Friday, 1 May 2015

தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் மே தினத்தின் வரலாறு !! ஒரு வரலாற்று பார்வை...

Image result for மே தினம்நாம் தற்போது கொண்டாடும் மே தினக் கொண்டாட்டமானது, ஐரோப்பிய மக்கள் பல தெய்வங்களை வணங்கி வந்த (Pagan Europe) காலத்தில் ஏற்பட்டது. முதன் முதலில் இளவேனிற் கால ஆரம்பத்தை விழாவாகக் கொண்டாடினார்கள்.

ஆதிகால Celts and Saxons நெருப்பின் தினமாக (the day of fire) மே 1ஆம் தேதியைக் கொண்டாடினார்கள். Saxons ஏப்ரல் 30 சாயந்திரம் விழாவைத் துவக்குவர். விளையாட்டு, கேளிக்கைகள், விருந்துடன் கூடிய விழா பனிக்காலம் முடிந்து இளவேனிற்காலத்தை வரவேற்பதற்காகக் கொண்டாடப்படுவது. மற்றும், இந்த நாள் ஒரு வருடத்தை சம பாதியாகப் பிரிக்கிறது என்று கருதினர் (மே 1முதல் அக்டோபர் முடிய 6 மாதம், நவம்பர் 1 முதல் ஏப்ரல் முடிய ஆறு மாதம்) இந்த விழாவை கத்தொலிக்க சர்ச் சட்டத்தின் பாதுகப்பிலிருந்து நீக்கியது (outlawed by the Catholic church) ஆனாலும் மக்கள் 1700 வரை கொண்டடிக்கொண்டுதான் இருந்தனர்.
ரோமானியர்கள் பிரிட்டிஷ் தீவுகளுக்கு (British Isles) குடியேறியபொழுது, மே தினத்தை விமரிசையாகக் கொண்டாடினர். இந்த விழா பூக்களின் தேவதையான ஃப்லோராவிற்கான (Flora) வழிபாடு. ஏப்ரல் 28 முதல் மே 2 முடிய நடக்கும்.காலக்கிரமத்தில் Celts and Saxons இனத்தாருடைய கொண்டாட்டத்திலும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.





நாம் தற்போது கொண்டாடும் மே தினம், தொழிலாளிகள் விடுமுறை தினமாக, ஏற்படக் காரணம் 1886ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி, அமெரிக்காவில் தொழிலார்கள், எட்டு மணி நேர வேலைதான் வேண்டும் என்று போராட்டம், Haymarket என்ற இடத்தில் நடத்தியதன் நினை வாகத்தான். இந்தப் போரட்டம் Knights of Labour என்று அழைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 1600 போரட்டங்கள் நடந்ததாகவும் 600,000 தொழிலாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. 1889ஆம் ஆண்டு பாரிஸ் மே 1ஆம் தேதியைத் தொழிலாளிகளின் விடுமுறை நாளாக, ஹேமார்கெட் போராட்டத்தில் உயிர் துறந்தவர்களை கௌரவிக்கும் வகையில் (in commemoration of the Haymarket Martyrs) International working  Men's Association (the First International) அறிவித்தது. தொழிலாளிகள் சிந்திய இரத்தத்தின் ஞாபகமாக சிகப்பு நிறக் கொடியைச் சின்னமாக்கினர்.

ஹவாயில் (Hawaii) மே தினம், (Lei. ) என்ற மரபு வழி வந்த விழாவுடன் இணைந்து கொண்டாடப்படுகிறது. Lei. என்பது மலர்களால் ஆன ஒரு மாலை அல்லது நெக்லஸ்.இது 46 செ.மீ. நீளம் இருக்கும்.

ஜெர்மனியில் 1933ஆம் வருடம் தொழிலாளர் தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
போலண்ட் 1990ல் தொழிலாளர்கள் தினத்தை "State Holiday " என்று மாற்றிற்று.
ஸ்வீடன், நார்வே, இடலி, (Italy) முதலிய நாடுகள் மே 1ஆம் தேதியைக் கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.

ஆஸ்திரேலியாவில், எல்லைக்கேற்ப, தொழிலாளர்கள் தினம் வெவ்வேறு நாட்களில், கீழ்க்கண்டவாறு கொண்டாடப்படுகிறது:

சோவியத் யூனியனில் மே தினம் ஒரு முக்கியமான அரசாங்க விடுமுறை, மிக விமர்சையாக ராணுவ அணிவகுப்பு காட்சியுடன் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் மே 1ஆம் தேதி 1917ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

New Zealandல் தொழிலாளர் தினம் அக்டோபர் மாதம் நான்காவது திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு மூல காரணமானவர் Samuel Parnell's என்னும் தச்சு வேலை செய்பவர். 1840ல் 8 மணி நேரத்திற்குமேல் வேலை செய்ய மறுத்தார். மற்ற தொழில் செய்பவர்களையும் தூண்டிவிட்டார். அக்டோபர் 1840ல் தொழிலாளர்கள் கூட்டம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அக்டோபர் 28 1890ஆம் வருடம் ஒருநாளைக்கு 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையின் 50வது வருடத்தை ஒரு அணிவகுப்பின் மூலம் கொண்டாடியது. இதன் பிறகு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் கொண்டாடியது.1899ல் அரசாங்கம் 1900ல் இந்த நாளைப் பொது விடுமுறையாக அறிவித்தது.

இப்படியாக ஒவ்வொரு தேசமும் மே தினத்தைக் கொண்டாடுகின்றன.


எத்தனைபேர் அறிவார் இனிய இந்த மே தினம் !!
கால் நூற்றாண்டாய்
கால் கடுக்க மிதிவண்டியில்
காலம் முழுதும் தொழிலாளியாகவே
உந்திக் கடந்து கொண்டிருக்கிறார்
உழைப்பாளி ஒருவர்
நேற்று வந்து இறங்கிய
திசையே தெரியாதவன் தொழிலதிபர் ஆகிறான்
வட்டிக்கடை வைத்தவன் வசதியாய் இருக்கிறான்
கந்துவட்டிக்காரன் காரில் போகிறான்
அடிப்படை தெரியாதவன் அரசியல் செய்கிறான்
பஞ்சாயத்து செய்பவன் பலதேசம் போகிறான்
உழைப்பாளியோ வெறும் காலில் நடக்கிறான்
வாழும் வழி இன்றித் தவிக்கிறான்
மேலதிக வேலையைத் திணிக்கும்
உழைப்புக்கான ஊதியம் மறுககும்
உலகமயமாக்க தாக்கத்தில் இன்று
கடந்தகாலமாகிக் கொண்டிருக்கிறது
காலம் பல கடந்துவந்த மே தினம்
உழைக்கும் வர்க்கத்துக்கு
உண்மைநிலை உணர்த்தி
உயர வைக்குமா இந்த மே தினம்
உயர்த்தி விடுவோமே நாம்
உயரத்தில் இந்த மே தினத்தில்
இன்று புதிய உறுதி எடுப்போம்
குழந்தைத் தொழில் ஒழிப்போம்
முதுமைத் தொழில் அழிப்போம்
உழைப்பவரை உயர்த்துவோம்
ஊழியரை வாழ்த்துவோம் 
இன்று புதிதாய் பிறப்போம்
இந்த மே தினம் கொண்டாடுவோம்.!!


ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.

Wednesday, 29 April 2015

B.Arch (கட்டிட நிர்மான கலை பொறியியல் )பட்டப்படிப்பு!! ஒரு சிறப்பு பார்வை.....

