Thursday, 6 November 2014

Excellent Placement Record of Graduating Engineers in Tamilnadu..


Sri Ramaswamy Memorial (SRM) University had an extremely good placement session this year, with 2637 offers being made to students till November 5, 2014.

For the batch passing out in 2015, campus recruitment has already started. On Day one of placement, three companies – Cognizant, Infosys and Wipro were given slots. Cognizant offered 1502 jobs followed by 1105 offers made by Infosys and 1082 by Wipro. Salary range offered by companies at SRM placement drive (at present) is Rs 3- 3.5 Lakhs per annum.

On Day 1 of placement at SRM University, HR at Wipro, Mr Viswanathan said, “We are very happy to be a part of placement drive in SRM University on Day 1 slot. We found good qualified students are in SRM, with employer requisites of knowledge and practical experience combined with communication skills”.

Placement Summary
Total batch size
5100
Candidates seeking placements
4032
Students opting out of placements through institute
1000
Total offers made
2637 (till November 5, 2014)
International offers
1
Total Pre-placement offers/accepted
57 / 57
Highest package offered
Domestic: Rs 18.5 Lakhs
International: ¥ 5 Million (approximately Rs 33 Lakhs)
Median Salary offered
Rs 3.2 Lakhs per annum
Mean Salary offered
Rs 3.0 Lakhs per annum



Top Recruiters: Cognizant, Infosys, WIPRO, Amazon, Musigma, Hitachi Consulting, Code Brahma, S&P Capital IQ, Unisys, Schneider Electric, Caterpillar, I-Gate, Kpit, Capgemini, Tata Communications and Work Applications (a Japanese Company).

Sect oral Overview
Field/Sector
Companies
IT Services
Aricent, Cybage, HCL - ISD, Infosys, WIPRO, CTS, L&T Infotech.
IT Product
Accolite Software, AKS Software, Amazon, Aspire Systems, Capgemini, Chalk Studio, CodeBrahma, Fidelity Investments, Gofrugal, Google, Hitachi Consulting, HP, iGate, Indix, KPIT, MindTree, Mobicip, NSN(Nokia Solutions NETWORK), Payoda, S&P Capital IQ, Scope International, Solartis, Success Factors, Temenos, Texas Instruments, Triad, Unisys, Vembu Technologies, Verizon, Virtusa, Vulcantech, Works Applications.
Analytics
Mu Sigma, Vembu Technologies, S&P Capital IQ, Indix
Telecommunication
Tata Communication, TCS, Lava Mobiles.
Core
Anand Group, Asahi India Glass, AthenaHealth, Caterpillar, DEP India, HUL, Lava International, Saggezza, Schnieder Electric, Thermo Fisher, Zifo Technologies, Mahindra & Mahindra, L&T ECC, Murugappa Groups.
Others
Teach for India, Chalk Studio, Indian Navy, Indian Army, RR Donnelley, PWC.

Work Applications, a Japanese company has been visiting SRM for the past three consecutive years. WORKS APPLICATIONS has offered a student an annual package of 5 million Japanese Yen (approximately 33 Lakhs). This company also offers winter internships to some of the SRM Students. In near future, about 100+ companies (Indian and Foreign) are expected to visit the campus. These companies include:

WIPRO HR Mr. Viswanathan -  Said: We are very happy to be a part of placement drive in SRM University on Day 1 slot. We found good qualified students are in SRM, with employer requisites of knowledge and practical experience combined with communication skills.

In summary, SRM University has excellent record of placement of its graduates in reputed domestic and foreign institutions; the senior leadership is committed to continuous improvements in the placement process to attract new companies to SRM Campus.

Collection by M.Ajmal Khan.

Monday, 3 November 2014

மதுரை MRDT - க்கு தடை !

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் எம்ஆர்டிடி (Madurai Rural Development Transformation India Ltd)  மற்றும் எம்.டி.ஆர்.எஃப் (Madurai Rural Development Benefit Fund (India) Limited) நிறுவனங்கள் உடனடியாக மக்களிடமிருந்து பணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்’ என அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி.
மதுரை எம்ஆர்டிடி நிறுவனம் குறித்து நாணயம் விகடனில் ஏற்கெனவே இரண்டு இதழ்களில் உஷார் கட்டுரை எழுதி வெளியிட்டோம். பொதுமக்களிடமிருந்து டெபாசிட்டு களைத் திரட்டவும், பங்குகளை வெளியிடவும் அரசின் அங்கீகரிக்கப் பட்ட அமைப்புகளிடமிருந்து எந்த ஒரு அனுமதியும் இந்த நிறுவனம் வாங்கவில்லை என்பதை ஆதாரங் களுடன் கடந்த வாரங்களில் வெளியிட்டோம். இந்த நிறுவனம் குறித்து விசாரணை மேற்கொண்ட  செபி (Securities and Exchange Board of India) எம்ஆர்டிடி பற்றி பல கோணங்களில் விசாரித்து, இப்போது தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.
செபியானது அக்டோபர் 27-ம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, ‘எம்ஆர்டிடி, எம்டிஆர்எஃப் நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து பணத்தைத் திரட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்; இந்த நிறுவனங்களின் சொத்துக்களை விற்கக்கூடாது; பொது மக்களிடமிருந்து திரட்டிய பணத்தை வேறு எங்கும் மாற்றக்கூடாது; செபி அமைப்பின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், பொது மக்களிடமிருந்து திரட்டிய பணத்தை வட்டியுடன்  திரும்ப அளிப்பதற்கு ஏன் உத்தரவிடக்கூடாது எனவும் ஆணை பிறப்பித்துள்ளது. செபியின் இந்த உத்தரவைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தின் மீதான காவல்துறை நடவடிக்கை மேலும் தீவிரமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இந்த நிறுவனம் இனிமேல் பங்கு வெளியீடு, கடன் பத்திர வெளியீடு, முன்னுரிமை பங்கு வெளியீடு என எந்தவொரு வகையிலும் பொதுமக்களிடமிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணத்தைத் திரட்டக் கூடாது. நிறுவனமோ, நிறுவன இயக்குநர் கள் அவையில் உள்ளவர்களோ, எந்த ஒரு சொத்தையும், கணக்கு விவரங்களை யும் திசை திருப்புவதோ அல்லது வேறு பெயர்களுக்கு மாற்றுவதோ கூடாது என்பதையும் இந்த உத்தரவில் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிறுவனமும், நிறுவன இயக்குநரவையைச் சேர்ந்தவர்களும் பங்குச் சந்தை சார்ந்த வர்த்தகங்களில் ஈடுபடுவதைத் தடை செய்வதுடன், அடுத்த 21 நாட்களுக்குள் செபி கோரும் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி யுள்ளது. அந்த நிறுவனம் குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம், ரிசர்வ் வங்கி, பொருளாதாரக் குற்றப்பிரிவு, தமிழ்நாடு காவல்துறை போன்றவற்றுக்கு உரிய தகவல்களை செபி அளித்துள்ளது.
எம்ஆர்டிடியின் தகிடுதத்தங்களை பரந்துபட்ட மக்களின் கவனத்துக்கு நாணயம் விகடன் கொண்டு வந்த போதிலும், இந்த நிறுவனத்தைக் கடந்த சில காலமாக உன்னிப்பாக கண்காணித்து வருகிறது செபி. குறிப்பாக, இந்த நிறுவனம் தொடர்பான சில முக்கிய விவரங்களை 2013 ஜூலை மாதமே  கேட்டது. இதன்பிறகு இந்த நிறுவனத்தின் பல்வேறு நடவடிக்கைகள் பற்றி தொடர்ந்து கேள்வி கேட்டு வந்தது. செபியின் கேள்விகளுக்கு எம்ஆர்டிடி சரிவர தகவல்களை அளிக்கவில்லை.
தனது ஆய்வில் கிடைத்த தகவல்கள் மற்றும் தமிழகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் மூலம் கிடைத்த ஆவணங்கள் ஆகியவற்றை பரிசீலித்து,  மேலும் இந்த நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு எழுதியது செபி. இதன் தொடர்ச்சியாக 2014 ஜூன் 16 அன்று ‘கலெக்டிவ் இன்வெஸ்ட்மென்ட் ஸ்கீம்’ என்கிற திட்டத்தின் கீழ் பொதுமக்களிட மிருந்து பணம் திரட்டப்படுகிறதா என்று எம்ஆர்டிடி நிறுவனத்திடம் சில விவரங்களைக் கேட்டு கடிதம் எழுதியது.

