Thursday, 22 February 2024

The difference between an NCR (Non-Conformance Report)and SOR (Site Observation Report-lies)

In their purpose, focus, and usage within a project or quality control process:

1-NCR (Non-Conformance Report):

 A- Purpose: The NCR is used to formally document when something does not meet the required specifications, standards, or regulatory requirements. It is typically raised when a defect, deviation, or non-compliance is identified, requiring corrective action.

 

B- Focus: Focuses on non-conformities instances where something does not align with the set quality standards or project requirements.

 

C- Usage: The NCR is part of the quality management process aiming to ensure that non-conformities are addressed and corrected to prevent recurrence.

   

D- Example: A contractor notices that the concrete used on a project is not up to the specified strength. An NCR is raised to address the issue, and corrective actions are documented.


2. Site Observation Report (SOR):

 A- Purpose: The Site Observation Report is a document used to record observations made during site inspections. It often highlights both positive and negative findings but does not necessarily indicate that any action or non-compliance is required.

 

 B- FocusFocuses on observations made during a site visit or inspection, providing a record of conditions, activities, or progress on the site.

 

C-Usage: This report is used for monitoring, tracking progress, and ensuring that the work is proceeding according to plan. It may or may not lead to corrective actions depending on the nature of the observations.

 

D-Example: A project manager conducts a site visit and observes that workers are following safety protocols but notices some minor issues with material storage. These observations are recorded in the Site Observation Report.


(Key Differences): 

1 - NCR: This is used to document non-compliance or defects that require corrective action.

 

 2- Site Observation Report: This is a more general record of observations** during an inspection or visit, which may or may not indicate problems.

 

(Action Taken): 

1 - NCR: often results in specific corrective actions and follow-up to resolve issues.


2 - Site Observation Report : May not necessarily require immediate action but serves as a tracking tool for site conditions and progress.

 

In summary, the NCR is more formal and action-oriented, while the Site Observation Report is a broader tool for monitoring and documenting site conditions.

Thursday, 8 February 2024

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்!!

 

1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....?


சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.


டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.


2. கண் இமைகளில் வலி.. என்ன வியாதி....?


அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.


டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


3. கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி...?


அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.


டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..


4. கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி...?

நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.


டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.


5. தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி...?


இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.


டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.


6. முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி....?


உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.


டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.


7. தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி...?


கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.


டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.


8. பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென 

உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி...?


சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.


டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.


9. பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி...?


நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.


டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.


10. பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி...?


தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.


டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.


11. சிவந்த உள்ளங்கை என்ன வியாதி...?


கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.


டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.


12. வெளுத்த நகங்கள் என்ன வியாதி....?


இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!

ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.


டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரை வகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின் படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.


13. விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி...?

ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.


டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.


14. நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி...?


சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.


டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.


16. வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி....?


பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.


டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது. www.puradsifm.com 


17. சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி....?


வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.


டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.


18. வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி....?


உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.


டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.✍🏼🌹

Thursday, 25 January 2024

கூனைப்பூ ( Artichoke) வில் இவ்ளோ விஷயம் இருக்கா??? தெரியாம போச்சே!!

 நாம் சமீப காலமாக ஊடகங்களில் கூனைப்பூ பற்றிய செய்திகள் வருவதை கண்டிருப்போம்.  கூனைப்பூவில் சுகாதார நலன்கள் மற்றும் மருத்துவ பயன்பாடு அதிகமாக உள்ளன. நிறைய மக்கள் கூனைப்பூவின் இதய பகுதியைத்தான் அதிகமாக விரும்புகிறார்கள். கூனைப்பூவின் இலைகள் இதயத்திற்கு மிகவும் நன்மையை வழங்க கூடியதாக இருக்கிறது.இந்தக் கட்டுரையில், அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட 10கூனைப்பூ நன்மைகள் மற்றும் கூனைப்பூ சத்துக்கள் பற்றி விவரமாக காணலாம்.

முன்னுரை  :'கூனைப்பூ' என்பது 'திஸ்டில் மற்றும் பால் திஸ்ட்டின்' குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். "லத்தீன் சினாரா" என்று அழைக்கப்படும் "கூனைப்பூ" கேனரித் தீவுகள் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் அதிகம் காணக் கிடைக்கிறது.

இந்த வகைப் பூ அதிக அளவில் மருத்துவ குணங்கள் கொண்டது. அதிலும், கூனைப்பூவின் இலைகள் இதயத்திற்கு மிகவும் நன்மையை வழங்கக் கூடியதாக இருக்கிறது. மேலும், இந்தப் பூ உண்ணக் கூடிய காய் கறி வகையைச் சேர்ந்தது ஆகும். வளர்ச்சியின் செயல்பாட்டில், இது 2 மீ உயரம் வரை காணப்படும். கூனைப்பூ வெப்பத்தை விரும்பும் தாவரமாகும் என்ற போதிலும், இது சிறிய வெப்பநிலை சொட்டுகள் மற்றும் லேசான உறைபனிகளுடன் கூட உயிர்வாழக்கூடியதாக உள்ளது. இதன் கூம்புகளை உண்ணலாம். சுவையில் அவை பழுக்காத அக்ரூட் பருப்புகளுக்கு ஒத்தவை. கூனைப்பூவில் சுமார் 140 இனங்கள் உள்ளன, அவற்றில் 40 மட்டுமே மதிப்புமிக்கதாக கருதப்படுகின்றன. அதன் சாகுபடியின் வரலாறு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தையது. அதன் சாகுபடியில் முதல் அனுபவம் ரோமானியர்களால் பெறப்பட்டது, அவர்களுக்குப் பிறகு கிரேக்கர்களும், எகிப்தியர்களும் இதனைப் பயன்படுத்தினர்.


