Tuesday, 12 May 2015

நாடே எதிர்ப்பார்த்த ஒரு தீர்ப்பு !! ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு...

பெண் என்று பாவப்படும் நண்பர்களே அவர் முதல்வராக 
இருந்த காலத்தில் செய்த குற்றம் அது. முதல்வர் என்பவர் மக்களைக் காப்பாற்றுபவர்.தவறே செய்யக்கூடாது.
நீதி என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கனும். இங்கு நிதி நீதியை கொன்று புதைத்துவிட்டது.

 நாடே எதிர்ப்பார்த்த ஒரு தீர்ப்பு இன்று நொடியில் வழங்கப்பட்டுள்ளது. ஒரு புறம், அதிமுகவினர் வெடி வெடித்துக் கொண்டாட மறுபுறம், அரசியல் நோக்கர்களும், எதிர்க்கட்சிகளும், ஆழ்ந்த அமைதியில் ஆழ்ந்துள்ளன.
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு, இந்தியாவில் மற்ற எல்லா சொத்துக் குவிப்பு வழக்குகளுக்கும் ஒரு உதாரணம்.   இது போன்ற ஒரு வழக்கே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இந்த வழக்கு அனைத்து வழக்குகளுக்கும் உதாரணமாக இருந்தது.   ஏனென்றால், நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பின்படி,
சோதனைக்காலம் தொடங்குகையில்
ஜெயலலிதாவின் சொத்து (30.04.1996)             55,02,48,215.00
சோதனைக் காலத்தில் ஜெயலலிதாவின்
செலவு                                         8,49,06,833,00
மொத்தம்                                       63,51,55,048.00
சோதனைக் காலத்தில் ஜெயலலிதாவின்
வருமானம்                                      9,91,05,094.00
வருமானத்துக்கு அதிகமான சொத்து             53,60,49,954.00
வருமானத்துக்கு அதிமான சொத்தின் சதவிகிதம்.
53,60,49,954 X 100
9,91,05,094
ஜெயலலிதா சேர்த்துள்ள வருமானத்துக்கு அதிகமான சொத்தின் சதவிகிதம் 540.89.   இதுதான் எல்லா ஆதாரங்களையும், ஆவணங்களையும் அலசி ஆராயந்த பிறகு, நீதிபதி மைக்கேல் குன்ஹா அளித்த தீர்ப்பு.
நியாயமான தீர்ப்பு வழங்கியதற்கு குன்ஹாவுக்கு அதிமுக அடிமைகள் அளித்த பரிசு
நியாயமான தீர்ப்பு வழங்கியதற்கு குன்ஹாவுக்கு அதிமுக அடிமைகள் அளித்த பரிசு
இன்று ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகளையும் விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி ஜெயலலிதாவின் வருமானத்துக்கு அதிகமான சொத்து என்று குறிப்பிடுவது எவ்வளவு தெரியுமா ?  8.12%.
540.89 சதவிகிதம் எப்படி வெறும் 8.12 சதவிகிதம் ஆனது ?   அங்கேதான் நீதிமான் குமாரசாமி நிற்கிறார்.     நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு மொத்தம் 919 பக்கங்கள்.    இவ்வளவு விரிவாக தீர்ப்பும் விளக்கமும் அளித்திருக்கிறார் என்று நினைத்து விடாதீர்கள்.
முதல் பகுதி, சாட்சிகள் சொன்னது, அவர்கள் குறுக்கு விசாரணையில் சொன்னது, சென்னையில் பிறழ் சாட்சிகளாய் மாறி சொன்னது, பிறகு மீண்டும் மறு விசாரணையில் சொன்னது ஆகியவற்றை வைத்து 500 பக்கங்களை நிரப்பி விட்டார்.   நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை 300 பக்கங்களில் நிரப்பி விட்டார்.   உச்சநீதிமன்றம், பேராசிரியர் அன்பழகன், மற்றும் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள எழுத்துபூர்வமான வாதங்களையும், சுப்ரமணிய சுவாமி வாதங்களையும் வைத்து, 90 பக்கங்களை நிரப்பி விட்டார்.   மீதம் உள்ள 30 பக்கங்கள்தான் தீர்ப்பு.  அதிலும் 28 பக்கங்களுக்கு, ஜெயலலிதா ஊழல் செய்து சொத்து சேர்க்கவேயில்லை என்பதற்கு ஏற்றார்ப்போல, 1947ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டியுள்ளார்.    இதற்காகவா இந்த மங்குணிப்பாண்டியனுக்கு இத்தனை காலம் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.  ஆனால் நீதியரசர் ஆயிற்றே…. ?    அப்படியெல்லாம் கேட்க முடியுமா ?
சரி.  இவர் தீர்ப்பில் சில முக்கிய பகுதிகளை பார்த்து விடுவோம்.   இந்த வழக்கில் ஜெயலலிதாவின் சொத்துக்களின் மதிப்பை குறைத்து, அவருக்கு வருமானம் அதிகமாக இருந்தது என்பதற்காக என்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்திருக்கிறார்.
பொதுப்பணித்துறை ஒரு கட்டிடத்தின் மதிப்பை உறுதியாக கூற முடியாதாம்.  ஏனென்றால், கட்டிடம் கட்டும் கான்ட்ராக்டர்கள் சிலர், சொந்தமாக செங்கற்சூளை வைத்திருப்பார்களாம்.  செங்கல், மணல், ஜல்லி போன்றவற்றை அவர்கள் சொந்த வாகனத்தில் எடுத்து வந்தால், மிக மிக மலிவாக வீடு கட்டலாமாம்.   (குமாரசாமி நீதிபதியா கொத்தனாரா ?)  ஆகையால் பொதுப்பணித்துறையின் கணக்கை எடுத்துக் கொள்ள முடியாதாம்.
பொதுப்பணித்துறையின் பொறியாளர்கள் அனைவரும், அரசுக் கட்டிடங்களை கட்டியும், மேற்பார்வை செய்தும் பழக்கப்பட்டவர்களாம்.  அவர்களுக்கு தனியார் கட்டிடங்களை ஆய்வு செய்ய அனுபவம் போதாதாம்.  மேலும், கட்டிடங்களை ஆய்வு செய்கையில், குறிப்பு எடுத்திருப்பார்கள் அல்லவா -?  அந்த குறிப்புகளை ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல் வெறும் அறிக்கைகளை மட்டும் சமர்ப்பித்துள்ளார்களாம்.  அதனால் அந்த அறிக்கைகள் செல்லாதாம். மேலும் ஆய்வு நடக்கையில் ஏராளமான லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இருந்ததனால், பொறியாளர்கள் சரியான ஆய்வு செய்திருக்க வாய்ப்பு இல்லையாம்.
