Friday, 15 April 2011

மதி மயங்கும் மாணவர்கள்.....

மாணவப் பருவம் ஓர் இளமைப் பருவம்! இளமைப் பருவம் என்பது எப்போதும் ஒரு கலவரப் பருவம்! அதைக் கலவரப்படுத்தி, தன் கைவசப்படுத்துவதற்காகப் பல்வேறு தீமைகள் படையெடுத்து வந்து காத்துக் கொண்டிருக்கின்றன.
அந்தத் தீமைகளில் தலையாயது காதல் என்ற பெயரில் உள்ள காமம்! அடுத்து போதை, சூதாட்டம் என தீமைகளின் பட்டியல் நீள்கின்றது. குறைந்தபட்சத் தீமை புகைப் பழக்கமாவது ஒரு மாணவனை ஆட்கொள்ளாமல் விடுவதில்லை. சுற்றிலும் தீமைகளின் தீ நாக்குகளைக் கொண்ட ஒரு வளையத்தின் மத்தியிலும் பற்றி எரியாமல் இருக்கும் ஒரு சூடத்தைப் போன்று அவற்றிலிருந்து தப்புகின்ற, மதி மயங்காத மாணவர்களும் இருக்கின்றார்கள்.
பளிங்கு போன்ற தெளிந்த உள்ளத்தைக் கொண்ட இத்தகைய மாணவர்களிடம் தான் பல இஸ்லாமிய இயக்கங்கள் தங்கள் பார்வைகளைத் திருப்புகின்றனர். தங்கள் கருத்துக்களை அவர்களிடம் பதிய வைக்கின்றனர். அலை மோதிய பல்வேறு பயங்கரத் தீமைகளிலிருந்து தப்பிய மாணவர்கள் இந்த இயக்கங்களிடம் மதி மயங்கி விடுகின்றனர். தடம் மாறி விடுகின்றனர். அந்த இயக்கங்களில் ஒன்று தப்லீக் ஜமாஅத்! இது ஒரு வழிகெட்ட இயக்கம் என்பதற்கு வானளாவிய ஆதாரம் தேவையில்லை. இவர்கள் தொழுகைக்குப் பின்னர் கூட்டம் கூட்டமாகக் கூடியிருந்து தஃலீம் தொகுப்பு என்ற புத்தகத்தைப் படிப்பார்கள். அப்போது அவர்களிடம், குர்ஆன் தர்ஜுமாவைப் படியுங்கள் என்று சொன்னால் போதும். அவர்களுடைய முகம் அல்லாஹ் சொல்வது போன்று மாறி விடும்.
இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்ததுஅவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.  (அல்குர்ஆன் 74:49-51(
கண்ட கண்ட குப்பைகளைப் படிக்கும் இவர்களிடம், கண்ணியமிக்க குர்ஆனைப் படியுங்கள் என்று சொன்னால் கோபக் கனல் வீசுகின்றது. இவர்கள் வழிகெட்ட இயக்கம் என்பதற்கு இது சிறந்த ஒரு அடையாளம். இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் படிப்பு, குடும்பம், வேலை அனைத்தையும் உதறித் தள்ளி விட்டு மனம் போன போக்கில் அலைகின்றனர்.
அடுத்து, ஜமாஅத்தே இஸ்லாமி சிந்தனையைப் பின்னணியாகக் கொண்ட இயக்கங்கள். இந்த இயக்கங்கள் அனைத்தும் ஜனநாயகத்தை ஷிர்க் என்று சுற்றி வளைத்துக் கொண்டு நிலை நிறுத்துவார்கள். ஆனால் திருக்குர்ஆனும் ஹதீசும் நேரடியாகவே கண்டிக்கின்ற இணை வைப்பை, ஷிர்க்கை, சமாதி வழிபாட்டை இவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். இதிலிருந்தே இவர்களது வழிகேட்டைப் புரிந்து கொள்ளலாம். மேலும் இவர்களின் அழைப்புப் பணி, நட்சத்திர விடுதி அழைப்புப் பணியாகும். நாற்சந்தி, நடுவீதி அழைப்புப் பணி அல்ல!
இந்த இயக்கங்களின் வார்ப்பாக வந்த எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் போன்ற இயக்கங்கள் கடைந்தெடுத்த வழிகேட்டில் இருக்கின்றன. துவக்கத்தில் ஜனநாயகம் ஷிர்க், ஜிஹாத், இஸ்லாமிய ஆட்சி என்று புரட்சிகரமாகப் பேசி புறப்பட்ட இவர்கள் காலப் போக்கில் தலை கீழாக மாறி, தறி கெட்டுப் போய், தேசத்தைப் பொதுவாக்குவோம்; அரசியலை நமதாக்குவோம் என்று வெற்றுக் கூச்சல் போடுகின்றனர்.
தமுமுகவாவது தேர்தல் களத்திற்கு வந்த பிறகு தான் சாமியாருக்கு ருகூவு செய்தார்கள். ஆனால் இவர்கள் தேர்தல் களத்திற்கு வருவதற்கு முன்பே அரசியல் ஆதாயத்திற்காக சாமியார்களுக்கு ஸஜ்தா செய்வார்கள் போல் தெரிகிறது. பொங்கல் வாழ்த்து, விநாயகர் சதுர்த்தி வாழ்த்து, கிறிஸ்துமஸ் வாழ்த்து என்று தேர்தல் களத்தில் குதிப்பதற்கு முன்பே தங்களை வழிகெட்ட அமைப்பினர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இன்றைய கல்லூரி மாணவர்களில் சிலர் இவர்கள் விரிக்கும் மாய வலைகளில் விழுந்து விடுகின்றனர். இந்த இயக்கத்தினர் சமுதாயம், ஜிஹாத், ஆட்சி அதிகாரம் (இஸ்லாமிய ஆட்சி அல்ல) போன்ற பசப்பு வார்த்தைகளில் தங்கள் பாசறைக்கு மாணவர்களிடம் தான் அதிகம் தூண்டில் போடுகின்றனர். இவர்களது தூண்டிலில் தொங்கும் மண் புழுவை நம்பி இம்மை, மறுமையை இழந்து விடக் கூடாது என்று மாணவர்களை எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இவர்களது வலையில் சிக்கிய மாணவர்கள் தங்கள் கல்வியை இழந்து தேர்வுக்குக் கூட சரியாகப் படிக்காமல் கண்ட கண்ட போஸ்டர்களை ஒட்டிக் கொண்டு திரிந்து தேர்வில் தோல்வியடைகிறார்கள்; தங்கள் எதிர்காலத்தை இருண்ட பாலைவனமாக ஆக்குகின்றனர்.
நாம் மாணவர்கள் மட்டுமல்லாது பொதுவாக இளைஞர்கள் அனைவரையும் கேட்டு கொள்வது ஒன்றே ஒன்று தான். இந்த இயக்கம் மட்டுமல்ல! தவ்ஹீத் ஜமாஅத் உட்பட எந்த இயக்கமாக இருந்தாலும் கண்டதும் காதல் என்பது போல் இல்லாமல் ஆய்வு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.
அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள். (அல்குர்ஆன் 25:73)
அல்லாஹ் திருக்குர்ஆனில் சொல்வது போன்று அசை போட்டு, ஆய்வு செய்து பின்பற்றுங்கள்; சிந்தித்து செயல்படுங்கள். இம்மையில் மாற்றம் காணுங்கள்; மறுமையில் ஏற்றம் காணுங்கள் 
நன்றி:ஏகத்துவம் மாத இதழ் - மார்ச் 2011

Wednesday, 13 April 2011

இந்திய மக்கள் தொகை 2010-2011 புள்ளி விவரம்..


இந்த  ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு 15 வது கணக்கெடுப்பு  ஆகும்.


2011 மார்ச் 31 ஆம் தேதி - கணக்கெடுப்பு விவரம் ஒன்றை வெளியிட்டது மத்திய அரசு. சிட்டுக் குருவிகள் தொலைந்து விட்டன; சிங்கங்கள் குறைந்து விட்டன என்று சுற்றுச் சூழல் ஆய்வாளனை கவலை கொள்ளச் செய்யும் வெறும் புள்ளி விவரம் அல்ல அது. ஒட்டு மொத்த இந்தியாவுக்கே அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி.
ஆம்.... நம் நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கையில் சரிபாதியாக இருக்கும் பெண்களின் எண்ணிக்கை வருங்காலத்தில் சரியத் தொடங்கும் என்பதுதான் அந்த அதிர்ச்சித் தகவல். 

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.1872 இல் முதன் முதலாக இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத் தப்பட்டது. அதன்பின்னர் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் இந்தப் பணி நடைபெறுகிறது. 2010 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலத்தில் வீடுகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2001 பிப்ரவரி 2 முதல் 28 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

15 ஆவது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம்தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் சி. சந்திரமவுலி இத்தகவலை வெளியிட் டார். மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் தான், ஒட்டு மொத்த மக்கள் தொகை, விகிதாச்சாரம், பொருளாதார நடவடிக்கைகள், எழுத்தறிவு, குடியிருப்பு, வீட்டு சாதனப்பொருட்கள், நகர்மயமாக் கம், பிறப்பு, இறப்பு, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மொழி, மதம், இடப்பெயர்ச்சி என சமூக, கலாசார, பொருளாதாரத் தகவல்கள் கிடைக் கின்றன.

