Monday, 2 June 2014

Before You Joining The Ship Don't Forget This 14 Things To Do !!

A piece of information that DEALS in what can be very basic things that are very essential for you, that if forgotten can make your life uneasy on Ship. Let's see Things You Should not Forget While Joining Ship.


Preparing for joining your ship is more or less close to preparing for a long world tour, and mariners are blessed with this fact. The experience of forgetting something can be very miserable in both cases. And we all know that, when you are travelling on ship, you cannot just go to the mall and buy something. It can be, but only when you are on port (Hoping that you will get time to go shore). Information given here is taken from variousPEOPLE as what might they think is very important for them on ship. Pack light, but never forget those things that are essential for your stay and also before joining the ship. So here are some of things that you don’t want to forget.


1)     All the necessary Documents like Passports, CDC, employment contract etc. Yes, these things are obvious, but people tends to forget them and then have to regret, while coming back from airport to collect them. Also keepPHOTOCOPIES of all certificates at your home. They will come handy, if any of your documents is lost.

2)     Your Shaving kit is a must and needs to be carried always with you.


3)     Your native snacks. YesPEOPLE will miss them a lot, when you are onboard. Since mariners don’t need to carry much of other items and mostly cloths, they can fill their bag with some snacks. Believe me, if you haven’t, you will regret it. 


4)     Your Mobile Phone. I know you won’t be making call through it, but with advent of internet on most of ships, these days, you will find it very helpful. Also, make sure that you get your all apps updated at home, before joining ship.


5)     Laptop, Tablet etc. There is no denying fact that now on ship you have less work as compared to 20 years back. So, you need a gadget to watch movies, etc in the evening time. Make sure you have your charger with you.

6)     Personal medicines are sure something you don’t want to miss out. Although there are plenty of medicines available on ship, but it is alwaysthe merchanthantt some of your medicines suits you well.


7)     A needle and thread. Looks a very small thinsnakes akesl come handy a
lot

8
)     Your floaters oraboardare very much needed onboard, always carry them.

9)     A wrist watch is a must and at least carry two of them.  


10)Toiletries like Deodorant, body lotion, etc needs to carry in little more amounts like two bottles etc, because sometimes it is difficult to find out these on malls of other countries.
And list goes on………..

11)Flight Tickets, transit visas etc needs to be kept in separate folder, to avoid confusion. Also check your flight status atnd imings and also about how much connecting time between flight, if there is any.


12)Your Shaving kit is a must and needs to be carried always with you.

13)ForPEOPLE who are in the Deck Department, carrying your own geometry box like good pen, eraser and pencils etc is always a boon. For engine guys, a torch, a head covering cloth, etc becomes quite necessary.


14)Your uniform and epaulettes. Yes don’t wear them alwaysaxle in port you have to.
!!!!And the most important!!!!

You Girl Friend or Wife and Children Photo(Framed) :)

So these are some of things that we think are essential for stay onboard. If you have any other thing toSHARE with us regarding things to check before you join ship, please comment below and we will add it in to our list. 

Prepared & Collection by : M.Ajmal Khan.

Sunday, 1 June 2014

மதுரையில் " இ பிளானிங்" (கட்டடம் மற்றும் வரைபட அனுமதியை வெப்சைட் மூலம் வழங்கும் முறை) மீண்டும் தொடக்கம் !!

மதுரை மாநகராட்சியில் கட்டட அனுமதி பெற எளிமையாகவும் புரோக்கர்களை ஒழிக்கவும் கொண்டு வரப்பட்ட 'இ பிளானிங்' திட்டம் ஓரம் கட்டப்பட்டதால் கட்டட அனுமதி தொடங்கியுள்ளன.


ஐந்து ஆண்டுகளுக்கு முன், "இ பிளானிங்' முறை அறிமுகமானது."ஆன்லைன்' முறையில் அனுமதி பெறும் அத்திட்டத்திற்கு, சென்னை தனியார் நிறுவனம் ஒன்று, "சாப்ட்வேர்' அமைத்துக் கொடுத்தது. மாநகராட்சிக்கு வருவாய் தரக்கூடிய அந்த முறையை, முந்தைய நிர்வாகம் கிடப்பில் போட்டது.
முறைகேடுகளை தடுக்க, மீண்டும் "இ பிளானிங்' திட்டத்தை செப்.,க்குள் கொண்டு வர, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா முயற்சி எடுத்தார். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க சென்னை நிறுவனத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. 

மதுரையில், கட்டடம் மற்றும் வரைபட அனுமதியை வெப்சைட் மூலம் வழங்கும் 
இ பிளானிங்முறைக்கு, மாநகராட்சி தயாராகியுள்ளது. இந்த புதிய முறையால், இனி புரோக்கர்களுக்கு இடமில்லை. கட்டணம் இல்லாமல், மாநகராட்சி அலுவலகத்தில் பயிற்சி அளிக்க தயாரானது. ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் பயிற்சியில் பங்கேற்பதை தவிர்க்கின்றனர். "இ பிளானிங்' முறை வந்தால், மண்டலங்கள் மூலம் அனுமதி வழங்குவது தடைபடும் என்பதால், இப்பயிற்சியை புறக்கணிக்கின்றனர். இதனால், பயனுள்ள திட்டம் வீணாகிறது. அதிகாரிகள் பயிற்சிக்கு வராததால், கூடாரத்தை காலிசெய்ய, சம்மந்தப்பட்ட நிறுவனம் தயாராகி வருகிறது. இதனால், இழப்பு அவர்களுக்கு இல்லை; மாநகராட்சி வருவாய்க்கு தான்.

கட்டட அனுமதியில் செய்த குளறுபடிகள் ஒட்டுமொத்த மதுரையை சுயலாபத்திற்கு அடகு வைத்த செயலாக விமர்சிக்கப்பட்டது. ஆதாரபூர்வமாகவும் அதிகாரப்பூர்வமாகவும் மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் நடந்த 'தில்லாலங்கடிகள்' கண்டுபிடிக்கப்பட்டன.விஜிலென்ஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பு விசாரணைகளும் நடந்தது. விசாரணையின் முடிவுகள் மர்மமான நிலையில் பணம் கொழிக்கும் அந்த துறையில் அடுத்தடுத்து விதிமீறல்கள் தொடர்ந்தன. 

மதுரையில், 4,000 சதுர அடி குடியிருப்பு கட்டடம், 2,000 சதுர அடிக்குள் கட்டப்படும் வணிக வளாகங்களுக்கு, மாநகராட்சியின் அனுமதி பெற வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கும் நடைமுறையால், குளறுபடி ஏற்படுகிறது.