Image result for B.ArchB.Arch (கட்டிட நிர்மான கலை) படிப்பு தற்போது பெரும்பாலான மாணவர்களின் விருப்ப படிப்பாக மாறிவருகின்றது. தமிழகத்தில் 12 கல்லூரிகளில் மட்டும்தான் இந்த படிப்பு உள்ளது. அதில் 2 கல்லூரிகள் (சென்னை புது கல்லூரி, கீழகரை சதக் கல்லூரி)முஸ்லீம்களால் நடத்த படுகின்றன. B.Arch படிப்பில் சேர அண்ணா பல்கலை கழகம் வருட வருடம் கலந்தாய்வு (counseling) நடத்துகின்றது. அதற்க்கான விண்ணப்பம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது, விண்ணப்ப படிவம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் மட்டும்தான் கிடைக்கும். விண்ணப்பத்தை பெறுவதற்க்கு NATA தேர்வில் தேர்சி பெற்று இருக்க வேண்டும். NATA தேர்வின் முழுவிபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. NATA தேர்வின் மதிப்பெண் சான்றிதழுடன் (Score card) சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்திற்க்கு சென்று விண்ணப்பத்தை பெற வேண்டும். B.Arch கலந்தாய்வு (counseling) முறை : +2 தேர்வில் எடுத்த மொத்த மதிப்பெண்ன்னையும், NATA தேர்வில் எடுத்த மதிப்பெண்ணையும் வைத்து கட் ஆப் மதிப்பெண் கணக்கிடபடுகின்றது. அதாவது +2 தேர்வில் எடுத்த மொத்த மதிப்பெண்ணை 6 – ஆல் வகுத்துகொள்ள வேண்டும், அதனுடன் NATA தேர்வின் மதிப்பெண்ணை கூட்டினால் வருவதுதான் B.Arch கட் ஆப் மதிப்பெண். இது 400 மதிப்பெண்ணுக்கு  இருக்கும். உதாரணத்திற்க்கு ஒரு மாணவர் +2 தேர்வில் 1050 மதிப்பெண்னும், NATA தேர்வில் 130 மதிப்பெண்னும் எடுத்து இருந்தால், அவரின் கட் ஆப் மதிப்பெண் 305 ஆகும். இந்த கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை பட்டியல் (Rank list) தயாரிக்கப்பட்டு மாணவர்கள் கலந்தாய்விற்க்கு (counseling) அழைக்கப்படுவார்கள். இந்த B.Arch கலந்தாய்வில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது. 



Image result for B.Arch

 NATA (National Aptitude Test in Architecture) தேர்வு இது ஒரு கட்டிட நிர்மான கலை திறன் ஆய்வு தேர்வாகும். இதை எழுதுவதர்க்கு தமிழகத்தில் 15 மையங்கள் உள்ளன. அங்கு சென்று NATA தேர்வு எழுத நாம் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்து ஒருவாரம் அல்லது 10 நாளில் தேர்வு எழுதலாம். தேர்வு கட்டணம் ரூ.800. 
 தேர்வு எழுதிய ஒரு நாளில் மதிப்பெண் சான்றிதழ் (Score card)வழங்கப்படும். இந்த தேற்விற்க்கு தயாராவதற்க்கு புத்தகங்கள் உள்ளன. இந்த தேர்வு எழுதுவதற்க்கு பயிற்சியும் அளிக்கப்படுகின்றது, ஆனால் பயிற்சி கட்டணம் ரூ.6000 முதல் ரூ.8000 வரை இருக்கும். NATA தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. ஒன்று Online தேர்வு 100 மதிப்பெண் கொண்டது, (Chose the best answer type) மற்றொன்று வரைதல் தேர்வு (Drawing Test) 100 மதிப்பெண் கொண்டது. மொத்தம் 200 மதிப்பெண், இரண்டு தேர்விலும் சேர்த்து குறைந்தது 80 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். 80 -க்கும் குறைவாக மதிபெண் எடுத்தால் மீண்டும் இந்த தேர்வை எழுதலாம். 
ஆனால் அதிக பட்சமாக 3 முறைக்கு மேல் எழுத முடியாது. அதாவது மூன்று முறை NATA தேர்வு எழுதி 80 மதிப்பெண் எடுக்காவிடால் நடப்பு ஆண்டில் (Current year) B.Arch படிக்க முடியாது. அடுத்த ஆண்டில் தேர்வு எழுதி படிக்கலாம். 
NATA தேர்வு எழுத தமிழகதில் உள்ள 15 மையங்கள் மற்றும் NATA தேர்வு பற்றிய இதர விபரங்கள் இந்த www.nata.in இணையதளத்தில் உள்ளன.

Saturday, 25 April 2015

செல்போன் கதிர்வீச்சு நம்மை தாக்காதவாறு தடுக்க சில வழிமுறைகள்..



 இந்த தலைமுறையினர் கண்டிப்பாக பெரும் பாக்கியம் பண்ணி இருக்க வேண்டும். எவ்வளவு சொகுசான வாழ்க்கை எந்த மூலையில் நடந்தாலும் அதை உடனே அறிய தொலைகாட்சிகள், இடம் விட்டு இடம் பெயர சொகுசு கார்கள், தகவலை ஒரு ஒரே நொடியில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தெரிவிக்க போன் வசதி அதிலும் செல்போன்கள் வசதி இன்னும் பிரமாதம் பெரும்பாலானாவர்கள் இந்த செல்போன்களுக்கு அடிமையாகவே ஆகிவிட்டனர். இதில் உள்ள வசதிகளால் இந்த செல்போன்கள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது.  இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த செல்போன்களில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது.

 இந்த செல்போன்களின் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது. இந்த செல்போன் கதிர் வீச்சினால் மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas)  புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் செல்போன் உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விஷயம் நாம் செல்போன் உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.   இந்த செல்போன்களின் கதிர்வீச்சில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது என்று சில வழிமுறைகளை கீழே காண்போம். முடிந்த அளவு செல்போன்கள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் செல் போன்கள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட செல்போன்கள் பாதிப்பு அதிகம். ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.  குழந்தைகளிடம் செல்போனில் பேசுவதோ,கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது. உங்கள் மொபைலில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.



காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட செல்போன்களின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும். தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.  நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஆன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்ப்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது. செல்போன்களில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம். செல்போன்களில் விளையாடுவதை முடிந்த அளவு தவிற்க்கவும் முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. செல்போன்களை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும். செல்போன்களை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.  போனில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். 

கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும். மேற்கூறிய முறைகளை கடைபிடித்தால் கண்டிப்பாக செல்போன்களின் கதிவீச்சில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.

Friday, 24 April 2015

உலகின் தலைசிறந்த 10 அறிஞர்களுக்கு சிலை(The Ten Sages of the World)..





Preakash Preakash's photo.
உலகத் தத்துவ ஞானிகளில் உருவச்சிலைகள் சிங்கபூரில் உள்ள MDIS கல்வி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் நமது தெய்வப்புலவர் திருவள்ளுவரும் உள்ளார். பெருமைக்குரியது.

The amazing (Ten Sages of the World) sculptures at MDIS Queenstown Singapore -
SCULPTURES OF EMINENCE: The Ten Sages of the World
சொர்கமே என்றாலும் அது
MDIS, an educational institute, places high regard on gurus who have taught us well.
Ten sages who have influenced many lives and changed the way we think, learn and live, were chosen as inspiring figures to stimulate our students’ interest in education and motivate them to greater learning.
The ten statues of learned men symbolise wisdom, knowledge and great humanity. They were leaders in their own rights, with values of integrity, sincerity and honesty. Their works and teachings guided many people all over the world. Through their greatness, MDIS aims to inculcate virtues, values and thoughts in the students to make them a better person, a good individual and citizen of the world.Left to right: Louis Pasteur, Albert Einstein, Ibn Khaldoun, Samuel Johnson, Aristotle, Thiruvalluvar, Plato, Confucius, Socrates, Maria Montessori.
Hand off this Great Sages.. 
I am proud to say...I am a tamilian... Thank god u give birth to me in Tamilnadu as a tamilian. I love Tamil Language! Live  Tamil ! Growth  Tamil..
தமிழன்னா சும்மாவா நான் தமிழ் என்று பெருமை படுகிறோன்.தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...கற்றவருக்கு செல்லும் இடம் எல்லாம் சிறப்பு..
தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

Thursday, 23 April 2015

வளைகுடா நாட்டு வீட்டு டிரைவர் பற்றிய ஒரு தவகல்..

ரொம்ப நாளா வளைகுடா நாட்டு வீட்டு டிரைவர்கள பத்தி ஒரு பதிவு எழுதனுமுன்னு நினைத்தேன் .இப்பொழுது தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது .பொதுவாக எல்லா வேலையிலும் ஒரு கஷ்டம் இருக்கும் ஆனால் கஷ்டத்தோடு சேர்த்து சங்கடமும் உள்ள வேலைதான் இந்த ஹவுஸ் டிரைவர் வேலை...
Image result for வீட்டு டிரைவர்1- அவர்களுக்கான சாப்பாட்டு நேரத்தை அவர்கள் தீர்மானிக்க முடியாது அதை அவர்கள் வீட்டு முதலாளிதான் தீர்மானிக்க வேண்டும் .
2-கவலையை மறந்து நிம்மதியாக தூங்க முடியாது எந்த நேரத்தில் முதலாளி கூப்பிட்டாலும் செல்ல வேண்டும் .
3- ரம்ஜானும் ,பக்ரீத்தும் வரும்போது நம்ம எல்லாம் நம்ம நண்பர்கள் ரூம்ல போய் பல விதமான சாப்பாடு சாப்ட்டு அங்க அரட்டை அடுச்சு அன்றைய தினத்தை கழிப்போம் ஆனால் அவர்களுக்கு அன்றைய தினம்தான் அதிக வேலை இருக்கும் .
4-அவர்களுக்காக குடுக்கப்பட்ட படுக்கைஅறையின் அளவோ மிகச்சிறியது அதற்குள்ளே கிச்சனும் ,பாத்ரூமும் ,அடங்கிவிடும் 3பேர் சேர்ந்து உக்காந்து சாப்பிட கூட முடியாது .
5-ஊரில் எந்த பிரச்சினை இருந்தாலும் அவர்களுக்கான விடுமுறை மாதம் இங்கு மதரசா (பள்ளிகூடங்கள் )விடுமுறை விடும் மாதங்கள் மட்டுமே .
6-நமக்கு எதுவும் மனக்கஷ்டம் வந்தால் நமக்கு அதை உடனே மற்றவர்களிடம் பறிமாற சந்தர்ப்பம் உண்டு ஆனால் அவர்கள் சங்கடம் வந்தாலும் ,சந்தோஷம் வந்தாலும் தானே சிரித்து,தானே சங்கடபட வேண்டும் .
7-அவர்களுக்கு கிடைக்கும் அந்த 2மாத விடுமுறை கொண்டு குடும்பத்தாரின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் .
8-எவ்வளவு தான் பட்ஜெட் போட்டுபணத்த சேமிச்சு வச்சாலும் ஊருக்கு போகும் போது நண்பர்கள் கிட்ட கடன் வாங்கிட்டு போறது .
9-25வயசுல வேலைக்கு வந்து தனது ஆயுளை (50வயசுவரை) கழிப்பவர்
10-அவர்கள் ஓட்டும் கார்களின் நிறங்களும் ,உருவங்களும் மாறிக்கொண்டே இருக்கும் ...ஆனால் பலரின் வாழ்க்கைத்தரம் மாறுவதே இல்லை . 
இன்னும் பல......
"அவர்களுக்கு எனது கம்பீரமான சல்யூட்" . .
இதில் 100ல் 95%....இந்த பதிவு பொறுந்தும் .
நன்றி : மு.அப்துல் அன்சாரி.

Monday, 20 April 2015

KFC” சிக்கனின் ரகசியத்தை அம்பலப்படுத்திய “BBC” ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

h48உலகில் உயிரினங்களை கொல்லும் பெரிய பண்ணையை வைத்திருப்பதே KFC சிக்கன் தான். இங்கே என்ன நடக்கிறது என்பதை ஆங்கில ஊடகமான BBC தற்போது போட்டு உடைத்து உள்ளது. இங்கே வளர்க்கபப்டும் சிக்கனின் ஆயுட் காலம் எவ்வளவு தெரியுமா? வெறும் 35 நாட்கள் தான். இந்த சிக்கன் அனைத்தும் “இருபால் உயிரினமாகும்”. அவை ஆண் அல்லது பெண் கிடையாது. அதனால் அவை வேகமாக வளர்கிறது. அதற்காக ஒரு நச்சுப் பதார்த்தத்தை அவர்கள் தீனியில் கலந்து கொடுக்கிறார்கள். இதனை உண்ணும் இந்த சிக்கன் , வெறும் 35 நாட்களில் ராட்சச சிக்கனாக மாறிவிடும்.
பின்னர் அதனை வெட்டி பார்சல் செய்கிறார்கள். ஒரு வகையான கழி எண்ணையைப் பயன்படுத்தியே KFC சிக்கனை பொரிக்கிறார்கள். அந்த எண்ணை தரமான எண்ணை கிடையாது. அதில் காலஸ்ரோல் என்னும் கெட்ட கொழுப்பு அதிகமாக கணப்படுகிறது. இவை எமது உடலில் சென்று ரத்த நாளத்தில் கலந்து அங்கே படிய ஆரம்பிக்கிறது. படிப்படியாக அவை படிந்து ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனையே நாம் மாரடைப்பு என்று கூறுகிறோம்.


கேன்சர் எனும் புற்று நோய் 
வருவதற்கான முக்கியக் காரணிகளில் பிராய்லர் கோழி இறைச்சியை சாப்பிடுவதும்
ஒன்று.
இந்த சிக்கினை விரும்பி உண்ணும் பெண் பிள்ளைகள், 12 வயதில் அல்லது 10 வயதில் கூட வயதுக்கு வந்துவிடுகிறார்கள். காரணம் என்னவென்றால் சிக்கனில் உள்ள அந்த நச்சுப் பதார்த்தம் தான் என்கிறார்கள். இது பெண் பிள்ளைகள் உடலில் கலந்து பூப்படைவை ஊக்குவிக்கிறது. இதனை உண்பவர்கள் அதிக உடல் எடையினால் பாதிக்க படுகிறார்கள். மேலும் மூளை செயல் திறன் குறைந்து, உணர்வு மண்டலம் பாதிப்படைகிறது.

Saturday, 18 April 2015

காரைக்குடியில் 300 பெண்களை கடத்தி, பாலியல் பலாத்காரம் மற்றும் வழிப்பறி கொள்ளை !!


நண்பர்களே தயவு செய்து , இந்த செய்தியை பிரபல படுத்துங்கள். பத்திரிக்கைகளில் மறைக்க படுகிறது. காரைக்குடியில் சில நாட்களுக்கு முன்னர் March 16 /2015 அன்று நண்பனுடன் ஒரு பெண் போகும் போது, இடையில் மூன்று பேர் வழிமறித்து, காவலர்கள் என கூறி அந்த பெண்ணையும் அந்த நண்பரையும் விசாரிக்க வேண்டும் எனவும் கூறி, அந்த நண்பனை விட்டு விட்டு பெண்ணை மட்டும் கூட்டி சென்று பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்அடுத்த நாள் அப்பெண்ணை காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் விட்டு சென்றுள்ளனர்.


துணிவு நிறைந்த அப்பெண்ணும் காவல் துறையில் புகார் கொடுக்கவே அவளை விட்ட இடத்தில் (பழைய பேருந்து நிலையத்தில்)இருந்த கேமிராமூலம்.யார் என கண்டுபிடித்துள்ளனர்.அவர்களின் பெயர்
1,சாத்தையா
2,அர்ச்சுணன்
3,ஜீவானந்தம்
ஆகியோர் ஆகும். இவர்கள் காரைக்குடி காலனிவாசல் பகுதியில் மெக்கானிக் செட் வைத்து இருப்பவர்களாம்!


