Wednesday, 8 February 2017

Scaffold Supervisor Test Question & Answers..


1.      Up to what height only supervisor will sign
a) 0----6m                                      b) 6----12.2 m
c) Any height                                d) Up to 38 m
2.      For an internal ladder, What is the minimum occupying size
a) 27’’ x 30’’                                 b) 27’’ x 36’’
c) 24’’ x 30’’                                 d) 24’’ x 36’’
3.      How many lifts can be installed above raker tie-in point
a) One                                           b) Three
c) Four                                           d) Two
4.      What is the position of tie-in point for a scaffold 4’ x 8’
a) 20’                                             b) 15’
c) 16’                                             d) 12’
5.      What is the size of scaffold wheel for a medium duty scaffold
a) 5’’                                              b) 8’’
c) 7’’                                              d) 12’’
6.      What a scaffold wheel must have
a) A threaded portion                   b) Caster lock/Wheel lock
c) Base plate                                  d) Connecting pin
7.      For a system scaffold, what is Aramco requirement to follow
a) Manufacturer manual                b) Aramco standard
c) L. P. instructions                       d) Scaffold drawings
8.      For a hanger tube in under-hung scaffold, What type of coupler is used
a) Double                                      b) Swivel
c) Sleeve                                        d) Putlog
9.      When extending a brace, What can not be used
a) Sleeve clamp                             b) Double clamp
c) Swivel clamp                             d) Joint pin
10.  What is the load rating for a medium duty scaffold
a) 120 Kg                                      b) < 240 Kg
c) 240 Kg                                      d) 50 Kg
11.  How a scaffold classified used for abrasive blasting
a) Light duty                                 b) Special duty
c) Medium duty                            d) Heavy duty
12.  On a temporary ramp, Aramco requires which ratio
a) 1-V   3-H                                   b) 1-V   2-H
c) 1-V   4-H                                   d) 1-V   1-H
13.  What is the minimum clear head room on a scaffold platform
a) 2 m                                            b) 1.5 m
c) 1.8 m                                         d) 2.5 m
14.  What is the minimum clearance between a toe-board and the surface of working platform
a) 1’’ (25 mm)                               b) ½’’ (13 mm)
c) ¼’’ (6 mm)                                d) ¾’’ (20 mm)

15.  The top rail height can not be more than
a) 0.95 m (38’’)                             b) 1.15 m (45’’)
c) 1.20 m (48’’)                             d) 1.10 m (43’’)
16.  Minimum diameter of life line rope is
a) 1’’ (25 mm)                               b) ½’’ (13 mm)
c) 3/8’’ (10 mm)                            d) ¼’’ (6 mm)
17.  What is the minimum number of boards for a bracket scaffold
a) Two                                           b) One
c) Four                                           d) Three
18.  Who will determine the integrity of a tank wall before welding a bracket strap
a) L. P. D.                                     b) Proponent Engineering Unit
c) W. P. Issuer                               d) Aramco inspector
19.  What is the minimum diameter of rope used as a guard rail member in a bracket scaffold system
a) ¾’’ (20 mm)                              b) 3/8’’ (10 mm)
c) ½’’ (13 mm)                              d) ¼’’ (6 mm)
20.  What is the nominal size of sill board
a) 2’’ x 8’’ (50 mm x 200 mm)      b) 1-1/2’’ x 9’’ (38 mm x 225 mm)
c) 2’’ x 10’’ (50 mm x 250 mm)    d) 1-1/2’’ x 10’’ (38 mm x 250 mm)
21.  What is the maximum length of board used in bracket scaffold with 2’’ thickness & 12’’ width
a) 10’ 6’’                                       b) 8’ 6’’
c) 9’ 6’’                                         d) 6’ 6’’
22.  What is the length of bracket strap
a) 8’’                                              b) 10’’
c) 7’’                                              d) 9’’
23.  What is the height of guard rail on a bracket scaffold
a) 1.15 m (45’’)                             b) 0.90 m (36’’)
c) 0.95 m (38’’)                             d) 1.20 m (48’’)
24.  What is the nominal size of debris net
a) 13 mm (1/2’’)                            b) 20 mm (3/4’’)
c) 10 mm (3/8’’)                            d) 25 mm (1’’)
25.  On a climbing side of a ladder, What is the minimum clear distance from a structure
a) 36’’ (900 mm)                           b) 30’’ (760 mm)
c) 20’’ (500 mm)                           d) 24’’ (600 mm)
26.  What is the maximum height of fabricated tubular frame scaffold
a) 6 m (20’)                                   b) 5 m (16’)
c) 8 m (25’)                                   d) 10 m (30’)

27.  How many maximum platforms in a medium duty scaffold, when there are 3-
Planked level
a) One                                           b) Two
c) Three                                         d) Four
28.  What should be the clear distance between a trapeze tube and a runner
a) 2’ (600 mm)                              b) 1.5’ (450 mm)
c) 1’ (300 mm)                              d) 3’ (900 mm)
29.  What is the maximum length of a trapeze tube
a) 2’ (600 mm)                              b) 1.5’ (450 mm)
c) 3’ (900 mm)                              d) 2.5’ (760 mm)
30.  Which part of the scaffold, You will remove first while dismantling any scaffold
a) Brace                                         b) Raker
c) Tie                                             d) Guard rail
31.  What is the distance between a post and brace tie-in point
a) 12’’ (300 mm)                           b) 4’’ (100 mm)
c) 8’’ (200 mm)                             d) 6’’ (150 mm)
32.  Above what height a scaffold plan will be required
a) 12.2 m (40’)                              b) 6 m (20/)
c) 38 m (125’)                               d) 8 m (26’)
33.  While abetting of joints is done in a tube and coupler scaffold, What you will do, While erecting the scaffold
a) Not to install in the same lift    b) Fix all the joints near to the posts
c) To install at middle third          d) to install in the same span


           Thanks to Mr.Karthikeyan

Saturday, 4 February 2017

உலகில் ஆக்கிரமிக்கப்பட முடியாத பாதுகாப்பு நாடுகள் பற்றிய ஒரு பார்வை !!