கூனைப்பூ சத்துக்கள்:

குறிப்பிட்ட வகை கூனைப்பூக்கள் மற்றும் அவை எவ்வாறு சமைக்கப் படுகின்றன என்பதைப் பொறுத்து இந்த மதிப்புகள் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

கூனைப்பூக்கள் சுவையானது மட்டுமல்ல, சமைக்கும் போது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன் நிரம்பியுள்ளது. 100 கிராம் சமைத்த கூனைப்பூக்களில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் தோராயமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மக்ரோநியூட்ரியண்ட்ஸ்:

கலோரிகள்: 100 கிராம் சமைத்த கூனைப்பூவில் தோராயமாக 47 கலோரிகள் உள்ளது. ஒப்பீட்டளவில் இவை கலோரிகளில் சற்று குறைவாக உள்ளது.

கார்போஹைட்ரேட்டுகள்: இவை சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளின் சிறந்த மூலமாகும், 100 கிராமுக்கு சுமார் 11 கிராம் வழங்குகிறது.

புரதம்: கூனைப்பூக்கள் 100 கிராமுக்கு சுமார் 3.5 கிராம் புரதத்தைக் கொண்டிருக்கின்றன, அவை இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கான மிதமான ஆதாரமாக அமைகின்றன.

நார்ச்சத்து: கூனைப்பூக்கள் நார்ச் சத்தின் வளமான மூலமாகும். 100 கிராமுக்கு தோராயமாக 5 கிராம் நார்ச்சத்து நம்பமுடியாத அளவிற்கு நிறைந்துள்ளது.


வைட்டமின்கள் :

வைட்டமின் சி:
சமைத்த கூனைப்பூக்கள் வைட்டமின் சி இன் சிறந்த மூலமாகும், 100 கிராம் கூனைப்பூவில் சுமார் 9.6 மில்லிகிராம்கள் உள்ளன. நோயெதிர்ப்பு அமைப்பு ஆதரவு மற்றும் கொலாஜன் உற்பத்திக்கு வைட்டமின் சி முக்கியமானது.

வைட்டமின் கே: கூனைப்பூக்கள் வைட்டமின் கே இன் சிறந்த மூலமாகும், 100 கிராம் கூனைப்பூவில் 14.8 மைக்ரோகிராம் வைட்டமின் கே உள்ளது.

வைட்டமின் பி6: 100 கிராம் சமைத்த கூனைப்பூவில் 0.2 மில்லிகிராம் வைட்டமின் பி6 காணப்படுகிறது.


தாதுச்சத்துக்கள்:

பொட்டாசியம்:கூனைப்பூக்களில் பொட்டாசியம் நிறைந்துள்ளது, 100 கிராமுக்கு சுமார் 370 மில்லிகிராம்கள் உள்ளன.

மக்னீசியம்:கூனைப் பூ 100 கிராமில் 60 மில்லிகிராம் மெக்னீசியம் உள்ளது. மக்னீசியம் தசை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கும், எலும்பு ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது.

பாஸ்பரஸ்:கூனைப்பூக்கள் 100 கிராமுக்கு தோராயமாக 75 மில்லிகிராம் பாஸ்பரஸை வழங்குகிறது, இது எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

இரும்பு:மிக அதிகமாக இல்லாவிட்டாலும், கூனைப்பூக்கள் 100 கிராமுக்கு 0.6 மில்லிகிராம் இரும்புச்சத்தை வழங்குகின்றன, இது உங்கள் தினசரி இரும்பு உட்கொள்ளலுக்கு பங்களிக்கும்.


ஆக்ஸிஜனேற்றிகள்:

ஃபிளாவனாய்டுகள்:
கூனைப்பூக்களில் குர்செடின் மற்றும் ருட்டின் உள்ளிட்ட ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன, அவை ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த கலவைகள் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகின்றன.
மற்ற ஊட்டச்சத்துக்கள்:

ஃபோலேட்: சமைத்த கூனைப்பூக்களில் 100 கிராமுக்கு 68 மைக்ரோகிராம் ஃபோலேட் உள்ளது. ஃபோலேட் உயிரணுப் பிரிவு மற்றும் டிஎன்ஏ உருவாவதற்கு முக்கியமானது.


கூனைப்பூ நன்மைகள் :

கூனைப்பூக்கள் 2,000 ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே பண்டைய கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களால் அவற்றின் சமையல் மற்றும் மருத்துவ குணங்களுக்காக பயிரிடப்படுகிறது. சில கூனைப்பூ நன்மைகள் பின்வருமாறு...

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை:கூனைப்பூவில் குர்செடின் மற்றும் ருடின் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து தீங்கு விளைவிக்கும் பிரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது மேலும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

செரிமான ஆரோக்கியம்:அவை கூனைப் பூவில் கனிசமான அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்கிறது. கூனைப்பூ இலை சாறு எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியின் (IBS) அறிகுறிகளைக் குறைக்கிறது.

