Wednesday, 5 September 2007

Method of Statement For Duct Installation, Insulation& Leak Testing


TABLE OF CONTENTS


1.        Scope of Work………………………………………………………………………………Page No
2.        Reference…………………………………………………………………………….……..Page No
3.        Responsibilities.................................................................................................................Page No
4.       Control Measures………..………………………………………………..…………....Page No      5.       Sequence of Activities………………………………………………………………..……..Page No
6.       Duct  Leak Test…………………………………………………………………………… Page No
7.       Attachment……………………………………………………………………………………Page No

            * JSA (Job Safety Analysis)
            * SATIP
            * SAIC
           
             



1.               Scope of Work


1.1  This method statement explains the procedure of duct works, including the duct installation, insulation, fixing of ducts accessories and duct leakage testing (Light Test).

2.            Reference


2.1  Approved Drawings

2.2  Manufacturer’s Catalogues, Vendor Drawing
2.3   General Specifications for HVAC System
2.4  Material Submission for HVAC Equipment / Materials
                                     

3.            Responsibilities


3.1  Mechanical / HVAC Engineer
    
·         He shall be overall responsible for the complete activity including, but not  limited to:

3.1.1 Assigning workman crew
3.1.2 Sequence of activities to be carried out for the work as per this Method
         Statement.
3.1.3 Stage inspection & surveillance
3.1.4 Notification to client engineer for inspection and daily commissioning activities.
3.1.5 Provide day to day guidance and delegate works as necessary.
3.1.6 Ensure that the equipment and tools required for carrying out the test are
         available, maintained and  used in safe manner.
3.1.7 Produce all necessary records for the confirmation of testing works completed
         And pass to QC inspector as required.

3.2 Mechanical/HVAC Supervisor

·         He shall be overall responsible for the activity including, but not limited to:

3.2.1      Assigning worksman crew.
3.2.2      Sequence of activities to be carried out for the work.
3.2.3      Ensure the quality levels are maintained.
3.2.4      Ensure that the equipment and tools required for carrying out the test are
available, maintained and used in safe manner.

                        3.3  QA/QC Inspector
                             
                         3.3.1 Maintain records of quality control ckeck sheets / report formats for the site
                                  Tests and inspection.
                         3.3.2 Carry out surveillance so as to ensure that the personel are working i accor-
                                   Dance with the approved standards.

                          3.3.3 Assurances of approved methods are being used for testing and material
                           receipt inspection.
                           3.3.4 Verification of material approval and vendor certification.

4.               Control Measures

4.1  Quality Control

4.1.1      Ensure availability of latest released for construction drawings and specifications.
4.1.2      Ensure the tools/equipment used for testing & commissioning purpose is calibrated and certificates available.

4.2  Safety

4.2.1      All equipment and accessories have been certified for their capacity
And integrity.
4.2.2      Safety and risk assessment shall be performed for every job or task,
which has potential for harm.
                                     4.2.3 All personnel are issued with Personal Protective Equipment with FRC.


5.            Sequence of Activities


5.1 Handling and Storage of Ducts
                 
                    5.1.1 Unload the duct by hand/loader and store the duct inside the
                             Respective buildings or workshop area.

5.2 Primary Step

                   5.2.1 Check approval of working drawings.
                   5.2.2 Check site clearance for work.
                   5.2.3 Check wall/slab opening as per approved drawings.
                   5.2.4 Notify to client for inspection of receiving factory made duct.
                   5.2.5 Assembled the fabricated ducts at site with consultant/quality
                            Official for correctness of construction.

5.3 Installation & Insulation of Duct

                   5.3.1 For Internal Concealed Duct, Mark the routing of the ducts and install
                            GI threaded rod and supports.
                   5.3.2 Install the factory made Duct as per IFC drawing.
                   5.3.3 Seal the duct joints with approved sealant.
                   5.3.4 Apply sealant outside of the duct between the gap and corner and also
                            Apply inside of the duct (wherever it’s possible).
                   5.3.5 Stick self-adhesive aluminum alloy sticker pins (1 pin/0.16 sq. m.) to
                            The bare duct firmly.
                   5.3.6 Paste the bonding adhesive glue on the bare duct.
                   5.3.7 All joints to be insulate after completion of duct leak test (lightning test)
                   5.3.8 Approved fiber glass insulation shall be fixed firmly on the duct.
                   5.3.9 Insulation shall be overlapped by at least 100mm and shall be
                           Fastened with 65mm wide aluminum foil tape and tape shall be
                           Overlapped by 15mm.
                  5.3.10 tight insulation with aluminum band.
                  5.3.11 Duct shall be clean and all open ends shall be covered in a suitable
                             Manner to prevent from dust and debris.
                  5.3.12 for internal exposed duct, same procedure shall be followed, and
                             Approved seal coating with glass cloth covering shall be applied after
                             Insulation.
                  5.3.13 for external exposed duct, same procedure shall be followed, and
                             Approved aluminum cladding (jacketing) shall be applied after
                             Insulation.

5.4 Installation of Ducting Accessories, Access Doors, Dampers, Air Inlet & Outlet
      Devices.

                  5.4.1 Check the dimension and location of the wall/slab/ceiling opening as
                           Per the vendor drawings wherever necessary.
                  5.4.2 Install access doors as per the approved drawing. (Beside each MVD
                           And FD). The VCD, fire dampers, access doors, door grilles, test holes
                           And fresh air intakes shall be installed only after the inspection of
                           Material as per SAES.
                  5.4.3 Install the grilles & diffusers properly as per IFC drawings.
                  5.4.4 Install flexible duct with necessary support as per the IFC drawings.
                  5.4.5 Connect the both ends of the flexible duct with stainless steel clamp.
5.4.6      Fix. The louver, grilles and diffusers as per drawing.

6.         Inspection
                                   
                                6.1 Duct Leak Test
                                    
                                    6.1.1 Light test shall be performed to determine that all joints are leak proof
                                            And it will be performed by passing a lamp having a power rating of not
                                            Less than 500 watts. (Selection of 500w in normal HVAC installation
                                           Practice).
                                   
