Monday, 9 March 2009

40 வருட வாழ்க்கையை தீர்மானிக்கப் போவது 4 வருட கல்வியே!!


நாற்பது வருட வாழ்க்கையை தீர்மானிக்கப் போவது நான்கு வருட படிப்பே என்பதை மாணவ, மாணவியர் மனதில் கொள்ள வேண்டும்,'' என, அண்ணா பல்கலைக்கழக வேந்தர் மன்னர் ஜவகர் பேசினார்.

அண்ணா பல்கலைக்கழக வேந்தர் மன்னர் ஜவகர் பேசியதாவது: படிப்பை பொறுத்தவரை மூன்று நிலைகள் உள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை முதல் நிலையாகவும், எட்டு முதல் பிளஸ் 2 வரை இரண்டாம் நிலையாகவும், கல்லூரி படிப்பானது மூன்றாவது நிலையாகவும் உள்ளன.

முதல் இரண்டு நிலையை பொறுத்தவரை மாணவர்களின் படிப்பில் பெற்றோரின் பங்கு அதிகம் இருக்கும். ஆனால், மூன்றாம் நிலையான கல்லூரி படிப்பை பொறுத்தவரை, அதற்கான பாதையை மாணவர்கள் தான் வகுக்க வேண்டும்.

கவுன்சிலிங்கை பொறுத்தவரை எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்ற விஷயத்தில் உறுதியாக இருங்கள். இறுதி நேரத்தில் குழப்பத்தில் சிக்க வேண்டாம். குறிப்பாக 40 வருட வாழ்க்கையை தீர்மானிக்கப் போவது நான்கு வருட படிப்பே என்பதை மாணவ, மாணவியர் மனதில் கொள்ள வேண்டும்.

பொதுவாக கடின உழைப்பு, கடமை தவறாமை, நேர்மை, ஒருங்கிணைந்து செயல்படுதல், முழு ஈடுபாடு ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். கடின உழைப்பு மூலம் பெறும் பயனே சிறந்தது. அதற்கு ஈடாக எதையும் ஒப்பிட முடியாது. ஆகையால் மாணவ, மாணவியர் கல்லூரி காலங்களில் படிப்பிற்கான கடின உழைப்பிற்கு தயாராக வேண்டும்.

பெற்றோரும், மாணவர்களும் இணைந்து முடிவெடுங்கள். இன்ஜினியரிங் கவுன்சிலிங் செல்வதற்கு முன், கல்லூரி மற்றும் துறை ரீதியான வாய்ப்புகள் குறித்து தகவல்களை திரட்ட வேண்டும். இதே போல, குறைந்த கட்டணமே வசூலிக்கும் அரசு கல்லூரிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இன்றைய சூழ்நிலையில், சிறப்பான வேலைவாய்ப்பை அளிக்கும் குறிப்பிட்ட துறையானது, நாம் நான்கு வருட படிப்பு முடிக்கும் போது, எந்த நிலையில் இருக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது. ஆகையால், புதிய பாடப் பிரிவுகளை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு, பல பாடப்பிரிவுகள் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவையாக இருப்பதை நாம் அறிய வேண்டும்.

ஆகையால், இரண்டு பிரிவுகளை ஒன்றாக்கி புதிய பாடப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதை அறிந்தும், அவற்றின் பயனறிந்தும் அவற்றை தேர்ந்தெடுத்த படிக்க முன் வர வேண்டும்.
அனைத்து பாடப் பிரிவுகளையும் ஆண், பெண் இருபாலரும் தேர்ந்தெடுக்கலாம். கல்லூரி மற்றும் துறையை தேர்ந்தெடுப்பதில் பெற்றோர் மற்றும் மாணவர்கள் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும். கவுன்சிலிங்கை சந்திப்பதற்கு முன்பாகவே மாணவ, மாணவியர் பதட்டத்தில் இருந்து விடுபட வேண்டும். இதன் மூலம் இறுதி நேரத்தில் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க முடியும்.

Sunday, 8 March 2009

இறைதூது ஒரு வரலாற்றுப் பின்னணி.....

ஒரிக்கொள்கையிலிருந்து மனிதகுலம் அடிபிறழ்ந்த போது அவர்களைச் சீர்படுத்தி ஏக இறை ஓரிறை வணக்கத்தின் பக்கம்
ஒன்று படுத்தும் வண்ணம் அல்லாஹ் தூதர்களை அனுப்பினான். அவர்களுக்கு வழிகாட்டுதல்கள் அடங்கிய வேத நூல்களையும் வழங்கினான். இதோ ஒரு வரலாற்றுப் பின்னணியை திருக்குர்ஆன் வழங்குகின்றது.