இதன் அடிப்படையில் தான், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள், கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்தப் புள்ளி விவரங்கள், அரசு மட்டுமின்றி, தேசிய, சர்வதேச நிறுவனங்கள், ஆய்வாளர்கள், வர்த்தக அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் என, பல தரப்பினராலும் பயன்படுத்தப்படுகின்றன. சட்டசபை, மக்களவை தொகுதிகளின் மறுசீர மைப்பும், இந்த மக்கள் தொகை கணக் கெடுப்பை வைத்து தான் மேற் கொள்ளப்படுகிறது.

சொல்லப்போனால் ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம் உள்ளது. வெளியிடப்பட்டுள்ள 15 ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரத்தில் பல்வேறு விசயங்களும் அடங்கி உள்ளன.மக்கள் தொகை பெருக்கம் குறைந்துள்ளது.எழுத்தறிவு எண்ணிக்கை உயர்ந்துள்ளது போன்ற புள்ளி விவரங்களால் மகிழ்ச்சிதான் ஆனால் அதேவேளை 6 வ்யதுக்கு குறைவான பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது என்பது அனைவரையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

இந்திய மக்கள் தொகை எண்ணிக்கை 121 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 18 கோடி அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு விவர அறிக்கை தெரிவிக்கிறது.
உலகில் வாழும் மொத்த மக்கள் தொகையில் 17.5 சதவிகிதம் பேர் இந்தியாவில் வாழ்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் 62.37 கோடி பேர் ஆண்கள், 58.65 கோடி பேர் பெண்கள் என மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடு சீனா. உலக மக்கள்தொகையில் 19.4 சதவிகிதம் பேர் இங்கு வாழ்கின்றனர். அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேஸில், பாகிஸ்தான், வங்கதேசம், ஜப்பான் ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையைக் கூட்டினால் கிடைக் கும் மொத்த எண்ணிக்கையிலான மக்கள் இந்தியாவில் வாழ் கின்றனர்.

2001ஆ-ம் ஆண்டிலிருந்து 2011-ஆம் ஆண்டு வரையான காலத்தில் நாட்டின் மக்கள் தொகை 18.10 கோடி அதிகரித்துள்ளது. இருப் பினும் மக்கள் தொகை பெருக்கம் விகிதம் 17.64 சதவிகிதமாகக் குறைந் துள்ளது. 2001-இல் மக்கள் தொகை பெருக்க விகிதம் 21.15 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2011 மக்கள் தொகை புள்ளி விவரப்படி, 1000 சிறுவர்களுக்கு 914 சிறுமியர் மட்டுமே உள்ளனர். இந்தியாவில் இந்த அளவுக்குக் குறைவாக இருந்தது இல்லை என்பதுதான் கூடுதல் கவலை. 1961 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 1000 சிறுவர்களுக்கு 978 சிறுமியர் இருந்தனர். இந்த விகிதாசாரம் 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 927- ஆகக் குறைந்தது. இப்போது 914 ஆகக் குறைந்துள்ளது. தற்போது இந்தியாவில் சிறுவர்களின் எண்ணிக்கையே 15.88 கோடிதான்.

இது 2001 கணக்கெடுப்பை ஒப்பிடும்போது 0.5 விழுக்காடு குறைவு. இது மக்கள் தொகைப் பெருக்கம் குறைந்து வருவதற்கான அடையாளம் என்று மகிழ்ச்சி அடையும் அதே வேளையில், சிறுமியர் எண்ணிக்கை குறைந்துவருவது ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்காது. அதற் காகத்தான் அனைவரும் கவலைப்பட வேண்டிய ஒன்றாக கருதப்படுகிறது. எழுத்தறிவு பெற்றவர்கள் விகிதம் 74 சதவிகிதமாக உள்ளது. 2001-ஆம் ஆண்டு இது 64.83 சதவிகிதமாக இருந்தது. குறிப் பாக பெண்கள் எழுத்தறிவு பெறும் விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது.

2001-இல் 53 சதவிகிதமாக இருந்த இந்த எண்ணிக்கை இப்போது 65 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆண்களில் எழுத்தறிவு பெற்றோர் விகிதம் 75 சதவிகிதத்தி லிருந்து 82 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மாநிலங்களில் மிஜோரத்தில் 98 சதவிகிதமாகவும், ஜஸ்வாலில் 98 சதவிகிதமாகவும், கேரளத்தில் 93 சதவிகிதமாகவும் உள்ளது. தமிழ் நாட்டின் எழுத்தறிவு விகிதம் 73.45 சதவிகிதத்தில் இருந்து 80.33 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதில் 86.81 சதவிகிதம் ஆண்களும், 73.86 சதவிகிதம் பெண்களும் எழுத்தறிவுள்ள வர்கள். மிகக் குறைவாக எழுத்தறிவு பெற்றோர் மாநிலத்தில் பிகார் தொடர்ந்து கடைசி இடத்தில் உள்ளது. இங்கு கல்வியறிவு பெற்றோர் விகிதம் 63.82 சதவிகிதமாக உள்ளது. 10 மாநிலங்கள் 85 சதவிகிதத் துக்கும் அதிகமான கல்வியறிவு பெற் றோரைக் கொண்டவையாக உள்ளன.

இருப்பினும், பொதுவாக ஆண்- பெண் விகிதாசாரத்தைக் கணக்கிடும் போது 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் இருக்கின்றனர். 2001 கணக் கெடுப்பில் 933 பெண்கள் மட்டுமே. ஆகவே, பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்திருக்கிறது. அப்படி யானால் சிறுமியர் எண்ணிக்கை மட்டும் குறைந்திருப்பது ஏன்?

6 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 15.58 கோடியாகும். 2001-ஆம் ஆண்டு இருந்ததைக் காட்டிலும் 50 லட்சம் குறைவாகும். 20 மாநிலங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந் தைகள் உள்ளனர். அய்ந்து மாநிலங் களில் ஒரு லட்சம் குழந்தைகள் கூட இல்லாத நிலை உள்ளது.

இந்த நிலைமை இயற்கையாக ஏற் பட்டது அல்ல என்பதும், பெண் சிசுக்கள் வேண்டாம் என்கிற மனநிலை பொதுவாக இந்தியா முழுவதிலும் நிலவுகிறது என்பதும்தான் சிறுமியர் விகிதாசாரம் குறைவதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது. நகர்ப்புறங்களில் பெண்சிசுக் கருக்கலைப்பு அதிகரிப்பதும் கிராமங்களில் பெண்குழந்தைகளை கொன்றுவிடுவதுமான நடைமுறைகள்தான் சிறுமியர் விகிதம் குறைவதற் கான காரணம் என்று கூறுகின்றனர். கருவிலேயே பெண்சிசுவைக் கண்டறியும் மருத்துவச் சோதனைகளுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் நகர்ப்புறங்களில் இத்தகைய சோதனைகள் தடையற்று நடைபெறுவதாகவும், பெண்குழந்தைகளை சுமையாகக் கருதும் குடும்பங்கள் கருக்கலைப்பு செய்வது தொடர்ந்து நிகழ்வதும்தான் இவ்வாறு சிறுவர் சிறுமியர் விகிதாசாரத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளதற்குக் காரணம் என்பது மகளிர் நல அமைப்புகள், களப் பணியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால் இந்தியாவில் விரும்பத் தகாத சமூக மாற்றங்கள் நிகழும் என அபாயச் சங்கு ஊதியி ருக்கிறது ஓர் ஆய்வு. பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இப்போது 1,000 ஆண் குழந் தைகள் எனில் பெண்குழந்தைகளின் எண்ணிக்கை 914 ஆக உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஆண்:பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் இப்போது மிக அதிக அளவு குறைந்துள்ளது. இது மிகவும் வருத்தமளிக்கும் விசயம். சிறுமியர் எண்ணிக்கை எந்தெந்த மாநிலங்களில் குறைந்துள்ளதோ அந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அரசின் கடமை.

பெண் குழந்தைகளின் எண் ணிக்கை குறையத் தொடங்கி னால் நாளைய மனித குலத்தின் தொடர்ச்சியே அற்றுப் போகும் அவலம் ஏற்படலாம். ஒரு ஆணுக்கு ,ஒரு பெண் என்ற வாழ்க்கைத் துணை இணைப் பில் கூட பிரச்சினைகள் ஏற்பட லாம்.இதனால் நம் சமூகம் மிகப் பெரிய பாதிப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள் ளப்படும்.எனவே பெண் குழந் தைகளின் எண்ணிக்கையை ஆணுக்கு நிகராக கொண்டுவர அரசுகள் போர்க் கால நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

அதேபோல் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்களையும், சலுகைகளையும் அரசு அறிவிக்க வேண்டும். பெண் குழந்தை பெற்றோருக்கு சுமை இல்லை என்பதை உணரவைக்கும் பொருட்டு இத்திட்டங்கள் அமைய வேண்டும். ஆண் குழந்தைக்கு மட்டுமே தாலாட்டு; பெண் குழந்தைக்கு ஒப்பாரி; என்ற அவலநிலையை அரசுகள் போக்க வேண்டும். பெண்களைத் தொலைத் தால் இந்தப் பூமி பாலையாகும் என் பதை அரசும், ஒவ்வொரு தனிமனிதனும் உணர வேண்டும்.

