Thursday 25 February 2016

தமிழ் மொழியை உலக அரங்கில் முன்னெடுத்து செல்வதில் முன்னோடியாகத் திகழ்ந்துள்ள சிங்கப்பூர் !!

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்னும் கூற்றிக்கு இணங்க சிங்கப்பூர் நாடு அளவில் சிறியதாக இருந்தாலும் தமிழ் மொழியை உலக அரங்கில் முன்னெடுத்து செல்வதில் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளது.சிங்கப்பூரில் தமிழர் எனப்படுபவர், தமிழைப் பேசும் ஒரு மக்கள் கூட்டத்திலிருந்து தோன்றியவர் என்பதைப் பலரும் ஏற்றுவந்துள்ளனர். தமிழர் எனப்படுபவர் தமிழ்மொழிப் புழக்கத்தால் மட்டுமே அறியப்படக் கூடியவர் என்று மற்றுமொரு விளக்கமும் உண்டு.

சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழ் விளங்குகிறது. இந்தியாவில் கூட தேசிய அளவில் தமிழுக்கு அந்த தகுதி கிடைக்கவில்லை. சிங்கப்பூரில் பல மொழி கல்வி கற்பிக்கப்படுகிறது. தமிழுக்கு முதல் மொழித் தகுதி அளிக்கப்பட்டு இருந்தது.

*தமிழில் முதன்முதலாக (Singapore’s Pioneering Efforts In Tamil Language)

-தமிழ் நாட்டு அரசாங்கம் அறிவித்த 13 தமிழ்ச் சீர்திருத்த எழுத்துகளை அமலாக்கம் செய்த நாடு சிங்கப்பூர்.(1983)


-தமிழ்மொழியில் தொடக்கப் பள்ளிகளுக்காக மின்னியல் பாடங்களை(SMART) முதன்முதலில் உருவாக்கிய நாடு சிங்கப்பூர்.(1991)

-உலகத் தமிழாசிரியர் மாநாட்டை முதன்முதலில் தோற்றுவித்த நாடு சிங்கப்பூர்.(1992)

-அனைத்துலகத் தமிழ் இணைய மாநாட்டை முதன்முதலில் தொடக்கி வைத்த நாடு சிங்கப்பூர். (1997)

-உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை முதன்முதலில் கூடிய நாடு சிங்கப்பூர்.(2011)

-உலகப் பல்கலைக்கழகத் தமிழ் இளையர் மாநாட்டை முதன்முதலில் தொடக்கி வைத்த நாடு சிங்கப்பூர்.(2012)
நடைபெற்றது.(1971)

-ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களால் முதன் முதலில் சிங்கப்பூர்ப் பள்ளிகளுக்காக தமிழ்ப்பாடநூல்களும், பயிற்சிநூல்களும் உருவாக்கப்பட்டன.(1973)

-சிங்கப்பூரில் பல்கலைக்கழக அளவில் முதன்முதலாகத் தமிழ்க் கருத்தரங்கம் சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையால் நடத்தப்பட்டது.(1977)

-கல்வி அமைச்சு, பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகம் என்ற பிரிவு ஒன்றைத் தோற்றுவித்தது. அதில் முதன்முதலாகத் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கான தமிழ்ப்பாடநூல், பயிற்சிநூல், பயிற்று கருவிகள் உள்ளூர் ஆசிரியர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன.(1983)

-தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான தமிழ்க் கருத்தரங்கு யீசூன் தொடக்கக் கல்லூரியில் முதன்முதலாக நடத்தப்பட்டது.(1986)

-சிங்கப்பூரில் முதன்முதலாக ஆங்கிலப் பள்ளிகளில் தமிழ் கற்பித்தல் பற்றி ஆய்வரங்கு.


தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்

No comments:

Post a Comment