Tuesday, 19 April 2022

சவூதி அரேபியா செல்லும் உம்ரா பயணாளிகளுக்கு ஆக்கபூர்வமான, முத்தாய்ப்பான 16 யோசனைகள்.!!!

சவூதி அரேபியாவில்உம்ரா(மக்கா) / ஜியாரத்(மதீனா) செல்பவர்களின் கவனத்திற்கு ஒறு தவகல்!!!

மக்காவின் கஅபா இல்லத்தை தரிசிக்க வாய்ப்பு கிடைப்பது என்பது, அல்லாஹ்வின் மிகப்பெரும் கருணை மற்றும் அருளினால் மட்டுமே அமையப்பெறுகின்ற கொடுப்பினை !!!

அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்பவர்கள், தங்கள் பயண ஏற்பாடுகளின் போதும், பயணத்தின் போதும் கவனம் செலுத்த தவறி விடுவதைப் பற்றிய பதிவுதான் இது.

உம்ரா என்றவுடன், நமக்கு உடனே நினைவுக்கு வருவது, நமது *சொந்தக் காரிலேயே பயணம் செய்யலாம்* என்பது தான். அடுத்து தான், பஸ்ஸில் மற்றும் விமானத்தில் போவதைப் பற்றி நினைப்போம். இதில், *தன் சொந்தக்காரில் குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ பயணிப்பவர்களைப் பற்றியது தான் இந்தப் பதிவு..

சரி, எப்படி/எதில் பயணிப்பது என்பதை முடிவு செய்தவுடன் நாம் தடபுடலாக ஏற்பாடுகளை செய்ய ஆரம்பிப்போம். துணிமணிகள், உம்ரா துணி எடுத்து பைகளில் வைத்து தயாராகி விடுகிறோம். பொதுவாக, வார விடுமுறையில் தானே புறப்படுவோம். அப்பொழுது, புறப்படும் முந்தைய இரவில் தான் பேக்கிங் செய்வோம். அன்றைய இரவு தூங்க நேரமாகும். களைப்பில் தூங்கி எழுந்து, அலுவலகம் சென்று, வழக்கம் போல், மாலை வீடு திரும்ப நேரமாகும் அல்லது அவசரம் அவசரமாக வேலைகளை முடித்துக்கொண்டு, அலுவலகத்தில் இரண்டு மணி நேரம் முன்னதாகவே பெர்மிஷன் வாங்கி வீட்டிற்கு வந்து சேர்வோம்.

முந்தைய இரவு லேட்டாக தூங்கியது ஒரு புறம். குறைவான தூக்கம் மறுபுறம். பகலில் அதிகப்படியான அலுவலக வேலைப்பளு கூடவே இருக்கும். நோன்பு மாதம் வேறு. உடல் அசதி, நாள் முழுவதும் இருந்த பசி, தாகத்தின் தாக்கம், இஃப்தார் திறந்தவுடன் பயணம் அல்லது இரவு தராவீஹ் தொழுகை தொழுதவுடன் பயணம் அல்லது அதிகாலை ஃபஜ்ர் தொழுகை நேரத்தில் பயணப் புறப்பாடு.

இவைகளெல்லாம், எவ்வளவு திடகாத்திரமான ஆளாக இருந்தாலும், எவ்வளவு கார் ஒட்டும் அனுபவசாலியாக இருந்தாலும், நம்மை கொஞ்சம் அசைத்துப் பார்க்கும் விஷயங்கள். 

அதில், நம்மவர்களிடம் இல்லாத பழக்கம் என்னவென்றால், பின்னால் உட்காருபவர்கள் சீட் பெல்ட் அணிவதில்லை. காரில் ஏறி உட்கார்ந்தவுடன், வண்டி ஒட்டுபவர் தவிர பலரும் தூங்கி விடுகின்றனர். ஏதாவது பயானையோ அல்லது தேவைப்படுகின்ற ஒன்றைக் கேட்டுக்கொண்டோ பயணிக்கும், காரை ஒட்டிக்கொண்டிருப்பவருக்கு நேரம் ஆக, ஆக  அவரைக்கேட்காமலேயே, அனிச்சை செயலாக, அசதியும், தூக்கமும் பற்றிக் கொள்ளும். 

இடை இடையே நிறுத்தி நிறுத்தி, டீ குடித்துக் கொண்டும், காலாற கொஞ்சம் நடந்து விட்டு கார் பயணத்தை தொடரும் புத்திசாலிகள் இருக்கத்தான் செய்தாலும், சராசரியாக, பெரும்பாலும் அனைவரும் அப்படி செய்வதில்லை.

அதிகாலை ஃபஜ்ருக்கு மக்காவிற்குள் சென்று ஃபஜ்ர் தொழுகையை தொழுது விட வேண்டும் என்ற அவசரத்தில், வேக வேகமாக வேறு காரை ஒட்டிச் செல்வார்கள். 

பலருக்கும் தெரியாத விஷயம் என்னவென்றால், பெட்ரோல் பங்குகளில் (முன்னர் இருந்தது, தற்பொழுது தெரியவில்லை) 25 ரியால்கள் கொடுத்தால், ஒரு மணி நேரத்திற்கு வாடகைக்கு ரூம் கொடுப்பார்கள். ஒரு கட்டில்/பெட் இருக்கும். டாய்லெட் இருக்கும். கொஞ்சம் அவ்வளவு சுத்தமில்லாமல் இருந்தாலும், சூழ்நிலையைக் கருதி, நம் வீட்டில் இருந்து எடுத்துச் செல்லும் ஒரு படுக்கை விரிப்பை, அந்த கட்டில் பெட்டில் விரித்து, களைப்பு நீங்க, ஒரு குட்டித்தூக்கம் போட்டு விட்டு, அசதி போனவுடன், பயணத்தை தொடர்ந்தால், இடையே தூக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்த அபாயகரமான சில விநாடிகள் கண் அயர்வதற்கான வாய்ப்பும் இல்லை. ஒரு விநாடி கண் அயர்ந்தால் கூட, நாம் பயணிக்கும் கார் விபத்துக்குள்ளாகலாம், ஏன், உயிர் இழப்புகளைக் கூட சந்திக்க நேரிடும். 

வருடா வருடம், குறிப்பாக ரமளான் மாதத்தில், சில விபத்துகள், உயிர் இழப்புகள் பற்றிய செய்திகளையும் கேட்டுக் கொண்டுத் தான் இருக்கிறோம்.

ஆனால், இது குறித்து யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை. இந்த சின்ன சின்ன விஷயங்கள் குறித்து கவனம் செலுத்துவதும் இல்லை.

சரி, ஒரு வழியாய், தாயிஃப் நகரில் இஹ்ராம் அணிந்து, பயணித்து புனித மக்கா மாநகரம் சென்றடைவோம். பயணக்களைப்போடு, உம்ராவையும் முடித்து விட்டு, முடியைக் களைந்து, ஏதோ ஒன்றை காலை உணவாக சாப்பிட்டு விட்டு, ஒரு குட்டித்தூக்கம் ஒன்றைப் போட்டு விட்டு,  அலாரம் வைத்து எழுந்து, சின்ன காக்காய் குளியல் போட்டு விட்டு, அவசரம் அவசரமாய் கிளம்பி, ஜும் ஆ தொழுகைக்கு கிளம்பி விடுவோம்.

அடுத்து என்ன, ஜும் ஆ தொழுத உடன், கப்ஸா சிக்கன் அல்லது அல்பெய்க் சிக்கன் சாப்பிடுவோம். அடித்துப் போட்ட மாதிரி ஒரு தூக்கம் போடுவோம். அஸர் நேரம் வந்து விடும். காரை ஒட்டி வந்தவர் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கவே முடியாத நிலையில், தட்டுத்தடுமாறி எழுந்து ஒளுச் செய்து விட்டு, தொங்கு தொங்கு என்று ஓட்டமும் நடையுமாய், கஅபாவுக்குச் சென்று அஸர் தொழுது விட்டு, களைப்போடு ஒரு நீண்ட நடையைப் போட்டு, ரூமிற்கு வருவார்.

மறுபடியும் ஒரு குட்டித்தூக்கம் அல்லது பேசிக்கொண்டு இருந்து விட்டு, டீ ஒன்றை குடித்து விட்டு, மீண்டும் க அபாவிற்கு நடந்தோ அல்லது ஹோட்டல் பஸ்ஸிலோ வருவோம்.


உடல் களைப்பு அதிகம் இருந்தால், ஹோட்டல் பக்கத்திலேயே இருக்கும் பள்ளிவாசலில் தொழுதுக் கொள்ளலாம்.

பயணாளிக்கு வழங்கப்பட்டிருக்கும் ஜம்/கஸ்ர் சலுகைகளை பயன்படுத்தலாம்அல்லது பள்ளிவாசலுக்கு தூரம் அதிகம் இருந்தால் ரூமிலேயே தொழுது கொள்ளலாம். ஆனால், அது போல, யாரும் செய்வதில்லை.


நமது நோக்கம் உம்ரா மட்டுமே!!. கார் ஓட்டுபவர்களுக்கு நிறைய ஓய்வு தேவை. ஏன் என்றால், அடுத்த நாள், உதாரணத்திற்கு ரியாத் நோக்கி பயணிக்க வேண்டுமென்றால், 859 கிலோமீட்டர் பயணிக்க வேண்டுமே! முடிந்த வரை, அலைச்சலைக் குறைத்துக் கொண்டு, ஓய்வு எடுக்க வேண்டும்.

இன்னும் சிலர் ஆர்வக்கோளாறில், காரை எடுத்துக் கொண்டு, ஜித்தா மாநகரை வலம் வர நினைத்து, மாலை புறப்பட்டு, ஜித்தாவை சுற்றிப் பார்த்து விட்டு, வரும் வழியில் அல்பெய்க் சாப்பிட்டு விட்டு, ரூமிற்கு வர இரவு தாமதமாகி விடும்.

மக்காவிலேயே தங்கி இருப்பவர்கள், இரவு சாப்பாடு முடித்து விட்டு, அதிக நேரம் இரவில் க அபா வளாகத்திலேயே உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்து விட்டு, தமிழகத்தில் இருந்து உம்ரா  வந்த உறவினர்களைத் தேடி பார்த்து பேசி விட்டு, இரவு 12:00 மணிக்கு ரூமிற்கு வருவார்கள்.

ஃபஜ்ருக்கும் தூங்கப்போகும் நேரத்திற்கும் இடையே சில மணி நேரங்கள் தான் இருக்கும். மீண்டும், அன்றைய இரவு குறைவான தூக்கமே! 