புரோக்கர்கள் குறுக்கீடு, மண்டலங்களில் முறைகேடான அனுமதி, கூடுதல் கட்டணம் வசூல் 
உள்ளிட்ட தொல்லையால், விண்ணப்பிக்கும் மக்கள், பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. கவனிக்க தவறினால், அலைக்கழிப்பும், மன உளைச்சலையும் சந்திக்க நேரிடும்.இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, வெப்சைட்டில், விண்ணப்பிக்கும், இ பிளானிங் திட்டத்தை, 2013 ஜன.,1ல் மாநகராட்சி செயல்படுத்துகிறது. இதன்மூலம், விண்ணப்பித்த ஒரு வாரத்தில் அனுமதி கிடைக்கும். 


சாட்டிலைட் மூலம் எடுக்கப்பட்ட வரைபடம், மாநகராட்சி வெப்சைட்யில் அப் லோடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரரிடம் இருந்து அனுமதி கேட்டு வரும் வரைபடங்கள், அங்கீகாரம் பெற்ற வரைபட வரைவாளர் மூலம், கம்யூட்டர் வழியாக சரிபார்க்கப்படும். உறுதி செய்த பின், செலுத்திய வேண்டிய கட்டணம் குறித்து, விண்ணப்பதாரருக்கு இ மெயில் அனுப்பப்படும். 


அதன் பின், விண்ணப்ப கட்டணம், கட்டட உரிமை ஆணை கட்டணம், கட்டட இடிபாடு அகற்றும் கட்டணம், தொழிலாளர் நலநிதி கட்டணம், திட்டக்குழுமம் அபிவிருத்தி கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் தபால் செலவு கட்டணம் ரூ.100 ஆகியவற்றை, மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தி ரசீது பெற வேண்டும்.


அந்த ரசீதுடன், புளூ பிரின்ட் நகல் ஐந்து, பத்திரம் நகல், ரூ.20 ஸ்டாம்பு பேப்பரில் உறுதிமொழிப் படிவம், இடத்தின் நான்கு புறமும் தெரியும் வகையில் உரிமையாளர் நிற்கும் போட்டோ, உரிமையாளரின் பாஸ்போர்ட் போட்டோ இரண்டு ஆகியவற்றை இணைத்து, கமிஷனரிடம் விண்ணப்பிக்க வேண்டும். 


அதற்காக, அவரது அலுவலகம் முன், விண்ணப்ப சேகரிப்பு பெட்டி க்கப்பட்டுள்ளது.விண்ணப்பங்களை, மைய நகரமைப்பு பிரிவினர் சரிபார்த்து, ஆவணங்கள் சரியாக இருப்பின், அனுமதி உத்தரவு வழங்கப்படும். 


அதிகபட்சம் ஒரு வாரத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு கட்டட அனுமதி கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தனர். இதற்காக மாநகராட்சி மைய அலுவலகத்தில் தனி 'சர்வர்' அமைக்கப்பட்டது.

வழக்கம் போல 'ஓபனிங்' நன்றாக தான் இருந்தது. ஆனால் 'பினிசிங்' படுமோசமாக உள்ளது. 'இ பிளானிங்' இல்லாமல் போய்விட்டது. மாதக்கணக்கில் கட்டட அனுமதிக்கு விண்ணப்பித்தவர்கள் காத்திருக்கின்றனர். மீண்டும் புரோக்கர்கள் கட்டுப்பாட்டிற்கு கட்டட அனுமதி விவகாரங்கள் சென்றுள்ளன. இத்திட்டத்திற்கு உருவாக்கிய சிறப்பு அறை எந்நேரமும் பூட்டிக்கிடப்பதே அதற்கு சான்று. மோசமான இந்த முடிவால் முந்தைய ஆட்சியில் இருந்த விதிமீறல் அனுமதிகள், மீண்டும் தலைதுாக்கும்.


தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Saturday, 31 May 2014

இரத்த உறவுகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன? உறவுகளைப் பேணுவோம்!!...


ஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட இபாதத்துக்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும். 

துரதிஷ்டவசமாக மார்க்க ஈடுபாடு உள்ள பலரிடம் கூட இன்றைய சமூக சூழல் இரத்த உறவை விட நட்பையும் இடையில் ஒட்டிக்கொண்ட உறவையும் முக்கியத்துப் படுத்தும் நிலை இன்று தோன்றியுள்ளது. நட்புக்காகவும், இன்னும் பல தொடர்புகளுக்காகவும் நேரத்தையும், பணத்தையும் செலவிடத் தயாராகவுள்ள பலர் குடும்ப உறவுக்காக சில நிமிடங்களைக் கூட துறக்கத் துணிவதில்லை.


நட்பும் ஏனைய உறவுகளும், நாமாகத் தெரிவு செய்பவையாகும். இரத்த உறவு அல்லாஹ்வின் தெரிவாகும். இவன் உன் வாப்பா, இவன் உன் சாச்சா, இவன் மாமா, இவன் உன் சகோதரன் என்பது அல்லாஹ் செய்த தெரிவாகும். இந்தத் தெரிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மார்க்கக் கடமையாகும்.

ஈமானுடன் சம்பந்தப்பட்டது:
இரத்த உறவைப்பேணுவது வெறும் சமூகக் கட்டமைப்பிற்காக மட்டும் அவசிய மானதல்ல. இஸ்லாமிய நோக்கில் இது ஈமானின் அம்சங்களில் ஒன்றாகும்.
“யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்


அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் ஒரு முஸ்லிம் கொண்டுள்ள ஈமானின் வெளிப்பாடுகளில் ஒன்றாகக் குடும்ப உறவைப் பேணி நடத்தலும் அமைந்துள்ளது. எனவே, குடும்ப உறவைப் பேண உறுதி பூணுவோமாக.

