Wednesday, 26 November 2008

மக்களை மிரட்டும் மழைக்கால நோய்கள் !! ஒரு விழிப்புணர்வு பார்வை..

Image result for Most common rainy season diseasesதமிழகத்தில் பருவமழை தொடங்கி விட்டது.மழையின் இதம் மனசுக்கு சுகம் என்றால் மழையினால் பரவும் நோய்கள் உடம்புக்கு சோகம். இந்தக் காலத்தில் பெரும்பாலான நோய்கள் நம்மை எளிதாக தாக்கக்கூடும்.

ஊருக்குள் இருக்கிற ஒட்டுமொத்த அழுக்கையும் இழுத்துக் கொண்டோடும் மழைநீரில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளும் உற்சாக மாக நீந்திக்கொண்டிருக்கும். தன் வழியில் சிக்கிய வர்களை எல்லாம் நோயில் விழ வைத்துவிடும். 

மழை நாட்களில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஒடிக்கொண்டே இருக்கும். இதனால் எளிதில் நோய்க் கிருமிகள் பரவும் வாய்ப்பு அதிகம்.. தண்ணீர் மூலம் எளிதில் பரவக்கூடிய கிருமிகளில் முக்கியமானது இன்ஃபுளூயன்ஸா.  இன்ஃபுளூயன்ஸா வைரஸ் நோய்க் கிருமிகள் முதலில் வயதானவர்களையும், குழந்தை களையும் தாக்கும். அதேபோல ஏற்கெனவே நோயுற்றிருப்ப வர்களிடமும் தன் கைவரிசையைக் காட்டும்.

இன்ஃபுளூயன்ஸா தாக்கியப்பின் உடலின் நோய் எதிர்ப்புசக்தியைக் குறைத்து, பாக்டீரியா தாக்குதலுக்கு வழி ஏற்படுத்தித் தரும். இருமல், சளி, தும்மல் என ஆரம்பிக்கும் தாக்குதல் காய்ச்சலில் முடியும். இதை சாதாரண காய்ச்சலாக நினைத்து கவனிக்காமல் விட்டுவிட்டால் அதுவே நிமோனியா காய்ச்சலாக மாறும் அபாயமும் இருக்கிறது. அதனால் தொடர்ச்சியான காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.

பொதுவாகவே நாம் அருந்தும் குடிநீர் மூலமாகத்தான் நோய்கள் அதிகமாக தாக்குகிறது. அதுமட்டுமில்லாது வீட்டை சுற்றி நீர் தேங்கி இருப்பின் அதில் கொசுக்கள் உருவாகின்றன.


* நாளடைவில் தேங்கி இருக்கும் நீர் சாக்கடை போல் மாறி விடுகின்றது. வேறு வழியின்றி வீட்டிற்கு வெளியில் அந்த சாக்கடை நீரில் நடந்து செல்கிறோம். இவ்வாறு இருக்கும் போது வைரஸ் கிருமிகள் எளிதில் பரவி நோய்களை ஏற்படுத்துகிறது.
* சுகாதாரம் இல்லாத குடிநீர் மூலம் காலரா, வாந்தி, ப்ளூ காய்ச்சல், மஞ்சள் காமாலை ஆகிய நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் தாக்கும்.
* மழை நீர் தேங்கிய பகுதியில் உருவாகும் கொசுக்கள்  மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் ஆகிய நோய்கள் வரலாம். மழை காலத்தில் தான் வழக்கத்தைவிட அதிகம் பேர் நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதுபோன்ற நோய்கள் நம்மை தாக்காமல் இருக்க எளிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வரலாம்.
* காய்ச்சல், சலதோஷம், இருமல் ஏற்படும் போது மருத்துவரிடம் சென்று தகுந்த மருந்துகளை எடுத்து கொள்ளலாம்.
* சரியாகிவிடும் என்று வீட்டிலேயே ஏதேனும் மாத்திரை போட்டுக் கொள்வதை தவிர்க்கவும்.
* தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் ரத்தப் பரிசோதனை செய்து என்ன கிருமி தாக்கியுள்ளது என்பதை தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்தபடி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
* குழந்தைகளுக்கு மழைக் காலத்தில் கதகதப்பான ஆடைகளை அணிவிக்க வேண்டும். மழைக் காலத்தில் குடிக்கும் தண்ணீரை, காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
* கூடுமானவரை பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் வீட்டில் காய்ச்சிய தண்ணீரை கொண்டு சென்று குடித்தால் மழை கால நோயில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
* மழைக் காலத்தின் போது சுத்தமாக இருக்கும் கழிவறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* வீட்டைச் சுற்றி கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* வெளியே சென்று வீடு திரும்பியதும் கை, கால்களை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
* செருப்பு, ஷூ ஆகியவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
* உணவு சாப்பிடும் முன்பு கட்டாயம் கைகழுவி விட்டு சாப்பிடுவது நல்லது. 
* வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். குழந்தைகள் அவர்களுக்கே அறியாமல் கீழே இருப்பதை வாயில் எடுத்து வைத்துக் கொள்வர், எனவே குழந்தைகள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.

வைரஸ் கிருமிகள் காற்றில் துகள்கள் வடிவில் பரவும். எனவே ஒருவர் பயன்படுத்திய டவல், கைக்குட்டை ஆகியவற்றை மற்றவர் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மேலும் தும்மல், இருமல் போன்ற காரணத்தினாலும் வைரஸ் காய்ச்சல் பிறரை எளிதில் தாக்கும்.

கொசுக்கள் மூலம் பரவும் வைரஸ்கள் ரத்த உறைவு அணுக்களின் எண்ணிக்கையை  குறைத்து விடும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் நோய் தீவிரமாகி உடலின் பல பகுதிகளில் ரத்தக் கசிவு ஏற்படும். ரத்தக் கசிவு மூளையில் ஏற்பட்டால் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது.


மலேரியா, சிக்குன் குன்யா இரண்டுமே கொசுக்களால் பரவக்கூடியதுதான்.  அதனால் தொடர்ச்சியான காய்ச்சல் தும்மல் இருமல் அலர்ஜி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம். 


மூன்றுவித பிரச்னைகள் பொதுவாக மழைக்காலத்தில் 3 விதமான பிரச்னைகள் ஏற்படும். மாசுபட்ட சூழ்நிலை, மாசுபடும் குடிநீர், தண்ணீர் சார்ந்த உயிரினங்கள் ஆகியவற்றின் மூலம் நோய்கள் பரவுகின்றன. இதிலிருந்து நம்மை காத்துக் கொள்ள பழகிவிட்டாலே, நாம் எளிதில் நோய்களை வென்று விடலாம். நிச்சயம் நம் குழந்தைகளுக்கும் இவற்றை கற்றுக்கொடுத்தே ஆக வேண்டும்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

நன்றி : டாக்டர்  பீ.பஷீர் அஹமது. விஜயா மருத்துவமனை, சென்னை .

Saturday, 22 November 2008

ஜும்மாவை தாமதமாக தொழலாமா ?...



வெளிநாட்டில் வாழும் என் போன்ற சகோதரர்களுக்கு குறிப்பாக பிரான்ஸ் இங்கிலாந்து நாட்டில் பணிபுரிவோருக்கு ஜும்மா கிடைப்பது அரிது. அதனால் வேலை நேரத்தில் நேரம் கிடைக்கும் போது 15 அல்லது 30 நிமிடங்கள் முன்னாலோ பின்னாலோ தொழுதால் ஜும்மா கூடுமா? குறிப்பிட்ட மூன்று நேரம் தவிர மற்ற நேரங்களில் தொழத் தடை இல்லை என்பதால் இப்படி தாமதமாகத் தொழலாம் அல்லவா?



ஜுமுஆத் தொழுகையை சூரியன் உச்சியிலிந்து சாய்ந்த உடனே சீக்கிரமாகவும் தொழலாம். சற்று நேரம் கழித்தும் தொழலாம். இரண்டிற்கும் ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

சூரியன் (உச்சியிலிருந்து) சாயும் நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல்கள் : புகாரீ (904), திர்மிதீ (462), அபூதாவூத் 916), அஹ்மத் (12057)

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஜுமுஆத் தொழுது விட்டு (வீட்டிற்கு)த் திரும்புவோம். அப்போது நாங்கள் நிழலுக்காக ஒதுங்கும் அளவிற்குச் சுவர்களுக்கு நிழல் இருக்காது.

அறிவிப்பவர் : ஸலமா (ரலி),
நூல்கள் : புகாரீ (4168), முஸ்லிம் (1424?)

ஜுமுஆ தொழுகைக்குச் சீக்கிரமாகச் சென்று விட்டு அதன் பின்பே நாங்கள் முற்பகல் தூக்கம் மேற்கொள்வோம்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல்கள் : புகாரீ (940)

ஜுமுஆவிற்குப் பிறகு தான் நாங்கள் முற்பகல் தூக்கத்தையும், காலை உணவையும் கொள்வோம்.

அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி),
நூல்கள் : புகாரீ (939), முஸ்லிம் (1422?)

நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்கள் குளிர் கடுமையாக இருக்கும் போது தொழுகையை -அதாவது ஜுமுஆத் தொழுகையை- அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுவார்கள். வெப்பம் கடுமையாக இருக்கும் போது தொழுகையை -அதாவது ஜுமுஆத் தொழுகையை- வெப்பம் தணிந்த பின் தொழுவார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி (906)

பொதுவாக ளுஹர் நேரம் சூரியன் உச்சிக்கு வந்த பிறகு தான் ஆரம்பமாகும் என்றாலும் அதற்கு பகரமாக தொழும் ஜும்மா தொழுகை நேரம் லுஹர் நேரத்தை விட விசாலமானதாகும். அதாவது சூரியன் உச்சிக்கு வருவதற்கு முன்பே ஜும்மா தொழலாம். காலை உணவையே ஜும்மாவுக்குப் பின்னர் தான் உட்கொண்டுள்ளதாக மேற்கண்ட ஹதீஸ்களில் கூறப்படுவதில் இருந்து காலையிலேயே ஜும்மா தொழுதுள்ளனர் என்பது தெரிகின்றது.

சூரியன் உச்சிக்கு வரும் நேரத்தில் மட்டும் தொழுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மூன்று நேரங்களில் தொழ வேண்டாம். அல்லது இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்து வந்தார்கள்.

1. சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை.

2. சூரியன் உச்சிக்கு வந்து சாயும் வரை.

3. சூரியன் அஸ்தமிக்கத் துவங்கியதிலிருந்து நன்கு மறையும் வரை.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் அல்ஜுஹ்னீ (ரலி)
நூல்: முஸ்லிம் 1373

Thursday, 6 November 2008

தமிழகத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கிய இஸ்லாமியர்...?

அரேபிய தாயகத்தில் வேரூன்றியிருந்த மடமைகளை மாய்த்து மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கிய இனியமார்க்கம் இஸ்லாம், கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் நம் தமிழகத்தில் தம் பொற்பாதங்களை மெல்லப் பதிக்கத் துவங்கியது.

சங்க காலம் முதல் தமிழகத்துடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் அரபு நாட்டவர். தொடக்கத்தில் யவனர் என்றழைக்கப்பட்டனர். பின்னர் இப்பெயர் மாறி முஸ்லிம்கள் என்றும், சோனகர், துலுக்கர் என்றும் அழைக்கப்பட்டனர். அவர்களது சிந்தனைகள், செயல்பாடுகள், வணக்க வழிபாடுகள் ஆகியவை தமிழ் மக்களைக் கவர்ந்தன. இனிய பேச்சும் இயல்பான வணிகத் தொடர்பும், சாதாரண மக்களை மட்டுமல்லாமல் சோழ - பாண்டிய மன்னர்களையும் கவர்ந்தன. இறைவன் ஒருவனே என நம்புதல், நாளொன்றுக்கு ஐந்து முறை இறைவனுக்கு வணக்கம் செலுத்துதல், ஆண்டுக்கு ஒரு திங்கள் உலக நலன் கருதி உண்ணா நோன்பிருத்தல், சாதி சமய பேதமின்றி அனைத்து மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து அன்பு செலுத்துதல் ஆகிய புதிய கோட்பாடுகள் தமிழக மக்களிடையே ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தின.

மதுரையம்பதியில் நின்றசீர் நெடுமாறன் என வழங்கப்பட்ட கூன் பாண்டியன், அரபு நாட்டு வணிகர்களுக்கு ஆதரவு வழங்கினான். மதுரையில் அவர்களது குடியிருப்பு அமைவதற்கு உதவினான். இதே போன்று சோழ நாட்டின் தலைநகரான உறையூரிலும் முஸ்லிம் வணிகர்கள் தங்குவதற்கு சோழ மன்னன் உதவினான். அவர்களது வழிபாட்டுத் தலம் ஒன்று உறையூரில் அமைவதற்கும் ஆதரவு நல்கினான். அந்தப் பள்ளிவாசல் (கி.பி.726) திருச்சி கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்றும் இருக்கிறது.

இத்தகைய இஸ்லாமிய அரபு வணிகர்களது குடியிருப்புகள் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் பல பகுதிகளில் எழுந்தன. அவை, அஞ்சுவண்ணம் என மக்களால் அழைக்கப்பட்டன. இந்த அஞ்சுவண்ணம் ஒன்று நாகப்பட்டினத்துக்கு அருகில் அமைந்திருந்ததை தனிப் பாடல் ஒன்றின் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

பாண்டிய நாட்டின் தென்பகுதியான நாஞ்சில் நாட்டில் திருவிதாங்கோடு அருகில் அஞ்சுவண்ணம் என்ற பெயரிலேயே ஒரு சிற்றூர் இன்றும் நிலைத்திருக்கிறது. இந்தக் குடியிருப்புகளில் வாழ்ந்து வந்த அராபிய இஸ்லாமியர், நாளடைவில் வணிகத்துடன் மட்டுமல்லாமல் சமுதாய நிலைகளிலும் தங்களைத் தொடர்பு படுத்திக்கொண்டு கலந்து தமிழ் முஸ்லிம்கள் என்ற புதிய பெயரினைப் பெற்றனர்.

வாணிபத்திற்கு அவர்கள் பயன்படுத்திய வாய்மொழியான தமிழ், இப்போது அவர்தம் வழித்தோன்றல்களின் தாய் மொழியாக மாறியது. அதுவரை சோழ - பாண்டிய மன்னர்களால் மெய்க்கீர்த்திகளிலும், கல்வெட்டுகளிலும், சோனகர் - துலக்கர் எனக் குறிப்பிடப்பட்ட இந்த மேலைநாட்டு முஸ்லிம்கள், தமிழ் முஸ்லிம்கள் என்ற தகுதியையும், அரசியல் முதன்மையையும் எய்தினர்.

இந்தப் புதிய தமிழ்ச் சமுதாயத்தினரது அணிகலன்களும், ஆடைகளும், உணவு முறைகளும் தமிழ் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. நாளடைவில் இந்தக் குடியிருப்புகளிலும், வணக்கத் தலங்களிலும் அமைக்கப்பட்ட கட்டுமானங்கள், குறிப்பாக மேற்கூரைகள், கும்ப அமைப்பில் அமைக்கப்பட்ட அலங்கார கோபுரங்கள், சாளரங்கள், முகப்பில் பயன்படுத்தப்பட்ட வில் வடிவ குதிரைக் குளம்பு அமைப்பு வளைவுகள் ஆகியவை திராவிட - இஸ்லாமிய கட்டுமானங்கள் என்ற புதிய பாணியை ஏற்படுத்தின.

