Tuesday, 10 July 2012

வாழ்க்கைக்கு உதவும் ஐடிஐ படிப்புகள்...







எலக்ட்ரீசியன்

இன்றைக்கு வீடுகளாகட்டும், தொழிற்சாலைகள், விவசாயம் என்று எந்த இடமாக இருக்கட்டும் மின்சார த்தின் துணையின்றி எதுவும் இயங்க முடியாது. அத்தகைய இடங்களில் பல அடுக்கு மாடிக்குடியிருப்புகளில் மொத்தமாக மின்இணைப்புகள் தரவும், தொழிற்சாலைகளில் பல இயந்திரங்களுக்கு மின் இணைப்புகளை தரவும். மின்சாரம் நின்றுபோனால் அவற்றை சீர்படுத்தவும் கற்றுத்தரப்படுகின்றன.

ஏசி அண்ட் ரெப்ரிஜிரேட்டர் மெக்கானிக்

இன்றைக்கு வெயில் காலங்களில் மக்கள் அதிகமாக தங்களுடைய இல்லங்களில் பொருத்த விரும்புவது குளிர்சாதன பெட்டிகளைத்தான். மேலும், பழங்கள், காய்கறிகள், உணவுப் பொருள்களையும் கெடாமல் பாதுகாக்க விரும்புபவர்கள் வீட்டில் ஒரு ரெப்ரிஜிரேட்டரையாவது வைத்திருக்க விரும்புவார்கள். அப்படிப்பட்ட மெஷினில் கோளாறுகள் ஏற்பட்டால் அவற்றை பழுதபார்க்க வேண்டும் இல்லையா? தவிர, கார்களிலும், பேருந்துகளிலும் கூட தற்போது ஏசி பொருத்தப்படுகிறது. இப்படி பலவித உபயோகங்களில் இருக்கும் ஏசியை பழுதுபார்க்க அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வெல்டர்

வெல்டிங்கில் ஆர்க்வெல்டிங், கேஸ்வெல்டிங் என சிலவகைகள் உண்டு. இந்த பற்றவைப்பு சாதனம் மூலம் வெட்டப்பட்ட இரும்புத்துண்டுகளை ஒட்டவைக்க வெல்டிங் வைக்கப்படுகிறது. இன்றைக்கு கார்கள், பஸ்கள், ரயில்துறைகள், விமானம், கட்டிடங்கள், வீட்டின் காம்பவுண்ட் கதவுகள் என பல இடங்களிலும் இதன் உபயோகம் அபாரமானது. இது ஒரு ஆண்டு பயிற்சியாகும்.

மெஷினிஷ்ட் கிரைண்டர்

லேத்மெஷினிலோ, பிளானிங், ஷேப்பிங், மில்லிங், சிலாட்டிங் மெஷினில் மெஷினிங் செய்யப்பட்ட உதிரிபாகங்களின் மேற்பாகங்களை மிக நுண்ணிய அளவிலும் பொருட்களை ஒன்றோடு ஒன்று பொருத்துவதற்கு வசதியாக மிகச்சரியாக பொருந்தும் படியும் உற்பத்திப் பொருட்களின் மிக முக்கிய பாகங்களை குறிப்பிட்ட மைக்ரான் அளவில் சரியான அளவாக மெஷினிங் செய்வதற்கு பயன்படும் இயந்திரம் கிரண்டர். இதில் கூர்முனை கற்கள் கொண்ட கார்பைடு வீல்கள் பொருத்தப்பட்டு .ற்பத்தி பொருட்களை டேபிளில் பொருத்தி மெஷினிங் செய்வார்கள். இது இரண்டு ஆண்டுப் படிப்பாகும்.

டிராப்ஸ்மேன் மெக்கானிக் மற்றும் கட்டிடபட வரைவாளர்

ஒரு மெஷினையும் அதை உருவாக்கிடத்தேவையான உதிரிபாகங்களை உருவாக்கவும் முக்கியமானது வரைபடம். அத்தகைய படங்களை வரையக்கூடியவர்கள் டிராப்ஸ்மேன்கள். மெஷினின் உள்பாகங்கள், அதில் வரக்கூடிய துவாரங்கள், மரைகள், மற்ற உதிரிபாகங்கள் பொருந்தக்கூடிய பகுதிகள் என அத்தனை விசயங்களையும் மிக நுணுக்கமாக வரையக்கூடியவர்கள். கட்டிடபட வரைவாளர் டிரேடில் கட்டிடங்கள், அதன் மாதிரிகள், கட்டிடங்களின் உள்பகுதிகள் என மிக நுணுக்கமாக வரையக்கூடிய பயிற்சியை இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது 2 ஆண்டு பயிற்சி படிப்பாகும்.

மோல்டர்(அச்சுவார்ப்பவர்)

இரும்பு, பித்தளை, வெண்கலம், தங்கம், வெள்ளி, எக்கு போன்ற பல்வேறு உலோகங்கள் சுரங்கத்திலிருந்து வெட்டியெடுக்கபட்டு தாதுக்களாக பிரிக்கப்பட்டதும் அவை அந்தந்த உலோகங்களின்உருகுநிலை வெப்பத்திற்கு ஏற்ப உருகவைக்கப்பட்டு அச்சுக்களில் ஊற்றி வார்க்கப்படுகின்றன. அப்படி உருக்கி வார்க்கப்பட்ட உலோகங்களை பின்னர் மெஷின்களில் பொருத்தி தேவையான உருவத்திற்கு மெஷினிங் செய்கிறார்கள்.

Tips on Dealing With Stress in your College


Sometimes the multitude of life’s changes that occur during your college years can trigger serious depression. At this vulnerable time, the smartest thing you can do for yourself is to seek help. If your feelings of constant stress and sadness go on for weeks or months, you may be experiencing more than just difficulty adjusting to life’s changes. Seek help from a doctor or mental health professional, the university counseling service, or the student health center. While in treatment, there are a number of steps you can take to help you cope on your way to recovery.
1. Carefully plan your day. Make time every day to prioritize your work. Prioritizing can give you a sense of control over what you must do and a sense that you can do it.
2. Plan your work and sleep schedules. Too many students defer doing important class work until nighttime, work through much of the night, and start every day feeling exhausted. Constant fatigue can be a critical trigger for depression. Seven or eight
hours of sleep a night is important to your wellbeing.
3. Participate in an extracurricular activity. Sports, theater, college clubs, AIESEC, the student newspaper, Blogs – whatever interests you – can bring opportunities to meet people interested in the same things you are, and these activities provide welcome
change from class work.
4. Seek support from other people. This may be a roommate or a friend from class. Friendships can help make a strange place feel more friendly and comfortable. Sharing your emotions reduces isolation and helps you realize that you are not alone.
5.  Try relaxation methods. These include meditation, deep breathing, warm baths, long walks, exercise – whatever you enjoy that lessens your feelings of stress and discomfort.
6.  Take time for yourself every day. Make special time for yourself – even if it’s only for 15 minutes a day. Focusing on yourself can be energizing and gives you a feeling of purpose and control over your life.
7. Work towards recovery. The most important step in combating depression and reclaiming your college experience is to seek treatment. Your physician should communicate to you that remission of symptoms should be your goal and work with you to decide whether psychological counseling, medication or a combination of both treatments is needed.

Collection By :M.Ajmal Khan.

பயோகேஸ் மூலமாக உங்கள் வீட்டிலேயே இலவச கியாஸ் மற்றும் மின்சாரம் !!! ஒரு சிறப்பு பார்வை..


தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எல்.பி.ஜி என்னும் சமையல் எரிவாயுவின் பற்றாக்குறை இருக்கிறது.விலை உயர்ந்து கொண்டே போவதும் நேர்கிறது. இந்த நிலையில் மாற்று எரிபொருளை தேடி வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இயற்கையில் பூமியில் கிடைக்கும் இந்த எரிவாயுவும் இன்னும் சில கால அளவுக்கு மேல் கிடைக்க போவதில்லை. இதனால் வருங்காலத்தில், எதையெல்லாம் எரிபொருளாக பயன்படுத்தலாம் என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

அதே வேளையில் உயிர்க்கழிவுகள் என்று கூறப்படும் மனிதன் வெளியேற்றும் மலஜலம், காய்கறி கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், விவசாய கழிவுகள் போன்ற அழுகிவிடும் கழிவுகளிலிருந்து மின்சாரத்தையும், எரிவாயுவையும் பெற முடியும் என்று பல காலங்களுக்கு முன்பே கண்டறியப்பட்டுள்ளது. இந்த கழிவுகளிலிருந்து மின்சாரமும், எரிவாயுவும் தயாரிக்க உருவாக்கப்படும் கட்டமைப்புக்கு அரசு மானியமும் வழங்குகிறது. 

ஆனால் இதனை பயன்படுத்திக் கொள்பவர்கள் தான் குறைவு என்பது தான் துரதிர்ஷ்டம். கீழ்வரும் பயோகேஸ் என்ற மனித மலக்கழிவிலிருந்தும், வேறுபல உயிர்க்கழிவுகளிலிருந்தும் எரிவாயுவையும், மின்சாரத்தையும் எடுக்கும் திட்டம் முடுக்கிவிடப்பட்டால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் எரிவாயு பற்றாக்குறை தீரும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.




பயோகேஸ்
இது போன்ற உயிர்க்கழிவுகளிலிருந்து மின்சாரமும், எரிவாயுவும் தயாரிக்கும் முறை குறித்து தமிழ்நாடு அரசின் மரபுசாரா எரிசக்தி முகமையின் முகவரான மனோகரன் விளக்குகிறார். " மனிதனின் மலஜலம் உள்பட மடிந்து போன அனைத்து உயிர் பொருள்களிலிருந்தும் எளிதாக எரிவாயுவை பெற முடியும். இப்படி பெறப்படும் எரிவாயுவை பயோகேஸ் என்கிறோம்.

தற்போது நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் எல்.பி.ஜி சமையல் சிலிண்டர் வாயு, பெட்ரோல், டீசல் உள்பட பூமியில் இருந்து கிடைக்கும் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு தான் கிடைக்கும். இவை கிடைக்காமல் போகும் நிலையில் நாம் அடுப்பு எரிக்கவும், வாகனத்தை ஓட்டவும் என்ன செய்யப்போகிறோம் என்பது தான் இப்போது உள்ள கேள்வி. விஞ்ஞானத்தில் முன்னேறிய நாடுகள் பலவும் இதனை கருத்தில் கொண்டு தண்ணீரில் கூட கார் ஓட்டலாமா என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஆனால் நம்மை போல் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் அதிக அளவு கிடைக்கும் மூலப்பொருளை வைத்து முதலில் சமையல் உள்பட அதிமுக்கியமான தேவைக்கு எரிவாயுவையும், மின்சாரத்தையும் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் மலத்திலிருந்தும், உயிர்க்கழிவுகளில் இருந்தும் எரிவாயுவை பெறும் "பயோகேஸ்" அமைப்பு. இந்த பயோகேஸ் அமைப்பு மூலம் மின்சாரத்தையும் பெற முடியும். எரிவாயுவையும் பெற முடியும் என்பது தான் சிறப்பு.


எப்படி உருவாகிறது?
பொதுவாக மனித மற்றும் விவசாயகழிவுகள் நமக்கு எளிதாக கிடைக்கின்றன. இந்த கழிவுகள் அனைத்தும் எளிதில் மக்கிவிடக்கூடியது. இயற்கையில் இந்த கழிவுகள் மக்கும் போது ஒரு ரசாயன மாற்றம் நடக்கிறது. மலமாக இருந்தாலும், வேறு தாவர இலை,தழை, இறைச்சி உள்பட எந்த உயிர்க்கழிவாக இருந்தாலும், அது பூமியில் விழும் போது மக்கி அழுக தொடங்குகிறது. இந்த அழுகுதல் என்பது தான் ரசாயன மாற்றம்.

அதாவது இந்த கழிவுகளில் கண்ணுக்கு தெரியாத உயிரினமாக பாக்டீரியாக்கள் என்று நுண்ணுயிரகள் பரவி அவற்றை தின்று ஜீரணிக்க முயல்கின்றன. அப்போது இந்த கழிவுகளில் இருக்கும் கார்போஹைட்ரேட், கொழுப்புகள், புரதங்கள் ஆகிய பொருட்கள் வெப்பத்தினால் உலர்ந்து போகின்றன. அப்போது இவற்றிலிருந்து அசிட்டிக் அமிலம், புரோபியனிக் அமிலம், மற்றும் பிட்யூட்ரிக் அமிலம் என்ற ரசாயனங்கள் உருவாகின்றன.

இந்த மூன்று அமிலங்களும் கடைசியில் மீத்தேன் என்ற வாயுவாக மாறி விடுகின்றன. இந்த மீத்தேன் வாயு நன்றாக எரியும் தன்மை கொண்டது. இந்த வாயு மற்ற எரிவாயுக்களை விட மிகவும் வெப்பத்துடன் எரியும் தன்மை கொண்டது என்பதால் சமையல் உள்பட அனைத்து எரிக்கும் தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி கழிவுகளை ஒரு இடத்தில் சேர்த்து அதிலிருந்து மீத்தேன் வாயுவை பெறுவது தான் "பயோகேஸ்" பிளாண்ட் என்ற எரிவாயுவை பெறும் கலன் அமைப்பு. இந்த எரிவாயு கலன்களை பெறும் அமைப்பை தான் நாங்கள் உருவாக்கி தருகிறோம்.


எரிவாயு கலன் அமைப்பு
இந்த எரிவாயு கலன் என்பது, குறிப்பிட்ட விதிமுறைகளின் படி பூமிக்கு அடியில் அமைக்கிறோம். ஏறக்குறைய இது 15 கியூபிக் மீட்டர் விட்டத்தில் சிறிய கிணறு போன்ற அமைப்பில் இது இருக்கும். நாம் எந்த பொருளிலிருந்து எரிவாயுவை தயாரிக்க நினைக்கிறோமோ அந்த கழிவுகளை இந்த கிணறு போன்ற அமைப்பில் இடவேண்டும். 

முழுவதும் காற்று புகாமல் மூடப்பட்டிருக்கும் இந்த அமைப்பினுள் இடப்படும் கழிவுகள் நொதித்தல் முறையில் மேலே சொன்ன பாக்டீரியாக்களால் அழுக வைக்கப்பட்டு அது கடைசியில் மீத்தேன் வாயுவாக உருவாகி இந்த கலனின் மேல்புறத்தை நோக்கி வந்து தேங்கும். பிறகு அங்கிருந்து குழாய்கள் மூலம் சமையலறைக்கு கொண்டு செல்லப்படும்.

மனித கழிவில் இருந்து உருவானது என்பதால், இதில் நாற்றம் இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கும். ஆனால் இந்த வாயுவை பற்ற வைப்பதற்காக திறக்கும் போது எந்த நாற்றமும் இருக்காது என்பது தான் உண்மை. குறைந்தபட்சம் 15 நபர்கள் இருக்கும் வீட்டில் இது போன்ற எரிவாயு கலன்களை அமைத்து வீட்டிற்கு தேவையான எரிவாயுவை பெறமுடியும். ஏன், 15 நபர்கள் வரை இருக்கும் வீட்டில் தான் இதை அமைக்க முடியும் என்று சொல்கிறோம் என்றால், எரிவாயு உருவாக தேவைப்படும் போதுமான மனிதகழிவை குறைந்தபட்சம் 15 நபர்கள் இருந்தால் தான் பெறமுடியும்.


எங்கெல்லாம் அமைக்க முடியும்?
அதாவது 15 நபர்கள் வசிக்கும் அல்லது தொடர்ந்து புழங்கும் எந்த இடத்திலும் பயோகேஸ் எரிவாயு கலன்களை அமைக்க முடியும். 15 நபர்கள் இருக்கும் இடத்தில் அமைக்கப்படும் ஒரு கலனிலிருந்து தற்போது நாம் பயன்படுத்தும் வீட்டு எரிவாயு எல்.பி.ஜி சிலிண்டர் அளவு கேஸை பெற முடியும். 

இது போன்ற இடங்கள் என்று எடுத்துக் கொண்டால், தியேட்டர்கள், தொழிற்சாலைகள், கேண்டீன்கள், கல்லூரி விடுதிகள், பேருந்து நிலையங்கள், அபார்ட்மெண்ட்கள் போன்ற அதிகம் மக்கள் பயன்படுத்தும் இடங்களில் இருக்கும் செப்டிக் டேங்குகளிலிருந்து எரிவாயுவை 24 மணி நேரமும் பெறும் வகையில் பயோகேஸ் கலன்களை அமைக்க முடியும். தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக மதுரையில் இருக்கும் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பெரிய அளவிலான 3 பயோகேஸ் கலன்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இங்கு அமைக்கப்படும் எரிவாயு கலனிலிருந்து எந்த செலவும் இல்லாமல் 100 ஆண்டுகள் வரை சமைக்க மற்றும் வேறு தேவைகளுக்கான எரிவாயுவை பெற முடியும்.

இந்த செப்டிக் டேங்கிலிருந்து பெறப்படும் மீத்தேன் எரிவாயுவின் சிறப்பம்சம் என்னவென்றால், இது மிகவும் அழுத்தம் குறைந்த வாயு என்பதால் எல்.பி.ஜி வாயுவைப் போல் அபாயகரமானதோ, வெடிக்க கூடியதோ அல்ல. மேலும் இந்த எரிவாயு கலனிலிருந்து எடுக்கப்பட்ட பிறகு இந்த கலனில் தேங்கும் தண்ணீர் அதிக அளவு சத்துக்கள் நிரம்பியதாக இருப்பதால் அதனை விவசாயத்திற்கும் பயன்படுத்தலாம். மேலும் இந்த வாயுவை பயன்படுத்தி ஜெனரேட்டரை இயக்கி மின்சாரமும் தயாரிக்க முடியும். இந்த பயோகேஸ் கலன்களை அமைக்க அரசு சார்பில் 5 ஆயிரம் முதல் 1லட்சத்து 50 ஆயிரம் வரை மானியமாகவும் தரப்படுகிறது. 

எனவே, தமிழக மாவட்டங்களில் உள்ள இது தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் உடனே பயோகேஸ் கலன்களை அமைத்து எரிவாயுவை பெற்றோ, மின்சாரம் தயாரித்தோ செலவை மிச்சப்படுத்த முன்வந்தால் மிகப்பெரிய அளவுக்கு தங்களது எரிவாயு மற்றும் மின்சார செலவை குறைக்கலாம்" என்கிறார் இவர். இவரை தொடர்பு கொள்ள 94431 86572 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Thursday, 5 July 2012

இலண்டன் 2012 ஒலிம்பிக்-ஒரு சிறப்பு பார்வை ...




ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர், Pierre de Coubertin|Pierre Frèdy, Baron de Coubertin என்ற பிரான்ஸ் நாட்டு பிரபுவால் (nobleman) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்தது. உலகப் போர்நடைபெற்ற ஆண்டுகள் தவிர்த்து, 1896 முதல், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன.
ஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776 இல் கிரேக்க நாட்டிலுள்ளஒலிம்பியாவில் தொடங்கி கி.பி.393 வரை நடைபெற்றன. கிரேக்க கவிஞர்பானாஜியோடிஸ் ஸௌட்ஸாஸ் கி.பி.1833இல் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது.

ஒலிம்பிக்ஸ் நடந்த மற்றும் நடைபெறுகின்ற இடங்கள்....

வருடம்இடம்வருடம்இடம்
1896ஏதென்ஸ், கிரீஸ்1900பாரீஸ், பிரான்ஸ்
1904செயிண்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா USA1908லண்டன், இங்கிலாந்து
1912ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்1920ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்
1924பாரீஸ், பிரான்ஸ்1928ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து
1932லாஸ் ஏஞ்சலீஸ், ஐக்கிய அமெரிக்கா USA1936பெர்லின், ஜெர்மனி
1948லண்டன், இங்கிலாந்து1952ஹெல்சின்கி, பின்லாந்து
1956மெல்போர்ன், ஆஸ்திரேலியா1960ரோம், இத்தாலி
1964டோக்கியோ, ஜப்பான்1968மெக்ஸிகோ சிட்டி, மெக்ஸிகோ
1972ம்யூனிச், ஜெர்மனி1976மாண்ட்ரீல், கனடா
1980மாஸ்கோ, சோவியத் யூனியன்1984லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா USA
1988சியோல், தென் கொரியா1992பார்சிலோனா, ஸ்பெயின்
1996அட்லாண்டா, ஐக்கிய அமெரிக்கா USA2000சிட்னி, ஆஸ்திரேலியா
2004ஏதென்ஸ், கிரீஸ்2008பெய்ஜிங், மக்கள் சீனக் குடியரசு
2012இலண்டன், ஐக்கிய இராச்சியம்2016ரியோ டி ஜனேரோ, பிரேசில்
உலகப் போர் சமயங்களில் மட்டும் (1916, 1940 & 1944) ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.
 
இதே  ஆண்டில் ஜூலை 27 முதல் கஸ்ட் 12 வரை இலண்டனில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும்.

ஏன் இலண்டனில்?

2012 இல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு 2003 இல் 9 வேறுபட்ட நகரங்கள் தேர்வுக் கோரிக்கைகளை சமர்ப்பித்திருந்தன. சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC)தீவிர மதிப்பீட்டின் பின்னர் அந்த எண்ணிக்கை இலண்டன் மட்றிஸ் மொஸ்கோ நியூயோர்க் மற்றும் பாரிஸ் எனக் 5 ஆகக் குறைக்கப்பட்டது. மட்றிஸ் மற்றும் பாரிஸ் உறுதியான சாத்தியத்தைக் கொண்டிருந்த போதிலும் சிறிய இடைவெளியில் இலண்டன் தேர்வுக் கோரலில் வெற்றி கொண்டது என 2005 இல் அறிவிக்கப்பட்டது.
இலண்டனிற்கான வெற்றி ஒலிம்பிக் விளையாட்டுக்களை மூன்றாவது தடைவ நடத்துவதற்கு உலகில் முதலாவது நகரமாக அதனைத் தேர்ந்தெடுத்தமை அதன் பாரிய வெற்றியைக் குறிக்கிறது.

ஆயத்தங்கள்

தேர்வுக் கோரிக்கையை வென்றதில் இருந்து, பிரமாண்டமான  விளையாட்டுடன் கூடிய, சமூக, கலாசார நிகழ்வொன்றினை இலண்டன் ஒலிம்பிக்கில் நடாத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒலிம்பிக் குழுக்களும் அமைப்புக்களும்
பல கம்பனிகள் விளையாட்டுக்குப் பங்களிப்புச் செய்கின்ற போதிலும் இவை முக்கிய நிறுவனங்களாகும்:
• ஒலிம்பிக் விளையாட்டுக்கான இலண்டன் ஒழுங்கமைப்புக் குழு (LOCOG) விளையாட்டுப் போட்டிகளைத் திட்டமிடுதலையும் முன்னேற்ற மேற்பார்வையையும் செய்கிறது. இந்தக் குழுவானது முன்னாள் சிறந்த தடகள விளையாட்டு வீரர்களில் ஒருவரும் பின்னர் அரசியல்வாதியாக மாறியவருமான லோர்ட் ஒஸ்ரியன் கோ வினால் தலைமை தாங்கப்பட்டது.
• ஒலிம்பிக்கை வழங்கும் அதிகார சபை (ODA) இது ஒலிம்பிக் விளையாட்டுக்கான இலண்டன் ஒழுங்கமைப்புக் குழுவுடன் நெருக்கமாகச் செயற்படுகின்றது. ஒலிம்பிக்கை வழங்கும் அதிகார சபையானது (ODA) விளையாட்டுப் போட்டிகளுக்கான இடங்கள் தேவையான உட்புறக் கட்டமைப்பை உறுதி செய்வதற்கான பொறுப்பைக் கொண்டிருக்கிறது.
• அரசாங்க ஒலிம்பிக் நிறைவேற்றுகை (Government Olympic Executive) ஐக்கிய இராச்சிய அரசாங்க அமைப்பு இலண்டன் 2012 ஒலிம்பிக் இணைப்பில் தலைமை வகிக்கின்றது. இந்தப் பிரிவு கலாசாரம்  ஊடகம் மற்றும் விளையாட்டுகளுக்கான திணைக்களத்தின் (DCMS) அடிப்படையில் அமைந்திருக்கின்றது.  

நிதி

விளையாட்டுப்போட்டிகளுக்கான மொத்தச் செலவு 9 பில்லியன் பவுண்ஸ்சிற்கும் மேற்பட்டதென மதிப்பிடப்பட்டுள்ளது.  ஒலிம்பிக் அமைவிடங்களை உருவாக்குவது மற்றும் விளையாட்டுக்கள் நடைபெறும் இடத்தின் சரியான உட்கட்டமைப்பினை உறுதிசெய்வது என்பவற்றிற்கு ஆரம்பத்தில் பொதுமக்களின் வரிகளில் இருந்து நிதியிடப்படும்.  விளையாட்டுப்போட்டிகளுக்குப் பிரதானமாக தனியார் துறையினரால் நிதியிடப்படும்.

அமைவிடங்கள்

இலண்டன் விளையாட்டுப்போட்டிகளை நடாத்துவதற்கு ஏதவாக முழுத் தயார்ப்படுத்தலைச் செய்துகொண்டிருக்கின்றது.  புதிய பழைய வரலாற்று, தற்காலிகக் கட்டடங்கள் மற்றும் கட்டடத் தொகுதிகள்ஒலிம்பிக் அமைவிடங்களாகபயன்படுத்தப்படுகின்றன.  
பெரிய இலண்டன் 3 வலயங்களாகப் பிரிக்கப்படும்.

• ஒலிம்பிக் வலயம்: வீணான தொழிற்றுறை சார்ந்த நிலத்தில் கிழக்கு இலண்டன் ஸ்ரட்போட்டில் ஒலிம்பிக் பூங்கா
அமைக்கப்பட்டுள்ளது.  இந்தப் பூங்கா ஒலிம்பிக் அரங்கு - நிலையம் மற்றும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அணி அலுவலர்களுக்கான தங்குமிடத்தினைக் கொண்ட ஒலிம்பிக் கிராமம் என்பவற்றினைக் கொண்டிருக்கும்.  

• ஆற்று வலயம்:  முன்னர் மிலேனியம் மண்டபம் மற்றும் Excel கண்காட்சி நிலையமாக அறியப்பட்ட போட்டி நடக்கும் இடங்கள் 02 உள்ளடங்களாக ஆற்றுவலயம் என 05 பிரதான இடங்களாகும்.  

• மத்திய வலயம்:  வெம்பில அங்கம், ஹைப்பூங்கா போன்ற பிரதானமான இலண்டன் மத்தி மற்றும் மேற்கினைச் சூழவுள்ள அமைவிடங்கள்
ஏனைய சில விடயங்கள், நிகழ்ச்சிகள் இங்கிலாந்தின் தெற்குக் கடற்கரையில் உள்ள டேரர்சேற்றியிலுள்ள ‘வெமவுத்தைச்’ சூழ நடக்கவுள்ள Rowing & sailing  போன்றவையும் இலண்டனுக்கு வெளியே நடைபெறவுள்ளன.


போக்குவரத்து

இலண்டனில் பொதுப் போக்குவரத்து ஏற்கனவே பலமான நிலையிலுள்ளது. ஆனால் பொதுமக்கள் அமைவிடங்களுக்கு நேரத்திற்கும் வசதியாகவும் வருகை தருவதனை உறுதி செய்வதற்காக மேலும் வசதி செய்யப்படுகின்றது. இலண்டன் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பு, இலண்டன் நிலத்திற்குக் கீழான தள அமைப்பை  கிழக்கு இலண்டன் எல்லை வரையாக  விரிவாக்குவதன் மூலம் மேம்படுத்தப்படும். ‘டோக்லாண்ட்ஸ் சிறியரக புகையிரத வழி (Docklands Light Railway) தரமுயர்த்தப்படும்.
பயணிகள் St.Pancras International (Euro star அமைந்துள்ள) இலிருந்து ஒலிம்பிக் பூங்காவிற்கு ஏற்றிச் செல்கின்ற ஒலிம்பிக் ஜவ்லின் புகையிரத சேவையை உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்த புகையினை வெளிவிடும் வாகனங்களைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் M 25 (Motorway circling Greater London) சில எண்ணிக்கையான தரிப்பிடம் ஓட்டப்பாதைகள் கிடைக்கப்பெறச் செய்யப்படும்.
இலண்டனுக்கான போக்குவரத்து, போக்குவரத்துத் திணைக்களம் அதி வேக வீதி முகவர்கள் உள்ளடங்கலான முக்கிய பங்குதாரர்கள் போக்குவரத்துக் கட்டமைப்பை அமைக்கின்றன.

உத்தியோகபூர்வ ஒலிம்பிக் முத்திரை

2012 இல் ஒலிம்பிக்கிற்கான உத்தியோகபூர்வ முத்திரையானது வோல்வ் ஒலின்ஸ் (Wolff Olins) என்ற குறி (Brand) அமைக்கும் ஆலோசகரினால் வடிவமைக்கப்பட்டு 2007 யூன் மாதம் வெளியிடப்பட்டது. இது நிறங்களில் கிடைக்கப்படுகிறது.  முதன் முறையாக ஒலிம்பிக், பராலிம்பிக் இரண்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.
பசுமை ஒலிம்பிக்

நிலையான ஒலிம்பிக் போட்டியொன்றினை 2012 இல் இலண்டனில் செய்வதற்கு திட்டங்கள் நடைபெறுகின்றன. நிலையான இலண்டன் 2012 இற்கான ஆணைக்குழு விளையாட்டுப் போட்டிக்கு மிகவும் வசதியான திகதியை உறுதிப்படுத்துவதற்கு 2007 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பிரதான நோக்கங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:

• ஒலிம்பிக் பூங்கா மற்றும் அமைவிடங்களில் குறைந்தளவு கார்பனை வெளியேற்றும் கட்டிடங்களைப் பயன்படுத்தல்

• அரங்குகளை அமைக்கும் போது கழிவுகளைக் குறைத்தல்

• புவியியல் வளங்களைப் பயன்படுத்தல்

• ஆரோக்கிய வாழ்வை சீர்ப்படுத்தலும் மேம்படுத்தலும்

• புதிய ஒலிம்பிக் பூங்காவிற்குள்ளேயும் வெளியேயும் உள்ள சமூகங்களுடன் செயற்படுதல்

விளையாட்டுச் செயற்பாடுகள்

வில்லாண்மையிலிருந்து தடகள விளையாட்டுப் போட்டிகள் வரை 26 விளையாட்டுச் செயற்பாடுகள் ஒலிம்பிக் நிகழ்ச்சித் திட்டத்தில் அமைக்கப்படுகின்றன. 20 நிகழ்ச்சிகள் ஒலிம்பிக் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள 5 பேரை ஒரு பக்கத்தில் கொண்ட உதைப்பந்தாட்டம் மற்றும் சக்கரநாற்காலி, மென்பந்து உள்ளடங்கலான சில எண்ணிக்கையான விளையாட்டுப் போட்டிகள் பரா ஒலிம்பிக்கிற்காகப் பட்டியற்படுத்தப்படுகின்றன. விளையாட்டு நிகழ்ச்சிகள் தொடர்பாக மேலும் அறிவதற்கு  ஒலிம்பிக்  இணையத்தளத்தைப் பார்க்கவும்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Monday, 2 July 2012

Biogas and Uses..

