Saturday 29 February 2020

இஸ்லாமியர்கள் புனிதப் பயணம் செய்ய சவுதி அரேபியா அரசு தடை !!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மெக்காவுக்குச் செல்ல விரும்பும் பயணிகளுக்கான விசாக்களை சவுதி அரேபியா நிறுத்தியுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

சவுதி அரேபியா நாட்டில் உள்ள மெக்காவுக்கு உலகம் முழுவதும் இருந்து பல்லாயிரக் கணக்கில் இஸ்லாமியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம்.

இந்த நிலையில், சீனாவில் வுஹான் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பால் அந்நாட்டில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரக் கணக்கானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆபத்தான வைரஸ் சீனாவில் மட்டுமல்லாமல் பல நாடுகளில் பரவியுள்ளது.

சவூதி அரேபியாவில் உள்ளவர்களைஅச்சம்கொள்ளவைக்கும் கொரோனா?சவூதி அரேபியா உள்ளவர்கள் யாரும் பயப்பட வேண்டாம்.

சவூதி அரேபியாஅரசு கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது .


நோய் தொற்று உள்ளவர்களை தனிமைபடுத்தி 24 மணிநேர தீவிர கண்கானிப்பில் வைத்து சிகிச்சையளித்து கொண்டுள்ளது.

நோய் தொற்று பரவாமலிருக்க அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது .

வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடத்திலும் வேலை பார்க்கும் இடத்திலும் காலை மாலை இரண்டு வேலையும் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இரயில் நிலையங்கள், விமான நிலையம் என மக்கள் கூடுமிடங்களில் தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது.இதனால், சவுதி அரேபியா மெக்காவுக்குச் செல்வதற்காக வரும் பயணிகளுக்கு விசா விசா வழங்கப்படாது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சவுதி அரேபியா அரசு மெக்கா, மதீனா புனித பயணங்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியதுதொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், சவுதி அரேபியா அரசு “சிறிது காலமாகவே கொரோனா வைரஸ் குறித்த விஷயங்களை கவனித்து வருவதாகவும், கொரோனாவின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் பிற நாடுகளுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில், ஏற்றுக்கொள்ளத்தக்க சர்வதேச நடவடிக்கைகளை தாங்களும் நடிமுறைப்படுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதில், மெக்காவுக்கு புனித பயணம் செல்லும் பயணிகளுக்கு தற்காலிக தடை விதிப்பதன் மூலம் செயல்படுத்த இருப்பதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. அதனால், மெக்கா மதீனாவுக்கு புனித பயணம் செய்ய சவுதி அரேபியாவிற்குள் நுழைவதை சவுதி அரேபியா அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

இதனுடன், கொரோனா வைரஸ் தொற்று அபாய நிலையில் உள்ள நாடுகளிலிருந்து சுற்றுப் பயணிகள் சவுதி அரேபியா வருவதற்கும் அந்நாட்டு அரசு தடை விதிக்கப்படுவதாகக் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவின் வுஹான் பகுதியில் நோய் தொற்று குறைந்து வரும் நிலையில், ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸின் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது.

கொரோனா பற்றிய எனக்கு தெரிந்த தகவல்கள்..

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களையே கொரோனா வைரசு பாதிக்கும்.
குழந்தைகள் வயது மூத்தவர்களை அதிகம் பாதிக்கும்.
யாரிடமும் கை குலுக்கி பேச வேண்டாம்.
கூட்டமான இடங்களில் கூட வேண்டாம்.
திரையறங்குகள்,உணவு விடுதிகள்,
காய்கறி கடைகள்,பல்பொருள் அங்காடிகள்,மது அருந்துமிடங்கள் போன்ற கூட்டமான இடங்களை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.
உணவுகளை முடிந்தளவு சமைத்து உண்ணுங்கள்.
உணவில் இஞ்சி பூண்டு மஞ்சள் போன்றவற்றை அதிகம் சேர்த்துகொள்ளுங்கள்.
உணவு உண்ணும் முன்பு கைகளை நன்கு கழுவிய பின்பு உணவு உண்ணுங்கள்.
சிகரெட் பிடிப்பவர்களை கொரோனா வைரசு அதிகம் பாதிக்கிறது.
நுரையீரல் பாதிப்புள்ளவர்களை அதிகம் பாதிக்கின்றது.
கொரோனா வைரசு ஆனது குளிர்ந்த இடங்களில் அதிகம் பரவவல்லது.
பேஸ் மாஸ்க் எந்நேரமும் அணிந்திருங்கள்.
கையுறைகளையும் அணிந்து கொள்ளுங்கள்.
பொது கழிவறைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment