Tuesday, 15 August 2017

யாருக்கு வேண்டும் இதுபோன்ற சுதந்திரம் ?

யாருக்கு வேண்டும் இந்த விடுதலை ? நூறு கோடி மக்கள் வாட, ஒரு பத்தாயிரம் கொள்ளயர்கள் ஆனந்தக் கூத்து நடத்தவோ இந்திய விடுதலை? என்றும் நாம் அடிமைதான்.
சுதந்திரம் க்கான பட முடிவுநமது உழைப்பை உறிஞ்சிவிட்டு பசியையும், குடிக்கும் நீர்ப்பஞ்சத்தையும், அசுத்தக் காற்றையும், உடல் நலச் சீர்கேட்டையும் ,அணு ஆயுத ஆபத்துகளையும் அள்ளிக் கொடுத்துவிட்டு நாய்கள் எல்லாம் நாயகர்கள் வேடமணிந்து வெள்ளை வேட்டியில் வண்ண அங்கிதனில் உலா விட்டிருக்கிறோமே !!!
நமது வரி வட்டி திரை ஊழல் பணத்தில் நாளுக்கு லட்சம் ரூபாய் செலவு செய்யும் மக்கள் மன்ற, சட்டமன்ற உறுப்பினரைகளையும் வைத்துக்கொண்டா விடுதலை கொண்டாடுவது? நமக்கு மானம் இல்லை.
பொது வினியோகத்தை இரத்து செய்யும் அரசியல்வாதிகள் உண்ண வாழ மட்டும் மானியமா? மடையர்களே...
கடைக்கு வந்து காய்கறி, தானியங்கள், பால், வாங்கிப் பாருங்களடா.
பண மதிப்பீட்டு விலக்கு, நீட் தேர்வு, கதிராமங்கலம்,, கீழடி, காவிரி மேலாண்மை, முல்லைப்பெரியாறு, கச்சத்தீவு, கூடங்குளம், சேவை வரி, , ஊழல், மாட்டிறைச்சி, இந்தித்திணிப்பு, சம்சுகிருத கருவறை முன்னுரிமை, உயர்சாதி ஆதிக்கம், மதவெறியும் தீண்டாமையும், குதிரை பேரம், வணிக வீழ்ச்சி, தமிழக உரிமை பறிப்பு போன்ற எல்லாவற்றிலும் தமிழகத்தை வஞ்சித்துவிட்டு இந்தத் தமிழகத்துக்குச் சுதந்திரமே தேவையில்லை.
ஹிட்லரை ஒரு உலகின் சர்வாதிகாரியாகப் பார்க்காதீர்கள் ..ஒன்றுபட்ட ஜெர்மானியத்தின் உன்னத தலைவன் அவன் .
முசோலினியை இத்தாலியின் கொடுங்கோலனாகக் காணாதீர்கள்; இத்தாலிய வீரத்தை வெளியில் பறையறித்தவனாய் பாருங்கள்..
சேகுவேராவை போராளியாக ஆயுதம் ஏந்திய தீவிரவாதியாகக் காணாதீர்கள். இனமானம் காக்க தன் இறப்பைத் துச்சம் என எண்ணிய மாவீரனாய் காணுங்கள்
பகவத்சிங்கையும், வாஞ்சி நாதன், சந்திரபோசு
இவர்களும் போராளிகள் தானே !!. அது எப்படி?
பிரபாகரன் விடுதலைப் புலிகளின் தலைவனாக மட்டும் பார்க்காதீர்கள்; உலகத்தமிழ் இனத்தின் போர்த்தலைவனாய் ஈழமைந்தனாய்ப் பாருங்கள்.
தமிழர் மானத்தை வீரத்தை எங்கு எப்போது எப்படி யாரிடம் காட்டப் போகிறீர்கள் ? சீனாவிடமா? .பாகிஸ்தானிடமா ? இலங்கையிடமா? இல்லை என்றும் போல் அப்பாவி சராசரி இந்தியாவின் அரசியல் கயவர்களிடமா?
இந்தியா வல்லரசு ..இந்தியாவல்ல அரசு ..
இந்தியாவில் இருப்பது அரசே அல்ல;
தமிழகத்தில் இருப்பது பதவி பணத்திற்கு ஆடும் தலையாட்டிப் பொம்மைக் கூட்டம்;
மொழியை, இனத்தை, நாட்டை, மண்ணையே
மலடாக்கி, மக்களின் உணர்வை புரியாத
கேடுகெட்ட காசி நகரத்துக் காவிமதக் கும்பலே..
நாம் அன்றும் இன்றும் என்றும் அடிமைதான்.
ஆங்கிலேயர் ஆட்சியே இருந்திருக்கலாம்...
"அதுதான் சுதந்திரம்"
பட்டுப்புடவை நெய்தவன் மகளுக்கு புடவை வாங்க காசு கிடைத்தால்,
விதவையான அம்மாவுக்கு நெற்றியில் அழகாக திலகமிட அனுமதித்தால்,
ஏடிஎம்மில் பணத்தை கட்டுகட்டாக அடுக்கிவைக்கும் தொழிலாளி வீட்டில் விளக்கெறிந்தால்,
அம்மா என்று அழைக்க திருநங்கைக்கு ஒரு உறவு கிடைத்தால்,
தோஷங்களால் தள்ளிப்போகும் மணப்பெண்ணிற்கு சந்தோஷ வரன் கிடைத்தால்,
சுதந்திர நாட்டில் இவர்களுக்கு விடிவுகாலம் கிடைத்தால்
"அதுதான் சுதந்திரம்"

தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

Friday, 11 August 2017

கூவத்தில் பயணம் எப்போது? கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் திட்டம் !!


Image may contain: sky, outdoor, nature and water


திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி சென்னை வரை சுமார் 16 கிமீ நீளமுள்ள கூவம் நதி, கடந்த பல ஆண்டுகளாக மாசடைந்து கிடக்கிறது. சென்னை ஆறுகளை மீட்கும் அறக்கட்டளை என்கிற அரசு அமைப்பின் மூலம் கூவம் ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணிக்குத் திட்
டமிடப்பட்டது. இதற்காக கடந்த 2012ஆம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. முதல் திட்டம் மூன்று ஆண்டுகள் வரை குறுகிய கால திட்டம், நான்கு முதல் எட்டு ஆண்டுகள் வரை நடுத்தர கால திட்டம், எட்டு ஆண்டுகளுக்கு மேல் நீண்ட கால திட்டம் என மூன்று கட்டங்களாக இத்திட்டம் பிரிக்கப்பட்டுள்ளது.

குறுகியகால திட்டத்தில் ஆற்றைச் சுத்தப்படுத்துவது, கரைகளைச் சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தில் ஆற்றைப் பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கபட்டிருந்தது.

இந்தச் சூழ்நிலையில், நேற்று ஜூலை 9ஆம் தேதி கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. அதாவது 105 கோடி ரூபாய் செலவில் மூன்றாண்டுகள் பணி நடைபெறுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலோர முகத்துவாரம் முதல் சேத்துப்பட்டு வரை முதற்கட்டப் பணிகள் தொடங்கவுள்ளன. இதில் கரைகளைச் சீரமைத்து பூங்காக்கள் அமைப்பது உள்ளிட்ட 61 பணிகள் நடைபெறவுள்ளன.



Friday, 4 August 2017

பொது அறிவு - GENERAL KNOWLEDGE BOOKS FREE DOWNLOAD PDF


புறநிலை பொது ஆங்கிலம்Download
கணித சூத்திரங்கள்Download
Quantitative aptitudeDownload
Challenging and logical and reasoning problemsDownload
Aptitude QuestionsDownload
Basic General KnowledgeDownload
Current Affair Multiple ChoiceDownload
Current Affair Objective QuantitativeDownload
Current Affairs 2011Download
English Longuage SkillDownload
General Knowledge - Know EverythingDownload
General Knowledge - Questions with answersDownload
General Knowledge - The UniverseDownload
General Knowledge - IDownload
General Knowledge Awareness SkillsDownload
General Knowledge - IIDownload
General Knowledge Objective QuizzesDownload
General Knowledge QuizzesDownload
General Questions with AnswerDownload
General Knowledge - IIIDownload
General Knowledge - IVDownload
Important days - national and internationalDownload
Important facts of indian historyDownload
Limca Book of RecordsDownload
Non - Verbal ReasoningDownload
Oxford essential guide to writingDownload
PretestDownload
Questions and AnswersDownload
Quick mathsDownload
The Scout's Quiz BookDownload
Test of reasoningDownload
Test of reasoning verbal and non - verbalDownload
The Rams Books - General KnowledgeDownload
Top 10Download
Vedic MathematicsDownload
Verbal and non-verbal reasoningDownload
Verbal reasoningDownload
ஆண்டு கண்ணோட்டம் 2012Download
Current Affairs 2013Download
G.K Question & AnswerDownload
General Science QADownload
Know Your KnowledgeDownload
Padma Awards 2013Download
பொது அறிவு வினா விடை - 1Download
பொது அறிவு வினா விடை - 2Download
பொது அறிவு வினா விடை - 3Download
பொது அறிவு வினா விடை - 4Download
தாவரவியல்Download
வேதியியல்Download
ஆண்டு கண்ணோட்டம் 2013Download
குழந்தைகள் கேள்வியும் பதிலும்Download
கணக்குDownload
மருத்துவம்Download
இயற்பியல்Download
புவி அறிவியல்Download
உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்Download
விலங்கியல்Download
Aptitude TestDownload
Aptitude QuestionsDownload
Puzzles collections for FreshersDownload
PuzzlesDownload

