Monday 30 August 2010

சர்வதேச ஓட்டுநர் உரிமம் (International Driving Licence) பெறுவது எப்ப‍டி?


டிரைவிங் லைசன்ஸ் தொடர்பான பல்வேறு விஷயங்களை வாசகர்களுக்கு விளக்கிய சென்னை-மேற்கு வட்டார ப் போக்குவரத்து அதிகாரி இன்னும் பல உபயோகமா ன தகவல்களையும் கூறி னார். அவற்றின் தொகுப்பு …
இங்கே வழங்கப்பட்ட ஓட் டுநர் உரிமத்தை வைத்துக் கொண்டு, ஒருவர் அமெரிக்கா சென்றா ல் அங்கே அவர் வாகனம் ஓட்ட முடியுமா?
இந்தியாவிலிருந்து, அமெரிக்காவுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ செல்பவர்கள், அங்கே சென்றவுடனே வாகனம் ஓட் ட வேண்டிய அவசியம் ஏற் படலாம். அந்த நாட்டில் டிரை விங் லைசென் ஸுக்கு விண் ணப்பித்து, அது கிடைக்கும் வரை காத்திருக்க முடி யாத சூழ்நிலையில், இங்கே இருந் து செல்லும்போதே இன்டர் நேஷனல் டிரைவிங் லைசெ ன்ஸ் பர்மிட் வாங்கிக்கொண்டு செல்லலாம். இந்தியாவுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்த த்தின்படி, அந்த டிரை விங் பர்மிட், அந்த நாட்டில் ஓராண்டு காலத் துக்குச் செல்லுபடி யாகும்.
சர்வதேச வாகனம் ஓட்டுநர் உரிமையை வாங்குவது எப்படி?
ஒருவர் நிரந்தர டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் மட்டுமே,இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் லைசென்ஸுக்கு விண் ணப்பிக்க முடியும். அதற்கு ரிய 4ஏ விண்ணப்பத்தைப் பூர் த்தி செய்து, அதனுடன் டிரை விங் லைசென்ஸ், பாஸ்போ ர்ட், விண்ணப்பதாரர் எந்த நா ட்டுக்குச் செல்கிறாரோ அதற் குரிய விசா, பயண டிக்கெட் பிரதி, மருத்துவச் சான்றிதழ், மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட் டோக்கள் ஆகியவற்றை இணை த்து ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டு ம். விண்ணப்பித்த அன்றே, இன்டர்நேஷனல் லைசென்ஸ் வழங்கப் பட்டுவிடும்.
இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவத ற்கான லைசென்ஸ் வைத்திரு ந்து, கார் ஓட்டக் கற்றுக் கொண் டால், அவருக்கு இரண்டு வகை யான வாகனங்களையும் ஓட்ட தனி லைசென்ஸ் வழங்கப்படுமா ? இரண்டுக்குமாக சேர்த்து ஒரே லைசென்ஸ் வழங்கப்படுமா?
இரண்டு சக்கர வாகனம் ஓட்ட லைசென்ஸ் வைத்திருப்பவர். கார் ஓட்டுவதற்கு முதலில் பழகு நர் உரிமத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே இரண்டு சக்கர வாகனத்துக்குண்டான லைசென்ஸ் இருப்பதால் சாலை விதிமுறைகள் குறித்த தேர்வு எழுதுவதில் விலக்கு அளிக்கப் படும். முப்பது நாட்களுக்கு கார் ஓட்டப் பழகியவுடன், விண்ண ப்பம் 8 ஐ பூர்த்தி செய்து விண் ணப்பிக்க வே ண்டும். வாகன ஆய்வாளர் முன்பாக நீங்கள் கா ரை ஓட்டிக் காட்ட, அவர் திரு ப்தி அடைந்தால், இரண்டு சக் கரம், நான்கு சக்கரம் என இர ண்டு வகை வாகனங்களை யும் ஓட்டுவதற்கு புதிதாக ஒரே லைசென்ஸ் வழங்கப்பட்டுவிடும்.
