Wednesday, 25 January 2012

சூரிய கதிரியக்கத்தால் பூமிக்கு ஆபத்தா ? ஒரு இஸ்லாமிய விழிப்புணர்வு!!

இன்றைய சூரிய கதிர்களின் தாக்கமும்,சுனாமியும், பூகம்பங்களும் அழிவிற்கு சில உதாரணங்கள். ஏனெனில் இவை பூமியில் மேல்பரப்பிலும், நீர்ப்பரப்பிலும் மட்டுமே பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஆனால் அன்று...? வானத்திலிருந்து வரும் பாதிப்புகளும், மலைகள் சிதறி ஏற்படுத்தும் விளைவுகளும் நம்மால் கற்பனை செய்யதால் மனம் தாங்குகிறதா? திருமறைக் குர்ஆனை பொய்ப்பிப்பவர்கள் இனியாவது சிந்திக்க மாட்டார்களா? அனுபவங்களின் அடிப்படையில்கூட‌ மனிதன் பாடம் படிக்கவிட்டால்..... அந்த இறைவனுக்கா நஷ்டம்? 



திருக்குர்ஆனின் மற்ற எச்சரிக்கைகளையும் பார்ப்போம்!
  • வானம் பிளந்துவிடும்போது..நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும்போது.. கடல்கள்கொதிக்கவைக்கப்படும்போது..மண்ணறைகள்புரட்டப்படும்போது... ஒருவன் தான் முற்படுத்தியதையும் பிற்படுத்தியதையும் அறிந்துக் கொள்வான்! (அல்குர்ஆன்: 82: 1-5)
  • சூரியன் சுருட்டப்படும்போது... நட்சத்திரங்கள் உதிரும்போது... மலைகள் பெயர்க்கப்படும்போது... கருவுற்ற‌ ஒட்டகைகள் கவனிப்பாரற்று விடப்படும்போது... காட்டு விலங்குகள்ஒன்றுதிரட்டப்படும்போது... கடல்கள் தீ மூட்டப்படும்போது.... உயிர்கள் மீண்டும் (உடல்களோடு)ஒன்றிணைக்கப்படும்போது...(அல்குர்ஆன் 81:1-7)
  • பூமி பேரதிர்ச்சியாக குலுக்கப்படும்போது... பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும்போது... இதற்கு என்ன நேர்ந்துவிட்டது என்று மனிதன் கேட்கும்போது... அந்நாளில், தனது இறைவன் இவ்வாறு அறிவித்ததாக தனது செய்திகளை அது அறிவிக்கும்!(அல்குர்ஆன் – 99:1-5)

  • நாசா வெளியிட்ட ஆரோரா புகைப்படங்கள்.


மின் காந்த புயல் ஆரோரா (AURORA) என்று அழைக்கப்படும் இந்த புயல் பூமியை கடந்த 23ம் தேதி 03.59 முதல் 24ம் தேதி 03.59 வரை பூமியில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது . இந்த வகை கதிர்கள் தாக்கம் M9 என்ற அறிவியல் வகைபாடுகளின் கீழ் விவரிக்கபடுகிறது. கடந்த 23ம் தேதி ஏற்பட்ட கதிர் தாக்குதல் உலகின் மிக நீண்ட நேர மற்றும் கடுமையான தாக்குதல் ஆகும். நாசாவின் சூரிய டைனமிக்ஸ் ஆய்வகம் கைபற்றிய கதிர்வீசுகளை ஆய்வு செய்து கூறும்போது இந்த வகை தாக்கம் X-Flare எனப்படும் X வகை கதிர்கள் என்றும் இதனால் மனிதர்களுக்கோ மற்ற உயிர்களுக்கு ஆபத்து நேரிடாது என்றும் மின் காந்த கருவிகளுக்கும் , செய்தி தொடர்புக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியது. இதை முன்னிது உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் காந்த கருவிகள் தொடர்பை நிறுத்தி வைத்தன பல விமானங்கள் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது . மேலும் நாசா கூறும்போது இந்த கதிர்கள் ஏற்படுத்திய மாற்றத்தை இரவு நேரங்களில் ஆர்டிக் எனப்படும் பூமியின் காந்த புலத்தில் மிக துல்லியமாக பார்க்கலாம் என கூறியது . சூரியனில் இருந்து வெடித்து மிக வேகமாக வெளியேறும் கதிர்களை பற்றி ஆய்வு செய்துவரும் Solar and Heliosphere Observatory (SOHO) மற்றும் STEREO-Behind spacecraft ஆய்வகம் கூறுகையில் இந்த மின்க காந்த கதிர்கள் சுமார் 2200 KM வேகத்தில் பூமியை தாக்கியது . மேலும் இதை பற்றிய முதல்நிலை ஆய்வில் இந்நிறுவனங்கள் கூறியது , மேக கூட்டங்கள் சரியான பாதையில் தான் பயணிக்கின்றனவா என்பது விஞ்ஞானிகளுக்கு மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என்று கூறின .மேலும் வலிமையான தாக்கத்தை ஆரோரா ஏற்படுத்தி இருக்கும் என்று கூறுகின்றனர். ஆர்டிக் கடல் பகுதியில் இதன் தாக்கம் மிக தெளிவாக உணரப்பட்டதாக தெரிவிக்கின்றனர். கோடார் (CODAR or COSTAL RADAR) எனப்படும் கடல் ஆளவீட்டு கருவிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் ஆளவீட்டில் சுமார் 4543 KHz  மாற்றம் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் கூறினர். இன்னும் என்ன என்ன இதைபற்றிய ஆய்வுகள் தெரிவிக்கிறது என்பதை பொருத்து இருந்து பார்ப்போம், 