செபி உத்தரவை மீறும் பிஏசிஎல்!
பிஏசிஎல் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து பணம் வசூல் செய்வதை தடை செய்ததுடன், இந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என செபி மீண்டும் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிஏசிஎல் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து பணம் திரட்டுவது சட்டத்துக்குப் புறம்பானது என்று கடந்த ஆகஸ்ட் மாதம் செபி உத்தரவிட் டிருந்தது. மேலும், பொதுமக்களிடமிருந்து திரட்டிய சுமார் ரூ.49 ஆயிரம் கோடியையும் உடனடியாக திருப்பித் தர வேண்டும் என சொல்லியிருந்தது.
செபியின் இந்த உத்தரவுகளைப் பின்பற்றாத பிஏசிஎல் நிறுவனம், பொதுமக்களிடமிருந்து பணம் திரட்டுவதை நிறுத்தாமல், தொடர்ந்து வசூல் செய்துவருவதாக பொதுமக்களிடமிருந்து செபிக்கு புகார்கள் வந்திருக்கிறது. 
செபியின் உத்தரவுகள், வழிகாட்டுதல்கள் எதையும் கடைப்பிடிக்காத நிலையில் இந்த நிறுவனம் தொடர்ச்சியாக பொதுமக்களிடமிருந்து பணத்தைத் திரட்டுவது சிவில் மற்றும் கிரிமினல் குற்றமாகக் கருதப்படும் என்று குறிப்பிட்டுள்ள செபி, இந்த நிறுவனத்தின் மீது பொருளாதார மோசடி மற்றும் ஏமாற்றுதல், பொதுமக்கள் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கலாம் என மாநில காவல் துறையிடம் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிறுவனம் குறித்து மும்பையில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு விசாரணை நடத்தத் தொடங்கியது. பிஏசிஎல் நிறுவனம் வசூல் செய்த பல ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டுவதால், இந்த விசாரணை இப்போது சிபிஐக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.   இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்த கம்பெனி விவகாரத் துறை அமைச்சகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செபி கேட்டுக் கொண்டுள்ளது.

இனியும், பிஏசிஎல் நிறுவனத்தை நம்பி மக்கள் பணம் கட்டினால் அவர்கள் கதி அதோ கதிதான்!
இந்தக் கடிதத்துக்கு கடந்த ஜூன், 18 அன்று செபிக்குப் பதில் கடிதம் எழுதிய எம்ஆர்டிடி நிறுவனம், செபியின் கேள்விகளுக்கு பதில்  சொல்ல  கால அவகாசம் கேட்டது. 15 நாட்கள் கால அவகாசம் தந்த நிலையிலும், கேட்ட கேள்விகளுக்கு எம்ஆர்டிடி நிறுவனம் எந்தப் பதிலையும் இதுவரை அனுப்பவில்லை. கம்பெனிச் சட்டத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய பல சட்டங்களையும் எம்ஆர்டிடி மீறியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு எம்ஆர்டிடி,எம்டிஆர்எஃப் நிறுவனங்களின் மீது தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது செபி.

பிசினஸ் இண்டெக்ஸில் சறுக்கிய இந்தியா!
பிசினஸ் செய்வதற்கேற்ற சூழல் பற்றி உலக வங்கி மேற்கொண்ட சர்வேயில் இந்தியா 142-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 140-வது இடத்தைப் பிடித்தது. இந்தப் பட்டியலில் சிங்கப்பூர், நியூசிலாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. இலங்கை (99), நேபாளம் (108), பூடான் (125), பாகிஸ்தான் (128) நம்மைவிட முன்னணியில் இருப்பது நமக்கு தர்மசங்கடம்தான். என்றாலும், இந்தியாவில் தற்போது தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் சூடுபிடிக்கத் தொடங்கி இருப்பதால், அடுத்த ஆண்டு நல்ல முன்னேற்றம் காணும் என்று எதிர்பார்க்கலாம்.
 
இப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தை நம்பி அப்பாவி பொதுமக்கள் தொடர்ந்து பணம் கட்டி வருவதுதான் கொடுமை யான விஷயம். ஏதோ ஒரு நப்பாசையில் மக்கள் கட்டிய பணத்தை அவர்களுக்கு திரும்பக் கிடைக்க செபியும் காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நமது கோரிக்கை.
இந்த நிறுவனம் மீது செபி எடுத்துள்ள நடவடிக்கையை மனதாரப் பாராட்டலாம். என்றாலும், இதுமாதிரி யான நிறுவனங்களிடமிருந்து மக்கள் தள்ளியே நிற்பது புத்திசாலித்தனம்! 

Saturday, 1 November 2014

பூச்சிகளின் தாக்குதலில் இருந்து மா மரங்களை பாதுகாப்பது எப்படி?

மாமரம் மாபெரும் வரம் முக்கனிகளில் முதற்கனி மா!  மாமரத்தின் தாவர இயல் பெயர் மேங்கிஃபெரா இண்டிகா. மா மரத்தின் தாயகம் இந்தியா. மலேசியாவும் இதன் தாய்வீடு என்கின்றனர் சிலர். உலக அளவில் மாம்பழ உற்பத்தியில் முதல் இடம் வகிப்பது இந்தியாதான். உலகின் மொத்த மாம்பழ உற்பத்தியில் 63 சதவிகிதம் இந்தியாவில் இருந்துதான் என்பது மகிழ்ச்சிக்குரிய உண்மை. பேரரசர் அக்பர் தன் தோட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான மாமரங்களை வளர்த்து இருக்கிறார். மாமரத்தின் அனைத்துப் பகுதிகளும் மருத்துவக் குணங்களைக் கொண்டு உள்ளன. மாங்காய் வைட்டமின் 'சி’ நிரம்பியது. மாம்பழம் கரோட்டின் சத்து  நிறைந்தது. மா மரத்தின் காய், கனி, துளிர், பிஞ்சு, கொட்டை ஆகியனவும் உணவாகப் பயன்படுகின்றன. மா இலைகள் கால்நடைகளுக்கான நல்ல தீவனம். 