தமிழகத்தில் ஏற்கனவே தழைத்து வளர்ந்து வந்த சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்கள் போன்று இஸ்லாமும் தமிழகத்தில் சமயங்களில் ஒன்றாக நிலைபெற்றது. தமிழ் சமுதாயத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக தமிழ் முஸ்லிம்கள் அங்கீகரிக்கப்பட்டனர். இத்தகைய சமய நிலையும், நோக்கும் ஏற்படுவதற்கு, அன்று அரபகத்திலிருந்து தமிழகம் வந்த இஸ்லாமிய ஞானிகளே பெரிதும் உதவினர். இவர்கள் தங்களது அரிய வாழ்வினைத் தமிழ் மக்களின் சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணித்து வந்தனர்.

தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்த தமிழ்நாட்டு பதினெண் சித்தர்களைப் போன்று இந்த இஸ்லாமிய ஞானிகளின் ஆன்மீக உபதேசங்களும் தமிழ் மக்களால் மனமுவந்து ஏற்கப்பட்டன. இந்தப் பதினெண் சித்தர்களில் ஒருவரான சதுரகிரி மலையைச் சேர்ந்த இராமதேவர் இஸ்லாத்தை ஏற்று, புனித மக்கா சென்று திரும்பினார். தமது பெயரையும் யஃகூபு சித்தர் என மாற்றி அமைத்துக் கொண்டார்.

கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் சிரியா நாட்டிலிருந்து தமிழகம் வந்த இறைநேசர் நத்ஹர், காலமெல்லாம் திருச்சிப் பகுதி மக்களது ஆன்மீக வழிகாட்டியாக வாழ்ந்து, திருச்சியிலேயே இயற்கை எய்தினார். இவர்களை அடுத்து கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் அரபுநாட்டு மதீனா நகரிலிருந்து தென்பாண்டிய நாட்டிற்கு வந்த இறைநேசர் செய்யிது இபுறாஹீம், 12 ஆண்டுகளுக்கு மேலாகப் பாண்டிய நாட்டு மக்களது ஆன்மீக வழிகாட்டியாக அரிய உபதேசங்களைச் செய்து சேதுநாட்டு ஏர்வாடியில் கி.பி. 1195-ல் புகழுடம்பு பெற்றார்.

தமிழ் முஸ்லிம்கள் சிலர் அரசியலில் முதன்மையும், செல்வாக்கும் பெற்றிருந்தனர். சோனகன் சாவூர் என்பவர் ராஜராஜ சோழனது அவையில் சிறப்பிடம் பெற்று இருந்ததுடன் தஞ்சைக் கோயிலுக்குப் பல தானங்கள் வழங்கி இருப்பதைக் கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த வணிகர், ராஜேந்திர சோழனது அவையிலும் இடம் பெற்றிருந்தார். கந்தர்வ பேரரையன் என்ற சிறப்பு விருதினையும் அந்த வணிகருக்கு ராஜேந்திர சோழன் வழங்கிச் சிறப்பித்ததை அவனது கோலார் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மன்னனின் சிறந்த அலுவலராக துருக்கன் அஹ்மது என்பவர் விளங்கியதை லெய்டன் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

இதுபோலவே கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் காயல்பட்டினத்தில் மாறவர்மன் குணசேகர பாண்டியனது அரசவையில் இருபெரும் முஸ்லிம் வணிகர்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவரான ஷேக் ஜக்கியுத்தீன், பாண்டியனது தலைமை அமைச்சராக இருந்தார். இன்னொருவரான ஷேக் ஜமாலுத்தீன், பாண்டிய மன்னனின் அரசியல் தூதுவராக சீன நாட்டுக்குப் பலமுறை சென்று வந்ததையும் வரலாற்றில் காணமுடிகிறது. 17-ஆம் நூற்றாண்டில் மிகச் சிறப்புடன் அரசோச்சிய சேது மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதியின் நல்லமைச்சராக வள்ளல் சீதக்காதி என்ற ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் விளங்கினார். டச்சுக் கிழக்கிந்திய ஆவணங்கள் இதைத் தெரிவிக்கின்றன. இவ்விதம் அரசியலில் தமிழ் முஸ்லிம்கள் முதன்மை பெற்றிருந்ததையும், அதன் காரணமாக சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமல்லாமல், மறவர் சீமை சேதுபதிகள், மதுரை நாயக்க மன்னர்கள், தஞ்சாவூர் நாயக்க - மராட்டிய மன்னர்கள் ஆகியோரது ஊக்குவிப்புகளுக்கும் தமிழ் முஸ்லிம்கள் உரியவர்களாக விளங்கியதைப் பல வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன.

இங்ஙனம் தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் சிறுபான்மையினராக விளங்கிய தமிழ் முஸ்லிம்கள், தங்களது தாய்மொழியாகக் கொண்ட தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளும் அளப்பரியவை. கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தின் ஆட்சியாளராக விளங்கிய நாயக்க மன்னர்களும், தஞ்சை மராட்டியர்களும் தமிழைப் புரக்கணித்து அவர்களது தாய்மொழியான தெலுங்கையும், மராட்டிய மொழியையும் வளர்ச்சி பெறச் செய்ததால் தமிழ்ப் புலவர்கள் அடைந்த வேதனையும் வறுமையும் பலப்பல. இத்தகைய இறுக்கமான சூழ்நிலையில் தமிழ் மொழியில் தேர்ந்து, பல புதிய இலக்கியப் படைப்புகளை முஸ்லிம்கள் யாத்து மகிழ்ந்தனர்.

தமிழ் முஸ்லிம்களது முதல் இலக்கியமான ஆயிரம் மசாலா என்ற அதிசயப் புராணம், 1572-ல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து தமிழ் யாப்பு இலக்கண வழியிலான புராணம், கோவை, கலம்பகம், அந்தாதி, பிள்ளைத்தமிழ், திருப்புகழ், குறவஞ்சி, பள்ளு என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள், தமிழ் முஸ்லிம்களால் படைக்கப்பட்டு, தமிழின் வளமைக்கும் பெருமைக்கும் அணி சேர்த்துள்ளன. குறிப்பாக தக்கலை பீர் முஹம்மது அப்பா, கோட்டாறு ஞானியார் சாஹிபு, காயல் காசிம் புலவர், குணங்குடி மஸ்தான் சாஹிபு, தொண்டி மோனகுரு மஸ்தான், அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் ஆகியோரது இன்னிசைப் பாடல்களும், இராமநாதபுரம் வெ. இபுறாஹீம் சாஹிபு போன்றவர்களின் நாடக நூல்களும் பெருமைமிகு பட்டியலில் இடம் பெற்றவையாகும். இந்தப் படைப்புகளுடன் அரபு, பார்சி, உருது ஆகிய மொழிப் புலன்களிலிருந்து பெற்ற தங்களது புலமைத் திறனை அந்த மொழிகளின் வடிவங்களான நாமா, கிஷ்ஷா, முனாஜாத் என்ற புதிய இலக்கிய வடிவங்களையும் தமிழ் மொழியில் புகுத்தி உள்ளனர். இதன் காரணமாக அந்த மொழிகளின் சொற்கள், ஏராளமான எண்ணிக்கையில் தமிழ் வழக்கில் திசைச் சொற்களாகக் கலந்து தமிழின் வளமைக்கு ஊட்டமளித்தன. அத்துடன் வளர்ந்து வரும் மொழிக்கு உதவும் வகையில் இந்த இலக்கிய வடிவங்களும் இன்னும் பல புதிய இலக்கிய வடிவங்களும் முன்னோடியாக விளங்கி வருகின்றன.


நன்றி : தினமணி.

Friday, 17 October 2008

பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்டு விடும் பட்டாசு காயங்களுக்கு முதலுதவி !! ஒரு சமூக விழிப்புணர்வு தவகல்..

தீபாவளி நெருங்கிவிட்டது. தெருக்களில் பட்டாசு சத்தம் கேட்கத் தொடங்கி விட்டது. பண்டிகை தினங்களில் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவே பட்டாசு கொளுத்தும் பழக்கம் தோன்றியது. பட்டாசு வெடிக்கும்போது மிகுந்த கவனத்துடனும் அதிக எச்சரிக்கையுடனும் பட்டாசுகளைக் கையாள வேண்டும். அலட்சியம் ஆகாது. விளையாட்டுத்தனம் கூடாது. அப்போதுதான் ஆபத்து ஏற்படாது.

சரி, என்னதான் கவனமாக இருந்தாலும் எங்கோ தவறு நேர்ந்துவிட்டது. பட்டாசு வெடித்து காயம் ஏற்பட்டு விட்டது. அப்போது என்ன செய்வது?

பட்டாசு காயங்களுக்கு முதலுதவி:

*காயம் ஏற்பட்ட உடல் பகுதியை உடனே தண்ணீரில் மூழ்கவிடுங்கள்.
*அல்லது தண்ணீரில் நனைத்த துணியால் காயத்தை அழுத்தமாக மூடுங்கள். 

பொதுவாக பட்டாசு காயங்கள் முகம், உள்ளங்கை மற்றும் கைவிரல்களில்தான் உண்டாகும். ஆனால், கையைத் தண்ணீரில் நனைப்பதற்குப் பல பேர் பயப்படுவார்கள். தண்ணீரில் நனைத்தால் கொப்புளம் ஏற்பட்டு விடும் என்று ஒரு தவறான எண்ணம் பலரிடம் உள்ளதுதான் இதற்குக் காரணம். இது உண்மையில்லை.  தீக்காயத்தைத் தண்ணீரில் எவ்வளவு விரைவில் நனைக்கிறோமோ, அந்த அளவுக்குக் காயம் ஏற்பட்ட இடத்தில் வெப்பம் குறைந்து, காயத்தின் தன்மை குறையும். அதில் கொப்புளம் ஏற்படுவதும் தடுக்கப்படும். எனவே, தீக்காயத்தைத் தண்ணீரில் நனைக்க யோசிக்க வேண்டியதில்லை.மேலும், பட்டாசு காயத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், இவ்வகைக் காயத்தில் வெப்பத்தைக் குறைப்பதே முதலுதவியின் முக்கிய நோக்கமாகும். 

*காயம் பட்ட இடம் முகமென்றால் உடனே முகத்தைத் தண்ணீரில் கழுவுங்கள்.
*கையென்றால் குழாய்த் தண்ணீரில் கையை நனையுங்கள்.
*இவ்வாறு சுமார் 15 நிமிடங்களுக்குத் தண்ணீரில் நனைத்த பின்னர், காயத்தின்மீது ’சில்வர் சல்ஃபாடயசின்’ மருந்தைத் தடவவும்.
*பிறகு, மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும். 

இப்படிச் செய்யாதீர்கள்!

தீக்காயத்தின்மீது அரிசிமாவு, பேனா மை, சீனிப்பாகு, பச்சிலை மருந்து முதலியவற்றைப் பூசுவது நல்லதல்ல. தீக்காயத்துக்குத் துணிக்கட்டுப் போட வேண்டிய அவசியமும் இல்லை. கட்டு தேவை என்று எண்ணுபவர்கள் காயத்தில் ஒட்டிக்கொள்ளாத ‘ஃபுராமைசிடின் டூல்’ எனும் மருந்துத் துணியால் கட்டுப்போட வேண்டும். அப்போதுதான் கட்டைப் பிரிக்கும்போது வலி உண்டாகாது.


இவற்றை அகற்றுங்கள்!
பட்டாசு காயம் பட்ட இடத்தில் மோதிரம், வளையல், கைக்கடிகாரம் போன்ற ஆபரணங்கள் இருந்தால் உடனே அகற்றிவிடுங்கள். காயம் வீங்கியபிறகு அவற்றை அகற்றுவது சிரமம் தரும்.
பட்டாசு காயம் கண்ணில் பட்டால்...?
*சுத்தமான குழாய்த் தண்ணீரைத் திறந்து, கண்களைத் திறந்தபடி குறைந்தது 15 நிமிடங்கள் காட்டவும்.

*அல்லது ஓர் அகன்ற பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை நிரப்பி, அதில் பாதிப்புக்குள்ளான கண்களை மட்டும் நனைத்தபடி, கண்களைத் திறந்து திறந்து மூடவும். இதையும் சுமார் 15 நிமிடங்களுக்குச் செய்ய வேண்டும்.

*மேலே சொன்ன இரண்டு முறைகளையும் செய்ய வழியில்லை என்றால், பாதிக்கப்பட்ட நபரைப் படுக்க வைத்து, கண்ணை ஒரு பக்கமாகச் சாய்த்துக் கொள்ளவும். பின்பு, பாதிப்புக்குள்ளான கண்ணின் இமைகளை மட்டும் மெதுவாகப் பிரித்துக்கொள்ளவும். இப்போது ஒரு தம்ளரில் தண்ணீரை எடுத்துக் கொண்டு, விழியின்மேல் ஊற்றிக் கழுவவும்  

 தொடர்ந்து 15 நிமிடங் களுக்கு இவ்வாறு கண்களைக் கழுவ வேண்டும்.

*காண்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால் உடனே அகற்றிவிடவும்.
*சுத்தமான பஞ்சு மற்றும் பாண்டேஜ் பயன்படுத்தி கண்ணுக்குக் கட்டுப் போடவும்.
*பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும்.

உடலில் தீப்பிடித்துவிட்டால்...?

உடலில் தீப்பிடித்தவரை ஒரு கனத்த போர்வையால் அல்லது கம்பளியால் போர்த்தி, தரையில் சாய்த்து உருட்ட வேண்டும். இதனால் தீ அணைந்துவிடும். அதன் பின்னர், போர்வையை அகற்றி விட்டு, மேலாடைகள், உள்ளாடைகள், பெல்ட் போன்றவற்றையும் அகற்றுங்கள். தண்ணீரில் நனைத்த துணியால் காயங்களைத் தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு ஒற்ற வேண்டும். காற்றோட்டமான இடத்துக்கு அவரை அப்புறப்படுத்துங்கள். சுழல்காற்றாடிகளால் அவருடைய வெப்பத்தைத் தணிக்க முயலுங்கள். பிறகு, ஏற்கெனவே சொன்னதுபோல், காயத்தின்மீது ‘சில்வர் சல்ஃபாடயசின்’ மருந்தைத் தடவ வேண்டும். காலதாமதம் செய்யாமல் பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
பாதுகாப்புக்கு 10 வழிகள்!
*பட்டாசுகளை வாங்கும்போது, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள பட்டாசுகளை மட்டுமே வாங்குங்கள். தனித்தனியாகப் பிரித்து குவித்து வைத்துள்ளவற்றை வாங்க வேண்டாம். அவை பாதுகாப்பற்ற முறையில் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம்.

* வீட்டுக்குள் மற்றும் தெருக்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

*வீட்டு மாடி, பூங்கா அல்லது விளையாட்டு மைதானங்களில் பட்டாசு வெடிப்பது நல்லது.

*டெர்லின், நைலான், பாலிஸ்டர், பட்டு போன்ற ஆடைகள் அணிந்து கொண்டு பட்டாசு வெடிக்காதீர்கள்.

*பருத்தி ஆடைகளைத் தளர்வாக அணிந்துகொண்டு பட்டாசு வெடியுங்கள்.

*கம்பி மத்தாப்பு தவிர வேறு எந்தப் பட்டாசையும் கைகளில் வைத்துக் கொண்டு வெடிக்காதீர்கள். தரையில் வைத்துத் திரியைப் பற்ற வையுங்கள். முகத்தை வெடிக்கு நேராக வைத்துக் கொண்டு கொளுத்தாதீர்கள். பக்கவாட்டில் நின்று கொண்டு திரியைக் கொளுத்துங்கள். தீப்பொறி பட்டாசில் பற்றிக்கொண்டதும் பின்நோக்கி நகர்ந்து கொள்ளுங்கள்.