Image result for நாடுகள்ஒரு நாடு ஆக்கிரமிக்க இலகுவானதா இல்லையா என்பது அதன் படைவலுவில் மட்டும் தங்கியில்லை. அதன் பூகோள அமைப்பு, நிலப்பரப்பு, காலநிலை, அதன் நட்பு நாடுகள் போன்றவையும் முக்கியமானதாகும். நேட்டோவில் புதிதாக இணைந்துள்ள லித்துவேனியா, லத்வியா, எஸ்தோனியா ஆகிய மூன்று நாடுகளையும் இரசியாவால் அறுபது மணித்தியாலங்களுக்குள் ஆக்கிரமிக்க முடியும். ஆனால் மற்ற நேட்டோ நாடுகள் அந்த ஆக்கிரமிப்பின் பின்னர் இரசியாவுக்கு எதிராக எடுக்கக் கூடிய அரசுறவியல் மற்றும் பொருளாதார் நடவடிக்கைகள் இரசியாவைத் தடுத்துள்ளன.    
சுவிற்சலாந்து – பல வழிகளில் பாதுகாப்பு
சுவிற்சலாந்து தனது இயற்கை அமைப்புடன் பல செயற்கைக் கட்டமைப்புக்களைச் செய்தது மட்டுமல்லாமல் நெடுங்காலமாக நடுநிலை நாடாக இருந்து கொண்டு ஆக்கிரமிக்கப்பட முடியாத நிலையில் இருக்கின்றது. பல மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ள சுவிஸ் அந்த மலைகளுக்குள் பெரும் படையணி தங்கி இருந்து தாக்குதல் செய்யக் கூடிய குகைகளை அமைத்துள்ளது. அந்த மலைகளின் நுழைவாசல்கள் ஆக்கிரமிப்பாளர்கள் வரும் போது வெடித்துச் சிதறக் கூடிய இரகசிய ஏற்பாடுகளையும் அது செய்துள்ளது. பாலங்களும் பெரும் தெருக்களும் வெடித்துச் சிதறக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்படி மூவாயிரம் இடங்கள் வெடித்துச் சிதறக்குடியவையாக உள்ளன என சுவிஸ் அரசு சொன்னாலும் உண்மையில் ஆறாயிரம் இடங்கள் வெடித்துச் சிதறக் கூடியவை என நம்பப்படுகின்றது. உலகிலேயே முதலில் எல்லோருக்கும் படைத்துறைப் பயிற்ச்சி வழங்கி அவர்கள் தேவை ஏற்படும் போது கட்டாயமாக படைச் சேவைக்கு அழைக்கும் சட்டம் சுவிஸில் உண்டு. இதனால் ஒன்றரை இலட்சம் நிரந்தரப் படையினரைக் கொண்ட சுவிஸில் தேவை ஏற்படும் போது நாற்பது இலட்சம் படையினர் போர் முனையில் செயற்படுவர். சுவிஸ் சிறந்த முறையில் ஆட்சி செய்யப்படும் நாடாகும். உலகிலேயே அதிகாரப் பரவலாக்கம் உச்ச நிலையில் உள்ள நாடு சுவிஸ். அதன் நடுநிலைத் தன்மையால் பல உலக அமைப்புக்கள் சுவிஸ்ஸில் நிலை கொண்டுள்ளன. அது சுவிஸ் ஒரு சமாதான நாடாக இருக்க மேலும் உதவுகின்றது.
ஐஸ்லாந்து
மலைகள் எரிமலைக்குழம்பு, பனிப்பாறைகள் ஆகியவற்றால் சூழப்பட்ட ஐஸ்லாந்தும் ஆக்கிரமிக்கப்பட முடியாத ஒரு நாடாகும். அத்துடன் அங்கு பெரிய துறைமுகங்கள் ஏதும் இல்லை. அதனால் எதிரி நாட்டுப் படைகள் போய் தரையிறங்க முடியாது. உலகிலேயே அமைதியான நாடாகாக் கருதப்படும் ஐஸ்லாந்து தனது கரையோரப் பகுதியை கடுமையான கண்காணிப்புடனும் பாதுகாப்புடனும் பேணிவருகின்றது.
நியூசிலாந்து
நியூசிலாந்தின் பூகோள அமைப்பு அதன் பாதுகாப்புக்கு உகந்ததாக இருக்கின்றது. அதன் அண்மை நாடான ஒஸ்ரேலியாவே ஆயிரம் மைல் தொலைவில் இருக்கின்றது. நியூசிலாந்தை ஆக்கிரமிக்கும் படைகள் கடினமான மலைகளைக் கடக்க வேண்டும். அந்த மலைகளிலும் காடுகளிலும் இருந்து நியூசிலாந்துப் படையினர் கரந்தடித் தாக்குதலை மேற்கொண்டு எதிரிகளை அழித்தொழிக்கலாம்.
ஒஸ்ரேலியா
பெரு நிலப்பரப்பும் நாற்புறமும் கடலால் சூழப்பட்ட நிலையும் ஒஸ்ரேலியாவின் பாதுகாப்பு அரண்களாகும். இவற்றால் இரண்டாம் உலகப் போரின் போது ஒஸ்ரேலியாவை ஜப்பான் ஆக்கிரமிக்காமல் விட்டது. தற்போது சீனாவால் உருவாகியுள்ள அச்சுறுத்தலைச் சமாளிக்க ஒஸ்ரேலியா அமெரிக்காவுடன் படைத்துறை ஒத்துழைப்பைப் பேணுவதுடன் அமெரிக்கப் படைகளையும் அங்கு நிலை கொள்ள அனுமதித்துள்ளது. ஒஸ்ரேலியாவிடமும் வலுமிக்க கடற்படை உண்டு. பல பன்னாட்டு படை நடவடிக்கைகளில் நேட்டோப் படையினருடன் இணைந்து செயற்பட்டு தனது படையினரின் போர் முனை அனுபவத்தை பேணிவருகின்றது.
ஜப்பான் – ஆக்கிரமிப்பதே அதன் வரலாறு
மேற்கு நாடுகளைப் போரில் கலங்கடித்த பெருமை ஜப்பானுக்கு உண்டு. இரசியாவைப் போரில் வென்ற பெருமை ஜப்பானுக்கு உண்டு. தென் கொரியா சீனா ஆகிய நாடுகளை மட்டுமல்ல இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானியப் படைகளை மலேயா, பர்மா போன்ற பல தூர கிழக்கு நாடுகளில் இருந்து விரட்டி அடித்தது ஜப்பான். உலகிலேயே அணுக் குண்டால் தாக்கப்பட்ட நாடு ஒரே நாடு ஜப்பான். அதன் போராடும் திறனை வேறு வழிகளால் அழிக்க முடியாததாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்கா ஜப்பானின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கி அது ஒரு தாக்குதல் படையை வைத்திருக்க முடியாது என அதன் அரசியலமைப்பு யாப்பில் இருந்தாலும் பாதுகாப்புக்கு மட்டுமான படை என்னும் பெயரில் உலகில் படைவலுவில் முன்னணி நாடாக இருக்கும் ஜப்பான் தீவை ஆக்கிரமிக்க முடியாது. அதன் விமானப் படை உலகின் ஐந்தாவது பெரியதாக இருக்கின்றது.
ஈரான் – தீவிரவாத அமைப்புக்கள் பெரும் துணை
மதவாதமும் மக்களாட்சியும் இணைந்த அரசக் கட்டமைப்பு தேசப்பற்றும் கல்வியறிவும் மிக்க மக்கள் அர்பணிப்புடன் போர் புரியக் கூடிய படையினர் ஆகியவை ஈரானின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. ஈராக்கில் ஆக்கிரமிப்புக் எதிராக நீண்ட நாள் சளைக்காமல் போராடி வெற்றி கண்டவர்கள் ஈரானியர். மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தாடைக்கு எதிராக நின்று பிடித்தவர்கள் ஈரானியர். மத்திய கிழக்கில் பெரிய படை ஈரானினுடையது. பல மலைத் தொடர்களைக் கொண்ட ஈரானின் பூகோள அமைப்பும் அதன் பாதுகாப்பிற்கு வலுவூட்டுகின்றது. பல இஸ்லாமிய விடுதலை அமைப்புக்களுக்கு உதவி செய்வதால் அந்த விடுதலை அமைப்புக்களின் ஆதரவு ஈரானின் வலிமையாகின்றது. ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் நாடுகளுக்கு எதிராக பல இஸ்லாமிய விடுதலை அமைப்புக்கள் தீவிரவாதத் தாக்குதல்களை தொடுக்கும் என்ற அச்சம் ஐக்கிய அமெரிக்காவையே கரிசனை கொள்ள வைத்துள்ளது. ஈரான் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தினால் நாம் அமெரிக்காவிற்கு எதிராகத் தாக்குதல் நடத்துவோம் என லெபனானில் இருந்து செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு 2015-ம் ஆண்டு தெரிவித்திருந்தது.
கனடா
உலகப் பெரு வல்லரசான அமெரிக்காவை அயல் நாடாகவும் நெருங்கிய நட்பு நாடாகவும் கொண்டிருக்கும் கனடா வடக்கே வடதுருவத்தையும் தெற்கே ஐக்கிய அமெரிக்காவையும் மற்ற இரு புறங்களிலும் பசுபிக் மாக் கடலையும் அத்லாந்திக் மாக்கடலையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. உலகிலேயே இரண்டாவது பெரிய நிலப்பரப்பையும் நேட்டோ உறுப்புரிமையையும் கொண்ட கனடாவை ஆக்கிமிக்க முடியாது.
ஐக்கிய இராச்சியம்
உலகப் பெரு வல்லரசாக இருந்த ஐக்கிய இராச்சியம் இன்றும் பொருளாதாரத்திலும் படைவலுவிலும் உலகில் முன்னணி நாடாக இருக்கின்றது. நாற்புறமும் கடலால் சூழப்பட்ட ஐக்கிய இராச்சியம் சிறந்த படைத்துறையைக் கொண்ட ஒரு வல்லரசாகும். இதனால் அது இன்றும் ஒரு ஆக்கிரமிக்கப்பட முடியாதநாடாகும். உலகின் முதற்தரப் பயிற்ச்சி மட்டுமல்ல அனுபவம் மிக்க படையணி அர்ப்பணிப்புடன் போர் புரியக் கூடியது. உலகிலேயே சிறந்த சிறப்புப் படையணியைக் கொண்டது ஐக்கிய இராச்சியம். கடற்போக்குவத்திலும் கடற்போரிலும் பல நூற்றாண்டு அனுபவத்தைக் கொண்டது.
இரசியா
உலகிலேயே பெரிய அளவு நிலப்பரப்பைக் கொண்ட இரசியாவை முழுமையாக ஆக்கிரமிப்பது முடியாத ஒன்று என்பது சரித்திரத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல அதன் கால நிலையும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏதுவானது அல்ல என்பதையும் நெப்போலியனும் ஹிட்லரும் செய்த ஆக்கிரமிப்பு சுட்டி நிற்கின்றது. இரசியாவின் முழு வட எல்லை பனிப்பாறைகளாலான வடதுருவமாகும். தென் புறமுள்ள பல நாடுகள் வலுவற்ற சிறிய நாடுகளாகும். இரசியாவின் பெரு நிலப்பரப்பில் அநேக மலைகளும் ஆறுகளும் உள்ளன. அப்படிப்பட்ட பெரு நிலப்பரப்பை ஆக்கிரமித்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய படை வலிமை எந்த நாட்டுக்கும் இல்லை. படைத்துறை வலு என்று பார்க்கும் போதும் இரசியா உலகில் முன்னணியில் நிற்கின்றது. உலகிலேயே அதிக எண்ணிக்கையான அணுக்குண்டுகளை வைத்திருக்கும் நாடு இரசியாவாகும்.
ஐக்கிய அமெரிக்கா
ஐக்கிய அமெரிக்காவும் சாதகமான பூகோள அமைப்பைக் கொண்டது. மொத்த உலகப் படைத்துறைச் செலவில் மூன்றில் ஒரு பகுதி அமெரிக்காவினுடையது. அதன் படைத்துறைத் தொழில்நுட்பம் தன்னிகரில்லாதது. அதன் படைகள் உலகின் எங்காவது ஒரு மூலையில் படைநடவடிக்கை செய்து கொண்டே இருக்கின்றன. உலகில் நடக்கும் பத்து படை மோதல்களில் ஒன்பதில் அமெரிக்கா சம்பந்தப்பட்டிருக்கும். உலகெங்கும் பல நூற்றுக் கணக்கான படைத்தளங்களை வைத்திருக்கும் அமெரிக்கா தாக்குதலே சிறந்த பாதுகாப்பு என்னும் கொள்கையைக் கொண்டது. உலகிலேயே அதிக அளவு துப்பாக்கி பாவனையில் உள்ள நாடு அமெரிக்காவாகும். அமெரிக்காவில் சராசரியாக நூற பேருக்கு 112 துப்பாக்கிகள் என்ற அளவில் துப்பாக்கிப் பாவனை அங்கு உண்டு. இரசியாவில் நூறு பேருக்கு எட்டு என்ற அளவிலேயே துப்பாக்கிப் பாவனையில் உண்டு. அமெரிக்காவிற்கு அடுத்ததாக அதிக அளவு துப்பாக்கி பாவனையில் உள்ள யேமனில் நூற்றுக்கு 54 என்ற அளவிலேயே துப்பாக்கி பாவனையில் உண்டு. இதனால் அமெரிக்காவை யாராவது ஆக்கிரமிக்க முயன்றால் ஒவ்வொரு குடிமகனும் துப்பாக்கியுடன் களத்தில் இறங்கலாம்.
பிரான்ஸ்????
பிரான்ஸ் ஒரு வல்லரசாக இருந்தாலும் அதை ஆக்கிரமிக்கப்பட முடியாத நாடு என எந்த ஒரு படைத்துறை நிபுணர்களும் அதை வகைப்படுத்தவில்லை. படைத்துறைத் தொழில்நுட்பத்தில் பிரான்ஸ் முன்னணியில் இருந்தாலும் அதன் படைகட்டமைப்பும் படை முகாமைத்துவமும் இரண்டாம் போரின் போது சரியானதாக இருக்கவில்லை.
இந்தியாவையும், சீனாவையும் ஆக்கிரமிக்கலாம்!!!!
இந்தியாவும் சீனாவும் ஆக்கிரமிக்கப் பட முடியாத நாடுகளாக வகைப்படுத்தப்படவில்லை. இந்தியா மொகாலயர். பிரித்தானியா சீனா போன்றவற்றால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடு. கார்கில் போரில் வெல்ல இந்தியாவிற்கு இஸ்ரேலின் உதவி தேவைப்பட்டது. இந்தியாவின் எல்லைகளில் சீனப்படைகள் ஊடுருவி படை நிலைகளை நிறுவுவது பல தடவைகள் நடந்துள்ளன. இந்தியாவில் பெரும் உள்நாட்டுக் குழப்பத்தை அல்லது பிரிவினைவாத அமைப்புக்களைத் தூண்டி இந்தியாவை சீனாவும் பாக்கிஸ்த்தானும் இணைந்து ஆக்கிரமிக்க முடியும். இரசியா விலகி இருந்தால் அல்லது நடு நிலை வகித்தால் சீனாவை இந்தியா ஜப்பான் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ஆக்கிரமிக்க முடியும். சீனாவிடம் எண்ணிக்கை அடிப்படையில் உலகிலேயே பெரிய படை இருந்தாலும் தொழில்நுட்ப ரீதியிலும் போர் முனை அனுபவ ரீதியிலும் அது பின் தங்கியுள்ளது. ஒரு சீனப் படை வீரனிடம் இருக்கும் கருவிகளின் பெறுமதி 1500 அமெரிக்க டொலர்களாகவும் ஓர் அமெரிக்கப் படைவீரனிடம் இருக்கும் கருவிகளின் பெறுமதி 17,000 டொலர்களுக்கு அதிகமானதாகவும் இருப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப வித்தியாசத்தைக் காட்டுகின்றது. 2030-ம் ஆண்டளவில் சீனாவும் இந்தியாவும் ஆக்கிரமிக்கப்பட முடியாத நாடுகளாக உருவெடுக்கும்.
எதிர் காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி கொண்டுவரவிருக்கும் செயற்கை விவேகம் படைத்துறையில் கணனிகளால் இயக்கப்படும் இயந்திர மனிதர்களை போர் முனையில் ஈடுபடுத்தும். அந்த தொழில்நுட்பம் பெருவளர்ச்சியடைய முன்னர் மக்கள் தொகையும் அதன் கட்டமைப்பும் போர் புரியும் திறனில் கணிசமான பங்கை வகிக்கும். அதிக இளையோரைக் கொண்ட இந்தியா அந்த வகையில் உலக அரங்கில் மற்ற நாடுகள் பார்த்து கரிசனை கொள்ளக் கூடிய நிலையை இன்னும் பத்து ஆண்டுகளில் அடையும்!!
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Tuesday, 31 January 2017

Saudi Arabia's Vision 2030 !!