அல்லாஹ்வுடன் தொடர்பு :
ஏற்கனவே இரத்த உறவு என்பது அல்லாஹ்வின் தெரிவு என்று கூறினோம். இந்தத் தெரிவை ஏற்று மதிப்பதன் மூலமாக எமக்கு அல்லாஹ்வுடன் தொடர்பு உண்டாகின்றது.
அல்லாஹுதஆலா இரத்த உறவைப் பார்த்து “யார் உன்னைச் சேர்ந்து நடக்கிறானோ நான் அவனைச் சேர்த்துக் கொள்வேன். யார் உறவைத் துண்டித்துக் கொள்கின்றானோ நான் அவனுடன் தொடர்பைத் துண்டித்து விடுவேன்” என்று கூறினான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
ஆதாரம் : புகாரி
என்ற அறிவிப்பின் மூலம் குடும்ப உறவைப் பேணுவது அல்லாஹ்வுடனான உறவைப் பேணுவதற்குச் சமமாக்கப் படுவதையும் நாம் காணலாம்.
“இரத்த உறவு அர்ஷில் கொழுகப் பட்டுள்ளது. அது யார் என்னைச் சேர்ந்து நடக்கிறானோ அல்லாஹ் அவனைச் சேர்ந்து கொள்வான். யார் என்னைத் துண்டித்து நடக்கின்றானோ, அல்லாஹ் அவனைத் துண்டித்து விடுவான்” எனக் கூறும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

இந்த அறிவிப்பும் குடும்ப உறவைப் பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தும் அதேவேளை, இதற்கு மாறாகச் செயல் படுவோரைக் கண்டிக்கவும் செய்வது கவனிக்கத் தக்கதாகும்.

சுவனத்தில் நுழைவிக்கும்:
இரத்த உறவுகளுடன் இங்கிதமாகவும், இதமாகவும் நடந்து கொள்வதும் சுவனத்தில் நுழைவிக்கத்தக்க சிறந்த செயற்பாடாகப் போற்றப்படுகின்றது.
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சுவனத்தில் நுழைவித்து நரகத்தை விட்டும் தூரமாக்கக் கூடிய ஒரு அமலை எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றார் அதற்கு நபி(ஸல்) அவர்கள்,
“நீ அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணைவைத்து விடாதே! தொழுகையை நிலை நிறுத்து, ஸகாத்தும் கொடுத்துவா, குடும்ப உறவைப் பேணிக்கொள்” என்றார்கள்.
அறிவிப்பவர் : ஹாலித் இப்னு ஸைத் அல் அன்ஸாரி(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
சுவனம் செல்ல விரும்புபவர்கள் மேற்குறித்த நோக்கில் செயல்பட்டு குடும்ப உறவைப்பேண முன்வர வேண்டும்.

இரண விஸ்தீரனம் :
இரத்த உறவைப் பேணுவதால், மறுமைப் பேறுகள் மட்டுமன்றி இம்மையிலும் இனிய பயன்களுள்ளதாக இஸ்லாம் கூறுகின்றது.
“யார் தனக்கு றிஸ்கில் விஸ்தீரணத்தையும் நீண்ட ஆயுளையும் விரும்புகின்றாரோ அவர் அவர் இரத்த உறவைப் பேணிக்கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : அனஸ்(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

எதுவரை சேர்ந்து நடப்பது :
சிலர் எவ்வாறுதான் நல்ல முறையில் நடந்து கொண்டாலும், குறைகண்டு கொண்டே இருப்பர், குத்திப் பேசிக்கொண்டே இருப்பர், இப்பகைவர்களுடனும் இணைந்து நடப்பதே சரியான இரத்த உறவைப் பேணும் முறையாகும்.
“தன்னுடன் இணைந்து இருப்போருடன் சேர்ந்து நடப்பவன் இரத்த உறவைப் பேணுபவனல்ல. உண்மையில் தன்னுடன் உறவைத் துண்டித்தாலும் உறவு பேணுவதே இரத்த உறவைச் சேர்ந்து நடப்பவனாவான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ்(ரலி), ஆதாரம் : புகாரி
இதே நிலையை ஒரு தோழர் நபி(ஸல்) அவர்களிடம் இவ்வாறு முறையிட்டார்.
“எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் ஒட்டி நடந்தால் அவர்கள் வெட்டிச் செல்கின்றனர். நான் அவர் களுக்கு நன்மை செய்கின்றேன். அவர்களோ எனக்குத் தீமை செய்கின்றனர். நான் அவர்களுடன் கருணையுடன் நடந்து கொள்கின்றேன். அவர்கள் என்னுடன் கடுமையாக நடந்து கொள்கின்றனர் என்றார். அதற்கு நபியவாகள், நீ கூறுவது போல் நீ நடந்து கொண்டால் அல்லாஹ்விடமிருந்து ஒரு உதவியாளர் உனக்கு நியமிக்கப்பட்டிருப்பார்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
ஆதாரம் : முஸ்லிம்.   

 எனவே, முடிந்தவரை அனைவரையும் நாம் அணுசரித்து, விட்டுக்கொடுத்து இணங்கிச் செல்ல முயல வேண்டும். இதுவே, உண்மை யான இரத்த பந்தமாகும்.

காஃபிரான உறவு :
எமக்கு காஃபிரான இரத்த உறவு இருந்தாலும் அவர்களுக்குரிய அந்தஸ்த்தைக் கொடுக்க நாம் தயங்கக் கூடாது. இதில் இஸ்லாம் எவ்வளவு தூரம் விசாலமாகச் சிந்திக்கின்றது என்பதைப் பின்வரும் அறிவிப்பு உணர்த்துகின்றது.

“நீங்கள் நிச்சயமாக எகிப்தைக் கைப்பற்றுவீர்கள் அப்போது அவர்களுடன் மிக இங்கிதமாக நடந்து கொள்ளுங்கள். ஏனெனில், உங்களுக்கு அவர்களுடன் குடும்ப உறவும் – திருமண உறவும் உள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர்(ரலி)
ஆதாரம் : முஸ்லிம்  

இஸ்மாயில்(அலை) அவர்களின் தாயார் அன்னை ஹாஜரா அவர்கள் கிப்தி இனத்தவராவார். அவ்வாறே நபி(ஸல்) அவர்களின் மகன் இப்றாஹிமின் தாய் மரியதுல் கிப்தியாவும் இந்த இனத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். இதனையே நபி(ஸல்) அவர்கள் மேற்குறித்த நபிமொழியில் குறிப்பிட்டார்கள். தனக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஹாஜரா அவர்களின் குடும்ப உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எதிர்காலத்தில் நடந்து கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றால் எமது உடன் பிறப்புக்கள், எமது பெற்றோரின் உடன் பிறப்புக்கள், அவர்களுடைய குழந்தைகளுடன் நாம் எவ்வளவு இங்கிதமாக நடந்துகொள்ளப் பணிக்கப்பட்டுள்ளோம் என்பதை எண்ணிப்பார்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அத்துடன் நபி(ஸல்) அவர்கள் இதனைக் கூறும் போது அந்த கிப்தி இனத்தவர் கிறிஸ்தவர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
எனவே, காபிர்களாக இருந்தால் கூட இரத்த உறவுகளுக்கு நாம் முக்கியத்துவம் வழங்கத் தவறக் கூடாது.

