Saturday 6 December 2008

இளைகர்களே!! வாழ்க்கையில் உங்களுக்கு பெண் பார்க்கும் போது என்ன செய்ய வேண்டும்?


திருமணம் செய்வதற்கு தனக்கு வாழ்க்கை துணைவியாக வரவிருக்கும் பெண்ணை நேரில் சென்று பார்ப்பது நபிவழியாகும். ஆனால் இன்று முஸ்லிம் சமுதாயத்தில் இந்த நடைமுறை மாற்றமடைந்து பெண் பார்ப்பதற்கு குடும்பத்தினர் ஒவ்வொருவரும் வெவ்வேறு நேரங்களில் சென்று பார்த்து விட்டு கடைசியில் பெண் பிடிக்கவில்லை என்று சொல்லி விடுகிறார்கள்.

அதுவும்  வாழ்க்கையில் உங்களுக்கு பெண்  பார்க்கும்  போது  பிடிக்காதது மணமகனுக்கல்ல. அவனது குடும்பத்தினர்க்கு என்பது கசப்பான உண்மை. அதேபோன்று குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் பெண் பார்த்துவிட்டு வந்ததன் பின் கடைசியாக மணமகன் பெண்ணை பார்த்துவிட்டு தனக்கு பிடிக்கவில்லை என்கிறான்.

இவ்வாறு பலமுறை பெண் பார்த்துவிட்டு கடைசியில் பிடிக்கவி ல்லை என்பதால் அந்தப் பெண் எவ்வளவு மனவேதனை அடை வாள் என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டாமா?அது மட்டுமல்லாமல் அந்த பெண் வீட்டினர் வசதியற்றவர்களாக இருந்தால் எவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும், அவர்கள் சில வேளைகளில் கடன் பெற்றும் ஏற்பாடு களை செய்திருப்பார்கள்.

நாம் பலமுறை சென்று மூக்குமுட்ட சாப்பிட்டு விட்டு கடைசியில் பெண்ணை பிடிக்கவில்லை என்று சாதாரணமாகச் சொல்லிவிடுகிறோம். எனவே யார் மணமகனோ அவன் முதலிலேயே சென்று பெண்ணை பார்த்து சம்மதம் சொல்லவேண்டும் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். திருமணம் என்பது ஊருக்கல்ல, எமது குடும்பத்திற்கல்ல. நாம்ஒரு பெண்ணை திருமணம் முடிப்பதென்றால் நாம்தான் பெண்ணை பார்த்து உறுதி செய்ய வேண்டும்.

பெண் பார்க்கும் இன்னுமொரு முறைதான் மணமகனின் ,மணமகளின் போட்டோவை பார்த்து முடிவெடுப்பது. இன்றைய காலகட்டத்தில் போட்டோக்களில் ஒருவரை எவ்வாறு வேண்டுமானாலும் நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி மாற்றிக்கொள்ளலாம்.

எனவே ஒருவர் போட்டோவை பார்த்து சம்மதம் சொல்லிவிட்டு நேரில் பார்த்ததும் திகைத்துவிடுகின்றார். குறிப்பாக வெளி நாடுகளில் வேளை செய்பவர்கள் அங்கிருந்துகொண்டு இன்டர்நெட்டில், போட்டோவில் பெண் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவருடைய தோற்றத்தை நேரில் பார்ப்பதின் மூலமே மிகச் சரியாக அறிந்துகொள்ளலாம்.


பெண் பார்க்கும் வைபவத்தில், "பையனுக்கு பொண்ணுகிட்ட பத்து நிமிஷம் தனியா பேசனுமாம்" என்று மாப்பிள்ளை வீட்டு கூட்டத்தில் இருந்து ஒருவர் குரல் கொடுப்பார், உடனே பெண்ணையும், பையனையும் தனியாக பேச அனுமதிப்பார்கள்.

பையன் தான் பேச நினைத்ததை பேசிவிட்டு......பெண்ணிடம் தான் கேட்க நினைத்த கேள்விகளை கேட்பார், பொண்ணும்....

"ஆங்"..."ஆமா"...."இல்லை" என்று ஒரிரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு,

"உங்களுக்கு என்கிட்ட ஏதாவது பேசனுமா.....கேட்கனுமா?"அப்படின்னு மாப்பிள்ளை பையன் பேச சந்தர்ப்பம் கொடுத்தா கூட, பேசாம 'பெப்பே பெப்பே' என்று முழிப்பாள்.


எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி தனியா பேச சந்தர்ப்பம் கிடைக்கிறப்போ......சேலை நுனியை திருகிக்கிட்டு, தலை குனிஞ்சுட்டு, 'ஆமா'...'இல்லை' ன்னு மண்டைய மண்டைய ஆட்டி ஃபில்ம் காட்டுறது????


பெண்ணும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி,பையனிடம் பேசி, சில பல கேள்விகள் கேட்டு பையனை பற்றி தெரிந்துக்கொள்ளலாமே!!!