Image result for saudi vision 2020
Ambitious plans announced by Saudi Arabia last month to diversify its economy could lead to a credit ratings upgrade in the future, according to Moody’s Investors Service.



In its latest report, the rating agency highlighted Deputy Crown Prince Mohammed bin Salman’s Vision 2030 reforms that include tax rises, an efficiency drive and plans to give a bigger role to the private sector.

Saudi Arabia's Vision 2030 represents a serious attempt to address a future in which oil plays less of a role in the kingdom's economy but implementing the plan is likely to bring about unpredictable political change, a think tank said.


A report published by the UK-based Chatham House largely attributed the ambitious economic plan to the rise of Crown Prince Mohammed bin Salman.
The need to diversify and develop the kingdom's economy has put serious pressure on the highest levels of governments to make the long-overdue changes needed for Saudi Arabia to progress..
Senior research fellow at Chatham House and author of the report, Jane Kinninmont, said the blueprint for the future economy is unlikely to become reality without some unintended political reactions.
“The authorities may hope that the political system can remain largely unchanged, at least in terms of the dominant role of the monarchy,” she said. “But their economic reform plans imply major changes in the economic basis of the relationship with citizens, and potentially also to the traditional partnership between ruling family and clerics.”
As the plan looks to promote a more active citizenry, it will also encourage more independent thinking and a more entrepreneurial spirit - both of which will have to overcome the obstacle of religious conservativism.
But there is no doubt that Vision 2030 is focused on moulding a country that is less reliant on oil, a fact that both the rulers and the citizens of Saudi Arabia generally accept is necessary.
A main concern is that as the transition pushes for rapid change, the Saudi leadership will continue to support a private sector that will nonetheless still be at least semi-dependent on the good will of the government.
“This transition will be a difficult one, and will create winners and losers. In particular, a generation of less well-educated youth will find it extremely difficult to make a decent living in the private sector and are thus likely to need social and economic support,” the report said.
The ambitious plan, said the report, is likely to create divisions not only in economic standards but in social and political ones. Less-privileged residents working in private-sector industries in Saudi Arabia are likely to fall behind.
Economic reformists both within and outside Saudi Arabia hope that developing the economy will promote evolution in governance and institutions, or at least in the relationship between the authorities and the populace.
The Vision 2030 plan wants to implement changes throughout Saudi Arabia that will drive the young to seek careers less dependent on government subsidies and more based on private sector entrepreneurship.
Chatham House also said Vision 2030 pays too little attention to social change as Saudis strive to improve their quality of life. Making the country more “fun” would be a real gain for the leadership.
The think tank report also referred to Dubai’s development and modernisation plans.
“While Saudi Arabia is never going to be Dubai, the UAE model of social liberalization without political liberalization is one that influences the debate across the region,” Ms Kinninmont said..
Whatever the potential effect on quality of life, some in Saudi Arabia will regard any provision of entertainment as a step too far towards Westernisation and an expensive indulgence only available to the privileged few. Instead, the economic transformation of Vision 2030 could be used as an opportunity to create a more inclusive political system in Saudi Arabia, which would in turn lessen the need to appease its citizens with government handouts and bonuses.
However, the difficulties emerging from the gradual empowerment of parliaments in Kuwait and Bahrain have made engaging in politics less attractive.
Additionally, the calls for change inspired by the Arab uprisings of 2011 highlighted a need for greater government accountability and a more earnest fight against corruption.
“This regional climate has given the Saudi leadership a window of opportunity to push through painful austerity measures, which are not popular but which have not provoked any corresponding populist mobilization,” the report said.It also pointed out that “promises of transparency laid out in Vision 2030 have not been matched by a step change in press freedom or freedom of information.”
Although Vision 2030 lays out an economic path, it is hard to image the political status quo remaining unchanged until 2030, Ms Kinninmont said. Though the plan is ambitious, it would have a better chance of success if implemented over a longer period than 13 years.

Tuesday, 24 January 2017

போராட்டத்தில் பின்னால் இருப்பது அரசியல்வாதிகளா? கட்சிகளா? சமூக விரோத சக்திகளா?

Image result for காவல்துறை உங்கள் நண்பன்காவல் நிலையத்தை எரித்தது போராட்டக்காரார்கள் அல்ல என்று போலீஸே சொல்கிறது என்றால், இதன் பின்னால் இருப்பது அரசியல்வாதிகளா? கட்சிகளா? சமூக விரோத சக்திகளா?



தமிழக காவல்துறை என்றும் மாறாது.எட்டு நாட்கள் நம் மாணவர்கள் காவலர்களை தனக்குள் ஒருவராக நினத்து உணவு, தண்ணீர் அனைத்தும் கொடுத்து வந்தார்கள். அவர்களை இன்று விரோதிகளை போல காவல்துறை அடித்து நொருக்குகிரது.தமிழக காவல்துறையில் நல்லவர்கலும் இல்லை, நன்றி உள்ளவர்களும் இல்லை.கேட்டால் எங்கள் கடமை இது என்பார்கள். அதே கர்நாடக கலவரம் நடந்த போது அந்த மாநில காவல்துறை அந்த மாநில மக்கள் மீது எந்த வன்முறையையும் பிரயோகிக்கவில்லை.அப்போதும் நம் மக்கள் மீது தான் நம் காவல் துறை நடவடிக்கைகள் எடுத்து கைது செய்தது. 50 ஆண்டுகள் முன்பு படிக்காத பாமரர்களைஎப்படி காவல்துறை கையாண்டதோ அப்படியே தான் இன்று படித்த அறிவு சார் சமூகத்தையும் காவல்துறை கையாளுகிறது.தமிழக காவல்துறையில் காவலர் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அறிவுசார் சமூகத்தில் நாமும் வாழ்கிரோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். நிறைய காவல்துறை அதிகாரிகள் மேடைகளில் சிறப்பாக மக்களுக்கு நல்ல உபதேசம் வழங்குகிறார்கள். அதனை முதலில் அவர்களும் அவர்கள் துறையில் உள்ளவர்களும் கடைபிடிக்க வேண்டும்.மொத்தத்தில் நம் சமூகம் கற்றுள்ள,கடைபிடிக்கிற நாகரீகத்தை இன்னும் நம் காவல்துறை கற்றுக்கொள்ளவில்லை என்பது வருந்த தக்கது.Image result for வன்முறையில் ஈடுபடக் கூடாது

தமிழக காவல்துறையின் மிக கீழ்த்தரமான செயலை இதன் மூலம் அரியாலாம்


வீடுகளை உடைப்பது, வாகனங்களை எரிப்பது, அப்பாவி பொது மக்களை அடிப்பது.. இதையெல்லாம் யார் செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்? ரவுடிகள் மற்றும் தீவிரவாதிகள் என்று நீங்கள் சொன்னால் உடனடியாக இந்த காணொளியை பாருங்கள். சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள நடுக்குப்பம் பகுதியில் இந்த கொடுமைகள் அனைத்தையும் செய்தது சென்னை காவல்துறை. இனி பொதுமக்களுக்கு இந்த காவல்துறை மீது எவ்வாறு நம்பிக்கை வரும்?


1)கர்பினி பெண்ணின் சிசுவை கொலை செய்தது.

2)ஏழைகளின் ஆட்டோவை தீ வைத்து கொளுத்தியது.

3)போராட்ட கலத்தில் பெண்ணின் ஆடையை கிழித்து அரை நிவாரணம் படுத்தியது.

4)மாணவர்கள் மீது கொலைவெரி தாக்குதல் நடத்தியது.

5)மதத்தின் பெயரால் அப்பாவி வாலிபரை எட்டுபேர் சேர்ந்து தாக்கியது.

6)சம்மந்தமே இல்லாம தெருவுல நின்ன பைக்குகலை நொருக்கியது.

7)ஏழைகளின் குடிசையில் தீ வைத்தது அதுவும் பெண் போலீஸ்.


நம்புங்க காவல்துறை உங்கள் நண்பன்.
இதையென்னம் ஏன் மனித உரிமை ஆணையம் கண்டுக்கொல்லாம் இருக்கிறது என்று தெரியவில்லை.

ஆனால் ஒன்றுமாட்டு புலப்படுகிறது நம் மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்த தமிழக அரசின்

செயலாகவே இதை நம் கருதலாம். யார் இவர்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது. ஆனால் ஒன்று மட்டும் நங்கள் கூறுவது, இந்த மீதம் உள்ள 4 ஆண்டோடு அதிமுக வின் அராஜகம் மொத்தமாக ஒழிந்து விடும் என்பது மட்டும் தீர்க்கமாக தெரிகிறது .


# நீதிபதிகளின் கண்கள் மூடப்பட்டு உள்ளதா?...

# மனித உரிமை ஆணையம் இந்த செயலுக்கு என்ன செய்யபோகிறது?

# சட்டம் ஒரு இருட்டறை என்பார்கள் அதில் வாதாடும் வழக்குறைஞ்சர்களே வெளிச்சம் என்பார்கள் அவர்களும் இதில் மவுனம் காக்க போகிறார்களா?... 
ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.




Sunday, 22 January 2017

காந்தீய வழியில் போராடி வெற்றி பெற்று சாதனை !!


25,00000 இளைஞர்கள் 500 இடங்களில் அமைதியாக, காந்தீய வழியில் போராடி வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். உலகமே உற்று நோக்கி வியந்து நிற்கும் வகையில் வரலாறு படைத்திருக்கிறார்கள். இப்படியொரு தீப்பொறி அவர்களுக்குள் கனன்று கொண்டிருப்பதே வெளியில் தெரியாமல் பொத்தி வைத்திருந்தவர்கள் அதன் எல்லை மீறி இன்று பெருந்தீயாக கொதித்தெழுந்துள்ளார்கள். கங்கு கூட குளிர்த் தென்றலாய் அமைதி காக்கும் என்பதையும் உணர்த்தி, சரித்திரம் படைத்துள்ளார்கள். என் மனச்சாட்சியே எனக்குத் தலைவன், முகமூடியணிந்த எந்த தலைவனும் எங்களுக்குத் தேவையில்லை என்று ஒற்றுமையுடன் கூடி நின்று நினைத்ததை நடத்தி சாதனைப்படைத்து விட்டார்கள். புல்லுறுவிகளாக உள் நுழைய முற்பட்ட சாதி அரசியல்வாதிகளையும், அதனுள் விட்டிலாய் வீழ இருந்தவரையும் அடையாளம் கண்டு நாசூக்காக ஓரங்கட்டிய சடங்குகளும் அழகாக நடந்துள்ளன. வெகு இயல்பாக இளைஞரோடு இளைஞராக கலக்க இருந்த புல்லுருவிகளையும் நிதானமாக திறமையாக வெளியேற்றிய சாதனைகளையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இலக்கு நேர்மையானதாக, தன்னலமற்றதாக, நாட்டின் நலனை மட்டுமே கருத்தில்கொண்டதாக இருக்கும்பட்சத்தில் வெற்றி நிச்சயம் என்பதை மிக அழகாகத் தெளிவுபடுத்தியுள்ளனர். குப்பை போடாமல், தீய சொற்களையும், தீய செயல்களிலும் ஈடுபடாமல் மனமுதிர்ச்சியுடன் நடந்துகொண்ட இந்த துள்ளிவரும் காளைகள் இன்றைய அரசியல்வாதிகளுக்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பாடம் புகட்டியுள்ளனர். இதற்கு மேலும் திருந்தாவிட்டால் அடுத்து அவர்களின் நடவடிக்கை எப்படியிருக்கும் என்பதையும் தெளிவாகவே உணர்த்தியுள்ளார்கள். அண்டை மாநில இளைஞர்களும் தன்னார்வத்துடன் உதவிக்கு வரத் தயாராக இருந்ததன் மூலம் அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் நம் நாட்டிற்குக் கிடைத்த வரம் என்றே பெருமை பொங்க கூறமுடிகிறது. சில புல்லுறுவிகள் நம் நாட்டுத் தலைவர்களை மரியாதைக் குறைவாகப் பேசியும், தேவையில்லாத செயல்பாடுகளில் இறங்கியும் உள்ளதற்கு இந்த மாணவச் செல்வங்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல என்பதையும் உணர்த்தியுள்ளார்கள். கூட்டத்தில் குளிர் காய்ந்துகொண்டு தங்கள் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்திக்கொண்ட சுயநலவாதிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. மற்றபடி பாலின பாகுபாடின்றி எல்லோரும் ஓரினம் என்ற அறைகூவலோடு, பெண்களையும் கௌரவமாக நடத்தி, எந்தவொரு அசம்பாவிதமும் நடக்காமல் அமைதியாகப் போராடி வெற்றி கண்டுள்ள இளைஞர்களை/மாணவச் செல்வங்களை எத்துணை பாராட்டினாலும் தகும். Image result for ஜல்லிக்கட்டுப் போராட்டம்
அவசரச்சட்டம் மத்திய அரசால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, குடியரசு தலைவரும் ஏற்றுக்கொள்வதற்காக அவருடைய பார்வைக்குச் சென்றுள்ளது. இன்று மாலைக்குள் ஆளுநரும் கையொப்பமிட இந்த அவசரச் சட்டமானது மாநில அமைச்சர் குழுக்களால் ஏற்கப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. நாளை அலங்காநல்லூரில் சல்லிக்கட்டு வீர விளையாட்டைத் தாமே துவங்கி வைப்பதாக தமிழக முதல்வர் திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இன்றே அதற்கான பணிகள் தொடங்கி மாவட்ட கலெக்டர் வாடிவாசல் வந்து பார்வையிட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கான ஆரம்பப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.