CImage_33The term 'biogas' is commonly used to refer to a gas which has been produced by the biological breakdown of organic matter in the absence of oxygen. The gases methane, hydrogen and carbon monoxide can be combusted or oxidized with oxygen and the resultant energy release allows biogas to be used as a fuel.
In the same way that ethanol and biodiesel have been around for a long time, biogas has a long history. Back in the 13th century, explorer Marco Polo noted that the Chinese used covered sewage tanks to generate power. The author of Robinson Crusoe - Daniel Defoe (shown above) – referred to biogas technologies back in the 17th century. Biogas has been used widely in the UK for centuries and back in 1895, the city of Exeter used gas from sewage to power its city street lamps. An anaerobic digester that treats farm wastes or energy crops is commonly called a 'biogas plant'.

The speciality of the biogas plant is that along with the production of cooking gas, it keeps the surroundings clean and it is very safe to use. It occupies only a very small area and it is portable. It can also be easily transferred from one place to another. No labour work or digging a pit is required for this.
Special models of biogas plants are available for hotels, fast food shops, vegetable shops and fruit shops along with subside. You can save more than 70% of LPG gas.

Biogas is a commonly used biofuel around the world and is generated through the process of anaerobic digestion or the fermentation of biodegradable materials such as biomass, manure, sewage, municipal waste, rubbish dumps, septic tanks, green waste and energy crops. This type of biogas comprises primarily methane and carbon dioxide. The actual composition of biogas will vary depending upon the origin of the anaerobic digestion process – ie the feedstock.

Anaerobic digesters can be fed with energy crops such as biodegradable wastes <http://en.wikipedia.org/wiki/Biodegradable_waste> including sewage sludge and food waste. An air-tight tank transforms the biomass waste into methane producing renewable energy which can then be used for heating, electricity, and many other operations that use any variation of an internal combustion engine.
One particular type of biogas is known as 'landfill gas' (LFG) or 'digestor gas'. LFG is produced by wet organic waste decomposing under anaerobic conditions in a landfill. In the same way that a compost heap works, the waste is covered and then compressed by the weight of the new material that is deposited on top. This material prevents the oxygen from escaping and encourages the anaerobic microbes to thrive. The gas slowly builds up and is released into the atmosphere if the landfill site has not been engineered to capture the gas.
It is important for many reasons to ensure that landfill gas is contained – firstly, LFG becomes explosive when it escapes from the landfill and mixes with oxygen and secondly, the methane contained within biogas is 20 times more potent as a greenhouse gas than carbon dioxide - so uncontained landfill gas may actually significantly contribute to the effects of global warming.

The floating gas storage is designed to collect and store low pressure biogas produced from small quantity of kitchen waste. They are made with biogas resistant PVC or polyurethane two side coated with polyester fiber reinforced membrane, embeded with polyester iso resin coated metal reinforcement. the design is made to maintain constant low postive biogas pressure.
Its mainly used for house hold kitchen waste. The input materials for Elegant biogas plants are daily vegetable waste, food waste, meat waste etc. Apart from this, manure and dung can also be used . These plants are portable models and its space requirement is only 1 square meter for house hold units and it has an output of 2 hrs per day.
Biogas has a wide variety of uses and can be used as a relatively low-cost fuel for the generation of energy and heating purposes, such as cooking. For example, basically any facilities which need power are able to use biogas to run engines, or to generate either mechanical or electrical power.
Biogas can be compressed, similar to natural gas, and is able to be used to power motor vehicles. As an example in Britain, biogas is estimated to have the potential to replace around 17% of vehicle fuel. Biogas is a renewable fuel, so it qualifies for renewable energy subsidies  in some parts of the world.

It is possible to concentrate the methane within bio-gas to the same quality standards as fossil fuel derived natural gas to produce bio-methane. If concentrated and compressed this bio-gas can then be used in vehicle transportation. Compressed bio-gas is becoming widely used in Sweden, Switzerland, and Germany for cars, trucks and trains.
The growth of the use of gas-fueled vehicles both large and small around the world has been substantial, particularly in Europe. In the United States bio gas is quickly becoming a popular source of energy and a wide variety of feed stocks are being tested. It has been estimated that the methane bio gases derived from cattle, pigs and chickens could be used to power millions of homes around the world whilst still reducing billions of metric tonnes of greenhouse gas emissions.
In  India the biogas produced from the anaerobic digestion of manure in small-scale digestion facilities is called 'gobar gas'. It is estimated that such small-scale facilities exist in over two million households in India 
In other parts of the developing world, domestic biogas plants can convert livestock manure and night soil into biogas and slurry, the fermented manure. This technology is feasible for small scale users with livestock producing 50 kg manure per day – the equivalent of about 6 pigs or 3 cows. This manure has to be collectable to mix it with water and feed it into the plant and toilets can also be connected.
Advantages and Benefits of Biogas
  1. Provides a non-polluting and renewable source of energy.
  2. Efficient way of energy conversion (saves fuelwood).
  3. Saves women and children from drudgery of collection and carrying of firewood, exposure to smoke in the kitchen, and time consumed for cooking and cleaning of utensils.
  4. Produces enriched organic manure, which can supplement or even replace chemical fertilizers.
  5. Leads to improvement in the environment, and sanitation and hygiene.
  6. Provides a source for decentralized power generation.
  7. Leads to employment generation in the rural areas.
  8. Household wastes and bio-wastes can be disposed of usefully and in a healthy manner.
  9. The technology is cheaper and much simpler than those for other bio-fuels, and it is ideal for small scale application.
  10. Dilute waste materials (2-10% solids) can be used as in feed materials.
  11. Any biodegradable matter can be used as substrate.
  12. Anaerobic digestion inactivates pathogens and parasites, and is quite effective in reducing the incidence of water borne diseases.
  13. Environmental benefits on a global scale: Biogas plants significantly lower the greenhouse effects on the earth’s atmosphere. The plants lower methane emissions by entrapping the harmful gas and using it as fuel.

Disadvantages of Biogas
  1. The process is not very attractive economically (as compared to other biofuels) on a large industrial scale.
  2. It is very difficult to enhance the efficiency of biogas systems.
  3. Biogas contains some gases as impurities, which are corrosive to the metal parts of internal combustion engines.
  4. Not feasible to locate at all the locations.

Prepared Collection by: M.Ajmal khan.

லண்டன் ஒலிம்பிக்-தலைமுறைக்கான உத்வேகம்!



மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் முதல் நகரம் என்பது லண்டனுக்குக் கிடைக்கவிருக்கும் கௌரவம்.  மெக்காவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக மக்கள் கூடும் இடமாக லண்டன் ஒலிம்பிக் சாதனை படைக்கும் என்பது ஒலிம்பிக் கமிட்டியின் எதிர்பார்ப்பு. 'ஒரு தலைமுறைக்கே உத்வேகம் கொடு’ (Inspire a Generation) - இதுதான் லண்டன் ஒலிம்பிக்கின் பஞ்ச் வாசகம்! 2005-ம் ஆண்டு '2012 ஒலிம்பிக் போட்டிகள்’ நடத்துவதற்கு லண்டன் தேர்வு செய்யப்பட்ட மறுநாளே, லண்டனின் பாதாள ரயில்களில் குண்டுகள் வெடித்தன. அதிர்ந்துபோன  இங்கிலாந்து அரசு ஒலிம்பிக் பாதுகாப்புச் செலவுகளுக்கு மட்டுமே பல்லாயிரம் கோடிகளைச் செலவழித்துவருகிறது.