Thursday, 3 August 2017

உதாசீனத்தால் உயிரை பறிக்கும் வாதக்காய்சல் (Rheumatic fever) !!

உதாசீனத்தால் உயிரை பறிக்கும் தொண்டை அழற்ச்சி.

Image result for வாதக்காய்ச்சல்வைத்தியர்கள் மற்றும் பணிபுரிபவர்களுடன் காலை வணக்கத்தை பரிமாரிவிட்டு, கடுமையான நோய் உள்ள பிள்ளைகளை பராமரிக்கும் பிரிவினுள் சென்றேன். முதலாம் இலக்க கட்டிலில் 8 வயது கொண்ட ஓர் ஆண் குழந்தை அவதிப்பட்டுக்கொண்டிருக்க, வைத்தியரும் பரிசோதனைக்காக இரத்தம் எடுத்துக்கொண்டிருக்கும் வேளையில், அவனது பெற்றோர், அருகே நின்று அழுது கொண்டு நின்றனர்.
அமைதியாக அருகே சென்ற நான், குழந்தையின் தகப்பனிடம் என்னை அறிமுகம் செய்தவாறு மெதுவாக கதையை ஆரம்பித்தேன்.
பிள்ளைக்கு என்ன பிரச்சினை அண்ணா என அன்பாக கேட்டேன், " 3 நாளா காய்ச்சல் என்றார்".
வேற ஒன்டும் இல்லயா என கேட்டேன்,இல்ல வேற ஒன்டும் இல்ல என்றார்.
திடீரென காய்ச்சலா, இல்ல உடம்பு வலி இருமல், தடுமல் அப்டி ஏதும் வந்து, அதுக்கப்புறம் தான் காய்ச்சல் வந்ததா? என கேட்க
குறுக்கிட்ட அந்த குழந்தையின் தாய், அப்டி ஒன்டும் இல்ல டொக்டர், இவன் ஒரு 10 நாளா சும்மா கரண்ட கால் நோவுது, முழங்கால் நோவுது என்டு சொல்லி சித்தாலேப போட்டு நல்லாதான் இருந்தான், பிறகு திடீர் என்டு முந்தநாள் காய்ச்சல் வந்தது, பனடோல் குடுக்க குறையும் திரும்பவரும், பிள்ள சாப்டுரானும் இல்ல, காய்ச்சலும் விடுதில்ல அதனாலதான் OPDக்கு கொண்டு வந்த அங்க டொக்டர் இவன பரிசோதிச்சிட்டு எங்ககிட்ட நிறைய கேள்வி கேட்டுட்டு இது வாதக்காய்ச்சல் என்டு வாட்டுக்கு அனுப்பிட்டார்" என்று கூறி முடிக்க
அப்படி OPD டொக்டர் என்ன கேட்டார் என கேட்டேன்.
பிள்ளையின்ட உடம்புல சிவப்பு சிவப்பா ராஸ் மாதிரி ஏதும் கண்ட நீங்களா என கேட்டார்- நுளம்பு கடிச்சமாதிரி கைல கால்ல எல்லாம் சிவப்பா இருந்துச்சுதான் என்றேன்.
அப்றம் கை, கால்ல மூட்டு நோவு ஏதும் வந்ததா என பிள்ளையிடம் கேட்டார்-
அவனும் ஓம் என கரண்ட கால் முழங்கால் எல்லாம் தொட்டு காட்டினான். அவன் ஒரு பத்து நாளா கரண்ட கால் நோவுது, முழங்கால் நோவுது, முழங்கை நோவுது என்டு சொல்லி நான் சித்தாலேப பூசி சரியாயிட்டு என்டு சொன்னன்.
இவன் சரியான துடினம்தான, ஓடி திரிர அதான் நோவு என்று முடித்தாள் அம்மா.
சரி அப்போ பிள்ளைக்கு கிட்டத்துல ஏதும் தோல்வியாதி, தொண்டை நோய்கள் ஏதும் வந்ததா என நான் கேட்டு முடிக்க முதல் முந்திக்கொண்ட குழந்தையின் அம்மா " இத OPD டொக்டரும் கேட்டாருதான். இவன் வெயில்ல விளையாடி திரிரதான அதால ஒரு 3 கிழமைக்கு முதல் தொண்ட நோவு என்டு சொல்லி கரச்சல் படுத்தினான். பிறகு காலைல குழிக்க வச்சி தொண்டைக்கு தைலம் போட்டு விட்டு ஒரு 4 நாளால சரி ஆயிட்டு என்ற அந்த தாய்,