150508161410_tn_pwd_chennai
அதே போல 94ல் கட்டிய கட்டிடத்தை 96ம் ஆண்டு ஆய்வு செய்கையில், அதில் உள்ள வயர்கள், சுவிட்சுகள் ஆகியவை தேய்மானம் ஆகி பழையதாகி இருக்குமாம்.   அதனால், அதற்கு உண்டான கழிவை லஞ்ச ஒழிப்புத் துறை கழிக்கத் தவறி விட்டதாம்.    சோதனைக்காலத்தில் கட்டிடம் கட்டுகையில் ஏற்படும் செலவைத்தானே லஞ்ச ஒழிப்புத் துறை கணக்கிடும்.   தேய்மானத்துக்கு கணக்கு போடுவதற்கு லஞ்ச ஒழிப்புத் துறை என்ன ஜெயலலிதாவின் வீட்டை விலைக்கா வாங்கப் போகிறது ?
நகை மதிப்பீட்டாளர்களின் அறிக்கை குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடக்கையில், அந்த நகைகளை அவர்கள் பார்க்கவில்லையாம்.   அதனால், பார்க்காத நகைகளுக்கு அவர்கள் அளித்த மதிப்பீடு செல்லாதாம்.
அதிமுகவில், எம்ஜிஆர் இளைஞர் பேரவை, ஜெயலலிதா பேரவை, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, மகளிர் அணி உள்ளிட்ட 16 பிரிவுகள் உள்ளதாம்.   இவர்கள் அத்தனை பேரும் நமது எம்ஜிஆர் வாங்கியதால், நமது எம்ஜிஆர் சந்தா திட்டம் முழுக்க முழுக்க உண்மையான திட்டமாம்.    நமது எம்ஜிஆர் இதழுக்கு 1991 முதலே கணிசமான வருமானம் வந்ததாம்.
அதே போல மகா சுப்புலட்சுமி என்ற சுதாகரனுக்கு சொந்தமான திருமண மண்டபத்துக்கு வாடகைக்கு விட்ட வழியில் ஏராளமான வருமானம் வந்தது என்று கூறுகிறார்.  ஆனால் இதே குமாரசாமிதான் அவரது தீர்ப்பின் பக்கம் 852ல், சுப்புலட்சுமி திருமண மண்டபத்துக்காக, 17 லட்சத்து, 85 ஆயிரத்து 274 ரூபாய் கடன், இந்தியன் வங்கியில் இருந்து வாங்கியதாக கூறுகிறார்.   ஏகப்பட்ட வருமானம் வரும் கல்யாண மண்டபத்துக்கு எதற்காக கடன் வாங்க வேண்டும் ?
அதன் பிறகு குமாரசாமி கூறுவதையெல்லாம் கேட்டீர்கள் என்றால் தலை சுற்றும்.
அரசியல் ஆதாயத்துக்காகவும், அரசியல் கணக்குகளை தீர்த்துக் கொள்வதற்கும், சட்டத்தின் போர்வையில் வழக்கு தொடுப்பதை அனுமதிக்கக் கூடாது.    அரசியல் அமைப்புச் சட்டம், மற்றும் இதர சட்டங்களின் அடிப்படையில் அன்றி, வேறு எந்த வகையிலும், ஒரு குற்றவாளியின் உரிமை பறிக்கப்படக் கூடாது.  ஒரு நேர்மையான புலனாய்வு, ஒரு குற்றவாளி எந்த வகையிலும் விபரம் பற்றித் தெரியாமல் இருக்க அனுமதிக்கக் கூடாது.  வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்து பற்றி, குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பு என்ன என்பதை புலனாய்வு அதிகாரி கேட்டு அறிய வேண்டும்.   இதையெல்லாம் வக்கணையாக பேசும் குமாரசாமி, இந்த வழக்கில் புகார்தாரராக இருந்த சுப்ரமணிய சுவாமியே பின்னாளில் ஜெயலலிதாவோடு கூட்டு சேர்ந்தார் என்பதை தனது தீர்ப்பிலேயே குறிப்பிட்டிருக்கிறாரே ? அப்படியே அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடர்ந்தால்தான் என்ன ?  ஒரு ஜனநாயகத்தில் அரசியல் காரணங்களுக்காகவோ, அல்லது வேறு எந்த காரணத்துக்காகவோ வழக்கு தொடர்ந்தால் அதில் ஆதாரம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டியதுதானே ஒரு நீதிமன்றத்தின் வேலை….?
இதை விட ஒரு பெரிய நகைச்சுவையைப் பாருங்கள்.  சாதாரணமாக ஒரு விபரமறிந்த ஒருவர், பொதுப் பணித் துறையின் விலையை அடிப்படையாக எடுத்துக் கொள்ள மாட்டார்களாம்.  ஏனென்றால், பொதுப்பணித் துறையின் விலைகள், காண்ட்ராக்டர் செய்யும் தாமதம், கடன் வாங்கிய தொகை, இதர செலவுகள் எல்லாவற்றையும் சேர்த்து கணக்கிடப்படும்.  ஆகையால், பொதுப்பணித் துறையின் விலைகள், சந்தை விலையை விட அதிகமாக இருக்கும்.   இந்த வழக்கில், பொதுப்பணித் துறையின் விலைகள்தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன.  அதனால் பொதுப்பணித் துறையின் மதிப்பீடுகளை கணக்கில் கொள்ளக் கூடாது என்று சூசகமாக சொல்கிறார் குமாரசாமி.   பொதுப்பணித் துறையின் விலைகள், எப்போதுமே சந்தை விலையை விட குறைவானதாகவே இருக்கும் என்பது ஊரறிந்த உண்மை. ஆனால், இந்த மங்குணிப் பாண்டியர் புதிதாக ஒரு கண்டுபிடிப்பை செய்திருக்கிறார்.
ஒரு அரசு ஊழியர் செய்யும், பணம் அல்லது சொத்து தொடர்பான பரிவர்த்தனைகள் அனைத்தும், அவர் பணியில் சேர்ந்த நாள் முதலாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.    உரிய அதிகாரிக்கு தெரியப் படுத்தாமல் அவர் ஒரு சொத்தை வாங்கினார் என்றால், அவர் சிக்கலை சந்திக்க நேரிடும்.
ஆனால், ஒரு அமைச்சருக்கோ, ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கோ, சட்டமன்ற உறுப்பினருக்கோ, இது போன்ற கட்டுப்பாடுகள் இல்லை என்பது முரணான விஷயம்.   சிலர் தாமாக முன்வந்து, இது தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.  உதாரணத்துக்கு தற்போதைய பிரதமர் தனது அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்கள் மற்றும், பாராளுமன்ற உறுப்பினர்களை தங்கள் மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது போல.   ஆனால், இது போன்ற முயற்சிகள் கட்டாயம் இல்லை என்பதனால் பெரிய அளவில் பயன் தருவதில்லை.
