Tuesday, 20 February 2018

Samsung Engineering Signs another Contract for (DRPIC) Oman Refinery Project !!

Image result for Duqm Refinery

Samsung Engineering announced on Monday that it clinched a formal contract for a project on building key facilities for an oil refinery in Oman worth one-point-one trillion won.
The move comes as the South Korean company and Britain’s PETROFAC secured last year a two-point-two trillion won contract for a 50/50 joint venture at the Duqm Refinery, located 550 kilometers south of Muscat.

The companies have received notification of intent to award the U&O (utilities and offsites) package, and expect to start work on the 47-month project subject to financial closure and full notice to proceed from Duqm Refinery and Petrochemical Industries LLC (DRPIC).

Image result for Duqm Refinery

The U&O contract consists of a utility production facility that produces water, air, steam and electricity essential to the plant, a tank that stores crude oil before and after the refinery, and a sewage treatment facility.

The Duqm refinery in Oman, part of Duqm special economic zone, is being developed over 2,000 acres and is expected to have a capacity of 230,000 bbl/d when completed.

Choong-Heum Park, president and CEO of Samsung Engineering said: “Samsung Engineering has already accomplished several large U&O projects. We will be able to successfully complete this project and further strengthen our market presence in the GCC, including Oman.”

The Gulf Cooperation Council (GCC) is a regional intergovernmental political and economic union consisting of Bahrain, Kuwait, Oman, Qatar, Saudi Arabia, and the United Arab Emirates.


Source : Samsung Magazine

Monday, 19 February 2018

தஷ்வந்த்துக்கு மரண தண்டனை ஒரு பாடம்!!

Image result for justiceகடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மவுலிவாக்கத்தில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஹாசினியை, அதே குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த் என்ற ஐடி ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்து, மிகக் கொடூரமாக எரித்துக் கொலைசெய்தார். இந்தச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

குடியிருப்பில் இருந்த சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களை வைத்து தஷ்வந்தைப் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ஹாசினியைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், சிறுமி கூச்சலிட்டதால் போர்வையால் அழுத்திக் கொலைசெய்து பின்பு தாம்பரம் அருகே உடலை எரித்ததாகவும் தஷ்வந்த் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவரைப் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், 6 மாதம் கழித்து குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

போக்சோ சட்டம் 6,7,8 பிரிவுகளின் கீழ் தஷ்வந்த் குற்றவாளி என செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அறிவித்துள்ளார்.

மேலும், ஆள் கடத்தல், கொலை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் குற்றம் நிறுபனம் ஆகி உள்ளது. 30 சாட்சிகள், 45 ஆவனங்கள், சி.சி.டி.வி. உள்ளிடட 19 சான்றுகள் அடிப்படையில் குற்றங்கள் நிரூபணம் ஆகி உள்ளன. இந்நிலையில் சிறுமி ஹாசினி, கொலை செய்யப்பட்ட வழக்கில் தஷ்வந்தைக் காவல் துறையினர் டிசம்பர் 13ஆம் தேதி செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் முன்பு ஆஜர்படுத்தினர்.

ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் 2017 டிசம்பரில் தனது சித்தி சரளாவைக் கொலைசெய்து தப்பிவிட்டார். பின்பு மும்பையில் பதுங்கியிருந்த அவரைத் தனிப்படை போலீசார் பிடித்தனர்.அப்போது, தன் மீதான கொலை வழக்குகளில் விரைந்து செயல்பட வேண்டும் என்று தஷ்வந்த் கோரிக்கை விடுத்தார்.இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்த காவல் ஆய்வாளர் விவேகானந்தன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அரசுத் தரப்பு சாட்சியங்களின் விசாரணை முடிவடைந்ததாக அரசு சிறப்பு வழக்கறிஞர் சீதாலட்சுமி தெரிவித்தார்.இருதரப்பு விசாரணையும் முடிவு பெற்றதால் ஹாசினி கொலை வழக்கில் பிப்ரவரி 19ஆம் தேதி தீர்ப்பு வழங்கவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில் புழல் சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் தஷ்வந்த் காலை 11.35 மணிக்கு நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார். ஹாசினியின் தந்தை பாபுவும் நீதிமன்றத்துக்கு வந்தடைந்தார். வழக்கில் தொடர்பில்லாதவர்களும், பத்திரிகையாளர்களும் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.. நீதிமன்றத்துக்குள் தஷ்வந்த் அழைத்துச்செல்லப்பட்டதும் நீதிமன்றக் கதவுகள் மூடப்பட்டன.அனைவரும் எதிர்பார்க்கும் முக்கிய தீர்ப்பு என்பதால்  செங்கல்பட்டு நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது. அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று ஹாசினி தரப்பு வழக்கறிஞர் ராஜா மஹேந்திர பாண்டியன் தெரிவித்துள்ளார். தஷ்வந்துக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று ஹாசினி தந்தை பாபு கோரிக்கை விடுத்துள்ளார்.இதையடுத்து நீதிபதி வேல்முருகன், தீர்ப்பை சரியாக 3 மணிக்கு வாசித்தார். தஷ்வந்த் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார் நீதிபதி. குற்றவாளி தஷ்வந்த் மீதான 302, 363, 366, 354(பி) 21 பிரிவுகளில் குற்றங்கள் நிரூபணமாகியுள்ளது என்று நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார். 

இதனைத்தொடர்ந்து மாலை 4.40 மணியளவில் தஷ்வந்திற்கு மரண தண்டனை விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். மேலும் தஷ்வந்திற்கு 46 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார் நீதிபதி வேல்முருகன்.



என்னுரை :

இவன் மட்டுமல்ல, இவனுக்கு கடைசிவரை உதவிய வக்கீல்கள் மற்றும் உறவுக்காரர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்திய வரலாற்றில் இந்த தூக்கு நடு ரோட்டில் போட்டு தொங்க விடணும். அப்பத்தான் மத்தவன் தப்பு செய்ய பயப்படுவான் அல்லது சிங்கப்பூர் மாதிரி ரெண்டு பிரம்படி (ரோத்தா) கொடுத்து, அது குணமானவுடன் மரண தண்டனை கொடுத்து இருக்க வேண்டும். தயவு செய்து மேல் முறையீடு, ஜனாதிபதி கருணை மனு என வருடக் கணக்கில் தண்ட சோறு போட்டு தூங்க வைக்காமல் சீக்கிரம் இவனை தூக்கில் ஏற்றி விட வேண்டும், அதை உலகம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். இனி குழந்தைகள் நிம்மதியாக வாழ இவனைப் போன்றவர்கள் உயிருடன் இருக்கக் கூடாது.
தொகுப்பு  : மு.அஜ்மல்  கான்.

Thursday, 15 February 2018

பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களுக்கு குவைத்தில் தடை ஏன் ? ஒரு தவகல்!!


குவைத் நாட்டில் தனது நாட்டு தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக புகார்கள் அதிகள் வந்து கொண்டிருப்பதால் பிலிப்பைன்ஸ், அந்நாட்டுக்கு வேலைக்குச் செல்ல தனது குடிமக்களுக்கு தடை விதித்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து மட்டும் 23 லட்சம் தொழிலாளர்கள் குவைத் உள்பட வெளிநாடுகளில் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக குவைத் நாட்டில் மட்டும் சுமார் 2.5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 


குவைத்தில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பிலிப்பைன்ஸ் நாட்டு பணிப்பெண் ஜோனா டெமாஃபிஸ்  (வயது 29 )படுகொலை ஆகும்.இந்த பெண் கடந்த 2014 ஆம் ஆண்டு குவைத்திற்கு வேலைக்கு வந்துள்ளார். இந்நிலையில் இந்த பெண் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக காணவில்லை.


