Friday 16 August 2019

ஆன்லைனில் அதிகம் உள்ள சகோதிரிகளுக்கு உங்கள் சகோதரன் மு. அஜ்மல் கான் தரும் அட்வைஸ் !!

No photo description available.அன்புள்ள சகோதரிகளுக்கு!!!

இணையதளத்தில் பயணிக்கும் அனைத்து பெண்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்...


ஒரு ஆணோடு பாலியல் ரீதியாக உரையாடியிருந்து, அதைத் தவறு என்று உணரும் தருணத்தில் அதிலிருந்துமுழுமையாக விலகி விடலாம்.
ஆனால், பெண்கள் அதற்குப் பின்தான் பெரிய தவறு செய்கின்றனர்.
முதல்ல பாலியல் ரீதியான பேச்சுகுள்ள போயிட்டாலே அங்கயே எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு அர்த்தம்...
இந்த மாதிரி டிஸ்கஷனை ஒரு பெண் ஆண் கிட்ட மறைமுகமா நடத்துறான்னா அங்கயே அவளோட தரம் தாழ்ந்து விடுகிறது...
ஒரு ஆணுடனான பேச்சு என்பது ஒவ்வொரு பெண்ணும் தன்னையே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமா நினைச்சுகிட்டா தவறான உரையாடல்களே நடைபெறாமல் போய்விடும்...

மேற்கொண்டு எந்தத் தவறும் வராமல் அதிலிருந்து மீண்டு விடலாம்...
இல்லையென்றால் வரும் ஆபத்துகளை எதிர் கொள்ளத்தான் வேண்டும்...
நான் சொல்வது தவறே செய்யாமல் தவறாக சித்தரிக்கப்படும் பெண்களுக்கான அறிவுரையாக எடுத்துக்கலாம்...

ஒரு ஆணோடு பாலியல் ரீதியாக உரையாடியிருந்து, அதைத் தவறு என்று உணரும் தருணத்தில் அதிலிருந்துஎவ்வாறு விலகி விடலாம்?
இந்தக் குறுஞ்செய்திகள் அல்லது அலைபேசி உரையாடல்களை வைத்து ஆண்கள் மிரட்டும் பொழுது அதற்கு பயந்து அவர்கள் அழைக்கும் இடத்திற்குச் செல்வது, அவர்கள் என்ன சொன்னாலும் செய்வது என்ற நிலைக்குச் சென்று விடுகின்றனர்.
பாலியல் மிரட்டல்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை. எந்தச் சூழலிலும் பதட்டமடையத் தேவையில்லை.
முகநூல், யு டியூப், கூகுள் ஆகியவற்றில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை தவறாகப் பதிவிட்டு இருந்தால் அதை நீக்குவதற்கு பல வழிகள் இருக்கின்றன.
IMAGE REMOVAL PREOCESSING மூலமாக ஆபாசமாகப் பதிவிட்டுள்ள
புகைப்படங்களை நீக்கி விட முடியும்.
கூகுள் வலைத்தளத்தில் REVERSE IMAGE PROCESSER பயன்படுத்தி எந்தெந்த வலைப்பகுதிகளில் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது என்பதனை அறிந்து
அதை நீக்கி விட இயலும்.
யூ ட்யூப் -ல் காப்பி ரைட் படிவத்தினை சமர்ப்பித்தால் வீடியோ அகற்றப்படும்.
XXX வீடியோஸ் என்று சொல்லக் கூடிய ஆபாச வலைத்தளத்தில்
ABUSE REPORTING FORM என்று ஒரு படிவம் உள்ளது.அந்தப் படிவத்தில் ,
இது என்னுடைய அனுமதி இல்லாமல் என்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் பதிவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தால் அந்தக் காணொளியை
நீக்கி விடுவார்கள்.
இதனைத் தனியாக செய்யத் தெரியவில்லை என்றால் , அதற்கென்று சைபர் கிரைம் பிரிவு உள்ளது அல்லது இதை செய்து கொடுக்க தனியார் ஏஜன்சிகள் இருக்கின்றன.
உடலை வெளிப்படுத்துவதால் நமது புனிதம் கெட்டுவிட்டது, கற்பு போய்விட்டது என்றெல்லாம் நினைத்துப் பதறாமல் ,பாலியல் அச்சறுத்தல்களுக்கு அடிபணியாமல் நிதானமாக இந்தச் சிக்கல்களில் இருந்து வெளியேறும் வழிகளைப் பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர வாழ்க்கையே முடிந்து விட்டது என்ற மனநிலைக்கு சென்றுவிடக் கூடாது .
முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகியவற்றை பயன்படுத்தாதீர்கள் என்று சொல்லவில்லை.
பெண்களுக்கு படிப்பறிவு இல்லை என்று சொல்லாமுடியாது. சுகாந்திராம் இல்லை என்று மறுக்க முடியாது. இது அனைத்தும் பல பெண்கள்நல்ல முறையில் பயன்படுத்துவதில்லை. இதனால் எல்லா துன்பத்தை அவர்கள் அனுபாவிக்கவேண்டி.உள்ளது முதலில் இதை போன்றபெண்கள் திருந்த வேண்டும்
அப்போது தான் குற்றங்கள் குறையும்...
நண்பன், காதலன் போன்ற உறவுகள் ஆன்லைனில் பெறக்கூடியது அல்ல.