இந்த போராட்டம் எதை காட்டுகிறது?
1.தமிழன் என்ற உணர்வு
2.பொறுமையின் எல்லை
3.பொறுமையின் உச்சம்
4.ஒருங்கிணைப்பு முறை
5.கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு,
6.தெளிவான கருத்துக்கள்
7.தன்னம்பிக்கை
8.மக்களின் சீற்றம்
9.உணர்வுகளின் குவியல்
10.உ ண்மை போராட்டம்
11.அரசியல் உதாசீனம்
12.மக்கள் ஒற்றுமை
13.மனித நேயம்
14.எதிர்பார்பில்லாத உதவி
15.தமிழின உணர்வு முன்னுரிமை
16.பெண்களின் முழு ஆதரவு
17.சமுதாய எழுச்சி
18.காவல்துறை ஆதரவு
19.அரசியல் கட்சிகளின் அதிர்ச்சி
20.சமூக வளைதளங்களின் தேவை.....
இப் போராட்டம் வெற்றியின் முகவரி!!
கண்ணியம் காத்த அனைத்து இளைஞர்களுக்கும் தமிழ் பண்பாட்டை உலகிற்கே உணர்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாராட்டுதல்களும், வாழ்த்துகளும் தெரிவிக்கும் அதே நேரத்தில் மேலும் இதே ஒற்றுமையையும், அமைதியையும் என்றும் காத்து தமிழர் நலம் பேணுவோம் என்று உறுதியெடுப்போம்!

ஆக்கம்  மற்றும்  தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

பெங்களூரு ஷாப்பிங் மால்களில்பதப்படுத்தப்பட்ட பால் !!!

Image may contain: textFair life என்னும் பதப்படுத்தப்பட்ட பால் பெங்களூரு ஷாப்பிங் மால்களில் சமீபத்தில் விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்தப் பாலில் அப்படியென்ன விசேஷம்?
இந்தப் பாலில் 50% அதிக புரோட்டீனும், 30% அதிக கால்சியமும், 50% குறைக்கப்பட்ட சர்க்கரையும் உள்ளது என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றையும் விட விஷேசமான செய்தி இதை தயாரிப்பது கோக கோலா நிறுவனம் என்பதுதான்! (இந்த நிறுவனத்தைப் பற்றி எழுதத் துவங்கினால் தட்டச்சு செய்து என் விரல்கள் ஓய்ந்து போய்விடும். அதைப் பின்னால் ஒருநாள் பிரித்து மேயலாம்.இப்போதைக்கு ஒத்தி வைக்கிறேன்)
கோககோலா நிறுவனத்தின் வட அமெரிக்க நிர்வாகி சேண்டி டக்ளஸ் கூறுகிறார், 'ஆசியச் சந்தையில் இந்தப் பால் விற்பனைக்கு வரும் போது கோலா நிறுவனம் பணமழையில் நனைந்து கொண்டிருக்கும். சாதாரண பாலை விட இரண்டு மடங்கு விலையில் நம்மால் அங்கு இந்த பதப்படுத்தப்பட்ட பாலை விற்பனை செய்துவிட முடியும். ஆனால் விளம்பரங்களின் மூலம் நாம் சரியாக கொண்டு சேர்க்க வேண்டும். முக்கிய நிகழ்வுகளின் விளம்பரத் தூதராக நாம் மாற வேண்டியது அவசியம். அதற்கு முன் பண்பாடு சார்ந்த விஷயங்களில் இருந்து மக்களை வெளியே கொண்டு வர வேண்டியது முக்கியமான பணி.'
சரி...அவர்கள் வியாபாரத்தை வளர்க்க அவர் பேசுகிறார். தொலையட்டும்.
இந்தப் பாலின் இலட்சணம் பற்றியும் நாம் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா?
The china study என்பது ஒரு ஆய்வின் பெயர். அதைச் செய்தவர் காலின் கேம்ப்பல் என்பவர்.இந்தப் பாலை அவர் எலிகளிடம் பரிசோதனை செய்கிறார்.இந்தப் பாலில் இருக்கும் 50% அதிக புரோட்டீன் எலிகளுக்கு கேன்சர் நோயை வரவைக்கிறது. அதிர்ச்சி அடைந்த அவர் பதப்படுத்தப் படாத சாதாரண மாட்டுப் பாலை அந்த கேன்சர் பாதித்த எலிகளுக்கு மீண்டும் தந்து பரிசோதனை செய்கிறார். இப்போது அந்த எலிகளுக்கு கேன்சர் குணமடையா விட்டாலும் எதிர்ப்புத் திறன் கூடுவதைக் காண்கிறார்.
“From Grass to Glass” என்ற அவரது ஆய்வின் முடிவு இப்படிக் கூறுகிறது. ' பாலை பதப்படுத்துவதாகக் கூறி அதில் சர்க்கரையைக் குறைக்கிறேன்,புரோட்டீனை அதிகப் படுத்துகிறேன் ,கால்சிய அளவினைக் கூட்டுகிறேன் என்ற பெயரில் வேதியியல் வினைகளுக்கு உட்படுத்துவது கேன்சரில் கொண்டு வந்து விடுகிறது. பாலை இயற்கையாக எந்த வேதிவினைகளுக்கும் உட்படுத்தாமல் உண்பது மட்டுமே சரியானது.'
Fair life பால் The “real food” movement என்பதாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விற்பனை சர்வாதிகாரத்திற்கு எதிராக நம்மால் என்ன செய்துவிட முடியும்?
நாட்டு மாடுகளை இன்னும் வைத்துக் காப்பாற்றி வரும் நம் விவசாயிகளை இந்தச் சூறையாடலில் இருந்து எப்படி நாம் மீட்கப் போகிறோம்?
ஜல்லிக்கட்டுத் தடை என்பது கண்ணிற்குத் தெரியாத சிக்கலின் ஒரு முனை மட்டுமே!
மல்லுக்கட்டித் தான் தீர வேண்டும்!
நம்மால் முடியும் ...

Friday, 20 January 2017

தமிழினத்திற்கே இந்த போராட்டம் நல்லதொரு எடுத்துக்காட்டு !!

Image may contain: textImage result for கண்ணியம் காக்கும் இளைஞர்கள்நாமெல்லாம் தமிழன் என்பதில் பெருமை கொள்ள இதைவிட வேறு எந்த புரட்சியும் தேவையில்லை எங்கள் தலைவன் வளர்த்த பிள்ளைகள்   தமிழ்நாட்டிலும் உருவாகிவிட்டனர்    சகோதரர்களே !!

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு சுப்ரீம் கோர்ட் தடையால் இந்தாண்டு நடக்க முடியாமல் போனது. ஜல்லிக்கட்டிற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் எந்த வித பலனும் ஏற்படவில்லை. இதையடுத்து அலங்காநல்லூரில் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த 15ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சென்னை மெரினா, கோவை, சேலம், நெல்லை என பரவி தற்போது தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டிற்காக போராடி வருகின்றனர்.

எங்க வேணாலும் போராட்டம் நடக்கலாம்..ஆனா இவ்வளவு அழகான ரசிக்க வைக்கும் போராட்டத்தை தமிழனால் மட்டுமே நடத்த முடியும்..

குப்பைகள் அகற்றம்
டிராபிக் க்ளியரன்ஸ்
பெண்களுக்கு பாதுகாப்பு
அனைவருக்கும் பட்டினியில்லா உணவு
அடிதடியில்லா அமைதி
வன்முறையில்லா வாதம்


அத்தனையும் அழகு..இந்த அழகை கற்பித்த ..இந்த நேர்த்தியை கற்பித்த கலாச்சாரத்தையா அழிக்க நினைக்கிறீர்கள்...???



விடிய விடிய போராட்டம்
போராட்டம் நடத்தும் இளைஞர்கள் சற்றும் தளர்ச்சியடையாமல் தொடர்ந்து 4வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இரவு பகல் பாராமல் விடிய விடிய நடந்து வரும் இப்போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டு தமிழர்களின் உரிமை எனவும், ஜல்லிக்கட்டிற்கான தடை என்பது நாட்டு மாட்டு இனங்களை அழிக்கும் செயல் எனவும், ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணமான பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் முழக்கமிட்டு வருகின்றனர்.


களத்தில் பெண்கள்
போராட்டத்தில் பெரும் அளவில் பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை மெரினா மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் என பலர் குடும்பத்துடன் வந்து பேராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர். குறிப்பாக தாய்மார்கள் கைகுழந்தையுடனும், கர்ப்பிணி பெண்களும் போராட்டக்களத்திற்கு வந்திருப்பது நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் நேற்று சில கல்லூரி நிர்வாகங்கள் தங்கள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தன. இந்நிலையில் இன்று தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. இதுவரை கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என்று இருந்த போராட்டத்தில் இன்று பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகர்கள் ஆதரவு

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்தி வரும் இந்த போராட்டத்திற்கு இன்று பல தரப்பு வணிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதே போல் ஆட்டோ, கால் டாக்ஸி போன்ற வாகனங்கள் எதுவும் இன்று ஓடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது, லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் லாரிகள், மணல் லாரிகள் ஓடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சிகள் போராட்ட அறிவிப்பு
இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும வகையில் அரசியல்கட்சிகளும் தங்கள் பங்கிற்கு போராட்டத்தை அறிவித்துள்ளனர். தி.மு.க., சார்பில் ரயில் மறியல் போராட்டம், த.மா.க., சார்பில் மனித சங்கிலி போராட்டம், இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பந்த் மற்றும் இளைஞர்கள் போராட்டத்திற்கு ம.ந.,கூட்டணி ஆதரவு என அரசியல் கட்சிகளும் நேரடியாக போராட்டக் களத்தில் இறங்கியுள்ளது.

