸ் அஜ்வத் மஹதி! னு தன்னை அறிமுகப்படுத்தி கொள்வான். அவனிடம் நாங்கள் தமிழில் மட்டுமே உரையாடுவதால், யாரேனும் திடீர்னு ஆங்கிலத்தில் என்ன கேட்டாலும் ஒரே பதில் தான். அதுக்கும் எதிராளி மசியவில்லையெனில் ஷேக்கன்ஸ் ! என கூறி கைகுலுக்கி விடுவான்.

ப்ளேஸ்கூலில் என்ன நடக்க போகுதோ? 
அஜ்வத் மஹதி புதிய சூழலில் எப்படி நடந்து கொள்கிறான் என பாக்க எனக்கு அளவிடமுடியாத ஆவல். குழந்தைகளுக்கும், அம்மாக்களுக்கு மட்டும் தான் கிளாஸ் ரூமில் அனுமதியாம். என்னை மாதிரி குழந்தை உள்ளம் கொண்ட அப்பாக்களுக்கு அனுமதி இல்லையாம். குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் பேசினார்கள். குழந்தைக்கு புரியாவிட்டால் திரும்ப புரியுமாறு சைகைகளுடன் பேசினார்கள். சற்று நேரத்தில் குழந்தை அவர்கள் சொல்வதைச் செய்வது அழகாக இருந்தது. உதாரணத்திற்கு, "ஹாப்" என்றார்கள். புரியவில்லை என்றால், கையால் சைகை செய்து "ஹாப்" என்றார்கள். குழந்தை குதித்தது."புட் திஸ் இன் டஸ்ட்பின்" என்றார்கள். குழந்தை விழித்தது. "பேப்பரை காட்டி, குப்பை கூடையைக் காட்டி, புட் திஸ் இன் டஸ்ட்பின்" என்றார்கள். குழந்தை செய்தது. பின்பு வண்ணம் தீட்டல், எண்ணுதல், அடுக்கி வைத்தல், சாப்பிடும் பொருட்கள் (எதெல்லாம் சாப்பிடக்கூடியவை எனக் கண்டுபிடிக்க வேண்டும். போன் சாப்பிடும் பொருளாகச் சொன்ன பொழுது, போனை சாப்பிடுவாயா என்று கேட்டு சரி செய்தார்கள்) என குழந்தையை மிகவும் சிரமப்படுத்தாது அவர்களது செளகரியத்திற்கு கேள்வி கேட்டது பிடித்திருந்தது. இன்னொரு அழுகை தாங்காது என்று அங்கேயே சேர்த்தோம்.  

மேலும் தமிழ் இரண்டாவது மொழியாகவும் இந்தி மூன்றாவது மொழியாகவும் இருக்குமாறு பார்த்துக் கொண்டோம்.- ஹோம்வர்க் என்று மென்னியைப் பிடிக்க கூடாது என்றும் நினைத்தோம்.- ஒரு வகுப்பில் அளவான எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்க வேண்டும் என்று எண்ணினோம். முதலில் 20 என்றார்கள். பள்ளி வளர வளர சில சமயம் 30 கூட பார்க்கிறோம்.- லேப்டாப் போன்ற hifi வேண்டாம் என்றே தோன்றியது.- போக்குவரத்து வசதி பார்த்தோம். வீட்டின் அருகில் வேன் ஏறி/இறங்கும் வசதி இருந்தது.

இவர்கள் பள்ளியில் பிடித்த சில விஷயங்கள்:

1. பாடங்களின் சுமை மெல்ல மெல்ல கூடும். எல்.கே.ஜி, யு.கே.ஜியில் தேர்வுகள் கிடையாது. நம்மிடம் சொல்லாமல் அவர்களே அவர்களை பரீட்சித்து ரிப்போர்ட் தருவார்கள். ரிப்போர்ட்டில் அவர்களது பல்வகை திறன்களும் மதிப்பிடப்பட்டிருக்கும். அவர்களது ஆர்வங்களையும், முன்னேற்றங்களையும் வகுப்பாசிரியர் கைப்பட குறிப்பிட்டிருப்பார். ஒன்றாம் வகுப்பில் இருந்து தேர்வுகள் தொடங்கும். பெரும்பாலும் வாரத்தில் ஒரு தேர்வே இருக்கும். எனவே படிப்பது எளிதாகும். எப்படி என்றாலும் முட்டி மோதி தான் படிக்க வேண்டும்.

2. ஹோம்வர்க் கிடையாது (அ) மிகக் குறைவு.

3. ஆங்கிலம் பேசும்திறன் முன்னேற்ற வீட்டில் இருந்து அவர்களுக்கு பிடித்த பொம்மையைக் கொண்டு வந்து அது பற்றி பேசச் சொல்வார்கள். குழந்தைகள் ஆர்வமாக பொம்மையை எடுத்துக் கொண்டு அது பற்றி பேசக் கற்றுக் கொள்வார்கள்.

4. பாடம் தவிர வேதம், வெஸ்டர்ன் ம்யூசிக், நடனம், நீதிபோதனை, பொது அறிவு என்று பல விஷயங்கள் உண்டு. மூன்றாம் வகுப்பு வரை "தின்கிங் ஸ்கில்ஸ்" என்று ஒரு பேப்பர் இருக்கும். அந்தந்த வகுப்புக்கு ஏற்றவாறு அவர்களது மூளைத்திறனை மேம்படுத்தும் கேள்விகள் உள்ளது. கண்டிப்பாகப் படித்து ஒன்றும் பண்ண முடியாது. இவர்கள் ஆண்டு விழாவைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். ஆசிரியர்/குழந்தைகளின் முயற்சி வெளிப்படும்.

5. வண்ண நாள், ப்ரூட் சாலட் நாள், சமூக நாள் என்று சில நாட்களுடன் பண்டிகை நாட்களும் கொண்டாடுவார்கள். கொலுவிற்கு குழந்தைகளே கொலுவாக இருப்பார்கள். கிறிஸ்துமசுக்கு எல்லோரும் அவரவர் வகுப்பில் கிறிஸ்துமஸ் மர அலங்காரம் செய்வார்கள். தீபாவளிக்கு பலகாரங்கள் பரிமாறிக் கொள்வார்கள். ஒவ்வொரு ஆசிரியரும் அவர்தம் வழியில் குழந்தைகளுக்கு உற்சாகம் கொடுக்க முயல்வார்கள். உதாரணத்திற்கு வகுப்பில் ஒவ்வொருவரும் சுழல்முறையில் ஏதாவது ஒரு பொறுப்பை ஏற்றிருப்பார்கள்.

6. "அப்சர்வேஷன் டே" என்று ஒரு நாள் நம் குழந்தைகள் வகுப்பில் கற்றுக்கொள்வதையும் ஆசிரியர்கள் கற்பிப்பதையும் காணலாம்.
7. குழந்தைகள் வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் ஆசிரியரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று அறியும் பொழுதே அவர்கள் எவ்வளவு தூரம் இவர்களுடன் பழகுகிறார்கள் என்று புரியும்.

8. நான்காம் வகுப்பில் இருந்து, ஒவ்வொரு வகுப்பிலும் அனைவரும் ஓரிரு முறையேனும் மற்ற பிரிவினருக்கு ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும். வகுப்பில் ஒவ்வொருவரும் கலந்து கொள்ள வேண்டும். இது அவர்களது தன்னம்பிக்கையை உருவாக்கும்.

9. மாதமொருமுறை ஆசிரியர் பெற்றோர் கலந்துரையாடல் இருக்கும்.

10. அடிக்கடி ப்ராஜக்ட் என்று பெற்றோருக்கு வேலை கொடுத்தாலும் அது குழந்தைகளின் புரியும் திறனுக்கு என்று உவப்புடன் செய்தால் சுவாரசியம் தான். செடிகள் பற்றி அறிய செடி வளர்த்து எடுத்துச் செல்வார்கள், ஏதேனும் கருத்தை மையமாக வைத்து சார்ட், மாடல் எல்லாம் செய்யச் சொல்லி வகுப்பை அலங்கரிப்பார்கள். 

என்ன பிடிக்கவில்லை? 
எல்லா விரல்களும் ஒன்று போல் இருப்பதில்லை. ஆசிரியர்களும் அப்படியே. எல்லோரும் ஒன்று போல் பயிற்சி எடுத்துக் கொண்டால் பிரச்னை இருக்காது என்று எண்ணுகிறேன். 

அடுத்தது கழிப்பறை. பள்ளியில் பிள்ளைகள் இல்லாதவரை சுத்தமாக இருப்பது போல் இருக்கிறது. அதன் பின்? இதற்கு தீர்வு உண்டா? என் நண்பர்களிடம்  விசாரித்த வரை, பிரபலமான பள்ளிகள் உட்பட, கழிப்பறை சுத்தம் என்று எந்த் பிள்ளையும் சொன்னதாகத் தெரியவில்லை. அது வீட்டின் சுத்தம் முன்பு தோற்றுப்போவதாலா அல்லது மிகச் சிரமமான விஷயமா என்று புரியவில்லை. பள்ளி செல்லும் பொழுதெல்லாம் சம்மந்தப்பட்டோரிடம் சொல்கிறோம்; அதன் பின் பரவாயில்லை என்று சொன்னாலும் பிள்ளைகள் கழிப்பறை செல்லத் தயங்குகிறார்கள். பணம் கட்டி பள்ளி சேர்த்தாலும் கழிப்பறை விஷயம் மட்டும் மாறுவதில்லை. இந்திய மனப்பாங்காக அதையும் சகிக்கிறோம். இதைப் பற்றி உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்..

முதல் நாள் ப்ளே ஸ்கூல் முடிந்து இரண்டு  மணி நேரம் கழிச்சுவந்த மஹதியிடம், உனக்கு எத்தனை பிரண்ட்ஸ் கெடச்சாங்க சொல்லு பாப்போம் என விசாரிக்க,அனிஸ், கார்த்திகா, ப்ரியா, செல்வி,மம்தா எல்லாரும் பிரண்ட்ஸாயிட்டாங்க டாடி சொன்னான்.