*பட்டாசுத் திரியில் தீப்பற்றியதும் அது வெடிக்கவில்லை என்றால் அதன் அருகில் சென்று ‘என்ன ஆயிற்று?’ என்று பார்க்காதீர்கள். அருகில் சென்றதும், திடீரென்று அது வெடித்துவிடலாம். மாறாக, அந்தப் பட்டாசின் மீது தண்ணீரை ஊற்றிவிடுங்கள்.

*சட்டைப்பையில் வெடிகளை வைத்துக்கொண்டு பட்டாசு வெடிக்காதீர்கள்.
*பட்டாசுகளை வெடிக்கும்போது ஒரு வாளி தண்ணீரை அருகில் வைத்துக்கொள்வது நல்லது.

*குழந்தைகளைத் தனியாகப் பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது. பெற்றோர் மேற்பார்வையில் மட்டுமே அவர்கள் வெடிகளைக் கொளுத்த அனுமதிக்க வேண்டும்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Thursday, 16 October 2008

பங்குசந்தை என்றால் என்ன? ஒரு சிறப்பு பார்வை....

நிறைய பேர்களுக்கு ஷேர் மார்க்கெட்டில் இறங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும்கூட, அது புரிந்துகொள்வதற்கு கஷ்டமான விஷயம் என்று நினைத்து ஒதுங்கிவிடுகிறார்கள். இது தவறான எண்ணம்! உண்மையில் ஒரு பள்ளி மாணவன்கூட பங்குச் சந்தை பற்றி எந்தக் குழப்பமும் இல்லாமல் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்!
எல்லா ஊர்களிலும் இருக்கும் காய்கறி மார்க்கெட் போன்றது தான் பங்குச் சந்தையும். காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளை விற்பனை செய்வார்கள். பங்குச் சந்தையில் ஒரு கம்பெனியின் பங்குகளை விற்பனை செய்வார்கள். காய்கறி மார்க்கெட்டில், 'அரைக் கிலோ கத்திரிக்காய் போடுங்க’ என்று கேட்கிற மாதிரி, '100 அசோக் லேலண்ட் பங்கு கொடுங்க; 100 இந்தியன் பேங்க் கொடுங்க’ என்று வாங்கலாம். பங்குச் சந்தையில் இன்னொரு வசதி, வாங்கிய பங்குகள் வேண்டாம் என்று நினைத்தால் உடனே விற்கவும் செய்யலாம்!
முன்பெல்லாம் காய்கறி வாங்க வேண்டும் என்றால் கடைக்குத்தான் போயாக வேண்டும். ஆனால் இப்போது பெரிய நகரங்களில் ஒரு போன் செய்தாலே நாம் கேட்கிற காய்கறியை நம் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுத்துவிடுகிறார்கள். அது மாதிரிதான் முன்பெல்லாம், பங்குச் சந்தைக்கு நேரடியாகப் போய்த்தான் பங்குகளை வாங்க வேண்டும் அல்லது விற்க வேண்டும். ஆனால் இப்போது நாம் எங்கும் அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே பங்குச் சந்தை புரோக்கருக்கு ஒரு போன் செய்தால் போதும்; நமக்குத் தேவையான பங்கை வாங்கித் தந்துவிடுவார், அல்லது விற்றுக் கொடுத்துவிடுவார்.
பங்குச் சந்தை பற்றி மேலும் அறிந்து கொள் வதற்கு முன்பாக, ஷேர் அல்லது பங்கு என்றால் என்ன என்பதை முதலில் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஜூவல்லரி கடை நடத்தும் ஒரு பிஸினஸ்மேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நான்கைந்து ஊர்களில் நகைக்கடை இருக்கிறது. கடந்த பல வருடங்களாக அவை லாபகரமாகவும் நடந்து வருகிறது... தரம், வாடிக்கையாளர் சேவை, குறைந்த விலை போன்றவற்றால் உங்கள் தொழிலுக்கு இன்னும் நல்ல வாய்ப்பு உள்ளது என்று தெரிகிறது. இந்நிலையில் பிஸினஸை டெவலப் செய்தால் இன்னும் பெரிய லெவலுக்குப் போய்விடலாம் என்று நினைக்கிறீர்கள். ஆனால் தொழிலை விரிவு படுத்த நிறைய பணம் தேவைப்படுகிறது. கையில் அவ்வளவு பணம் இல்லை. கடன் வாங்கி இறங்கவும் விருப்பமில்லை... இதுபோன்ற நிலையில் என்ன செய்வது? ஒன்று செய்யலாம்... யாராவது ஒருவரையோ அல்லது சிலரையோ உங்கள் தொழிலில் பார்ட்னராகச் சேர்த்துக்கொண்டு இறங்கலாம்.
ஆனால், ஒருவரையோ அல்லது ஒரு சிலரையோ பார்ட்னர்களாகக் வைத்துக் கொள்வதைவிட பல பேர்களை பார்ட்னராகச் சேர்த்துக்கொள்வது தான் புத்திசாலித்தனம். எப்படி என்கிறீர்களா? ஒருவேளை யாராவது ஒருவரிடம் அதிகப் பங்குகள் இருந்தது என்றால் பின்னாளில் அவர்கள் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தலாம். ஒருவேளை நீங்கள் அந்தத் தொழிலை விட்டே வெளியேற வேண்டிய நிலைகூட ஏற்படலாம். அதுவே ஆளுக்குக் கொஞ்சமாக நிறைய பேர்கள் பங்குகளை வைத்திருந்தால் அவர்களால் உங்களுடைய தொழிலுக்கு பெரிய அளவில் சிக்கல்கள் ஏற்படாது. இது போல் இன்னும் பல சௌகரியங்கள் இதில் உள்ளன. (அதற்காக அசௌகரியங்களே இல்லாமல் போய்விடுமா என்ன! அதை பிற்பாடு பார்ப்போம்!)
சரி, நீங்கள் தொழிலை விரிவுபடுத்த பங்கு முதல்* (சிணீஜீவீtணீறீ) திரட்டுவது என்று முடிவு செய்துவிட்டீர்கள். தற்போது உங்கள் தொழிலில் உங்களது பங்கு முதல் 8 கோடி (10 முகமதிப்பு* கொண்ட 80 லட்சம் பங்குகளாக இருக்கிறது) என்று வைத்துக் கொள்வோம். மேலும் சில நகரங்களில் கடை ஆரம்பிக்க இன்னும் நாற்பது கோடி தேவைப்படுகிறது. நீங்கள் உங்களது 80 லட்சம் பங்குகளை அப்படியே வைத்துக் கொண்டு, உங்கள் நிறுவனத்தில் புதிதாக 10 முகமதிப்புள்ள, 20 லட்சம் பங்குகளை சந்தையில் சென்று விற்கிறீர்கள். நீங்கள் இவ்வளவு நாள் தொழிலில் வெற்றிகரமாக இருந்ததால், பத்து ரூபாய் பங்கை 200 க்கு விற்கிறீர்கள். அதாவது, ஒரு பங்குக்கு 190-ஐ பிரீமியமாக வைத்து விற்கிறீர்கள்!
'இதென்ன கதை? பத்து ரூபாய் பங்கை இருநூறு ரூபாய் கொடுத்து யாராவது வாங்குவார்களா?’ என்று நீங்கள் கேட்கலாம். சாதாரண ஓட்டலில் இரண்டு இட்லி 8. இரண்டு தெரு தாண்டிப் போனால் அந்த பெரிய ஓட்டலில் இரண்டு இட்லி 14. 'அதே இட்லிதானே! எதற்கு 6 அதிகம் கொடுக்க வேண்டும்’ என்று நாம் கேட்பதில்லையே! காரணம், அந்த 6 தான் அந்த ஓட்டலுக்கு நாம் கொடுக்கும் பிரீமியம்! அந்த ஓட்டலில் நாம் இட்லி சாப்பிட வேண்டும் என்றால் அந்த விலையைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். இந்த பிரீமியத்தை எவ்வாறு கணக்கிடுகிறார்கள் என்பதை வரும் வாரங்களில் விளக்கமாகப் பார்ப்போம். இப்போதைக்கு, லாபகரமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு கடையை நீங்கள் விற்றால் குட்வில் அல்லது நிந்தம் என்பதை எதிர்பார்ப்பீர்கள் அல்லவா? அது போலத்தான் இந்த 190 பிரீமியமும் என்பதைத் தெரிந்து கொண்டால் போதும்.
ஆக இப்போது உங்கள் நிறுவனத்தில் மொத்தம் ஒரு கோடி (ஏற்கனவே உங்களிடம் இருந்த பங்குகள் 80 லட்சம்+புதிதாக நீங்கள் விற்ற 20 லட்சம் பங்குகள்) பங்குகள் உள்ளன. பொதுமக்களிடம் இப்பங்குகளை விற்றதால், நீங்கள் உங்களது நிறுவனப் பங்குகளை பங்குச் சந்தையில் (என்.எஸ்.இ/பி.எஸ்.இ* போன்ற சந்தையில்) சென்று லிஸ்ட் செய்ய வேண்டும். இம்முறையினால் யார் வேண்டுமானாலும் உங்களது நிறுவனப் பங்குகளை வாங்கலாம் அல்லது விற்கலாம். இதுதான் ஷேர் அல்லது பங்கு உருவாகும் கதை..

