Thursday, 8 December 2022

A Guide to Ticket Booking Indian Railways Classes and Coaches !!

How many Classes of Coaches are available on Indian Railways?

A: There are several classes of coaches that are available for Indian Railways. Out of them, there are the general chair cars and without reservation class coaches, with comfort level little low. The railways planned 2 types of bogies for Passengers, The ICF, and LHB Coaches.

With different classes of reservations as per the customer budget and level of comfort available, Indian Railways segregated 9 classes for travelers. These classes are named AC First Class, AC Two-tier, AC Three Tier, First Class (Without AC), Executive Chair Car, AC Chair Car, Sleeper Class, Second Seater, and the Unreserved/General Class.


AC First Class (1A)

This is the most luxurious and expensive class in the railway system. The price of this class will be almost equal to air tickets. The berths are fitted with many amenities, personal coupes, carpets, entertainment elements, and others. These facilities and amenities differ from train to train. Four or two berths confined within a doored room is called a coupe. The travelers can lock from inside.

Certain trains like Duronto, Rajdhani, and others provide a special menu for this class. In some, washbasins are provided within the compartments.

1A - AC First Class


AC Two-Tier (2A)

These are coaches with an air-conditioned environment. Semi-privacy is guaranteed with thick curtains. There are just 6 berths in each of the compartment sections (no middle berths). Reading lights, pillows, bedsheets, and other amenities are provided.

AC Two-Tier (2A)

AC Three-Tier (3A)

These look exactly like AC two-tier, but many amenities like curtains, reading lights, and others will be missing. Pillows and bed sheets are provided just like 2A and 1A. There are middle berths in each section. The class can be a little crowded when the middle berth is erect. This is why people prefer the upper berth.

3E - AC Three-Tier (economy)

First Class (FC)

This is similar to 1A, without air conditioning, bedding, or special lighting. Many trains do not have this class. However, you can find these in a few heritage trains. The amenities are similar to second-class. There are no attendees. Thus, people preferred choosing the third class over the expensive first class and this class has diminished. However, the compartments are very clean and reading lights are provided. 

AC Three-Tier Economy (3E)

AC Three-Tier

These are found only in Garib Rath Express. These are air-conditioned coaches with curtains and better walking space. Bedding, reading lights and other facilities are not provided in this coach. There are 9 berths in each compartment, making it more congested. Bedrolls are provided for an additional charge.


Executive Chair Car (EC)

This is a non-sleeper class with exclusive amenities. Each row will contain four chairs. The coaches are extra spacious and have good legroom. Usually, these coaches are used for day travel. These coaches are common in Shatabdi Express and Tejas Express trains. This class is also called as AC Executive class. In certain trains like Shadabti Express, meals are included in the tariff.

Executive Chair Car


AC Chair Car (CC)

These are air-conditioned chair cars with five chairs in each row. These are used in trains for day travel between two cities. Many premium trains provide these classes. Additional space is provided overhead for luggage storage. Thus, your legroom is not compromised. Small trays are attached to the chairs, just like an airplane seats. These coaches are well maintained and hygiene.

AC Chair Car

Sleeper Class (SL)

This is the commonly booked class on the Indian train. Most of the trains have 10 or more coaches assigned for this class. These classes have three berths horizontally and two along the length, in each section. Around 72 people can travel in one coach. This is one of the loud classes on the train. You can find vendors venturing into the compartment, every five minutes. Your privacy will be compromised.

 

Sleeper Class (SL)

Second Seater (2S)

It is very similar to CC. The coach does not have to air-condition. Double deck, second seater coaches are found in trains running between Mumbai and Pune. People might even fight for comfortable seats. This is the worst class to choose during summer. Second Seater (2S)

General Class or Unreserved Class (GEN/UR)

This is the cheapest class on the train. The tickets issued are valid for a day and the passenger can board the trains as they wish. The seats are not guaranteed and the crowd is extreme. Read more about the

General Class or Unreserved Class

Certain special classes are available in unique trains like heritage trains, luxury trains, toy trains, and others.

Sunday, 6 November 2022

Why need Induction Training Prior Job Site ??


                              


Induction training is an essential component of workplace safety for several reasons:


Initial Orientation: Induction introduces new employees to the workplace, familiarizing them with the environment, processes, and safety protocols. This helps them understand the layout, emergency exits, and equipment locations.


Safety Protocols: It provides detailed information on safety procedures, such as fire drills, emergency responses, and first aid practices, ensuring that employees know how to act in case of an emergency.


Risk Awareness: Induction training highlights potential hazards in the workplace and the specific measures in place to mitigate them. This awareness helps employees avoid dangerous situations and understand the importance of safety protocols.


Legal Compliance: Ensuring employees are aware of safety regulations and their responsibilities helps the organization comply with health and safety laws, reducing the risk of legal issues and penalties.


Culture of Safety: It fosters a culture of safety from the very beginning. When employees see that their safety is a priority, they are more likely to take it seriously and adhere to safety practices.


Equipment Training: Induction includes training on the safe use of equipment and machinery, ensuring that employees operate them correctly and reduce the risk of accidents.


Continuous Improvement: Feedback from induction programs can help identify areas for improvement in safety protocols, ensuring that the organization continually enhances its safety standards.


Role Clarity: Induction helps employees understand their specific roles and responsibilities concerning safety, ensuring everyone knows what is expected of them and how they contribute to a safe work environment.


By integrating induction training as a vital part of safety, organizations can significantly reduce workplace accidents, promote a culture of safety, and ensure compliance with legal requirements. 

By M. Ajmal Khan

Wednesday, 3 August 2022

Megger Test for LV & HT Cables: Ensuring Electrical Safety & Reliability

 

Megger testing is a crucial process to check the insulation health of Low Voltage (LV) and High Tension (HT) cables. It helps in identifying insulation breakdown, moisture ingress, and other potential faults before they cause failures.


Why is Megger Testing Important?


✅ Prevents unexpected breakdowns

✅ Ensures safety & reliability

✅ Helps in predictive maintenance

✅ Detects insulation deterioration over time


Testing Procedure:


1️⃣ Disconnect the cable from the power source.

2️⃣ Clean & dry cable terminals to avoid leakage currents.

3️⃣ Select the appropriate test voltage:


LV Cables (Up to 1.1kV) → 500V to 1kV DC


HT Cables (Above 1.1kV to 33kV) → 2.5kV to 5kV DC

4️⃣ Connect the Megger to the conductor and earth.

5️⃣ Apply test voltage for 1 minute & note the insulation resistance.

6️⃣ Analyze results:


>1000 MΩ (Excellent)


100 – 1000 MΩ (Good)


<100 MΩ (Needs attention)



Why Different Test Voltages?

The primary reason for using different test voltages for 300V and 600V-rated cables lies in ensuring adequate stress on the insulation system without damaging it.

Higher Voltage Rating, Higher Test Voltage: 600V-rated cables have thicker insulation and are designed to withstand higher voltages. Therefore, a higher test voltage (1000V DC) is necessary to stress the insulation and reveal any weaknesses effectively.

Safety Margin: The test voltage is typically higher than the cable's rated voltage to provide a safety margin. This ensures that the cable can withstand higher voltages than it will encounter during normal operation, enhancing its reliability and safety.

Key Points:

300V Rated Cables:Test Voltage: 500V DC

Purpose: To assess the integrity of the insulation in cables designed to operate at or below 300 volts.

600V Rated Cables:Test Voltage: 1000V DC

Purpose: To evaluate the insulation strength of cables designed to operate at or below 600 volts.

Important Considerations:

Test Duration: The test duration for both voltage ratings is one minute. This duration allows for a sufficient assessment of the insulation while minimizing the risk of damaging the cable.

Safety Precautions: Always ensure the circuit or equipment under test is de-energized and properly grounded.

Follow all relevant safety procedures and wear appropriate personal protective equipment (PPE).

Never exceed the recommended test voltage.

In Summary

The use of different test voltages for 300V and 600V rated cables reflects the need to adequately stress the insulation system while maintaining safety. By using appropriate test voltages and procedures, insulation resistance testing can effectively identify potential problems and help ensure the reliable and safe operation of electrical systems.

Thursday, 16 June 2022

𝐓𝐡𝐞 𝐆𝐫𝐨𝐰𝐢𝐧𝐠 𝐃𝐞𝐦𝐚𝐧𝐝 𝐟𝐨𝐫 𝐃𝐮𝐜𝐭𝐥𝐞𝐬𝐬 𝐇𝐕𝐀𝐂 𝐒𝐲𝐬𝐭𝐞𝐦


Heating , ventilating, and air conditioning (HVAC) equipment perform heating and/or cooling for residential, commercial, or industrial buildings. An HVAC system guarantees maintenance of home temperature and humidity in an economic way, which is not only effective but also takes care of the environment. Split systems are the most standard heating and air conditioning systems. These are traditional types of HVAC systems that provide complete facilities for both inside and outside the building


High efficiency and numerous features, such as variable fan speeds and multiple stages of heating and cooling, drive the global ductless HVAC system market. In addition, increase in disposable income and rise in environmental temperature fuel the market growth. However, high initial cost of installment and negative effect on environment restrain the growth. Enhanced reliability of optic patch cord and increase in use of internet are expected to provide growth opportunities for the market

𝐃𝐮𝐜𝐭𝐥𝐞𝐬𝐬 𝐇𝐕𝐀𝐂 𝐒𝐲𝐬𝐭𝐞𝐦 𝐓𝐲𝐩𝐞:
• Cooling Only Split-System
• Heat Pump
• Chilled Water System
• Window Air Conditioners
• Others

𝐃𝐮𝐜𝐭𝐥𝐞𝐬𝐬 𝐇𝐕𝐀𝐂 𝐒𝐲𝐬𝐭𝐞𝐦 𝐀𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧:
• Residential
• Commercial
• Industrial

𝐃𝐮𝐜𝐭𝐥𝐞𝐬𝐬 𝐇𝐕𝐀𝐂 𝐒𝐲𝐬𝐭𝐞𝐦 𝐓𝐨𝐩 𝐌𝐚𝐧𝐮𝐟𝐚𝐜𝐭𝐮𝐫𝐞𝐫𝐬:

• Denso Corporation
• Eberspaecher Holding GmbH & Co. KG
• MAHLE GmbH
• Hanon Systems
• Calsonic Kansei Corporation
• Keihin Corporation
• Sanden Holdings Corporation
• Mitsubishi Heavy Industries Ltd.
• Valeo SA
• Subros Limited

Friday, 27 May 2022

தமிழகத்தில் பொறியியல் படிப்பு மதிப்பு இழந்து விட காரணங்கள் !!