ஏன்டா உனக்கு ஒரு பையன் கூடவா பிரண்டா கெடைக்கல..?  என்று கேட்டு பூரிப்படைதேன்.


ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Thursday, 4 November 2010

இலவச தமிழ் நூல்கள்.....
















சமகால இலக்கியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி
தீபம் நா. பார்த்தசாரதி
புதுமைப்பித்தன்
அறிஞர் அண்ணா
பாரதியார்
பாரதிதாசன்
மு.வரதராசனார்
ந.பிச்சமூர்த்தி
லா.ச.ராமாமிருதம்
ராஜம் கிருஷ்ணன்
ரமணிசந்திரன்
சு. சமுத்திரம்
சாவி
கி.ரா.கோபாலன்
மகாத்மா காந்தி
ய.லட்சுமிநாராயணன்
பனசை கண்ணபிரான்
என்.தெய்வசிகாமணி
கீதா தெய்வசிகாமணி
விவேகானந்தர்
பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
ஐம்பெருங்காப்பியங்கள்
ஐஞ்சிறு காப்பியங்கள்
சைவ சித்தாந்தம்
மெய்கண்ட சாத்திரங்கள்
கம்பர்
ஔவையார்
திருஞானசம்பந்தர்
திரிகூடராசப்பர்
ஸ்ரீகுமரகுருபரர்
முருக பக்தி நூல்கள்
நீதி நூல்கள்
இலக்கண நூல்கள்
பிற நூல்கள்

ஆன்மீகம்
தினசரி தியானம்

Saturday, 30 October 2010

வாகன மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் பற்றிய விவரங்கள்...


நான் ஒரு இந்தியன்" - இப்படி, நாம் சொல்லிக் கொள்வதற்கு அரசினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பலவிதமான ஆவணங்கள் நமக்குத் தேவை. அது மட்டுமல்ல இப்படிப்பட்ட ஆவணங்கள் நம்மிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதுதான் நமக்குப் பாதுகாப்பும் கூட. இனி ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

ஓட்டுநர் உரிமம்

* வாகனங்களை ஓட்டுவதற்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். 100 சி.சி. மற்றும் அதற்கு மேல் உள்ள வாகனங்களை ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) முக்கியம். அதைப் பெறுவதற்கு முன்பாக...எல்.எல்.ஆர். எனப்படும் 'பழகுநர் ஓட்டுநர் உரிமம்' (Learner's License) வாங்க வேண்டும்.

 எல்.எல்.ஆர். லைசென்ஸ் பெறுவதற்கு...படிவம் 1, படிவம் 2, ஆகிய விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, உங்கள் பகுதியிலிருக்கும் 'வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்' சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் (http://www.tn.gov.in/sta/Application-Forms2.html) மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 பழகுநர் ஓட்டுநர் உரிமம் பெற்ற நாளில் இருந்து 30 நாட்களுக்கு மேல் 60 நாட்களுக்குள், நிரந்தர ஓட்டுநர் உரிமம் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு, 'படிவம் 4' விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.


* 'இப்பத்தான் வண்டி ஓட்டவே கத்துக்கிட்டேன்' என்று சொல்லும் 'ஃபார்ட்டி ப்ளஸ்' நபரா நீங்கள்...விண்ணப்ப படிவத்தோடு, 'படிவம் 1 -' (மருத்துவர் சான்றிதழ்)' சேர்த்து முகவரி, பிறப்புச் சான்று , 4 புகைப்படங்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

 ஒவ்வொருவரும் தங்கள் ஓட்டுநர் உரிமத்தின் கால அவகாசம் முடிந்ததும், அதனைப் புதுப்பிப்பது மிக அவசியம். கெடு முடிவடைய இருக்கும் கடைசி 30 நாட்களுக்குள், ரூ.350 செலுத்தி புதுப்பிக்க வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்துக்குள்ள புதுப்பிக்க முடியல...ஒரு வருஷம் லேட் ஆயிடுச்சே...என்ன பண்றது? என்பவர்கள்...கூடுதலாக 50 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்குள் புதுப்பிக்க வேண்டும். அதற்கும் மேலும் தாமதித்தால், உங்கள் ஓட்டுநர் உரிமம் நிரந்தரமாக ரத்தாகி விடும்.

 ஓட்டுநர் உரிமம் தொலைந்து போய்விட்டது என்றால், அதற்கான பிரத்யேக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, கட்டணமாக 315 ரூபாயைச் செலுத்தினால், லைசென்ஸ் கிடைத்துவிடும்.

எல்லா பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு இணையம் மூலம் பெறப்படும் தகவல் வங்கியினை, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், காவல்துறை ஆகியோருக்கு பயனளிக்கும் வகையில் துவங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அரசாங்கத்தால் துவங்கப்படும் இந்த வலைத்தளம் நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் மூலம் உருவாக்கப்பட்டு, இவ்வமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் இந்த தளத்தினை பார்த்து வாகனங்கள் மற்றும் ஓட்டுநர் பற்றிய தகவல்களை ஒரு கைபேசியின் குறுஞ்செய்தி (எஸ் எம் எஸ்) அனுப்புவதன் மூலம் சரிபார்த்துக் கொள்ள அனுமதித்துள்ளது.

ஓட்டுநர்கள் அபராதம் செலுத்துவதிலிருந்து தப்பிப்பதற்கு பொய்யான ஆவணங்களை அளிப்பதை தடுக்க அமைச்சகம் இந்த திட்டத்தினை கடந்த வருடம் ஆரம்பித்தது. போதுமான தகவல்கள் இல்லாததால் காவல்துறையினர் குற்றவாளிகளின் வாகனங்களை கண்காணிக்க முடியவில்லை என்று தெரிவிக்கின்றனர். அமைச்சகம் இன்னும் சில நாட்களில் மாநிலங்களுக்கான விவரங்களை ஒருங்கிணைக்கும் தனிப்பட்ட பதிவேடுகளை தயாரிக்கவுள்ளது. இதற்காக அமைச்சகம் சிறப்பு மென்பொருளை உருவாக்கியுள்ளது.

இந்த விவர வலைத்தளத்தினை பயன்படுத்தி வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் பற்றிய விவரங்களை வங்கிகள் அறிந்துகொள்ளலாம். இது மட்டுமன்றி மாநிலங்களுக்கிடையில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன உரிமையாளர்கள் ஒரு குறிப்பிட்ட வாகனத்திற்கு சாலை வரி செலுத்தி இருக்கிறார்களா என்பதையும் அதிக பாரம் ஏற்றிச் செல்வதற்காக ஒரு வாகனத்திற்கு அபராதம் விதிக்கலாம் என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ளமுடியும். முறைகேடுகளை கண்டறியவும், திருடப்பட்ட வாகனங்களை கண்டுபிடிக்கவும் காவல்துறையினர் இந்த விவரங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேற்கூறிய வாகனங்களைப் பற்றியும் ஓட்டுநர்களைப் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்பட்ட தேசிய பதிவேடுகள் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த வருடத்தின் இறுதியில் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் விவரங்களை பெற இயலும் என அமைச்சகத்தின் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. போக்குவரத்துத்துறையின் இணைய தளத்தினை விண்ணப்பதாரர் பார்வையிட்டு அதில் உள்ள விண்ணப்பங்களை இணையத்தில் பதிவு செய்து அதற்குரிய கட்டணத்தினை செலுத்தி இந்த இணையதளத்தின் மூலம் அளிக்கப்படும் சேவைகளைப் பற்றி அறிந்துகொள்ளலாம். இணையம் மூலம் வழங்கப்படும் சேவைகள் வாகனம் ஒட்ட கற்றுக்கொள்ளும் ஓட்டுநர் உரிமம் முதல் கட்டணம், சாலை வரியினை இணையதளம் மூலம் செலுத்துவது போன்ற பல்வேறு சேவைகளை உள்ளடக்கியது.

இந்தியாவில், 25 மாநிலங்கள் 100 சதவிகிதம் இணைக்கப்பட்டுள்ளன. இம்மாநிலங்களின் பதிவேடுகள் 85% சதவிகிதம் நன்கு நிறுவப்பட்டுள்ளன. இவற்றுள் ஆந்திரபிரதேசம், கேரளா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களின் வட்டார போக்குவரத்து அலுவலங்கள் மாநில பதிவேட்டில் நன்கு இணைக்கப்பட்டுள்ளன. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நாடு முழுவதுமுள்ள 1000 வட்டார போக்குவரத்து அலுவலகங்களை கடந்த 5 வருடங்களில் கணினிமயமாக்கியுள்ளது.


தொகுப்பு:மு.அஜ்மல் கான்.

Friday, 29 October 2010

A Muslim Woman Can Propose To A Muslim Man..?

A Muslim woman is allowed to approach a man with a marriage proposal, if she comes to know of a man who has good character, Deen and would be a good husband, she can approach him in an honorable way with a marriage proposal. This may be seen as improper or brazen in some cultures. But that is a cultural attitude, not an Islamic one. 

We live in a society where we are of the mindset that it's the man who should always make the proposal for marriage. Our society set rule that it's the man who has to propose and make women feel guilty or ashamed as if they would be doing something so wrong and unacceptable by asking for a man's hand in marriage. So many women wait and wait on the man to propose, and sometimes months and even years go by, and if a man doesn't propose, the woman herself become a question mark. 

In some cases when a daughter dare to suggest a suitable man to her parents which considered a crime, and also considered rude and offensive and automatically deemed to mean that she is involved in an illicit relationship with him. All these culturally-driven notions and customs are against to the teachings of Islam.

There is nothing in Quran or Sunnah that would suggest that it is prohibited for a woman to initiate a marriage proposal.
According to Islam , there is no problem for a Muslim woman to propose to a Muslim man. Islam gives a Muslim woman the right and honour to make such a proposal without feeling guilty or ashamed. 

