Wednesday, 16 December 2015

Third Party Certification Scaffolding Questions & Answer for Scaffolding Inspector / Supervisor..



SECTION ONE: CERTIFICATION  
1. a) At what height is a scaffolding certificate of competency needed? 
 Where a person or object could fall more than 4m from the scaffolding. 
1. b) Is a person with a Basic Scaffolding Certificate allowed to construct a cantilevered scaffold? 
 No 
1. c) Is a person with a Basic Scaffolding Certificate allowed to construct a barrow ramp? 
 No 
1. d) Is a person with a Basic Scaffolding Certificate allowed to construct a tower frame scaffold with outriggers? 
 Yes 
1. e) Is a person with a Basic Scaffolding Certificate allowed to construct a tube and coupler scaffold? 
 No 
1. f) Is a person with a Basic Scaffolding Certificate allowed to install a barrow hoist? 
 Yes 
1. g) Is a person with a Basic Scaffolding Certificate allowed to construct a modular birdcage scaffold? 
 Yes 
1. h) Is a person with a Basic Scaffolding Certificate allowed to construct a swing stage?    No 
1. i) Is a person with a Basic Scaffolding Certificate allowed to install a safety net? 
 Yes 
1. j) Is a person with a Basic Scaffolding Certificate allowed to erect a mast climber? 
 No          
1. k) Is a person with a Basic Scaffolding Certificate allowed to construct a mobile frame scaffold? 
 Yes  
1. l) Is a person with a Basic Scaffolding Certificate allowed to install a personnel and materials hoist? 
No  

SECTION TWO: SITE HAZARDS 
2. a) How close to live unprotected powerlines would you construct a metal scaffold? 
4m (national guideline.  Consult local supply authority for state regulations) 
2. b) How far past each end of the scaffold should insulation on live powerlines extend? 
4.9m (or 5m) 
2. c) How can a scaffold built alongside a road be protected from traffic damage? 
1. Re-route traffic 
2. Provide guards (or fenders) 
3. Use a person to direct traffic (or flagman) 
2. d) What could happen if the tie tubes on a scaffold stuck out too far when a crane is operating? 
Crane loads could snag the scaffold 
2. e) Name something which might corrode scaffolding equipment. 
1. Acids 
2. Alkalis 
3. Salts  
2. f) What is the danger where a scaffold is being constructed close to machinery with moving parts? 
Injury from machinery operation        
2. g) What type of scaffolding material would you use to construct a scaffold where there may be a danger of explosion? 
Non-conductive material (or timber)  

SECTION THREE: TOOLS AND EQUIPMENT FOR SCAFFOLDING

3. a) How far above the maximum nut extension must the spindle of an adjustable baseplate extend? 
150mm 
3. b) What is the maximum extension on an adjustable baseplate
600mm 
3. c) What is the minimum size of a square baseplate
150mm x 150mm (or 225cm2) 
3. d) What is the minimum outside diameter of a common scaffold tube (to the nearest mm)? 
48mm 
3. e) What is the minimum wall thickness of a common steel scaffold tube? 
4mm 
3. f) What is the minimum wall thickness of a common heavy duty aluminium scaffold tube? 
4.45mm (or 4.4mm or 4.5mm) 
3. g) What is the minimum width of a scaffold plank? 
220mm (or 225mm) 
3. h) What is the minimum thickness of a hardwood solid timber scaffold plank? 
32mm 
3. i) What is the minimum thickness of an oregon solid timber scaffold plank? 
38mm 
3. j) What is the minimum diameter of fibre rope you would use for a handline
12mm 
3. k) What is the minimum diameter of fibre rope you would use for a gin wheel?   
16mm 
3. l) What is the maximum load you would lift with a gin wheel? 
50kg 
3. m) Would you use a gin wheel with no rope guides? 
No 
3. n) How far along an unbraced cantilevered scaffold tube would you fix a gin wheel? 
600mm 
3. o) How would you stop a ring-type gin wheel from sliding along the scaffold tube? 
Fix a coupler on either side of the ring 
3. p) Would you suspend a gin wheel from a right angle coupler? 
No 
3. q) What would you do to make safe a hook-type gin wheel with no safety catch? 
Mouse the hook (wire up the open hook)  

SECTION FOUR:  GENERAL SCAFFOLD REQUIREMENTS 
4. a) What is the maximum load in each bay of a light duty working platform? 
225kg (or 2.2kN
4. b) What is the maximum load in each bay of a medium duty working platform? 
450kg (or 4.4kN
4. c) What is the maximum load in each bay of a heavy duty working platform? 
675kg (or 6.6kN
4. d) What maximum load would you place on a right angle coupler? 
630kg (or 630kgf or 6.25kN)  
4. e) What maximum load would you place an adjustable baseplate
3030kg (or 30kN, or 3030kgf. 3000kg or 3 t are acceptable approximations) 
4. f) What is the maximum allowable load on a chain? 
THE PROFESSIONAL TTHHEE  PPRROOFFEESSSSIIOONNAALL  THE PROFESSIONAL TRAINING SYSTEM TTRRAAIINNIINNGG  SSYYSSTTEEMM 
One sixth of the breaking load (or breaking strain or breaking force) 
4. g) What is the maximum allowable load on a flexible steel wire rope? 
One sixth of the breaking load (or breaking strain or breaking force) 
4. h) When a scaffold is built on soil, what would you place under the baseplates to distribute the load? 
Soleplates 
4. i) What minimum width of timber would you use as a soleplate
220mm (or 225mm, or the width of a scaffold plank) 
4. j) Are gaps allowed between the planks of a working platform? 
No 
4. k) Can platform planks be lapped on the returns of a scaffold? 
Yes 
4. l) What is the minimum width of a light duty working platform? 
450mm (or 2 planks) 
4. m) What is the minimum width of a medium duty working platform? 
900mm (or 4 planks) 
4. n) What is the minimum width of a heavy duty working platform? 
1000m (or 5 planks) 
4. o) What is the minimum width of clear access along a working platform for persons with hand tools only? 
450mm (or 2 planks) 
4. p) What is the minimum width of clear access along a working platform for persons and materials? 
675mm (or 3 planks) 
4. q) Can planks with different thicknesses be used to deck out a working platform? 
No 
4. r) When is edge protection needed on working platforms? 
When a person or object could fall more than 2m   
4. s) How far above the working platform must a toeboard extend? 
150mm 
4. t) At what height above the working platform would you fix a guardrail
Not less than 900mm and not more than 1100mm (or any height between these two) 
4. u) What must be provided between the guardrail and the toeboard to complete a platform's edge protection? 
A midrail  
4. v) What is the maximum gap allowed between an unprotected platform edge and the working face? 
Less than 225mm (or 225mm or less than the width of a scaffold plank) 
4. w) Is it acceptable to use a personnel hoist as the only means of access to a scaffold's working platforms
No 
4. x) What type of ladders cannot be used for access to a scaffold? 
1. A domestic grade (or non-industrial grade) ladder 
2. An extension ladder 
3. A step ladder 
4. y) What is the maximum height allowed between ladder landings? 
6m (or 3 lifts) 
4. z) What is the minimum height an access ladder must extend above the landing? 
900mm (or 1m)  

SECTION FIVE: PARTICULAR SCAFFOLD REQUIREMENTS 
5. a) Do castors for mobile scaffolds need wheel locks? 
Yes 
5. b) Can a castor for a mobile scaffold have a pneumatic tyre
5. c) Why is plan bracing needed in a mobile scaffold? 
To stop the scaffold from twisting (or distorting) when it is moved 
5. d) What is the minimum platform width when platform brackets (hop ups) are fixed between lifts? 
450mm (or 2 planks) 
5. e) Would you fix platform brackets (hop ups) on the inside of the scaffold or on the outside of the scaffold? 
The inside (or alongside the working face) 
5. f) When platform brackets (hop ups) are fixed between lifts, where would you place the extra working platforms? 
At the lift immediately above and the lift immediately below (or one star above or one star below) 
5. g) What maximum spacing would you use between tank brackets supporting 50 mm thickness solid timber scaffold planks? 
2m 
5. h) What maximum spacing would you use between tank brackets supporting 63 mm thickness solid timber scaffold planks? 
2.5m 
5. i) What would you do to stop the movement of planks on a crane-lifted shutter bracket scaffold? 
Positively fix (or lash, or strap, or spike) them 
5. j) Should the design of a sheeted scaffold be checked by an engineer? 
Yes 
5. k) Would you use hessian to sheet a scaffold? 
No 
5. l) Does the supplier of prefabricated scaffolding need to provide written information about the system? 
Yes 
5. m) Would you mix components of two prefabricated systems in the one scaffold without a supplier's or engineer's consent? 
No 
5. n) What maximum horizontal tie spacing would you use on an unsheeted modular scaffold? 
3 bays (or 6 bays with plan bracing) 
5. o) What maximum vertical tie spacing would you use on an unsheeted modular scaffold? 
4m (or 2 lifts, or 8m with ledger bracing, or 4 lifts with ledger bracing) 
5. p) If you used plan bracing to increase the tie spacings on a prefabricated scaffold, how would you strengthen each tie? 
Fix check couplers (or additional couplers) to the tie tubes 
5. q) If a tie tube was fixed to a wedge-type modular ledger, how would you fix the ledger against uplift? 
Fix a check coupler (or additional coupler) over the wedge on the standard 
5. r) Where would you fix the first lift on a modular scaffold? 
At the standards lowest connection points (or at the base of the standards) 
5. s) How many unbraced panels would you allow between the longitudinally braced panels of an unsheeted modular scaffold? 
5. t) Where would you fix transverse braces to a run of unsheeted modular scaffold? 
At each end (or in each lift at each end) 
5. u) How high would you build an unsheeted free-standing steel frame scaffold? 
Three times the least base width 
5. v) Without supplier's information or engineer's approval, how high would you build a light duty aluminium tower frame scaffold? 
9m 
5. w) Would you fix the ladder access to a tower frame scaffold internally or externally? 
Internally (or within the framework)   
5. x) How is the ladder opening in a tower frame scaffold's working platform usually protected? 
With a trapdoor (or hinged hatch)  
5. y) Without supplier's information or engineer's approval, how many working platforms would you place on a light duty aluminium tower frame scaffold? 
One  

SECTION SIX: ASSOCIATED EQUIPMENT REQUIREMENTS 
6. a) What is the maximum mesh size of a safety net? 
100mm 
6. b) What maximum gap would you allow between the edge of a safety net and the building or structure? 
200mm 
6. c) What are the two maximum fall distances which you might find marked on the label of a safety net? 
1m and 6m 
6. d) What minimum and maximum initial sag would you allow for a safety net? 
¼ and 1/5 of the shortest side length 
6. e) What minimum clearance would you ensure below a safety net? 
2/3 of the shortest side length or 2m, whichever is greater 
6. f) What minimum horizontal distance should an outrigged safety net extend past the outermost working position? 
2/5 of the maximum fall height plus 2m 
6. g) What maximum spacing would you use between ties along the border chord of a safety net? 
750mm 
6. h) What is the minimum overrun distance between the hoist rope attachment and the head sheave on a cantilevered platform hoist? 
1.5m 
6. i) What is the minimum and maximum horizontal clearance between the moving platform of a cantilevered hoist and any landing or floor?    
25mm and 100mm    
6. j) What is the minimum height of a landing gate for a cantilevered platform hoist? 
1.8m 
6. k) What maximum distance would you use between lateral braces of a cantilevered platform hoist? 
6m 
6. l) How high would you free-stand the tower of a cantilevered platform hoist above its last tie? 
3m


APPLICANT'S NAME:_____________________________ SIGNATURE:____________________________  

Friday, 11 December 2015

சென்னையில் புதிதாக வளர்ந்து வரும் மெடிக்கல் டூரிஸம் !! ஒரு மருத்துவ பார்வை..