ஃபஜ்ர் பாங்கு சொல்லும் முன், தஹஜ்ஜுத் தொழ வேண்டும் என்று ஃபஜ்ருக்கு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் முன்னதாகவே கிளம்பி, கஅபாவிற்கு சென்று விடுவோம். 

கவனம் கொள்ளுங்கள். ஓய்வு என்பதே இல்லை, இது வரை.

மீண்டும் டீயைக் குடித்து விட்டு, குட்டித்தூக்கம் அல்லது சில மணி நேரங்கள் தூங்கி விட்டு, எழுந்து, குளித்து விட்டு, பேக்கிங் ஆரம்பிப்போம். துணி மணிகளை எடுத்து வைத்து, பேக்கிங் முடித்து விட்டு, காலை உணவு. பிறகு, உடனே ஷாப்பிங் முடித்து விட்டு, அவற்றை ரூமில் வைத்து விட்டுப் பார்த்தால், அப்பொழுது தான் பயணத்தவாப் ஞாபகத்திற்கு வரும். உடனே புறப்பட்டு பயணத்தவாபும், லுஹர் தொழுகையும் தொழுது விட்டு வரும் வழியில், கப்ஸா சாப்பிட ஹோட்டலுக்கு செல்வோம்.  பசி வயிற்றைப் பிடித்துக் கிள்ளும். ஏன் என்றால் நடந்த நடை அவ்வளவு தூரம். கிடைத்த சாப்பாட்டை ஒரு பிடி  பிடித்து, மூக்க முட்ட சாப்பிட்டு முடித்து விட்டு,  ரூமிற்கு வருவோம். உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு  என்று சொல்லுவது போல, காரை ஓட்டிக்கொண்டு வந்த அந்தக் குடும்பத்தலைவருக்கு ஒரு தூக்கம் வருமே, அது அவரைக் கொண்டு போய் பெட்டின் பக்கம் தள்ளும். ஆனால், அதை சமாளித்து, வெளிக்காட்டிக் கொள்ளாமல், அடுத்த நாள் காலை வேலைப் பற்றி வரும் ஞாபகம்  அல்லது கேள்வி கேட்டே துளைத்து எடுக்கும் மேலாளரின் முகம் சற்றே நினைவுக்கு வந்தவுடன், காரை எடுத்துக் கொண்டுக் கிளம்ப -  குடும்பத்தை ஒரு விரட்டு விரட்டி, சத்தம் போட்டு, எல்லோரையும் கிளப்பிக் கொண்டு, ரூம் சாவியை ரிஷப்ஷனில் கொடுத்து விட்டு, காரை ஸ்டார்ட் செய்வோம். எல்லோரும் மறக்காமல் செய்வது, சாப்பிட்ட கப்ஸா மறக்காமல் கொடுக்கும் தூக்கத்தைக் கலைக்க, சுலைமானி டீ ஒன்றை கிளம்பும் வழியில் குடிப்பது தான்.

பேசிக்கொண்டே வரும் பயணத்தில், குடும்ப உறுப்பினர்களில் முதலில் தூங்குவது பிள்ளைகள் தான். அடுத்து மனைவியும் அசதியில் தூங்க ஆரம்பித்து விடுவார். பாவம், அந்தக் கணவர். கவனமாய் காரை ஒட்ட வேண்டுமே! ஏதாவது ஒன்றை கார் டேப்பில் கேட்டுக்கொண்டோ அல்லது மொபைலில் கேட்டுக்கொண்டோ தம் பயணத்தைத் தொடருவார்.

இடையே, எங்காவது அவர்  ஒரு விநாடி கண் அசந்தால், அவ்வளவு தான். அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும். அப்படி நடக்கும் பல செய்திகளை கேள்விப்படுகிறோம். ' விதி ' மற்றும் ' மரணம் என்பதை எல்லோரும் சுவைத்தே தீர வேண்டும் என்பதிலும் அதீத நம்பிக்கை வைத்திருப்பவர்கள் தாம் நாம். இருந்தாலும், அல்லாஹ் தான் அறிவைக் கொடுத்து, சிந்திக்கச் சொல்லி, பயணத்திற்கு தேவையான ஒய்வையும் எடுக்கச் சொல்கிறான். 

உம்ரா பயணாளிகளுக்கு சில ஆக்கபூர்வமான யோசனைகள்!!!

1. உம்ரா முடித்து விட்டால், தொழுகைகளை தங்கியிருக்கும் ஹோட்டலுக்குப் பக்கத்தில் இருக்கும் பள்ளிவாசல்களில் தொழுது கொள்ளலாம்.

2. பயண நேரத்தில் கொஞ்சம் குறைவாக சாப்பிட்டுக் கொள்ளலாம்.

3. பயணத்தில் இடை இடையே நிறுத்தி டீ குடித்து விட்டு, காலாற ஒரு நடை நடந்து விட்டு பயணத்தை தொடரலாம்.

4. தூக்கம் சற்றே எட்டிப்பார்க்கும் ஆரம்ப நேரத்தில், அருகில் வரும் பெட்ரோல் பங்க்கில் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் தூங்கி விட்டு பயணத்தைத்ப் தொடரலாம். இந்த அரை மணி நேர அல்லது ஒரு மணி நேர தூக்கத்தேவையை உதாசீனப்படுத்தினால், கப்ரில் மறுமை வரை நிரந்தரமாக தூங்க நேரிடும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

5. திரும்ப வரும் பயணத்தில் அவசரம் காட்டாமல், நிதானமாக காரை ஒட்டிக்கொண்டு வர வேண்டும். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் லீவு எடுத்துக் கொண்டால், கொஞ்சம் நிதானமாக புறப்பட்டு, ரியாத் அல்லது தம்மாம் சென்றடையலாம்.

6. வரும் வழியில், இருக்கும் ஹோட்டல்களில் ஒரு மணி நேரத்திற்கு அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ரூமை வாடகைக்கு எடுத்து, தூங்கி விட்டு வரலாம்.

7. முன்னரே திட்டமிட்டு, எல்லாவற்றையும் ஒரு நாளைக்கு முன்னரே பேக்கிங் செய்து வைக்கலாம். பயணத்திற்கு முந்தைய நாள் இரவு, குறைந்தது 7 மணி நேரமாவது தூங்கி விட்டு, பயணத்தை தொடங்க வேண்டும்.

8. பயணத்தில் அவசியம் ஒரு 5 அல்லது 10 லிட்டர் கேனில் தண்ணீர் எடுத்துச் செல்வது மிகவும் நல்லது.

9. நீண்ட தூரப் பயணத்திற்கு காருக்குத் தேவையான சரிபார்த்தலை முன்கூட்டியே செய்து முடித்தல் வேண்டும்.

( ஃபில்டர், டயர் காற்று, ப்ரேக், டயர் கண்டிஷன், வைப்பர்கள்) 

10. பயணத்தில் வரும் குடும்பத்தவர்களில் குறைந்த பட்சம் ஒருவராவது தூங்காமல், கார் ஒட்டுபவரிடம் பேசிக்கொண்டே வர வேண்டும்.

11. காரின் பின்னால் உட்கார்ந்து வருபவர்களும், அவசியம் மறக்காமல் சீட் பெல்ட் அணிய வேண்டும்.

12. அதிகாலையில் பயணம் செய்வதை முடிந்தவரை தவிர்த்தல் நலம். திருடனுக்கும் தூக்கம் வரும் என்று சொல்லப்படும் அதிகாலை 03:00 மணி முதல் 05:00 மணி வரை ஓய்வெடுத்தல் தான் பயனுள்ளதாக இருக்கும். அஸர் தொழுகை நேரத்தில், குறிப்பாய் சாப்பிட்ட பின் கொஞ்ச நேரம் கழித்து, மாலை 04:00 மணிக்கு ஒரு அசத்து அசத்தும். அதற்கு முன்னதாக, ஒரு குட்டித்தூக்கம் தூங்கி விட்டு காரை ஓட்டுதல் நலம்.

13. நோன்பு வைத்துக் கொண்டு பயணிப்பதில் பல சிரமங்கள் உள்ளன. சீக்கிரம் களைப்பு வந்து விடும். குறிப்பாய், ஸஹர் செய்த உடனே சரியான தூக்கமும் இல்லாமல், காரை ஓட்டகூடாது. நிச்சயம் தூக்கம் வரும்.

14. புதிதாக கார் ஓட்டுபவர்கள், கூட அனுபவசாலி வந்தால், சிக்கலான இடங்களில் அவரை ஓட்டச்சொல்லலாம். 

15. வாய்ப்பிருந்தால், கார் ஓட்டுபவர் ஒருவரை துணைக்கு அழைத்துக் கொண்டு போகலாம். ஆளுக்கு பாதி தூரம் காரை ஓட்டினால், ஓட்டுபவருக்கு சுமை குறையும்.

16. இப்படியான நல்ல யோசனைகளை உம்ரா செல்பவர்கள் கவனத்தில் கொண்டால், விபத்துக்களையும், உயிர் பலிகளையும் தடுக்கலாம்.

அல்லா  எல்லாம் அறிந்தவன்.

அவனே பாதுகாப்பு அளிப்பதில் சிறந்தவன்.

வல்ல அல்லாஹ், உம்ரா பயணம் செய்பவர்களின் பயணத்தை பாதுகாப்பானதாக ஆக்கி வைப்பானாக !!!

ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு . அஜ்மல் கான்.

Wednesday, 13 April 2022

Attestation Details for Tamilnadu Candidates.

Dear Friends,
If you are planning to go abroad for higher education, employment, business or migration, Talent Attestation can take care of all your certificate attestation formalities.
When a person from India goes abroad for jobs his certificate has to be authenticated by that country's embassy or consulate in India. Since there are a few lakh Indians working in GCC countries - Bahrain, Kuwait, Oman, Qatar, Kingdom of Saudi Arabia (KSA), and United Arab Emirates (UAE) it is mandatory for them to attest their documents in corresponding foreign embassies or consulates in India. Exactly attestation procedures depend on the type of the certificate and destination country. To get embassy or consulate attestation the document has to be attested by Govt. of India. It has two separate departments to take care of certificate attestation procedures, Home Department Authentication and Ministry of External Affairs (MEA).


Documents can be divided into 3 categories

Educational Documents :
These are the certificates obtained from school and college like SSLC/10th/CBSE, PDC/+2/HSC, Degree certificates like BA, Bsc, Bcom, BTech, BE, BBA, CA, MBBS, Post graduate certificates like MA, Msc, Mcom, MBA, MCA and other Diploma, Nursing and ITI certificates.