பொதுமன்னிப்பு முன்னிட்டு இவருடைய குடும்பத்தினர் கொடுத்த புகார் அடிப்படையில் குவைத் பிலிப்பைன்ஸ் தூதரக அதிகாரிகள் குவைத் பாதுகாப்பு அதிகாரிகள் உதவியுடன் தீவிரமாக இந்த பெண்ணை தேடிவந்தனர்.இந்நிலையில் இந்த பெண்ணின் உடல் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மூடப்பட்ட நிலையில் இருந்த ஒரு வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செய்தி குவைத்தில் வாழும் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்த பெண் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னரே கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இவ்வளவு நாட்களாக இந்த பெண்ணின் உடல் குளிர்சாதனப் பெட்டியிலேயே இருந்துள்ளது.இதையடுத்து இதில் தொடர்புடைய லெபனான் நபர் மற்றும் அவரது சிரியா மனைவியையும் குவைத் அதிகாரிகள் தீவிரமாக தேடிவருகின்றனர்.


இந்நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த பணிப்பெண் உடல் குவைத் அல்-சபா பிணவறையில் வைக்கப்பட்டு பல்வேறு வழிகளில் குவைத் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க அதிரடியாக விசாரணையில் இறங்கியுள்ளனர்.இதையடுத்து குவைத் சட்ட நடவடிக்கைகள் முடிந்த நிலையில் இன்று உடல் தாயகம் அனுப்பப்பட்டது. நேற்று குவைத் பிலிப்பைன்ஸ் தூதரக அதிகாரி ரெனே வில்லா நேரடியாக குவைத் அல்-சபா மருத்துவமனைக்கு சென்று ஜோனா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்பு இவரது  உடல் குவைத் விமான நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.இந்த நிகழ்வு அனைத்து முடியும்வரையில் தூதுவர் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் வேலையில் இருக்கும் பிலிப்பைன்ஸ் மக்கள் குறிப்பாக பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வதாக புகார்கள் குவிந்தன.இது போன்ற புகார்கள் அதிகளவில் எழுந்துள்ளதை அடுத்து குவைத்துக்கு வேலைக்காக செல்ல தனது குடிமக்களுக்கு தற்காலிக தடை விதித்து பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ உத்தரவிட்டுள்ளார். பாலியல் துன்புறுத்தல் குறித்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.




குவைத் பாராளுமன்ற கூட்டத்தில் சில நாடுகளிலிருந்து வீட்டுத் தொழிலாளர்களை அழைத்து முடிவு எடுக்கப்பட்டது:

இதையடுத்து இன்று பாராளுமன்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் Khaled Al-Roudhan அவர்கள் பரிந்துரை செய்தார்.
இதன் அடிப்படையில் வங்கதேசம், நேபாளம், வியட்நாம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களை குவைத்தில் பணிப்பெண் வேலைக்கு அழைத்து வர விரைவில் விசா வழங்க அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

மக்களின் உயிருக்கு ஆபத்தும் விளைவிக்கக்கூடிய, ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை பற்றிய விழிப்புணர்வு பார்வை !!!



Related image                                                                                                                                                          குஜராத்,மஹாராஷ்டிர மாநிலமும்,  கோவாவும் இந்தஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காத நிலையில், தமிழகத்தில் மட்டும் இந்த உயிர் குடிக்கும் எமன் உட்கார்ந்து இருக்கிறது.பல்வேறு மாநிலங்களில் இருந்து துரத்தப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வரும் இந்த ஸ்டெர்லைட் உருட்டு ஆளை சுற்று சூழலை மாசுபடுத்த கூடியது .தூத்துக்குடியை சுற்றி வாழும் லட்சக்கணகான மக்களை பலவிதங்களில் பாதிக்க கூடியதும் இதன்மூலம் ஆயிரக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் விவசாய விலை நிலங்கள் அழியும் ஆபத்து ஏற்ப்பட்டுள்ளது. 


இதை பற்றிய விழிப்புணர்வு மற்றும் வரலாற்றை இங்கு காண்போம்...
Image result for sterlite in tuticorin
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டுமென்று 1996ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு 14 ஆண்டுகள் கழித்து 2010 ம் ஆண்டு தாமிர உருக்காலையை மூடவேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழ்ங்கியது. ஸ்டெர்லைட் வெளியேற்றும் கழிவு மற்றும் மாசால் பாதிக்கப்படும் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி ஆரவாரத்தோடு அந்த தீர்ப்பை வரவேற்றார்கள், ஆனால் இரு வாரத்திற்குள் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை வழங்கிவிட்டது (எல்லாம் எதிர்பார்த்தது தான்). சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இந்த ஆலையை மஹாராஷ்ட்ரா அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து தமிழக அரசு வாரியணைத்து தூத்துக்குடி அருகே ஸ்டெர்லைட் ஆலையமைக்க நிலம் கொடுத்தது. எந்த ஆட்சியானலும் தமிழகம் தொழிற்துறையினருக்கு மிகவும் சாதகமாகவே, அந்த தொழிற்சாலையால் மக்களுக்கு எவ்வளவு பாதகம் இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு கவலை இருந்ததில்லை.



இந்த ஆலை அமைக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் “தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய” த்தின் அறிக்கை தான் என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த பதினான்கு ஆண்டுகால தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் அருகிலுள்ள மீளவிட்டான்,தெற்குவீரபாண்டியபுரம் ஆகிய இரண்டு கிராமங்களிலும் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, அடிகுழாய்களில் குடிநீர் பிடித்தால் மஞ்சள் நிறமாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் ஜிப்சம் கழிவு அருகிலுள்ள ஓடையில் கலந்துள்ளதால் செப்டம்பர் 30 தேதியன்று 7 ஆடுகள் நீரைக்குடித்ததால் இறந்துள்ளன. அருகிலுள்ள கிராம மக்கள் மூச்சுத்திணறால் பாதிக்கப்படுகின்றனர், குழந்தைகள் மூட்டுவழியாலும் பல் வலியாலும் அவதிப்படுகின்றனர். பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட நிலத்தடி நீரில் copper,chrome, lead, cadmium மற்றும் arsenic போன்ற நச்சுகள் உள்ளதாக உயர்நீதிமன்றத் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.மேலும் chloride மற்றும் fluride ன் அளவு சராசரியாக குடிநீரில் உள்ளதைவிட அதிகமாக இருந்துள்ளது.

சுற்றுச்சூழலை சீரழிக்கும் இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வேலைசெய்கின்றனர். ஸ்டெர்லைட் தொடங்கப்பட்ட 1996ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டுவரை 13 பேர் விபத்தில் இறந்துள்ளனர்,139 பேர் காயமடைந்துள்ளனர். 1997ம் ஆண்டு நடந்த கொதிகலன் வெடிப்பால் இரு ஊழியர்கள் கோரமாக உயிரிழந்துள்ளனர். கடந்த செப்டம்பர் 26ம் நாள் ஆஸிட் டேங்கர் லாரியை சுத்தம் செய்யும் போது ஒருவர் மரணமடைந்தார். தொழிற்சாலைகளில் செயல்படுத்தும் பாதுகாப்புவிதிகளை மீறுவதினாலேயே இந்த விபத்துகள் ஏற்படுகின்றன.

தூத்துக்குடியின் கடலில் பவளபாறைகள் உலகில் ஐந்து பவளப்பாறை படிவங்களில் ஒன்றாகும், கந்தக அமிலம் கலந்த வாயுக்கள் 25 கிலோமீட்டர் வரை பவளப்பாறைகளைப் பாதிக்கிறது, ஆனால் பவளப்பாறை தீவிலிருந்து ஸ்டெர்லைட் ஆலை 15 கிமீ தூரமே உள்ளது. எல்லா விதிகளையும் மீறி தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் இந்நிறுவனத்திற்கு அனுமதியளித்துள்ளது. இந்த அனுமதி குறித்து முழுமையாக விசாரிக்கப்படவேண்டும்.