மேலும், விசாரனையில்அந்த பெண் கடத்தப்பட்ட பகுதியானஆவுடைப்பொய்கைப் பகுதி,வேலங்குடி முந்திரிக்காடு பகுதிகளில் கடந்த மூன்று வருடங்களாக மூவரும் இந்த வேலைகளை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இதன் விளைவாய் இவர்களால் 300 பெண்கள் பாலியல் கொடுமைக்கும் வழிப்பறிக்கும் ஆளாகி இருக்கிரார்கள் என கூறப்படுகிறது.


அதில் 100 பெண்கள் இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 60 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி ஆகியுள்ளது.மேலும் அவர்களது மெக்கானிக் செட்டில் பிணங்களும் கண்டெடுக்க பட்டுள்ளது!!!!!!



பாதிக்கபட்ட பெண்கள் பலர் பெயர் கெட்டு விடும் என புகார் கொடுக்காமலேயே காலங்கள் கடந்துள்ளது. இன்று அனைத்தும் வெளிச்சம் ஆகிவிட்டது. அந்த மூன்று மிருகங்களான
1,சாத்தையா
2,அர்ச்சுணன்
3,ஜீவானந்தம்
ஆகியோர் மீது 2005 ல் 60 திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் போடப்பட்டு கைதும் செய்யப்பட்டுள்ளனர்!!!




காவலர்களது அலட்சியம் மற்றும் உயர் அதிகாரிகள் துணையோடு அவர்கள் விடுதலை செய்யபட்டது கொடுமையோ கொடுமை. இப்பொதும் கூட அவர்களை விடுதலை செய்யும் போக்கிலாயே இந்த பலாத்கார வழக்குபோ ய் கொண்டு இருப்பது கோபத்தையும் வேதனையயும் தருகிறது.மேலும் இதை இப்படியே போட்டு விடாமல் இதை CBI விசாரணைக்கு மாற்ற வேண்டும் அப்போது தான்.இன்னும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். இவ்வளவு பெரிய சம்பவம் வெளியில் தெரியாமல் இருக்க முயற்சிகள் நடக்கிறது. நண்பர்களே தயவு செய்து இந்த சம்பவத்தை பிரபல படுத்தி இந்திய மக்கள் பார்வைக்கு கொண்டு செல்லவும்

டெல்லியில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ததற்கு எவ்வளவு போராட்டம் செய்தோம்.
முந்நூறு பெண்களைபலாத்காரம் செய்த சம்பபவம் காரைக்குடியில் அரங்கேற்றியுள்ளது. இதற்கான போராட்டம் காரைக்குடியை தவிர வேறெங்கும் நடக்கவில்லை. 

தயவு செய்து ஆதரவு கொடுத்து குரல் கொடுங்கள் . 
300 பெண்கள்!!!!!!தயவு செய்து பிரபல படுத்துங்கள்!!
இந்த வழக்கு CBIக்கு மாற்றபடவேண்டும்.
நிராகரிக்க வேண்டாம்!!!!!

Friday, 17 April 2015

அக்குவாஃபீனாவும் அலறவைக்கும் ரகசியங்களும்‬ !! ஒரு விழிப்புணர்வு ஆய்வு..

வீட்டிலுள்ள சமையலறைக் குழாய்களில் வரும் குடிநீரை, ஒரு லிட்டர் 20 ரூபாய் என்று எவரேனும் விற்றால் வாங்குவோமா? அவ்வாறு யாரேனும் வாங்கினால் கேலி செய்து சிரிப்போம்தானே? உலகப் பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் இந்த பாட்டில் தண்ணீரை வாங்கி குடிப்பவர்கள் அனைவருமே அத்தகைய கேலிக்குரியவர்கள்தான் என்பதே உண்மை.