''ஆரம்பத்தில் மனிதர்கள் ஒரே சமுதாயமாக இருந்தனர். மக்கள் கருத்துவேறுபட்ட விஷயங்களில் தீர்ப்பளிப்பதற்காக அவர்களிடையே தூதர்களை நற்செய்தி சொல்பவர்களாகவும், எச்சரிப்பவர்களாகவும் நியமித்தான்.'' (திருக்குர்ஆன் 2:213)


அடுத்து யாரை அல்லாஹ் தனது தூதராகத் தேர்ந்தெடுக்கின்றானோ அவர்கள் தனது தூதர் தான் என்பதை மக்களிடம் நிரூபித்துக் காண்பிப்பதற்காக தனது மகத்தன ஆற்றலால் அற்புதங்களை அவர்களுக்கு வழங்குவான். அல்லாஹ்வின் அனுமதியுடன் அத்தகைய அற்புதங்களை மக்களுக்கு மத்தியில் அவர் செய்து காண்பிப்பார். அவை கண்கெட்டு வித்தைகளோ சூனியமோ அல்ல. படைப்பினங்களில் எவரைக் கொண்டும் சக்தி பெறமுடியாத செயற்கரிய செயலாக இருக்கும் அது. உதாரணமாக ஸாலிஹ் நபி பாறையிலிருந்து வெளிப்படுத்திய பெண் ஒட்டகம், மூஸா நபியின் கைத்தடி உயிருள்ள பாம்பாக மாறியது, ஈஸா நபி இறந்தவரை உயிர்ப்பித்தது முதலானவற்றைக் கூறலாம்.

ஆக வெறுமெனே தூதர்களை அனுப்பாமல் அவர்கள் தூதர்கள் தான் என்பதைத் தெளிவு படுத்தும் மறுக்கவியலாத சான்றுகளுடன் தான் அல்லாஹ் அனுப்புகின்றான் என்பது இந்த மனித சமுதாயத்தின் மீதுள்ள அவனது அளப்பரிய கருணை ஆகும். இத்தகைய சான்றுகளைக் கண்ட பின்னரும் நிராகரிப்பவர்கள் கடுமையான வேதனையைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தான்.

இன்று உலகில் கோடானு கோடி மக்களால் பின்பற்றப்படும் ஒரு தலைவராக இருப்பவர் முஹம்மது நபி (ஸல்). அன்று மக்காவில் வாழ்ந்த குறைஷ் என்னும் கோத்திரத்தில் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா தம்பதியாருக்கு மகனாகப் பிறந்தார்கள். பிறக்கும் முன்னரே தந்தை இறந்து விடுகின்றார். தன் ஆறாவது வயதில் தாயையும் இழந்து விடுகின்றார். அநாதைச் சிறுவராக இருக்கையில் தன் சிறிய தந்தை அபூதாலிபின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தார்கள் முஹம்மது (ஸல்) அவர்கள். எந்த கல்விக் கூடத்திற்கும் செல்லவில்லை, எழுதவும் படிக்கவும் தெரியாது. அபூதாலிபுடன் வெளி நாடுகளுக்குச் சென்று வியாபாரத்தில் துணை நின்றார்கள். அவர்களிடம் மிக உயர்ந்த நற்குணம் சிறுவயதிலிருந்தே காணப்படுகிறது. மக்கள் அனைவராலும் அவர் அல் அமீன் அதாவது நம்பிக்கைக்குரியவர் என்று அழைக்கப் படுகின்றார்.

பொதுவாக அநாதைகளாக இருப்பவர்களை யாருடைய கண்காணிப்பும் இல்லாததால் யாருக்கும் பதில் சொல்லவேண்டியதில்லை என்பதால் சீக்கிரம் சீர்கெட்டுவிட வாய்ப்பு உண்டு. அனால் அதற்கு மாறாக முஹம்மது (ஸல்) அவர்கள் சிறுவயது முதலே ஒழுக்க சீலராக நற்குணங்கள் நிறைந்தவராக வளருகின்றார். தீமைகளைக் கண்டு வெறுத்து ஒதுங்குகின்றார். அவரது சமூக மக்களோ அவருக்கு அல்அமீன் அதாவது நன்னம்பிக்கையாளர் என்ற சிறப்புப் பெயரை வழங்குகிறது. தனது 25 வது வயதில் மக்காவில் சிறப்பான குலத்தைச் சேர்ந்த செல்வச்செழிப்பு மிக்க கதீஜா என்னும் பெண்மணி இவரை வியாபாரப் பிரதிநிதியாக நியமிக்க இவரது வியாபாரத்தின் நேர்மையைக் கண்டு வியந்து இவரைத் திருமணம் புரிய விருப்பம் தெரிவிக்கின்றார். அவ்வாறு திருமணமும் நடந்தது. மக்காவில் பல கோத்திரங்கள் கஃபாவின் கறுப்புக் கல் விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்டபோது இவரை நடுவராக நியமிக்க இவர் அளித்த தீர்ப்பைக் கண்டு வியந்தது. அதனால் மூளவிருந்து மிகப்பெரிய போரும் தடுத்து நிறுத்தப்பட்டது.