கல்லீரல் ஆரோக்கியம்:

கூனைப்பூவில் சினரின் மற்றும் சிலிமரின் போன்ற கலவைகள் உள்ளன. அவை கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியம்:

கூனைப்பூ உணவில் சேர்த்துக் கொள்வது “கெட்ட” எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது.
எடை மேலாண்மை:

இந்த காய்கறியில் உள்ள ஃபைபர் வயிறு நிரம்பிய உணர்வை ஊக்குவிக்கிறது. எனவே அதிக உணவு உண்ணப்படுவதைக் குறைத்து எடை இழப்பில் உதவுகிறது.

நீரிழிவு மேலாண்மை: கூனைப்பூக்கள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. மேலும் அவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற காய்காறியாகும்.

புற்றுநோய் தடுப்பு:கூனைப்பூக்களில் உள்ள சில கலவைகள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதாக நிரூபிக்கப் பட்டுள்ளது. கூனைப்பூ புற்றுநோயை தடுக்க வல்லது. புற்று நோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது எப்படி எனில், கூனைப்பூ (ஆர்டிசோக்) இலையின் சாறுகள் அப்போப்டொசிஸை தூண்டி புற்றுநோய் செல்களை அளிக்கிறது. கூனைப்பூவில் அதிகமாக பிளவோனோய்ட்ஸ் நிறைந்துள்ளதால் மார்பகப் புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது. மேலும் புரோஸ்டேட் புற்றுநோய், லுகேமியா போன்றவை ஏற்படுவதையும் தடுக்கிறது. கூனைப்பூ நோய் எதிர்ப்பு சக்தியை நல்ல முறையில் மேம்படுத்துகிறது: கூனைப்பூவில் ரூடின், ஆன்தோ சயனின்ஸ், சினாரின் லுடேலின் மற்றும் சிலிமரின் போன்ற நோயெதிர்ப்பு சக்திகள் உள்ளன. இதனால் உடலின் ஆரோக்கியம் மேம்படுகிறது.


எலும்பு ஆரோக்கியம்: வைட்டமின் கே மற்றும் கால்சியம் நிறைந்த கூனைப்பூக்கள் வலுவான எலும்புகளுக்கு பங்களிக்கின்றன மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் அபாயத்தைக் குறைப்பதில் உதவுகிறது.


தோல் ஆரோக்கியம்: கூனைப்பூவில் நிரம்பியுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வயதான அறிகுறிகளைக் குறைத்து, பொலிவான நிறத்தை மேம்படுத்துவதன் மூலம் சரும ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

நோயெதிர்ப்பு அமைப்பு ஆதரவு: கூனை பூவில் வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.


முடிவுரை: கூனைப்பூக்கள் ஒரு சுவையான சுவையாக மட்டுமல்ல, அறிவியல் ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப் பட்ட பல ஆரோக்கிய நன்மைகளின் சக்திவாய்ந்த ஆதாரமாகும். அவை பல நன்மைகளை வழங்கினாலும், அவற்றை அதிகமாக உட்கொள்வதால் சில பக்க விளைவுகளும் ஏற்படும் என்பது குறித்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Monday, 1 January 2024

ஐந்து வக்திற்கு சொல்லப்படும் பாங்கின் ஐந்து இராகம்!! ஒரு தவகல்..


துருக்கி நாட்டில் எங்கே சென்றாலும் அங்குள்ள எல்லா பள்ளிவாசல்களிலும் சொல்லப்படக் கூடிய பாங்கின் இனிமையான ஓசை நிச்சயம் செவிக்கு விருந்தளிக்கும்.இது சாதாரண விஷயம் என்று எண்ணி விடக் கூடாது.இவ்வளவு இனிமையாக துருக்கி மக்கள் பாங்கு சொல்வதற்கு 500 வருட கால பாரம்பரியம் உள்ளது.இதற்கென்றே தனி மத்ரஸாக்கள் உள்ளது .தனி ஆசிரியர்கள் உள்ளார்கள்.  

சில வருடங்களுக்கு முன்பு அல்ஜசீரா செய்தி நிறுவனம்."அல் அதான் (பாங்கு )- மக்களை சத்தியத்தை நோக்கி அழைக்கும் அழகிய குரல்கள் " என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.அந்த நிகழ்ச்சியில் துருக்கியிர்கள் பாங்கு சொல்வதில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர்.அதெற்கென்றே பிரத்யேக இராகத்தை உருவாக்கியுள்ளனர், என்று தெரிவிக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் அல் உஸ்தாத் முஹம்மத் ஹாதி தவ்ரான் இஸ்தான்புலில் உள்ள "அஸ்ஸுல்தான் அஹ்மத்" என்ற மிகப்பெரிய மஸ்ஜிதின் முஅத்தின் (மோதினார்) கூறுகிறார்: உஸ்மானிய்யா பேரரசின் ஆட்சி காலத்தில் ஒவ்வொரு மஸ்ஜிதுகளிலும் ஐந்து முஅத்தின்கள் நியமிக்கப்படுவார்கள்.இவ்வாறான முஅத்தின்கள் தங்களது குரல் வளத்திற்கு ஏற்ப தேர்வு செய்யப்படுவார்கள்.ஏன்?