என்ட பிள்ளைக்கு வாதக்காய்ச்சல் என்டு எல்லாரும் சொல்ராங்களே
அது என்ன? ஏன் என்ட பிள்ளைக்கு வந்திரிக்கி? பயபுடதேவலதானே? அதால பிள்ளைக்கு என்னயும் பிரச்சினயா? என மூச்சுவிடாமல் கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றார்.
வாதக்காய்சல்  (Rheumatic fever.)
ஸ்ட்ரெப்டோ கொக்கஸ் பயோஜன் (strepto coccus pyogen) எனும் ஓர்வகை பற்றிரிய இனமானது தொண்டையில் தொற்றுவதனால் உருவான தொண்டை அழற்ச்சி மற்றும் தோலில் ஏற்படும் கிருமி தொற்றுக்களுக்கு ஒழுங்கான முறையில் சிகிச்சை பெறாத சிலரில் இந்நோய்க் காரணிகளுக்கு எதிராக உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தினால் உருவாக்கப்படும் பிறபொருள் எதிரி என அழைக்கப்படும் இரசாயனப் பொருட்கள் இதயம், இதய வால்புகள் மற்றும் மூட்டுக்களில் உள்ள சாதாரண கலங்கள் மற்றும் கூறுகளுடன் இடைத்தாக்கம் அடைவதனால் இந்நோய் நிலை உருவாகின்றது.
பொதுவாக, தொண்டை வலி ஏற்பட்டு குணமடைந்து 2/ 3 வாரங்களில் இந் நோயின்அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.
பொதுவான அவ் அறிகுறிகள்
:-) உடலில் rashes தோனறி மறைதல்- இவை எவ்வித கடி மற்றும் நோவு உணர்வை ஏற்படுதுவதில்லை. எனவே இதனை நோயாளிகள் அவதானிப்பது குறைவு.
:-) சடுதியான காய்ச்சல், உடல் சோர்வு, பசியின்மை.
:-)மூட்டு வலி-
முதலில் இரு கரண்டை கால் மூட்டுகளிலும் ஏற்பட்டு நீங்கி பின்னர் இரு முழங்கால்களிலும் ஏற்படும்.
பின்னர் இரு மணிக்கட்டு மூட்டுகளிலும் ஏற்பட்டு நீங்கி, இரு முழங்கை மூட்டுகளிலும் ஏற்படும்.
:-)வலிப்பின்போது ஏற்படுவது போன்ற அசாதாரன உடல் அசைவுகள் ஏற்படல்.
ஆங்கிலத்தில் இதனை சிடன்ஹம் கோரியா (sydenham's chorea) என்பார்கள்.
வாதக்காய்ச்சலால் ஏற்படும் கடுமையான பாதக விளைவுகள் எவை?
1. இதய வால்புகள் பாதிப்படைதல்.
2.இதய தொழிற்பாடு பாதிப்படைதல்.
3.சிறுநீரகம் பாதிக்கப்படல்
4.இரத்தக் குழாய்களின் உள்ளே இரத்தம் கட்டியாகி அடைத்து மரணம் ஏற்படல்.
சிறுவர்களை மட்டுமன்றி எந்த ஒரு நபரையும் இந்நோய் தாக்கலாம்.
எனவே, தொண்டை மற்றும் தோலில் ஏற்படும் நோய்களை அலட்சியம் செய்யாமல் உரிய காலத்தில் உரிய சிகிச்சையினை பெற்று உயிரையும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்போம்.

நாம் கற்றதுபோல் நிற்கிறோமா ....!