தான் வாழ்ந்த சமகால மக்களின் அறியாமைப் பழக்க வழக்கங்களையும் சீர்கேடுகளையும் கண்டு முஹம்மது (ஸல்) அவர்கள் வெறுப்புற்றார்கள். கற்சிலைகளை வழிபடுவதும், பெண்களைக் கேவலமாக நடத்துவதும், மது அருந்துவதும் அற்ப விஷயங்களுக்குக் கூட கொலைச் செயல்களில் ஈடுபடுவதும் அன்று சர்வசாதாரணமாகக் காணப்பட்டது. இறுதியில் மக்காவில் உள்ள ஒரு மலை உச்சியில் ஹிரா என்னும் குகையில் தனித்திருந்து ஏக இறைவனை வழிபட்டு வந்தார். ஒருநாள் இரவு திடீர் என்று அவர்முன் ஓர் உருவம் தென்பட்டு ஓதுவீராக என்று கூறியது. அவர் நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்று கூறுகிறார். மீண்டும் ஓதுவீராக என்று கூறிய போது இரண்டாம் முறையும் அவ்வாறே கூறினார். மூன்றாம் முறை அவர் சிரமப்படும் அளவுக்கு அந்த உருவம் அவரை இறுகத் தழுவி ''ஓதுவீராக! படைத்த உமது இறைவனின் நாமத்தில்! அவனே மனிதனை அலக் என்ற (கற்ப) நிலையில் இருந்து படைத்தான்! ஓதுவீராக! உமது இறைவன் மாபெரும் கொடையாளி! அவனே எழுதுகோலைக் கொண்டு கற்பித்தான்! மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்! (திருக்குர்ஆன் 96: 1:5) என்ற வாசகங்களைக் கற்பித்துக் கொண்டு போய்விட்டது! செய்வதறியாது திகைத்துக் கொண்டு தனது வீட்டில் ஒடிவந்து தன் மனைவியிடம் என்னைப் போர்த்துங்கள்! என்னைப் போர்த்துங்கள்! என்று கூறுகிறார். மனைவியோ! அன்புக் கணவரே உங்களுக்கு என் நேர்ந்துவிட்டது? உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். தாங்கள் உறவுகளுடன் இணங்கி வாழ்கின்றீர்கள், சிரமப்படுவோரின் சுமைகளைச் சுமந்து கொள்கின்றீர்கள், வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள், விருந்தினரை உபசரிக்கிறீர்கள், உண்மையான சோதனையில் அகப்பட்டவர்களுக்கு உதவுகின்றீர்கள் என்று கூறித் தேற்றுகிறார்கள். தன்னிடம் வந்தவர் வானவர் ஜிப்ரீல் என்றும் அல்லாஹ்விடமிருந்து தனக்கு செய்தியைக் கொண்டுவந்தவர் என்பதும் தான் இறைதூதராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளோம் என்பதும் பின்னர் தான் அவர்களுக்குத் தெரியவருகின்றது.
இவ்வாறு அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபிமார்கள் அனைவரும் அவர்களின் சமகால மக்களிடையே மிகுந்த ஒழுக்க சீலர்களாகவும், மன உறுதி மற்றும் வீரம் மிக்கவர்களாகவும் மிகுந்த பொறுமைசாலிகளாகவும் அளப்பரிய தியாகிகளாகவும் வாழ்ந்தனர் என்பதுதான் சரித்திர உண்மை. காரணம் இறை தூது என்பது மிகப்பெரிய பொறுப்பு ஆகும். இவ்வுலகில் மனிதன் வகிக்கும் எத்தகைய பதவியோடும் ஒப்பிட முடியாத ஒரு பதவி. இணைவைப்பில் மூழ்கியிருப்பதுடன் பாவத்திலும் வரம்புமீறுதலிலும் சர்வசாதாரணமாக ஈடுபடக் கூடிய ஒரு பெரும்கொண்ட சமூகத்திடம் துணிந்து சத்தியத்தை தெளிவாக எடுத்துக் கூறவேண்டிய பொறுப்பு. அல்லாஹ்வை மறுக்கக் கூடிய கொடுங்கோல் மன்னனிடமும் உனது இறைவன் அல்லாஹ்வே! என்று மனம் துணிந்து கூறவேண்டிய மகத்தான பொறுப்பு. திருக்குர்ஆன் கூறும் இறைதூதர்கள் வரலாறுகள் அனைத்தும் தியாகத்தோடு மிகவும் தொடர்புடையவை ஆகும்.