தொழில் நுட்பமும், பொறியியலும் மிகவும் நவீனமாக வளர்ந்து விட்ட படியால் அதற்கேற்றபடி பாட திட்டங்களும் கற்பிக்கும் முறையும் மாறி விட்டன. ஆகவே படிப்பின் மதிப்பு கூடித் தான் இருக்கிறது. அதை படித்தவர்களின் மதிப்பு தான் கூட வில்லை, மாறாக குறைந்திருக்கிறது.

பொறியியல் படிப்பு மதிப்பு இழந்து விட காரணங்கள்:படிப்பிலும், செய்முறையிலும் முழு ஈடுபாட்டோடு கவனம் செலுத்தாமை
இணையதளங்களிலும் திறன் பேசிகளிலும் நேரத்தை செலவழித்தல்
குறிக்கோள் இல்லாத கல்லூரி வாழ்க்கை
சரியான உள்கட்டமைப்பு இல்லாத கல்லூரிகளில் பயிலுதல்
தேர்ச்சி பெற்ற / அனுபவம் உள்ள விரியுரையாளர்கள் இல்லாமை
தேர்ச்சி பெற்ற / அனுபவம் உள்ள செய்முறை பயிற்சியாளர்கள் இல்லாமை
செய்முறை பயிற்சியில் மாணவர்களுக்கு அதிகம் ஆர்வம் இல்லாமை
வேண்டப்பட்ட மாணவ மாணவியருக்கு உள் மதிப்பீடு மதிப்பெண்களை வாரி வழங்குவது. மற்றவர்களை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவது. அதனால் நன்றாய் படிக்கும் மாணவர்கள் சோர்வடைந்து போவது
கடைசி பருவ திட்ட வேலை (PROJECT WORK) சமர்ப்பித்தலுக்கு கணனி மையங்களை சார்ந்திருப்பது
  • மாணவ மாணவியர்கள் கடைசி வருஷத்திற்கு முந்தின வருஷத்திலிருந்தே பொறியியலுக்கு சம்பந்தமில்லாத TNPSC Gr4, SSC (+2 Level), வங்கி தேர்வு இன்னும் பல வித போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தப்படுவது.
  • முக்கியமான பொறியியல் பாடங்களை படித்த மாணவர்கள் அதற்கு சம்பத்தமில்லாத தகவல் தொழில் நுட்ப துறைக்கான வேலைக்கு தனியாக அர்ப்பணிப்போடு ஆயத்தப்படுவது
இதையெல்லாம் தாண்டி தங்களுடைய துறையில் அருமையான திறமையான பொறியியல் வல்லுநர்கள் ஆனவர்கள் நிறைய உண்டு.

பொறியியல் படிப்பு தரமானதாக இருக்கிறதா என்றால் 90% இல்லை. பாட ஆசிரியர்கள் பாடத்திட்டம் தாண்டி பாடம் எடுக்கின்றனரா என்றால் அதுவும் 90% இல்லை. சரி மாணவர்களாவது கற்ற விஷயங்களை இன்னும் மெருகூட்டும் வகையில் யோசிக்கிறார்களா என்றால் அதுவும் 75% இல்லை. தொழில்நுட்ப கல்வி என்ற பெயரில் சாதாரண ITI மாணவர்களுக்கு தெரிந்த அளவு கூட தங்கள் துறையின் அடிப்படை விஷயங்கள் தெரியுமா என்றால் அதுவும் இல்லை.

இப்படி பானை முழுவதும் ஓட்டை இருந்தால் எப்படி தண்ணீர் பிடிக்க முடியும்.

உண்மையில் 99% பொறியியல் வேலைகளுக்கும் படித்த பாடத்திற்கும் சம்பந்தமே இல்லை. ஒரு பொறியியல் மாணவன் ஒரு வேலையில் சேர்ந்த பின்னர் தான் பொறியியலை கற்க ஆரம்பிக்கிறான்.

பொறியியல் படிப்பில் சில மாற்றங்கள் வேண்டும் என்று நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன் அதில் ஒரே ஒரு பாயிண்ட் மட்டும் இங்கே::::

4 ஆண்டு பொறியியல் படிப்பில் நான்கு வருடங்களும் Even Semester (2,4,6,8) களில் துறைசார் நிறுவனங்களில் வேலை செய்து அந்த துறைசார் கேள்விகளுக்கு பதிலும், துறைசார் Project கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இன்னொன்று அடிப்படை அறிவு இல்லாமல் தான் பலர் பொறியியல் துறைக்கு வருகிறார்கள் அதனால் கண்டிப்பாக நுழைவுத்தேர்வு வைக்க வேண்டும் அதற்கு முதலில் பள்ளி பாடத்திட்டத்தை மாற்றவேண்டும்.

ஒரு துறையில் நிபுணத்துவம் பெறும் அளவுக்கு கற்றுக்கொண்டு அதை மற்றவர்களிடம் வெளிப்படுத்தும் அளவுக்கு ஆங்கில மொழியறிவு இருந்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும்.

ஆக்கம்  மற்றும் தொகுப்பு  : மு.அஜ்மல்  கான்.

Friday, 13 May 2022

இன்றைய காலத்து பெண்கள் சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும் விதம்பற்றிய சிறப்பு பார்வை!!




சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும் விதம் பற்றிய பார்வை
• இன்றைய காலத்து பெண்கள் தொடர்ந்து காலை, மாலை என நேரம் காலம் அறியாமல் இரவில் தூக்கம் இன்றி இந்த சமூக வலைத்தளங்களுடன் இணைந்து இருக்கிறார்கள். ஆகவே இதற்காக நேரத்தை வீண் விரயம் செய்யாது இதற்கான நேர காலத்தை நாம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் .


• தூங்கும் போது சமூக வலைத்தளங்களை பயன்படுத்துதல் கூடாது. ஏனெனில் விஞ்ஞானிகளின் ஆய்வுப்படி ஒரு மனிதன் ஒரு நாளைக்கு இடைவெளி விடாமல் 6 மணிநேரம் தூங்க வேண்டும். இது எதிர்காலம், நோய் எதிர்ப்பு சக்தி, மனோ நிலை, மூளை செயல்படும் வீதம் போன்ற பல விதமான செயல்பாடுகளுக்கு உதவும்.


• நிகழ்ச்சிகள், இறப்பு செய்திகள் வரும் பட்சத்தில் அதை உடனடியாக பகிராமல் அதேசமயம் அந்த செய்தியின் உண்மைத்தன்மை, நம்பகத்தன்மைகளை அறிந்த பிறகே பகிர வேண்டும்.


• மனதை பாதிக்கின்ற தகவல்களை அல்லது மற்றவருடைய மனதை புண்படுத்துகின்ற தகவல்களை பகிர்வதை தவிர்த்து கொள்ள வேண்டும்.


• குழந்தைகளிடம் ஸ்மார்ட் Phone-ஐ கொடுக்கின்ற பொழுது Flight Mode- இல் போடவும். இணைய இணைப்பு இல்லாமல் இருப்பது சிறந்தது, ஏனெனில் தேவையற்ற செய்திகளை காண நேரிடலாம்.


• நீங்கள் சமூகம் சார்ந்த அமைப்புகள் வைத்திருக்கலாம், அதற்காக ஒரு குழுவை உருவாக்கி சமூகத்திற்கு தேவையான பல நன்மையான தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். அதேசமயம் எந்தவொரு குழுமமாக இருந்தாலும் அதற்கான ஒரு தேவை மற்றும் கொள்கை கட்டாயம் இருக்க வேண்டும்.


• தேவையில்லாத தகவல்களை தவிர்த்து உங்கள் குழுமம் எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அது சார்ந்த சமூகத்திற்கு தேவையான தகவல்களை அறிந்து பகிர வேண்டும்.


• முதலில் தொழில்நுட்ப வசதிகளின் நன்மைகள், தீமைகள் குறித்து பிள்ளைகளிடம் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி இருக்கிறோமா என்பதைவிட, பெற்றோர்களுக்கு அது குறித்து போதிய அறிவு இருக்கின்றதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.


• நேரமில்லை என்கிற காரணங்களை முன் வைத்து குழந்தைகளைக் கண்காணிக்கவும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கவும், உதவவும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வே முதலில் அவசியமானதாக இருக்கிறது.


• பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பேஸ்புக் போன்ற தளங்களை எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.


• சமூக வலைதளங்கள் நண்பர்களோடும், குடும்பத்தாரோடும் உரையாடுவதற்கான ஒரு பாலம் தான் என்பதை முதலில் புரிய வைக்க வேண்டும்.


• இரவு நேரங்களில் சமூக வலைதளங்களில் இயங்குவதை குறைக்க வேண்டும்.


• பெற்றோர்களும் தமக்கான ஒரு வலைதளக் கணக்கை வைத்துக் கொள்வது நல்லது. இதில் பிள்ளைகளை இணைத்துக்கொண்டு அவர்களது நடவடிக்கைகளைப் பார்க்கலாம். உங்களை இணைப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்றால் அவர்கள் அழுத்தத்திற்கு ஆட்பட வாய்ப்புள்ளது என உணரத் தொடங்குங்கள்.