Non-Educational Documents :
This includes marriage, birth certificates, affidavit, power of attorney(POA), transfer and leaving certificates, medical, death, divorce, experience certificates.

Supporting Documents :
These documents has to be submitted along with the above mentioned documents for attestation. Exact number and type of supporting documents may vary from country to country. Some of the supporting documents are Mark lists, transcripts, registration, offer letter, passport copy, photo etc.

Procedure for attestation of Indian documents is as follows:
Home Department
Ministry Of external Affairs(MEA)
        Embassy Attestation


Check this sitewww.urogulf.com




TAMILNADU
CHENNAI





Certificate Attestation from CHENNAI
UROGULF ATTESTATION SERVICES PVT. LTD., 4TH FLOOR, LUKMAN MANZIL, 130, ANGAPPA NAICKEN STREET, PARRY'S CORNER, CHENNAI – 600 001, TAMIL NADU, INDIA. (LAND MARK: OPP. HIGH COURT, BEHIND TNSC BANK)
TEL: 044 25352868, 32533210, 09380591080


COIMBATORE
Certificate Attestation from COIMBATORE
UROGULF ATTESTATION SERVICES PVT. LTD., 1ST FLOOR, DOOR NO. 1111, OPP: PASSPORT OFFICE, NEAR THANDUMARIAMMAN KOIL, AVINASI ROAD, UPPILIPALAYAM, COIMBATORE – 641 018, TAMIL NADU, INDIA.
TEL: 0422 3243210, 09360114635

 Urogulf
 1 C, 2nd Floor, S.v.v. Arcade, C 55, Fourth Cross, Land Mark : Opposite To Bank Of Baroda, Khadims Show Room, Up Stair
 Thillai Nagar Main Road
 Trichy
 PINCODE- 620018
 E-MAIL- attestation@urogulf.com
 MOBILE- 09345474252, PH- 9364553210,0431



MADURAI
Certificate Attestation from MADURAI
UROGULF ATTESTATION SERVICES PVT. LTD., NO. 1, SECOND FLOOR, KHANA RUNA COMPLEX, ALAGAR KOIL MAIN ROAD, K. PUDUR, MADURAI – 625007, TAMIL NADU, INDIA. (LAND MARK: NEAR PUDU MARKET, OPP: GURU CYCLE)
TEL: 0452 3246510, 09381070385, 9380591080

Urogulf
 15, First Floor, Antony Calvin Tower, M.g.raaj Trade Park, Near New Bus Stand
 South Bypass Road
 Tirunelveli
 PINCODE- 627005


NAGERCOIL
Certificate Attestation from NAGERCOIL
UROGULF ATTESTATION SERVICES PVT. LTD., 173/25, SECOND FLOOR, PILLARS GATE, OPP: ANNA STADIUM, BALAMORE ROAD, NAGERCOIL, KANYAKUMARI, TAMIL NADU – 629001, INDIA.
TEL: 04652 312700, 09362128080

Wednesday, 2 March 2022

ஜாமீன் (Bail)என்றால் என்ன? எப்படி வாங்குவது?

 


நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும். விசாரணையில் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும். வழக்கமான ஜாமீன், முன் ஜாமீன், இடைக்கால ஜாமீன் என 3 பிரிவுகள் உள்ளன.

குற்றவியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தற்காலிகமாக விடுவிப்பதை பிணை அல்லது ஜாமீன் (Bail) எனக் கூறலாம். குற்றம்சாட்டப்பட்டவர் காவல்துறை பாதுகாப்பு அல்லது நீதிமன்றக் காவலில் இருக்கும்போது வழக்கறிஞர் உதவியுடன், 2 பேர் உத்தரவாதம் அளித்து வெளியே அழைத்து வருவது ஜாமீன். அதன்பிறகு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும். விசாரணையில் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும். வழக்கமான ஜாமீன், முன் ஜாமீன், இடைக்கால ஜாமீன் என 3 பிரிவுகள் உள்ளன.

இடைக்கால ஜாமீன் என்றால் என்ன?

இடைக்கால ஜாமீன் என்பது முன்ஜாமீன் மற்றும் வழக்கமான ஜாமீன் குறித்து முடிவெடுப்பதற்கு நீண்டகாலம் தேவைப்படும்போது, இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது.

முன்ஜாமீன் என்றால் என்ன?

ஏதாவதொரு பிரச்சனையில் அல்லது எதிராளிகள் பிணையில் வெளியில் வரமுடியாத வகையில் ஒரு பொய்யான வழக்கு ஒன்றை தொடர்ந்து, அந்த வழக்குகளில் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படும் சூழல் இருக்கும்பட்சத்தில், பாதிக்கப்பட்டவர் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். மாவட்ட நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் முன்ஜாமீன்கோரி முறையிடலாம். சி.ஆர்.பிசி சட்டப்பிரிவு 438-ன்படி அவருக்கு ஜாமின் வழங்கப்படும்.

முன்ஜாமீன் ரத்து செய்யப்படுமா?

முன்ஜாமீன் வழங்கும்போது ஒரு சில நிபந்தனைகள் ஜாமீன்கோரியவருக்கு நீதிமன்றம் விதிக்கும். அந்த நிபந்தனைகளை முறையாக கடைபிடிக்காதபோது அல்லது மீறினால் முன்ஜாமீன் ரத்து செய்யப்படும். புகார்தாரர் அல்லது விசாரணை தரப்பு முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி முறையிட்டு, அவர்கள் கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருந்தால், முன்ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்யும்.

முன்ஜாமீனில் இருக்கும்போது, ரெகுலர் ஜாமீன் எடுக்க வேண்டுமா?

ஏற்கனவே முன்ஜாமீனில் இருப்பவர்கள், நீதிமன்ற நடைமுறைகள் தொடரும் வரை வழக்கமான ஜாமீன்கோரி மனுத்தாக்கல் செய்யத்தேவையில்லை. நீதிமன்றம் முன்ஜாமீனை ரத்து செய்யாதபோது மட்டுமே இது பொருந்தும். சில வழக்குகளில் முன்ஜாமீன் மட்டுமே போதுமானது.

விசாரணைக் கைதியை அதிகபட்சம் எவ்வளவு நாட்கள் சிறையில் வைக்கலாம்?

குற்றவியல் சட்டம் 436 ஏ-ன்படி விசாரணைக் கைதி நீதிமன்றம் மூலம் ஜாமீனில் விடுவிக்கப்படலாம். அதாவது, குற்றம்சாட்டப்பட்ட வழக்கின் அதிகபட்ச தண்டனையில் பாதி காலம் சிறையில் இருந்திருந்தால், நீதிமன்றம் ஜாமினில் விடுவிக்க முடியும். ஒருவேளை, வழக்கில் தண்டனை நிரூபிக்கப்பட்டால், ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தைப்போக எஞ்சிய தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றத்தை செய்திருந்தால், ஜாமீன் கிடைக்குமா?

கிடைக்கும். ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீனில் வெளிவருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர் செய்த குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து நீதிமன்றம் முடிவெடுக்கும். அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க முடியும்.

ஜாமீன் கிடைக்கக்கூடிய வழக்குகளில் ஜாமீனுக்கு முறையிட வேண்டுமா?

ஜாமீன் வழங்கக்கூடிய வழக்கு என்றாலும், குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீன்கேட்டு முறையிட வேண்டும். ஜாமீன் வழங்கக்கூடிய வழக்காக இருந்தால், குற்றம்சாட்டப்பவர் நீதிமன்றத்தை அணுக தேவையில்லை. காவல்துறை அதிகாரியே ஜாமீன் வழங்கலாம்.

ஜாமீன் எப்போது வழங்கப்படாது?

தூக்கு தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடிய வழக்குகளில் கைது செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக போதுமான ஆதாரம் இருந்தால் ஜாமீன் வழங்கப்படாது. குற்றம்சாட்டபட்டவர் வெளியே சென்றால், வழக்கு தொடர்ந்தவருக்கு ஆபத்து விளைவிப்பார், சாட்சிகளை கலைத்துவிடுவார் என்ற நிலை இருந்தால், ஏற்கனவே ஏதேனும் ஒரு வழக்கில் தூக்குதண்டனை அல்லது ஆயுள் தண்டனை பெற்றிருந்தால், 7 ஆண்டுகள் அதற்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்திருந்தால், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குற்றங்களில் ஏற்கனவே தண்டிக்கப்பட்டிருந்தால் ஜாமீன் வழங்கப்படாது.

ஜாமீன் ரத்து:

ஜாமீனை எந்த நேரமும் ரத்து செய்வதற்கான அதிகாரம் நீதிமன்றத்திடம் உள்ளது. ஜாமீன் பெற்றவர் வழக்கில் இருந்து விடுதலை அடைந்ததுபோல் நடந்து கொள்ளக்கூடாது. வழக்கு தொடர்ந்தவரை மிரட்டுவது, சாட்சிகளை கலைப்பது அல்லது அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், ஜாமின் ரத்து செய்யப்படும். குற்றவியல் சட்டப்பிரிவு 437(5), 4399(2) ஆகிய பிரிவுகளின்படி ஜாமீனை ரத்து செய்து, குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியும்.

உக்ரெயின் போர் : ரஷ்யாவுக்கு தற்போதுள்ள நேட்டோ மற்றும் உக்ரேனுடன் பிரச்னை என்ன?



சோவியத் ஒன்றியம் என்ற பரந்த சாம்ராஜ்யம் இருந்த காலத்தில், அதற்குள்தான் கட்டுண்டு கிடந்தது இந்த உக்ரெயின்..

ஆனால் அது உடைந்தபோது, கட்டை அறுத்துக் கொணடு, வெளியே வந்து விட்டது உக்ரெயின். ரஷ்யாவுக்கு அடுத்ததாக,பூகோள ரீதியாக, சோவியத் ஒன்றியத்தின் மிகப் பெரிய நாடு உக்ரெயின்தான்.பரப்பளவில் ரஷ்யாவுக்கு அடுத்த இடம், (6,03,628 சதுர கிலோமீட்டர்) .கிழக்கு ஐரோப்பாவில் உள்ள இங்கு மக்கள் தொகை 4.13 கோடி. பொருளாதாரத்தில் வளரும் நாடு !. மனித ஆற்றல் வளர்ச்சியில், உலகத்தில் 74-வது இடத்தில் இருக்கிறது.வளமான விவசாய நிலம் இருப்பதால் வேளாண் பொருள் ஏற்றுமதியில் முக்கியமான நாடாகத் திகழ்கிறது.

ஏன் இந்த நாட்டைச் சொந்தங் கொண்டாட வல்லரசுகள் ஆர்வம் காட்டுகின்றன என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.


நேட்டோ என்றால் என்ன?

நேட்டோ என்பது வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 12 நாடுகள் சேர்ந்து 1949இல் இந்த ராணுவ கூட்டு அமைப்பை உருவாக்கின.இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர இணங்க வேண்டும்.

ஐரோப்பாவில் பனிப்போர் காலத்துக்குப் பிந்தைய ரஷ்ய விரிவாக்க அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கத்தையே இந்த அமைப்பு குறிக்கோளாகக் கொண்டிருந்தது.

1955இல் நேட்டோ கூட்டுப்படைக்கு எதிர்வினையாற்றும் வகையில் கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகள் கூட்டணியுடன் ரஷ்யா வார்சா ஒப்பந்தத்தை ஏற்படுத்தி தனியாக ராணுவ கூட்டணியை அமைத்தது
.


க்ரேனுடன் ரஷ்யாவுக்கு தற்போதுள்ள பிரச்னை என்ன?

ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளில் அமைந்துள்ள முன்னாள் சோவியத் குடியரசின் அங்கமாக இருந்ததுதான் யுக்ரேன்.

அந்த நாடு இதுவரை நேட்டோவில் உறுப்பினர் ஆகவில்லை. ஆனாலும், அது நேட்டோ நேச நாடாக விளங்கி வருகிறது. அப்படியென்றால், எதிர்காலத்தில் எப்போதாவது ஒரு கட்டத்தில் நேட்டோ அமைப்பில் உறுப்பினராக சேர யுக்ரேன் அனுமதிக்கப்படலாம் என கருதலாம்.

ஆனால், அப்படியொன்று நடக்கவே கூடாது என்ற உத்தரவாதத்தை மேற்கு நாடுகள் தர வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது.எனினும், நேட்டோவுடன் 
க்ரேன் நட்பு பாராட்டுவதற்கு தடை விதிக்க அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் மறுத்து வருகின்றன. தமது பாதுகாப்பு கூட்டாளிகளை சுயமாக தேர்வு செய்யும் சுதந்திரம் இறையாண்மை மிக்க நாட்டுக்கு இருக்க வேண்டும் என்று அந்த நாடுகள் கூறி வருகின்றன.

மேற்கு நாடுகளின் ராணுவ கூட்டணியில் இணையும் தமது இலக்கில் 'வளைந்து கொடுத்துப் போகவே' 
க்ரேன் விரும்புவதாக பிரிட்டனுக்கான யுக்ரேனிய தூதர் வாடிம் ப்ரிஸ்டெய்க் சமீபத்தில் கூறினார்.


நேட்டோ கடந்த காலத்தில் என்ன செய்தது?


2014ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 
க்ரேனியர்கள் தங்கள் 'ரஷ்ய ஆதரவு' அதிபரை பதவியில் இருந்து அகற்றியபோது, யுக்ரேனின் தெற்கு கிரைமிய தீபகற்பத்தை தன்னுடன் ரஷ்யா இணைத்துக் கொண்டது. கிழக்கு யுக்ரேனின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றிய தமது ஆதரவு பிரிவினைவாதிகளையும் ரஷ்யா ஆதரித்தது.

அந்த விவகாரத்தில் நேட்டோ தலையிடவில்லை. ஆனால் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நேட்டோ அதன் படைகளை முதல் முறையாக நிலைநிறுத்தி எதிர்வினையாற்றியது. இந்த படைகள் நேட்டோவின் பிராந்தியத்தை ரஷ்யா ஆக்கிரமிக்க முனைந்தால், அந்த நிலைமையை செயலிழக்கச் செய்யும் வகையில் இந்த நேசப் படைகளின் தன்மை வடிவமைக்கப்பட்டுள்ளன.

க்ரேனுக்கு நேட்டோ அளித்த வாக்குறுதிகள் என்ன?

நேட்டோவின் கிழக்கு எல்லைகளை வலுப்படுத்த அமெரிக்கா கிட்டத்தட்ட 3,000 கூடுதல் துருப்புக்களை போலந்து மற்றும் ருமேனியாவுக்கு அனுப்பியுள்ளது. மேலும் போரை எதிர்கொள்ளும் 8,500 துருப்புக்களையும் தயார் நிலையில் வைத்துள்ளது. எனினும், க்ரேனுக்குள் அவற்றை அனுப்பும் திட்டத்தை இன்னும் நேட்டோ கொண்டிருக்கவில்லை.

இதேவேளை, யுக்ரேனுக்கு ஜாவெலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், ஸ்டிங்கர் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட 200 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்களை நேட்டோ அனுப்பியுள்ளது. இது தவிர, அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்களை யுக்ரேனுக்கு பிற நேட்டோ நாடுகள் அனுப்பவும் அனுமதித்துள்ளது.

க்ரேனுக்கு குறுகிய தூர இலக்கை தாக்கும் திறன் கொண்ட 2,000 பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை பிரிட்டன் வழங்கியுள்ளது. மேலும் போலந்திற்கு கூடுதலாக 350 துருப்புக்களையும், எஸ்டோனியாவுக்கு 900 கூடுதல் துருப்புக்களை அனுப்பி தமது பலத்தை இரட்டிப்பாக்கியிருக்கிறது பிரிட்டன்.

இது தவிர, தெற்கு ஐரோப்பாவுக்கு பிரிட்டன் விமானப்படையின் மேலதிக போர் விமானங்களையும் கிழக்கு மத்திய தரைக்கடலில் உள்ள நேட்டோ போர்க்கப்பல்களுக்கு உதவியாக கடற்படை கண்காணிப்பு கப்பல்களையும் பிரிட்டன் அனுப்பியிருக்கிறது.

க்ரேனில் ரஷ்ய படையெடுப்பால் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டால், ஆயத்த நிலையில் இருக்குமாறும் 1,000 துருப்புக்களுக்கு பிரிட்டன் உத்தரவிட்டுள்ளது.டென்மார்க், ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தும், கிழக்கு ஐரோப்பா மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளன.

ருமேனியாவில் நேட்டோ போர்க் குழுவை வழிநடத்துவதற்காக அங்கு தமது படைகளை அனுப்ப பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. ஆனால் இதன் விவரங்களை விரிவாக பட்டியலிட இன்னும் பல வாரங்கள் ஆகும் என்று நேட்டோ கூறியிருக்கிறது.


உக்ரெயின் நாட்டு மக்கள் நிலைப்பாடு என்ன?


இவர்கள் தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்தவே விரும்புகின்றனர். தடையற்ற வர்த்தகம், முதலாளித்துவப் பொருளாதாரம், அதிக ஜனநாயக உரிமைகள், மேற்கத்திய நாடுகளின் நுகர்வுக் கலாச்சாரம், பொழுதுபோக்குகள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட அவர்கள் பழைய சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பெட்டியான வாழ்க்கை முறையிலிருந்து சுதந்திரமான வாழ்க்கைக்கு தாவ ஆசைப்படுகின்றனர். ஒன்றியம் என்பதே கேள்விக்குறியாகிய பின்னர், அவர்களது ஆளுமைக்குள் வாழ இவர்கள் பின்னிற்கிறார்கள்..

சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி,கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப்போவதால் உக்ரைனை ரஷ்யாதன்னுடைய அங்கமாகவே கருதுகிறது.ஆனால் மீண்டும் சிறைப்பட உக்ரெயின் தயாராக இல்லை.


ரஷ்யா எதைப் பற்றி கவலைப்படுகிறது?


மேற்கத்திய சக்திகள் ரஷ்யா மீது அத்துமீறி நுழைவதற்கு நேட்டோ அமைப்பைப் பயன்படுத்துவதாக அதிபர் புதின் கூறுகிறார். மேலும், கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ தனது ராணுவ செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

நேட்டோ கிழக்கு நோக்கி விரிவடையாது என்று 1990இல் அளித்த உத்தரவாதத்தை அமெரிக்கா மீறி விட்டதாக அதிபர் புதின் நீண்ட காலமாக வாதிட்டார்.ஆனால், ரஷ்யாவின் கூற்றுகளை நிராகரிக்கும் நேட்டோ அமைப்பு, ரஷ்யாவுடனான எல்லையை பகிரும் தமது உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை வெகு குறைவு என்றும் அவற்றுடனான தமது கூட்டணி தற்காப்பு அடிப்படையிலானது என்றும் தெரிவித்துள்ளது.

பன்னாட்டு போர்த்தளவாட துருப்புகள் அடங்கிய நான்கு படையணிகளை எஸ்டோனியா, லாத்வியா, லிதுவேனியா, போலாந்து ஆகியவற்றில் நேட்டோ கொண்டிருக்கிறது.உறுப்பு நாடுகளின் வான் எல்லைக்குள் ரஷ்ய போர் விமானம் ஊடுருவினால் அதை தடுக்கும் வகையில் வான் கண்காணிப்பையும் பால்டிக் நாடுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ விரிவுபடுத்தியுள்ளது.இந்த படைகள் வெளியேற்றப்பட வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது.

இன்றையநிலை :கடந்த 6 நாட்களாக நடந்து வரும் தாக்குதலில் 6 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கெர்சான் நகரை, ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளதாக அம்மாகாண கவர்னர் கூறியுள்ளார். ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் இருந்து 3.68 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மால்டோ, போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


என் கருத்து :

ஐரோப்பாவிலிருந்தும் மத்திய ஆசியாவிலிருந்தும் அமெரிக்காவை வெளியேற்றத் துடிக்கும் ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் பொதுவான எண்ணமாக அமெரிக்க எதிர்ப்புணர்வு இருப்பதால்,இரண்டும் இணைந்து செயல்படுகின்றன.இதில் சீனா தலையிடுவது தேவையற்ற ஓர் இணைப்பு

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா இன்னொரு ஜனநாயக நாடான உக்ரைனனுக்கு ஆதரவு தராமல் பத்திரிக்கை சுதந்திரம் கூட இல்லாத சர்வாதிகார நாடான ரஷ்யாவிற்கு மற்ற கூட்டாளி சர்வாதிகளான சீனா வடகொரியா பெலாரஸ் உடன் சேர்ந்து வால்பிடிப்பது வெட்கக்கேடு. நண்பனாய் இருந்தாலும் தவறு செய்தால் தவறு என முகத்திற்கு நேர் சொல்பவன்தான் உண்மை நண்பன் இந்தியா வரலாற்று பிழை செய்வதை நினைத்து ஒரு இந்தியனாய் ஒரு மனிதனாய் வெட்கி தலைகுணிகிறேன் யாரும் அனு ஆயுதம் வைத்திருக்க வேண்டாமென தன்னிடம் இருந்த கடைசி அணு ஆயுதத்தையும் 1995 இல் ரஷ்யாவிற்கு தந்த நாடு உக்ரெயின் இந்தியாவின் மனிதம் எங்கே போனது. உலகம் சர்வாதிகளிடம் போனாலும் பரவாயில்லை தன் தோலை காத்துக்கொள்ள வேண்டும் என்ற பச்சை சுயநலமே இந்தியாவின் நிலையில் உள்ளது.