Image may contain: 5 people, including Loganathan Logu, people sitting and indoor

காசு பணம் சம்பாதிப்பதற்காவே கல்வி கற்பது என்றாகிப்போன பொருள்சார் உலகில் எங்கிருந்து நிற்பது? எல்லாரும் ஓடிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.
இயற்கையே மனிதனுக்கு நல்ல ஒரு ஆசான். காலையில் வீட்டினுள்ளே போடப்படும் செய்தித்தாளை அப்பாவிடம் கொண்டு கொடுக்கவும், காய்கறி விற்கும் பாட்டி வந்ததும் அம்மாவிடம் போய்ச்சொல்வதும் மழலையர் இயற்கையாக செய்கின்றனர். யாராவது சொல்லிக் கொடுத்தார்களா என்ன ?
குழந்தைகள் கெட்ட வார்த்தைகளை பேசுவதில்லை கேட்ட வார்த்தைகளைத்தான் பேசுகின்றன.
இயற்கையாகவே பார்த்துப்படிக்கும் பண்பு மனிதனுக்கு இறைவன் அளித்த வரம். ஒவ்வொரு பருவத்திலும் தானாகவே படித்துக் கொள்ள வாய்ப்புகளுடனே இயற்கை வாழ்வு பின்னப்பட்டுள்ளது. அதன்படியே சென்று கற்றுக்கொள்ளுதல் இயற்கையான கல்வியை கற்றுத்தரும் மேலும் அதன் வழியே நிற்கவும் வழிவகைகளை கற்பித்தும் தரும். ஆனால், இயற்கையினூடான பின்னலைப் பிரித்து அதிவிரைவாக அத்தனையையும் கற்றுக்கொள்ள விழைவதே நாகரீக கற்றலின் தலையாய வழியாக வற்புறுத்தப் படுகிறது. வற்புறுத்தலினால் கற்கப்படும் பலவும் அதன்படி நிற்க கற்பிப்பதில்லை.
'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்பது காலாகாலத்திலும் நிலைத்து நிற்கும் உண்மை, அழிவே இல்லாதது. ஆனால் அது எவ்வளவு பெரிய மந்திரம் என்பதை நாமெல்லோரும் உணர்ந்திருக்கிறோமா? தாய் தந்தை அல்லாது வேறெவரும் தனது சேய்க்கு நன்மை பயப்பதல்லாததை உணர்வுபூர்வமாக சொல்லித்தர முடியுமா என்றால் அது சந்தேகமே.
மாதா, பிதா, குரு என்று வரிசைப்படுத்தி இருப்பதிலிருந்தே கல்வி கற்கும் வரிசையும் அமைகிறது. குழந்தைகளுக்கு விபரம் தெரியவரும்வரை அத்தனையையும் கற்றுக்கொடுப்பது தாய் தந்தையின் கடமையாகும். அதன் பின்னரே குருவிடம் கற்கும் கல்வி பலன் தரும் மேலும் கற்றபடி நிற்கும் தகுதியையும் பெற்றுத்தரும். 
பால்குடி மாறும் முன்னரே மழலையரை பகல்நேர பள்ளியில் (Day Care Centre) சேர்த்துவிட்டு வேலைக்கு ஓடும் தாயும் தந்தையும் எந்த மந்திரத்தை எப்போது சொல்லித்தர முடியும்? உறக்கத்திலா?
உறங்கும்போதாவது தாயின் அரவணைப்பு இப்போது கிடைக்கிறது. வரும்காலங்களில் அதுவும்கூட எட்டாக்கனியாகிவிடுமோ !!!

Wednesday, 2 August 2017

விவசாயிகளை ஏமாற்றும் வங்கிகள்... என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