Thursday, 5 March 2009

A Rolex watch that doubles as a cellphone, mp3 & movie player....

OK, I don't think that Rolex or Omega would ever come out with a watch that can double as a cellphone (except in a James Bond movie) but LG has and it looks to up the stakes again.



Most watch enthusiasts remember when the LG GD910 watch cellphone was first seen at the January Consumer Electronics Show in Las Vegas in 2009. We expected great things and were overall impressed with the phone's specs. Of course once we had the phone, it didn't quite live up to it's hype. The new rumour is that LG is coming out with an update of the phone for the beginning of 2010 and should add some bold new colors and fix some of the problems customers have compained about:

- 80MB storage is really small
- backlight goes to low power mode when not in use so you can't read the watch in daylight
- No Internet Browser
- No live preview of what you are taking a photo of

Here's a quick rundown of what the watch has currently:

A VGA camera with 640 x 480 resolution (pretty much equal to a $10 Chinese digital camera). But it does provide the ability to make and receive video calls

The watch phone comes with a 1.4 inch TFT display touch screen which displays 256,000 colours at a pixel size of 128 x 160 pixels. The screen doubles up as the watch face as well as the display screen for all the enclosed functionality, which is accessed by using the flash user interface provided.

This is big for a watch face but really small for a video screen. If you want to pull having nice video with a watch you need a built in LCD projector or an adaptor to your video projection sunglasses for the 2012 model ;-).

It also provides text to speech capabilites (easier for texting than trying to ype on this thing) and an mp3 player.

This phone will likely not appeal to your typical luxury watch enthusiast. It lacks the style and distinction we look for in a watch. This is more suited for the ultra techno geek than a man wearing his Armani Suit and his custom Italian leather shoes.

I don't see Rolex ever coming out with a cellphone watch, ever. But what technological improvements could Rolex, Cartier, or Bvlgari make that would make you want one more? Any?

Herre's a great video faeturing the cellphone watch.

Tuesday, 3 March 2009

நபி (ஸல்) அவர்களிடம் கிராமவாசியின் கேள்வியும் பதிலும்!! ஒரு சமுதாய பார்வை...

WESTERN NEGEV - NOVEMBER 26:Bedouin man traditionally dressed on November 26 2008. The nomadic Arabs live by rearing livestock in the deserts of southern Israel. - stock photo
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? 
என்றவுடன் நபியவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள்.










1.நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?

· நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்
ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள்.

2. மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?

· தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.

3. நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?

· ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்

4. நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.

· ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.

5. நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன் ?

· நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள்

6. நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி ?

· அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்

7. அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன் ?

· அதிகமாக திக்ரு ( தியானம் ) செய்யுங்கள்

8. ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன வழி ?

· எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன் இருங்கள்

9. துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி ?

· ஹராமான பொருளாதாரத்தை உண்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

10. முழுமையான ஈமானுடையவராக என்ன வழி ?

· நற்குணமுடையவராக ஆகி விடுங்கள்

11. கியாமத்தில் அல்லாஹ்விடன் பாவமற்றவனாக பரிசுத்த நிலையில் சந்திக்க விரும்புகிறேன் ?

· குளிப்பு கடமையானவுடன் குளித்து விடுங்கள்

12. பாவங்கள் குறைய வழி என்ன ?

· அதிகமாக அல்லாஹ்விடன் பாவ மன்னிப்புத் தேடுங்கள்

13. கியாமத் நாளில் எனக்கு பிரகாசம் ஏற்பட வழி என்ன ?

· அநீதம் செய்வதை விட்டு விடுங்கள். பிரகாசம் கிடைக்கும்

14. அல்லாஹ் என் குறைகளை மறைக்க வழி என்ன ?
· பிறருடைய குறைகளை இவ்வுலகில் மறைத்து விடுங்கள்

15. உலகத்தில் இழிவடைவதை விட்டும் பாதுகாப்பு எதில் உள்ளது ?

· விபச்சாரம் செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர்

16. அல்லாஹ், ரசூல் உடைய பிரியனாக வழி என்ன ?

· அல்லாஹ், ரசூல் பிரியப்படக்கூடியவர்களை பிரியபடுங்கள்

17. அல்லாஹ், ரசூலுக்கு வழிப்பட்டவனாக ஆக வழி என்ன ?