Our best role model is the Prophet Muhammad (Peace Be Upon Him) and in this veiw we can find a most beautiful example.
When a proposal sent from Ummul-Mumineen Hazrat Khadija-tul-Kubra (Razi Allah Anha) to  Prophet Muhammad (Peace Be Upon Him), through her friend "Nafisah".
Nafisah delivered the proposal to our Holy Prophet (Peace Be Upon Him). And He accepted this proposal.
Obviously Allah would never have permitted him to accept a proposal from a woman if doing so was in any way shameful or improper.

There is absolutely no prohibition in Islam for a woman to propose marriage to a man. It is perfectly fine for you to approach the man in a most honorable way and let him know your intentions by hinting or being flat out about it, depending upon the noble custom in your society. It should be done through the proper and reasonable channels and without violating any rules of Shari’ah.

A woman could do this would be to ask her parents to approach his parents; or to send a message through someone who knows him (for example his sister, aunt, cousin, etc) that she is interested, in order to learn if he also might be interested. She can also approach him directly and raise the subject, as long as she follows Islamic rules of etiquette (meeting in public, having a chaperone, no flirtatious or sexual speech, lowering the gaze, etc).
It doesn't matter who propose, as long as its done in a good moral way within Islamic morality.

And it is also perfectly acceptable for a woman’s family to propose marriage. Unfortunately, however, there remains a stigma within certain Muslim cultures against a woman’s family proposing or initiating marriage talks. 

Sayyiduna Umar ibn al-Khattab (Allah be pleased with him) offered his daughter, Hafsa (Allah Be Pleased With Her), not only to one but two individuals: Sayyiduna Usman (Allah be pleased with him) and Sayiduna Abu Bakr al-Siddiq (Allah be pleased with them), latter-on the Holy Prophet Muhammad (Peace Be Upon Him)  himself asked for the hand of Hadrat Hafsa  (Allah Be Pleased With Her) from Hadrat Umar ibn al-Khattab (Allah Be Pleased With Him) .  
Similarly, when the Prophet of Allah, Sayiduna Shu’ayb (Peace Be Upon Him) observed the beautiful character of Sayiduna Musa [Moses](Peace Be Upon Him) and his praiseworthy attributes such as trustworthiness, he proposed marriage to him for one of his daughters.
So it is also proved, there is nothing wrong with a woman’s guardian (wali) proposing marriage on her behalf to a righteous and suitable man.

 
Tul-Kubra (Razi Allah Anha) [the Prophet’s first wife] who asked for the Prophet’s hand in marriage; and it was then and still is now an honorable thing to do. So sisters, it is within your right to make the first move. If there is a good brother out there that you like as a husband, then don't be ashamed or afraid to ask for the brother's hand in marriage. If you are too shy or afraid to ask, then let a family member, your parents or even a good friend ask on your behalf. Then  Allah will put baraka in it.
And remember, our religion Islam is the religion of easiness & peace, do not create confused methods and do not set complex-ed & baseless rules in your life and as well in society, try to investigate and think about the problem and it's solution according to Islam and find and follow the straight path in the light of Islamic teachings, ancestors can not save us but the light of Islam brighten our life here in this world and also life hereafter.

And Allah knows the best.

அண்டைவீட்டு​க்காரருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்ன ?

         " அல்லாஹ்வையும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொள்ளுதல் என்பதன் கருத்து முழுமையான ஈமான் கொள்ளுதல் என்பதையே குறிக்கும். ஆனால் இங்கு அல்லாஹ், மறுமைநாள் மட்டும் குறிப்பாக கூறப்பட்டுள்ளது. இதன் கருத்து ஆரம்பமும் (அல்லாஹ்) கடைசியுமான (மறுமைநாள்), அல்லாஹ்தான் ஆரம்பத்தில் மனிதனை படைத்தவன் இன்னும் மறுமையில் இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட குணநலனுக்கும் தீர்ப்பு வழங்குபவனும் அவனே" 

 உடன் இருப்பவர்களுக்குதான் ஒரு மனிதனின் உண்மையான குணநலன் விளங்கும் ஆகையால் தான் ஒரு மனிதன் தன் அண்டைவீட்டாரோடு உள்ள உறவுகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. 
 அண்டைவீட்டார் முஸ்லிமாக இருப்பினும், அல்லது மாற்று மதத்தை சார்ந்தவராக இருப்பினும் அவர்களுடன் நடந்துகொள்ளவேண்டிய முறையில் ஒரே நிலையையே இஸ்லாம் கடைபிடிக்கிறது

 ஒரு முறை நபிகள் கூறினார்கள் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்னிடம் பக்கத்து வீட்டுக்காரரின் கடமைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள் நான் நினைத்தேன், அனந்தர சொத்து(வாரிஸ் உரிமையிலும்) பங்குக்கு அவர்களுக்கும் பங்குதாரராக ஆகிவிடுவார்களோ என்று எண்ணுமளவிற்க்கு.

 ஒரு முறை ஒரு நபித்தோழர் நபி அவர்களிடம் வந்து ஒருவர் பக்கத்துவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை என்ன என்று, அருமை நபிகள் இப்படி பதில் சொன்னார்கள்: 

 1. அவர் உன்னிடம் கடன்கேட்டால் கொடுப்பாயாக

  2. அவர் உதவி தேடினால் உதவி செய்வாயாக

 3. நோயுற்றால் விசாரிப்பீராக

4. அவருக்கு தேவை ஏற்பட்டால் கொடுப்பாயாக

5. ஏழ்நிலை அடைந்தால் உதவி புரிவீராக.

6. அவர் வீட்டில் நலவு நிகழ்ந்தால் சந்தோசத்தில் பங்கேற்பீராக.

7. சோகம் நிகழ்ந்தல் வருத்ததில் பங்கேற்பீராக.

8. மரணம் நிகழ்ந்தால் அதில் பின் தொடர்ந்து சென்று அதில் முழுமையாக பங்கேற்பீராக.

 9.அவருக்கு காற்று தடைபடும் வண்ணம் உன் வீட்டினை உயர்த்தாதே , அவர் அனுமதிதால் பரவாயில்லை.

10. பழங்கள் வாங்கி வந்தால் அவர்களுக்கும் கொடுப்பாயாக

11. அப்படி கொடுக்கிற அளவிற்க்கு வாங்கி வராமல் இருந்தால், உங்கள் குழந்தையிடம் அந்த பழங்களைக்கொடுத்து வெளியில் அனுப்பாமல் இருப்பாயாக. ( அடுத்த வீட்டு குழந்தைகள் பார்த்து ஏக்கம் ஏற்படால் இருப்பதற்க்கு).


பக்கத்துவீடு என்பதைக்கொண்டு வெறும் பக்கத்து வீடு என்பது மட்டுமல்ல, துபாய் போன்ற நாடுகளில் டபுள்காட்டில் தங்கியிருப்பவர்கள் மேல் கட்டிலிருப்பவருக்கும், கீழ் கட்டிலில் இருப்பவருக்கும் இது ரொம்பவே பொருந்தும்.

இன்றய சென்னை போன்ற நகரங்களின் பக்கத்து வீட்டாருடன் எவ்வித உறவும் இல்லாத நிலை, இன்னும் சிலர் பக்கத்து வீட்டர் யார்? என்று தெரியாது என்று சொல்வதையும் அந்தஸ்து என்று நினைக்கிற காலமிது.

இன்று அண்டைநாடுகளிடம் உறவைகளை மேம்படுத்த வேண்டும் என்று பேசுகிற நாடுகள் கூட, அடுத்த நாடுகளை நோக்கியே தங்கள் ஏவுகணைகளை நிறுத்திவைத்திருப்பது வேடிக்கையிலும் உண்மை.

தனிமனித நிலை மாறுபடாதவரை சமூக உறவுகள் மாறாது என்ற அடிப்படையில், ஒரு கட்டுக்கோப்பான சமூகம் கட்டமைக்கப்பட தனிமனித நிலை மாறவேண்டும் என்ற அடிப்படையில் முதலில் பக்கத்து வீட்டார் உறவுகள் பேணப்பட்வேண்டும் என்ற இஸ்லாமிய நாதம் எத்துணை நடைமுறைப்படுத்தவேண்டிய உண்மை என்றும் புரிகிறது.

பக்கத்து வீட்டான் பசித்திருக்க தான் மட்டும் வயிறு நிறைய உண்பவன் நம்மை சார்ந்தவன் அல்ல என்ற நபிமொழியும்,

நிறைவான இபாதத்திருந்தும் பக்கத்து வீட்டாருக்கு நோவினை செய்ததால் நரகம் சென்றவர்களையும், குறைவான இபாதத்திருந்தும் பக்கத்துவீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொண்டவர் சுவனம் சென்றதான நபிகளாரின் வாக்கு... 'நம் வாழ்விற்கு' பொன்னால் பொறிக்கவேண்டிய வாசகம் அன்றோ.....


உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள் யார் அல்லாஹ்வின் மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் தன் அண்டைவீட்டாருக்கு நோவினை தரவேண்டாம்.

இந்த ஹதீஸில் ஒரு முஸ்லின் தன் அண்டைவீட்டருடன் ஏற்படுத்திக்கொள்ளவேண்டிய நிலைகுறித்து பேசுகிறது இது போன்ற இன்னும் சில ஹதீஸ்களும் மிக விரிவாகவே விளக்கியுள்ளது.

> பத்ஹுல்பாரி என்ற புஹாரி ஷரீபின் விளக்க உரையில் அதன் ஆசிரியரான இமாம் அஸ்கலானி அவர்கள் இந்த ஹதீஸ் இன்னும் இது போன்ற தொடர் ஹதீஸ் (யார் அல்லாஹ்வின் மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ) என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுள்ள ஹதீஸ் குறித்து பேசும் போது ஒர் அழகிய செய்தியை பதிவு செய்துள்ளார்கள் :

செட்டிநாட்டு ஊர்கள் பற்றிய சிறப்பு பார்வை..


செட்டிநாட்டு ஊர்கள் எழுபத்தைந்தை பற்றிய வெண்பா.