ஒலிம்பிக் பார்வையாளர்களைக் கூடுதலாக ஈர்க்க, உலக அதிசய ஈஃபிள் கோபுரம்போலவே லண்டனில் ஒரு வித்தியாசமான கோபுரத்தை வடிவமைத்திருக்கிறார்கள். 376 அடி உயரத்தில் சுருள் வடிவத்தில் அமைந்திருக்கும் இதற்கு 'ஒலிம்பிக் கோபுரம்’ என்றே பெயர். இந்திய ஓவியர் அனீஷ் கபூர் வடிவமைத்திருக்கிறார். 455 வளைவான சுருள் படிக்கட்டுகளுடன் இருக்கும் இந்தக் கோபுரத் துக்கு உள்ளே உணவகங்கள் உண்டு. மைதானங்களின் அருகி லேயே இருக்கும் இந்தக் கோபுரங்களில் ஏறி ஒலிம்பிக் போட்டி களை ரசித்தபடியே உணவருந்தலாம்.  

ஒலிம்பிக் போட்டிகளின் பிரமாண்ட தொடக்க விழா மற்றும் இறுதி விழா நிகழ்ச்சிகளை அரங்கேற்றும் பொறுப்பு 'ஸ்லம் டாக் மில்லியனர்’ பட இயக்குநர் டேனி பாய்ல் தலைமையிலான குழுவினரின் பொறுப்பு. ஜேம்ஸ் பாண்ட் ஹீரோ டேனியல் க்ரேய்க் நடிக்கும் ஐந்து நிமிட ஸ்டேஜ் ஷோ, ஷேக்ஸ்பியரின் 'தி டெம்பஸ்ட்’ நாடகத்தை மையமாகக்கொண்டு இசை நிகழ்ச்சிகள், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட உலகின் பிரபல இசைஞர்கள் பங்கு பெறும் கலை நிகழ்ச்சிகள் என கலர்ஃபுல் மேளாவாக நடைபெறும் ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சிகளை உலகம் முழுக்க 100 கோடிப் பேர் கண்டு ரசிப்பார்கள் என்பது தற்போதைய கணக்கு. தொடக்க விழாவுக்கான ஒரு டிக்கெட்டின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 1.7 லட்சம் ரூபாய்!லண்டனின் 200 பழமையான பாரம்பரியமிக்க கட்டடங்களை இடித்து வீரர்கள் தங்குவதற்கான விளையாட்டுக் கிராமத்தை அமைத்திருக்கிறார்கள். மைதானங்களை அதிகபட்சம் 20 நிமிடங்களில் வீரர்களை அடைந்துவிடும் வசதிக்காகவே பாரம்பரியக் கட்டடங்களைக்கூடத் தியாகம் செய்திருக்கிறது லண்டன்!விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், பத்திரிகை யாளர்கள் என ஒலிம்பிக் போட்டிகள் சம்பந்தமாக லண்டனுக்குள் வரும் எவரும் இங்கிலாந்து குடிமக்களை 'கரெக்ட்’ செய்து திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற உத்தரவாதம் பெற்ற பிறகே, விசா கொடுத்திருக்கிறது இங்கிலாந்து அரசு. இதற்கு முந்தைய ஒலிம்பிக் போட்டிகளுக்கு வந்த பலரும் காதல் வலையில் சிக்கியோ அல்லது விரித்தோ இங்கிலாந்தின் மருமகன்/மருமகள் ஆக நிரந்தரக் குடியுரிமை பெற்று மக்கள் தொகையை ஏகமாக அதிகரித்துவிட்டார்கள் என்பதால்தான் இந்த உஷார் உத்தரவாத நடவடிக்கை!1928 முதல் ஒலிம்பிக் போட்டிகளின் ஸ்பான்சராக இருக்கும் கோக் நிறுவனம் 2012 ஒலிம்பிக்கில் 2.30 கோடி பாட்டில்கள், டின்களை விற்பனை செய்யத் திட்டமிட்டு இருக்கிறது. ஒலிம்பிக் மைதானத்தில் பணிபுரியும் ஒரு கோக் நிறுவன ஊழியர் தினமும் 100 கேஸ் பாட்டில்களைச் சுமந்து செல்ல வேண்டியிருக்குமாம்.

விமானத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் ஒலிம்பிக் கிராமத்துக்கு அருகே அமைந்திருக்கும் வீடுகளின் மொட்டை மாடிகளில் ஏவுகணைகளை நிறுத்திவைத்திருக்கிறார்கள். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் லண்டனை வளைய வந்துகொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு 500 அடிக்கும் ஒரு காவல் நிலையம், கழிப்பறைகளைத் தவிர மற்ற அனைத்து இடங் களிலும் ரகசியக் கண்காணிப்பு கேமரா என உச்சகட்ட உதறலில் இருக் கிறது லண்டன் பாதுகாப்புப் படை!

இந்த ஒலிம்பிக்கின் உயர்வெளிச்சத் துளிகள்...


2008 ஒலிம்பிக்கில் அமெரிக்கா 110 பதக்கங்களுடன் முதல் இடம் பிடிக்க, ஒலிம்பிக்கை நடத்திய சீனா 100 பதக்கங்களுடன் இரண்டாம் இடம் பிடித்தது. ரஷ்யா மூன்றாம் இடம். இங்கிலாந்துக்கு நான்காவது இடம். இம் முறை போட்டிகள் லண்டனில் நடப்பதால்,  அமெரிக்காவுக்கு இங்கிலாந்து கடும் நெருக்கடி கொடுக்கலாம்!

பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 8 தங்கப் பதக்கங்களை வேட்டையாடிய அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ் இந்த முறையும் செம ஃபார்மில் இருக்கிறார். ஒலிம்பிக் பந்தயங்களில் மட்டுமே இது வரை 16 பதக்கங்களை வென்றிருக்கும் ஃபெல்ப்ஸ், லண்டன் ஒலிம்பிக்கில் 3 பதக்கங்கள் வென்றாலே, ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கங்களை வென்றவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆவார்!

100, 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் ஒலிம்பிக் சாதனை படைத்திருப்பவரும், உலக சாம்பியனுமான உசேன் போல்ட் தான் லண்டன் ஒலிம்பிக்கின் மாஸ் ஹீரோ. இவர் பங்கேற்கும் தடகளப் போட்டிகளைக் காணத்தான் லட்சக்கணக்கான மக்களால் லண்டன் களைகட்டும் என்கிறார்கள். 100 மீட்டரை 9.58 விநாடிகளிலும், 200 மீட்டரை 19.19 விநாடிகளிலும் கடந்து சாதனை படைத்த உசேன், இந்த ஒலிம்பிக்கில் 100, 200 மீட்டர்களை தலா 9.54, 19.00 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைப்பேன் என்கிறார்!மலேசியாவைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீராங்கனை நுர் சுர்யானி டெய்பி எட்டு மாதக் கர்ப்பிணியாகப் போட்டியில் கலந்துகொள்வார். ''15 நிமிடங்கள்தான் போட்டி நடக்கும். அப்போ மட்டும் வயித்துக்குள் ஆடாம, அசையாம இருக்கணும்னு பாப்பாகிட்ட சொல்லியிருக்கேன்!'' என்கிறார் நுர் சுர்யானி வயிற்றை மென்மையாகத் தடவிக்கொடுத்துக்கொண்டே. ஜப்பானின் வில் வித்தை வீரர் ஹிரோஷிதான் இந்த ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் மிக மூத்த வீரர். அவருக்கு வயது 70. இந்த ஒலிம்பிக்கிலேயே மிகவும் உயரம் குறைந்த பெண்ணாகக் கலந்துகொள்ளும் சீனாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லி லுவின் உயரம் 1.36 மீட்டர். இவர் 1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர் என்பது கூடுதல் தகவல்!  

நம்பிக்கை இந்தியர்கள்!