மக்கள் தொகையில் முதல் இடம் உ.பி, குறைவான மக்கள் தொகை அருணாசல பிரதேசம்.
தமிழ்நாடு க்கு 7 வது இடம்.
தமிழகத்தில் மிக குறைவான மக்கள் கொண்ட மாவட்டம் - நீலகிரி

தமிழ்நாடு எழுத்த்றிவில் 13 வது இடம்

தமிழ் நாட்டில் ஆயிரம் ஆணுக்கு 995 பெண் என்ற சதவீதத்தில் உள்ளது

பெண்ணின் பெருமை பற்றி மிக உயர்வாகப் பேசும் நம் நாட்டில் பெண் குழந்தைகளை ஒதுக்குவது அல்லது வெறுப்பது என்பது தேசிய அவமானம்.

Thursday, 7 April 2011

சிசேரியன் செய்வது ஏன்?


எத்தனையோ தாய்மார்கள் டாக்டர் நார்மல் டெலிவரி ஆகும் என்று சொன்னார். ஆனால் கடைசியில் ஆபரேஷன் பண்ணி விட்டார் என்று குறைபட்டுக் கொள்வார்கள்.

ஒரு தாயை, அவருக்கு எல்லா சோதனைகளும் செய்து, அவர் நார்மல் டெலிவரிக்கு உகந்தவர் தான் என்று தீர்மானித்து, அவரை நார்மல் டெலிவரிக்கு உட்படுத்துகிறோம். ஆனால், பிரசவ வலி வரும்போதுதான், வலியின் தன்மையிலோ, குழந்தையின் தலை திரும்புவதிலோ, கருப்பை வாய் திறப்பதிலோ, குழந்தையின் நாடித்துடிப்பிலோ மாற்றங்கள் ஏற்பட்டு, குழந்தையின் பாதை வழியே பயணப்படுவது தடைபடுவதை உணருகிறோம். இவை அனைத்தும், அந்தக் கணம், பிரசவ வலி கண்டபின்புதான் கவனிக்க முடியும் - கணிக்க முடியும் - அன்றி முன் கூட்டியே தீர்மானிக்க இயலாது.

எனவே, பல சமயங்களில் பிரசவ வலி கண்ட பின்பு, அந்த தீர்மானத்தை மாற்றி, சிசேரியன் செய்ய நேரிடுகிறது.

பெரும்பாலோர் “முதல் தடவை சிசேரியன் செய்ததால் இந்த முறையும் டாக்டர் சிசேரியன் செய்து விட்டார் என்று மேம்போக்காகப் புலம்புகிறார்கள்.

முதல் முறை செய்யும்போது, அந்தக் கருப்பையில் தையல் போடுவதால் அது காயப்பட்டு விடுகிறது. அதை வடு என்கிறோம். அந்த வடு எந்த அளவுக்கு உறுதியானது என்று பெரிதாக யாராலும் கணிக்க முடியாது. எனவே, முதல் முறை சிசேரியன் செய்தவர்கள், அடுத்த பிரசவத்தில் அவர்களது நார்மல் டெலிவரிக்கான சாத்தியக் கூறுகள் 50% என்று தான் சொல்ல வேண்டும். பிரசவம் நெருங்கும்போது, குழந்தையின் தலை இடுப்பு எலும்புக்கு மேலாக இருப்பது பிரசவ வாய், ஏதுவாக இல்லாமல் இருப்பது போன்ற கண்டுபிடிப்புகள் இருந்தால், அந்தத் தாய்க்கு சிசேரியன் முன் கூட்டியே செய்து விட வேண்டியதாகிறது. ஏனெனில், அந்தத் தாயை பிரசவ வலிக்கு உட்படுத்தினால், மேற்சொன்ன கண்டுபிடிப்புகளால், குழந்தை பிறக்க நேரமாகி அந்த நேரத்தில் கருப்பையிலுள்ள அந்த வடு, வலுவுற்று கருப்பையே வெடித்து, தாயின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே நார்மல் டெலிவரி என்ற விஷப்பரீட்சைக்கு இடம் கொடுக்காமல் முன் கூட்டியே சிசேரியன் செய்ய வேண்டியதாகி விடுகிறது.

சரி, சிசேரியன் செய்வது என்றால் வலி கண்ட பிறகு செய்யக் கூடாதா? எதற்காக 10, 15 நாள் முன்பாக செய்ய வேண்டும் என்ற முணுமுணுப்பு எழத்தான் செய்யும். பிரசவ வலி என்பது எந்த நேரத்திலும் முன் அறிவிப்பின்றி வருவது அந்த நேரம்தான் தாய் சாப்பிட்டிருப்பாள். எனவே அவளுக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு யோசிக்க வேண்டி உள்ளது. அல்லது அவள் இருக்கும் இடத்திலிருந்து வலி கண்ட பிறகு பயணப்பட்டு வர நீண்ட நேரமாகலாம். அந்நேரத்தில் பிரசவ வலியினால், தாய்க்கோ, குழந்தைக்கோ ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. இதை எல்லாம் மனதில் கொண்டுதான் குழந்தை முழு வளர்ச்சி அடைந்ததாக கருதப்படும் ஒரு வாரங்களுக்குப் பிறகு, அதாவது, 10, 15 நாட்கள் முன்பாகவே ஆபரேசன் செய்ய நேரிடுகிறது.

சில சமயம் டாக்டர்கள், தாய்மார்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து அந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாகி விடுகிறது.

நன்றி: கீற்று.காம்

HVAC Professional shall know about FCU's.

1. Fan coils are the easiest units to understand in the HVAC industry. Basically, there is a small forward curved fan, a coil, and sometimes a filter. They are all direct drive units

2. Fan coils run from 200 CFM to 2200 CFM, which is 0.5 ton through 5.5 tons. Anything larger than these sizes requires a belt drive unit…which is really a full fledged air handler.

3. The thing that differentiates fan coil units is where and how they are going to be installed. Is the unit going to be hidden above the ceiling or maybe in a closet? Or is it going to be exposed so that everyone can see it? Will it be ducted or will it just pull air from the space where it’s located? These are things that determine the configuration of the unit and which style of unit to choose. But, every unit has 3 things in common: fan, coil, and sometimes a filter.

4. Some units have (2) coils. One for heating and one for cooling. Obviously, there is a separate supply and return connection for each coil and these units are known as 4 pipe fan coils. Many units only use the same coil for both heating and cooling and these units are 2 pipe fan coils.

5. Units are either horizontal or vertical depending on the orientation and flow of the air. A typical fan coil in a hotel room is a vertical unit with a mixture of air coming from outside and the air recirculating in the room. The air enters at the bottom of the unit and is drawn upward through the fan. This makes the unit a vertical style. Many units are horizontal with the air entering at the back of the unit and traveling horizontally through the unit.

6. Almost all fan coils are 3 speed or infinite speed settings based on the controls. The high speed gives you more BTU’s, but more noise too. Because the unit is direct drive, when you dial down the speed, you also dial down the performance.

7. Coils in the units tend to be 3 or 4 row deep coils. 3 row is typically used the most, but if you need the extra performance, 4 row is the way to go. Performance is always governed by the cooling aspect.

8. Fan coils sometimes have short runs of duct work and there is static pressure on the unit. Static pressure reduces the amount of CFM and BTU’s that the fan coil can give you. This is true of both horizontal and vertical units. Most performances listed on charts that you will see are static free performances.

9. The control systems for fan coils are often more complicated and more expensive than the units themselves. There are balancing valves, isolation valves, unions, y-strainers, p/t plugs, air vents, ball valves, thermostats, condensate float switches, and disconnects. 

Tuesday, 5 April 2011

விமானியின் அறையை விநோதமாக பார்க்கலாம் வாங்க !



நாமெல்லாம் பல தடவை விமானத்தில் பயணித்திருப்போம் ஆனால் பயணிகள் இருக்கை மற்றும் மலசலகூடம் இதை விட்டால் வேறு ஒரு இடமும் நகர முடியாது.
எப்படியாவது கொஞ்சம் விமானியின் அறையை பார்க்கலாம் என்று ஆசைப்பட்டால் அது நடக்காது அந்தளவுக்கு கடத்தல் மற்றும் வெடிகுண்டு புரளி என உலகையே பயத்தில் ஆழ்திக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலை இது.
இருந்தாலும் விமானியின் அறையை பலதிரைப்படங்களில் பார்த்திருப்போம் ரசித்திருப்போம், ஆனால் இப்படி தெளிவாக பார்த்திருக்கமாட்டோம் இதுவரைக்கும் விமானத்தில் பயணிக்காதவருக்கும் மற்றும் பயணித்தவருக்கும் கண்ணுக்கு விருந்தாய் அமைகிறது இந்த வினோதமான இணையத்தளம் .
இங்கே http://www.gillesvidal.com/blogpano/cockpit1.htm  கிளிக் செய்து  சுற்றி சுற்றி பெரிதாக்கி ஓட விட்டு பார்த்து மகிழவும்.

