Sunday, 23 December 2012

க்ளோனிங் மனிதன் தொழில்நுட்பம்!! ஒரு சிறப்பு பார்வை

நமது நாட்டிலும் க்ளோனிங் உயிர் உருவாக்கப்பட்டுவிட்டதுஅது ஒரு கன்று.மறு கன்றுஎருமையின் மறு பதிப்பு.எருமையின் மறு உயிர்ப்புஒரு எருமையின் உயிர்ச் செல்லை எடுத்து உருவாக்கப்பட்ட கன்று அதுஉலகின் முதல் க்ளோனிங் படைப்பு ஆடு, 'டாலிஉருவாக்கப்பட்டு பதிமூன்று ஆண்டுகள் ஆகிவிட்டனக்ளோனிங் மனிதனே உருவாக்கப்பட்டுவிட்டதாக பல நிறுவனங்கள் கூறிக்கொள்கின்றன. 

க்ளோனிங் என்றால் என்ன?
மனிதனின் செல்லிலிருந்து செல்லை எடுத்து அதிலிருந்து அதே போன்ற மனிதனை உருவாக்கிவிட்டார்கள்.க்ளோனிங் என்பது பல மட்டங்களில் நடந்து வருகிறதுஒரு செல்லிலிருந்து மறு செல்லை உருவாக்குவதுஒரு உறுப்பிலிருந்து மறு உறுப்பை உருவாக்குவது என்று பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.அவை வெற்றியும் பெற்று வருகின்றனஒரு செல்லிலிருந்து மறு செல்லை உருவாக்கிநோய் காணும் செல்லுக்குத் தீர்வு காணலாம்ஒரு செல்லிலிருந்து ஒரு உறுப்பை உருவாக்கி குறை கொண்ட உறுப்புக்குத் தீர்வு காணலாம்இதற்கெல்லாம் உலகில் ஆதரவு இருக்கிறது.

.ஒரு மனிதனை அச்சு அசலாக மீண்டும் உருவாக்கும் மனித குளோனிங் தொழில் நுட்பமுறை இன்னும் 50 வருடங்களில் சாத்தியமாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
மருத்துவ அறிவியலில் நவீன கண்டு பிடிப்பான குளோனிங் முறை, உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானி சர்ஜான் கர்டன் 1950-ல் தவளையை குளோனிங் முறையில் உருவாக்கினார். அவரைத் தொடர்ந்து 1996-ல் டென்மார்க் நாட்டு விஞ்ஞானி 'டோலி' என்ற ஆட்டுக் குட்டியை குளோனிங் முறையில் உருவாக்கினார்.
தற்போது இங்கிலாந்து விஞ்ஞானி சர்ஜான் கர்டன் மனித குளோனிங் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் இந்த ஆண்டு மருத்துவக்கான நோபல் பரிசு பெற்றுள்ளார். அவர் மனித குளோனிங் பற்றி கூறியதாவது:-
1978-ல் உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தை லூயிஸ் பிரவுனை உருவாக்க உயிரியல் அறிஞர்கள் முயற்சித்தபோது, மக்களிடம் இருந்து அதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதுபோன்ற அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி மனித குலத்துக்கு கேடானது என சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் முதல் டெஸ்ட் டியூப் குழந்தையை உருவாக்கிய பிறகு மக்கள் அதை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினர். காரணம் அந்த விஞ்ஞான தொழில் நுட்பத்தின் மூலம் குழந்தை பெற இயலாத தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்ள முடிந்தது.
அதேபோல ஒரு உயிரினத்தை அப்படியே அச்சு அசலாக மீண்டும் உருவாக்கும் குளோனிங் விஞ்ஞான தொழில் நுட்பத்துக்கும் உலகம் முழுவதும் எதிர்ப்பு உள்ளது.
டெஸ்ட் டியூப் தொழில் நுட்பத்தைப்போல குளோனிங் தொழில் நுட்பத்தாலும் மனித குலம் பயன்பெறும். இதன் மூலம் நோயற்ற குழந்தைகளை உருவாக்க முடியும். அப்போது மக்கள் அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
குழந்தை இல்லாத தம்பதியரில் தாயின் அண்டச் செல் மற்றும் தோல் செல்களைப் பயன்படுத்தி குளோனிங் குழந்தையை உருவாக்க முடியும். அது பாதுகாப்பானது மற்றும் மிகுந்த பலன் தரக்கூடியது. இன்னும் 50 ஆண்டுகளில் மனித குளோனிங் சாத்தியமாகும்.
ஒரு தம்பதி குளோனிங் தொழில் நுட்பம் மூலம் குழந்தை பெற விரும்பினால் அதை நாம் ஏன் தடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். 

மனிதனை ஏன் உருவாக்க வேண்டும் ?
ஆனால் மனிதனை ஏன் உருவாக்க வேண்டும் என்பதுதான் கேள்வியாக இருக்கிறதுமனிதனை மனிதன் உருவாக்கலாமாஅது தர்மமாஅது சரியா,தவறாநியாயமா என்றெல்லாம் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.சோதனைக் குழாய் குழந்தைகள் உருவாக்கப்பட்டு அவர்கள் வளர்ந்து இயல்பான முறையில் குழந்தைகளை உருவாக்கிவிட்டார்கள்கரு முட்டைகளையும்உயிரணுக்களையும் சேமித்து வைத்துவாடகைத் தாய் மூலம் உருவாக்கப்பட்ட குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்கள் ஆகிவிட்டனஇப்போது க்ளோனிங் மூலம் உருவாக்கப்பட பல குழந்தைகள் செல் உருவில் தயாராக இருக்கின்றன.மனிதனை மனிதன் மறு பதிவு செய்தால் என்னஅப்படிச் செய்தால் என்ன ஆகும்ஒரே மாதிரி பல மனிதர்கள் உருவாகிவிடுவார்களாஒரே மாதிரி என்றால் என்னஒரே தோற்றம் கொண்ட மனிதர்களாஒரே குணம் கொண்ட மனிதர்களாஒரே நிறம் கொண்ட மனிதர்களா?ஒரே திறமை கொண்ட மனிதர்களாஒரே அரசியல் கொண்ட மனிதர்களா?ஒரே அதிகாரம் கொண்ட மனிதர்களா?மனிதன் இயல்பாகப் பிறந்துஇயல்பாகப் பரிணாமம் அடைந்துஇயல்பாக முதிர்ச்சி அடைய வேண்டும் என்பதுதான் குளோனிங் முறைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களின் வாதம்ஒரே மாதிரியான மனிதனை உருவாக்கிவிடக் கூடாது என்பது அவர்களின் எச்சரிக்கை.

இப்போது இயல்பாக இருக்கும் மனிதன் ஒரே மாதிரி இருப்பதில்லையா என்பது கேள்விஅரசியல்கலாச்சாரம்சமூகம் என்ற மன நிலை ஒரே மாதிரியான மனிதனைத்தான் உருவாக்கி வைத்திருக்கிறதுஒரே மாதிரி சிந்திப்பவர்கள்ஒரே மாதிரி அடிமையாக இருப்பவர்கள்ஒரே மாதிரி அதிகாரம் செலுத்துபவர்கள்ஒரே மாதிரி எழுதுபவர்கள்ஒரே மாதிரி படிப்பவர்கள்ஒரே மாதிரி பேசுபவர்கள்ஒரே மாதிரி கேட்பவர்கள் என்று எப்போதும் ஒரே மாதிரிதான் மனிதன் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறான்.வேறு மாதிரி இருந்துவிட்டால் அவன் ஒதுக்கப்படுகிறான்அவன் அதிகாரத்திற்கு எதிரானவன் என்று பார்க்கப்படுகிறான்.


ஒரே மாதிரி மனிதன் குளோனிங் செய்யப்பட்டால்தான் என்ன?
 ஒரே மாதிரி ஒபாமாக்கள் உருவாகிவிடுவார்களா
ஒரே மாதிரி மன்மோகன் சிங்குகள் உருவாகிவிடுவார்களா
ஒரே மாதிரி சச்சின் டெண்டுல்கர்கள் உருவாகிவிடுவார்களா
ஒரே மாதிரி ரஹ்மான்கள் உருவாகிவிடுவார்களா?
ஒரே மாதிரி ஜெயகாந்தன்கள் உருவாகிவிடுவார்களா
ஒரே மாதிரி அஜ்மல் கான்கள் உருவாகிவிடுவார்களா?
அப்படி உருவானால் அவர்கள் யாருக்கு அச்சுறுத்தல்
அவர்கள் யாரைப் போல் இருக்கிறார்களோ அவர்களுக்கு அச்சுறுத்தலா
அல்லதுஅவர்கள் யாரைப் போல் இல்லையோ அவர்களுக்கு அச்சுறுத்தலா?
தன் நிலை பறிபோய்விடுமோ என்ற அதிகார வெறி,பாதுகாப்பின்மை தொடர்ந்து மனிதனை அலைக்கழிப்பில் தள்ளியிருக்கிறதுபோட்டி,பொறாமைமனச் சிக்கல் என்று ஏதேதோ வேதனைகள் மனிதனைக் கட்டிப்போட்டுவிடுகின்றன.இப்போது குளோனிங் பிம்பம் மனிதனை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.குளோனிங் மூலம் உருவாக்கப்படும் மறுமனிதன் தன் மூல மனிதனைப் போல இருப்பானா?அதற்கான ஆராய்ச்சிகள் இல்லைஅல்லது அதற்கான தீர்வுகள் வெளியே சொல்லப்படவில்லைஒரு மனிதனின் செல்களைக் கொண்டு மறு மனிதனை உருவாக்கிவிட்டால் அவன் அதே போல் வளருவானா என்று தெரியவில்லைவளர்ப்பு முறை என்பது முக்கியமாக இருக்கும்உள்ளே இருக்கும் மரபணுக்கள் அடிப்படை குணங்களை நிர்ணயிக்கும் திறன் பெற்றவையாக இருக்கலாம்மேம்பட்ட ஆற்றல் பெறுவதும்ஆற்றல் அழிவதும் சூழலின் பாதிப்பால் நிகழும்குளோனிங் ஒரு உயிரை உருவாக்கலாம்ஒரே உயிரை ஒத்த உயிரை உருவாக்கலாம்ஆனால் மனிதனை உருவாக்க முடியுமா என்பது கேள்விமனிதன் என்பவன் ஒரு சமூகம்ஒரு அரசியல்ஒரு அதிகாரம்ஆனால் அது போன்ற ஆபத்துகள் நிகழ்ந்துவிடும் என்றுதான் தேவாலயங்கள் குளோனிங் முறையை எதிர்க்கின்றனஅடிப்படைவாதிகள் அதற்கு எதிரான கருத்துகளை வைக்கிறார்கள்புரட்சியாளர்கள்கூட குளோனிங் குறித்த சரியான பார்வையை பதியவைக்கவில்லை.இன்னும் குளோனிங் ஒரு புதிராக இருக்கிறதுமனிதனை உருவாக்குகிறார்களாஒரு சமூகத்தை உருவாக்குகிறார்களா என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறதுஒரு சமூகம் உருவாகிவிடும் என்றால் அதை ஏன் தடுக்க வேண்டும்ஒரு அறிவியல் கூடத்தில் ஒரு சமூகம் உருவாகிவிடுவதில்லைஒரு அறிவியலறிஞனின் மேஜையில் ஒரு அரசியல் உருவாகிவிடுவதில்லைமனித மூளையில் சமூகமும்,அரசியலும்அதிகாரமும் மண்டிக் கிடக்கின்றனஅதை எப்படி மறுஉருவாக்கம் செய்வது என்பதுதான் கவனத்திற்குரிய கவலையாக இருக்க முடியும்.