OSLO பல்கலைக்கழக இயற்பியல் துறை வெளியீட்டுள்ள ஆரோரா கதிர்கள் தாக்குதல் அனிமேஷன்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

கேசினோக்கள்(CASINO) மூலம் இந்தியாவுக்குள் வரும் தீவிரவாத பணம்!! ஒரு தவகல்..


இந்தியாவின் சூதாட்ட தலைநகரம் என்றால் அது கோவா தான். இங்குள்ள 5 நட்சத்திர ஹோட்டல்களிலும் பல சாதாரண ஹோட்டல்களிலும் ஏராளமான கேசினாக்கள் உள்ளன. மேலும் கோவா கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் இதற்கெனவே மிதக்கும் கேசினோக்களும் இயங்குகின்றன.  

டாலக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதையடுத்து இந்திய சூதாட்ட விடுதிகளுக்கு (casinos) வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.



இந்தியாவை பொறுத்தவரை கேமப்ளிங் என்ற வார்த்தையையே பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் கேம்ப்ளிங் விளையாட விரும்பினால், கோவாவில் உள்ள கேசினோ ராயலுக்கு வருவதை தவிர வேறு வழி இல்லை. அதுமட்டுமல்லாமல் இது தான் இந்தியாவில் இருக்கக் கூடிய ஓரே மிதக்கும் கேசினோ.
கேசினோ ராயல் அமைந்திருக்கும் கப்பல், கடலில் தன்னுடைய பிரயாணத்தை தொடங்கிய உடனேயே அனைத்து கேம்ப்ளிங் விளையாட்டுகளும் களைகட்ட தொடங்கி விடும்.
அதோடு இங்கு பெரும்புள்ளிகளுக்கென தனியறையும் இருக்கிறது.
கேசினோ ராயலின் கேளிக்கைகள் வெறும் கேம்ப்ளிங் விளையாட்டுகளுடன் முடிந்துவிடாது. இந்தக் கப்பலில் உள்ள சைனா கார்டன் என்ற உணவகத்தில் மெழுவர்த்தி வெளிச்சத்தில் இரவு உணவை ருசிக்கும் அனுபவம் மிகவும் அற்புதமானது. அதோடு இந்த உணவகத்தில் நடத்தப்படும் ரஷ்ய குழுவினரின் பெல்லி நடன நிகழ்ச்சி அட்டகாசத்தின் உச்சம்.
கேசினோ ராயலுக்குள் நுழைவதற்கு ஒரு இணை 4000 ரூபாய்கள் கட்டணமாக செலுத்த வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு மது மற்றும் உணவுடன், 3000 மதிப்புள்ள திரும்பப்பெற இயலாத கூப்பன் ஒன்று தருவார்கள்.
அதை வைத்துக் கொண்டு நீங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்கலாம். குறிப்பாக தொடக்க நிலை கேம்ப்ளர்களுக்கென்று பிரத்தியேகமாக எளிமையான விளையாட்டுகள் இருக்கின்றன. அதே நேரத்தில் அனுபவ கேம்ப்ளர்கள் ஸ்லாட் மெஷின்ஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு தங்கள் திறமையை நிரூபிக்கலாம்.
மேலும் இங்கு குழந்தைகளோடு வரும் பயணிகள் கவலை கொள்ள அவசியமே இல்லை. ஏனென்றால் உங்கள் குழந்தைகள் தூங்குவதற்கும், விளையாடுவதற்கும் இங்கு தனிப்பட்ட பகுதிகள் உள்ளன. எனவே ஜோடியாக நீங்கள் உங்கள் நேரத்தை இன்பமயமாக கழிக்கலாம். அதோடு இங்கு வரும் நட்சத்திர தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகம்.
எப்படி பார்த்தாலும் உங்களுடைய மாலை நேரம் முழுவதும் கேளிக்கையும், கொண்டாட்டமுமாக கழியும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அதுமட்டுமல்லாமல் கொஞ்ச நேரத்துக்கு நீங்கள் இந்தியாவில் இருப்பதையே மறந்து போய் விடுவீர்கள்.


