Wednesday, 22 February 2012

List of Top colleges and universities in India...

Dear All,
              Please find the below link and You can see which institutions rankings in India.

4 International Colleges & Universities

How to apply for UK courses..

Depending on your chosen type of UK study, there are several different ways to apply to UK institutions. Applications are easy and straightforward if you have the right information - you can even apply online for many UK courses.'

Applying for UK undergraduate study 
You can apply online through the Universities and Colleges Admissions System (UCAS). 






Find out more about applying for UK undergraduate courses in UCAS applications for UK study .

Applying for postgraduate or MBA study
Most UK institutions offer an online postgraduate application system that can be accessed through the institution’s own website.
There is no restriction on the number of different courses you can apply for, but you should submit your application well in advance of the course starting date. This might be as early as the October of the previous year, and although there may not be a formal deadline for applications, the earlier you apply the better. Courses start to become full during May, so an application before the end of April is encouraged.

Some institutions use the UK Postgraduate Application and Statistical Service (UKPASS) scheme. UKPASS allows you to apply for up to ten postgraduate programmes, track progress and receive and reply to offers. You can see which institutions are part of the scheme and find out more at the UKPASS website.
Applying for a UK English language course 

To apply for an English language course in the UK, you should contact the UK institution directly for an application form. Before submitting your application, you should think about: 
  • the number of teaching hours each week
  • course dates (some English language courses can be started at any time of the year; others have precise start dates)
  • class size
  • course fees (what is included and what extra costs there might be)
  • the type of accommodation offered and any associated costs
  • whether you can gain a qualification if you want to.
You should find most of this information on the ‘course details’ page of your chosen course in the course finder.

You can expect to receive a reply within two weeks of sending your application. If you are offered a place, you will receive a letter of acceptance that will confirm your accommodation requirements and a request for a deposit. Once the school have received your deposit they will send you a letter confirming your place - this letter can be used to support your visa application.

Applying to a UK independent school 

Some UK independent schools have formal application procedures and prefer pupils to apply up to a year before they wish to start. Other schools are more informal and welcome applications at any time.

Schools usually prefer new pupils to start at the beginning of the academic year in September, although most will agree to admit pupils at the start of a new term in either January or April.

You can apply directly to the school or through the Independent Schools Council International office (ISC International). ISC International offers placement, consultancy and advisory services to families overseas who are seeking to place a child or children in a UK independent boarding school.

You can find out more about applying to UK independent schools at the ISC website.

Applying for career-based and pre-university study 
For Higher National Diplomas (HNDs), you can apply online through the course finder or through UCAS. If you want to apply for any other career-based or pre-university programme you should apply directly to the UK institution that offers the course.

There is no standard closing date for applications to career-based courses in the UK. However, you should leave enough time to apply for a visa, make travel arrangements and find accommodation.

You can search for career-based and pre-university courses in the course finder.

Useful links:
Collection By M.Ajmal Khan.

கல்வி - இரண்டல்ல

கல்வியை இரண்டாகப் பிரிப்பவர்கள் நிச்சயமாக முழுமையான கல்வியாளராக இருக்க முடியாது. 
மனிதன்; கல்வி என்பதை பொதுவில் வைத்து உலகம், மார்க்கம் சார்ந்த அனைத்தையும் கற்கும்போதுதான் அவனால் முழுமையாக வாழமுடியும். இல்லையேல் பேணுதாலக வாழ்வதுபோல் நடிக்கத்தான் முடியும். அல்லாஹ் அனைத்தையும் அறிவான்.
கல்வியை இரண்டாகப் பிரிப்பவர்கள் நிச்சயமாக முழுமையான கல்வியாளராக இருக்க முடியாது. ஒன்றை இரண்டாகப் பிரித்து; அதில் ஒன்றை மட்டும் கற்பவர் எவ்வாறு எல்லாவற்றையும் விளங்கியவராக முடியும்?
"பித்அத்" கள் தலைவிரித்தாடுவதற்கு முக்கிய காரணமே உலகக்கல்வியை மூட்டை கட்டி வைத்ததுதான். உலக்கல்வியை ஒதுக்கித் தள்ளியதாலேயே இன்றைக்கு "பித்அத்து''கள் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.

தொழுகைக்கு "வுளூ" செய்வது விஞ்ஞானப்பூர்வமானது. மெய்ஞானத்தின் சுவையை அறிய அல்லாஹ் முதலில் விஞ்ஞானத்தைக் கற்றுக்கொடுக்கின்றான். மெய்ஞானம் பரிபூரணமானது, தூய்மையானது. அதனை தூய்மை படுத்துவது விஞ்ஞானம் என்றுகூட சொல்லலாம்.

மெய்ஞானம் மனம் சார்ந்தது எனில் விஞ்ஞானம் உடல் சார்ந்தது என்று சொல்லலாம். உடல் அசைவுகள் இல்லாமல் தொழுகையில்லை. மெய்ஞானத்தை கற்க விஞ்ஞான ரீதியாக உடல் அசைவுகள் தேவை. இல்லையெனில் மெய்ஞானத்தின் பாதையே இல்லாமல் போய்விடும்.

திருக்குர்ஆனில் மறுமையைப்பற்றி எந்த அளவுக்கு வசனங்கள் இடம் பெற்றுள்ளனவோ அதே அளவுக்கு இம்மையைப்பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. கல்வியை இரண்டாகப் பிரிப்பவர்கள் திருக்குர்ஆனை பாதி மட்டுமே விளங்க விரும்புகின்றவர்கள்.

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான், ‘அவர்கள் கண்களால் காண்பதையும் நம்புவார்கள், (கண்களால் காண முடியாத) மறைவானவற்றையும் நம்புவார்கள்’ .கண்களால் காண்பது விஞ்ஞானமெனில், கண்களால் காணாமல் நம்புவது மெய்ஞானம்.]

இந்த உலகின் மாபெரும் அற்புதம் நிச்சயமாக அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்வால், அகிலத்தின் அருட்கொடையான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூலம் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டியாக இறக்கியருளப்பட்ட ''திருக்குர்ஆன்'' தான். அதற்கு இணையான ஒரு அற்புதத்தை எவராலும் காண்பிக்க முடியாது.

திருக்குர்ஆன் ஓர் அற்புதம் மட்டுமல்ல, மனிதவர்க்கத்திற்கு அல்லாஹ்வால் அருளப்பட்ட மாபெரும் பரிசாகும். அதில் சொல்லப்படாத விஷயங்கள் எதுவுமேயில்லை. சிந்திப்பவர்களுக்கு அதில் கிடைக்காதது எதுவுமில்லை.

ஏழு கடல் நீரை மையாகப் பயன்படுத்தி, உலகெங்குமுள்ள மரம், செடி, கொடிகளை எழுதுகோலக பயன்படுத்தி, இந்த பூமியை விரிப்பாக்கி திருக்குர்ஆனுக்கு விளக்கமளிக்க முயன்றாலும் முடியாது. இதுபோன்று இன்னுமொரு மடங்கு கடல்நீரை பயன்படுத்தினாலும் சரியே, கடல் நீர்தான் வற்றிப்போகுமே தவிர அல்லாஹ்வின் வார்த்தைகள் அல்ல! அந்த அளவுக்கு பொருள் பொதிந்தது அல்லாஹ்வின் திருவேதம்.

திருக்குர்ஆனைப்பற்றி அல்லாஹ் என்ன சொல்கின்றான் என்பதைக் கவனியுங்கள்;

''(நபியே!) நீர் கூறுவீராக் ''என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும், என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி!'' (அல்குர்ஆன் 18:109)

''மேலும், நிச்சயமாக இப்பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுது கோல்களாகவும், கடல் (நீர் முழுதும்) அதனுடன் கூட மற்றும் ஏழு கடல்கள் அதிகமாக்கப்பட்டு (மையாக) இருந்த போதிலும், அல்லாஹ்வின் (புகழ்) வார்த்தைகள் முடிவுறா. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.'' (அல்குர்ஆன் 31:27)

உலகக் கல்வியாம் மார்க்கக் கல்வியாம்...
திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் உலகக்கல்வி மார்க்கக்கல்வி என்று இறைவன் பிரித்து சொல்லவே இல்லை. ஆனால் மொழி பெயர்க்கும்போது கல்வி என்று வருகின்ற இடங்களிலெல்லாம் மார்க்கம் என்பதை பிரேக்கட்டில் (அடைப்புக்குறியில்) போட்டு தங்கள் வாதத்துக்கு அதை பயன்படுத்திக் கொள்கிறனர், ஒரு சாரார்!