கண்ணியம் காக்கும் இளைஞர்கள்
லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒரே இடங்களில் கூடி உணர்வு ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டாலும் அவர்கள் தங்கள் போராட்டத்தில் கண்ணியத்தை காத்து வருகின்றனர். தங்கள் போராட்டத்தால் பொதுமக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விட கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றனர். எந்த வித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. மாறாக தங்கள் போராட்டம் நடத்தி வரும் இடங்களில் இருக்கும் குப்பைகளை தாங்களே அகற்றுவது, அப்பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க போலீசாருக்கு உதவுவது என கூட்டம் சேர்க்கும் பலருக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர்.


எந்தவித அசம்பாவித சம்பவங்களுக்கும் இடம் கொடுக்காமல் தமிழன் என்ற ஒரே உணர்வோடு அமைதியை போராடடம் தொடர வேண்டும். இது வெறும் ஜல்லிக்கட்டுக்கானது மட்டுமல்ல மழுங்கடிக்கப்பட்டு வந்த தமிழ் மரபுகளை தட்டி எழுப்பி உத்வேகம் கொள்ள செய்யும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

புதிய நல்ல தமிழின இளைய சமுதாயம் உலக இளைய சமுதாயத்திற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு....இக்கால சமுதாயம் எங்கே போய் கொண்டிருக்கிறது என்ற கடந்த சில ஆண்டு கேள்விக்குறிக்கு முற்றுப்புள்ளி வைத்து நாங்கள் நல்ல மனிதர்கள்,,,எங்களால் நல்ல சமுதாயத்தை மேலும் வருங்காலத்திற்கு கொடுக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்....இவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்....உங்கள் போராட்டம் வெற்றி பெற்று கடந்த முப்பது, நாற்பது வருடங்களாய் திராவிட கட்சிகளால் தமிழன் இழந்த மானத்தையும், பெருமையும் மீட்கட்டும்....முத்துக்களை பிள்ளைகளாய் பெற்று இன உணர்வுடன் வளர்த்த ஒவ்வொரு பெற்றோருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்,, பாராட்டுக்கள், சிரம் தாழ்ந்த வணக்கங்களும்..


ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு. அஜ்மல் கான்.

Tuesday, 17 January 2017

எம்.ஜி.ஆர். பற்றி 100 சுவாரஸ்ய தகவல்கள் !!