இஸ்லாத்திற்கு எதிராக இரத்த உறவு: இரத்த உறவு இஸ்லாத்திற்கு எதிராக கிளர்ந்து வருமென்றால் அப்போது இரத்த உறவை விட கொள்கை உறவே முதன்மை பெறும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் எதிராகச் செயல்படுவோர் மீது உண்மையான பாசத்தையும் நேசத்தையும் சொரிய முடியாது. இதனைப் பின்வரும் வசனம் மூலம் அறியலாம்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும், நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும், தங்கள் சகோதரர்களாயினும், தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும், தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கின்றான்; சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள்; அவர்கள் தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள். (59:22)

இந்த வசனத்தின் படி நபித் தோழர்கள் தமது தந்தை, சகோதரர்கள் நெருங்கிய உறவினர்கள் என்ற பாகுபாடின்றி போர்க் களங்களில் எதிர்த் தரப்பில்; இருந்த பலரைக் கொன்றுள்ளனர். இரத்த உறவைக் காரணம் காட்டி சத்தியத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு உதவ முடியாது.

ல்லாஹ்வை மிஞ்சி இரத்த உறவு ஓங்கலாகாதுஇரத்த உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால், அது எல்லை மீறிச் சென்று விடக் கூடாது. அல்லாஹ்வையும், அவனது தூதரையும்விட பெற்றோரையோ, மற்ற உறவினர்களையோ ஒரு முஃமின் நேசிக்க முடியாது. இதனைப் பின்வரும் வசனம் இப்படி விபரிக்கின்றது.
“(நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத் தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம்(எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்குப் பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பாத்து இருங்கள்- அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை”. (9:24)

நபி (ஸல்) அவர்களும், “உங்களில் எவருக்கும் நான் அவரது தாய், தந்தை பிள்ளைகள் மீது மனித சமூகத்தை விடவும் விருப்பத்திற்குரியவனாக ஆகாதவரையில் நீங்கள் ஈமான் கொண்டவர்களாக முடியாது. (ஆதாரம் :முஸ்லிம்) என்ற நபிமொழி மூலம் நவின்றுள்ளார்கள். எனவே, பெற்றோர்கள் மீதோ, குடும்பத்தினர் மீதோ பாசம் வைக்கும் போது அந்தப் பாசம் எல்லை மீறிச் சென்று விடாவண்ணம் அவதானித்துக் கொள்ள வேண்டும்.

எனவே, குடும்ப உறவைப் பேணி நடந்து அல்லாஹ்வின் அருளையும் அன்பையும் பெறுவதுடன் “குடும்ப உறவைத் துண்டித்தவன் சுவனம் நுழைய மாட்டான்” அறிவிப்பவர் : ஜுபைர் இப்னு முத்இம்(ரலி), (ஆதாரம்: முஸ்லிம், புகாரி) என்ற அண்ணலாரின் எச்சரிக்கைக்கு அப்பாற்பட்ட கூட்டத்தில் இணைந்து கொள்வோமாக!

நன்றி : இஸ்மாயில் ஸலபி

தொகுப்பு  :  அ .தையுபா  அஜ்மல் 

Sonepur Mela (Harihar Kshetra Mela) is the Asia's largest cattle fair...


Sonepur Mela Patna

Sonepur fair (Mela in Hindi) in Bihar, India has its origins during ancient times. This is when Chandragupta Maurya used to buy elephants and horses across the river Ganges. Now it takes place annually, 35 kilometres from Patna, the capital of Bihar. It is held for 21 days in the month of November at the junction of the rivers, Ganga and Gandak. It even has a legendary tale attached to it. Many believe that a struggle took place at this spot between the ruler of Gandharva, Huhu and Indraya muni; ultimately Lord Vishnu helping the weaker latter. That is why there is a vast gathering of devotees gathered at the confluence for the two holy rivers for the blessed dip at the adjacent “Harihar Nath temple” on the full moon day.

Sonepur mela is the Asia’s and probably one of the worlds largest cattle fair. Nearly all animals can be bought at the Sonepur mela from all breeds of dogs to camels to buffaloes, donkeys, ponies, monkeys, chimps, Persian horses, sheep, rabbits, bears, cats, and guinea pigs. All varieties of birds, poultry and fishes are also available. This is only place in the world that sells elephants in large numbers. Handicrafts, paintings and pottery not only from famous Madhubani but all over India can be seen here. All varieties of horticulture can be admired; this is a particular feast for the people of Bihar as it’s a major opportunity to enhance their gardens. Temporary shops selling household goods, local and branded clothing and commercial merchandise are also up for sale. Not to forget the food lovers, it’s absolutely divine. In recent years, government and several companies have started installing their shops to promote their products and services.

The Sonepur mela even runs health camps for the well being of animals specially elephants. Animal farmers, circus entertainers, traders and individuals come for a bargain. Some come for the sheer entertainment and a family day out that it provides.


Story of Sonepur Mela..
It was here at Sonepur in 1888, the first meeting of the “Indian Association of Cow Protection” seminar took place. It was here at the Sonepur mela (mela in Hindi) that the freedom fighter Veer Kunwar Singh took the occasion of the assembly to actively recruit and inspire the people for fighting against the British imperialism both before and during the First Indian was of Independence in 1857. The cover of Sonepur mela led to the main launch of the struggle movement against the British in Bihar. The Provincial Congress Committee of Bihar and the Bihar Kisan Sabha (Farmers union) also used this mela and the gathering as a recruitment ground. That is why Sonepur mela was considered a political hotbed during the colonial rule by the British and kept a watchful eye.

Sonepur fair in Bihar, India has its origins during ancient times. This is where Chandragupta Maurya used to buy elephants and horses across the river Ganges from Patliputra (Patna of ancient times). Now Sonepur mela is one of the biggest and the world’s greatest fair. It takes place annually, 35 kilometres from Patna, the capital of Bihar. Sonepur mela is held for 21 days in the month of November (from around 5-6th) at the junction of the rivers, Ganga and Gandak. It even has a legendary tale attached to it. Many believe that a struggle took place at this spot in Sonepur between the ruler of Gandharva, Huhu and Indraya muni; ultimately Lord Vishnu helping the weaker latter. That is why there is a vast gathering of devotees gathered at the confluence for the two holy rivers for the blessed dip at the adjacent “Harihar Nath temple” on the full moon day (Kartik Purnima). Many believe that Lord Ram established the temple on his way to Lanka. The locals regard that a dip here at this confluence of the 2 rivers is equivalent to giving away of 100 cows. However, it now attracts people from all geographical and religious diversity from the Punjab and Kashmir to Bhutan and Kerala. During the British Raj, merchants from Afghanistan and Britain used to attend. 