அரசியலில் உள்ளவர்களில் பலர் தொழில் அதிபர்களாகவும், முக்கிய தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களாகவும் இருப்பதால், ஏற்கனவே அவர்களுக்கு பல்வேறு வகைகளில் பெரிய வருமானம் இருப்பதால் இது போன்ற சொத்துக் கணக்குகளை ஆண்டுதோறும் தாக்கல் செய்வது அவர்களுக்கு சிரமம் அளிக்கக் கூடும், அதில் நடைமுறைச் சிக்கல்களும் இருக்கக் கூடும்.
p19
எவ்வளவு அக்கறை பார்த்தீர்களா ?   அரசியலில் உள்ளவர்கள் பல்வேறு முக்கிய தொழில்களில் ஈடுபட்டு வருவார்களாம்.  அதனால், சொத்துக் கணக்கை தாக்கல் செய்வது கடினமாம்.    பொது ஊழியர் என்றால், அது எம்எல்ஏ மற்றும் எம்.பி உட்பட அனைவருக்கும் பொருந்தும் என்பது, பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே உச்ச நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்திருக்கிறது.  ஆனால், இந்த குமாரசாமி, ஒரு சாதாரண அரசு ஊழியரையும் ஜெயலலிதாவையும் ஒப்பிடுகிறார்.  அரசு ஊழியர்களுக்கு நடத்தை விதிகள் உள்ளன.  பொது ஊழியருக்கு இல்லை என்று ஜெயலலிதாவுக்காக தவில் வாசிக்கிறார்.
அடுத்ததாக குமாரசாமி சொல்வது ஒட்டுமொத்த கட்டுமானத் தொகையில் விசாரணை நீதிபதி இருபது சதவிகிதத்தை குறைத்திருக்கிறார்.  ஆனால் இது போதாது. லஞ்ச ஒழிப்புத் துறை கட்டுமான செலவாக மொத்தம் 27 கோடி என்று குறிப்பிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை, பொதுப்பணித் துறையின் மதிப்பீடுகளின்படி, ஒரு சதுர மீட்டர் கட்டுவதற்கு ரூபாய் 31,580.19 என்று மதிப்பிட்டுள்ளது.  ஆனால் ஒரு சதுர மீட்டருக்கு ரூபாய் 28,000 தான் ஆகியிருக்க முடியும். இந்த அடிப்படையில் கணக்கிட்டால், மொத்த கட்டுமான செலவு 5.10 கோடிதான் ஆகிறது.   எப்படி துல்லியமாக சென்டி மீட்டரில் கணக்கு போடுகிறார் பார்த்தீர்களா ?   பொறியியல், மருத்துவம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் நீதிபதிகள் கருத்தே கூறக்கூடாது.    அந்த அந்த துறையில் நிபுணர்களாக இருப்பவர்களின் கருத்தே இறுதியானது என்று பல தீர்ப்புகள் உள்ளன.   ஆனால் இந்த ஆள் என்னவென்றால், கொத்தனார் போலவே கணக்கு போட்டுக் கொண்டுள்ளார்.
அடுத்த ஐட்டம்தான் இன்னும் சிறப்பு.  ஒரு நாற்காலிக்கு நான்கரை சதுர அடி இடம் வேண்டும்.   விஐபி நாற்காலி என்றால் ஆறு சதுர அடி வேண்டும்.   விஐபி நாற்காலிகளுக்கு மட்டும் 15 ஆயிரம் சதுர அடி வேண்டும்.   சாதாரண நாற்காலிகளுக்கு 4500 சதுர அடி வேண்டும்.   ஆனால் பந்தல் அமைப்பது தொடர்பாக பேசிய சாட்சி, பந்தல் எத்தனை நீளம், எத்தனை அகலம், எத்தனை நீள கூரை, எத்தனை அடி விரிப்பு பயன்படுத்தப்பட்டது என்று விரிவாக எடுத்துரைக்கவில்லை என்று வளர்ப்பு மகன் திருமணம் குறித்து ஆராய்ச்சி செய்கிறார் குமாரசாமி.  இன்னும் ஏன், திருமண வீடியோவை காண்பிக்கவில்லை என்று குமாரசாமி கேட்காதது மட்டுமே பாக்கி.
திருமண செலவுகள் குறித்து சாட்சியம் அளித்ததில் முக்கியமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தான் இலவசமாக இசைக் கச்சேரி நடத்தித் தந்துள்ளதாக கூறியுள்ளார்.   மொத்தம் 12,500 நாற்காலிகள் போடப்பட்டதாக சாட்சிகள் கூறியுள்ளனர்.  ஆனால் அந்த 12,500 நாற்காலிகளும் நிரம்பினவா என்பது குறித்து, சாட்சியம் இல்லை.   அலங்காரம் செய்ய வைக்கப்பட்ட பூந்தொட்டிகளும், கொரியன் புல்லும் என்ன விலை என்பது தெளிவாக கூறப்பட வில்லை. குமாரசாமி கேட்காமல் விட்டது என்ன தெரியுமா ?  திருமணத்தில் வைக்கப்பட்ட பூந்தொட்டியை ஏன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை.  அந்த பூந்தொட்டிக்கு தண்ணீர் ஊற்றியவரை ஏன் சாட்சியாக சேர்க்கவில்லை என்பது மட்டுமே.
மண்டபத்துக்கான கிச்சன், மற்றும் சமன்படுத்த பயன்படுத்தப்பட்ட ஜேசிபி பதிவு எண்கள் குறிப்பிடப்படவில்லை. அந்த மைதானத்துக்கு அருகில் ஒரு பள்ளி இருந்தது.  அந்த பள்ளியில் உள்ளவர்களிடம், அந்த மைதானத்தில் ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பது குறித்து விசாரிக்கவில்லை. பள்ளியில் படிக்கும் மாணவர்களும் ஆசிரியர்களும், கல்வியை கவனிப்பார்களா, அல்லது பக்கத்து கட்டிடத்தில் ஜேசிபி இயந்திரம் வந்ததா இல்லையா என்பதை கவனிப்பார்களா ? இந்த குமாரசாமியின் நீதிமன்ற அறை 14.  பக்கத்து நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பது குமாராசாமிக்கு தெரியுமா ?      இதையெல்லாம் ஒரு கேள்வியாக எழுப்பியிருக்கிறார்.
வழக்கமாக திருமணத்துக்கு பெண் வீட்டார்தான் செலவழிப்பார்கள்.   இது குறித்து பெண்ணின் அண்ணன் ராம்குமார் ஒரு வங்கிக் கணக்கி திறந்து அதன் மூலமாக 92 லட்ச ரூபாய் செலவழித்ததாக கூறியுள்ளார்.  இதற்காக ஒரு ஜெராக்ஸ் நகலை சமர்ப்பித்துள்ளார்.      மணப்பெண், நடிகர் சிவாஜி கணேசனின் பேத்தி.   அவர் தந்தையின் பெயர் நாராயணசாமி.  தன் மகளின் திருமணச் செலவு குறித்து, நாராயணசாமிதான் பேச வேண்டும்.  ஆனால், அவரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரிக்கவில்லை. இந்த திருமணத்துக்கு அதிமுக கட்சியினர் பலர் செலவழித்திருப்பதையெல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால், இந்த திருமணத்துக்கு ஜெயலலிதா ரூபாய் 28,68,000/-  மட்டுமே செலவழித்திருக்கிறார் என்று கூறுகிறார் குமாராசாமி.     ஜெராக்ஸ் நகலை ஆவணமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று பல்வேறு தீர்ப்புகள் உள்ளன.   மூன்று முறை, லஞ்ச ஒழிப்புத் துறை முன்பு ஆஜராகியும், பெண்ணின் அண்ணன் ராம்குமார், அசல் பாஸ்புக்கை சமர்ப்பிக்கவில்லை, மேலும் அதில் உள்ள 94 லட்ச ரூபாயை யார் முதலீடு செய்தது என்பதையும் தெரிவிக்கவில்லை என்பது குன்ஹாவின் தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.  ஆனால், மாவட்ட நீதிபதியாக இருந்து உயர்நீதிமன்றம் வந்துள்ள இந்த குமாரசாமிக்கு, ஜெராக்ஸ் ஆவணத்தை, சான்றாவணமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற அடிப்படைக் கூட தெரியவில்லை.