ஒரு மொத்த சமூகத்திற்குமான நோய் நிர்ணயிக்கப்பட்டுவிட்டதுஒரு மொத்த நோயாளி இனத்திற்கு மருந்து பொதுமைப்படுத்தப்பட்டுவிட்டதுமனித சமூகத்திற்கு பொதுவாக எல்லாமே இருந்துவிடுகிறதுஒரே மாதிரியான உணவு முறைஒரே மாதிரியான உபகரணங்கள்ஒரே மாதிரியான அரசியல் அமைப்புஒரே மாதிரியான ஊடக மாதிரிகள்ஒரே மாதிரியான வாழ்வு முறைஎல்லாம் ஒரே மாதிரி என்பது போல் காட்டப்படுகிறதுஒரே மாதிரியான மனிதனை உருவாக்க வேண்டும் என்பதற்கு இது போன்ற அம்சங்களே காரணிகளாக இருந்துகொண்டிருக்கின்றனஒரே மாதிரியில் சிக்காத மனித மன நிலையை குளோனிங் உருவாக்கிவிடும் என்று எதிர்பார்த்துவிட முடியாது.ஆய்வு அறையில் மனிதனை உருவாக்கி அதிகார சங்கிலிகளில் பிணைக்கத்தான் அமைப்பு விரும்புகிறதுஅப்படி ஏராளமான மனிதர்கள் உருவாகிவிட்டால் அவர்கள் அதிகார வரம்புக்குள் வராத படிமங்களாக மாறிவிடுவார்களோ என்ற அச்சம் ஆளும் மன நிலைகளுக்கு இருக்கிறது.ஆளும் மன நிலைகள் அரசியல்வாதிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லைஆளும் மன நிலை ஒரு ஆட்டோக்காரரிடமும் இருக்கிறதுஒரு பிச்சைக்காரரிடமும் இருக்கிறதுயார் பெரியவர்சிறியவர் என்பது பிரச்சினை இல்லையார் மேலாண்மை கொண்டவர்கள் என்பதுதான் பிரச்சினைஒரு மனிதன் மறுபதிப்பாமூல மனிதனா என்பது பிரச்சினை இல்லைஅவனுள் எது இருந்ததுஎது இல்லை என்பதுதான் முக்கியமானது.குளோனிங் மனிதனுக்குள் எது இருக்கும்எது இருக்காதுஅதுதான் கேள்வி.


 குளோனிங் சாத்தியமே என்பது இஸ்லாமிய கருத்து !!
மனிதனைப் பொறுத்த வரை அவனைக் குளோனிங் செய்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை மேலே பார்த்தோம் . 25 வயதுடைய ஒருவரது மரபணுவை எடுத்து குளோனிங் செய்து ஒரு குழந்தையை உருவாக்கினால் அது வடிவத்தில் குழந்தையாக இருந்தாலும் அதன் மரபணுவைப் பொறுத்த வரை அதன் வயது 25 ஆகும். எனவே 25 வயதுடையவனின் அறிவும் சிந்தனையும் அந்தக் குழந்தைக்கு இருக்கும் என்பது விஞ்ஞானிகளின்  கணித்திருக்கிறார்கள்..

இந்த விபரங்களைக் கவனத்தில் வைத்து, ஈஸா நபியின் பிறப்பு பற்றிக் குர்ஆன் கூறுவதைச் சிந்தித்துப் பார்ப்போம்!!.
தந்தையில்லாமல் ஒரு குழந்தையை இறைவன் உருவாக்க நாடினால், ஆகு என்று சொல்லியே அவனால் உருவாக்க முடியும். அப்படியிருந்தும் ஒரு வானவரை மனித வடிவில் அனுப்பி, அந்த வானவர், ஈஸாவின் நபியின் தாயாரான மர்யமிடம் ஊதினார் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் இறைவனின் ஆற்றலால் உருவாக்கப் பட்ட ஒரு மரபணுவை அந்த வானவர் மர்யம் (அலை) அவர்களிடம் ஊதியிருக்கலாம் என்பதையும், எந்த முறையில் குழந்தை உருவாவதாக இருந்தாலும் முடிவில் தாயின் கருவறை அவசியம் என்பதையும் இந்நிகழ்ச்சி நமக்குக் காட்டுகின்றது. அடுத்ததாக நாம் சிந்திக்க வேண்டிய விஷயம், ஈஸா நபியவர்கள் பிறந்தவுடனே பேசியதாகவும் இதில் கூறப்படுகின்றது. தந்தையில்லாமல் பிறந்ததால் அற்புதம் என்ற அடிப்படை யில் பிறந்தவுடன் சில வார்த்தைகளைப் பேசி விட்டு அதன் பிறகு குழந்தைத் தன்மையுடையவராக அவர் இருந்திருப் பார் என்று நினைக்கலாம். இது தவறாகும். ஏனெனில், அவர் குழந்தையாக இருக்கும் போது பேசினார் என்பதுடன் அவரை அப்போதே இறைத் தூதராகவும் ஆக்கியதாக இங்கு கூறப்படுகிறது.

இறைத் தூதர் என்றால், இறைச் செய்திகளைச் சரியாக விளங்க வேண்டும், அதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதை அறிவோம்.
பிறந்தவுடனேயே ஈஸா நபியவர்கள் பேசியதுடன், இறைச் செய்திகளை விளங்கி, மக்களிடம் எடுத்துச் சொல்லும் அளவுக்கு முதிர்ச்சி உடையவர்களாக இருந்தது மனிதக் குளோனிங் பற்றிய விஞ்ஞானிகளின் கருத்துக்கு ஒத்ததாக இருக்கின்றது.
இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 3:46, 19:21, 19:29,30, 21:91, 23:50


ஆக்கம் :மு.அஜ்மல் கான் 

Friday, 21 December 2012

உலக இறுதி நாள் (கியாமத்)!! ஒரு இஸ்லாமிய பார்வை....


உலக முடிவு நாள் எப்பொழுது சம்பவிக்கும் என்று ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்குள் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தான். அதற்கு தீர்வாக மனிதர்களுக்கு இறுதிநாளின் அடையாளங்களை நினைவுபடுத்துகிறோம். பொறுப்புடனும், பொறுமையுடனும் படித்து மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றியும் பயந்து, சிந்தித்து உலக இறுதி நாளின் நெருக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்தி இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடப்போமாக என்று எங்களையும், உங்களையும் கேட்டுக்கொண்டு ஆரம்பம் செய்கிறோம்.

இந்த உலகம் நிரந்தனமானது அல்ல. பிறந்ததெல்லாம் இறந்தே ஆகவேண்டும் என்ற நியதியுடைய இவ்வுலகத்தின் அழிவை பற்றி விஞ்ஞானிகள் கூறும் பொழுது :- உலகின் அழிவு துவங்கிவிட்டது. நாம் ஒரு மாய நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்றோம். மனித இனம் என்ற சுவடே இல்லாமல் அழிந்தொழியும். பூமியானது தூள்தூளாகி அனைத்து மூலக்கூறுகளும், அணுக்களும் தூசியாகி விண்வெளியில் பறக்கும்' என்று விஞஞானிகள் விஞ்ஞான வளர்ச்சியின் உச்சாணியில் இருந்து கொண்டு ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இதனையே இறைவன் 1425 வருடங்களுக்கு முன்பு விஞ்ஞானம் என்றால் என்ன என்று தெரியாத காலகட்டத்திலேயே திருக்குர்ஆனில் கூறும் பொழுது...

பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது - இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது (99 : 1,2)

பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, (89:21)

இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது, (56:5)

வானம் பிளந்து விடும்போது (84:1)

வானம் பிளந்து விடும்போது - நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்றுகள் திறக்கப்படும் போது, (82: 1-4)

சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது (81:1)


இவ்வாறு இறைவன் திருக்குர்ஆனில் உலகின் அழிவைப் பற்றி முன்னறிவிப்புகளைச் சொல்லியிருக்கிறான்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உலகின் அழிவைப் பற்றிக் கூறும் பொழுது...

''நானும் இறுதி நாளும் இப்படி இணைத்து அனுப்பட்டிருக்கிறோம்'' என்று தன் இரு விரல்களையும் சேர்த்துப் பிடித்துக் காட்டினார்கள்.(புகாரி)

உலகம் அழிவை நெருங்கும் போது என்னென்ன நிகழ்வுகள் நடக்கும் என்று 1425 வருடங்களுக்கு முன்னரே இறைதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் முன்னறிவிப்பு செய்துவிட்டான். அந்த முன்னறிவிப்புகள் ஒவ்வொன்றாக இந்த காலகட்டத்தில் அப்படியே பொருந்தி வருவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

இதோ அம்முன்னிவிப்புகளில் ஒருசில...