சராசரியாக ஒரு மனிதன் தனது வாழ்வில் ஐந்து வகையான படித்தரங்களை கடக்கிறான்.அதேபோல ஒரு நாளில் ஐந்து வகையான பொழுதுகளை அவன் கடக்கிறான்.மனிதன் தினசரி கடக்கும் இந்த ஐந்து பொழுதுகளை நம் முன்னோர்கள் நன்கு புரிந்து வைத்தார்கள்.ஐந்து நேரங்களில் மனிதனது உணர்வுகள் ஒவ்வொரு நேரங்களிலும் மாறுபடும்.

காலை ஃபஜ்ரு நேரத்தில் இருக்கிற உணர்வு லுஹர் நேரத்தில் வேறு மாதிரி இருக்கும்.அதேபோல அஸர் , மஃரிப், இஷா ஆகிய ஒவ்வொரு நேரத்திலும் மனித உணர்வுகள் வேறுபட்டு கொண்டே இருக்கும்.இசைக்கும் மனித உணர்வுகளுக்கும் மிக நெருக்கமான தொடர்புள்ளது. கருவிகள் மூலம் இசைக்கப்பட கூடிய இசையை விட மனிதனின் தொண்டையிலிருந்து வெளிபடும் ஓசை மிகவும் நுட்பமானது.


இதனால் நம் முன்னோர்கள் ஐந்து நேரங்களில் பாங்கு கூறுவதற்கு
ஐந்து வகையான இராகங்களை உருவாக்கினர்.இதற்கு ஸபா, அஷாக், ரஸ்த், ஸீகா, ஹிஜாஸ் என்று பெயரிட்டனர்.ஐந்து வகை பாங்கின் இராகத்திற்கு ஏற்ப குரல் வளம் கொண்டவர்களை மட்டுமே அந்த அந்த நேரத்திற்கான தனித்தனி முஅத்தின்களாக நியமித்தனர்.

1) ஸபா : ஃபஜ்ரில் சொல்லப்படும் பாங்கின் இராகத்தின் பெயர் ஸபா.அதிகாலை பொழுதில் உள்ளம் இன்னும் சிறிது நேரம் உறங்கலாம் என்று கூறும் தருணத்தில் சொல்லப்படும் பாங்கு அவனை பள்ளிக்கு வரவழைக்கும் விதமாக அப்படியே செவிகளுக்கு இதமாக மிருதுவான இராகத்தோடு சொல்லப்படும்.

2) அஷாக்: லுஹர் நேரத்தில் சொல்லப்படும் பாங்கின் இராகத்தின் பெயர் அஷாக். உச்சி பகல் நேரத்தில் மனிதன் தனது பணியில் தீவிரமாக ஈடுபடும் நேரம். இந்த நேரத்தில் அவனை பள்ளிக்கு வரவழைக்க சொல்லப்படும் பாங்கு உத்வேகம் கலந்த இராகத்தோடு சொல்லப்படும் ‌.

3) ரஸ்த்: அஸர் நேரத்தில் சொல்லப்படும் பாங்கின் இராகத்தின் பெயர்.ரஸ்த். பரபரப்பான பகல் பொழுது புறப்பட ஆயத்தமாகும் போது சிறிய ஓய்வு மனிதனை வருடும்.இந்த பாங்கோசை அவனை பள்ளிக்கு வரவழைக்கும் விதமாக சிறிய பரபரப்போடும் அதேநேரத்தில் சிறிது ஏக்கமும் கலந்த இராகத்தோடு சொல்லப்படும்.

4) ஸீகா: மஃரிப் நேரத்தில் சொல்லப்படும் பாங்கின் இராகத்தின் பெயர் ஸீகா. இது பகல் பொழுது விடைபெற்று இரவு மெல்ல படரத் துவங்கும் நேரம். சோர்வும் உடல் முழுக்க படரத் துவங்கும் நேரமும் இதுவே . இதனால் இந்த நேரத்தில் சொல்லப்படக் கூடிய இராகம் மனதினுள் ஊடுருவி சோர்வை மெதுவாக கலைத்து அவனை பள்ளிக்கு வரவழைக்கும் விதமாக இந்த இராகம் அமைந்திருக்கும்.

5) ஹிஜாஸ்: இஷா நேரத்தில் சொல்லப்படும் பாங்கின் இராகத்தின் பெயர் ஹிஜாஸ்.ஒரு நாளுடைய முடிவு அடுத்த நாளுடைய உழைப்பிற்காக நீண்ட ஓய்வுக்கு தயாராகும் தருணம்.இந்த நேரம் என்பது அமைதியில் ஆழ்ந்து ஒரு மோன நிலைக்கு உள்ளம் செல்லும் நேரம்.எனவே

மயிலிறகை உடலில் மெல்ல வருடுவது போல உள்ளத்தை மெல்லிசையால் வருடி அவனை‌ பள்ளிக்கு வரவழைக்கும் விதத்தில் இந்த இராகம் அமைந்திருக்கும்.

இது புத்தகங்களின் பதிவு செய்யப்பட்ட கலையோ கல்வியோ அல்ல. செவி வழியாக தலைமுறை தலைமுறையாக பயணிக்கும் கல்வி.இந்த பாரம்பரியத்தை பாதுகாக்க துருக்கி அரசே இதனை எடுத்து நடத்தி வருகிறது.

நன்றி : மௌலவி நியாசுதீன் புகாரி நத்வி

தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Saturday, 16 December 2023

Are you looking for Job? How to send your CV /Resume Via Email??

