ஒரு நாள், திருவண்ணாமலையில் ஒரு பிரபல கல்லூரி ஒன்று நடத்தும் வேலைவாய்ப்பு முகாமின் விளம்பரம் கண்ணில் பட்டது. உடனே திருவண்ணமலைக்குக் கிளம்பினோம். வேலைவாய்ப்பு முகாம் நடப்பதாகக் கூறிய அந்தக் கல்லூரியில் பயங்கர கூட்டம். எங்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு பட்டம் பெற்றிருந்தவர்கள்கூட வேலை கிடைக்காததால் அந்த முகாமுக்கு வந்திருந்தனர். ஆனால், எங்கள் அனைவருக்குமே அந்த முகாம் ஏமாற்றமாகவே இருந்தது. நாட்கள் ஓடின... ஆனால், எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை.
பல சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிலும் வேலை தேடினோம். சில நிறுவனங்களில் வேலையும் கிடைத்தன. Material handling engineer என்று சொல்வார்கள். ஆனால் வண்டி இழுக்கச் சொல்வார்கள்.
காலையில் எழுந்து நான்கு resume-களை எடுத்துக்கொண்டு தெருத்தெருவாக சுற்றிய நாட்களும் உண்டு. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தனியாக உக்கார்ந்து என் நிலைமையை எண்ணி கண் கலங்கிய நாட்களும் உண்டு. 'வேலையில்லா பட்டதாரி திரைப்படம் பாத்துட்டியா?' என்று யாரேனும் யதேச்சையாக்கக் கேட்டால்கூட, எனக்கு வேலை இல்லை என்பதற்காகவே அப்படி கேட்கிறார்கள் என்பதுபோல் தோன்றும். எத்தனையோ நாட்கள் வீட்டில் பெற்றோர் சாதாரணமாகப் பேசும் வார்த்தைகளுக்கு உள்ளர்த்தம் இருக்குமோ என்று யோசித்து, அந்த சாதாரண வார்தைகளுக்கு நானே அர்த்தம் பொருத்தி அழுததுண்டு. பல போலி மனிதவள மேலாளர்களைச் சந்தித்து மன அளவில் அடி வாங்கியதும் உண்டு. பல போலி வேலை வாங்கிக் கொடுக்கும் நிறுவனங்களையும் சந்தித்ததுண்டு.
ஐந்து வருடத்துக்கு முன் பட்டம் பெற்று நல்ல வேலைகளில் இருப்பவர்களுக்கும், ஐ.ஐ.டி போன்ற சிறந்த கல்லூரிகளில் பயின்று நல்ல வேலைகளில் இருப்பவர்களுக்கும் எங்களின் கஷ்டம் தெரிவதும் இல்லை... புரிவதும் இல்லை. நாங்கள் ஒழுங்காகப் படிக்காததால்தான் எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று அவர்கள் நினைகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் ஒரு சில கல்லூரிகளைத் தவிர மற்ற கல்லூரிகளில் போதுமான வசதிகள் இல்லை. மாணவர்கள் தங்களது முழு உழைப்பை படிப்பில் செலுத்தினாலும் போதுமான வசதிகள் இல்லாததால் ஐ.ஐ.டி. போன்ற கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுடன் போட்டியிட முடிவதில்லை. நம் நாட்டில் மிகவும் பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவென்றால், பிள்ளைகளின் படிப்புக்காக பெற்றோர், தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணம், கடன் வாங்கிய பணம் என எல்லாவற்றையும் செலவு செய்கிறார்கள். இருப்பினும், பிள்ளைகளுக்கு ஒழுங்கான கல்வியும், கல்விக்குப் பின் வேலையும் கிடைப்பதில்லை.
பொறியியல் படிப்பின் தரத்தை உயர்த்தவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பொறியியல் படிக்கச் சொல்வதற்கு முன், பொறியியலின் இந்த கறுப்புப் பக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
எனக்கு இப்போது ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது, ஆனால், அதிர்ஷ்டம் என்பது எல்லோருக்கும் அமையாது அல்லவா?
Engineering படித்தால் சீக்கிரம் பணம் சம்பாதித்து முன்னேரலாம் என்று பெற்றோர்களும், மானவர்களும் யோசித்து சேர்ந்து விடுகிறார்கள். ஆனால் அந்த துறையில் தகுதியானவர்கள் நீடிப்பது ஒரு சிலரே. எல்லாருமே Engineer படித்தால் எப்படி வேலை கிடைக்கும். Engineer மட்டும் தான் படிப்பா?. வேறு துறைகளே இல்லையா?...
கல்லூரிகளும் வியாபாரத்திற்காக தகுதியற்றவர்களுக்கு சீட் வழங்கிறார்கள். இதனால் உன்மையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பணம் அடிப்படையிலேயே சீட் மறுக்கப்படுகிறது. Engineering என்ன விவசாயமா இது இல்லாம வாழமுடியாதா, சாப்புட முடியாதா?....
புதிதாக பொறியியல் கல்லூரிகள் திறப்பதற்குத் தடை விதிக்கவேண்டும்...ஏற்கனவே படித்தவர்களுக்கு ஓரளவு வேலைவாய்ப்புகள் கிடைத்தபின் ஒரு ஐந்து வருடம் ,,தேவைப்பட்டால் ஒரு பத்து வருடம் கழித்து அனுமதி வழங்கலாம்...இந்தியாவைப் பொறுத்தவரை ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவன் ஏமாற்றிக்கொண்டேதான் இருப்பான்...
தொகுப்பு : மு.அஜ்மல் கான் .
No comments:
Post a Comment