அடுத்ததாக குமாரசாமி சொல்வதுதான் வேடிக்கை. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்கத் தவறியது, கர்நாடக அரசின் தவறு.    இந்த மேல் முறையீடு நடக்கிறது என்பதை கர்நாடக அரசு நன்கு அறிந்தும், இது குறித்து ஊடகங்களில் செய்திகள் பல வந்திருந்தும், இவ்வழக்குக்காக அரசு வழக்கறிஞரை நியமிக்காமல் விட்டது, கர்நாடக அரசின் தவறே.  ஆகையால், இந்த காரணத்தால் இந்த மேல் முறையீட்டை நிராகரிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாது.    கர்நாடக உயர்நீதிமன்றத்தில்தான் குமாரசாமி பணியாற்றுகிறார். அரசு தலைமை வழக்கறிஞரை அழைத்து, உடனடியாக இந்த வழக்கில் ஆஜராகுங்கள் என்று உத்தரவிட இவருக்கு எத்தனை நேரம் பிடித்திருக்கும் ?    நான்கு மாதங்களாக, மொக்கைத்தனமான கேள்விகளை கேட்டுக்  கொண்டு வழக்கை நடத்தியவருக்கு, அரசு வழக்கறிஞரை அழைக்கத் தெரியாமல் போய் விட்டதா ?
இதற்கு அடுத்தபடி ஒரு வக்காலத்து வாங்குகிறார் பாருங்கள்.  அதுதான் இருப்பதிலேயே சிறப்பு. பல்வேறு சொத்துக்களை பதிவு செய்வதற்காக பத்திரப் பதிவாளர் 15 முதல் 20 முறை வரை ஜெயலலிதாவின் வீட்டுக்கு வருகை தந்திருக்கிறார். பத்திரம் பதிவு செய்வதற்காக சொத்து வாங்குபவர்கள் வீட்டுக்கு பத்திரப் பதிவாளர் செல்வது சட்டவிரோதம் அல்ல.
ஜெயலலிதாவுக்கு பிறந்த நாளுக்கு வந்த பரிசுகளின் தொகை மட்டும் 1.5 கோடி.    இதையும் லஞ்ச ஒழிப்புத் துறை கணக்கில் சேர்க்கத் தவறி விட்டது.   ஒரு பொது ஊழியர் தான் பதவியில் இருக்கும் காலத்தில் வரும் பரிசுப் பொருட்கள், நன்கொடைகள் அனைத்தையும் அரசு கஜானாவில்தான் சேர்க்க வேண்டும் என்பது விதி.   இதை குமாரசாமி அறியாதது அல்ல.    ஆனால், இந்த பரிசுப்பொருட்களையும், வெளிநாட்டில் இருந்து வந்த 77 லட்சம் பெறுமானமுள்ள அமெரிக்க டாலர்களையும், ஜெயலலிதாவின் வருமானமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார் என்றால், இந்த நபர் எந்த அளவுக்கு விலை போயிருப்பார் என்று எண்ணிப் பாருங்கள்.      மேலும், இந்த அமெரிக்க டாலர்களை வாங்கியதற்காக சிபிஐ தொடர்ந்த வழக்கு, இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.  இணைப்பு
குமாரசாமி இழைத்த மிகப் பெரிய தவறு, நமது எம்ஜிஆர் நாளிதழ் சந்தா திட்டத்துக்காக செலுத்திய பணம் மட்டுமே 13,89 கோடி.  இதை வருமானவரித் துறை ஏற்றுக் கொண்டுள்ளது.   ஆனால் இதை லஞ்ச ஒழிப்புத் துறை ஏற்றுக் கொள்ள தவறியுள்ளது என்று கூறியதே. நமது எம்ஜிஆர் சந்தா என்ற திட்டமே, இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு உருவான திட்டம் என்பது, குன்ஹாவின் தீர்ப்பில் ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.  ஆனால், நமது எம்ஜிஆர் திட்டத்துக்காக அப்படி வக்காலத்து வாங்குவதோடு, அந்த வருமானத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்.     நமது எம்ஜிஆர் பத்திரிக்கையை கன்னடத்தில் மொழிபெயர்த்து படித்தால், அதே நீதிமன்றத்தில் குமாராசாமி தூக்கு மாட்டிக் கொள்வார்.    அந்த பத்திரிக்கையைப் பற்றி விபரம் தெரியாமல், இப்படி வக்காலத்து வாங்குகிறார்.
aaa
குமாரசாமி இந்தத் தீர்ப்பை இயல்பாக வழங்கவில்லை.  வேறு பின்னணியில் வழங்கியிருக்கிறார் என்பதை நிரூபிக்கும் பகுதி இதுதான்.
“இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் சட்டவிரோமாக சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டவை என்று கூற முடியாது.   இந்த சொத்துக்கள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து கடன் வாங்கி வாங்கப்பட்ட சொத்துக்கள்.   இந்த சொத்துக்களை லஞ்ச ஒழிப்புத் துறை இணைத்ததே தவறு.”
எத்தனை அக்கறை பார்த்தீர்களா ?
அடுத்ததாக குமாரசாமி சொல்வது, கிட்டத்தட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நேரடியாக மீறுவதற்கு ஒப்பாகும்.
“சென்னையில் இந்த வழக்கு நடந்தபோது, பிறழ் சாட்சிகளாக மாறியவர்களை, பெங்களுருவுக்கு வழக்கு மாற்றப்பட்ட பிறகு மீண்டும் விசாரித்துள்ளார்கள்.   அப்படி விசாரிக்கப்பட்டவர்களை, பிறழ் சாட்சிகளாக கருதாமல், சாதாரணமாக விசாரித்ததே தவறு என்று குற்றவாளிகள் தரப்பு கூறியது ஏற்றுக் கொள்ளத்தக்கது.”