நம்மில் பலரும் உடல்நலக் குறைபாடு ஏற்படும்போது மட்டுமே மருத்துவமனைகளைத் தேடுகிறோம், அப்படித் தேடும்போது சில நேரங்களில் நேரப்பற்றாக்குறை, எமர்ஜெ ன்சி போன்ற காரணங்களால் ஒரே வளாகத்தில் அனைத்துவிதமான உடல்நலக் குறைபாடுகளுக்கும் தரமான சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனைகளைப் பற்றிய விவரங்கள் அறிந்தும் கூட அங்கே போய் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் அவகாசம் நமக்கு இருப்பதில்லை . 

இதனால் என்ன ஆகிறது? நாம் விரும்பும் மருத்து வமனைக்குச் செல்ல முடியாத பட்சத்தில் ஏதாவது ஒரு மருத்துவமனையில் என்ற ரீதியில் சிகிச்சை பெற்றுக் கொள்வதில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள நேர்கிறது.இப்படியான சூழலைத் தவிர்க்க, சென்னையின் பிரபலமான மருத்துவமனைகள் பற்றியும் அங்கே கிடைக்கக் கூடிய அனைத்துவகையான சிகிச்சை முறைகளுக்கான பட் டியல் குறித்தும், அங்கே வந்து செல்லும் வெளிமாநில, வெளிநாட்டு நோயாளிகளோடு தற்போது புதிதாக வளர்ந்து வரும் துறையான மெடிக்கல் டூரிஸம் பற்றியும் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரை உதவலாம்.நீங்கள் இப்போது சென்னையில் வசிப்பவரா ?சென்னை உங்கள் சொந்த ஊரா? அல்லது வேலைக்காக நீங்கள் வந்த ஊரா?எப்படியாக இருந்தாலும் சென்னையைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சம் தெரிந்தே இருக்குமில்லையா? சென்னை எதற்கெல்லாம் பிரசித்திபெற்ற ஊர்? சென்னையின் ட்ரேட் மார்க் மெரீனா பீச், எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவிடங்கள், உலகம் முழுவதும் உள்ள சங்கீத ரசிகர்களால் வருடம் தவறாது கொண்டாடப்படும் டிசம்பர் மாதத்து சங்கீதக் கச்சேரிகள்
இலக்கிய ஆர்வலர்களுக்கு ஜனவரி மாதத்து புத்தகத் திருவிழா, ஆன்மிக ஆர்வலர்களுக்கு மைலாப்பூர் ராமகிருஷ்ண மடம், பக்திக்கு கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், சினிமா ஆர்வலர்களுக்கு கோடம்பாக்கம், பண்ட பாத்திரங்களுக்கு சரவணா ஸ்டோர், ரத்னா ஸ்டோர்கள்.


ஷாப்பிங்கா இருக்கவே இருக்கிறது தி.நகர்., ரங்கநாதன் தெரு, பட்டுக்கு நல்லி, போத்தீஸ், சென்னை சில்க்ஸ், ஆர்.எம்.கே.வி. இப்படி நீண்டுகொண்டே போகும் லிஸ்ட்டில் சென்னையின் மருத்துவமனைகளுக்கும் தனிச் சிறப்பு உண்டு.

· கண்ணுக்கு சங்கர நேத்ராலயா, அகர்வால் மருத்துவமனைகள்.

· காதுக்கு கீழ்ப்பாக்கம் கே.கே.ஆர். மருத்துவமனை.

· இதயத்திற்கு ட்ரிபிள் எம், செரியன் மருத்துவமனைகள்.

· எல்லா வகை கேன்சர்களுக்கும் அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்.

· சோதனைக் குழாய் மூலம் குழந்தைகள் பெறும் சிகிச்சைக்கு நுங்கம்பாக்கம் ஜி.ஜி மருத்துவமனை.


ஒட்டுமொத்தமாய் அனைத்து வகை சிகிச்சைகளுக்கும் பொதுவாக சென்னையின் சிறந்த மருத்துவமனைகள் என்று பட்டியலிட்டால் அந்த லிஸ்ட்டில்;
· அப்பல்லோ மருத்துவமனை
· சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை
· போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை
· மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனை
· மைலாப்பூர் இசபெல்லா மருத்துவமனை
· மியாட் மருத்துவமனை
· பில்ராத் மருத்துவமனை
· மலர் மருத்துவமனை
· லைஃப் லைன் மருத்துவமனை
போன்ற மருத்துவமனைகள் எல்லாம் வருகின்றன. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவமனைகள் அனைத்தும் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளே. மல்ட்டி ஸ்பெஷாலிட்டி என்றால் ஒரே கூரையின் கீழ் நீங்கள் உங்களது எல்லா விதமான நோய்களுக்கும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.


இந்த மருத்துவமனைகள் ஏதாவது ஒன்றில் மேலே உள்ள பட்டியலில் நமக்குத் தேவைப்படும் சிகிச்சைகளை நாம் பெறும் வசதி உண்டு என்பதுதான் அவற்றின் தனிச் சிறப்பு. ஒவ்வொரு மருத்துவமனையும் அதன் திறமையான மருத்துவர்கள், பொறுப்புணர்வு மிகுந்த கனிவான செவிலியர் சேவை, ஆய்வுக்கூட வசதிகள், கேண்டீன், சுத்தம், சுகாதாரம் மற்றும் பராமரிப்பு வசதிகள், வெற்றிகரமான சிகிச்சை வசதிகளின் அடிப்படையில் தனக்கென்று கணிசமான எண்ணிக்கையில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு நோயாளிகளை கொண்டுள்ளது.

சென்னையின் மருத்துவ வசதிகளை நாடி தமிழ்நாட்டில் இருப்பவர்கள் மட்டுமல்ல குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இ ருந்தும் நைஜீரியா, கென்யா, புருண்டி, காங்கோ, பங்களா தேஷ், ஓமன், ஈராக் போன்ற அயல்நாடுகளில் இருந்தும் கூட நோயாளிகள் மிகுந்த நம்பிக்கையோடு வரு கிறார்கள். இந்தத் தேடலை மையமாக வைத்துத் தோன்றியதே மெடிகல் டூரிஸம் எனும் மகத்தான சேவை.

இந்த நோயாளிகள் சென்னையைத் தேடி வருவதற்கு சென்னை மருத்துவமனைகளின் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை முறைகள் ஒரு காரணம் என்றாலும் அவை தவிர பிற காரணங்களும் இருக்கின்றன். அயல்நாடுகளைப் பொறுத்தவரை புகழ் பெற்ற மருத்துவமனைகள் அனைத்திலும் சிகிச்சை வேண்டி வருடக்கணக்காக காத்திருக்கும் நோயாளிகளின் பட்டியல் நீளமானது. அங்கே சிகிச்சைக்காக காத்திருக்க முடியாத அவசரக் காலங்களில் பெரும்பாலான நோயாளிகள் அதற்கடுத்த சிறப்பான சிகிச்சை எங்கு கிடைக்கும் என்று தேடுகிறார்கள். இது மட்டுமல்ல வெளிநாடுகளையும் வெளி மாநிலங்களையும் ஒப்பிடுகையில் சென்னை மருத்துவமனைகளின் சிகிச்சைக் கட் டணங்களும் குறைவு என்று தோன்றுவதால் அதற்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகம்.


மெடிக்கல் டூரிஸம் என்றால் என்ன?
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு மாதந்தோறும் 100க்கு மேற்பட்ட வெளிநாட்டு நோயாளிகள் வந்து செல்கிறார்கள் என்று அம்மருத்துவமனையின் நோயாளிகளின் புள்ளிவிவரப் பதிவேடு கூறுகிறது.

இதே போல மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மாதம் தோறும் 14 நோயாளிகளுக்கு மேற்பட் டவர்கள் வருகிறார்களாம்.

மலர் மருத்துவமனைக்கு மாதம் தோறும் கார்டியாக், ஆர்த்தொபெடிக், கார்டியோ தொராகிக் சர்ஜரி, ஆன்காலஜி, நியூரோ சர்ஜரி சிகிச்சைகளைப் பெற 15 முதல் 20 அயல்நாட்டு நோயாளிகள் வந்து செல்வதாக அம்மருத்துவமனை இன்டர்நேஷனல் பிசினஸ் மேனேஜர் டி.ஐ.ஜோசுவா ‘தி ஹிந்து’ நாழிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

பற்கள் மற்றும் தாடைகள் சீரமைப்பிற்கான தனிப்பட்ட சிகிச்சைகளுக்காக ஆச்சார்யா மற்றும் டாக்டர் எஸ்.எம்.பாலாஜி மருத்துவமனைகளுக்கு கணிசமான அயல்நாட்டு நோயாளிகள் வந்து செல்வதாக மருத்துவப் புள்ளிவிவர ஏடுகள் தெரிவிக்கின்றன.

இப்படி வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சென்னை மருத்துவமனைகளின் சிகிச்சையை நம்பி நோயாளிகள் வருவதற்கு அவர்களது நாட்டில் இருக்கும் புகழ்பெற்ற மருத்துவமனைகளின் சிகிச்சைக்கட்டணங்கள் அதிகம், நோயாளிகளின் காத்திருப்பு லிஸ்ட் நீளம் என்ற காரணங்களைத் தவிர்த்து மற்றொரு மிகப் பெரிய காரணம் ஒன்று உள்ளதெனில், அது பல வெளிநாடுகளிலும் வெளிமாநிலங்களிலும் நவீன வசதிகளுடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த மருத்துவமனைகள் இருந்தாலும்கூட, அங்கெல்லாம் நமது தமிழக மருத்துவமனைகள் போன்று திறமை வாய்ந்த மருத்துவர்களும் அனுபவம் மிக்க செவிலியர்களும் கிடைப் பதில்லை என்பதே! இந்த விஷயத்தில் நமது தமிழர்களை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது.

இப்படி அயல்நாடுகளிலும் அயல் மாநிலங் களிலும் இருந்து சிகிச்சைக்காக வரும் நோயாளிகளில் பலர் சிகிச்சை முடிந்த உடன் அப்படியே ஊர் திரும்பி விடுவதில்லை. இங்கிருக்கும் நமது கலாச்சார சின்னங்கள், தொன்மை சிறப்பு வாய்ந்த இடங்களான; மாமல்லபுர சிற்பங்கள், காஞ்சிபுரத்துக் கோயில்கள், மதுரை சமணர் குகைகள், பாண் டிச்சேரி அரவிந்தர் ஆசிரமம், திருப்பதி தரிசனம், சிதம்பரம் நடராஜர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் ஆலயம், நாயக்கர் மஹால், தஞ்சை பெரிய கோயில், கேரளா குமரகம் போன்ற சுற்றுலா மையங்களுக்கும் சென்று வரத் தவறுவதில்லை. இதைத்தான் மெடிக்கல் டூரிஸம் என்பார்கள்.
சிகிச்சைக்கு சிகிச்சையுமாச்சு சுற்றுலாவுக்கு சுற்றுலாவுமாச்சு!
அப்படி என்னென்ன துறைகளின் கீழ் இந்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகின்றன?