• தொழில்நுட்ப வளர்ச்சி அனைத்திலும் நன்மையும், தீமையும் கலந்தே இருக்கின்றன. அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும்.


• போலியான கணக்கு (Fake Account) மூலம் மற்றவர்களை ஏமாற்றுவதை தவிர்க்க வேண்டும்.



சமூக வலைத்தளங்களின் தாக்கம் !!

• பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்துவிட்டு அதை சரியாகப் பயன்படுத்துகிறார்களா என்று அக்கறை கொள்ளும் அளவுக்கு, அதில் என்ன செய்கிறார்கள் என்று கண்காணிக்கும் பொறுப்பிலிருந்து பெற்றோர்கள் விலகி நிற்கின்றனர். பெற்றோர்கள் இந்த பொறுப்பிலிருந்து விலகி நிற்பதும் இள வயதினரின் சமூகக் குற்றங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளன.


• செல்போன் மற்றும் அதன் பயன்பாடுகள் தரும் அழுத்தம் குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தும் மன அழுத்தம் குறித்து தொடர்ச்சியாக உலகம் சுட்டிக் காட்டி வருகிறது.


• தமது பேஸ்புக் பக்கத்தில் அறியாத நூற்றுக்கணக்கானவர்களை இணைத்துக் கொள்கிறார்கள். நண்பர்களின் எண்ணிக்கை பெருமை எனக் கருதுபவர்கள், அவற்றினால் ஏற்படும் ஆபத்துகளை உணர்வதில்லை. பெற்றோர்களும் அதனை கண்டுகொள்வதே இல்லை.


• தேவையில்லாமல் குடும்ப புகைப்படங்கள் அல்லது தனிப்பட்ட புகைப்படங்களை பதிவிடுவது, அறிமுகம் இல்லாத நண்பர்களை இணைப்பது, அதிக லைக் வாங்க வேண்டும் என்பதற்காக அபாய செல்ஃபி எடுப்பது, தனிப்பட்ட முகவரி, செல்போன் எண் அளிப்பது போன்றவை பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துக்கின்றது.


• பேஸ்புக் பயன்படுத்துவதால் தங்களுக்கு ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். மற்றவர்களை விட பேஸ்புக்கில் அதிக லைக் வாங்க வேண்டும், அதிக படங்கள் பகிர்ந்துகொள்வது பெருமை என்று நினைக்கிறார்கள். இது மனநலத்தை பாதிக்கும்.


• பெண்களின் படங்களை, குரூப்களில் லைக்ஸ்-காக பலர் பகிர்கின்றார்கள்.


• வேறு பெண்களின் படத்தைப் பயன்படுத்தி போலி கணக்குகள் ஆரம்பித்து, அதன் மூலம் வேறு ஆண்களுடன் தகாத முறையில் பழகுதலும் பெரும் விளைவை ஏற்படுத்தும்.



சமூக வலைத்தளங்களைப் பாதுகாப்பாக பயன்படுத்தும் முறை!!

• இமெயில், பேஸ்புக், ட்விட்டர் என்று உங்கள் இணையதளத்தில் உள்ள கணக்குகளுக்கு வைக்கும் பாஸ்வேர்டை யாருக்கும் பகிராதீர்கள்.


• பாஸ்வேர்டில் எண்கள் மற்றும் சிறப்பு குறியீடுகள் (@) போன்றவற்றை சேர்ப்பது நலம். பாஸ்வேர்டுகள் திருடப்படாமல் பாதுகாக்க இது உதவும்.


• உங்கள் பெற்றோர்கள் அல்லது உடன்பிறந்தவர்களின் பெயர்களை பாஸ்வேர்டாக வைக்காதீர்கள். எளிதில் உங்களது பாஸ்வேர்டை எதிரிகள் கண்டுபிடித்து விடுவார்கள்.


• தாங்கள் செல்லும் இடங்களை உடனுக்குடன் பதிவிடுவதும் ஆபத்துதான். தனக்கும் தன் குடும்பத்தினர் மட்டும் அறியக்கூடிய தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.


• இணையத்தில் உங்களது சொந்த தகவல்களை கேட்கும் தளங்களுக்குள் செல்லாமல் இருப்பது நல்லது.


• புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றும் போது கூடுதல் கவனம் தேவை. உங்கள் சமூக வலைத்தளங்களில் allow, ok போன்று பட்டன்களை கிளிக் செய்வதற்கு முன்னால் எதற்காக உங்களிடம் அனுமதி கோருகிறார்கள் என்பதை அறிந்த பிறகே கிளிக் செய்யுங்கள்.


• சொந்தக் கருத்துகளை பதிவிடும் போது அதிக கவனம் தேவை. உங்களுக்கு வந்த தகவலையும் அப்படியே பகிராமல் அதன் உண்மைத் தன்மை உணர்ந்து ஆராய்ந்து பிறகு பகிருங்கள்.


• இரவு 9 மணிக்கு மேல் வீட்டில் வைஃப்பை பயன்படுத்துவதை பெரியோர்கள் தவிர்த்துவிட்டு குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் பேசுவதை வழக்கமாக கொள்வது நல்லது.


• ஒருவர் தனது பதிவுகளுக்கு, படங்களுக்கு அதிகமாக தொடர்ந்து லைக்ஸ் மற்றும் கமண்ட்ஸ் கொடுத்து வந்தால் எளிதாக அந்த நபருடன் பழக ஆரம்பிப்பது, அந்த நபரை யார், எவர் என அறியாமல் தனது நட்பு வட்டாரத்தில் சேர்த்து கொள்வது ஆபத்து ஆகும்.




வீட்டில் உள்ள பெண்களுக்கான விழிப்புணர்வு!!

• வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும்போது கதவை உள்பக்கம் பூட்டிக்கொள்ள வேண்டும். கதவை திறந்து போட்டுக்கொண்டு வீட்டு வேலைகளை செய்யக்கூடாது.


• வீட்டில் உள்ள பெண்கள் வீட்டு கதவின் முன்புறம் கண்டிப்பாக 'லென்ஸ்' பொருத்தினால் நல்லது.


• மர கதவுக்கு முன்பாக கண்டிப்பாக இரும்பு கிரில் கதவுகள் பொருத்த வேண்டும்.


• ஷாப்பிங் அல்லது மார்க்கெட் செல்லும்போது அங்கு புதிய நண்பர்கள் யாரிடமாவது பழக்கம் ஏற்பட்டால் உடனே அவர்களை வீட்டிற்கு அழைத்து வராதீர்கள்.


• வீட்டில் உள்ள பெண்கள் புதிதாக பழகுபவர்களிடம் வீட்டில் தனியாக இருக்கும் விஷயத்தையும் சொல்லாதீர்கள்.


• தங்கள் வீட்டில் உள்ளவர்கள் எப்போது அலுவலகம் செல்வார்கள், எப்போது வீடு திரும்புவார்கள் போன்ற விஷயங்களையும், வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் செல்லும் விஷயங்களையும் புதிதாக பழகுபவர்களிடம் பெண்கள் சொல்லக்கூடாது.


• வீட்டில் உள்ள பெண்கள் கொள்ளையர்களிடம் நகைகளை கொடுக்கமாட்டேன் என்று சத்தம் போட்டு ஆபத்தை வரவழைப்பதைவிட, புத்திசாலித்தனமாக பேசி அவர்களை வீட்டிற்குள் தள்ளி கதவை பூட்டிவிடலாம் அல்லது மிளகாய் பொடி போன்ற பொருளை கொள்ளையர்களின் கண்ணில் தூவி சமாளிக்கலாம்.


• அறிமுகம் இல்லாத நபர்களையோ அல்லது ஓரளவு தெரிந்த நபர்களையோ சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வீட்டிற்குள் அனுமதிக்க நேர்ந்தால் அவர்கள் குடிநீர் கேட்டால் கொடுக்காதீர்கள். அவர்கள் எதற்காக வந்தார்களோ அந்த விஷயத்தை மட்டும் பேசிவிட்டு உடனடியாக வெளியே அனுப்பிவிடுங்கள்.


• வீடுகளில் வயதான பெண்கள் தனியாக இருக்கும் நிலை ஏற்பட்டால் பணம் மற்றும் நகைகளை கண்டிப்பாக வங்கி லாக்கரில் வைக்க வேண்டும். யாராவது மர்ம நபர்கள் புகுந்து வயதான பெண்களை எளிதில் ஏமாற்றி நகை மற்றும் பணத்தை எடுத்து செல்வதை இதன் மூலம் தடுக்கலாம்.


• வீட்டு வேலைக்காரர்கள், கார் டிரைவர்கள், சமையல்காரர்களை நியமிக்கும்போது அவர்களின் பெயர் உள்பட முழு விவரங்களையும் சேகரிக்க வேண்டும்.


• அவர்களுடைய புகைப்படம் மற்றும் கைரேகையை எடுத்து வைப்பதும் நல்லது. கைரேகையை எடுத்து வைத்தால் திருடும் எண்ணமுள்ள வேலைக்காரர்கள் கூட பயந்து போய் திருடமாட்டார்கள்.


• வீட்டில் உள்ள பெண்கள் பால்காரர், பேப்பர்காரர், காய்கறி விற்பவர், கேபிள் டி.வி. ஆபரேட்டர், சமையல் கியாஸ் சிலிண்டர் கொண்டு வருபவர், சலவைகாரர் போன்றவர்களின்மீது நம்பிக்கை இல்லாமல் கருதும் பட்சத்தில், அவர்களின் பெயர்கள், முகவரி போன்றவற்றை தெரிந்து வைத்துக் கொள்ளலாம். அவர்களை பெரும்பாலும் வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருப்பது நல்லது. வெளியில் வைத்தே அவர்களை அனுப்பிவிடுவது சால சிறந்தது.


• ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், போலி சாமியார்கள், நகை பாலிஷ் போடுபவர்கள், பழைய பொருட்கள் வாங்குபவர்கள் போன்ற நபர்களை தனியாக இருக்கும் பெண்கள் தங்கள் வீட்டிற்குள் அனுமதிக்க கூடாது.


• அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருக்கும் பெண்களை, பார்வையாளர்கள் யாராவது பார்க்க வந்தால், அவர்களை காவலாளிகள் நன்கு விசாரிக்க வேண்டும். அந்த பார்வையாளர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.


• பார்வையாளர்கள் வந்திருக்கிறார்கள் என்ற விஷயத்தை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தகவல் சொல்லி அவர்கள் அனுமதித்தால் மட்டுமே பார்வையாளர்களை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டு
ம்.

தொகுப்பு  : அ. தையுபா  அஜ்மல்.

Tuesday, 19 April 2022

சவூதி அரேபியா செல்லும் உம்ரா பயணாளிகளுக்கு ஆக்கபூர்வமான, முத்தாய்ப்பான 16 யோசனைகள்.!!!

சவூதி அரேபியாவில்உம்ரா(மக்கா) / ஜியாரத்(மதீனா) செல்பவர்களின் கவனத்திற்கு ஒறு தவகல்!!!

மக்காவின் கஅபா இல்லத்தை தரிசிக்க வாய்ப்பு கிடைப்பது என்பது, அல்லாஹ்வின் மிகப்பெரும் கருணை மற்றும் அருளினால் மட்டுமே அமையப்பெறுகின்ற கொடுப்பினை !!!

அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்பவர்கள், தங்கள் பயண ஏற்பாடுகளின் போதும், பயணத்தின் போதும் கவனம் செலுத்த தவறி விடுவதைப் பற்றிய பதிவுதான் இது.

உம்ரா என்றவுடன், நமக்கு உடனே நினைவுக்கு வருவது, நமது *சொந்தக் காரிலேயே பயணம் செய்யலாம்* என்பது தான். அடுத்து தான், பஸ்ஸில் மற்றும் விமானத்தில் போவதைப் பற்றி நினைப்போம். இதில், *தன் சொந்தக்காரில் குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ பயணிப்பவர்களைப் பற்றியது தான் இந்தப் பதிவு..

சரி, எப்படி/எதில் பயணிப்பது என்பதை முடிவு செய்தவுடன் நாம் தடபுடலாக ஏற்பாடுகளை செய்ய ஆரம்பிப்போம். துணிமணிகள், உம்ரா துணி எடுத்து பைகளில் வைத்து தயாராகி விடுகிறோம். பொதுவாக, வார விடுமுறையில் தானே புறப்படுவோம். அப்பொழுது, புறப்படும் முந்தைய இரவில் தான் பேக்கிங் செய்வோம். அன்றைய இரவு தூங்க நேரமாகும். களைப்பில் தூங்கி எழுந்து, அலுவலகம் சென்று, வழக்கம் போல், மாலை வீடு திரும்ப நேரமாகும் அல்லது அவசரம் அவசரமாக வேலைகளை முடித்துக்கொண்டு, அலுவலகத்தில் இரண்டு மணி நேரம் முன்னதாகவே பெர்மிஷன் வாங்கி வீட்டிற்கு வந்து சேர்வோம்.

முந்தைய இரவு லேட்டாக தூங்கியது ஒரு புறம். குறைவான தூக்கம் மறுபுறம். பகலில் அதிகப்படியான அலுவலக வேலைப்பளு கூடவே இருக்கும். நோன்பு மாதம் வேறு. உடல் அசதி, நாள் முழுவதும் இருந்த பசி, தாகத்தின் தாக்கம், இஃப்தார் திறந்தவுடன் பயணம் அல்லது இரவு தராவீஹ் தொழுகை தொழுதவுடன் பயணம் அல்லது அதிகாலை ஃபஜ்ர் தொழுகை நேரத்தில் பயணப் புறப்பாடு.

இவைகளெல்லாம், எவ்வளவு திடகாத்திரமான ஆளாக இருந்தாலும், எவ்வளவு கார் ஒட்டும் அனுபவசாலியாக இருந்தாலும், நம்மை கொஞ்சம் அசைத்துப் பார்க்கும் விஷயங்கள். 

அதில், நம்மவர்களிடம் இல்லாத பழக்கம் என்னவென்றால், பின்னால் உட்காருபவர்கள் சீட் பெல்ட் அணிவதில்லை. காரில் ஏறி உட்கார்ந்தவுடன், வண்டி ஒட்டுபவர் தவிர பலரும் தூங்கி விடுகின்றனர். ஏதாவது பயானையோ அல்லது தேவைப்படுகின்ற ஒன்றைக் கேட்டுக்கொண்டோ பயணிக்கும், காரை ஒட்டிக்கொண்டிருப்பவருக்கு நேரம் ஆக, ஆக  அவரைக்கேட்காமலேயே, அனிச்சை செயலாக, அசதியும், தூக்கமும் பற்றிக் கொள்ளும். 

இடை இடையே நிறுத்தி நிறுத்தி, டீ குடித்துக் கொண்டும், காலாற கொஞ்சம் நடந்து விட்டு கார் பயணத்தை தொடரும் புத்திசாலிகள் இருக்கத்தான் செய்தாலும், சராசரியாக, பெரும்பாலும் அனைவரும் அப்படி செய்வதில்லை.

அதிகாலை ஃபஜ்ருக்கு மக்காவிற்குள் சென்று ஃபஜ்ர் தொழுகையை தொழுது விட வேண்டும் என்ற அவசரத்தில், வேக வேகமாக வேறு காரை ஒட்டிச் செல்வார்கள். 

பலருக்கும் தெரியாத விஷயம் என்னவென்றால், பெட்ரோல் பங்குகளில் (முன்னர் இருந்தது, தற்பொழுது தெரியவில்லை) 25 ரியால்கள் கொடுத்தால், ஒரு மணி நேரத்திற்கு வாடகைக்கு ரூம் கொடுப்பார்கள். ஒரு கட்டில்/பெட் இருக்கும். டாய்லெட் இருக்கும். கொஞ்சம் அவ்வளவு சுத்தமில்லாமல் இருந்தாலும், சூழ்நிலையைக் கருதி, நம் வீட்டில் இருந்து எடுத்துச் செல்லும் ஒரு படுக்கை விரிப்பை, அந்த கட்டில் பெட்டில் விரித்து, களைப்பு நீங்க, ஒரு குட்டித்தூக்கம் போட்டு விட்டு, அசதி போனவுடன், பயணத்தை தொடர்ந்தால், இடையே தூக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்த அபாயகரமான சில விநாடிகள் கண் அயர்வதற்கான வாய்ப்பும் இல்லை. ஒரு விநாடி கண் அயர்ந்தால் கூட, நாம் பயணிக்கும் கார் விபத்துக்குள்ளாகலாம், ஏன், உயிர் இழப்புகளைக் கூட சந்திக்க நேரிடும். 

வருடா வருடம், குறிப்பாக ரமளான் மாதத்தில், சில விபத்துகள், உயிர் இழப்புகள் பற்றிய செய்திகளையும் கேட்டுக் கொண்டுத் தான் இருக்கிறோம்.

ஆனால், இது குறித்து யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை. இந்த சின்ன சின்ன விஷயங்கள் குறித்து கவனம் செலுத்துவதும் இல்லை.

சரி, ஒரு வழியாய், தாயிஃப் நகரில் இஹ்ராம் அணிந்து, பயணித்து புனித மக்கா மாநகரம் சென்றடைவோம். பயணக்களைப்போடு, உம்ராவையும் முடித்து விட்டு, முடியைக் களைந்து, ஏதோ ஒன்றை காலை உணவாக சாப்பிட்டு விட்டு, ஒரு குட்டித்தூக்கம் ஒன்றைப் போட்டு விட்டு,  அலாரம் வைத்து எழுந்து, சின்ன காக்காய் குளியல் போட்டு விட்டு, அவசரம் அவசரமாய் கிளம்பி, ஜும் ஆ தொழுகைக்கு கிளம்பி விடுவோம்.

அடுத்து என்ன, ஜும் ஆ தொழுத உடன், கப்ஸா சிக்கன் அல்லது அல்பெய்க் சிக்கன் சாப்பிடுவோம். அடித்துப் போட்ட மாதிரி ஒரு தூக்கம் போடுவோம். அஸர் நேரம் வந்து விடும். காரை ஒட்டி வந்தவர் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கவே முடியாத நிலையில், தட்டுத்தடுமாறி எழுந்து ஒளுச் செய்து விட்டு, தொங்கு தொங்கு என்று ஓட்டமும் நடையுமாய், கஅபாவுக்குச் சென்று அஸர் தொழுது விட்டு, களைப்போடு ஒரு நீண்ட நடையைப் போட்டு, ரூமிற்கு வருவார்.

மறுபடியும் ஒரு குட்டித்தூக்கம் அல்லது பேசிக்கொண்டு இருந்து விட்டு, டீ ஒன்றை குடித்து விட்டு, மீண்டும் க அபாவிற்கு நடந்தோ அல்லது ஹோட்டல் பஸ்ஸிலோ வருவோம்.


உடல் களைப்பு அதிகம் இருந்தால், ஹோட்டல் பக்கத்திலேயே இருக்கும் பள்ளிவாசலில் தொழுதுக் கொள்ளலாம்.

பயணாளிக்கு வழங்கப்பட்டிருக்கும் ஜம்/கஸ்ர் சலுகைகளை பயன்படுத்தலாம்அல்லது பள்ளிவாசலுக்கு தூரம் அதிகம் இருந்தால் ரூமிலேயே தொழுது கொள்ளலாம். ஆனால், அது போல, யாரும் செய்வதில்லை.