இந்த வழக்கை தமிழகத்தில் இருந்து பெங்களுருக்கு மாற்றி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், எந்த சாட்சிகளை விசாரிக்கலாம், எப்படி விசாரிக்கலாம், யாரை மீண்டும் அழைக்கலாம் என்று தெளிவான உத்தரவை பிறப்பித்திருக்கிறது.   ஆனால், குமாரசாமிக்கு பிறழ் சாட்சியாக கருதாமல் சாட்சிகளை விசாரித்தது, ஏற்புடையதாக இல்லையாம்.  உச்சநீதிமன்றமே உத்தரவு பிறப்பித்த பிறகு, இது குறித்து கேள்வி கேட்க     இவர் யார் ?
குமாரசாமியின் தீர்ப்பில் இந்தப் பகுதிதான் தீவிரமாக ஆராய வேண்டிய ஒரு பகுதி.
“ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் இளவரசி மற்றும் அவர்கள் நடத்திய நிறுவனங்கள், கடனாக 24 கோடி வாங்கியிருக்கின்றன.  இந்த தொகையை அவர்களின் வருமானமாக சேர்த்திருக்க வேண்டும்.  வங்கிகளில் வாங்கிய கடன் தவிர, குற்றவாளிகள் தனியாரிடம் இருந்தும் 7 கோடிக்கு மேல் கடன் வாங்கியிருக்கிறார்கள்.”
total loan
குமாரசாமி குறிப்பிடும் முதல் கடன், இந்தியன் வங்கியிலிருந்து ஜெயா பப்ளிகேஷன்ஸ் சார்பாக வாங்கிய ஒன்றரை கோடி.
ஒரு அரசு ஊழியர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு போடுகிறோம்.   அவர் மீதான குற்றகாலம் 1 ஜனவரி 2001 முதல் 31 டிசம்பர் 2001 என்று வைத்துக் கொள்வோம்.    இந்த காலத்தில் அவர் 2 லட்ச ரூபாய் கடன் வாங்குகிறார்.      அந்த கடனை திருப்பியும் செலுத்துகிறார்.    வட்டியோடு சேர்த்து 60 ஆயிரம் கட்டியிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.    இறுதியில் கணக்கிடுகையில் குற்ற காலத்தில் அவரது வருமானம் என்ன ?   ஒரு லட்சத்து நாற்பதாயிரம்தானே ?    60 ஆயிரத்தை திருப்பிச் செலுத்தியிருக்கிறார் அல்லவா ?
1260
நீதி நாயகர் குன்ஹாவின் தீர்ப்பில், ஒன்றரை கோடி கடன் தொடர்பான பகுதி
ஆனால் குமாரசாமி, ஜெயா பப்ளிகேசன்ஸ் வாங்கிய ஒன்றரை கோடி கடனையும் அப்படியே ஜெயலலிதாவின் வருமானமாக சேர்க்கிறார்.  குன்ஹாவின் தீர்ப்பில், இதே கடன் எப்படி விவரிக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.
ஒன்றரை கோடி கடன் வாங்கியது உண்மை.   ஆனால், அந்தக் கடன் முழுமையும், 25 ஜுன் 1994ல் மூடப்படுகிறது.  அதாவது முழுக் கடனும் அடைக்கப்படுகிறது.    ஆகையால், கடனுக்காக வட்டியாக செலுத்திய 50,93,21 என்ற தொகையை மட்டும் செலவில் சேர்க்கிறார் குன்ஹா.
குற்ற காலத்தில் முழுமையாக திருப்பிச் செலுத்தப்பட்ட ஒன்றரை கோடி எப்படி வருமானமாகும் ?
இந்தக் கடனில் எட்டாவது வரிசையில், குற்றவாளிகளின் வருமானமாக ஒரு கோடியே 50 லட்சம் என்று கூறுகிறார் குமாரசாமி.  ஆனால், குன்ஹா தனது தீர்ப்பில், ஒன்றரை கோடியில், திருப்பி செலுத்திய தொகை போக மீதம் உள்ள 83 லட்சம் மட்டுமே வருமானம் என்று குறிப்பிடுகிறார்      திருப்பிச் செலுத்திய தொகை எப்படி வருமானம் ஆகும் என்பதை குமாரசாமிதான் விளக்க வேண்டும்.
loan
சரி தோழர்களே… இதையெல்லாம் விட்டு விடுவோம்.   படிக்கும் பள்ளிப் பருவத்தில் ஒரு கணக்கு வாத்தியார் இருந்தார்.   கணக்கு சரியாக போடவில்லையென்றால், “கணக்கு வரலன்னா, நீ கழுதை மேய்க்கக் கூட லாயக்கு இல்ல.  கழுதை எத்தனை இருக்குன்னு எண்ணணும்.” என்று கடுமையாக திட்டுவார்.      எப்போது கழுதையைப் பார்த்தாலும் அந்த கணக்கு வாத்தியாரின் நினைவு வரும்.
சமீபத்தில் எண்ணூர் அனல்மின் நிலைய டெண்டர் சம்பந்தமான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ராமசுப்ரமணியம், இந்த டெண்டரில் கணக்கு வழக்கு தொடர்பான பல நுணுக்கமான விஷயங்கள் இருக்கின்றன.  அதை ஆராய்வது நீதிபதியின் வேலை அல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.
நீதியரசர் ராமசுப்ரமணியம்
நீதியரசர் ராமசுப்ரமணியம்
சரி ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி கணக்கு போடலாமா கூடாதா என்றால், சொத்துக் குவிப்பு வழக்கு போன்ற முக்கிய வழக்குகளில் கணக்கு போட்டே தீர வேண்டும்.  சொத்துக் குவிப்பு வழக்கு என்பது, மிக மிக எளிமையானது.    குற்ற காலத்தில் குற்றவாளியின் வருமானம் என்ன ?   செலவு என்ன ?   சொத்து எவ்வளவு வாங்கியிருக்கிறார்.   அவர் வருமானத்திற்குள் அந்த சொத்து இருந்தால், குற்றமில்லை.   வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கியிருந்தால் சொத்துக் குவிப்பு வழக்கு.  இவ்வளவுதான் விஷயம்.
குமாரசாமியும் அப்படி கணக்கு போட்டிருக்கிறார்.    ஆனால், அப்படி போட்ட கணக்கில் அடிப்படையான தப்பை செய்யலாமா ?   அதுவும் குற்றவாளியை விடுவிக்கும் அளவுக்கு தப்பைச் செய்யலாமா ?
ஜெயலலிதாவை விடுவிக்கும் ஆர்வத்தில் குமாராசாமி, ஜெயலலிதா மற்றும் அவர் சார்பாக வாங்கிய கடன்களையெல்லாம் வருமானமாக சேர்த்திருக்கிறார்.    அது கூட தப்பு அல்ல.   அதில் உள்ள கூட்டல் கணக்கை சரியாக போட வேண்டுமா இல்லையா ? ஜெயலலிதா மற்றும் அவரது கூட்டாளிகளான சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் வாங்கிய மொத்த கடனகாக குமாராசாமி அவரது தீர்ப்பின் பக்கம் 852ல் குறிப்பிட்டுள்ள தொகை 24 கோடியே, 17 லட்சத்து 31 ஆயிரத்து ரூபாய்.   இந்த வருமானத்தை அடிப்படையாக வைத்துத்தான் ஜெயலலிதாவின் வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பு 8.22 சதவிகிதம் என்று குறிப்பிடுகிறார்.
income