Image may contain: outdoorதமிழகத்தின் அனைத்துப் பகுதிகளும், 2016-ம் ஆண்டிலிருந்தே கடுமையான வறட்சியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கின்றன. இதுபோன்றதொரு வறட்சி கிட்டத்தட்ட 140 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள். இந்த வறட்சியால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மாண்டுபோன விவசாயிகள் அத்தனைபேருமே, வங்கிகள் மற்றும் தனியார் நிதிநிறுவனங்களில் கடன்வாங்கி விவசாயம் மேற்கொண்டவர்கள். கடன்கொடுத்த வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள், கடனைக்கேட்டு நெருக்கடி கொடுத்ததால், செய்வதறியாது தற்கொலை முடிவைத் தேடிய விவசாயிகளே அதிகம்.
இத்தகைய கொடூர விளைவுகள் ஏற்பட்ட பிறகும், கடனைக்கேட்டு விவசாயிகளை மிரட்டுவதை வங்கிகள் நிறுத்தியபாடில்லை. ‘கடன் வாங்கிய விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது’ என ரிசர்வ் வங்கி, தெளிவாக வழிகாட்டுதல் வழங்கியிருந்தாலும், அவற்றை நடைமுறைபடுத்துவதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன.
2015-ஆம் ஆண்டில் வடஇந்தியாவில் தென்மேற்குப் பருவமழை பொய்த்துப் போனதைத்தொடர்ந்து, பெரும்பாலான வட மாநிலங்களில் கடும் வறட்சி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அகில இந்திய அமைப்பான ‘ஸ்வராஜ் அபியான்’ (சுயஆட்சி இயக்கம்), வறட்சியால் பாதிக்கப்பட்ட 12 மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகள் நிவாரணத் திட்டங்களை அறிவிக்கவேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மீதும், மத்திய அரசின் மீதும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்தவழக்கில், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டங்களையும், திட்டங்களையும் ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், 2016-ம் ஆண்டு மே மாதம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் மற்றும் வறட்சி நிலவும் பகுதிகளுக்கான பிற நிவாரணங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியது. வழக்கின் முக்கியத்துவம் கருதி, தொடர் ஆய்வு செய்யும் வகையில் வழக்கைத் தொடர்ந்து நடத்தவும் நீதிமன்றம் முடிவுசெய்தது.
ஆனால், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குச் செவிசாய்க்காததால், மாநில அரசுகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது, ஸ்வராஜ் அபியான். இவ்வழக்கில், உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், நிவாரணம் எனப் பல்வேறு விஷயங்களை ஆராய்ந்த உச்சநீதிமன்றம், இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்படுத்தபடும் விவசாயக் கடன் சம்பந்தப்பட்ட மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வங்கி ஆகியவற்றின் சுற்றறிக்கைகளை நடைமுறைப்படுத்தச் சொல்லி உத்தரவிட்டது.
அதனைத்தொடர்ந்து, கடந்த 01.07.2016-ஆம் தேதியன்று மத்திய ரிசர்வ் வங்கியின் அட்டவணையில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் ‘இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான நிவாரண நடவடிக்கைகள்’ என்ற வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. கடந்த 10.1.2017 அன்று தமிழகமும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழகத்தில் உள்ள வங்கிகளையும் மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.
இதேபோல, இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் மண்டல ஊரக வங்கிகளைக் கட்டுப்படுத்தும், நபார்டு வங்கியும் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது. அதிகாரபூர்வமாக வறட்சிப்பகுதி என அறிவிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் கடன் காலத்தை நீட்டிக்கும் நிவாரண நடவடிக்கைகளை வங்கிகள் முடித்துவிட வேண்டும் என்பதால், தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதியுடன் கடன்மறுசீரமைப்பு கெடு முடிவடைந்து விட்டது. ஆனால், கடந்த மார்ச் 31-ஆம் தேதிவரை, தமிழகத்தின் 17 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு மட்டும்தான் பயிர் இழப்பு குறித்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன. அதனால், கடன் மறுசீரமைப்புக்கான காலக்கெடுவை ஜூலை 10-ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது ரிசர்வ் வங்கி. ஆனாலும், இதுவரை விவசாயிகளுக்குச் சாதகமாக எந்தச் சீரமைப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்பது வேதனையான விஷயம்.
இந்நிலையில், “இவ்விஷயத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, இன்னமும் காலக்கெடுவை நீட்டித்துத் தருமாறு மத்திய ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைக்க வேண்டும். அதோடு, விவசாயிகளும் வங்கி அதிகாரிகளும் முழுமையாகத் தெரிந்து கொள்ளும் வகையில் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பரப்புரை செய்ய வேண்டும். பயிர் இழப்புச் சான்றிதழ் வழங்கும் பணியைத் துரிதப்படுத்தி விவசாயிகளின் கடன் மறுசீரமைப்பில் நிவாரணம் பெற உதவ வேண்டும். வறட்சிக்காலத்தில் வங்கிகள் வசூலித்தத் தொகையை மீண்டும் விவசாயிகளுக்குப் பெற்றுத்தர ஏற்பாடு செய்ய வேண்டும். ஏலம் விடப்பட்ட நகைகள், விவசாயிகளுக்கு மீண்டும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்பவைதான், தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளாக உள்ளன.
அணு அணுவாகச் செத்துக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளின் வயிற்றில் தமிழக அரசு பால் வார்க்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்!