நமது நோக்கம் உம்ரா மட்டுமே!!. கார் ஓட்டுபவர்களுக்கு நிறைய ஓய்வு தேவை. ஏன் என்றால், அடுத்த நாள், உதாரணத்திற்கு ரியாத் நோக்கி பயணிக்க வேண்டுமென்றால், 859 கிலோமீட்டர் பயணிக்க வேண்டுமே! முடிந்த வரை, அலைச்சலைக் குறைத்துக் கொண்டு, ஓய்வு எடுக்க வேண்டும்.

இன்னும் சிலர் ஆர்வக்கோளாறில், காரை எடுத்துக் கொண்டு, ஜித்தா மாநகரை வலம் வர நினைத்து, மாலை புறப்பட்டு, ஜித்தாவை சுற்றிப் பார்த்து விட்டு, வரும் வழியில் அல்பெய்க் சாப்பிட்டு விட்டு, ரூமிற்கு வர இரவு தாமதமாகி விடும்.

மக்காவிலேயே தங்கி இருப்பவர்கள், இரவு சாப்பாடு முடித்து விட்டு, அதிக நேரம் இரவில் க அபா வளாகத்திலேயே உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்து விட்டு, தமிழகத்தில் இருந்து உம்ரா  வந்த உறவினர்களைத் தேடி பார்த்து பேசி விட்டு, இரவு 12:00 மணிக்கு ரூமிற்கு வருவார்கள்.

ஃபஜ்ருக்கும் தூங்கப்போகும் நேரத்திற்கும் இடையே சில மணி நேரங்கள் தான் இருக்கும். மீண்டும், அன்றைய இரவு குறைவான தூக்கமே! 

ஃபஜ்ர் பாங்கு சொல்லும் முன், தஹஜ்ஜுத் தொழ வேண்டும் என்று ஃபஜ்ருக்கு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் முன்னதாகவே கிளம்பி, கஅபாவிற்கு சென்று விடுவோம். 

கவனம் கொள்ளுங்கள். ஓய்வு என்பதே இல்லை, இது வரை.

மீண்டும் டீயைக் குடித்து விட்டு, குட்டித்தூக்கம் அல்லது சில மணி நேரங்கள் தூங்கி விட்டு, எழுந்து, குளித்து விட்டு, பேக்கிங் ஆரம்பிப்போம். துணி மணிகளை எடுத்து வைத்து, பேக்கிங் முடித்து விட்டு, காலை உணவு. பிறகு, உடனே ஷாப்பிங் முடித்து விட்டு, அவற்றை ரூமில் வைத்து விட்டுப் பார்த்தால், அப்பொழுது தான் பயணத்தவாப் ஞாபகத்திற்கு வரும். உடனே புறப்பட்டு பயணத்தவாபும், லுஹர் தொழுகையும் தொழுது விட்டு வரும் வழியில், கப்ஸா சாப்பிட ஹோட்டலுக்கு செல்வோம்.  பசி வயிற்றைப் பிடித்துக் கிள்ளும். ஏன் என்றால் நடந்த நடை அவ்வளவு தூரம். கிடைத்த சாப்பாட்டை ஒரு பிடி  பிடித்து, மூக்க முட்ட சாப்பிட்டு முடித்து விட்டு,  ரூமிற்கு வருவோம். உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு  என்று சொல்லுவது போல, காரை ஓட்டிக்கொண்டு வந்த அந்தக் குடும்பத்தலைவருக்கு ஒரு தூக்கம் வருமே, அது அவரைக் கொண்டு போய் பெட்டின் பக்கம் தள்ளும். ஆனால், அதை சமாளித்து, வெளிக்காட்டிக் கொள்ளாமல், அடுத்த நாள் காலை வேலைப் பற்றி வரும் ஞாபகம்  அல்லது கேள்வி கேட்டே துளைத்து எடுக்கும் மேலாளரின் முகம் சற்றே நினைவுக்கு வந்தவுடன், காரை எடுத்துக் கொண்டுக் கிளம்ப -  குடும்பத்தை ஒரு விரட்டு விரட்டி, சத்தம் போட்டு, எல்லோரையும் கிளப்பிக் கொண்டு, ரூம் சாவியை ரிஷப்ஷனில் கொடுத்து விட்டு, காரை ஸ்டார்ட் செய்வோம். எல்லோரும் மறக்காமல் செய்வது, சாப்பிட்ட கப்ஸா மறக்காமல் கொடுக்கும் தூக்கத்தைக் கலைக்க, சுலைமானி டீ ஒன்றை கிளம்பும் வழியில் குடிப்பது தான்.

பேசிக்கொண்டே வரும் பயணத்தில், குடும்ப உறுப்பினர்களில் முதலில் தூங்குவது பிள்ளைகள் தான். அடுத்து மனைவியும் அசதியில் தூங்க ஆரம்பித்து விடுவார். பாவம், அந்தக் கணவர். கவனமாய் காரை ஒட்ட வேண்டுமே! ஏதாவது ஒன்றை கார் டேப்பில் கேட்டுக்கொண்டோ அல்லது மொபைலில் கேட்டுக்கொண்டோ தம் பயணத்தைத் தொடருவார்.

இடையே, எங்காவது அவர்  ஒரு விநாடி கண் அசந்தால், அவ்வளவு தான். அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும். அப்படி நடக்கும் பல செய்திகளை கேள்விப்படுகிறோம். ' விதி ' மற்றும் ' மரணம் என்பதை எல்லோரும் சுவைத்தே தீர வேண்டும் என்பதிலும் அதீத நம்பிக்கை வைத்திருப்பவர்கள் தாம் நாம். இருந்தாலும், அல்லாஹ் தான் அறிவைக் கொடுத்து, சிந்திக்கச் சொல்லி, பயணத்திற்கு தேவையான ஒய்வையும் எடுக்கச் சொல்கிறான். 

உம்ரா பயணாளிகளுக்கு சில ஆக்கபூர்வமான யோசனைகள்!!!

1. உம்ரா முடித்து விட்டால், தொழுகைகளை தங்கியிருக்கும் ஹோட்டலுக்குப் பக்கத்தில் இருக்கும் பள்ளிவாசல்களில் தொழுது கொள்ளலாம்.

2. பயண நேரத்தில் கொஞ்சம் குறைவாக சாப்பிட்டுக் கொள்ளலாம்.

3. பயணத்தில் இடை இடையே நிறுத்தி டீ குடித்து விட்டு, காலாற ஒரு நடை நடந்து விட்டு பயணத்தை தொடரலாம்.

4. தூக்கம் சற்றே எட்டிப்பார்க்கும் ஆரம்ப நேரத்தில், அருகில் வரும் பெட்ரோல் பங்க்கில் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் தூங்கி விட்டு பயணத்தைத்ப் தொடரலாம். இந்த அரை மணி நேர அல்லது ஒரு மணி நேர தூக்கத்தேவையை உதாசீனப்படுத்தினால், கப்ரில் மறுமை வரை நிரந்தரமாக தூங்க நேரிடும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

5. திரும்ப வரும் பயணத்தில் அவசரம் காட்டாமல், நிதானமாக காரை ஒட்டிக்கொண்டு வர வேண்டும். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் லீவு எடுத்துக் கொண்டால், கொஞ்சம் நிதானமாக புறப்பட்டு, ரியாத் அல்லது தம்மாம் சென்றடையலாம்.

6. வரும் வழியில், இருக்கும் ஹோட்டல்களில் ஒரு மணி நேரத்திற்கு அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ரூமை வாடகைக்கு எடுத்து, தூங்கி விட்டு வரலாம்.

7. முன்னரே திட்டமிட்டு, எல்லாவற்றையும் ஒரு நாளைக்கு முன்னரே பேக்கிங் செய்து வைக்கலாம். பயணத்திற்கு முந்தைய நாள் இரவு, குறைந்தது 7 மணி நேரமாவது தூங்கி விட்டு, பயணத்தை தொடங்க வேண்டும்.

8. பயணத்தில் அவசியம் ஒரு 5 அல்லது 10 லிட்டர் கேனில் தண்ணீர் எடுத்துச் செல்வது மிகவும் நல்லது.

9. நீண்ட தூரப் பயணத்திற்கு காருக்குத் தேவையான சரிபார்த்தலை முன்கூட்டியே செய்து முடித்தல் வேண்டும்.

( ஃபில்டர், டயர் காற்று, ப்ரேக், டயர் கண்டிஷன், வைப்பர்கள்) 

10. பயணத்தில் வரும் குடும்பத்தவர்களில் குறைந்த பட்சம் ஒருவராவது தூங்காமல், கார் ஒட்டுபவரிடம் பேசிக்கொண்டே வர வேண்டும்.

11. காரின் பின்னால் உட்கார்ந்து வருபவர்களும், அவசியம் மறக்காமல் சீட் பெல்ட் அணிய வேண்டும்.

12. அதிகாலையில் பயணம் செய்வதை முடிந்தவரை தவிர்த்தல் நலம். திருடனுக்கும் தூக்கம் வரும் என்று சொல்லப்படும் அதிகாலை 03:00 மணி முதல் 05:00 மணி வரை ஓய்வெடுத்தல் தான் பயனுள்ளதாக இருக்கும். அஸர் தொழுகை நேரத்தில், குறிப்பாய் சாப்பிட்ட பின் கொஞ்ச நேரம் கழித்து, மாலை 04:00 மணிக்கு ஒரு அசத்து அசத்தும். அதற்கு முன்னதாக, ஒரு குட்டித்தூக்கம் தூங்கி விட்டு காரை ஓட்டுதல் நலம்.

13. நோன்பு வைத்துக் கொண்டு பயணிப்பதில் பல சிரமங்கள் உள்ளன. சீக்கிரம் களைப்பு வந்து விடும். குறிப்பாய், ஸஹர் செய்த உடனே சரியான தூக்கமும் இல்லாமல், காரை ஓட்டகூடாது. நிச்சயம் தூக்கம் வரும்.

14. புதிதாக கார் ஓட்டுபவர்கள், கூட அனுபவசாலி வந்தால், சிக்கலான இடங்களில் அவரை ஓட்டச்சொல்லலாம். 

15. வாய்ப்பிருந்தால், கார் ஓட்டுபவர் ஒருவரை துணைக்கு அழைத்துக் கொண்டு போகலாம். ஆளுக்கு பாதி தூரம் காரை ஓட்டினால், ஓட்டுபவருக்கு சுமை குறையும்.

16. இப்படியான நல்ல யோசனைகளை உம்ரா செல்பவர்கள் கவனத்தில் கொண்டால், விபத்துக்களையும், உயிர் பலிகளையும் தடுக்கலாம்.

அல்லா  எல்லாம் அறிந்தவன்.

அவனே பாதுகாப்பு அளிப்பதில் சிறந்தவன்.

வல்ல அல்லாஹ், உம்ரா பயணம் செய்பவர்களின் பயணத்தை பாதுகாப்பானதாக ஆக்கி வைப்பானாக !!!

ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு . அஜ்மல் கான்.

Wednesday, 13 April 2022

Attestation Details for Tamilnadu Candidates.

Dear Friends,
If you are planning to go abroad for higher education, employment, business or migration, Talent Attestation can take care of all your certificate attestation formalities.
When a person from India goes abroad for jobs his certificate has to be authenticated by that country's embassy or consulate in India. Since there are a few lakh Indians working in GCC countries - Bahrain, Kuwait, Oman, Qatar, Kingdom of Saudi Arabia (KSA), and United Arab Emirates (UAE) it is mandatory for them to attest their documents in corresponding foreign embassies or consulates in India. Exactly attestation procedures depend on the type of the certificate and destination country. To get embassy or consulate attestation the document has to be attested by Govt. of India. It has two separate departments to take care of certificate attestation procedures, Home Department Authentication and Ministry of External Affairs (MEA).


Documents can be divided into 3 categories

Educational Documents :
These are the certificates obtained from school and college like SSLC/10th/CBSE, PDC/+2/HSC, Degree certificates like BA, Bsc, Bcom, BTech, BE, BBA, CA, MBBS, Post graduate certificates like MA, Msc, Mcom, MBA, MCA and other Diploma, Nursing and ITI certificates.

Non-Educational Documents :
This includes marriage, birth certificates, affidavit, power of attorney(POA), transfer and leaving certificates, medical, death, divorce, experience certificates.

Supporting Documents :
These documents has to be submitted along with the above mentioned documents for attestation. Exact number and type of supporting documents may vary from country to country. Some of the supporting documents are Mark lists, transcripts, registration, offer letter, passport copy, photo etc.

Procedure for attestation of Indian documents is as follows:
Home Department
Ministry Of external Affairs(MEA)
        Embassy Attestation


Check this sitewww.urogulf.com




TAMILNADU
CHENNAI





Certificate Attestation from CHENNAI
UROGULF ATTESTATION SERVICES PVT. LTD., 4TH FLOOR, LUKMAN MANZIL, 130, ANGAPPA NAICKEN STREET, PARRY'S CORNER, CHENNAI – 600 001, TAMIL NADU, INDIA. (LAND MARK: OPP. HIGH COURT, BEHIND TNSC BANK)
TEL: 044 25352868, 32533210, 09380591080


COIMBATORE
Certificate Attestation from COIMBATORE
UROGULF ATTESTATION SERVICES PVT. LTD., 1ST FLOOR, DOOR NO. 1111, OPP: PASSPORT OFFICE, NEAR THANDUMARIAMMAN KOIL, AVINASI ROAD, UPPILIPALAYAM, COIMBATORE – 641 018, TAMIL NADU, INDIA.
TEL: 0422 3243210, 09360114635

 Urogulf
 1 C, 2nd Floor, S.v.v. Arcade, C 55, Fourth Cross, Land Mark : Opposite To Bank Of Baroda, Khadims Show Room, Up Stair
 Thillai Nagar Main Road
 Trichy
 PINCODE- 620018
 E-MAIL- attestation@urogulf.com
 MOBILE- 09345474252, PH- 9364553210,0431



MADURAI
Certificate Attestation from MADURAI
UROGULF ATTESTATION SERVICES PVT. LTD., NO. 1, SECOND FLOOR, KHANA RUNA COMPLEX, ALAGAR KOIL MAIN ROAD, K. PUDUR, MADURAI – 625007, TAMIL NADU, INDIA. (LAND MARK: NEAR PUDU MARKET, OPP: GURU CYCLE)
TEL: 0452 3246510, 09381070385, 9380591080

Urogulf
 15, First Floor, Antony Calvin Tower, M.g.raaj Trade Park, Near New Bus Stand
 South Bypass Road
 Tirunelveli
 PINCODE- 627005


NAGERCOIL
Certificate Attestation from NAGERCOIL
UROGULF ATTESTATION SERVICES PVT. LTD., 173/25, SECOND FLOOR, PILLARS GATE, OPP: ANNA STADIUM, BALAMORE ROAD, NAGERCOIL, KANYAKUMARI, TAMIL NADU – 629001, INDIA.
TEL: 04652 312700, 09362128080

Wednesday, 2 March 2022

ஜாமீன் (Bail)என்றால் என்ன? எப்படி வாங்குவது?

 


நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும். விசாரணையில் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும். வழக்கமான ஜாமீன், முன் ஜாமீன், இடைக்கால ஜாமீன் என 3 பிரிவுகள் உள்ளன.

குற்றவியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தற்காலிகமாக விடுவிப்பதை பிணை அல்லது ஜாமீன் (Bail) எனக் கூறலாம். குற்றம்சாட்டப்பட்டவர் காவல்துறை பாதுகாப்பு அல்லது நீதிமன்றக் காவலில் இருக்கும்போது வழக்கறிஞர் உதவியுடன், 2 பேர் உத்தரவாதம் அளித்து வெளியே அழைத்து வருவது ஜாமீன். அதன்பிறகு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும். விசாரணையில் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும். வழக்கமான ஜாமீன், முன் ஜாமீன், இடைக்கால ஜாமீன் என 3 பிரிவுகள் உள்ளன.

இடைக்கால ஜாமீன் என்றால் என்ன?

இடைக்கால ஜாமீன் என்பது முன்ஜாமீன் மற்றும் வழக்கமான ஜாமீன் குறித்து முடிவெடுப்பதற்கு நீண்டகாலம் தேவைப்படும்போது, இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது.

முன்ஜாமீன் என்றால் என்ன?

ஏதாவதொரு பிரச்சனையில் அல்லது எதிராளிகள் பிணையில் வெளியில் வரமுடியாத வகையில் ஒரு பொய்யான வழக்கு ஒன்றை தொடர்ந்து, அந்த வழக்குகளில் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படும் சூழல் இருக்கும்பட்சத்தில், பாதிக்கப்பட்டவர் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். மாவட்ட நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் முன்ஜாமீன்கோரி முறையிடலாம். சி.ஆர்.பிசி சட்டப்பிரிவு 438-ன்படி அவருக்கு ஜாமின் வழங்கப்படும்.

முன்ஜாமீன் ரத்து செய்யப்படுமா?

முன்ஜாமீன் வழங்கும்போது ஒரு சில நிபந்தனைகள் ஜாமீன்கோரியவருக்கு நீதிமன்றம் விதிக்கும். அந்த நிபந்தனைகளை முறையாக கடைபிடிக்காதபோது அல்லது மீறினால் முன்ஜாமீன் ரத்து செய்யப்படும். புகார்தாரர் அல்லது விசாரணை தரப்பு முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி முறையிட்டு, அவர்கள் கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருந்தால், முன்ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்யும்.

முன்ஜாமீனில் இருக்கும்போது, ரெகுலர் ஜாமீன் எடுக்க வேண்டுமா?

ஏற்கனவே முன்ஜாமீனில் இருப்பவர்கள், நீதிமன்ற நடைமுறைகள் தொடரும் வரை வழக்கமான ஜாமீன்கோரி மனுத்தாக்கல் செய்யத்தேவையில்லை. நீதிமன்றம் முன்ஜாமீனை ரத்து செய்யாதபோது மட்டுமே இது பொருந்தும். சில வழக்குகளில் முன்ஜாமீன் மட்டுமே போதுமானது.

விசாரணைக் கைதியை அதிகபட்சம் எவ்வளவு நாட்கள் சிறையில் வைக்கலாம்?

குற்றவியல் சட்டம் 436 ஏ-ன்படி விசாரணைக் கைதி நீதிமன்றம் மூலம் ஜாமீனில் விடுவிக்கப்படலாம். அதாவது, குற்றம்சாட்டப்பட்ட வழக்கின் அதிகபட்ச தண்டனையில் பாதி காலம் சிறையில் இருந்திருந்தால், நீதிமன்றம் ஜாமினில் விடுவிக்க முடியும். ஒருவேளை, வழக்கில் தண்டனை நிரூபிக்கப்பட்டால், ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தைப்போக எஞ்சிய தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றத்தை செய்திருந்தால், ஜாமீன் கிடைக்குமா?

கிடைக்கும். ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீனில் வெளிவருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர் செய்த குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து நீதிமன்றம் முடிவெடுக்கும். அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க முடியும்.

ஜாமீன் கிடைக்கக்கூடிய வழக்குகளில் ஜாமீனுக்கு முறையிட வேண்டுமா?

ஜாமீன் வழங்கக்கூடிய வழக்கு என்றாலும், குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீன்கேட்டு முறையிட வேண்டும். ஜாமீன் வழங்கக்கூடிய வழக்காக இருந்தால், குற்றம்சாட்டப்பவர் நீதிமன்றத்தை அணுக தேவையில்லை. காவல்துறை அதிகாரியே ஜாமீன் வழங்கலாம்.

ஜாமீன் எப்போது வழங்கப்படாது?

தூக்கு தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடிய வழக்குகளில் கைது செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக போதுமான ஆதாரம் இருந்தால் ஜாமீன் வழங்கப்படாது. குற்றம்சாட்டபட்டவர் வெளியே சென்றால், வழக்கு தொடர்ந்தவருக்கு ஆபத்து விளைவிப்பார், சாட்சிகளை கலைத்துவிடுவார் என்ற நிலை இருந்தால், ஏற்கனவே ஏதேனும் ஒரு வழக்கில் தூக்குதண்டனை அல்லது ஆயுள் தண்டனை பெற்றிருந்தால், 7 ஆண்டுகள் அதற்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்திருந்தால், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குற்றங்களில் ஏற்கனவே தண்டிக்கப்பட்டிருந்தால் ஜாமீன் வழங்கப்படாது.

ஜாமீன் ரத்து:

ஜாமீனை எந்த நேரமும் ரத்து செய்வதற்கான அதிகாரம் நீதிமன்றத்திடம் உள்ளது. ஜாமீன் பெற்றவர் வழக்கில் இருந்து விடுதலை அடைந்ததுபோல் நடந்து கொள்ளக்கூடாது. வழக்கு தொடர்ந்தவரை மிரட்டுவது, சாட்சிகளை கலைப்பது அல்லது அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், ஜாமின் ரத்து செய்யப்படும். குற்றவியல் சட்டப்பிரிவு 437(5), 4399(2) ஆகிய பிரிவுகளின்படி ஜாமீனை ரத்து செய்து, குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியும்.

உக்ரெயின் போர் : ரஷ்யாவுக்கு தற்போதுள்ள நேட்டோ மற்றும் உக்ரேனுடன் பிரச்னை என்ன?



சோவியத் ஒன்றியம் என்ற பரந்த சாம்ராஜ்யம் இருந்த காலத்தில், அதற்குள்தான் கட்டுண்டு கிடந்தது இந்த உக்ரெயின்..

ஆனால் அது உடைந்தபோது, கட்டை அறுத்துக் கொணடு, வெளியே வந்து விட்டது உக்ரெயின். ரஷ்யாவுக்கு அடுத்ததாக,பூகோள ரீதியாக, சோவியத் ஒன்றியத்தின் மிகப் பெரிய நாடு உக்ரெயின்தான்.பரப்பளவில் ரஷ்யாவுக்கு அடுத்த இடம், (6,03,628 சதுர கிலோமீட்டர்) .கிழக்கு ஐரோப்பாவில் உள்ள இங்கு மக்கள் தொகை 4.13 கோடி. பொருளாதாரத்தில் வளரும் நாடு !. மனித ஆற்றல் வளர்ச்சியில், உலகத்தில் 74-வது இடத்தில் இருக்கிறது.வளமான விவசாய நிலம் இருப்பதால் வேளாண் பொருள் ஏற்றுமதியில் முக்கியமான நாடாகத் திகழ்கிறது.

ஏன் இந்த நாட்டைச் சொந்தங் கொண்டாட வல்லரசுகள் ஆர்வம் காட்டுகின்றன என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.


நேட்டோ என்றால் என்ன?

நேட்டோ என்பது வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 12 நாடுகள் சேர்ந்து 1949இல் இந்த ராணுவ கூட்டு அமைப்பை உருவாக்கின.இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர இணங்க வேண்டும்.

ஐரோப்பாவில் பனிப்போர் காலத்துக்குப் பிந்தைய ரஷ்ய விரிவாக்க அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கத்தையே இந்த அமைப்பு குறிக்கோளாகக் கொண்டிருந்தது.

1955இல் நேட்டோ கூட்டுப்படைக்கு எதிர்வினையாற்றும் வகையில் கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகள் கூட்டணியுடன் ரஷ்யா வார்சா ஒப்பந்தத்தை ஏற்படுத்தி தனியாக ராணுவ கூட்டணியை அமைத்தது
.


க்ரேனுடன் ரஷ்யாவுக்கு தற்போதுள்ள பிரச்னை என்ன?

ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளில் அமைந்துள்ள முன்னாள் சோவியத் குடியரசின் அங்கமாக இருந்ததுதான் யுக்ரேன்.

அந்த நாடு இதுவரை நேட்டோவில் உறுப்பினர் ஆகவில்லை. ஆனாலும், அது நேட்டோ நேச நாடாக விளங்கி வருகிறது. அப்படியென்றால், எதிர்காலத்தில் எப்போதாவது ஒரு கட்டத்தில் நேட்டோ அமைப்பில் உறுப்பினராக சேர யுக்ரேன் அனுமதிக்கப்படலாம் என கருதலாம்.

ஆனால், அப்படியொன்று நடக்கவே கூடாது என்ற உத்தரவாதத்தை மேற்கு நாடுகள் தர வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது.எனினும், நேட்டோவுடன் 
க்ரேன் நட்பு பாராட்டுவதற்கு தடை விதிக்க அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் மறுத்து வருகின்றன. தமது பாதுகாப்பு கூட்டாளிகளை சுயமாக தேர்வு செய்யும் சுதந்திரம் இறையாண்மை மிக்க நாட்டுக்கு இருக்க வேண்டும் என்று அந்த நாடுகள் கூறி வருகின்றன.

மேற்கு நாடுகளின் ராணுவ கூட்டணியில் இணையும் தமது இலக்கில் 'வளைந்து கொடுத்துப் போகவே' 
க்ரேன் விரும்புவதாக பிரிட்டனுக்கான யுக்ரேனிய தூதர் வாடிம் ப்ரிஸ்டெய்க் சமீபத்தில் கூறினார்.


நேட்டோ கடந்த காலத்தில் என்ன செய்தது?


2014ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 
க்ரேனியர்கள் தங்கள் 'ரஷ்ய ஆதரவு' அதிபரை பதவியில் இருந்து அகற்றியபோது, யுக்ரேனின் தெற்கு கிரைமிய தீபகற்பத்தை தன்னுடன் ரஷ்யா இணைத்துக் கொண்டது. கிழக்கு யுக்ரேனின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றிய தமது ஆதரவு பிரிவினைவாதிகளையும் ரஷ்யா ஆதரித்தது.

அந்த விவகாரத்தில் நேட்டோ தலையிடவில்லை. ஆனால் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நேட்டோ அதன் படைகளை முதல் முறையாக நிலைநிறுத்தி எதிர்வினையாற்றியது. இந்த படைகள் நேட்டோவின் பிராந்தியத்தை ரஷ்யா ஆக்கிரமிக்க முனைந்தால், அந்த நிலைமையை செயலிழக்கச் செய்யும் வகையில் இந்த நேசப் படைகளின் தன்மை வடிவமைக்கப்பட்டுள்ளன.

க்ரேனுக்கு நேட்டோ அளித்த வாக்குறுதிகள் என்ன?

நேட்டோவின் கிழக்கு எல்லைகளை வலுப்படுத்த அமெரிக்கா கிட்டத்தட்ட 3,000 கூடுதல் துருப்புக்களை போலந்து மற்றும் ருமேனியாவுக்கு அனுப்பியுள்ளது. மேலும் போரை எதிர்கொள்ளும் 8,500 துருப்புக்களையும் தயார் நிலையில் வைத்துள்ளது. எனினும், க்ரேனுக்குள் அவற்றை அனுப்பும் திட்டத்தை இன்னும் நேட்டோ கொண்டிருக்கவில்லை.

இதேவேளை, யுக்ரேனுக்கு ஜாவெலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், ஸ்டிங்கர் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட 200 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்களை நேட்டோ அனுப்பியுள்ளது. இது தவிர, அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்களை யுக்ரேனுக்கு பிற நேட்டோ நாடுகள் அனுப்பவும் அனுமதித்துள்ளது.

க்ரேனுக்கு குறுகிய தூர இலக்கை தாக்கும் திறன் கொண்ட 2,000 பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை பிரிட்டன் வழங்கியுள்ளது. மேலும் போலந்திற்கு கூடுதலாக 350 துருப்புக்களையும், எஸ்டோனியாவுக்கு 900 கூடுதல் துருப்புக்களை அனுப்பி தமது பலத்தை இரட்டிப்பாக்கியிருக்கிறது பிரிட்டன்.

இது தவிர, தெற்கு ஐரோப்பாவுக்கு பிரிட்டன் விமானப்படையின் மேலதிக போர் விமானங்களையும் கிழக்கு மத்திய தரைக்கடலில் உள்ள நேட்டோ போர்க்கப்பல்களுக்கு உதவியாக கடற்படை கண்காணிப்பு கப்பல்களையும் பிரிட்டன் அனுப்பியிருக்கிறது.

க்ரேனில் ரஷ்ய படையெடுப்பால் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டால், ஆயத்த நிலையில் இருக்குமாறும் 1,000 துருப்புக்களுக்கு பிரிட்டன் உத்தரவிட்டுள்ளது.டென்மார்க், ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தும், கிழக்கு ஐரோப்பா மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளன.

ருமேனியாவில் நேட்டோ போர்க் குழுவை வழிநடத்துவதற்காக அங்கு தமது படைகளை அனுப்ப பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. ஆனால் இதன் விவரங்களை விரிவாக பட்டியலிட இன்னும் பல வாரங்கள் ஆகும் என்று நேட்டோ கூறியிருக்கிறது.