1998ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் NEERI என்ற சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஸ்டெர்லைட் குறித்த அறிக்கை கேட்டுள்ளது, NEERI அளித்த அறிக்கையில் நிறுவனம் தொடங்க தவறான வகையில் அனுமதி,அளவுக்கதிகமான உற்பத்தி, ஆபத்தான கழிவுகள், கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றியது, நிலத்தடிநீர் மாசுபாடு, தேவையான கிரீன்பெல்ட் ற்கு மரங்களை வளர்க்கவில்லை என அறிக்கையளித்ததால் 1998 நவம்பர் மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது, அதன் பின்னர் இரண்டு மாதங்கள் ஆலையை இயக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்தபோது மீண்டும் NEERI யிடம் மற்றொரு அறிக்கை கேட்டது. ஆனால் அந்த அறிக்கையில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு சாதகமாக அவர்கள் சுற்றுச்சூழலை பாதிக்காதவண்ணம் ஆலையை மறுசீரமதைத்தாக அறிக்கையளித்தது.

அரசின் நிரவாகம், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், நீதிமன்றம் என அனைத்தும் வேதாந்தா என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு உடந்தையாக செயல்படுகிறது. குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டுவதற்காக பன்னாட்டு நிறுவங்கள் சுற்றுச்சூழல், பாதுகாப்பு விதிமுறைகள் எவற்றையும் பின்பற்றாமல் இந்தியாவை மட்டுமல்ல இந்தப் புவியையே நாசம் செய்து வருகிறார்கள். வேதாந்த நிறுவனம் ஒரிஸ்ஸாவில் ஃபாக்சைட் சுரங்கம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மறுத்துள்ளதோடு அந்த நிறுவனம் அலுமினிய சுத்திகரிப்பு ஆலைகழிவுகளை வெளியேறியதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்தவும் ஆணையிட்டுள்ளது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அரசின் சட்டமன்றம்,நிர்வாகம் எங்கும் லஞ்சப்பணத்தின் சீர்கேட்டால் மக்கள் நீதிமன்றங்களிடம் செல்கின்றனர். நீதிமன்றத்தீர்ப்புகளும் முன்னே குறிப்பிட்ட அமைப்புகளிடமிருந்து எவ்விதத்திலும் மாறுபட்டதல்ல என்பதை சமீபத்திய தீர்ப்புகள் விளக்குகின்றன. மனிதசமுதாயம் நாகரீகமடைந்து “வலுத்தவன் வாழ்வான்” என்ற கோட்பாடிலிருந்து மாறி எளியோரை வலியோரின் அடக்குமுறைகளிடமிருந்து காக்கவே அரசு செயல்படுவதாக தோற்றமளிக்கிறது. எளியோர் பாதிக்கப்படும்போது அதற்காக நீதிமன்றத்தை சாதாரணமக்களும் நாடலாம் என உரிமையளிக்கிறது, ஆனால் நீதிமன்றங்கள் கோபம் கொண்ட மக்கள் வன்முறையை நாடாமல் செய்வதற்குள்ள “relief device" ஆகத்தான் உள்ளது.மக்களுக்கு ஏற்படுகிற பாதிப்பையும், சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் கருத்தில் கொண்டு வெகுவிரைவிலேயெ உச்சநீதிமன்றம் மக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கட்டும், தாமதமான நீதியும் மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்பதையும் கவனத்தில் கொள்ளட்டும்.


என்னுரை :
 
ஸ்டெர்லைட் ஆலை இயங்குகிற ஒவ்வொரு நாளும், அங்கு வாழும் மக்களின் ஆரோக்கியத்துக்கும், உயிருக்கும் ஆபத்து என்பதாலும், ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ளவர்கள், தங்கள் உடல் நலனைக் காக்கவும், தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அனைவரையும் பாதுகாப்புடன் வாழ வைக்கவும், ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்ற வேண்டியதே தலையாய கடமை என்பதால், இந்த‌ தர்ம யுத்தத்தில் அரசியல் கட்சிகள், சாதி, மதம் கடந்து அனைவரும் பங்கு ஏற்க வேண்டும்.

மக்களின் உடல் நலனுக்குப் பெருங்கேடும், உயிருக்கு ஆபத்தும் விளைவிக்கக்கூடிய, ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடவும், மக்களின் நலன் காக்கவும், மக்களின் தர்மயுத்தம் தொடருகிறது.
ஆக்கம் மற்றும் தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Thursday, 8 February 2018

Most Top 5 Reasons Pre maturely fail in Commercial HVAC Coils!!


Image result for hvac Coil Plugging
Coil Plugging:
If you are not changing filters and/or your commercial HVAC coils are not properly cleaned in a timely manner, your coil will actually begin to act as a filter. When dirt builds up on the coil, that blockage prevents heat transfer and can cause an approximate 20% to 40% drop in performance. Dirt adds to the coil resistance and can be a primary cause for your coil to fail prematurely.


Vibration: When your HVAC coils are installed near a moving piece of equipment, vibration can occur and cause leaks. You can tell if vibration is the main cause if leaks are near the tube sheet and look like they are slicing through the tube. If/when that happens, the coils should be isolated from the rest of the system to prevent vibration from causing damage. One way to combat this is by oversizing the tubesheet holes, but many manufacturers will not do this. Condenser Coils are usually the most common victims of vibration.

Corrosive Environment: This applies to both the air in the environment and inside the tubes. For instance, if there is a corrosive element in the air, it will eat away at the copper tubes; whether you have 0.020” wall or 0.049” wall. This is very common in coastal areas where there may be salt in the air. To keep the costs down from going to a stainless steel or cupro-nickel coil, we usually suggest coating the HVAC coils. Coatings are almost always within your budget, and its application will only add about a week to the overall lead time. Steam condensate and untreated water can cause corrosion within the tubes of HVAC coils as well. If you have a steam coil that has failed before the one year warranty, there’s a great chance that corrosive agents are in the steam, and it’s eating away at the copper tubes.

Freeze-Ups:
Most people think that when HVAC coils freeze, the water or condensate laying in the coil freezes into ice and it expands causing the tubes to bulge and eventually spring leaks. What really happens is that the coil will freeze in multiple areas simultaneously, and it’s the pressure between these areas that cause the tubes to swell and eventually burst. These are very easy to spot as the leaks will run the length of the tube rather than around the tube. ALSO be very careful when considering “freeze-proof” coils! If you remove 5-6 inches from the fin length to make the “freeze-proof” application fit, your coil’s performance will suffer considerably. 

System Design: You would be amazed to learn how many HVAC coils were never designed properly for their systems. If there is a design problem, replacing the coil will only waste time and money; while you have done nothing other than duplicate the previous problem. A little known fact in the replacement market is that a high percentage of all our projects are because the coils were built incorrectly or were never designed correctly in the first place. In some cases, owners attempt to improve the coil’s performance by adding additional rows. Most however do this without taking into account the air pressure drop or fluid pressure drop that comes with it.

When dealing with an HVAC coil manufacturer, try to partner up with one who will walk you through the engineering and explain it along the way. Capital Coil & Air has well over a decade of experience and can help you diagnose whatever problem that you are experiencing correctly the first time. We look forward to working with you on your next project!

Samsung Engineering $ 3.1 Billion awarded from ADNOC in UAE.