தமிழகத்துக்கும் நிவாரணம் வேண்டும்!

நடப்பு ஆண்டில் ஏப்ரல் 17-ஆம் தேதி அன்று, தமிழ்நாடு மாநிலத்தையும் வழக்கில் இணைத்து, ‘தமிழ்நாட்டுக்கும் நிவாரணத்திட்டங்கள் அறிவிக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது, ஸ்வராஜ் அபியான். அதற்காக, இந்த அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் தலைமையிலான ஒரு குழு, மே முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் நிலைமை குறித்து நேரடியாக ஆய்வு செய்தது. 'உழவர் உரிமைப் பயணம்' என்ற பெயரில் நடந்த இந்த ஆய்வை, ஸ்வராஜ் அபியான் இயக்கத்தின் ஒரு பிரிவான, 'வாழ்க விவசாயி இயக்கம்' (ஜெய் கிசான் அந்தோலன்) ஒருங்கிணைத்தது.

மத்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகள்
:
* குறுகியகால உற்பத்திக் கடனில் (பயிர்க்கடன்) அடிப்படைக் கடன்தொகை மற்றும் வட்டித்தொகை இரண்டையும் சேர்த்து நீண்டகாலக் கடனாக மாற்ற வேண்டும். 33 % முதல் 50 % வரை பயிரிழப்பு இருந்தால், பாதிப்புக்குள்ளான ஆண்டையும் சேர்த்து அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கும்; 50 % அளவுக்குமேல் பயிரிழப்பு இருந்தால், அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கும் கடன்காலம் நீட்டிக்கப்பட வேண்டும். கடன் காலத்தை நீட்டிப்பதற்காகச் சொத்து ஆவணங்கள் மற்றும் ஜாமீன் கேட்கக் கூடாது.
* எந்த வகைக்கடன் மறுசீரமைப்பிலும், குறைந்தபட்சம் ஓர் ஆண்டு வரை, அதாவது பாதிக்கப்பட்ட ஆண்டில் எந்தவகையிலும் கடனையோ, வட்டியையோ வசூலிக்கக் கூடாது.
* நீண்டகால விவசாயக் கடனாக இருக்கும்பட்சத்தில், பயிரிழப்பு மட்டும் ஏற்பட்டுள்ளதா அல்லது நிலங்களுக்கும், உபகரணங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும். பாதிப்பின் அளவைப் பொறுத்து ஓர் ஆண்டுமுதல் ஐந்து ஆண்டுகள்வரை, கடன் காலத்தை நீட்டிக்க வேண்டும். கடந்த காலங்களில் நீண்டகாலக் கடன்களை வேண்டுமென்றே கட்டாமல்விட்ட விவசாயிகளுக்கு இந்தக் கடன் மறுசீரமைப்பு பொருந்தாது.
* எந்தவகைக் கடனாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட காலகட்டத்தில், தண்டனை வட்டி விதிப்பதோ, கூட்டுவட்டி விதிப்பதோ கூடாது. ஏற்கெனவே இப்படி வசூலித்திருந்தால் அந்தப் பணத்தைச் சம்பந்தப்பட்டவர்களுக்குத் திருப்பித் தந்துவிட வேண்டும்.
* கடன் மறுசீரமைப்புக்குப் பிறகு, வேளாண் மற்றும் வேளாண்சார்ந்த தொழில்களுக்குப் புதிய நீண்டகாலக் கடன்களை வழங்க வேண்டும்.