உக்ரெயின் நாட்டு மக்கள் நிலைப்பாடு என்ன?


இவர்கள் தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்தவே விரும்புகின்றனர். தடையற்ற வர்த்தகம், முதலாளித்துவப் பொருளாதாரம், அதிக ஜனநாயக உரிமைகள், மேற்கத்திய நாடுகளின் நுகர்வுக் கலாச்சாரம், பொழுதுபோக்குகள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட அவர்கள் பழைய சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பெட்டியான வாழ்க்கை முறையிலிருந்து சுதந்திரமான வாழ்க்கைக்கு தாவ ஆசைப்படுகின்றனர். ஒன்றியம் என்பதே கேள்விக்குறியாகிய பின்னர், அவர்களது ஆளுமைக்குள் வாழ இவர்கள் பின்னிற்கிறார்கள்..

சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி,கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப்போவதால் உக்ரைனை ரஷ்யாதன்னுடைய அங்கமாகவே கருதுகிறது.ஆனால் மீண்டும் சிறைப்பட உக்ரெயின் தயாராக இல்லை.


ரஷ்யா எதைப் பற்றி கவலைப்படுகிறது?


மேற்கத்திய சக்திகள் ரஷ்யா மீது அத்துமீறி நுழைவதற்கு நேட்டோ அமைப்பைப் பயன்படுத்துவதாக அதிபர் புதின் கூறுகிறார். மேலும், கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ தனது ராணுவ செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

நேட்டோ கிழக்கு நோக்கி விரிவடையாது என்று 1990இல் அளித்த உத்தரவாதத்தை அமெரிக்கா மீறி விட்டதாக அதிபர் புதின் நீண்ட காலமாக வாதிட்டார்.ஆனால், ரஷ்யாவின் கூற்றுகளை நிராகரிக்கும் நேட்டோ அமைப்பு, ரஷ்யாவுடனான எல்லையை பகிரும் தமது உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை வெகு குறைவு என்றும் அவற்றுடனான தமது கூட்டணி தற்காப்பு அடிப்படையிலானது என்றும் தெரிவித்துள்ளது.

பன்னாட்டு போர்த்தளவாட துருப்புகள் அடங்கிய நான்கு படையணிகளை எஸ்டோனியா, லாத்வியா, லிதுவேனியா, போலாந்து ஆகியவற்றில் நேட்டோ கொண்டிருக்கிறது.உறுப்பு நாடுகளின் வான் எல்லைக்குள் ரஷ்ய போர் விமானம் ஊடுருவினால் அதை தடுக்கும் வகையில் வான் கண்காணிப்பையும் பால்டிக் நாடுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ விரிவுபடுத்தியுள்ளது.இந்த படைகள் வெளியேற்றப்பட வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது.

இன்றையநிலை :கடந்த 6 நாட்களாக நடந்து வரும் தாக்குதலில் 6 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கெர்சான் நகரை, ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளதாக அம்மாகாண கவர்னர் கூறியுள்ளார். ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் இருந்து 3.68 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மால்டோ, போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


என் கருத்து :

ஐரோப்பாவிலிருந்தும் மத்திய ஆசியாவிலிருந்தும் அமெரிக்காவை வெளியேற்றத் துடிக்கும் ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் பொதுவான எண்ணமாக அமெரிக்க எதிர்ப்புணர்வு இருப்பதால்,இரண்டும் இணைந்து செயல்படுகின்றன.இதில் சீனா தலையிடுவது தேவையற்ற ஓர் இணைப்பு

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா இன்னொரு ஜனநாயக நாடான உக்ரைனனுக்கு ஆதரவு தராமல் பத்திரிக்கை சுதந்திரம் கூட இல்லாத சர்வாதிகார நாடான ரஷ்யாவிற்கு மற்ற கூட்டாளி சர்வாதிகளான சீனா வடகொரியா பெலாரஸ் உடன் சேர்ந்து வால்பிடிப்பது வெட்கக்கேடு. நண்பனாய் இருந்தாலும் தவறு செய்தால் தவறு என முகத்திற்கு நேர் சொல்பவன்தான் உண்மை நண்பன் இந்தியா வரலாற்று பிழை செய்வதை நினைத்து ஒரு இந்தியனாய் ஒரு மனிதனாய் வெட்கி தலைகுணிகிறேன் யாரும் அனு ஆயுதம் வைத்திருக்க வேண்டாமென தன்னிடம் இருந்த கடைசி அணு ஆயுதத்தையும் 1995 இல் ரஷ்யாவிற்கு தந்த நாடு உக்ரெயின் இந்தியாவின் மனிதம் எங்கே போனது. உலகம் சர்வாதிகளிடம் போனாலும் பரவாயில்லை தன் தோலை காத்துக்கொள்ள வேண்டும் என்ற பச்சை சுயநலமே இந்தியாவின் நிலையில் உள்ளது.

உக்ரைன் ராணுவம் கேரளா மாணவர்களை அடித்து மோசமாக நடத்த காரணம் இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் நடு நிலை வகித்ததே காரணம் . இது பல இடங்களில் செய்தியாக வந்துள்ளது . போலந்து எல்லையில் உக்ரைன் ராணுவம் இது போல் நடந்து கொண்டுள்ளது . எல்லா இடங்களிலும் நாட்டை விட்டு வெளியேற உக்ரைன் மற்றும் ஐரோப்பியருக்கு முன்னுரிமை . ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாட்டை சேர்ந்தவர்களுக்கு மனித இனத்தில் கணக்கில் வராது.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா நடு நிலை . இது சரியான முடிவே . கடந்த பல வருடங்களாக பல முக்கிய விஷயங்களில் இந்தியாவுக்கு எதிரான நிலையும் , பாகிஸ்தானுக்கு ஆதரவு நிலையும் தான் உக்ரைன் எடுத்துள்ளது . பொக்ரான் அணு சோதனைக்கு எதிர்ப்பு , காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக கண்டனம், பாகிஸ்தானுக்கு பீரங்கி கொடுத்து உதவியது என பல்வேறு விஷயங்களை அடுக்கி கொண்டே போகலாம். பல இக்கட்டான நேரங்களில் இந்தியாவுக்கு உதவியது ரஷ்யாதான் . உக்ரைன் நாட்டு மக்களிலேயே பலர் ரஷ்யாவுக்கு ஆதரவு . இது அவர்கள் பிரச்சனை . இதில் இந்தியா ஏன் உக்ரைன் நாட்டை ஆதரிக்க வேண்டும் ? அமெரிக்காவின் பேச்சை கேட்டு ரஷ்யாவை எதிர்த்த உக்ரைன் அதிபர் தன்னுடைய தலையில் தானே மண்ணை அல்லி போட்டு கொண்டுள்ளார் .இவரது பிடிவாதத்தால் அப்பாவி மக்கள் துன்ப படுகிறார்கள் .தாய் நாடு ரஷ்யாவுடன் சண்டை போட்டு கொண்டு சாட்சிக்காரன் நீண்ட தூரத்தில் உள்ள அமெரிக்கா சொல் பேசி கேட்டு ஆடினால் பாதிப்பு யாருக்கு வரும். இதை உக்ரைன் அதிபர் புரிந்து கொள்ளவில்லை.

அமெரிக்க ஐரோப்பிய தலைவர்கள், ரஷ்யாவின் எல்லையை ஒரு மேற்குலக பாதுகாப்பு அரணாக மாற்றி வருவது. மிகப் பெரிய தவறு.இவர்களது படைகள் உக்ரெயினில் குவிக்கப்பட்டுள்ளன.

உக்ரெயின் எவ்வளவு பலப்படுத்தப்டுகிறதோ, அந்த அளவுக்கு மேலாக ரஷ்யா தன் இராணுவ பலத்தை, கிழக்கு உக்ரெயின் எல்லையில் அதிகரிப்பது நிச்சயம்.. யுத்தம் மிக மோசமான இரத்தக் களரியை உண்டுபண்ணும் என்பதை எவராலும் தடுக்க முடியாது. ரஷ்யாவுக்கும் மேற்குலகுக்குமான உறவு இதனால் நஞ்சூட்டப்படும்.

முதல் இரண்டு உலகப் போர்களைவிட மிகப் பெரிய போருக்கு உக்ரைன் விவகாரம் இட்டுச் செல்லும் என்று ஊடகங்கள் அஞ்சும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. இந்த பிரச்சனையில் பூகோள அரசியலும் சற்று உள்ளது. உக்ரைன் NATOவுடன் கூட்டு சேர்ந்தால் அமெரிக்க கடற்படை கருங்கடலில் கடை திறந்துவிடும். இது ரஷ்ய கருப்பு கடல் கடற்படைக்கு (Black sea fleet) நேரடி எதிர்ப்பாக அமைந்து விடும். ரஸ்யாவுக்கு நேரடி கடல் பாதை இல்லாததால் இருக்கும் பாதையில் அந்நிய சக்திகள் குறுக்கிடுவதை விரும்பவில்லை. இதற்கு ஒரே காரணம் உக்ரைன், ரஷ்யா இரண்டுமே அணு ஆயுதங்களைத் தயாரித்து வைத்துள்ளமைதான். மோதல் முற்றி போர் மூண்டால், அணு ஆயுதங்களை இரண்டும் பயன்படுத்தும் என்ற அச்சமும் ஏற்பட்டிருக்கிறது. இதனாலேயே உலக நாடுகள் உக்ரைன் விவகாரத்தை கவனமாக அவதானித்து வருகின்றன.

தவறு எங்கிருந்து வருகிறது , எப்படியான அனர்த்தங்கள் நிகழப் போகின்றன என்பது உங்களுக்கு இப்பொழுது புரிந்திருக்கும்..
.

ஆக்கம்  மற்றும்  தொகுப்பு : மு .அஜ்மல் கான்.