கவிஞர் கண்ணதாசன் கண்ட இஸ்லாம்!! ஒரு சிறப்பு பார்வை ...

இஸ்லாமியத் திருமறையின் பெருமைகளையெல்லாம் நன்குணர்ந்த கவிஞர் கண்ணதாசன் திருக்குர்அனின் சிறப்புகளையெல்லாம் ஓர் அழகிய கட்டுரையாக வழங்கியுள்ளார். கண்ணதாசனின் இஸ்லாமிய புலமைக்கு அந்தக் கட்டுரை சான்றாக அமைகின்றது. 'ஞானரதம்' 1978 மே இதழில் வெளியான அந்தக் கட்டுரையில் கவிஞர் கண்ணதாசன் கீழ்க் கண்டவாறு திருக்குர்ஆனின் சிறப்புக்களை எடுத்துறைக்கிறார்.

'உலகமெங்கும் பல மொழிகளில் இஸ்லாமியத் திருமறை திருக்குர்ஆன் வந்துள்ளது. இந்தத் திருமறை ஒரு ரமளான் மாதத்தில் துவக்கப் பட்டு பல கட்டங்களில் இருபத்து மூன்று ஆண்டுகளில் இறைவனால் கூறப்பட்டது.

மக்காவில் உபதேசிக்கப் பட்டது ஒரு பகுதி. மறு பகுதி மதினாவில் உபதேசிக்கப் பட்டது.

பெரும்பாலும் எல்லா மதத்து வேதங்களுக்குள்ளும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. எல்லாமே சத்தியத்தை அடிப்படையாகக் கொண்டவை. மக்களை ஒழுங்காக வாழ வைப்பவை.

இறைவனுக்கு இணை வைத்துப் பேசக் கூடாது: வணங்கக் கூடாது என்று இத்திருமறையிலேயே கூறப்படுகிறது. அதனால் பிற மத நூல்களை ஒப்புவமை கூற நான் விரும்பவில்லை.

பொது நோக்கில் இஸ்லாமியத் திருமறை சமூக வாழ்க்கையைப் பேசுகிறது: பொருளாதாரத்தைப் பேசுகிறது: லாபத்தில் எவ்வளவு சதவீதம் ஏழைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்பதையும் கூறுகிறது: சொத்துப் பிரிவினை, பெண்ணுரிமை அனைத்தையும் விவரிக்கிறது.

இத்திருமறை ஒரு வேதமாக மட்டுமின்றிச் சமய மக்களுக்கு சிவில் சட்டமாகவும் பயன்படுகிறது.

எனக்குத் தெரிந்து ஒரு மூல வேதம் குடும்ப வாழ்க்கையை இவ்வளவு விவரமாக விவரிப்பது இத்திருமறை ஒன்றே!

திருக்குர்ஆனை முழுமையாகப் படித்தவர்கள் சராசரி குடும்ப வாழ்க்கையை ஒழுங்காக நடத்த முடியும்.

இது ஒரு தெய்வீக போதனை நூலாக மட்டுமின்றி சமூக வாழ்க்கைக்கான நியாய நூலாகவும் இருப்பதால் எல்லா மக்களும் இதைப் படிக்க வேண்டும்.

அல்லாஹ் எல்லையற்ற பேராளன்: கருணைக் கடல்: கஷடப்படுபவர்களை எப்போதும் அவன் திரும்பிப் பார்க்கிறான் - இந்தச் செய்தி ஒரு மனிதனை மத நம்பிக்கையில் அழுத்தமாக வேரூன்றச் செய்வதற்கு நிச்சயமாகப் பயன்படும்.

இறைவன் அனுப்பிய தூதுச் செய்தியை உலகுக்குத் தெரிவித்த திருத் தூதராகவே நபிகள் பெருமகனாரும் கருதப் படுகிறார்.

பெருமகனாருக்கு முன்னால் வேறு சில தூதர்களையும் வேறு சில வேதங்களையும் உலகின் பல்வேறு பாகங்களுக்கு இறைவன் அனுப்பியிருந்தான் என்ற செய்தியும் இதில் காணப்படுகிறது. நம்பிக்கை வைப்பதை இது மேலும் அதிகப் படுத்துகிறது.

இது ஒரு சமய நூல் மட்டும் அன்று: சரித்திர நூல்: சமூக நூல்.

எல்லா மதத்தவரும் இதைப் படிக்க வேண்டும்.

-கண்ணதாசன்,
ஞானரதம
மே, 1978

திருமறையின் தோற்றுவாய்க்கு கண்ணதாசனின் மொழி பெயர்ப்பு :

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்எல்லையில்லா அருளாளன்
இணையில்லா அன்புடையோன்
அல்லாஹ்வைத் துணைகொண்டு
ஆரம்பம் செய்கின்றேன்.

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்உலகமெலாம் காக்கின்ற
உயர்தலைவன் அல்லாவே
தோன்றுபுகழ் அனைத்திற்கும்
சொந்தமென நிற்பவனாம்

அர் ரஹ்மானிர் ரஹீம்அவன் அருளாளன்:
அன்புடையோன்:

மாலிகி யவ்மித்தீன்

நீதித் திருநாளின்
நிலையான பெருந்தலைவன்:

இய்யாக்க நவ்புது
வ இய்யாக்க நஸ்தயீன்


உன்னையே நாங்கள்
உறுதியாய் வணங்குகிறோம்:
உன்னுடைய உதவியையே
ஓயாமல் கோருகிறோம்

இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம்நேரான பாதையிலே
நீ எம்மை நடத்திடுவாய்:

ஸிராத்தல்லதீன அன்அம்த அலைஹிம்
ஹைரில் மஹ்லூபி அலைஹிம்
வலள்ளால்லீன்
எவர் மீது உன் கோபம்
எப்போதும் இறங்கிடுமோ
எவர்கள் வழிதவறி
இடம் மாறிப் போனாரோ
அவர்களது வழி விட்டு
அடியவரைக் காத்து விடு!