உக்ரைன் ராணுவம் கேரளா மாணவர்களை அடித்து மோசமாக நடத்த காரணம் இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் நடு நிலை வகித்ததே காரணம் . இது பல இடங்களில் செய்தியாக வந்துள்ளது . போலந்து எல்லையில் உக்ரைன் ராணுவம் இது போல் நடந்து கொண்டுள்ளது . எல்லா இடங்களிலும் நாட்டை விட்டு வெளியேற உக்ரைன் மற்றும் ஐரோப்பியருக்கு முன்னுரிமை . ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாட்டை சேர்ந்தவர்களுக்கு மனித இனத்தில் கணக்கில் வராது.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா நடு நிலை . இது சரியான முடிவே . கடந்த பல வருடங்களாக பல முக்கிய விஷயங்களில் இந்தியாவுக்கு எதிரான நிலையும் , பாகிஸ்தானுக்கு ஆதரவு நிலையும் தான் உக்ரைன் எடுத்துள்ளது . பொக்ரான் அணு சோதனைக்கு எதிர்ப்பு , காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக கண்டனம், பாகிஸ்தானுக்கு பீரங்கி கொடுத்து உதவியது என பல்வேறு விஷயங்களை அடுக்கி கொண்டே போகலாம். பல இக்கட்டான நேரங்களில் இந்தியாவுக்கு உதவியது ரஷ்யாதான் . உக்ரைன் நாட்டு மக்களிலேயே பலர் ரஷ்யாவுக்கு ஆதரவு . இது அவர்கள் பிரச்சனை . இதில் இந்தியா ஏன் உக்ரைன் நாட்டை ஆதரிக்க வேண்டும் ? அமெரிக்காவின் பேச்சை கேட்டு ரஷ்யாவை எதிர்த்த உக்ரைன் அதிபர் தன்னுடைய தலையில் தானே மண்ணை அல்லி போட்டு கொண்டுள்ளார் .இவரது பிடிவாதத்தால் அப்பாவி மக்கள் துன்ப படுகிறார்கள் .தாய் நாடு ரஷ்யாவுடன் சண்டை போட்டு கொண்டு சாட்சிக்காரன் நீண்ட தூரத்தில் உள்ள அமெரிக்கா சொல் பேசி கேட்டு ஆடினால் பாதிப்பு யாருக்கு வரும். இதை உக்ரைன் அதிபர் புரிந்து கொள்ளவில்லை.

அமெரிக்க ஐரோப்பிய தலைவர்கள், ரஷ்யாவின் எல்லையை ஒரு மேற்குலக பாதுகாப்பு அரணாக மாற்றி வருவது. மிகப் பெரிய தவறு.இவர்களது படைகள் உக்ரெயினில் குவிக்கப்பட்டுள்ளன.

உக்ரெயின் எவ்வளவு பலப்படுத்தப்டுகிறதோ, அந்த அளவுக்கு மேலாக ரஷ்யா தன் இராணுவ பலத்தை, கிழக்கு உக்ரெயின் எல்லையில் அதிகரிப்பது நிச்சயம்.. யுத்தம் மிக மோசமான இரத்தக் களரியை உண்டுபண்ணும் என்பதை எவராலும் தடுக்க முடியாது. ரஷ்யாவுக்கும் மேற்குலகுக்குமான உறவு இதனால் நஞ்சூட்டப்படும்.

முதல் இரண்டு உலகப் போர்களைவிட மிகப் பெரிய போருக்கு உக்ரைன் விவகாரம் இட்டுச் செல்லும் என்று ஊடகங்கள் அஞ்சும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. இந்த பிரச்சனையில் பூகோள அரசியலும் சற்று உள்ளது. உக்ரைன் NATOவுடன் கூட்டு சேர்ந்தால் அமெரிக்க கடற்படை கருங்கடலில் கடை திறந்துவிடும். இது ரஷ்ய கருப்பு கடல் கடற்படைக்கு (Black sea fleet) நேரடி எதிர்ப்பாக அமைந்து விடும். ரஸ்யாவுக்கு நேரடி கடல் பாதை இல்லாததால் இருக்கும் பாதையில் அந்நிய சக்திகள் குறுக்கிடுவதை விரும்பவில்லை. இதற்கு ஒரே காரணம் உக்ரைன், ரஷ்யா இரண்டுமே அணு ஆயுதங்களைத் தயாரித்து வைத்துள்ளமைதான். மோதல் முற்றி போர் மூண்டால், அணு ஆயுதங்களை இரண்டும் பயன்படுத்தும் என்ற அச்சமும் ஏற்பட்டிருக்கிறது. இதனாலேயே உலக நாடுகள் உக்ரைன் விவகாரத்தை கவனமாக அவதானித்து வருகின்றன.

தவறு எங்கிருந்து வருகிறது , எப்படியான அனர்த்தங்கள் நிகழப் போகின்றன என்பது உங்களுக்கு இப்பொழுது புரிந்திருக்கும்..
.

ஆக்கம்  மற்றும்  தொகுப்பு : மு .அஜ்மல் கான்.

Sunday, 27 February 2022

Medical education why fall inadequate in India !!

Bachelor of Medicine and Bachelor of Surgery popularized as MBBS are considered to be the most prestigious professional courses in the country. Every other student in the country aspires to become a doctor. The affordable fee of Rs. 10000 annually in the central government funded medical institutions AIIMS is a major attraction. For All India Quota the annual fee ranges between 50,000 to 2, 00,000 for eligible MBBS students. Bachelor of Medicine and Bachelor of Surgery popularized as MBBS are considered to be the most prestigious professional courses in the country. Every other student in the country aspires to become a doctor. The affordable fee of Rs. 10000 annually in the central government funded medical institutions AIIMS is a major attraction. For All India Quota the annual fee ranges between 50,000 to 2, 00,000 for eligible MBBS students.

Medical studies in India in the top medical colleges offer ample of advantages to the students. There are several top MBBS colleges in India where you are going to learn a lot and have a successful career ahead.

The following are the various benefits of studying medicine in India:

  1. The country has top-ranked medical institutions in the country that will teach you medicine using the best teachers in the country.
  2. India offers a good number of the suffering patients where you can study various medical complications. This will widen your base of understanding medicine.
  3. MBBS education in India is all about making you practice in real medical emergencies which are a good prospect for many students.
  4. Since, India is your motherland; you will feel happy in being associated with a medical college of the country.
  5. You will never feel away from your country, family, friends, and your favourite food.
  6. There is no need to qualify the NMC Screening Test or the FMGE exam which lessens your burden further.
  7. You are given your license to practice as soon as you graduate with your MBBS degree.
  8. If you grab a government medical college of the country, your fee is going to be a negligible amount.
  9. You can easily complete your MBBS study in India within a budget of 3-5 lakhs.
  10. You will get an opportunity to be a part of many international and national conferences while pursuing MBBS in India.
  11. It will be easy for you to apply for jobs and even for part-time work in some private medical college since you will be graduated from a renowned medical college of the country.
  12. It will be easy for you to prepare for the postgraduate examinations for higher studies after you complete your MBBS.
  13. Medical curriculum followed in the country is same in all the medical colleges, be it government or private.

Open the wide opportunities for yourself after the successful completion of MBBS in India

  1. After the successful awarding of the MBBS degree, you can go for a list of professional possibilities for medical graduates approved by the National Medical Commission (NMC).
  2. You can go for job opportunities within the clinical enterprise and unleash the growth opportunities.
  3. There are various hospitals that you can go for an internship with to gain the medical level of experience.
  4. You can study for the postgraduate courses and study for the PG NEET examinations to specialize in the various medical streams.
  5. Several medical colleges offer you the PG courses.
  6. Students can also go for PG courses abroad and apply to various medical universities in the world.
  7. This is one of the best options to go for MBBS abroad and pursue quality education and clinical profession.

What is the Major Difference in Doing MBBS in India and MBBS Abroad?

  1. The course duration: all the medical universities outside India have an academic curriculum that for 6 years comprises of 5 years of theoretical study and one year of internship. For MBBS in India, this curriculum is for 5.5 years which 4.5 years of study and one year of internship.
  2. The course fee: Indian government colleges do not charge for a hefty fee structure as compared to the Indian private medical colleges. As for the medical colleges abroad, they do not ask for donations and the academic fee per year is less than that of the Indian private medical institutions.
  3. The reputation: not many of the Indian medical colleges are listed in the top medical colleges ranking in the world. Even AIIMS, Delhi, India’s top medical college is not there in the top 100 medical colleges in the world. In such a situation, it is better to be associated with a medical college abroad than going to a private medical institution.
  4. Personality development: living outside India will inculcate a good personality within you owing to the global exposure that you will receive. You will become more learned and experienced when you study MBBS abroad as compared to India.
  5. The NMC Screening Test: if you want to return after your MBBS abroad to India, you will have to appear for the NMC Screening Test also called as the FMGE to obtain the license for practicing medicine in India. When you study from any medical college in India, you are provided with a license after your graduation without any need for sitting for an examination.
  6. The global exposure: when you go to studying medicine abroad, you will meet a lot of new people from different countries and you learn their culture as well. This helps in providing you a global exposure for better personality development.
  7. Clinical knowledge: India has a growing population and so the hospitals are flooded with patients every single day. You will indeed get a good level of clinical knowledge while studying and practicing in India, but you can get into new researches and development whilst studying MBBS abroad.
  8. World-class infrastructure: except a few medical colleges of the country, medical facilities in India lack basic infrastructure. If you go for MBBS abroad, you will get to indulge in quality education that too with world-class state of the art infrastructure medical universities.
  9. Global reputation: it is always better to go and study in universities that have a global reputation in the world. MBBS in Abroad offers you several advantages to indulge on a global degree.
  10. Family and Friends: with MBBS in India, you will be living in the country and can meet your parents, family, and friends on special occasions. You will also not miss the Indian food and the feel the vibe of living in your own country.
  11. The NEET exam: for pursuing MBBS in India, you need to score good marks and top ranks to get a seat into the top medical college of the country. For this, you have to appear for the NEET exam too.