· (F) பர்ளை பேணுதலாக கடைப்பிடியுங்கள்

18. நான் இறைத் தொடர்புடையவனாக ஆக வழி என்ன ?

· அல்லாஹ்வை பார்ப்பதாக என்ணி வணங்குங்கள் ( அல்லது ) அல்லாஹ் உங்களை பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள்

19. பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்கூடிய வஸ்த்துக்கள் என்ன ?

· கண்ணீர், பலஹீனம், நோய்

20. நரகத்தின் நெருப்பை குளிர வைக்கக் கூடியது எது ?
· இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின் மீது பொறுமையாக இருப்பது

21. அல்லாஹ்வுடைய கோபத்தை எது குளிர வைக்கும் ?

· மறைவான நிலையில் தர்மம் செய்வது – சொந்த பந்தங்களை ஆதரிப்பது

22. எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை எது ?

· கெட்ட குணம் – கஞ்சத்தனம்

23. எல்லாவற்றிலும் மிகப்பெரிய நன்மை எது ?

· நற்குணம் – பொறுமை – பணிவு

24. அல்லாஹ்வுடைய கோபத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன ?

· மனிதர்களிடம் கோபப்படுவதை விட்டு விடுங்கள்


( ஆதாரம் : முஸ்னது அஹ்மது – கன்ஸுல் உம்மால் )


தொகுப்பு :அ .தையுபா அஜ்மல் 

தினமும் நம் பயன்படுத்தும் பொருள்களின் கலோரி மற்றும் கலோரி அளவுகள் பற்றிய சிறப்பு பார்வை !!

உடல் எடை நமது உடல் நலத்திற்கான ஒரு நல்ல அளவுகோலாகும். உடல் எடைகுறிப்பிட்ட அளவை விட குறையவும் கூடாது. அதே வேளையில் அதிகம் ஆகிவிடவும்கூடாது.அதற்கு எளிய கணக்கு என்னவென்றால் உங்களது உயரம் எத்தனை செ.மீ. என்று அளந்து அதனை 100ஆல் கழித்தால் வரும் எண் அளவான எடைதான் கிலோ கிராமில் இருக்க வேண்டும். அதாவது உயரம் 163செ.மீ.என்றால் 163-100=63 இந்த 63  என்ற அளவில்தான் கி.கி. இருக்க வேண்டும். 



உணவு

“உணவே மருந்து” – ஹிப்போகிரேட்ஸ் (கி.மு. 460 – 370)

உடல்நலத்தைக்காப்பது எது? என்ற கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் சொல்லுங்கள் என்றால்அதற்கு “உணவு” என்றே பதில் சொல்வேன். இரண்டு வார்த்தைகளில் பதில்சொல்லுங்கள் என்றால்“அளவான உணவு” என்று பதில் கூறுவேன்.



உணவின்முக்கியத்துவத்தை 2000 ஆண்டு களுக்கு முன் ஒருவருக்கு ஒருவர் தொடர்புஇல்லாமல் வாழ்ந்த அறிஞர்கள் வற்புறுத்தி யுள்ளனர். உணவே மருந்து என்றார் கிரேக்க நாட்டைச் சேர்ந்த அறிஞர் ஹிப்போகிரேட்ஸ். இவர்தான் மருத்துவத்தின்தந்தை (Father of Medicine) என்று அழைக்கப்படுகிறார்.  இன்றும் மருத்துவ

பட்டப்படிப்பு (MBBS) முடித்த மாணவர்கள் ஹிப்போகிரேட்ஸ் கோட்பாடுகளைத்தான் உறுதிமொழியாக எடுத்துக் கொள்கிறார்கள்.உடல்நலத்தின்திறவுகோல் அளவான உணவு (Moderate Food)அளவுக்கு மீறினால் அமிர்தமும்நஞ்சு. அளவான உணவு என்றால் என்ன? எது அளவான உணவு என்பதைத் தெரிந்துகொள்ளும் முன்னர், கலோரி என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும்.


 கலோரிகள்..

 ஓரு வாகனம் ஓட வேண்டும் என்றால் அதற்கு எரிபொருள் தேவைப்படுகிறது. பெட்ரோல்அல்லது டீசல் எரிக்கப்பட்டு கிடைக்கும் வெப்பத்தால் (ஆற்றல்) இயந்திரங்கள்இயக்கப்பட்டு பின்னர் அதன் மூலம் சக்கரம் சுற்றுகிறது. வாகனம் ஓடுகிறது.மனிதனின் இயக்கமும் அப்படியே. நமது உடலின் எரிபொருள் நாம் உண்ணும் உணவு.வெப்பஆற்றலின் அளவுகோல்தான் கலோரி. உயரத்தை செ.மீட்டரால் அளப்பது போல் எடையைக்கிலோகிராமில் அளப்பது போல, வெப்ப ஆற்றலை (Energy) கலோரிகளால் அளக்கிறோம்.ஓர் உணவுப் பொருள் தரும் வெப்பம் (அதாவது ஆற்றல்) எவ்வளவோ அதைத்தான் கலோரிஎன்கிறோம். 


 கலோரி என்பது 1 கிராம் எடையுள்ள தண்ணீரை 0 டிகிரிசென்டிகிரேட்டிலிருந்து 1 டிகிரி சென்டிகிரேடு வரை சூடாக்க தேவைப்படும்ஆற்றல் அல்லது வெப்பம் ஆகும்.  இந்த அளவை ஆயிரத்தால் பெருக்கினால் அது கிலோகலோரி ஆகும். இந்தக் கிலோ கலோரியைத்தான் நாம் கலோரி என்று சாதாரணமாகக்கூறுகின்றம்.



தானியம்/தானியம் சார்ந்த உணவுப் பொருள்கள்(100 கிராம் அளவுக்கு உள்ள கலோரி )

அரிசி (பச்சை அரிசி)- 345 கலோரி

புழுங்கல் அரிசி - 325 கலோரி

வேகவைத்த அரிசி (சோறு)- 100 கலோரி

இட்லி- 65 கலோரி

பொங்கல் - 220 கலோரி

அடை- 140கலோரி

புட்டு- 280கலோரி 

இடியாப்பம்- 260கலோரி

ஊத்தாப்பம்- 250கலோரி

கோதுமை மாவு (100கிராம்)- 341கலோரி 

சப்பாத்தி-1 (35கிராம்)- 119கலோரி 

பரோட்டா- 215கலோரி

பூரி3- 240கலோரி

ரவா ஆப்பம்- 318கலோரி 

ரவா புட்டு- 56கலோரி

பிரட் துண்டு-1- 60கலோரி

பன்- 280கலோரி

கேழ்வரகு- 328கலோரி

சோளமாவு- 355கலோரி

பாப்கார்ன் (50கிராம் )- 170கலோரி

தோசை-1- 130கலோரி

பருப்பு வகைகள் 

கடலை (வறுத்தது)- 369கலோரி

உளுந்து- 347கலோரி

பயறு- 334கலோரி

காராமணி- 343கலோரி

சோயாபீன்- 432கலோரி

வேகவைத்த பருப்பு- 92-145கலோரி

ரசம் (1 கப்) - 12கலோரி

சாம்பார் (அரை கப் )- 105கலோரி

காய் கறி/கீரைகள்

முட்டைக் கோஸ்- 45கலோரி

முளைக்கீரை- 45கலோரி

முள்ளங்கி கீரை- 28kalori

பூசணி- 25கலோரி

பாகற்காய்- 25 கலோரி

சுரைக்காய்- 12கலோரி

கத்தரிக்காய்- 24கலோரி

காலிபிளவர்- 30கலோரி

ஏலக்காய்- 229கலோரி

பச்சை மிளகாய்- 29கலோரி

காய்ந்த milaga 246கலோரி

கொத்துமல்லி 288கலோரி

பீன்ஸ்- 26கலோரி

பூண்டு- 145கலோரி

இஞ்சி- 67கலோரி

வெண்டைக்காய் 35கலோரி

காளான்கள்- 42கலோரி

நெல்லிக்காய்- 58கலோரி

பட்டாணி- 93கலோரி

மிளகு- 304கலோரி

மஞ்சள்- 349கலோரி

உருளைகிழங்கு- 97 கலோரி

வள்ளிகிழங்கு- 120 கலோரி

மரவள்ளிகிழங்கு- 157 கலோரி


பழங்கள் 

ஆப்பிள்- 56கலோரி

வாழைப்பழம்- 153கலோரி

பேரீச்சம்பழம்- 283காலோர்

கொய்யாபழம்- 66கலோரி

திராட்சை- 45கலோரி

மாம்பழம்- 50-80கலோரி

ஆரஞ்சு- 53கலோரி

பப்பாளி- 32கலோரி

அன்னாசி- 46கலோரி

மாதுளை- 77கலோரி

சப்போட்டா- 94கலோரி







எரிதல் (Burning) என்றால் என்ன?