பெப்ஸி நிறுவனத்தின் தயாரிப்பான, ’அக்குவாஃபீனா’, வெறும் சாதாரண பைப் தண்ணீரையே சுத்திகரித்து மினரல் வாட்டர் எனற விற்பனை செய்து வருவதாக ஒப்புக் கொண்டுள்ளது. இதேப் போல நெஸ்ட்லே நிறுவனத்தின் , ‘ப்யூர் லைஃப்’ மற்றும் கோக் நிறுவனத்தின் நிறுவனத்தின், ’தஸானி’ யும் இதே போல்தான்.

கடந்த 2007 ஆம் ஆண்டு, அமெரிக்க அரசின் ஒரு அங்கமான, பெருநிறுவன சோதனை வாரியம் (Corporate Accountability International), அக்குவாஃபீனா வின் நீர் ஆதாரம் குறித்து ஆய்வு மேற்கொண்டபோது, சாதாரண குழாய் நீரையே, சுத்திகரித்து விற்பனை செய்வதாக ஒப்புக்கொண்டது பெப்ஸி நிறுவனம். அதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளினால், தனது புதிய தயாரிப்புகளிலெல்லாம், ‘பொதுத்தண்ணீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டவை (Public water source)’ என்று அச்சிடத் தொடங்கியது.

இந்நிறுவனம். ஆனால் பெப்ஸி பாட்டில்களில் எல்லாம் மலைகளுக்கிடையே தண்ணீர் ஓடி வருவது போல லேபிள்கள் ஒட்டப்பட்டிருக்கும். தங்கள் தயாரிப்பு இயற்கையானவை என்பதை காட்டவே இத்தகைய லேபிள்கள் அதில் ஒட்டப்பட்டு வந்தன. இந்த விவகாரத்தையடுத்து, அது போன்ற லேபிள்களையும் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து பல்வேறு சர்வதேச ஊடகங்கள் குடிநீர் தயாரிப்பின் பின்னணியிலுள்ள வணிக யுக்திகளைக் குறித்து ஆய்வு மேற்கொண்டதில், வெளிவந்தத் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

சுமார் 9.7 பில்லியன் கலன் நீரிலிருந்து 11.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டுவதே பெப்ஸி போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கம். இதில் ஒரு கலன் சுத்திகரிக்கப்பட்டக் குடிநீர், 1.22 அமெரிக்க டாலர்கள். இதில் மூன்றில் இரண்டு மடங்கு தண்ணீர், 500 மிலி பாட்டில்களாக சந்தைப்படுத்தப்படுகிறது. அரை லிட்டர் குடிநீரின் விலை, 16.9 செண்ட்கள்.

மொத்தத்தில், சாதாரணக் குழாய் நீர், சுத்திகரிக்கப்பட்டக் குடிநீர் என்ற பெயரில் சுமார் 2000 மடங்கு விலையேற்றம் செய்யப்பட்டு மக்களிடம் சந்தைப்படுத்தப்படுகிறது.

மேலும் இந்த பாட்டில்களைத் தயாரிக்கப் பயன்படுத்தபடும் பிளாஸ்டிக்குகளும் , அவற்றைப் பதப்படுத்தப் பயன்படும் பல்வேறு இரசாயனங்களும், மனித உடலிலுள்ள நரம்புகளையும், சுரப்பிகளையும் பாதிக்கும் தன்மை வாய்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது (Endocrine disrupting chemicals).

இது மட்டுமன்றி பாலியல் உறவுக்கு அடிப்படைத் தேவையான முக்கியச் சுரப்பிகளான ஈஸ்ட்ரோஜென் மற்றும் ஆண்ட்ரோஜென் ஆகியவற்றையும் இது பாதிக்கிறது என்கிறது ஆய்வுத் தகவல்.மேலும் அதிரடிச் சோதனைகளுக்கோ, நேரடி ஆய்வுக்கோ இந்நிறுவனங்களை ஆட்படுத்த முடியாத சட்டப் பாதுகாப்பு இருப்பதால், இவர்களின் செயல்முறை விளக்கங்களும் மர்மமாகவே உள்ளன.

இத்தகைய நிறுவனங்கள்தான் நம் தாமிரபரணிக்குக் குறி வைக்கின்றன என்பதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.