மாம்பழம் சுவை மட்டுமல்லாமல் பல்வேறு சத்துக்களையும் கொண்டது. மாம்பழத்தில் “ஏ“, “சி“, மற்றும் “இ“ வைட்டமின்கள் அதிகமாக காணப்படுகிறது. “மா“ பயிரிட்டுள்ள விவசாயிகள் தற்போது உள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்றது போல் அவற்றை முறையாக பராமரித்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தினால் கூடுதல் லாபம் பெற முடியும்.

மாம்பழத்தில் நீலம், பெங்களூரா (தோத்தாப்புரி), அல்போன்சா, ருமானி, பங்கனப்பள்ளி, காலாப்பாடி, பீத்தர், செந்தூரா, ஜஹாங்கீர், மல்கோவா, இமாயுதீன், அர்கா அன்மால், அர்கா அருணா, அர்கா நீல்கிரன், அர்கா புனீத், அமரப்பள்ளி, பி.கே.எம். 1, பி.கே.எம் 2, பையூர்1, மல்லிகா, சிந்து, ரத்னா ஆகிய ரகங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.இவற்றில் மல்லிகா, சிந்து, ரத்னா, பி.கே.எம் 2 போன்ற ரகங்கள் உயர் ரகங்களாகவும், கேசர் மற்றும் அமரப்புள்ளி போன்ற ரகங்கள் சுவை மற்றும் அதிக விளைச்சல் தரும் ரகங்களாகவும் உள்ளன. மல்லிகா மற்றும் சிந்து ரகங்கள் விதையில்லாதது. 

பிஞ்சுகள்
மாமரம் இதுவரை பூக்காமல் இருந்தால், 0.5 சதவீத யூரியா கரைசல் (5 கிராம் யூரியா ஒரு விட்டர் நீருக்கு) அல்லது ஒரு சதவீத பொட்டாசியம் நைட்ரேட் கரைசல் (10 கிராம் பொட்டாசியம் நைட்ரேட் ஒரு லிட்டர் நீருக்கு) என்ற அளவில் தெளிக்க வேண்டும். இதனால் பூக்கள் உருவாக வாய்ப்பு உண்டு.
பூக்கள் பூத்திருக்கும் மாமரங்களில் நாப்தலின் அசிட்டிக் அமிலம் தெளிப்பதால் அதிக பிஞ்சுகள் உருவாவதோடு, பிஞ்சுகள் உதிர்வதும் தடுக்கப்படும். அதே நேரத்தில் பிஞ்சுகள் உருவாகி உள்ள மாமரங்களில் 2 சதவீத பொட்டாசியம் நைட்ரேட் தெளிப்பதால் பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு பழங்கள் உற்பத்தி அதிகரிக்கும். மாமர தோப்புகளில் தோழமை தாவரங்களான சீத்தாப்பழ கன்றுகள் மற்றும் ஆமணக்குச் செடிகளை பயிரிடுவதால் கூடுதல் வளர்ச்சி மற்றும் அதிக மகசூல் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

பூச்சிகளும், கட்டுப்படுத்தும் வழிகளும்…
மாமரங்களை மூன்று விதமான தத்துப்பூச்சிகள் தாக்குகின்றன. மாமரத்தின் கிளைகளில் தத்துப்பூச்சியில் தாக்குதலை எளிதாக கண்டறிய முடியும். தத்துப்பூச்சியின் தாக்குதலினால் பூக்களின் எண்ணிக்கை குறைவதோடு பூக்களிலும் அதன் பாதிப்பு ஏற்படும். தத்துப் பூச்சியின் தாக்குதல் குறைவாக இருப்பின் 3 சதவீத வேப்ப எண்ணை ஒரு லிட்டர் நீருக்கு 5 மி.லி அல்லது வேப்பம் சோப்பு ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

தத்துப்பூச்சியின் தாக்குதல் மத்திமமாக
இருப்பின், ஒரு லிட்டர் நீருக்கு 4 கிராம் “பெவேரியா பேஸியானா“ என்ற உயர்ரக பூஞ்சாண மருந்தினை அதிக திறன் உள்ள தெளிப்பான் மூலம் தெளிப்பு வேகத்தை குறைத்து மாமரம் மற்றும் பூக்களின் மீது தெளிப்பதால் தத்துப்பூச்சிகள் அழியும். தாக்குதல் அதிகமாக இருப்பின், “அசிபேட் 75 எஸ்.பி“ ஒரு கிராம் ஒரு லிட்டர் நீருக்கு அல்லது “கார்பரைல் 50 டபிள்யு.பி“ ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவில் பூ உருவாகும் சமயத்தில் ஒரு முறையும், 15 நாட்கள் கழித்து 2–வது முறையும் பூக்களின் மீது தெளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் நனையும் கந்தகம் 2 கிராம் ஒரு லிட்டர் நீருக்கு என்ற அளவில் தெளித்தால் செஞ்சிலந்தியின் தாக்குதலை தடுக்க முடியும்.

பிணைக்கும் புழுகள் எச்சத்தால், மாமரங்களின் பூக்களில் கூடுகள் கட்டி வலைபோல் பின்னி பூக்களை உண்பதால் மகசூல் பாதிக்கப்படுகின்றது. இதனால் பூக்களில் மகரந்த சேர்க்கை நடைபெறுவதும் தடுக்கப்படும். பிணைக்கும் புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்த “பேசலோன் 35 இ.சி“ 2 மி.லி ஒரு லிட்டர் நீருக்கு அல்லது “புரப்னோபாஸ்“ 2 மி.லி ஒரு லிட்டர் நீருக்கு என்ற அளவில் பூக்களின் மீது தெளிக்க வேண்டும்.

இலை கொப்புளம்
இலை கொப்புளம் மற்றும் அசுவிணியை கட்டுப்படுத்த “டைமித்தோயேட்“ 2 மி.லி ஒரு லிட்டர் நீருக்கு என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
மாமர தோப்புகளில் கரையான் புற்றுகளை அழிக்க சோற்றுக்கற்றாழை செடிகளை நடலாம். மேலும் மாமரங்களில் தோன்றும் கரையானை அழக்க சிறிதளவு சர்க்கரைக் கரைசலை மரத்தின் மீது தெளிப்பதால் செவ்வெறும்புகள் சர்க்கரையை தேடிவந்து கரையான்களை அழிக்கும்.