விவசாயிகளை ஏமாற்றும் வங்கிகள்
கடந்த ஜூலை 1-ஆம் தேதி, திருச்சியில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழகப் பிரிவு ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் வந்துகலந்து கொண்டனர். அவர்கள் அனைவருமே “மத்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பெரும்பாலான வங்கிகள் கடைபிடிக்கவில்லை. இன்னமும் கடன் தொகையைத் திரும்பச் செலுத்தச்சொல்லி, விவசாயிகளை வங்கிகள் நெருக்கிக் கொண்டுதான் இருக்கின்றன. பல வங்கிகளில் விவசாயக்கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட நகைகள் ஏலம் விடப்பட்டுள்ளன” என்று குற்றம்சாட்டினர்.
‘‘தெரியாது எனச் சொல்வது சரியில்லை”
இந்தப் பிரச்னை குறித்து, SLBC-யின் ஒருங்கிணைப்பு பொறுப்பிலுள்ள வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வேளாண்மை மற்றும் கிராமப்புற துறையின் (Agriculture & Rural Initiatives Department) முதன்மை மேலாளர் அருண்குமாரிடம் பேசினோம். அவர், "31.03.2017 வரை 17 மாவட்டங்கள் மட்டுமே அணாவாரிச் சான்றிதழை வழங்கியிருந்தன. அதனால்தான் RBI-யின் காலக்கெடுவை 10.07.2017 வரை நீட்டித்தது. ஆனால் முன்பே எல்லா மாவட்டங்களிலும் அணாவாரிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுவிட்டன. மாவட்டங்கள் அணாவாரிச் சான்றிதழ் வழங்கியபிறகு, பாதிக்கப்பட்ட விவசாயிகள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்குச் சென்று கடன் மறுசீரமைப்பிற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். கடன் மறுசீரமைப்பிற்குக் கடைசி நாள் 10.07.2017 தான். தவிர எல்லா மாவட்ட முன்னோடி வங்கிகளுக்கும், RBI வழிகாட்டுதல் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்குத் தெரியாது எனச் சொல்வது சரியில்லை” என்றார்.
நன்றி
விகடன்

Tuesday, 1 August 2017

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - TNPSC STUDY METERIAL FREE DOWNLOAD





Department of Economics and StatisticsDownload
உயிரியல்Download
உயிரியல் (2)Download
Current Affairs August to OctoberDownload
Current Affairs Last Six MonthsDownload
General EnglishDownload
General English and General TamilDownload
பொது அறிவு(தமிழில்)Download
General Knowledge Questions and AnswersDownload
Group II - 2011 'C' SeriesDownloadGK InternationalDownload
Civil Service Prelim Exam Question & Keys-2009Download
Indian HistoryDownload
Latest Current Affairs National - 1Download
Latest Current Affairs National - 2Download
நவீன கால இந்திய வரலாறுDownload
பொது அறிவு - அறிவியல்Download
TNPSC CSS - 1 - 2007 Original Question Download
TNPSC (GR-II)-2007 பொது அறிவும் பொது தமிழும்Download
மாதிரித் தேர்வு-2 (பொது அறிவு)Download
TNPSC VAO Examination held on 20-02-2011 KeysDownload
TNPSC VAO Exam-2011 General EnglishDownload
வரலாறு - பழங்கால இந்தியாDownload
TNPSC General Knowledge and Current Affairs PreparationsDownload
TNPSC Group - 2(2009)Download
TNPSC Group II - Model Question Paper - 2012Download
TNPSC MathematicsDownload
TNPSC மாதிரித் தேர்வு - 1(பொது அறிவு)Download
பொது அறிவு - சமூக அறிவியல்Download
Indian HistoryDownload
தாவரவியல் (1)Download
தாவரவியல் (2)Download
வேதியியல்Download
EVS Paper (1) & Science Paper (2)Download
G.K in English MediumDownload
G.K in Tamil MediumDownload
General AwarenessDownload
புவியியல்Download
சமூக அறிவியியல் (1)Download
சமூக அறிவியியல் (2)Download
இந்திய அரசியலமைப்புDownload
இந்திய தேசிய இயக்கம்Download
நவீன கால இந்திய வரலாறுDownload
இயற்பியல்Download
IBPS PO Quantitative aptitude Q & ADownload
பொது அறிவியல் (1)Download
பொது அறிவியல் (2)Download
Social and CivicsDownload
staff selection commission EXAMDownload
பொதுத் தமிழ் (1)Download
பொதுத் தமிழ் (2)Download
பொதுத் தமிழ் 6th to 12thDownload
பொதுத் தமிழ் - செய்யுள்- வாழ்த்துDownload
பொதுத்தமிழ் பாடத்திட்டம் மற்றும் பொருளடக்கம்Download
உயிரியல்Download
நடப்பு செய்திகள் 2012Download
YEAR BOOKDownload
விலங்கியல்Download
History G.KDownload
Ancient HistoryDownloadA
wardsDownload
Basic GKDownload
Capital of the countriesDownload
Ethical HistoryDownload
General knowledgeDownload
Geopolitical tamilnaduDownload
Historical eventsDownload
History bookDownload
History G.KDownload
ImportantDownloadLeadersDownload
Rocket launchDownload
Tamilnadu G.KDownload
Current Affairs August 2016Download
Current Affairs Sep 2016Download
Current Affairs Sep To Dec 2016Download
Current Affairs Dec 2016Download
Current Affairs Dec 2015 to Aug 2016Download
Current-Affairs-Short-NotesDownload