Image may contain: 1 person, outdoor
1. எம்.ஜி.ஆர் பொதுவாக பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறமாட்டார். அதற்கு ஒரு சுவையான காரணம் உண்டு. அவரது 'நாடோடிமன்னன்' திரைப்படம் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன் அவருக்கு பதிவுத்தபால் ஒன்று வந்தது. அதை, கையெழுத்திட்டுப் பெற்றுக்கொண்டு பிரித்துப்பார்த்தால் அதில் ஒன்றுமில்லை. வெற்றுக்காகிதம் மட்டுமே இருந்தது. பின்பு அதை மறந்துவிட்டுப் படவேலைகளில் மூழ்கினார். பின்னாளில், 'நாடோடிமன்னன்' வெற்றிபெற்று திரையரங்குகளில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் வந்தது. பிரித்துப்பார்த்தால் முந்தைய பதிவுத்தபால் அனுப்பியவரின் சார்பாக அனுப்பப்பட்டிருந்தது. அதில், 'நாடோடிமன்னன்' கதை என்னுடையது. அதை, உங்களுக்கு பல மாதங்களுக்கு முன் அனுப்பிவைத்தேன். ஆனால், படத்தில் என்பெயர் இல்லை. அதனால் அதற்கு எனக்குரிய நஷ்ட ஈட்டை வழங்கவேண்டும் என்றிருந்தது. அதிர்ந்துபோனார் எம்.ஜி.ஆர். பிறகு, அதற்கு தம் வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பிவிட்டாலும், “இப்படியெல்லாம் கூடவா செய்வார்கள்" என ஆச்சர்யமாகி அதன்பின் சந்தேகம்படும்படியான பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறுவதைத் தவிர்த்துக்கொண்டார்.
2. எம்.ஜி.ஆருக்கு திரையுலகில் 'சின்னவர்' என்ற பெயர். அதென்ன சின்னவர்? எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தைப் பொறுப்பெடுத்து நடத்திவந்த அவரது சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி, நாடக உலகில் பெரியவர் என அழைக்கப்பட்டதால்... எம்.ஜி.ஆரை, 'சின்னவர்' என்பார்கள்.
3. லாயிட்ஸ் ரோட்டில் உள்ள தாய்வீட்டில் தம் அண்ணனுடன் கூட்டுக்குடித்தனமாக இருந்த எம்.ஜி.ஆர்., தன் துணைவியார் சதானந்தவதி இறந்த துக்கத்தால் பின் சில மாதங்களில் ராமாவரம் தோட்டத்துக்கு வரநேர்ந்தது. அங்கும் மினி தியேட்டர், பெரிய நீச்சல்குளம் எனப் பல வசதிகளையும் ஏற்படுத்தியிருந்தார்.
4. எம்.ஜி.ஆரை யாரும் கணிக்கமுடியாது. அப்படி இருப்பதையே அவர் விரும்பினார். முதல்வராக இருந்தபோது ஒருமுறை அப்போதைய கவர்னர் தடுக்கிவிழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. அவரைப் பார்க்க கிளம்பியவர் என்ன நினைத்தாரோ அவருக்கு நெருக்கமான ஓர் இயக்குநரின் படத்துக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார்.
5. எம்.ஜி.ஆர்., ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞர். எந்த நாட்டுக்குச் சென்றாலும் அவர் விரும்பிவாங்கும் பொருட்களின் பட்டியலில் கேமரா தவறாமல் இடம்பெறும். வீட்டில் பலவகை கேமராக்களைச் சேர்த்து வைத்திருந்தார். இறுதிநாட்களில் அவற்றை தமக்குப் பிடித்தமானவர்களுக்குப் பரிசாக தந்து மகிழ்ந்தார்.
6. எம்.ஜி.ஆரை புகைப்படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. புகைப்படக்காரர் தன்னை எந்தக் கோணத்தில் எடுக்கிறார். ரிசல்ட் எப்படி வரும் என்பதை முன்கூட்டியே கணிப்பதில் வல்லவர். அவருக்கு தெரியாமல் யாரும் அவரை புகைப்படம் எடுத்துவிட முடியாது.
7. தனக்கு யாரும் மாலை அணிவித்து புகைப்படம் எடுக்கும்போது ஜாக்கிரதையாக தன் முகம் வரும்படியும், அதேசமயம் மாலை போடுபவர் பரபரப்பில் தன் தொப்பியை கழற்றிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடனும் மாலை போடுபவரின் கையை அழுந்த பிடித்துக்கொள்வார் எம்.ஜி.ஆர். புகைப்படம் எடுத்தபின்புதான் அவருடைய கையை விடுவிப்பார். இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கை முத்தண்ணா அவர்.
8. பொதுவாக பத்திரிகைகளுக்கு பிரத்யேக பேட்டிக்கு ஒப்புக்கொள்ளும்போது அவர்களிடம் ஒரு நிபந்தனை விதிப்பார். பிரசுரமாவதற்கு முன் எழுதப்பட்ட பேட்டியை தனக்கு ஒருமுறை காட்டியாகவேண்டும் என்று. அதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே பேட்டி. பிரசுரமானபின் கட்டுரையாளர் கருத்தால் தேவையற்ற சிக்கல்கள் வந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை அது. ஒரு கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் தன் இமேஜை அந்தளவுக்கு ஜாக்கிரதையாகக் கையாண்டார் எம்.ஜி.ஆர்.
9. சுமார் அரைநூற்றாண்டு காலம் தமிழகத்தைக் கட்டிப்போட்டிருந்த எம்.ஜி.ஆர் வார்த்தையின் முழுவிவரம்... மருதுார் கோபாலமேனன் ராமசந்திரன்.
10. திரையுலகில் தான் பங்கேற்ற அத்தனை துறைகளிலும் சாதனை புரிந்த எம்.ஜி.ஆருக்கு தம் இறுதிக்காலம் வரை ஒரு குறை இருந்தது. அது, கல்கி எழுதிய பொன்னியின்செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது. கிட்டத்தட்ட 3 முறை அதற்கான ஆயத்தப்பணிகளைத் தொடக்கி அது ஆரம்பநிலையிலேயே நின்றுபோனது. படம் எடுத்தால், அதில் தான் வல்லத்தரசனாகவும், கதாநாயகியாக குந்தவி கேரக்டரில் பிரபல டைரக்டர் சுப்ரமணியத்தின் மகளும் நாட்டியக்கலைஞருமான பத்மா சுப்ரமணியத்தை நடிக்கவைக்கவும் திட்டமிட்டார் எம்.ஜி.ஆர். இறுதிவரை அது நிறைவேறவில்லை.
11. முன்னணி நடிகராக எம்.ஜி.ஆர் இருந்தாலும் பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் அதிக எண்ணிக்கையில் நடிக்கவில்லை என்பது ஆச்சர்யமான செய்தி. ஜெமினிக்கு, 'ஒளிவிளக்கு'; ஏ.வி.எம்முக்கு, 'அன்பே வா'; விஜயா வாஹினிக்கு, 'எங்க வீட்டுப்பிள்ளை' என தலா ஒரு படம் மட்டுமே நடித்தார். மற்றவை எல்லாம் சிறு தயாரிப்பாளர்கள் மூலம் வெளிவந்தவை. திரைத்துறையில் ஓரிரு நிறுவனங்களே ஏதேச்சதிகாரம் செய்யாமல் பலரும் இந்தத் துறைக்குள் நுழையவேண்டும் என்பதே அவரின் இந்த முடிவுக்குக் காரணம்.
12. எம்.ஜி.ஆரின் அதிக படங்களில் நடித்த கதாநாயகிகள் ஜெயலலிதா, சரோஜாதேவி.
13. எம்.ஜி.ஆர்., காபி, டீ அருந்துவதில்லை. மீன் வகையான உணவுகளுக்கு அவர் தீவிர ரசிகர். படப்பிடிப்பின் இடைவேளையில் ஜீரக தண்ணீரைக் குடிப்பது வழக்கம்.
14. எம்.ஜி.ஆருக்கு தன் தாய் மீது அளவற்ற அன்பு உண்டு என்பது உ லகறிந்த விஷயம். தான் சார்ந்த தொடர்பான முக்கிய முடிவுகளை தன் தாயின் படத்துக்கு முன் நின்று சொல்லியே முடிவெடுப்பார். அம்மாதிரியான சந்தர்ப்பங்களில் ஏதேனும் அசம்பாவிதமாக நடந்தால் மட்டுமே எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கிவிடுவார்.
15. தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கடும்மோதலில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் இந்த இருகட்சிகளும் இணைய முயற்சி செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர் அப்போது முதல்வர் என்பது கூடுதல் செய்தி. ஒடிசா முதல்வர் பிஜீ பட்நாயக் இந்த இணைப்பு முயற்சியை மேற்கொண்டார். முயற்சி வெற்றிபெற்றால் கட்சியின் தலைவராக கருணாநிதியும் முதல்வராக எம்.ஜி.ஆரும் தொடர்வதாக நிபந்தனை விதிக்கப்பட்டது. காலையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடிந்து வீட்டுக்குச் சென்ற எம்.ஜி.ஆர் மாலையில் இந்த முயற்சியை கைவிட்டுவிட்டார். யாராலும் கணிக்க முடியாத தலைவர் எம்.ஜி.ஆர்.
16. எம்.ஜி.ஆரின் அரிய வெள்ளை நிறத்துக்குக் காரணம் அவர் தங்கபஷ்பம் சாப்பிடுவதே என்ற வதந்தி உலவி வந்தது. சென்னையில் நடந்த ஆணழகன் போட்டி ஒன்றில் இதற்குப் பதிலளித்த எம்.ஜி.ஆர், “தங்க பஷ்பத்தை குண்டுமுனையில் தொட்டு அதை பாலிலோ, நெய்யிலோ கலந்து சாப்பிடுவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். அப்படி குண்டூசி முனையைவிடக் கூடுதலாகச் சாப்பிட்டுவிட்டால் மரணம் நேர்ந்துவிடும். இந்த விஷப் பரீட்சையில் யாராவது இறங்குவார்களா'' என்றார்.
17. எம்.ஜி.ஆர் இறுதிவரை தொடர்ந்த பழக்கம் உடற்பயிற்சி. படப்பிடிப்பு முடிந்து நள்ளிரவு எத்தனை மணிநேரத்துக்கு வீடு திரும்பினாலும் விடியற்காலை 5 மணிக்கு எழுந்துவிடுவார். தொடர்ந்து ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்தபின்னரே அடுத்த வேலையைத் தொடங்குவார். படப்பிடிப்புக்காக வெளியிடங்களுக்குச் செல்லும்போது பெரும்பாலும் போதிய உடற்பயிற்சிக் கருவிகளை தன்னுடன் எடுத்துச்செல்வார். உடற்பயிற்சிக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளித்தவர் அவர்.
18. தமிழின் முதல் கேவா டெக்னாலஜி கலர் படம், எம்.ஜி.ஆர் நடித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்.'
19. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்... காங்கிரஸ் அரசு, மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, மத்திய அரசு தனக்களித்த பத்மஸ்ரீ விருதை திருப்பியளித்தார் எம்.ஜி.ஆர்.
20. எம்.ஜி.ஆருக்கு பிடித்த தேசியத்தலைவர் சுபாஷ் சந்திரபோஸ். தான் அரசியலுக்கு வரக்காரணமான தலைவர் சுபாஷ் என்று குறிப்பிட்டிருந்தார் ஒருபேட்டியில்.
21. எம்.ஜி.ஆருக்கு நினைவுத்திறன் அதிகம். ஒரே ஒருமுறை அறிமுகமானாலும் அவரைப்பற்றி பல ஆண்டுகள் ஆனப்பின்னரும் சரியாக நினைவில் வைத்திருப்பார்.
22. 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' என்ற நாடகத்தில் நடிக்க எம்.ஜி.ஆருக்கு அண்ணாவிடமிருந்து அழைப்பு வந்தது. சில காரணங்களால் நடிக்க மனம்ஒப்பாத எம்.ஜி.ஆர்., கணேசன் என்ற நாடக நடிகரை அதில் நடிக்கவைக்க பரிந்துரைத்தார். நாடகம் வெற்றிபெற்றது. கணேசன் என்ற அந்த நாடக நடிகர் சிவாஜி கணேசன் என்ற பெரும் நடிகரானார்.
23. சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருந்தபோதும் தொடர்ந்து தனது எம்.ஜி.ஆர் நாடக மன்றம் மூலம் நாடகங்களை நடத்திவந்தார் எம்.ஜி.ஆர். அவருடைய 'இடிந்தகோயில்', 'இன்பக்கனவு' நாடகங்கள் தமிழகத்தில் நடக்காத ஊர்கள் இல்லை.
24. தொலைக்காட்சி தமிழகத்தில் வராத காலகட்டத்திலேயே ''தொலைக்காட்சி என்ற ஒன்று விரைவில் வரும். இது சினிமாவின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும்'' என்று 1972-லிலேயே பேசிய தீர்க்கதரசி எம்.ஜி.ஆர்.
25. எம்.ஜி.ஆரை, பலருக்கும் வெறும் சினிமா நடிகர் என்ற அளவில்தான் தெரியும். ஆனால் சினிமாவின் அத்தனை தொழில்நுட்பங்களையும் கரைத்துக் குடித்தவர் அவர். எத்தனை குழப்பமான காட்சிகளையும் சில நிமிடங்களில் கோர்வையாக எடிட் செய்துவிடுவதில் சாமர்த்தியக்காரர்.
26. எம்.ஜி.ஆருக்கு பிடித்த இயக்குநர் ராஜா சாண்டோ.
27. 1960-களில் எம்.ஜி.ஆர் மக்களுக்காக தன் சொந்த செலவில் இலவச மருத்துவமனையை நடத்தியிருக்கிறார். ஆனால் நடைமுறை சிக்கல்களால் அதை தொடரமுடியாமல் போனது.
28. எம்.ஜி.ஆர் பத்திரிகையாளர் என்பது பலரும் அறியாத தகவல். 'சமநீதி' என்ற பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்து பல ஆண்டுகள் அதை நடத்தினார்.
29. மறைந்து 30 ஆண்டுகள் ஆன பின்னாலும் இன்னும் தொடர்ந்து பத்திரிகைகள் வருவது எம்.ஜி.ஆர் ஒருவருக்கே.
30. ''வயதானபின்னும் கதாநாயகனாக நடிக்கிறீர்களே'' என பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கேள்வி எழுந்தபோது, ''20 வயதுள்ள ஒருவர் 50 வயதுக்காரராக நடிப்பதை கைதட்டி வரவேற்கிறீர்கள் அல்லவா...அதேபோல் 50-ஐக் கடந்த நான் 20 வயது இளைஞனாக நடிப்பதை ஏன் வரவேற்கக்கூடாது. அதுதானே நடிப்பு..நீங்கள் திரையில் பார்க்கும்போது இளைஞனா தோன்றுகிறேனா... இல்லையா என்பதுதான் என் கேள்வி“ என்றார் பொட்டிலடித்தாற்போல்.
31. தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்து கட்சி தொடங்கியபின் 1972 அக்டோபர் 29-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில்தான் முதன்முறையாக, ''எம்.ஜி.ஆர் இனி புரட்சி நடிகர் அல்ல, புரட்சித்தலைவர்'' என்றார் கே.ஏ.கிருஷ்ணசாமி.
32. கட்சி தொடங்கி ஆட்சியில் அமர்ந்தபின் எத்தனை மாச்சர்யங்களுக்கிடையிலும் சட்டமன்றம் நடைபெறும் நாட்களில் கருணாநிதியை நலம் விசாரிப்பார் எம்.ஜி.ஆர்.
33. பெரும்பாலும் தன் எதிரில் சீனியர்களைத் தவிர மற்றவர்களை கருணாநிதி என்று பெயர் சொல்லிக் குறிப்பிடுவதை விரும்பமாட்டார் எம்.ஜி.ஆர்.
34. எம்.ஜி.ஆருக்குப் பிடிக்காத ஒரு விஷயம் குதிரையேற்றமும் விமானப்பயணமும். தவிர்க்கமுடியாமல்தான் சில படங்களில் அவ்வாறு நடித்திருப்பார். விமானப்பயணமும் அப்படியே.
35. தம் இறுதிக்காலத்தில் தம் பால்ய கால சினிமா நண்பர்களை வரவழைத்துச் சந்தித்துப்பேசினார் எம்.ஜி.ஆர்.
36. எம்.ஜி.ஆருக்கு உடலுறுதியைப்போலவே மனஉறுதி அதிகம். அமெரிக்காவில் அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் கானுக்கு பாராட்டுவிழா நடந்தது. அதில் பேசிய கானு, “எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாராவது இந்த நோய்க்கு ஆளாகியிருந்தால் மீண்டிருக்க வாய்ப்பு இல்லை. அத்தனை மன உறுதியுடன் அவர் போராடி மீண்டார்” என்றார்.
37. 'திருடாதே', 'தாய் சொல்லை தட்டாதே' என தனது படங்களின் தலைப்புகள்கூட பாசிட்டிவ் ஆக மக்களுக்கு ஒரு கருத்தைச் சொல்வதுபோல் இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் எம்.ஜி.ஆர்.
38. எம்.ஜி.ஆருக்கு ராசி எண் 7. பிறந்தது 1917. கதாநாயகனாக நடித்த முதல் படம் வெளியான ஆண்டு 1947. முதல்முறை எம்.எல்.ஏ-வானது 1967. ஆட்சியைப் பிடித்தது 1977. மரணமடைந்தது 1987. அவருடைய காரின் எண் 4777.
39. பொதுவாக தன் உடல்நிலை குறித்த தகவல்களை ரசகியமாக வைத்துக்கொள்வார் எம்.ஜி.ஆர். தேவைப்பட்டாலொழிய மருத்துவமனைக்குச் செல்லமாட்டார் அவர். பெரும்பாலும் மருத்துவ உபகரணங்களை வீட்டுக்கே வரவழைத்து சிகிச்சை பெற்றுக்கொள்வார்.
40. 'அடிமைப்பெண்' படத்துக்காக ஜெய்ப்பூர் சென்றபோது விளையாட்டாக வித்தியாசமான தொப்பி ஒன்றை அணிந்து நண்பர்களிடம் காட்டினார். தொப்பியில் அவரது தோற்றம் இளமையாக தெரிவதாக நெருக்கமான சிலர் கூறவே அதை வழக்கமாக்கிக்கொண்டார்.
41. எம்.ஜி.ஆரின் புரட் சி அரசியல் பயணம் தொடங்கிய இடம் திருக்கழுக்குன்றம். அங்குதான் முதன்முதலாக கட்சியின் தலைவர்களிடம் கணக்குக்கேட்டு வெளிப்படையாகப் பேசினார். இந்த விவகாரம்தான் எம்.ஜி.ஆர் - கருணாநிதி இடையே முரண் பெரிதாகி... எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கும் அளவுக்குக் காரணமானது.
42. ஒருமுறை சிவகாசிக்குச் சென்று சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். தூத்துக்குடி அருகே அவரது காரை அடையாளங்கண்டுகொண்டு பெண்கள் சூழந்தனர். அவர்களுடைய பலரது கைகளில் கைக்குழந்தைகள். ''காலையில் சாப்பிட்டீர்களா'' என்றார். “இல்லை. காலையில் சமைக்க நேரமில்லை. அதுதான் மாலையில் சென்று ஒரே வேளையாக சமைத்துச் சாப்பிடுவோம்” என்றனர். அதிர்ந்தார் எம்.ஜி.ஆர். சென்னை திரும்பியதும் அன்றே தலைமைச்செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சத்துணவுத் திட்டம் பிறந்தது. பெண்கள் தங்கள் குழந்தைகளைப் பட்டினி போடாமல் உண்ண வழிவகுத்தது.
43. எம்.ஜி.ஆர் முப்பிறவி கண்டார் என்பார்கள். சீர்காழியில் நாடகம் ஒன்று நடந்தபோது 150 பவுண்டுக்கும் அதிகமான எடைகொண்ட குண்டுமணி தவறுதலாக அவர் மீது விழுந்து கால் உடைந்தது முதற்பிறவி. 1967 தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் தன் வீட்டில் வைத்து நடிகர் எம்.ஆர்.ராதாவினால் சுடப்பட்டது இரண்டாவது பிறவி. 1984-ல் மூளையில் கட்டி ஏற்பட்டு பக்கவாதம் வரை சென்று உயிர் மீண்டது மூன்றாவது பிறவி.