மாமரத்தில் பழங்களில் தோன்றக்கூடிய பழ ஈயை கட்டுப்படுத்த பிரத்தியேக இனக்கவர்ச்சி பொறியை ஒரு ஏக்கருக்கு 2 என்ற அளவில் பூக்கும் தருணத்தில் வைத்துவிட வேண்டும். இதனால் பழ ஈக்கள் பூ பூக்கும் தருணத்தில் முட்டையிடுவது தவிர்க்கப்பட்டு இனக்கவர்ச்சிப் பொறியால் அவை ஈர்க்கப்பட்டு அழிக்கப்படும்.

பொதுவாக மா மரத்தில் அதிக பூ வைத்து விளைச்சலை அதிகரிக்க ஒரு தொழில் நுட்பத்தை பார்ப்போம். இத்தொழில் நுட்பம் தமிழகத்தை சேர்ந்த தர்மபுரி மற்றும் கிருஷ்னகிரியில் விவசாயிகளால் பின் பற்ற பட்டு லாபத்தை பெருக்க உதவி வருகிறது. இத்தொழில் நுட்பத்திற்கு மட் கா காட் என்று பெயர்.எருமை மாட்டிலிருந்து பெற பட்ட பாலிலிருந்து தயாரிக்க பட்ட மோர் 15 லிட்டர் எடுத்து கொண்டு அதனுடன் 15 லிட்டர் தண்ணீரை நன்கு கலக்க வேண்டும்.அதை மண் பானையில் ஊற்றி பானையின் மேல் பகுதியை துணியால் மூடி நிழல் பகுதியில் வைக்க வேண்டும் அல்லது மண்ணுக்கு அடியில் புதைத்து 21 நாட்கள் வைக்க வேண்டும்.அவ்வாறு வைப்பதால் நுண்ணுயிர் நொதித்தலால் பல நல்ல உயிர் ஊக்கி(bioactive molecule) பொருட்கள் உருவாகும்.1 லிட்டர் இந்த கலவையுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிப்பதனால் மா மரத்தில் பூக்கள் அதிகரித்து விளைச்சளும் அதிகரிக்கிறது.


தகவல்:– 
1, திரு.விஜயகுமார், பூச்சியியல் துறை வல்லுனர், காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம்.
2,திருமதி . சு.சுஜாதா, உதவி விரிவுரையாளர்,அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை. 
3, திரு . பூச்செண்டு, மாங்காய் நிலக்கிளார், நத்தம். திண்டுக்கல் மாவட்டம். 

தொகுப்பு : அ . தையுபா அஜ்மல்.

தமிழகத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும்? ஒரு சமூக விழிப்புணர்வு தவகல்..,

தமிழகத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்க உரிய அக்கறை காட்டாததால், நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்குச் சென்று விட்டது. தண்ணீருக்காக, 1,200 - 1,300 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.'மழை இந்த வருஷமும் ஏமாத்திடுச்சே... தண்ணிக்கு அல்லாட வேண்டியது தான்...' என்ற வார்த்தையை, பருவமழை பொய்க்கும் போதெல்லாம், தமிழக மக்கள் கூறுவது வழக்கம். மழை பெய்யவில்லை என, வருத்தப்படுவதில் தவறில்லை. ஆனால், கொட்டிய மழைநீரையும் சேமிக்காமல், வீணடித்துவிட்டு, 'வருண பகவான் ஏமாத்திட்டாரு' என, குறைகூறுவது சரியல்ல.  


குடிநீர் உள்ளிட்ட அனைத்து, தமிழக நீர் தேவைக்கும் வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை தான் பிரதானம். ஆண்டின் சராசரி மழை அளவு, 925 மி.மீ., என்றாலும், இந்த அளவை தமிழகம் எட்டிப் பிடித்து பல ஆண்டுகள் ஆகின்றன.போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், பெய்யும் மழை நீரில், 40 சதவீதம் வரை, கடலில் வீணாக கலக்கிறது. நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பில் சிறிதளவும் அக்கறை காட்டவில்லை. ஓரளவு நிலத்தடி நீர்மட்டம் குறைவாக இருந்த பகுதிகளிலும், வியாபார நோக்கில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாலும் நிலைமை சிக்கலாகி, நிலத்தடிநீர் அதலபாதாளத்திற்கு போய் விட்டது.தாகம் தீர்க்கும் தண்ணீருக்காக மக்கள் பல கி.மீ., அலைந்து திரியும் நிலை, பெரும்பாலான மாவட்டங்களில் நிலவுகிறது. கடந்த ஆண்டுகளில், டெல்டா பாசன பகுதிகளிலேயே விவசாயம் முடங்கியது என்றால், மற்ற பகுதிகளைக் கேட்க வேண்டியதில்லை.


தூய்மையான நீர் கிடைப்பது அரிதாகிவருகிறது.
  • பூமியில் உள்ள மொத்த நீரில் 3 சதம் மட்டுமே தூய்மையான நீர். மீதமுள்ளது, உப்பு  நீராக கடலில் உள்ளது.
  • மொத்தமுள்ள தூய்மையான நீரில், 11 சதம் பூமியில் உள்ள நிலத்தடி நீர். இவை நாம் பயன்படுத்த, 800 மீட்டர் ஆழம் வரை கிடைக்கிறது. 
  • மிதமிஞ்சின நிலத்தடி நீர் எடுத்தல் மற்றும் உபயோகம்  நீர்பற்றாக்குறைக்கு வழி வகுக்கிறது.  அதோடு, நீரின் அளவு மற்றும் தரம் பாதிப்புள்ளாகிறது.

நிலத்தடி நீரை அதிகப்படுத்தும் முறை மற்றும் நுட்பங்கள்..

அ. கிராமப்புறங்களில் நிலத்தடி நீர்வளத்தை உயர்த்துதல்.
கிராமப்புறங்களில், நீர்பிடி முகடு அமைப்பின் கீழ் மழைநீர் அறுவடை செய்யப்படுகிறது. நீர்பரவும் பரப்பு அதிகம் இருப்பதால், பெய்யும் மழையை நிலத்தின் மேற்பரப்பில் ஊடுருவச் செய்து, சேமிக்கும் வழிமுறையே கிராமங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் மூலம், சேமிக்கப்படும் நீரின் அளவும் அதிகமாகும். ஓடைகள், ஆறுகள், நிலச்சரிவுகள் போன்றவை மூலம் இழக்கப்படும் வழிந்தோடும் நீரை சேமிக்க கீழ்கண்ட நுட்பங்களை கடைப்பிடிக்கலாம்.
i. கல்லி ப்ளக்
  • உள்ளூரில் கிடைக்கும் கற்கள், களிமண், புதர்கள் ஆகியவை கொண்டு, மலைப்பாங்கான இடங்களில் ஓடும் மழைநீரை எடுத்துச் செல்லும் சிறிய ஓடைகள்,  நீரோட்டம்  போன்ற இடங்களில் கட்டப்படுகிறது.
  • மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பிற்கு இந்த கல்லி ப்ளக் உதவுகிறது.
  • நீரோட்டத்தில் ஏற்படும் இயற்கையான தடுப்பு பகுதிகளைத் தேர்வு செய்து, கல்லி ப்ளக் கட்டலாம். இதன் மூலம் தடுப்பணைகளில் அதிகளவு நீர் சேமிக்கப்படுமக்கும் கற்கள், களிமண், புதர்கள் ஆகியவை கொண்டு, மலைப்பாங்கான இடங்களில் ஓடும் மழைநீரை எடுத்துச் செல்லும் சிறிய ஓடைகள்,  நீரோட்டம்  போன்ற இடங்களில் கட்டப்படுகிறது.
  • மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பிற்கு இந்த கல்லி ப்ளக் உதவுகிறது.
  • நீரோட்டத்தில் ஏற்படும் இயற்கையான தடுப்பு பகுதிகளைத் தேர்வு செய்து, கல்லி ப்ளக் கட்டலாம். இதன் மூலம் தடுப்பணைகளில் அதிகளவு நீர் சேமிக்கப்படும்.