புரிந்துகொள்ளுங்கள் சகோதரிகளே !!


முகநூல் மற்றும் Whats app ,Whats app status ,Hike, viber, instragrame, Skype, போன்றவற்றை பயன்படுத்தும் என் உடன்பிறவா சகோதரிகலே தங்களின் புகைபடங்களை எதிலும் வைத்துவிட வேண்டாம். தற்போது நடைமுறையில் photo editor மிகவும் பிரபலமான முறையில் வளச்சி அடைந்துள்ளது. யாரை எப்படி வேண்டுமானாலும் மாற்றிகொள்ளலாம்.
தங்களின் புகைபடங்களை Download செய்து விபசாரி களின் உடையில்ல உடம்பில் உங்கள் தலையை பழியாக்க பல கும்பல் காத்துகிடக்கிறது. எதிலுமே அறியாத தெரியாத நபர்களிடம் தங்களின் புகைபடம் நம்பர்களை அனுப்ப வேண்டாம்.தற்சமயம் முகநூலில் Fack ஐடியில் பல மகான்கள் வலம்வருகின்றன.


அவற்றை கண்டரிய பல வழிமுறைகள் உள்ளது.
1. முதலில் About ல் பார்க்கவும் அவர்கள் கூறும் வயதும் About பதிவு செய்துள்ள வயதும் சரியாக உள்ளதா என்று.

2. அவர்களின் Status மற்றும் Upload போட்டோவை பார்க்கவும்.
எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் Status போடாமல் இருக்கமாட்டாங்க. Fake idல போட்டோ மட்டும் இருக்கும் Status இருக்காது

3. அவர்களின் Friends listயை பார்க்கவும்.

4. அவர்கள் Like செய்துள்ள Pageயை பார்க்கவும். எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் Like Pageல்மாட்டி கொள்வான்.

5.விடாமல் மெசேஜ்செய்துதொல்லை செய்பார்கள்.

6.அவர்களின் விளாசத்தை கூறாமல் உங்களின் விளாசத்தை மட்டும் கேட்டறிவார்கள்.

7.Messenger ல் விடாமல் போன்செய்பார்கள்.

8. நீங்கள் பெண்ணாக இருந்தாலும் நான் பையன் என்று கூறுங்கள் உங்களை உடனே blk செய்வார்கள்.


தாய்மார்கலே தயவு செய்து புதுமுகநூல் பயன்படுத்துபவர்கள் தங்களின் போன் நம்பரை முதலில் Remove செய்யுங்கள்.

அவற்றை செய்யும் முறை..

1, About ல் சென்று Contact info வை click செய்யவும்

2.சிறிது கிலே சென்று Contact info எதிர்புரம் உங்களின் போன்நம்பரும் Edit என்றும் இருக்கும்.Edit ஐ Click செய்யவும்.

3.பின்பு உங்களின் போன் நம்பரும் வரும் அதன் எதிர்புரதில் சிரிய டப்பா ஒன்று இருக்கும் அதை click செய்தால் Friends, public, onlyme என இருக்கும்.நீங்கள் பார்த்ததில்.onlyme இல்லையென்றால் More options னை Click செய்தால் அதில் Onlyme இருக்கும் அதை click செய்து கிலே சென்று Save என்ற பட்டனை Click செய்தால் உங்களின் நம்பரை நீங்கள் மட்டுமே கான முடியும்.

இது ஆண்களுக்கும் பெண்களும் தெரிந்து கொள்ளுங்கள்
தெரியவில்லையென்றால் தெரிந்தவர்களின் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

தங்களிடன் ஒரு பெண் பேசவில்லை யென்றால் அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள் நம் வீட்டிலும் அம்மா என்ற தெய்வம் வாழ்வதை மறந்து விட வேண்டாம்.
இவ்வுளகில் ஆண் பெண் இருவரும் சமம் உறுப்புகள் மட்டுமே வேறு. இந்த பெண் இல்லையென்றால் எதோ ஒரு மூலையில் உங்களுக்காக ஒரு பெண் கண்டிப்பாக காத்திருப்பால்.

பிடிக்கவில்லையென்றால் விபசாரி யாக இருந்தாலும் தொட கூடாது என்பது பல மானிடர்களின் கொள்ளை. ஐந்து நிமிட உடல் சுகத்திற்காக ஒரு பெண்ணிண் வாழ்க்கையை கெடுத்துவிட வேண்டாம்.தாய் தந்தைகள் என்னற்ற கனவுகளோடு வீட்டில் வளர்த்து வருகின்றனர்.அடுத்த பெண்ணிடம் பேசுவது சந்தோஷம் கிடையாது தன் தாய், தங்கை, தாரத்திடம் ,ஐந்து நிமிடம் பேசினால் போதும் அதை விட சந்தோஷத்தை வேற்று பெண்களால் கொடுக்க முடியாது.

மனிதனாக பிறப்பது அறிது. இன்று இருப்போம் நாளை இருப்போமா என்று நமக்கே தெரியாது மனிதனாக பிறந்த நாம் அனைவரும் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ கற்றுக்கொள்வோம்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு   : உங்கள்  சகோதரன்  மு. அஜ்மல் கான்.

No comments:

Post a Comment