கிருஷ்ண பூனியா, வட்டு எறிதல்:  2010 டெல்லி காமென் வெல்த் போட்டியில் வட்டு எறிதலில் தங்கம் வென்றவர். உலக சாம்பியன் ஆஸ்திரேலிய வீராங்கனை டேனி சாமுவேல்ஸுக்கே சவால்விட்ட கிருஷ்ண பூனியா, கடந்த இரண்டு வருடங்களாக அமெரிக்காவில் தீவிரப் பயிற்சியில் இருக்கிறார். 'தடகளப் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் என் மூலம் கிடைக்கும்!’ என்பது கிருஷ்ண பூனியாவின் சபதம்.

சாய்னா நெய்வால், பேட்மிட்டன்: 13 முறை உலக சாம்பியனான சீனாவின் ஸியாங் குவாபோ, 'சாய்னா தான் சீன வீராங்கனைகளுக்கு ஒரே அச்சுறுத்தல்!’ என்று சொல்லியிருப்பது அந்த இந்தியாவின் பதக்க நம்பிக்கைக்கு வலு சேர்க்கிறது!

மேரி கோம், குத்துச் சண்டை: முதல்முறையாக ஒலிம்பிக்கில் இணைந்திருக்கும் பெண்கள் குத்துச்சண்டையில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்பது இந்தியாவின் எதிர்பார்ப்பு!

'சுட்டேபுடுவோம்’ கேங்க்: துப்பாக்கி சுடுதல் பிரிவில் மொத்தம் 11 இந்திய வீரர்கள் ஒலிம்பிக் வேட்டையில் இருக்கிறார்கள். 2008 ஒலிம்பிக்கில் பதக்கம் தட்டிய  அபினவ் பிந்த்ரா, ககன் நரங், ரஞ்சன் சிங் சோதி, மனவ்ஜித் சிங் சோதி என ஆண்கள் பிரிவிலும் ஹீனா, அன்னு ராஜ் என பெண்கள் பிரிவிலும் வலுவான ப்ளேயர்கள் இருப்பதால் இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதலில் பதக்கம் உத்தரவாதம்!

விஜேந்தர் சிங், குத்துச்சண்டை: 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற விஜேந்தர், டெல்லி காமென் வெல்த் போட்டியில் அரையிறுதியிலேயே  தோல்வியடைந்தார். கடும் விமர்சனத்துக்கு உள்ளான விஜேந்தர், அதன் பிறகு தனது பயிற்சி நேரத்தை நாளன்றுக்கு 10 மணி நேரமாக அதிகரித்தார். கஜகஸ்தான் ஒலிம்பிக் தகுதி சுற்றுப் போட்டியில் வென்று கடைசித் தருணத்தில் ஒலிம்பிக்குக்குத் தகுதி பெற்றிருக்கிறார்.  

தீபிகா குமாரி, வில்வித்தை: கடந்த மாதம் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்று உலகின் நம்பன் ஒன் வீராங்கனையாக உயர்ந்துஇருக்கும் தீபிகா குமாரி, நிச்சயம் தங்கம் தட்டுவார் என்பது பாசிட்டிவ் எதிர்பார்ப்பு!


நன்றி :விகடன் 

Wednesday, 27 June 2012

அணு உலையில் இருந்து வரும் அணுக்கழிவு-ஒரு விழிப்புணர்வு ஆய்வு....



கூடங்குளம் அணு உலை, படித்ததில் பிடித்ததுதினம் அணு உலையின் பயன்களைப் பற்றி பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக படித்து எல்லாம் அறிந்த விஞ்ஞானியைப் போன்று நண்பருக்கு விளக்கி சொல்லும்போது எனக்கே மிகவும் பெருமையாக இருந்தது. எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட நண்பர் கடைசியில் அதிலிருந்து வரும் கழிவுகளை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று ஒரு விடை தெரியாத கேள்வியை எழுப்பினார். அப்பொழுது தான் எனக்கே உரைத்தது நான் படிக்கும் எந்த பத்திரிக்கையும் அணுக்கழிவைப் பற்றி மட்டும் பேசக்கூடாது என்று சத்தியம் செய்து இருப்பது போன்று அதைப் பற்றி மட்டும் எந்த செய்தியும் எழுதுவதில்லை என்பது.

அதனால் என்ன நாமே ஆராய்ச்சியில் இறங்கிடலாம் என்று ஆறாயத் தொடங்கினோம். பின்னர் தான் தெரிந்தது அணு உலையில் இருந்து வரும் மின்சாரம் எல்லாம் பக்க உற்பத்தி தான், அங்கு நடக்கு மொத்த உற்பத்தியே அணுக்கழிவு தான் என்பது. அதற்கு எதற்கு அணு உலை என்று பெயர் வைத்திருக்கிறார்களோ, அணுக்கழிவாலை என்றே பெயர் வைத்து இருக்கலாம்.
ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் ஆண்டிற்கு 20 முதல் 30 டன் அணுக்கழிவு வெளிப்படுகிறது. இந்த அணுக்கழிவுகளை மூன்றாக பிரித்திருக்கிறார்கள். முதலாவது அதிகதிரியக்க கழிவு (High Level Waste), இரண்டாவது டிரான்சுரானிக் கழிவு (Transuranic Waste), மூன்றாவது குறைகதிரியக்க கழிவு (Low Level Waste).



அணுக்கழிவுகளில் அதிகதிரியக்க கழிவு வெறும் ஒரு சதவிகிதமே, ஆனால் உலகில் வெளிவரும் கதிரியக்கத்தில் 95 சதவிகிதம் இந்த அதிகதிரியக்க கழிவுகளில் இருந்து தான் வெளிவருகிறது. அணு உலையில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் கழிவு தான் இந்த அதிகதிரியக்க கழிவு.

இரண்டாவதான டிரான்சுரானிக் கழிவு உரேனியத்தைவிட கனஉலோகங்கலான புளுட்டோனியம், நெப்டுனியம் போன்றவைகளை உள்ளடக்கியது.

குறைகதிரியக்க கழிவுகள் பெரும்பாலும் உடைகள், நீர் வடிகட்டிகள், குழாய்கள் மற்ற அணு உலை அன்றாடப் பொருள்களை உள்ளடக்கியன. இவற்றிலிருந்து வரும் கதிரியக்க அளவு மற்ற கழிவுகளை விட குறைந்த அளவு எனினும், நமக்கு உடனடி ஆபத்து விளைவிக்கும் அளவிலானதே.

செறிவூட்டிய உரேனியத்தை சிறு சிறு உருண்டைகளாக நீள தடிக்குள் நெருக்கமாக அடுக்கி அணு உலை எரிபொருள் தயாரிக்கிறார்கள். இந்த எரிபொருள் அணு உலைக்குள் ஒரு வருடம் எரிந்த பின்னர் எரிதிறன் குறைந்து விடுகிறது என்று கழிக்கப்பட்டு விடுகிறது. இப்படி கழிக்கப்படும் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மிகவும் அபாயகரமான அளவு கதிரியக்கம் உடையது. இந்த அதிகதிரியக்க கழிவுகள் அருகில் பாதுகாப்பு இன்றி சில வினாடிகள் இருந்தாலே உடனடி மரணம் தான்.

அணு உலை எரிபொருள் பயன்படுத்தப்படும் போது யுரேனியம்-235 அணுக்கள் பிளக்கப்பட்டு சீசியம், சிராண்டியம் போன்ற கன உலோகங்கள் தோன்றுகின்றன. இதனால் எரிபொருள் பயன்படுத்துவதற்கு முன்னர் இருந்த கதிரியக்க அளவை விட பயன்படுத்தப்பட்ட பின் கதிரியக்க அளவு பத்து இலட்சம் மடங்கு அதிகமாக இருக்கும்.