ஒருவருக்கு வழங்கப்பட்ட லைசென்ஸ் அதில் குறிப்பிடப்பட்டுள் ள தேதியில் காலாவதியாகிறபோது புதுப்பித்துக் கொள்ள என்னவழிமுறை பின்பற்ற வேண் டும்?
பொதுவாக, போக்குவரத்து அல்லாத வாகனங்களை ஓட் டுவதற்கு உரிமம் பெற விண் ணப்பிப்பவர்களுக்கு ஐம்பது வயது வரை செல்லத்தக்க ஓட்டுநர் உரிமங்கள் வழங்க ப்படும். அதன் பிறகு, அத னை நீட்டிக்க விரும்புபவர்கள், அதற்குரிய படிவம் 9 ஐ பூர்த்தி செய் து, உரிய கட்டணம் செலுத்தி, மருத்துவச் சான்றிதழுடன் விண்ண ப்பித்தால், அது பரிசீலிக்கப்பட்டு ஐந்தாண்டு காலத்துக்கு ஓட்டுநர் உரிமம் அனுமதிக்கப்படும். போக்குவரத்து வாகனங்கள் என்றால்மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.
இப்போது இரு சக்கர வாக னமோ (பைக்) காரோ வாங்கு ம்போது 15 ஆண்டுகளுக்கு செ லுத்த வேண்டிய சாலை வரி யை ஒரே தடவை யில் ‘ஆயுள் கால வரி’ என்ற பெயரில் வசூ லித்து விடுகிறார்களே? இப்படி ஒரே தவணையில் செலுத்த வேண்டும் என்பது கட்டாயமா?
1998ஆம் ஆண்டிலிருந்து போக்குவரத்து அல்லாத பிரிவில் வரும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஆயுட்கால வரி யாக வசூலிப்பது நடைமு றையில் உள்ளது. வாகன உரிமையாளர் களுக்கும், அர சாங்கத்துக்கும் இது செளக ரியம்தானே? போக்குவர த்து வாகனங்களுக்கு காலாண்டு, அரையாண்டு, ஒரு ஆண்டு மற் றும் ஐந்தாண்டுகளுக்கு வரிப்படி சாலை வரி செலு த்த முடியும். (இன்னொரு வி ஷயம், வாகனம் வாங்குகிறபோது சாலை வரி என்ற பொதுவான பெயரில் செலுத்தும் தொகையில், வாகனங்க ளுக்காக செலுத்தப் படும் சாலை வரியைத் தவி ர, வாகன பதிவுக் கட்டணம், சாலை பாதுகாப்பு வரி, சே வைக் கட்டணம் என்று இன் னும் சில செலவுகள் அடக் கம்).
ஒருவர் கார் வாங்கும்போது ஆயுள் வரி செலுத்துகிறார். சில ஆண்டுகள் கழித்து, அவ ர் ஆந்திராவுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகிவிடுகிறார். தனது காரை ஆந் திராவுக்குக் கொண்டு செல்லும்போது, அங்கே மறு படியும் சாலை வரி கட்ட வேண்டுமா?
ஆமாம். சாலை வரி என்பது அந்தந்த மாநிலங்களுக்கு செலுத்தப்படும் வரி. எனவே, நீங்கள் உங்கள் வாகனத்தை ஒரு மாநிலத்திலிருந்து இன் னொரு மாநிலத்துக்கு எடுத் துக் கொண்டு செல்லும்போ து, அங்கே அதை மறுபடியும் ரெஜிஸ்டிரேஷன் செய்யும் பட்சத்தில், அப்படிச் செய்துவிட்டு, அத ற்குரிய ஆதாரங்களுடன் எங்களுக்கு விண்ணப்பித்து, மீதி வருட ங்களுக்குரிய வாகன வரியை நீங்கள் திரும்பிப் பெற வழி உண்டு.உதாரணமாக வாகனம் வாங் கிய ஐந்தாவது ஆண்டில் நீங்கள் தமிழ் நாட்டிலிருந்து வேறு மாநிலத்து க்கு வாகனத்தை எடுத்துக் கொண் டு சென்று மீண்டும் பதிவுசெய்தா ல், மீதி பத்து ஆண்டுகளுக்குரிய வாகன வரியை நீங்கள் ரீஃ பண்டு வாங்கிக் கொள்ள முடி யும்.
வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பா ட்டுச் சான்றிதழ் ஏன் கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது?
இன்று காற்று மண்டலம் எந்த அளவுக்கு மாசுபட்டுப் போயிருக்கி றது என்பதையும், இதில் வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகைக்கு எந்த அளவுக்கு பங்கு இருக் கிறது என்பதையும், நான் சொ ல்லித் தெரிந்துகொள்ள வேண் டியதில்லை. இந்த நிலைமை இன்னமும் மோசமாகாமல் தடுத்து நிறுத்த வேண்டிய கட மையும், பொறுப்பும் நம் அனைவருக்குமே உண்டு. அத னால்தான், அரசாங் கம் வாக னங்களி லிருந்து வெளிப்படும் புகை இன்ன அளவுக்கு அதிக மாக இருக்கக்கூடாது என்று கட்டுப்பாடு வைத்துள்ளது.
அதன்படி, வாகன உரிமையாள ர்கள் அனைவரும் தங்களுடை ய வாகனங்களை மாசுக் கட் டுப்பாட்டு பரிசோதனைக்குட்ப டுத்தி, சான்றிதழ் பெற்று அதை யும் வாகனம் ஓட்டுகிறபோது கையில் வைத்திருக்க வேண் டும். இந்தப் பரிசோதனையை, அரசாங்கத் தால் அங்கீகரிக்கப் பட்ட மாசுக் கட்டுப்பாட்டு பரி சேதனை மையங்களில் மட்டு மே செய்ய முடியும். இதற்கென அரசாங்கம் நிர்ணயித் திருக்கும் கட்டணம் செலுத்தி, பரிசோதனை செய்து, சான்றிதழ் பெற வேண் டியது சட்டப்படி கட்டாயமாகும். இந்தச் சான்றிதழ் களுக்கான ஆயுட் காலம் ஆறு மாதங்கள். மாசுக் கட்டு ப்பாடு சான்றி தழுடன், கூடவே ஒரு ஸ்டிக்கர் டோக்கனும் கொடுக்கப் படும். அந்த ஸ்டிக்கரை வாகனத்தி ல் ஒட்டி வைக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மா சுக்கட்டுப்பாட்டு பரிசோதனை செ ய்து, சான்றி தழ் பெற்றுக்கொள்ள வேண்டும். வாகனப் பரிசோதனை யின்போது, அதிகாரியிடம் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழைக் காட்ட வில்லையென்றால், வாகன த்தின் ரகத்துக்கு ஏற்ப அபராதம் வசூலி க்கப்படும்.

பொது மக்களின் வசதிக்காக ஓட்டுநர் பழகுனர் உரிமத்தை LLR (எல்எல்ஆர்)ஆன்லைனில் விண்ணப்பிக்கும் திட்டத்தை போக்குவரத்துறை அறிமுகம் செய்துள்ளது. 


இதற்காக transport.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.


அதில் சேவை என்ற பகுதியில் உள்ள முன் பதிவு என்ற பகுதியில் விண்ணப்பதாரர் பெயர், தந்தை பெயர், முகவரி, பிறந்த தேதி, அங்க அடையாளம், ரத்த வகை ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.


பின்பு அதில் உள்ள எண்ணை குறித்துக் கொண்டு சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் சென்று கட்டணத்தைச் செலுத்தி, கணினி மூலம் நடத்தப்படும் எல்.எல்.ஆர். தேர்வில் வெற்றி பெற்றால் உடனடியாக ஓட்டுநர் பழகுனர் உரிமம் பெறலாம். 


இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் மனுதாரர் தனக்கு விரும்பிய நாளையும் மற்றும் நேரத்தினையும் அவரே தேர்வு செய்து கொள்ளலாம்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment