Thursday 25 June 2020

இந்தியாவின் அனைத்து இயற்கை வளங்களுக்கும் EIA 2020 எனும் புது சட்டத்தால் ஆபத்து !!

மத்திய அரசு கொண்டு வர இருக்கும் EIA 2020 எனும் புது சட்டத்தால், தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை தகர்க்கப்பட்டு, கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படும். மக்கள் போராடவோ, எதிர்க்கவோ கூடாது என்பது இச்சட்டத்தின் அம்சம். இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து இயற்கை வளங்களும் ஆபத்தானது.

Earth-nature-life-protect-preserve-plants-trees-animals-nations-shut


இது சட்டமாவதற்குள்ளே மக்கள் அனைவரும் தங்கள் எதிர்ப்பை காண்பிக்க இ-மெயிலாக அனுப்பி, திரும்பப் பெற வைக்கவும் மக்களின் எதிர்ப்பை பதிவு செய்யவும் வரும் ஆகஸ்ட் 13 வரை உச்ச நீதிமன்றம் கால அவகாசம் நமக்கு கொடுத்திருக்கிறது.


இந்த வரைவு அறிக்கையில், 'பல முக்கிய திட்டங்களை மக்கள் கருத்து கேட்பு மற்றும் பொது ஆலோசனைகள் இல்லாமலேயே நிறைவேற்றலாம்' என்கிற ஒரு சரத்தே நம் உள்ளத்தில் மிகப் பெரிய அவநம்பிக்கையையும், அச்சத்தையும் உருவாக்குகிறது. நம்முடைய சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களையும், அதனால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் மக்களாகிய நாம் பேசவே முடியாது என்பது எந்த வகையில் நியாயமான ஒரு சட்டமாக இருக்கும்?


மேலும் தொழிற்சாலைகளின் வகைப்பாடு மாற்றம், பழைய விதி மீறல்களுக்கு பிந்தைய உண்மை, மக்கள் கருத்து, பதிவுக்கான நாட்களை குறைப்பது போன்ற சரத்துகளும் நம்மை அச்சுறுத்துகின்றன. குமரி முதல் காஷ்மீர் வரையிலுமான சட்டம் என்ற போதும், இந்த வரைவறிக்கை வெறும் இந்தியிலும், ஆங்கிலத்திலேயும் மட்டும் வெளியிடப்பட்டு இருக்கிறது. தமது தாய் மொழி மட்டுமே அறிந்த கோடிக்கணக்கான மக்கள் இந்த கொள்கைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?


Covid- 19 எனும் அரக்கப் பிடியில் நாம் அனைவரும் சிக்கி, மீள போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், நம்முடைய வாழ்வாதாரத்தையும், முக்கியமாக நமது வரும் சந்ததியினரின் வாழ்வையும் நிர்ணயிக்கக்கூடிய சக்தியுள்ள இந்த சட்டத்தை எதற்காக இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும்?


அறிஞர்கள், ஆய்வாளர்கள் கருத்துகளுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேவையான மாற்றங்களை புதிய வரைவில் கொண்டு வர வேண்டுமென மக்களில் ஒருவனாக கேட்டுக் கொள்கிறேன்.

அதற்குள், கீழே உள்ள லிங்கை அழுத்தி, இதன் மூலம் ஒவ்வொருவரும் மின்னஞ்சல் அனுப்புங்கள்.

நண்பர்களுடன் இந்த செய்தியை பகிருங்கள்.


கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி gmail மூலம் திறக்கவும்..

https://www.tinyurl.com/drafteiawithdrawal/

ஒரு காலத்தில் சோமாலியா என்பது வளம் மிகுந்த இயற்கை எழில் பொருந்திய நாடு என்பதை மறக்க வேண்டாம் .. ஆனால் இன்று அதன் நிலை????

தங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சேர்த்து வைக்கும் சொத்து பணம் எந்த அளவில் நின்றுவிடும் என்பதை இந்த கொரானா காலம் உங்களுக்கு நிச்சயம் நினைவு படுத்திருக்கும்.

அலட்சிய படுத்தாதீர் ...!!!






No comments:

Post a Comment