Samsung Engineering Co., Ltd announced today that it has received a letter of award (LOA) to build a Crude Flexibility Project (CFP) on behalf of ADNOC Refining in the United Arab Emirates. At a value of $ 3.1 billion, it is the ninth award in total Samsung Engineering received from ADNOC (Abu Dhabi National Oil Company), the national oil company of UAE and the parent company of ADNOC Refining.
Samsung Engineering secured the contract in partnership with CB & I Nederland B.V. as joint venture partner. Samsung’s contract amount is $ 2.6 billion.

This project will be built at the Ruwais Industrial Complex (the largest industrial complex in the UAE). It will construct a new Atmospheric Residue De-Sulfurization (ARDS) facility, with an annual capacity of 177,000 barrels per day. The estimated completion schedule will see project delivery end of 2022. 

Samsung Engineering has previously delivered six projects in the Ruwais complex, two of which are directly linked to CFP. Therefore, not only is it possible to fully utilize the existing experienced manpower, equipment, facilities and partner network, but also build on our strong relationship with ADNOC Refining.

Sungan Choi, President & CEO of Samsung Engineering stated: "We were able to win this project based on our track record of delivering safely and on schedule.” Further was stated: “We will do everything in our power to successfully execute CFP by utilizing our global experience in the refining sector.”

The state-run energy company awarded the engineering, procurement and construction contract for the CFP project to a joint venture between South Korea’s Samsung Engineering and Netherland’s CB&I. The company didn’t disclose the value of the contract.

The project entails adding an Atmospheric Residue De-Sulphurisation unit to enable the refinery to process the Upper Zakum, or other similar crudes, Adnoc said.

“The ARDS technology is extensively used in upgrading medium to heavy petroleum oils and residues to more valuable clean environmentally friendly transportation fuels and to partially convert the residues to produce low-sulfur fuel oil and hydrotreated feedstocks,” the company said.

Adnoc's refinery upgrade is in line with global trends to reduce costs and extract higher value from processing crudes, said Spencer Welch, director for oil markets and downstream at London-based IHS Markit.

"The purchase cost of crude is the biggest cost in running an oil refinery, [and] having greater flexibility in crude purchasing is very important because it strengthens the purchasing/trading position of the refinery and potentially significantly reduces costs," he said.

"Globally refiners are constantly assessing investment and improvements, to increase the ability to upgrade crude to lighter products, reduce costs and increase purchasing options."

The UAE, the Arabian Gulf's second-largest oil producer behind Saudi Arabia, in November announced a spending commitment of Dh400 billion over the next five years and plans to invest more than 40 per cent of the total to diversify and grow its downstream businesses as part of a strategy to triple petrochemical production by 2025.

It is also building the largest integrated refining and petrochemical site in the world, at Ruwais, aimed at converting 20 per cent of Adnoc’s crude to chemicals.

The company is also on track to expand crude capacity to 3.5 million barrels per day to support future demand, particularly in Asia.

"There are several advantages to the refinery being able to process a variety of crude grades," said Richard Mallinson, analyst at consultancy Energy Aspects. "Murban prices at a premium to heavier UAE grades such as Upper Zakum, so Adnoc will usually generate more revenue from exporting Murban. The refinery can also use the flexibility to process the feedstocks that offer the best economics at any given time.


Source :  Samsung Magazine.

Tuesday, 6 February 2018

தேனிக்காரரின் விரலசைவில் இயங்கும் வீடு !! ஒரு அறிவியல் பார்வை..

ஜெமிகேட்ஸ் ஹேக்வே ஸ்மார்ட்-ஹப் டெமோ கிட்
சில தினங்களுக்கு முன்னால் சான்பிரான்சிஸ்கோ நகரத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய கூகுள் தமிழர் சுந்தர் பிச்சை, “நெருப்பையும் மின்சாரத்தையும்விட மனித குலத்துக்குச் செயற்கை அறிவுத்திறன் அதிமுக்கியமானது” என்றார். ஏற்கெனவே தன்னுடைய கூகுள் வலைப்பூவில், “எதிர்காலத்தைப் பார்க்கிறேன். அதில் கருவிகள் கிடையாது. எல்லாவற்றுக்கும் மொபைல் போனைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் உலகம், அத்தனைக்கும் செயற்கை அறிவுத்திறனைத் தேடும் உலகமாக மாறப்போகிறது” என்று பதிவிட்டிருந்தார்.
“எல்லாவற்றுக்கும் செயற்கை அறிவுத்திறனா? இது சாதாரணர்களின் வாழ்க்கையில் சாத்தியமல்ல” என்று இப்போது நாம் விவாதிக்கலாம். ஆனால், இப்படித்தான் பத்தாண்டுகளுக்கு முன்னால் மொபைல் போனைப் பற்றியும் நாம் நினைத்துக்கொண்டிருந்தோம். முக்கியமாக இந்தக் கருத்தைச் சொன்னது, புதிய தொழில்நுட்ப உலகைக் கட்டமைக்கும் பிரம்மாக்களில் ஒருவரான சுந்தர் பிச்சை என்பதில்தான் சூட்சுமம் அடங்கியுள்ளது!

தொழில்நுட்பத் தோழி

இதன் ஒரு கட்டமாக உலகத்தைக் குரலால் இயக்கும் தொழில்நுட்பத் தலைமுறைக்கு நாம் வந்திருக்கிறோம். சொன்னதையெல்லாம் கேட்ட மாத்திரத்தில் செய்யும், ‘கூகுள் ஹோம்’ (Google Home), ‘அமேசான் எக்கோ’ (Amazon Echo), ‘ஆப்பிள் சிரி’ (Apple Siri) போன்ற அதிநவீனக் கருவிகளை கூகுள், அமேசான், ஆப்பிள் போன்ற பெருநிறுவனங்கள் போட்டிபோட்டு தயாரித்துக்கொண்டிருக்கின்றன. குரல் ஆணையில் இயங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் வயர்லெஸ் ஒலிப்பெட்டிகள் இவை.
பாடல் இசைப்பது, அலாரம் வைப்பது, போக்குவரத்து நெரிசல் தகவல்களை அறிவிப்பது, கார் புக்கிங் செய்வது, ஒலிப் புத்தகங்களை வாசிப்பது, வீட்டிலுள்ள விளக்குகள்; ஏசி ஆகியவற்றை ஆன்/ஆஃப் செய்வது, யூடியூப் வீடியோவைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது – இப்படி நம்முடைய வீட்டில் என்னவெல்லாம் செய்யச் சொல்கிறோமோ, நம்முடன் உரையாடியபடியே அவற்றைச் செய்துமுடிக்கும் சகலகலாத் தொழில்நுட்பத் தோழிகள் இவை.
2015-லேயே அமெரிக்கச் சந்தையில் அறிமுகமான இதுபோன்ற கருவிகள் அடுத்தடுத்துத் தொழில்நுட்பரீதியாக மேம்படுத்தப்பட்டுவருகின்றன.  

செலவு குறைவான மாற்றுவழி

கடந்த ஆண்டு இந்தியச் சந்தைக்குள்ளும் அவை கால்பதித்துவிட்டன. ஆனால், தற்போதைக்கு இரண்டு காரணங்களுக்காக இவற்றை வாங்கிப் பயன்படுத்துவது சிலருக்கு மட்டுமே இந்தியாவில் சாத்தியம். ஒன்று விலை, மற்றொன்று தொழில்நுட்பத் தளம்.
ஜெமிகேட்ஸ் ஹேக்வே ஸ்மார்ட் ஹப் ஆப்ஸ்
இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் (Internet of Things) என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில்தான் அமேசான் எக்கோ, கூகுள் ஹோம் போன்ற கருவிகள் இயங்குகின்றன. இவற்றைக் கொண்டு நம்முடைய வீட்டு உபயோக சாதனங்களான தொலைக்காட்சிப் பெட்டி, ஃபிரிட்ஜ், வாஷிங் மிஷின், அலமாரி ஆகியவற்றை இயக்க வேண்டுமானால் அவை அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இன்று நாம் பயன்படுத்துவதில் பெரும்பாலானவை எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் சாதனங்கள்தான். இத்தகைய சாதாரண சாதனங்களையும் இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் கொண்டு இயக்கவும் கட்டுப்படுத்தவும் மாற்றுவழியைக் கண்டுபிடித்துள்ளனர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ. எம்பெடெட் சிஸ்டம் டெக்னாலஜீஸ் (M.E. Embedded System Technologies) பட்டம்பெற்ற விஜயராஜா ரத்தினசாமி மற்றும் அவர் குழுவினர்.
நாம் தற்போது பயன்படுத்திவரும் வீட்டு உபயோக சாதனங்களை டிஜிட்டலாக மாற்றும் ‘Gemicates Hagway Smart Hub’ என்ற இணைப்பு மையத்தை இவர் வடிவமைத்திருக்கிறார்.


உள்ளங்கையில் வீடு..

“எம்படெட் சிஸ்டம் தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்தியாவின் மத்தியதர வர்க்கத்தினரும் புதிய தொழில்நுட்பப் பாய்ச்சலை எட்டிப்பிடிக்க முடியும். ஏனென்றால், touch screen பொருத்தப்பட்ட எலக்ட்ரானிக் சாதனங்களான வாஷிங் மிஷின், இண்டக்ஷன் ஸ்டவ், மொபைல் ஃபோன் ஆகியவற்றின் display panel-ல் எம்பெடெட் தொழில்நுட்பத்தின் மென்பொருளும் வன்பொருளும் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் சாதாரண மின், மின்னணு சாதனங்களையும் டிஜிட்டலாக மாற்றலாம்.
உதாரணமாக, தற்போது எலக்ட்ரானிக் முறையில் இயக்கப்படும் டிராஃபிக் சிக்னல் விளக்குகளை டிஜிட்டலாக மாற்றலாம். அதில் ஜி.பி.எஸ். பொருத்தினால், ஆம்புலன்ஸ் ஒரு தெருவுக்குள் நுழையும்போது தானாகக் கண்டறிந்து போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் சமிக்ஞைகளை அது அனுப்பும். இப்படி இணையதள வசதியை கொண்டு மற்ற பொருட்களை இயக்குவதுதான் இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ். இந்த அடிப்படையில்தான் வீட்டு உபயோகப் பொருட்களை இயக்கும் ஜெமிகேட்ஸ் ஹேக்வே ஸ்மார்ட்-ஹப் உருவாக்கியிருக்கிறேன்” என்கிறார் விஜயராஜா.

வாய்ஸ் கண்ட்ரோல் ரோபோட்
கைக்கு எட்டும் தூரத்தில்..

தேனி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த விஜயராஜா, 2012-ல் பி.இ. எலக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் இறுதி ஆண்டு படிக்கும்போதே செவி மற்றும் பார்வைக் குறைபாடு உடையவர்களுக்கு ‘Voice Control Humanoid Robot’-ஐ வடிவமைத்தார். அப்போதே தனக்கு ரோபோட்டிக்ஸ், எம்பெடெட் தொழில்நுட்பம் மீது தீராத காதல் இருந்ததாகக் கூறுகிறார். ஆனால், போதுமான நிதி உதவியோ ஊக்கமோ இல்லாததால் அவருடைய கண்டுபிடிப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல முடியவில்லை.
தற்போது, தன்னுடைய அடுத்த கண்டுபிடிப்பை நட்பும் தொழில்நுட்பத் திறனும் கொண்ட குழுவினரோடு இணைந்து உருவாக்கியுள்ளார். தொழில்நுட்ப உதவியாளர் ரஞ்சித்குமார், மிடில்வேர் டெவலப்பர் ராஜராஜன், பிசிபி டிசைனர் தீபலட்சுமி, ஆப்ஸ் டெவலப்பர் பிரஷாந்த், ஐ.ஓ.எஸ். டெவலப்பர் செல்வா, கிளவுட் கம்ப்யூட்டிங் டெவலப்பர் ரகு ஆகியோர் இந்தப் புதிய கண்டுபிடிப்புக்குப் பின்னால் உழைத்திருக்கிறார்கள்.
“ஜெமிகேட்ஸ் ஹேக்வே ஸ்மார்ட் ஹப்-ஐ பல்ப், மின்விசிறி, வாஷிங்மெஷின் போன்ற சாதனங்களின் எலக்ட்ரிகல் போர்டில் பொருத்திவிடுவோம்.
மின்விளக்குகளைக் கட்டுப்படுத்தும் ஆப்ஸ்
நாங்கள் வடிவமைத்த வைஃபை வசதியில் செயல்படும் ‘ஸ்மார்ட் வீடு’ ஆப்ஸை ஆண்ட்ராய்டு ஃபோனில் பதிவிறக்கம்செய்வோம். இப்போது நம் உள்ளங்கையில் உள்ள ஸ்மார்ட் ஃபோன் வழியாக பல்ப், மின்விசிறி ஆகியவற்றை இஷ்டம்போல இயக்கலாம்.
இதேபோல ஸ்மார்ட் பூட்டு, ஸ்மார்ட் வெப்பநிலைச் சீராக்கி, ஸ்மார்ட் ஜன்னல் என ஹோம் ஆட்டோமேஷன் மூலம் நவீன வாழ்க்கை முறை எல்லோருக்கும் சாத்தியமாகும். இதன்மூலம் மின்சாரம் சேமிக்கப்படும், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்காகப் பயன்படும், பணம் மற்றும் நேரம் விரயமாகாமல் தவிர்க்கலாம்.
பெருநிறுவனங்கள் தயாரிக்கும் இத்தகைய சாதனங்கள் குறைந்தபட்சம் ரூ. 40 ஆயிரத்துக்கு விற்கப்படுகின்றன .
அதற்கேற்றமாதிரி நம்முடைய வீட்டு உபயோகப் பொருட்களை மேம்படுத்த ரூ. 2 லட்சமாவது செலவாகும். ஆனால், நாங்கள் வடிவமைத்திருக்கும் ஆப்ஸ் மற்றும் ஹப் ரூ. 20,000 தான்.
இதற்கான காப்புரிமை மட்டும் கிடைத்துவிட்டால் இந்தியத் தொழில்நுட்பச் சந்தையில் இது ஒரு புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும்” என்கிறார் ஸ்மார்ட் வீட்டை உருவாக்கும் இந்த இளம் தொழில்நுட்ப நிபுணர்.

நன்றி : தி இந்து நாளிதழ்.

Tuesday, 30 January 2018

அலாவுதீன்கில்ஜியின் உண்மை வரலாறு என்ன..? ஒரு சரித்திர பார்வை..

Image may contain: 3 peopleமுன்னுரை:-

சமீபத்தில் வெளிவந்த பத்மாவதி என்ற திரைப்படம், பல சர்ச்சைகளை சுமந்து வந்திருப்பதை அறிவோம். இப்படத்தில் வரலாற்றை தவறாக சித்தரித்துள்ளதாக வட இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்து ஓய்ந்த பின்னரே வெளியானது இத்திரைப்படத்திற்கு கூடுதல் விளம்பரங்களை செலவில்லாமல் தேடித்தந்தது.
மேலும், அப்படத்தில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச்சேர்ந்த தனிநபரை இழிவுபடுத்தியதாகவும் கூக்குரல்கள் எழுந்தன. குரல் எழுப்பியவர்கள் குறிப்பிட்டதோ ரஜபுத்திர ராணியான பத்மாவதியை. ஆனால், திரைப்பட குழுவினர் திட்டமிட்டு தாக்கியதோ இசுலாமிய சுல்தானான அலாவுதீன் கில்ஜியை தான்.



