Thursday 15 August 2019

சுதந்திர தினம் நமக்கு சொல்ல விரும்பும் நற்செய்தி என்ன ? !!!

ஒவ்வொரு தனி மனிதனும் பெறக்கூடிய அதியுயர் கெளரவம் தனி மனித சுதந்திரமாகும். அன்றும் இன்றும் இதை பெற்றுக் கொள்வதற்கு மனித சமூகம் பல்வேறு தியாகங்களை செய்கின்றது. அந்த வகையில் 7 தசாப்தங்களுக்கு முன்னதாக இதை பெற்றுக்கொடுத்த தேசபக்தர்களை நினைவு கூறுவது நமது கடமையாகும்.
இனமத மொழி வேறுபாடின்றி நமக்காக பெற்றுத்தந்த சுதந்திரத்தை நாம் சரியாக பயன்படுத்துகின்றோமா ?

அன்று அந்நிய நாட்டவர்களுக்கு எதிரான போராட்டம்....
இன்று நம் தீய எண்ணங்கள் , இனப்பகைமைகளுக்கு எதிரான போராட்டம் .
உலகமே வியந்த நம் நாடு இப்போது எப்படி எந்நிலையில் காணப்படுகின்றது?
நமது கலை கலாச்சாரத்தை உலகத்தவர்கள் விரும்பும் போது நாம் அதை புறக்கணிப்பது சரியா ?
ஒரு சிலரின் சுய இலாபங்கள் / பிரச்சினைகள் இன மத அரசியல் சாயம் பூசி சமூக பிரச்சனையாக மாற்றும்போது அதை பின்பற்றும் நமது சிந்தனையில் சுதந்திரமும் தெளிவும் வேண்டுமல்லவா...?
இந்த நாட்டில் இன ஒருமைப்பாட்டை விரும்பியவர்கள் , நமது நாட்டின் வளர்ச்சியில் அதிக பங்கெடுத்தவர்களாகவும், மற்றவர்களின் மனங்களை அதிகம் வென்றவர்களாகவும்,
மற்றவர்களின் கலை கலாச்சார விழுமியங்களை பேணிநடப்பவர்களாகவும், அறிவு சார்ந்த விடயங்களில் அதிகம் ஈடுபடுபவர்களாகவும் இருந்தார்கள்.
இவ்வாறான விடயங்களை நாமும் பின்பற்றுவதன் மூலம் இலங்கையை ஒரு செல்வாக்கு மிகுந்த நாடாக மாற்ற முடியும்.
இவற்றை புத்தி ஜீவிகள், சிவில் அமைப்புக்கள் , அரசியல் கட்சிகள் சிந்தித்து சக வாழ்வுக்கான வேலைத் திட்டங்களை தேசிய மட்டத்திலும் , ஊர்மட்டத்திலும் நடாத்த முன்வரவேண்டும்.
உண்மையான சுதந்திரத்தின் பலாபலன்களை அடைந்து, ஆசியாவின் அதிசயமாக  புதிய இந்தியாவாக  மாற்ற அனைவரும் இன்றைய நாளில் உறுதி கொள்வோம்.

No comments:

Post a Comment