44. எம்.ஜி.ஆர் புகழின் உச்சியில் இருந்துபோது வெளியான, 'பாசம்' படத்தில் இறந்துவிடுவதுபோல் காட்சி வந்தது. அதைக் காண முடியாமல் பலர் அந்தப் படத்தைப் பார்க்கவி்ல்லை. படம் தோல்வியைத் தழுவியது.
45. எம்.ஜி.ஆருக்கு அவரது ரசிகர்கள் செல்லமாக வைத்த பெயர் 'வாத்தியார்.'
46. நடிகர் சங்கத்தில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு அளப்பரியது. சங்கம் தொடங்கியபோது அதன் துணைத்தலைவராக இருந்த அவர், 3 முறை அதன் செயலாளராகவும், ஒருமுறை பொதுச்செயலாளராகவும், இருமுறை தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.
47. 'நாடோடி மன்னன்' பட வெற்றிக்குப்பின், அதன் அடுத்த பாகமாக 'நாடோடியின் மகன்' என்ற பெயரில் படம் ஒன்று தொடங்கப்பட்டது. பின்னர் ஏனோ அது நின்றுவிட்டது.
48. 'சதி லீலாவதி' முதல் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வரை எம்.ஜி.ஆர் நடித்த மொத்த படங்கள் 136. இதுதவிர சில படங்கள் நிறைவுபெறாமல் கைவிடப்பட்டன. இவற்றில் 'அவசர போலீஸ் 100', 'நல்லதை நாடு கேட்கும்' போன்ற படங்கள் பின்னாளில் வெளியாகின.
49. எம்.ஜி.ஆரின் படங்களில் பெண்களின் எதிர்ப்பைச் சம்பாதித்த ஒரே படம் 'இதயக்கனி'.
50. ஜனாதிபதி விருது பெற்ற தமிழின் முதல்படம் எம்.ஜி.ஆர் நடித்த 'மலைக்கள்ளன்'.
51. எம்.ஜி.ஆர் படங்களில் மிகக் குறைந்த நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட படம் 'தேர்த்திருவிழா'. 16 நாட்களில் எடுக்கப்பட்ட படம் இது.
52. எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த தயாரிப்பாளர் மற்றும் நண்பர் சாண்டோ சின்னப்பா. எம்.ஜி.ஆர் - ஜானகி திருமணத்துக்குச் சாட்சிக் கையெழுத்திட்டது இவர்தான்.
53. எம்.ஜி.ஆர் தனக்கு நெருக்கமானவர்களை 'முதலாளி' என்றுதான் அழைப்பார்.
54. எம்.ஜி.ஆருக்குப் பிடித்த விளையாட்டு சீட்டு. நெருக்கமானவர்களுடன் விளையாடும்போது தோற்பவர்கள் தங்கள் முகத்தை தலையணையால் கொஞ்ச நேரம் பொத்திக்கொள்ள வேண்டும். இதுதான் அவரது பந்தயம்.
55. பொங்கல் மற்றும் நல்ல நாட்களில் தன்னிடம் வேலை பார்ப்பவர்கள், நண்பர்களை வரவழைத்துத் தன் கையில் இருப்பதை வாரி வழங்குவார் எம்.ஜி.ஆர்.
56. தமிழின் வெளிநாட்டு தொழில்நுட்பமான ஸ்டிக்கர் போஸ்டரை அறிமுகப்படுத்தியது எம்.ஜி.ஆர்தான். 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் வெளியானபோது எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து வெளியேறியிருந்தார். இதனால் உசுவா பட போஸ்டர்கள் எங்கு ஒட்டினாலும் கிழிக்கப்படும் என்ற தகவல் பரவியது. ஆளும் கட்சியினரின் இந்தச் சதியை முறியடிக்க நடிகர் பாண்டுவை வெளிநாட்டுக்கு அனுப்பி சாதாரணமாகக் கிழித்துவிட முடியாத வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் ஸ்டிக்கர் தொழில்நுட்பத்தைப் பயிலச்செய்து அந்த இயந்திரத்தையும் தருவித்தார். ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை கிழிக்கமுடியாமல் ஆளும் கட்சியினர் திணறினர். 'உலகம் சுற்றும் வாலிபன்' சக்கை போடு போட்டது.
57. தொப்பி, கண்ணாடி, முழங்கை அளவு சட்டை என்று வெளியில் தோன்றினாலும் தன்னை வீட்டில் சந்திப்பவர்கள் முன் கைலி, முண்டா பனியனுடன்தான் காட்சியளிப்பார் எம்.ஜி.ஆர்.
58. தன்னிடம் வேலை செய்பவர்கள் தவறு செய்தால் அதைப் பொறுத்துக்கொள்ளமாட்டார். அவர்களுக்கு உடனடியாக சில நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவிடும். ஆனால் சம்பளம் தவறாமல் அவர்களுக்குச் சென்றுவிடும். இது தவறு செய்தவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி அடுத்தமுறை தவறு நேராமல் பார்த்துக்கொள்வர்.
59. எம்.ஜி.ஆர் தன் வாழ்க்கை வரலாற்றை வெவ்வெறு காலகட்டங்களில் இரண்டு பத்திரிகைகளில் எழுதினார். ('ஆனந்த விகடன்', 'சமநீதி') தவிர்க்கவியாத காரணங்களால் எதுவும் முற்றுப்பெறவில்லை.
60. தனது இரண்டாவது மனைவி சதானந்தவதியின் நினைவுநாள் அன்று எம்.ஜி.ஆர் விரதம் மேற்கொள்வார்.
61. எம்.ஜி.ஆர் ஒரு தீவிர படிப்பாளி என்பது பலருக்கும் தெரியாத தகவல். தன் வீட்டின் கீழறையில் எம்.ஜி.ஆர் பெரிய நுாலகத்தை நிறுவியிருந்தார். அதில் உலகத்தலைவர்கள் மற்றும் அனைத்து அரியவகை புத்தகங்களையும் சேமித்துவைத்திருந்தார்.
62. எம்.ஜி.ஆரின் முதல் நாடக குரு காளி என்.ரத்தினம். பின்னர் நாடக ஆசிரியர் எம்.கந்தசாமி.
63. எம்.ஜி.ஆர் நாடகத்தில் போட்ட முதல்வேஷம், 'லவகுசா' என்னும் நாடகத்தில் போட்ட குஷன் வேஷம். அப்போது அவருக்கு வயது 6.
64. எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதற்நாடகம் 'மனோகரா'... மனோகரன் வேடம்.
65. அண்ணாவின் பேச்சாலும் எழுத்தாலும் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர்., தி.மு.க-வில் சேர்ந்த ஆண்டு 1952 . அவரை அண்ணாவிடம் அறிமுகப்படுத்தியவர் நடிகமணி டி.வி.நாராயணசாமி.
66. வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டால் எம்.ஜி.ஆர் தன் தாயாரை வணங்கிவிட்டுத்தான் செல்வார். அவர் மறைவுக்குப்பின், அவருக்கு தன் வீட்டிலேயே கோயில் ஒன்றை எழுப்பினார்.
67. நடிகர் சங்கம் மூலம் ஒரு நடிப்புப் பயிற்சிக் கல்லுாரியைத் தொடங்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆருக்கு இறுதிக்காலம் வரை மனிதில் இருந்த ஓர் ஆசை... அது இறுதிவரை நிறைவேறாதது துரதிர்ஷ்டம்.
68. தான் நடித்த படங்களில் எம்.ஜி.ஆருக்கு மிகப் பிடித்த படம், 'பெற்றால்தான் பிள்ளையா'.. வழக்கமான பாணியிலிருந்து விலகி தான் நடித்த இந்தப் படம் தனக்கு மிகவும் பிடித்தபடம் என்று பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.
69. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு தன் வழக்கமான அடையாளங்கள் எதுவும் தெரியாதபடி தன் பிளைமவுத் காரை தானே ஓட்டியபடி கடற்கரைச் சாலையில் பயணிப்பது எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
69. நடிகராக இருந்தபோது தான் வசித்த ராமாவரம் வீட்டிலேயே முதல்வரானபின்னும் தொடர்ந்து வசித்தார் எம்.ஜி.ஆர். சம்பிரதாயத்துக்குக்கூட அந்த வீட்டை மெருகேற்றாமல் எளிமையாக அப்படியே வைத்துக்கொண்டார்.
70. முதல்வரானபின் ஒருசமயம் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் வந்தது எம்.ஜி.ஆருக்கு. அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். ஆனால், எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களாலும், மத்திய அரசிடமிருந்து வந்த நெருக்கடியினாலும் அந்த ஆர்வத்தைக் கைவிட்டார். அவர் கைவிட்ட அந்தப் படம், 'உன்னைவிடமாட்டேன்'. அதன் இசையமைப்பாளர் இளையராஜா.
71. தன் கலையுலக வாரிசு என்று எம்.ஜி.ஆராலேயே அறிவிக்கபட்ட நடிகர் பாக்யராஜ்.
72. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை 'அம்மு' என்றே அழைப்பார்.
73. எம்.ஜி.ஆர் அறிமுகமான, 'சதிலீலாவதி' படத்தின் கதாசிரியர் எஸ்.எஸ்.வாசன்.
74. தனது திருமண நாளில் எந்த வெளிநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதைத் தவிர்த்துவிடுவார். அன்றைய தினம் மனைவி ஜானகி மற்றும் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களை மட்டுமே சந்திப்பார். அன்று ஒருநாள் மட்டுமே கைகள் மற்றும் கழுத்தில் நகை அணிந்து காணப்படுவார்.
75. எம்.ஜி.ஆர் வரலாற்று அறிவு நிரம்பியவர். முதல்வராக இருந்த ஒருசமயம், தஞ்சை அரண்மனையைப் பார்வையிட்டார். அப்போது அதிகாரிகளிடம் ''இங்கு சுரங்கப்பாதை ஏதேனும் இருக்கிறதா'' என விசாரித்தார். அதிகாரிகள் மறுத்தனர். ஆனால் எம்.ஜி.ஆர் விடாப்பியடியாக தர்பார் ஹால் அருகே ஓர் இடத்தைக் காட்டித் தோண்டச்செய்தார். ஆச்சர்யம் அங்கு சுரங்கப்பாதை இருந்தது. எம்.ஜி.ஆரின் ஞானத்தை அறிந்து விக்கித்தனர் அதிகாரிகள்.
76. எம்.ஜி.ஆர் தீவிரமான ஒரு கிரிக்கெட் ஆர்வலர் என்பது பலரும் அறியாத தகவல். முக்கியப் போட்டிகள் நடக்கும் சமயம் படப்பிடிப்புக்கு மறக்காமல் டிரான்சிஸ்டர் ஒன்றை எடுத்துச்செல்வார். ஓய்வின்போது அதை காதில் வைத்து ரன்னிங் கமென்ட்ரி கேட்டுக்கொண்டிருப்பார்.
77. படப்பிடிப்புக்காக வெளிமாநிலங்களுக்குச் செல்லும்போது கடைசி நாளன்று அனைவருக்கும் அங்கு பர்சேஸ் செய்ய தன்சொந்த பணத்தைத் தருவார்.
78. படப்பிடிப்பின்போது உணவுவகைகள் தனக்குக் கொடுக்கப்பட்டதுபோலவே யூனிட்டின் கடைநிலை ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்துவார்.
79. சட்டமன்றத்தில் ஒருமுறை துரைமுருகன் எம்.ஜி.ஆரை தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டேபோக ஒரு கட்டத்தில், மயக்கமாகி விழப்போனார். எம்.ஜி.ஆர் ஓடோடிச்சென்று அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தார். சங்கடப்பட்டுப்போனார் துரைமுருகன்.
80. படிக்கும் காலத்தில் முன்னாள் அமைச்சர் வளர்ப்பு மகன்போல உடனிருந்தார் துரைமுருகன். அவருடைய படிப்புச்செலவு உள்ளிட்ட செலவுகளை அப்போது கவனித்தவர் எம்.ஜி.ஆர். கல்லூரியின் பாதுகாவலர் என்ற முறையில் எம்.ஜி.ஆரே பலமுறை துரைமுருகனுக்கு கையெழுத்திட்டுள்ளார்.
81. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடிக்கச்சென்றபோதுதான் கருணாநிதியுடன் அறிமுகம் ஏற்பட்டது எம்.ஜி.ஆருக்கு.
82. 'எங்கள் தங்கம்' படத்தில் 'நான் அளவோடு ரசிப்பவன்' என்ற பாடலில் அடுத்த வரிக்காக காத்திருந்த கவிஞருக்கு, 'எதையும் அளவின்றி கொடுப்பவன்' என அடுத்த வரியை எடுத்துக்கொடுத்தவர் கருணாநிதி. அதே படத்தில் 'நான் செத்துப்பிழைச்சவன்டா' பாடலில் கருணாநிதியின் கல்லக்குடி போராட்டம் இடம்பெறும்வகையில், “ஓடும் ரயிலை இடைமறித்து அதன் பாதையில் தனது தலைவைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து தமிழ் பெயரை காத்த கூட்டம் இது“ என்ற கலைஞரின் புகழ்பாடும் வரிகளை இடம்பெறச்செய்தார் எம்.ஜி.ஆர்.
83. எம்.ஜி.ஆருக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்ததை சட்டமன்றத்தில் விவாதப்பொருளாக்கிக் கடுமையாக எதிர்த்துப்பேசினார் தி.மு.க உறுப்பினர் துரைமுருகன். தேநீர் இடைவேளையில் அவரை அழைத்த கருணாநிதி, “எம்.ஜி.ஆரை ஆயிரம் விஷயங்களுக்காக நான் எதிரக்கலாம். விமர்சிக்கலாம். ஆனால் நீ அதைச் செய்வது ஏற்புடையதல்ல. நன்றி மறக்காதே“ என கடிந்துகொண்டார். கூடவே “எம்.ஜி.ஆர் மீது நமக்கு ஆயிரம் மாச்சர்யங்கள் இருந்தாலும் அவரது வள்ளல் குணத்தினை நாம் குறைசொல்ல முடியாது. அந்த ஒரு விஷயத்துக்காக அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை ஏற்கலாம்” என்று அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
85. நாத்திக கட்சியான தி.மு.க-வில், அண்ணாவின் காலத்திலேயே எம்.ஜி.ஆர் தன்னை நாத்திகவாதியாக காட்டிக்கொண்டதில்லை. அதற்காக தீவிர ஆத்திகர் என்று சொல்லிவிட முடியாது. தனக்கு மேலே ஒரு சக்தி ஒன்று உண்டு என்பதில் அவர் திடமாக இருந்தார்.
86. திருப்பதிக்கும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கும் 2 முறை சென்றிருக்கிறார். மதுரையில், 'நாடோடி மன்னன்' படத்துக்காக தனக்கு அளிக்கப்பட்ட தங்க வாளை பின்னாளில் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்தினார். எம்.ஜி.ஆரின் படுக்கை அறையில் எப்போதும் ஒரு இயேசு சிலை இருந்தது.
87. மதுரையில் எம்.ஜி.ஆர் மன்ற மாநாட்டில், ''எதிர்க்கட்சிகளிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள அ.தி.மு.க-வினர் எல்லோரும் கையில் கத்தி வைத்துக்கொள்ளவேண்டும்'' என்று அவர் பேசிய பேச்சு அரசியலை பரபரப்பாக்கியது அப்போது.
88. தமிழ்ப்பட உலகின் சாதனை என்னவென்று ஒருமுறை கேள்வி எழுப்பபட்டபோது, “தமிழ் நடிகர்களைக் கொண்டு இந்தியில் 'சந்திரலேகா' என்ற படத்தை எடுத்து உலக மக்கள் அனைவரின் உதடுகளிலும் உள்ளங்களிலும் இடம்பெறச்செய்த எஸ்.எஸ்.வாசனின் செயல்'' என்று குறிப்பிட்டார்.
89. அரசியலில் தன்னை கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு பெரும்பாலும் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பமாட்டார் எம்.ஜி.ஆர். ''எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள்'' என்பார்.
90. சினிமாவின் ஆரம்பகாலங்கில் எம்.ஜி.ஆர் இயற்கையாகவே அழுது நடித்தார். ஆனால், பிற்காலத்தில் லைட்டிங் அதிகம் பயன்படுத்தப்பட்டபோது அதனால் ஏற்பட்ட வெப்பத்தால் கண்ணீர் காய்ந்துவிடுவதால் கிளிசரின் பயன்படுத்த ஆரம்பித்தார்.
91. ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த நடிகர் என்.டி.ராமாராவ், 'தன் குரு... வழிகாட்டி' என்று எம்.ஜி.ஆரைத்தான் குறிப்பிட்டார்.
92. கட்சியைவிட்டு சிலர் வெளியேறிய சமயம், ''கட்சியினர் அனைவரும் அ.தி.மு.க கொடியை பச்சைக்குத்திக்கொள்ள வேண்டும்'' என்று கருத்துத் தெரிவித்தார் எம்.ஜி.ஆர். முதல் ஆளாக தானும் குத்திக்கொண்டார். ஆனால் அடுத்த சில நாட்களில் அது கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்த அதை கைவிட்டார் எம்.ஜி.ஆர்.
93. எம்.ஜி.ஆர் - சிவாஜி இணைந்து நடித்த ஒரே திரைப்படம் 'கூண்டுக்கிளி'. படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் - சிவாஜி ரசிகர்களிடையே எழுந்த எதிர்ப்பால் அதன்பிறகு சேர்ந்து நடிப்பதை இருவருமே தவிர்த்தனர்.
94. எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பிறகு, அவருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்கியது.
95. தன் இறப்புக்குப் பின் தான் வாழ்ந்த ராமாவரம் தோட்ட இல்லத்தை காதுகேளாதோர் பள்ளிக்கு உயில் எழுதிவைத்தார் எம்.ஜி.ஆர்.
96. அண்ணாவின் கதை வசனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி', 'நல்லவன் வாழ்வான்' ஆகியவை.
97. எம்.ஜி.ஆர் தன் வீட்டில் கரடிக்குட்டி ஒன்றையும் பெரிய சிங்கம் ஒன்றையும் வளர்த்தார். வீட்டில் சிகிச்சையின்போது கரடி எதிர்பாராதவிதமாக இறந்தது. பின்னாளில் வனவிலங்கு ஆர்வலர்கள் பிரச்னை எழுப்பியதால் சிங்கத்தையும் வனவிலங்கு சரணாலயத்துக்குக் கொடுத்துவிட்டார். ஆனால், அங்கு இறந்தபின் அதைத் திரும்பப்பெற்று தன் வீட்டில் அறிவியல்முறையில் பாதுகாத்துவைத்திருந்தார். இன்றும் அது தி.நகர் நினைவு இல்லத்தில் பாடம் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
98. எம்.ஜி.ஆரின் 100-வது படம் 'ஒளிவிளக்கு'. அதை தயாரித்தது ஜெமினி எஸ்.எஸ்.வாசன்.
99. படப்பிடிப்புத் தளங்களில் அந்நாளில் தன்னுடன் பணிபுரிந்த கலைஞர்கள் யாரையாவது கண்டால் ஓடிப்போய் நலம் விசாரிப்பார். மேலும் அவருடைய குறைகளைக் கேட்டறிவார்.
100. படப்பிடிப்பின்போது தனக்கு நொறுக்குத்தீனி சாப்பிட விரும்பினால் தனியே சாப்பிட விரும்பமாட்டார். தளத்தில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்து தருவார்.
 (நன்றி விகடன்) :