கல்லூரியில் கற்பதை மட்டுமே உலகக்கல்வி என்று தவறாக விளங்கி வைத்துள்ளோம். ஆலிம்கள் ஏழு வருடமோ, எட்டு வருடமோ அல்லது தற்போது சில இடங்களில் இருப்பதுபோல் ஐந்து வருடமோ ஓதி படித்துவிட்டு மதரஸாவை விட்டு வெளியே வந்த பிறகு உலகக்கல்வி சிறிதும் தெரியாமல் அவர்களால் ஒரு கட்டுரை எழுதமுடியுமா? அல்லது ஒரு சொற்பொழிவுதான் ஆற்ற முடியுமா? வாழ்வதோ இவ்வுலகில் ஆனால் இவ்வுலகம் சார்ந்த கல்வி இரண்டாம் பட்சமானது என்று எண்ணக்கூடியவர்களின் சிந்தனையில் விழுந்த மிகப் பெரும் ஓட்டை இது என்றுதான் சொல்ல வேண்டும்.

மறுமைக்கான விளைநிலம்தான் இவ்வுலகம். அப்படியிருக்கும்போது இவ்வுலகைப்பறிய எந்த ஞானமும் இல்லாமல் மறுமைக்கு எப்படி ஒருவர் தன்னை முழுமையாக தயார் செய்துகொள்ள முடியும்? உலகக்கல்வி இல்லாமல் இவ்வுலகை எங்ஙனம் ஆராய்ச்சி செய்வது என்பதை அவர்கள் விளக்கவேண்டும். ஆராய்ச்சி செய்யுங்கள்... ஆராய்ச்சி செய்யுங்கள்... சிந்தியுங்கள்... சிந்தியுங்கள்... என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் மனிதனின் ஆராய்ச்சிக்கு பச்சை விளக்கு கண்பிக்கும்போது - ஆராய்ச்சி செய்யத் தூண்டும்போழுது; ஆராய்ச்சியே வேண்டாம் (அதாவது இந்த உலகக்கல்வியே வேண்டாம்) என்று ஒருவர் வாதிடுவாரேயானால் அவர் நிச்சயமாக இறை வேதத்தை சரியாக விளங்காதவராகத்தான் இருக்க முடியும். நமக்கு ஒரு சந்தேகம், சந்தேகம் மட்டுமல்ல இன்றைய எதார்த்தமான உண்மையும்கூட. உலகக்கல்வியை மட்டம் தட்டிப் பேசுகின்றவர்கள்தான் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இஸ்லாத்தின் அசலையே முடக்கி வைத்துள்ளனர்.

"பித்அத்" கள் தலைவிரித்தாடுவதற்கு முக்கிய காரணமே உலகக்கல்வியை மூட்டை கட்டி வைத்ததுதான். உலக்கல்வியை ஒதுக்கித் தள்ளியதாலேயே இன்றைக்கு "பித்அத்து''கள் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன என்பது கண்கூடு.

உலகக்கல்வி மார்க்கக்கல்வி இரண்டிற்கும் மூல நூலே திருக்குர்ஆன் தான் என்பதை எடுத்துச்சொல்ல தவறிவிட்டோம். அதன் காரணத்தாலேயே சிந்திப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சடங்குகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து திருக்குர்ஆனை பரண் மீது ஏற்றி வைத்துள்ளோம்.

இன்னொரு விஷயத்தையும் சமுதாய மக்களிடம் தவறாக பதிய வைக்கப்பட்டுள்ளது. அதாவது மதரஸாக்களில் ஓதியவர்கள் மட்டுமே மார்க்கக்கல்வி அறிந்து தெளிந்தவர்கள். மற்றவர்களெல்லாம் கல்லூரியில் எவ்வளவுதான் பயின்றாலும் அவர்கள் மார்க்கத்தை முழுமையாக விளங்கியிருக்க முடியாது என்பதாகும். இந்த எண்ணம் மிகக் கடுமையாக ஆட்சேபணைக்குறிதாகும். மதரஸாக்களில் ஓதிய சிலர் சொல்வதுபோல் (அவர்கள் தோனியில்) மார்க்கக்கல்வி (மட்டும்தான்) உயர்ந்தது எனில் எதற்காக பெரும் உலமாக்களில் பலர் தங்களது சந்ததிகளை மற்ற கல்லூரிகளில் படிக்க வைக்கின்றனர்.

காரணம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவ்வுலகில் வாழ்வதற்கு உலகக்கல்வி அவசியம் என்பது நிதரிசணமான உண்மை. இவ்வுலகில் மனிதன் தனது தேவைக்கான அடிப்படை வசதிகளைக்கூட அவன் பெற்றுக்கொள்ளவில்லை எனில் நிச்சயமாக அவனால் ஹலால் ஹராம் என்பதை வாழ்க்கையில் சரிவர பின்பற்ற முடியாது.

கல்வி என்பதை பொதுவில் வைத்து உலகம், மார்க்கம் சார்ந்த அனைத்தையும் மனிதன் கற்கும்போது தான் அவனால் முழுமையாக இஸ்லாத்தை விளங்கி பேணுதலாக வாழமுடியும். இல்லையேல் பேணுதாலக வாழ்வதுபோல் நடிக்கத்தான் முடியும். அல்லாஹ் அனைத்தையும் அறிவான்.

கல்வியை இரண்டாகப் பிரிப்பவர்கள் நிச்சயமாக முழுமையான கல்வியாளராக இருக்க முடியாது. ஒன்றை இரண்டாகப் பிரித்து; அதில் ஒன்றை மட்டும் கற்பவர் எவ்வாறு எல்லாவற்றையும் விளங்கியவராக முடியும்?

திருக்குர்ஆனில் மறுமையைப்பற்றி எந்த அளவுக்கு வசனங்கள் இடம் பெற்றுள்ளனவோ அதே அளவுக்கு இம்மையைப்பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. கல்வியை இரண்டாகப் பிரிப்பவர்கள் திருக்குர்ஆனை பாதி மட்டுமே விளங்க விரும்புகின்றவர் என்றுகூட சொல்லலாம்.

விஞ்ஞானமும் மெய்ஞானமும் :

நம்மில் பெரும்பாலோர் விஞ்ஞானத்தை உலகக்கல்வி என்றும் மெய்ஞானத்தை மார்க்கக்கல்வி என்றும் விளங்கி வைத்துள்ளோம்.

விஞ்ஞானம், மெய்ஞானம் - இவையிரண்டில் எது உயர்வானது என்ற கேள்வி எழுமானால் ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொள்வோர் மெய்ஞானமே உயர்வானது என்றும், சிந்தனையாளர் என்று தங்களை நினைத்துக் கொண்டிருப்போர் விஞ்ஞானமே உயர்வானது என்றும் சொல்வதை பார்க்கிறோம். ஆனால் உண்மையாக சிந்திப்பவர்களுக்கு இவையிரண்டுமே சிறந்ததுதான், இவையிரண்டையும் உருவாக்கிவன் ஒருவனே என்பது மட்டுமின்றி இவையிரண்டும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமான தொடர்புடையது என்பதை விளங்கிக் கொள்வார்கள்.

என்ன இப்படி சொல்கிறீர்கள்?! இவையிரண்டும் ஒன்றுக்கொன்று எதிரும் புதிரும் என்றல்லவா உலகம் கருதிக் கொண்டிருக்கிறது! நெருக்கம் எப்படி ஏற்படும் என்கிறிர்களா?!

ஆம் சகோதரரே! ஏற்படும், நிச்சயமாக இவையிரண்டுக்குமுள்ள நெறுக்கமான தொடர்பை சிந்தித்தால் எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.

ஆன்மீகவாதிகள் போன்றிருக்கும் சிலரிடம் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பற்றி கூறினால், பெரும்பாலும் அவைகள் மனிதனை வழிகெடுக்க ஷைத்தானால் உருவாகக்கப்பட்ட வழிகேடுகள் என்று சொல்லக்கூடியவர்களும் உண்டு. விஞ்ஞானத்தால் மெய்ஞானத்தை நெருங்கக்கூட முடியாது என்பது அவர்கள் கருத்தாக இருக்கலாம். அதே சமயம் அந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதில் தவறுவதும் இல்லை. இது எங்குமுள்ள எதார்த்த நிலை.

