Thursday 5 March 2015

புதிதாக குவைத் செல்ல மருத்துவ பரிசோதனை இனி மும்பையில் மட்டுமே !! தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? !

தமிழகத்தில் இருந்து பிழைப்புக்காக வேலை தேடி செல்லும் நம் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்கு தமிழகத்தில் சென்னை ,திருச்சி , மற்றும் திருவனந்தபுரம் என்று பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்ப்பதற்கு அனுமதி இருந்தது

குவைத்திற்கு வரும் மக்களை இந்த அரசு முறைப்படி மருத்துவ பரிசோதனை செய்து தான் அந்தந்த கம்பெனியில் சேர்ப்பதற்கு அனுமதி அளிக்கும் 

சமீப காலமாக குவைத்திற்கு வரும் மக்களை பரிசோதனைக்கு அனுப்பும்போது தான் தமிழகத்தில் போலியான மருத்துவ சான்றுகள் பெற்று வந்துள்ளது தெரிய வந்துள்ளது 

இது தொடர்கதை ஆனதாலும் , தமிழகத்தில் பல்வேறு ஏஜண்டுகள் பண வெறி பிடித்து பல ஆயிரம் பெற்று போலி சான்றுகள் தருவதாக தொடர்ந்து குற்றசாட்டுகள் வந்ததால் 

தமிழக மக்களும் எப்படியாவது வெளி நாடு சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் பணத்தை கொடுப்பதாலும்
குவைத் அரசு மிகவும் சிரமத்திற்குள்ளானது 

ஆதலால் குவைத் அரசு இந்த மார்ச் மாதத்தில் இருந்து யாராகிலும் வேலைக்காக வருபவர்கள் மும்பை சென்று தான் மருத்துவ சான்றிதழ் எடுக்க வேண்டும் என சட்டம் கொண்டு வந்தது 

இந்த சட்டம் போட்ட நோக்கம் நல்லதாக தெரிந்தாலும் ஒரு சில அயோக்கிய ஏஜண்டுகளால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்

ஒருவர் பரிசோதனைக்கு செல்ல மும்பை செல்ல வேண்டும் என்றால் சென்று வர 4நாட்கள் ஆகும் இரண்டு நாள் தங்க வேண்டியது வரும்.பெரும்பாலான தமிழக மக்களுக்கு மொழி பிரச்சினை இருக்கிறது ,யாரேனும் ஒருவர் உடன் செல்ல கூடிய சூழ்நிலை. என பல்வேறு பிரச்சனையை சந்திக்க வேண்டியது உள்ளது 

ஆதலால் தமிழக அரசு ! நம் மக்கள் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் தமிழகத்திலேயே மருத்துவ பரிசோதனையை செய்ய அனுமதிக்கவும் ,

குவைத் அரசு போட்ட சட்டத்தை திரும்ப பெறுவதற்கு மத்திய அரசு மூலம் குவைத் நாட்டிற்கு வேண்டுகோள் வைக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளி நாடு வாழ் (குவைத் வரும்) தமிழர்கள் சார்பாக பணிவண்புடன் அரசிடம் கேட்டு கொள்கிறேன்.


தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

No comments:

Post a Comment