பயன்படுத்தப்பட்ட எரிபொருள் பல ஆண்டுகளுக்கு கொதிக்கும் வெப்ப நிலையில் இருக்கும். இவற்றை செயற்கையாக குளிரூட்டப்பட்ட தண்ணீர் குளத்திற்குள் சேகரித்து வைப்பார்கள். இது போன்ற குளங்கள் ஒவ்வொரு அணு மின் நிலையத்திலும் கட்டப்பட்டிருக்கின்றன. இவ்வாறு பத்து முதல் இருபது ஆண்டுகள் குளிரூட்டிய பின் மறுசீராக்கலுக்கு (reprocessing) அனுப்புவார்கள்.

ஒரு வழியாக மறுசீராக்கலுக்குப் பின் பயன்படுத்தப்பட்ட எரிபொருளில் இருந்து அனைத்து கதிரியக்கமும் வெளியேறி சாதாரண கழிவாகி விடுமா என்று எதிர்பார்த்தால் அதுவும் இல்லை. இந்த மறுசீராக்கலே ஒரு கண்கட்டி வித்தை போல தான் இருக்கிறது. பயன்படுத்தப்பட்ட எரிபொருளை துண்டு துண்டாக வெட்டி நைட்ரிக் அமிலத்தில் கரைக்கிறார்கள். பின்னர் இந்த கரைசலில் இருந்து புளுட்டோனியத்தையும் (ஆயுதம் செய்ய) உரேனியத்தையும் பிரித்து எடுக்கிறார்கள். எஞ்சி இருக்கும் கரைசல் மிகுந்த கதிரியக்கம் உடைய கழிவாக இருக்கிறது. சிறிதளவு இருந்த கழிவை கரைத்து அதிகளவாக்கிவிட்டு கதிரியக்க வீரியத்தை குறைத்து விட்டோம் என்கிறார்கள். ஆனால் இப்போழுது கழிவின் அளவு அதிகரித்து விட்டதே, ஆதலால் மொத்த கதிரியக்க அளவு அதே தானே இருக்கப்போகின்றது என்று வினவினால் பதில் தராமல் மழுப்புகிறார்கள்.

எப்போழுது தான் இந்த கதிரியக்கம் முழுக்க ஒழிந்து பயன்படுத்தப்பட்ட எரிபொருள் சாதாரண குப்பையாக மாறும் என்று கேட்டால் சுமார் ஏழரை இலட்சம் ஆண்டுகள் பொறுங்கள் என்று பொறுமையாக பதில் தருகிறார்கள்.  நாம் அதிர்ச்சி அடைந்து நன்றாக சரி பார்த்து விவரமாக கூறுங்கள் என்று வினவினால் பாதி ஆயுள் (half life) என்று விவரிக்க தொடங்கி விட்டார்கள்.

கதிரியக்க மூலகங்கள் தொடர்ந்து கதிரியக்கத்தை பரப்பி வருவதால் நாளடைவில் வலுவிழந்து படிப்படியாக பாதியாக அளவில் குறைந்து விடுகின்றன அல்லது வேறு மூலகங்களாக மாறிவிடுகின்றன. இப்படி கதிரியக்க மூலகங்களின் வலு பாதியாக குறைவதற்கான காலத்தை அரை ஆயுள் காலம் என்று கணக்கிடுகிறார்கள். அரை ஆயுள் காலத்தை வைத்து கதிரியக்க கன உலோகங்கள் எவ்வளவு விரைவாக தேய்கின்றன என்று கணித்துவிடலாம்.

பயன்படுத்தப்பட்ட எரிபொருளில் இருக்கும் புளுட்டோனியம்-239 கனஉலோகத்தின் அரை ஆயுள் 24,000 ஆண்டுகளாகும். இந்த 24,000 ஆண்டுகளுக்கு பின்னர் புளுட்டோனியம்-239, யுரேனியம்-235 ஆக மாறுகிறது. இந்த யுரேனியம்-235 கனஉலோகத்தின் அரை ஆயுள் 7,03,800 ஆண்டுகளாகும். பின்னர் இந்த யுரேனியம்-235 தோரியம்-231 ஆக மாறுகிறது. இப்படி படிப்படியாக பல கனஉலோகங்களாக மாறி இறுதியில் ஈயம்-207 என்கிற கதிரியக்கம் இல்லாத கொடிய நச்சுப்பொருளாக நிலைப்பெறுகிறது.

கூடங்குளம் அணு உலை, படித்ததில் பிடித்தது

இவ்வாறு இலட்ச்கணக்கான ஆண்டுகள் கதிரியக்கத்தோடு இருந்தால் அதுவரை எப்படி இந்த கழிவுகளை நாம் பாதுகாப்பது? அரசாங்கம் எல்லாம் எங்களுக்கு தெரியும், நாற்பது ஆண்டுகளாக நாங்கள் பாதுகாக்கவில்லையா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு என்ன தெரியும் என்று நமக்கு தானே தெரியும்.

ஜூலை 1998 இல் நம் சென்னையில் மத்திய புலனாய்வு அதிகாரிகள் மூன்று பொறியாளர்களை கைது செய்தார்கள். என்ன என்று விசாரித்தால் எட்டு கிலோ யுரேனியம் வைத்து இருந்தார்களாம். அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து திருடி வந்துவிட்டார்களாம்.

நவம்பர் 7, 2000 அன்று சர்வதேச அணு ஆற்றல் அமைப்பு இந்தியாவில் காவல்துறை 25 கிலோ யுரேனியம் கடத்த முயன்ற இரு கடத்தக்காரர்களை கைது செய்திருப்பதாக அறிவித்தது.

டிசம்பர் 2009 இல் மும்பை காவல்துறை ஐந்து கிலோ யுரேனியம் வைத்திருந்ததாக மூவரை கைது செய்தது.

இவை எல்லாம் நம் சிற்றறிவிற்கு எட்டியவைகள். நாம் அறியாமல் இது போன்று எவ்வளவு யுரேனியம் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை. உலகத்திலேயே ஒரு பலவீனமான பாதுகாப்பு அமைப்பை வைத்துக்கொண்டு, மேலும் கையூட்டு கொடுத்தால் எதையும் செய்து கொடுக்கின்ற அதிகாரிகளையும் வைத்துக்கொண்டு நம்மால் எப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு இந்த அணுக் கழிவுகளை பாதுகாக்க முடியும்? இதெல்லாம் நமக்கு தேவையற்ற சுமைகள் என்றே தோன்றுகிறது.

மின்சாரம் வேண்டுமா இல்லை புற்றுநோய் வேண்டுமா என்று கேட்டால் மின்சாரம் எங்களுக்கு, புற்றுநோய் உங்களுக்கு என்று தெளிவாகத்தான் பதில் சொல்கிறார்கள் நகரவாசிகள். அவர்களுக்கு தெரியவில்லை பாதிப்பு என்பது அணு உலை இருக்கின்ற ஊர்களுக்கு மட்டுமல்ல, அங்கிருந்து ஒரு ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்காவது பாதிப்பிருக்கும் என்று. இரசியாவில் செர்நோபில் விபத்து நடந்த போது 1500 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சுவிடன் நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளை நாம் மறந்து விட முடியாது.

இப்படித்தான் முதன் முதலில் கதிரியக்க பொருள்கள் கண்டறியப்பட்ட போது ஆர்வமாக முகப்பூச்சு, தண்ணீர், மருந்து என்று அனைத்திலும் பயன்படுத்தினர். இப்போழுது யாரையாவது சிறிது உரேனியத்தை முகத்தில் பூசிக்க சொல்லுங்கள் பார்க்கலாம். அது போன்று தற்போது ஐம்பது வருடமாக அணு ஆற்றல் என்று ஆர்வமாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அனேகமாக நூறு வருடத்திற்கு பின்னால் உலகத்தில் எங்குமே அணு உலைகள் இல்லாமல் போய்விடலாம். ஆனால் அணு உலைகள் வெடிக்கும் பட்சத்தில் உலகமே இல்லாமல் போய்விடும்.