The National Medical Commission’s website shows 43,310 MBBS seats available in 284 government medical colleges in India, and 41,065 MBBS seats in 269 private medical colleges. This means only about half of the already meager seats are in affordable government colleges. And there’s a massive difference in the cost of studying in “small countries”, When compared to private colleges in India. While 8.70 lakh candidates cleared NEET-UG in 2021, there were only 88,120 undergraduate seats in medical colleges in India as of December.

 The seats of the medical colleges are increasing gradually but if the govt increases it like that of engineering the quality of doctors would be as same as the quality of engineers which most of the private engineering colleges are producing so keeping in mind the quality of doctor the govt is taking adequate steps. We all have to agree that there is a huge shortage of doctors in our country but the problem which has been the prime reason behind this shortage is not the number of seats but also the doctors going abroad, the government spends almost more than 50 lakhs on each doctor in a government college and the fees which it charges is like peanuts in front of the actual fee and what some do in return they go abroad do the services for other countries, pay taxes there, I m not saying that you should not go abroad but there is a saying that when there is a fire in your house use your bucket of water for your own purpose. So, the doctors should stay in our motherland and first give their services here and then if the doctors are inadequate number then should go abroad, and the government also has to play a huge role in this they have to increase the salaries of doctors so that they can easily stay here and have a quality of life and the parents of students should also keep in mind that yes doctors and engineers or maybe some few professions have got more respect in our society but this is due to us BCS we gave them more imp than other, so. Every profession should be given its due respect whether it be sports, music, or anything else many people are of the opinion that doctors from private medical colleges are not up to the mark as compared to government medical colleges, but this is not the absolute truth since just as money can buy seats in private certain other factors known to everyone can get you a seat in a govt medical college. Hence, there can be academically weak students from both places. Some students from private colleges I know have done extremely well, managing to get postgraduation abroad as well as good placements. It is important to remember I know this that irrespective of the degree a doctor has very rarely will he take responsibility to manage a patient unless he is absolutely sure about his capabilities. Many of these doctors who own nursing homes etc, usually call another doctor for another opinion in complicated cases, and rarely will a surgeon operate on a patient without an expert assistant whom he can rely on, this is very common, in serious life-threatening cases usually every doctor sees to it. That the best doctor sees the patient. For routine issues, it is the responsibility of the patient also to choose his doctor carefully.


Career options for MBBS India produce 88120 MBBS every year, 20000 Foreign Medical Graduates come to India every year. Even if only 16% clear the Foreign Medical Graduates exam that still makes the number of qualified and licensed MBBS doctors produced yearly at 70200. The government which is the largest employer has 1750 vacancies every year for MBBS to work in Primary Health Centres. An about similar number are employed yearly by various Government agencies like railways, ESI, PSUs, army, and other institutions. This leaves 66700 MBBS doctors looking for jobs every year. Some of them will join post-graduation, but even with the increased number of seats still about 35000 MBBS doctors yearly who are unemployed. Since the number of PG seats was limited to about half the current strength up to 2 years ago there is a backlog of previous years which adds to this number which is visible in the 1 lac MBBS doctors appearing for the NEET PG entrance exam every year. These 35000 plus the backlog do join some private hospitals as resident doctors for a few months to a few years but this is not a career option. There is no career in being a resident doctor however good in clinical skills you may be. It is not as if it is a permanent job with a regular pay scale and yearly increments and stock options. Ultimately after some time, you are expected to move on. This is where a problem arises. Those who are left without a post-graduation, have tried multiple attempts to crack the NEET PG, done residents' jobs for 3 years or so, and are not beneficiaries of any reservation so have not got any Government Job, are the ones who are most vulnerable. Already about 27 -28 years of age and expected by their families and friends to be “settled” they are adrift with no sense of direction. Some try to go abroad to seek greener pastures. Setting up a practice is easier said than done. To set up a GP practice in a city is no longer a financially viable option for them. Costs are prohibitive in cities and the GP space in suburbs, small towns, and villages is firmly occupied by entrenched Government approved quacks and cross paths. The turf war among specialists has to lead to a situation where despite being a graduate in medicine and surgery the MBBS can neither practice medicine nor surgery, obstetrics, ENT, Eye, or any other field which today is defined as a specialty. Unfortunately, our courts have contributed their might to creating this mess. Unfortunately, this weakest segment of our profession is the one that is least heard in the innumerable conferences and meetings of professional associations. Is it not our responsibility as seniors to secure the professional needs of your youngsters. 

Just imagine, by simply increasing no. of seats, they start taking students of even low marks in NEET who are incompatible to bear the stresses of medical college life (those who are in med schools know what kind of stress I'm talking about). This would lead to havoc creating average and below-average doctors that would directly put the life of patients and the healthcare of our nation in dangerous hands.

We did not have our first and foremost demand as the creation of more regular posts for MBBS doctors to serve in our country. We cry hoarse about the dearth of doctors but are loathe to provide them as a career option as doctors to the community. National Medical Commission (NMC) was to take the scarcity of MBBS seats seriously, in order to provide enough opportunities for every student who aspires to medical education in India.


MBBS in India Open The Door To Endless Success

Prefer India MBBS from the top Medical Universities in India for a career with unlimited growth opportunities. For successful MBBS aspirants, following are the major job profiles:

  1. Doctors
  2. Physician
  3. Junior doctors
  4. Junior Surgeons
  5. Researcher
  6. Scientist
  7. Medical Professor or Lecturer

General Areas for the Employment are listed below:

  1. Hospitals
  2. Health Centres
  3. Laboratories
  4. Medical Colleges
  5. Biomedical Companies
  6. Nursing Homes
  7. Pharmaceutical and Biotechnology Companies

Wednesday, 23 February 2022

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியால் கமலுக்கு வந்த சோதனை மேல் சோதனை !!


கமல் ஹாசன் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு திரை உலகில் சகாப்தம் படைத்த நல்ல மனிதர் மேலும் திரையில் நம்மையெல்லாம் பலவித நடிப்புகளின் மூலம் திறன் பட செயல்பட்டு நமக்கு சந்தோசம், நல்ல தகவல் மேலும் நல்ல மோகம், தாகம் போன்ற பலவற்றை நடிப்பின் மூலம் வழங்கியவர் நீடுடி வாழ்க நடிப்புடன் என்றென்றும் மத சார்பற்ற நடிகனாக தமிழகத்தில் நேர்மையாளர்களாக இருப்பவர்கள் வெற்றி பெறுவது கடினம்.. இங்கு வெற்றி பெற திருடர்களாய் இருக்க வேண்டும்.. ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டும்.. சாதி, மத பிரச்னைகளை தூண்டி விடுபவர்களாக இருக்க வேண்டும். குண்டர்களை கட்சி தொண்டர்களாக வைத்து இருக்க வேண்டும்.போலி மதவாதிகளாக இருக்க வேண்டும். டாஸ்மாக்கை எதிர்ப்பது போல் சீன் காமித்து விட்டு பின்னால் சாராய ஆலை நடத்த வேண்டும்.மொத்தத்தில் உண்மைக்கு புறம்பான எல்லாவிதமான காரியத்திலும் ஈடுபட வேண்டும்.. அது கமலால் பண்ண முடியாது.அதனால் அவரால் ஒரு காலத்திலும் அரசியலில் வெற்றிபெற முடியாது.

ஒருவர் பொதுவாழ்க்கைக்கு வருகிறார் என்றால் வரட்டும். அவர் எம் ஜி ஆரை போலத்தான் இருக்கவேண்டும் என்றோ அல்லது அவரை போன்று வெற்றி பெற்று கொண்டே இருக்கவேண்டும் என்றோ நிர்பந்தமில்லை

எம்ஜிஆருக்கு ஏழைகளுக்கு உதவும் எண்ணம் என்ற நீண்ட நெடுங்காலமாக இருந்து இருக்கிறது. அது எல்லோருக்கும் இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. சரியான நேரத்தில் அவர் இருந்த நிலையில் நன்றாக அவர் பயன் படுத்திக் கொண்டார்.

அவரை விரும்பிய கோடானுகோடி மக்கள் அவரை ஏற்றனர். அது எப்படி எல்லாருக்கும் பொருந்தும் ? இன்று கமல் அரசியலில் நுழைந்து வெற்றிபெறாத பலரின் பட்டியலில் சேர்ந்து இருக்கிறார் அவ்வளவுதான் அவரது கட்சியை அவர் நடத்துவது அவரது கட்சியினர் அவரை தொடர்வது என்பது அவரவர் விருப்பம் அவரை அரசியலை விட்டு வெளியே போகசொல்வதற்கு நாம் யார்?

அரசியலும் குறிப்பாக தமிழ்நாட்டு இன்றைய அரசியலும். கமல்ஹாசன் நடிகர், அரசியலில் திடீர் நுழைவு, தனிப்பட்ட வாழ்விலும் ஒன்றும் முன்னுதாரணமாக ஒன்றுமில்லை. ஆனால் மக்களுக்கு நல்லது செய்ய ஆர்வமென்று கூறி அரசியலில் நுழைந்தார். ஆனால் இந்த தமிழ்நாட்டு அரசியல் சாக்கடை காவிரி, கங்கை ஆறுகளாலும் சுத்தப்படாது. மக்களுக்கு மனமாற்றம் ஏற்ப்பட்டு இந்த அவல நிலையை அவர்களாகவே மாற்றினால் மட்டுமே நல்லவர்கள் அரசியலில் ஈடுபட முடியும்.

அவர் இன்னும் கொஞ்சம் நாள் அதாவது அவரது உடலும் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும் வரைஅவரது கட்சியினர் விரும்பினால் அரசியலில் இருக்கட்டுமே அவர் பற்றி கவலைப்பட நாம் யார்?

எந்த சினிமா பின்புலமும் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்து, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, டான்சர், துணை நடிகன், வில்லன் பிறகு கதாநாயகன் ஆகி, தொடர்ந்து பாடகர், பாடலாசிரியர், கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், விநியோகஸ்தர், இயக்குனர் என்று பன்முக திறமையால் இந்திய சினிமாவின் ஐகான் என்று சொல்லப்படும் அளவுக்கு உச்சம் தொட்டு, அதன்பின் அரசியலில் இறங்கி கேவலப்படணும்னு இருக்கு. சீனியர் சிட்டிசன் என்ற கேட்டகிரியில் 69 வயதில் நிம்மதியாக இருக்க முடியலைன்னா ஏதாவது மக்களுக்கு சமூகத்துக்கு நல்லது செய்யணும்னா காடு மரம் வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். அதைவிட்டு கட்சி ஆரம்பித்து எம்ஜிஆர் ஆகலாம்னு இறங்குனா இதுதான் கதி. எம்.ஜி.ஆர். மாதிரி அரசியலில் வெற்றிக்கொடி நாட்ட முயன்ற சிவாஜி கணேசன், டி.ராஜேந்தர், பாக்யராஜ், சரத்குமார், கருணாஸ் போன்றவர்கள், மூக்கறுபட்டு முகவரி இழந்து போனதை யாரும் மறக்க முடியாது.இவரு நண்பர் சிரஞ்சீவியை பார்த்தாவது 
அவர் உணர்ந்திருக்கணும்

அரசியலோ, சினிமாவோ, நோக்கம் பணம் சம்பாதிப்பதே. சினிமாவுல நடிக்கறதுக்கு அட்வான்ஸ் கொடுக்க தயாரிப்பாளர் இருப்பார். அரசியலில் இவரே ஆல் இன் ஆல். முதலீடு போடாத முதலாளி. இந்தாள நம்பி யராவது நன்கொடை குடுப்பாங்களா. வெல்லப் பிள்ளையாரையே கிள்ளி அவருக்கே நைவேத்தியம் செய்யும் டெக்னிக் இங்க வொர்க் அவுட் ஆகாது. 

மக்கள் நலத்திட்டங்களை தன்னால் இயன்ற அளவு செய்யலாம் அரசியல் கட்சிகளோடு சேராமல் தனி அறக்கட்டளைகள் ஏற்படுத்தி சட்டப்படியான பாதுகாப்போடு நல்ல செயல்களை செய்யலாம் நல்ல கலைகனுக்கு அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை.


ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

Monday, 14 February 2022

Behavior-Based Safety (BBS)

 

BBS all our acts (Behaviour) Based on Safety. Regardless of our act's triggers and regardless of our act's consequences. ABC...Act Behaviour Consequences. Worker calculates all his behaviour from safety point of view.

Imagine a workplace where everyone looks out for one another, where unsafe acts or conditions are stopped before they lead to incidents. That’s the power of Behavior-Based Safety (BBS)a proactive approach that turns safety into a culture, not just a rulebook.


🔹 BBS is more than policies- it’s participation.

🔹 BBS is more than compliance- it’s commitment.

🔹 BBS is more than observation- it’s intervention.


In a strong BBS culture:

1. Workers speak up when they see unsafe acts, without fear of blame.

2. Corrections are embraced, not ignored or resented.

3. Safety is second nature, woven into daily tasks, not an afterthought.


The true measure of safety isn’t just the absence of accidents- it’s the presence of a proactive mindset. 


Every time you step in to prevent an unsafe act, you’re not just protecting one person, you’re strengthening the safety culture for everyone.


👉 Have you ever had to stop a colleague from making a risky decision?

👉 How does your workplace encourage active participation in safety?


Let’s keep the conversation going. Safety is everyone’s responsibility.


Wednesday, 9 February 2022

பெண்களின் ஆடை பற்றிய இஸ்லாமிய சட்டங்கள் !! ஒரு பார்வை..




1. இஸ்லாமிய ஆடையைப் பொறுத்தவரை திருமணம் செய்வது தடையில்லாத அன்னிய ஆண்களின் பார்வையை விட்டும் மறைக்கும் விதத்தில் உடம்பு முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருக்கவேண்டும். ஒரு பெண் தனக்கு திருமணம் செய்யத்தடை செய்யப் பட்டவர்கள் முன் இரண்டு கைகள், முகம், கால் (பாதம் வரை) ஆகியவற்றைத்தவிர மற்ற உறுப்புக் களை திறந்துவைப்பது கூடாது.  

2. ஆடை உடம்பை நன்றாக மறைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். உடலின் நிறம் வெளிப்படும் விதத்தில் மெல்லிய ஆடையாக இருக்கக்கூடாது.

3. உடலின் அங்க அவயங்கள் வெளிப்படும் விதத்தில் இறுக்கமான ஆடையாகவும் இருக்கக்கூடாது.

”என்னுடைய சமுதாயத்தில் இரண்டு பிரிவினர் நரகத்திற்கு செல்வர். அவர்களை நான் பார்த்ததில்லை. ஒருசாரார் தங்களின் கைகளில் (அதிகாரம் எனும்) மாட்டுவால் போன்ற சாட்டையை வைத்துக்கொண்டு மக்களை அடிப்பார்கள். இன்னொரு சாரார் அரைகுறை ஆடை அணிந்த நிர்வாணமான பெண்கள். அவர்கள் ஆடிஆடி நடப்பார்கள். பிறரையும் அவர்களின்பால் சாய வைப்பார்கள். அவர்களின் தலை ஒட்டகத்தின் சாய்ந்த திமிலைப் போன்றிருக்கும். இவர்கள் சுவர்க்கத்தில் நுழையவும் மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். அதன் நறுமணம் இவ்வளவு தூரத்திற்கு வீசும்” என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

ஹதீஸில் வந்துள்ள நிர்வாண ஆடை என்பது பெண் தன் உடம்பு முழுவதும் மறைக்காத ஆடையை அணியும்போது அவள் நிர்வாணமானவளாகவே கருதப்படுவாள். உடம்பு தெரியும் அளவிற்கு மெல்லிய ஆடையை அணிவது அல்லது உடற்கட்டு தெரியும் விதத்தில் இறுக்கமான ஆடையை அணிவது, இடுப்பு, கை தோள்புஜம் போன்றவற்றின் உடற்கட்டு வெளியில் காணப்படும் விதத்தில் ஆடைகள் அமைவதைத்தான் இந்தஹதீஸ் குறிப்பிடுகிறது.

பெண்களின் ஆடை என்பது அவளுடைய மேனி முழுவதும் மறைக்கக் கூடியதாகவும், உடலின் உட்பகுதி யையும், உடலின் கனமான பகுதியை வெளிப்படுத்தாதது மாகவும், விசாலமான ஆடையாக இருக்கவேண்டும். (ஃபத்வா தொ.22ழூ ழூ146)

4. ஆண்களோடு ஒப்பிடக்கூடிய ஆடைகளை பெண்கள் அணிவதும் கூடாது. ”ஆண்களுக்கு ஒப்பாக தன்னை ஆக்கிக்கொள்ளக்கூடிய பெண்களையும், ஆண்களைப் போன்று தன் தலைமுடியை சீவிக்கொள்ளும் பெண்களையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள். ஆண்களுக்கு ஒப்பாகுவது என்பது ஒவ்வொரு சமூகத்திற்கு ஏற்ப ஆடையின் வகையிலும் அதை அணியும் விதத்திலும் ஆண்களுக்கென சொந்தமான ஆடையைப் பெண்கள் அணிவதாகும்.

ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னுதைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பு 22ழூ ழூ148ல் கூறுகிறார்:


ஆண்களுக்குத் தகுதியான ஆடையையும், பெண்களுக்கத் தகுதியான ஆடையையும் வைத்துத்தான் ஆண், பெண் ஆடை களைப் பிரித்துக் காட்டமுடியும். ஆண்களும் பெண் களும் அவரவருக்குக் கட்டளையிடப்பட்ட ஆடையை அணிவதுதான் அவர்களுக்குப் பொருத்தமானதாகும். பெண்கள் தங்கள் மேனியை வெளியே காட்டாமல் மறைத்து பர்தா அணிந்து வெளியில் செல்வதுதான் பெண்களுக்கு இடப்பட்ட கட்டளையாகும். எனவே தான் பெண்கள் சப்தத்தை உயர்த்தி பாங்கு, தல்பியா சொல்வது அவர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. ஹஜ்ஜின் போது ஸஃபா, மர்வா மலைக்குன்றுகளில் ஏறுவதும், ஆண் களைப்போன்று இரண்டு துண்டு துணிகளை மட்டும் அணிந்திருப்பதும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட வில்லை. ஹஜ்ஜின்போது ஆண்கள் தலையை திறந்திருப்ப தும், வழக்கமான ஆடையை அணியாமலிருப்பதும் அவர்களுக்குக் கடமையாக்கப் பட்டுள்ளது. சட்டை, பேண்ட், பைஜாமா, தொப்பி, காலுறை போன்றவற்றை அணிவது கூடாது. அதே நேரத்தில் பெண்கள் அவர் களின் வழக்கமான ஆடையில் எதையும் அணிவது தடை செய்யப்படவில்லை. காரணம் அவள் தன் உடல் முழுவ தையும் மறைத்து பர்தா அணியுமாறு கட்டளையிடப் பட்டிருக்கிறாள். அதற்கு மாற்றம் செய்வது அவளுக்கு அனுமதிக்கப்படாது.

ஆனால், அவள் தன் முகத்தை திரையால் மறைப் பதும் உறுப்புகளுக்கென தயார் செய்யப்பட்டுள்ள காலுறைகளை அணிவதும் அவளுக்கு அவசியமில்லை. என்று கூறிவிட்டு அவள் அன்னிய ஆண்களை விட்டும் தன் முகத்தை முகமூடி அல்லாததைக் கொண்டு மறைத்துக் கொள்ளலாம். ஆண்களிலிருந்து பெண்களும், பெண் களிலிருந்து ஆண்களும் பிரித்தறியக்கூடிய விதத்தில் ஆடை இருக்க வேண்டும் என்பது தெளிவாகிவிட்டால் பெண்கள் தங்கள் உடம்பை முழுவதுமாக மறைத்து பர்தா அணியவேண்டும் என்ற உண்மை புரிந்துவிடும்.

ஓர் ஆடையைப் பொறுத்தவரை அதை அதிகமா கவும் ஆண்கள்தான் அணிந்து கொள்கிறார்கள் என்றிருந் தால் அந்த ஆடையை பெண்கள் அணிவது கூடாது. ஒரு ஆடையில் உடலை மறைப்பது குறைந்து விடுவதும், ஆணுடன் ஒப்பிடுவதும் சேர்ந்து விடுமானால் இரண்டு விதத்திலும் அவ்வாடை தடை செய்யப்படுகிறது.