How to Send your CV via email ??



When they said email us your CV,

you don't just send your CV alone you must compose an email .




Example




To: Email of the company you apply to




Subject: position you are applying for example (APPLICATIONS FOR THE POST OF ELECTRICAL/ INSTRUMENT SUPERVISOR) in Capital letters




Compose Email




Dear Employer/ HR Manager




I am very interested in applying for (ELECTRICAL ASISTANT ENGINEER ) that was advertised on media recently. My qualifications and skills matches your specifications almost exactly. Please take a moment to review my attached supporting documents.




It would be a sincere pleasure to hear back from you soon to discuss this exciting opportunity




Kind Regards

Name and surname

Mobile number

Email address




Attach your resume.

Don't scan CV, Doc file, Screenshot or in image format always send it in PDF format.

Sunday, 3 December 2023

The 7 Key Types of Maintenance Management!!

 



Each maintenance type serves a different operational purpose — from prevention to prediction and restoration.


1️⃣ Preventive Maintenance (PM)


Planned, scheduled maintenance to prevent breakdowns.

➡️ Example: Regular HVAC filter replacement or machine lubrication.


2️⃣ Predictive Maintenance (PdM)


Uses sensors and real-time data to predict when a machine might fail.

➡️ Example: Vibration analysis, temperature tracking, or IoT-based alerts.


3️⃣ Corrective Maintenance


Performed to correct small issues detected during inspection before they escalate.

➡️ Example: Fixing a loose connection in an electrical panel.


4️⃣ Reactive Maintenance (also called Breakdown Maintenance)


Maintenance done after a failure occurs, restoring functionality.

➡️ Example: Repairing a conveyor belt after it stops unexpectedly.


5️⃣ Condition-Based Maintenance (CBM)


Triggered by equipment condition rather than a fixed schedule.

➡️ Example: Servicing a generator based on oil condition or vibration readings.


6️⃣ Emergency Maintenance


Urgent and unplanned repairs required to avoid safety risks or severe operational losses.

➡️ Example: Fixing a burst pipeline in a data center or hospital facility.


7️⃣ Deferred Maintenance


Maintenance that’s intentionally postponed due to budget, resource limits, or strategic prioritization.

➡️ Example: Delaying repainting or non-critical part replacement.

Sunday, 19 November 2023

நம்ம வாழ்வில் இறுதி நாட்களில் சிலரின் நிலை பற்றிய ஒரு தொலைநோக்கு பார்வை...

 
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும் அதனால், ஒருவர் உயிர் வாழத் தேவையானதை மட்டும் தேடி, உண்டு, வாழ்ந்து, மடிகின்றன. ஆனால், மனிதன் வாழ்வு அப்படியல்ல. இறுதிநாள் நம்பிக்கை என்பது குறிப்பிட்ட நாளை மட்டும் குறிப்பதில்லை, குர்ஆன் மற்றும் சுன்னாவில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு நிகழ்வின் நம்பிக்கையையும் குறிக்கிறது.யார் இந்த உலகில் ஓர் இறை நம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ, அவருடைய மறுஉலகத் துன்பங்களில் ஒன்றை இறைவன் அகற்றுகிறான். யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்ய "முன்வருகிறாரோ அவருக்கு இறைவன் இம்மையிலும், மறுமையிலும் உதவிசெய்கிறான். யார் ஒரு இறை நம்பிக்கையாளரின் குறைகளை மறைக்கிறாரோ அவரின் குறைகளை இறைவன் இம்மையிலும், மறுமையிலும் மறைக்கிறான். ஒருவர் தனது சகோதரனுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் வரை அந்த அடியானுக்கு இறைவன் உதவி செய்து கொண்டிருக்கிறான்.ஒருவரின் வாழ்க்கை மற்றும் மரணத்தின் முடிவு ஒருபோதும் எளிதானது அல்ல. அனுபவத்திலிருந்து யாரும் தப்ப முடியாது.

1. மலினமான மனநோயாளிகளின் தரம் தாழ்ந்த விமர்சனக் கணைகள் என்மீது வீசப்படுவதால் என் மனைவி, மக்களின் மனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டன.

2,உடன் பிறந்த சகோதரனோ சகோதரியோ, இனிமேல் இவரால் ஒரு நையா பைசாவிற்குப் பிரயோஜனம் இல்லையென்றால் தானாக விலகி விடுவார்கள் அல்லது அவர்களால் நீங்கள் விலக்கப்படுவீர்...

3, வீட்டிற்கு வந்த மருமகள் உயிரை கொடுத்து மாமியாரை பார்த்துக் கொண்டாலும், தன் மாமியாருக்கு அவர் பெற்ற மகளுக்கு என்றும் ஈடாகவே மாட்டாள்... உண்மை தானே..

4,பெரும்பாலான மருமகள்கள் மாமியாரை விரும்புவதில்லை.. காரணம் தன் திருமணத்தின் போது மாமியார் தம் வீட்டாரிடம் அவர்களின் சக்திக்கு மீறி கேட்ட வரதட்சனை சீர் வரிசை கொடுமைகள் தான் அவளின் நினைவில் முன் வந்து நிற்க்கும் ..

5. வயதான பெற்றோர் பெரும்பாலும் வசதியுடன் இருக்கும் மகனிடமோ மகளிடமோ இருக்கவே விரும்புவார்கள்....காரணம் அவர்களால் தான் தனக்கு செலவழிக்க முடியும் என நம்புவதால். ஏழை மகனால் மகளால் தங்களை பார்க்க வசதி இருக்காது என்பதாலும்..