இந்த உலகைப் படைப்பதற்கு முன்பே எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லாவற்றையும் நிர்ணயித்து விட்டான். அவைகளை சங்கிலித் தொடராக கியாமநாள் வரை வெளிப்படுத்திக் கொண்டே வருவான். அப்படி வெளிப்படுத்தக்கூடிய ஒரு உபகரணமாகத்தான் மனிதனைப் படைத்து தனது சாம்ராஜ்யத்தில் உலவவிட்டிருக்கிறான். அப்படி அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மனிதன் அல்லாஹ் வழங்கிய அறிவைக்கொண்டு கண்டுபிடித்தவைகளை ‘தனது ஆற்றலால்’ என கருதிக்கொண்டு அவைகளுக்கு விஞ்ஞானம் என பெயரிட்டு அழைக்கின்றான்.

உண்மையில் விஞ்ஞானம் - மெய்ஞானம் இவையிரண்டுமே அல்லாஹ்வை அறிவதற்காக அவனால் மனதனுக்கு வழங்கப்பட்ட அருட்கொடையே! இவையிரண்டும் ஒன்றுக்கொன்று மிக நெறுக்கமானது என்பதோடு ஒன்று மற்றொன்றை வலுப்படுத்தவும் செய்கிறது என்பதே உண்மை.

ஹைட்ரஜனும், ஆக்ஸிஜனும் ஒன்று சேர்ந்தால் தண்ணீர்.

ஹைட்ரஜன் எ
ரியக் கூடியது!
ஆக்ஸிஜன் இல்லாமல் எதுவுமே எரியாது!

எரியக்கூடிய தன்மை கொண்ட இவையிரண்டும் ஒன்று சேர்ந்து தண்ணீராக மாறும்போது அது எரியும் நெருப்பை அணைக்கக் கூடியதாக மாறுகிறதே எப்படி? இது ஆச்சர்யமான முரண்பாடல்லவா? இந்த தன்மையை தண்ணீருக்குள் வைத்தவன் அல்லாஹ் அல்லவா!

மனிதனைப் படைப்பதற்கு முன்பே அல்லாஹ் தண்ணீரைப் படைத்துவிட்டானே! ஆக ஏற்கனவே அல்லாஹ்வால் படைக்கப்பட்டவைகளை மனிதன் சிந்தித்து ஆராய்ந்து கண்டுபிடிக்கும்போது அதை தனது கண்டுபிடிப்பாக பெயரிட்டு அவைகளுக்கு விஞ்ஞானம் என்று பெயர்சூட்டி மகிழ்கின்றான் என்பதே உண்மை.

விஞ்ஞானத்தால் அனைத்தையும் அறிய முடியாது, விஞ்ஞானம் தோற்கிற அல்லது அறிய முடியாத இடங்களுக்குக்கூட மெய்ஞானம் செல்லும் என்பது ஆன்மீகவாதிகளின் கூற்று.

பொதுவாக மனிதன், கண்களால் கண்டு அறிவால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவைகளை விஞ்ஞானம் எனவும், ஆத்மார்த்தமான இறைநம்பிக்கையை மெய்ஞானம் எனவும் விளங்கி வைத்துள்ளான்.

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான், ‘அவர்கள் கண்களால் காண்பதையும் நம்புவார்கள், (கண்களால் காண முடியாத) மறைவானவற்றையும் நம்புவார்கள்’ .

மெய்ஞானம் மட்டுமின்றி விஞ்ஞானமும் இறைநெருக்கத்தை பெற்றுத்தரக் கூடியதே! அதுமட்டுமின்றி, ‘விஞ்ஞானம் மெய்ஞானத்தை வலுப்படுத்துவதோடு, வளர்க்கக்கூடியதாகவும், இருக்கிறது’ என்பதும் உண்மை.

விஞ்ஞானத்தின் மூலம் மெய்ஞானத்தை அறியும்போது ஈமான் இன்னும் உறுதியாகிறது, வலுவடைகிறது. உதாரணமாக மரம், செடி, கொடி, மரங்கள், மலைகள் யாவும் அல்லாஹ்வை ‘திக்ரு’ செய்கின்றன, ‘ஸுஜூது’ செய்கின்றன என்பதை திருக்குர்ஆன் மூலம் அறிந்து நம்புவது மெஞ்ஞானம் எனில் அதே மரம், செடி, கொடிகள் அந்த ஏக இறைவனை துதிக்கின்றன என்பதை மனிதனாக ஆராய்ந்து கண்டுபிடிக்கும்போது அதற்கு விஞ்ஞானம் என்று பெயர் சூட்டப்படுகிறது.

மலைகள், மரம். செடி, கொடிகளெல்லாம் அல்லாஹ்வை திக்ரு செய்வதாக, ஸுஜூது செய்வதாக இஸ்லாம் கூறுகிறது. இறைவன் படைத்த அத்தனை படைப்பினங்களும் அவனை ஸுஜூது செய்யத்தான் செய்கின்றன. மனிதர்களாகிய நாம்தான் அதனை அறியவில்லை. ஆனால், படைத்த ரப்புல் ஆலமீன் அதனை நன்கறிவான். இவ்வுலகில் மனிதன் மரம் செடி கொடிகளை நடுவது விஞ்ஞானம் எனில் அதற்கான நன்மை அல்லாஹ்விடம் கிடைக்கும் என்று நம்புவது மெய்ஞானம்.

இறைவனை துதிபாடக்கூடிய அந்த மரங்களையும், பயிர்களையும் மனிதனைக் கொண்டே அல்லாஹ் பயிர் செய்விக்கச் செய்வது அவனின் மாபெரும் அருட்கொடையின் வெளிப்பாடு. மனிதர்களின்; உணவு தேவைகளுக்கு என்கின்ற நன்மைகளுக்காக என்பது மட்டுமின்றி, வளர்கின்ற பருவத்தில் அந்த பயிர்கள் அல்லாஹ்வை திக்ரு செய்கின்றனவே, அதை உற்பத்தி செய்த மனிதனுக்கு அந்த பயிர்கள் ‘திக்ரு’ செய்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகளும் நிச்சயமாக கிடைக்கத்தானே செய்யும். ஏனெனில் அல்லாஹ் அருள் மழை பொழிவதில் மாபெரும் கொடையாளன் என்பதில் எவருக்கேனும் சந்தேகமுண்டா?

ஏதேனும் ஒரு நன்மையான காரியத்தை ஓருவர் துவக்கி வைப்பாரானால் அதனால் விளையக்கூடிய நன்மைகள் அனைத்திலும் அவருக்கும் பங்குண்டு என்பது நபிமொழியல்லவா! பயிர் செய்வது நன்மையான காரியம்தான். அதனால் மனிதனுக்கு கிடைக்கும் நன்மைகளை அவன் வாழும் காலத்தில் அனுபவித்து நன்மையடைகின்றான். ஆனால் அந்த பயிர்கள் அல்லாஹ்வை ‘திக்ரு’ செய்கின்றனவே அதனால் கிடைக்கும் நன்மைகளை அந்த மனிதர்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா?! மனிதன் அறியாமலேயே அவனுக்கு நன்மைகளை சேர்க்கும் இறைவனின் இந்த ரஹ்மத்தை என்னவென்று சொல்வது!

மிக நெருக்கமான ஒருவர் ஒரு விவசாயியாக இருக்கும்போது தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டதில்: காலை வேளை ஸுப்ஹு தொழுதுவிட்டு வயல்வெளிகளை தனியாக சுற்றிப்பார்க்கச் செல்லும்போது ஒவ்வொரு நாளும் நெற்கதிர்களின் வளர்ச்சியைக் கண்டு பூரிப்புடன் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லக் கூடியவராக இருந்தார்.

வரப்புகளில் நடந்து செல்லும்போது சப்தமிட்டு கலிமாவை ஒலித்தவண்ணம் நடக்க ஆரம்பிப்பாராம். தான் ஓதியதை கேட்கும் இந்த பயிர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் சாட்சி பகரும் என்கின்ற நம்பிக்கையே காரணம் என்பதை அறியும்போது வியக்காமல் இருக்க முடியவில்லை. அந்த சிந்தனையை அவரது உள்ளத்தில் உதிக்கச் செய்த அல்லாஹ்வை எப்படி புகழ்வது! அல்ஹம்துலில்லாஹ். இங்கு விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் அவர் மெய்ஞானத்தை காண்கிறார் என்று கூட சொல்லலாம்.

சரி, விஷயத்திற்கு வருவோம். விஞ்ஞானம் மெய்ஞானத்தை வலுப்படுத்துகிறது, ஈமானை மென்மேலும் உறுதியடையச் செய்கிறது என்பதற்கான ஆதாரங்கள் இஸ்லாமிய வரலாறுகளில் - குறிப்பாக நபிமார்களின் வரலாறுகளிலேயே கூட காணலாம். அழுத்தமான சான்றாக, திருக்குர்ஆன் சுட்டிக்காட்டும் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தையும்;, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மிஃராஜ் விண்ணுலகப் பயணத்தையும் குறிப்பிடலாம்.

மெய்ஞானத்தை வலுப்படுத்தும் விஞ்ஞானம்!

எதையும் சிந்தித்து அதை நேரடியாக பார்க்கும்போது ஏற்படுகின்ற நம்பிக்கையும் உறுதியும் அழுத்தமானது. உதாரணமாக, இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் அவன் உயிரைப்படைக்கும் விதத்தை தான் தெரிந்து கொள்ள விரும்புவதாக வேண்டுகோள் வைக்கும்போது அந்த ஏக இறைவன் நபியைப் பார்த்து ‘என் மீது நம்பிக்கையில்லையா?’ என்று கேட்கிறான்.

அதற்கு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ‘யா அல்லாஹ்! உன்னிடம் நம்பிக்கையில்லாமலா! அப்படியில்லை: எனது மனம் சாந்தியடைவதற்காக கேட்கிறேன் என்று பதில் சொல்கிறார்கள்.

அதன் பிறகு ஏக இறைவன் அவரிடம் ஒரு பறவையை நான்கு துண்டாக வெட்டி ஒரு மலையின் நான்கு முனையிலும் அதை பிரித்து வைக்கச்சொல்லி, பிறகு ஓரிடத்தில் நின்று தன் பெயரைச்சொல்லி அந்த பறவையை அழைக்கச் சொல்கிறான்.

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அது போல அப்பறவையை நான்கு துண்டாக வெட்டிப் பிரித்து நான்கு மூலையிலும் வைத்து விட்டு அல்லாஹ்வின் பெயர்கூறி அதனை அழைக்கும்போது அப்பறவை ஒன்றாகி எழுந்து ஓடி வருவதைக் காண்கிறார்கள். இங்கு ஆன்மீகத்தின் ஊற்றான இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நம்பிக்கை இன்னும் உறுதியடைகிறது. அந்த அதிசயத்தை அற்புதத்தை அவர்கள் கண்ணால் கண்டது அவர்களைப் பொருத்தவரை விஞ்ஞான பூர்வமானது இல்லையா?

இது போல மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின்மீது அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்ட ஒரு நபிதானே! அவர்கள் அல்லாஹ்வை நேரடியாகக் காண ஆவல் கொள்கிறார்களே! அது ஏன்? தன்னைப் பார்ப்பதற்கான சக்தியை அவர் பெறமாட்டார் என்று இறைவன் சொல்லியும் அவர்கள் மீண்டும் மீண்டும் தனது ஆவலை அல்லாஹ்விடம் வற்புறுத்திக் கேட்டு அந்த தூர்ஸீனா மலையில் அல்லாஹ்வின் பேரொளியின் ஒரு துளியைக்கண்டு மூர்ச்சையடைகிறார்களே! இவையெல்லாம் என்ன?

இச்சம்பவங்கள் மறைவானவற்றையும் முழுமையாக நம்பும் ஆன்மீகத்தின் வழிகாட்டியான அந்த மாபெரும் நபிமார்களின் இறைநம்பிக்கையை மென்மேலும் உறுதிபடச் செய்திருக்கும் என்பதை எவரேனும் மறக்க முடியுமா?

அகிலத்தின் அருட்கொடை, நமது உயிரனும் மேலான, கண்மணி ரஸூலல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்விலும் இதுபோன்று மறைவான விஷயங்களைக் கண்களால் விஞ்ஞானப்பூர்வமாக காணும் சந்தர்ப்பம் கிடைக்கத்தானே செய்தது. ஆம்! மிஃராஜ் விண்வெளிப்பயணம் எவருக்குமே வாய்க்காத ஒரு அற்பதப்பயணத்தின் மூலம் அவர்களின் இறை நம்பிக்கை அசைக்க முடியாத அளவுக்கு உறுதியடைந்தது என்பதை அவர்களின் சொல் மூலமாகவே அறிந்து கொள்ளலாமே!

ஒரு சமயம் சில ஸஹாபாப் பெருமக்கள் சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததைக் கண்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘நான் கண்டதை நீங்கள் கண்டிருந்தால் இதுபோன்று சிரித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள்!’ என்று மிஃராஜின்போது தான் நரகில் கண்டவற்றைக் குறிப்பிட்டுக் கூறியதை எண்ணிப்பார்க்கும்போது, நேரடியாக அந்த நரகக்காட்சியைக் கண்டதால் அவர்கள் மென்மேலும் இறையச்சமுடையவர்களாக விளங்கினார்கள் என்பதை இச்சம்பவம் தெளிவு படுத்துகிறதல்லவா.

அறிவியல் துறையில் ஆராய்ச்சி செய்வதை மிகப்பெரும் வணக்கமென்றே இஸ்லாம் கூறுகிறது. ஏறத்தாழ 780 திருமறை வசனங்கள் விஞ்ஞானத்தை வலியுறுத்திக் கூறுகின்றனவே! ஏன்? எதற்காக? சிந்திக்க வேண்டாமா?

அல்லாஹ் படைத்த வானத்தையும் பூமியையும் கோள்களையும், நட்சத்திரங்களையும், உயிர் ஜீவராசிகளையும் ஆராய்ச்சி செய்யும் மனிதன் வியந்து போய் அந்த ஏக இறைவனுக்கு முன்னால் கூனிக்குறுகி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டே தீர்வான். அப்படிக் கூனிக்குறுகிப்போகும்போது அவனிடம் இருக்கும் பெருமை, கர்வம், தான் என்ற அகம்பாவம் அத்தனையும் இருந்த இடம் தெரியாமல் போய், இவ்வுலகைப் படைத்த அந்த ரப்புல் ஆலமீனுக்கு முன், தான் ஒரு அடிமையிலும் அடிமை என்பதை உணர்வான்.

விஞ்ஞானத்தை ஆராயும் மனிதன் தான் எவ்வளவு சாதாரணமானவன் என்பதை உணராமல் இருக்க முடியாது. ஒரு முறை விஞ்ஞானி Dr.A.P.J.அப்துல் கலாமிடம் ‘விஞ்ஞானிகள் இறைநம்பிக்கையற்றவர்களாக இருக்கிறார்களே!’ என்று கேள்வி தொடுக்கும்போது, அவர் உடனே, ‘யார் சொன்னது அப்படி? விஞ்ஞானிகளுக்குத்தான் நிச்சயமாக இறை நம்பிக்கை அதிகமிருக்கும்' என்றார்.

ஏனெனில் வானத்தையும், பூமியையும், அதிலுள்ள இறைவனின் படைப்புகளைப் பற்றி ஆராயக்கூடிய மனிதன் தான் கண்டுபிடித்தவைகளோடு அணைத்தும் முற்றுப்பெற்று விட்டது என்று எண்ண மாட்டான், எண்ணவும் முடியாது. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குப் பிறகு தனது இயலாமையை அவன் உணரத்தான் செய்வான். அப்போது அவனது நிலை கீழ்க்காணும் வசனத்தில் இறைவன் குறிப்பிட்டதுபோல் தான் இருக்கும்.திருக்குர்ஆனின் 29 ஆவது ஜுஸ{வில் முதலாக வரும் 'ஸூரத்தலுல் முல்க்' (தபாரகல்லதீ... ஸூரா) உடைய ஆரம்ப வசனங்களை சற்று சிந்தித்துப் பாருங்கள்!

''எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்''. (67:1)

''உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.'' (67:2)

''அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர், பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா?'' (67:3)

''பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார், உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.'' (67:4)

இவ்வசனத்தில், மரணத்தையும் வாழ்வையும் படைத்ததற்காண காரணத்தை குறிப்பிடும் இறைவன், அவன் அடுக்கடுக்காகப் படைத்த வானத்தைப்பார்த்து சிந்திக்கும்போது மனிதனின்; பார்வை களைத்து மழுங்கிச் சிறுமையடைந்து திரும்பும் என்று கூறுகின்றானே, ஆராய்ச்சி மனப்பான்மை இல்லாமல் வானத்தை வெறுமனே பார்க்கும் மனிதனுக்கு என்ன விளங்கும்?

ஆராய்ச்சி மனப்பான்மையுடன் அவன் வானத்தைப் பார்க்கும்போதுதான் அவன் வியந்து போய் முன் சொன்னதுபோல் கூனிக்குறுகி தான் அப்பட்டமான அடிமை என்பதை துளிக்கூட சந்தேகமின்றி விளங்கிக்கொள்வான். அப்படி அவன் விளங்கிக்கொண்டு தொழுகையில் ருகூஉ, ஸுஜுது செய்யும்போது சாதாரண நிலைக்கும் இப்போதைய அவனது நிலைக்கும் மிகப்பெரிய வேறுபாட்டைக் காண்பான்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருக்குர்ஆனிலுள்ள சில ஸூராக்களின் உயர்வைப்பற்றி குறிப்பிடுகையில் முப்பது ஆயத்துக்களைக் கொண்ட இந்த ஸூரத்துல் முல்க் (தபாரகல்லதீ...), ஒவ்வொரு முஃமீனுடைய உள்ளத்திலும் மனனமாக இருக்க வேண்டும் என தான் விரும்புவதாகச் சொன்னார்களே! அதன் காரணத்தை என்றைக்காவது நாம் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? சிந்தித்தால் விளங்கியிருப்போம், மெய்ஞானத்திற்கு வழிகாட்டி விஞ்ஞானம் என்று!

இதைப்படிப்பவர்கள் தயவு செய்து தான் மட்டுமின்றி தன் குடும்பத்தார்கள் அனைவரையும் இந்த ஸூராவை (அர்த்தத்துடன்) மனனம் செய்யத் தூண்டுங்கள். இன்ஷா அல்லாஹ், விஞ்ஞானியாகவும் மெய்ஞானியாகவும் ஆகலாம். முடியாது என்று ஒருவர்கூட எண்ணிவிடாதீர்கள். அசைக்க முடியாத நம்பிக்கையை அல்லாஹ்வின் மீது வைத்துப்பாருங்கள், அத்தனையையும் சாத்தியமாக்கி வைப்பதற்கு அந்த ரப்புல் ஆலமீன் போதுமானவனாக இருக்கிறான் என்பதை மறந்து விடாதீர்கள்.

அழுத்தமாக பதிய வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்; விஞ்ஞானம், மெய்ஞானம் இவையிரண்டுக்கும் மூல நூலே திருக்குர்ஆன்தான். இதையே வேறு விதமாக சொல்ல வேண்டுமானால்"உலகக்கல்வி மார்க்கக்கல்வி இரண்டிற்கும் மூல நூலே திருக்குர்ஆன் தான்".

தொழுகைக்கு "வுளூ" செய்வது விஞ்ஞானப்பூர்வமானது. மெய்ஞானத்தின் சுவையை அறிய அல்லாஹ் முதலில் விஞ்ஞானத்தைக் கற்றுக்கொடுக்கின்றான். மெய்ஞானம் பரிபூரணமானது, தூய்மையானது. அதனை தூய்மை படுத்துவது விஞ்ஞானம் என்றுகூட சொல்லலாம்.

நோயைக்கொடுப்பவனும் அல்லாஹ் அதற்கான நிவாரணத்தை - சுகத்தை கொடுப்பதும் அல்லாஹ்வே. அதற்காக நோயுற்ற எவரும் சிகைச்சைக்காக மருந்து உண்ணாமல் இல்லையே! நோய்க்கு மருந்து மூலம் - புறச்செயல்கள் மூலம் சிகிச்சை அளிப்பது விஞ்ஞானம். நலத்தை கொடுப்பது அல்லாஹ். அவனிடன் துஆ வேண்டுவது மெய்ஞானம். இன்னும் விளக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் ''ஒட்டகத்தைக் கட்டிப்போடுவது விஞ்ஞானம். அல்லாஹ்வை நம்புவது மெய்ஞானம்''.

மெய்ஞானம் மனம் சார்ந்தது எனில் விஞ்ஞானம் உடல் சார்ந்தது என்று சொல்லலாம். உடல் அசைவுகள் இல்லாமல் தொழுகையில்லை. மெய்ஞானத்தை கற்க விஞ்ஞான ரீதியாக உடல் அசைவுகள் தேவை. இல்லையெனில் மெய்ஞானத்தின் பாதையே இல்லாமல் போய்விடும்.

விஞ்ஞானப்பூர்வமாக அல்லாஹ்வின் அத்தாட்சிகள் உலகெங்கும் விரவிக்கிடக்கின்றன. உலகக்கல்வி இல்லாமல் இதனை சிந்தித்து ஆராய்ந்து கூனிக்குறுகிப்போவது எப்படி சாத்தியம்? அல்லாஹ்வின் அத்தாட்சிகளை ஆராய்ந்து கண்டுபிடிப்பதன் மூலம் அவனது மாபெரும் வல்லமையை அறிந்து தன்னுடைய இயலாமையால் மனிதன் கூனிக்குறுகிப் போகும்போது அவனிடமுள்ள அகம்பாவம், தலைக்கணம் கர்வம் அத்தனையும் இருந்த இடம் தெரியாமல்; சத்தியமாக நான் படைத்த அந்த ரப்புல் ஆலமீனுக்கு முற்றிலும் அடிமை என்னும் முடிவுக்கு வரும். அந்த சந்தர்ப்பம் ஒவ்வொரு முஃமினுக்கும் தேவையில்லையா? உலகக்கல்வியை ஒதுக்கித்தள்ளிவிட்டு எதை ஆராச்ய்ச்சி செய்யப்போகிறீர்கள்?! மஸாயில்களையா? மஸாயில்களை ஆராய்வதாகக் கூறி சமுதாயத்தில் பிரிவுகளைத்தானே ஏற்படுத்த முடிந்தது!

கல்வியை உலகக்கல்வி மார்க்கக்கல்விஎன்று பிறிப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் மனிதர்களுக்கும் இடைவெளியை ஏற்படுத்தும் செயலைத்தான் தெரிந்தோ தெரியாமலோ செய்கிறார்கள்.

இன்னொரு விஷயத்தையும் சமுதாய மக்களிடம் தவறாக பதிய வைக்கப்பட்டுள்ளது. அதாவது மதரஸாக்களில் ஓதியவர்கள் மட்டுமே மார்க்கக்கல்வி அறிந்து தெளிந்தவர்கள். மற்றவர்களெல்லாம் கல்லூரியில் எவ்வளவுதான் பயின்றாலும் அவர்கள் மார்க்கத்தை முழுமையாக விளங்கியிருக்க முடியாது என்பதாகும். இந்த எண்ணம் மிகக் கடுமையாக ஆட்சேபணைக்குறிதாகும். மதரஸாக்களில் ஓதிய சிலர் சொல்வதுபோல் (அவர்கள் தோனியில்) மார்க்கக்கல்வி (மட்டும்தான்) உயர்ந்தது எனில் எதற்காக பெரும் உலமாக்களில் பலர் தங்களது சந்ததிகளை மற்ற கல்லூரிகளில் படிக்க வைக்கின்றனர்.

காரணம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவ்வுலகில் வாழ்வதற்கு உலகக்கல்வி அவசியம் என்பது நிதரிசணமான உண்மை. இவ்வுலகில் மனிதன் தனது தேவைக்கான அடிப்படை வசதிகளைக்கூட அவன் பெற்றுக்கொள்ளவில்லை எனில் நிச்சயமாக அவனால் ஹலால் ஹராம் என்பதை வாழ்க்கையில் சரிவர பின்பற்ற முடியாது.

கல்வி என்பதை பொதுவில் வைத்து உலகம், மார்க்கம் சார்ந்த அனைத்தையும் மனிதன் கற்கும்போது தான் அவனால் முழுமையாக இஸ்லாத்தை விளங்கி பேணுதலாக வாழமுடியும். இல்லையேல் பேணுதாலக வாழ்வதுபோல் நடிக்கத்தான் முடியும். அல்லாஹ் அனைத்தையும் அறிவான்.