'காலம் சுருங்கி விடும்' எந்தளவுக்கென்றால் 'ஒரு வருடம் ஒரு மாதம் போல் ஆகிவிடும், ஒரு மாதம் ஒரு வாரம் போல் ஆகிவிடும், ஒரு வாரம் ஒரு நாள் போல் ஆகிவிடும், ஒரு நாள்; ஒரு மணிநேரம் போல் ஆகிவிடும், ஒரு மணிநேரம் ஒரு நிமிடம் போல் ஆகிவிடும்' என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அரபுப் பிரதேசம் வளமே இல்லாமல் வெறும் பாலைவனமாக காட்சியளித்தது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''ஒரு காலம் வரும், இந்த அரபுப் பிரதேசம் செல்வச் செழிப்பாக, சோலையாக மாறும் வரை யுக முடிவுநாள் வராது'' (முஸ்லிம் -157)

விபச்சாரம் விவசாயமாய் நடக்கும். எந்த அளவுக்கு என்றால் பெண்கள் நடுவீதிகளில் நின்று விபச்சாரம் புரிவர். விபச்சாரத்தின் பக்கம் பகிரங்கமாக மற்றவர்களை அழைப்பாள். எவரும் அதனை ஆட்சேபிக்க மாட்டார்கள். அக்காலத்தில் நல்லவன் யாரெனில், இச்செயலை கொஞ்கம் மறைத்து செய்யக் கூடாதா? என்று சொல்பவன்;தான் அப்போது நல்லவன். (புஹாரி 5577, 5580) (மும்பையில் மட்டும் 12000க்கும் மேற்பட்ட விபச்சார விடுதிகள் உள்ளன)

தகாத காரியங்களில் (விபச்சாரத்தில்) ஈடுபட்டால் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயங்கள் சந்தித்திராத உயிர்க்கொல்லி நோய் வரும். (இப்னுமாஜா)

(இந்த நவீன யுகத்தில் ''எயிட்ஸ்'' என்ற உயிர்க்கொல்லி நோய் வந்துவிட்டதை பார்க்கிறோம்.)

ஒரு காலம் வரும் ''மது அருந்துவது அதிகமாகிவிடும். தாறுமாறாக அதிகமாகும். அது இல்லாமல் இருக்கமாட்டார்கள்''. (புஹாரி : 5581, 5231)

என்னுடைய சமுதாயத்தில் மதுவுக்கு மாற்று பெயர் சூட்டி நிச்சயமாக அதனை அருந்துவர். (அபூதாவூத்)

அருகதையற்ற கெட்டவர்கள் தலைமைப் பதவியில் இருப்பார்கள். அநியாயக்கார அரசனை மக்கள் ஏற்றிப் போற்றுவர்.(புகாரி)

(இந்த இழிவான நிலையை குக்கிராமங்கள் முதல் வல்லரசு நாடுகள் வரை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.)

ஆண்களுக்கு இருக்கும் வெட்க உணர்வு கூட பெண்களுக்கு இருக்காது.பெண்கள் ஆடையணிந்தும் நிர்வாணமாகக் காட்சியளிப்பர். (முஸ்லிம் : 3921)

சங்கீத உபகரணங்கள் மிகுதியாகும். இசையில் மயங்கும் மனிதர்கள் பெருகுவார்கள்.(திர்மிதி)

காலையில் ஈமானுடனும் மாலையில் குப்ருடனும் மக்கள் தீமையில் உழல்வார்கள். (திர்மிதி)

எதற்காக யார் எப்படிச் செய்தார்கள் என்று தெரியாத அளவுக்கு கொலைகள் அதிகமாகும். (முஸ்லிம்) (ஒரு கோப்பை தேநீருக்கெல்லாம் கொலைகள் நடப்பதை நாம் பார்க்கிறோம்)

முஸ்லிம்கள் உலக சுகங்களுக்காகப் போட்டி போடுவார்கள். (புகாரி)

பூகம்பங்கள் அதிகம் ஏற்படும். (புகாரி)

பூமி அலங்கரிக்கப்படும். (திர்மிதி)

பருவ மழைக்காலம் பொய்க்கும்.

திடீர் மரணங்கள் அதிகரிக்கும், மனித ஆயுள் குறையும்.

முஸ்லிம்கள் பெருகியிருப்பர், ஆனால் கடல் நுரைபோல் இருப்பர்.

பெருமைக்காக பள்ளிவாசல் கட்டுவார்கள்.
 (நஸயீ, அஹ்மது, இப்னுமாஜா)

யுக முடிவு நாளின் நெருக்கத்தில் ''இட நெருக்கடி ஏற்படும். மக்கள் ஒரே இடத்தில் வந்து குவியும் போது கட்டிடங்கள் உயரமாகும்''. (நகரங்களின் மக்கள் தொகைப் பெருக்கத்தையும் அதனால் அடுக்குமாடி கட்டிடங்கள் அதிகமாவதையும் நாம் காண்கிறோம்.)

வியாபாரமுறைகள் மாறும் (புகாரி)

(இன்டெர்நெட் மற்றும் கடன் அட்டைகள் மூலம் புதிய விதங்களில் வியாபார முறைகள் மாறியுள்ளதைக் காண்கிறோம்.)

பழங்கள் பெரிதாகும். ஒரு மாதுளையை ஒரு கூட்டம் சாப்பிடும். (முஸ்லிம்)

ஒரு தடைவை ஒரு மாட்டில் கறக்கும் பால் ஒரு கலத்திற்கே போதுமானதாக இருக்கும்.(முஸ்லிம்)

திருக்குர்ஆன் தங்க மையால் அச்சிடப்பட்டிருக்கும் ஆனால் அதனைப் பின்பற்ற மாற்றார்கள். (பைஹகி)

சத்திய விசுவாசிகள் அவமானப்படுத்தப்படுவர்.

ஃபித்னா (குழப்பம்) கடலைப்போன்று அடுக்கடுக்காய் தோன்றிக் கொண்டிருக்கும். (புகாரி, முஸ்லிம்)

சின்ன சின்ன விஷயங்களில் அலட்சியமாக இருப்பார்கள்.

பேச்சையே (அதிகம் பேசி வியாபாரம் செய்வதையே) பிழைப்பாக்கிக் கொள்வார்கள்.

சந்தைகள் அதிகரித்து அருகாமையில் வந்துவிடும்.

பொருளாதார வள்ச்சி அதிகமாகும்.
 (புகாரி : 7121,1036,1424)

பொய் மிகைத்து நிற்கும். (திர்மிதி)


உங்களிடம் ஒரு காலம் வந்தால், பின்னால் வரும் காலம் முன்னால் சென்ற காலத்தைவிட மேசமாகவே இருக்கும். (புகாரி :7068)

அமல்கள் (நன்மைகள்) குறைந்து போய்விடும். மக்களின் உள்ளங்களில் பேராசையின் விளைவாக கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். (புகாரி)

முஸ்லிம்கள் மறுமையை நேசிப்பதற்குப் பதிலாக இம்மையை நேசித்து மரணத்தை வெறுப்பார்கள்.

பசியோடு இருப்பவர்கள் உணவு பாத்திரத்தின் மீது பாய்வது போல் மற்ற சமூகத்தினர் என் சமுதாயத்தின் மீது பாய்வார்கள். எதிரிகளின் உள்ளங்களில் முஸ்லிம்களைப் பற்றி பயம் இருக்காது. முஸ்லிம்களின் உள்ளங்களில் கோழைத்தனம் வந்துவிடும். 
(அபூதாவூத்)

 
முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் படித்து செயல்பட வேண்டிய நபிமொழி:
நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான், அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319, 3456)

(சந்தனக்கூடு, கொடிமரம், சமாதி வழிபாடு, அவ்லியாக்களுக்கு நேர்ச்சை, கப்ரை உயர்த்திக் கட்டுதல், தஸ்பீஹ் மணி, மவ்லூது பாடல்கள், இசைக்கச்சேரிகள், உரூஸ் உண்டியல், யானை குதிரை ஊர்வலங்கள், இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள், வட்டி வாங்குதல், வரதட்சணை பிடுங்குதல், ஜோதிட நம்பிக்கை, திருமணத்தில் பெண்ணுக்கு தாலி கட்டுதல் மற்றும் வாழைமரம் நடுதல், பிறந்த நாள் விழா எடுப்பது, ஆண்கள் தங்கம் அணிவது இது போன்ற பழக்கவழக்கங்களை மாற்று மதத்தவரிடமிருந்து முஸ்லிம்கள் அப்படியே காப்பியடித்து பின்பற்றுவதை நடைமுறையில் கண்டு வருகிறோம்.)


எனவே சகோதர சகோதரிகளே! நாம் செய்ய வேண்டியது என்ன?

மரணவேளை எப்போது நிகழும் என்று எந்த மனிதனும் அறிய முடியாது. அவ்வேளை நெருங்கி வரும் முன் நாம் நமது அமல்களைப் பெருக்கிக் கொள்வோம். ''இஸ்லாம்'' இறைவனின் மார்க்கம்தான் என்று சந்தேகமற நம்பவேண்டும். இறைவன் ஒன்றைக் கட்டளையிட்டு விட்டால் இந்த உலகமே எதிர்த்து நின்றாலும் இறைவன் சொன்ன கட்டளைக்கு மாறு செய்யாமல் உறுதியாக நிலைத்து நிற்க வேண்டும். நமது ஈமான் (நம்பிக்கை) அதிகமாக வேண்டும்.

விபச்சாரம் போன்ற மானக்கேடான செயல்களிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ளவேண்டும்.

நேர்வட்டி, ஏலச்சீட்டு, பிக்சட் டெபாசிட், எல்.ஐ.சி போன்ற அனைத்து வகை ஹராமான வட்டிகளைவிட்டும் முற்றிலும் ஒதுங்க வேண்டும்.

மது, சூதாட்டம், போதைப் பொருட்கள் போன்ற இறைவன் விரும்பாத அனைத்து செயல்களைவிட்டும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

ஏமாற்றுதல், அளவு நிலவையில் மோசடி செய்தல், அமானித மோசடி, வாக்கு மாறுதல், பொய் பேசுதல் போன்ற இழிசெயல்கள் நம்மைவிட்டு ஓடிவிட வேண்டும்.

அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசுவது, இங்கொன்றும் அங்கொன்றுமாக பேசுவது, பொறாமைப்படுதல், அவதூறு கூறுவது, குடும்ப சண்டைகள் போன்ற நாகரிகமற்ற செயல்களை விட்டும் நாம் விடுபட வேண்டும்.

இறைவனின் கட்டளைக்கு மாறான, அற்பச் செயலும், சமூகக் கொடுமையும், அக்கிரமமும், அநியாயமும், அநாகரிகமுமான வரதட்சணை போன்ற பாவங்களிலிருந்து நாமும் விலகி, நம் சமூகத்தையும் விலக்க வேண்டும். இவ்வரதட்சணைக் கொடுமைக்கு துணைபோகிறவர்கள், இக்கொடுமையை இழைப்பவர்கள், இதற்கு ஆதரவளிப்பவர்கள் அனைவரும் இறைவனின் முன்னிலையில் தண்டனைக்குரியவர்கள் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

எல்லாவற்றையும் விட மிகப்பெரிய அநியாயமும், அக்கிரமுமான இறைவன் மன்னிக்காத, இறைவன் விரும்பாத சமாதி வழிபாடு, பெரியேர்களுக்கு நேர்ச்சை செய்வது, ஜோசியம் பார்ப்பது, ஜாதகம் பார்ப்பது, நல்லநேரம் என நம்புவது, செய்வினைகளை நம்புவது, குத்பியத் மவ்லிது போன்ற இணை வைத்தல்கள் (ஷிர்க்) என்னும் மகா பாவங்களிலிருந்தும், மூடபழக்கவழக்கங்களிலிருந்தும் நம்மை நாம் காத்துக் கொண்டு இந்த மாய உலகத்தில், நாம் எதற்காக படைக்கப் பட்டிருக்கின்றோம்? நமது இலட்சியம் என்ன? என்று நம்மை நாமே உணர்ந்து செயல்படுவோமாக!

இன்று இஸ்லாத்தின் எதிரிகளால்; ''இஸ்லாமிய பயங்கரவாதம்'' என்ற விஷப் பிரச்சாரம் உலக அளவில் முழுவீச்சில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இக்காலச் சூழ்நிலைiயின் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, திருக்குர்ஆனை அதன் மொழியாக்கத்தோடு நாம் படித்து சிந்தித்து அவைகளை நாம் பின்பற்றி நடப்பது மட்டுமல்லாது மாற்று மத நண்பர்களுக்கும் எடுத்துரைத்து, பிற சமூகமக்களுக்கும் திருக்குர்ஆனை படிக்கக் கொடுத்து ''இஸ்லாம் தீவிரவாதத்தைத் தூண்டும் மார்க்கமல்ல மாறாக சாந்தி சமாதானத்தை போதிக்கும் மார்க்கம்'' என்பதை எடுத்துக் கூறும் முக்கியக் கடமைகளும் நம்மீதுள்ளது என்பதையும் புரிந்து நடப்போமாக!

நமது வாழ்க்கை நெறி திருக்குர்ஆனாக இருக்கட்டும்!

நமது வழிமுறை இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் அடிச்சுவடாகவே அமையட்டும்!!


இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை. மறுமை வாழ்வுதான் உண்மையான வாழ்வாகும். அவர்கள் (மனிதர்கள்) அறியக்கூடாதா? (திருக்குர்ஆன் 29:64)

நேரம் நெருங்கி விட்டது (திருக்குர்ஆன் 54:1)

மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது. ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள். (திருக்குர்ஆன் 21:1)
சிந்திப்போம்!! ஈருலக வெற்றியினைப் பெறுவோம்!!!.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றதா!! ஒரு விழிப்புணர்வு ஆய்வு...

வரக்கூடிய டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றதா? என்ற கேள்விக்குறியோடுபத்திரிக்கைகளும், தொலைக்காட்சி செய்தி சேனல்களும் ஏற்படுத்திய பீதிதான்தற்போது முக்கிய இடத்தைப் பிடித்த பரபரப்பு செய்தி.
டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியும் என்று சொல்கின்றார்களே! இவர்கள் சொல்லும்இந்த கட்டுக்கதை உண்மையில் சாத்தியமா? அவ்வாறு எதிர்காலத்தில் நடக்கவிருக்கும்செய்திகளை யாராவது சொல்ல இயலுமா என்ற சிந்திக்கும் திறனை இவர்கள் இழந்ததுதான்இத்தகைய செய்திகளை இவர்கள் வெளியிடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

*மறைவான விஷயங்களை எவராலும் அறிய இயலாது :*
நாளை என்ன நடக்கவுள்ளது?. அடுத்த நிமிடம் என்ன நடக்க இருக்கின்றது? என்பதைஅறியும் ஆற்றல் எந்த மனிதருக்கும் இல்லை. இதை சிந்திக்கும் திறன் படைத்தயாரும் விளங்கிக்கொள்ளலாம். அப்படி இருக்கும்போது டிசம்பர் 21ஆம் தேதி உலகம்அழியப்போகின்றது என்ற செய்தி எப்படி மற்ற மனிதர்களுக்குத் தெரியும் என்றசாதாரண சிந்தனைத்திறன் இருந்தாலே இது மிகப்பெரிய கட்டுக்கதை என்பதை நாம்விளங்கிக் கொள்ளலாம்.

வல்ல இறைவன் தனது திருமறையில் கூறிக்காட்டுகின்றான்:
யுக முடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான்.கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறியமாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது.

அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.அல்குர்-ஆன் 31 : 34

மேற்கண்ட ஐந்து விஷயங்களையும் படைத்த இறைவனைத்தவிர வேறு யாராலும் அறிந்துகொள்ள இயலாது.

மற்றொரு இடத்தில் அல்லாஹ் சொல்லிக்காட்டுகின்றான்:
(முஹம்மதே) யுக முடிவு நேரம் பற்றி அது எப்போது ஏற்படும்? என உம்மிடம்
கேட்கின்றனர். அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது? அதன் முடிவுஉமது இறைவனிடமே உள்ளது. அதை அஞ்சுவோருக்கு நீர் எச்சரிப்பவரே.அல்குர்-ஆன் 79 : 42முதல் 45வரை

மறைவான செய்திகளை தனது தூதர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக்
கொடுத்திருக்கின்றான். அப்படி சில மறைவான செய்திகளை தனது தூதருக்கு
அறிவித்துக் கொடுத்த இறைவன், தனது தூதருக்குக் கூட உலக அழிவு நாள் எப்போதுவரும் என்ற செய்தியை அறிவித்துத்தரவில்லை என்றால் வேறு எந்த மனிதருக்காவது
இந்த செய்தியை அறிந்து கொள்ள இயலுமா?

அதுமட்டுமல்லாமல், வல்ல இறைவன் தனது திருமறையில் கூறியிருக்கக்கூடியமுன்னறிவிப்புகளின் அடிப்படையிலும், நபிகளார் கூறிக்காட்டியுள்ளமுன்னறிவிப்பின் படியும் உலக முடிவு நாள் என்பது இரண்டு மூன்று நாட்களில்நடந்து முடிந்துவிடாது. அது வருவதற்குண்டான சில அடையாளங்களை அல்லாஹ்வும்,அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லிச் சென்றுள்ளார்கள். எண்ணற்றசிறிய அடையாளங்களும், மாபெரும் பத்து அடையாளங்களும் நிகழாதவரை உலக அழிவுநாள்ஏற்படாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்
*அந்த பத்து அடையாளங்களாவன :*
1 – புகை மூட்டம்
2 – தஜ்ஜால்
3 – ஈஸா நபியின் வருகை
4 – யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை
5 – அதிசயப் பிராணி
6 – மேற்கில் சூரியன் உதிப்பது
7, 8, 9 – மூன்று பூகம்பங்கள்
10 – பெரு நெருப்பு
மேற்கண்ட பத்து அடையாளங்கள் நிகழாதவரை யுக முடிவு நாள் ஏற்படாது.
இவை அனைத்தும் நிகழ்வதற்கு முன்பாகவே உலக அழிவு நாள் ஏற்படும் என்று யாரேனும்
சொன்னால் அவர் பொய்யர் என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் சொல்லிவிடலாம்.

டிசம்பர் 21ஆம் தேதிக்குப்பிறகும் உலகம் அழியாமல் இருக்கும் எனபதே உண்மை. இந்தஅறிவு இல்லாமல் மக்களிடம் பீதியைக் கிளப்பி ஊடகங்கள் பரபரப்பை ஏற்படுத்தி காசுபார்க்கின்றன.

*மாயன் காலண்டர் என்னும் மடத்தனமான காலண்டர்:*
டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றது என்பதற்கு இவர்கள் சொல்லும்காரணம்தான் மிகவும் வேடிக்கையானது. மாயன் காலண்டர் எனும் காலண்டர் பிரகாரம்2012ஆம் ஆண்டின் டிசம்பர் 21ஆம் தேதியுடன் உலகம் அழிந்துவிடும் என்பதுதான்அவர்கள் கூறும் வேடிக்கையான காரணம்.

*அது என்ன மாயன் காலண்டர்?:*
கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், மாயா என்றோர் இனம்தென்அமெரிக்காவில் இருந்ததாம். மாயா இனத்தைச் சேர்ந்த​வர்கள் வானவியல்சாஸ்திரங்களிலும், கட்டடக் கலையிலும், கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாகஇருந்தனராம். அதற்கு ஒரே சாட்சிதான் மாயன் காலண்டராம்.தென்அமெரிக்காவில் வாழ்ந்த மாயா சமூகத்து மக்கள் பயன் ​படுத்திய காலத்தின்கணக்கு முறைகளைக் கொண்டு இந்தக் காலண்டர் உருவாக்கப்பட்டதாம். கி.மு. 3113
தொடங்கி கி.பி. 2012 டிசம்பர் 21-ம் தேதி மாயன் காலண்டர் முடிவுக்கு வருகிறது.அதற்கு பிறகு அந்த காலண்டரில் தேதிகள் இல்லையாம். வான சாஸ்திரங்களைக்கரைத்துக் குடித்த(?) மாயா இனத்தைச் சேர்ந்தவர்கள், 2012-ம் ஆண்டு டிசம்பர்21-ம் தேதியுடன் காலண்டரை முடித்துக் கொள்ள என்ன காரணம்? “அதற்குப் பிறகு இந்தஉலகமே இருக்காது என்பதுதான் மாயன் காலண்டர் சொல்லும் ரகசியம்” என்று பக்கம்பக்கமாக எழுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள் பத்திரிக்கையாளர்கள்.

மாயன் என்ற மூடர்கள் கூட்டம் தங்களது காலண்டரில் 2012 ஆம் ஆண்டின் டிசம்பர் 21ஆம் தேதிக்குப் பிறகு 22ஆம் தேதியை குறிப்பிடாததால் உலகம் அழியப்போகின்றதுஎன்று எவனாவது நம்பினால் அவனைவிட மிகப்பெரிய முட்டாள் இந்த உலகத்தில் யாரும்இருக்க இயலாது. மாயன் கூட்டம் என்ற மூடக்கூட்டம் முட்டாள் கூட்டம்தான் என்பதுடிசம்பர் 22ஆம் தேதி நிரூபணமாகிவிடும்.இந்த கூறுகெட்ட கூட்டம் கூறுவது எப்படி உள்ளது என்றால், சிறுகுழந்தைகள்கையில் காலண்டரை வைத்துக் கொண்டு தினம் தினம் ஒரு டெய்லி காலண்டர் தேதியைதேதிவாரியாக கிழிப்பதற்கு பதிலாக மொத்தமாக ஒரு மாதத்தின் தேதியை முன்கூட்டியேகிழித்துவிட்டு, ஒருமாதம் கடந்து விட்டது என்று சொன்னால் அது எப்படி இருக்குமோ
அதுபோலத்தான் இதுவும் உள்ளது.மேலும் நம்ம ஊர் பத்திரிக்கையாளர்களுக்குச் சொல்லவே வேண்டாம். வெறும்
வாய்க்கு அவுல் கொடுத்தது போல, ஒரு புரளி விஷயம் கிளப்பிவிடப்பட்டால் தங்களால்இயன்ற அளவு அதை பரப்பி புளகாங்கிதம் அடைவார்கள். மக்கள் பீதியடைவதில்அவர்களுக்கு என்னே சந்தோசம்?.

*உள்ளூர் புரளி:*
உலகம் அழியப்போகின்றது என்ற புரளி கிளம்பியதும்தான் கிளம்பியது நம்ம
தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளோடு அதை முடிச்சுப்போட்டு பரப்பிவிட்டு அதில்லாபம் அடையும் நிகழ்வுகளும் ஆங்காங்கே அரங்கேறின.

*கடலூரில் நடந்த கூத்து:*
இந்த பரபரப்பில் கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் தீபம் அணைந்ததாகவும்,அதனால் உலகம் அழியப்போகின்றது என்றும் வதந்தியை பரப்பி விட்டனர்.
வள்ளலார் தான் இறந்த பிறகும் தீபமாக காட்சி தருகின்றார் எனவும், இந்த தீபம்அணைந்து விட்டதாகவும், இது உலக அழிவிற்கு அறிகுறி என்றும் மக்கள் பேசத்துவங்கினர். இந்த செய்தி காட்டுத் தீ போல கடலூர் மாவட்டம் முழுவதும் பரவியது.

கடலூர் மாவட்டத்தை யொட்டியுள்ள தஞ்சை மாவட்டத்தை தாண்டியும் இந்த வதந்திபரவியது. இதனையடுத்து வடலூர், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி என நகர் புறங்களில்மட்டுமின்றி மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் பெண்கள் விளக்கேற்றிவழிபட்டனர்.
உலகை அழிவில் இருந்து காப்பாற்ற வள்ளலார் இந்த அருட்பெரும் ஜோதியை ஏற்றிவைத்தார். அது அணைந்து போனதால் அதற்கு பரிகாரமாக வீடுகள் தோறும் விளக்குஏற்றியதாக பெண்கள் தெரிவித்தனர். ஏற்கனவே 2012 டிசம்பர் மாதம் உலகம்அழியப்போகிறது என்று புரளி கிளம்பியுள்ள நிலையில் தற்போது வள்ளலார் விளக்குஅணைந்து போனதாக எழுந்த வதந்தி மக்களை அதிர்ச்சியிலும், குழப்பத்திலும்ஆழ்த்தியுள்ளது என்றும் பத்திரிக்கைகள் பரபரப்புடன் எழுதின.

வள்ளலார் என்ற மனிதரே உயிர் வாழ முடியாமல் செத்துவிட்ட பிறகு அவர் ஏற்றிவைத்ததீபம் இருந்தால் என்ன? அணைந்தால் என்ன என்று கூட இவர்களுக்குச் சிந்திக்கத்தெரியவில்லை. அவர் மிகப்பெரிய அற்புதம் செய்யக்கூடிய அளவிற்கு ஆற்றல் பெற்றுதெய்வத்தன்மை பெற்றவராக இருந்திருந்தால் சாகாமல் உயிரோடல்லவா இருந்திருக்க
வேண்டும். அவர் செத்துப்போய் விட்டார் என்பதே அவருக்கு எந்த ஆற்றலும் இல்லைஎன்பதை காட்டுகின்றதா இல்லையா? இந்த ஓர் அடிப்படை அறிவுகூட இல்லாமல் மக்களும்
அறியாமையில் இருக்கின்றார்கள். ஊடகங்களும் அறியாமையில் திளைக்கின்றார்கள்.

*தங்கள் பங்குக்கு புருடா விட்ட புண்ணியவான்கள்(?):*
இந்த பரபரப்பு புரளி குறித்து பத்திரிக்கையாளர்கள் ஜோசியக்காரர்களிடம் சென்றுகுறிகேட்டு அதையும் வெளியிட்டுள்ளார்கள்.
உலகம் அழியும் என்று சொல்லப்படுவது குறித்து பிரபல ஜோதிடரான
கே.பி.வித்யாதரனைச் சந்தித்து கேட்டார்களாம். அதற்கு அவர் கொடுத்த புரூடா இதோ:
“சனி, ராகு இரண்டும் மக்களுக்குத் தொல்லையை உண்டாக்கக்கூடிய கிரகங்கள். இந்தஇரண்டு கிரகங்களும் ஒன்று சேர்வது அபூர்வம். ஆனால் இப்போது சேர்ந்துஇருக்கின்றன. இதனால் பேரழிவுகள் நிச்சயம் இருக்கும். விபத்துகள் அதிகண்ணிக்கையில் நிகழும். மனசாட்​சிக்கு விரோதமான செயல்கள் நடக்கும்.2014 ஜூன் மாதம் வரை இந்த இரண்டு கிரகங்களும் ஒன்று சேர்ந்து இருக்கின்றனஎன்பதால், அதுவரை மக்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக மேஷம், துலாம்,மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்குதான் இந்தக் கிரக மாற்றம் அதிக அளவிலான பிரச்னைகளையும் சோதனைகளையும் கொடுக்கும்.இந்தக் காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகள் அசாதாரண திறமையுடன் இருப்பார்கள்.ஆனாலும், குழந்தை​களின் உடல்​நலனில் அக்கறை காட்டு​வது அவசியம். மற்றபடி ஒரேநாளில் உலகம் அழியும் என்று சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. நம் ஜோதிடத்திலும்அப்படிக் குறிப்பிடவில்லை” என்று அவர் சொன்னாராம்.பேரழிவுகள் ஏற்படும் என்று சொல்லிவிட்டு அதில் மேஷம், துலாம், மீனம்ராசிக்காரர்களைத்தான் அது பாதிக்கும் என்று சொல்வதிலிருந்தே இது எவ்வளவு பெரியகடைந்தெடுத்த பொய் என்பதை அனைவரும் எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.  

ஒருமிகப்பெரிய சுனாமியோ, பூகம்பமோ வருவதாக வைத்துக் கொள்வோம். அதில் இவர்குறிப்பிட்ட மேஷம், துலாம், மீனம் ராசிக்காரர்கள் மட்டும்தான் சாவார்களா? வேறுராசிக்காரர்களோ, அல்லது ராசியே பார்க்காதவர்களெல்லாம் சாகமாட்டார்களா என்ன?இந்த ஜோதிடக்காரர்களிடத்திலேயே கொள்ளையடிக்கும் நிகழ்வுகள் நடந்து இவர்கள்போய் காவல்துறையில் புகார் கொடுத்த சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ள நிலையில்இவர்கள் உலக அழிவு குறித்து ஜோசியம் சொல்வது உண்மையிலேயே மகா காமெடிதான்.இதே போல இது குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர்ரமணனிடமும் கேள்வி கேட்டுள்ளனர் பத்திரிக்கையாளர்கள். அது சந்தேகம்தான் என்றுஅவர் தனது பங்குக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். மழை வருமா? வராதா என்பதையே
சரியாகச் சொல்லத்தெரியாதவர்கள் உலக அழிவு நாளைப் பற்றி சொல்லப்போகின்றார்களாஎன்ன? அந்த கேள்விக்கும் வரும் ஆனா வராது என்ற பாணியில்தான் அவர்பதிலளித்துள்ளார்.கி.பி இரண்டாயிரமாம் ஆண்டு உலகம் அழியப்போகின்றது என்று இதற்கு முன்பாகஇதுபோல ஒரு புரளியை கிளப்பினார்கள். அதுபோல இப்போது இந்தப்புரளியைகிளப்பிவிட்டுள்ளார்கள்.