Image may contain: 1 person
யார் இந்த "அலாவுதீன் கில்ஜி ? இவரது உண்மை  வரலாறு என்ன என்பதை  அனைவரும் அறிந்து கொள்வதற்காகவே இக்கட்டுரை.



உண்மை வரலாறு......

கில்ஜி என்பது ஒரு பாரசீக மொழி வார்த்தையாகும். இது ஒரு வம்சத்தை குறிக்கிறது. டெல்லியை ஆண்ட இரண்டாவது வம்சம் கில்ஜி வம்சம். இதைத் தோற்றுவித்தவர் ஜலாலுதீன்கில்ஜி என்பவர் ஆவார்.இவரின் மருமகன் தான் இன்று சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ள "அலாவுதீன் கில்ஜி".
இவர்கள் இன்றைய துருக்கி நாட்டைச் பூர்வீகமாக கொண்டவர்கள் ஆவர். 1290 முதல் 1320 வரை தெற்கு ஆசியா முழுவதும் பரவியிருந்த ஓர் மிகப்பெரிய அரசு தான் கில்ஜி வம்ச அரசு.
ஆட்சி :

அலாவுதீன் கில்ஜியின் காலகட்டத்தில், மிகப்பெரிய திருப்புமுனையாக இந்தியாவின் மீதான மங்கோலியர்களின் படையெடுப்பு முறியடிக்கப்பட்டது.

அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரும் வலிமையுடன் இருந்த, மங்கோலியர்களின் கொடூர தாக்குதல்களிலிருந்து தனது அரசை காத்துக்கொள்ள வடமேற்கு எல்லைப்பகுதி நெடுகிலும் கோட்டை கொத்தளங்கள் அமைத்து, காவலுக்கு பெரும் படைகளை நிறுத்தினார்.

மங்கோலியர்களுக்கு எதிராக,
1298ல் ’சலந்தரில்’ நடந்த போரிலும்,
1299ல் கில்லியில் நடந்த போரிலும்,
1305ல் அம்ரோகாவில் நடந்த போரிலும்,
1306ல் இராவி ஆற்றாங்கரையில் நடந்த போரிலும் அலாவுதீன் கில்ஜி வெற்றி பெற்றார்.
தனது இருபது ஆண்டு கால ஆட்சியில் பல போர்க்களங்களில் வெற்றி வாகைசூடி, தனது டெல்லி அரசை படிப்படியாக விரிவாக்கினார். 1305ல் மங்கோலியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தார். மங்கோலியர்களை ஆப்கானிஸ்தானை விட்டு விரட்டி அடித்து ஆப்கானிஸ்தானை டெல்லி அரசுடன் இணைத்துக் கொண்டார்.

இம்முயற்சி நடைபெறாமல் இருந்திருந்தால், ஒருங்கிணைந்த இந்திய தேசம் இன்று வரை கூட மங்கோலியர்களின் காலணியாதிக்க நாடாக இருந்திருக்கக்கூடும்.

மேலும், இன்றைய இந்திய தேசம் சிதறுண்டு சிறுசிறு ராஜ்ஜியங்களாகவும், சமஸ்தானங்களாகவும் இருந்ததைக்கண்டு, அனைத்தையும் இணைக்க பாடுபட்டார். அவரது இவ்விருப்பத்திற்கு மறுப்பும், எதிர்ப்பும் தெரிவித்த அரசர்களை போர் மூலம் வெற்றி கொண்டார்.
இப்படியாக "ஆப்கானிஸ்தான்முதல்மதுரை" வரை தனது ஆட்சிப்பகுதியை விரிவுபடுத்தினார். கில்ஜியின் பெயரை கேட்டாலே, மற்ற அரசர்கள் அஞ்சி நடுங்கும் மாபெரும் சுல்தானாக வலம் வந்தார்.
அதாவது உலக வரைபடத்தில், கில்ஜி ஆட்சியின் எல்லைகளான ஹெராத் நகருக்கும் மதுரைக்கும் ஒரு நேர்கோடு வரைந்தாலே அது 4300 கிலோமீட்டர்தொலைவை விஞ்சும்.


பொருளாதாரத்தில் சீர்திருத்தம்:

சுல்தான் அலாவுதீன் கில்ஜி ஒரு குறிக்கோளுடன் கூடிய உறுதி மிக்க ஆட்சியாளராக திகழ்ந்தார். தனது வெற்றியின் அடித்தளத்திற்கு வளுவான, நிலையான படையாணிகளை நாடெங்கும் நிலை நிறுத்தினார். சந்தைப் பொருட்களுக்கு சரியாக கணக்கிட்டு விலை விதித்து, அதற்கான விதிகள் இயற்றினார். அதனை கண்காணிக்க அரசு அலுவலர்களை நியமித்தார். பெருஞ்சந்தைகளில் விளைபொருட்களுக்கு சரியான விலையில் விற்கப்படுவதை கண்காணிக்க அரசு மேற்பார்வையாளர்களை நியமித்தார்.

கூடுதல் விலையில் விளைபொருட்களை விற்கும் வணிகர்கள் மீது கடும் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் சரியான விலை கொடுத்து மக்கள் பொருட்கள் வாங்கினர். தேவைக்கு அதிகமான விளைபொருட்கள் அரசு கிட்டங்கிகளில் (Ware House) சேமிக்கப்பட்டது. இதனால் வறட்சி காலத்தில் விளைபொருட்கள் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டது.

உளவுத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை :


அலாவுதீன் கில்ஜி மிகச் சிறந்த உளவுப்படையை வைத்திருந்தார். எனவே தனக்கு எதிரான கலகங்களையும், சதித் திட்டங்களையும் முளையிலேயே கிள்ளி எறிந்தார். அரசுக்கு எதிராக செயல்படும் கலகக்காரர்களின் சொத்துகளையும், மதகுருமார்களின் சொத்துகளும் அரசால் கைப்பற்றப்பட்டது. அரச துரோகிகளுக்கு கடும் தண்டனை வழங்கினார். எனவே பிரபுக்களும், நெருங்கிய உறவினர்களும், மதகுருமார்கள் எவரும் கில்ஜிக்கு எதிராக சதித்திட்டம் அல்லது கிளர்ச்சி செய்ய முன் வரவில்லை.

தனது நாட்டில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் #லஞ்சம் பெறுவதை தடுத்து நிறுத்தினார். விவசாயத் தொழில் செய்யும் மக்களிடமிருந்து கூடுதல் நிலவரி வசூலிப்பதை தடுத்தார்.


தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சர்ச்சைகள் :


அலாவுதீன் கில்ஜி கி.பி.1250 ஆம் ஆண்டு வங்காளத்தில் உள்ள பிர்பும் என்ற ஊரில் பிறந்தார். அலாவுதீன் கில்ஜி முறையாக சில திருமணங்களை செய்து கொண்டவர். அவருடைய முதல் மனைவி, அவருடைய மாமா ஜலாலுதீன் கில்ஜியின் மகளாவார். இவருக்கு நான்கு மகன்கள்.
1. ஷிஹாபுதீன் உமர், 2.குதுபுதீன் முபாரக், 3. கிஸ்ர் கான், 4. ஷாதி கான். ஆகியோரே அவர்கள்.