கோட்டையிலே மூன்று
குடிகளிலே ஆறாகும்
பாட்டைவளர் பட்டிஇரு பத்தாகும்-
நாட்டமிகும் ஊர் பத்தாம்
ஏரி, குளம், ஊருணி ஒவ்வொன்றாம்
சேர் வயல்கள் ஐந்தென்று செப்பு.
மங்கலம் மூன்று,வரம் ஒன்றே
ஆறுபுரம்,திங்கள் வகை ஒவ்வொன்று
சீர் புரிகள் நான்கு,பிற ஊர்கள் பத்து
சிலை குறிச்சி ஒன்றோ(டு)
அரம் வளர்ப்பார் ஊர் எழுபத்தைந்து!.
செட்டிநாட்டு ஊர்கள் எழுபத்தைந்தின் வெண்பாவை முன் பதிவில் பார்த்தோம்.
இப்பொழுது அந்த எழுபத்தைந்து செட்டிநாட்டு ஊர்கள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.


கோட்டையிலே மூன்று 

கோட்டையிலே மூன்று::
1.தேவகோட்டை, 2.அலவாகோட்டை,
3.நாட்டரசங்கோட்டை.


குடிகளிலே ஆறு:
1.அரியக்குடி,2.ஆத்தங்குடி,3.பலவான்குடி,4.காரைக்குடி,
5.பனங்குடி,6.கீழப்பூங்குடி

பட்டி இருபத்து:
1.சிறுகூடல்பட்டி, 2.மகிபாலன்பட்டி,3.கண்டவராயன்பட்டி, 4.மிதிலைப்பட்டி,5.ஆவினிப்பட்டி6.குருவிக்கொண்டான்
பட்டி,7.கீழச்சிவல்ப்பட்டி,8.வேந்தன்பட்டி,9.வலையபட்டி,
10.புதுப்பட்டி,11.கொப்பனாபட்டி,12..நற்சாந்துபட்டி,
13.பனையப்பட்டி,14.வேகுப்பட்டி,15.மதகுபட்டி,16.கடியாபட்டி,
17.நேமத்தான்பட்டி,18.கல்லுப்பட்டி,19.தேனிப்பட்டி,
20.உலகம்பட்டி.

ஊர் பத்து:
1.கோட்டையூர், 2.பள்ளத்தூர், 3.கண்டனூர், 4.செவ்வூர்,
5.ஒக்கூர்,6.தெக்கூர்,7.உறையூர்,8.வெற்றியூர்,9.செம்பனூர்,
10.அமராவதிபுதூர்.
மங்கலம் மூன்று:
1.பட்டமங்கலம்,2.கொத்தமங்கலம்,3.காளையார்மங்கலம்.

ஏரி,குளம்,ஊருணி ஒவ்வொன்று:
1.பாகனேரி, 2.கருங்குளம், 3.தாணிச்சாஊருணி
வயல்கள் ஐந்து:
1.புதுவயல்,2.சிராவயல்,3.ஆராவயல்,4.எ.சிறுவயல்,5.
ஒ.சிறுவயல்.

வரம் ஒன்றே:
1.ராயவரம்.
ஆறு புரம்:
1.நாச்சியாபுரம்,2.நடராஜபுரம்,3.கே.லக்ஷ்மிபுரம்,
4.வி.லக்ஷ்மிபுரம்,5.ராமச்சந்திரபுரம்,6.சொக்கனாதபுரம்.
திங்கள் வகை ஒவ்வொன்று:
1.குழிபிறை,2.விராமதி,
சீர் புரிகள் நான்கு:
1.மேலைச்சிவபுரி,2.கோட்டையூர்அளகாபுரி, 3.கே.அளகாபுரி,
4.பி.அளகாபுரி.
பிற ஊர்கள் பத்து:
1.செட்டிநாடு,2.கானாடுகாத்தான்,3.கண்டரமாணிக்கம்,
4.கல்லல்,5.கோனாபட்டு,6.மானகிரி,7.நெற்குப்பை,
8.ராங்கியம்,9.அரிமளம்,10.சக்கந்தி.
சிலை,குறிச்சி ஒன்றோடு:
1.விரயாச்சிலை,2.பூலாங்குறிச்சி

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Thursday, 21 October 2010

மருத்துவரை காணும் முன்.....

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பார்கள். ஆனால் ஆரோக்கியமாக உள்ள நேரம் உடல் நலனைப் பற்றி நாம் அதிகம் அக்கறை கொள்வதில்லை. உடல் நலத்தை கெடுத்துக் கூட பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் பின்னாளில் எல்லாவற்றையும் ஆஸ்பத்திரிகளுக்கு வாரிக் கொடுத்து ஓட்டாண்டிகளாகிப் போவதுண்டு. கண்ணை விற்று சித்திரம் வாங்ககூடாது. ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அப்புறம் தான் மற்ற எல்லாம். எவ்வளவு பணம் கிடைப்பினும், உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் வேலை செய்து சம்பாதிக்காதீர்கள். உடல் நலத்தை கெடுக்கும் எந்த பழக்கங்களுக்கும் பின்னாளில் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

யாரிடம் போவது?
சின்ன உடல் நலக்குறைவுகளுக்குப் பெரிய மருத்துவமனைகளைத் தேடி ஓடாதீர்கள். குடும்ப மருத்துவர், அல்லது அரசு மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுங்கள். சாதாரண நோய்களுக்கு மருத்துவ நிபுணர்களைவிட பொது மருத்துவர்களே போதுமானது அவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே சிறப்பு மருத்துவம் செய்வது நலம் .

சரியான மருத்துவரை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனம் செலுத்துங்கள். நீங்கள் தேர்வு செய்யும் மருத்துவமனை சுத்தமாகவும் சுகாதாரமாவும், ஆய்வகங்கள், அவசர சிகிட்சைக்கான வசதிகள் என எல்லா வசதிகளும் கொண்டுள்ளதா என பார்க்கவும். நியாயமான கூலி வசூலிக்கிறதா? இல்லை பணம் பிடுங்குவதையே பிரதானமாக கொண்டுள்ளதா? என பிறர் அபிப்பிராயத்தை கேட்டுக்கொள்ளுங்கள்.மாற்று மருத்துவம்: எல்லா நோய்களுக்கும் ஆங்கில மருத்துவம் தான் சிறப்பு என்றில்லை. பல நோய்களுக்கு அதை விட சிறப்பான மாற்று மருத்துவம் இருக்கத்தான் செய்கிறது. ஒரு மருத்துவர் இதற்கு ஆப்பரேசன் தான் தீர்வு என்றால் ஒரு மாற்று மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெறலாம்.
மற்ற மருத்துவங்களை விட அலோபதி வேகமாக பலன் தருவதால் உயிருக்கு ஆபத்தான நேரங்களில் அலோபதி தான் கை கொடுக்கும். ஆனால் பக்க விளைவுகள் தவிர்க்க முடியாதது. அலோபதி மருந்துகள் பொதுவாக நோயாளிகளைப் பார்ப்பதில்லை. நோய், மற்றும் நோய் குறிகளையே கவனிக்கிறது.
அறுவை சிகிட்சை, மற்றும் கிருமித் தாக்குதல்களுக்கு அலோபதியே வேகமாகவும் நம்பகத் தன்மையுடனும் செயல்படுகிறது. விபத்துக்கள் நேர்ந்தால் தகுந்த முதலுதவி செய்து முடிந்த அளவு வேகமாக எலும்பு முறிவு தலைக்காயம், போன்ற அவசர சிகிட்சை மையங்களுக்கு எடுத்து செல்லவும். விபத்துகளில் கை கால் முறிந்தவர்கள் சரியான எலும்பு முறிவு நிபுணர்களிடம் சிகிட்சை பெறாமல் லோக்கல் வைத்தியர்களிடம் போய் எலும்புகள் சரியாக பொருந்தாத நிலையில் மாவுக்கட்டுப் போட்டு நிரந்தர ஊனமுற்றவர்களாக பலர் நடமாடுவதை கிராமங்களில்காணலாம்.

ஹோமியோபதி மருந்துகள் நோய்க்கு கொடுப்பதில்லை நோயாளிகளின் தன்மையே நோய்க்குக் காரணம் என்று அதற்க்கேற்றவாறு நோயாளிக்குத்தான் மருந்து கொடுக்கிறது. எனவே பக்க விளவுகள் இல்லை என்று கூறப்பட்டாலும் நீண்ட சி்கிட்சை தேவைப்படும்.

சித்த மருத்துவம் பல்லாயிரம் ஆண்டுகள் மனிதன் தன் அனுபவத்தால் சேகரித்த அறிவு. பல நோய்களுக்கு எளிய மருந்துக்களை கொண்டுள்ளது. சரியான ஆராய்ச்சிகள் இல்லாததாலும் உடனடி நி்வாரணத்தை மக்கள் விரும்புவதாலும் நம் நாட்டில் தோன்றிய இந்த அரிய அறிவின் முழு வீச்சும் வெளிப்படாமல் புதைந்தே கிடக்கிறது. சித்த மருத்துவத்திலும் ஒரளவுக்கு பக்க விளைவுகள் எதிர்பார்க்கக்கூடியதே. ஆனாலும் இது இயற்கையோடு இணைந்த ஓர் மருத்துவ முறை.

அக்குபஞ்சர், அக்கு பிரசர்,வர்ம மருத்துவம் யாவும் நரம்பு மண்டலங்களைத் தூண்டி செயல்படும் மருத்துவ முறைகள்.