உணவுப் பொருட்களில்உள்ள ஊட்டச் சத்துகள் (கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு) உடலில்எரிக்கப்பட்டு கலோரி களைப் பெறுகிறோம். உடலில் கொழுப்பு கூட எரிந்துகரைந்துவிடுகிறது. ஆனால், சாதாரண வெப்பத்தால் கொழுப்பை எரிக்க வேண்டும்என்றால் 360ர்இ வெப்பம் அதற்கு தேவைப்படும்.  ஆனால் உடலில் ஊட்டச்சத்துகள்எரிவது என்பது வேறு.உதாரணமாக, ஒரு பழைய வீட்டை இடித்து பின்னர், அங்கேபுதிய வீட்டைக் கட்டுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். பழைய வீட்டில்இருந்த மரச்சட்டம், கதவு, ஓடு ஆகியவற்றைப் பத்திரப்படுத்தி, அவற்றையேபயன்படுத்தி, புதிய வீடு கட்டப்படுகிறது. 


 இதைப்போலத்தான் நாம் உண்ணும்கார்போஹைட்ரேட் குளுக்கோஸாக மாற்றப்பட்டு பின்னர் செல்களில் ஆக்சிஜன்முன்னிலையில் மாற்றி அமைக்கப்பட்டு (எரிதல்), கார்பன்-டை-ஆக்ஸைடாகவும்,நீராகவும் மாற்றப்படுகிறது. அப்போது வெளியேறும் ஆற்றலைத்தான் கலோரிஎன்கிறோம். இவ்வாற்றலைப் பயன்படுத்தித்தான் நமது உடல் உறுப்புகள் வேலைசெய்கின்றன.


 நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு, கொழுப்பு அமிலமாகமாற்றப்பட்டு, பின்னர் செல்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்படுகிறது. நாம் உண்ணும் புரதம் கூட அமினோ அமிலங்களாக (அம்ண்ய்ர்அஸ்ரீண்க்ள்) மாற்றப்பட்டு, பின்னர் செல்களுக்குச் சென்றவுடன் எரிக்கப்பட்டு கார்பன்-டை-ஆக்ஸைடாகவும், நீராகவும், ஆற்றலாகவும் மாற்றப்படுகிறது.இதை மாற்றி அமைக்கும் பணியைத்தான்“எரிதல்” என்கிறோம். செல்களில் உள்ளமைட்டோ கான்ட்ரியாவில் தான் எரிதல் நடைபெறுகிறது.மனிதர்களுக்குத் தேவைப்படும் கலோரி யின் அளவு அட்டவணையில் கொடுக்கப் பட்டுள்ளது.



கலோரியின் தேவை



ஒரு மனிதனின் வயதிற்கேற்ப கீழ்க்கண்ட வாறு கலோரிகள் தேவைப்படுகின்றன.


வயது   ஆண்   பெண்

20-30   -    3200      2300

30-40   -    3100      2200

40-50   -    3000      2160

50-60   -    2750      2000

60-70   -    2500      1800

>70     -    2200      1500


நாம்உண்ணும் உணவு ஜீரணமடைந்து பின்னர் இரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் உதவியுடன்எரிந்து சக்தியாக மாறுகிறது. இந்தச் சக்தியால்தான் மூச்சுவிடுவது, இதயம்துடிப்பது, நடப்பது, ஓடுவது,படிப்பது, சிந்திப்பது என்ற வேலைகளையும் உடல்செய்கிறது. வேலை எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தால் குறைந்தபட்சசக்தியே தேவைப்படுகிறது. கடினமான வேலைகளைச் செய்தால் சக்தி அதிகம்தேவைப்படுகிறது.




உடல்நலத்தை பொறுத்த விஷயங்களில் யூகங்களுக்கு (Guess) இடமில்லை. இன்னும் சொல்லப்போனால் அது மிகவும் ஆபத்தானது.(உதாரணமாக நெஞ்சு வலி என்றால் அது வாயுக்கோளாறு என்று அலட்சியப்படுத்துவது.) ஒரு முழு உடல்நல பரிசோதனை (Full Health Check-up) செய்ய வேண்டும்.உடலில் எல்லா உறுப்பு மண்டலங் களும் சரியாக இயங்குகின்றன என்பதைத்தெரிந்து கொள்வது வருமுன் காக்கும் செயலாகும்.


தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Friday, 27 February 2009

கட் ஆஃப் மார்க் என்றால் என்ன?



கலந்தாய்வின் போது கட் ஆஃப் மார்க் அடிப்படையில் தான் சீட் ஒதுக்கபடும் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். எனக்கு இந்த கட் ஆஃப் மார்க் பற்றிய ஞானம் இல்லை தயவு செய்து விளக்கம் அளிக்கவும்.
எதனை கொண்டு கட் ஆஃப் மார்க் கணக்கிடப்படுகின்றது.