எவ்வளவு அழகாக எளிய தமிழில் கவிஞரின் மொழி பெயர்ப்பு வந்துள்ளது! இது அல்லாமல் திருக்குர்ஆன் முழுமைக்குமே விளக்கவுரை எழுத கண்ணதாசன் அவர்கள் விருப்பப் பட்டார். அந்த எண்ணம் முஸ்லிம் அன்பர்கள் சிலரின் எதிர்ப்பால் தடைப் பட்டுப் போயிற்று. குடிப் பழக்கத்துக்கு அடிமையானவர் குர்ஆனுக்கு உரை எழுதக் கூடாது என்று மார்க்க அறிஞர்கள் ஒரு சிலரின் எதிர்ப்பால் அந்த முயற்சி தடைப் பட்டது. குர்ஆன் என்பது எந்த ஒரு நபருக்கும் சொந்தமானதல்ல. உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமான ஒன்று.

'இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. குர்ஆன் மனிதர்களுக்கு நேர்வழியைக் காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். பொய்யை விட்டு உண்மையை பிரித்துக் காட்டும்'
-குரஆன் 2 : 185

என்று இறைவன் பல இடங்களில் மனித குலத்துக்கு சொந்தமானது என்று கூறியிருக்க எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கண்ணதானின் மொழி பெயர்ப்பை இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்த்தனர். முகமது நபியை வெட்டுவதற்கு வாள் எடுத்து வந்த உமரை இஸ்லாமிய ராஜ்ஜியத்தின் ஜனாதிபதியாக்கியது இதே குர்ஆன் வசனங்கள் அல்லவா! கண்ணதாசன் குர்ஆனை மொழி பெயர்க்கும் காலங்களில் இறைவனின் வார்த்தைகளில் கட்டுண்டு மதுவையும், மாதுவையும் விடுவதற்கு மொழி பெயர்ப்பு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும் அல்லவா!

இது சம்பந்தமாக கவிஞரே 1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளி வந்த 'ஞானரதத்தில்' அறிக்கை ஒன்றும் விடுத்துள்ளார்:

'இஸ்லாமிய நண்பர்கள் பலரின் வேண்டுகோளுக்கினங்க திருக்குர்ஆன் உரை எழுதுவதை நான் நிறுத்தி விட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இஸ்லாமியத் திருமறையின் தமிழுரையைத் துவக்கி வைத்ததோடு அப்பணியை முடித்துக் கொள்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'
-கண்ணதாசன், 30.12.1977

Wednesday, 15 October 2008

திருக்குர்ஆனைப் பின்பற்றும் முஸ்லிம்கள் ஏன்திருக்குறளை பின்பற்றக் கூடாது ?

ஓர் மாற்று மத நண்பர் கேட்ட கேள்வி. திருக்குறள் 2000 ஆண்டிற்கு முந்தையது ஏன் நீங்கள் திருக்குறளை பின் பற்றி வாழக்கூடாது?
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செல்களை பற்றி அறிவியல் பற்றி சித்தர்கள் கூறியுள்ளனர் நீங்கள் குர்ஆன் இறைவேதம் என்பதற்கு அறிவியலை சான்றாய் எடுத்து அதை பின் பற்றுங்களேன் ....என்று கேட்கிறார்.இதுகுறித்து விளக்குங்களேன் !

ஒரு மிக்சியோ கிரைண்டோ பைக்கோ எதுவாக இருந்தாலும் அதை விலை கொடுத்து வாங்கிய நம் இஷ்டப்படி பயன்படுத்தினால் அதிலிருந்து கிடைக்கவேண்டிய பலனைப் பெற முடியாது ! அதை தயாரித்த நிறுவனத்தின் வழிகாட்டுதல் படி பயன்படுத்தினால்தான் அதன் பலனைப் பெறமுடியும் அதுபோலத்தான் மனிதனும் தன் மனோஇச்சையில் உருவான வழிகாட்டுதலின் படி நடந்தால் பலனிருக்காது ! மனிதனைப் படைத்த இறைவனின் வழிகாட்டுதலின் படி நடந்தால் தான் பிறவிக்கான பயனை அடையமுடியும்!
முஸ்லிகளாகிய நாங்கள் முக்காலங்களையும் உணர்ந்த இறைவனுடைய திருக்குர்ஆன் எனும் இறைவழி காட்டலின்படி வாழ்கிறோம்!
ஆனால் திருக்குறள் என்பது திருவள்ளுவர் எனும் மனிதருடைய வழிகாட்டுதல்! அதில் ஓரிறைக் கொள்கை, உருவ வழிபாடு இல்லாமை என நிறைய இஸ்லாத்துக்கு உடன்பாடான கருத்துக்கள் உள்ளன ! ஆனால் அது ஒரு மனிதன் அன்றைக்கு தன காலத்தில் இருந்த அறிவைக் கொண்டு கூறி இருப்பதால் அது இன்றைய வாழ்வுக்கு முழுமையாகப் பொருந்தாது !
உதாரணமாக அறிவியலுக்கு முரணாக சந்திரனை பாம்பு விழுங்குவதால் கிரஹணம் ஏற்படுவதாக கூறுகிறது!
கொல்லாமை புலால் உண்ணாமை பற்றிப் பேசுகிறது உலகின் 80 % மக்கள் புலால் உண்ணாமல் இருந்தால் என்னாகும் ! ஆடு மாடெல்லாம் பல்கிப் பெருகி மனிதன் வாழ இடமின்றி போகும்! துருவப் பிரதேசங்களில் மீனை மட்டும் உண்டு வாழும் மக்களும் , மீனவர்களும் வாழ முடியாது!
பிற தெய்வம் தொழாது தன் கணவனாகிய தெய்வத்தைத் தொழுது துயில் எழுபவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யுமாம்! என்று பெண்ணடிமைத்தனமான கருத்து மட்டுமில்லாமல் அறிவியலுக்கு முரணான இது போன்ற ஏராளமான கருத்துக்கள் உள்ளன ! இதுபோன்ற எந்த முரணையும் நீங்கள் குர்ஆனில் காணமுடியாது
மேலும் சித்தர்கள் என்ன செல் ஆராய்ச்சி செய்தார்கள் என்பதை ஆதாரத்துடன் விளக்கவும்! அப்படி ஓரிரு விஷயங்கள் இருக்கலாம்! பிறப்பு முதல் இறப்பு வரை முழு மனித வாழ்வுக்கும் வழி காட்டும் மறையா அது ? இல்லை!
ஒரு தத்துவம் எல்லாக் காலத்திற்கும், எந்த நிலப்பகுதி க்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்! எந்த ஒரு மனிதனும் பின்பற்றக் கூடியதாக இருக்க வேண்டும் !
மேலும் இஸ்லாம் மனிதர்கள் சுயசிந்தனையில் உதித்த சட்டதிட்டங்களைக் கொண்டதில்லை! அது காலத்திற்கு ஏற்ப மாறுவதில்லை ! அது எந்நாளும் எவ்விடமும் பொருந்தும் இறைவன் வகுத்த சட்டங்கள் !
படைத்த இறைவன் தந்த இறை வழிகாட்டுதல்!
மேலும் அறிவியலை துணைச் சான்றாக கூறுகின்றோமே தவிர அதுவே முழுச் சான்றாக கூறுவதில்லை ! இஸ்லாம் இறைவழிகாட்டுதல் தான் என்பதற்கு எத்தனையோ சான்றுகள் உள்ளன!

Sunday, 28 September 2008

உலகின் 3வது மிகப்பெரிய பிரம்மாண்டமான மசூதி !! (Sheikh Zayed Grand Mosque in Abu Dhabi)

Sheikh Zayed Grand Mosque in Abu Dhabi, UAE
உலகின் 3வது பிரம்மாண்டமான 
மிகப்பெரிய மசூதி அபுதாபியில் உள்ள ஷேக் சையதுமசூதி ஆகும் . ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் தலைநகரான 
அபுதாபியில் உள்ள இந்த மசூதி உலகப் பிரசித்திப் பெற்றதாகும்.