கல்வியை இரண்டாகப் பிரிப்பவர்கள் நிச்சயமாக முழுமையான கல்வியாளராக இருக்க முடியாது. ஒன்றை இரண்டாகப் பிரித்து; அதில் ஒன்றை மட்டும் கற்பவர் எவ்வாறு எல்லாவற்றையும் விளங்கியவராக முடியும்?

திருக்குர்ஆனில் மறுமையைப்பற்றி எந்த அளவுக்கு வசனங்கள் இடம் பெற்றுள்ளனவோ அதே அளவுக்கு இம்மையைப்பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. கல்வியை இரண்டாகப்பிரிப்பவர்கள் திருக்குர்ஆனை பாதி மட்டுமே விளங்க விரும்புகின்றவர் என்றுகூட சொல்லலாம்.
ரப்பிஜித்னீ இல்மா (rabbi zithnee ilmaa)இறைவா! எனது
 கல்வியை அதிகப்படுத்துவாயாக! O GOD! INCREASE MY KNOWLEDGE.

உங்கள் நண்பன் யார்?

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். கஸ்தூரி வியாபரி உனக்கு அதனை (இனாமாகத்) தரலாம். அல்லது நீ அதனை அவனிடமிருந்து விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒருவேளை அவனிடமிருந்து நீ நறுமணத்தையாவது நுகரலாம். கெட்ட நண்பன் துருத்தியில் ஊதுகின்ற கொல்லனைப் போலாவான். அவன் உனது ஆடையை எரித்து விடலாம். அல்லது நீ அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகருவாய். 

அறிவிப்பவர் : அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி). 
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.

தனிமனித சீர்திருதத்திற்கும் சீரழிவுக்கும் உள்ளமும் சூழலும் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. மேற்குறிப்பிட்ட ஹதீஸ் தனிமனித வாழ்வில் சூழல் ஏற்படுத்தும் பாதிப்புப் பற்றி விளக்குகிறது. நபி (ஸல்) அவர்கள் அதனை அழகிய உதாரணத்தினூடாக விளக்குகிறார்கள்.

சூழல் எனும் போது பெற்றோர், உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் கருத்திற் கொள்ளப்படுகின்றனர். ஒரு குழந்தையின் வாழ்வில் ஆரம்பமாக பாதிப்பை ஏற்படுத்துவோர் பெற்றோர்களாவர். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :
ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாத்தில் தான் பிறக்கிறது. அதனது பெற்றோர்களே அதனை யஹுதியாக, கிறிஸ்தவராக, நெருப்பு வணங்கியாக மாற்றி விடுகின்றன.

பெற்றோருக்கு அடுத்தபடியாக, உற்றார் உறவினரை விட நண்பர்களால் ஒரு பிள்ளை பாதிப்படைகிறது. பால்ய வயதை அடைவதற்கு முன்பே அது கூடி விளையாடுவதற்கு நண்பர்களைத் தேடுகிறது. நட்பு கிடைக்கும் பட்சத்தில் அது உள அமைதி அடைகிறது. நட்புக்கத் தடையாக பெற்றோர் அமைகின்ற போது அது உளச் சிக்கலுக்கும் உள இறுக்கத்திற்கும் ஆட்படுத்தப்பட்டு, வேண்டத்தகாத விளைவுகளை குடும்பத்தில் தோற்றுவிக்கிறது. அநேகமாக பெற்றோரின் வழிகாட்டல் இன்றிய நட்புத் தேடல் படுமோசமான பாதிப்புகளை ஆறாத வடுக்களாய் பிள்ளைகளிடம் விட்டுச் செல்கிறது. இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை நட்புத் தேடலையும் நெறிப்படுத்தி வழிகாட்டியிருப்பது எம்மை வியப்பிலாழ்த்துகிறது.

நபித்துவ வழிகாட்டலின் வெளிச்சத்தில் நட்புத் தேடலை விளங்க முயற்சிப்போம். நண்பர்களை எக்கோணத்திலிருந்து விளங்கினாலும் கூட அவர்களை இரு வகையாக அமைகின்றனர். நல்ல நண்பர்கள் கெட்ட நண்பர்கள்.

நல்ல நண்பன் தனது நட்பை முதலில் எவ்வித பேரமும் பேசலும் இன்றி, முன் நிபந்தனையின்றி விரிந்த மனப்பான்மையுடன் கருமித்தனம் ஏதுமின்றி அள்ளி வழங்கத் தயாராக இருப்பான். இவன் கஸ்தூரியை இனாமாக வழங்குபவன் போலாவான். சிலபோது பிறரினால் இவன் வஞ்சிக்கப்படலாம். அப்பாவியாகக் கருதப்படலாம். நல்ல நண்பன் தனது தரத்தினை பெறுமதியாகக் கருதுகிறான். தனது சிந்தனை ஆன்மா, பண்பாடு, நடத்தை, ஒழுக்கம் விழுமியம் என்பனவற்றை இலவசமாகக் கொடுத்துக் கிராக்கியைக் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. தனது ஆளுமைப் பண்புகள் இதர மனிதர்களால் மாசுபடுவதை இம்மியளவும் விரும்புவதில்லை. எனவே, அவன் தனது நட்பை நாடி வரும் மனிதர்களை நோக்கி முன் நிபந்தனை - உறுதிப்பிரமாணம் என்பனவற்றின் அடிப்படையில் நகருகிறான்.

எனது நல்ல நண்பர்களுக்கு உங்களால் மாசு கற்பிக்கப்படும் போது கெட்ட பாதிப்பு ஏற்படும் போது உங்களுடன் உள்ள நட்பை முறித்துக் கொள்வேன் என்று பேரம் பேசி நட்பைப் பகிர்ந்து கொள்கிறான்.

இவன் பணத்திற்கு கஸ்தூரியை விற்பனை செய்பவன் போலாவான். ஹதீஸின் மூலத்தில் தப்தாஅ என்ற பதம் உள்ளது. ஒரு பொருளை திருப்பதியின் அடிப்படையில் விலை கொடுத்து வாங்குதல் என்ற கருத்து அப்பதத்தில் தொணிகிறது. வியாபாரம் என்பது ஒரு வகை உடன்படிக்கையாகும். விசுவாச பிரமாணத்திற்கு பைஅத் என்ற சொல் பிரயோகப்படுத்தப்படுகிறது. தப்தாஅ - பைஅத் என்ற இரு சொற்களும் கிட்டத்தட்ட ஒரே கருத்தைத் தருகின்ற இருவேறு சொற்களாகும்.

நல்ல நண்பனுடன் ஆழ்ந்த நட்பை கொள்ளப்படா விட்டாலும் கூட அவனால் நல்லன விளையும் என்பதையும் ஹதீஸ் விளக்குகிறது. இக்காலகட்டத்தைப் பொறுத்தவரையில் இனாமாக வழங்கப்படும் பொருள்களுக்கு எவ்வித பெறுமானத்தையும் மனிதன் வைப்பதில்லை. ஆகவே உறுதிப் பிரமாணத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ளப்படும் நட்பே நித்தியமானதும், நிரந்தரமானதுமாகும்.

மனித வாழ்வில் நட்பு என்பது விசித்திரமானது. விந்தையானது. அதனால் ஏற்படும் பாதிப்பு ஆழமானது. பலரது வாழ்வில் பெரும் திருப்பங்களுக்குக் காரணமாகவும் அது அமைகிறது. பெற்றோர்களது அன்பு உற்றார் உறவினர்களது பாசம், நேசம் சாதிக்க முடியாததை நட்பு சாதித்து விடுகிறது. பெற்றோர்களுக்குப் பிள்ளைகளை சீர்திருத்த முடியாத கையாலாகாத நிலை உருவாகும் பட்சத்தில் அவர்கள் பிள்ளைகளின் நண்பர்களை அணுகி தமது பிள்ளைகளை சீர்திருத்த முனைவது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிதர்சன நிகழ்வுகளாகும். பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கு இடையில் உள்ள உறவில் மரியாதைப் பண்பின் காரணமாக அல்லது வெறுப்பின் காரணமாக விரிசல் அதிகரிக்க அதிகரிக்க நண்பர்களுடனான நட்பு படிமுறை ரீதியாக அதிகரிப்பதையும் அவதானிக்கிறோம். நட்பு என்பது ஒரே அச்சில் வார்க்கப்பட்ட பொருள்களைப் போல அமைந்த விடுகிறது. அதாவது ஒரு நண்பனின் மறு உருவமாக அடுத்தவன் மாறிவிடுகின்றான். சிந்தனைப் பாங்கு பண்பாடு, நடத்தை, நடை, உடை, பாவனை போன்ற சகல விவகாரங்களிலும் ஒருவன் தனது நண்பனை பிரதிபலித்துக் காட்டுகிறான். இப் பேருண்மையை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரித்தார்கள்.
ஒருவர் தனது நண்பனின் மார்க்கத்தில் இருப்பார். எனவே உங்களில் ஒருவர் தன் நட்பு கொள்கின்றவரை நன்றாக அவதானிக்கட்டும். 
(ஆதாரம் : அபூதாவூது).

எனவே, இவ்விடத்தில் நல்ல நட்பை தேடல் முக்கியத்துவம் பெறுகிறது. நல்ல நட்பு என்பது சுவன பிரவேசத்திற்கு வழி வகுக்கின்றன. நரக விடுதலை பெற்றுத் தருகின்ற நட்பாகும். சடவாத ஜாஹிலிய்யா சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட குறுகிய உலகில் நலன்களை இலக்காகக் கொண்ட நட்பு கெட்ட நட்பாகும். இத்தகைய நட்பு மனிதனது உயர் லட்சியத்தை விடுவதோடு, சேர்த்து அவனையும் நரகத்தில் எறிந்து எரித்து விடுகிறது. கெட்ட நட்பினால் வழி தவறி, நரகம் சேர்ந்து விட்ட மனிதனது கைசேதம் இவ்வாறு அமைகிறது.
அந்த நாளில் அக்கிரமக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக் கொண்டு நம் தூதருடன் நானும் நேரான வழியில் சென்றிருக்க வேண்டாமா? என்று கூறுவான். அன்றி அய்யோ பாவம் செய்யும்படி தூண்டிய இன்ன மனிதனை என்னுடைய சிநேகிதனாக ஆக்கிக் கொள்ள வேண்டாமா? என்னிடம் நல்லுபதேசம் வந்தது. பின்னரும் அதிலிருந்து அவன் தன் என்னை வழி கெடுத்து விட்டான். அந்த ஐஷத்தான் மனிதனுக்குப் பெரும் சதிகாரனாக இருந்தான் (என்றும் கைசேதப்படுவான்). 
(சூரா அல் ஃபுர்கான் : 27 : 2)

அநேகமாக நட்பு கொள்ளல் என்பது இத்தகைய அறிவுப் பின்னணியும் இன்றியே ஆரம்பமாகிறது. கல்வி வாழ்க்கையிலும் வியாபார கொடுக்கல் வாங்கல் தொழில் சார்ந்த நடவடிக்கைகளின் போது உருவாகும் நட்பு குறுகிய நலன்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகுகிறது. அறிவுத் தேடல் தொழில் பணம், பெண் போன்றவை இலக்காகக் கொள்ளப்படுகின்றன. அவ்வாறு பொழுது போக்கு பின்னணியை கொண்டு எழுகின்ற நட்பு சமூக தீமைகளுக்கு வழி வகுக்கின்றன. புகைத்தல், போதைப் பொருள் பாவனை, பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை, நாசகார நடவடிக்கைகள் முதலானவை கெட்ட நண்பன் எனும் நுழைவாயில் மூலம் குடும்பத்தில் நல்லவனாக இருந்த மனிதனிடமும் குடி கொள்கிறான். பின்னர் பெற்றோரும் மற்றோரும் கன்னத்தில் விரல் வைத்து நெற்றி சுருக்கி ஆச்சரியத்துடனும், கவலையோடும் வினா எழுப்புகின்ற அளவுக்கு அந்தப்பிள்ளை கெட்டுப் போய் விடுவான். ஆகவே தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நட்புத் தேடல் விசயத்தில் நல்லதொரு வழிகாட்டலைத் தருகின்றார்கள்.

நட்பு அல்லாஹ்வுக்கு அமைகின்ற போது அது நல்ல நட்பாக மாறுகின்றது. நித்திய தன்மை பெற்று நிகழ்கிறது. அதுவல்லாத போது தற்காலிகமாக நீடித்து விரைவில் அது காலத்தால் அழிந்து விடுகிறது. மார்க்கத்தின் பெயரால் உருவாகும் நட்பு கூட உளத்தூய்மை இழந்து இஸ்லாமிய கருத்துக்கு பகரமாக நச்சுக் கருத்துக்களை வளர்க்கும் வகையில் உருமாறினால் அத்தகைய நட்பு விரைவில் அழிந்து விடும். இதுவும் கெட்ட நட்பே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மறுமை நாளில் அல்லாஹுத்தஆலா எனக்காக பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொண்டு வாழ்ந்த மனிதர்கள் எங்கே! எனது நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இன்றைய தினம் அவர்களுக்கு எனது நிழலில் இடமளிப்பேன் என்று கூறுவான். 
(முஸ்லிம்)

வகுப்பறைத் தோழர்கள், பயணத் தோழர்கள், ஆருயிர்த் தோழர்கள் தாம் பகிர்ந்து கொள்ளும் நட்பு இறைச் சிந்தனை இஸ்லாத்தின் கடமைகள் ஷரீஅத்தின் சட்ட வரம்புகளை விட்டு தூரமாக்கி படுமோசமாக உறவுகளுக்கு வழிவகுக்கலாகாது. தமக்கு மத்தியில் பரஸ்பரம் நன்மையை ஏவி தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்.
முஃமினான ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் நேசர்களாக இருக்கின்றனர். நன்மையை ஏவி தீமையைத் தடுத்துக் கொள்கின்றனர். (சூரா அத்தவ்பா : 71)

நண்பர்களாக இருப்போம்! நன்மையை தீமையைத் தடுத்துக் கொள்ளும் விவகாரத்தில் நாம் தலையிடுவதில்லை என்ற வாதம் இஸ்லாமிய சிந்தனைக்கு உட்பட்டதல்ல. இது கெட்ட நட்பாகும். கொல்லனின் துருத்தியில் இருந்து தெறிக்கும் தீப் பொறிகள் ஆடையை எரித்து விடுவது போல் கெட்ட நட்பு மறுஉலக பயன்பாடுகளை எரித்து விடும். கொல்லனின் துருத்தியில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போல இவ்வுலக வாழ்வு துர்நாற்றமிக்கதாகவே அமையும்.

எனவே பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்ல நட்பைப் பெற்றுத் தர முயற்சிப்பதோடு துரதிருஷ்டவசமாக பிள்ளைகளுக்கிடையில் கெட்ட நட்பு அமைந்து விட்டால் மாற்று பரிகாரமாக நல்ல நட்பை பெற்றுக் கொடுக்க முனைய வேண்டும். 



ஹதீஸ் விளக்கவுரை 

அஷ்ஷெய்க் ர்.ஆ. மின்ஹாஜ் 
(இஸ்லாஹி)

Thanks To One Realism

ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் ஆலிவர் ஸ்டோனின் மகன் இஸ்லாத்தை தழுவினார் !

Stone, son of Oscar-winning director Oliver Stone
டெஹ்ரான்:பிரபல இயக்குநரும், உலகப்புகழ் பெற்ற ஆஸ்கர் விருதை பெற்றவருமான ஆலிவர் ஸ்டோனின் மகன் ஸீன் ஸ்டோன் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளார் ஈரானின் நகரமான இஸ்பஹானில் வைத்து ஸீன் இஸ்லாத்தில் நுழைவதற்கான வார்த்தைகளை(ஷஹாதா கலிமா) கூறி தன்னை முஸ்லிமாக மாற்றிக்கொண்டார். ஈரானின்
ஃபார்ஸ் செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
ஸீன் தனது பெயரின் துவக்கத்தில் ‘அலி’ என்ற வார்த்தையை(இஸ்லாத்தின் நான்காவது கலீஃபாவின் பெயர்) இணைத்துக் கொண்டார்.
ஸீன் தனது தந்தை ஆலிவர் ஸ்டோன் இயக்கிய திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் சிறந்த ஆவணப் படங்களையும் தயாரித்துள்ளார். ஸீனின் தந்தையான ஆலிவர் ஸ்டோன் ஒரு யூதர் ஆவார். அவரது தாயார் கிறிஸ்தவர். ஸீன் தான் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டதற்கான காரணத்தை கூறவில்லை.
ஸீன் தந்தை ஆலிவர் ஸ்டோன் 1980 களிலும், 1990 துவக்கத்திலும் தொடர்ந்து வியட்நாம் போர் தொடர்பான திரைப்படங்களை இயக்கியுள்ளார். 3 அகாடமி விருதுகளையும் பெற்றுள்ளார்.
ஸீன் ஈரானுக்கு உறுதியான ஆதரவாளர். டொராண்டோ ஃபிலிம் பெஸ்டிவலில் ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கான உரிமையை ஆதரித்து பேசினார். இஸ்ரேலின் அச்சுறுத்தலை முறியடிக்க அணுசக்தி தேவை என ஸீன் குறிப்பிட்டார்.
Thanks  to asiananban.blogspot.com

The 8 Dimensions of a Brainstorm Session ....


bright ideas.jpg
Dear All,
              Most people think brainstorming sessions are all about ideas much in the same way Wall Street bankers think life is all about money.While ideas are certainly a big part of brainstorming, they are only a part.People who rush into a brainstorming session starving for new ideas will miss the boat (and the train, car, and unicycle) completely unless they tune into the some other important dynamics that are also at play:

1. INVESTIGATION: If you want your brainstorming sessions to be effective, you'll need to do some investigating before hand. Get curious. Ask questions. Dig deeper. The more you find out what the real issues are, the greater your chances of framing powerful questions to brainstorm and choosing the best techniques to use.

tmp_clip_image001.jpg
2. IMMERSION: While good ideas can surface at any time, their chances radically increase the more that brainstorm participants are immersed. Translation? No coming and going during a session. No distractions. No interruptions. And don't forget to put a "do not disturb" sign on the door.

3. INTERACTION: Ideas come to people at all times of day and under all kinds of circumstances. But in a brainstorming session, it's the quality of interaction that makes the difference -- how people connect with each other, how they listen, and build on ideas. Your job, as facilitator, is to increase the quality of interaction.

4. INSPIRATION: Creative output is often a function of mindset. Bored, disengaged people rarely originate good ideas. Inspired people do. This is one of your main tasks, as a brainstorm facilitator -- to do everything in your power to keep participants inspired. The more you do, the less techniques you will need.

5. IDEATION: Look around. Everything you see began as an idea in someone's mind. Simply put, ideas are the seeds of innovation -- the first shape a new possibility takes. As a facilitator of the creative process, your job is to foster the conditions that amplify the odds of new ideas being conceived, developed, and articulated.

6. ILLUMINATION: Ideas are great. Ideas are cool. But they are also a dime a dozen unless they lead to an insight or aha. Until then, ideas are only two dimensional. But when the light goes on inside the minds of the people in your session, the ideas are activated and the odds radically increase of them manifesting.

7. INTEGRATION: Well-run brainstorming sessions have a way of intoxicating people. Doors open. Energy soars. Possibilities emerge. But unless participants have a chance to make sense of what they've conceived, the ideas are less likely to manifest. Opening the doors of the imagination is a good thing, but so is closure.

8. IMPLEMENTATION: Perhaps the biggest reason why most brainstorming sessions fail is what happens after or, shall I say, what doesn't happen after. Implementation is the name of the game. Before you let people go, clarify next steps, who's doing what (and by when), and what outside support is needed.

 Prepared by: M.Ajmal Khan.

Turn,To be Turn, Will be Turn your Time...

I am beginning to feel “a little old.”  When it comes to sheer physical labor I am forced to acknowledge I cannot keep up with them. I don’t like the feeling.

Today while we were talking about  cricket, one of the guys said, “I bet you were good in your day.” Now I feel like an old geezer way over the hill.

Tonight while I sat in a tub of hot water trying to soothe my aching muscles, I remembered the words of Ecclesiastes 3. It gave me some solace ... “everything is beautiful in its time.”

To everything there is a season,
A time for every purpose under heaven:
A time to be born,
And a time to die;
A time to plant,
And a time to pluck what is planted;
A time to kill,
And a time to heal;
A time to break down,
And a time to build up;
A time to weep,
And a time to laugh;
A time to mourn,
And a time to dance;
A time to cast away stones,
And a time to gather stones;
A time to embrace,
And a time to refrain from embracing;
A time to gain,
And a time to lose;
A time to keep,
And a time to throw away;
A time to tear,
And a time to sew;
A time to keep silence,
And a time to speak;
A time to love,
And a time to hate;
A time of war,
And a time of peace.
What profit has the worker from that in which he labors? I have seen the God-given task to the peoples are to be occupied. He has made everything beautiful in its time. Also He has put eternity in their hearts, except that no one can find out the work that God does from beginning to end.

Prepared By: M.Ajmal Khan.

Amazing Picture....

Dear All,
Please  click the following link and get the picture to move your cursor on picture to see the amazing  effects..

Amazing Picture

Thursday, 16 February 2012

இதயமில்லாது வாழும் உலகின் முதல் மனிதன்!...


மருத்துவ உலகின் புதிய புரட்சி !..

(வீடியோ இணைப்பு)

கடந்த வருடம் மார்ச் மாதம், கிரேய் லெவிஸ் (55) எனும் நபர் இதயக்கோளாறு காரணமாக இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை காப்பாற்றுவதற்கு புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்ள டெக்ஸாஸில் உள்ள Texas Heart Institute ஐ சேர்ந்த இரு வைத்தியர்கள் முடிவு செய்தனர். குறித்த நபரின் இதயத்தை முற்றாக அகற்றிவிட்டு, இதயம் போன்று செயற்பட கூடிய ‘contunuos flos’ எனும் செயற்கை உபகரணத்தை பொருத்தினர். 


இதயத்தை போன்று இந்த உபகரணம் துடிப்பதில்லை.ஆனால் இதயம் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்கிறது. இந்த முயற்சி வெற்றியளித்ததுடன், சிகிச்சை முடித்த அடுத்த நாளே குறித்த நபர் மருத்துவர்களின் பேசக்கூடியளவு போதிய உடல் நலம் பெற்றார்.


முதல் முயற்சியாக காளை மாடு மீது இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இப்போது மனிதனிடமும் மேற்கொள்ளப்பட்டு வெற்றியளித்துள்ளது. இதன் மூலம் மருத்துவ உலகில் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது. உலகில் இதயமில்லாது நடமாடும் முதன் மனிதன் எனும் பெயரை கிரேய் லெவிஸ் எனும் அந்நபர் பெற்றுள்ளார்.


இதய மாற்று சிகிச்சை செய்யப்பட்ட வீடியோ (அனைவருக்கும் உகந்ததல்ல – பலவீனமானவர்கள் பார்வையிட வேண்டாம்)


 

உங்கள் பிளாக்கை பிரபலப்படுத்த 30 மேற்பட்ட திரட்டிகளின் தொகுப்பு(Popularize your blog)


உங்கள் வலைப்பூக்கள் பிரபலமடைவதற்கு திரட்டிகளின் பங்கு அதிகம். இத்திரட்டிகளில் உங்கள் பதிவுகளை இணைத்துவிட்டால்.. பலரும் உங்கள் பதிவுகளைப் படிக்க ஒரு வாய்ப்பு உருவாகும். இத்தகைய திரட்டிகளின் தொகுப்பை கீழே கொடுத்திருக்கிறேன். பயன்படுத்திப்பாருங்கள். உங்கள் கருத்தை மறக்காமல் கூறுங்கள். நன்றி நண்பர்களே..!!


tamil blogger aggregator


உங்கள் பிளாக்கரை முதன்மைமாக்குவதில் முக்கியப் பங்கு இந்த திரட்டிகளைச் சாரும். அத்தகைய முப்பதுக்கும் மேற்பட்ட திரட்டிகள் ஒரே இடத்தில்..  காண இங்கு கிளிக் செய்யவும். 

இந்த இணைப்பில் சென்று வலது மேல் மூளையில்  download Original என்பதை கிளிக் செய்து பி.டி.எப் ஆக இருக்கும் கோப்பை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். நன்றி..!!