Saturday 19 January 2019

தமிழகத்தில் அரங்கேறும் நாசகர சதியா? ஒரு தவகல்..

ஆண்டாள் பக்கம் நம்மை திசை திருப்பி விட்டு சத்தமில்லாமல் தமிழகத்தில் அரங்கேறும் நாசகர சதி? 500 ஏக்கரில் பேரழிவின் குவியல்..!!
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே 500 ஏக்கர் நிலப்பரப்பில் கடற்படை ஆயுதக் கிடங்கு அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை கடற்படை ஆயுதக் கிடங்கு பொது மேலாளர் புனித் உறுதிப்படுத்தி இருப்பதாக ஒரு தமிழ் ஊடகம் தகவல் வெளியிட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அரசிடம் இருந்து இதுவரை பதில் கிடைக்கப்பட வில்லை என்றும் கூறியுள்ளார்.

ஆயுதக் கிடங்கு அமையும் பட்சத்தில் அதன் அருகில் இருக்கக்கூடிய எந்த கட்டிடத்தையும் புதுப்பிக்க முடியாது என்பதும் சுற்று வட்டாரத்தில் புதிய கட்டிடம் கட்டவும் அனுமதிக்கப்பட மாட்டாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலம் ஆளுவாவை தவிர, விசாகப்பட்டினம், கோவா , மும்பை மற்றும் ஒரிஸாவிலும் கடற்படையின் ஆயுத கிடங்கு இருக்கிறது.

இது தமிழகத்தில் அமைக்கப்பட்டுவிட்டால் ஆயிரம் ஏக்கருக்கு பொதுமக்கள் போக முடியாது.

கடுமையான பாதுகாப்பு சோதனைகள் வரும்; போர் வந்தால் முதலில் பாதிப்புக்கு உள்ளாவது ஆயுத கிடங்காக தான் இருக்கும்.

Source : செய்திப் புனல் Article லில் இருந்து..!!

என் கருத்து :ஒரு நாட்டின் பலம் ஆயுதம் அல்ல அறிவு. நல்ல கல்வி இலவசமாக தர முடியவில்லை சுகாதரமான வாழ்விடம் தர முடியவில்லை இயற்கை சார்ந்த வாழ்விடம் தர முடியவில்லை இதுல ஆயுத கிடங்கு அமைக்க இங்கு வரான் இந்தி காரன். இதுல இதற்கு ஆதரவாக பேசுபவர்கள் யாரும் இதுவரைக்கும் எந்த ஒரு பிரச்சினையிலும் சிக்கி இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன் காவிரி பிரச்சினையின் போது அங்கு இருந்து இருந்திருந்தால் தெரியும். பல முறை கூறி விட்டேன் நாம் அனைவரும் தமிழர்கள் அவர்கள் இந்தியர்கள் நம் நாட்டில் அவர்கள் ஏன் கிடங்கு அமைக்க வேண்டும். சென்னையில் நடந்த சம்பவம் நினைவில் இருந்தாலே போதும் இதனை எதிர்க்க

ஆயுத கிடங்கையும்., அணு உலையையும் ., பெட்ரோலிய கிணறுகளையும் அருகருகே வைக்கும் ஒரு முட்டாள் அரசுக்கு பரிந்து பேச ஆயிரம் முட்டாள்கள் இருக்கும் வரை பின் வருவதை முன் சொன்னால் பலன் இருக்காது .....!!!

No comments:

Post a Comment