கட்டிடக் கலையின் பாரம்பரிய பெருமை பேசும் இந்த பிரம்மாண்ட மசூதி, காண்போரை வியப்பில் ஆழ்த்தும். 

ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் உள்ள மசூதிகளில் மிகவும் பெரிய மசூதி இதுவேயாகும். மொத்த பரப்பளவு 30 ஏக்கர். 

இதில் மசூதி கட்டிடம் 12 ஹெக்டேரில் அமைந்துள்ளது. கட்டிட வளாகம் 960 அடி நீளமும், 1380 அடி அகலமும் கொண்டது.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொழுகையின் போது ஒரே நேரத்தில் 46 ஆயிரம் பேர் கூடுவார்கள். வாகனங்கள் நிறுத்துவதற்கு விசாலமான இடம் உள்ளது. நூலகம், வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

அறிவியல், நாகரீகம் இஸ்லாமிய பண்பாடு கலாச்சாரம், நாணயங்கள் என்று பல்வேறு தலைப்புகளில் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. 200 ஆண்டுகளுக்கு முன் முக்கிய அரிய வகை புத்தகங்கள் இங்கு இருப்பது தனிச்சிறப்பு.

மசூதியில் தொழுகை மண்டபத்தில் தரையில் விரிக்கப்பட்டிருக்கும் தரை விரிப்பு அதாவது கம்பளம் உலகில் மிகமிக நீளமான கம்பளமாகும். ஈரான் நாட்டின் கார்ப்பெட் கம்பெனி வடிவமைத்து ( கைவினைக் கலைஞர் அலி சாலிக்) கண்கவர் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் எடை 35 டன். முழுக்க முழுக்க கம்பளியால் தயாரான தரை விரிப்பு இது.
ஜெர்மன் நாட்டின் மூனிச் நகரிலிருந்து பிரபல பாஸ்டிக் நிறுவனத்திடமிருந்து ராட்சத சாண்டிலியர்களை (சரவிளக்கு) இறக்குமதி செய்து பொருத்தியுள்ளனர்.

33 அடி விட்டமும், 49 அடி உயரமும் கொண்ட சாண்ட்லியர்கள் இவை. தொழுகை நடைபெறும் மண்டபத்தில் மொத்தம் 96 ராட்சத தூண்கள் உள்ளன. இவை சலவைக் கற்களால் வடிவமைக்கப்பட்டவை. 

 தொகுப்பு : மு.அஜ்மல் கான் .


In English ..
As you cross the bridge onto the island of Abu Dhabi, the Sheikh Zayed Grand Mosque greets you with a shock of white marble, domes, and minarets. It is an incredible structure that, even after seeing it daily on my morning commute for over two years, still continues to amaze me.  My Cousin & Friends  recently visited the mosque for the fifth time and still felt enamored by the architecture, beauty, and tranquil atmosphere. No trip to Abu Dhabi would be complete without a visit to the Grand Mosque.
The Sheikh Zayed Grand Mosque has many special and unique elements..
The green carpet is made of tons of fine cotton, superior silk and soft wool, and is a reflection of the roof mosaics and chandeliers. The carpet’s design was created by a sophisticated computer system and was handmade by around 1,200-1,300 carpet knotters and includes 25 natural colors. The raw material of these colors comes from the roots, the peels and the branches of different kinds of trees and plants. Two different kinds of fine wool, brought from New Zealand and Iran, were used in the manufacturing of the carpet.
One of the unique features is the subtlety of the prayers’ lines knotted into the carpet itself. The indication lines do not detract from the design, although when the prayers commence, worshippers can easily identify the lines in which to stand. The size of the carpet is 5,700 square meters and it was manufactured in approximately 20 months.

Approx. 30 tons of wool and 15 tons of cotton were used in manufacturing the carpet. 5,000,000,000 knots!

The mosque has seven chandeliers imported from Germany that incorporate millions of Swarovski crystals, the largest has a 10 m diameter and a 15 m height and weighs over 9 tonnes .

The pools along the arcades reflect the Mosque’s spectacular columns, which become even more glorious at night. The unique lightning system was designed by lightning architects Jonathon Speirs and and are designed to reflect the phases of the moon. Beautiful bluish gray clouds are projected in lights onto the external walls and get brighter and darker according to the phase of the moon. When the moons crescent is small the clouds are darker and gradually becomes lighter as the moon becomes full

The 96 columns in the main prayer hall are clad with marble and inlaid with mother of pearl, one of the few places in the world where you will see this craftsmanship. The 99 names (qualities or attributes) of Allah (God) are featured on the Qibla wall in traditional Kufi calligraphy, The Qibla wall also features subtle fibre-optic lighting, which is integrated as part of the organic design
.
Sheikh Zayed Grand Mosque – Key Facts
  • constructed using 100,000+ tons of pure white Greek and Macedonian marble
  • home to one of the world’s largest marble mosaic
  • roof features 80+ marble domes 
  • main dome is the largest mosque dome in the world sitting at 85 metres high with a diameter of 32.8 metres
  • houses the world’s largest hand-knotted carpet
  • burial place of the late Sheikh Zayed bin Sultan Al Nahyan, first President of the UAE, is located beside the mosque.
  • Opening Times (for tourists): 
    Sat – Thurs: 9am to 10pm & Friday's: 4:30 pm till 10pm (Last entry is 9.30pm
If you are not Muslim, visiting a mosque (especially this mosque) may be a bit intimidating. Upon arrival there is a clear sense that there are rules to follow. However, if you’ve never visited a mosque, the rules themselves might be a mystery. Here’s what you need to know:

Before You Go..

  • Check your camera batteries. I know, I couldn’t give you more basic advice but the truth is it’s happened to me. I took my sister to visit the mosque and as soon as we alighted the steps, my camera died and hers was close behind. Truly, the mosque is gorgeous and you’re going to want photographs.
    Sheikh Zayed Grand Mosque floor
  • Dress accordingly. Mosques have strict dress codes. It’s a sign of respect if you arrive prepared.
  • For the gentlemen: No tank tops and no shorts. Pretty easy.
  • For the ladies: You will be provided with an abaya (loose fitting robe) and shaila (headscarf) near the entrance but you should still enter the grounds dressed respectfully. Only wear loose clothing that covers your arms and your knees (to the ankles is even better). Here’s a little tip: Wearing your hair in a high bun or ponytail will help keep your slippery shaila on your head and covering your hair.
    Sheikh Zayed Grand Mosque windows
  • For everyone: Shoes must be removed before entering the mosque so slip ons are recommended.

While You’re There..

  • Join a tour. Tours are 60 minutes long and run several times a day except Friday. A tour is essential to your visit to the mosque. How else will you learn about the world’s largest chandelier (in a mosque) and the world’s largest hand-knotted carpet? The architecture, décor, and building materials of the mosque were chosen very deliberately. Your tour guide will be able to tell you all about it.
  • Ask questions. Really. This is your chance. The tour guides welcome and encourage all respectful questions about Islam or the Emirati culture. Emiratis make up less than 17% of the total population in the UAE. This might be the only time during your visit that you meet a local.
  • Remain respectful. Inside the mosque women must keep their hair covered. This is why you have a shaila. But as I mentioned before, shaila’s are slippery. You might want to ask a friend to be on hair patrol for you. Also, refrain from any displays of affection between men and women. This means no touching. Even when posing for photographs.
  • Hands off. Do not touch the Quran. I repeat. Do not touch the Quran.

As You Exit..

  • Slip on shoes. Don’t worry. They’ll still be there.
  • Return borrowed clothing. Bins are available to deposit worn shailas and abayas.
Visiting the Sheikh Zayed Grand Mosque is truly a cultural and educational experience. Each time  visit, I learn something new about the mosque, Islam, or the Emirati culture. I hope that if you come to the Emirates you’ll schedule a little time in your itinerary for the Grand Mosque and arrive feeling not intimidated but prepared and able to enjoy this incredible monument.

Prepared & Collection by M.Ajmal Khan.