The Rimjhim theater at the Sonepur cattle fair in Bihar where dance performances are held.Sonepur mela is the Asia’s and probably one of the worlds largest cattle fair. No other mela in Bihar can boast about the crowds it attracts whether it’s Diwali, Chhath, Sivaratri, Ramnavami, Kartik Purnima, Janmashthami, Holi or Durga puja.
Nearly all animals brought here for sale include all breeds of dogs to camels to buffaloes, donkeys, ponies, monkeys, chimps, Persian horses, sheep, rabbits, bears, cats, and guinea pigs. All varieties of birds, poultry and fishes are also available. The Sonepur mela specialises in the sale of every type of bird and animal, big or small.This is only place in the world that sells elephants in large numbers. Handicrafts, paintings and pottery not only from famous Madhubani but all over India can be seen here. All varieties of horticulture can be admired; this is a particular feast for the people of Bihar as it’s a major opportunity to enhance their gardens. Temporary shops selling household goods, local and branded clothing and commercial merchandise are also up for sale. At the Sonepure mela one can buy almost anything. Not to forget the food lovers, it’s absolutely divine. In recent years, government and several companies have started installing their shops to promote their products and services.
It even runs health camps for the wellbeing of animals specially elephants. Animal farmers, circus entertainers, traders and individuals come for a bargain. Some come for the sheer entertainment and a family day out that it provides.


Sonepur Cattle Fair 2014 – the dates


The Sonepur mela or the Sonepur fair 2014 is all set to begin on November 21st and stretch till December 15th. This is a fortnight festival which begins from the day of Kartik Shukla Paksh or Kartik Purnima of the Kartik (November) month of the Hindu calendar, which is a full moon day. This fifteen day cattle festival of Bihar often some years extends to a month.




Sonepur, being a small town, can also be good place to stay in the Cottages of the Bihar State Tourism Development Corporation (BSTDC), especially built for the fair-goers at the mela site itself. They have also guesthouse facilities at Sonepur. Kindly contact the BSTDC official and get the accommodation booked well before your arrival (http://bstdc.bih.nic.in/Destinations/SonepurFair.htm)


Bihar State Tourism Development Corporation, Bir Chand Patel Path, Patna, PIN-800 001, Bihar. India.
Phone: + 91-0612-2225411, 2506219, Fax: 91-0612-2506218. Email: bstdc@rediffmail.com, bstdc@rediffmail.com
But hang on, there is another show that is attracting more than the Cattle Fair at Sonepur . The queue outside the theatre grows half a kilometer long. It all starts after the sun sets when sultry rustic girls in small clothes, dance to raunchy Hindi and Bhojpuri numbers. These girls strip as the night sets in, till they are full/semi naked for the thirsty audiences in the form of old, not so old and even young chauvinist male audiences. The organizers take care not to make these pictures/videos public

Smart theater in sonpur Mela ..


A dancing girl makes a shooting gesture at a visitor with her hands as they perform a group show at the elephant fair in Sonepur, 
Sonpur mela is mess nothing else no good arrangements there.people go there to watch vulgar and nude dances in Gulabi theatres.

This organized exploitation of girls performing vulgar dance is part of this fair every year. These videos (taken from the mobile) are available on the internet and attracts heavy traffic.


In Focus: Sonepur India Cattle Fair
When it gets dark the facades of the large theatres staging dance shows light up. Soon queues of excited men form at the entrances and security guards with wooden sticks to keep them in order. Men with tickets in their hands impatiently wait to see young girls dancing on the stage. After 6pm the gates open and everybody rushes to get best seats – closer to the stage means being closer to the girls. A barbed wired fence separates the stage from rows of battered chairs. Around 8pm the show finally starts. Bollywood songs are played on full volume and the excitement culminates. A large group of 20-30 girls dances on the stage to the music of Indian hits – you see mostly young faces, heavy make-ups and colourful, mainly Western clothing. Some girls move without any enthusiasm, clearly not enjoying being on the stage, while others are really into it – dancing, singing and interacting with the public. Reactions of the onlookers are also different – some have reserved and indifferent looks, others watch with eyes and mouth wide open, and others enthusiastically shout and dance on their chairs and pass money to their favourite girls. Numerous mobile phones film the whole performance to enjoy the show again and again later and share it with friends. The whole spectacle runs for hours, starts again on the next night and goes on for the whole duration of the meal.  


Prepared & Collection by M.Ajmal Khan.

Friday, 30 May 2014

நடிகை மோனிகா ஏன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார் ? ஒரு சிறப்பு பார்வை ..

img-0835பிரபல நடிகை மோனிகா இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார். தன் பெயரை ரஹீமா என மாற்றிக் கொண்டார். இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்தார்.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மோனிகா. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.தங்கர்பச்சனின் அழகி திரைப்படம் மோனிகாவை ஒரு பேரழகியாக தமிழ்த்திரையுலகிற்கு அடையாளம் காட்டியது. அதன் பின்னர் நஞ்சுபுரம், வர்ணம் மற்றும் குறும்புக்காரப் பசங்க என்று வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட படங்களில் நடித்திருக்கிறார்.


அழகி படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பகவதி, சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர், சிலந்தி படத்தின் மூலம் கவர்ச்சி நாயகியாகவும் உருவெடுத்தார் .தற்போது இஸ்லாமிய மதத்தில் ஐக்கியமாகி உள்ளார். எல்லா புகழும் இறைவனுக்கே!மேலும் தனது பெயரையும் எம்.ஜி.ரஹிமா என்று மாற்றியுள்ளதோடு, சினிமாவுக்கும் முழுக்கு போட முடிவெடுத்துள்ளார்.


சந்திப்பு: இடையில் தமிழ்ப் படங்களில் அவரைப் பார்க்கவே முடியவில்லை. இன்று திடீரென செய்தியாளர்களை ஆர்கேவி ஸ்டுடியோவில் சந்தித்தார் மோனிகா.திருமணம் எனது திருமணம் பற்றிய முறையான தகவல் உரிய நேரத்தில் உங்களுக்கு தெரிவிப்பேன் . எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக துணையாக இருந்த என் அப்பாவிற்கு இந்த நேரத்தில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.