ஏமாறாதீர்கள்
பொதுவாக பல மாற்று மருத்துவங்கள் அனேகம் விஞ்ஞானத்தால் சரிபார்க்கப் படாதது, அது நிச்சயமான பலன் தரும் என நிரூபிக்கப்படாதது. இதனால் நிறைய போலி மருத்துவர்களும், போலி மருந்துகளும் மக்களின் அறியாமையை குறிவைத்து களத்தில் இறங்கியுள்ளன. விளம்பரங்களில் ஏமாந்து பணத்தையும் ஆரோக்கியத்தையும் இழக்காதீர்கள். மொட்டைத் தலையில் முடி முளைக்கும் மருந்துகள். ஆண்மை பெருக காயகல்பங்கள், பஸ்பங்கள், லேகியங்கள். எய்ட்ஸ், மற்றும் புற்று நோய்க்கான மாற்று வைத்திய முறைகளில் பெரும்பாலானவை போலியானவை. மக்களின் அறியாமைய பயன்படுத்தி வெறும் மாவுகளை கொடுத்து விட்டு பெரும் பணத்தை கொள்ளை அடிக்கும் பல போலி லாட்ஜ் வைத்தியர்களிடம் ஏமாந்து விடாதீர்கள்.
மந்திரவாதிகள், பேயோட்டிகள், தோசம், பரிகாரம் என ஏதும் உங்கள் நோய் தீர்க்க நிச்சயம் உதவாது. இத்தகைய மோசடிகளில் மிக எச்சரிக்கையாய் இருங்கள். மோசடி செய்வதில் சில அலோபதி டாக்டர்களும் சரி மேல் நாட்டு கம்பனிகளும் சரி சளைத்தவர்கள் அல்ல. இன்னும் தொப்பை குறைக்கும் கருவி , சர்வரோக நிவாரணி, மீன் வைத்தியம் , தவளை வைத்தியம், காந்த வைத்தியம், கரண்ட் வைத்தியம், எய்ட்ஸ் மூலிகை, என பல பொருட்கள் விளம்பரங்கள் மூலம் தலையில் கட்டிவிடுவார்கள்.
அதிக கடவுள் நம்பிக்கை உடையவர்களும் கடவுள் சித்தத்தால் இந்நோய் வந்தது அவரே தீர்க்கட்டும் என வெறும் பிரார்த்தனை மட்டும் செய்துவிட்டு எந்த மருத்துவமும் செய்யாதிருந்தால் கடவுளும் கண்டு கொள்ளமாட்டார். விரைவில் அவரைத் தேடிப்போக வேண்டிவரும்.

அதிகம் அறிந்து கொள்ளுங்கள்
உங்கள் உடம்பைப்பற்றியும் அது எப்படி நோயுறுகிறது என்பது பற்றியும் நீங்கள் அதிகம் அறிந்து கொள்வதே உங்ளுக்கு சிறந்த தற்காப்பு. மேலே நாடுகளில் மருத்துவத் துறைகளில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் திருத்தங்களும் முன்னேற்றங்களும் இன்னும் பல மருத்துவர்களை அடைய வில்லை என்பதே உண்மை. அவர்களில் பலர் இன்னும் தவறான சிகிச்சையையும வெளிநாட்டில் கைவிடப்பட்ட, தடை செய்யப்பட்ட மருந்துகளையும் எழுதித்தரகூடும்.

இருதய நோயாளிகள், வாகன ஓட்டிகள் தங்கள் வீட்டு தொலைபேசி எண்கள், முகவரி, இரத்த க்ரூப் எல்லாம் தங்களுடன் எழுதி வைத்திருப்பது அவசர நேரங்களில் கை கொடுக்கும். பக்கத்தில் உள்ள ஆம்புலன்ஸ் மொபைல் எண் உங்கள் கைப்பேசியில் பதித்துக்கொள்ளுங்கள்.

நம்மைச்சுற்றி எங்கும் நோய்க்கிருமிகள் நிறைந்திருக்கிறது. அவற்றின் தாக்குதல்களுக்கு இலக்காகாமல் இருக்க சுகாதாரமான சூழலில் வாழ வேண்டும். அதிக நோயெதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தை பருவத்திலிருந்தே தேவையான தடுப்பு மருந்துக்களை இட்டுக்கொள்ள வேண்டும். போலியோ,மஞ்சள் காமாலை, யானைக்கால், காச நோய்களை, வருமுன்னே தடுத்துவிடலாம்.
அலட்சியம், விழிப்புணர்வின்மை, பாதுகாப்பு முன்னெச்செரிக்கையற்ற சுற்று சூழல் யாவும் எமனின் வாகனங்கள். மித மிஞ்சிய உணவுப்பழக்கமும், உடல் இயக்கமின்மையும் பல சிக்கலான நோய்களுக்கு கதவை அகலத் திறந்து வரவேற்பு அளிக்கும். கொலஸ்ட்ரால், ரத்தக்கொதிப்பு, இதய நோய் , சர்க்கரை நோய், பக்க வாதம், மூளை, கிட்னி, ஈரல் பாதிப்பு என ஒவ்வொன்றையும் சந்திக்க வேண்டி வரும்.
நீங்கள் 40 வயதை கடந்து செல்கிறீர்களா?, எந்த நோயும் இல்லையா? ஒருமுறை, கண்பார்வை, சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு, இதயம், கிட்னி, இரத்தம், புற்று நோய், போன்றவற்றுக்கான பொதுவான சோதனைகளை செய்து கொள்ளுங்கள். உணவுப் பழக்கத்தில் மாற்றம் செய்து கொள்ளுங்கள். நடத்தல், யோகா போன்ற சிறிய உடற்பயிற்சி, மனப்பயிற்சிளில் ஈடுபடுங்கள்.

நோய்க் காரணங்கள் வேறு, நோய் அறிகுறிகள் வேறு. நோய்க் காரணங்களுக்குத்தான் சிகிட்சை தேவை. காரணங்களை கவனித்தால் நோய் அறிகுறிகள் தன்னாலே மறைந்து விடும். காய்ச்சல், ஜலதோசம், வலி, அரிப்பு, தடிப்பு என்பது நோய்க்கிருமிகளை உடம்பு எதிர்க்கும் போது உண்டாகும் அறிகுறியே. இதற்கு மருந்து கொடுத்து நோய் கிருமிகளுடன் உடல் போராடி அழிப்பதை தடுத்து விடக்கூடாது. நோய் உண்டாக்கும் வைரஸ் போன்ற கிருமிகளை எதிர்த்து நம் உடலின் நோயெதிர்ப்பு சக்திதான் போராடுகிறது. நாம் எடுக்கும் மருந்துகள். நோய்க்கிருமிகளை எதிர்க்க நம் உடலுக்குத் துணை செய்கிறது அவ்வளவுதான்.
காலில் ஒரு புண் ஏற்பட்டால் உடனே கவனிக்கிறோம். ஏனென்றால் அது வலிக்கிறது. நடக்க முடியவில்லை. ஆனால் அந்த அளவு முக்கியத்துவம், பல வலிக்காத உயிர் கொல்லிகளுக்கு கொடுப்பதில்லை. சர்க்கரை நோய் முற்றி கிட்னியை, கண்ணை, பாதிக்கும் நேரம் தான் அதை அறிகிறோம். ஒரு முறை இதயம் பாதிக்கப்படும்போது தான் ,உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் இருப்பதை அறிகிறோம். உடலில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து உடனே உஷாராக வேண்டும்.
மனம் நோயுற்றால்?
அனேகம் பேருக்கு எந்த நோயும் இல்லாமலேயே மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பர்கள். நோய்களைப்பற்றிய அதிக முன் ஜாக்கிரதையும் கற்பனையான அச்சமும் காரணம் தன்னை நோயாளிகளாக எண்ணிக்கொண்டிருப்பார்கள். கவுரவத்திற்காகவும், பரிதாபத்தை சம்பாதிக்கவும் நோயாளியாக விரும்பாதீர்கள். சில மருத்துவர்கள் இவர்களுக்கென்றே பொய்யான மருந்துகளை கொடுத்து காசு சம்பாதிப்பதும் உண்டு. நோயாளி என்ற உணர்வே உண்மையாக அந்த நோயைக் கொண்டு சேர்த்து விடும். உடலில் கிருமிகள் புகுந்து நோயுண்டாக்குவது போல தேவையற்ற எண்ணங்களும் மூட நம்பிக்ககளும் கூட மனதை நோயுறச் செய்யும். உடல் நோயுற்றால் மனம் அதை குணப்படுத்த முயலும். மனம் நோயுற்றால் வாழ்கையே பாழாகிவிடும். எண்ணங்களை பகுத்தறிவு துணை கொண்டு சரியான திசையில் அமைத்துக்கொள்ளவும் பயிற்சி பெறவேண்டும். உடலுக்கு கேடு செய்யும் எல்லாமே நோய் தான். மனத்தின் கோணல் காரணம், புகை, மது போதைப் பொருட்களுக்கு அடிமையாவதும் நிச்சயம் நோய் தான்.
நாம் நோயுற்றிருக்கிறோம் என்று உணர்ந்த உடனே நாள் கிழமை பார்க்காமல் தாமதமின்றி சிகிச்சையை ஆரம்பித்துவிடுங்கள். நோய் முற்றும் வரை அலட்சியப்படுத்திவிட்டு, பெரும் பணத்தயும் இழந்து உயிருக்குப்போராட வேண்டாம்.
ஒரு டாக்டரை விட உங்களுக்குதான் உங்கள் உடம்பைப் பற்றித் தெரியும். வயிற்றுவலி என்றால் உடனே ஸ்கேன் எடுக்க ஓடும் முன்பு நேற்று ரயில்வே பிளாட் பாரத்தில் பஜ்ஜி வங்கி சாப்பிட்டீர்களா? என்று நினைவு படுத்திக் கொள்ளுங்கள். தலைவலிக்கிறதா உடனே மூளையில் கட்டியோ என்று கற்பனையை ஓட விடாமல் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துப்பாருங்கள். காஸ் ட்ரபிள் இருந்தாலும் நெஞ்சு வலிக்கும். அனேக நோய்கள் மருந்தில்லாமலேயே குணமாகும். பல நோய்கள் மிக எளிய வீட்டு மருத்துவத்திலேயே குணமாகும். சில வேளைகளில் உணவே மருந்தாகும். வெறும் தண்ணீர் மட்டுமே பல நோய்களை குணப்படுத்த வல்லது.
நோய் பற்றி டாக்டரிடம் கூறும்போது உள்ளது உள்ளபடி கூறுங்கள். நோய் சீக்கிரம் குணமாகவேண்டும் என்று மிகைப் படுத்திக் கூறாதீர்கள். நீங்களே உங்களுக்கு இன்ன நோயாக இருக்குமோ என்று கூறாதீர்கள். "ஒரு ஸ்கேன் எடுத்துப் பாருங்கள் டாக்டர்" "எக்ஸ் ரே எடுங்கள்" என்று நீங்களாக மருத்துவரிடம் கேட்காதீர்கள். தேவைப்பட்டால் அவரே சொல்லுவார். அது டாக்டரின் வேலை. பலர் டாக்டரிடம் காட்டுவதோடு சரி அவர் தரும் மருந்துகளை சொல்லும் கால அளவுக்கு சாப்பிடாமல் விட்டு விடுவார்கள். இது பூரணமாக நோய் குணமாவதை தடுக்கும். நோய்க்கிருமிகள் உடலில் எஞ்சியிருக்க வழி செய்யும். நோயின் கால அளவைக்கூட்டும்.