அனஸ்தீசியா சிகிச்சைகள் · கார்டியாக் கேர் · கார்டியோ தொராகிக் சர்ஜரி · காஸ்மெடிக் சர்ஜரி · கிரிட்டிகல் கேர் · டெர்மடாலாஜி தோல் தொடர்பான சிகிச்சைகள் · டயாபட்டாலாஜி நீரழிவு நோய் சிகிச்சைகள் · எமர்ஜென்சி · என்டோகிரைனாலாஜி · எண்டோ கிரைன் சர்ஜரி · காத்து, மூக்கு, தொண்டை சிகிச்சை · கேஸ்ட்ரோ என்ட்ராலாஜி இரைப்பை மற்றும் குடல் தொடர்பான சிகிச்சைகள் · பொது மருத்துவம் · பொது அறுவை சிகிச்சை · Geriatrics முதியோர் மருத்துவம் · Hematology ரத்த வகைகளின் அடிப்படையிலான சிகிச்சை முறைகள் · Infectious disease தொற்று நோய் மருத் துவம் · ஆய்வுக்கூட சேவைகள் · நியோநேட்டாலாஜி பிறந்த குழந்தைகளுக்கான அடிப்படை மருத்துவ சிகிச்சை tலீuக்ஷீணீவீ · நெப்ஃராலாஜி · Neurology நியூராலஜி · நியூக்ளியர் மெடிசின் · மகப்பேறு மருத்துவம் · Ophthalmology கண் மருத்துவம் · Orthopaedic surgery எலும்பு முறிவு அறுவை சிகிச்சை · Paediatrics குழந்தை மருத்துவம் · Paediatric சுர்கேரி பீடியாட்ரிக் அறுவை சிகிச்சை · பிசியோதெரபி · பிளாஸ்டிக் சர்ஜரி · ரேடியாலஜி அண்ட் இமேஜிங் துறை · Res piratory மேடிசினேசுவாச மருத்துவம் · ருமட்டாலாஜி · இனப்பெருக்க அறுவை சிகிச்சைகள் · பாலியல் மருத்துவம் · மார்பு அறுவை சிகிச்சை · Vascular surgury ரத்த நாள அறுவை சிகிச்சை · யூராலாஜி

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

தமிழகத்தில் வெள்ள அபாயத்தை தவிர்க்க வடிகால் திட்ட கட்டிடம் வேண்டும்!! ஒரு சமூக பார்வை..

பருவமழையினால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இயற்கை நீர்நிலைகள் உள்ள பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்ததாலும், வெள்ளநீர் வடிவதற்கான திட்டங்களை சரிவர வகுக்காமல் இருந்ததாலும் வெள்ளத்தின் பாதிப்பு மக்களை மிகவும் கடுமையாக பாதித்து உள்ளது.  

நிரந்தர தீர்வு
கடலோர பகுதிகளில் வெள்ளம் வடிவதற்கான வழித்தடங்கள் அற்ற நிலையில் அழிவுகள் பெரிதும் ஏற்பட்டன. இது தவிர வெள்ளம் வடியாத பகுதிகளில் பரவிவரும் நோய்களும் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இவற்றுக்கு ஒரு நிரந்தர தீர்வு காணவேண்டியது மிகவும் அவசியமாகிறது.இதற்கு காரணம் இன்றைய தேவைக்கேற்ப நீர்நிலைகளை சரிவர திட்டமிடாததும், பராமரிக்காததும் ஆகும்.பொது சுகாதாரம், வெள்ள அபாயம், சாலை நெருக்கடியினால் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள் கருத்தில் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதில் கவனமும், அவற்றை அகற்றுவதில் சமூக ஆர்வமும் காட்ட வேண்டும். காலியிடங்களில் காய்கறி, மூலிகைத் தோட்டம் அமைக்க வேண்டும். தெருக்கள் தோறும் மரங்களால் அழகுபடுத்த வேண்டும். குப்பைகளை அந்தந்த பகுதி குப்பை தொட்டிகளில் கொட்ட மாநகராட்சி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் ஓட்டல்கள், வணிக வளாகங்களின் பிளாஸ்டிக் பொருட்கள், திரவக்கழிவுகள், செப்டிக்டேங்க் கழிவுநீர் நேரடியாக மழைநீர் வடிகால்களுக்கு சென்று கலக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே, சுப்ரீம் கோர்ட்டு ஒரு நிபுணர் குழுவை நியமித்து வெள்ள நீர் வடிகால் பகுதிகளை விஞ்ஞானபூர்வமாக திட்டமிட்டு, வரும் காலத்தில் இதுபோன்ற வெள்ள அபாயங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் செயல்படுவதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். நமக்கு ஜப்பான் நாடு வடிகால் திட்ட கட்டிடம் ஒரு வழிகாட்டிய உள்ளது. அவற்றை பற்றி இங்கு பறப்போமே !!

ஜப்பான் நாட்டில் வெள்ளபெருக்குவடிகால் திட்டம் !!

ஜப்பான் நாட்டில் வெள்ளபெருக்கு மேலாண்மை திட்டத்தில் மாநகர எல்லையில் மிகப்பெரிய வடிகால் அமைப்பு ஒன்றை வடிவமைத்துள்ளார்கள். 1992 ல் கட்ட ஆரம்பிக்கபட்ட இந்த மாபெரும் வடிகால் திட்ட கட்டிடம் 2009 ல் தான் முடித்துள்ளார்கள்.

மூன்று மாதங்களுக்கு பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்துவிட்டது என்று நம்ம ஊரு ஆட்சியாளர்களைப் போல சாக்கு சொல்லாமல்,200 ஆண்டுக்கு ஒருமுறை வரும் மாபெரும் வெள்ளத்தையும் மனதில் கொண்டு அதை சமாளிக்கும் வகையில் இம்மாபெரும் வடிகால் அமைப்பை கட்டமைத்திருக்கிறார்கள்.

நம்ம ஊரில் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள சேதத்தை தவிர்க்க அதிமிகை நீரை யாருக்கும் பயன்படாமல் நாம் கடலில் கலக்கச் செய்கிறோம் ஆனால் ஜப்பானிலோ அந்த அதிமிகை நீரை இந்த வெள்ளப் பெருக்கு மேலாண்மை திட்டத்தின் மூலம் சேமிக்கிறார்கள்.

பெரும் மழைக் காலங்களில் வெள்ள நீர் டோக்கியோ நகரை சேதப்படுத்தாமல் பாதுகாப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு நதிகளில் இருந்து வரும் வெள்ள நீரை பாதாள கால்வாய்கள் மூலம் உள்வாங்கி பின்பு வறட்சி காலங்களில் நதிக்கே திருப்பி அனுப்பும் இயற்கைக்கு உகந்த திட்டமாக இது அமைந்திருக்கிறது.








அணுஉலை,நியூட்ரினோ போன்ற மக்களுக்கு வேண்டாத திட்டங்களை எல்லாம் வெளிநாட்டில் இருந்து ரெப்ளிக்கா செய்யும் நம்ம ஊரு விஞ்ஞானிகள், இந்த நீர் மேலாண்மை திட்டம் போன்ற மக்களுக்கு பெரிதும் பயன்படக்கூடிய திட்டங்களை நடைமுறைப் படுத்தினால் நம் வருங்கால சந்ததி இயற்கையுடன் இயைந்து வளர்சியை நோக்கி பயணிக்கும்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.

தமிழகத்தில் ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை பயிற்சி !!

ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்றால் என்ன?

ரசாயன விவசாயத்தினால் வரும் கேடுகளை எதிர் கொள்ள இயற்கை விவசாயம் ஒரு பதிலாக சொல்ல படுகிறது. ஆனால் மராத்தியத்தில் இருந்து வரும் திரு சுபாஷ் பலேகர் சுலபமான ஒரு பதிலை வைத்து இருக்கிறார். இதற்கு ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்று பெயர்.
விவசாயத்தையும் மாடு வளர்ப்பையும் சேர்த்து அவர் இந்த தொழிற் நுட்பத்தை கண்டு பிடித்து உள்ளார்.
அவர் கூறுகிறார் “விவசாயத்திற்கு இடு பொருள் விலைகள் (உரங்கள், பூச்சி கொல்லிகள்) ஏறி கொண்டே போகின்றன. ஜீரோ பட்ஜெட் முறையில் ஒரு விவசாயி வெளியில் இருந்து ஒரு இடு பொருளும் வாங்க வேண்டியதில்லை. ஒரு விவசாயி, ஒரு நாடு பசுவை வைத்து கொண்டு முப்பது ஏகர் விவசாயம் செய்ய முடியும், ஒரு விதமான இடு பொருளும் வாங்காமல். கோமூத்திரம், சாணி, போன்றவையே போதும்

இது எப்படி முடிகிறது?

அவர் கூறுகிறார்  ” பயிர்கள் மண்ணில் போடும் உரங்களில் இருந்து 2% மட்டுமே எடுத்து கொள்ளுகிறது. மற்ற 98% பங்கும் காற்று, நீர், மற்றும் சூரிய வெளிச்சம் இருந்து எடுத்து கொள்ளுகிறது. இந்த மற்றதை செய்வது மண்ணில் உள்ள நுண் யிர்கள் தான். ஆனால் இவை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளால் கொல்ல படுகின்றன.
இயற்கையாக, மண்ணில் நுண் இயிரிகளை மீண்டும் கொண்டு வர, பசு சாணம் போதும். ஒரு கிராம் பசும் சாணம் ஐநூறு கோடி நுண் உயிரிகள் இருக்கின்றன. மண்ணின் நலத்தை உயர்த்த, அவர் ஆறு ஆண்டுகள் பல விதமான ஆராய்சிகளை செய்து உள்ளார். வெல்லம, சுண்ணாம்பு போன்றவையும் அவர் பயன் படுத்துகிறார். நாட்டு பசு தான் சரியாக வரும்” என்கிறார் அவர்.
வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய பட்ட Eisenia foetida என்ற மண் புழு பற்றியும் அவர் குறை கூறுகிறார். இந்த மண் புழுக்கள் மண்ணில் உள்ள நுண் உயிரிகளை உண்டு விடுவதால், பயிர்கள் பாதிக்க படுகின்றன என்கிறார்.

ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை பயிற்சி தமிழகத்தில்!