dp calculation



total loan2
சரி.   இவ்வளவு விபரமாக ஜெயலலிதாவை தான் வாங்கிய பணத்துக்கு விசுவாசமாக கணக்கு போடும் குமாரசாமி, குறைந்தபட்சம் கூட்டல் கணக்கையாவது சரியாக போட வேண்டாமா ?    அவர் போட்டுள்ள  பட்டியலில் உள்ள கடன் தொகையின் மொத்தமே கூட்டுத்தொகை எவ்வளவு தெரியுமா ?  10,67,31,274.00   ஆனால் குமாரசாமி தனது தீர்ப்பில் குறிப்பிடும் தொகை எவ்வளவு தெரியுமா ?  இதன் பிறகு, குமாரசாமியின் கணக்குப்படியே, லஞ்ச ஒழிப்புத் துறை கடன் வருமானமாக குறிப்பிட்டுள்ள 5,99,85,274.00 கழிக்கிறார் குமாரசாமி.
சரியானபடி கணக்கிட்டால், வரும் தொகை 4,67,46,000.00.
24 கோடியே, 17 லட்சத்து 31 ஆயிரத்து ரூபாய் என்ற கழுதை கணக்கை வைத்துத்தான்  குமாரசாமி ஜெயலலிதா வெறும் 8.22 சதவிகிதம் சொத்து சேர்த்துள்ளதாக கூறுகிறார்.
குமாரசாமியின் கணக்குப்படி ஜெயலலிதா உள்ளிட்டவர்களின்  மொத்த வருமானம், 34,76,65,654.00.  ஆனால் குமாரசாமி சரியான கணக்கு வாத்தியாரிடம் பயின்று, இந்த கணக்கை போட்டிருந்தால், இதில் வந்திருக்க வேண்டிய தொகை, 16,59,19,654.00.  குமாரசாமி லஞ்சம் வாங்கி விட்டு, போட்டிருக்கும் கணக்குப்படியே, ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் மொத்த வருமானம் 34,76,65,654. 
இந்த அடிப்படையில், ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் மொத்த சொத்துக்களை 37,59,02,466.00. என்று முடிவு செய்து, அதில் குமாரசாமி, தனது கழுதை கணக்கு வருமானமான 34,76,65,654 வகுத்து வருமானத்துக்கு அதிகமான சொத்தாக 2,82,36,812 என்று முடிவு செய்கிறார்.   அந்த அடிப்படையில், ஜெயலலிதா வெறும் 8.22 சதவிகிதம் சொத்து சேர்த்துள்ளதாக கூறியுள்ளார் குமாரசாமி.
dp calculation
அவர் போட்ட கணக்கை ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, ஒழுங்காக கணக்கு போட்டால், மொத்தமாக ஜெயலலிதா உள்ளிட்டோர் வாங்கிய கடன் 10,67,31,274.00.   லஞ்ச ஒழிப்புத் துறை ஏற்றுக் கொண்ட கணக்கான 5,99,85,274.00 கழித்தால் மீதம் உள்ள தொகை,4,67,46,000.00.
ஜெயலலிதாவின் வருமானமாக குமாரசாமி போட்ட தப்புக் கணக்குப் படி,  கடன் தொகை உள்ளிட்டு, குமாரசாமி கணக்கிடும் மொத்த தொகை,  34,76,65,654.00     
குமாரசாமி இந்த கூட்டலில் தவறு செய்யாமல் இருந்திருந்தால், இந்த தொகை 34 கோடி அல்ல.   இந்த கூட்டுத் தொகை 21,26,65,654.00
இதன்படி, குமாரசாமி போட்டுள்ள ஃபார்முலாவின் படியே, மதிப்பீடுகளை கழித்து, 55.6 கோடியில் இருந்து குமாரசாமி ஏற்றுக் கொண்டுள்ள மொத்த சொத்தான 37,59,02,466.00ஐ  குமாரசாமி ஏற்றுக் கொண்டுள்ள மொத்த வருமானமான 21,26,65,654.00ல் வகுத்து, சதவிகிதமாக போட்டால் வரும் மொத்த சதவிகிதம் 77 %.  

CALC6

கிருஷ்ணானந்த் அக்னிஹோத்திரி என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, 10 சதவிகிதத்துக்கும் கீழ் வருமானத்துக்கு அதிகமான சொத்து இருந்தால், ஒரு பொது ஊழியரை விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்று குமாரசாமியே சொல்கிறார்.
ஆனால், அவசரத்தில் அவர் போட்ட தப்புக் கணக்கை சரி செய்தால், ஜெயலலிதாவின் வருமானத்துக்கு அதிகமான மொத்த சதவிகிதம் 77%
இப்படி ஒரு அரை குறையான தீர்ப்பை தருவதற்காக குமாரசாமி உங்களுக்கு நான்கு மாதங்கள் ?
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யுமா அல்லது இத்துடன் இந்த வழக்கு முற்றுப் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.நாம் பொறுத்திருந்துதான்  பார்ப்போமே !!

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Monday, 11 May 2015

ஊழல் செய்ய ஊக்கமளிக்கும் தீர்ப்பு பற்றிய சிறப்பு பார்வை..

பண பலமும் மத்தியில் ஆளும் குள்ளநரி கூட்டத்தின் கபட நாடகமே இந்த தீர்ப்பு .ஒரே குற்ற வழக்கில் இரண்டு நீதிமன்றங்களின் நீதிபதிகள் நேர் மாறுபட்ட தீர்ப்பு சொல்லியிருப்பது அரசியலமைப்பு சட்டம் எவ்வளவு ஓட்டைகள் நிறைந்தது என்பதை காட்டுகிறது. 18 வருடமாக விசாரணை நடத்தி 1500 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை சொன்ன நீதிபதி கேலிக்கூத்தாக்கப்பட்டிருக்கிறார்.. பணமும் அதிகாரமும் இருந்தால் எத்தகைய தீர்ப்பும் பெற முடியும் என்பது மீண்டும் ஒருமுறை நிருபிக்கப்பட்டுள்ளது.. 


4 ஆண்டுகள் சிரை தன்டனையும்,100கோடி அபராதம் எப்படி தன்டனையை விதித்தது .தற்ப்போது ஏன் இப்படி மாரியது இதன் அடிப்படை பணம் பலமா?அல்லது அரசியலின் சூழ்ச்சியா இதுதான் ஊழலற்ற அரசியலா இல்லை லஞ்சத்தை முறியடிக்கும் அரசியலா? இதை நான் முன்பே எதிர்பார்ததுதான்.!!
காரணம்....

  •  நீதிமன்றத்தினால் 18 வருட விசாரணைக்குப்பின் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு பதவி பறிக்கபட்ட,சிறை தண்டனையும் பெற்ற ஜெ. யை அவருடைய வீட்டிற்கே தனது முக்கியமான மந்திரியை மோடி அனுப்ப வேண்டிய அவசியம் என்ன?
  • நடந்த பேரம் என்ன?
  • தற்போது நடந்த 3 மாத விசாரனையில் அரசு வழக்கறிஞ்சருக்கு பதில் அளிக்க வெறும் ஒரு நாள் அவகாசம் அளிக்கப்பட்டதன் ரகசியம் என்ன?