பேட்டி  :அவர் கூறுகையில், "குழந்தை நட்சத்திரமாக என் சினிமா வாழ்க்கையை தொடங்கிய நான் இதுவரை 70 படங்கள் நடித்து இருக்கிறேன். அதற்க்கு காரணமாக நீங்கள் அனைவரும் இருந்திருக்கிறீர்கள் உங்களை விட்டு பிரிவது பெரும் கஷ்டமாக இருக்கிறது, உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.


பணத்துக்காக அல்ல: பணத்திற்காகேவா காதலுக்காவோ நான் மதம் மாறவில்லை. நான் அப்படிப்பட்ட பெண் இல்லை. இஸ்லாம் மதத்தின் கொள்கைகள் எனக்கு பிடித்ததால் நான் மதம் மாறினேன்.


திருமணம்:  எனது திருமணம் பற்றிய முறையான தகவல் உரிய நேரத்தில் உங்களுக்கு தெரிவிப்பேன் . எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக துணையாக இருந்த என் அப்பாவிற்கு இந்த நேரத்தில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.



புதிய பெயர்: பெயர் மாற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை ஆனாலும் இப்போது என் பெயர் 'எம் ஜி ரஹீமா'. அதாவது மாருதி ராஜ் கிரேஸி ரஹீமா (அம்மா அப்பா பெயருடன் புதிய பெயர்).


நடிக்க மாட்டேன்
:மதம் மாறியதற்குப் பிறகு படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளேன். இந்த முடிவு வருத்தத்தைத் தந்தாலும், அதில் எந்த மாற்றமும் இல்லை," என்றார்.

இதுகுறித்து மோனிகா கூறியுள்ளதாவது, இந்து மதத்தில் பாதுகாப்பு இல்லை, எனவே இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளேன். மேலும் இஸ்லாம் மதத்தின் கொள்கைகளும் எனக்கு பிடித்து இருந்தது. 2010ம் ஆண்டே மதம் மாற முடிவெடுத்தேன். ஆனால் அது இப்போது தான் நடந்துள்ளது. எனது அம்மா இந்து மதத்தை சேர்ந்தவர், அப்பா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இருவரது சம்மதத்துடன் தான் மதம் மாறியுள்ளேன். விரைவில் நான் நடித்த கடைசி படமான 'நதிகள் நனைவதில்லை' படம் திரைக்கு வர இருக்கிறது. இந்தப்படத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போட உள்ளேன். இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

நோ பீஸ் ஆஃப் மைன்ட்!

தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் நடித்து பேரும் புகழும் பணமும் இருக்கிறது.  சொந்த வீடு இருக்கிறது.ஆனால்ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் மன அமைதி இல்லை .

ஆம். மனதில் அமைதியில்லாததுதான் இது போன்ற பிரபலங்கள் இஸ்லாத்தை தாங்களாகவே ஏற்றுக் கொள்வதற்கான காரணம். அவரது பேட்டியிலும் அதனைத்தான் பிரதானமாக கூறுகிறார்.


'இறைவனின் வெற்றியும் உதவியும் வரும்போது!

முஹம்மதே! இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது!

உமது இறைவனை புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்!'

-குர்ஆன் 110: 1,2,3

கோடிகள் புரளும் இந்த சினிமா துறையை விட்டு விட்டு வேறு தொழில்களை நாடப் போவதாக சொல்கிறார். சமூகத்தை ஆபாசத்தால் சீரழிக்கும் இந்த சினிமா தொழிலை விட்டது மிக நன்று. மற்ற தொழில்களில் இதை விட இறைவன் அதிக அபிவிருத்தியை தரலாம்.

பணத்துக்காக மாறி விட்டார்: அரபு ஷேக்கை கல்யாணம் செய்யப் போகிறார்: பைத்தியம் பிடித்து விட்டது: இந்து மதத்தில் இல்லாத தத்துவங்களா: என்றெல்லாம் பலவாறாக அவர் எள்ளி நகையாடப்படுவார். அதனை எல்லாம் ஒரு புன்சிரிப்போடு ஏற்றுக் கொண்டு சிறந்த ஒரு முஸ்லிமை திருமணம் செய்து கொண்டு வாழ்வில் வெற்றி பெற நாமும் இந்த சகோதரியை வாழ்த்துவோம்.

 ஒரு சிறந்த வாழ்வு ..

உலகம் முழுக்க இஸ்லாம் வாளால் பரவவில்லை. அதன் அழகிய நடைமுறையினாலும் குர்ஆனின் ஆளுமையினாலும்தான் என்பதற்கு நடிகை மோனிகாவின் இந்த மன மாற்றம் சிறந்த உதாரணமாக உள்ளது.

அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதால், நபியே உமக்கு உதவி செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; "நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதை எனக்கு செய்த உபகாரமாகக் கருதாதீர்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வே நம்பிக்கைக் கொள்ள உங்களுக்கு வழிகாட்டி உங்களுக்கு உபகாரம் புரிந்துள்ளான்" என்று கூறுவீராக!

குர்ஆன் : 49:17

ஆம். மோனிகா இஸ்லாத்தை ஏற்றதால் இஸ்லாத்துக்கு எந்த பெருமையும் இல்லை. மாறாக அவர் ஒரு சிறந்த வாழ்வு முறையை பெற்றுக் கொண்டு அவர் பெருமை பெறுகிறார். இது  இவருக்கு மட்டுமல்ல. உலகில்  அனைவருக்கும் பொருந்தும். இந்த சகோதரி இஸ்லாமிய  மார்க்கத்தை பற்றி பிடித்து இம்மையிலும், மறுமையிலும்  வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்.

மேலும்  அவரது கனொலியை  காண கீழே  உள்ள சுட்டியை அழுத்தவும் 

http://www.youtube.com/watch?v=zh4doTCki0Y

ஆக்கம்  & தொகுப்பு : அ .தையுப அஜ்மல்.

Thursday, 29 May 2014

செய‌ற்கையிழை ஆடைக‌ள்,காகித‌ங்க‌ள் தயாரிக்க‌ ம‌ர‌ங்க‌ளின் அழிப்பு ப‌ற்றிய விழிப்புனர்வு ஆய்வு !!