விவசாயத்தில செலவுக்கும் வரவுக்குமே சரியாப் போகுது, இதுல எங்கெருந்து லாபம் கிடைக்குறது!” இதுதான் இன்று பெரும்பாலான விவசாயிகளின் புலம்பல். இந்தக் காரணத்தினாலேயே விவசாயத்தைக் கைவிட்டோர் பலர்.
அதாவது இப்போது நீங்கள் விவசாயம் செய்ய வேண்டுமானால், அதற்காக நீங்கள் வெளியாட்களையோ, வெளியிலிருந்து வாங்கப்படும் இடுபொருட்களையோ நம்பி இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. சென்ற தலைமுறைக்கு முன்புவரை, இந்த நிலைமை நிச்சயம் இல்லை! ஏர் உழுதல் முதல் கதிரடித்து, களம்சேர்த்து வியாபாரம் செய்வது வரை, அனைத்தையும் விவசாயிகள் தன்னிச்சையாக சுயசார்புடன் மேற்கொண்டு வந்தனர். ஆனால், தற்போது உழவதற்கும், ரசாயன உரம் வாங்கவும், விதைகளை வாங்கவும், அறுவடை செய்வதற்கான ஆட்களுக்காகவும் இப்படி ஒவ்வொன்றிற்கும் விவசாயிகள் இன்னொருவரையே நாட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையை மாற்றும் விதத்தில், ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் என்ற இயற்கை வேளாண் முறையை தமிழக விவசாயிகளுக்கு கற்றுத்தர சுபாஷ் பாலேக்கர், திருப்பூர் மாவட்டம் பல்லடம் வருகிறார்.
விவசாயிகள் தற்சார்புடன் இருக்கலாம்
சுபாஷ் பாலேக்கரின் இயற்கை வேளாண் முறையினைப் பின்பற்றும்போது, விவசாயிகள் வெளியாட்களையோ அல்லது வெளியிலிருந்து கிடைக்ககூடிய இடுபொருட்களையோ நம்பியிருக்க வேண்டிய தேவையிருக்காது. ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளையும், ரசாயன உரங்களையும் வெளியிலிருந்து பெரும்செலவு செய்து வாங்கி, மண்ணைக் கெடுப்பதோடு தங்களையும் தங்களை நம்பி இருக்கும் நுகர்வோரின் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் நிலை இதில் இருக்காது. விதைக்காகவும், உரத்திற்காகவும், பூச்சிக்கொல்லிக்காகவும் விவசாயிகள் வெளியுலகத்தை சார்ந்திராமல், தாங்களே தங்கள் நிலத்திலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும்!
செலவில்லாமல் இயற்கை விவசாயம்
அதுமட்டுமல்லாமல், சுபாஷ் பாலேக்கர் கற்பிக்கும் இந்த இயற்கை வேளாண் முறைக்கு ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை எனப் பெயரிட்டுள்ளார். அதாவது செலவே இல்லாமல், இயற்கை வேளாண்மையை நாம் செய்ய முடியும் என்பதை உணர்த்துகிறது இந்த வேளாண்முறை.பொதுவாக தண்ணீர் பற்றாக்குறை விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளதைப் பார்க்க முடிகிறது. அதற்கு இந்த ஜீரோ பட்ஜெட் வேளாண்மை தீர்வைத் தருகிறது; குறைவான நீர்ப் பாசனத்தில் விவசாயம் செய்யும் உத்தியை கற்றுத்தருகிறது.
மேலும், வேலை ஆட்கள் பற்றாக்குறை விவசாயத்தில் ஒரு நெருக்கடியை தந்துள்ளது. விவசாய வேலைக்கு கூலியாட்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருப்பதோடு, அவர்களின் ஊதியத் தொகையும் அதிகரித்து விட்டதால் செலவு அதிகரித்துவிடுகிறது. இந்நிலையின் தீவிரம் சுபாஷ் பாலேக்கரின் இயற்கை வேளாண்முறையைப் பின்பற்றுகையில் வெகுவாக குறைகிறது. நீர்ப்பாசனத்தில், ரசாயன இடுபொருட்களின் பயன்பாடில்லாமல், இயற்கையில் தங்களது நிலங்களில் கிடைக்கும் பொருட்களை வைத்து, செலவே இல்லாமல் ஜீரோ பட்ஜெட்டில் விவசாயம் செய்யும்முறையாக இம்முறை, விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது.
நுகர்வோர் நலன் காக்கப்படுதல்
பொதுவாக இன்று, ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றினால் பலவித பாதிப்புகள் வருவதை மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் சொல்ல ஆரம்பித்துள்ளனர். நஞ்சில்லா உணவை உண்ண வேண்டுமென்பதே அனைவரின் ஆவலாக உள்ளது. ஆனால், அதற்கு வழியில்லாமல், பெரும்பான்மை விவசாயிகள் ரசாயன இடுபொருட்களைப் பயன்படுத்தினால்தான் அதிக மகசூல் ஈட்டமுடியுமென்ற அறியாமையில் சிக்கி, இயற்கை வேளாண்மையை புறந்தள்ளியுள்ளனர். சுபாஷ் பாலேக்கரின் இந்த இயற்கை விவசாய முறை அதற்கு ஒருநல்ல தீர்வாக இருக்கும்.
இயற்கை விவசாயத்தால் விளைந்த பொருட்களின் விலை அதிகமாக உள்ளதால் அதை சாமானிய மக்கள் வாங்கி உண்ணும் நிலை இன்று இல்லை! ஆனால், பெரும்பான்மை விவசாயிகள் இம்முறையைப் பின்பற்ற முன்வரும்போது, அப்போது சாமானியர்களும் இயற்கை விளைபொருட்களை வாங்கியுண்ணும் நிலை நிச்சயம் உருவாகும். நஞ்சில்லா உணவு என்பது அனைவருக்கும் சாத்தியமாகும். இப்போது நாம் அதை நோக்கி நமது முதல் அடியை எடுத்து வைக்கும் நேரம் வந்துள்ளது!
ஜீரோ பட்ஜெட்டில் இயற்கைவிவசாயம் செய்வது எப்படி? இயற்கை விவசாயத்தை முழுமையாகக் கடைபிடிக்க முடியுமா? இதுபோன்ற கேள்விகள் உங்கள்மனதில் தோன்றலாம்! உங்கள் சந்தேகங்களை எல்லாம் போக்கும் வகையிலும், இதன்நடைமுறை சாத்தியத்தை உறுதிப்படுத்தும் விதமாகவும், நீங்கள் கற்றுக்கொண்டதை மற்றுவருக்கும் கற்றுக்கொடுக்கும் வகையிலும் இந்தவகுப்பின் தன்மையானது அமையும். நிகழ்ச்சியின் 8 நாட்களும் முழுமையாகக் கலந்துகொள்பவர்களுக்கு தொடர்ந்து ஆலோசனைகளும் ஆதரவும் வழங்கப்படும். இதன்மூலம் இயற்கை விவசாயம் குறித்த தெளிவான பார்வையை நீங்கள் பெறுவது உறுதி.
பல்லடம் திருச்சி மெயின் ரோடு, ஸ்ரீ விக்னேஷ்மஹால் (இலட்சுமி மில்ஸ் பஸ் நிறுத்தம்)ல் 10.12.2015 முதல் 17.12.15 வரை, 8 நாட்கள் தொடர்ந்து வகுப்புகள் நடைபெறும். நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் இடம் வழங்கப்படும். முன்பதிவு அவசியம்! எட்டு நாட்களும் பயிற்சியில் கலந்துகொள்வது அவசியம்!
ஜீரோ பட்ஜெட் சேனாதிபதி (பயிற்றுநர்) சிறப்பு பயிற்சி வகுப்பு கற்றுக்கொள்ள அழைக்கிறது ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம்.
இந்தபயிற்சிக்கான விண்ணப்பத்தை www.projectgreenhands.org/ZBT என்றவலைதளம் மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் அனைத்து ஈஷா நர்சரிகளிலும் விண்ணப்பங்கள்கிடைக்கும்.  
மேலும் விபரங்களுக்கு: 09442590068, 09442590036.
தொகுப்பு : அ.தையுபா அஜ்மல் .

Sunday, 6 December 2015

சென்னை மழைவெள்ள நிவாரணப் பணிகள் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை...

இயற்கை பேரழிவினால் தமிழக மக்கள் சொல்லொணாத்துயரம் அடைந்தனர். பட்ட கஷ்டங்கள் ஒன்றா இரண்டா? பலர் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே ஜல சமாதி அடைந்துள்ளனர். முறையான எச்சரிக்கை ஏதுமின்றி ஏரிகள் திறந்துவிடப்பட்டன என்பதே இத்தகைய கொடுமைகளுக்கு காரணம்.எல்லாம் முடிந்துவிட்டன.தற்போது பற்பல தொண்டு நிறுவனங்கள் கருணை உள்ளம்கொண்டு பற்பல நிவாரணப்பொருட்களை மனமுவந்து கொடுத்து வருகின்றனர்.வெளி மாநிலங்களிலிருந்தும் குவிகின்றன. அவற்றை முறையாக பெற்று பொறுப்புள்ள அரசு அதிகாரிகள் மூலம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். ஆனால் என்ன நடக்கிறது? 

மக்கள் முதலில் அரசியல் வாதிகள் பின்பக்கம் கொடி பிடிப்பதை நிறுத்துங்கள். ஒவ்வொரு மனிதனின் அடையாளம் இப்பொது ஒரு கட்சி என்றாகி விட்டது. நடிகர்கள் வந்தால் அவர்கள் பின்னல் போவதும் கட்சி மாநாடு என்றால் கோடி பிடித்து போவதையும் அனைவருமே நிறுத்துங்கள். உங்கள் வாழ்கையின் நிமிடங்களை வீணாக்காதீர்கள். என் தலைவன் உன் தலைவன் என்ற பேச்சை ஒழியுங்கள். சென்னை ஒரு உதாரணமே.. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு ஆபத்து இருக்கிறது. அதில் முன்னால் ஆளுங்கட்சியினரின் பங்கும் இந்நாள் ஆளுங்கட்சியினரின் பங்கும் நிறையவே இருக்கிறது.  




கடந்த 100 ஆண்டுகளில் இப்படியோர் மழையை பார்த்ததில்லை என்று தெரிந்தும் அதை மறைத்தும் மறந்தும் போய் விட்டார்கள். 1990க்கு பிறகு நகரங்களின் வளர்ச்சி கட்டுக்கடங்காமல் உள்ளது. ரியல் எஸ்டேட் காரர்கள் செங்கல்பட்டையே சென்னை என்று கூறி விற்றபோதும் இன்று கூப்பாடு போடும் அத்தனை தொலைகாட்சிகளும் ரியல் எஸ்டேட் விளம்பரங்களை ஒளிபரப்பி காசு பார்த்த போதும் சமூக பொறுப்புணர்வு எங்கே போயிருந்தது? இவர்களின் விளம்பரங்களை பார்த்து எதை பேர் இடம் வாங்கி வீடு, கட்டடம் என்று கட்டியிருப்பார்கள்? இன்று ஆறு ஏரிகளில் ஆக்கிரமிப்பு என்று குற்றம் சாட்டுபவர்கள் அவற்றை அப்புறப்படுத்தும் போது ஏழை மக்களை துன்புறுத்துவதாக அப்போதும் குறை கூர்வார்கள் என்பதையும் இன்று வெளுத்து வாங்கும் வாசக நியாயாதிபதிகள் அப்போது ஏழை பங்காளர்களாக மாறி அதையும் குறை கூறுவார்கள் என்பதை மறுக்க முடியுமா?


 நகரங்களில் சாலை அமைக்கும்போது மேல்நாடுகளில் முன்பு போடப்பட்ட சாலையை துப்புரவாக அப்புற படுத்திய பிறகு அந்த இடத்தில புதிய சாலை அமைக்கிறார்கள். ஆனால் இங்கே பழைய சாலையின் மீது தாரையும் ஜல்லியையும் கொட்டி சாலையை உயர்த்தி அமைக்கிறார்கள். 25 ஆண்டுகளில் சாலை மட்டம் 3 முதல் 4 அடி அதற்கும் மேலாக உயர்ந்திருக்கிறது. அதனால் 4 அடிக்கு கீழே செல்ல வேண்டிய வெள்ள நீர் மேடு படித்தியதால் சாலை மட்டத்தை விட கீழே சென்றுவிட்ட வீடுகளுக்குள் போகிறது. இந்த தவறு காலம் காலமாக நடந்து வருகிறது. 



பிளாஸ்டிக் கழிவுகளை மக்கள் தங்கள் வீட்டு அருகில் இருக்கும் கழிவு நீர் போக்கியில் கொட்டியதால் ஏற்பட்ட அடைப்புகளால் வெளியே கழிவு நீர் செல்வது சாதாரண காலத்திலேயே நாம் காண்பதுதான். நகரத்தில் குடியேறும் அனைவரும் நகருக்குள்ளேயே வீடு வேண்டும் என்று நினைக்கும்போது அந்த நகரம் எவ்வளவுதான் தாங்கும்? பெங்களூரை உதாரணம் காட்டுவார்கள். அது தக்காண பீட பூமி என்கிற மேடான பரப்பில் அமைத்த நகரம். இயல்பாகவே வெள்ளம் வடியும் வாட்டத்தில் அதன் அமைப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்த வரை கடற்கரை நகரம். அடையாறு, கூவம் என்று அனைத்து நதிகளும் ஏரிகளின் உபரி நீரும் கடலில் கலக்க கடலை நோக்கி வரும் வழியில் சென்னை இருக்கிறதே ஒரு நாளில் 30,50 செ.மீ. என்கிற அளவில் மழை பெய்தால் சென்னை மட்டுமல்ல எந்த ஊரானாலும் இந்த நிலைதான் ஏற்படும். மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவம் போல அரசுக்கும் இது புதிய அனுபவம்தான். அரசிடம் குறைகள் இருக்கின்றன. ஆனால் நிவாரண பணிகளை சரியாகத்தான் செய்கிறது. பெரிய தலைகளின் ஆக்கிரமிப்பை பற்றி பேசும் நபர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். பெரிய மனிதர்கள் பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்தால் சாதாரணமானவர்கள் அவர்களின் இடத்தை சுற்றியுள்ள சிறு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து, சாலையை ஆக்கிரமிப்பு செய்து தங்கள் பரப்பை விரிவாக்குவது நடக்கிறதா இல்லையா? 

நேர்மையின்மை என்பதும் பொதுநலம் இன்மையும் ஊறிப் போய்விட்டது. நம்மிடமிருந்துதானே நமது மக்கள் பிரதிநிதிகள் உருவாகிறார்கள் தங்கள் பகுதியில் அக்கம்பக்கத்தை முடிந்தவரை ஆக்கிரமிப்பு செய்ததால் எத்தனை ஆயிரம் வழக்குகள் உள்ளன என்று நீதிமன்றங்களில் போய்ப் பாருங்கள் தெரு குழாய்களில் தண்ணீர் போய் கொண்டு இருந்தால் அதை அடைக்க போவதில்லை. மாறாக இந்த அரசு என்ன செய்கிறது இந்த தண்ணீர் குழாயை கூட அடைக்காதா என்று கேட்பதுதான் நமது வழக்கம். தன் வீட்டை சுற்றி ஓடும் சாக்கடையில் உள்ள சிறு தடங்கலை அடைப்பை எடுக்க மாட்டார்கள். அதை எடுக்க மாநகராட்சி நகராட்சிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூடி கூடி பேசுவார்கள். அந்த சிறு அடைப்பு போக போக பெரிதாகி சாலையில் ஓடும். நமது ஊடகங்கள் கேமெரா, மைக்குடன் வந்து விடுவார்கள். மக்களும் டிவியில் முகம் தெரியும் ஆவலில் அந்தந்த ஊடகங்கள் சொல்லிக் கொடுக்கிற மாதிரி அந்த துன்பத்தை சிரிப்புடன் சொல்லிக் கொண்டு இருக்க பின்னணியில் ஒரு கூட்டம் சிரிப்புடன் அந்த துன்பத்தை காண்பதை அடிக்கடி காணலாம். இப்போது கூட ஊடக காரர்கள் சென்னை மழையை விற்று வியாபாரம் பார்த்த நேரத்தில்.... சமூக அக்கறை இருந்து இருந்தால் அங்கே போன மைக், கேமரா காரர்கள் பாதிக்க பட்டவர்களுக்கு மருந்து மாத்திரை உணவு என்று எதையேனும் கொண்டு சென்று கொடுத்து இருக்கலாம். ஆனால் அது அவர்களின் நோக்கம் அல்ல. மாற்றானின் துன்பத்தை விற்று காசாக்குவதுதன் அவர்களின் நோக்கம். கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இந்த ஊடகங்கள் இதுவரை என்ன நிதியை கொடுத்தார்கள்? கொடுத்தவனை விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார்கள். என்ன உதவி செய்தார்கள். மருந்து கொடுத்தார்களா? உணவு கொடுத்தார்களா? போர்வை கொடுத்தார்களா? ஆனால் போட்டோ எடுத்தார்கள். பேட்டி எடுத்தார்கள். சொல்லலாம். சொல்லிக்கொண்டே போகலாம். தன் முகத்தில் அழுக்கை வைத்துக் கொண்டு அடுத்தவரை காட்டி சிரிக்கும் இனம் எங்கும் இருக்குபோது இவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

இந்த வெள்ளப் பேரிடர் பேரழிவு இயற்கையின் சீற்றத்தால் வந்ததென்று சொல்வதை விட, ஆட்சியாளர்களின் கவனக் குறைவாலும் அலட்சியப் போக்கினாலும் வந்ததென்று சொல்வதுதான் சரியாகயிருக்கும். நடந்தது தொடர்ந்தார்ப் போன்ற சாதாரண கணமழை கடற் சீற்றமோ அல்லது பூகம்பமோயில்லை.பெய்த மழைநீர் சரியாக வெளியேறக் கூடிய கட்டமைப்பு வசதிகளில்லை. இவையெல்லாம் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்கள் செய்தத் தவறுகள்தானே. 

தமிழகத்தில் உள்ள கிராம நிலங்களை அப்போது கிராம மணியகாரர், ஊராட்சி மன்றத் தலைவர், கணக்குப்பிள்ளைகள் கவனித்து வந்தார்கள். ஊர் பொதுமக்கள் நீர் நிலைகள், பொது இடங்களை யாரும் ஆக்கிரமைப்பு செய்யாமல் பார்த்துக் கொள்வார்கள். குறிப்பாக நீர்வரத்து கால்வாய், வடிகால் கால்வாய், ஏரி, குளங்களை மழைக் காலத்திற்கு முன்பாகவே தாங்களாகவே வீட்டிற்கு ஒருவர் என வந்து தூர் வாரி ஆழப்படுத்துவார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். அட்சிக் காலத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலையில் அமர்த்தப்பட்டனர், அவர்கள் ஊரில் இருக்கமாட்டார்கள். ஊரில் உள்ளவர்களுக்கு தெரியாமலேயே வெளியூர் காரர்களுக்கு அரசு நிலத்தை சொற்ப இலஞ்சப் பணத்திற்காக சொந்த பந்தங்களுக்கு பட்டா செய்து கொடுத்துவிடுவார்கள். அவர்கள் அநத் ஊரில் இருப்பது ஒரு வருடத்திற்கும் குறைவாகன காலமே. அடுத்து வேறு ஒருவர் பணிக்கு வருவார். அவர் மீதி உள்ள இடங்களையும் நீர் பிடிப்பு பகுதிகளையும் இதேபோல் பணம் பெற்றுக் கொண்டு ஆக்கிரமைப்பு செய்ய அனுமதித்துவிடுவார். இதை ஊரில் உள்ளவர்கள் யாரும் கேட்க முடியாது. ஏனெனில் அவர்கள் பொய்யான பட்டா வைத்திருப்பார்கள். எனவே வருவாய்த்துறை, நில அளவைத்துறையினர் முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள். அவர்களுக்கு தெரியாமல் யாரும் ஆக்கிரமைப்பு செய்ய முடியாது. அதேபோல் கோடைக்காலங்களில் ஏரி, குளங்கள் வறண்டு இருக்கும், விவசாயிகள் அந்த வண்டல் மண்ணை எடுத்து தங்கள் நிலங்களில் எருவாகப் பயன்படுத்துவார்கள். ஏரியும் தூர் வாரியதைப்போல இருக்கும். ஆனால் அரசின் தற்போதைய சட்டங்களால் ஒருபிடி மண்ணைக்கூட ஏரியில் ஒரு விவசாயி தொடமுடியாது. தொட்டால் ரூ.30,000/- அபராதம், அதற்கு சமமான இலஞ்சம் கொடுக்க வேண்டும். இதுதான் தற்போதைய ஆட்சி. ஏரிகளை தூர்வார டெண்டர் விடுவதால் அதில் 40% வேலை மட்டுமே நடைபெறுகிறது. மீதித் தொகை எங்கு செல்கிறது என்பது அனைவரும் அறிந்தது. உண்மையில் பணிகள் ஒழுங்காக நடக்க வேண்டும் என்றால் கிராம அளவில் ஒரு குழு அமைத்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

சென்னை மக்கள் இந்த சூழ்நிலையில் வாடுவது மிகவும் கவலைக்குரிய விஷயம் தான். ஆனால் இதற்கு அரசாங்கத்தை மட்டும் குறை கூறி கொண்டிருப்பது அறியாமை என்பது என் கருத்துஇந்த வெள்ள பேரபாயம் ஒரு கடுமையான எச்சரிக்கையை தந்திருக்கிறது. இனி மேலும் இந்த எச்சரிக்கையை அதிகாரிகள் மட்டுமின்றி, அரசியல் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்த வாதம் வரும்.இதில் ஒரு நல்ல படிப்பினை என்னவென்றால் பணக்காரனுக்கு ஏழை சோறிடுகிறான். அணைத்து மக்களும் ஜாதி , மதம்,இனம் மறந்து ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டிருகின்றனர். அண்டை மாநில மக்களும் உதவிசெய்து கொண்டிருகின்றனர். இதுதான் உண்மையான தேசிய ஒருமைப்பாடு. 

பணம் படைத்த மக்களுக்கு ஒரு வேண்டுகோள்!!
என்னதான் பணம் இருந்தாலும் இதுபோல் ஒரு இக்கட்டான சமயத்தில் எதுவும் உங்களுக்கு உதவாது.உண்மையான அன்புடன் ஒருவருக்கு ஒருவர் உதவுவது என்றுமே நிலைக்கும். ஆகவே இந்த நிலை மாறியவுடன் நீங்கள் சேர்த்து வைத்து இருக்கும் பணத்தை எதாவது ஒரு ஏழை குடும்பத்திற்கு உதவுங்கள். வாழ்க இந்தியா. வளர்க மானுடம். முக்கியமாக பொதுமக்கள் மிகவும் சீரியஸாக எடுத்துகொள்ள வேண்டும். வெறுமனே அதிகாரிகளையும், அரசியல் வாதிகளையும் இந்த பிரச்சினைக்கு குறைகளை சொல்லாமல் பொதுமக்கள் தங்கள் கடமையை உணரவேண்டும். யாரையும் குறை சொல்லாதிர்கள். குறை சொல்ல நேரம் இதுவல்ல. துணிச்சலாக கடமையாற்றும் இந்த மனிதர்களை பாராட்டி வணங்கத்தான் வேண்டும். பாராட்டுக்கள், வணக்கங்கள்,


இனிமேலாவது தமிழக மக்கள் சிந்திப்பார்களா?இனிமேலும் யாரையும் நம்பி எந்த பயனும் இல்லை. நாம் முதலில் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும்.இயற்கை தந்த விழிப்புணர்வு பாடம். இனியாவது விழித்துக் கொள்வோம். இன்று தனி மனித நேயமே மக்களை காப்பாற்ற வேண்டிய சூழல். மனித நேயத்தையும் மறந்து மக்கள் சக்தியை மதிக்காத சற்றும் லாயக்கற்ற அரசியல் வாதிகளை மாக்களாக வெறுத்து ஒதுக்க வேண்டிய தருணம்...இந்த தவறுதலுக்கு நாமும் தான் பொறுப்பேற்க வேண்டும்,,, ஏனென்றால் நம்மிடமும் ஒற்றுமை இல்லையே, தவறை எப்போதும் சுட்டி காட்ட நினைப்பதில்லை,, அது ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர் கட்சியாக இருந்தாலும்,,, பொது பிரச்சினைகளை தன பிரச்சினையாக நினைக்கும் வரை எந்த ஒரு பிரச்னைகும் தீர்வு கிடைக்காது..

நமது மக்களின் ஞாபக மறதி இவர்களுக்கு சாதகமாகி விட்டது. இன்னும் 2-3 மாதங்களில் மக்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டு 500க்கும் 1000க்கும் வாக்கை விற்று விடுவார்கள். தொகுதிக்கொரு எம். எல். ஏ இருக்கிறார். அந்தந்த தொகுதியில் இதுபோன்று இடர்பாடுகள் ஏற்படும்போது அவர்கள் மக்களோடு அங்கு இருந்திருக்க வேண்டும். வார்டுக்கு வார்டு கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வார்டுக்கு சென்றிருக்க வேண்டும். நகர் மன்றத்தலைவர் உத்தரவுகளை விரைவாக செயல்படுத்தியிருக்க வேண்டும். அரசு பேரிடர் உதவியான தீயணைப்புத் துறையினர் மாநில முழுவதிலுமிருந்து விரைந்து வந்திருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகக் குழுவினர், போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்பட்டு, மக்களுக்கு உணவு மற்றும் உறைவிட மாற்றுப் பணிகளை துரிதப்படுத்தியிருக்க வேண்டும்.