ii. கான்டூர் வரப்பு
  • நீர்பிடி முகடு பகுதிகளில், மண்ணின் ஈரப்பதத்தை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்க இவை உதவுகிறது.
  • குறைவான மழை பெய்யும் இடங்களில் இது உகந்த  முறையாகும். இம்முறையில், சரிவுக்கு குறுக்கே, ஒரே உயரமுள்ள இடங்களை இணைத்து வரப்பு அமைத்து மழை நீர் சேமிக்கப்படுகிறது.  
  • சரியான இடைவெளியில் வரப்புகள் கட்டப்படுவதால், வேகமாக ஓடி மண்அரிப்பு  ஏற்படுத்தும் நீரை, இந்த வரப்புகள் தடுக்கிறது.
  • இரண்டு வரப்புகளுக்கு இடையேயான இடைவெளி, பரப்பு, சாய்வு, மண்ணின் நீர் இழுக்கும் திறன் ஆகியவற்றை பொறுத்து அமையும். மண்ணின் நீர் இழுக்கும் திறன் குறைவாக இருந்தால், இடைவெளி குறைவாக இருக்கும்.
  • சாதாரணமாக சரிவு காணப்படும் நிலங்களில் இவ்வரப்புகள் ஏற்றதாகும்.
ar5.jpg


iii. கேபியன் கட்டுமானம்
  • சிறிய நீரோடைகளில் கரைக்குள் ஓடும் நீரை பாதுகாக்க இந்தக்கட்டுமானம் உதவுகிறது.
  • நீரோடைகளின் குறுக்கே இரு கரைகளுக்கிடையே, உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை கம்பி வலைகளுக்கிடையே போட்டு, அமைப்பது தான் கேபியன் கட்டுமானம்.
  • கேபியன் கட்டுமானத்தின் உயரம் 0.5 மீட்டர் அளவாகும். நீரோடைக்கு குறுக்கே கட்டப்படும் இந்தக் கட்டுமானத்தின் அகலம் குறைந்தது 10 மீட்டருக்கு உட்பட்டது.
  • கட்டுமானத்தினால் ஓரளவிற்கு நீர் சேமிக்கப்படும், மீதி இருக்கும் தண்ணீர் கட்டுமானத்தின் மேல் வழிந்தோடுகிறது.  சேமிக்கப்படும் நீர் நீலத்தடி நீர்வளம் பெருக்க உதவும்.  காலப்போக்கில் நீரோட்டத்தால், கட்டுமானப் பொருட்களிடையே மண் தேங்க தொடங்கும். இந்த மண்ணின் மேல் செடிகள் வளரும்போது தடுப்பணை, கடினமான கட்டுமானமாக உருவாகிறது.  இது, மேற்பரப்பில் வழிந்தோடும் நிரைத்தடுக்கிறது.  பெய்யும் மழைநீரும் சேமிக்கப்படுகிறது.
 


iv. உறுஞ்சு குளங்கள்
  • இது நாம் உருவாக்கும் ஒருவகை நீர்சேமிப்புக் கட்டுமானமாகும். நீர் அதிகம் இழுக்கும் நிலத்தை உள்ளடக்கி இந்த அமைப்பு கட்டப்படுகிறது. இதன் மூலம், நீர் ஊடுருவிச் சென்று, நிலத்தடி நீர்வளத்தை உயர்த்தும்.
  • நிலத்தடி ஊற்றுகளுடன் தொடர்புடைய உடையும் அல்லது உடைந்த பாறைகளாலான இரண்டாவது அல்லது மூன்றாவது வகை நீரோடையில் இந்த அமைப்பு கட்டப்படுகின்றது.
  • இவ்வமைபுகள் அமைந்துள்ள பகுதியின் கீழ் தட்டுகளில், கிணறுகளும், பாசனம் தேவைப்படும்  நிலங்களும் இருந்தால்தான், சேமிக்கப்படும் நீரை முறையாக பயன்படுத்தலாம்.
  • உறுஞ்சு குளங்களின் அளவு, குளங்களின் அடிப்பாகத்தின் ஊடுருவும் திறன் பொறுத்தது.  பொதுவாக 3 முதல் 4 மீட்டர் வரை குளத்துநீர் சேமிக்கும் அளவிற்கு தொட்டி அமைக்கப்படவேண்டும். 
  • மண் கொண்டுதான் இக்குளங்கள் கட்டப்படுகின்றன. வழிந்தோடும் பகுதி மட்டுமே சிமெண்ட் கட்டுமானம் உடையதாக இருக்கும்.  இக்கட்டுமானத்தின் நோக்கமே நிலத்தடி நீர்வளத்தை உயர்த்துவதுதான். கட்டுமானத்தின் அடிப்பகுதி அதாவது தரைப்பகுதி வழியாக நீர் ஊடுருவும் வகையில் அமைக்கப்படுகிறது. 4.5 மீட்டர் உயரமுள்ள குளங்களில், வழிந்தோடும் நீருக்கான கால்வாய்கள் தேவையில்லை. நிலத்தின் தரைப் பகுதிக்கும், குளத்தின்  அடிப்பகுதிக்கும் இடையே சேர்ப்பு பகுதி மட்டும் தேவை.