ஜல்லிக்கட்டுக்காக போராட்டத்தில் அணிதிரட்டிய சமூக வலைத்தளங்கள் !!

சென்னை மெரீனா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் அருகே காமராஜர் சாலையின் நடைமேடையிலும், இணைப்புச் சாலையிலும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை காலை திடீரென போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்தப் போராட்டத்தில் முதலில் குறைந்தளவு இளைஞர்களே காணப்பட்டனர். ஆனால் நேரம் செல்லச்செல்ல இளைஞர்களும், மாணவர்களும் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நண்பகலுக்கு பின்னர் போராட்டத்தில் பல ஆயிரம் பேர் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டுக்கான தடையை மத்திய அரசு நீக்க வேண்டும், மத்திய, மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும், பீட்டா அமைப்பை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசியல் கட்சிக் கூட்டத்தை மட்டுமே பார்த்து பழகிப் போன தமிழக மக்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது சமூக ஊடகத்தின் வலிமை முழுமையாகப் புரிந்தது.
Image result for அணிதிரட்டிய சமூக வலைத்தளங்கள்வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவது முதல், உணவின்றி தவித்து வருபவர்களுக்கு உணவு அளிப்பது வரை சமூக வலைதளங்கள் முக்கியப் பங்காற்றின. #Chennaifloods உள்ளிட்ட ஹேஷ் டேக்குகள் மூலம் பறிமாறிக் கொள்ளப்பட்ட தகவல்களால் முகம் தெரியாத எத்தனையோ பேர் காப்பாற்றப்பட்டனர். வாட்ஸ் அப் குழுக்கள், ட்விட்டர், பேஸ்புக் என சமூக வலைதளத்தை முழுமையாகப் பயன்படுத்தியவர்கள் இயற்கை பேரிடரிலிருந்து மக்களைக் காக்க தன்னெழுச்சியாக ஒன்றிணைந்தனர். சமூக வலைதளம் என்றாலே வீண் அரட்டைகள் என்ற நிலை மாறி அர்த்தமுள்ளதாக அன்றைய தினம் மாறியது.
இப்போது ஜல்லிக்கட்டுப் போராட்டம் இந்த அளவுக்கு வீரியமிக்க அளவுக்கு வளர்ந்தற்கு சமூக ஊடகங்கள் தான் காரணம்.
#JusticeForJallikkattu #Jallikkattu உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து அது ட்விட்டரில் தேசிய அளவில் அதிகம் பேரால் பேசப்பட்ட ட்ரெண்டாக இன்று மாறியது.
சென்னை மெரினாவில் கடந்த 8ம் தேதி கூடிய கூட்டம் முதல் இன்றைய அலங்காநல்லூர் வரை ஊடக விளம்பரத்தாலோ, துண்டு பிரசுரங்கள் அல்லது வால் போஸ்டர்கள் மூலமாகவோ கூடிய கூட்டம் அல்ல. முழுக்க முழுக்க சமூக வலைதளங்கள் மூலம் தகவல்களைப் பெற்ற இளைஞர்கள் ஒன்று கூடி ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.
ஸ்மார்ட்போன் பயன்பாடும், இணையத்தின் அசுர வளர்ச்சியும் இந்த போராட்டத்தில் பங்கேற்றோரின் எண்ணிக்கையை அதிகரித்தது. அலங்காநல்லூர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்ட போதும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற குரலும் சமூகவலைதளங்கள் மூலமாக ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. சமூகவலைதளங்கள் மூலமாகவே இந்த செய்தியை அறிந்துகொண்ட இளைஞர்கள் சென்னை மெரினாவில் இரண்டாவது முறையாக ஒன்று கூடினர்.