எங்கே இவர்கள் ?
 நகர் மன்றத் தலைவர், வார்டு கவுன்சிலர்கள், எம் எல் ஏ க்கள், மந்திரிகள் அதிகாரிகள் இப்படி அனைவருமே இப்படிப்பட்ட இக்கட்டான நேரத்தில், உடனடியாக, மிக துரிதமாக களத்தில் இறங்கியிருக்க வேண்டும். அதிரடியாக மீட்புப் பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அவர்களுக்கு மாநில முதலமைச்சர் விரைந்து ஆணையிட்டிருக்க வேண்டும். ஆனால், மழை கடுமையாகப் பெய்தது, ஏரிகளுக்கு செல்லவேண்டிய மழைநீர், வீடுகளுக்குள்ளும் சாலைகளிலும், பெருக்கெடுத்து ஓடியது. மக்களின் ஓலம் வெளியில் கேட்கக்கூட முடியாத அளவிற்கு, மழைவெள்ளம் மக்களை வதைத்து எடுத்தது. ரமணன் எப்போதும் போலவே வானிலை அறிக்கையை வாசித்துக்கொண்டிருந்தார். அதில் துளியும் துல்லியமில்லாமல் இருந்தது, வெட்ட வெளிச்ச்சமாகிக் கொண்டிருந்தது. சென்னைக்குள்ளேயே அஷ்ட சாஸ்திர வித்தைகளையும் கற்றுத் தேர்ந்த, ஆயிரம் வருடங்களுக்கு பின் நடக்கப் போவதையும், நாளை அரசியலில் இவர் ஜெயிப்பார், அவருக்கு கட்டம் சரியில்லை, நாளைய சூப்பர் ஸ்டார் இவர்தான், அவருக்கு நான்தான் ஜாதகம் கணித்துச் சொன்னேன், இவர் வெல்வார், அவர் தோற்பார் என்று ஜோதிடம் சொல்லியே பிழைப்பை ஓட்டி, பெரும் தனங்களை, தங்களின் வசப்படுத்திக்கொண்டிருந்த அற்புத ஜோதிட சிகாமணிகளும், சென்னையின் மழைவெள்ளத்தில் சிக்கி செய்வதறியாது திகைத்துப் போனார்கள். விஞ்ஞானத்தை மட்டுமே முழுமையாகக் கொண்டு பகுத்தறிவு பேசும் கறுப்புச் சட்டைகள் இதைப்பற்றி ஏதும் பேசமுடியாமல் சுருண்டுவிட்டார்கள். செய்தித்தாளில் அறிக்கைகளை விட்டும், கேள்வி பதில் என்றும் எழுதிய ரொம்பப் பழுத்த அரசியல்வாதிகளும், மதுவிலக்கு எங்களின் முதல் கையெழுத்து என்று முழக்கம் செய்தவர்களும், புஜம் துடிக்க, தோள் உயர்த்தி வீர வசனம் பேசியவர்களும், நாளைக்கு என்னோடு கூட்டணி வைத்தால்தான் அரசு அமையும் என்று காத்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர்களும், தங்களது கட்சி உறுப்பினர்களைக் கொண்டு, மக்களைக் காப்பாற்றும் பணியில் இறக்கிவிட ஆணையிடவில்லை. மேலிருந்து விழும் பெண்ணொருத்தியை சட்டை வீசிக் காப்பாற்றிய நடிகர் முதற்கொண்டு, ஒரு குத்தாட்டத்திற்கு நாற்பது லட்சம் வாங்கிய நடிகைகளும், அதனை அவர்களுக்கு கொடுத்தாவது ஒரு ராத்திரி பார்த்துவிடக்காத்திருந்த சில்லறை வெடிகளும் கூட, உதவி செய்ய மனமின்றி வீடுகளுக்குள் முடங்கிப் போய் படுத்திவிட்டார்கள். பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் வந்துவிடத் துடித்து, கச்சாடாவே தனது அரசியல் போக்கு என்று உளறிக்கொட்டிய அரசியல் வியாதிகளும், அவரது புஷ்புஷ்க்களும் எங்கு போனார்கள் என்று தெரியவில்லை. இதனை பயன்படுத்தி சில எதிர்கட்சி ஊடகங்கள், தங்களின் கட்சித்தலைமையின் ஆணைக்கிணங்க, மழை வெள்ளத்தை வைத்து செவ்வனே அரசியல் செய்துகொண்டிருந்தனர். இங்கு இப்படித் தவிக்கிறார்கள், அங்கு அப்படி வெள்ளமாய் இருக்கிறது என்று மக்கள் எல்லோருமே, ஆளும் அரசை குற்றம் சுமத்தும்படியாகவே பேட்டிகளை அமைத்துக் கொண்டார்கள். அரசுத்துறையின் பேரிடர் பணிக்குழு விரைவாக வரவில்லை. அரசியல் கட்சித்தலைவர்களில் சிலர் மழைநீரில் இறங்கி பமாத்து செய்துவிட்டுப் போயினர். எந்தக் கட்சியினரும் துரிதமாக களத்தில் இறங்கவில்லை. இவர்களுக்குப் பெயர் மக்கள் பிரதிநிதிகளாம். இப்படி, அதிகார வர்க்கங்கள், ஆளும் கட்சியினர், எதிக்கட்சியினர், நடிகர்கள், வியாபாரிகள், மக்களை சுரண்டிப் பிழைப்பு நடத்திக்கொண்டிருப்பவர்கள் என அனைவருமே இந்த மழை வெள்ளத்தின் போது மக்களெல்லாம் பரிதவித்து நின்றதை, குளிரூட்டும் அறைகளில் அமர்ந்தபடியே, சப்பாத்தியும், வேர்க்கடலையும், சாயாவும், ப்ரூவும், கோலாவும், பாயாவும், பீரும், பப்சும், பீசாவும், பர்கரும், சுடச்சுட சிக்கன் பிரியாணியும், கிரேவியும் சாப்பிட்டபடியே தொலைகாட்சி வழியாக, மழை வெள்ளக் காட்சிகளையும், அதனை அடுத்தபடத்தில் எப்படிக் கோர்க்கலாம் என்றும் யதார்த்த சினிமா மனத்தோடு, திரைக்களைஞர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில், தன் கையே தனக்குதவி என்று, எங்கு காணினும் மக்களே மக்களுக்கு உதவிக்கொண்டிருந்தனர். வெகு ஜனங்களால் வேறென்ன செய்ய முடியும்? சாதாரண மக்கள், மேற்கண்ட எக்ஸ்பெர்ட்களிடம் சிக்கி, எப்போதும் ஏமாந்து நிற்கும் சோணகிரிகள் தானே?.



நமக்கு சேவை செய்யத்தான் அவர்கள்!!

மாறாக அவர்களுக்கு நாம் அடிமையாய் இருக்கிறோம். நமது உரிமையை நாமே மீட்டெடுப்போம்.அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் வானத்திலிருந்து இறங்கிவந்த வானவர்களல்ல, நாம் கொடுக்கும் வரியை சம்பளமாக வாங்கிக்கொண்டு நமக்கு வேலை செய்யும் வேலைக்காரர்களே.... அவர்களுக்கு,மக்கள்மேல் எப்போதும் ஒரு பயம் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.. அப்போதுதான்,நல்லாட்சி நடைபெறும்.........( ஒரு விதத்தில், பணம் வாங்கிக்கொண்டு ஒட்டு போட்ட நமக்கு, இப்படி அமைச்சர்களை மறித்து, கேள்விகேட்க தகுதியே இல்லை என்பது வேறு விஷயம் )...... ஒட்டு நமது உரிமை ...அதை விலை பேசாதீர்...மேலும் ஓட்டிற்காக கொடுக்கப்படும் லஞ்சம் "இலவசம்" அதையும் புறக்கணிப்போம் . அடுத்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் எதிர்பார்க்காமல் சிந்தித்து ஒட்டு போட வேண்டும் .சமூகததின் மீது அக்கறை கொண்ட, எத்தனையோ பேர் இன்றைக்கும் தன்னால் முடிந்த உதவி செய்துகொண்டுதான் இருகிறர்கள்... விளம்பரத்திற்காக அல்ல... அதை நாம் உணர்ந்து அவர்களுக்கு முதலில் வாய்ப்பு தருவோம்... காசுக்கு விலை போகாமல் நமது ஓட்டை நல்லவர்களுக்காக பயன்படுத்துவோம்...நல்லவர்களை தேர்ந்தெடுங்கள் இயற்கை சீற்றம் ஓடோடி வருவார்கள் - பணம் வாங்கி ஒட்டு போடும் முறையை கைவிடுங்கள் இலவசம் வேண்டாம். மக்கள் நலன்காக்க போராடும் நல்லவர்கள் நாட்டுக்கு தேவை /பாடுபடும் செயல்வீரர்களை தேர்வு செய்து  நல்லவர்களுக்கு உங்களுடைய வாக்கை செலுத்துங்கள்.புரட்சி வெடிக்கட்டும், புது பாதை பிறக்கட்டும்... 2016 மக்களுக்கு நல்ல வருடமாக ஆரம்பமாகும் இறைவனை வேண்டுவோம்..

ஆக்கம் மற்றும் தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Saturday, 5 December 2015

சென்னையைச் சுற்றிலும் வெள்ளம் ஏற்படக் காரணம் என்ன? ஒரு சிறப்பு சமூக விழிப்புணர்வு பார்வை ..

சென்னை புறநகர்ப் பகுதியில் சாலைப் பாலங்களை மூழ்கடித்து செல்லும் வெள்ளம்.
வளசரவாக்கம் பகுதியில் சூழ்ந்துள்ள வெள்ளத்தைக் கடந்துசெல்லும் மக்கள்.
கடந்த சில நாட்களாக சென்னனயில் பெய்த கடும் மழையினால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தினால்  சென்னை நகரத்தின் பெரும் பகுதி இன்னமும் வெள்ளத்தின் பிடியில் சிக்கியிருக்கின்றது.
இலட்சக்கணக்கான மக்களை அநாதரவாக்கியுள்ள வெள்ளம், இன்னமும் வடியாத நிலையில், நேற்று முற்பகல் சற்று மழை ஓய்ந்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன்.
இந்நிலையில் மீண்டும் நள்ளிரவில் இருந்து மீண்டும் மழை பெய்து வருகிறது.
சென்னை மாநகருக்குள் புகுந்த வெள்ளநீர், சென்னையைச் சுற்றிலும் சுமார் 80 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள ஏரி, குளங்களில் இருந்து வெளியேறிய நீர் என்பதை அதிகாரிகள் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கி வரும் பிரதான ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் உள்ளிட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏரி, ஆறுகள்தான். இவற்றிலிருந்துதான் நீர் செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் ஏரிகளுக்குச் செல்கிறது. 
 கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. 
 அப்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்த உபரி நீர் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது. இந்தநிலையில் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், ஆதனூர், மணிமங்கலம், பீர்க்கன்கரணை, இரும்புலியூர், பெருங்களத்தூர், வண்டலூர் ஆகிய ஏரிகளில் இருந்தும், பீர்க்கன்கரணை, சதானந்தபுரம், மேற்கு தாம்பரம், புலிக்கொரடு ஆகிய வனப்பகுதிகளில் இருந்து தேக்கி வைக்கப்படாமல் வெளியேறிய காட்டாற்று வெள்ளமும் தாம்பரம்,பெருங்களத்தூர் ஆகிய ப சென்னை புறநகர்ப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
 இறுதியாக தாம்பரம் பாப்பான் கால்வாய் வழியாக அடையாற்றில் திறந்து விடப்பட்டபோது,செம்பரம்பாக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் காரணமாக தாம்பரம் பகுதியில் இருந்து வெளியேறிய வெள்ளம் அடையாற்றில் செல்வதில் தடையை ஏற்படுத்தியது.