 பொறியியல் மற்றும் மருத்துவ கலந்தாய்வின் போது கட் ஆஃப்மதிப்பென்கள் அடிப்படையில் தான் சேர்க்கைகள் நடைபெறும் என்று நாம் அனைவரும்கேள்விபட்டு இருப்போம்அண்ணா பல்கலைகழகத்தில் சீட் கிடைக்க வேண்டும் என்றால்இவ்வளவு கட் ஆஃப் மார்க் எடுத்து இருக்க வேண்டும் அந்த கல்லூரியில் சேர்வது என்றால்இவ்வளவு கட் ஆஃப் மார்க் தேவை இந்த‌ கல்லூரியில் சேர்வது என்றால் இவ்வளவு கட்ஆஃப் மார்க் வேண்டும் என்றேல்லாம் கூறுவதை நாம் கேட்டு இருப்போம்அனால் கட் ஆஃப்மார்க் என்றால் என்ன என்பதையும் அதை எப்படி கணக்கிடுவது என்பதையும் நம்மில்பலரும் அறிந்தது இல்லை.

அதை பற்றிய அறை குறை அறிவில் நாம் அதை எப்படி கணக்கிடுகின்றோம் என்றால் ஒருகுறிப்பிட்ட 3 பாடத்தில் நாம் எடுத்துள்ள மதிப்பென்களை கூட்டி 3 ஆல் வகுத்து வரும்விடையை தான் நாம்மில் பலர் கட் ஆஃப் என்று நினைத்து வைத்துள்ளோம்.

நாம் பொறியியல் கலந்தாய்விற்க்கு செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம் அதன்கட் ஆஃப் மார்க் கணிதம்இயற்பியல் மற்றும் வேதியலில் மாணவர்கள் எடுக்கும்மதிபென்கள் அடிப்படையில் கணக்கிடபடும்இதுவே மருத்துவ கலந்தாய்வாக இருந்தால்உயிரியல்வேதியல் மற்றும் இயற்பியலில் மாணவர்கள் எடுக்கும் மதிபென்கள்அடிப்படையில் கணக்கிடபடும்.

எப்படி கணக்கிடுவது?

நாம் பொறியியல் அல்லது மருத்துவ படிப்பில் சேர இருக்கின்றோம் கீழ் குறிப்பிட்டமதிப்பென்கள் தான் நாம் பெற்றுள்ளோம் என்று கருதி கொள்ளவும்.
பாடம்
மதிப்பென்
கணிதம்
189 / 200
வேதியல்
185 / 200
இயற்பியல்
180 / 200
உயிரியல்
190 / 200

இதனுடைய கட் ஆஃப் மார்க்கை எப்படி கணக்கிடுவது என்பதை நாம் அறிவோம்.

நாம் முன்பு குறிப்பிட்டது போல பொறியியல் கலந்தாய்வில் கணிதம்வேதியியல் மற்றும்இயற்பியலின் மதிப்பென்களை கொண்டே கட் ஆஃப் மார்க் கணகிடபடும்.

நம்முடைய கணக்கு மதிப்பென்னை 2 ஆல் வகுத்து இயற்பியல் மற்றும் வேதியியலின்மதிப்பென்களை தனித்தனியே 4 ஆல் வகுத்து வரும் விடைகளை கூட்டினால் நம்முடையகட் ஆஃப் மதிப்பென் வரும்.

கணக்கு               :                        189 / 2 = 94.5
இயற்பியல்             :                       180 / 4 = 45
வேதியல்                  :                       185 / 4 = 46.2
கட் ஆஃப் மார்க்     :                       94.5 + 45 + 46.2    =          185.7

இதுவே மருத்துவ கலந்தாய்வாக இருந்தால் கணிதத்திற்க்கு பதில் உயிரியலை வைத்துகணக்கிட வேண்டும்.

உயிரியல்       :        190 / 2 = 95.     
இயற்பியல்              :                       180 / 4 = 45.
வேதியல்                  :                       185 / 4 = 46.2
கட் ஆஃப் மார்க்     :                       95 + 45 + 46.2       =          186.2

தமிழக பொறியியல் மற்றும் மருத்துவ‌ கலந்தாய்வு கட் ஆஃப் மதிப்பென்னைகணக்கிடுவது எப்படி என்று புரிந்து இருப்பீர்கள் என்று நம்புகின்றேன்


இது தமிழகத்தில் நடத்தபடும் பொறியியல் மற்றும் மருத்துவ கலந்தாய்வு கட் ஆஃப்மதிப்பென் கணக்கிடும் முறை மற்ற தேர்வுகளுக்கும் கலந்தாய்வுகளுக்கும் கட் ஆஃப்மதிப்பென் கணகிடும் முறை மறுபடலாம்.
தொகுப்பு  : மு.அஜ்மல் கான்