v. தடுப்பணைகள் / சிமெண்ட் ப்ளக் / நளா அணை
  • லேசான சரிவுள்ள  சிறிய நீரோடையின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படுகின்றன.  தடுப்பணை கட்டப்படும் பகுதியில் சேமிக்கப்படும் நீர் இறங்கும் வண்ணம் மண்கண்டம் இருத்தல் வேண்டும். அப்போது தான், சேமித்த நீர் குறுகிய காலத்தில் நிலத்திற்குள் இறங்கும்.
  • இந்த அமைப்புகளில் சேமிக்கப்படும் நீர் நீரோடையின் நீர்மட்டத்திற்கு மட்டுமே போதுமானது. பொதுவாக, இதன் உயரம் 2 மீட்டருக்குட்பட்டது. இதற்கு மேல் வரும் நீர் வழிந்தோட அனுமதிக்கப்படும். வழிந்தோடும் நீர் நின்று செல்ல கீழ்ப்பகுதியில் வசதி செய்யவேண்டும்.
  • நீரோடையில் வேகத்தைக் கட்டுபடுத்த, வரிசையாக தடுப்பணைகள் கட்டப்பட்டு நீர் சேமிக்கப்பட்டு நீர் நிறுத்தப்படுகிறது.
  • சிறிய நீரோடைகளை தடுத்து  நிறுத்த, சிமெண்ட் பைகளில் களிமண் அடைக்கப்பட்டு, தடுப்புச்சுவர்போல் வைக்கப் படுவதும் நல்ல பயனை அளித்துள்ளது. சில இடங்களில், மேலான கால்வாய்கள் தோண்டப்பட்டு, இருபுறமும் ஆஸ்பெஸ்டாஸ் கூரைத்தகடுகள் வைக்கப்படும் போது நீர் சேமிப்பு ஏற்படுகிறது.  ஆஸ்பெஸ்டாஸ் கூரைத்தகடுகளின் இடையே களிமண் நிறைக்கப்படுகிறது. இது செலவு குறைவான ஒரு தடுப்பணைகட்டும் முறை. மேற்பகுதியில் களிமண் அடைக்கப்பட்ட சிமெண்ட் பைகளை அடுக்கும்போது தடுப்பணைக்கு எவ்வித பாதிப்புமில்லாமல் பாதுகாப்பு ஏற்படுகிறது.
 

vi ரீசார்ஜ் ஷாப்ட்

harvesting7.png

  • இது ஒரு செலவு குறைந்த, ஆனால் திறன் வாய்ந்த, முறை. மண்ணின் உரிஞ்சும் தன்மை குறைவாக காணப்படும் போது, இம்முறை நீரை சேமிக்கும் ஒரு வழிமுறை.
  • மண் உள்வாங்காத பகுதிகளில், இந்த அமைப்பினை ஆட்கள் கொண்டு வெட்டளாம். இந்த அமைப்பின் விட்டம் 2 மீட்டருக்கும் அதிகமாக இருக்கும்.
  • நிலத்தின் அடிபகுதியில், நீர் ஊடுருவா பகுதிரய் கடந்து நீர் உடுருவும் பகுதி வரை இந்த அமைப்பு செல்ல வேண்டும். இருந்த போதிலும் கீழுள்ள நீர்மட்டத்தை தொடாமல் காணப்படலாம்.  
  • இந்த அமைப்பின் ஒரங்கள் ஜல்லி, கற்கள், மணல்கொண்டு நல்லமுறையில் அடுக்கப்பட்டு பாதிப்பில்லாதவாறு பராமரிக்கப்படுகிறது.  சேமிக்கப்படும் நீர், சிறிய குழாய் மூலம் வடிகட்டும்பகுதிக்கு எடுத்து செல்லப்படுகிறது.
  • கிராமங்களிலுள்ள சில குளங்கள் மழைகாலங்களில் நிரம்பி காணப்படும். ஆனால், குளத்தின் அடியில் வண்டல் படிந்து, நீர் பூமிக்கடியில் புகுந்து செல்லாதபடிக்கு தடை செய்யும். இதனால், குளத்தின் அருகில் காணப்படும் கிணறுகள் கூட நீரின்றி காணப்படும். குளத்தின் நீர் ஆவியாகி உபயோகமில்லாமல் போய்விடும்.
  • மேற்கூறிய சூழலில், ரீசார்ஜ் ஷாப்ட் அமைப்புகளை ஏற்படுத்தி, குளங்களில் அதிகப்படியான நீரை நிலத்தடி நீர் மேம்பாடிற்கு பயன்படுத்தலாம். ரீசார்ஜ் அமைப்புகளின் விட்டம் 0.5 லிருந்து 3 மீட்டர் வரையும், ஆழம் 10-15 மீட்டர் ஆகவும், குளத்தின் நீரளவு பொருத்து அமைக்கலாம். ஷாப்டின் மேற்பகுதி குளத்தின் தரைப்பகுதிக்குமேல் இருக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. குளத்தின் பாதி அளவு நீர்மட்டத்தின் மேல் ஷாப்டின் மேற்பகுதி இருத்தல் நலமாகும். ஷாப்ட்டின் வலுவுக்காக, அதனை சுற்றி ஜல்லி, கல், மணல் ஆகியவற்றை சுற்றி இடலாம்.
  • வலுவிற்காக, ஷாப்ட்டின் மேற்பகுதியின் 1 அல்லது 2 மீட்டர் ஆழம் வரை, செங்கல், சிமென்ட் கொண்டு சுற்றமைப்பு கட்டப்படுகிறது.
  • இந்த நுட்பத்தின் மூலம் சேமிக்கப்படும் நீரில் 50 சதம் நிலத்தடிக்கு செல்கிறது. நிலத்தடி நீர்வளம் இதன் மூலம் அதிகரிக்கிறது. மீதி இருக்கும் நீர் குளத்திலேயே இருப்பதால் நமது அன்றாடத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம்.




vii. வெட்டிய கிணறுகளில் ரீசார்ஜ்
direct-bore-well-500x500.jpg

  • ஏற்கனவே உள்ள மற்றும் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட கிணறுகளை சுத்தம் செய்து நீரை சேமிக்கலாம்.
  • சேமிக்கப்படும் நீர் குழாய் மூலம் கிணறின் அடிப்பகுதிக்கு எடுத்து செல்லப்படுகிறது.
  • சேமிக்கப்படும் தண்ணீர் மண் கலப்பு இல்லாமல் இருக்க வேண்டும். வழிந்தோடும் நீரும் வடிகட்டும் கட்டுமானம் வழியாக செல்லும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.
  • அவ்வப்போது தொடர்ந்து க்ளோரினை தண்ணீரில் கலப்பதால், நுண்ணுயிர்களால் மாசுபடும் பிரச்சனை இருக்காது.