1. நான் குற்றவாளி இல்லையென்றால் 18 வருடம் ஏன் இழுக்க வேண்டும்?
2. 18 வருட வழக்கு செலவு யாருடைய பணம்? 
3. குற்றவாளி இல்லை என்றபிறகு JJ அவர்கள் குற்றம் சுமத்தியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கபோகிறார், காரணம் நிறைய loss?

4. பொய்யான வழக்கு என்றால் வழக்கு தொடுத்தவர்கள்தான் அரசுக்கு ஏற்பட்ட செலவினத்தை ஏற்க வேண்டும்?


சாதாரண பாமரனுக்கு ஒரு நீதி, சல்மான்கான் மற்றும் ஜெயலலிதாவுக்கு ஒரு நீதியா? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற ஒன்று உண்மையிலேயே அனைவருக்கும் பொருந்துகிறதா? இந்திய நாடே எதிர்பார்க்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை 3 நிமிடத்தில் வாசித்துவிட்டு நீதிபதி குமாரசாமி எழுந்து ஓடியது ஏன்? முழுதீர்ப்பையும் படிக்க கூச்சமா? அல்லது வெட்கமா? இரு நீதிபதிகளும் சேர்ந்து ஒரு வழக்கில் ஒருமித்த கருத்தை தெரிவிக்க முடியாத அளவிற்கு நம் நாட்டு சட்டம் அவ்வளவு கேடுகெட்டதா? தீர்ப்புகள் தகுதியற்றதா? அல்லது தீர்ப்பு வழங்கும் நீதிபதி தகுதியற்றவரா? மக்களை ஒரு கேலிப்பொருளாக்குகிறதா இந்த நீதிமன்றங்கள்? ஜெயலலிதா வழக்கு ஒரு புனையப்பட்ட வழக்கு என்றால் அது உண்மை என தீர்ப்பளித்த நீதிபதி டி குன்ஹா தவறு செய்துள்ளாரா? சல்மான்கானுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நான்கு மணிநேரத்தில் நிறுத்திய பாம்பே உயர்நீதிமன்றம், இதே போல் சாதாரண ஒரு குப்பன் சுப்பனுக்கு என்றால் நிறுத்திவைக்குமா இந்த நீதிமன்றங்கள்? அப்துல்கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போதே அவருக்கு அரஸ்ட் வாரண்ட் பிறப்பித்த நீதிபதிகளை நாம் இன்னும் மறந்துவிடவில்லை! ஒரு நீதிபதி தன் பேனாவால் ஒரு முதல் அமைச்சரையே சிறையில் அடைக்கிறார், அதே வழக்கில் வேறு நீதிபதி அதே முதல் அமைச்சர் பதவியை தன் பேனாவால் தருகிறார், அய்யகோ இது என்ன கொடுமை! இது என்ன விளையாட்டு? மக்கள் நீதித்துறையையும், நீதிபதிகளையும் என்ன நினைப்பார்கள், இது என்ன காக்க முக்கா விளையாட்டா? அல்லது காசு பணம் விளையாட்டா? அரசியல்வாதிகள் அனைவருக்கும் இந்த தீர்ப்பு மிக மகிழ்ச்சி தரக்கூடியதே ஏனென்றால் அனைத்து அரசியல் வாதிகளும் ஊழல் புகாரில் சிக்கித் தவித்துக் கொண்டு இருப்பவர்களே, அவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு பூஸ்ட் ஆக இருக்கும், அவர்களுடைய ஊழல் வழக்கிலும் இப்படி ஒரு நீதிபதி கண்டிப்பாக கிடைப்பார் என நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றே தோன்றுகிறது. இது மனுநீதி சோழன் வாழ்ந்த நாடா? அல்லது மானங்கெட்டவன் வாழ்ந்த நாடா? எனக்கு ஒன்றுமே புரியவில்லை? 

பணம் இருந்தால் எவ்வளவு பெரிய தவறு வேண்டுமலும் செய்யலாம் பணத்திற்கு நீதி அடிமையாகி விட்டது..இதற்கு மத்திய அரசு வாழ்த்து வேற சொல்லி இருக்கு. இதுவே மிக சரியான எடுத்துகாட்டு இந்தியாவில் எப்படி பட்ட ஆட்சி இருக்கிறது என்று. இது  ஆதிமுக கூட்டணியை உறுதி செய்வது போல் உள்ளது . அம்மாவின் விடுதலைக்கு விலை 70 சட்டமன்ற தொகுதிகள் என்று  ஒரு செய்தி பரவியுள்ளது .மேலும் இந்த தீர்ப்பு ஊழல்  செய்யும்  சாமானியருக்கு மற்றும் அரசியல் தலைவர்கழுக்கு ஓரு ஊட்டச்சத்து மாத்திரையாக உள்ளது.நீதி மன்றங்கள் இனி பெயர் மாற்றப்பட்டு நிதி மன்றங்கள் என பெயரிடப்படலாம்.இனிமே பணம், பதவி, செல்வாக்கு, புகழ் இவற்றில் எதாவது ஒன்று இருந்தால் இந்தியாவில் தைரியமாக எது வேணாலும் செய்யலாம்.


கடவுளை நம்புவது மட்டுமே மூடநம்பிக்கை அல்ல ..இந்தியாவில் நீதிமன்றங்கள் நீதியை வழங்கும் என்று நம்புவதும் மூடநம்பிக்கைதான் நீதி என்பது சாதி சார்ந்த பொருளாதார பின்னணி சார்ந்த ஒன்று என்பது இங்கு எழுதப்படாத விதி..

நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை கேள்விக்குறி ஆகியுள்ளது இந்தியவில் சட்டம் படித்த அத்தனை வழக்கறிஞர்கள் ஒன்று சேர்ந்து ஜெயலலிதா மற்றும் சல்மான்கான் வழக்குகளை மறுஆய்வு செய்ய வேண்டும். இவர்களுக்கு வழங்க பட்ட தீர்ப்புபானது அரசியல் பலத்தாலும், பணபலத்தாலும். வழங்க பட்டாதா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.


ஊட்டி ரோஜா கண்காட்சியில் 30 ஆயிரம் ரோஜா...


கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இவர்களை மகிழ்விக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.
அதே போல் இந்த ஆண்டு காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது. தொடர்ந்து வாசனை திரவிய கண்காட்சி, நாய்கண்காட்சி ஆகியவையும் நடந்தது.
இன்று ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் 14–வது ரோஜா கண்காட்சி தொடங்கியது. இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 4 ஆயிரம் வகையான 27 ஆயிரம் ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகிறது.

இதில் அரியவகை ரோஜாவான பச்சை, நீளம் மற்றும் சிவப்பு, மஞ்சள் இருவண்ண ரோஜாக்கள், பலவண்ண ரோஜாக்கள் இடம் பெற்றுள்ளது. இந்த ரோஜாக்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
ரோஜா கண்காட்சியில் மேடையுடன் கூடிய பரதநாட்டியம் அலங்கார வடிவம் 30 ஆயிரம் பல்வேறு வண்ண ரோஜா மலர்களால் 16 அடி உயரம், 15 அடி நீளம், 8 அடி அகலத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 6 ஆயிரம் பல்வேறு வண்ண ரோஜா மலர்களால் 7 அடி நீளம், 6 அடி உயரம், 3 அடி அகலத்துடன் குதிரை வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 8 ஆயிரம் மலர்களை கொண்டு 8 அடி நீளம், 6 அடி உயரம், 3 அடி அகலத்துடன் பிரமாண்ட சிங்கம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இதே போல் 2 ஆயிரம் பல்வேறு வண்ண ரோஜா மலர்களால் 5 அடி உயரம், 2½ அடி அகலத்துடன் பாண்டா கரடி வடிவம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
அதன் அருகில் நின்று போட்டோவும் எடுத்துக்கொண்டனர்.
இந்த கண்காட்சி இன்றும், நாளையும் நடக்கிறது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் இன்னிசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கண்காட்சியில் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 30–ம் சிறியவர்களுக்கு ரூ. 15 வீதமும் வசூலிக்கப்படுகிறது.








40 ஆயிரம் சுற்றுலா பயணிகள்
2–வது நாளான நேற்று ரோஜா கண்காட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் ரோஜா பூங்கா முழுவதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் தான் காணப்பட்டது. 2 நாட்களில் ரோஜா மலர் கண்காட்சியை 40 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்.

ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமான வாகனங்களில் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் உடனுக்குடன் போக்குவரத்தை சீரமைத்தனர்.

பரிசளிப்பு விழா
இந்த நிலையில், ஊட்டி ரோஜா பூங்காவில் நேற்று மாலை 4 மணியளவில் ரோஜா கண்காட்சி நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.


சர்வதேச பூங்காக்களில் ஒன்றாக தேர்வு
ஊட்டி ரோஜா பூங்காவில் தற்போது 4 ஆயிரம் ரகங்களை சேர்ந்த 30 ஆயிரம் மலர் செடிகள் உள்ளன. இதில் 120 ரோஜாக்கள் பாராம்பரியமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.கோடை விழாவின் ஒரு பகுதியாக இந்த மலர் கண்காட்சி நடைபெறுகிறது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ரோஜா மலர்கள் பயன்பாட்டிற்கு வந்தன. இந்த மலர்களை கொண்டு ஆயுர்வேதத்தில் பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்பட்டன. தற்போது இந்த மலர்கள் அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.


Wednesday, 6 May 2015

நிஜத்தில் நடிக்க தெரியாத ஒர் நல்ல தமிழ் கலைஞன் ‪கவுண்டமணி‬ பற்றி சுவையான சிறு குறிப்புகள் !!

Image result for கவுண்டமணி

கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே...

சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக் கொண்டபுரம்!.

கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். `பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்பார் இயக்குநர் மணிவண்ணன்!


பாரதிராஜாதான் `கவுண்டமணி’ எனப் பெயர் மாற்றினார். `16 வயதினிலே’ தான் அறிமுகப் படம்!

அம்மாவை `ஆத்தா’ என்று தான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!

கவுண்டமணியை நண்பர்கள் செல்லமாக அழைப்பது `மிஸ்டர் பெல்’ என்று கவுண்டமணியே நண்பர்களைப் பட்டப் பெயர் வைத்தத்தான் கூப்பிடுவார். அவை யாரையும் புண்படுத்தாது. நகைச்சுவையாக மட்டுமே இருக்கும். ஆரம்ப கால நண்பர் மதுரை செல்வம் முதல் அனைவரிடமும் இன்று வரை நட்பினைத் தொடர்ந்து வருகிறார்!

மிகப் பிரபலமான கவுண்டமணி –செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!


இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.

கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு . எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட `சரி’ என்பார். `இங்கிலீஷ் கலருடா ப்ளாக்!’ என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ் –கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்!

உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு, `பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பா’ என நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்!

திருப்பதி ஏழுமலையான் தான் கவுண்டமணி விரும்பி வணங்கும் தெய்வம், நினைத்தால் காரில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்புவார். வாராவாரம் நடந்த தரிசனத்தை இப்போதுதான் குறைந்திருக்கிறார் கவுண்டமணி!

சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜீன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்!

கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகன் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப் பேசுவதைக் கேட்டு கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்!
புகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது தனிமை விரும்பி!

ஓஷோவின் புத்தங்களுக்கு ரசிகர். அதே மாதிரி ஹாலிவுட் படங்களைத் தவறாமல் பார்த்து நல்ல படங்களை நண்பர்களுக்குச் சிபாரிசு செய்வார்!

கவுண்டமணி தி.நகர் ஆபீஸீக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்து பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!

கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டு கொள்ளப் பிடிக்காது. `என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம், அவருக்கு பட்டம் கிடையாதுடா!’ என்பார்

ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் பெருமாள் கோயில் தரிசனமும் விரதமும் உண்டு!

ஷீட்டிங் இல்லை என்றால், எப்பவும் சாயங்காலம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் முன்பு கவுண்டரைப் பார்க்கலாம். இப்போது நண்பர்களைச் சந்திப்பது ஆபீஸ் மொட்டை மாடியில் மாலை நடைப் பயிற்சியின்போதுதான்!
கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். `நம் செளகர்யம் பார்த்தா பத்தாது.... ஜனங்க நடமாட செளகர்யம் கொடுக்கணும்’ என்பார்!

எண்ணிக்கையில் அடங்காத வாட்ச், கூலிங்கிளாஸ் கலெக்‌ஷன் வைத்திருக்கிறார். நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே வந்த பழக்கம் இது!
டுபாக்கூர் சாமியார்களைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார், `மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்தரிப்பது ஏமாற்றுவேலை’ என்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடியேட்டரா எனச் சாட்டை வீசுவார். ஆனாலும், தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர்!

கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் `ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ `வரவு எட்டணா செலவு பத்தணா’, `நடிகன்’, அட... என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானு’ என சுய எள்ளலும் செய்துகொள்வார்!

மறக்கவேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களை’ என அடிக்கடி குறிப்பிடுவார். ஒருவரை எதிரி என நினைத்துவிட்டால் அவர்களை அப்படியே புறக்கணித்துவிடுவார். ஆனால், நண்பர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப் போவார்!

சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருந்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகு குணமானார் கவுண்டர். அப்போது மருந்துவமனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்காதவை. அதைப்பற்றிப் பேசினால் சிரிப்பு அரசனின் கண்களில் நீர் சுரக்கும்!
ஒரே ஒரு தடவைதான் விகடனில் மிக நீண்ட பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். மற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலை காட்டியது இல்லை!

நிமிடத்திற்கு நிமிடம் தங்களை மாற்றிக்கொள்ளும் சினிமாகாரர்கள் மத்தியில் தன்னிலையை மறக்காமல் கடைசி வரை நல்ல கலைஞனாகவே இருக்கும் நல்ல மனதை வாழ்த்தலாமே.! 75 வயதுக்கு பிறகு ஹீரோவாகியிருக்கும் கவுண்டமணி 49ஓ படத்தை அடுத்து வாய்மை, எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ஆகிய படங்களில் நடிக்கிறார்.
தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.