6, எவ்வளவு தான் இளமையை தொலைத்து மெஷின் மாதிரி வருடக்கணக்கில் சம்பாதித்து கொடுத்தாலும் மனைவியோ குழந்தைகளோ சகோதரிகளோ ஒரு குறிப்பிட்ட வயதில் 'எனக்கு அப்படி என்ன செய்து கிழிச்சீங்க?.." என்று கேட்காமல் விட மாட்டார்கள்.....

7, எழுந்து நடமாட முடியாமல் படுத்த படுக்கையாய் இருக்கும் போது அதற்கு மேல் அடுத்தவர்களுக்கு பாரமாய் வாழாமல் இருப்பது உத்தமம் .... தற்கொலை செய்வது தவறு என்பதால் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் நடைபிணமாய் வாழ்வது என்பது பலருக்கு தவிர்க்க முடியாத வாழ்வியல் கொடுமை...

8, உடன் பிறந்த அண்ணன் தம்பி சாகோதரிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள் .... சுயநலவாதிகளாய் மாறி விடுவர்.. சொத்துக்கள் இருந்தால் செல்வாக்கு உள்ளவன் நல்ல விலையுள்ள சொத்துக்களையும் தனக்கும் விலை குறைவானதை மற்றவர்களுக்கு தள்ளி விடுவான்...

9, தோள் கொடுக்கும் உறவுகளை விட, காலை வாரும் உறவுகளே அதிகம். ஒன்று வார்த்தைகளால் அல்லது செயல்களால்.

10, ஒருமுறை பொருளாதாரத்தில் வீழ்ந்த குடும்பம் எவ்வளவு போராடி எழுந்தாலும், நம் உறவினர்கள் அதை முதன்மைப்படுத்திப் பேசாமல் இருக்க மாட்டார்கள். (எப்படியோ கஷ்டப்பட்டுகிட்டு இருந்தவன் இன்னைக்கு நல்ல நிலைமை'ல இருக்கான்) என்று தான் பேசுவார்கள்.

11. ,ல் புத்திக்காரனுக்கு வாழ்க்கையோட சூட்சுமம் புரியும் போது, நடக்க முடியாத அளவுக்கு வயசாகிடும்.. அந்த வயசுல எல்லாம் தெரிஞ்சு எந்தப் பிரயோஜனமும் இல்ல...
தாம் முழுமையாக ஏமாற்றப்பட்டு இருப்பதை உணர்வான்...

12, நாம நல்லா இருக்கணும்னு எந்தச் சொந்தக்காரனும் விரும்ப மாட்டான்.... நாம் கஷ்டப்பட்டால் உள்ளுற சந்தோசப்படுவான்..

13, பெண்கள் எப்பவுமே பாவப்பட்ட ஜென்மங்கள் தான்.. எவ்வளவு படிச்சிருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய பதவியில இருந்தாலும் சரி..

14, சில பெண்கள் தம் சுய லாபத்திற்காக நல்லா இருக்குற பல குடும்பங்களை பிரித்து சந்தோஷம் அடைகிறார்கள் .... இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்..

15, முக்கியமா நம்மள பத்தி அதிகமா தப்பா பேசுறது பொறாமை பிடித்த நம்ம உறவினர்கள்... அப்புறம் அப்பா அம்மா, மேரேஜுக்கு அப்புறம் மனைவி.. வயசான காலத்துல நம்ம பிள்ளைங்க..


16, நாம் யாரும் திட்டமிட்டபடி நடக்கிற வாழ்க்கையை வாழவில்லை. நாங்கள் பின்னடைவுகளையும் இழப்புகளையும் சந்திக்கிறோம்.

17, ஒரு இறுதி ஆற்றல் எழுச்சியில் எதிர்பாராத, தெளிவான சிந்தனை அல்லது பேசுதல் ஆகியவை அடங்கும். இது "டெர்மினல் லூசிடிட்டி" என்று கூறுவர் .

18, நாம பிளான் பண்ண மாதிரி நமது  மரணம் நிகழாது..


ஆகவே, முதலில் விதிகளை தெரிந்து கொள்வதால் அதன் படி நடக்க வேண்டும் என்று இல்லை.


உயரத்தில் இருந்து குதித்தால் கீழே விழுவோம., விழுதால் அடி படும், வலிக்கும் என்பது விதி.

இல்லை நான் குதித்துப் பார்கிறேன். ஒருவேளை நான் கீழே விழாமல் காற்றில் மிதந்தாலும் மிதக்கலாம்...யார் கண்டது என்று குதித்து முயற்சி செய்து பார்க்கலாம். தவறு ஒன்றும் இல்லை.

விதிகள் தெரிந்தால், அதை கடை பிடித்தால் , வாழ்கை நன்றாக இருக்கும். அவ்வளவுதான்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.
 


Tuesday, 14 November 2023

Schedule Q is a Quality Rule book of Project??


 Schedule Q: The Quality Rulebook of a Project!!

In EPC, oil & gas, fabrication, and construction projects, Schedule Q is a contractual document that defines how quality will be planned, controlled, inspected, and accepted throughout the project lifecycle.


It aligns the contract, technical specifications, and execution on site or in the workshop.


What Is Schedule Q?

Schedule Q specifies:

🔹What quality standards must be followed

🔹Which inspections and tests are required

🔹When client involvement is mandatory

🔹What records must be generated and submitted


Key Sections Typically Covered in Schedule Q

1. Quality Management System

🔹Implementation of ISO 9001 or equivalent QMS

🔹Approved Quality Manual and procedures

🔹Quality policy, objectives, and responsibilities

🔹Organization chart showing QA/QC authority


2. Codes, Standards & Specifications

🔹Applicable international codes (ASME, API, AWS, ISO, ASTM, NACE)

🔹Project specifications and client standards

🔹Order of precedence in case of document conflict


3. Inspection & Test Plans (ITPs)

🔹Mandatory ITPs for all activities

🔹Identification of Hold (H), Witness (W), and Review (R) points

🔹Client and third-party inspection requirements

🔹Approval of ITPs before work commencement


4. Welding & Special Processes

🔹Approval and control of WPS, PQR, and welder qualifications

🔹Welding consumable control and storage

🔹Preheat, interpass temperature, and PWHT requirements

🔹NDT methods, extent, and acceptance criteria

🔹Qualification of special processes (coating, heat treatment, NDT)


5. Material Control & Traceability

🔹Review of Material Test Certificates (MTCs)

🔹Heat number traceability throughout fabrication

🔹Material identification, marking, and preservation

🔹Storage and handling requirements


6. Inspection, Testing & Calibration

🔹In-process and final inspection requirements

🔹Mechanical and functional testing

🔹Calibration of inspection and measuring equipment

🔹Control of inspection status (Accepted / Rejected / Hold)


7. Nonconformance & Corrective Action

🔹NCR reporting and classification

🔹Root Cause Analysis (RCA)

🔹Corrective and preventive actions

🔹Client approval for repair or concession


8. Documentation & Final Handover

🔹Inspection and test reports

🔹Welding and NDT records

🔹PWHT charts and calibration certificates

🔹Manufacturing Data Record (MDR) / databooks

🔹Record retention requirements


Why Schedule Q Is Critical

🔹Defines quality expectations clearly

🔹Establishes inspection authority and control

🔹Prevents disputes and scope gaps

🔹Ensures regulatory and contractual compliance

🔹Provides full traceability and audit readiness

Monday, 13 November 2023

Why Manhole Non-Shrink Grout Shall meet the required compressive strength of 35 Mpa !!

 


 Manhole Non-Shrink Grout Shall meet the required compressive strength of 35 Mpa after casting period pf 28 Days testing will be done by laboratory. If we achieved compressive strength more than  mpa we should follow the below procedure.

 

 

 

Root Cause / Reason for Non-Conformity: -

 

  • Prepared grout specimen at site is transported earlier than 24 hours after placement in which it must be cured first at site for a period of 3days.
  • Molds used as forms for grout specimen are not precisely fixed with equal side before filling, when demolded dimensions are not accurately equal having a difference of 2-3mm when measured by vernier caliper.
  • Prior compression testing, surface that will engage to the load cell are not uniformly levelled leading uneven stress distribution.
  • Prepared grout specimen prior demoulding must be mark on the top side to indicate the surface where the load cell will engage during compressive testing.
  •  

 

Correction Plan: -

  • Grouted manholes affected by the failed grout compressive strengths shall be collected with a set of drilled cores for crushing tests to determine if actual site condition of placed grout meets the specified compressive strengths.

Corrective and Preventive Actions (To Avoid Recurrence): -

 

  • QC shall strictly monitor the grout preparation for mixing, sampling, and testing.
  • Third-party technicians shall ensure calibrated grout mold only to be used for preparing specimen.
  • Demolding of specimen shall be carried out after 24hours and to be site cured in 3days prior transporting to the Third-Party laboratory for continuous curing.

Source From : Er. Munusawmy, Consultant, GOBI.

Friday, 25 August 2023

இஃதிகாஃப் இருப்பவர் கடைபிடிக்க வேண்டிய சட்டங்கள் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!


அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் கூறிய வணக்க வழிபாடுகளில் ஒன்றே இஃதிகாஃபாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானுடைய காலங்களில் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள் என்று உறுதியான ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது.


இஃதிகாஃப் இருப்பவர் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் மற்றும் இஃதிகாஃபுடன் தொடர்புடைய சட்டங்கள் பற்றிய விளக்கங்களை எம்மில் பலர் அறியாதவர்களாக உள்ளனர். எனவே, இச்சிறு தொகுப்பில் இஃதிகாஃப் தொடர்பான மார்க்கச் சட்டங்களைக் கேள்வி பதில் அமைப்பில் மிகச் சுருக்கமாக தொகுத்திருக்கின்றோம். அல்லாஹ் இதன் மூலம் எம்மனைவருக்கும் பயனளிப்பானாக! அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

1. இஃதிகாஃப் என்றால் என்ன?

பதில்: அரபு மொழியில் இஃதிகாஃப் என்ற வார்த்தைக்கு ஒரு இடத்தைப் பற்றிப்பிடித்திருத்தல் என்று பொருள் வழங்கப்படுகின்றது. மார்க்க அடிப்படையில் இஃதிகாஃப் என்பது: பள்ளிவாசலில் குறிப்பிட்ட அமைப்பில் அல்லாஹ்வுக்காகத் தங்கியிருத்தல் ஆகும்.

2. இஃதிகாஃபின் சட்டம் என்ன?