                                     6.1.2 Light Power rating not less than 500 watts, selection of 500 watts
                                                Lightning shall be cover only 10 sq. m. ducting area. Additional
                                                 L\lights will be provided if the duct area is more than 10 sq. m.

                                    6.1.3 The insulation of ducts can be carried out before light test,
                                               But the joints should be free in order to be tested before insulation.

                                     6.1.4 The test can be performed part by part according to the site condition.

                                     6.1.5  Insert the light inside the duct inspected, move the light as near as
                                               Possible in each transverse joint, for the case of smaller duct, flood by
                                          Light each straight duct of 6 meters minimum length, then visual
                                          Inspection shall be performed from outside the perimeter joint to
                                          Determine the leak.

                                    6.1.6 On witness inspection, further activity shall be proceeded to conduct
                                              Outright corrective action to seal the identified leaks.

                                    6.1.7 The inspection shall be recorded and signed by the client inspector for
                                          Record reference.

                        6.2 Final Inspection.

                                          6.2.1 Ensured that all ventilation duct work shall be carried out in
                                                   Accordance with job specification and standards.
                                          6.2.2 Red line mark-ups and as built drawing to be prepared
                                                   Incorporating the modifications if any for the installed ducting
                                                   Layout.
                                           6.2.3 Final inspection to be made for installation of all ventilation ducts
                                                    Work.

  
   7.    Attachment

·         JSA (Job Safety Analysis)
·         SATIP-K-001-03 (HVAC Metal Duct System)
·         SAIC-K-4008 (Duct Hangers and Supports Receiving Inspection, Metal Ducts Receiving Inspection, Duct Insulation Receiving Inspection)
·         SAIC-K-4009 (Air Terminal Devices & Flexible Connector Receiving Inspection)
·         SAIC-K-4010 (Fire Damper Receiving Inspection)
·         SAIC-K-4011 ( Storage, Handling and Preservation)
·         SAIC-K-4012 (Duct Hangers and Supports including fasteners, etc.)
·         SAIC-K-4013 (Metal Duct Inspection)
·         SAIC-K-4014 (Grease Duct (Serving Type I hood or as applicable) Inspection)
·         SAIC-K-4015 ( Duct Insulation Inspection)
·         SAIC-K-4016 (Duct Accessories Inspection)
·         SAIC-K-4017 (Air Terminal Devices & Flexible Connector Inspection)
·         SAIC-K-4018 (Fire Damper Inspection)
·         SATR-K-4001 (Fire Damper Functional Test)
                           



Wednesday, 29 August 2007

மத்தி மீன் இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும் என ஆய்வில் தவகல் ..

னிதனின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம். இவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள். இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது. 
100 கிராம் மத்தி மீனில் புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர்ச்சத்து 66.70 கிராமும் உள்ளது. மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மேலும் தோல்நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும்.
மத்தி மீனில் வைட்டமின் டி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது.
மத்தி மீனில் வைட்டமின் பி 12 உள்ளது. இது உடலில் ஹோமோசைஸ்டீனின் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது. மத்தி மீனில் அயோடின் என்ற தாதுச்சத்து உள்ளதால் முன் கழுத்து கழலை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மத்தி மீனில் செல்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை உட்கொள்பவர்களின் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Sunday, 26 August 2007

கடமையல்லாத - சுன்னத்தான நோன்புகள்


ஷவ்வால் மாத நோன்பு.
யார் ரமளான் மாத நோன்பிற்குப் பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை வைக்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூ அய்யூப் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

ஹஜ் மாதத்தில் அரஃபா நோன்பு (ஹாஜிகள் அல்லாதவருக்கு)
அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் ''அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கும் என நான் ஆதரவு வைக்கிறேன்" என்று கூறினார்கள். அறிப்பாளர் அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை.
அரஃபா தினத்தன்று, அரஃபா மைதானத்தில் (கூடியிருப்போர்) நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள். அறிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அபூதாவூத், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா.

முஹர்ரம் மாத நோன்பு
நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். "இந்நாளின் சிறப்பென்ன?" என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள், "இது மகத்தான நாளாகும். இந்நாளில்தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம்" என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், "நாங்கள்தாம் மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள்" என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் (முஸ்லிம்களை) நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்
நபி(ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக ஆஷுரா நாளின் முந்திய(ஒன்பதாம்) நாளும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும், "நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்" என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில் மரணமடைந்தார்கள். அறிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் (இது ஹிஜிரீ 10ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்ததாகும்).

மாதத்தில் மூன்று நோன்புகள்.

"மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும், ரமளானில் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோன்பு நோற்பதாக அமையும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்.

''நீர் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்றால் அதை பதிமூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நாட்களில் நோற்கவும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூதர் (ரலி) நூல்கள்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்.
திங்கள், வியாழன் கிழமைகளில் நோன்பு
நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தனர்.அறிப்பாளர் அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா.

"ஒவ்வொரு வியாழனும், திங்களும் அமல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும் போது என் அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூஹீரைரா (ரலி) நூல்கள்: அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா.

நபி (ஸல்) அவர்கள் மாதத்தில் மூன்று நோன்புகளை மாதத்தின் ஆரம்பவார திங்கட்கிழமை, அடுத்து வரக்கூடிய வாரம் வியாழக்கிழமை, அதற்கு அடுத்து வரக்கூடிய வியாழக்கிழமை என்று நோற்பார்கள். அறிப்பாளர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: நஸயீ.

வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கலாமா?
நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம், "வெள்ளிக்கிழமை நோன்பை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்களா?" என்று வினவினேன் அதற்கு ''ஆம்'' என்றார்கள். அறிவிப்பாளர், முஹம்மது பின் அப்பாத் (ரஹ்) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.
''உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமைக்கு முந்திய பிந்திய நாள் நோன்பு நோற்றாலன்றிவெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிப்பாளர் அபூஹுரைரா (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா.

சனிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கக்கூடாது.
"உங்கள் மீது கடமையாக்கப்பட்டு இருந்தாலே தவிர சனிக்கிழமை நோன்பு நோற்க வேண்டாம்,(சனிக்கிழமைகளில் உண்பதற்கு) திராட்சைத் தொலி அல்லது மரக்குச்சியைத் தவிர வேறு ஏதும் கிடைக்காவிட்டால் அதையாவது மென்றுவிடட்டும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிப்பாளர் ளும்மாயி பின்த் புஸ்ர்(ரலி) திர்மிதி, அபூதாவூத்

இரு பெருநாள்களில் நோன்பு இல்லை.
நபி(ஸல்) அவர்கள் இரண்டு நாள்கள் நோன்பு நோற்பதற்குத் தடை விதித்துள்ளார்கள் அவை ஃபித்ரு பெருநாள் மற்றும் குர்பானி பெருநாள். அறிப்பாளர் அபூஸயீதில் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.
"அய்யாமுத் தஷ்ரீக் (ஹஜ் பெருநாள் அடுத்த மூன்று) நாட்களும் உண்பதற்கும், பருகுவற்கும் உரிய நாட்களாகும். அந்நாட்களில் நோன்பு ஏதும் இல்லை" என்று பிரகடனம் செய்யுமாறு எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிப்பாளர் ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

காலமெல்லாம் தொடர் நோன்பு கூடாது
''நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ''நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?" என்று நபித்தோழர்கள் கேட்டனர் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''நான்(எல்லா விஷயத்திலும்) உங்களைப் போன்றவனல்லன். நிச்சயமாக நான் உண்ணவும், பருகவும் வழங்கப்படுகிறேன் என்றோ உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவு பொழுதை கழிக்கிறேன்"என்றோ கூறினார்கள். அறிப்பாளர் அனஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

"மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பீராக!" என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியபோது, "இதைவிட எனக்கு அதிக சக்தியுள்ளது" என்றேன். முடிவில் நபி (ஸல்) அவர்கள், "ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டு விடுவீராக அதுதான் நோன்புகளில் சிறந்ததாகும், என் சகோதரர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்கவே இல்லை" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

(சத்தியமார்க்கம் இணையதளத்தில்இருந்து )

Saturday, 25 August 2007

இயற்கை முறையில் சுத்தமான குடிநீரை பெற வேண்டுமா?

சுவையான குடிநீரைப் பெற மூன்று மண் பானைகளை வாங்குங்கள். ஆனால், அவற்றை விசேடமாக வடிவமைக்கச் சொல்லிக் கேட்டு வாங்குங்கள்.
மண் பானையைச் செய்யும்போதே இரண்டு பானைகளில் தலைமுடி அளவுக்கு நுண்ணிய துளையை ஏற்படுத்தித் தரச் சொல்லுங்கள். பானையைத் தயாரித்த பின்பு அப்படித் துளையிட முடியாது. உடைந்துவிடும். செம்பு பானையில் 
மூன்றாவது பானையில் குழாய் இணைப்பு வைக்கச் சொல்லுங்கள். குழாய் இணைப்பு வைத்த பானையின் மேல் துளையிடப்பட்ட இரண்டு பானைகளையும் அடுக்கிவையுங்கள். நடுப் பானையில் தேங்காய் சிரட்டையை எரியவைத்துப் பொடித்தோ அல்லது கரித் துண்டுகளாகவோ சுமார் ஒன்றரை கப் அளவுக்கு நிரப்பிக்கொள்ளுங்கள்.
மேல் பானையில் சுமார் 20 கூழாங்கற்களை நிரப்புங்கள். இப்போது, மேல் பானையில் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரை மெதுவாக ஊற்றி நிரப்புங்கள். இரவில் தண்ணீர் ஊற்றினால், விடிந்த பின்பு அடிப்பானையில் குடிநீர் சேகரமாகிவிடும்.
ஃப்ளோரைடு உள்ளிட்ட நச்சுக் கனிமங்களை அகற்றி சுமார் 250 டி.டி.எசு (ஸ்ஸு)க்குக் கீழே இருக்கும் தெள்ள தெளிவாக (Crystal Clear) குடிநீர் இது.
குடிக்கும்போது ஏதாவது ஒரு சுவை (flevour) வேண்டும் என்பவர்கள், தேங்காய் சிரட்டைக்குப் பதில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப் பழத் தோல்களைக் காயவைத்து எரித்து அந்தக் கரித்தூளை நிரப்பலாம். கரித்தூளையும் கூழாங்கற்களையும் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம்.
தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஃப்ளோரைடு தன்மை அதிகம் இருக்கும் தண்ணீரைக்கூட இந்த முறையில் சுத்தமான குடிநீராக மாற்றிக் குடிக்கிறார்கள்.
ஆனால், கடல் நீர் ஊடுருவிய நிலத்தடி நீர் மற்றும் தொழிற்சாலை இரசாயனக் கழிவுகள் கலந்த நீரை இந்த முறையில் சுத்தம் செய்ய முடியாது..




தொகுப்பு : அ.தையுபா  அஜ்மல் 

Friday, 24 August 2007

இஸ்லாமியத் திருமணத்தில் மணப்பெண்ணுக்கு மணமகன் மஹர் !!

