Thursday 13 May 2021

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகும் போது தரும் பில்லை (Final bill) சரிபார்த்தது உண்டா? அதில் நீங்கள் பார்க்க வேண்டியது என்னென்ன?




கொச்சியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 23 மணி நேரம் மட்டுமே இருந்த ஷபீனாவுக்கு ரூ 24,760ஐ கட்டணமாக செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியது. அந்த பில்லில் பிரேக்கப்பை பார்த்த போது பாதுகாப்பு கவச உடைகளுக்கு ரூ 10,416 போடப்பட்டுள்ளது. வெறும் அரிசி கஞ்சியே கொடுக்கப்பட்ட நிலையில் உணவு என போட்டு ரூ 1,380 போடப்பட்டது. காய்ச்சல் மருந்துக்கு ரூ 24 போடப்பட்டிருந்தது.

எதற்காவது ஆஸ்பத்திரியில் அட்மிட்டாகி, ஒரு சில நாட்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பும் போது, ஒரு பெரிய லிஸ்ட் கையில் கொடுப்பாங்க. இதுவே அ றுவை சி கிச்சை நடந்துள்ளது என்றால் டிஸ்சார்ஜ் சம்மரி கொடுப்பாங்க. யாருமே அந்த நேரத்தில் இதனை கவனிக்க மாட்டோம் என்றே நினைக்கிறேன். ஏனென்றால், எப்படா வீட்டுக்கு போகலாம்? என்ற உணர்வு வாட்டி எடுக்கும். சீக்கிரம் வீட்டுக்கு போய் சேர வேண்டும் என மட்டுமே மூளை உணர்த்திக்கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் பில்லாவது? டிஸ்சார்ஜ் சம்மரியாவது? கொடுத்தா போதுமென ஓட்டம் பிடிப்போம். அதில் என்ன இருக்கோ, அத்தனைக்கும் சேர்த்து பில் கட்டிவிட்டு வருவோம். இந்த நேரத்தில் கொஞ்சம் ப தற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுபவர்களை அழைத்து இந்த பொறுப்பை ஒப்படைத்துவிட்டால், பல மோசடிகளில் இருந்து தப்பிக்கலாம். நிறைய இடங்களில் மருத்துவமனை ஊழியர்கள் செய்யும் தவறால், வேறொருவருக்கு போக வேண்டிய பில் மாற்றிக்கூட நம்மிடம் கொடுக்கப்படலாம்.

இந்த பதில் கண்டிப்பாக எதாவது ஒரு இடத்தில் பயன்படும்.
நாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீட்டிற்கு சென்றால் போதும் என்று தான் கண்டிப்பாக நினைப்போம். இருந்தாலும் ஒரு 10 நிமிடங்கள் ஒதுக்கி வைத்து, டிஸ்சார்ஜ் பில்லை (Discharge bill) சரி பாருங்கள். (நோயாளியுடன் இருப்பவர்களாவது இதை கவனிக்க வேண்டும்)

நீங்கள் சரி பார்க்க வேண்டியவை : -

  1. முதலில் பில்லில் பார்க்க வேண்டியது - உங்களுடைய பெயர் மற்றும் உங்கள் வயது தான் இருக்கிறதா என்று. (அதே பெயரில் வேறு யாராவது கூட இருக்கலாம் அதனால் வயது கண்டிப்பாக பார்க்க வேண்டும்)
  2. எத்தனை நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றீர்கள் என்று பார்க்க வேண்டும். எதற்காக என்றால் அத்தனை நாட்கள் மட்டும் அறை வாடகை (Room rent) கொடுத்தால் போதும்.
  3. நீங்கள் குளிர் சாதன வசதியுடன் இருந்த அறையில் (A/C room) இருந்தால் மட்டும் ஏசி சார்ஜ் கொடுங்கள். அதே போல் ஐ.சி.யு (ICU) வில் இருந்தால் மட்டும் அதை கொடுங்கள்.
  4. உங்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இல்லாமல் வேறு யாராவது பெயர் இருந்தால், அந்த சார்ஐ் பற்றி மருத்துவமனையில் கேட்டு குறைக்கலாம்.
  5. உங்களுக்கு எடுத்த ஸ்கேன்க்கு மட்டும் பில் போடப்பட்டு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். (ஏன் என்றால் சில சமயங்களில் தவறுதலாக கூட உங்களுக்கு எடுக்காத ஸ்கேன் சேர்க்கப் பட்டிருக்கலாம்)
  6. ரிட்டன் (Returned medicine) பண்ண மருந்துகளுக்கும் சார்ஜ் செய்தார்களா என்று பார்க்க வேண்டும்.
  7. நீங்கள் கை காசு போட்டு கட்டினாலும் சரி அல்லது தனியார் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் கட்டினாலும் சரி (ஏன் என்றால் நீங்கள் சரி பார்க்காத தொகை அனைத்தும் காப்பீடு தொகையில் இருந்து குறையும்), இவை அனைத்தும் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டியவஅறை வாடகை குளிர்பதனம் இல்லாது போனால் அதுவும் பில்லில் சேர்ந்துள்ளதா? நீங்கள் வாங்கி replace செய்த பொருட்களின் விலை மீண்டும் பில்லில் உள்ளனவா? டாக்டர் fees எத்தனை? ட்ரிப்ஸ் எத்தனை பாட்டில்கள் ஆயின, எத்தனை பில்லில் உள்ளன? Etc etc.ஆனால் நம் பிரியமுள்ள உறவு வீட்டுக்கு வந்தால் போதும் என்று இருக்கும்போது நாம் இதையெல்லாம் கணக்கெடுப்பு செய்யும் மனநிலையில் இருக்க மாட்டோம். இதே வேலையாக இருப்பது கஷ்டம். முக்கியமான items சரி பார்த்து பணம் கட்டி விடுவோம்.! 
  8. பில் போலவே discharge summary மிக முக்கியம். அதை வாங்க மறக்காதீர்கள். மருத்துவ காப்பீடு இருந்தால், விரிவான பீல் வேண்டும் என கேட்டு வாங்குங்கள். ஒரு சில காப்பீட்டு நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்கள் காப்பீட்டு தொகையில் வராது என்கிற நிபந்தனை எல்லாம் வெச்சிருக்காங்க அதற்கு கண்டிப்பா தேவைப்படும். பீல் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு டிஸ்சார்ஜ் சம்மரியும் முக்கியம். அது கொடுத்தால் மட்டுமே ஹா ஸ்பிட்டலை விட்டு வெளிய வாங்க. அட்மிட் ஆனதில் இருந்து, டிச்சார்ஜ் ஆகும் வரைக்கும் என்ன எல்லாம் பண்ணாங்க? அடுத்து என்னவெல்லாம் செய்யணும்? எடுத்துக்கொள்ள வேண்டிய ம ருந்துகள் குறித்த விவரம் எல்லாம் அதில் இருக்கும். இதெல்லாமே கவனிக்கும் அளவுக்கு அந்த நேரத்தில், நமக்கு தெளிவு இருக்குமான்னு தெரியல. முடிந்த வரையில் முயற்சிக்கலாம்.
தொகுப்பு : அ.தையுபா  அஜ்மல்.

No comments:

Post a Comment