Monday, 4 April 2011

Amazing or Not? Tell me...


...
 
 















Aren’t they amazing?
 
Amaazing ...something to enjoy...I cudnt take my eyes off this marina bay sands skyscaper..
I wanted to blog this ...when first I saw these pictures I thought its morphed ...
But then went to the history...

Sands SkyPark in Singapore is an awe-inspiring engineering wonder. This unique structural masterpiece, designed by visionary architect Moshe Safdie, floats atop the three soaring Marina Bay Sands hotel towers 200m in the sky. At the top of the 55 storey building is a 150-meter infinity swimming pool.
looking at these pictures ..its like swimming on the edge ...but in actual this drop goes to the main pool and then circulated back..
 
The pools have two circulation systems. The first functions like that of a regular pool, filtering and heating the water in the main pool. The second filters the water in the catch basin and returns it to the upper pool.
 this resort features  2,561-room hotel..and amazing architectural facts..It also marked the opening of the seven celebrity chef restaurants. The highly-anticipated

Broadway musical The Lion King debuted on 3 March 2011
 ..it s considered to be taLLest swimming pool in the world Marina Bay Sands,also known as infinity pool..N not only that Skypark also features a botanical garden with 250 species of trees and 650 plants (of course). The term ‘roof-top deck’, used for this gigantic park in the sky seems like a misnomer here huh?

How did the Skypark and the 15,000 sq ft Infinity Pool come about?

Well, according to Safdie, once the footprint of the building was laid out on site, the complex still lacked the space required for recreational facilities like swimming pools, gardens and jogging paths. Hence Safdie’s incredibly testosterone-laden idea of lifting up the entire recreation-cum-relaxation zone by creating a three-acre skypark 200 metres above ground.
 this skyscraper was formed ...
 
 
Collection By M.Ajmal Khan.






Friday, 1 April 2011

இந்திய மக்கள் தொகை 121 கோடி.....


இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த தடவை 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக் கெடுப்பு நடந்தது.

இந்த தடவை கடந்த ஆண்டு தொடங்கி கடந்த பிப்ரவரி மாதம் வரை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 25 லட்சம் பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 5 ஆயிரம் நகரம், 6 லட்சத்து 30 ஆயிரம் கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் பணிகள் அனைத்தும் முடிந்து இன்று மக்கள் தொகை கணக்கெடுப்பு கமிஷனர் சந்திர மவுலி டெல்லியில் புதிய மக்கள் தொகை பட்டியலை வெளியிட்டார்.

அதில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடியே 2 லட்சம் என அறிவிக்கப்பட்டது. இதில் ஆண்களின் எண்ணிக்கை 62 கோடியே 37 லட்சம். பெண்களின் எண்ணிக்கை 58 கோடியே 65 லட்சம். 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த போது மொத்த மக்கள் தொகை 102 கோடி ஆக இருந்தது. அதில் இருந்து இப்போது 18 கோடியே 10 லட்சம் அதிகரித்து உள்ளது. அதாவது 10 ஆண்டில் 17.64 சதவீதம் மக்கள் தொகை அதிகரித்து இருக்கிறது.

அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், வங்காளதேசம், ஜப்பான் ஆகிய 6 நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட இந்திய மக்கள் தொகை அதிகமாக உள்ளது. இந்தியாவிலேயே உத்தர பிரதேசத்தில் தான் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. அங்கு மொத்த மக்கள் தொகை 19 கோடியே 90 லட்சம். குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் லட்சத்தீவு. அங்கு 64 ஆயிரத்து 429 பேர் வசிக்கின்றனர். உத்தரபிரதேசம், மராட்டியம் ஆகிய இரு மாநிலங்களை சேர்த்தால் அமெரிக்கா மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளது.

இந்திய மக்கள் தொகை உலகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதமாக இருக்கிறது. குழந்தைகள் எண்ணிக் கையை கணக்கிடும் போது 1000 ஆண்களுக்கு 914 பெண் குழந்தைகள் உள்ளன. இந்தியாவிலேயே வட கிழக்கு டெல்லியில் தான் மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ளது. அங்கு ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 37 ஆயிரத்து 346 பேர் வசிக் கின்றனர். நாட்டிலேயே குறைந்த மக்கள் அடர்த்தி அருணாச்சல பிரதேசத்தில் உள்ளது. அங்குள்ள திபாங் பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒருவர் மட்டும் வசிக்கிறார். 74 சதவீதம் பேர் கல்வி அறிவு உள்ளவர்களாக உள்ளனர்.


2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் கல்வி அறிவு 64.83 சதவீதமாக இருந்தது. இப்போது 9.21 சதவீதம் அதிகரித்து உள்ளது. 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பை முந்தைய 10 ஆண்டோடு ஒப்பிடும் போது மக்கள் தொகை அதிகரிப்பு 21.15 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போது அதிகரிப்பு வீதம் 17.64 சத வீதமாக உள்ளது. இது இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் குறைந்து இருப்பதை காட்டுகிறது
.


உலகை மிரட்டும் மரபணு பயிர்கள்!! ஒரு சிறப்பு விழிப்புணர்வு ஆய்வு..

 இன்றைக்கு உலகின் ஹாட் நியூஸ் மரபணு மாற்று பயிர்கள் தான். இப்போ அப்போ என சொல்லிக் கொண்டிருந்த அலாவுதீன் பூதம் இதோ வாசல் வரை வந்து விட்டது. இனிமேல் எல்லாம் மரபணு மாற்றப்பட்ட விதைகள் தான். இதை வைத்துப் பயிரிட்டால் ஆஹா..ஓஹோ. பருவமழை பொய்த்தாலும் பரவாயில்லை. நிலம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த விதைகளை பயிரிட்டால் களஞ்சியம் நிரம்பும். இப்படியெல்லாம் ஆசை வார்த்தைகள் கூறி உண்டியலுடன் முன்னே நிற்பது அதே உலகண்ணன் அமெரிக்கா தான்.
2050ல் உலகின் மக்கள் தொகை 9.1 பில்லியன் அளவுக்கு அதிகமாகும். இன்றைக்கு இருப்பதை விட 70 சதவீதம் அதிக உணவுப் பொருள் தேவைப்படும். என்ன செய்வீர்கள் ? விவசாய நிலங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை. ஒரே வழி இது தான். மரபணு மாற்று விதைகள். இல்லையேல் உங்கள் நாடு பட்டினியில் மடியும். என்றெல்லாம் உருட்டியும், மிரட்டியும் காரியத்தைச் சாதிப்பதில் கண்ணாக இருக்கிறது அமெரிக்கா. 
சரி அதென்ன மரபணு மாற்று விதைகள். வேறுவேறு தாவரங்களின் டி.என்.ஏக்களில் உள்ள தேவையான மரபணுக்களை வெட்டி எடுத்து புதிய விதை தயாரிப்பது. இதை ரீ காம்பினண்ட் டி.என்.ஏ தொழில் நுட்பம் என்கிறார்கள். கேட்பதற்கு “வாவ்..” எனத் தோன்றும் இதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. முதலில் இது இயற்கை விதிகளுக்கே முரணானது. இரண்டாவது இந்த தாவரங்களில் பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கான விஷத் தன்மையும் உண்டு. இவை ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது.
ஒருவகையில் இந்த மரபணு விதைகளில் இருப்பது தடுப்பு மருந்து டெக்னிக் என்று கூட சொல்லலாம். நோய்க்கான கிருமியைக் கொண்டு நோய்த்தடுப்பு செய்வது போல, பூச்சிக்கான மருந்தை விதையில் செலுத்தி பூச்சி தாக்காத விதைகளை உருவாக்குவது. இதன் எதிர்விளைவு என்ன தெரியுமா ? பூச்சிகள் இன்னும் அதிகம் வீரியமாகும். அப்படி வீரியமாகும் போது சாதாரண பயிர்கள் இருப்பதையும் இழக்க வேண்டியது தான்.
உணவுப் பயிர்களைப் பொறுத்தவரையில் பி.டி (Bacillus thuringiensis )  கத்தரி தான் இந்தியாவின் முதல் மரபணு மாற்றப்பட்ட பயிர். இதற்கு மரபணு மாற்று பொறியியல் அங்கீகாரக் குழுவான GEAE அங்கீகாரம் கொடுத்துவிட்டது. அமெரிக்காவின் மான்சாண்டோ நிறுவனம் தயாரிக்கும் இதை இந்தியாவில் குத்தகைக்கு எடுத்திருப்பது மேஹோ எனும் நிறுவனம். எப்படி அரசு பி.டி கத்தரிக்கு அனுமதி வழங்கியது என்பது இன்றைய மில்லியன் டாலர் கேள்வி. “அமெரிக்காவின் கரம் இனிமேல் இந்திய வயல்களிலெல்லாம் விளையாடும். இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்” என விவசாய அமைப்புகளும், தன்னார்வ நிறுவனங்களும் களத்தில் குதித்திருக்கின்றன. அதற்கு வலுவான ஒரு காரணமும் இருக்கிறது.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இதே போல மரபணு மாற்றப்பட்ட பி.டி பருத்தியைக் கொண்டு வந்தார்கள். அதைக் கொண்டு வந்தபோது உட்ட உதாரைப் பார்த்தால் ஏதோ வேட்டியே மரத்தில் காய்க்கும் எனும் ரேஞ்சுக்கு இருந்தது. கடைசியில் என்னவாயிற்று ? கிராமத்துப் பாஷையில் சொன்னால் “நம்பினவன் வாயில மண்ணு”. அவ்வளவு தான். அது மட்டுமா ? பாவம், பட்டுப் பூச்சிகளெல்லாம் பட் பட்டென செத்துப் போயின.  இந்த கில்லர் பருத்தியின் இலைகளைச் சாப்பிட்ட கால்நடைகள் இரத்தம் கக்கி கொத்துக் கொத்தாய் மடிந்து போயின.  இப்போது பருத்தியின் இடத்தில் வந்திருப்பது கத்தரிக்காய். அப்படியானால் ஆடுகளின் இடத்தில் ? வேறு யார் நாம் தான்!
கத்தரிக்காய் நமது டிரெடிஷனல் உணவு. இனிமேல் விளைந்து சந்தைக்கு வரும் போது எது எந்தக் கத்தரிக்காய் என்றே தெரியப் போவதில்லை. மரபணு மாற்றப்பட்டதா ? இல்லையா என்பதை கண்டுபிடிக்கவும் முடியாது. மரபணு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சாப்பிட்டால் கேன்சர், அலர்ஜி, பார்கின்ஸன், மலட்டுத் தன்மை என பல நோய்கள் வரும். தாய்மைக் காலத்தில் இருக்கும் பெண்களின் கருவை பாதிக்கும் எனும் அச்சமும் நிலவுகிறது. உலகிலேயே மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயைப் பயன்படுத்தப்போகும் முதல் நாடு இந்தியா தான். அதாவது உலகுக்கே சோதனைச்சாலை எலி போல ஆகப் போவது நாம் தான் !
இந்த கத்தரி பயிரிட்டால் மண் வளம் பாதிக்கப்படும். விதைகளுக்காக மேலை நாடுகளை எப்போதும் சார்ந்திருக்க வேண்டிய சிக்கலும் உண்டு. இன்று கத்தரிக்காய், நாளை வெண்டைக்காய் இப்படியே அனுமதித்தால் இயற்கை விவசாயம் என்னவாகும் ? மகரந்தச் சேர்க்கையினால் நல்ல தாவரங்களும் மரபணு மாற்றப்பட்ட தாவரங்களும் இணைகையில் என்ன நேரும் என்பதெல்லாம் இன்னும் புதிர் தான். ஆண்டுக்கு சுமார் 90 இலட்சம் டன் எனுமளவில் இருக்கிறது நமது கத்தரி விவசாயம். இதில் எவ்வளவு பெரிய பாதிப்பை இந்த விதைகள் உண்டாக்கப் போகின்றன என்பது திகிலாகவே இருக்கிறது.
மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் நுழைந்தால் தானே காசு அதிகம் பார்க்க முடியும். அதற்காக அமெரிக்கா டார்கெட் செய்துள்ள இரண்டு நாடுகள் இந்தியாவும், சீனாவும். மேலை நாடுகளில் சோயாவைப் பெருமளவு உற்பத்தி செய்து காரியத்தைச் சாதித்துவிடலாம். சோயாவைப் பொறுத்தவரையில் இப்போது மரபணு மாற்றப்படாத சோயாவைக் கண்ணிலேயே பார்க்க முடிவதில்லை. இந்த நிலமை தான் இனி மற்ற தானியங்களுக்கும் வரும் என்பது ஒரு எச்சரிக்கைக் குறியீடு. ஆனால் ஆசிய நாடுகளெனில் சோயா சரிவராது. அரிசி தான் சரியான ஆயுதம். அதனால் இந்தியாவுக்கு அடுத்து வரப்போகிறது மரபணு மாற்றப்பட்ட அரிசி. இதைத் தங்க அரிசி என்கிறார்கள். இதில் புரோ வைட்டமின் சத்து இருக்கிறது என்பது அவர்கள் சொல்லும் வசீகர வார்த்தை.
இந்த அரிசியைச் சாப்பிட்டால் இந்த வைட்டமின் நமது உடலுக்குக் கிடைக்குமாம். நமது உடலுக்குத் தேவையான அளவு வைட்டமின் கிடைக்க எவ்வளவு அரிசி சாப்பிட வேண்டும் தெரியுமா ? ஒரு நாளைக்கு ஒன்பது கிலோ ! சீனாவில் இப்போதைய அரிசி தயாரிப்பு ஆண்டுக்கு 500 மில்லியன் டன். 220ல் இந்த அளவு 630 மில்லியன் டன் எனுமளவுக்கு அதிகரிக்கும். இதனால் அமெரிக்காவின் உள்ளங்கை அரித்துக் கொண்டே இருக்கிறது. சீனா இந்த மரபணு மாற்று புரட்சியை பெரிய அளவில் ஊக்கப்படுத்தவில்லை. ஆனால் சீனாவில் பிடி63 எனும் மரபணு மாற்றப்பட்ட அரிசி உற்பத்தி ஏற்கனவே இருக்கிறது. ஆனால் இந்த அரிசியை எங்களுக்கு ஏற்றுமதி செய்யாதீர்கள் என ஐரோப்பியன் யூனியன் கூறிவிட்டது. 
எதைத் தின்றால் பித்தம் தெளியும் என அங்கலாய்க்கிறது அமெரிக்கா. எப்படியாவது அகல பாதாளத்தில் கிடக்கும் பொருளாதாரத்தை நிமிர்த்த வேண்டும். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத பெரியண்ணனுக்குக் கிடைத்திருப்பது தான் மரபணு விதை எனும் மந்திர வித்தை. அமெரிக்கா சொன்னால் ஆமாம் சாமி போடுவதற்கு இந்தியா போன்ற நாடுகள் இருந்தால் பிரச்சினையே இல்லையே. என்பது தான் எதிர்ப்பவர்களின் ஆவேசக் குரல்.
என்னதான் வானவில் வார்த்தைகளைக் கூறினாலும் அயர்லாந்து மரபணு விதைக்கான கதவை இறுக மூடிவிட்டது. “பேசினது போதும் பொட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பு” என்று சொல்லிவிட்டது அந்த அரசு. மரபணு மாற்றப்பட்ட எந்த விதைகளுக்கும் இந்த மண்ணில் இடமில்லை. விற்கப்படும் எல்லா பொருட்களிலும் மரபணு மாற்றப்படாத விதைகளிலிருந்து உருவானது என லேபலும் ஒட்டப்போகிறார்கள். பால் பொருட்களைக் கூட மரபணு மாற்றப்படாத தாவரங்களை உண்ட பசுவின் பால் என முத்திரை குத்தப் போகிறார்களாம். மரபணு திகில் அயர்லாந்தை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதற்கு இந்த சிறு உதாரணமே போதும்.
அயர்லாந்தின் இந்த முடிவை உலகின் பல்வேறு நாடுகளும் வரவேற்றிருக்கின்றன. தங்களால் செய்ய முடியாததை அயர்லாந்து செய்திருக்கிறதே எனும் வியப்பும் ஒரு காரணம். அயர்லாந்து மட்டுமல்ல உலகின் புத்திசாலி நாடுகள் பலவும் இந்த நிலைப்பாட்டில் தான் இருக்கின்றன. ஆஸ்திரியா, இத்தாலி, ஜெர்மனி , பிரான்ஸ், தென்கொரியா போன்ற பல்வேறு நாடுகள் இறக்குமதிப் பொருட்களில் மரபணு மாற்றப்படாதது என சான்றளிக்கப் பட்டதை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றன. 
ஏற்கனவே ஒரு முறை அணுகுண்டு போட்ட நினைவுகளை ஜப்பான் மறக்குமா என்ன. அமெரிக்காவின் அடுத்த மரபணுகுண்டை அதிரடியாக மறுத்துவிட்டது. பெரியண்னன் விடுவாரா ? மீண்டும் மீண்டும் ஜப்பானை வற்புறுத்திக் கொண்டே இருக்கின்றனர். உணவுக்கு வெளி நாடுகளைச் சார்ந்திருக்கும் எகிப்து கூட கொள்கையில் உறுதியாய் இருக்கிறது. எங்களுக்கு எந்த மரபணு மாற்றப்பட்ட விதைகளும் வேண்டாம். பயிர்களும் வேண்டாம் என அரசு தீர்மானமே போட்டு விட்டது. எந்த ஏற்றுமதி உணவுப் பொருளோ, இறக்குமதிப் பொருளோ மரபணு மாற்றப்படாதது எனும் சான்றிதழுடன் தான் செல்ல வேண்டும் என்பது அங்குள்ள சட்டம். ஏன் நமது வாலில் கிடக்கும் இலங்கை கூட இன்னும் முழுசாய் பிடிகொடுத்து பேசவில்லை ! 
இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிரான பூட்டு லேசாகப் பழுதடைய ஆரம்பித்திருக்கிறது. இது ஒரு நல்ல பிசினஸ் என்றால் நாமே களத்தில் இறங்கலாமே எனும் கனவு அவர்களுக்கு. யூ.கே உணவுப் பற்றாக்குறையைத் தீர்க்கும் ஆய்வுகளில் இறங்கும் என அவர்கள் அறிவித்திருக்கின்றனர். அறிவிப்பை வெளியிட்டது 1660 முதல் லண்டனில் இயங்கும் பழம் பெரும் ராயல் சொசைட்டி அமைப்பு. இனிமேல் ஆண்டுக்கு 200 மில்லியன் பவுண்ட்கள் செலவில் ஆராய்ச்சி செய்யப் போகிறார்களாம். அதுவும் தொடர்ச்சியாய் பத்து ஆண்டுகளுக்கு. அதில் மரபணு மாற்று விதைகளுக்கும் ஒரு இடம் உண்டாம்.  மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கோ பயிர்களுக்கோ ஐரோப்ப யூனியன் (இ.யு) எந்த விதமான அதிகாரப் பூர்வ அனுமதியும் வழங்கவில்லை. எனினும் ராயல் சொசைடியின் இந்த அறிவிப்பு சர்வதேசக் குழப்பங்களை அதிகரித்திருக்கிறது.
இந்த அறிவிப்பை யூ.கேவின் ஏ.பி.சி (அக்ரிகல்சரல் பயோடெக்னாலஜி கவுன்சில் )  வரவேற்றிருக்கிறது. உணவுப் பாதுகாப்பு தான் உலகிலேயெ மிக முக்கியமானது என திருவாய் மலர்ந்திருக்கிறார் இதன் தலைவர் ஜூலியன் லிட்டில். உலகெங்கும் ஏற்கனவே 13 மில்லியன் விவசாயிகள் பயன்படுத்தி வரும் இந்த மரபணு மாற்று பயிர்களை இன்னும் தடை செய்வதில் அர்த்தமில்லை என்பது இவர் வாதம்.
பச்சைக் கொடி கும்பலில் லேட்டஸ்டாக இணைந்திருப்பது ஆஸ்திரேலியாவின் விவசாயத்துறை அமைச்சர் டோனி பர்க். இன்னும் ஐம்பது ஆண்டுகளில் 70 சதவீதம் அதிக உணவை எப்படி உற்பத்தி செய்வது ? அறிவியலின் கரம் இல்லாமல் அதெல்லாம் சாத்தியமே இல்லை என்கிறார் அவர்.
உலகின் வறுமைக்கு ஒரே தீர்வு மரபணு மாற்று விதைகள் தான் என அமெரிக்கா கிழிந்த டேப் மாதிரி சொல்லிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அது மட்டுமே தீர்வு என்பதில் நாடுகள் ஒன்றுபடவில்லை. கடந்த ஆண்டு யூஎன் நடத்திய ஆய்வில் 60 நாடுகள் பங்கேற்றன. மரபணு மாற்றம் உலக வறுமைக்குத் தீர்வல்ல என்பது தான் அவர்களுடைய முடிவு !
இந்தியா போன்ற நாடுகளில் பருவமழை பொய்க்கிறது. விவசாய நிலங்கள் அழிகின்றன. எனவே இருக்கும் கொஞ்ச நிலத்தில் அதிகம் விளைய வேண்டும். மழை இல்லாவிட்டாலும் விளைய வேண்டும். உரம் இல்லாவிட்டாலும் விளைய வேண்டும், பூச்சி தாக்காமல் வளர வேண்டும். அதற்கு ஒரே தீர்வு எனது மரபணு விதைகள் தான். என “வாலிப வயோதிக அன்பர்களே “ ரேஞ்சுக்கு அமெரிக்கா திரும்பத் திரும்ப பல்லவி பாடுகிறது. உண்மையில் இந்த விதைகளின் விலைகளைக் கேட்டால் நமது வறுமையை ஒழிக்க வந்ததாய் தெரியவில்லை. அமெரிக்க வறுமையை ஒழிக்க வந்ததாய் தான் இருக்கிறது. மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் அமெரிக்க நிறுவனமான மோன்சேண்டோவின் பணம் கறக்கும் வித்தை. அதற்குப் பலியாகி விடக் கூடாது. நமது ஊரில் 10 ரூபாய்க்குக் கிடைக்கும் கத்தரி விதையை 150க்கு விற்கும் வியாபார தந்திரம். என்கிறார் தமிழ்நாட்டிலுள்ள இந்திய விவசாயிகள் சங்க ஜெனரல் செக்ரிடரி ஆர்.வி கிரி
உணவைப் பொறுத்தவரை உலகெங்கும் அதற்கு ஒரே விளைவு தான். அமெரிக்கன் தின்று சாகாத மரபணு பயிர் இந்தியனை அழிக்கும் என்று சொல்ல முடியாது. ஆப்பிரிக்கர் உண்டால் விஷம், உகாண்டா உண்டால் அமிர்தம் என ஒரே பயிர் இரண்டு முகம் காட்ட வாய்ப்பில்லை. அமெரிக்காவில் சுமார் 500 டன் சோயாவை ஆண்டு தோறும் உண்கின்றனர். அவர்களுக்கு எதுவும் ஆகிவிடவில்லை. உலகில் 26 நாடுகள் ஏற்கனவே மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதித்திருக்கின்றன. அவர்களெல்லாம் அழிந்து விடவில்லை என கணக்குகளைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர் ஆதரவாளர்கள்.
உண்மையில் மரபணு சோளத்துக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு எழத்தான் செய்கிறது. ஸ்டார்லிங்க் எனும் சோளம் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கிறது என அமெரிக்கர்களே போர்கொடி தூக்குகின்றனர். 
இந்த மரபணு மாற்றுப் பயிர் சர்ச்சை இன்று நேற்று துவங்கியதல்ல. பிரிட்டனிலுள்ள நியூகேசில் பல்கலைக்கழகத்தில் இந்த ஐடியா ரொம்ப மோசம் என 2002லேயே ஆய்வு முடிவு வந்தது. இந்த உணவுகளை உட்கொண்டால் மனிதனுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். இதைச் சாப்பிடுபவர்களுடைய உடலில் ஆண்டிபயாடிக்ஸ் வேலை செய்யாது. சின்னச் சின்ன நோய்கள் வந்தால் கூட பெரிய பெரிய சிக்கலில் கொண்டு விடும் என அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தனர்.
லண்டனிலுள்ள கிங்க்ஸ் மருத்துவக் கல்லூரியின் மூத்த பேராசிரியர் மைக்கேல் ஆண்டானியோ. இவர் பல ஆண்டுகளாக இந்த மரபணு எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்து வருபவர். இந்த மரபணு மாற்றப்பட்ட உணவு உடலுக்கு மிகவும் தீங்கானது என்பதில் உறுதியாய் ஒலிக்கிறது அவரது குரல். இந்த கான்சப்டே தவறு. இயற்கையோடு ரொம்பவே விளையாடக் கூடாது. இந்த மரபணு ஒட்டி வெட்டும் சமாச்சாரங்களெல்லாம் வேலைக்காகாது என்கிறார் அவர். மரபணு மாற்றுப் பயிர்களால் அலர்ஜி, மலட்டுத்தன்மை போன்ற விரும்பத் தகாத விளைவுகளும் ஏற்படும் எனும் எக்ஸிடர் பல்கலைக்கழக ஆய்வையும் தனது துணைக்கு அழைக்கிறார். 
உணவுப் பற்றாக்குறையை யாரும் விரும்புவதில்லை. ஆனால் அதற்குக் காரணம் என்ன ? நிச்சயமாய் உலகில் ஏற்பட்டுள்ள விதைப் பற்றாக்குறை அல்ல. உலகிலுள்ள அனைத்து விளைநிலங்களுக்கும் தேவையான விதைகள் உலகில் உண்டு. அப்படி இருக்க எதற்கு இந்த செயற்கை விதைகள் என்பது ஓங்கி ஒலிக்கும் ஒரு கேள்வி. வறுமையையும், ஊட்டச்சத்து குறைவையும் ஒழிப்பேன் என களத்தில் குதிக்கின்றன விதைகள். உண்மையில் இயற்கையை விட்டு விலகிச் செல்லச் செல்லத் தான் வறுமையிலும், நோயிலும் தான் விழுகிறோம்.
மரபணு மாற்று ஆலோசனைக்குழு (RDAC), மரபணு நுட்ப அங்கீகாரக் குழு (GEAC), மரபணு நுட்ப சீராய்வுக் குழு(RCGM) என சகட்டு மேனிக்கு குழுக்களை வைத்திருக்கிறது இந்திய அரசு. ஆனால் இவையெல்லாம் அரசின் கண்துடைப்புக் குழுக்களாகி விடுமோ எனும் கவலை தான் மக்களுக்கு.
இத்தகைய மாபெரும் மாற்றத்தை விவசாய நாடான இந்தியாவில் புகுத்தும் முன் இந்த குழுக்கள் செய்தது என்ன என்பது மிகப்பெரிய கேள்வி. விரிவான ஆய்வுகள் ஏதும் இதற்காக நடத்தப்படவில்லை. இதன் விளைவுகள் பாதிப்பற்றவை என்பதற்கு எந்தவிதமான ஆதாரபூர்வ ஆய்வுகளும் இல்லை. இவற்றால் மற்ற விவசாயப் பயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் நேரும் சிக்கல்கள் குறித்தும் தெளிவில்லை. இதை நம்பிச் சாப்பிடலாம் என்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. அப்படி இருக்கும் போது அவசர அவசரமாக எதற்கு இந்த அங்கீகாரங்கள் ?
உண்பது என்ன உணவு என்பதை அறியும் உரிமை உண்ணும் ஒவ்வொருவருக்கும் உண்டு. விளைவிப்பது என்ன என்பதை அறியும் உரிமை ஒவ்வொரு விவசாயிக்கும் உண்டு. அந்த அடிப்படை விஷயங்களைத் தெளிவுபடுத்தும் கடமை அரசுக்கு உண்டு. மாற்றங்கள் தேவையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவை நல்ல மாற்றங்களாய் இருக்க வேண்டும் எனும் கவலை தான் ஒவ்வொருவருக்கும்.
நன்றி : பசுமை விகடன்

Thursday, 31 March 2011

பறிக்கப்பட்ட பன்னிரண்டாயிரம் பள்ளிவாசல்கள்....

வரலாற்றின் இடைக் காலகட்டத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்கள் தான் இந்துக் கோயில்களை இடித்தார்கள் என்ற தவறான சரித்திரம் எழுதப் படிக்கத் தெரிந்த ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் பதிந்திருக்கின்றது; படிந்திருக்கின்றது. இது இந்துத்துவா சக்திகள் நீண்ட காலமாகப் பரப்பி வரும் விஷக் கருத்தாகும்.
ஆனால் சரியான வரலாற்று ஆய்வாளர்கள், கோயில் இடிப்பை முஸ்லிம்கள் தான் செய்தார்கள் என்று அவர்களின் ஏக போக உரிமையாக்குவது அக்கிரமும் அநீதியுமாகும் என்று குறிப்பிடுகின்றனர். அதற்கு அவர்கள் இரு காரணங்களை முன்வைக்கின்றனர்.
 
1.முஸ்லிம் மன்னர்கள் வருவதற்கு முன்னாலேயே இந்தியாவிலிருந்த ஒவ்வொரு மன்னரும் தங்கள் வெற்றியை நினைவு கூரும் விதமாக பரஸ்பரம் தங்கள் எதிரிகளின் தெய்வங்களை, வழிபாட்டுத்தலங்களை அடித்து நொறுக்கியிருக்கின்றனர்; அழித்து ஒழித்திருக்கின்றனர்.
2. முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி செய்யும் போது அரசாங்க வருவாயில் அல்லது அரசு நிலத்தில் கோயில்கள் கட்டப்பட்டன. ஆனால் கோயில்களின் துணையுடன் கலவரத்தில் ஈடுபட்ட போது அந்தக் கோயில்கள் இடிக்கப்பட்டிருக்கின்றன. இதை இஸ்லாத்துடன் முடிச்சு போடக் கூடாது.
இவ்விரு காரணங்களால் கோயில் இடிப்பை முஸ்லிம்களுடன் மட்டும் தொடர்புபடுத்திப் பேச முடியாது என்று அந்த வரலாற்று ஆய்வாளர்கள் அடித்துச் சொல்கின்றனர்.
இதல்லாமல் இந்துக் கொத்தனார்கள், கல் செதுக்கும் சிற்பிகள் தான் பள்ளிவாசல்களைக் கட்டினார்கள். இதைத் தான் இந்துத்துவா சக்திகள் பழங்கால இந்துக் கோயில்களின் இடிபாடுகள் என்று பிரச்சாரம் செய்கின்றனர்.
எழுப்பிய கட்டடங்களில் கண்ணைக் கவருகின்ற வகையில், உள்ளங்களைக் கொள்ளை கொள்கின்ற விதத்தில் கலை நுணுக்கங்களையும் கைவண்ண வேலைப்பாடுகளையும் அந்தக் கொத்தனார்கள் மற்றும் சிற்பிகள் மூலம் முஸ்லிம்கள் செய்தனர்.
இந்தக் கொத்தனார்களுக்கும் சிற்பிகளுக்கும் இஸ்லாமியக் கலை நுணுக்கமோ, இஸ்லாமிய கட்டடக் கலை வடிவமைப்போ தெரியாது. இருப்பினும் அவர்கள் கட்டிய கட்டடங்களில் தங்கள் கைவண்ணத்தையும் கலை நுணுக்கத்தையும் மிகத் திறம்படப் பதிய வைத்தனர்.
இந்துக் கட்டட அமைப்பிற்கும் இந்துக் கலை நுணுக்கத்திற்கும் அவர்களுடைய கட்டட அமைப்பு ஒத்திருக்கின்றது என்பதை அறவே அவர்கள் பொருட்படுத்தவில்லை.
சில கட்டடங்களில் கை கழுவப்பட்ட, கண்டு கொள்ளாமல் விடப்பட்ட, பாழான பழைய கோயில்களில் உள்ள கட்டடப் பொருட்களை தாங்கள் உருவாக்கிய நினைவுச் சின்னங்களில் பயன்படுத்தியிருக்கின்றனர். இது பிற மத வழிபாட்டுத்தலங்களை அவமதிக்கும் அடிப்படையில் அமையவில்லை. தாங்கள் ஆள்கின்ற, வாழ்கின்ற பகுதியில் கட்டடக் கலையை தங்கள் கட்டட அமைப்பில் பதிய வைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில் அமைந்ததாகும்.
இதன் அடிப்படையில் முஸ்லிம்கள் கோயில்களை இடித்தார்கள் என்பது அபத்தமாகும் என்று வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கின்றார்கள். உண்மையில் அவர்களின் கருத்துப்படி இது சங்பரிவாரத்தின் வரலாற்றுத் திரிபு வாதமாகும்.
வளைத்து, வளைத்து இந்துக்களின் வழிபாட்டுத்தலத்தை முஸ்லிம்கள் இடித்தார்கள் என்று சதாவும் குற்றம் சாட்டுகின்ற சங்பரிவார்களுக்கும் அவர்களது சார்பாளர்களுக்கும் நாம் ஒரு கேள்வியை முன்வைக்கின்றோம்.
முஸ்லிம் மன்னர்கள் ஒரு வாதத்திற்குக் கோயில்களை இடித்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பேச்சுக்கு இதை ஒப்புக் கொள்வோம். முஸ்லிம் மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் மதச் சார்பின்மை என்பதெல்லாம் மருந்துக்குக் கூட கிடையாது. ஆனால் விடுதலை பெற்ற இந்தியா, மதச் சார்பின்மையை உயிர் மூச்சாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்துத்துவா சக்திகள், அவற்றின் சார்பு சக்திகள் எவற்றை விமர்சனம் செய்தார்களோ அது, அதாவது வழிபாட்டுத் தலங்களை இடிப்பது இப்போது மதச் சார்பின்மை அடிப்படையிலான அரசாங்கத்தின் ஆசியுடன், அனுமதியுடன் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. அந்த அக்கிரம, அநியாய அத்தியாயத்தை இப்போது பார்ப்போம்.
1984ல் பாதிப்புக்குள்ளான பொற்கோயில்
1992ல் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித்
1995ல் காஷ்மீரில் இராணுவத்திற்கும் போராளிகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் பாதிப்புக்குள்ளான சரார்-இ-ஷெரீஃப்
இந்த வழிபாட்டுத் தலங்கள் மட்டுமே நமக்கு வெளியில் தெரிபவை.
இவை தவிர்த்து இன்னும் அழிக்கப்பட்ட பள்ளிவாசல்கள், எதிரிடை அனுபவத்தில் அபகரிக்கப்பட்ட பள்ளிவாசல்களின் எண்ணிக்கை நம்மை திகைப்பில் ஆழ்த்துகின்றது.
சண்டிகர், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப் ஆகிய பகுதிகள் அடங்கிய பழைய பஞ்சாபில் 12,000 பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டுள்ளன; அல்லது இந்துக் கோயில்களாக, கடைகளாக, வீடுகளாக, மாட்டுத் தொழுவங்களாக அதை விடவும் கேடாக மாற்றப்பட்டுள்ளன.
இதற்குக் கூறப்பட்ட காரணமும், கற்பிக்கப்பட்ட நியாயமும் என்ன?
1947ல் நாடு பிரிவினையின் போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் உள்ள குருத்துவாராக்கள், கோயில்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காகத் தான் என்று பதில் தரப்படுகின்றது.
முஸ்லிம்கள் இந்தப் பகுதிகளில் வாழவில்லை என்ற பொய்யான, போலியான காரணங்களைச் சொல்லி, பள்ளிவாசல்களை அவற்றின் பழைய பயன்பாட்டுக்குக் கொண்டு வர விடாமல் அரசியல்வாதிகள் தடுக்கின்றனர்.
ஆனால் உண்மை நிலை என்ன? பீகாரிலிருந்தும் உத்தர பிரதேசத்திலிருந்தும் அதிகமதிகம் முஸ்லிம்கள் பஞ்சாபிற்குக் குடிபெயர்ந்து பண்ணைத் தொழிலாளர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். முன்னாள் மன்னர் மாநிலங்கள் என்று அழைக்கப்பட்ட ஆல்வார், பாரத்பூர் மாநிலங்களில் இருந்த பள்ளிவாசல்கள் அனைத்தும் அண்டை மாநிலமான பஞ்பாப் பள்ளிவாசல்கள் சந்தித்த அதே கதியைத் தான் சந்தித்தன.
நாடு விடுதலையின் போது டெல்லியில் நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள் தகர்க்கப்பட்டன. லாகூரில் உள்ள கோயில் மற்றும் குருத்துவாராக்கள் தாக்கப்பட்டதற்குப் பழி வாங்கும் படலம் தான் என்று இந்த அக்கிரமத்திற்குக் காரணம் சொல்லப்பட்டது.
1947க்குப் பின் நாட்டில் ஏற்பட்ட ஒவ்வொரு கலவரத்திலும் பள்ளிவாசல்களும், தர்ஹாக்களும் தரைமட்டமாக்கப்பட்டன.
1979ல் மத்திய பிரதேசத்தில் 55 பள்ளிவாசல்கள்!
1989ல் பாகல்பூர் இரத்தக் களரியில், வகுப்புக் கலவரத்தில் 57 பள்ளிவாசல்கள்!
1990ல் ஹைதராபாத் கலவரத்தில் பலியான 77 முஸ்லிம் கட்டடங்கள்!
2002ல் குஜராத் இனப் படுகொலையில் 236 பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் புனிதத் தலங்கள், தர்ஹாக்கள் தகர்த்தெறியப்பட்டன.
குஜராத்தைப் புகழ்ந்து கவிதை பாடிய "வலி தக்கானி' என்பவரின் நினைவுக் கோபுரமும் பெருக்கெடுத்து ஓடிய காவி பயங்கரவாத வெள்ளத்தில் அடித்து நொறுக்கப்பட்டது.
தொல்லியல் துறையின் துரோகத்தனம்
இதல்லாமல் தொல்லியல் துறையும் தன் பங்குக்கு நினைவுச் சின்னம் என்ற பெயரில் முஸ்லிம்கள் தங்கள் பள்ளிவாசல்களில் தொழுவதற்குத் தடைக் கல்லாக நிற்கின்றது.
தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் 118 பள்ளிவாசல்களை வைத்திருக்கின்றது. அந்தப் பள்ளிகளில் தொழுகைக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் நிஜாம் ஆட்சி செய்த ஹைதராபாத்தின் எல்லைகளில் உள்ள பள்ளிவாசல்களைத் தவிர வேறு பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
முஸ்லிம் மக்கள் இல்லை என்ற காரணத்தைக் காட்டி பள்ளிவாசல்களைத் தொல்லியல் துறை பூட்டி வைத்திருக்கின்றது. ஆனால் அவ்வூர்களில் முஸ்லிம்கள் வாழத் துவங்கிய பின்னரும் பள்ளிவாசல்களை முஸ்லிம்களிடம் தர மறுக்கின்றது.
மத்திய அரசின் பெரும் துரோகம்
1979ல் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, தொல்லியல் துறையின் கீழிருக்கும் பள்ளிவாசல்களில் தொழுவதற்குத் தடையை நீக்குவதாக வாக்களித்தது. அந்த வாக்குறுதியை நம்பி முஸ்லிம்கள் அந்தப் பள்ளிகளில் மீண்டும் தொழச் செல்லும் போது அந்த வாக்குறுதி பொய் என்று புலனானது.
ஒரு பக்கம் தொல்லியல் துறையின் சதி! மற்றொரு பக்கம் இந்துத்துவா சக்திகளின் சதி! மத்திய அரசின் முன்னாள் அமைச்சர் அருண்ஷோரி தலைமையில் சுமார் 2000 பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள், முன்னாள் இந்துக் கட்டட அமைப்புகள் என்று ஒரு பட்டியல் திரட்டி வைத்திருக்கின்றார்கள். முஸ்லிம்கள் புனிதமாகக் கருதும் மிகப் பெரிய தலங்களும் அவற்றில் உள்ளடங்கும்.
தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் தவ்லதாபாத் கோட்டையில் இருக்கும் இடைக்கால வரலாற்றுப் பள்ளியான ஜும்ஆ மஸ்ஜிதின் மிஹ்ராபில் சிலைகளைக் கொண்டு வைத்து அதைப் பாரத மாதா கோயில் என்றாக்கி விட்டனர். அதன் பிறகு இதே பாணியை இந்துத்துவா சக்திகள் ஏனைய பள்ளிவாசல்கள் விஷயத்திலும் பின்பற்றத் தொடங்கி விட்டனர்.
ஒரு கட்டடத்தின் தூண் அல்லது அமைப்பு இந்துக் கோயிலுக்கு ஒத்திருக்கின்றது என்றோ, அல்லது அந்தக் கட்டடம் இடிக்கப்பட்ட இந்து ஆலயத்தின் மீது கட்டப்பட்டது என்றோ ஒரு கதை கட்டி விட்டால் போதும். அடுத்த கணம் அது முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டு விடும்.
இந்த அடிப்படையில் தான் ஆந்திராவில் 1970ல் கட்டப்பட்ட பாக்கியலட்சுமி கோயில், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சார்மினார் மீது துருத்திக் கொண்டிருக்கின்றது. அலெ நரேந்திரா என்ற தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம்.பி. சார்மினாரை இந்துக் கோயிலாக மாற்றுவேன் என்று மிரட்டல் விடுத்தான்.
பி.ஜி. கெஸ்கார் என்பவன் மக்கா மஸ்ஜிதைக் குண்டு வைத்துத் தகர்ப்பேன் என்று கொக்கரித்தான்.
இவை இந்துத்துவா சக்திகளின் வெறித்தனத்திற்குரிய எடுத்துக்காட்டுகளாகும்.
பள்ளிவாசல்களில் ஒரு தடவை சிலைகள் கொண்டு வைக்கப்பட்டால் போதும். மறுகணம் பூஜை புணஸ்காரம் தொடங்கி விடும். அரசு அதிகாரிகள் அரசியல் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து, கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமியச் சின்னத்தை அழித்து அதில் இந்துச் சின்னத்தைப் பதிய வைத்து விடுகின்றனர்.
அதிகாரிகளின் ஓர வஞ்சனை
இந்துக்கள் ஆட்சேபணை செய்து விட்டால் போதும். முஸ்லிம்களுக்குப் பள்ளிவாசல் கட்டுவதற்கு அதிகாரிகள் அனுமதி தர மறுத்து விடுகின்றனர்.
இந்தத் தடை எங்கோ இருக்கும் கிராமத்தில் நடைபெறவில்லை. நாட்டின் தலைநகரத்திலேயே நடக்கின்றது. மொத்தத்தில் இந்தப் பாணியும் பணியும் இந்தியாவில் இஸ்லாம் இல்லாத இந்து மயமாக்கும் நாடு தழுவிய சதியாகும்.
இந்துத்துவா சக்திகள் இஸ்லாத்தை வெறுக்கலாம். ஆனால் அவர்கள் பின்பற்றுவதோ அவர்கள் யாரை எதிரிகள் என்று கருதுகிறார்களோ அவர்களுடைய வழியைத் தான்.
டிசம்பர் 21, 2010 அன்று, உண்ள்ழ்ங்ள்ல்ங்ஸ்ரீற் ச்ர்ழ் தங்ப்ண்ஞ்ண்ர்ய் ண்ய் உங்ம்ர்ப்ண்ற்ண்ர்ய் - "ஆலய இடிப்பில் அவமதிக்கப்படும் மதம்' என்ற தலைப்பில் ஹைதராபாத்தைச் சேர்ந்த உமர் காலித் என்ற கட்டுரையாளர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் இது!
இந்தியாவில் பாழாக்கப்பட்ட, பறிக்கப்பட்ட 12,000 பள்ளிவாசல்களைப் புள்ளி விபரங்களுடன் தருகின்றார். அதையே இங்கு நாம் ஏகத்துவம் இதழில் தந்திருக்கின்றோம்.
இந்தக் கட்டுரையில் தர்ஹாக்கள் பறிப்பும் இடம் பெற்றுள்ளது. அதனால் தவ்ஹீத் ஜமாஅத், தர்ஹாவை ஆதரிக்கின்றது என்று யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது.
தர்ஹாக்களை அபகரிப்பதை, முஸ்லிம்களின் சின்னத்தை அழிப்பதாக இந்துத்துவா சக்திகள் பார்க்கின்றனர். எனவே ஒரு சொத்து அநியாயமாக முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டால் அதை மீட்பது ஒரு முஸ்லிமின் கடமை என்ற அடிப்படையில் தான் இதைத் தவ்ஹீத் ஜமாஅத் பார்க்கின்றது என்பதை இங்கே பதிய வைக்கின்றோம் 

 நன்றி: ஏகத்துவம் மாத இதழ் - மார்ச் 2011