அஸ்ஸலாமு அலைக்கும்!!
பெண்களே இது எங்களுக்குத்தான்
சீதனம் என்று வரும் போது ஆண்களைத் திட்டுகின்றோம். முதுகெலும்பு இல்லாதவன்,உழைக்கத் தெரியாதவன்,ஹராம
ான வழியில் சொத்துச் சேர்ப்பவன்.....இப்படி எல்லாம் சொல்லி வசை பாடுகின்றோம்.கு
ர்ஆன் ,ஹதீஸ் எல்லாம் பேசி ஆண்களுக்கு உபதேசம் செய்கின்றோம்.ஆனால்,
எந்தப் பெண்ணாவது நான் சீதனம் கொடுத்து திருமணம் செய்யா மாட்டேன் என்று உறுதியாக இருக்கின்றாளா? தேடிப் பார்த்தால் ஆயிரத்தில் ஒருத்தி இருப்பாள்.பலர் சீதனத்துக்கு எதிராக கோசம் விட்டு விட்டு கடைசியில் இரகசியமாக அதற்குத் துணை போகின்றனர்.தந்தை,சகோதரர்கள் எப்படியாவது சொத்துக்களை சேர்த்து தரட்டும் என்று மௌனமாக இருந்து விடுகின்றனர்.இன்னும் சொல்லப் போனால் அரபிக் கல்லூரிகளில் ஷரீஆ துறையில் படித்த பெண்களும் இதற்கு எதிப்புத் தெரிவிப்பதில்லை.இந்தக் காலத்தில் சீதனம் கொடுக்காவிட்டால் நல்ல ஒரு வரன் கிடைக்காது என்ற சிந்தனை பரவலாக இருக்கின்றது.எங்கோ ஒரு நாட்டில் ஹிஜாபுக்காக ஒரு பெண் உயிரிழக்கிறாள்,இன்னோரிடத்தில் காபிர்களுக் கெதிராகப் போராடி இன்னொரு பெண் உயிரிழக்கிறாள்,அதானின் அழைப்புக்குப் பதில் கொடுத்து மணக்கோலம் களைந்து தொழுகைக்கு சென்ற பெண் சுஜூதில் மரணிக்கிறாள்,இதையெல்லாம் நாம் பெருமையாகப் பேசிக் கொண்டாடுகின்றோம


இந்த சீதன விடயத்தில் ஏன் ஒரு உறுதியை எடுக்க முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம்??????


பெரிய அந்தஸ்தில் இல்லாத ஒருவன்,ஹலாலாக சம்பாரித்து இரண்டு நேரமாவது உணவு போடத் தகுதியான ஒருவன் ,சீதனம் வாங்குபவனை விட சிறந்தவன் என ஏன் பெண்கள் ஏற்றுக் கொள்வதில்லை???


இந்த விடயத்தில் உறுதியாக இருந்து, எதுக்குமே பிரயோசனம் இல்லாதவன் என்று இருந்த ஆண்களை சீதனம் இல்லாமல் திருமணமுடித்த ஈமானிய உறுதி கொண்ட சில பெண்களின் இல்லற வாழ்வை அல்லாஹ் எப்படி சிறப்பாக்கி வைத்திகுகின்றான் என்பதையும் இப்போது காண்கின்றோம்.


எதிர்காலத்துக்குரிய ரிஸ்க் அளக்கப்பட்டு இருக்கின்றது.அது எப்படியும் எம்மை வந்து சேர்ந்து தான் ஆகும்.அதனை ஹலாலகவோ ஹராமாகவோ அமைத்துக் கொள்வது அவரவர் கைகளில் தான் உள்ளது.


எனவே ஆண்களை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருக்காமல் நாமும் குற்றவாளிகள் தான் என்பதை விளங்கி ,இந்த விடயத்தில் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் உறுதி எடுப்போம் .இறையுதவி என்றும் சமீபமாக இருக்கும் ..இன்ஷா அல்லாஹ்


இஸ்லாமியத் திருமணத்தில் மணப்பெண்ணுக்கு மணமகன் மஹர் கொடுத்துத்தான் திருமணம் முடிக்க வேண்டும். ஆனால், தான் கொடுப்பதற்குப் பதிலாக, தனக்காக எல்லாத் தியாகங்களையும் செய்ய முன் வந்து வாழ்க்கைத் துணைவியாக வரப்போகும் மனைவியிட மிருந்தே வரதட்சணையாக ஒரு பெரும் தொகையையோ, பொருளையோ வாங்குவது தன்மானமில்லா கேவலமான ஒரு விசயமாகும். இந்த அவல நிலையை இன்று நாம் நாட்டில் பரவலாகக் காணும்போது சமுதாயமே வெட்கித் தலைக்குனிய வேண்டியதிருக்கிறது.

நாளிதழ், வார, மாத இதழ்களிலும், வானொலி, தொலைக்காட்சிகளிலும் வரதட்சணையின் விளைவுகளைப் பற்றி அன்றாடம் செய்திகள் இடம் பெறாமலில்லை.வரதட்சணைக்கு எதிராக பலர் குரல் கொடுத்தாலும் வரதட்சணை ஒழிந்த பாடில்லை. இஸ்லாம் வரதட்சணையை வன்மையாகக் கண்டிக்கிறது. அதை வாங்குவோரும். கொடுப்போரும் கடும் தண்டனைக்கு ஆளாகின்றனர் என்பதை குர்ஆன் எச்சரிக்கை செய்கிறது.

வரதட்சணை வாங்குவதால் ஒரு குடும்பத்துக்கு மாபெரும் அநீதம் செய்கிறோம். அது மட்டுமல்லாமல் அவர்களை கடனிலும், வறுமையிலும் ஆழ்த்தி, அந்தக் குடும்பத்தையே அழிக்கிறோம் என்பதை வரதட்சனை வாங்கும் மணமகனும், மணமகனின் குடும்பத்தாரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அநீதம் செய்வதால் ஏற்படும் நிலைகுறித்து இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது. மேலும், அநியாயக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயாராக வைத்துள்ளோம். அல்குர்ஆன் (25:37) தனக்கும் பிற குடும்பத்தாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்களைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

நிச்சயமாக அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் இருப்பார்கள் என கூறுகிறது. அல்குர்ஆன் (42:45) பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டு இம்சைப்படுத்தும் மணமகன் வீட்டார் மறுமையில இழிநிலையை எய்துவர் என மேற்கூறிய மறைவசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. மறுமையில் மட்டுமல்ல, இம்மையிலும், பாதிக்கப்பட்டோரின் மன வேதனையாலும், பிரார்த்தனையாலும் பல்வேறு சோதனைகளை அடைவர்.

உன்னால்) அநீதம் செய்யப்பட்டவனின் (ஏக்கப்பெரு மூச்சால் எழும்) பிரார்த்தனையை பயந்துகொள். இறைவனுக்கும் அவனது பிரார்த்தனைக்குமிடையே திரையேதும் இல்லை என்பது நபிமொழி. மஹர் கொடுத்து மணம் முடியுங்கள் என்ற 4:4 ஆவது இறைக் கட்டளையை மீறிய பாவத்திற்கும் இவர்கள் ஆளாவர். மணமகன் வீட்டார் வரதட்சணையாக கேட்பது அறவே கூடாது ஆயினும் பெண் வீட்டார் மனமுவந்து வழங்கும் அன்பளிப்புகளைப் பெறுவதில் தவறில்லை.

எனவே இலட்சங்களுக்காக பேரம் பேசாமல் இலட்சிய வாழ்வுக்காக போராட வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமும் மஹர் கொடுத்து தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ வேண்டும். வல்ல ரஹ்மான் அதற்குத் துணை புரிவானாக. ஆமீன்.


ஆக்கம் மற்றும் தொகுப்பு  : மு. அஜ்மல் கான்.

Tuesday, 21 August 2007

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை பற்றிய சிறப்பு பார்வை ..

கி.பி. 1636ஆம் ஆண்டில் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் கட்டப்பட்டு, தற்போதும் கம்பீரம் குறையாமல் காட்சி தருகிறது திருமலை நாயக்கர் மகால் எனப்படும் அரண்மனை.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் அமைந்திருக்கிறது இந்த அரண்மனை. இந்த அரண்மனையை வடிவமைத்தவர் ஒரு இத்தாலி நாட்டு கட்டடக் கலைஞர் என்று கூறப்படுகிறது. இந்த அரண்மனையின் நான்கில் ஒரு பகுதி மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது.

இந்து மற்றும் முஸ்லிம் கட்டடக் கலைகள் இணைந்து கட்டப்பட்ட இந்தோ சரசனிக் பாணி என்று அழைக்கப்படுகிறது. 1971ஆம் ஆண்டுதேசியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்த அரண்மனை இரண்டு பிரிவுகளாக கட்டப்பட்டுள்ளது. ஒன்று சொர்க்க விலாசம் என்றும், மற்றொன்று ரங்க விலாசம் என்றும் அழைக்கப்பட்டது. சொர்க்க விலாசத்தில், திருமலை நாயக்கரும், ரங்கவிலாசத்தில் அவரது தம்பி முத்தியாலு நாயக்கரும் வசித்து வந்துள்ளனர். திருமலை நாயக்கர், இந்த அரண்மனையில் தனது 75ஆம் வயது வரை, மனைவியுடன் வசித்து வந்ததாக குறிப்புகள் எடுத்துரைக்கின்றன.

அரண்மனையின் அமைப்பு . . .
முற்றத்தைக் கடந்து உள்ளே சென்றால், மிகப்பெரிய முற்ற வெளியும், அதனை சுற்றிலும் அழகான தூண்களும் காட்சி தருகின்றன.
அனைத்து கட்டடங்களுமே இந்த இரண்டு பகுதிகளுக்குள் வந்து விடுகிறது. அங்குள்ள பிரம்மாண்ட தூண்களே, அரண்மனையின் கம்பீரமான தோற்றத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது. எவ்வளவு நீண்ட கைகளைக் கொண்டவராக இருந்தாலும், ஒரு தூணைக் கூட ஒருவரால் கட்டிப்பிடிக்க முடியாது என்பது நிஜம்.
மண்டபத்தைச் சுற்றி 900 அடி நீளமும், 600 அடி அகலமும், 40 அடி உயரமும் கொண்டு விளங்கிய சுற்று மதில் சுவரும் இப்போது இல்லை. மிகப் பலவீனமாக இருந்ததால் 1837 ல் இடிக்கப்பட்டது. மதிலுக்கு வெளியில் இருந்த நந்தவனமும், அதன் மையத்தில் இருந்த கட்டிடமும் நாம் இழந்துவிட்ட செல்வங்கள்.
இந்த அரண்மனையையும் மீனாட்சி அம்மன் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது என்றும், பொதுவாக போர்காலங்களில் இளவரசரும், மற்ற குடும்பத்தினரும் தப்பிச்செல்ல இந்தப் பாதையைப் பயன்படுத்துவர் என்றும், தற்போதுகூட மீனாட்சி அம்மன் கோயிலில், பைரவர் சுவாமி ஆலயத்தின் அருகே இந்தப் பாதையைப் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. திருமலை மன்னன் தந்த மஹாலில் ஐந்தில் ஒருபகுதிதான் தற்போது இருக்கிறது என்கிறார்கள் அறிஞர்கள்.
தமிழக அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கீழ் உள்ள இந்த மகாலின் மேல் விமானங்கள் நமது கண்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன. அழகிய வேலைப்பாடுகள் மட்டும் அல்லாமல், அவ்வளவு உயரத்தில் அமைந்துள்ள அந்த கூரைகளை எப்படி அந்த காலத்தில் பொருத்தியிருப்பார்கள் என்று நினைத்தால் பிரம்மிப்பாக உள்ளது. பல இடங்களில் அமைந்துள்ள ஸ்தூபிகள் தங்கத்தால் வேயப்பட்டிருந்தது சிறப்பம்சமாகும். திருமலை நாயக்கர் அமர்ந்து செங்கோல் நடத்திய அரியணையும் இன்று வரை பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
சித்திரைத் திருவிழா!!
ஆண்டு தோறும் இங்கு சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். திருவிழாவின் எட்டாம் நாளன்று, திருமலை நாயக்கர் மண்டபத்தில் அங்கயற்கண்ணி அம்மைக்கு கோயிலில் முடிசூட்டு விழா செய்து, அம்மனிடம் இருந்து பெற்ற செங்கோலை அரியணையில் வைத்து பூஜிப்பது வழக்கம். அடுத்த நாள், செங்கோல் கோயிலுக்கு எடுத்துச் சென்று அன்னையின் பாதத்தில் வைத்து போற்றப்படும்.
சுற்றுலா!!
மதுரைக்கு வந்தா மறக்காம திருமலை நாயக்கர் மகாலுக்குப் போயி பாருங்க. பகல்ல போனீங்கன்னா மகால்ல இருக்கிற தூணை சுத்தி நின்னு அளக்கணும்னா எத்தனை பேரு வேணும்ன்னு அளந்து பாருங்க. மாலையில போனீங்கன்னா, ஒலியும் ஒளியும் பார்க்க மறந்துடாதீங்க.

இங்கு சுற்றுலா வளர்ச்சிக்காக ஒலி-ஒளி காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒலி-ஒளி காட்சி தினந்தோறும் மாலை 6.45 மணிக்கு ஆங்கிலத்திலும், இரவு 8 மணிக்கு தமிழிலும் நடைபெறும். திருமலை மன்னரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளும், அவரது திறனும், சிலப்பதிகார நினைவுகளும் இக்காட்சியின் மூலம் நமது கண் முன் கொண்டுவரப்படுகிறது.

ஒரு முக்கியமான விஷயம் மறந்துட்டேன் பாருங்க. திருமலை நாயக்கர் மகால்ல ஒரு சிறப்பு என்னான்னா மகால் கட்டினதுல இரும்பே எங்கேயும் பயன்படுத்தலைன்னு சொல்லுவாங்க. அதுவும் ஒரு காரணமா இருக்கலாம் மகாலோட மத்த பகுதிகள் எல்லாம் காணாமப் போனதுக்கு. ஒதுக்குப்புறமா யானைகளைக் கட்டி வச்ச பத்துத் தூண்கள் மட்டும் இன்னும் நல்லா நிலையா நிக்குது.

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Saturday, 18 August 2007

உறவுகளை சீர்குலைக்கும் ரியாலிட்டி ஷோ பற்றிய சிறப்பு பார்வை !!

இப்போது உலகம் முழுவதும் வெவ்வேறு வடிவங்களில்,வெவ்வேறு பெயர்களில் வெளி வந்து கொண்டிருப்பது ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தனி மனித உறவுகளை சீர்குலைக்கும் நிகழ்ச்சிகள்..! தனிப்பட்ட மனிதர்களின் கண்ணீர் ,துயரம்,ஆவேசம், என்று அவர்களின் அந்தரங்கத்தை கூறு போட்டு காசு பார்க்கும் சேனல்களின் கண்டுபிடிப்பு தான் இந்த ரியாலிட்டி ஷோக்கள்..!


மாமியார் , ,மாமனார் ,மருமகன் ,மருமகள்,அம்மா ,பிள்ளை ,பெண் ,நாத்தனார்,மச்சினர், அண்ணன் மனைவி ,தம்பி மனைவி ,என ஒரு உறவு விடாமல் அனைவரையும் அழைத்து அவர்களை எதிர் எதிரே உட்கார வைத்து அவர்களின் குறைகளை கேட்கிறோம் என்ற பெயரில், தன் சேனலின் டி.ஆர்.பி ( டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட் ) என்னும் வழிமுறையை அதிகப் படுத்த எல்லாவித முறையையும் கையாள ஒவ்வொரு சானலும் தயாராக இருக்கிறது..! இவர்களுக்கு சமுதாயத்தின் மீது எந்த பொறுப்போ ,அக்கறையோ கிடையாது..! அவர்களின் நோக்கம் எல்லாம் வெறும் வர்த்தகம் மட்டுமே.


பொதுவாக குடும்பத்தில் ஒரு பிரச்சனை என்றால்  இரு தரப்பினரும் மனம் விட்டு பேசினாலே பாதி பிரச்னை சரியாகி விடும்..!  குடும்பத்தில் இருக்கும் வீட்டு பெரியவர்களும், சம்பந்தப்பட்டவர்களும்,உட்கார்ந்து பேசி ,எது சரி அல்லது எது தவறு என்று கலந்து ஆலோசிப்பது தான் சரியான வழி முறையாக இருக்கும்..! ஆனால் இதில் எந்த விதத்திலும் சம்பந்த படாத மூன்றாம் நபரின் தலையீடு குடும்ப விவகாரங்களை தீர்ப்பதற்கு எதற்கு என்பது தான் தெரிய வில்லை.


சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் ,உறவுகளின் பிரச்சனையை சரி  செய்கிறோம் என்ற பெயரில் நடந்த  ஒரு ரியாலிட்டி ஷோவை பார்க்க நேரிட்டது...! கணவர்கள் ஒரு புறம்,மனைவிகள் மறுபுறம்,நிகழ்ச்சியை நடத்துபவர் என்ற பெயரில் ஒருவர்..! அவர் சானலில் வாங்கும் லட்சக்கணக்கான சம்பளத்திற்கு உண்மையாக உழைக்கும் விதத்தில் அவரின் கேள்விகள், இருதரப்பினரையும் தூண்டும் விதத்தில் இருந்தது...! அவர் அப்படி கேட்டால் தான் நிகழ்ச்சி சூடு பிடிக்கும்,வாக்கு வாதங்கள் அனல் தெறிக்க நடக்கும் என்பது அவருக்கு நன்கு தெரியும்...! அவர் எதிர் பார்ப்பதும் அது தான்.


அதில் ஒரு கேள்வி..! கணவனிடம் மனைவிக்கு பிடிக்காத விஷயம்..!அதே போல மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத விஷயம்..! என்று.சொல்லவா வேண்டும் இந்த கேள்விக்கு பதில்களை..! போட்டி போட்டு கொண்டு  சரமாரியாக கருத்துக்கள் வெளி வந்து கொண்டிருந்தது .அதில் ஒரு பெண் சொல்ல தகவல் உண்மையில் தூக்கிவாரிப் போட்டது..!இதை சொல்லி விட்டு பெரிய சாதனை செய்த மாதிரி பெரிய சிரிப்பு வேறு அந்த பெண்ணுக்கு..!அதை பார்த்ததும் யார் பெற்ற பிள்ளையோ ஆனால் கன்னத்தில் ஒன்று போடலாம் என்று தோன்றியதை தவிர்க்க முடிய வில்லை..!  தன் கணவரைப் பற்றிய மிக சென்சிடிவான விஷயம் குறித்து ,அவ்வளவு எளிதாக யாருக்கும் வெளி தெரியாத,தெரிய வேண்டிய அவசியம் இல்லாத ஒரு தகவல் அவர் சொன்னது...! இந்த பதிலை அந்த கணவரும் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் என்பது அவரின் முகத்தைப் பார்த்தால் தெரிந்தது.


எது அந்த பெண்ணை இப்படி தன் கணவரின் ஒரு அந்தரங்கமான விஷயத்தை லட்சக்கணக்கானவர்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் சொல்ல வைத்தது..? இதனால் அவர் அடைய போவதென்ன..? சொன்னதால் இவரின் பிரச்னை தீரப் போகிறதா..?  வீட்டில் கணவனும் மனைவியுமாக உட்கார்ந்து பேசி தீர்க்க வேண்டிய ஒரு விஷயத்தை இப்படி பகீரங்கப் படுத்த வேண்டிய தேவை என்ன.? தன் முகம் தொலைக்காட்சியில் தெரிய வேண்டும் என்பதற்காக இந்த அளவு தன் தரத்தையும் ,தன் கணவனின் செயலையும் பறை சாற்ற வேண்டுமா ..?  இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் இருவரும் சேர்ந்து தானே இருக்க வேண்டும்..?  இந்த நிகழ்ச்சி அவர்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காதா..?  முன் போல அந்த கணவரால் அந்த பெண்ணுடன் இயல்பாக இருக்க முடியுமா ..? இது போன்ற பல கேள்விகள் மனதில் எழுவதை தவிர்க்க முடிய வில்லை.


கணவன் மனைவி உறவு என்பது எவ்வளவு அழகான ஆழமான உறவு..! மற்ற எல்லா உறவிலும் மாற்று எவருடனும் ஒப்பீடு செய்ய முடியும்..! ஆனால் இந்த உறவை எந்த உறவோடும் ஒப்பிட முடியாதே..! கருத்து வேறுபாடு இல்லாத கணவன் மனைவி யாரும் இங்கு உண்டா என்றால்,கண்டிப்பாக  இருக்க முடியாது..! அப்படி இருப்பதற்கான சாத்தியமும் இல்லை என்பதே உண்மை...! இரு வேறு சூழ்நிலைகளில் வளர்ந்த ,வாழ்ந்த இரு உயிர்கள் ஓருயிராக வாழ ஆரம்பிக்கும் போது தொடக்கத்தில் பிரச்சனைகள் ஏற்படுவது என்பது மிக இயல்பான ஒன்று..! ஆனால் அதை எல்லாம் தாண்டி சரியான புரிதலும்,ஒருவரின் பால் ஒருவருக்கு இயல்பாகவே ஏற்படும் ஈர்ப்பும் ,நேசமும் இருந்து விட்டால் பிறகு எந்த வித பிரச்சனையும் அவர்களை ஒன்றும் செய்யாது.


அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (அல் - குரான்2:187)

இந்த ஒரு ஆழமான வசனத்தின் மூலமாகவே கணவன் மனைவி உறவு என்பது எப்படி பட்டது..! அது எப்படி இருக்க வேண்டும் என்பது நமக்கு உணர்த்தப் பட்டு இருக்கிறது..! ஆடை எப்படி நம் மானத்தை காக்கிறதோ அப்படி தான் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் தன் துணையின் குறையை,அந்தரங்கத்தை ,ரகசியத்தை,காக்க வேண்டியது கடமை ஆகும்...! நமக்கு  இயற்கையாக ஏற்படும் சில தேவைகளை,
தேடல்களை ஹலாலான வழியில் பெற வேண்டும் என்றால் கணவன் மனைவி என்ற பந்ததால் மட்டுமே சாத்தியம்...! அது தான் இறை வகுத்த சட்டமும். குறை இல்லாத மனிதர் என்று இவ்வுலகில் யாரும் உண்டா..? அப்படி இது வரை யாரும் இருந்து   இருக்கிறார்களா..?  என்றால் அப்படி யாரும் இல்லை அப்படி யாரும் இருக்கவும் முடியாது ..! குறை, நிறை சேர்ந்தவன் தானே  மனிதன்..! .தன் துணையின் குறை பிடிக்க வில்லை என்றால் அதை மெதுவாக மாற்ற முயல்வது தானே புத்திசாலித்தனம்..! அந்தக் குறையும் நம் வாழ்க்கைக்கோ ,மார்க்கத்திற்கோ,பங்கம் விளைவிக்கக் கூடிய வகையில் இல்லை என்றால் அதை அப்படியே மாற்ற முயலாமல் ஏற்றுக் கொள்வதே சரி. 

இங்கு முழுதாக, ஆணை அறிந்த பெண்ணும் இல்லை..! பெண்ணை, அறிந்த ஆணும் இல்லை என்பதே உண்மை..!அறிந்து கொள்வதும் அவ்வளவு எளிது இல்லை..! தேவையும் இல்லை..!  இறையின் படைப்பு  அப்படி தான் படைக்க பட்டிருக்கிறது..! ஆணின் இயல்பு  தன்மை வேறு..! பெண்ணின் இயல்பு தன்மை என்பது வேறு..!  இதை அவரவர் இயல்பு படி சரியாக புரிந்து கொண்ட ஆணும் பெண்ணும் தான் வெற்றியாளர்கள்...! இந்த சரியான புரிதல் என்பது ஒருவர் அடுத்தவர் மீதான நேசத்தையும்,மதிப்பையும், மரியாதையும் கொடுக்கிறது...! குறைகளை மன்னிக்க சொல்கிறது..!.இந்த ஒற்றுமையின் காரணமாக நல்ல அறிவான,பண்பான சந்ததிகளை கொடுக்க முடிகிறது.

இந்த மாதிரி ஷோக்களை பார்க்கும் போது..! 

பொதுவில் உணர்ச்சிவசப்பட்டு அவர்கள்  வெளியிடும் வார்த்தைகளில் பொருட்டு விளையும் பின் விளைவுகளை நினைக்கும் போது அவர்களின் மீது பரிதாபமே வருகிறது. ஏற்கனவே உறவுகள் சிக்கலாகி கொண்டிருக்கும் காலம் இது...! உறவுகளின் எண்ணிக்கையும் சுருங்கி கொண்டு வருகிறது...!  இதில் இருக்கும் உறவுகளையும் இல்லாமல் பண்ணுவதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி கண்ணுக்கு தெரியாமல் அதை பற்ற வைக்கும் வேலையை தான் சானல்கள் செய்து கொண்டு இருக்கின்றன.