பதில்: குர்ஆன், ஸுன்னா, இஜ்மா உடைய ஆதாரங்களைக் கொண்டு இஃதிகாஃப் இருப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தான காரியமாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:“பள்ளிவாசல்களில் நீங்கள் இஃதிகாப் இருக்கும்போது அவர்களுடன் ஒன்று கூடதீர்கள்.” (அல்பகறா: 187)

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ் அவரை மரணிக்கச் செய்யும் வரை ரமழானின் இறுதிப் பத்தில் இஃதிகாப் இருந்தார்கள். பின்பு அவரது மனைவிமார்கள் அவரது மரணத்திற்குப் பின்பு இஃதிகாப் இருந்தார்கள்.” (புஹாரி, முஸ்லிம்) இப்னுல் முன்திர், இப்னு குதாமா, நவவி(ரஹிமஹுமுல்லாஹ்) ஆகியோர் இஃதிகாஃப் இருப்பது சுன்னத்தான காரியம் என்பது அறிஞர்களால் ஏகோபித்த முடிவு என்று கூறியிருக்கின்றார்கள்.

3. இஃதிகாப் இருப்பவர் தான் நாடிய போது இஃதிகாஃபை 
துண்டித்து விட்டு வெளியேறலாமா?

பதில்: இஃதிகாஃப் இருப்பவர் தனது இஃதிகாஃபைத் துண்டித்து விட்டு தான் நாடிய போது வெளியேறிச் செல்லலாம். இஃதிகாஃபைப் பூரணப்படுத்திய பின்பே வெளியேறிச் செல்ல வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் காணப்படவில்லை.

4. இஃதிகாஃப் இருப்பவர் நோன்பாளியாக இருப்பது அவசியமா?

பதில்: சுன்னத்தான இஃதிகாஃப் (ரமளான் கடைசிப் பத்து நாட்கள் மேற்கொள்ளப்படுகின்றத இஃதிகாஃப்) இருப்பவர் நோன்பாளியாக இருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.

5. பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருப்பது அவசியமா?

பதில்: அல்லாஹுத்தஆலா பள்ளிவாசலைக் கொண்டே இஃதிகாஃபைக் குறிப்பாக்கியுள்ளான். அல்லாஹுதஆலா கூறுகின்றான்: “பள்ளிவாசல்களில் நீங்கள் இஃதிகாஃப் இருக்கும் போது அவர்களுடன் ஒன்று கூடாதீர்கள்.” (அல்குர்ஆன் 2:187)எனவே, இஃதிகாஃப் பள்ளிவாசலில் மாத்திரமே அமைந்திருக்க வேண்டும்.

6. எவ்வாறான பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்க முடியும்?

பதில்: ஜமாஅத் தொழுகை நடைபெறும் அனைத்துப் 
பள்ளிவாசல்களிலும் இஃதிகாப் இருக்கலாம்.
அல்லாஹுத்தஆலா இவ்வசனத்தில் பள்ளிவாசல்கள் 
எனப் பொதுப்படையாகவே கூறியுள்ளான். 

இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது ஸஹீஹில் “அனைத்துப் பள்ளிவாசல்களிலும் இஃதிகாஃப் இருக்கலாம்” எனத் தலைப்பிட்ட பின்பு மேற்குறிப்பிடப்பட்ட அல்குர்ஆன் (2:187) வசனத்தை இடம்பெறச் செய்துள்ளார்கள்.

7. இஃதிகாஃபின் குறைந்த காலம் எவ்வளவு?

பதில்: இஃதிகாஃபின் குறைந்த காலம் ஒரு நிமிடமோ, ஒரு 
மணி நேரமோ, ஒரு நாளோ (24 மணி நேரமோ) இருக்கலாம்.

8. இஃதிகாஃப் இருப்பவர் மலம்ஜல தேவைகளுக்காகப் 
பள்ளிவாசலை விட்டு வெளியேறலாமா?

பதில்: மலம்ஜல தேவைகளுக்காக இஃதிகாஃப் இருப்பவர் பள்ளிவாசலை விட்டு வெளியேறலாம் என்பது குறித்து இப்னுல் முன்திர், இப்னு குதாமா ரஹிமஹுமல்லாஹ் ஆகியோர் அறிஞர்களின் ஒன்றுபட்ட முடிவைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

9. ஏனைய தேவைகளுக்காகப் பள்ளிவாசலை விட்டு வெளியேறலாமா?

பதில்: பள்ளிவாசலில் நிறைவேற்ற முடியாத அவசியத் தேவைகளுக்காகப் பள்ளிவாசலை விட்டு இஃதிகாஃப் இருப்பவர் வெளியேறிச் செல்லலாம். மேலும், அல்லாஹ் கட்டாயப்படுத்திய காரியங்களைச் செய்வதற்கும் வெளியேறிச் செல்லலாம். அது நீண்ட இடைவெளியை ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும்.

10. இஃதிகாஃப் இருப்பவர் தனது மனைவியுடன் உறவில் 
ஈடுபட்டால் அவரது இஃதிகாஃபின் நிலை என்ன?

பதில்: இஃதிகாஃப் இருப்பவர் தனது மனைவியுடன் உறவில் 
ஈடுபட்டால் அவரது இஃதிகாஃப் முறிந்து விடும்.

நன்றி ;- வரஸத்துல் அன்பியா இணையதளம்.