  •  பையன் பெண்ணிடம் தனியா பேச விருப்பப்படுறான்னு சொன்னா, அவனுக்கு பெண்ணின் தோற்றம்[appearance]பிடிச்சு போய்டுச்சு, அடுத்து அனுகுமுறை[approach] எப்படின்னு தெரிஞ்சுக்கத்தான் தனியா பேசனும்னு சொல்லுவார்.


  • ஸோ.....உங்களுக்கு[பெண்ணிற்கு] அவரோட தோற்றம் மனசுக்கு பிடிச்சிருந்தா, அவருடைய பெர்ஸனாலிட்டி/approach எல்லாம் எப்படின்ன்னு தெரிஞ்சுக்க பேசிப் பாருங்க.


  • 'எப்படி பேச்சை ஆரம்பிக்கிறது? ''பேசினா தப்பா நினைப்பாறோ??'அப்படின்னு எல்லாம் தடுமாறாம......இயல்பா இருங்க.அதான் உங்க appearance test ல பாஸ் ஆகிட்டீங்களே.......ஸோ நோ மோர் டென்ஷன்!!

  • ஆனால் என்ன பேசுறதுன்னு முன் யோசனை இல்லாம."உங்களுக்கு எந்த நடிகை பிடிக்கும்"னு அசட்டுத்தனமான கேள்வி எல்லாம் கேட்காம..கிடைச்ச 5 நிமிஷத்துல உருப்படியா பேசனும்.


  •  முதல் முதலா கேட்கிற கேள்வி.?அவருடைய வாழ்க்கை லட்சியம்/குறிக்கோள் , இப்படி ஏதாவது இருக்கா?? இருந்தா.....அது என்ன? அப்படின்னு கேட்கலாம்.


  • தன் வேலையிலோ[career], தொழிலோ சில உயர்வான நிலையை அடைவது அவரது லட்ச்சியமாக அவர் கூறினால், வாழ்க்கையை திட்டமிட்டு , ஒரு குறிக்கோளோடு முன்னேறி செல்பவர்ன்னு புரிஞ்சுக்கலாம்.

  • [ 'நமக்கெல்லாம் நோ ambition..........ஜஸ்ட் டேக் லைஃப் அஸ் இட் கம்ஸ்.........லிவ் ஃபார் தி டே" அப்படின்னு பையன் மொக்கை போட்டா....மார்க் கம்மி பண்ணிடுங்க']


  • அடுத்து அவருக்கு, பிடித்தமான பொழுதுபோக்கு[hobby] என்னன்னு கேட்கலாம்.......அந்த ஹாபி விளையாட்டு சம்மந்தமானதாக இருந்தால், உடம்பை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதில் அக்கறை உள்ளவர்ன்னு புரிஞ்சுக்கலாம்.அப்படியே 'ஜிம்' க்கு போற பழக்கம் இருக்கான்னும் கேட்டுக்கங்க.


  • நீங்க வேலைக்கு சென்று கொண்டிருப்பவராக இருந்தால், திருமணத்திற்கு பின் வேலைக்கு செல்வதில் அவரது விருப்பம் என்ன என்பதை பேசி தெரிந்துக் கொள்வது நலம்.                                              
  • வேலை பார்க்கும் இடம் காரணமாக இருவரும் வெவ்வேறு ஊரில் பணிபுரிந்தால், இடம் மாறுதல் சாத்தியமா?அதற்கான வழிமுறைகள் என்ன என்பதையும் தெரிந்துக்கொள்வது நல்லது.

அடுத்த முக்கியமான விஷயம், அவரது பழக்க வழக்கங்கள்....


  • உங்களுக்கு சிகரெட், மது பழக்கங்கள் சுத்தமாக பிடிக்காது என்றால், அவருக்கு அந்த பழக்கம் இருக்கிறதா என்பதை தெளிவாக கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.


  • "கொஞ்சம் கொஞ்சமா இந்த பழக்கத்தை விட ட்ரை பண்ணிட்டு இருக்கிறேன்..........கல்யாணத்துக்கு அப்புறமா முழுசா விட்டுறுவேன்" அப்படின்னு டயலாக் விட்டா.......உஷார்!!!


  • பழக்கத்தை கைவிடனும்னு நினைச்சா..........கல்யாணம் வரைக்கும் வெயிட் பண்ண வேண்டிய அவசியமில்லையே!
  • ஸோ.....எந்த காரணத்தை கொண்டும் உங்கள் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை காம்ப்ரமைஸ் பண்ணிக்காதீங்க.


  • [ஸ்மோக்கிங் & occational drinking .......ஆணின் மேனரிஸமாக நீங்க கருதினா, இந்த கேள்வி உங்களுக்கு முக்கியமானதாக இருக்காது]


  •  உங்களுக்கென்று தனிப்பட்ட ஆசைகள், லட்சியங்கள் இருந்தால், அதனை அவரிடம் தெளிவாக வெளிப்படுத்துங்கள்.

  • உதாரணமாக.... பாட்டு, டான்ஸ்.........போன்ற கலைகளில் உங்களுக்கு அதிக ஈடுபாடு இருக்குமானால், திருமணத்திற்கு பின்பு உங்கள் கலை ஆர்வத்தை எந்த நிலையில் வைத்திருக்க விரும்புகிறீர்கள் என்பதை தெளிவு படுத்துவது நல்லது.



* இதுவரை கேட்ட கேள்விகளும், உரையாடலும்.......உங்களுக்கு அவரிடம் ஒருவித மனம் ஒத்துபோன இயல்பான சூழ்நிலையை[comfort zone] ஏற்படுத்தியிருக்குமானால்,அவரது கடந்த கால காதல் விவகாரம், அல்லது உங்கள் வாழ்க்கையில் அவ்விதம் ஏதும் இருந்தால் அவரிடம் மனம் விட்டு பேசலாம்.தனியாக பேச கிடைத்த 10 நிமிஷ சந்தர்ப்பத்தில், ஒருவரையொருவர் முழுவதுமாக புரிந்துக் கொள்ள இயலாவிட்டாலும்,
"இவருடன் என் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒத்து போகுமா??" போன்ற சில கேள்விகளுக்கு பதிலும், முடிவெடுக்க மனதில் ஒரு தெளிவும் நிச்சயம் வரும்.


இதுவே ஒரு முஸ்லிம் ஆண், திருமணம் செய்யும் நோக்கத்தில் பெண்ணைப் பார்க்க சென்றால் பெண் மார்க்கப்பற்று உள்ளவளா என்பதைத் தான் பார்ப்பான், அதை விடுத்து சினிமா நடிகை போன்று இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் பெண் பார்க்க சென்றால் அவன் முஸ்லிமாக நடிக்கும்பெயரளவு முஸ்லிம் என்பதில் சந்தேகம் இல்லை.


இளமையில் வழி தவறி விடக்கூடாது என்ற நோக்கமும் திருமணத்திற்கு முக்கியம் என்பதால் மார்க்கப்பற்றுள்ள ஒரு பெண் தேவை என்ற நோக்கம் முதலில் இருக்க வேண்டும்,பெண் மார்டனாக, ஸ்லிம்மாக, பேசியல் செய்த முகத்துடன் இருக்கவேண்டும்என்று எண்ணுபவன் பெண்ணை மணமுடித்து சினிமாவில் நடிக்கவைத்து சம்பாதிக்கப்போகிறானா? அல்லது மார்டன்செய்து கேட் வாக் செய்து சம்பாதிக்க வைக்கப்போகி றானா? ஹிஜாப் இன்றி ஜோடியாக கைகோர்த்து வெளியில் சுற்றி பார்க்கிறவர்களுக்கு அருமையான ஜோடியாக தெரிய வேண்டும் என்று எண்ணுகிறானா?


  • ஐவேளை தொழுகையை நிறைவேற்றி வரும் பெண் பேசியல் செய்து கொள்வாளா?


  • ஐவேளை உளூ செய்து வரும் பெண்ணின் முகம் அல்லாஹ்வுக்குப் பொருத்தமானஇருக்கும் பொலிவு போதாதா?


  • அல்லாஹ்வை விட அல்லாஹ்வுக்கே சொல்லித்தரக்கூடியவர்கள் இந்த உலகில் உள்ளார்களா? 


  • சினிமா நடிகை போன்று ஸ்லிம்மாக திருமணம் செய்து ஒரு குழந்தை பெற்ற பின்குண்டாவது இயற்கை. குண்டாகிவிட்டால் தலாக் சொல்லி அனுப்பிவிடுவாயா?
  • ஆண்களும் கூட்டாக சேர்ந்து பெண்ணை பார்ப்பது கூடுமா? 


இஸ்லாமிய பெண் திருமணத்திற்காக தன்னை காண வரும் மணமகனுக்கு இஸ்லாம் வரையறுக்கப்பட்ட அளவில்தன்முகத்தைக் காட்டுவதற்கு அனுமதி இருக்கிறது ஆனால், அவனின் மாமன் மச்சான் எல்லாம்அப்பெண்ணை பார்க்க மார்க்கம் அனுமதிக்கிறதா என்றால் மார்க்கத்தில்அனுமதி இல்லை .

தலையை மறைத்து வைத்திருக்கும் பெண்ணை தலையில் இருந்து துணியை நீக்கச் சொல்லி மாப்பிள்ளையாக தன்னை எண்ணிக் கொண்டிருக்கும் மிருகத்தின் மாமன் மச்சான் எல்லாம் அன்னியப் பெண்ணை அப்படி பார்க்க இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

இதனாலேயே இஸ்லாம் ஒரு பெண்ணை திருமணம் செய்வதென்றால் நேரில் சென்று பார்த்துக்கொள் என்று கட்டளையிடுகிறது என்பதை புரிந்து செயற்படுவோம்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு (நோக்கங்களு) க்காக ஒரு பெண் மணமுடிக்கப்ப டுகிறாள்:
1. அவளது செல்வத்திற்காக.
2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக.
ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து)
கொண்டு வெற்றி அடைந்துகொள்!(இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் 2905)

இளைகர்களே!! வாலிபர்களே ! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்..

No comments:

Post a Comment