இப்படி உலகமே மூடநம்பிக்கையிலும், பீதியிலும் உரைந்துள்ள இவ்வேளையில்உண்மையான முஸ்லிம்களுக்கு இந்த புரளி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லைஎன்பதே இஸ்லாம்தான் இறைவனின் மார்க்கம் என்பதற்கு இன்னுமொரு ஆதாரம்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Thursday, 20 December 2012

ஈரானின் அதி நவீன செயற்கைக்கோள் தொழில்நுட்பம்!! ஒரு பார்வை...


"அமெரிக்கா இதுவரை கண்டிராத அதிர்ச்சியை ஈரான் கொடுத்துள்ளது ! 

அமெரிக்காவின் அதி நவீன ஆளில்லா உளவுபார்க்கும் விமானம் ஒன்றை கடந்த வாரம் தாம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்தது। ராடர் திரையில் விழாமல் தன்னை உருமறைத்துக்கொண்டு பறக்கத்தக்க இந்த விமானம் தான் இருக்கும் இடத்தை வேறு இடத்தில் இருப்பது போன்ற பொய்யான தோற்றப்பாட்டையும் மேற்கொள்ள வல்லது. அதுமட்டுமல்லாது அதி நவீன கண்காணிப்புப் கருவிகளைக் கொண்டுள்ள இவ்விமானம் தரையில் இருந்துவரும் ஆபத்துக்களையும் அறிந்து அதற்கு ஏற்றால் போல தனது பறக்கும் திறனை மாற்றவல்லது. இதனை எவ்வாறு சுட்டு வீழ்த்த முடியும் என்பதே பெரும் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் அதனை ஈரானிய இராணுவத்தினர் பத்திரமாகத் தரையிறக்கியுள்ளனர் என்ற செய்தி தற்போது கசிந்துள்ளது.


இவ்விடையம் ஏற்கனவே அமெரிக்காவுக்குத் தெரிந்திருக்கவேண்டும் ஆனால் அவர்கள் வாயே திறக்கவில்லை காரணம் ஈரான் தான் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்க அப்படியே இருக்கட்டும் என அமெரிக்க விட்டுவிட்டது. விமானம் சுடப்பட்டால் அது தரையில் வந்து விழும்போது சிறிய அளவிலாவது சேதம் ஏற்படும். ஆனால் சுட்டு வீழ்த்தியதாகச் சொல்லப்படும் விமானத்தை ஈரான் காட்டும்போது அதனைப் பார்த்து உலகமே ஒரு கணம் ஆடிப்போய்விட்டது. காரணம் அதில் எந்தச் சேதமும் இல்லை. (மிகமிகக் குறைந்த ஒரு சேதத்தைத் தவிர) அப்படி என்றால் விமானத்தை எவ்வாறு ஈரான் இராணுவத்தினர் கைப்பற்றினார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. மேற்கொண்டு படியுங்கள்.

இந்த விடயத்தை சம்பவ தினமன்று குறிப்பிட்ட விமானம்(RQ - 170) அப்கானிஸ்தான் வான் பரப்பில் பறப்பது போன்ற தோற்றப்பட்டை கொடுத்துக்கொண்டு பறப்பில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா சொல்கிறது அவ்விமானம் சிலவேளை ஈரானின் எல்லைப் பகுதிக்குள் தற்செயலாகச் சென்றிருக்கலாம் என்று. ஆனால் அந்த விமானம் ஈரான் நாட்டிற்குள் சுமார் 200 கிலோ மீட்டர் வரை ஊடுருவிச் சென்று வேவுபார்த்துள்ளது என்பதே உண்மையாகும். குறிப்பிட்ட விமானம் உள்வாங்கும் GPS சமிஞ்சைகளை ஈரான் அவதானித்து அதனை வைத்து அந்த ஆளில்லா விமானத்தை ஏமாற்றியுள்ளது. புரியவில்லையா ? அதாவது இந்த அதி நவீன ஆளில்லா விமானம் செயற்கைக்கோளில் இருந்து வெளியாகும் சில சமிஞ்சைகளை வைத்தே தனது (பாதை) பயணத்தை உறுதிசெய்கிறது. அச் சமிஞ்சைகள் சிலவேளை கிடைக்கவில்லை என்றால் அது தானாகவே ஆட்டோ பைலட் (தானாகப் பறக்கும் திறனுக்கு) மாறும்.



ஈரான் முதலில் ஒருவகையான ஒலிக்கற்றைகளைப் பாவித்து செயற்கைக்கோளின் சமிஞ்சைகளைத் தடைசெய்துள்ளது। அவ்விமானம் உடனே ஆட்டோ பைலட் சிஸ்டத்துக்கு தன்னை மாற்றி பறப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. இவ்வாறு பறப்பில் இருந்த விமானத்தின் கருவிகளோடு உடனடித் தொடர்பை ஏற்படுத்திய ஈரான் இராணுவத்தினர் விமானத்தில் ஏற்கனவே பதியப்பட்டிருந்த வரைபடங்களை மாற்றியுள்ளனர். உலகவரை படங்கள் சிலவற்றை மாற்றி அதனை அந்த விமானத்தின் மெமரியில் பதித்துள்ளனர். புதிதாகப் பதிக்கப்பட்ட மெமரியில் அந்த விமானம் இறங்கவேண்டிய இராணுவத் தளம் ஈரானின் ஒரு விமான நிலையம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தைப் பொறுத்தவரை ஈரான் நாடு தான்॥ தான் தரையிறங்கவேண்டிய கடைசி விமானநிலையம் என அது நினைத்துள்ளது. (அதாவது பாக்கிஸ்தான் இல்லையேல் அக்பானிஸ்தான் என்று அது நினைத்து ஈரானில் தரையிறங்கத் தயரானது). இந்த விமானத்தை அதுவரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சி.ஐ.ஏ உளவு நிறுவனம் அதன் கட்டுப்பாட்டை சில நிமிடங்கள் இழந்தது. அதனைச் சாதகமாகப் பயன்படுத்திய ஈரான் அந்த ஆளில்லா விமானம் இறங்கவேண்டிய குறியீடுகளை தாம் ஏற்கனவே ஏற்படுத்தியிருந்த தொடர்புகள் மூலம் உட்செலுத்தியுள்ளது.


பறக்கும் அவ்விமானத்தின் உயரத்தை அவசரமாக கணக்கிட்ட அவர்கள் எத்தனை ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அது தரையிறங்கவேண்டும் என அறிவித்தல் சமிஞ்சைகளை விடுக்க அவ்விமானம் தனது சொந்த விமானநிலையத்துக்கு தாம் வந்துவிட்டதாகக் கருதி தரையிறங்கியுள்ளது. இருப்பினும் எல்லாவற்றையும் படு கச்சிதமாகச் செய்த ஈரானின் இராணுவ வல்லுனர்கள் சிறிய பிழை ஒன்றை மட்டும் விட்டுவிட்டனர். விமானத்திற்க்கும் ஓடு தளத்திற்கும் இடையே உள்ள தூரத்தை துல்லியமாக அவர்கள் கணக்கிடவில்லை. அதனால் அமெரிக்க விமானம் தரையிறங்கும்போது மெதுவாக இறங்கவில்லை. சற்றுக் கடினமான முறையில் தரையிறங்கி மிகச்சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளது அவ்வளவுதான். ஆனால் இது ஈரானின் பாரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

உலகில் உள்ள பல நாடுகளுக்கு மேல் இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டு நோட்டம் இட்டுள்ளது. இவ்விமானம் ரஷ்ய வான்பரப்பில் கூட பறந்து அங்கும் மண்ணைத்தூவி திரும்பியுள்ள நிலையில் இதனை ஈரான் எவ்வாறு துல்லியமாகக் கண்டு பிடித்து சுட்டு வீழ்த்தாமல் தரையிறக்கியுள்ளது என்பது பெரும் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.
இதனை விடப் பெரியவிடையம் என்னவென்றால் இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டு ஈரான் நாட்டிற்குள் வந்த சில நிமிடங்களில் எல்லாம் ஈரான் இராணுவ வல்லுனர்கள் கடுகதி வேகத்தில் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பது தான் தெரியவில்லையாம். இவ்விமானம் குறித்து ஏற்கனவே ஈரான் பல தகவல்களைத் தெரிந்துவைத்திருக்கிறதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது. அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனம் தற்போது ஆழ்ந்த யோசனையில் உள்ளது. இதற்கான பதிலடியை ஈரானுக்கு எவ்வாறு கொடுப்பது என்பது அமெரிக்காவின் அடுத்த சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க கைப்பற்றப்பட்ட விமானத்தில் இருந்து அமெரிக்காவில் உள்ள தேசிய பாதுகாப்பு கம்பியூட்டர்களை அல்லது உளவு நிறுவனத்தின் கம்பியூட்டர்களைத் தொடர்புகொள்ள முடியும் என்பதனால் அனைத்துச் சேனல்களையும் அமெரிக்க பென்டகன் பாதுகாப்பு மையம் தற்போது முடக்கியுள்ளதாம்.

நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்துகின்றோம். கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்! (அல்குர்ஆன்:12:76)


தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Wednesday, 19 December 2012

ஆம்புலன்ஸ் உருவான வரலாறு!! ஒரு சிறப்பு பார்வை...


உயிருக்கு போராடும் நோயாளியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ் இன்று  முதலுதவி சிகிச்சை, உயிர் காக்கும் மருந்துகள் என “மினி மொபைல் ஆஸ்பத்திரி’யாக வலம் வருகிறது.

இந்த ஆம்புலன்ஸ் உருவான வரலாறு 17ம் நூற்றாண்டில் துவங்குகிறது. அந்த காலக்கட்டத்தில் காயம்பட்ட போர் வீரர்களை சிகிச்சை மையத்திற்கு எடுத்துச் செல்ல, இரு மூங்கில் கம்புகளில் இணைக்கப்பட்ட துணியை (ஸ்டிரெச்சர்) பயன்படுத்தினர். இதுதான் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உருவாகுவதற்கான கரு எனலாம்.

நெப்போலியன் படைப்பிரிவில் பணியாற்றிய தலைமை டாக்டர் டொமினிக் ஜின்லாரேதான் ஆம்புலன்ஸ் என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தார். (பயன்படுத்தினார்) இது பிரெஞ்சு வார்த்தை, ‘ஹோபிடல் ஆம்புலன்ட்’ என்னும் வார்த்தைக்கு ‘நகரும் மருத்துவமனை’ என்பது பொருள். முதல் ஆம்புலன்ஸ் வண்டி 200 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.

முதலில் குதிரை பூட்டிய வண்டியில் இருந்த ஆம்புலனஸ் இரயில்கள், கப்பல்கள், விமானங்கள் ஆம்புலன்ஸில் நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, பலர் இறக்க நேரிட்டதால் ஆம்புலன்ஸிலேயே ஆக்சிஜன், ஸ்ட்ரெச்சர், மருந்துகள் முக்கியமானதை கொண்ட குட்டி மருத்துவமனை போல் ஆக்கப்பட்டது. மோட்டார் வாகனங்களில் அமைக்கப்பட்ட உலகின் முதல் ஆம்புலன்ஸ் நியுயார்க் நகரில் உள்ள பெவில்யூ மருத்துவமனையில் 1869 ஆம் ஆண்டில் போது மக்களுக்காக பயன்படுத்தப்பட்டது. உலகின் முதல் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் இரண்டாம் உலகப் போரில் செயல்பட்டன.

1970க்குப் பிறகு ஆம்புலன்ஸிற்காகவே பயிற்சி அளிக்கப்பட்ட டாக்டர்கள், நர்சுகள், உதவியாளர்கள் அமர்த்தப்பட்டனர். ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை ஆம்புலன்ஸிலேயே அளிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய ஆம்புலன்ஸ் வேன் பிரிட்டனில் உள்ளது. 59அடி நீளமுள்ள 44 படுக்கை வசதி கொண்ட ஆம்புலன்ஸ் அமெரிக்காவில் உள்ளது.

பின், குதிரை வண்டி, மோட்டார் வாகன வண்டி ஆம்புலன்ஸ் என பல பரிமாணங்களை பெற்றன. கி.பி. 18ம் நூற்றாண்டில் தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. மகாத்மா காந்தி கூட, தென்னாப்பிரிக்காவில் “இந்தியன் ஆம்புலன்ஸ் கிராப்ஸ்’ என்ற நிறுவனத்தை துவக்கி, ஸ்டிரெச்சர் தூக்கும் ஊழியராகவும் இருந்தார். இந்தியாவில் முதன்முறையாக 1914ல் மும்பையில் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, பணம் கொடுத்து அழைத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ், 2005 ஆகஸ்ட்டில் “108′ என்ற பெயரில், இலவச ஆம்புலன்ஸ் திட்டமாக, ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 411 வாகனங்களைப் பல ஊர்களில் நிறுத்தி வைத்து, எதிர்பாராமல் நிகழும் சாலை விபத்துகள், மாரடைப்பு, தீக்காயங்கள் மற்றும் நோய்களுக்கு அவசர உதவிகளைச் செய்து, பாதிக்கப்பட்டோரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்று காப்பாற்றும் பணியைச் செய்து வருகிறது.இன்று தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 3000 ஆம்புலன்ஸ்கள் இலவச சேவையில் ஈடுபட்டுள்ளன. அவசர கால மேலாண்மை ஆராய்ச்சி மையம் இதை நிர்வகிக்கிறது. இடத்தின் தன்மைக்கு ஏற்ப, “108′ ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்படுகிறது. நீர்நிலைகள் அதிகமுள்ள அசாமில் படகையே ஆம்புலன்சாக மாற்றி உள்ளனர். மலைப்பகுதியான உத்தரகாண்ட் மாநிலத்தில், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. “108′ஐ குறிக்கும் வகையில், ஆண்டின் முதல் மாதமான இந்த ஜனவரியில், 8 ம் தேதியான இன்று ஆம்புலன்ஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

நானும் எனது நண்பரும் கடைத்தெருவிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று ஆம்புலன்ஸ் வேன் ஓன்று சைரன் ஒலி அலறல் சப்தத்துடன் வேகமாக கடந்து சென்றது. அந்த ஒலியைக் கேட்டவுடன் அனைத்து தரப்பு மக்களும் ஒதுங்கி வழிவிட்டனர். நானும் அந்த வினாடியே ஒதுங்கி நின்று ஒன்றை நினைத்து முனுமுனுத்தேன். இந்த செயலை பார்த்த என் நண்பர் ஆச்சரியத்துடன் 'எதற்க்காக என்னவோ மனதில் முனுமுனுத்தாயே காரணம் என்ன ?' என்று கேட்டான். 

அது ஒன்றுமில்லை, இப்போது கடந்து சென்ற ஆம்புலன்ஸ் வேனில் உள்ளவர்கள் யாரோ? எவரோ? தெரியாது. ஆனால் ஆபத்தான அவசர சிகிச்சைக்காக யாரையோ கொண்டு செல்கின்றனர். அவர் நல்லபடியாக குணமடைய வேண்டுமென்று சில வினாடிகள் அவருக்காக பிரார்த்தனை செய்தேன்.  மக்கள் இந்த ஒலியைக் கேட்டவுடன் எவ்வாறு ஒதுங்கி வழி விடுகின்றனரோஅதேபோல் நாம் பிரார்த்தனை செய்வது நல்லது தானே!' என்றேன்.  இதைக்கேட்ட என் நண்பர் 'இந்த காரணம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. இப்போது முதல் நாம் இதை பின்பற்றபோகிறேன்' என்று கூறும்போது நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். 

வழிநெடுகிலும் எத்தனையோ பேர்களை ஆம்புலன்ஸ் கடந்து செல்கின்றது. அவர்களெல்லாம் பிரார்த்தனை செய்யும்போது பலன் நிச்சயம் கிடைக்கும்.


ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் பணியமர்த்தப்படுவர். 12 மணிநேரம் பகல், இரவு பணியாக வழங்கப்படும்.

 ஓட்டுநர்: ஓட்டுநர் பணியிடத்துக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் குறைந்தபட்சம் கனரக வாகன பழகுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 25 வயது முதல் 35 வயதுடையவராக இருத்தல் வேண்டும். 5 ஆண்டு அனுபவம் அவசியம். எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனித வளத் துறை நேர்காணல், கண் பார்வை, சாலை விதிகளுக்கான தேர்வு அடிப்படையில் ஓட்டுநர் பணியிடம் பூர்த்தி செய்யப்படும். மாத ஊதியமாக ரூ.6,800 வழங்கப்படும்.

 மருத்துவ உதவியாளர்: மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு பிஎஸ்சி நர்சிங், விலங்கியல், உயிரியல், நுண்ணுயிரியல், தாவரவியல், உயிர் வேதியியல் உள்ளிட்ட அறிவியல் தொடர்பான பட்டப் படிப்புகளை முடித்திருக்க வேண்டும். இல்லையெனில், 12-ஆம் வகுப்புக்கு பிறகு மருத்துவம் சார்ந்த கல்வியில் 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். 20 முதல் 30 வயதுடையவராக இருக்க வேண்டும்.

 மருத்துவ உதவியாளர் பயிற்சி: மருத்துவக் கல்லூரியில் டிஎம்இ பட்டயப் படிப்பு படித்திருக்க வேண்டும். ஆண், பெண் இரு பாலரும் இந்தப் பணிகளில் சேரலாம்.

 எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம், மனித வளத் துறையின் நேர்முகம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 45 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் ஊக்கத் தொகையும், உணவுப்படி, தங்குமிடம் இலவசமாக அளிக்கப்படும். மருத்துவ உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.8100 ஊதியமாக வழங்கப்படும். 

 மருத்துவ உதவியாளர் பயிற்சி பணியிடத்துக்கு ஓராண்டுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 7708050108, 7708055108, 9677120108 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஆக்கம் :  மு. அஜ்மல் கான் 

தங்கத்தை பூசிக்கொள்ளும் பெண்கள்!! ஒரு தவகல்... தங்கங்கள்


ங்கத்தின் மீது இந்தியப் பெண்களுக்கு இருக்கும் நேசமும், நெருக்கமும் கூடிக் கொண்டே போகிறது. ஆபரணங்களாக்கி அணிந்தார்கள். பட்டுப்புடவைகளில் பார்டர் ஆக்கி உடுத்தி னார்கள். தங்கபஸ்பமாக்கி சாப்பிட்டார்கள். இதோ இப்போது அழகு நிலையங்களில் தங்கத்தை உடலில் பூசிக்கொண்டு தகதகவென மின்னத் தொடங்கி யிருக்கிறார்கள். பெண்களின் இந்த ஜொலிப்புக்கு முதற்காரணமாக இருப்பவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் என்பது ஆச்சரிய தகவல்.
அஞ்சலிக்கு 27 வயது. சாப்ட்வேர் துறையில் பணியாற்றும் அவளுக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. மூன்று மாதங்களில் திருமணம். வருங்கால கணவர் அவள் வீடு தேடிச் சென்று, பெற்றோர் அனுமதியோடு தனது காரிலே அருகிலுள்ள பிரபல பியூட்டி பார்லருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அவள் தயங்கித் தயங்கி மேலும் கீழும் பார்க்க `சும்மா உள்ளே போயிட்டு வாயேன். நான் உன் துணைக்கு இங்கேயே இருக்கிறேன்..’ என்று அந்த அழகு நிலையத் திற்குள் அனுப்பிவைத்திருக்கிறார். அங்கே அவளுக்கு வருங்கால மாப்பிள்ளையால் புக்கிங் செய்யப்பட்டிருந்தது, தங்கப் பூச்சு அலங்காரம். தன்மீது அவர் கொண்டிருக்கும் அக்கறையில் அவள் ஆனந்தப்பட்டுப்போனாள்.
அலங்காரம் முடிந்து வீடு திரும்பியபோது அம்மா, `ஏதோ உன்னிடம் ஒரு மாற்றம் தெரியுதே.. முன்னைவிட பளபளன்னு ஆகியிருக்கியே..’ என்று கேட்டிருக்கிறார்.
திருமணம் நிச்சயமான ஒருசில இளைஞர்களால் இப்படி தங்கள் வருங்கால மனைவிகளுக் காக ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த அலங்கார பழக்கம், இப்போது நிச்சயதார்த்தம் செய்தி ருக்கும் நிறைய இளைஞர்களை தொற்றிக்கொண்டுள்ளது. திருமணத்திற்கு முன்பே மனைவி களுக்கு தங்கம் பூசி, அவர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட முடிவு செய்து விட்டார்கள்போல் தெரிகிறது.
இந்த தங்க சமாச்சாரத்தை நாம் கேள்விப்பட்ட தருணத்தில் `கோல்டு ஸ்பா’ பற்றிய செய்முறை விளக்கம் கிரீன் ட்ரெண்ட்ஸ் அழகு நிலையத்தில் நடக்க, அங்குள்ள அழகுப் பெண்கள் கூட்டத் திற்குள் நாமும் புகுந்து கொண்டோம், தங்கத்தை எப்படி பூசுகிறார்கள் என்று பார்க்க! இது திருவான்மியூரில் நடந்தது.
தங்கத்தால் `பாடி பாலீஷிங்’ செய்வது எப்படி என்பதை `காஸ்மட்டாலஜிஸ்ட்’ பிரசன்னா செய்து காட்டினார். மாடலாக இளம்பெண்கள் இடம்பெற்ற னர். அதில் பெரும்பாலானவை ஆண்கள் பார்க்க வும், படம் எடுக்கவும் அனுமதிக்கப்படாதவை. ஏன்என்றால் தங்கத்தால் பாடி பாலீஷிங் பெண் களின் உச்சி முதல் பாதம் வரை செய்யப்படுகிறது. மெனிக்யூரும், பெடிக்யூரும் கூட இதில் இடம் பெறுகிறது.
`சரி. பாடி பாலீஷிங்கில் என்னென்ன நடக்கிறது? அது எப்படி உடல் அழகில் மாற்றங்களை நிகழ்த்துகிறது’ என்பதை கேட்டாவது நாம் தெரிந்துகொள்ளலாமே! பிரசன்னாவிடம் கேட்டோம்..
“முதலில் கோல்டு பாலீஷிங் சருமத்தில் என்னென்ன மேம்பாடுகளை ஏற்படுத்தும் என்பதை அவர்களுக்கு விளக்குவோம். அப்போதே அவர்கள் முகத்தில் அழகான மகிழ்ச்சி ஏற்பட்டு விடும். இந்த பாலீஷிங் சருமத்தை மென்மையாக்கி, இளமைக்கு மாற்றும். பொன் நிறம் கிடைக்கும். நச்சுத் தன்மை வெளியேறி சருமம் புத்துணர்ச்சி பெறும். சுருக்கங்கள் மறையும்…” (இப்படியே அவர் நிறைய அடுக்கிக்கொண்டு போனார்)
மணப்பெண்கள் இந்த அலங்காரத்தை அதிகம் விரும்ப என்ன காரணம்?
“மணப்பெண் அலங்காரம் என்பது இப்போது எல்லோராலும் பின்பற்றப்பட்டுக் கொண்டிருக் கிறது. அதில் முகம், கூந்தல், மற்றும் வெளியே தெரியும் சருமப்பகுதிகளுக்குத்தான் முக்கியத் துவம் கொடுக்கிறார்கள். ஆனால் இன்றைய பெண்கள் உடல் பகுதிகளில் எந்த பாகுபாடும் இன்றி முழு அழகுடன் திகழவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒரே மாதிரியான மேம்பட்ட அழகை உடல் முழுவதும் எதிர்பார்க்கிறார்கள். இதுவரை அழகில் அக்கறை கொள்ளாதவர்கள் கூட திருமணம் நிச்சயம் ஆனதும், முழுஉடல் அழகில் அக்கறை கொள்ளத் தொடங்கிவிடு கிறார்கள். அதனால் மணப்பெண்கள் இந்த வித அழகை அதிகம் நாடுகிறார்கள். மணமகன் களும் இந்த அலங்காரத்தை விரும்புகிறார்கள் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும். கோல்டு பாலீஷிங்கிற்கு பயன்படுத்தும் ஜெல், ஆயில், ஸ்கிரப், பேஸ்ட் போன்ற அனைத்திலும் தங்கம் கலக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சம். உச்சி முதல் பாதம் வரை தங்க கலவையால் அழகுபடுத்தலாம்..”
இந்த அழகு அலங்காரத்தை செய்வதற்கு ஒரு பெண்ணுக்கு ஒரு மணிநேரம் வரை எடுத்துக் கொள்கிறார்கள்.
முதலில் முழு உடலுக்கும் கிளன்சிங் எனப்படும் சுத்தப் படுத்துதலை தொடங்குகிறார்கள். இதன் மூலம் சருமத்தின் மேல்புற அழுக்கு நீங்கி, வியர்வை துவாரம் திறக்கும் என்கி றார்கள். இதை பத்து நிமிடம் செய்துவிட்டு, அதை துடைத்து அப்புறப்படுத்திவிட்டு, ஸ்கிரப்பிங் செய்கிறார்கள். இதன் மூலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறார்கள். இது, சருமத்தை மென்மையாக்கி, ரத்த ஓட்டத்தை தூண்டும் என்கிறார்கள். இதை 20 நிமிடம் செய்கிறார்கள்.
அதன் பின்பு `பேக்’ போடுகிறார்கள். பேஸ்ட் போன்று காட்சியளிக்கும் இதனை உடல் முழுவதும் பூச, 20 நிமிடங் கள் எடுத்துக்கொள்கிறார்கள். அது உலர்ந்த பின்பு, விசேஷ மாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ஷவருக்குள் அனுப்புகிறார் கள். மிதமான சுடுநீரில் அதை கழுவி விட்டு, `ஷவர் ஜெல்’ பயன்படுத்தி குளிக்கவைக்கிறார்கள். ஷவரில் மேல் இருந் தும், இரு பக்கங்களில் இருந்தும் தண்ணீர் பூப்போல விழுந்து மேனியை நனைத்து சுத்தம் செய்கிறது. நன்றாக குளித்து உடலை துடைத்துவிட்டு, உடலுக்கு ஈரப்பதத்தை தரும் `மாயிஸ்சரைசரை’ பூசுகிறார்கள். இதில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களிலும் தங்கம் கலந்திருப்பதால், இதனை கோல்டு பாடி பாலீஷிங் என்று சொல்கிறோம்.”
தங்கம் கலந்த ஆயில் இருக்கிறதா, அதை பெண்களின் உடலில் எப்படி பயன்படுத்துகிறீர்கள்?
“தங்கபஸ்பம் கலந்த ஜெல் இருக்கிறது. அதை மசாஜ் ஆயிலாக பயன்படுத்துவோம். முதலில் ஜெல் போல் தோன்றி னாலும் மசாஜ் செய்யச் செய்ய அது எண்ணெய் போல் ஆகிவிடும். இது உடலுக்கு அதிக ரிலாக்ஸ் தரும். இதிலும் முதலில் கிளன்சிங் உண்டு. பின்பு நீராவி குளியல் செய்வார் கள். இப்போதுள்ள வாழ்க்கை முறையில் பலருக்கும் வியர்வை வெளியாகும் வாய்ப்பே இல்லை. அலுவலகத்தில் இரவு பகல் பாராது ஏ.சி.யில் வேலை பார்க்கிறார்கள். வீட்டிலும் ஏ.சி.யில்தான் தூங்குகிறார்கள். இதனால் வியர்வை வராமல், உடலில் உள்ள நச்சுக்களில் ஒரு பகுதி வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுவிடுகிறது. நீராவி குளியலால் உடல் நன்றாக வியர்த்து, நச்சுக்கள் வெளியேறும். ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். உடல் இயக்கம் மேம்பட்டு உடல் வலிகள் நீங்கி ரிலாக்ஸ் ஆகிவிடுவார்கள்..”
தங்கம் கலந்த ஜெல், பேஸ்ட், ஆயில், பேக் போன்றவைகளை உடலில் பயன்படுத்தினாலும், அவற்றை எல்லாம் கழுவி அப்புறப்படுத்தி விடுவதால் தங்கத்தின் மினுமினுப்பு உடலுக்கு முழுமையாக கிடைக்குமா?
“நாம் மருத்துவ ரீதியாக மூலிகை எண்ணெய், ஜெல், பேக் போன்றவைகளை சருமத்தில் தேய்க்கும் போது அவை வியர்வை தூவாரத்தின் வழியாகவும், சருமத்தின் ஈர்ப்புத்தன்மையாலும் உடலுக்குள் சென்று வினையாற்றுகின்றன. அதுபோல் இதையும் நாம் உடலில் தேய்த்து போதிய நேரம் வரை வைத்திருந்து விட்டுத்தான் அப்புறப்படுத்துகிறோம். அதனால் தங்கம் கலந்த மினுமினுப்பு உடலுக்கு கிடைத்துவிடும்.”
சருமம் நான்கு வகையானவை. எல்லா வகை சருமத்திற்கும் இந்த தங்கப்பூச்சு ஒத்துவருமா?
பொதுவாக சில வகை சருமங்களுக்கு சில அழகு சாதன பொருட்கள் ஒத்து வராது. அலர்ஜியை ஏற்படுத்தும். தங்கம் கலந்த அழகு சாதன பொருட் கள் எல்லாவகை சருமத்திற்கும் பொருந்தும். தங்கத் தால் அலர்ஜியே தோன்றாது” என்றார், பிரசன்னா.
சாக்லேட், முத்து, பழவகைகள், மூலிகை பொருட் களால் ஆன பேஷியல், பேக் வகைகள் நிறைய உள்ளன. இப்போது, தங்கம் கலந்த அழகு சாதன பொருட்களை தங்க கலரில் இருக் கும் வடகிழக்கு மாநில பெண்கள் தமிழக பெண்களுக்கு பூசுகிறார்கள். தமிழக பெண்களின் சருமமும் தங்கம்போல் மின்னினால் மகிழ்ச்சிதான்!
நன்றி-தினத்தந்தி