ம‌ர‌ங்க‌ளின் அழிப்பு ப‌ற்றியும், ம‌ழைப்பொழிவு குறைவிற்கான‌ கார‌ண‌ங்க‌ள் ப‌ற்றியும், பூமி வெப்ப‌ம‌ய‌மாத‌ல் ப‌ற்றியும் ஏராள‌மான‌ க‌ட்டுரைக‌ளும், ப‌திவுக‌ளும் தின‌மும் இணைய‌ங்க‌ளில் வெளிவ‌ருகின்ற‌ன‌. அவ‌ற்றில் ப‌ல‌ தெரியாத‌ த‌க‌வ‌ல்க‌ளையும், நாம் என்ன‌ செய்ய‌வேண்டும் என்ப‌து ப‌ற்றியும் விரிவாக‌ விள‌க்கியுள்ள‌ன‌ர். இதில் என‌க்கு தெரிந்த‌ ஒரு த‌க‌வ‌லையும் உங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்துகொள்கிறேன்.
ஆடைக‌ள் தயாரிக்க‌ இப்போது செய‌ற்கையிழைக‌ள் அதிக‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுங்கின்ற‌ன‌. இந்த‌ செய‌ற்கையிழைக‌ள் தயாரிக்க‌ப் பெரும்பாலும் ம‌ர‌க்கூழ்க‌ள்(Wood Pulp) தான் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப‌டுகின்ற‌ன். இப்போது செய‌ற்கையிழைக‌ளினால் த‌யாரிக்க‌ப்ப‌டும் ஆடைக‌ளை தான் நாம் அனைவ‌ரும் விரும்பி அணிகின்றோம். என‌வே செய‌ற்கையிழைக‌ளின் தேவைக‌ள் ப‌ல‌ம‌ட‌ங்கு அதிக‌மாகின்ற‌து. அத‌ற்காக‌ வெட்ட‌ப்ப‌டும் ம‌ர‌ங்க‌ளும் அதிக‌ம்.


இந்த‌ செய‌ற்கையிழைக‌ள்(Rayon or Staple Fibre) ப‌ல‌முறைக‌ளில் த‌யாரிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. இவை பெரும்பாலும் பைன், புருஸ் ம‌ற்றும் ஹெம்லாக்(Pine, Spruce and Hemlock) போன்ற‌ம‌ர‌ங்க‌ளில் மூலம் த‌யாரிக்க‌ப்ப‌டுகின்ற‌ன். மூங்கிலும்(Bamboo) இந்த‌ செய‌ற்கையிழை த‌யாரிப்பில் முக்கிய‌ப‌ங்கு வ‌கிக்கிற‌து.

இந்த‌ செய‌ற்கையிழையான‌து 1884-ஆம் ஆண்டு ஹொன்ட் ஹிலாரி டி சார்டோன‌ட்(Count Hilaire de Chardonnet) என்ற‌ பிர‌ஞ்சு நாட்டின‌ரால் நைட்ரோசெல்லுலோஸ்(Nitrocellulose) என்ற‌ வேதிய‌ல் பொருளில் இருந்து உருவாக்கினார். பின்பு பிர‌ஞ்சு அர‌சின் ப‌ண‌உத‌வியுட‌ன் உல‌கின் முத‌ல் செய‌ற்கையிழை தொழிற்கூட‌த்தையும் உருவாக்கினார். பிற்கால‌த்தில் இவ‌ர் செய‌ற்கையிழையின் த‌ந்தை(Father of Rayon) என்றைழைக்க‌ப்ப‌ட்டார்.




ஆர‌ம்ப‌த்தில் இந்த‌ செய‌ற்கையிழை உற்ப‌த்தி செய்வ‌த‌ற்கு அதிக‌ செல‌வு ஆன‌து. நாளைடைவில் இந்த‌ செய‌ற்கையிழை தயாரிக்கும் முறையில் ப‌ல‌ மாற்ற‌ங்க‌ள் செய்ய‌ப்ப‌ட்டு செல‌வுக‌ளை குறைத்த‌ன‌ர். பெரும்பாலான‌ செய‌ற்கையிழைக‌ள் பின்வ‌ரும் மூன்று முறைக‌ளில் த‌யாரிக்க‌ ப‌டுகின்ற‌ன‌.

1)விஸ்கோஸ் ரேயான்(Viscose Rayon)

2)குப்புரோமினிய‌ம் ரேயான்(Cuprammonium Rayon)

3)ஸ்பானிபைடு செல்லுலோஸ் அசிடேட்(Saponified Cellulose Acetate)

இந்த‌ செய‌ற்கையிழைக‌ள் தாயாரிக்கும் முறை, உப‌யோக‌ப்ப‌டுத்தும் வித‌ம் ம‌ற்றும் அத‌ன் த‌ர‌த்தினை கொண்டு மூன்று வ‌கையாக‌ பிரிக்கின்ற‌ன‌ர்.

1)ஹ‌ய் வெட் மாடியூல் ரேயான்(High wet modulus rayon-HMW)

2)பாலினோஸ் ரேயான்(Polynosic Rayon)

3)ஸ்பெச‌லிட்டி ரேயான்(Specialty Rayons) இவை இன்னும் சில‌ உட்பிரிவுக‌ளாக‌ வ‌கைப்ப‌டுத்த‌ப் ப‌டுகின்ற‌ன‌.


இந்த‌ செய‌ற்கையிழையால் த‌யாரிக்க‌ப்ப்டும் சில‌ பொருட்க‌ள்:

1)அணிப‌வை: பிள‌வுஸ், துணிக‌ள், ஜாக்கெட், லிங்க‌ரி, லைனின் மெட்டீரிய‌ல், ஸ்போட்ஸ் ஆடைக‌ள், சூட்ஸ், டை, வொர்கிங் கிளாத்

2)வீட்டு உப‌யோக‌ங்க‌ள்: பெட்சீட், பிளாங்க்ட், க‌ர்டெயின், டிராபெரிஸ், சீட்ஸ், ஸ்லிப்க‌வ‌ர்ஸ், டேபிள் கிளாத்

3)இண்ட‌ஸ்டிரிய‌ல் உப‌யோக‌ங்க‌ள்: சேப்டி கிளாத்க‌ள், கையுறைக‌ள், மெடிக்க‌ல் ம‌ற்றும் ச‌ர்ஜ‌ரிக்க‌ல் கிளாத்க‌ள்



இந்த‌ செய‌ற்கையிழை த‌யாரிப்புக‌ள் க‌ட‌ந்த‌ 30 ஆண்டுக‌ளில் பெரும் மாற்ற‌த்தை கொண்டு வ‌ந்துள்ள‌து. அத‌வ‌து இவ‌ற்றின் தேவைக‌ள் ப‌ல‌ ம‌டங்கு உய‌ர்ந்துள்ள‌து. உல‌க‌ நாடுக‌ளின் செய‌ற்கையிழை தேவைக‌ளில் 90% தேவையை கீழ்க‌ண்ட‌ ப‌த்து நாடுக‌ள் த‌யாரித்து ஏற்றும‌தி செய்கின்ற‌ன‌. 1)சீனா, 2)வெஸ்ட் யூரோப், 3)இந்தியா, 4)இந்தோனேசியா, 5)யு.எஸ்.ஏ, 6)தைவான், 7)துருக்கி, 8)ஜ‌ப்பான், 9)தாய்லாந்து, 10)கொரியா.