viii நிலத்தடி நீர் அணைகள்
  • நிலத்தடி நீர் அணை என்பது பூமிக்கடியில் ஓடையின் குறுக்கே கட்டப்படும் ஒரு அமைப்பாகும். இதன் மூலம் ஓடையின் அடிமட்ட நீரோட்டம் தடுக்கப்பட்டு, நீரானது பூமிக்குள் உரிஞ்சப்பட வழி செய்யப்படுகிறது. இதனால் நிலத்தடியில் நீர் சேமிக்கப்பட்டு சரிவின் மேட்டுப்பகுதிகளில் நீர்வளம் அதிகப்படுத்தப்படுகிறது.
  • நிலத்தடி நீர் அணை கட்டப்படும் பகுதியானது, நீர் உடுருவா வண்ணம் கடினமாய் காணப்படும் மண்கண்டம் குறைவாக இருத்தல் வேண்டும். சுற்றிலும் பெரிய நிலப்பரப்பு கொண்டுள்ளதாகவும், நீர் வெளிச்செல்லும் அமைப்பு சிறியதாகவும் இருக்கவேண்டும்
  • தகுந்த இடத்தை தேர்வு செய்த பிறகு, 1-2 மீட்டர் ஓடையின் குறுக்கே நீர் ஊடுருவா மட்டம் வரை அகலமுள்ள குழியை எடுக்க வேண்டும். இக்குழியில், நிலமட்டத்திலிருந்து 0.5 மீட்டர்  கீழ் வரை, களிமண், செங்கள் மற்றும் கான்கிரீட் சுவர் எடுக்க வேண்டும்.
  • நீர் முழுமையாக உட்புகுந்து செல்ல 400 - 600 காஜ் PVC சீட்டுகள் அல்லது 200 காஜ் பாலித்தீன் ஷீட்டுகளால், வெட்டிய  நிலத்தடி நீர்த்தடுப்பணைகளின் முகப்பை மூடிவிடலாம்.
  • தண்ணீர் பூமியின் நீர் மட்டத்திற்குள்ளேயே சேமிக்கப்படுவதால், நிலப்பரப்பு நீரினால் மூழ்கடிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. இதனால், மேற்பரப்பு  நாம் எப்போதும்போல் பயன்படுத்தமுடியும். தடுப்பணையில் சேமிக்கப்படும் நீர் ஆவியாவதில்லை. மண்ணும் அதிகளவில் தடுப்பணையில் சேர்வதில்லை. பெரியளவில் இயற்கை இடர்பாடுகளினால், தடுப்பணைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.





ஆ. நகர்புறங்களில் நிலத்தடிநீர் சேமிப்பு
நகர்புறங்களில், கூரைவழியாக வரும், கட்டிடங்களில் விழும் மழை நீர் சேமிக்கப்படாமல், வீணாகிறது. இந்த நீர் பூமியின் நீர் மட்டத்தில் சேமிக்கப்படலாம். தேவை ஏற்படும்பொழுது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மழை நீர் அறுவடைக்கு அதிக பரப்பு இடம் தேவைப்படாது. நிலத்தில் முழுமையாக மழை நீர் சேமிக்க இயலும். கூரையிலிருந்து விழும் மழை நீரை சேமிக்க, ஒரு சில தொழில் நுட்பங்கள் உள்ளன.
i. ரீசார்ஜ் குழி
  • நீர் ஊடுருவும் பாறைகள் நிலமட்டத்தில் காணப்படும்  பகுதிகளில், மழைநீர் சேமிப்பு இம்முறையில் செய்யப்படுகிறது.
  • இம்முறை 100 ச.மீட்டர்  கூரை பரப்புள்ள கட்டிடங்களில் விழும் மழை நீரை சேமிக்கவும் உதவுகிறது. மேலான பூமி நீர் மட்டம் உள்ள இடங்களில் நீர் சேமிப்பிற்கு ரீசார்ஜ் குழிகள் கட்டப்படுகிறது.
  • இந்தக் குழிகளின் அளவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். சாதாரணமாக, 1-2 மீட்டர் அகலம்,  2-3 மீட்டர் ஆழமுள்ளதாக அமைக்கப்படும். இந்த குழிகளில் பெரிய கற்கள் (5-20 செ.மீ), ஜல்லிகள் (5-10 மி.மீ.) மற்றும் மணல் (1.5-2 மி.மீ.) போடப்படுகின்றன. கற்கள் கீழ்பகுதியிலும், அடுத்து ஜல்லிகளும், அதற்கு மேல் மணலும் போடப்படுவதால் மழை நீரோடு  சேர்ந்து வரும் வண்டல்மண் மேல்பரப்பில் தங்கிவிடும். அதனை, எளிதாக அகற்றிவிடலாம்.  சிறிய கூறை பகுதி உள்ள கட்டிடங்களுக்கு குழியில் உடைந்த செங்கற்கள் அல்லது கூழாங்கள் போட்டால் போதுமானது.
  • குழிக்கு கட்டிடத்தின் கூரையில் இருந்து செல்லும் மழை நீர் வடிகட்டி வழியாக சென்றால் கழிவுகள், இலைகள், தழைகள் போன்றவை குழிக்கு செல்லாமல் தடுக்கலாம். சிறிய மண்துகள்கள் குழிக்கு செல்லாவண்ணம், தடுப்பு/சேமிப்பு அமைப்பு ஒன்றும் அமைக்கலாம்.
  • குழியின் மேலுள்ள மணற்பரப்பு அவ்வப்போது சுத்தம் செய்யப்படவேண்டும்.
  • முதல் மழை பெய்யும்போது, சேமிப்புக்குழியில் அத்தண்ணீர் விழாதவாறு மாற்று அமைப்பு இருப்பது நல்லது.


ii. ரீசார்ஜ் டிரன்ச்
  • இந்த அமைப்பு, 200-300 சதுர மீட்டர் கூரை பரப்புடைய கட்டிடங்களுக்கு ஏற்றதாகும். நீர் ஊடுருவும் மட்டம் மேல்மட்டத்தில் காணப்படும் பகுதிக்கும் இம்முறை ஏற்றதாகும்.
  • குழியின் அளவு 0.5 - 1 மீட்டர் அகலம், 1 - 1.5 மீட்டர் ஆழம், மற்றும் 10-20 மீட்டர் நீளம் உடையதாக அமைக்கலாம். சேமிப்பு நீரின் அளவைப் பொறுத்து குழியின் அளவு மாறுபடும்.
  • நீர் சேமிப்புக் குழிகளில், பெரிய கற்கள், ஜல்லிகள் மற்றும் மணல் ஆகிய மூன்றும் தட்டுகளாக போடப்பட வேண்டும். கற்கள் அடிப்பகுதியிலும், ஜல்லிகள் அதற்கு மேலும், மணல் மேல்மட்டத்திலும் போடப்படுகின்றன. மழை நீரோடு வரும் வண்டல்மண் மேற்பரப்பில் சேமிக்கப்பட்டு, அவ்வப்போது எடுத்து விடும் வகையில், இம்மூன்று அடுக்குகள் போடப்படுகின்றன.
  • நீர் சேமிப்பு குழிக்கு கட்டிடத்தின் கூரையிலிருந்து வரும் மழைநீர், சல்லடை போன்ற அமைப்பு வழியாக சென்றால் கழிவுகள், இலைகள், தழைகள் போன்றவை சேமிப்பு குழிக்கு செல்லாமல் தடுக்கப்படும். சிறிய வண்டல்மண் குழிக்கு செல்லா வண்ணம், மேற்கூறப்பட்ட மூன்று அடுக்கு அமைப்பும் அமைத்துக் கொள்ளலாம்.
  • முதல் மழை பெய்யும் போது சேமிப்புக் குழியில் நேரடியாக நீர் விழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • சேமிப்புக் குழியின் மேற்பரப்பு அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டால், நீர் சேமிப்பு முழுமையாக நடைபெறும்.