உண்மை வரலாற்றை புரட்டி பார்த்தோமேயானால், அலாவுதீன் கில்ஜி பெண்களுக்காக அல்லது மாற்றாரின் மனைவியரை கவர்வதற்காகப் படை திரட்டினார் என்றோ, போர் புரிந்தார் என்றோ அல்லது அந்தப்புர அழகிகளை வைத்திருந்தாா் என்றோ எவ்வித வரலாற்று குறிப்புகளும் இல்லை. மாறாக, பல்வேறு வரலாற்று திரிப்புகள் மட்டுமே உள்ளது.


பத்மாவதி (எ) சித்தூர் பத்மினி...

அலாவுதீன் கில்ஜி வென்ற பல நாடுகளுள் ஒன்று, சித்தூர் எனப்படும் சித்தோர்கார். இதற்கு மேவார் எனும் பெயரே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் அரசராக ராவல் ரத்தன்சென் என்பவர் இருந்தார். இவரது மனைவிகளுள் ஒருவர் பத்மாவதி என்னும் பத்மினி. அந்நாட்டின் பட்டத்து ராணியாக இவரே இருந்தார். இவர், கந்தர்வேசன் என்ற குறுநில மன்னர் ஒருவரின் மகளாவார். இவர்கள் ரஜபுத்திர வம்சத்தினர் ஆவர். மேவார் தேசம், ரஜபுத்திர கலாச்சாரம், பண்பாடு மற்றும் மரபு வழி பழக்க வழக்கங்களை பின்பற்றும் நாடாக விளங்கிற்று.

இந்நிலையில் அலாவுதீன் கில்ஜி, ஜனவரி 1303ல் மேவார் நாட்டின் மீது படையெடுத்தார். இரண்டு மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்தது. ஒரு கட்டத்தில் முற்றிய போர், மேவார் கோட்டையை முற்றுகையிடுவதற்கு வழிவகுத்தது. கோட்டையை திறந்துகொண்டு வெளியே வந்த படைகள், கில்ஜி படையுடன் போரிட்டது. மிகக் கடுமையாக நடைபெற்ற போரில், மேவார் நாட்டு அரசர் ராவல் ரத்தன்சென் மற்றும் தளபதிகள் அனைவரும் வீர மரணம் அடைந்தனர்.

இதனை அறிந்த பட்டத்து ராணி பத்மினி உட்பட மற்ற ராணிகளும் அன்றைய ரஜபுத்திர (சத்திரிய) குல வழக்கப்படி உடன்கட்டை ஏறுதல்( தீக்குளிப்பு) எனப்படும் புனித தற்கொலைசெய்துகொண்டனர்
என்பதுதான் உண்மையான வரலாறு.
இதைவிடுத்து அலாவுதீன் கில்ஜி பத்மாவதி மீது காதல் கொண்டதால் மேவார் மீது படையெடுத்தார் என்பது முற்றிலும் தவறாகும்.
இதேபோல, ராணி பத்மாவதி அவர்களும் அலாவுதீன் கில்ஜி மீது, காதல் கொண்டதாகவும், அவருடன் சமரச உடன்படிக்கை செய்துகொள்ள முன்வந்தார் என கூறப்படும் கூற்றுகளும் கட்டுக்கதைகளைத்தவிர வேறில்லை. பற்பல வரலாற்று திரிப்புகளில் இதுவும் ஒன்று..! அப்படி நம்புவது ராணி பத்மாவதி அவர்களின் ஒழுக்கத்தை சந்தேகிப்பது போலாகிவிடும்.

அலாவுதீன் கில்ஜியின்இறப்பு


அலாவுதீன் கில்ஜி 1316ல் இறந்தார். அவரது மரணத்தை பேரிழப்பாக கருதிய கில்ஜியின் நம்பிக்கைக்குரிய தலைமைப் படைத்தலைவர் மாலிக் கபூர், டெல்லி குதுப்மினார் வளாகத்தின் பின்புறத்தில், சுல்தான் அலாவுதீன் கில்ஜி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், ஒரு நினைவு மண்டபத்தை கட்டியெழுப்பினார். மேலும், அலாவுதீன் கில்ஜியின் நினைவாக ஒரு இசுலாமிய கல்வி நிறுவனத்தையும் (மத்ரஸா) நிறுவினார்.

அலாவுதீன் கில்ஜியின் இறப்புக்குப்பின், அவருக்கு அடங்கியிருந்த நாடுகள், குறிப்பாக தென்னிந்திய நாடுகள், தங்களை தாங்களே சுதந்திர நாடுகளாக பிரகடனம் செய்யலாயின. இதில், விஜயநகர பேரரசும் அடங்கும்.

முடிவுரை

அலாவுதீன் கில்ஜி மேவார் மீது போர் தொடுப்பதற்கு முன்பாக, மங்கோலியர்கள் ,ரந்தம்பூர் (ராஜஸ்தான்), குஜராத் ஆகியவற்றின் மீதும்,
மேவாருக்கு பின், மாளவம், மந்து , தாரா, சந்தோரி, மார்வார், ஜலோர், தேவகிரி, வாரங்கல், துவார சமுத்திரம், போசள நாடு, மதுரை, விஜயநகரப் பேரரசு மற்றும் பாமினி நாடு ஆகியவற்றின் மீதும் போர் தொடுத்துள்ளார்.

ஒருவேளை, கில்ஜி பெண்கள் மீது மோகம் கொண்டு படைதிரட்டி போர் புரியக்கூடியவராகவே இருந்தாரேயானால், ஒவ்வொரு போரிலும் அவரின் எண்ணத்தை நிறைவேற்றியிருப்பார்.

ஆனால், மேற்கூறியவற்றில் ராணி பத்மாவதியைத்தவிர வேறு எந்த நாட்டின் அரசியை கவர்வதற்கும் போர் தொடுத்ததாக வரலாறு கூறவில்லை. இவ்விசயத்தில், வரலாற்று திரிப்பாளர்களும் கவனக்குறைவாக இருந்துள்ளனர் எனலாம்.

ஏனெனில், வரலாற்று திரிப்பாளர்களின் நோக்கம் "இசுலாமியர்களுக்கு எதிராக ரஜபுத்திரர்களை தூண்டிவிடுவதாக" இருந்திருக்க வேண்டும் என மட்டுமே பொருள் கொள்ள முடிகிறது. அலாவுதீன் கில்ஜியின் மீதும் இசுலாமியர்கள் மீதும் களங்கத்தை ஏற்படுத்த எண்ணியவர்கள் இறுதியில் தங்கள் முதுகில் தாங்களே குத்திக்கொண்டதை போல, ராணி பத்மாவதியின் புகழுக்குதான் களங்கம் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இறுதியில் "கெடுவான் கேடு நினைப்பான்" என்ற சொல்லாடலுக்கு ஏற்பவே வரலாற்று திரிப்பாளர்களின் முடிவும் அமைந்துவிட்டது என்பதே மறுக்கமுடியாத உண்மை.

கில்ஜியின் தந்திரம் . திறன், நிர்வாகம் இவற்றில் அறிவு இல்லை என்றால் அன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய நிலப்பரப்பில் தனது ஆட்சியை நீடிக்க முடியாது. அந்த அந்த நிலப்பரப்பில் பல மொழியும் பல கலாசாரத்தையும் கொண்ட மக்களிடம் தன் அதிகாரத்தை செலுத்த அந்த பகுதி மக்களிடம் நன்மதிப்பை பெற்ற பிரதிநிதிகளை கொன்டே நிர்வாகித்தார். அன்றைய நிலையில் அவர் அறிந்த மொழி ஆப் ககன் மொழியும் அரபியும் தான் - இந்திய நூறுக்கணக்கான மொழி தெரியாது - ஆனால் அதை பேசும் போது கண், முக பாவனையை வைத்தே அதில் உள்ள உண்மை பொருள் அறியும் ஆற்றல் இருந்ததால் ஏமாற்றும் மொழிபெயர்ப எளர் இல்லை. இதனால் தான் காது வழி செய்தியாக கண்டதை கூறி சென்றனர் நிர்வாக ஆவணம் தவிர வேறு ஆவணம் இல்லாமல் கற்பனையும் கனவுகளையும் காதையாக்கி பின் உண்மை போல சித்தரிக்கின்றனர் - நான்கு வர்னத்தார் முறையில் ஒரு கடைசிவர்ண சூத்திர மன்னன் மேல் சூடும் பாமாலை இப்படி தான் இருக்க முடியும்'

ஆதாரம்- Alaudeen Khilji the Saviour of Hinduism., Encyclopedia Britannica., Wikipedia., etc.,

தொகுப்பு: மு .அஜ்மல் கான்.