மருத்துவரை கேளுங்கள்
மருத்துவரை சந்திக்கும்போது. உங்களுக்கு என்ன நோய், எதனால் வந்தது. குணமாக என்ன முயற்சி எடுக்க வேண்டும். எத்தனை நாள் ட்ரீட்மென்ட் எடுக்க நேரிடும். உங்கள் பொருளாதார நிலமை தாங்குமா? போன்ற எல்லா கேள்விகளயும் தெளிவாகக் கேளுங்கள். அவர் பதில் தரக் கடமைப்பட்டவர். உங்கள் பொருளாதார நிலமைக்கு தக்கபடி விலை உயர்ந்த டானிக்குகளுக்குப் பதில் சில எளிய உணவுகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

நீங்கள் ஏற்கனவே எதாவது மருந்து தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தாலோ, கர்ப்பிணியாக இருந்தாலோ, வயிற்றுப்புண், சர்க்கரை, இரத்தஅழுத்தம் இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தவறாமல் கூறிவிடுங்கள். அதற்கேற்ற மருந்துகள் எழுதித்தருவார். ஒரே நேரம் வெவ்வேறு மருத்துவர்களிடம் சிகிட்சை பெறாதீர்கள். நீங்கள் எடுக்கும் டெஸ்ட் ரிப்போர்டின் ஒரு நகலை உங்கள் வசம் வைத்துக் கொள்ளுங்கள். ஏன் அந்த டெஸ்ட்? என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.

எதிர்பாரா மருத்துவச்செலவை எதிர் கொள்ள வழியென்ன?
குடும்பம் முழுவதிற்கும் ஒரு மெடிக்கல் இன்சூரன்ஸ் பற்றித் திட்டமிடுங்கள். குழந்தளுக்கு குறைவாகத்தான் ஆகும். திடீரென் தாக்கும் பெரிய நோய்களால் குடும்பம் நடுதெருவுக்கு வராமல் காக்கும். மருத்துவச்செலவு செய்து கடனாளியானவர்கள் மிக அதிகம்.
நலமாய் வாழ:
  • சுத்தத்தை பேணுவது நோய்க் கிருமிகளிடமிருந்து காக்கும்.
  • உடலின் இயற்கையான நோயெதிர்ப்புத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  • எல்லா நோய்களுக்கும் சில மாத்திரைகளை போட்டுக்கொண்டால் போதும் என்று கருதுவது தவறு.
  • குறைவான உணவும், மிகுதியான உணவும் நோயுண்டாக்கும். ஆரோக்கியமான உணவுகளை மட்டும் அளவோடு உண்ணவும்.
  • ரெடி மேடு உணவுளை தவிர்த்து இயற்கையான உணவுகளை சாப்பிடுங்கள். உணவை பதப்படுத்த உபயோகிக்கப்படும் பெரும்பாலான பொருட்கள் தீங்கு விளைவிக்கக் கூடியன.
  • ஆரோக்கியமான எண்ணங்களால் மனதை நிரப்புவது. உடலை பாதிக்கும் எண்ணங்களை விட்டொழிவது, உடற்பயிற்சி செய்வது, கேடு தரும் பழக்க வழக்கங்களை ஒழிப்பது இவைகள் தான் நோய்களை வெல்லும் வழி.
  • காற்றை,தண்ணீரை மாசு படுத்துவதும் , உடலுக்கு தேவையானதை விட்டு நாவை மகிழ்விக்கும் உணவுப் பழக்கமும், எந்திரங்களின் பெருக்கத்தால் உடல் உழைப்பு மறைந்து போனதும். தேவைகளை விட்டு ஆசைகளை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டு அதிலேயே தொலைந்து போவதும் தான் தற்கால நோய்களுக்குக் காரணம்.
  • ஒரு நோய்க்குத் தரப்படும் மருந்தின் பக்க விளைவுகளே சில வேளை இன்னொரு நோயாக வெளிப்படலாம். இருமலுக்குத் தரப்படும் சில மருந்துகள் தூக்கத்தை தூண்டும். சில மருந்துகள், சோர்வு, அசதி, மயக்கம், வயிற்றுப்புண், மூட்டுவலி உண்டாக்கும்.
  • எடுத்ததற்கெல்லாம் வலி நிவாரண மாத்திரைகளை விழுங்குவது குடல் புண்ணுக்கு விருந்து வைத்து அழைக்கும்.
  • நோயைப் பற்றியும் தரப்படும் மருந்துக்களின் தன்மைகளையும், பக்க விளைவுகளயும் பற்றி இணைய தளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
  • மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகள் வாங்கி சுய மருத்துவம் செய்யாதீர்கள். தவறாகப் பயன்படுத்தபடும் மருந்துகள் உயிரைக் குடித்துவிடும்.
  • சில நோயாளிகளுக்கு சில மருந்துகள் கொடுக்கக் கூடாது. சில மருந்தை சேர்த்துக் கொடுக்க வேண்டியிருக்கும்.
  • மருந்தின் அளவு நோயாளியின், வயது மற்றும் எடைக்குத் தக்கபடி மாறுபடும் .

  • ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை அரைகுறையாக சாப்பிட்டு நிறுத்தக் கூடாது. நோய் கிருமிகள் அதிக பலம் பெற்றுவிடும்.
  • எடுத்ததெற்கெல்லாம் ஆன்டிபயாடிக் மாத்திரைகள் குழந்தைகளுக்கு கொடுப்பது பிறகு தேவைப்படும் நேரம் அந்த மருந்து செயல் படாதவாறு நோய் கிருமிகள் அந்த மருந்தை எதிர்த்து நிற்கும் திறன் பெற்று விடுகின்றன.
  • மருந்துகள் ஊட்டச்சத்து அல்ல. தேவையின்றி உடலில் ஏற்றிக் கொள்ளக் கூடாது.
  • அலோபதி மருத்துவர் எழுதித்தரும் மருந்துகளுக்கு நிகரான ஆயுர்வேத மருந்துகளை நீங்களாக சாப்பிடாதீர்கள்.
  • நோயாளி அனுபவப்படுவது நோய்க் குறிகளைத் தான். அதனைக் கொண்டு மருந்தை தீர்மானிக்கக் கூடாது. ஒரு மருத்துவர் சரியாக ஆராய்ந்து, சில பரிசோதனைகள், செய்து நோயை தீர்மானித்து மருந்து கொடுப்பது தான் சரி.
  • காலாவதியான மருந்துக்களை தூக்கி எறிந்து விடுங்கள்.
  • ஒரு முறை திறந்த குப்பி மருந்துகளை நீண்ட நாள் உபயோகிக்க வேண்டாம். குளிர் பதன பெட்டியில் வைத்தால் கூட இரு வாரங்களில் செயல் திறன் குறைய ஆரம்பிக்கும்.
  • மருந்து கொடுக்க சமையல் கரண்டிகளை பயன் படுத்தாதீர்கள். அளவு மாறிவிடும்.
  • ஒருவர் உபயோகித்த மருந்தை இன்னொருவருக்குக் கொடுக்காதீர்கள்.
  • வரட்டு இருமலுக்கு கொடுத்த மருந்தை சளி இருமலுக்கு கோடுக்காதீர்கள். அதற்கு சளியை வெளி்யேற்றும் வேறு மருந்து உண்டு.
  • முன்பு காய்ச்சலுக்கு உபயோகித்த ஆன்டி-பயாடிக் மாத்திரைகளை அடுத்தமுறை காய்ச்சல் வரும் வரை வைத்திருந்து கொடுக்காதீர்கள்.
  • சில மருந்துகளின் பலன் உடனே தெரிவதில்லை. நோய் சீக்கிரம் குணமாக வேண்டி அதிக அளவு மருந்து கொடுப்பது ஆபத்தில் முடியும். குடல் புண்ணாகி விடும்
  • அனேக ஆன்டிபயாடிக் மருந்துகள் சாப்பாட்டிற்கு ஒரு மணி நேரம் முன் அல்லது பின் சாப்பிட வேண்டும்.
  • மருந்தை மற்ற உணவுகளுடன் கலந்து சாப்பிடாமல் தண்ணீருடன் மட்டுமே சாப்பிடவும்.
  • மருந்துக்கள் குழநதைகளுக்கு எட்டும்படி வைக்க வேண்டாம். வீட்டில் மற்றவர்களின் மருந்துகளுடன் சேர்த்து வைக்கவேண்டாம்.
  • நீங்கள் ஏற்கனவே எதாவது மருந்து தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தாலோ, கர்ப்பிணியாக இருந்தாலோ, வயிற்றுப்புண், சர்க்கரை, இரத்தஅழுத்தம் இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தவறாமல் கூறிவிடுங்கள். அதற்கேற்ற மருந்துகள் எழுதித்தருவார்.
  • ஒரே நேரம் வெவ்வேறு மருத்துவர்களிடம் சிகிட்சை பெறாதீர்கள். உதாரணமாக பல்வலிக்கு பல் மருத்துவரிடம் போகிறீர்கள். அவர் ஒரு வலி நிவாரணி எழுதி தந்து அதை சாப்பிட்டு வருகிறீர்கள். அடுத்து மூட்டு வலிக்கு வேறு மருத்துவரிடம் போய் வலி நிவாரணி மருந்து வாங்கி அதையும் சாப்பிடும்போது மருந்து ஒவர் டோஸ் ஆகிவிடும்.
  • மருத்துவர் தரும் மருந்துகள் அதே அளவில் அதே நேரத்தில் சாப்பிடவும். நோயிலிருந்து சிறிது ஆசுவாசம் கிடைத்ததும் மருந்துக்களை நிறுத்தி விடக்கூடாது.
  • மருத்துவர் ஆலோசனைப்படி தவிர்க்க வேண்டிய உணவுகளை தவிர்த்து சேர்க்க வேண்டியவைகளை சேர்த்து உண்ணவும்.
  • சில மருந்துகளை சாப்பிடும்போது சிலருக்கு ஓவ்வாமை ஏற்படலாம். உடனே அந்த மருந்தை நிறுத்திவிட்டு மருத்துவரிடம் சொல்லுங்கள்.
  • அவசரம் இல்லாத பட்சத்தில் இன்ஜெக்ஸனை விட வாய் வழி மருந்து தான் பாதுகாப்பு.
  • மருத்துவர் எழுதித்தந்து வாங்கிய மருந்தானாலும் அவரிடம் ஒருமுறை காட்டி சரி பார்த்துக் கொள்ளவும். போலி மருந்துகள் நிறைய மார்கட்டில் உள்ளன எச்சரிக்கையாக இருங்கள்.
  • மருத்துவர் விலையுர்ந்த சில கம்பனி மருந்துக்களை எழுதித்தந்தால் அதற்கு நிகரான ஜெனெரிக் மருந்துகள் உண்டா? என்று கேளுங்கள். ஜெனெரிக் மருந்துகள் பொதுவாக மிகவும் விலை குறைவாக கிடைக்கும். இரண்டிலும் ஒரே மருந்து தான் இருக்கும். உதாரணமாக "பனடால்” என்ற காய்ச்சல், வலி நிவாரண மாத்திரைக்கு நிகரான ஜெனெரிக் மாத்திரை "பேராசிட்டமால்". பனடாலில் இருப்பது பேராசிட்டமால் தான். இது பெரும் பணத்தை மிச்சப்படுத்தும்.
  • மருத்துவர் எழுதித்தரும் மாத்திரைகளின் ஒருமடங்கு டோஸ் கூடிய மாத்திரைகள் பெரும்பாலும் அதே விலையில் கிடைக்கும். அதை வாங்கி பாதி மாத்திரை சாப்பிட்டால், மாத்திரை செலவு பாதியாகும். உதாரணமாக 40 mg மாத்திரைக்குப் பதில் 80 mg மாத்திரை வாங்கி பாதி சாப்பிடவும். ஆனால் குழாய் மாத்திரைகளயும், சிறப்பு பூச்சு பூசிய மாத்திரைகளயும் இம்முறையில் வெட்டிச் சாப்பிடதீர்கள். மருத்துவர் பரிந்துரை படி செய்யுங்கள்.
  • மருத்துவர் மூன்று வேளை மாத்திரை சாப்பிடச் சொன்னால் செலவு கருதி இரன்டு மாத்திரை போதும் என்று நீங்களாக சுருக்கிகொள்வது மிக ஆபத்தில் போய் முடியும்.
  • இரதக்கொதிப்பு போன்ற நோய்களுக்கு தொடர்ந்து நீங்கள் மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் மருத்துவரிடம் கேளாமல் திடீரெனெ நிறுத்துவது மிக ஆபத்தாகிவிடும்.
  • காய்ச்சலுக்கு மருத்துவரிட்ம் செல்கிறீகள். அவர் எழுதி தந்த மருந்தில் நோய் குணமாகவில்லை, அடுத்தமுறை செல்லும்போது அவர் வேறு மருந்து எழுதி தருவார். இப்போது நீங்கள் புதிய மருந்துடன் மீத மிருக்கும் பழய மருந்தையும் சேர்த்து சாப்பிடாதீர்கள். இப்போது எழுதித் தந்ததையே தொடருங்கள்.
  • ஒரு நேர மருந்து மறந்து விட்டால் அடுத்த நேரம் சேர்த்து சாப்பிடக்கூடாது, அந்த நேரம் உள்ளது மட்டும் சாபபிட வேண்டும்.

Monday, 18 October 2010

ஆறு நாள் உலக படைப்பு- அபத்தமா?

   ஓரிறையின் நற்பெயரால்...

குர்-ஆனில் ஆறு நாளில் உலகை படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான். இதனடிப்படையில், இவ்வாக்கியத்தை உற்று நோக்கும் எவருக்கும் பொதுவாக இரண்டு அடிப்படை சந்தேகங்கள் ஏற்படுவது இயல்பே!

1.சர்வ வல்லமையுள்ள கடவுள் என சொல்லபடுபவர் ஏன் உலகை படைக்க 6 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?


2.உலக உருவாக்கம் இலட்சக்கணக்கான ஆண்டுகள் என அறிவியல் விஞ்ஞானம் சொல்லும்போது 6 நாட்களில் உலகை படைத்தாக சொல்லுவது லாஜிக்கே இல்லாமல் இருக்கிறதே...?
            
    பார்த்தீர்களா... குர்-ஆன் அறிவியலோடு உடன் படுகிறது என சொல்லபடுகிறது. ஆனால் இது எவ்வளவு பெரிய முரண்பாடு   ஆஹா.....    குர்-ஆன் பொய், இஸ்லாம் மாயை...முஹம்மது நபி குர்-ஆனை இயற்றினார்...என இதர இணையங்களில் கட்டுரை எழுதும் தோழர்கள் இஸ்லாமை காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் காண்கிறார்கள் என்பது தெளிவு!

        மேற்குறிப்பிட்ட இரு கேள்விகளும் தர்க்க ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அழகான, திறமையான கேள்விகள் என்பதில் சந்தேகமில்லை. எனினும் திறமையான கேள்விகளுக்கு பதில் இல்லை என்ற விதியும் இல்லை.குர்-ஆனில் இதற்கான பதில் இல்லாமலும் இல்லை.

   தன்னின் கேள்விகளில் ஏற்படும் திருப்தியால் கிடைக்கும் பதிலில் விரக்திதான் மிஞ்சும்.எனவே நியாயமான தன் கேள்விகளுக்கு கிடைக்கப்பெறும் பதில் நடுநிலையாக உள்ளதா..என சிந்திக்க கடமைப்பட்டு தொடருங்கள்
    
முதலில் இரண்டாம் கேள்விக்கான தெளிவை பார்த்தப்பின் முதல் கேள்விக்கு செல்லலாம்...
   திருக்குர்-ஆனில் 07:54, 10:03,11:07, 25:59, 50:38, 57:04 ஆகிய வசனங்கள் ஆறு
நாட்களில் உலகை படைக்கப்பட்டது குறித்து பேசுகிறது

   இவ்வசனங்களில் நாட்கள் (DAYS) என பொருள்கொள்ளும் வகையில்
அமைந்த மொழிப்பெயர்ப்புக்கு நேரடியான அரபு மூல சொல் அய்யாம் (AYYA'M). இது பன்மையே குறிக்கும் சொல்.இதன் ஒருமை யவ்ம் என்பதாகும். பொதுவாக காலத்தை குறிக்கும் அரபு சொல்லாக இது பயன் படுத்தப்பட்டாலும், இச்சொல்லுக்கு படிகள், கட்டங்கள், நிலைகள் (STEPS/ STAGES ) என்ற பொருளும் கொள்ளலாம்.அதை அடிப்படையாக வைத்து இப்போது குர்-ஆன் கூறும் அவ்வசனங்களை பார்ப்போம்.காண்போரின் வசதிக்காக அவ்வசனங்களின் அரபு மூலங்களை அப்படியே ஆங்கிலத்திலும் தருகிறேன்,


  • அத்தியாயம் :அல்-அஃராஃப் (07)
  • வசனம் :54
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கிறது இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.


Inna rabbakumu All[a]hu alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi yughshee allayla a(l)nnah[a]ra ya[t]lubuhu [h]atheethan wa(al)shshamsa wa(a)lqamara wa(al)nnujooma musakhkhar[a]tin bi-amrihi al[a] lahu alkhalqu wa(a)l-amru tab[a]raka All[a]hu rabbu alAA[a]lameen(a)


  • அத்தியாயம் :யூனுஸ் (10)
  • வசனம் :03
     நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்நப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனநிடம்) பரிந்து பேசபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?


    Inna rabbakumu All[a]hu alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi yudabbiru al-amra m[a] min shafeeAAin ill[a] min baAAdi i[th]nihi [tha]likumu All[a]hu rabbukum fa(o)AAbudoohu afal[a] ta[th]akkaroon(a)

  • அத்தியாயம் :ஹுது (11)
  • வசனம் :7
        மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) "நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்" என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை" என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.


   Wahuwa alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min wak[a]na AAarshuhu AAal[a] alm[a]-i liyabluwakum ayyukum a[h]sanu AAamalan wala-in qulta innakum mabAAoothoona min baAAdi almawti layaqoolanna alla[th]eena kafaroo in h[atha] ill[a] si[h]run mubeen(un)

  • அத்தியாயம் :அல்-ஃபுர்கான்(25)
  • வசனம் :59
  அவனே வானங்களையும், பூமியையும், அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்;. பின்னர் அவன் அர்ஷின் மீது அமைந்தான். (அவன் தான் அருள் மிக்க) அர்ரஹ்மான்; ஆகவே, அறிந்தவர்களிடம் அவனைப் பற்றிக் கேட்பீராக.


    Alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a wam[a] baynahum[a] fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi a(l)rra[h]m[a]nu fa(i)s-al bihi khabeer[a](n)



  • அத்தியாயம் :காஃப் (50)
  • வசனம் :38
நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை.


   Walaqad khalaqn[a] a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a wam[a] baynahum[a] fee sittati ayy[a]min wam[a] massan[a] min lughoob(in)


  • அத்தியாயம் :அல் ஹதீத்(57)
  • வசனம் :04
அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான், பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான், நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.


 Huwa alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi yaAAlamu m[a] yaliju fee al-ar[d]i wam[a] yakhruju minh[a] wam[a] yanzilu mina a(l)ssam[a]-i wam[a] yaAAruju feeh[a] wahuwa maAAakum ayna m[a] kuntum wa(A)ll[a]hu bim[a] taAAmaloona ba[s]eer(un)

  மேற்கூறிய அரபு மூல வார்த்தையோடு இவ்வசனங்களை அணுகும்போது 6 நாட்கள் எனும் சொல்லுக்கு பொருத்தமாக,உலகம் 6 படிகளில், 6 நிலைகளில், 6 கட்டங்களில் படைக்கப்பட்டது என பொருள் கொள்ளலாம். அதுதான் சரியானதும் கூட...

    ஆக நாள் என்ற பதம் மேற்கூறிய வார்த்தைகளின் அடிப்படையிலேயே தமிழ் மற்றும் ஏனைய மொழிப்பெயர்ப்புகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே திருக்குர்-ஆன் கூறும் உலக படைப்பு 6 கட்டங்களாக நிகழ்த்தப்பட்டது என்பதை அரபு மூலத்துடன் ஒப்பிடும் சிந்தனையாளர் எவரும் மறுக்க மாட்டார்கள்.

     இல்லை...இல்லை நாட்கள் என தெளிவாக குறிப்பிட பட்டுள்ளது எனவே அது குறிப்பிட்டது 6 நாளை தான் என மொழிப்பெயர்ப்பை பற்றிப்பிடித்து கொள்ளும் நண்பர்களுக்காக..

   6 நாட்கள் தான் என்ற ரீதியில் குர்-ஆனை அணுகினாலும் மேற்குறிப்பிட்ட அதன் நிலைப்பாட்டை உண்மைப்படுத்தலாம்.
குர்-ஆன் அவ்வசனத்தில் குறிப்பிடும் நாள் என்ற பதமும்,நடைமுறையில் நம் வழக்கில் உள்ள நாள் என்ற பதமும் ஒன்றா...?

   பொதுவாக, நாம் சூரியனை மையமாக வைத்து பூமி தன்னைத்தானே ஒரு முறை சுழலுவதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவான 24 மணி நேரத்தை ஒரு நாள் என்கிறோம்.ஆக இதை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது உலகம் படைக்கப்படுவதற்கு எடுத்துக்கொண்ட கால அளவு

                                                   6 X 24 = 144
                   144 மணி நேரத்தில் உலகம் படைக்கப்பட்டது என்பது அறிவுக்கு பொருந்தாத வாதம் எனவே குர்-ஆன் கூறுவது பொய் எனலாம்.இந்த கணக்கீடு சரி,ஆனால் அந்த காலஅளவீட்டையா குர்-ஆன் சொல்கிறது?ஆமாம் அந்த அளவீட்டைதான் சொல்கிறது என குர்-ஆனை பொய்யாக்க விளைவோர் கூறுவார்களேயானால் உண்மையாகவே பொய்யாக்குகிறார்கள்.,  குர்-ஆனை அல்ல விஞ்ஞானத்தை.

     ஒரு நாளை கணக்கிடுவதற்கு இரு செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஒன்று பூமி தன்னில் தானே சுழல வேண்டும்.அதே நேரத்தில் சூரியனையும் மையமாக கொள்ள வேண்டும்.அப்போது தான் ஒரு நாள் என்பது நமக்கு கிடைக்க சாத்தியம்.ஆனால் மேற்கூறப்பட்ட திருக்குர்-ஆனிய வசனங்களை சற்று பொறுமையாக, கவனமாக பார்வையிடுங்கள். அவ்வசனங்கள் பூமியும்,வானமும் படைக்கப்ப்ட்டதே 6 நாட்களில் என்கிறது

      ஆக நாட்களை கணக்கிடும் பூமியே அதுவரை அங்கு உருவாகவில்லை எனும்போது எதன் அடிப்ப்டையில் அல்லாஹ் இங்கு நாட்களை கணக்கிட முடியும்?ஆக அல்லாஹ் நாட்கள் என குறிப்பிடுவது மனிதர்கள் கூறும் கால கணக்கின் அடிப்படையில் அல்ல என்பதும் பிரத்தியேகமாக அவன் உண்டாக்கிய வேறு கால அளவு என்பதும் தெளிவு!

        மேலும் வசனம் 50:03 ல் இறுதியாக- "எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை" என முடிக்கிறான். அவனது வல்லமையின் வெளிபாடாக கூறும் இவ்வாசகத்தில் ஓர் அறிவியல் உண்மையும் ஒளிந்துருக்கிறது.

   பொதுவாக களைப்பு என்பது சிறு செயல்கள் மற்றும் குறைவான நேரத்தில் செய்து முடிக்கும் பணியின் காரணங்களுக்காக ஏற்பாடது.மாறாக அதிக பளுவாக வேலைகளோ,தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் கடின செயல்களாலோ ஏற்படுகிறது என்பதை கடைநிலை பாமரன் கூட அறிவான்.

      தான் மேற்கொண்ட உலக படைப்பின் கால அவகாசம் நீண்ட,நெடியது என்பதையும் அவ்வாறு மேற்கொண்ட போதிலும் சிறு களைப்பும் தம்மை வந்தடையவில்லை என்று அவன் குறிப்பிடுவதிலிருந்தே -சிந்திக்கும் எவருக்கும் அவனது இவ்வசனம் அத்தாட்சியாக இருக்கும்.

 ஆக அய்யாம் என்ற அரபு மூலத்தின் அடிப்படையில் அணுகினாலும், நாட்கள் என்ற மொழிப்பெயர்ப்பு பதத்தின் வழி அணுகினாலும் 6 நாட்கள் உலக படைப்பு அறிவியலுக்கு முரணானதல்ல.

இத்தோடு சேர்த்து இங்கு ஒரு துணை விளக்கம்


   அத்தியாயம் 41 வசனம் 9,10,11&12 இவ்வனங்களை மேற்கோள் காட்டி சிலர் உலகம் 8 நாட்களில் படைக்கப்பட்டதாக கூறி அது ஏனைய 6 நாட்கள் குறித்த வசனங்களோடு முரண்படுவதாக நிறுவ முயல்கிறார்கள்.அந்த வசனங்கள் இதோ,

  "பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தானா ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்" என்று (நபியே!) கூறுவீராக.


அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான் அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான் இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான் (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).


பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான் ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும் "நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்" என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் "நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்" என்று கூறின.


ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான் ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான் இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம் இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம் இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.

இதில் முதல் வசனத்திற்கு -  -2 நாட்கள்
இரண்டாம் வசனத்திற்கு        -4 நாட்கள்
நான்காம் வசனத்திற்கு           -2 நாட்கள்

  ஆக 2+4+2 =8 நாட்கள் என்கிறார்கள்.இந்த எண்ணிக்கையை கூட்டினால் சரிதான். ஆனால் இங்கு அதை கூட்டவேண்டிய அவசியமென்ன., ஏனெனில் குர்-ஆன் கூறும் இவ்வசனங்கள் கூட்டல் அடிப்படையில் நாட்களை வகைப்படுத்தவில்லை.மேற்கண்ட நாளளவில் நடைபெற்ற செய்கையை பற்றித்தான் குறிப்பிடுகிறது.

    ஏனெனில் இறுதியாக கூறும் வசனத்தில் குறிப்பிடும் அந்த இரண்டு நாட்களில், அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான் என்றே கூறுகிறது .மாறாக வானம் படைக்கப்பட்டதாக கூறவில்லை. எனவே மேற்கூறிய வசனங்கள் 6 நாட்கள் உலக படைப்பின் விவரிப்புகளே!

இப்பொழுது முதல் கேள்விக்கு வருவோம்.,
சர்வ வல்லமையுள்ள இறைவன் உலகை படைக்க நீண்ட காலத்தை எடுத்துக் கொண்டது ஏன்?

 குர்-ஆனில் இறைவன் வல்லமையை குறித்து எந்த வசனமும் இல்லாதிருந்தால் அவனது இத்தகையை நீண்ட கால படைப்புக்கு விடை தேவைப்ப்டலாம். ஆனால் அவன் தன் வல்லமையே குறிப்பிடும்பொழுது
  
 ஏனெனில் நாம் ஏதேனும் ஒரு பொருளை (உண்டு பண்ண) நாடினால் நாம் அதற்காகக் கூறுவது, 'உண்டாகுக!' என்பது தான். உடனே அது உண்டாகிவிடும்.(16:40)


(மேலும் பார்க்க:3:59, 36:82, 40:68,46:33,50:38)


     ஆக இறைவனின் ஒரு படைப்புருவாக்கத்தை பற்றி மேலதிக விளக்கம் இல்லாமலே எளிதாக தெரிந்துக்கொள்ளலாம்.எனினும் சில விசயங்களை தான் நாடிய விதத்தில் செய்கிறான்.சிலவற்றை தனது அத்தாட்சிக்காக நிறுவுகிறான்,சிலவற்றை தாமதித்து வெளியாக்குகிறான்.சிலவற்றை வெளிப்படையாக அல்லது அந்தரங்கமாக தெரிய செய்கிறான், சிலவற்றை நீண்ட- நெடிய காலங்களுக்கு பிறகு வெளியாக்குகிறான்.

 தங்களுக்கு எந்த பதில் பிடித்திருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள் ஏனெனில்..,
 
  அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள். (21:23)