ஒரு மனிதன் என்பதற்கு உரிய  சரியான அர்த்தத்தோடு ஒருவன்  வாழ வேண்டும் என்றால் அவன் அங்கம் வகிக்கும் பாத்திரம் ( மகன்,சகோதரன்,கணவன்,மாமா,மச்சான்,நண்பன்  .....................) என அவன் பொருப்பேற்றிருக்கும் ஒவ்வொரு  பாத்திரத்தின் சார்பாகவும் அவன் நம்பிக்கையாகவும்,உண்மையானவனாகவும்,நேர்மையானவனாகவும்,நடுநிலை தவறாதவனாகவும் இருக்க வேண்டும்..!  அவன் இல்லாமல் போனாலும்,அவனின் நினைவுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு இனிமையான நினைவாக இருந்தது எனில் அது தான் அவன் இவ்வுலகத்தில் பெற்ற வெற்றி.

ஆனால் இந்த வெற்றி அவ்வளவு எளிதா என்றால் எளிதில்லை..!  இதற்கு தான் மறுமை குறித்தான சிந்தனை தேவை  படுகிறது..! அனைவரும் சொல்வது தான் நமது இறப்பு என்பது எப்போது வேணாலும் வரும்..!அதனால நாம தயார் நிலையில இருக்கணும் என்று..! ஆனால் உண்மையில் அது ஆழ்மனதில் திடத்தோடு பதிவு செய்ய பட்டிருந்தால் மட்டுமே சாத்தியம் ஆகும்..!  

அந்த உணர்வு எப்போதும் நம் சிந்தனையில் ஓடி கொண்டிருந்தால்..! நாம் அடுத்தவர்களை பார்க்கும் பார்வை வேறாக இருக்கும்..! எழுதி கொண்டிருக்கும் நான் இந்த பதிவை பதிவு செய்வது உறுதியில்லை என்ற நிலைப் பாட்டையும் ,எப்போது வேண்டுமானாலும் இறைவன் என் உயிரை கைப்பற்றுவான் என்றும் அப்படி அவன் கைப்பற்றி அவன் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை நான் வைத்திருக்கேனா என்று உறுதியாக நம்பும் போது தான் சக மனிதர்களை அவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து அவர்களை நேசிக்க சொல்கிறது..!  தன் தவறுகளையும் யார் சொன்னாலும் திருத்தி கொள்ள முடிகிறது..! உறவுகளையும்  கொண்டாட சொல்கிறது.

விட்டு கொடுப்பவர் எப்போதும் கெட்டு போவதில்லை. 

ஆக்கம்  மற்றும் தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.


நன்றி :தோழி.ஆயிஷா பேகம்.

Friday, 17 August 2007

What is Drawing and Types...

The term drawing is applied to works that vary greatly in technique. It has been understood in different ways at different times and is difficult to define. During the Renaissance the term 'disegno' implied drawing both as a technique to be distinguished from coloring and also as the creative idea made visible in the preliminary sketch.


The Shorter Oxford Dictionary defines drawing as:
'the formation of a line by drawing some tracing instrument from point to point of a surface; representation by lines; delineation as distinguished from painting...the arrangement of lines which determine form.'
Despite this insistence on the formation of line and the implied lack of color  few would deny that a work formed by dots or shading or wholly in line but in a range of colors is a drawing.
The following drawings, made in different ways, have been selected to help define and also to stretch the boundaries of what drawing is. They vary in the medium used, which includes metal-point, graphite, charcoal, ink, and chalk. Some fulfill the strict dictionary definition of drawing, others do not.
Thus, a drawing can comprise of a sketch, plan, design, graphic representation, etc. with the help of pens, pencils, or crayons, depending upon its nature and purpose. Given here are different kinds of drawings that one can take up and excel in. Check them out in the lines herein.
Different Kinds Of Drawings..
Life Drawing
Drawings that result from direct or real observations are life drawings. Life drawing, also known as still-life drawing or figure drawing, portrays all the expressions that are viewed by the artist and captured in the picture. The human figure forms one of the most enduring themes in life drawing that is applied to portraiture, sculpture, medical illustration, cartooning and comic book illustration, and other fields.
Emotive Drawing
Similar to painting, emotive drawing emphasizes on exploring and expressing different emotions, feelings, moods, self, time, etc. These are generally depicted in the form of a personality.
Sketching
Sketching is a kind of drawing that puts forward the instant thoughts of an artist. Thus, it is a rough freehand and loose drawing which is not considered to be a finished piece of work. Sketching, usually, results out of visualizing and immediately capturing them onto paper.
Analytic Drawing
Sketches that are created for clear understanding and representation of observations made by an artist are called analytic drawings. In simple words, analytic drawing is undertaken to divide observations into small parts for a better perspective.
Perspective Drawing
Perspective drawing is used by artists to create three-dimensional images on a two-dimensional picture plane, such as paper. It represents space, distance, volume, light, surface planes, and scale, all viewed from a particular eye-level.
Diagrammatic Drawing
When concepts and ideas are explored and investigated, these are documented on paper through diagrammatic drawing. Diagrams are created to depict adjacency and happenstance that are likely to take place in the immediate future. Thus, diagrammatic drawings serve as active design process for the instant ideas so conceived.
Illustration Drawing
Drawings that are created to represent the lay out of a particular document are illustration drawings. They include all the basic details of the project so concerned clearly stating its purpose, style, size, color, character, effect, and others.

Geometric Drawing
Geometric drawing is used, particularly, in construction fields that demand specific dimensions. Measured scales, true sides, sections, and various other descriptive views are represented through geometric drawing. 

Engineering Drawing
This drawings are typically used as visual tools in the creation of homes, bridges, and other buildings for Cilvil related works. While these drawings can be quite straightforward to individuals who are skilled in the each discipline field of engineering or architecture, they can be quite difficult to interpret for laypeople. Knowing how to read engineering drawings will help provide you with a better idea of your discipline field.
Prepared by M.Ajmal Khan.