இதைத் தவிர சிக்கிம் மாநிலத்திலும் ஏரளமான கேசினோக்கள் உள்ளன. கோவா, சிக்கிமில் தான் சூதாட்ட விடுதிகளை அந்த மாநில அரசுகள் அனுமதிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மகாவ் பகுதி தான் சூதாட்ட விடுதிகளுக்கு பெயர் போனது. அடுத்த இடத்தில் உள்ளது சிங்கப்பூர்.

ரூபாயின் மதிப்பு சரிந்துவிட்டதால், இந்த நாடுகளை விட இந்தியாவில் சூதாடுவது 'சீப்' ஆகிவிட்டது. இதனால், கோவா மற்றும் சிக்கிமை நோக்கி வரும் வெளிநாட்டு சூதாட்டப் பேர்வழிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.

ஆனால், இந்திய சூதாட்ட விடுதிகளுக்கு வரும் பணத்தை கண்காணித்து வரும் மத்திய அரசின் நிதித்துறையின் உளவு அமைப்பான Financial Intelligence Unit (FIU), சில அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்யும் அமைப்புகளும், இந்த கேசினோக்கள் மூலமாக நாட்டுக்குள் பணம் அனுப்பி வருவது தெரியவந்துள்ளது.

கடந்த ஓராண்டில் கேசினோக்களுக்கு வந்துள்ள வெளிநாட்டு பணத்தில் 7,006 பணப் பரிமாற்றங்கள் சந்தேகத்துக்குரியவை (Suspicious Transactions) என எப்ஐயு தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு முதலே இந்திய கேசினோக்கள் அன்னிய செலவாணி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீன் கொண்டு வரப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் தீவிரவாத அமைப்புகளுக்கு பணம் செல்வதைத் தடுக்க Financial Action Task Force என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பும் இந்திய உளவுப் பிரிவுகளும் நிதித்துறை உளவு அமைப்பும் இணைந்து இந்தியாவுக்குள் வரும் அன்னிய செலவாணியை கண்காணித்து வருகின்றன.

இந்த அமைப்புகள் கடந்த ஓராண்டில் மட்டும் 7,006 சந்தேகத்துக்கிடமான நிதிப் பரிமாற்றங்களை கண்டுபிடித்துள்ளன. இதையடுத்து இந்திய சூதாட்ட விடுதிகளுக்கு வரும் வெளிநாட்டு நிதியை மேலும் கண்காணிக்க வசதியாக, இது தொடர்பாக சில சட்டத் திருத்தங்களைக் கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
English summary
Indicating signs of possible funds related to crime and terror trickling into the Indian casino sector, a government report has said that more than 7,000 instances of suspicious transactions have been detected in the elite gaming business during the last financial year. A total of 7,006 Suspicious Transaction Reports (STRs) during the 2010-11 fiscal have been reported by the casino business and allied payment operators to the Financial Intelligence Unit (FIU), an enforcement agency under the Union Finance Ministry. The casino business in the country was brought under anti-money laundering laws in 2009 and the operators primarily provide slot machines and electronic games to customers.

தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.