iii. குழாய் கிணறுகள்
  • மேல்மட்ட நிலத்தடிநீர் விரைவில் உளர்ந்து விடுவதால், கீழ்மட்டத்தில் உள்ள நிலத்தடிநீரை உறிஞ்சும் குழாய் கிணறுகளில், மழைநீர் சேமிப்பு முறை பயன்படுத்தி, கீழ்மட்ட நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்கலாம்.
  • 10 செ.மீ விட்டமுடைய PVC குழாய்கள் மழைநீரை சேமிப்பதற்காக கூரைகளில் இணைக்கப்படவேண்டும். முதல் மழைநீர் குழாய் வழியாக வெளியேற்றப்படும். குழாயின் அடிபாகத்தை மூடிவிட்டு, 'T' வடிவ பைப் மூலம், குழாயின் வழியாக வரும் மழைநீரை PVC வடிகட்டிக்கு திருப்பிவிடவும். குழாய் கிணறுக்கு மழைநீர் சென்றடைவதற்கு முன் வடிகட்டப்படுகிறது. வடிகட்டியானது 1-1.2 மீட்டர் நீளமுடைய, PVC குழாய் கொண்டு செய்யப்படுகிறது. அதன் விட்டமானது, மேற்கூரையின் பரப்பை பொறுத்து மாறும். கூரை பரப்பு 150 சதுர மீட்டருக்கு குறைவாக இருந்தால், விட்டம் 15 செ.மீட்டர் ஆகவும், 150 சதுர மீட்டருக்கு மேல் கூரைப்பரப்பு இருந்தால் 20 செ.மீ  விட்டமுடைய வடிகட்டியை பயன்படுத்த வேண்டும். வடிகட்டியின் இரண்டு பக்கங்களும் 6.25 செ.மீ அளவு சிறிய குழாய் காணப்பட வேண்டும். PVC வடிகட்டி மூன்று பாகங்களாக பிரிக்கப்படுகிறது. இதனால் கழிவுகள் எதுவும் ஒன்றோடொன்று கலக்காமல் இருக்கும். வடிகட்டியின் முதல் பகுதியில் ஜல்லிக் கற்கள் (6-10 மில்லி மீட்டர்) நடுப்பகுதியில் கூழாங்கற்கள் (12-20 மில்லி மீட்டர்) மற்றும் கடைசி பகுதியில் பெரிய கூழாங்கற்கள் (20-40 மில்லி மீட்டர்) போடப்பட்டிருக்கும்
  • கூரை பரப்பு பெரியதாக இருக்கும் பட்சத்தில், வடிகட்டும் குழி ஒன்று போடலாம். கூரையிலிருந்து மழைநீர் நேரடியாக தரைமட்டத்தில் உள்ள சேமிப்பு குழிக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. சேமிப்பு குழி குழாய் மூலம் வடிகட்டியுடன் இணைக்கப்பட்டிருக்கும். வடிகட்டும் குழியின் அளவு கூரையிலிருந்து கிடைக்கும் மழைநீரின் அளவைப் பொறுத்து மாறுபடும். வடிகட்டும் குழியானது, அடிப்பகுதியில் பெரிய கற்கள், நடுப்பகுதியில் ஜல்லிக்கற்கள் மற்றும் மேற்பகுதியில் மணற்கொண்டும் அடுக்கடுக்காக மூடப்பட்டிருக்கும். குழி இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கும். முதல் பாகத்தில் வடிகட்டும் பொருட்களும், அடுத்தபகுதி காலியாக, வடிகட்டப்பட்ட உபரி நீர் சேமிக்க பயன்படுகிறது. சேமிப்பு குழியின் கீழ்பகுதியிலிருந்து கிணறோடு இணைக்கும் குழாய் பொறுத்தப்படுகிறது. இதன் மூலம், வடிகட்டப்பட்ட மழைநீரானது குழாய் கிணற்றில் முறையாக சேர்க்கப்படுகிறது.
harvesting2.png






iv. குழிகளுடன் கூடிய ரீசார்ஜ் கிணறு

ar4.jpg
மேல்  மண்ணிற்குள் தண்ணீர் ஊடுருவ முடியாத நிலையில்,  கூரையிலிருந்து வழிந்தோடும் மழைநீர் அதிகளவு காணப்படும் பகுதிகளில், குழிகளுடன் கூடிய ரீசார்ஜ் கிணறு பயன்படும். வடிகட்டிய மழைநீரை குழிகளில் சேமித்து, பின்பு, சேமிக்கப்பட்ட நீரானது நிலத்தடிக்கு செல்லும் வகையில் சிறப்பு நீர் சேமிப்பு கிணறுகள் கட்டப்படுகின்றன.
இந்த அமைப்பானது, நீர் ஊடுருவிச் செல்லும் மட்டம்,  தரைமட்டத்திலிருந்து 3 மீட்டருக்குள்ளாக உள்ள பகுதிக்கு ஏற்றது.


சேமிப்பு கிணறு, நிலத்தடி நீர்மட்டத்தின் கீழ் 3-5 மீட்டர் ஆழத்திற்கு எடுக்கப்படுகிறது.
1.5-3 மீட்டர் அகலம், 10-30 மீட்டர் நீளம் உடைய குழி, சேமிப்பு கிணற்றை நடுவாகக் கொண்டு கட்டப்படுகிறது. இது கிடைக்கும் நீரைப் பொருத்து அமைக்கப்படுகிறது.
கிடைக்கும் மழை நீரின் அளவு, பகுதியின் பாறைகளின்  அமைப்பு போன்றவற்றை பொறுத்து சேமிப்பு குழாய்களின் எண்ணிக்கை அமையும்.
குழியில், பெரியகற்கள், ஜல்லிகள், மணல் ஆகியவை அடுக்கடுக்காக, மழைநீரை வடிகட்டும் நோக்கோடு போடப்படுகிறது.


நிலத்தடி நீர்மட்டம் அதிக ஆழத்தில், அதாவது 20 மீட்டருக்கு மேல் அமையுமானால், 2-8 மீட்டர் விட்டமுள்ள, 3-5 மீட்டர் ஆழமுள்ள அமைப்பு கட்டப்படுகிறது. வழிந்தோடும் நீரையும் இதில் கணக்கெடுத்துக் கொள்ளகிறோம். இந்த அமைப்பின் உள்ளே, 100-300 மி.மீட்டர் விட்டமுள்ள  ரீசார்ஜ் கிணறு கட்டப்பட்டு, ஆழமான நிலத்தடி நீர் பகுதிகளில், தண்ணீர் சேமிக்கப்படுகிறது. இந்த அமைப்பின் அடிப்பகுதியில் ஒரு வடிகட்டும் அமைப்பும் உண்டு. இது சேமிப்புக் கிணற்றை கழிவுகள் மூடிவிடாமல் பாதுகாக்கிறது.குளம் குட்டைகள் விவசாயி நிலங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து அதில் நீரை சேமித்தால் நிலத்தடிநீர்மட்டம் உயரம். அதேபோல் நீர் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளிலும் நீரை சுத்தம் செய்து சேமிக்கலாம்



தொகுப்பு : அ .தையுபா அஜ்மல் .