Tuesday 18 August 2009

பல ஆண்டுகள் வாழ 10 எளிய வழிமுறைகள்..

1. நாம் வசிக்கும் இடத்தில் சூரிய வெளிச்சமும், சுத்தமான காற்றும் ஏராளமாகக் கிடைக்க வேண்டும்.

2. பல் ஈறு இவற்றைத் தினமும் காலை,மாலை இரு வேளையும் பல் துலக்கியால் தேய்த்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

3. நிற்கும் போதும், நடக்கும்போதும் நமது உடல் நிமிர்ந்து இருக்க வேண்டும்.

4. உடற்பயிற்சி உயிர்காக்கும்; உடற்பயிற்சியை தின்மும் திறந்த வெளி அல்லது காற்றோட்டமான இடங்களில் செய்ய வேண்டும்.

5. நோய்க் கிருமிகள் உடலில் நூழையா வண்ணம் சுகாதர விதிகளைப் பின்பற்ற வேண்டும்.

6. கோபம், உணர்ச்சி வசப்படுதல், கவலை இவைகளைத் தவிர்த்து, மன அமைதியுடன் இருக்க வேண்டும்.

7. உழைப்பிற்கு ஏற்ற உணவைச் சாப்பிட வேண்டும். உணவை நன்றாக மென்று, மெதுவாக, அளவோடு சாப்பிட வேண்டும். (நொறுங்க தின்றால் நூறு வயது).

8. பச்சை காய்கறிகள், நார்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்கள் மற்றும் சுத்தமாக காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.

9. கொழுப்பு, காரம், புளிப்பு சேர்ந்த உணவுப் பொருட்களை அளவோடு சாப்பிட வேண்டும்.

10. இரவு மன ச்சிக்கல் இன்றி படுத்து, காலை மலச்சிக்கல் இன்றி எழல் வேண்டும்.
 
மனிதன் மனிதனாக வாழ சில  அம்சங்கள்

* மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை

* மிக மிக நல்ல நாள் - இன்று

* மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு

* மிகவும் வேண்டியது - பணிவு
* மிகவும் வேண்டாதது - வெறுப்பு

* மிகப் பெரிய தேவை - நம்பிக்கை

* மிகக் கொடிய நோய் - பேராசை

* மிகவும் சுலபமானது - குற்றம் காணல்

* கீழ்த்தரமான விடயம் - பொறாமை

* நம்பக் கூடாதது - வதந்தி
* ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
* செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்

* செய்யக் கூடியது - உதவி

* விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்

* உயர்வுக்கு வழி - உழைப்பு
* நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு

* பிரியக் கூடாதது - நட்பு

* மறக்கக் கூடாதது - நன்றி


 இவைகளை மனிதர்கள் *பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக வாழலாம்...

No comments:

Post a Comment