Wednesday 17 August 2016

என் மனைவிக்கு 11ம் ஆண்டு மணநாள் வாழ்த்து !!

Image result for rose bouquetஎன் மனைவிக்கு
11ம் ஆண்டு
மணநாள் வாழ்த்து
கவிதை இதோ...


உன்னில் நான் இருக்கிறேன் 
என்னுள் நீயிருக்கிறாய் இருந்தும்
என் இதயப்பூவில் இன்றும்
முதல் நாள் பார்த்த அதே ஆனந்தம்..!!!
நாம் மணந்த போதும்
அவ்வப்போது
என் இதயத்தை வாட்டுகிறது
இனம் தெரியாமல்
ஓர் இன்பமான வலி...!!!
காதல் என்பது மூன்றெழுத்து தான்
ஆனால் அதற்குள்
பல ஆயிர ஆனந்தங்கள் உள்ளது
என்பதை உன்னை மணந்த
பிறகே தெரிந்து கொண்டேன்...!!
என்றும் நான் கவிதை எழுத
முதல் நாள் நீ பார்த்த
அந்த ஒற்றை பார்வை
மட்டும் போதும் எனக்கு..!!!
கண்கள் பார்க்க மட்டுமே
என்று நினைத்திருந்தேன்..
உன்னை பார்த்த பிறகு தான்
அதன் அருமையை உணர்ந்தேன்...!!!
நீ அழகானவள் என்று
என்னுள் தோன்ற வைத்தது
என்னை பார்த்து
நீ பூத்த ஒற்றை புன்னகையே...!!!
உன்னை கண்ட நாள்
முதல் காதல்
 என்னுள் பிறக்கவில்லை
விதைக்கபட்டது...!!!
அனுதினம் என்னுடன் நீ
மனைவியாய் இருந்தாலும் ..
எந்தன் சிந்தனை நீ
காதலியாகவே இருக்கிறாய்..
இரவில் கண்கள் மூடி படுத்தால்
இமைகள் மூடுகிறது ஆனால்
இதயம் உன்னையே நினைத்து
கொண்டிருக்கிறது என் அன்பே...!!!
மழையில் குடையில் ஒன்றாக
நடக்க வேண்டும் என்று நினைத்தோம்...
இன்று வாழ்க்கை குடைக்குள்
அனந்தமாய் பயணிக்கிறோம்..!!!
எனக்காக நீ அல்ல
உனக்காக நான் அல்ல
நமக்காக என்று சொல்ல வைத்தது
நம் குழந்தைகள்...!!!
உனக்கென நான் இருக்கிறேன்
எனக்காக நீ இருக்கிறாய்..
நமக்காக நம் செல்வங்கள் என
சொல்லவைத்தது நம் கவிதை..!!!
வாழ்க்கை என்பது வெறும்
வார்த்தை அல்ல...
அது வசந்தத்தின் வாயில்
என்றுமே நமக்கு...!!!
சுகமான வலியை உணர்ந்தேன்
நீ என்னை கண்ட நாள் முதல்..!!!
இன்று ஆனத்தை அனுபவிக்கிறேன்
உன்னை மனைவியாக அடைந்ததால்..
என்றும் கவிதையுடன்
மு. அஜ்மல் கான்,

No comments:

Post a Comment