நீல நிலா சந்திர கிரகணம் பற்றிய தவகல்!!


 2018 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இம்மாதம் 31ஆம் திகதி நிகழும் என சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையங்கள் எதிர்பார்ப்பு வௌியிட்டுள்ளன.

சுமார் 150 ஆண்டுகளுக்குப்  பிறகு நிகழும் அரிதான முழு சந்திர கிரகணம் இதுவாகும். இந்த சந்திர கிரகணம் நீல நிலா (Blue Moon) என அழைக்கப்படுகிறது.

ஜனவரி 31 ஆம் திகதி நள்ளிரவில் இந்த முழு சந்திர கிரகணம் ஏற்படுவதால் பசுபிக் பெருங்கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த சந்திர கிரகணம் மாலை வேளையில் முழு நிறைவாகத் தெரியும் என தெரிவித்துள்ளது.

சந்திர கிரகணம் நாளை மாலை 5.20க்கு துவங்குகிறது. ஆனால், முழு கிரகணம் சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு மாலை 6.25க்கு துவங்கி 7.25 வரை நீடிக்கும். இந்த மாதத்தில் தோன்றும் 2வது பெளர்ணமி இது. இது ‘புளூ மூன்’ ‘சூப்பர் மூன்’ என்று அழைக்கப்படுகிறது.

Supermoon: பெருமுழு நிலவு - பௌர்ணமியன்று நிலா பூமிக்கு வெகு அருகில் வருவது பெருமுழு நிலவு எனப்படும். இம்முறை அது மேலும் பெரிதாகக் காணப்படும்.


முழுச் சந்திர கிரகணம்: - சூரியன், நிலா, பூமி மூன்றும் ஒரே கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும்.


Blue moon: - ஒரே மாதத்தில் இரண்டாவது பௌர்ணமி ஆகியவை அந்த மூன்று நிகழ்வுகள்.


- 32 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே ஒரே மாதத்தில் இரண்டாவது பௌர்ணமியைக் காண முடியும்.அலாஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா ஆகிய நாடுகளில் இந்த சந்திர கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை தெரியும். மற்ற வட மற்றும் மத்திய அமெரிக்காவில் சந்திரன் மறையும் நேரம் குறுக்கிடும்.

மொத்தமாக இந்த முழு சந்திர கிரகணம் 77 நிமிடங்கள் நிகழும் என space.com தெரிவித்துள்ளது.

முழு கிரகணம் பிடிக்கும் நேரத்தில் சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகத் தெரியும். மேல் விளிம்பு இருளாக இருக்கும்.

இந்த முழு சந்திர கிரகணத்தை விட்டால் அடுத்த முழு சந்திர கிரகணம் டிசம்பர் 31, 2028 இல் நிகழும். பிறகு ஜனவரி 31, 2037 இல் நிகழும். இந்த இரண்டுமே முழுமுற்றான சந்திர கிரகணங்களாகும்.


சந்திர கிரகணம் பற்றி மேலும் அறிய ..



Sunday, 28 January 2018

கருவறைக்குள் சிசு செய்யும் குறும்புகள் !! ஒரு அபூர்வ பார்வை

Related imageகுழந்தைகள் என்றாலே அழகு தான், அவர்களது சிரிப்பும், அழுகை, முக பாவனைகள், கொட்டாவி விடுவது, உறங்கும் நிலை என அனைத்தும் அழகு தான்.

ஆனால், கருவறைக்குள் இவற்றில் என்னென்ன செயல்களை எல்லாம் சிசு செய்யும் என உங்களுக்கு தெரியுமா?


நாம் கூறிய இவற்றில் பெரும்பாலானவற்றை சிசு கருவறைக்குள்ளேயே செய்ய ஆரம்பித்துவிடும். இனிப்பு ஃப்ளுயிட்களை ரசித்து விழுங்குதல், அம்மாவின் குரலை கேட்டு அசைதல் என கருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள் நிறைய இருக்கின்றன. 
அவற்றை பற்றி இனிக் காணலாம்…


*அழுகை*

கருவில் இருக்கும் சிசுவை அல்ட்ராசவுண்ட் கருவி மூலம் ஆய்வு செய்த போது. வியக்க வைக்கும் வகையில். சிசு கருவறையில் அழுவது கண்டறியப்பட்டது.

*பிணைப்பு*
இரட்டையர்களுக்கு மத்தியில் இருக்கும் பிணைப்பு கருவறையிலேயே துவங்கிவிடுகிறது.
மேலும், இரட்டையர்கள் கடைசி பத்து வாரங்களின் போது அம்மா பேசுவதை ஆக்டிவாக கேட்டுக் கொண்டிருப்பார்களாம்.

*விக்கல்*

முதல் மூன்று மாதத்தின் போதே சிசுவிற்கு விக்கல் எடுக்க ஆரம்பித்துவிடுமாம். இதை கர்ப்பிணிகள் உணர முடியாது. நன்கு கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தால் சிறய அளவிலான நகர்தல் ஏற்படுவதை உணர முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

*புன்னகை*

26வது வாரத்தில் இருந்து குழந்தை ரியாக்ட் செய்ய ஆரம்பிக்கிறது. இந்த காலக்கட்டத்தில் தான் கருவறையில் இருக்கும் சிசு முதன் முதலில் சிரிக்க ஆரம்பிக்கும்.

*கொட்டாவி*

குழந்தைகள் கொட்டாவி விட்டாலே செம அழகாக இருக்கும். கருவில் இருக்கும் சிசுவும் கொட்டாவி விடுமாம்.

*சிறுநீர்*


முதல் மூன்று மாதங்கள் முடியும் போது சிசுவின் உடலில் சிறுநீர் உற்பத்தி ஆரம்பிக்கும்.

கருவறையிலேயே சிசு சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும்.

*கண்கள் திறப்பது*


28வது வாரத்தின் போது குழந்தை முதன் முதலில் கண்களை திறக்கும். கர்ப்பிணி பெண்களின் வயிர் மிகுந்த வெளிச்சத்தில் வெளிப்படும் போது கருவறையில் இருக்கும் சிசு கண்களை திறக்குமாம். ஆனால், மிக சிறிய நேர அளவில் தான் கண்களை திறந்திருக்குமாம் சிசு.

*ருசி*
கர்ப்பிணி பெண் எந்த உணவை உண்டாலும், அந்த ருசியை அம்னியோடிக் அமிலத்தின் மூலமாக சிசு ருசியை அறியுமாம். இது குறித்து நிபுணர்கள் கூறுகையில்,”15வது வாரத்தில் இருந்து சிசு இனிப்பை ரசித்து ருசிக்க ஆரம்பிக்கிறது. இதனால் நிறைய இனிப்பு ஃப்ளுயிட்களை விழுங்குகிறது” என கூறுகின்றனர்.


தொகுப்பு  : அ. தையுபா அஜ்மல்.