5. பெண்கள் வெளியில் செல்லும்போது அணிகின்ற ஆடைகள் பார்வையைக் கவரக்கூடிய அலங்காரங் களைக் கொண்டதாக இருக்கக்கூடாது. ஏனெனில் அதன் மூலம் அவள் தன் அலங்காரத்தை வெளிப் படுத்திச்செல்லும் பெண்களின் பட்டியலில் இடம் பெற நேரிடும்.



பெண்கள் பிற ஆண்களிடமிருந்து தங்கள் முகத்தை மறைத்துக் (கொள்ள வேண்டும்) கொள்வது கட்டாயம் என்பதற்கு குர்ஆனிலும், நபி வழியிலும் ஆதாரங்கள் உள்ளன.

அல்லாஹ் கூறுகிறான்: ”(இறைநம்பிக்கையுள்ள பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தன் கணவர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தம் பெண்கள், அல்லது தம் வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (அடிமைகள்), அல்லது ஆடவர்களில் தம்மை அண்டிவாழும் (இச்சை யோடு பெண்களை விரும்ப முடியாத (அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப்பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர வேறு ஆண்களுக்கு தங்களின் அழகலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம்.” (அல்குர்ஆன்: 24:31)

அல்லாஹ் கூறுகிறான்: தானாக வெளிப்படுவதைத் தவிர வேறு எதையும் அப்பெண்கள் தங்கள் அழகை வெளிப்படுத்த வேண்டாம். இன்னும் தங்கள் முன்றானைகளில் அவர்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க வேண்டும்.

”அப்பெண்களிடம் ஏதாவது ஒருபொருளை நீங்கள் கேட்பதாக இருந்தால் திரைக்கு அப்பால் இருந்தே அவர்களிடம் கேளுங்கள்.” (அல்குர்ஆன்: 33:53)

இந்த வசனத்தில் திரைக்குப் பின்னால் எனச் சொல் வது ஒரு சுவர் அல்லது வாசல் அல்லது ஆடை போன்ற வற்றை திரையாக்கி தன் உடலை மறைப்பதைக் குறிக்கும்.

மேற்கண்ட வசனத்தில் நபி(ஸல்)அவர்களின் மனைவியருக்காகச் சொல்லப்பட்டாலும் இந்தச் சட்டம் எல்லா முஸ்லிம் பெண்களுக்கும் பொதுவானதாகும்.

ஏனெனில் அதற்கான ஆடை அணிவதற்குண்டான காரணத்தை அல்லாஹ் சொல்லும் போது,

”அதுவே உங்களின் இதயங்களுக்கும், அவர்களின் இதயங்களுக்கும் தூய்மையானதாகும்.” (அல்குர்ஆன்:33:53) என்று குறிப்பிடுகிறான்.

இன்னும், அல்லாஹ் கூறுகிறான்: ”நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும், இறைநம்பிக்கை யாளர்களின் மனைவியர்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறும்!” (அல்குர்ஆன்: 33:59)



ஷேகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பின் 22ழூ ழூ110 ல் சொல்கிறார்கள்.

மேற்கண்ட வசனத்தில் ‘ஜில்பாப்’ என அல்லாஹ் குறிப்பிடுவது ஒரு பெண் தன் தலை மற்றும் முழு உடலை யும் மறைத்துக் கொள்ளும் விதத்தில் அணியும் ஆடை என இப்னுமஸ்த் ரளியல்லாஹு அன்ஹு போன்றவர்கள் கூறியுள்ளார்கள்.
அவள் தன் கண்களைத் தவிர முழு உடலையும் மறைத்துக் கொள்ளும் விதத்திலான ஆடையை அணிவது என அப+உபைதா போன்றோர் கூறுகின்றனர்.

ஒரு பெண் பிற ஆடவர்களிடமிருந்து தன் முகத்தை மறைக்க வேண்டும் என்பதற்கான நபிவழி ஆதாரங்களில் ஒன்று பின் வரும் ஹதீஸாகும்.

”நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும்போது வாகனக் கூட்டம் ஒன்று எங்களைக் கடந்து செல்லும். எங்களுக்கு நேரே அவர்கள் வரும்போது எங்களில் உள்ள பெண்கள் தங்கள் தலை யில் தொங்கிக் கொண்டிருக்கும் துணியால் முகத்தை மறைத்துக் கொள்வார்கள். வாகனக் கூட்டம் எங்களைக் கடந்து சென்றதும் எங்கள் முகத்தைத் திறந்து கொள் வோம்” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், அபூ தாவூது)


பர்தாவின் பலன்கள்..

ஒரு பெண் பிற ஆடவர்களின் பார்வையிலிருந்து தன் உடலை மறைத்துக் கொள்ளும் விதமாக அணியும் ஆடை பர்தா எனப்படும்
.


நாம் ஒரு நபரிடம் இரண்டு வகையில் பழகுவோம்.

ஒன்று அவரது நல்ல குணம், பண்புகள் சார்ந்து, மற்றொன்று அவரது உடல் கவர்ச்சி சார்ந்து. உடல் கவர்ச்சி சார்ந்து பழகும் உறவுகள் தான் நம்மை தீய பாதையில் செல்ல, கெட்ட செயல்களில் ஈடுபட வழிநடத்துகிறது.

இவ்வகையில் காணும் போது பர்தா அணிவது ஒரு பெண்ணிடம் கவர்ச்சியின்றி, அவரது அகம் சார்ந்து மட்டுமே ஒரு நல்லுறவில் இணைய உதவும் கருவியாக இருக்கிறது



பர்தா அணிவது ஒருவகையில் நல்லது என்று தான் நான் கூறுவேன். 

இஸ்லாமியப் பெண்ணே! உனக்கு நான் சில புத்த கங்களைக் குறிப்பிடுகின்றேன். அவற்றைப் படித்துப்பார்!

1. தொழுகையில் பெண்களின் திரையும், ஆடையும் (இப்னு தைமிய்யா)

2. பர்தா அணிவதன் சட்டங்கள். (ஷேக் இப்னு பாஸ்)

3. அரைகுறை ஆடையால் கெட்டுப்போனவர்கள் மீது உருவப்பட்டவாள். (ஹமூத் இப்னு அப்துல்லாஹ் துவைஜிரி)

4. பர்தா (முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன்)

இந்தப் புத்தகங்களில் போதுமான அளவு விளக்கங்கள் உள்ளன.



பெண்கள் தங்கள் முகத்தை திறந்து செல்ல அனுமதி வழங்கிய அறிஞர்கள் குழப்பமான நிலைகளில் இருந்து பாதுகாப்பு இருந்தால்தான் இந்த அனுமதி என்பதை இஸ்லாமியப் பெண்ணாகிய நீ புரிந்து கொள்ள வேண்டும். பெண்ணிற்கு குறிப்பாக இந்த காலத்தில் பாது காப்பில்லாத நிலையைத்தான் காண முடிகிறது. ஆண்களி டத்திலும் இஸ்லாமிய உணர்வு குறைந்துவிட்டது. வெட்கம் குறைந்துவிட்டது. தவறுகளின் பால் அழைக்கக் கூடியவர்கள் அதிகரித்துவிட்டனர். பெண்கள் தங்கள் முகங்களை பல்வேறு அலங்காரங்களைக் கொண்டும் அலங்கரிக்கிறார்கள். இதுதவறுக்குத் துணை போகின்றது.

எனவே இஸ்லாமியப் பெண்ணே! இது போன்ற காரியங்களிலிருந்து விலம்க்கொள்! குற்றங்களிலிருந்து உன்னைக் காக்கக்கூடிய பர்தாவை நீ அணிந்துகொள்! தவறானவற்றில் விழுந்துவிடக்கூடிய இப்படிப்பட்டப் பெண்களுக்கு தற்காலத்திலோ, ஆரம்பகாலத்திலோ உள்ள எந்த இஸ்லாமிய அறிஞர்களும் தன் முகத்தை பிற ஆடவர்களுக்குக் காட்ட அனுமதித்ததில்லை. பர்தா விஷயத்தில் இஸ்லாமியப் பெண்களில் நயவஞ்சகத் தன்மையோடு நடந்துகொள்ளக் கூடியவர்களும் உண்டு. பர்தாவை கடைபிடிக்கின்றவர்களிடையில் இருக்கும் போது பர்தாவை அணிந்து கொள்கிறார்கள். பர்தாவை கடைபிடிக்காத மக்களிடையே செல்லும்போது அதை அகற்றிக் கொண்டு செல்கிறார்கள். இன்னும் சிலர் பொது வான இடங்களில் பர்தா அணிவார்கள் கடைவீதி களுக்குச் செல்லும்போது அல்லது மருத்துவமனை களுக்குள் செல்லும்போது அல்லது நகைக்கடைகளுக்குச் செல்லும்போது அல்லது தையல்காரனிடம் செல்லும் போது தன் கனவன் முன் நிற்பதுபோன்று முகம், கை களைத் திறந்து நிற்கின்றனர். இது ஆடை அணியும் விஷயத்தில் நயவஞ்சகத் தன்மையாகும். இப்படிச் செய்யக்கூடிய பெண்ணே நீ அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! வெளிநாடுகளிலிருந்து விமானத்தில் வரக்கூடிய பல பெண்கள் விமானத்திலிருந்து இறங்கும்போதுதான் பர்தா அணிகின்றனர். பர்தா ஒரு நாட்டுக் கலாச்சாரமாகக் கடைபிடிக்கப் படுகிறதே தவிர மார்க்கச் சட்டமாக அதை கடைபிடிப்பதில்லை.

இஸ்லாமியப் பெண்ணே! சமுதாயத்தில் நாய் போன்று அலைகின்ற, இதயத்தில் நோயைச் சுமந்துள்ள வர்களின் விஷப் பார்வையிலிருந்து உன்னைக் காப்பாற் றக் கூடியதாக பர்தா இருக்கிறது! தவறான எண்ணங்களி லிருந்து அது உன்னைப் பாதுகாக்கிறது. எனவே பர்தா வை நீ கடை பிடித்துக் கொள். பர்தாவை எதிர்த்து அல்லது அதன் மதிப்பைக் குறைத்து செய்யப்படும் தவறான பிரச்சாரத்தின் பக்கம் நீ திரும்பிப் பார்த்து விடாதே!

 தொகுப்பு : அ.தையுபா  அஜ்மல்.