 இதனால் தாம்பரம் புறநகர் பகுதிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. அப்போது சென்னை மாநகருக்குள் அடையாறு வழியாக வெளியேற்றப்பட்ட வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் அண்மையில் பெய்த மழை காரணமாக சென்னையைச் சுற்றிலும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த மழை வெள்ளம், ஏற்கனவே பெய்த மழையால் நிரம்பி வெளியேறிய மழை வெள்ளம் குடியிருப்புகளில் புகுந்தது.
 எனவே சென்னை மாநகருக்குள் புகுந்த வெள்ளநீர், சென்னையைச் சுற்றிலும் சுமார் 80 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள ஏரி,குளங்களில் இருந்து வெளியேறிய நீர் என்பதை அதிகாரிகள் புரிந்துகொள்ளவேண்டும். இதை மனதில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


சென்னையில் இன்று காலை முதல் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வந்தது. வானிலை ஆய்வு மையமும், சென்னைக்கு மழை ஆபத்து நீங்கியது என்றும், விழுப்புரம், கடலூர், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக கணித்தது. இந்த நிலையில் பிற்பகல் 2.30 மணியளவில் இருந்து சென்னையில் பல இடங்களில் கனமழை கொட்டிவருகிறது.இதனால்  இடம்பெயர்ந்த மக்களும் உயரமான கட்டடங்களில் தஞ்சமடைந்துள்ள மக்களும் அடிப்படை வசதிகளின்றித் தவித்து வருகின்றனர்.
உணவு, குடிநீர், மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் சென்னை மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளை ஒருங்கிணைப்பதில் சமூக வலைத்தளங்கள்  பெரும் பங்காற்றி வருகின்றன.
இதில் ஏராளமான தனிநபர்கள், அமைப்புக்கள், கட்சிகள் எனப் பலரும் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றனர்.வெள்ளப் பேரிடரால் சென்னையை விட்டு சிலநாட்கள் வேறுஊருக்குச் சென்று பாதுகாப்பாக இருந்துவிட்டு வரலாம் .

சென்னை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தரப்பினரும் பணம் உதவி மற்றும் பொருள் உதவி செய்கின்றனர். பாரத பிரதமர் 1940கோடி‬ ரூபாய் மத்திய அரசின் கீழ் கொடுத்துள்ளார்.எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் திரு ‪‎சகாயம்‬ IAS அவர்களின் தலைமையில் குழு அமைத்து நிவாரண பணிகளை செய்ய உத்தரவு வழங்க வேண்டும் ,அப்போது தான் அனைத்து மக்களுக்கும் நிவாரணம் சென்று அடையும் .இது எனது தனிப்பட்ட கருத்து .இதை முடிந்த வரை பகிருங்கள்.தமிழ்நாடு முழுவதும் விரைவில் சென்று அடையும் 


எனவே அரசாங்கம் செய்ய வேண்டியவை, 

1. மெட்ரோ ரயிலுக்காக வாங்கிய துளையிடும் கருவியை கொண்டு, அண்டர் கிரௌண்ட் ஏரிகளை உருவாக்க வேண்டும்..அதாவது, ஒரு ஏறி செல்லும் பாதையில், ஒரு நகரம் இருந்தால், அதன் அடியில் நீர் ஓடுமாறு செய்தல்..

2.அண்டர் கிரௌண்ட் கழிவுநீர் வடிகள் திட்டத்தை உள்ள நகரங்களில், கழிவறை நம்பர்களுக்கு ஏற்ப்ப ஒரு வரி விதித்து, வாரா வாரம், லாரியில் அவற்றை எடுத்து செல்ல வேண்டும். 

3. இனிமேல் ஊழியர்கள் அதிகம் தேவை படும் நிறுவனங்களை சென்னையில் அனுமதிக்க கூடாது..

4. ப்ரொபஷனல் டேக்சை சம்பளத்திற்கு அடிபடியில் பெர்செண்டேஜாக பிடிக்க வேண்டும்.

5. ஒவ்வொரு ஊழியரும் தங்கள் வோட்டர் ஐ டி கார்டை நிறுவனத்திடம் கொடுக்க வேண்டும்..அந்த அந்த தொகுதியை சேராத ஊழியருக்கு ஒரு செஸ் விதிக்க வேண்டும்..இது இந்தியா முழுக்க கொண்டு வர வேண்டும்..அது வரை, தமிழகம் செராதவருக்கு இது விதிக்க பட வேண்டும்..

6. மக்கள் தொகையை பரவல் ஆக்கவேண்டும்.. 

7. 600 அல்லது 700 சதுர அடிக்கு மேல் ஒருவருக்கு தனி வீடு கட்ட நிலம் கொடுக்க கூடாது..அப்போது தான், இந்திய மக்கள் தொகைக்கு ஏற்ப எல்லோரும் வீடு பெறுவார் அது போக, காடுகள், நதிகள், மலைகள், விலங்கின வாழிவிடங்கள் தொழிற்பேட்டைகள் அமைக்க முடியும்..

8. புருஷர்த்கங்களை லக்ஷ்யமாய் கொண்டு வாழ வேண்டும்..இறைவனை நோக்கிய பயணமும், இயற்கையோடு ஒன்றுதலும் ஒரே பாதையில் இருக்கும் இரண்டு லக்ஷ்யங்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

9. நீதி மன்றங்கள் அமைப்பது போல் ஒவ்வொரு மதத்திற்கும், ஒரு பரிஷத்தை உருவாக்க வேண்டும்..மத ரீதியாக ஒருவர் தவறு செய்தால் பிராது கொடுக்க அதை பயன் படுத்தி கொள்ளலாம்..இதன் மூலம், ஒருவர் பாவம் செய்தால் அதை தடுத்து, அது யாரையும் பாதிக்கா வண்ணம் செய்து விடலாம்..

10. உள்நாட்டில் இருக்கு கருப்பு பணத்தை ஒழிதல், வெறும் முதலீட்டிற்காக வாங்க படும் நிலதிர்ர்க்கு அதிக சொத்து வரி, கேஷ் நம்பரை ஆதாரமாக கொண்ட கேஷ் அக்கௌண்டிங் போன்றவற்றை கொண்டு வரவேண்டும்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Friday, 4 December 2015

புனித மக்கா மற்றும் புனித மதீனாவில் நுழைய முஸ்லிமல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதேன்? ஒரு விழிப்புணர்வு பார்வை ..


முஹம்மது நபி பிறந்த புனித பூமியான மக்கா நகருக்குள் முஸ்லிம் அல்லாதவர்கள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி சத்யாகிரகப் போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி., ஹுசைன் தல்வாய் அறிவித்துள்ளார்.

முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாமிய நகரங்களான மக்கா மற்றும் மதினாவில் நுழைய அனுமதி இல்லை என்பது உண்மை. இதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ள இஸ்லாத்தின் சில அடிப்படைகளை புரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாம் என்பது இவ்வுலகை படைத்த இறைவனால் இவ்வுலக மக்களுக்கு நேர்வழியாக வழங்கப்பட்ட மார்க்கமாகும். அதன்படி இவ்வுலகம் முழுமையும் ஒரு சமுதாயமாகக் காண்கிறது இஸ்லாம். அதாவது இவ்வுலகைப் படைத்த இறைவனை மட்டுமே தலைவனாக கொண்டு அவன் வகுத்த சட்டதிட்டத்தின் படி தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு ஓர் ஆட்சியினை நிர்வகிக்க இஸ்லாம் வலியுறுத்துகிறது.

இஸ்லாத்தினை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் (முஸ்லிம்கள்) இச்சட்டதிட்டங்களை கடைபிடித்தே ஆக வேண்டும். அதனை மீறுபவர்கள் இஸ்லாமியர்கள் ஆகமாட்டார்கள்.

முஸ்லிமல்லாதவர்கள் விஷயத்தில் இஸ்லாமிய கொள்கைபடி நடந்து கொள்ளவேண்டும் என நிர்ப்பந்தம் செய்வது கூடாது. அதாவது ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களிடம் அதன் படி நடக்க வேண்டும் என நிர்பந்திப்பதோ அல்லது அவ்விஷயத்தை ஏற்றுக் கொள்ள நிர்பந்திப்பதோ கூடாத காரியமாகும்.

இஸ்லாத்தின் இந்த அடிப்படையான கொள்கையை மனதில் வைத்து மேற்கண்ட கேள்வியை அணுகுவோம்.

கேள்வியில் காணப்படும் இரண்டு இடங்களான மக்கா மற்றும் மதீனாவில் சில சட்டதிட்டங்களைப் பேண இஸ்லாம் வலியுறுத்துகிறது.

எடுத்துக்காட்டாக மக்காவின் ஓர் எல்லைக்குட்பட்ட இடத்தில் எந்த ஒரு உயிரினத்தையும் நோவினை செய்வது அனுமதிக்கப்படாத காரியமாகும். செடி கொடிகளில் உள்ள இலைகளை கூட தகுந்த காரணமின்றி பறிப்பது கூட, பரிகாரம் செய்தாலொழிய பாவத்தைப் பெற்றுத் தரக்கூடிய குற்றமாகும்.

முஸ்லிமல்லாத ஒருவர் அவர் இஸ்லாத்தினை வாழ்க்கை நெறியாக ஏற்காத காரணத்தினால் இஸ்லாமிய அடிப்படையின் படி இச்சட்டங்களைப் புரிந்து கொண்டு அதனைப் பேணி நடக்க அவரை நிர்பந்திப்பது முடியாத காரியம் மட்டுமல்லாது நடைமுறைக்கும் ஒத்து வராத செயலாகும்.


ஓர் எடுத்துக்காட்டு மூலம் இதனை விளக்கலாம்


ஒரு நாட்டில் இராணுவ கேந்திரம் போன்ற சில முக்கிய பகுதிகளில் அந்நாட்டின் குடி மக்களுக்கே உள்நுழைய விதிக்கப்பட்டிருக்கும் தடையினை எடுத்துக் கொள்வோம். ஒருவர் இங்கு உள்ளே நுழைய வேண்டுமெனில் அவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். அந்த தகுதியுள்ள ஒருவர் அங்கு உள் நுழைந்த பின் அங்குள்ள சட்டதிட்டத்திற்கு அவரும் கட்டுபட்டவர் ஆகி விடுவார். மீறினால் அங்குள்ள முறைப்படி ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளாக்கப்படுவார்.

அதுபோன்ற ஒரு விதிமுறை தான் மக்கா மற்றும் மதீனாவின் விஷயத்திலும் நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு நாடும் அந்நாட்டிற்குள் வர எண்ணும் எவருக்கும் சில விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டால் தான் உள்நுழைய அனுமதிக்கும் ஆணையை (Visa) வழங்குகிறது. அதேபோல,

இஸ்லாத்தின் புனித நகரங்களான மக்காவிற்கும் மதினாவிற்கும் செல்ல விரும்புபவர் "இந்த உலகை படைத்து பரிபாலிக்கும் இறைவன் ஒருவனே, முஹம்மது நபி அந்த இறைவனின் தூதர் என நான் நம்புகிறேன்" என்ற பொருள் படும் "அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ வ அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" என்ற வாசகத்தை உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு தன் உதடுகளால் அதனை மொழிய வேண்டும். இந்த ஓர் எளிய நிபந்தனையை ஏற்று அவர் அதனை கூறிவிட்டால் அங்குள்ள சட்டத்தை அவர் ஏற்றுக் கொள்கிறார். எனவே அவரும் அந்த சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவர் ஆகிவிடுவார். பின்னர் அவர் அங்குள்ள சட்டத்தை மீறினால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது இயலக்கூடிய காரியமாகி விடும்.

