Saturday 23 February 2019

என் நாட்டு ராணுவ வீரர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு வண்மையான கண்டங்கள் !!


என் நாட்டு ராணுவ வீரர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு வண்மையான கண்டங்கள்
மிருக போர்வையில் ஒளிந்திருக்கும் மனித மிருகங்களை வண்மையாக கண்டிக்கிறோம்
நம்மை பாதுகாக்க அலும்பகலும் போராடிக்கொண்டிருக்கும் என் நாட்டு வீரனின் ரத்தத்தை குடிக்கும் வெறியர்களின் ஈன செயலுக்கு தக்கபாடம் புகட்டவேண்டும்..!!

44 குடும்பத்தின் தலைவன் அல்லவா விதையாக்கப்பட்டான்
44 குடும்பங்கள் இழந்தது குடும்பத்தின் தலைவனை
தாய் நாட்டை காப்பாற்ற தன் குடும்பாதை இழந்த மாவீரர்களின் குடும்ப சாந்தியும் சமாதானமும் பெற இறைவனிடம் தூஆ செய்தவனாக
நிச்சியமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.

கேள்வி 1) 350 கிலோ வெடிபொருள் உயர் பாதுகாப்பு தேசிய நெடுஞ்சாலைக்கு எப்படி வந்தது?
கேள்வி 2) 2500 படைவீரர்களை ஒரே நேரத்தில் நேற்று அதிகாலை நகர்த்த உத்தரவிட்டது யார்?
கேள்வி 3) பக்சி ஸ்டேடியம் Transit Camp க்கு 30 கிமீ அருகில் 2 நாட்கள் பாதுகாப்பு நடவடிக்கை ஏதும் இல்லையா?
கேள்வி 4) போக்குவரத்து தடை செய்யப்பட்டு தீவிர சோதனைகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்றும் எப்படி தாக்குதல் துல்லியமாக நடத்தப்பட்டது?
கேள்வி 5) பல இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது என்று CRPF செய்தித் தொடர்பாளர்
ஆஷிஸ் ஜா கூறுவதன் பொருள் என்ன?
கேள்வி 6) எந்தப் புலனாய்வுகளும் நடத்தாமல் 6 மணி நேரத்துக்குள் வீடியோ வெளியிடப்பட்டு *லக்சர் இ மொகம்மத்* அமைப்புதான் செய்தது என்று தீவிரவாதியின் பெயரோடு தொலைக்காட்சிகளுக்கு யார் தகவல் கொடுத்தது?
கேள்வி 7) பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் உளவுத்துறை அறிக்கைகளைப் படிக்காமல் ஊறுகாய் அல்லது வடகம் பிழிந்து கொண்டிருந்தாரா?
கேள்வி 8 ) மோடியால் ஒரு நாள் கூட பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒத்தி வைக்க முடியாதா? இதுதான் படைவீரர்களுக்கு செய்கிற அஞ்சலியா?
கேள்வி 9) பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் குண்டு துளைக்காத வாகனங்கள் இந்த முறை எங்கே போயின?
கேள்வி 10) பாரதீய ஜனதாவின் ஆட்சியில் தேர்தலின் போதெல்லாம் குண்டு வெடிப்புகளும், தற்கொலைப்படைத் தாக்குதல்களும் நிகழ்ந்து இந்தியர்கள் தேசபக்தியில் புல்லரித்து "வந்தே மாதரம்" என்று ஊளையிடுவது தற்செயலா காவிகளின் திட்டமிட்ட சதியா?
முதலில் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்!!

நாலரை வருசமா தீவிரவாதத்தை அடியோட ஒழிச்சிட்டோம். மோடியை கண்டு பாகிஸ்தான் அஞ்சி நடுங்கிட்டுன்னு புழுகிட்டு இருந்த பக்தா எல்லாம் இதை அரசியல் ஆக்காதான்னு பொலம்பிகிட்டு இருக்கான். 

44 இந்திய குடிமகன்கள் பிஜேபியின் தோல்வியால் செத்துருக்கான். இவனுங்க பொய்
யால் மட்டும்தான் அவன் செத்துருக்கான். இந்த அரசை கேள்வி கேட்காமல் எப்படி இருக்க முடியும் ? 

கேள்வி கேக்காம போட்டோ ஷாப் பாத்துட்டு அமைதியா இருக்க நாங்க எல்லாரும் என்ன பக்தாளா ?

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பண்ணி பாகிஸ்தானை மோடி நடுங்க வச்சிட்டார்னு நீங்கதானேடா கொண்டாடுனீங்க ? மோடியை விமர்சிக்கும் அனைவரும் பாகிஸ்தான் கைக்கூலிகள், தேச விரோதிகள் என்று சித்தரிக்கும் போக்கையும் நான் காண்கிறேன். 

இந்த பருப்பெல்லாம் இனிமே வேகாது பக்தா. வேற எங்கயாவது போயி பருப்பை வேக வைங்க
1) பலுசிஸ்தான்

2) சிந்து தேசம்
3) மேற்கு பஞ்சாப்
தனிநாடுகளாகவும்
4) ஃபடா - ஆஃகானிஸ்தானுடன் இணையச் செய்வது!
5) ஆக்கிரமிப்பு காஷ்மீரை முழுமையாக நம்முடன் இணைப்பது!
சுப்பிரமணியன் சாமி முன்பே கூறினார், அதற்கான வேலைகளும் நம் ரா மற்றும் இஸ்ரேலின் மொஸாட் துணையோடு நடைபெற்று வருகிறது, தற்போது அதை துரிதப்படுத்துவதற்கான காலம் வந்துவிட்டது!.

No comments:

Post a Comment