உல‌க‌ அள‌வில் செய‌ற்கையிழை ஏற்றும‌தியில் நாம் மூன்றாவ‌து இட‌த்தில் இருக்கிறோம். உல‌க‌ நாடுக‌ளின் செய‌ற்கையிழை தேவைக‌ளில் 26% நாம் உற்ப‌த்தி செய்து ஏற்றும‌தி செய்கிறோம்.

மேலே செய‌ற்கையிழையின் தேவைக‌ளையும், அத‌ன் வ‌கைக‌ளை‌யும் பார்த்தோம். இந்த‌ செய‌ற்கையிழை த‌யாரிக்க‌ மூல‌ப்பொருள்(Raw Material) ம‌ர‌ங்க‌ள்(wood) தான். கீழ்க‌ண்ட‌ செய்முறையை(Process Flow) நீங்க‌ள் பார்த்தால் உங்க‌ளுக்கு புரியும்.



வ‌ருட‌த்திற்கு வ‌ருட‌ம் இந்த‌ செய‌ற்கையிழையின் தேவைக‌ள் ப‌ல‌ ம‌ட‌ங்காக‌ அதிக‌ரித்து வ‌ருகின்ற‌து. க‌ட‌ந்து ஐந்து வ‌ருட‌ங்க‌ளில் இத‌ன் தேவைக‌ள் இரும‌ட‌ங்காக‌ உய‌ர்ந்துள்ள‌து என‌ ஆய்வுக‌ள் தெரிவிக்கின்ற‌ன‌. இவ்வாறு செய‌ற்கையிழையின் தேவைக‌ள் அதிக‌மானால் அவை த‌யாரிக்க‌ வெட்ட‌ப்ப‌டும் ம‌ர‌ங்க‌ளின் தேவையும் அதிக‌ம் ஆகும்.



ச‌மீப‌த்தில் நான் இணைய‌த்தில் பார்த்த‌ செய்தி ஜ‌ப்பானில் செய‌ற்கையிழை த‌யாரிக்க‌ ம‌ர‌ங்க‌ள் ப‌ற்ற‌க்குறை ஏற்ப‌ட்டுள்ள‌தாம். அவை வெளிநாடுக‌ளில் இருந்து மூல‌ப்பொருளான‌() ம‌ர‌ங்க‌ளை இற‌க்கும‌தி செய்கின்ற‌ன‌.

உல‌கின் செய‌ற்கையிழை த‌யாரிப்பில் முன்ன‌ணியில் இருக்கும் ஒரு நிறுவ‌ன‌ம் ஆஸ்திரியா நாட்டில் இருந்துதான் த‌ன‌க்கு தேவையான‌ ம‌ர‌ங்க‌ளில் 50% இற‌க்கும‌தி செய்கின்ற‌து.

செய‌ற்கையிழை த‌யாரிப்பில் விஸ்கோஸ் ஸ்டேபிள் பைப‌ர்(Viscose Staple Fibre-VSF) என்ற‌ பெய‌ருட‌ன் ஆதித்யா பிர்லா குருப்பின்(Aditya Birla Group) நிறுவ‌ன‌ங்க‌ள் இந்தியாவில் நாக்தா(Nagda), க‌ரிகார்(Harihar), க‌ராச்சி(Karach-Gujarat) போன்ற‌ இட‌ங்க‌ளில் உள்ள‌து. இந்த‌ நிறுவ‌ன‌த்திற்கு மெட்டீரிய‌ல் கேட்ட‌லாக்(Material Catalog) ப‌ண்ணும் பிர‌ஜெக்ட்டில் நானும் இருந்தேன். அப்போது அந்த‌ நிறுவ‌ன‌த்திற்கு தேவைதான் மூல‌ப்பொருளான‌(Raw Material) ம‌ர‌ங்க‌ளையும் கேட்ட‌லாக் ப‌ண்ணினோம். அப்போது தான் இவ‌ர்க‌ள் எவ்வ‌ள‌வு ம‌ர‌ங்க‌ளை அழிக்கிறார்க‌ள் என்று தெரிய‌ முடிந்த‌து. இந்த‌ நிறுவ‌ன‌ங்க‌ள் பெரும்பாலான‌ ம‌ர‌ங்க‌ளை இந்தோனேசியாவில் இருந்து இற‌க்கும‌தி செய்வ‌தாக‌ சொன்னார்க‌ள். அங்கு ப‌ணி புரிந்த‌ ந‌ன்ப‌ர் ஒருவ‌ர் சொன்ன‌து "வெகுவிரைவில் எங்க‌ளுக்கும் ம‌ர‌ங்க‌ளின் ப‌ற்றாக்குறை வ‌ரும்" என்ப‌தாகும்.
காகித‌ங்க‌ளும் இந்த‌ ம‌ர‌கூழ்க‌ளில் இருந்துதான் த‌யாரிக்க‌ப்ப‌டுகிற‌து. ஆனால் இந்த‌ காகித‌ங்க‌ள் மீண்டும் ம‌றுசுழ‌ற்ச்சிக்கு உட்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஆனால் இந்த‌ செய‌ற்கையிழைக‌ளால் த‌யாரிக்க‌ப்ப‌டும் ஆடைக‌ள் ம‌றுசுழ‌ற்ச்சிக்கு பாய‌ன்ப‌டுத்துவ‌து இல்லை என்ப‌தும் ஒரு க‌வ‌லையான‌ விச‌ய‌ம்.

என‌வே இந்த‌ நாக‌ரீக‌ உல‌கில் நாளொரு மேலாடையும், பொழுதொரு புத்தாடையுமாய் உடுத்துப‌வ‌ர்க‌ளே!!!.. இதையும் கொஞ்ச‌ம் க‌வ‌ன‌த்தில் கொள்ளுங்க‌ள்.


  தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.