எப்படி தான் விதித்த விதிமுறையை ஏற்றுக் கொள்ளாதவரை ஒரு நாடு உள் நுழைய அனுமதிப்பதில்லையோ, அதே போல மேற்கண்ட நிபந்தனைக்கு ஒத்துக்கொள்ளாத முஸ்லிமல்லாதவர்களை அங்குள்ள சட்டத்திற்கு கட்டுப்பட நிர்பந்திப்பது இஸ்லாமிய அடிப்படையில் கூடாத காரியமாதலால் தான் அங்கு முஸ்லிமல்லாதவர்களுக்கு பிரவேசிக்க அனுமதி மறுக்கப்படுகிறது.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

தொகுப்பு : அ. தையுபா அஜ்மல். 

Wednesday, 2 December 2015

மழையால் பரவும் சுகாதார சீர்கேடு !! ஒரு சமூக விழிப்புணர்வு பார்வை ...

Image result for Most common rainy season diseasesதமிழ்நாட்டில் புதிது புதிதாக நோய்கள் பரவி வருவதும், அந்த நோய்களுக்கு அப்பாவி மக்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவதும் மிகுந்த கவலை அளிக்கிறது.தமிழகத்தில் மலேரியாவும், டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் மற்றும் எலிக் காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது.

வெள்ளம் வடிந்த இடங்களில் வீடுகளில் மீண்டும் புகுவதற்கு முன்கவனத்தில் கொள்ளவும்:
1. முதலில் ஆண்கள் நுழைந்து ஓரளவு சுத்தப்படுத்தி விட்டுப் பிறகு பெண்களைஅழைக்கவும். அடுத்து முதியவர்கள்; கடைசியாகக் குழந்தைகள்.

2.நுழைந்த உடனேயே மின்சாரம் இருந்தாலும் உடனடியாக விளக்குகளை / மின் விசிறியைஇயக்க வேண்டாம். மின்கசிவு இருக்கக் கூடும். கதவுகள், ஜன்னல்களைத் திறந்து முடிந்தஅளவு இயற்கையான வெளிச்சம், காற்றோட்டத்தை அனுமதியுங்கள்.


3. மின்சாரப் பொருட்களை இயக்குவதற்கு முன்பாக வீடு முழுதும் ஒரு முறை எங்காவதுமின்கசிவு இருக்கிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள். இதை ஒரு எலக்ட்ரிஷியன்கொண்டு செய்வது நல்லது. நீங்களே செய்வதாக இருந்தால் போதிய பாதுகாப்புடன்(காலணி, கையுறை, மரநாற்காலி போன்றவை) மேற்கொள்ளவும்.  
மேலும்  உங்களுக்கு மின்சாரம் பற்றிய விழிப்புணர்வு :
  • எலெக்ட்ரிக் மீட்டர் பழுது பட்டிருக்க வாய்ப்பு உண்டு. இதில் புகை எதுவும் வந்தால் உடனே மின் வாரியத்திற்கு தெரியப்படுத்துங்கள். 
  • துணிமணிகளை ஓரளவு துவைத்து காய வைத்து உபயோகத்தில் கொண்டு வரலாம். 
  • செப்டிக் டேங்க் வெள்ள நீரால் நிறைந்து விட்டிருந்தால், கால்வாசியாவது நீரை வெளியேற்ற வேண்டும். 
  • திறந்த கிணறு வெள்ள நீரால் நிரம்பி விட்டிருந்தால், கால் வாசி நீரையாவது வெளியேற்றி விட்டு பிளீச்சிங் பவுடர் போட வேண்டும்.
  • ஷார்ட் circuit அநேகமாக சுவிட்ச் போர்டுகளில் ஏற்பட வாய்ப்பு உண்டு. இவற்றில் இருந்து நீர் சுத்தமாக வடிந்து விட்டதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.எதிலாவது புகை வந்தால் உடனே off செய்து விடுங்கள்.
  • நீரில் முங்கி இருந்தால் பேன், பிரிட்ஜ், பம்ப், டெலிபோன், கம்யுட்டர், மைக்ரோவேவ் ஆகியவை 95% கெட்டு போயிருக்க வாய்ப்பு என்பது கசப்பான உண்மை. 
  • நீர் எந்த அளவுக்கு ஏறியிருந்தது என்பதை குறித்து கொண்டால், குறைந்த பட்சம் அடுத்த முறை உஷாராய் இருக்க உதவும்.

4. அருகிலுள்ள சுகாதார நிலையம் அல்லது மருத்துவ மனையில் தேவையான காய்ச்சல்/பேதி மற்றும் தற்காப்பு மாத்திரைகளை வாங்கிக் கொள்ளுங்கள்; அறிவுறுத்தல்களின்படிதடுப்பூசிகள் தேவையென்றால் தவறாது போட்டுக் கொள்ளுங்கள்.

5. இரண்டொரு நாட்களுக்கு மிக எளிமையான உணவை உட்கொள்ளுங்கள். அரைவயிற்றுக்கு மட்டுமே சாப்பிடுங்கள். ஒரு பெரிய அதிர்ச்சியிலிருந்து மீண்டுவந்திருக்கிறீர்கள். உங்கள் மனமும் உடலும் சகஜ நிலைக்குத் திரும்ப அவகாசம்அளியுங்கள்.

6. மளிகைப் பொருட்கள் கெட்டிருக்கிறதா என்று சோதித்து விட்டுப் பயன்படுத்துங்கள்.இலேசான ஐயம் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்த வேண்டாம். ஃப்ரிஜ்ஜிலேயே விட்டுவிட்டுப் போன பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். அவை நிச்சயம் கெட்டுத்தான்போயிருக்கும்.

7. முழுகிக் கிடந்த வாகனங்கள் காப்பீடு செய்யப்பட்டிருந்தால், காப்பீட்டு நிறுவனத்திற்குத்தெரியப்படுத்துங்கள். நீங்கள் இயக்கிய பிறகு பழுதுபட்டதாகத் தெரியவந்தால்,அவற்றிற்கான காப்பீடு கிடைக்காமல் போய்விடலாம்.
8.  உங்களையும், உங்கள் குடும்பத்தையும் இந்த அளவுக்குக் காப்பாற்றிய இறைவனுக்கும்,அவன் அருளால் உங்களுக்கு உதவிகள் புரிந்த மனிதர்களுக்கும் நன்றி செலுத்துங்கள்.இந்தப் பேரிடரில் உங்களைக் கைவிடாதிருந்த துணிவும், நம்பிக்கையும் வாழ்நாள்முழுதும் உங்களுக்கு இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். எந்தவொருஇடரையும் சமாளித்து வெல்லும் அறிவும், திறனும் உங்களுக்கு உண்டு என்று அறிந்துஅமைதி கொள்ளுங்கள்.

மலேரியா மற்றும் எலிக் காய்ச்சல் !!
தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மோசமடைந்திருப்பது மட்டுமல்லாமல், பல்வேறு கூடுதல் பிரச்சினைகளையும் கொண்டு வந்து விட்டுள்ளது. பல சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் ஏற்கனவே பெய்த மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. தேங்கிக் கிடக்கும் நீர், சாலைகளில் பெருகி வழியும் குப்பைகள், பெய்து வரும் மழை காரணமாக தமிழகத்தில் மலேரியாவும், எலிக் காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இவை சென்னையில் அதிகரித்து வருகின்றன. அதேபோல புறநகர்ப் பகுதிகளில் காலி மனைகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீர் உள்ளே போக பல நாட்களாகிறது. இதன் காரணமாக கொசுக்கள் பெருகியுள்ளன. இதுதவிர கழிவு நீரும் பல இடங்களில் சாலைகளிலேயே ஓடுகின்றன. குப்பைகளும் பெருகிப் போய்க் கிடக்கின்றன. எல்லாம் சேர்ந்து இப்போது மலேரியா, எலிக் காய்ச்சல் உள்ளிட்டவற்றைக் கொண்டு வந்துள்ளன. இதுகுறித்து அரசு பொது மருத்துவமனை உள் சிகிச்சை துறை இயக்குநர் பொறுப்பு வகிக்கும் டாக்டர் ராஜேந்திரன் கூறுகையில், கடந்த 2 வாரங்களில் மலேரியா மற்றும் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இங்கு வருவோரின் எண்ணிக்கை பெருகியுள்ளது. சாதாரண வைரஸ் காய்ச்சல் தவிர இதுபோன்ற சீசனல் காய்ச்சல்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. நோய்த் தாக்குதல் சாதாரணமாக இருப்பவர்களுக்கு இளைப்பு, தொடர் இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்டவை ஏற்படுகின்றன. அதீதமாக தாக்கப்படுவோருக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. தண்ணீர் மாசுதான் இதற்கு முக்கியக்காரணம். தாழ்வான பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரால் மலேரியா, எலிக்காய்ச்சல் போன்றவை பரவுகின்றன. தற்போது பெய்து வரும் மழை நின்றதும் மலேரியா பெருமளவில் பரவும் என்று எதிர்பார்க்கிறோம். அதேபோல எலிக்காய்ச்சலும் பெருகும் அபாயம் உள்ளது என்றார். இதேபோல வட சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் வயிற்றுப் போக்கு பரவி வருகிறது. சென்னை தவிர தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழையால் பரவும் நோய்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழகத்தில் மழை காரணமாக பரவும் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாம். அதேசமயம், கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னையில் மட்டும் 5000 பேருக்கு மழையால் ஏற்படும் நோய்கள் தாக்கியுள்ளன.உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான டெங்கு காய்ச்சல் ஆண்டு தோறும் தமிழகத்தில் பரவுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில மாதங்களில் மட்டும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளும், பெரியவர்களும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். டெங்கு காய்ச்சலுக்கு சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய நிலையில் சென்னை மருத்துவமனைகளில் மட்டும் 1775 பேர் டெங்கு காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனாலும் இந்த உண்மையை ஒப்புக்கொண்டு டெங்கு நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு மறுக்கிறது.


டெங்கு  காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சல்..

டெங்கு காய்ச்சலைத் தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் நோயும் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 10 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். இவர்களில் 5 பேர் திருச்சி மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர். இந்த நோயின் தீவிரத்தை உணர முடியும். ஆனால், பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சென்னையின் மக்கள் தொகை பெருக் கத்துக்கு ஏற்ப அடிப்படை உள்கட்ட மைப்பு வசதிகள் பெருக்கப்படவில்லை. 1970-களில் சென்னையில் சிறிய மற்றும் பெரிய ஏரிகள், குளங்கள் என 3 ஆயிரத் துக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருந்துள்ளன. ஆனால், இப்போது 40 ஏரிகள் மட்டுமே உள்ளன. மீதமுள்ள நீர்நிலைகள் அனைத்தும் கான்கிரீட் காடுகளாக மாற்றப்பட்டிருக்கின்றன.


மழைநீர் வடியத் தொடங்கியுள்ள நிலையில் காய்ச்சல், காலரா, டைஃபாய்டு உள்ளிட்ட நோய்கள் வேக மாக பரவத் தொடங்கியுள்ளன. அவற்றை கட்டுப்படுத்த அனைத்து பகுதி களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் மற்றும் மழை சார்ந்த தொற்று நோய்கள் வேகமாக பரவி வரும் நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளாதது நல்ல அறிகுறி அல்ல. மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் போதிலும், அவை போதுமானது அல்ல. குறிப்பாக பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வரும் நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான மருத்துவம் அளிக்கும் வசதிகளை அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்படுத்துவதுடன், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 


ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.